பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்
பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்
இயற்கையின் விசித்திரம் குறித்த முழு பார்வை
உலகில் பெரும்பாலான நாடுகளில், பகல் முடிந்து இரவு தொடங்கும் போது சூரியன் மறைந்து நிலா தோன்றுவது வழக்கம். ஆனால், சில நாடுகளில் இரவு என்பதே இல்லாமல் எப்போதும் சூரியன் உதயமான நிலையிலேயே இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பொதுவாக, ஒரு நாட்டில் பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம் இருப்பது இயல்பு.
நார்வே
நார்வேயின் ஸ்வால்பார்டில், ஏப்ரல் 10 முதல் ஆகஸ்ட் 23 வரை சூரியன் இரவும் பகலும் பிரகாசிக்கிறது.
கனடா - நுனாவுட்
ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே சுமார் இரண்டு டிகிரி, நுனாவுட் கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் அமைந்துள்ளது.
இங்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு 24 மணி நேரமும் சூரிய ஒளி இருக்கிறது.
மறுபுறம், குளிர்காலத்தில், இந்த இடம் தொடர்ந்து 30 நாட்களுக்கு முற்றிலும் இருட்டாக இருக்கும்.
ஐஸ்லாந்து
கோடையில் ஐஸ்லாந்து இருட்டாக இருக்காது. ஜூன் மாதத்தில் சூரியன் மறையாததால் வெளிச்சமாகவே இருக்கும்.
பாரோ, அலாஸ்கா
மே மாத இறுதியில் இருந்து ஜூலை இறுதி வரை சூரியன் இங்கு மறைவதில்லை.
இங்கு நவம்பர் தொடக்கத்தில் இருந்து அடுத்த 30 நாட்களுக்கு இங்கு மீண்டும் சூரியன் உதிக்காது. இது "போலார் நைட்" என்று அழைக்கப்படுகிறது.
குளிர்காலம் முழுவதும் நாடு முழுவதும் இருளில் மூழ்கி விடும்.
ஸ்வீடன்
ஸ்வீடனில் மே மாத தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை சூரியன் நள்ளிரவில் மறைந்து அதிகாலை 4 மணியளவில் உதயமாகும்.
குறிப்பாக “அர்கெடல்” போன்ற இடங்களில் கோடை காலத்தில் 24 மணி நேரமும் சூரிய ஓளி இருக்கும்.
இங்கு தொடர்ந்து 6 மாதங்கள் சூரியன் மறைவதில்லை. பகல் மட்டுமே இருக்கும்.
இந்த நாடுகள் அனைத்தும் பூமியின் வட துருவத்திற்கு அருகில் அமைந்திருப்பதால், இங்கு சூரியன் மறைவதில்லை. இது ஒரு விசித்திரமான இயற்கை நிகழ்வாகும், இது உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
இங்கு மே மாத இறுதியில் இருந்து ஜூலை வரை 76 நாட்களுக்கு சூரியன் மறைவதில்லை.
அதனால் தான் ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ள நார்வே "நள்ளிரவு சூரியனின் நாடு" என்று அழைக்கப்படுகிறது.
பகல் முடிந்ததும் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகும். மறுபடியும் அடுத்த நாள் காலை சூரியன் உதயமாகும். இப்படித்தான் பூமி சுழன்று கொண்டிருக்கிறது.
ஆனால், சில நாடுகளில் பகல், இரவு என்பது தனித்தனியாக இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்.
ஒருநாள் காட்டுவழியாக வந்து கொண்டிருக்கிறார் ஔவை.....
மழை மேகம் திரண்டு வர மழை வந்துவிடுமோ என்று ஒதுங்குவதற்காக அங்குமிங்கும் பார்க்கிறார்.
அங்கே ஓர் அழகிய காட்சி,
மயில் ஒன்று மழை மேகம் கண்டு தன்
தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.
கண்கள் விரிய அந்த காட்சியைக் கண்டு மகிழ்கிறார்.
திடீரென்று மறுபக்கத்திலிருந்து
ஒரு சலசலப்பு.
அங்கே இன்னொரு காட்சி அவரது கவனத்தை ஈர்க்கிறது.
வான்கோழி ஒன்று தனது உடலைச் சிலுப்பிக்
கொண்டிருக்கிறது.
உனக்கு மட்டும் தான்
தோகை இருக்கிறதா? இதோ பார். எனக்கும்தான் தோகை இருக்கிறது
நானும் தோகையை விரித்து ஆடுகிறேன் பார் என்று மயிலுக்குச் சவால் விடுவதுபோல் தோகையை விரிப்பதற்காக
உடம்பு முழுவதையும் அசைத்து அசைத்து
ஆட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. முடியவில்லை.
எத்தனை முயற்சி
செய்தும் வான்கோழியால் மயிலைப்
போன்று தோகையை விரித்து ஆட முடியவில்லை.
மயிலைப் பார்த்துதான் இப்படி ஆட்டிக்கொண்டு நிற்கிறாயா? என்று நினைத்ததும் ஔவைக்கு உள்ளுக்குள் சிரிப்பு.
கூடவே மற்றொரு சிந்தனை......
இந்த வான்கோழியின் செயல்
ஏதோ ஒன்றை நினைவுபடுத்துகிறதே.
இது எப்படி இருக்கிறது தெரியுமா?
கல்வியை முறையாக கற்காத அரைகுறை ஒருவன் கவிபாட ஆசைப்படுகிறான்.
அதனால் அடுத்தவன் எழுதிய கவிதையை தான் எழுதியதாக
நினைத்துக்கொண்டு மற்றவர்கள்
முன்னால் கொண்டுபோய் படிக்க முயன்று கொண்டிருக்கிறான்.
அவனால் சரியாகப் படிக்க முடியவில்லை.
திக்குகிறான்....
திணறுகிறான்....
திண்டாடுகிறான்....
அதே திணறலும் திண்டாட்டமும்
இந்த வான்கோழியிடமும் இருக்கிறது
என்று நினைக்கிறார்.
நினைத்ததை நினைத்த இடத்தில் நினைத்தபடியே பாடுவது ஔவையின் இயல்பாயிற்றே ...
சும்மா இருப்பாரா?
ஔவையின் இந்த நினைப்புத்தான் இங்கே
பாடலாக வெளிவருகிறது.....
"கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் -
தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து
ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி"
வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.
வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிந்து, அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்துவர கல்லடைப்பு நீங்கும். நீர் எரிச்சல், நீரில் ரத்தம் கலந்து போவதைக் குணப்படுத்தும்.
வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும். கோடைக் காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பம் குறையும்.
வாழைத்தண்டு சூப் (வாழைத்தண்டு சிறு துண்டுகள், இஞ்சி, எலுமிச்சைச் சாறு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம்) 200 மி.லி. வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து குறையும்.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உணவாகவும் உள்ளது. வாழைத்தண்டுடன் வாழைப்பூ சேர்த்து உட்கொண்டால் மாதவிடாய் கோளாறுகளால் உண்டாகும் அதிகப்படியான ரத்தப் போக்கு, வயிற்று வலி நீங்கும்.
இரண்டு அவுன்ஸ் வாழைத்தண்டு சாற்றை நாள்தோறும் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும். வாழைத்தண்டை உலர்த்தி, பொடி செய்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
வாழைத்தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண்கள் ஆறும். வாழை சாற்றுடன் திரிபலா சூரணம் சேர்த்து அருந்த மலச்சிக்கல் நீங்கி அதனால் ஏற்பட்ட மூல நோய் மற்றும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
வீட்டில் உள்ள பிரச்சனைகளில் இருந்து விடுபட தினமும் வீட்டின் நுழைவு வாயிலில் விளக்கு வைக்குமாறு கூறப்படுகிறது.
மாலையில் தீபம் ஏற்றுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், அந்தி வேளையில் வீட்டு வாசலில் தீபம் ஏற்றினால் அன்னை இலட்சுமி தேவி வந்து சேருகிறாள். இது தவிர, வீட்டிற்குள் ஏதாவது எதிர்மறை ஆற்றல் இருந்தால் அதன் சக்தி முழுமையாக குறையும் என நம்பப்படுகிறது.
வீட்டின் பிரதான வாசலில் தீபம் ஏற்றி வைப்பதன் மூலம் இராகுவின் தோஷங்களும் தீரும். கிரக தோஷத்தை போக்க, ஏதேனும் கோவில் அல்லது துளசிக்கு அருகில் தீபம் ஏற்றி வைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மற்ற பலன்களும் கிடைக்கும்.
நீங்கள் வெளியே வரும் போது விளக்கு வாசலின் வலது பக்கம் இருக்கும் வகையில் விளக்கை ஏற்றவும். திசையைப் பற்றி பேசினால், தீபத்தின் ஒளி வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். மேற்கு திசையில் தீபம் ஏற்ற வேண்டாம்.
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நேரம் தீபம் வைக்க சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதன் போது தீபம் ஏற்றி வைப்பதன் மூலம் ஒருவருக்கு வாழ்வில் நன்மைகள் மட்டுமே கிடைக்கும்.
தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.
சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும்.
போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும்போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர்,அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில். அதைக் கவனித்த ஸ்ரீராமன் கூறினார் " யாரும் கவலைப்பட வேண்டாம்.என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு" என்று.
போர் ஆரம்பமாயிற்று.கடும்போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள்.வேறு வழியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச்சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் "இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதாதேவியைக் கடத்தியதற்காக ஸ்ரீராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை.வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன்.
கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கேற்றாற்போல் அவனது தேரும் மிகப்பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன.
போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது.
திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப்போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன.ஒரே இருட்டு.நல்லவேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது.சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.
ஒரு வானரம் சொன்னது " இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப்போய்விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி" என்றது
" சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப்போவதில்லை நம்மைக் காப்பாற்ற .நம் தலைவிதி இப்படியே கிடந்து சாகவேண்டியதுதான்" சொன்னது இன்னொரு வானரம்
" ஸ்ரீராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களையெல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே,அவர் மட்டும் என்ன செய்தார்" இன்னொரு வானரம் சொன்னது. இதைக்கேட்ட மற்ற வானரங்களும் " ஆமாம் ஆமாம் " என்றன.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது.
" முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள்.நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்.எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ஸ்ரீ ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ' ராம் ராம் ராம்' என்று ஜெபம் செய்யுங்கள். ஸ்ரீ ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார்" என்று சொன்னது.எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.
கடைசியில் ராமபாணத்தால் ராவணனும் கொல்லப்பட்டான். போர் முடிந்தது. சீதாப்பிராட்டியை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள்.
அப்போது ஸ்ரீராமன் சொன்னார் " சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா"
" பிரபு! எண்ணிவிட்டேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை" என்றான் சுக்ரீவன்.
" இல்லை.மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா " என்றார் ஸ்ரீராமன்.
ஸ்ரீராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான்.
" தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை"
" அனுமா நீ யும் என்னுடன் வா.நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம். "என்றார் ஸ்ரீராமன்
அனுமனும் ஸ்ரீராமனும் வானர்களைத்தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள்,உடைந்து கிடந்த தேரின் பாகங்கள், அம்புகள், கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப்பார்த்தான் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை.
திடீரென்று ஸ்ரீராமன் ஒரு இடத்தில் நின்றார்.
" அனுமா! அங்கேபார்.ஒரு பெரிய மணி தெரிகிறது."
ஸ்ரீராமன் என்ன சொல்லப்போகிறார் என்று புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் விரைந்தார்கள் அந்த இடத்திற்கு .
அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமனுக்கு இது ஒரு பொருட்டா என்ன!
அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக்கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப்பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள்.
எதிரே ஸ்ரீராமனும் அனுமனும்.
வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்களின் கண்களில் கண்ணீர்.
"பிரபு ! என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம்.எங்களை மன்னித்து அருள வேண்டும்" என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின.
அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ஸ்ரீராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் வானரங்களுக்கு.
அருகில் நின்றிருந்த அனுமன் பக்கம் திரும்பிய ஸ்ரீராமன் அனுமனைப் பார்த்து சொன்னார்
" அனுமா! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா?
இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் கிட்டும் " என்று வாழ்த்தினார்.
பின் குறிப்பு: கர்நாடகா,ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கிக்கொண்டிருப்பதாக இருக்கும்.
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயிலின் முன் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சிநேயர் உள்ளார்.
"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"
ஸ்ரீராம் ஹரே ராம் ஜெய் ராம்!
ராம் ராம் ராம் ஜெய் ராம்.
ஜெய் ஆஞ்சநேயா போற்றி.
ராம தூத ஆஞ்சநேயரே சரணம்
ராம பக்த ஆஞ்சநேயா சரணம்!
கீழா நெல்லியை கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. நீர்நிலைகள், வயல் வரப்புகளில் வளரக்கூடியது.
மருத்துவக் குணங்கள்
மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.
இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு.
கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.
இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.
சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்
உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக் கரைக்கும்.
ரத்தசோகையைச் சரிசெய்யும் .
கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும்.
மலட்டுத் தன்மையைப் போக்கும்.
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.
கீழாநெல்லியை எடுத்துக்கொள்ளும் முறை:
மஞ்சள் காமாலை -
கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.
சர்க்கரை நோய் -
உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.
உடற்சூடு மற்றும் தொற்றுநோய்கள் -
கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.
வயிற்றுப்புண் -
ஒரு குவளை மோரில், கைப்பிடி அளவு அரைத்த கீழாநெல்லி இலையைக் கலந்து காலையில் குடித்துவர, வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்னைகளும் தீரும்.
தலைவலி
நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.
சொறி, சிரங்கு
கீழாநெல்லி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்து, குளித்து வந்தால் சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் சரியாகும்.
வெள்ளைப்படுதல்
கையளவு கீழாநெல்லி இலையை நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், அதை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்குச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்துவர வெள்ளைப்படுதல் நோய் குணமடையும்.
இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை..!
"உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர் யார்" என்று மோகன்லாலிடம் கேட்டபோது டக்கென சொன்னது எம்ஆர். ராதாவின் பெயரைதான்!
அந்த காலத்தில், சாமி படத்தை காட்டி சாம்பிராணி புகை போட்டு தான், நாடகங்களை ஆரம்பிப்பது வழக்கம்..! ஆனால் முதன்முதலில் 'தமிழ்த்தாய்" வாழ்த்து பாடி ஆரம்பித்து வைத்தவர் எம்.ஆர்.ராதா அவர்கள்தான்!
நாடகம் என்பது வெறும்பக்தி, காதல், புராணம் என்றிருந்ததை, பகுத்தறிவு, சீர்திருத்தம் என்ற திடீர் திருப்பத்தை அள்ளி தெளித்தது ராதாதான்..!
"நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான்... சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான்... உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளை பிரதேசம்னா அது சினிமா ஒன்னுதான்" என்று பொதுமேடையிலேயே முழங்கியவர்..!
ஒரு முறை ராதாவின் நாடகத்திற்கு ஜஸ்டிஸ் எஸ்ஏபி "ஐயர்" என்பவர் தலைமை தாங்கியிருந்தார்... முன்வரிசையில் உட்கார்ந்து நாடகத்தையும் பார்த்து கொண்டிருந்தார்..!
அதில் ஒரு காட்சியில், "உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்?" என்று ராதாவை பார்த்து ஒருவர் டயலாக் பேசுவார். அதற்கு ராதா, "பார்ப்பான் பார்ப்பான்" என்றாராம் சத்தமாக.
அதேபோல, கம்பர் விழாவில் பேச, ராதாவுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய ராதா, "பெரியவங்களே, சின்னவங்களே, பொம்பளைங்களே... நீங்கள் எல்லாம் இப்ப எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும். இந்த கம்ப நாடாரின் விழாவிலே..." என்று ஆரம்பித்தார்.
அப்போது, ஒருவர் குறுக்கிட்டு, 'அய்யா... கம்பர் நாடாரு இல்ல..' என்றார்.
'நாடார் இல்லயா... நம்மாளு போலருக்கு, இந்த கம்ப முதலியாராகப்பட்டவர்...'
'அய்யா... அவரு முதலியாரும் இல்ல...' என்றார்.
'முதலியாரும் இல்லயா சரி... என்னன்னு புரிஞ்சு போச்சு; இந்த கம்பர் அய்யர் ஆனவர்...'
'அய்யா... அவரு அய்யரும் இல்ல...'
'என்னது நாடார் இல்ல, முதலியார் இல்ல, அய்யரும் இல்லயா... அப்போ, இப்ப தான் ஜாதிகளை சொல்லிக்கிட்டிருக்கோமா... அப்ப ஜாதி கிடையாதா... சரி தான், இந்த ஜாதியில்லாத கம்பன் விழாவிலே..." என, ராதாவின் அந்த பேச்சு தொடர்ந்தது..!
இப்படி எம்.ஆர்.ராதா முற்றிலும் முரண்பாடுகளால் நிறைந்தவர்.. ஆனால் வாழ்வின் மறுபக்கமோ நெகிழ்ச்சியாலும் பேரன்பாலும் பெருங்கருணையாலும் நிறைந்தது..!
"பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு.. அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான்.. அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காதே.. அது ரொம்ப அசிங்கம்.. அவனை அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாதே.. நீ அவனுக்கு காசு கொடுக்குற, அவன் நடிக்கிறான் அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன்.. அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாதே.. அசிங்கம் அவமானம்" என்றார்.
பெரியாரின் இயல்புக்கும், ராதாவின் இயல்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. பெரியார் சுமந்த அத்தனை பழி, பாவங்களும் இவர் மீதும் சுமத்தப்பட்டன.
ராதாவின் நாடகங்கள் லட்சக்கணக்கான மக்களை தட்டியெழுப்பின.. அவற்றின் காட்சிகளும் கூரான அம்பு போன்ற வசனங்களும் இந்தியாவுக்கு அப்பாலும் பாய்ந்து சென்று விழுந்தன..!!
சமூகத்திற்கு எது சரியோ அதனை நெற்றிப் பொட்டில் ஓங்கி அடித்து சொன்னவர் ராதா..!
திராவிட இயக்கத்தின் உறுதி வாய்ந்த பிரம்மாண்டமான இந்த தூணை தவிர்த்துவிட்டு, தமிழக வரலாற்றை யாரும் எழுத முடியாது.. அப்படி மீறி எழுதவும் யாருக்கும் துணிச்சல் வராது..!
பற்களில் இருக்கும் வெண்மையான நிறம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு இருமுறை பற்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பது தான் சரியான முறை. ஆனால் இன்று யாரும் அதை பின்பற்றுவது கிடையாது. அது மட்டும் அல்லாமல் பற்களுக்கு பாதிப்பை தரக்கூடிய பல்வேறு தேவையற்ற உணவுகளை உட்கொள்வதால் பற்களில் இருக்கும் எனாமல் வெகு விரைவாகவே தேய்ந்து விடுகிறது. இதனால் பற் கூச்சம், பற்ச்சொத்தை போன்றவை ஏற்படத் துவங்குகிறது. பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை 10 பைசா செலவில்லாமல் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி வெள்ளை வெளேரென மின்ன செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.
பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை நீக்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக பற்களின் நிறம் மங்க ஆரம்பிக்கிறது. இரவில் கண்டிப்பாக சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு மணி நேரம் கழித்து பற்களை துலக்கி விட்டு தூங்குவது பற்களுக்கு ஆரோக்கியமானது. இதனால் உணவு துகள்கள் இரவு முழுவதும் நம் பற்களை ஆட்சி செய்யாமல் இருக்கும்.
பற்களில் இருக்கும் உணவு துகள்கள் மூலம் உருவாக்கப்படும் கிருமிகள், நம் பற்களை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்க ஆரம்பித்து விடுகிறது. இது வாய் முழுவதும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. பற்களில் இருக்கும் இந்த உணவுத் துகள்கள் மூலம் உருவாக்கப்படும் மஞ்சள் கறை அப்படியே விட்டுவிட்டால் அது விடாப்பிடியான கறையாக மாறிவிடும். சாதாரணமாக டூத் பிரஷ் கொண்டு தேய்த்தால் இது அவ்வளவு எளிதாக நீங்காது. அதற்கு எலுமிச்சையை வைத்து என்ன செய்யலாம்?
அரை மூடி எலுமிச்சை சாற்றில் சிறிதளவு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சரிசி மாவு சேர்த்தால் நல்லது. அதனுடன் கொஞ்சம் மஞ்சள் மற்றும் ஒரு சிட்டிகை அளவிற்கு தூள் உப்பு சேர்த்து பேஸ்ட் போல நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் சாதாரணமாக டூத் பிரஷ் கொண்டு தொட்டு பற்கள் முழுவதும் லேசாக ஒரு ஐந்து நிமிடம் தொடர்ந்து தேய்த்தால் போதும், பற்களில் இருக்கும் மஞ்சள் கறை கொஞ்சம் கொஞ்சமாக நீங்க ஆரம்பித்து விடும்.
இதே போல தொடர்ந்து பத்து நாட்கள் செய்து பாருங்கள். உங்கள் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை கொஞ்சம் கூட இல்லாமல், இது நம்முடைய பற்களா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பற்கள் வெண்மையாக மின்ன ஆரம்பிக்கும். பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கினால் பற்கள் வெண்மை ஆவது மட்டுமன்றி இதனால் கிருமிகள் உருவாக்கப்படுவது, பாக்டீரியாக்கள் நம் பற்களை சேதப்படுத்துவது போன்றவையும் தடுக்கப்படும்.
விடாப்பிடியான மஞ்சள் கறை இருப்பவர்கள் இது போல ஆரம்பத்தில் முயற்சி செய்து பார்க்கலாம். பிறகு பற்கள் வெண்மையானதும் சாதராணமாக நீங்கள் தூள் உப்பு சேர்த்து எலுமிச்சை சாற்றுடன் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் துலக்கி வந்தால் போதும், பற்கள் எப்போதும் மஞ்சள் கறை படியாமல் வெண்மையாக சுத்தமாக இருக்கும். கூடுமானவரை ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்கள் துலக்குவதை வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள். இது தான் ஆரோக்கியமான பற்களுக்கு சிறந்த வழிமுறையாக இருக்கும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். பேச்சு திறமை மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். உற்பத்தி சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
ரிஷபம்
கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மிதுனம்
கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். புண்ணிய தல பயணம் கைக்கூடி வரும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சிம்மம்
எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு சார்ந்த ஆலோசனை கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அரசு பணிகளில் இருந்த இழுபறிகள் மறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கன்னி
தடையாக இருந்தவர்கள் விலகி செலவார்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வேலையில் பணியாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் பொறுமை வேண்டும். வங்கி சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல் மேம்படும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
துலாம்
பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளால் எதிர்பார்த்த சில ஒத்துழைப்புகள் தாமதமாக கிடைக்கும். புதிய முடிவுகளை தவிர்க்கவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
தனுசு
தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் இருந்து குழப்பங்கள் விலகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
பயணம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை குறைப்பீர்கள். உத்தியோக தொடர்பான பணிகளில் பொறுப்பும் அதிகாரமும் அதிகரிக்கும். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மீனம்
அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்லவும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். வழக்கு பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்தத்தன்மை குறையும். எதிர்பாராத சில அதிஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
விசுவாவசு வருடம் தை மாதம் 14 ஆம் தேதி புதன்கிழமை 28.1.2026
இன்று பிற்பகல் 02.36 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று காலை 07.42 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.
இன்று அதிகாலை 01.40 வரை சுப்பிரம். பின்னர் இரவு 10:32 வரை பிராமியம். பிறகு ஐந்திரம்.
இன்று அதிகாலை 03.46 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 2 36 வரை கரசை. பின்பு வணிசை.
இன்று காலை 6:35 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்.:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்களால் உற்சாகம் ஏற்படும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பேச்சு சாதுரியம் மூலம் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
ரிஷபம்
துணைவர்வழி உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும். சமூக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். கூட்டு வியாபாரம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மறதியால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
மிதுனம்
வெளியிடங்களில் கோபத்தை விட விவேகத்தை கையாளவும். வியாபாரம் நிமித்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பயனற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. புது விதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மூத்த உடன் பிறந்தவர்கள் வழியில் சுப காரியங்கள் கைக்கூடும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
அரசு காரியங்களில் இருந்த தாமதம் மறையும். சமூக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கன்னி
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார செயல்களில் கவனம் வேண்டும். வேலையாட்கள் மாற்றம் குறித்த சிந்தனைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் கூடும். திட்டமிட்ட சில பணிகள் பலிதமாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் தாமதம் உண்டாகும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். மாணவர்களுக்கு ஞாபக மறதி அவ்வப்போது தோன்றி மறையும். எதிர்பாராத சில செய்திகள் மூலம் விரயம் உண்டாகும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : கத்தரிபூ
விருச்சிகம்
செயல்பாடுகளில் சுதந்திர தன்மை வெளிப்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு
எதிராக இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிந்தனைகளின் தெளிவு உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கலை சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்த தடுமாற்றம் குறையும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
மகரம்
குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய பொருள்கள் வாங்கும் பொழுது கவனம் வேண்டும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த மந்தத்தன்மை விலகும். வியாபார ரீதியான பயணங்கள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சனைகள் விலகும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைக்கூடும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபார கூட்டாளிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். பரிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
மீனம்
பொதுவாழ்வில் செல்வாக்கு மேம்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் வழியில் சில நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். உபரி வருமானத்தில் முயற்சிக்கு ஏற்ப பலன்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்து வந்த அலைச்சல்கள் குறையும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விசுவாவசு வருடம் தை மாதம் 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 27.1.2026.
இன்று மாலை 04.57 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று காலை 09.20 வரை பரணி. பின்னர் கிருத்திகை.
இன்று அதிகாலை 03.31 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.
இன்று காலை 06.04 வரை பாலவம். பின்னர் மாலை 04.57 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பல பகுதிகளில் 60 செ.மீ.க்கும் அதிகமான பனிப்பொழிவு ஏற்படும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் முன்னறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, இன்று பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகள், நிர்வாகக் கட்டடங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களை மூடுவதாக டொரண்டோ மாவட்ட பாடசாலை சபை அறிவித்துள்ளது.
திங்கள்கிழமை நடைபெற இருந்த உயர்நிலைப் பரீட்சைகள் இந்த வாரத்தின் பிற்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
டொரண்டோ கத்தோலிக்க பாடசாலை சபையும் அனைத்து பாடசாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. பாடசாலை பேருந்து சேவைகள், குழந்தை பராமரிப்பு, பள்ளிக்கு முன்–பின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமை நடைபெற இருந்த பரீட்சைகள் ஜனவரி 29க்கு மாற்றப்பட்டுள்ளன.
ஸெயிண்ட் மைக்கேல்ஸ் கல்லூரி மற்றும் மேபின் பாடசாலை (தனியார் தொடக்கப் பள்ளி) திங்கள்கிழமை முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யோர்க், டர்ஹாம், டஃபரின்–பீல், ஹால்டன், ஹாமில்டன், நயாகரா, பகுதிகளில் இயங்கி வரும் பாடசாலைகளும் பிரெஞ்சு மொழிப் பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7. கோயில் மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம்.
1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் திருவார்புவில்இக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருக்கிறார். எனவே 23.58 மணி நேரமும், 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும். கோயில்
2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது. 11.58 மணி முதல் 12 மணி வரை.
இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும்
கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப்படுகிறது.
கிருஷ்ணா பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால், ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால், கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார்.
அந்த நிலையில் இருந்த கிருஷ்ணரே இக்கோவில் மூலவர் சிலை என்று மக்கள் நம்புகின்றனர்.
அபிஷேகம் முடிந்தபின்,மூலவரின் தலையை முதலில்உலர்த்தியபின், நைவேத்தியம் அவருக்குப் படைக்கப்படும், பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.
இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்கமாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள்.
ஒருமுறை, கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது, ஆண்டவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள்.
அந்த சமயத்தில் வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார்.
அப்போதிருந்து, கிரகணத்தின் போதும் அக்கோவில் மூடப்படுவதில்லை.
கிருஷ்ணர் தூங்கும் நேரம் தினமும் 11.58 மணி முதல் 12 மணி வரை. 2 நிமிடங்கள் மட்டுமே.
பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. தினமும் 11.58 மணி (ஆலயத்தை மூடுவதற்கு முன்பு) பூசாரி சத்தமாக "இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?" என அழைப்பார்.
பிரசாதம் வழங்குகளில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும்.
மற்றொரு முக்கிய விஷயம், நீங்கள் பிரசாதம் சுவைத்தால், நீங்கள் அதன் பிறகு பசியால் வாட மாட்டீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப்பிரச்சனை இருக்காதாம்.
கோவிலின் முகவரி,
திருவார்பு கிருஷ்ணா கோயில், திருவார்பு, -686020
கோட்டையம் மாவட்டம், கேரள மாநிலம்.
கோவில் திறப்பு நேரம் நள்ளிரவு 12.00 மணி முதல் நள்ளிரவு 11.58 மணி வரை.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தனம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். வஞ்சனையான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாத திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
ரிஷபம்
தம்பதிகளுக்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். பயணங்களால் விரயங்கள் உண்டாகும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். சொத்து சார்ந்த செயல்களில் நிதானம் வேண்டும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்களால் நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். நினைத்த சில பணிகளில் போராட்டங்கள் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
மிதுனம்
உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். விவசாய பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். புதுவிதமான அணிகளின் மீது ஈர்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் உண்டாகும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். விவசாய துறைகளில் மேன்மை ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணியதை முடிப்பீர்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். வெளி வட்டாரங்களில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். எதிர்பாரத சில பொறுப்புகளால் நெருக்கடிகள் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் நிதானம் வேண்டும். உறுதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
துலாம்
நண்பர்களின் சந்திப்புகள் மகிழ்ச்சியை தரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் நினைவாற்றல் மேம்படும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
தந்தையிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பு மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகரம்
வாகன பயணங்களில் கவனம் வேண்டும். வங்கிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சமூக பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். வியாபார பணிகளில் கவனம் வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். பணி நிமித்தமான அலைச்சல் மேம்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் வரவுகள் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மீனம்
உணவு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் ஏற்படும். மனை விற்பனையில் லாபம் ஏற்படும். பந்தய விஷயங்களில் கவனம் வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விசுவாவசு வருடம் தை மாதம் 12 ஆம் தேதி திங்கட்கிழமை 26.1.2026.
இன்று இரவு 07.11 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று காலை 10.50 வரை அஸ்வினி. பின்னர் பரணி.
இன்று காலை 09.40 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று காலை 08.15 வரை பத்தரை. பின்னர் இரவு 07.11 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.00 முதல் 07.00 மணி வரை
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

















