·   ·  3 videos
  •  ·  0 friends
  • 465
  • More

பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்

பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்

Comments (0)
Login or Join to comment.
·
Added a news

நடந்து முடிந்த கனடா இடைத்தேர்தல்கள், மார்க் கார்னி அரசுக்கு பெரும்பான்மையை பெற்றுத் தந்துள்ளன.

கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. 

இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். அதாவது, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கவேண்டுமானால், அக்கட்சிக்கு 172 இருக்கைகள் இருக்கவேண்டும்.

மார்க் கார்னியின் லிபரல் கட்சியிடம் 171 இருக்கைகள்தான் இருந்தன.

நாடாளுமன்றத்தில், ஏதாவது ஒரு வாக்கெடுப்பில் இரண்டு பிரிவினரும் ஒரே அளவில் வாக்களித்தால், கூடுதல் ஒரு வாக்குக்காக, சபாநாயகரின் உதவியை ஆளும் கட்சி நாடவேண்டியிருக்கும். ஆக, ஆளும் லிபரல் கட்சிக்கு 173 அல்லது 174 இருக்கைகள் கிடைத்துவிட்டால், யாருடைய உதவியையும் நாடாமலே மசோதாக்களை நிறைவேற்ற முடியும். 

அதனால்தான், இந்த இடைத்தேர்தல் கனடா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், மார்க் கார்னியின் லிபரல் கட்சி, தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. ஆக, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலே பெரும்பான்மை கிடைத்துவிடும் என்றிருந்த நிலையில், தற்போது மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது மார்க் கார்னியின் லிபரல் கட்சி. 

கனடா அரசியல் வரலாற்றில் 24 பிரதமர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள். அவர்களில் இதுவரை 13 பேருக்குத்தான் பெரும்பான்மை கிடைத்திருந்த நிலையில், தற்போது மார்க் கார்னி கனடாவின் பெரும்பான்மை பெற்ற 14ஆவது பிரதமராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 27

சுவையான தமிழ்

இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு...

உதாரணமாக,

"தேர் ஓடுவது எதனால்?

தெருவை மெழுகுவது எதனால்?" என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில்,

"அச்சாணியால்" என்பது.

தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது

அச் - சாணியால்

என்று பதிலில் விளக்கம் கிடைக்கும்.

"நீ வசிக்கும் ஊர் எது?

உன் காலில் காயம் வந்தது எப்படி?" என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் "செங்கல்பட்டு" என்பது.

"சாம்பார் மணப்பதேன்?

உடல் நலிவதேன்?" என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில்

"பெருங் காயத்தால்" என்பது.

  • 28
·
Added a post

1. ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.

2. வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

3. செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

4. கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

5. கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

6. வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

7. ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

8. நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பு பொடியை சிறிதளவு தேனில் குழைத்து குழந்தைகளுக்கு தர காய்ச்சல் குணமாகும்.

9. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் காலை மாலை வேளைகளில் சிறிதளவு வசம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து வென்னீரில் கலந்து சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி கை, கால் நடுக்கம் குணமாகும்.

10. ஆடாதொடை பொடி, நிலவேம்பு பொடி, விஷ்ணுகரந்தை பொடி, இவைகளுடன் கிருந்தை நாயகம் இலை, குப்பைமேனி இலை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து காலை மாலை குடித்துவர எப்பேர்பட்ட காய்ச்சலும் 3 நாட்களில் சரியாகி விடும். மேலும் உடல்வலியும் தீரும்.

11. சர்பகந்தா பொடியை சிறிதளவு காலை, மாலை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் நீங்கி, இரவில் தூக்கம் நன்றாக வரும். மன சோர்வு நீங்கும்.

12. பீட்ரூட் சாறுடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி எலும்பிச்சை சாற்றில் ஊற வைத்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும்.

13. பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. பீட்ரூட்டை சாப்பிடும் போது நைட்ரேட்டுகள் நமது உடலில் உள்ள பார்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றப்பட்டு இரத்த நாளங்களை விரிவடய செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேன்படுத்தும். மேலும் ஆண்மை சக்தியை அதிகரித்து பாலுறவில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

14. அதிமதுரம், விதை நீக்கிய கடுக்காய் தோல், திப்பிலி, மிளகு இவற்றை வறுத்து பொடித்து, தினசரி காலை மாலை நெய்யுடன் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கி கண் ஒளி பெரும்.

  • 31
·
Added a post

ஐந்து வருடங்களுக்கு முன்னால், மெரினா கடற்கரை.

​"விவேக், ஒரு நிமிஷம் நில்லு. நான் சொல்றதை கேளு," என்றாள் ரம்யா.

​விவேக் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். "என்ன கேட்கணும்? உன் ஐடி கம்பெனி ஆன்சைட் போறதுக்காக என் மூணு வருஷ காதலை தியாகம் பண்ண சொல்றியா? நீ போயிட்டா நம்ம உறவு என்ன ஆகும்?"

​"டிஸ்டன்ஸ் ஒரு மேட்டர் இல்லை விவேக். நான் என் கரியருக்காகப் போறேன்."

​"கரியரா? அப்போ நான் உனக்கு ரெண்டாவது பட்சம்தான். ஒண்ணு உன் வேலை, இல்ல நான். இப்போவே முடிவு பண்ணு."

​ரம்யா அமைதியாக அவனைப் பார்த்தாள். "முடிவு பண்ணிட்டேன் விவேக். எனக்கு என் சுயமரியாதையும் உழைப்பும் முக்கியம். 'வேலையா, காதலா'ன்னு நீ கேட்ட அந்த நிமிஷமே நம் காதல் செத்துடுச்சு. பை."

​அவள் அன்று அந்த இடத்தை விட்டு வெளியேறியபோது, விவேக் பின்னால் இருந்து கத்தினான், "பார்த்துக்கலாம் ரம்யா, ஒரு நாள் நீ என்கிட்ட வந்து நிப்ப!"

ஐந்து வருடங்களுக்குப் பின்...

​அதே சென்னை. ஒரு உயர்தர உணவகத்தில் ஆடம்பர ஹால். இன்று ரம்யா அழைத்திருந்தாள். விவேக் கோட்-சூட் அணிந்து பந்தாவாக வந்து நின்றான்.

​"என்ன ரம்யா, திடீர்னு கூப்பிட்டு இருக்க? அன்னைக்கு அப்படிப் போயிட்டு, இப்போ என்னைத் தேடி வந்திருக்க?" என்றான் ஒரு நக்கலான சிரிப்புடன்.

​"உன்னைத் தேடி வரல விவேக். பிசினஸ் விஷயமா பேச வந்தேன்."

​"பிசினஸா? ஓ... இப்போ நான் பெரிய ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி வச்சிருக்கேன்னு கேள்விப்பட்டு வந்தியா? அன்னைக்கு என்னை வேண்டாம்னு சொன்னியே, இப்போ என் உதவி தேவைப்படுதா?"

​ரம்யா ஒரு ஃபைலை மேசை மேல் வைத்தாள். "உன் கம்பெனி இப்போ நஷ்டத்துல ஓடிட்டு இருக்குன்னு எனக்குத் தெரியும் விவேக். மூணு மாசமா ஸ்டாஃப்க்கு சம்பளம் கொடுக்கல."

​விவேக்கின் முகம் சட்டென்று மாறியது. "அது... அது ஒரு தற்காலிகமான பிரச்சனை தான். சரி, இப்போ எதுக்கு இதை பேசுற?"

​"உன் கம்பெனியை என்னோட குரூப் ஆஃப் கம்பெனிஸ் வாங்கப்போகுது. இது அக்ரிமெண்ட் காப்பி."

​விவேக் அதிர்ச்சியில் உறைந்தான். "என்ன? நீ வாங்குறியா? அவ்வளவு பெரிய ஆளா நீ?"

​"அன்னைக்கு நீ தடுத்த அந்த வேலைதான் இன்னைக்கு என்னை இந்த இடத்துல உட்கார வச்சிருக்கு விவேக். உனக்கு ஒரு ஆஃபர் தரேன். உன் கம்பெனிக்கு நீயே சி.இ.ஓ-வா இருக்கலாம். ஆனா, இனிமே நீ எனக்கு கீழ வேலை செய்யணும். ஓகேவா?"

​விவேக் பேச்சற்று அந்த அக்ரிமெண்ட்டைப் பார்த்தான்.

​"என்ன விவேக், யோசிக்கிற? அன்னைக்கு 'காதலா வேலையா'ன்னு கேட்ட. இன்னைக்கு 'தன்மானமா வேலையா'ன்னு கேட்குறேன். கையெழுத்து போடுவியா இல்ல கம்பெனியை மூடுவியா?"

​விவேக் மெல்ல பேனாவை எடுத்தான். அவனுக்குத் தெரியும், இது காதலில் விழுந்த தோல்வியை விடப் பெரிய அடி என்று.

​ரம்யா எழுந்து கண்ணாடி அணிந்து கொண்டாள். "குட். நாளைக்கு காலையில என் கேபினுக்கு வந்து ரிப்போர்ட் பண்ணு. அப்புறம் ஒண்ணு... அன்னைக்கு மெரினால 'ஒரு நாள் நீ என்கிட்ட வந்து நிப்ப'ன்னு சொன்னியே... இப்போ நான் உட்கார்ந்து இருக்கேன், நீ என் முன்னாடி வந்து நிக்கிற. டைம் ஈஸ் பவர்ஃபுல் விவேக்!"

​அவள் கார் ஏறிச் செல்ல, விவேக் தன் முன்னாள் காதலிக்கு 'எம்ப்ளாய்' ஆக மாறிய அந்த நிமிஷத்தை ஜீரணிக்க முடியாமல் அமர்ந்திருந்தான்.

  • 34
·
Added a post

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள். உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. ஆப்ரகாம் லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

  • 48
  • 47
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் குறையும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வாகன தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் மதிப்புகள் மேம்படும். சுப காரியம் தொடர்பான நற்செய்திகள் கிடைக்கும். கவனம் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

ரிஷபம்

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபார தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் மதிப்புகள் கிடைக்கும். பொறாமை அகலும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

மிதுனம்

புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் பிறக்கும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். வாகன பழுதுகளால் தாமதம் உண்டாகும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படுவது நல்லது. தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். வாழ்வு சிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

கடகம்

வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். மறைமுகமான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் தோன்றி மறையும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் நீங்களே பணிகளை செய்வது நல்லது. சில விஷயங்களுக்கு பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பழைய நினைவுகள் மூலம் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருக்கவும். சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

சிம்மம்

மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். எண்ணிய காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் தன்மை அறிந்து நட்பு கொள்ளவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். ஆதாயம் தரும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

கன்னி

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலை கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். தடுமாற்றமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்குகள் அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருள்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈர்ப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தேடல்கள் உண்டாகும். நன்மை நடக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

விருச்சிகம்

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். பழமையான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். சலனம் தீரும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

தனுசு

குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுப காரிய விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வாகனங்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் ஏற்படும். அசதி நீங்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

மகரம்

எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் ஆதாயம் அதிகரிக்கும். புதுவிதமான பொருள்களில் ஆர்வம் உண்டாகும்.சொத்து விற்பனைகள் சாதகமாக முடியும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். கருத்துக்களுக்கு மதிப்புகள் கிடைக்கும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். இன்பம் பொங்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கும்பம்

குழப்பமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். ஆர்வம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

ரகசியமான சில செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புகள் குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். யாரையும் அலட்சியப்படுத்தி செயல்படுவதை தவிர்க்கவும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். சோர்வு மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 95
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 14.4.2026

இன்று இரவு 09.55 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று பிற்பகல் 01.42 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.

இன்று பிற்பகல் 01.20 வரை சுப்பிரம். பின்னர் பிராம்யம்.

இன்று காலை 10.10 வரை கௌலவம். பின்னர் இரவு 09.55 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று காலை 06.03 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 105

Good Morning...

  • 94
·
Added a post

அத்திப் பழத்தைத் சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. 2 அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும்.

அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம். தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்தி பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது.

மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள. சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.

  • 196
·
Added article

இந்திய திரையுலகின் ஈடு இணையற்ற இசை மேதைகளில் ஒருவரான ஆஷா போஸ்லே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நம்மை விட்டு மறைந்துள்ளார்.. 92 வயதாகும் இந்தப் புகழ்பெற்ற பாடகிக்கு ஏற்பட்ட திடீர் பாதிப்பு, இந்திய இசை ரசிகர்களைப் பெரும் கவலையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அவருக்கு லேசான உடல்நல பாதிப்புகள் இருந்த நிலையில், நேற்று அவரது நிலைமை சற்று மோசமடைந்துள்ளது.. உடனடியாக மும்பையில் உள்ள ஒரு உயர்தர தனியார் மருத்துவமனையில் ஆஷா போஸ்லே அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து ஆஷா போஸ்லேவின் பேத்தி விளக்கம் தந்திருந்தார்.. அதில், ஆஷாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று (Chest Infection) காரணமாகவே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், தற்சமயம் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதுமை காரணமாக அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர் குழுவால் அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஒருபுறம் தகவல்கள் வெளியானாலும், அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து வரும் தகவல்கள் மார்புத் தொற்று தொடர்பான சிகிச்சையை உறுதிப்படுத்தின. இந்நிலையில் நம்மை விட்டு இசைக்குயில் பறந்துள்ளது.. ஆஷா போஸ்லேவின் இசைப் பயணம் என்பது ஒரு சகாப்தம். மறைந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் தங்கை என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது தனித்துவமான குரலால் ஏழு தசாப்தங்களாக் திரையுலகை ஆட்சி செய்தவர்.

  • 224
·
Added a post

ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருட்ரட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன. ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும்.

பத்ராட்சம் என்ற மணி ருத்ராட்சம் போலவே இருக்கும், அவை நல்ல பலன்களைத் தராது. உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் மூழ்கி விடும் போலியானவை மிதக்கும். மேலும் கல்லில் உரைக்கும் போது தங்க நிற கோடுகள் கல்லில் பதியும். இரு செம்பு நாணயங்கள் நடுவில் ருத்ராட்சத்தை வைத்தால், மின் சுழற்சியின் காரணமாக அது சுழலும். இவ்வாறு உண்மையான ருத்ராட்சத்தை சில ஆய்வுகள் மூலம் கண்டறியலாம். தாவர வகைகளில் மின் காந்த சக்தி ஒரு குறிப்பிடும் அளவு உள்ளது ருட்ராட்சதில் மட்டும்தான்.

ருத்ராட்சத்தை அணிவதாயின் சிவப்பு நிற நூலில் அணியவேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ அணியலாம். ஒரு சிவனடியாரிடம் இருந்து ருத்ராட்சத்தை அணியும் வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

ஒரு நன்னாளில் நமக்குகந்த ருத்ராட்சத்தை வாங்கி சுத்தமான நீரில் கழுவிய பின்பு காய்ச்சாத பசும்பால், தேன், கற்கண்டு பொடி, நெய், தயிர் ஆகிய ஐந்து பொருட்களையும் ஒன்றாக கலந்து அபிசேகம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமாக துடைத்துவிட்டு ஒரு வளர்பிறை திங்கட்கிழமை அதிகாலையில் திருகோவிலில் பூஜை செய்து அணியவேண்டும்.

ருத்ராட்சத்தை தினமும் அணிவதற்கு முன்பாக நமது இஷ்ட தேவதா மந்திரத்தை நிச்சயமாக சொல்ல வேண்டும். சர்வ மந்திரங்களும் வசியம் ஆகக்கூடிய சிறந்த காந்த ஈர்ப்பு மண்டலத்தைக் கொண்டது ருத்ராட்சம்.

ஒரு முக ருத்ராட்சம்

ஏக முக ருத்ராட்சம் சூரியனுக்கு உரியது, சகலவிதமான பித்ரு தோஷங்களை விலக்கி எல்லா நலன்களையும், நல்ல வாழ்வையும் தரக்கூடியது. ஏக முகம் எனப்படும் ருத்ராட்சம் மிகவும் அரிதான ஒன்று, பல வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றக்கூடியது. சிவபெருமானின் பூரண அருளை தரக்கூடியது. இதனை ஒரு படி அளவுள்ள எதாவது ஒரு தானியத்தின் அடியில் வைத்தால் தானாகவே மேல வரக்கூடிய தன்மை உள்ளது என்று ஒரு பழமையான நூல் தெரிவிக்கிறது.

மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

இரு முக ருத்ராட்சம்

த்விமுக ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரருக்கும், நவக்கிரகங்களில் சந்திரனுக்கும் உரியதாகும். இதை அணிவதால் குடும்ப உறவுகளில் நல்ல சுமுகமான போக்கு நிலைக்கும். நம் உடலில் இருக்கும் நீர்த்தன்மையில் நன்மை தரத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஜாதகத்தில் சந்திர பலம் குறைதவர்களும், மனோ ரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களும் இருமுக ருத்ராட்சம் அணிவதால் நல்ல பலன்களை பெறலாம்.

மந்திரம்: ‘ஓம் நம’

மூன்று முக ருத்ராட்சம்

திரிமுக ருத்ராட்சம், அக்னி அம்சம் பெற்றது, செவ்வாய்க்கு உரியது. மனதில் தைரியத்தையும், துணிவையும் தருவதோடு உடலியக்கத்தில் துடிப்பான செயல்திறனையும் உண்டாக்கும். விளையாட்டுத் துறை, ராணுவத்துறை, தொழிற்சாலை போன்றவற்றில் உள்ளவர்கள் அணிந்தால் நல்ல பலன்களை தரும்.

மந்திரம்: ‘ஓம் க்லிம் நம’

நான்கு முக ருத்ராட்சம்

சதுர்முக ருத்ராட்சம் பிரம்மாவின் அம்சம் கொண்டது, புதனுக்கு உரியது. இதையணிவதால் சுவாச கோளாறுகள் கட்டுப்படும், திக்குவாய் உள்ளவர்களுக்கு பேச்சுத்திறன் மேம்படும். கணிபொறி, மின்னியல் ஆய்வுகள், நிர்வாக பொறுப்பு போன்றவற்றில் உள்ளவர்கள் இதை அணிவதால் நல்ல பலன்களை பெறலாம்.

மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

ஐந்து முக ருத்ராட்சம்

பரவலாகக் காணக்கிடைக்கும் பஞ்சமுக ருத்ராட்சம் சிவ அம்சம் பொருந்தியது, குரு பகவானுக்கு உரியது. கல்வி அறிவையும், மனத்தின் சமநிலையையும் ஏற்படுத்தும். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும், மேலும் இரத்த அழுத்தம் சமந்தமான நோய்களை நீக்கும். இது ஒரு காந்த ஆற்றலை உள்ளடக்கியது, நம்மை சுற்றி ஒரு கவசம் போன்று காப்பாற்றும்.

மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

ஆறு முக ருத்ராட்சம்

சண்முக ருத்ராட்சம் முருகப்பெருமானின் அம்சம் கொண்டது, சுக்ரனுக்கு உரியது. மனத்தின் வசீகர சக்தியை மேம்படுத்தும். தொழில் ரீதியாக மற்றும் வெகுஜனத் தொடர்பு உள்ளவர்கள் அணிந்தால் ஜனவசிய சக்தியை பெற்று நல்ல பலன்களை பெறலாம்.

மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

ஏழு முக ருத்ராட்சம்

சப்தமுக ருத்ராட்சம் மகாலட்சுமியின் அம்சம் கொண்டது, சனீஸ்வர பகவானுக்கு உரியது. சனிபகவானின் அலைவீச்சை சாதகமாக நன்மை தரும் விதமாக மாற்றக்கூடியது. வறுமை நீங்கவும், ஏழரை சனி மற்றும் சனி கிரக தோஷம் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும். இந்த ருத்ராட்சத்தை உடலில் அணிவதை விட பூஜை அறையில் வைத்து முறைப்படி வணங்குவதே நல்லது.

மந்திரம்: ‘ஓம் ஹம் நம’

எண் முக ருத்ராட்சம்

அஷ்டமுக ருத்ராட்சம் விநாயகப் பெருமானின் அம்சம் கொண்டது, இராகுவின் அலைவீச்சை கட்டுப்படுத்தக் கூடிய காந்த மண்டல சுழற்சியை உடையது. ருத்ராட்சங்களிலேயே மிகவும் கவனமாக சோதனை செய்தபின்பு பூஜை அறையில் வைத்து முறைப்படி வணங்குவதே நல்லது. பெரும்பாலும் உடலில் அணிவதை தவிர்க்கப்படுகிறது. இந்த ருத்ராட்சம் நூதனமான அனுபவங்களை தரக்கூடியது, ஒருவரை அறிவியலின் அடிப்படைக்கு உட்படாத புதிரான விளைவுகளுக்கு உண்டாக்க கூடிய அதீத சக்தியின் சுழற்களம் அமையப்பெற்றது.

மந்திரம்: ‘ஓம் ஹம் நம’

ஒன்பது முக ருத்ராட்சம்

நவமுக ருத்ராட்சம் அன்னை பராசக்தி, அத்யா சக்தியின் அம்சம் கொண்டது, கேதுவுக்கு உரியது. கேதுவின் கெடு பலன்கலான அடிபடுதல், கெட்ட கனவுகள், எதிர்மறை எண்ணங்கள் போன்ற சங்கடங்களை தீர்க்கும். இதனை அணிவதால் பொறுமையும், நிதானமும் நிலை நிற்பதோடு, மனதில் பயம் சார்ந்த உணர்வுகள் யாவும் விலகி விடும். பிற மொழிகளில் நிபுணத்துவம், இலக்கண, இலக்கியம் சார்ந்த அறிவின் மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும்.

மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

பத்து முக ருத்ராட்சம்

தசமுக ருத்ராட்சம் மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்டது, தசாவதாரங்களையும் குறிப்பது போல பத்து முகங்களை கொண்டது. ஹரிஹரர்களின் திருவருளை ஒருங்கே பெற்று தருவதாக நம்பப்படுகிறது.

மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

பதினோரு முக ருத்ராட்சம்

ஏகதச ருத்ராட்சம் ருத்ர அவதாரமான ஆஞ்சநேயரின் அம்சம் கொண்டது. மனத்தின் ஆற்றலை பன்மடங்காக ஆக்கக் கூடியது. பிரம்மச்சரியத்தில் நிலை பெற விரும்புவோர் இதனை அணிந்து நற்பயன் பெறலாம்.

மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் ஹம் நம’

பன்னிரு முக ருத்ராட்சம்

துவாதச ருத்ராட்சம் சூரிய பகவானின் திருவருளை பெற்றுத்தரக் கூடியது. அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்பார்பவர்கள், பணியில் உயர்வு பெற விரும்புபவர்கள், ஆன்மிக பலம் வேண்டுவோர் இந்த பன்னிரு முக ருத்ராட்சம் அணியலாம்.

மந்திரம்: ‘ஓம் க்ரௌம் ஷௌம் ரௌம் நம’

  • 227
·
Added a post

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிமதுரம் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தைச் சிறிதளவு முயலலாம்.

அதிமதுரத்தின் சாறுகள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.

பொதுவாக அதிமதுரம் ஒரு 'நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக். அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை ‘அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்’ எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

  • 228
·
Added a post

ஒரு அனுபவம் மிகுந்த மனிதர் தனது மகனுக்கு சில முக்கிய அறிவுரை வழங்கினகினார் 'மகனே, இந்த மூன்று காரியங்களை மறக்காமல் உன் வாழ்வில் செய்ய உறுதிப்படுத்திக் கொள்

1. சிறந்த உணவை உண்ண வேண்டும்.

2. மிகவும் வசதியான படுக்கையில் உறங்க வேண்டும்

3. சிறந்த வீட்டில் வசிக்க வேண்டும்.

அதை கேட்ட மகன் பதிலளித்தார்;

அப்பா நாம் ஏழை என்று உங்களுக்குத் தெரியும், இவற்றையெல்லாம் நான் எப்படி செய்ய முடியும். என்றான்

அதற்கு தந்தை பதிலளித்தார்;

1. நீ உண்மையிலேயே பசியுடன் இருக்கும்போது மட்டுமே சாப்பிட்டால், நீ மிகவும் சுவையான உணவை சாப்பிடு வதை உணர்வாய்

2. நீ கடினமாகவும், நேர்மையாகவும், உழைத்து சோர்வாக தூங்கச் சென்றால், நீ மிகவும் வசதியான நிம்மதியான படுக்கை அமயப்பெருவாய்.

3. நீ மக்களிடம் மரியாதையாக இருந்தால், அவர்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தும் போது, நீ அவர்களின் இதயங்களில் வசிப்பாய், அது சிறந்த வீட்டில் நீ குடியிருப்பதை உறுதி படுத்தும்.

ஞானத்தின் அழகான வார்த்தைகள், கட்டாயம் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும்.

  • 230
·
Added a post

தானே விமானத்தை செலுத்தி சென்ற ஈரான் நாட்டின் சபாநாயகர்! அவர்களால் எல்லாமே முடியும்!

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf), சமீபத்தில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது தானே விமானத்தை இயக்கியது தொடர்பான செய்தி உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

முகமது பாகர் காலிபாப் ஒரு பயிற்சி பெற்ற மற்றும் சான்றிதழ் பெற்ற விமானி ஆவார். ஏர்பஸ் (Airbus) ரக விமானங்களை இயக்கும் தகுதி இவருக்கு உண்டு.

ஏப்ரல் 2026-ல், அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தூதுக்குழுவுடன் இவர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்கு சென்றார்.

பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவிய போதிலும், அவர் தானே விமானத்தை இயக்கிச் சென்றது ஒரு துணிச்சலான செயலாகப் பார்க்கப்படுகின்றது.

அந்தப் பயணத்தின் போது, போரில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் பள்ளிப் பைகளை இருக்கைகளில் வைத்து, அவர்களைத் தனது "பயணத் தோழர்கள்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

இவர் இதற்கு முன்னதாக 2024 அக்டோபரிலும், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் தானே விமானத்தை ஓட்டிச் சென்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தரையிறக்கி உலகையே வியக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 237
·
Added a post

என் அலுவலத்தின் பக்கத்திலேயே ஒரு சிப்ஸ் தயாரிக்கற கடை இருக்கு.

அங்க 11 மணிக்கு பாமாயிலை பெரிய கடாய்ல ஊற்றி முதல்ல ஆனியன் பக்கோடா, பின்னர் அதே எண்ணையில் 3 மணிக்கு சமோசா, அதற்கு அடுத்ததாக உருளை சிப்ஸ்ன்னு போட்டு முடிக்கிறாங்க..

எண்ணைய் குறைய குறைய இருக்கிற எண்ணைய்லேயே இன்னும் கொஞ்சம் புது எண்ணையை சேத்துக்கறாங்க.

ஒரு முறை பொரிச்ச எண்ணையை மறுபடியும் சமையலுக்கு பயன்படுத்தினா உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்னு சொல்றாங்க.

ஆனா இதெல்லாம் கடைக்காரங்க கடைபிடிக்கறது இல்லே.

இதோட இந்த எண்ணெய்ய விட்டுட்டா பரவாயில்லே.

அடுத்த நாள் இதை வாங்கிட்டுப்போறதுக்கு ரோடோரங்கள்ல ஃபாஸ்ட் ஃபுட் கடை வச்சிருக்கறவன் கேனோட வந்து நிக்கிறான்.

இந்த சிப்ஸ் கடைக்காரன் தான் வாங்கிய விலையில் இந்த யூஸ் பண்ண எண்ணையை பாதிவிலைக்கு அவன்கிட்ட தள்ளிவிடறான்..

அவன் அதை கொண்டுபோய் மறுபடியும் அதனோட கொஞ்சம் புது எண்ணையை சேர்த்து சிக்கன்லேந்து, மீன்லேந்து எல்லாத்தையும் பொரிக்க ஆரம்பிக்கறான்.

அவன் போடற பிரைடு ரைஸ், நூடுல்ஸ்ல இருந்து, பாஸ்ட் ஃபுட் மொத்தத்துக்கும் அந்த எண்ணைய்தான் பயன்படுத்தறான்..

மசாலா தூக்கலாப்போட்டு எண்ணைய் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஊத்தி ஒரு எக் நூடுல்ஸ் போடுப்பான்னு ஆர்டர் பண்றவங்களுக்கு இதெல்லாமா தெரியப்போகுது?

அப்படியே கெட்ட கொழுப்புதான் உடம்புல உட்காரும்.

இவனோட போகலே, வீட்ல இருக்கிற குழந்தைகளுக்கும் இதை பார்சல் வாங்கிட்டு போய் கொடுத்து அவங்க உடல்ஆரோக்கியத்தையும் கெடுக்கிறவங்களை நினைச்சு வருத்தப்படறதா இல்லே பரிதாபப்படறதான்னு தெரியல..

நம்ம நாட்ல உணவு விஷயத்தில் விழிப்புணர்வு என்பது மக்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது..

அரசாங்கமும் இவற்றை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை

அடுத்த தலைமுறைக்கு இந்த விழிப்புணர்வைஅழுத்தாமாக வலுகட்டாய படுத்தி (நம்ம பிள்ளைங்களுக்குதான்) சொல்லி கொடுங்கள் இல்லை என்றால் இதை புரிதல் இல்லாமல் இளம்நோயாளிகள் ஆகி விடுவார்கள்

---- இணையப் பதிவு

  • 232
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சகோதர வகையில் பயனடைவீர்கள். இழுபறியாக இருந்த கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். பண வரவு உண்டு.

ரிஷபம்: எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வெளி வட்டாரத்தில் பாராட்டு கிடைக்கும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.

மிதுனம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் மன நிம்மதி கிடைக்கும். பெற்றோர் உடல்நிலை சீராகும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

கடகம்: எதிர்பார்த்த உதவிகள், வாய்ப்புகள் தடைபடும். பேச்சில் நிதானம் அவசியம். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். பயணத்தின்போது கவனம் தேவை. நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உத்யோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாகனப் பழுது நீங்கும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி: வருங்கால வளர்ச்சிக்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழுதான வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. வியாபாரத்தில் வராக்கடன் வந்துசேரும்.

துலாம்: உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். எக்காரியத்திலும் பொறுமை தேவை.

விருச்சிகம்: சொந்த பந்தங்கள் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் வீணாக தலையிடாதீர்கள்.

தனுசு: தடைபட்ட வேலையை உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சில சிக்கல்களுக்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வெளி உணவுகள் வேண்டாம். பயணத்தில் கவனம் தேவை.

மகரம்: எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டு பார்க்க நேரிடும். கணவன் - மனைவி இடையே மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.

கும்பம்: திடீர் வெளியூர் பயணம் மற்றும் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நிதானமாக செயல்படுங்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கலைப் பொருட்கள் சேரும்.

மீனம்: வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிகப் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

  • 266
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை 13.4.2026

இன்று இரவு 10.26 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று பிற்பகல் 01.22 வரை அவிட்டம். பின்னர் சதயம்.

இன்று பிற்பகல் 02.42 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று காலை 10.27 வரை பவம். பின்னர் இரவு 10.26 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று பிற்பகல் 01.22 வரை அவிட்டம். பின்னர் சதயம்.

இன்று பிற்பகல் 02.42 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று காலை 06.03 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=480&dpx=2&t=1776049054

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 269

Good Morning...

  • 271
·
Added a news

ஸ்கார்பாரோ பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

கென்னடி சாலை மற்றும் எல்ஸ்மியர் சாலை சந்திப்புப் பகுதியில் பல வாகனங்கள் தீப்பற்றி எரிவதாகக் காலை 5:05 மணியளவில் டொராண்டோ காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த டொராண்டோ தீயணைப்புப் படையினர், அங்குள்ள கார் விற்பனை நிலையம் (Car Dealership) ஒன்றில் நான்கு வாகனங்கள் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டறிந்து, விரைவாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு எவரும் இருக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு தீயணைப்பு வாகனம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, விசாரணையின் நிமித்தமாக கென்னடி சாலையின் வடக்கு நோக்கிய பாதைகள் ஷ்ரோப்ஷையர் டிரைவ் பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

  • 349
·
Added a post

1300 ஆண்டுகள் நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை அறிவியலை அதிரவைத்துள்ளது.

பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் மனிதர்களை போல் படுத்த நிலையில் 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை காணப்பட்டு வருகின்றது.

நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை, எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும், இதற்கான அர்ச்சனைகளும், அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன. மேலும் நீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற பக்தர்கள் எப்போதும் இங்கு வந்த வண்ணமே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • 347
  • 351
·
Added a post

விமானத்தினுள், விமானியின் அறையை சுத்தம் செய்யும் ஒரு பணியாள், விமானியின் காபினெட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது,

"விமானத்தை பறக்க வைப்பது எப்படி?(தொகுதி 1)" என்று தலைப்பிட்ட ஒரு புத்தகத்தை பார்த்தார்.

அவர் முதல் பக்கத்தைத் திறந்தார்: "என்ஜினை ஆன் செய்ய, சிவப்பு பொத்தானை அழுத்தவும்" என்று இருந்தது. அவர் அவ்வாறே செய்தார், விமான இயந்திரம் இயங்க தொடங்கியது.

அவர் மகிழ்ச்சியுடன் அடுத்த பக்கத்தைத் திறந்தார்..

"விமானத்தை நகர்த்த, நீல பொத்தானை அழுத்தவும்... "அவர் அவ்வாறே செய்தார், விமானம் அற்புதமான வேகத்தில் நகரத் தொடங்கியது.

அவர் பறக்க விரும்பினார், எனவே அவர் மூன்றாவது பக்கத்தைத் திறந்தார்: விமானத்தை பறக்க வைக்க, பச்சை பொத்தானை அழுத்தவும்.."

அவர் அவ்வாறே செய்தார், விமானம் பறக்கத் தொடங்கியது.

உற்சாகமாக இருந்தார்...!!

இருபது நிமிடங்களுக்குப் பிறகு, பறந்து திருப்தி ஆன பின், விமானத்தை தரையிறங்க விரும்பினார், எனவே அவர் நான்காவது பக்கத்திற்குச் செல்ல முடிவு செய்தார்.. நான்காம் பக்கத்தில், "விமானத்தை எவ்வாறு தரையிறக்குவது என்பதை அறிய, அருகிலுள்ள புத்தகக் கடையில் தொகுதி 2 ஐ வாங்கவும்!"

!!!!!!!

முழுமையான தகவல் இல்லாமல் எதையும் முயற்சிக்காதீர்கள். பாதி கற்பது ஆபத்தானது மட்டுமல்ல அழிவுகரமானதும் கூட. முழுமையாக கற்றுக்கொண்டு செயலில் இறங்குங்கள்.

  • 359
·
Added a post
  1. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையும் உடையது. அதுமட்டுமில்லாமல் உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.
  2. உணவைச் இலகுவாக செரிக்க வைக்கின்றது.
  3. உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.
  4. மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
  5. மிளகு, சுக்கு, சிற்றரத்தை, அதி மதுரம் ஆகிய இவற்றை சமமாக எடுத்துக் கஷாயம் செய்து மூன்று வேளை குடித்து வர ஜலதோஷத்தோடு உள்ள ஜூரமும் இருமலும் குணமாகும்.
  6. சின்ன வெங்காயம், மிளகு, கிராம்பு இவைகளை மையாக அரைத்து சிறிது தேனில் கலந்து சாப்பிட்டு வர, நெஞ்சுவலி நீங்கும்.
  7. அடுக்குத் தும்மல் பிரச்சனை அடிக்கடி வருகிறதா? எனில், மிளகை தூள் செய்து அந்தப் பொடியை நெருப்புத் தணலில் இட்டு அதிலிருந்து வரும் புகையை இழுக்க அடுக்குத் தும்மல் நின்று விடும்.
  8. மிளகுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும். சளித் தொல்லை இருக்காது.
  9. இருமல் தொந்தரவு இருந்தால் டீ அல்லது பாலில் மிளகு, ஏலக்காய், இஞ்சி, ஓமம் ஆகியவற்றை அரைத்துப் போட்டு குடியுங்கள் இருமல் பிரச்சனை நீங்கும்.
  • 356