·   ·  3 videos
  •  ·  0 friends
  • 431
  • More

பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்

பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்

Comments (0)
Login or Join to comment.
  • 32
  • 32

ATM

  • 33
  • 32
  • 32
  • 32
  • 32
·
Added a news

கனடாவின் வின்னிபெக் நகரத்தில் டிரான்ஸ்கோனா (Transcona) தொகுதி உறுப்பினர் ரஸ் வயாட் (Russ Wyatt) மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு நபரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் போதைப்பொருள் வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வயாட் கைது செய்யப்பட்டார்.

56 வயதான ரஸ் வயாட் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, பின்னர் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நபர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2025 டிசம்பர் மாதம் சமூக ஊடக தளம் வாயிலாக அறிமுகமான ஒரு நபரை, வின்னிபெக்கின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவருக்கு சட்டவிரோத போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஸ் வயாட் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் தீங்கு விளைவிக்கும் நோக்கில் போதைப்பொருள் கொடுத்தல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. 

  • 35
·
Added a news

ஏர் கனடா விமான விபத்து தொடர்பில், விமான நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்ட இரங்கல் செய்தி கனடாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மார்ச் மாதம் 22ஆம் திகதி, கனடாவின் மொன்றியலிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள LaGuardia விமான நிலையத்தில் சென்று இறங்கிய ஏர் கனடா விமானம் ஒன்று, தீயணைக்கும் ட்ரக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விமான ஓடுபாதையின் குறுக்கே வேகமாக வந்த தீயணைப்பு வாகனம் ஒன்றின் மீது மோதி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தின் விமானிகள் இருவரும் உயிரிழந்தார்கள்.

விமான விபத்தைத் தொடர்ந்து, ஏர் கனடா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேல் (Michael Rousseau) சமூக ஊடகமான எக்ஸில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஏர் கனடா விமான விபத்தில் இரண்டு உயிர்கள் பலியானதால் தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்த மைக்கேல், அந்த விபத்து, ஏர் கனடாவுக்கு ஒரு கருப்பு தினம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், மைக்கேலின் செய்தி பெரிய அளவில் கனடாவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. காரணம், தான் வெளியிட்டிருந்த வீடியோவில் மைக்கேல் ஆங்கிலத்தில் பேசியிருந்தார்.

விடயம் என்னவென்றால், கனடாவின் அலுவல் மொழிகள் ஆங்கிலம் மற்றும் ஃப்ரெஞ்சு ஆகும். அத்துடன், விமான விபத்தில் உயிரிழந்த விமானிகளில் ஒருவரான ஆண்டோயின் ஃபாரஸ்ட் ஃப்ரெஞ்சு மொழி பேசுபவர். ஆக, மைக்கேல் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அவர் ஆங்கிலம், ஃப்ரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளிலும் பேசியிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, கனடா பிரதமரான மார்க் கார்னியே, தான் மைக்கேலின் செய்தியால் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்துள்ள விடயம் பெரிதும் கவனம் ஈர்த்துவருகிறது.

ஏர் கனடா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியின் ஒற்றை மொழி இரங்கல் செய்தியில் இரக்கமில்லை என்றும், முன்பின் யோசிக்காமல் அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கார்னி விமர்சனம் முன்வைத்துள்ளார்.

நாம் இருமொழி பேசும் நாட்டில் வாழ்கிறோம் என்பதில் பெருமையுடையவர்கள், அப்படியிருக்கும்போது, எப்படிப்பட்ட சூழலானாலும், இரு அலுவலக மொழிகளிலும் தகவல் தொடர்பு மேற்கொள்வது ஏர் கனடா போன்ற நிறுவனங்களின் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமருடன், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏர் கனடா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

  • 35
  • 48
·
Added a post

இது சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டம்.

ஒரு ஆங்கில ராணுவ அதிகாரி இந்தியாவில் பணியமர்த்தப்பட்டார். அவரிடம் ஒரு விலையுயர்ந்த பானம் (Sherry) இருந்தது. சில விசேஷமான நாட்களில் அவர் அதில் சிறிது மட்டும் குடித்துவிட்டு மிச்சத்தை பிறகு குடிக்கலாம் என்று சேமித்து வைப்பார். ஒரு நாள் அவர் அந்த பாட்டிலின் பானத்தின் அளவு, தான் குடிப்பதைவிட அதிகமாக குறைவதை கவனித்தார். தன் வேலைக்காரன் தான் இதை குடித்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டார். ஒரு நாள் இதை ஏன் மற்றவர் குடிக்க விட வேண்டும்? தானே குடித்து விடலாம் என்று முடிவெடுத்தவர், அதை முழுமையாக குடித்துவிட்டு அந்த பாட்டிலில் கொஞ்சம் சிறுநீரை ஊற்றி வைத்தார். அதன் பிறகும் அந்த பாட்டிலின் அளவு குறைந்ததை எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் அந்த பாட்டிலின் சிறுநீர் அளவு முழுமையாக குறையட்டும் என்று பலநாள் காத்திருந்தார்.

பிறகு அவர் அந்த வேலைக்காரனை அழைத்து “நான் இந்த பாட்டிலை பல நாட்களாக தொடவே இல்லை. ஆனால் அதன் அளவு எப்படி குறைந்தது? நீ என்ன செய்கிறாய்?” என்று கோபத்துடன் கேட்டார்.

அதற்கு அவர் “ஐயா நான் உங்களுக்கு கொடுக்கும் சூப்பில் கொஞ்சம் Sherry ஐ தினமும் சேர்க்கிறேன்” என்றார்…..

  • 52
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். பூர்வீக வீட்டை விரிவு படுத்துவதற்கான முயற்சி மேம்படும். வெளியூர் பயணத்தால் அனுபவம் கிடைக்கும். குழந்தைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். நவீன பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் இருந்து சோர்வுகள் குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வாகன பயணங்களில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபார நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மிதுனம்

நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பிற மொழி மக்களிடம் கவனம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படுவது நல்லது. திடீர் வரவுகள் ஏற்படும். மனதை உருத்திய சில பிரசனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். வெளியூர் பயணம் வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : காவி

சிம்மம்

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழில் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆன்மீகப் பணிகளில் புரிதல் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கன்னி

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். காப்பீடு துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். உத்தியோகத்தில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

மனதளவில் தைரியம் பிறக்கும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திட்டமிடாத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரம் ரீதியான செயல்களில் அனுபவம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

விருச்சிகம்

குடும்பத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் அதிகரிக்கும். வர்த்தக வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். புதிய விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

தனுசு

விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பயணம் முலம் நட்பு வட்டம் விரிவடையும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

மகரம்

எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் வரும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். அரசு வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் சிக்கல்கள் குறையும். ஆதரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

கும்பம்

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் தூக்கமின்மை ஏற்படும். கூட்டாளிகளிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மூலம் அனுபவங்கள் உருவாகும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

மீனம்

கடன் தொடர்பான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். கல்வியில் இருந்த தடுமாற்றம் மறையும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். அரசு வழியில் சாதகமான செய்திகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 176
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை 26.3.2026

இன்று பிற்பகல் 02.56 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று இரவு 07.05 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று அதிகாலை 03.16 வரை சௌபாக்கியம். பின்னர் ஷோபனம்.

இன்று அதிகாலை 04.03 வரை பத்திரை. பின்னர் பிற்பகல் 02.56 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று காலை 06.15 வரை சித்தயோகம். பின்னர் இரவு 07.05 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=464&dpx=2&t=1774492126

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 192

Good Morning.....

Have a Nice day!

  • 179
·
Added article

ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘அயலான்’ ஆகிய படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருந்தது. இது தகவலாக இருந்தாலும், யார் தயாரிப்பாளர், எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட எதுவுமே முடிவாகாமல் இருந்தது. தற்போது சூரி – ரவிக்குமார் இணையும் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

‘டியூட்’ படத்துக்குப் பின், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் இதுவாகும். இதனை பெரும் பொருட்செலவில் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக அறிவிக்கப்பட்ட போஸ்டரின் மூலம், 2015-ம் ஆண்டு வெள்ளம் வந்த சமயத்தில் நடைபெறும் கதையாக இதனை ரவிக்குமார் வடிவமைத்திருப்பது உறுதியாகிறது.

தற்போது ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூரி. அதனை முடித்துவிட்டு ரவிக்குமார் படத்தினை தொடங்க முடிவு செய்திருக்கிறார். இதில் சூரியுடன் நடிக்க இருப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது.

  • 276
·
Added article

சமீபத்தில் இயக்குநர் பாலா, சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கும் வீடியோ பதிவொன்று இணையத்தில் வைரலானது. அதில் விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருந்தார் சமுத்திரக்கனி. அவரும் பேசியது விஜய்யை தான் என்று இணையத்தில் ரசிகர்கள் பலரும் அவரை வசைபாட தொடங்கினார்கள்.

அந்த வைரலான வீடியோ பதிவு குறித்து சமுத்திரக்கனியிடம் பேட்டியொன்றில் கேட்கப்பட்டது. அதற்கு, “நான் பேசும் போது வீடியோ எடுக்கிறார்கள் என தெரியும். ஆனால் ஆரம்பத்தில் இருந்து என்ன பேசினேன் என்பதை எடுக்கவில்லை. இறுதியாக பேசியதை மட்டுமே எடுத்தார்கள். நானும் எடுக்கட்டும் என விட்டுவிட்டேன். எனக்கு மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது. சந்தோஷமோ, வேதனையோ அதை அப்படியே பேசிவிட்டு, அடுத்த தளத்துக்கு சென்றுவிடுவேன்.

அந்த வீடியோ பதிவு வந்துவிட்டது. அதற்கு மேல் மானே, தேனே எல்லாம் சேர்த்து வேலையை பார்த்துவிட்டார்கள். அதனை நான் ஒரு குற்றமாக நினைக்கவில்லை. அதே போல் பேசிவிட்டு பின் வருந்தவும் இல்லை. என் மனதில் பட்டதை தானே பேசியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.

  • 278
·
Added a post

சீடன் ஒருவன் குருவிடம் ஆலோசனை கேட்க வந்தான்.

குருவே ! எனக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி நிம்மதியே இல்லை என்றான்.

குரு - கவலை படாதே மகனே! நீ அங்கே இருக்கும் தோட்டத்தில் இருக்கும் நிறய வண்ணத்து பூச்சியில் ஒன்றை பிடித்து வா என்றார் சீடனிடம்!

சீடன் ஓடி சென்று பட்டாம் பூச்சியை பிடிக்க அங்கு இங்கும் ஓடி கடைசியில் களைத்தே போனான்.

குரு அவனை அழைத்து அமைதியாக அமர சொன்னார், சுற்றி இருக்கும் அழகிய இயற்கையை ரசிக்க சொன்னார்.

உடல் மற்றும் மன அமைதி கொண்டவனாக அமர்ந்து இருக்க, அவனை சுற்றிலும் அவன் மேலும் வண்ணத்து பூச்சிகள் அமர ஆரம்பித்தன.

குரு அப்பொழுது சீடனிடன் சொன்னார். மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சி மாதிரி. நீ துரத்தி கொண்டு ஓடினாள் அது ஓடும், அமைதியாக இருந்து இருக்கும் அழகிய வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்து விட்டால் மகிழ்ச்சி உன்னை வந்து அடையும்.

  • 284

தகவல் - இணையம்

  • 278
·
Added a post

ஒரு முறை பெர்னாட்ஸா காலையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தாராம் . அப்போ அந்த வழியாக அவரின் நண்பர் தன் நாயுடன் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தாராம்.

பெர்னாட்ஷா புன்னகையுடன் அவரை பார்த்து " என்ன நாயுடன் நடை பயிற்சியா என்று கேட்டாராம் ! "

அதற்கு அந்த நண்பர் நக்கலாக.....

" நான் உங்களுடன் போகலாம் என்று இருந்தேன் ! ஆனால் நாய் தான் கிடைத்தது ! " என்றாராம் !

அதற்கு பெர்னாட்ஷா கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் ......" நான் நாயுடன் பேசி கொண்டிருக்கிறேன் " என்றாராம் !

நண்பர் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாராம் !

  • 285
·
Added a post

இன்றைய நவீன உலகில் 'மைக்ரோ பிளாஸ்டிக்' என்பது கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இவை நமது உடலில் தங்கி நீண்ட கால ஆரோக்கியச் சீர்கேடுகளை உண்டாக்குகின்றன.

ஆனால், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படும் புளியங்கொட்டை இதற்கு ஒரு தீர்வாக அமையும் எனப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புளியங்கொட்டையில் உள்ள சில குறிப்பிட்ட உட்பொருட்கள், உடலில் உள்ள பிளாஸ்டிக் துகள்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி அவற்றைச் சேகரிக்கின்றன.

இதன் மூலம் நமது உடல் அந்த நச்சுக்களை இயற்கையாகவே வெளியேற்றுவது எளிதாகிறது. சுமார் 90% வரையிலான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை நீக்கும் திறன் இதற்கு உண்டு என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

நமது முன்னோர்கள் புளியங்கொட்டையைப் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தியதன் ரகசியம் இப்போது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. இயற்கை நமக்குத் தந்த பொக்கிஷங்களை அழியாமல் காப்போம்!

  • 285
·
Added a post

1. வளர்ந்த மனித உடலில் 600 தசைகள். நூற்றுக்கும் மேலான இணைப்புகள். ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள இரத்தக் குழாய்கள் 13000 மில்லியன் உயிரணுக்களும் உள்ளன.

2. மனிதனுக்குள்ள 206 எலும்பு களில் பெரும்பாலானவை கைகளிலும் கால்களிலும் உள்ளன.

3. ஆண்களில் விந்துவை உண்டாக்கும் விரை (விந்தகம்) நாள் ஒன்றுக்கு 10 மில்லியன்வரை விந்து உயிரணுக்களை உற்பத்தி செய்யும். இவை அப்படியே உயிருடன் ஆறு மாத காலம் இருந்தால் மற்றொரு உலக ஜனத்தொகையை உருவாக்கக்கூடும்.

4. மனித இதயம் ஒரு இயல்பான வாழ்நாளில் 2000 மில்லியன் முறை துடிக்கும். இந்த கால கட்டத்தில் 500 மில்லியன் இரத்தத்தை பம்ப் செய்யும். மனிதன் தூங்கும்போது கூட இதயம் ஒரு மணி நேரத்தில் சுமார் 340 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்யும். ஒரு நாளைக்கு 1 லட்சம் முறைதுடிக்கும்.

5. இளைஞனின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 லிருந்து 72 முறை. ஆனால் இளம் பெண்ணின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 78 லிருந்து 82 முறைஇருக்கும்.

6. மனிதனின் சிறுநீரகத்தில் ஒரு மில்லியன் வடி கட்டிகள் இருக்கின்றன. அவை ஒரு நிமிடத் திற்கு 1.3 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகின்றன. அந்த வடிப்பில் ஏற்பட்ட கழிச்சலை சிறுநீரகம் வெறியேற்றுகின்றன.

7. மனித உடலில் உள்ள இரத்தத்தை நிமிடத்திற்கு 4.5 லிட்டர் விகிதம் நுரையீரலில் சுத்தப் படுத்தும்.

8. மனித உடலில் சிவப்பணுக்களை எலும்புச் சோறு (எலும்பின் மச்சை) தயாரிக்கிறது. அந்த அணுக்கள் 100லிருந்து 120 நாட்கள் வாழ்கின்றன. மனித வாழ்வில் சுமார் அரை டண் சிகப்பணுக்கள் தயாராகும்.

9. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 50 டண் உணவை சாப்பிடுகிறான். 50 ஆயிரம் லிட்டர் திரவத்தை குடிக்கிறான்.

10. நாம் தினமும் கண் இமை களை திறக்கவும் மூடவும் செய்கிறோம் அல்லவா? இந்த செயல் 6 வினாடிக்கு கொருமுறை நடக்கிறது. அதன்படி இந்த சிமிட்டலை நாம் நம்முடைய வாழ் நாளில் 250 மில்லியன் முறை (25 கோடிமுறை) செய்கிறோம்.

11. மனிதனுக்கு 15 வயது வரையில்தான் மூளை வளரும்.

12. சாதாரண மனிதனின் தலையில் 10 ஆயிரம் ரோமங்கள் உள்ளன.

13. ஒரு விஞ்ஞானி, மனிதனின் மரணத்திற்கு சில நொடிகளுக்கு முன்பு இருந்த எடையும் மரணமடைந்த உடனே இருந்த எடையும் ஒப்பிட்டு பார்த்து 21 கிராம் குறைவாக இருந்ததை அறிந்து அதன்மூலமாக ஜீவான்மாவின் எடை 21 கிராம் என்று நிரூபித்தார்.

14. நாம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 25 முறை கண் இமைகளை மூடி திறக்கிறோம்.

15. ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளில் (24 மணிகளில்) 23000 முறை மூச்சிழுப்பான்.

16.பெரும்பாலோர் இரவுத் தூக்கத்தில் 40 முறை அப்படியும் இப்படியும் புரளுவார்கள்.

17. மனித உடலில் உள்ள அனைத்து இரத்தக் குழாய்களை வரிசையாக இணைத்தால் மொத்தம் ஒரு லடசம் கி.மீ நீளத்திற்கு சேரும். அந்த நீளம் பூமத்திய ரேகையை நான்கு தடவை சுற்றிவரக்கூடும்.

18. மனிதன் மனமார சிரிக்கும் பொழுது 17 தசைகளும், கோபப்படும்பொழுது 43 தசைகளும் சுருக்கமடைகின்றன.

  • 282
·
Added a post

காலையில் கண் விழித்து எழுந்ததும்! மனைவி கணவனை பூரி கட்டையால் மண்டையில் ஒரே அடி அடித்தார்!

கணவன் குழப்பத்துடன்! எதற்கு அடிக்கிராய் என்று கேட்க!

உங்கள் சட்டையை துவைக்க போடும்

போது ஒரு துண்டு சீட்டு இருந்தது அதில் ரோசி ! என்று இருந்தது அதனால் தான் அடித்தேன்!

ஐயோ ! அது நேற்று குதிரை ரேசில் நான் பணம் கட்டிய குதிரையின் பெயர் என்று சொல்ல!

மனைவி கண்ணீருடன் கணவனிடம் மன்னிப்பு கேட்டு கொண்டார்!

மறு நாள் காலையில் எழுந்தான்! இன்றும் தயாராக இருந்த மனைவி அதே பூரி கட்டையால் கணவனின் மண்டையில் அடித்தார்!

கணவன் புரியாமல் இன்னைக்கு என்ன ஆச்சு என்ற கேட்க!

அதற்கு மனைவி கோபமாக சொன்னார்!

" நேற்று நீங்க பணம் கட்டிய குதிரை காத்தால இருந்து மூன்று மிஸ்டு கால் கொடுத்து இருக்கு! அதான்!

  • 285
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாரிசுகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். ஒப்பந்தம் விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

ரிஷபம்

செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

மிதுனம்

பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து அதற்கு தகுந்தாற்போல செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கடகம்

பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களுக்கு இடையே இருந்து வந்த சலசலப்புகள் குறையும். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் பிறக்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

சிம்மம்

நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் பிறக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

கன்னி

தவறிய சில பொருள்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல ஒரு மாற்றத்தை தரும். விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உண்மையானவர்களை புரிந்து கொள்வீர்கள். உணவு பழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். பிற மொழி மக்களின் உதவிகள் கிடைக்கும். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

துலாம்

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைப்பட்ட சில வேலைகள் முடியும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

விருச்சிகம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுகளில் கனிவு வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நேரம் தவறி உணவு உண்பதை குறைத்துக் கொள்ளவும். எதிலும் பதற்றம் இன்றி பொறுமையுடன் செயல்படும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு

எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். புதிய கூட்டாளிகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் ஒற்றுமை மேம்படும். நண்பர்களின் உதவிகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உருவாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புக்கள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மகரம்

நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுகூலமான சூழல்கள் அமையும். தடைப்பட்ட சில காரியங்கள் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

தொழில் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். பணி புரியும் இடத்தில் பொறுப்புக்கள் மேம்படும். பூர்விக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

மீனம்

சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். பொன் பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். விவசாயம் துறைகளில் மேன்மை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 381
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 11 ஆம் தேதி புதன்கிழமை 25.3.2026.

இன்று மாலை 05.10 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று இரவு 08.34 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.

இன்று காலை 08.52 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.

இன்று காலை 06.20 வரை கரசை. பின்னர் மாலை 05.10 வரை வணிசை. பிறகு பத்திரை.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=463&dpx=2&t=1774405113

நல்ல நேரம்:

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 378