·   ·  3 videos
  •  ·  0 friends
  • 450
  • More

பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்

பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்

Comments (0)
Login or Join to comment.
  • 2
·
Added a post

ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர். அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள். ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள்.

அந்த தீவில் வெறும் புற்களும், புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்கவோ நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது.. அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரிய வில்லை. முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர்.

அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது பார்ப்போம் என்றும் முடிவு செய்தனர். அதன்படி அந்த தீவின் இருகரைகளிலும் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர். முதலில் இருவரும் உணவுக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனையின்படி வசதியானவன் இருந்த பகுதிக்கு சில பழங்கள் மிதந்து வந்தன. அதை அவன் சாப்பிட்டான். ஆனால் ஏழையோ சாப்பிட ஏதும் கிடைக்காமல் பசியோடு இருந்தான்.

பசியாறிய மனிதனுக்கோ போரடித்தது, தனக்கு அருகில் மனைவியாக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டினான். ஆச்சர்யமாக அவன் வேண்டுதல்படியே அந்த தீவுக்கு அருகில் வந்த சிறிய கப்பல் உடைந்து அதில் இருந்த ஒரு அழகிய இளம் பெண் மட்டும் உயிர் தப்பி ஒரு உடைந்த பலகை உதவியுடன் அந்த தீவிற்கு வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்ததும் அவள் அழகில் சொக்கி போய் அவளையே தெய்வ சாட்சியாக திருமணம் செய்து கொண்டான். தீவின் மற்றொரு பக்கம் இருந்தவன் இன்னும் பசியால் தனிமையில் இருந்தான்.

முதல் மனிதன் செய்த வேண்டுதல் படி நல்ல உணவுகள், துணிகள், எல்லாம் அவன் இருந்த பகுதிக்கு மட்டுமே மந்திரம் செய்தது போல கரை ஒதுங்கின. ஆனால் அவன் நண்பனுக்கோ ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் உருக்குலைந்து போனான். ஆனால், புது ஜோடிகளோ வந்த பழங்கள் உணவுகளுடன் இருவரும் ஒரு வாரகாலம் உல்லாசமாக களித்தனர். இப்படியாக ஒரு வாரம் கழிந்தது.....

இறுதியாக முதல் மனிதன் தன் புது மனைவியுடன் தன் சொந்த இடத்துக்கு போவதற்கு வேண்டி ஒரு படகுக்காக வேண்டினான். அதுவும் அதிசயம் போல அடுத்த நாளே கரை ஒதுங்கியது.

முதல் மனிதன் தனது பிரார்த்தனையின் சக்தி கண்டு மிகுந்த மகிழ்ச்சியில், துரதிர்ஷ்டம் மிக்க தன் நண்பனை அழைக்காமல் தன் புது மனைவியுடன் அதில் ஏறி அந்த தீவை விட்டு செல்ல ஆயுத்தமானான். இது ஏதும் அறியாத அந்த இன்னுமொருவன் இன்னும் பசியாறாமல் வேதனையில் வாடினான்...

எல்லாம் கிடைத்த நண்பன் நினைத்தான்,

தன் நண்பன் ஒன்றுக்கும் உதவாதவன். கடவுளின் ஆசிர்வாதம் கூட அவனுக்கு கிடைக்க வில்லை. ஒரு சிறு பிரார்த்தனையை கூட கடவுள் நிறைவேற்றி வைக்கவில்லை. ஏற்கனவே ஏழை வேறு.. அதனால், அவனை அழைத்து செல்ல இவனுக்கு இஷ்டமில்லை என்றான் சுயநலம் பிடித்த அந்த நண்பன்..

படிக்கும் நமெக்கெல்லாம் கடவுள் மேல் கோபம் வருகிறது அல்லவா... அப்போது அந்த படகு கிளம்பத் தொடங்கியதும் வானத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க தொடங்கியது... "ஏன் உன் நண்பனை தனியாக இந்த தீவில் விட்டு செல்கிறாய்..?" என்று அந்த குரல் கேட்டது...

அதற்கு அந்த மனிதன் சொன்னான் "நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். அவர் என்னை ஆசிர்வாதித்து இது எல்லாம் எனக்கு மட்டும் கிடைக்க செய்தார். என் நண்பனின் பிரார்த்தனை ஒன்றுக்கும் கூட கடவுள் செவி சாய்க்கவில்லை. அவன் ஒன்று கூட பெற தகுதி இல்லாதவன்" என்று சொன்னான்.

அந்த குரல் அவனிடம் மறுபடியும் பேசியது "மகனே நீ நினைப்பது தவறு. நான் தான் கடவுள்... உன்னை உயிராக நேசிக்கும் உன் நண்பன் பிரார்த்தனையில் ஒன்றே ஒன்று மட்டும் கேட்டான். நான் அந்த ஒரு பிரார்த்தனையை நிறைவேற்றி வைத்தேன். அது மட்டும் அவன் கேட்கவில்லை என்றால் உனக்கு எந்த வித ஆசிர்வாதமும் பலனும் கிடைத்திருக்காது".

"அவன் என்ன கேட்டான் பிரார்த்தனையில்? அவனுக்கு நான் ஏதாவது கடமை பட்டு இருக்கிறேனா?" என்றான்..?

அந்த குரல் மேலும், "உன் நண்பன் பிரார்த்தனையில் 'என் நண்பன் மிகவும் வசதியானவன், நல்லவன். வாழ்க்கையில் சுகம் மட்டுமே அனுபவித்து பழகியவன், அவன் கஷ்டமே அறியாதவன். ஆகவே, என் பிரார்த்தனையெல்லாம் அவன் வேண்டுவதை மட்டும் நிறைவேற்றுங்கள்...

அது போதும், நான் ஏற்கனவே ஏழை தான், இதுமாதிரி சூழ்நிலைகள் எனக்கு புதியதல்ல.... ஆகவே எனக்கென்று கேட்க எதுவும் இல்லை என்றுதான் வேண்டினான்".

அதை கேட்ட அந்த சுயநலம் பிடித்த நண்பன் வெட்கி, மனந் திருந்தி தன்னலமற்ற தன் நண்பனை தேடி ஓடினான்.

கதையின் நீதி:

நம்முடைய பிரார்த்தனைகளால் மட்டுமே நமக்கு எல்லாம் கிடைத்து விடுவதில்லை. அதற்கு மற்றவர்களின் வேண்டுதல்களும் உதவி புரிகின்றன என்பதை மறந்து விட வேண்டாம். நம்மை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஓதுக்கி வைத்து விட வேண்டாம், சந்தேகப்பட வேண்டாம். உறவையும் நட்பையும் மதிக்க கற்று கொள்ளுங்கள்..

  • 4
  • 5
·
Added a post

இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism...

இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism...

இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism...

இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism...

இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா Imperialism...

இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism...

இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா Nationalism...

இட்லி உனக்கு கிடையாதுன்னா Facism...

இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.

இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism.

இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism...

இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.

இட்லி மெஷீன்லே பண்ணினா Modernism

இட்லி Fork and Spoon வெச்சி சாப்பிட்டா Elitism

இட்லி North India-la நல்ல இருக்காதோன்னு நினைச்சா Skepticism

இட்லி நல்லா இல்லைன்னு சொன்னா Criticism

இட்லி மட்டும் தான் நல்ல காலை உணவுன்னு ஒத்தை காலில் நின்றால் Fanaticism

இட்லி நன்றாக செமிச்சால் Metabolism

இட்லி பிடிக்காதவனை எனக்கு பிடிக்காதுன்னு சொன்ன Chauvinism

last one

இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா escapism!!!!!

ஒரு இட்லிக்கு இவ்வளவு விளக்கம் தேவையா....என்று என்மேல் கடுப்பாகி... என்னை அடிக்க நீங்க நினைத்தால் அது Terrorism

  • 5
  • 6
  • 6
  • 15
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். வெளியூர் வர்த்தக செயல்களில் ஆர்வம் ஏற்படும். புதுமையான செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். கற்பனை துறைகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். மாற்றம் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

ரிஷபம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களால் புதிய அனுபவம் ஏற்படும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறப்புகளை பற்றி புரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

மிதுனம்

உத்தியோக முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார போட்டிகளில் விவேகத்துடன் செயல்படவும். நிதானமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். கடன்கள் சார்ந்த பிரச்சனைகள் குறையும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கடகம்

திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பெரியோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

சிம்மம்

பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் பிறக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். உத்தியோக பணிகளில் அலைச்சல் ஏற்படலாம். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கன்னி

சுப முயற்சிகள் கைக்கூடி வரும். இசை துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் கைகூடிவரும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில்நுட்பக் கருவிகள் மீது ஆர்வம் ஏற்படும். போட்டி மனப்பான்மை குறைத்து கொள்வது நல்லது. வேலையாட்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

துலாம்

ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளை துரிதத்துடன் முடிப்பீர்கள். வாக்குறுதிகள் அளிப்பதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். திடீர் பயணங்களால் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வருத்தம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

விருச்சிகம்

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நிதி தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பழக்க வழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உருவாகும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மகரம்

மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். வேலை ஆட்களின் ஆதரவுகள் மேம்படும். சுப காரியங்களை முன் நின்று செய்து முடிப்பீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று முடிவுகளை எடுக்கவும். உடல் அளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கும்பம்

வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். பேச்சு வன்மையால் அனுகூலம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எதிர் பாலின மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். பணிபுரியும் இடத்தில் ஒற்றுமை மேம்படும். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

மீனம்

எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உயரதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை காணப்படும். தன வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி பணிகளில் மேன்மையான சூழல் காணப்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

  • 98
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.4.2026.

இன்று காலை 11.51 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று இரவு 11.49 வரை விசாகம். பின்னர் அனுஷம்.

இன்று பிற்பகல் 02.25 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.

இன்று காலை 11.51 வரை பத்திரை. பின்னர் பவம்

இன்று காலை 06.08 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=473&dpx=2&t=1775364735

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 102

சிந்திப்போமா?

முன்பதிவு தேவையின்றி

ஒருநாள்

நம் பயணம் முடிவுறும்

நாம் செய்யும் தர்மங்களே

நம் luggage...

நாம் பெற்ற மரியாதையே

Passport...

நம்மை சுற்றி இருப்பவர்க்கு

நாம் காட்டிய அன்பே

Visa

பயணத்தை

இனியதாக்குவோம்

இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

  • 98

Good Morning....

  • 102
  • 441
  • 440
  • 443
  • 1
  • 443
·
Added a post

ஒரு முதியவர் நர்ஸிடம்,

“எனக்கு கொஞ்சம் அவசரம் இருக்கிறது… தயவு செய்து என்னை சீக்கிரம் பார்த்து டாக்டரிடம் அனுப்ப முடியுமா?” என்றார்.

அதை கேட்ட நர்ஸ் கொஞ்சம் கோபமாக, “அங்கே உட்காருங்கள்,” என்று சொன்னாள்.

சிறிது நேரம் கழித்து டாக்டர் வந்தபோது, அந்த முதியவர் கதவின் அருகில் இருந்து வேண்டிக் கொண்டார்.

நர்ஸ் எதிர்த்தாலும், டாக்டருக்கு கருணை வந்ததால் அவரை உள்ளே அழைத்தார்.

அவரை பரிசோதிக்கும் போது, விழுந்ததும், காயம் ஏற்பட்டதும், ரத்தம் வந்ததும் எல்லாம் அவர் சொன்னார்.

டாக்டர் காயத்தை சுத்தம் செய்து தையல் போட்டார்.

போகும் நேரத்தில் டாக்டர் கேட்டார்:

“ஏன் இவ்வளவு அவசரம்?”

முதியவர் சொன்னார்:

“என் மனைவிக்கு உடல் நலம் இல்லை… அவளுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட வருவேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறேன்.”

டாக்டர் கேட்டார்:

“என்ன நோய்?”

“அல்சைமர்…” என்று அவர் பதிலளித்தார்.

சிறிது ஆச்சரியத்துடன் டாக்டர் மீண்டும் கேட்டார்:

“அல்சைமர் இருந்தால், நீங்கள் போகவில்லை என்றால் அவங்களுக்கு நினைவில் இருக்குமா?”

அப்போது முதியவர் சிரித்துக் கொண்டு சொன்னார்:

“வாக்கு கொடுத்தது நான்தானே… அதை நினைவில் வைத்துக்கொண்டு நிறைவேற்ற வேண்டியது நான்தானே…

அவளுக்கு நோய் இல்லாத காலத்திலும், நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அவள் என்னை பின்தொடர வேண்டிய அவசியம் இருந்ததில்லை…

நீங்கள் நினைவைக் குறித்து கேட்டீர்கள் அல்லவா…

கடந்த ஐந்து வருடங்களாக அவள் என்னை அடையாளம் காணவில்லை…

ஆனால், அவள் யார் என்று எனக்குத் தெரியும்… அதனால் நான் தானே போக வேண்டும்.” என்றாராம்.

  • 505
·
Added a post

வெளியில் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன. தூரத்தில் எங்கோ பறையொலி, கேட்டது.

யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன்.

பக்கத்து வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்... ஒரு வேளை அந்த வீட்டின் பெரியவர்..? ச்சே இருக்காது. அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே. அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது...!

வாசலில் வண்டி நிறுத்தும் போதுதான் கவனித்தேன் தெருவின் எல்லா பகுதியிலுமே பூவிதழ்கள்.

புரியாமல் வீட்டிற்குள் நுழைந்தேன். சோபாவில் சப்பணமிட்டு அமர்ந்திருந்த மகள் , "ஹாய்..! அப்பா" என்று சொல்லிவிட்டு மடியிலிருந்த புத்தகத்தில் மீண்டும் கண் செலுத்தினாள்.

மனைவியிடம் கேட்டேன்.

"யாரு"?

"யாருன்னா"?

"தெருவெல்லாம் பூவா இருக்கே, அதான் யாருன்னு கேட்டேன்".

மனைவி சிரிக்க....

மகள் சொன்னாள் "அப்பா ...கட்சி வேட்பாளரு ஓட்டுக் கேட்க வந்தாரு. நம்ம தெருவுல உள்ள அந்த கட்சிக்காரர்கள் எல்லாம் மலர் தூவி பண்ணின ஆர்ப்பாட்டம் தான் அது... அப்புறம் அவர் நம்ம வீட்டுக்கு வந்து ஓட்டு கேட்டாருப்பா" என்று அதை ஒரு நம்ப முடியாத அதிசயமாக சொன்னாள்.

சமையலறை உள்ளே போய் வந்த மனைவி ஒரு கவரை என்னிடம் நீட்டினாள்.

"என்னது"?

"பிரிச்சிப் பாருங்க".

உள்ளே புத்தம் புதிய ஐநூறு ரூபாய் தாள் இரண்டு இருந்தது.

"ஏது"...?

"அந்தக் கட்சிகாரங்கதான் கொடுத்தாங்க".

"ஏன் வாங்கின".

"ம்ம்ம்...எல்லாரும் வாங்கும் போது நாம மட்டும் வாங்காம இருக்க முடியுமா".

"எல்லாரும்"...என்று மனதில் நினைத்ததை கேட்காமல் வாயடைத்தேன்.

காந்தி ஐநூறில் சிரித்துக் கொண்டிருந்தார்.

தெருவைப் பார்த்தேன். ரோஜா பூவிதழ்கள் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

பறையொலியையும் பூச்சிதறல்களையும் கண்டு யாரோ இறந்துவிட்டார்கள் என்று முதலில் நான் எண்ணியது உண்மை என்றே இப்போது தோன்றுகிறது.

ஆம் செத்தது... நம் ஜனநாயகம்....,

  • 456
  • 445
·
Added a post

தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீர் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம். இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம். தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்க்கக் கூடியது.

மூவகை தோஷங்களாகிய வாதபித்தகபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பை ஒரு அருமருந்தாக நாம் குறிப்பிடலாம்.

சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) கலக்கிய நீர் போன்றதுமாக சிறுநீர் வெளியேறும் நிலையில் அதற்கு மாஞ்சிஷ்டமேஹம் என்றும் துர்நாற்றம், சூடு, இரத்தம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் இரக்தமேஹமென்றும் கூறப்படுகிறது. இந்த மூன்று வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அதுபோன்ற நிலைகளில் தர்ப்பைக் குடிநீர் அருந்துவது பித்தத்தினால் ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையை குறைப்பதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீர் ஆகும்.

சுமார் 15 கிராம் தர்ப்பைப்புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை குறுக்கிக் காய்ச்சி குளிர்ந்தபிறகு வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகிவர மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்ப்பை நீரைக் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருப்பதால் தர்ப்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்களை நம்மால் பெற இயலும். இதற்கு "ஹிமகஷாயம்" என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது.

சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும்.

தர்ப்பைப்புல்லுக்கு மேலும் சில நல்ல மருத்துவகுணங்கள் இருக்கின்றன.

தர்ப்பைப்புல் உடலுக்கு குளுமையை ஏற்படுத்துவதால் தர்ப்பைப்புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஒரு அற்புதமான பானமாகும்.

தர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.

சிறுநீரகத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை சீராக்கக் கூடிய தர்ப்பைக் குடிநீரின் உபயோகத்தின் மூலம் இரத்தத்தில் தேங்கும் யூரியா, க்ரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது. சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப்புல்லுக்கு இருக்கிறது.

தண்ணீர் தாகத்தைப் போக்கும்.

சிறுநீரகப்பையில் ஏற்படும் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குள்ள பெண்களுக்கும் தர்ப்பைக் குடிநீர் மிகவும் நல்லது என்று பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார்.

மஞ்சள் காமாலை உபாதையில் கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்தஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது.

இரத்தத்தில் ஏற்படும் காந்தல் மற்றும் அதன்மூலமாக ஏற்படும் இரத்தமூலம், இரத்தக்கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும். நாவிற்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தரும்.

Herpes zoster எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சியில் தர்ப்பைப் புல் தண்ணீரை வெளிப்புறம் மற்றும் உட்புற உபயோகத்தால் அதில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குத்தல் வலியை நம்மால் போக்கிக் கொள்ள முடியும் என்று நிகண்டுரத்னாகரம் மற்றும் ராஜநிகண்டு எனும் ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்புகளாக காணப்படுகின்றன.

இத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை தமிழகத்தில் கோடைகாலத்தில் பயன்படுத்தி அதன் நிறைவான பலனை அனைவரும் பெற முயற்சிப்பது ஆரோக்கியத்திற்கான ஒரு திறவுகோலாக அமைத்துக் கொள்வோம்.

  • 454
  • 444
  • 448
  • 447
  • 448
·
Added a post

1950 வருடம் ஏப்ரல் மாதத்தில் கிருஷ்ண பக்ஷ திரயோதசி திதியில் பிரதோஷ தினத்தில் ரமண மகாிஷி மகா சமாதி அடைந்த தினம். அன்று மிகவும் சிரமப்பட்டுத்தான் பாா்வையாளா்கள் அறைக்கு வந்து கொண்டிருந்தாா். அதுபோல் மகாிஷியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பாா்வையாளா் நேரமும் குறைக்கப்பட்டது. 14.04.1950 அன்று மகாிஷியின் உதவியாளா் சுவாமி சத்யானந்தா., மகாிஷியின் கால்களுக்கு மசாஜ் செய்வித்துக் கொண்டிருந்தாா். சாயங்காலம் சுமாா் 05.00 மணியளவில் தன்னை நிமிர்த்தி உட்கார வைக்குமாறு சுவாமி சத்யானந்தாவிடம் மகாிஷி கூறினார். அதே நேரத்தில் அங்கு குழுமியிருந்த பக்தா்கள் “அருணாசல சிவ., அருணாசல சிவ” என்று பக்தி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அதுவரை சோர்வாக இருந்த மகாிஷியின் முகம் தனது தந்தையின் பெயரிலான சரண கோஷங்களை கேட்டவுடன் பிரகாசமடைந்தது. நீண்ட நேரமாக அவரது கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்து. சுவாமி சத்யானந்தாவும் தொடா்ச்சியாக அவரது கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு கொதிக்க வைத்த இஞ்சி தண்ணீரை மகாிஷிக்கு புகட்டி கொண்டிருந்தாா்.

மருத்துவா் மகாிஷிக்கு செயற்கை சுவாசம் பொறுத்த நினைத்தாா். ஆனால் மகாிஷி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மகாிஷியின் சுவாசம் படிப்படியாக குறைந்து வந்து சாியாக இரவு 08.47க்கு ஆடல்வல்லானின் கமல பாதங்களில் சரணடைந்தாா்.

அவா் கடைசி நேரத்தில் கூறியது :

“நான் இறந்து கொண்டிருப்பதாக எல்லோரும் கூறுகிறீர்களே., நான் எங்கும் செல்லவில்லை. நான் எங்கு செல்வது..? இங்கேயே தான் இருக்கிறேன்”

பக்தா்கள் தங்களை தவிக்கவிட்டு மகாிஷி செல்வதாக கதறிய போது மகாிஷி கூறியது:

“நீங்கள் இந்த உடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். குருவிற்கு உடல் வடிவம் கிடையாது. அதனால் இந்த பூத உடலை விட நேர்ந்தாலும் குருவுடனா பந்தம் நீடிக்கும். ஒருவருக்கு குரு அருள் கிடைத்து விட்டால் அவா்கள் கைவிடப் படுவதில்லை”

மகாிஷி எங்கேயும் போய்விடவில்லை. அவா் இங்கேதான் இருக்கிறாா்.

மகாிஷியின் பூத உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது நினைவுகளும் போதனைகளும் ஆத்ம விசாரமும் என்றென்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அருணா சலம்என அகமே நினைப்பவா் அகத்தை வேர்அறுப்பாய் அருணாசலா..! - அருணாசல அஷரமணமாலை.

அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா!

அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா!

  • 456