பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்
பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்
கொஞ்சம் எச்சரிக்கையுடன் நிமிர்ந்து அமர்ந்தார் பாலச்சந்தர்.
அவருக்கு எதிரே ஒரு பத்திரிகை நிருபர்.
இதுவரை அந்த நிருபர் கேட்ட கேள்விகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது அவர் கேட்ட கேள்வி கொஞ்சம் தர்மசங்கடமானது.
இதற்கு பதில் சொன்னால்,
தான் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்பது பாலச்சந்தருக்கு தெள்ளத்தெளிவாக புரிந்து போயிற்று. அதனால்தான் அவர் கொஞ்சம் உஷார் ஆனார்.
அந்த நிருபர் கேட்ட கேள்வி இதுதான்.
“ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் பல இருக்கும்.
ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு, அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன ?”
எடக்கு மடக்கான இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, இதற்கு பாலச்சந்தர் என்ன பதில் கூறப் போகிறார், அதைத் தனது பத்திரிகையில் எப்படி தலைப்பு வைத்து வெளியிடலாம், எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தலாம் என ஆவலோடும் பரபரப்போடும் எதிர்பார்த்துக் காத்திருந்தார் அந்த பத்திரிகை நிருபர்.
ஆனால் இதற்கு பாலச்சந்தர் சொன்ன பதில் என்ன தெரியுமா ?
"நான் இயக்கிய 'நூற்றுக்கு நூறு' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார்.
ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன்.
அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன்.
அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
அதைத்தான் நான் பார்க்கிறேன்.”
இப்படி ஒரு பக்குவமான பதிலை கொஞ்சமும் எதிர்பார்த்திராத அந்த பத்திரிகை நிருபர், பணிவோடு எழுந்து பாலச்சந்தரை வணங்கி விட்டு புறப்பட்டுப் போனார்.
பாலச்சந்தர் நினைத்திருந்தால்
அந்த நிருபரின் கேள்விக்கு என்ன பதில் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். அதற்கான முழு உரிமையும், தகுதியும் அவருக்கு இருக்கிறது.
ஆனால் தனக்கு என்று ஒரு இமேஜ் இருக்கிறது. அதைவிட மிகப்பெரிய இமேஜ் கமலுக்கும் ரஜினிக்கும் இருக்கிறது. அந்த இமேஜ் கெடுவதற்கு, தான் பேசும் வார்த்தைகள் காரணமாகி விடக்கூடாது.
தான் பேசும் எந்த ஒரு வார்த்தையும், எந்த ஒரு மனிதரையும் காயப்படுத்தி விடக்கூடாது, எவர் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் பாலச்சந்தர்.
பாலச்சந்தர் தன் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்ததற்கான காரணம் என்ன என்பதை இந்த ஒரு சம்பவமே நமக்கு புரிய வைக்கிறது.
“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.”
பாலச்சந்தர் நினைவு தினம் 23 டிசம்பர் 2014.
மார்ஷ்மெல்லோ தியரி
ஒரு ஆசிரியர் வகுப்பின் அனைத்து குழந்தைகளுக்கும் அழகான டோஃபி கொடுத்து பின்னர் ஒரு விசித்திரமான விஷயத்தைச் சொன்னார்
கேள், குழந்தைகளே! நீங்கள் அனைவரும் உங்கள் டாஃபியை பத்து நிமிடங்கள் சாப்பிட வேண்டாம் என்று கூறிவிட்டு அவர் வகுப்பறைக்கு வெளியே சென்றார்.
வகுப்பறையில் சில நிமிடங்கள் அமைதி நிலவியது, ஒவ்வொரு குழந்தையும் தங்களுக்கு முன்னால் இருந்த டோஃபியைப் பார்த்துக் கொண்டிருந்தது, ஒவ்வொரு கணமும் தங்களைத் தடுத்து நிறுத்துவது கடினம். பத்து நிமிடங்கள் முடிந்து ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மதிப்பாய்வு செய்யப்பட்டது. முழு வகுப்பிலும் ஏழு குழந்தைகள் இருந்தனர், அவர்களுடைய டோஃபிகள் அப்படியே இருந்தன, மற்ற எல்லா குழந்தைகளும் டோஃபி சாப்பிட்டு அதன் நிறம் மற்றும் சுவை பற்றி கருத்து தெரிவித்தனர். இந்த ஏழு குழந்தைகளின் பெயர்களை ஆசிரியர் தனது நாட்குறிப்பில் ரகசியமாகப் பதிவு செய்து, குறிப்பெடுத்த பிறகு படிக்கத் தொடங்கினார்.
இந்த ஆசிரியரின் பெயர் பேராசிரியர் வால்டர் மிஷல். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்-
சில வருடங்களுக்குப் பிறகு, பேராசிரியர் வால்டர் தனது சொந்த நாட்குறிப்பைத் திறந்து ஏழு குழந்தைகளின் பெயர்களை அகற்றி அவர்களை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.
ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ஏழு குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைந்துள்ளனர் மற்றும் அவர்களின் சொந்த வயதினரிடையே மிகவும் வெற்றிகரமானவர்கள் என்பதை அவர் அறிந்து கொண்டார். பேராசிரியர் வால்டர் தனது மீதமுள்ள வகுப்பு மாணவர்களை மதிப்பாய்வு செய்தார், அவர்களில் பெரும்பாலோர் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்று கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் கடுமையான பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை எதிர்கொண்ட சிலர் இருந்தனர்.
இந்த முயற்சியும் ஆராய்ச்சியும் பேராசிரியர் வால்டரின் ஒரு வாக்கியத்தை விளைவித்தது.
"பத்து நிமிடங்கள் பொறுமையாக இருக்க முடியாத ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற முடியாது"
பேராசிரியர் வால்டர் குழந்தைகளுக்கு கொடுத்த டோஃபிக்கு "மார்ஷ்மெல்லோ" என்று பெயரிடப்பட்டதால் இந்த ஆராய்ச்சி உலக அளவில் முக்கியத்துவம் பெற்றது மற்றும் "மார்ஷ்மெல்லோ தியரி" என்று பெயரிடப்பட்டது. அது நுரை போல மென்மையாக இருந்தது.
இந்த கோட்பாட்டின் படி, உலகின் மிக வெற்றிகரமான நபர்களில் ஒருவர் 'பொறுமை' சிறப்புத் தகுதியுடன் காணப்படுகிறார், ஏனென்றால் இந்த தரம் மனிதனின் வலிமையை அதிகரிக்கிறது, இதன் காரணமாக மனிதன் கடினமான சூழ்நிலைகளில் ஏமாற்றமடையவில்லை, அவன் அசாதாரண ஆளுமை.
மூளையின் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு இது மூளைக்கான சிறப்பு உணவாகும். ஒமேகா-3 குறைபாடு அதிக மன அழுத்தத்தையும், அறிவாற்றல் இழப்பினையும் ஏற்படுத்துகிறது.
இக்கொட்டையில் உள்ள ஒமேகா-3 அமிலமானது மன அழுத்தத்தைக் குறைத்து மூளையின் நினைவாற்றலை கூட்டுவதோடு சிந்தனை செயலாக்கத்தையும் அதிகரிக்கிறது.
இதனால் இதனை சீராக உணவில் சேர்த்துக் கொண்டு மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
ஆரோக்கியமான இதயத்திற்கு :
இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், லினோலிக் அமிலம், ஆல்பா லினோலெனிக் அமிலம், அராச்சிடோனிக் அமிலம் ஆகியவை இதயநோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.
இதனை சீராக உணவில் உட்கொள்ளும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நரம்புகளில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது.
மேலும் இது இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எண்டோடெலியல் செல் செயல்பாடுகளை பாதுகாக்கிறது. ஆரோக்கிய இதயத்திற்கு இதனை அளவோடு உண்ணலாம்.
எலும்புகளின் பலத்திற்கு :
வால்நட்டில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் பலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிபடுத்துகிறது. இது உடலானது கால்சியம் உறிதலை ஊக்குவிக்கிறது.
உடலின் எடையை பராமரிக்க :
இதனை உட்கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.
ஊட்டச்சத்து மிகுந்த இதனை உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுஉப்புகள், கொழுப்புகள் கிடைப்பதால் இடைவேளை உணவாகவும் உட்கொள்ளலாம்.
இதனை அதிகமாக உட்கொண்டால் இதில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஆதலால் இதனை அளவோடு உட்கொள்வது அவசியம்.
ஆன்டி ஆக்ஸிஜென்ட் மையம் :
ஆன்டி ஆக்ஸிஜென்ட் அதிகமுள்ள உணவுப்பொருட்களின் பட்டியலில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.
மிகவும் அரிதான ஆன்டி ஆக்ஸிஜென்டுகளான குயினோன் ஜுக்லோன், டானின் டெல்லிமாக்ராண்டின் மற்றும் ஃபிளாவனோல் மோரின் ஆகியவை இக்கொட்டையில் உள்ளன.
இந்த ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் வேதிப்பொருட்களால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்கிறது.
உடல் வளர்சிதை மாற்றம் மேம்பாடடைய :
இதில் உள்ள பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, செம்புச்சத்து, துத்தநாகச்சத்து போன்றவை உடலின் சீரான வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.
செரிமானம், நியூகிளிக் அமில தொகுப்பு உள்ளிட்ட சீரான உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு வால்நட்டினை உண்ணலாம்.
உணவுப் பாதையின் ஆரோக்கியத்திற்கு :
இது உட்புற செரிமான மண்டலத்தின் நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய உதவுகிறது.
இதனை சீராக உட்கொள்ளும்போது லாக்டோபாசில்லஸ், ரூமினோகாக்கஸ் மற்றும் ரோஸ்புரியா போன்ற குடலின் ஆரோக்கியத்திற்கு காரணமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து உணவுப்பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
சரும பாதுகாப்பிற்கு :
இதில் உள்ள விட்டமின் இ ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளிலிருந்து சருமத்தினைப் பாதுகாக்கிறது. மேலும் இதனை உண்ணும் போது சருமச் சுருக்கங்கள் மற்றும் வறண்ட சருமம் உண்டாவது தடுக்கப்படுகிறது.
கண்களுக்கு அடியில் கருவளையத்தை நீக்க வால்நட் உள்ள பொருட்களைப் பயன்படுத்தவும். பளபளக்கும் இளமையான சருமத்தைப் பெற இக்கொட்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான கூந்தலைப் பெற :
இக்கொட்டையில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் மயிற்கால்களை வலிமையடையச் செய்து பொடுகு உள்ளிட்ட சருமப் பிரச்சினைகளை போக்குகிறது. மேலும் அடர்த்தியான, நீளமான, வலிமையான கூந்தலையும் வழங்குகிறது.
முறையான உறக்கத்திற்கு :
இக்கொட்டையினை உண்ணும்போது மெலாட்டானின் என்னும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. மெலாட்டனின் தூக்கத்தைத் தூண்டுவதோடு அதனை முறைப்படுத்துகிறது.
முறையான ஆழ்ந்த தூக்கத்திற்கு இக்கொட்டையினை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
வால்நட்டினைப் பற்றிய எச்சரிக்கை :
ஒருநாளைக்கு ஏழு முதல் ஒன்பது வால்நட்டுகளை உண்ணலாம். இதனை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது வயிறு வலி, வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை உண்டாகும். அளவுக்கு அதிகமாக உண்ணும் போது உடலின் எடை அதிகரிக்கும்.
ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரான பவன் கல்யாண் ஒரு அபூர்வமான சாதனையை பெற்றுள்ளார் . அவர் வெறும் அரசியல்வாதியோ அல்லது திரைப்பட நடிகரோ மட்டுமல்ல; போர்க்கலைகளிலும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர் என்பதைக் இந்த சாதனை நிரூபிக்கிறது.
ஜப்பானின் பண்டைய வாள்ப்பயிற்சி கலையான ‘கென்ஜுட்ஸு’ (Kenjutsu) எனும் பயிற்சியை கற்றுக்கொண்டு, இந்தியாவுக்கு வெளியே முதல் ‘இந்தியன் சமுராய்’ என்ற சிறப்புப் பெயரையும் அவர் பெற்றுள்ளார்.
சமுராய் என்றால் என்ன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். பண்டைய கால ஜப்பானில் வாழ்ந்த வீரர்களே சமுராய்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் வெறும் போராளிகள் மட்டுமல்ல; நேர்மை, தைரியம், ஒழுக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘புஷிடோ’ என்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றியவர்கள். அவர்களுக்கான மரியாதையாக வழங்கப்படும் இந்த பட்டத்தை பெறுவது எளிதான விஷயம் அல்ல.
இதற்கு பல ஆண்டுகள் நீடிக்கும் கடினமான பயிற்சியும், ஆழ்ந்த மன ஒருமுகப்படுத்தலும் அவசியமாகும்.
இந்த சாதனையை அடைவதற்காக பவன் கல்யாண் ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற குருக்களின் கீழ் பயிற்சி பெற்றார். கென்ஜுட்ஸு என்பது ஜப்பானிய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகும். அது வெறும் வாள் சண்டை மட்டும் அல்ல; உடலையும் மனதையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த கற்றுத்தரும் ஒரு கலை.
வெளிநாடுகளுக்குச் சென்று இத்தகைய கடினமான பாரம்பரியக் கலைகளை கற்றுக்கொள்வது நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
அவரைப் பற்றி சொல்வதானால், தெலுங்கு திரைப்பட உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக பவன் கல்யாண் திகழ்கிறார். அங்குள்ள மக்கள் அவரை அன்புடன் ‘பவர் ஸ்டார்’ என்று அழைக்கின்றனர். பின்னர் அவர் ‘ஜனசேனா’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி, மக்கள் சேவைக்காக அரசியலில் களமிறங்கினார். தற்போது அவர் நிர்வாகத் துறையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
பெரும் பணிநெருக்கடிகளுக்கிடையிலும், தனது விருப்பங்களுக்கும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கும் நேரம் ஒதுக்குவது நமக்கு ஒரு முன்மாதிரியாகும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
விவசாய தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகம் தொடர்பான நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் காணப்படும். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
ரிஷபம்
வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். வர்த்தக பணிகளில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தெய்வ சிந்தனை மனதளவில் மேம்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வரவுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மிதுனம்
நகைச்சுவையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாக நிறைவு பெறும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் அனுசரித்து செல்லவும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. போட்டி சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் தடுமாற்றம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேம்படும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுப காரியம் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். முயற்சிக்கு ஏற்ப சாதகமான சூழல் அமையும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை
சிம்மம்
நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளின் வருகையால் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழி உறவுகள் இடத்தில் மதிப்புகள் மேம்படும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் மேம்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கன்னி
குடும்ப பிரச்சனைகள் அகலும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் ஏற்படும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான எண்ணங்கள் உருவாகும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய வேலை செயல்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நேர்மை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். கல்வி பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்திரமான சில விஷயங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். நம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். தன வருவாயிலிருந்து வந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். சுபகாரிய பணிகளில் பொறுமை வேண்டும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகரம்
செயல்களில் திட்டமிட்டு செயல்படவும். துணைவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கோப உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தாமதம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
வீட்டின் தேவைகள் நிறைவேறும். கடன் பிரச்சனைகள் குறையும். பொன்பொருள் சேர்க்கை பற்றிய எண்ணம் மேம்படும். பிறரை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவைக்கேற்ப வரவுகள் இருக்கும். சுபகாரிய பணிகளில் விவேகம் வேண்டும். மறதியால் சில செயல்களில் தாமதம் ஏற்படும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மீனம்
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். இசை சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
விசுவாவசு வருடம் தை மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18.1.2026.
இன்று அதிகாலை 1.19 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.
இன்று காலை 11.35 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.
இன்று இரவு 10.38 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.
இன்று அதிகாலை 01.19 வரை சகுனி. பின்னர் பிற்பகல் 1.55 வரை சதுஸ்பாதம். பிறகு நாகவம்.
இன்று காலை 11.35 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவை விட பாலிவுட்டில் அதிக பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் நடிகை சாய் பல்லவி. எப்படி ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் டாப் நடிகையாக மாறினாரோ அதே போல சாய் பல்லவிக்கும் பெரிய பெரிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
ரன்பீர் கபூர், யஷ் உடன் இணைந்து ராமாயணா படத்தின் மூலம் இந்த ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமாவார் சாய் பல்லவி என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்விஸ்ட்டாக அமீர்கான் தயாரிப்பில் அதற்கு முன்னதாக வரும் மே 1ம் தேதியே பாலிவுட்டில் சாய் பல்லவி அறிமுகமாகிறார் என்கிற அறிவிப்பு டீசருடன் வெளியாகி விட்டது.
அமீர்கான் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள 'ஏக் தின்' (Ek Din) எனும் காதல் படம் வரும் மே 1ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் டீசர் வெளியான நிலையில், சாய் பல்லவி ஜுனைத் கானுக்கு லிப் லாக் அடித்தது போன்ற போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன. உண்மையாகவே சாய் பல்லவி லிப் லாக் கொடுத்தாரா? இல்லையா?
அமரன் படத்தின் வெற்றி: கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த்தின் வீர மரணம் மற்றும் அவரது மனைவியின் தியாகம் திரையில் ரத்தமும் சதையுமாக காட்டப்பட்ட நிலையில், அந்த படம் 300 கோடி வசூலை ஈட்டியது. அஜித் குமாரையே பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயன் பின்னுக்குத்தள்ளினார். அந்த படத்தின் வெற்றிக்கு பெரும் பலமாக சாய் பல்லவியின் நடிப்பு இருந்தது.
2000 கோடி பட்ஜெட்டில் ராமாயணா படத்தை பிரம்மாண்டமாக 2 பாகங்களாக எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பாகம் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தில் சீதையாக நடிக்க சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டு நடித்து வருகிறார். பாலிவுட் நடிகைகள் பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு சாய் பல்லவிக்கு கிடைத்துள்ளது. அமரன் படத்துக்குப் பிறகு இந்த ஒரு படம் மட்டும் தானா? என நினைத்த ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக அமீர்கான் மகன் ஜுனைத் கான் உடன் ஒரு படத்தில் நடித்தே முடித்து விட்டார் சாய் பல்லவி என்பது தெரிய வந்துள்ளது.
ஆனால், பாலிவுட்டில் உள்ள சில விஷமிகள் ஜுனைத் கான் உடன் அருகே அமர்ந்து இருக்கும் போட்டோவை அப்படியே ஏஐ உதவியுடன் சாய் பல்லவி அவருக்கு லிப் லாக் அடிப்பது போல எடிட் செய்து மாற்றி அதை சோஷியல் மீடியாவில் அதிகம் பரப்பி வருகின்றனர். ஏற்கனவே சாய் பல்லவி தனது தங்கையுடன் பீச்சில் இருந்த போட்டோக்களை வைத்து அவர் பிகினியுடன் சுற்றுகிறார் என்று பரப்பியது குறிப்பிடத்தக்கது. சாய் பல்லவியின் வளர்ச்சி பிடிக்காத சில நடிகைகளின் பிஆர்கள் தான் இந்த வேலையை தீயாக பார்க்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.
"வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துதல்" (Water on Empty Stomach)
மருத்துவ உலகம் இதை "Water Therapy" என்கிறது. ஜப்பானியர்கள் இதை "Water Cure" என்கிறார்கள். ஆனால் நம் சித்தர்களும், ஆயுர்வேத ரிஷிகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை "உஷத் பானம்" (Usha Paana) என்று அழைத்து, ஒரு தவமாகவே கடைபிடித்து வந்துள்ளனர்.
"தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்?" என்ற கேள்விக்கு, வெறும் மருத்துவ பதில் மட்டும் போதாது. அதற்குள் ஒரு ஆன்மீக விஞ்ஞானம் இருக்கிறது.
தண்ணீர் - இது வெறும் H2O அல்ல! (Water is Prana)
தண்ணீர் என்பது தாகத்தை தீர்க்கும் திரவம் மட்டுமல்ல. அது "உயிர் சக்தி" (Prana).
இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது. அதில் மிகவும் முக்கியமானது "நீர்" (Jala Tattva). உங்கள் உடலும் ஏறக்குறைய 70% நீரால் ஆனது.
உங்கள் ரத்தம், உங்கள் மூளை, உங்கள் தசைகள் எல்லாமே நீரின் வடிவம்தான்.
நீங்கள் எப்போது காலையில் கண் விழிக்கிறீர்களோ, அப்போது உங்கள் உடல் ஒரு வறண்ட நிலத்தில் இருக்கிறது. இரவு முழுவதும் நடந்த பழுதுபார்க்கும் பணியில் (Repair work), உங்கள் உடல் பல கழிவுகளை தேக்கி வைத்திருக்கிறது. அந்த நேரத்தில் நீங்கள் கொடுக்கும் அந்த முதல் டம்ளர் தண்ணீர்... அது அமிர்தத்திற்கு சமம்!
"காலையில் நீங்கள் அருந்தும் நீர், உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லையும் தட்டி எழுப்பி, 'விடிந்துவிட்டது... புது வாழ்வு பிறந்துவிட்டது' என்று சொல்லும் மந்திரம்!"
மருத்துவ ரீதியாகப் பார்த்தால், காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன தெரியுமா?
1. குடலை கழுவும் புனித நீராடல் (Colon Cleansing)
நீங்கள் காலையில் தண்ணீர் குடித்தவுடன், அது நேராக உங்கள் குடலுக்குச் செல்கிறது. இரவு முழுவதும் சேர்ந்த கழிவுகளை மலமாக வெளியேற்றத் தூண்டுகிறது. குடல் சுத்தமானால், மனம் சுத்தமாகும். மலச்சிக்கல் (Constipation) என்ற வார்த்தையே உங்கள் அகராதியில் இருக்காது. குடல் சுத்தமாக இருக்கும்போது, நீங்கள் உண்ணும் உணவின் சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்சிக்கொள்ளும்.
2. நச்சுக்களை வெளியேற்றும் யாகம் (Detoxification)
இரவில் உங்கள் உடல் உறுப்புகள் கடினமாக உழைத்து, மெட்டபாலிக் கழிவுகளை (Metabolic Waste) உண்டாக்கியிருக்கும். காலையில் நீங்கள் குடிக்கும் நீர், இந்த நச்சுக்களை சிறுநீர் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் அடித்துக்கொண்டு வெளியேறுகிறது. இது உங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
3. பசியைத் தூண்டும் அக்னி (Igniting Digestive Fire)
பலருக்கு காலையில் பசிப்பதே இல்லை. ஆனால் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துப் பாருங்கள். அது உங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து, ஜீரண மண்டலத்தை தயார் செய்கிறது. ஆரோக்கியமான பசி எடுக்கும். ஆரோக்கியமான பசி என்பது ஆரோக்கியமான உடலின் அடையாளம்.
4. தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு
நம்மில் பலருக்கு இருக்கும் தலைவலிக்கு முக்கிய காரணம் "நீர்ச்சத்து குறைபாடு" (Dehydration). காலையில் தண்ணீர் குடிப்பது, மூளைக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்கி, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும், தலைவலி இல்லாமலும் வைத்திருக்கும்.
அழகு மற்றும் இளமையின் ரகசியம் (Beauty & Anti-agening
சரும பொலிவு: வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது, ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, புதிய ரத்த அணுக்கள் உற்பத்தியாகின்றன. இது உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, ஒரு இயற்கையான பொலிவை (Natural Glow) தருகிறது. முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மாயமாய் மறையும்.
கூந்தல் வளர்ச்சி: உங்கள் முடியின் வேர்களுக்கு உயிர் கொடுப்பது நீர்ச்சத்துதான். தினமும் காலையில் தண்ணீர் குடிப்பது, முடி உதிர்வதைத் தடுத்து, அடர்த்தியான முடி வளர உதவும்.
உடல் எடை குறைய... ஒரு எளிய வழி!
உடல் எடையைக் குறைக்க எத்தனையோ டயட் இருக்கின்றன. ஆனால், தண்ணீர் குடிப்பதுதான் உலகிலேயே எளிமையான "வெயிட் லாஸ் டயட்".
காலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் (அல்லது மிதமான வெந்நீர்) குடிக்கும்போது, உங்கள் உடலின் Metabolism (வளர்சிதை மாற்றம்) 24% முதல் 30% வரை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. பசியைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, தொப்பை குறைய நினைப்பவர்கள், நாளை காலை முதலே இதைத் தொடங்குங்கள்
நவீன அறிவியல் இப்போதுதான் "Water Memory" பற்றி பேசுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் இதை அன்றே உணர்ந்திருந்தார்கள். தண்ணீருக்கு நினைவாற்றல் உண்டு. நீங்கள் எந்த உணர்வோடு தண்ணீரைப் பருகுகிறீர்களோ, அந்த உணர்வை அது உங்கள் உடலுக்குள் கடத்தும்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
காலையில் எழுந்ததும், பல் துலக்குவதற்கு முன் (அல்லது வாய் கொப்பளித்த பிறகு), ஒரு செம்பு பாத்திரத்திலோ அல்லது மண் பானையிலோ வைத்த நீரை எடுங்கள்.
அதை கையில் வைத்துக்கொண்டு, "இந்த நீர் என் உடலை குணப்படுத்தும் அமிர்தம். நன்றி இறைவா!" என்று மனதிற்குள் சொல்லுங்கள்.
பிறகு அதை மடக் மடக் என்று குடிக்காமல், ஒவ்வொரு வாய் நீராக, அதை ரசித்து, உமிழ்நீரோடு கலந்து பருகுங்கள்.
இந்த நேர்மறை எண்ணத்தோடு (Positive Affirmation) நீங்கள் குடிக்கும் நீர், உங்கள் டி.என்.ஏ (DNA) வரை சென்று மாற்றத்தை உண்டாக்கும் வல்லமை கொண்டது.
எப்படி குடிக்க வேண்டும்? (Do's and Don'ts)
எல்லாவற்றிற்கும் ஒரு முறை இருக்கிறது. தவறான முறையில் தண்ணீர் குடித்தால், அது நோயைக் கொண்டு வரும்.
நின்று கொண்டு குடிக்காதீர்கள்
நின்றுகொண்டு தண்ணீர் குடித்தால், அது நேரடியாக குடலைத் தாக்கி, சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம் மற்றும் மூட்டு வலியை (Arthritis) உண்டாக்கும். எப்போதும் அமர்ந்து, நிதானமாக குடியுங்கள்.
பல் துலக்குவதற்கு முன்? பின்?: காலையில் எழுந்ததும் வாய் கொப்பளிக்காமல் நீர் அருந்துவது ஜப்பானிய முறை. வாயில் உள்ள உமிழ்நீரில் (Saliva) நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. இவை வயிற்றுக்குள் செல்வது நல்லது. ஆனால், இது பலருக்கு கூச்சத்தை தரலாம். எனவே, வாய் கொப்பளித்துவிட்டு குடிப்பதே சிறந்தது.
எவ்வளவு குடிக்க வேண்டும்?:
எடுத்த உடனே 1 லிட்டர் குடிக்காதீர்கள். முதலில் 1 அல்லது 2 டம்ளரில் (சுமார் 300-500 மி.லி) தொடங்குங்கள். படிப்படியாக அதிகரிக்கலாம்.
வெந்நீரா? குளிர்ந்த நீரா?:
ஆயுர்வேதத்தின் படி, காலையில் மிதமான சூட்டில் உள்ள வெந்நீர் (Warm Water) குடிப்பதே சிறந்தது. இது கபத்தை (Kapha) கரைக்கும், ஜீரணத்தை சீராக்கும். பிரிட்ஜ் வாட்டர் (Ice Water) காலையில் விஷத்திற்கு சமம்.
ஆரோக்கியம் என்பது மருத்துவமனையில் கிடைப்பதல்ல; அது உங்கள் தினசரி பழக்கவழக்கங்களில் இருக்கிறது. நாளை காலை சூரியன் உதிக்கும் முன் எழுங்கள். பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள். அந்த அமிர்தமான தண்ணீரை, ஒரு தவம் போல பருகுங்கள்.
இதை ஒரு 21 நாட்கள் தொடர்ந்து செய்து பாருங்கள்.
உங்கள் முகம் மாறும்.
உங்கள் ஜீரணம் மாறும்.
உங்கள் மனத் தெளிவு மாறும்.
மொத்தத்தில், உங்களுக்கே தெரியாமல் நீங்கள் ஒரு "ஆரோக்கிய மனிதராக" மாறுவீர்கள்!
நோய் இல்லாத வாழ்வே, குறைவற்ற செல்வம்.
முக்கிய குறிப்புகள்
நேரம்: காலை எழுந்தவுடன், பல் துலக்கும் முன்/பின்.
அளவு: 2 முதல் 4 டம்ளர் (படிப்படியாக).
வெப்பநிலை: மிதமான வெந்நீர் (Warm Water) சிறந்தது.
முறை: அமர்ந்து, நிதானமாக (Sip by sip) குடிக்கவும்.
பாத்திரம்: செம்பு அல்லது மண் பானை சிறந்தது.
ஒருவர் சுமார் 6 வருடங்களாக சக்கரை நோயினாள் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்த மருந்து எடுத்தும் 250 கிழ் வந்தது இல்லை.அவர் நண்பர் ஒருவர் அறிவுறத்தளின்படி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பன்னீர் பூ .விலையும் மிகமிக குறைவு.
இரவில் பத்து பூ ஒரு கப் தண்ணிரில் ஊர வைத்து காலையில் வெரும் வயிற்றில் வடி கட்டி பருக வேன்டும்.அவர் அப்படியே 20நாட்கள் செய்ததின் விளைவாக அவருக்கு 150கீழ் குறைந்து விட்டது
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாள் செல்ல நினைத்த இடங்களுக்கு சென்று வருவீர்கள். இணைய முதலீடுகளில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
ரிஷபம்
மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பணி புரியும் இடத்தில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
மிதுனம்
சுபகாரிய எண்ணம் கைகூடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். எதிர்பாலின மக்கள் செயல்களில் கவனம் வேண்டும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கடகம்
பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பூமி விருத்திக்கான சூழல் அமையும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
கலை துறைகள் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் புத்திகூர்மை வெளிப்படும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேறுவீர்கள். பணி புரியும் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி
கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
கடன் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உருவாகும். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். காதணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். சூழநிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உருவாக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
தனுசு
உத்தியோகத்தில் சூழநிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். உடல் தோற்ற பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மகரம்
நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் முடியும். உடன் பிறப்புகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபார முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மீனம்
மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். பழைய நினைவுகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகள் மூலம் தெளிவுகள் உண்டாகும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசுவாவசு வருடம் தை மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை 17.1.2026
இன்று முழுவதும் சதுர்த்தசி.
இன்று காலை 09.40 வரை மூலம். பின்னர் பூராடம்.
இன்று இரவு 10.51 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.
இன்று பிற்பகல் 12.31 வரை பத்தரை. பின்னர் சகுனி.
இன்று காலை 06.33 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
கனடாவின் எட்ம;ண்டன் நகரத்தின் வடக்கே உள்ள நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பீவர் ரிவர் பாலம் அருகே ஹைவே 897-ல், ஃபோர்டு F-350 வாகனமும் ஒரு மினிவேனும் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அந்த மினிவேனில் 5 வயது சிறுமி, 10 மாத குழந்தை, 27 வயதான தாய் மற்றும் 30 வயதான ஆண் ஒருவர் பயணம் செய்திருந்தனர்
இந்த விபத்தில் மூவரும் பல்வேறு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கனடிய பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மேற்கொண்ட விசாரணையில், விபத்தில் ஈடுபட்ட ஃபோர்டு F-350 வாகனம், மூன்று நாட்களுக்கு முன்பு சாஸ்காட்சுவானின் லாஷ்பர்ன் பகுதியில் திருடப்பட்டதாகவும், விபத்துக்குப் பிறகு அதன் ஓட்டுநர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரியவந்தது.
காயமடைந்த குடும்பத்துக்கு உதவுவதற்காக நின்றிருந்த ஒருவரின் காரையும் அந்த நபர் திருடிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.அந்த திருடப்பட்ட வாகனம் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதுவும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. இதையடுத்து, அடிக்கடி குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் வசிக்கும் இடங்களில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
புதியதாக திருமணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ திடீரென ஒரு நாய் குரைத்துக்கொண்டு ஓடி வந்தது.
தங்கள் இருவரையும் கடிக்கப் போகிறது என தம்பதிகள் நினைத்தார்கள். மனைவி பயந்து நடுங்கினாள்.. ஆனால் நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர் தன் மனைவியை தூக்கி கொண்டார். நாய் கடித்தால் தன்னை மட்டும் கடிக்கட்டும். தன் மனைவி தப்பி விடுவாள் என நினைத்தார்.
ஓடிவந்த நாய் வேறு திசையில் ஓடிச் சென்றது. நிம்மதியான கணவன் பிறகு மனைவியை இறக்கி விட்டார்.
தன்னுடைய நற்செயலுக்காக தன்னுடைய புது மனைவி தன்னை பாராட்டுவாள் என எதிர்பார்த்தார். அடுத்த கணமே மனைவி கோபமாக, "எல்லோரும் நாய் வந்தால் கல்லைத் தூக்கி எறிவார்கள்.... ஆனால் தன் மனைவியையே தூக்கி நாய் மேல் எறியும் கணவனை இப்போதுதான் நான் பார்க்கிறேன்" என்றாள்.
-------
நீதி: இப்படிதான் பல அப்பாவி கணவன்மார்கள் நல்லது செய்யப்போய் கெட்ட பேர் வாங்குகிறார்கள்...!
முற்காலத்தில் தென்பாண்டி நாட்டை வசுசேனன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது. மன்னனும் அவர் மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள். பரிபூரண ஆயுள் கொண்ட இருவருக்கும் இந்த ஜன்மத்தில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்த அன்னை பார்வதி தேவியார், "உங்களை அனுதினமும் மறக்காது பூஜிக்கும் பக்தர்களை இப்படி மனம் வாடவிடலாமா? அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் அருளக்கூடாதா?" என்று ஈசனிடம் கேட்டார்.
அதற்குச் சிவபெருமான், "இந்த ஜன்மத்தில் அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது விதி. ஆனால், நீ பூலோகத்தில் பிறந்து, அவர்களுடைய குழந்தையாக வளர்வாயாக. உரிய நேரத்தில் யாம் வந்து உம்மைத் திருமணம் செய்துகொள்வோம்!" என்று அருள் வழங்கினார்.
அதே தினத்தில், வசுசேனரும் காந்திமதியும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது, தாமரை மலர் மேல் ஒரு சங்கைக் கண்டெடுத்தார்கள். அவர்கள் கையில் எடுத்ததும் அது அழகிய பெண் குழந்தையாக மாறியது. அது, ‘இறைவனே அனுப்பிய குழந்தை’ என்றுணர்ந்து அதற்கு ‘ராஜராஜேஸ்வரி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
சக்தியே குழந்தை வடிவாக பூமியில் இருப்பதால், குழந்தையை கவனமாக வளர்ப்பதற்கென, சப்தமாதாக்களில் ஒருவரான சாமுண்டியையும் பூமிக்கு அனுப்பினார் இறைவன். குழந்தையின் வளர்ப்புத் தாயாக உருவெடுத்து வந்த சாமுண்டீஸ்வரி, ஆய கலைகள் அனைத்தையும் குழந்தை ராஜராஜேஸ்வரிக்குக் கற்றுக்கொடுத்தாள். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த இளவரசி, குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னிகரற்று விளங்கினாள்.
அவள் திருமண வயதை எட்டியபோது, "என் மகளை சதுரங்க விளையாட்டில் யார் வெல்கிறார்களோ, அவர்களுக்கே அவளை மணம் முடித்துத் தருவேன்" என்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார் மன்னர்
பல நாட்டு இளவரசர்களும் இளைஞர்களும் வந்தபோதிலும், யாராலும் ராஜராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வெல்ல முடியவில்லை. அனைவரும் தோற்றுப் போயினர். இதனால் கவலையுற்ற மன்னர், ‘யாருமே அவளை வெல்லமுடியவில்லையே! தம் மகளுக்குத் திருமணமே முடியாமல் போய்விடுமோ?’ என்று சஞ்சலமடைந்தார். ‘இனி சிவபெருமானிடமே முறையிடுவோம்’ என்று எண்ணியவராக, குடும்பத்தோடு காவிரியின் தென்கரையிலுள்ள சிவாலயங்களைத் தரிசிக்க தல யாத்திரை கிளம்பினார். பல சிவாலயங்களைத் தரிசித்த பின்னர் திருபூவனூர் வந்தனர். புஷ்பவன நாதரைத் தரிசித்து, தன் மனதின் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, குடும்பத்துடன் அந்த ஊரிலேயே தங்கினார் மன்னர்.
மறுநாள் காலையில், வயோதிகர் ஒருவர் மன்னரைச் சந்தித்து, ‘‘என்னுடன் உங்கள் மகளால் சதுரங்கம் ஆடமுடியுமா?’’ என்று கேட்டார். அரசன் சம்மதிக்க, ஆட்டம் தொடங்கியது. அதுவரை சதுரங்கத்தில் தோல்வியே கண்டிராத ராஜராஜேஸ்வரி, அந்த முதியவரிடம் தோற்றுவிட்டாள்.
அரசருக்கு தனது அறிவிப்பு நினைவில் வந்தது. "இப்படி வயதில் முதிர்ந்த ஒருவருக்கு தன் இளம் மகளை எப்படித் திருமணம் செய்து கொடுப்பது?" என்று பெருங்கவலை ஏற்பட்டது. மீண்டும் அவர் சிவனாரைத் தியானிக்க, அங்கே முதியவர் மறைந்து சாட்சாத் சிவபெருமானே தோன்றினார். சதுரங்க ஆட்டத்தில் வென்று, ராஜராஜேஸ்வரியை மணந்ததால், அவருக்குச் ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. அன்னை ராஜ ராஜேஸ்வரிக்கும் வளர்ப்புத் தாயாக வந்த சாமுண்டீஸ்வரிக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. இங்கு வந்து சதுரங்க வல்லப நாதரை வேண்டிக்கொண்டால் சதுரங்க விளையாட்டில் நல்ல தேர்ச்சி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
















