·   ·  3 videos
  •  ·  0 friends
  • 492
  • More

பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்

பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்

Comments (0)
Login or Join to comment.
  • 108
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய தொடர்பான இன்னல்கள் குறையும். அமைதியான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்பாராத சில செலவுகள் நேரிடும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். வியாபார நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

ரிஷபம்

புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். முயற்சிகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். உயர் கல்வியில் தெளிவுகள் ஏற்படும். மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுபூர்வமாக செயல்படுவீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

மிதுனம்

முக்கியமான முடிவுகளில் ஆலோசனை பெறவும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான உதவிகளில் விவேகத்துடன் செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கடகம்

நவீன தொழில் நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். வியாபாரத்தில் தவறிய சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் குறையும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சிம்மம்

குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் சார்ந்த பயணங்கள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். பணி புரியும் இடத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கன்னி

உத்தியோக தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். திடீர் யோகம் மூலம் மாற்றம் பிறக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்

துலாம்

சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தம்பதியர்களுக்குள் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

விருச்சிகம்

அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். பழைய பிரச்சினைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். நிலையான வருமானம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

தனுசு

உறவினர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். வீடு மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகரம்

உத்தியோக பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். மாமன் வழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். கால்நடைகளிடம் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்ற இறுக்கமான சூழ்நிலைகள் உருவாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

கும்பம்

பேச்சுகளில் கனிவு வேண்டும். சிந்தனைபோக்கில் கவனம் வேண்டும். வரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். காப்பீடு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் உண்டாகும். பூர்விக சொத்துக்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். திடீர் பயணம் மூலம் மாற்றமான அனுபவம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மீனம்

உத்தியோக பணிகளில் திறமையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

  • 121

Good Morning

  • 117
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 30.4.2026

இன்று இரவு 09.50 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று அதிகாலை 01.10 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.

இன்று இரவு 09.22 வரை வஜ்ரம் . பின்னர் சித்தி.

இன்று காலை 09.25 வரை கரசை. பின்னர் இரவு 09.50 வரை வனிசை. பிறகு பத்திரை.

இன்று அதிகாலை 01.10 வரை மரண யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=496&dpx=2&t=1777520186

நல்ல நேரம்:

காலை : 11.30.30 முதல் 12.00 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 122

Good Morning...

  • 119

ஒரு பெண்ணின் மனக்குமுறல்

  • 212
  • 213

சிந்தனை செய் மனமே.....

  • 213
  • 215
  • 213
  • 213
·
Added article

நடிகர் நாகார்​ஜு​னா​வின் 100-வது படத்தை அவரது அன்​னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிக்​கிறது. இப்​படத்​தை, ‘நித்​தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரி​யா’ ஆகிய படங்​களை இயக்​கிய ரா.​கார்த்​திக் இயக்​கு​கிறார். இந்​தப் படத்​தில் தபு முக்​கிய வேடத்​தில் நடிக்கிறார்.

இரு​வரும் 28 வருடங்​களுக்​குப் பிறகு மீண்​டும் இணைந்து நடிக்கின்​றனர். 1996ம் ஆண்டு இரு​வரும் நடித்து வெளி​யான ‘நின்னே பெல்​லாட​டா’ என்ற தெலுங்கு திரைப்​படம் பிரம்​மாண்ட வெற்​றி​ பெற்றது. கடைசி​யாக 1998-ல் வெளி​யான ‘ஆவிடா மா ஆவிடே’என்ற படத்​தில் நடித்​திருந்​தனர்​.

இப்​போது மீண்​டும் சேர்ந்து நடிக்​கின்​றனர். இதன் படப்​பிடிப்பு ஹைத​ரா​பாத்​தில் தொடங்​கி​யுள்​ளது. அதில் இணைந்​துள்​ளதை சமூக வலை​தளப் பக்​கம் மூலம் தெரி​வித்​துள்​ளார் தபு.

  • 221
·
Added a post

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான். ரயில் வருகிற நேரம்...ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.

பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்.அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது. உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா ’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள். அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா. அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான். ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக்கிறான். நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே. என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்.செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான்,

"அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான்.

ஆகவே நாம், நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!

நல்லதையே கற்றுத் தருவோம்.

---ஜெயகாந்தனின் படைப்பு

  • 222
·
Added a post

கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி. கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவரது மனைவி சரோஜினி. இவர் கணவர் சுப்பிரமணியன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இதனால் இவர்களது இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.இந்நிலையில் சரோஜினி உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார். தினமும் அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல் அவரது கல்லறைக்கு சுப்பிரமணியன் செல்லத் தொடங்கினார். தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக காலையில் சரோஜினியின் கல்லறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டார். அங்கு கல்லறை முன்பு விளக்கேற்றி வழிபட்டு விட்டு வேலைக்கு செல்வார்.பின்னர் மாலையிலும் கல்லறைக்கு சென்று வணங்குவார். அப்போது அன்று நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார்.

சரோஜினி இறந்தாலும் தன்னுடனேயே வாழ்வதாக எண்ணி இவ்வாறு அவர் பேசி வருகிறார்.தனது மனைவி மீது சுப்பிரமணியன் கொண்டுள்ள அன்பை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இதுபற்றி சுப்பிரமணியன் கூறுகையில் என் மனைவி சரோஜினி, அதிக பாசத்துடன் என்னை கவனித்து வருகிறார். அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை.

ஷாஜகான் தனது மனைவிக்காக தாஜ்மகால் கட்டியது போல் எனது மனைவிக்காக நானும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்பது லட்சியமாக உள்ளது. விரைவில் அதனை செய்து முடிப்பேன் என்றார்.

  • 223

ஒரு ஆட்டோவின் பின்புறத்தில் எழுதியிருந்த வாசகம் இது....

குழம்புன்னு இருந்தால் வாசனை வரணும்.

குழம்பிபோய்இருந்தால் யோசனை வரணும்

  • 223
·
Added a news

ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் செல்போன் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிப்பது குறித்தும், குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்தும் மாகாண அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கல்வி அமைச்சர் போல் கலந்திரா தெரிவித்துள்ளார்.

லண்டன் பகுதியில் புதிய பாடசாலைகளை நிர்மானிப்பது தொடர்பான அறிவிப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதற்கான முக்கிய காரணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செல்போன் பயன்பாடு ஒரு பெரும் சிக்கலாக மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எனவே, பாடசாலை வளாகத்திற்குள் செல்போன்களைப் பயன்படுத்த முழுமையான தடை விதிக்க அரசு ஆலோசித்து வருகிறது. எனினும், உடல்நல காரணங்களுக்காக சில விதிவிலக்குகள் அளிக்கப்படும். மனிடோபா (Manitoba) மாகாணம் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை அறிவித்துள்ள நிலையில், ஒன்டாரியோ அதைவிடக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட ஒண்டாரியோ அரசு ஆர்வமாக உள்ளது. சமூக ஊடகங்களின் அடிமையாக்கும் தன்மை, இணையவழி துன்புறுத்தல்கள் (Cyberbullying) மற்றும் சிறுவர்கள் ஆன்லைன் குற்றவாளிகளால் பாதிக்கப்படும் அபாயம் ஆகியவை இந்த முடிவுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

  • 229
  • 312
  • 313

Good Morning

  • 316
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

நிர்வாக திறமைகள் வெளிப்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். உயர்பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மற்றும் அறிமுகங்கள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீர் தனவரவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

ரிஷபம்

உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் ஆதாயம் மேம்படும். வெளியூர் பயணங்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். வீடு மற்றும் மனை சார்ந்த முதலீடுகளில் ஆர்வம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்

மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்படியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் தீர்வுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

சிம்மம்

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சுகளில் நிதானம் வேண்டும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான பணிகளுக்கு தீர்வு ஏற்படும். தந்தையிடம் வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கன்னி

தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கை துணைவர் பிடிவாதமாக இருப்பார்கள். திட்டமிட்ட ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை குறைக்கவும். குணநலன்களில் சில மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

துலாம்

மற்றவர்களின் குறைகளை மாறுபட்ட முறையில் சுட்டிக் காட்டுவது நல்லது. சக ஊழியர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாகி கிடைக்கும். பூர்விக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

விருச்சிகம்

திறமைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

தனுசு

உயரதிகாரிகள் மூலம் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். உல்லாச பயணம் சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தன வரவு மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மகரம்

புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாக குறைக்கவும். திடீரென புதிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

கும்பம்

எண்ணிய சில பணிகள் செய்வதில் காலதாமதம் உண்டாகும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். குழந்தைகள் வழியில் கவனம் வேண்டும். பொது பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். நிர்வாக துறைகளில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கால்களில் வலிகள் ஏற்பட்டு நீங்கும். விவசாய பணிகளில் அலைச்சல் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

மீனம்

உத்தியோக பணிகளில் இருந்த இடர்பாடுகள் குறையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகளும், சுபவிரயங்களும் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 346
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 16 ஆம் தேதி புதன்கிழமை 29.4.2026

இன்று இரவு 09.01 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று அதிகாலை 12.06 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

இன்று இரவு 09.44 வரை ஹர்ஷனம் . பின்னர் வஜ்ரம்.

இன்று காலை 08.51 வரை கௌலவம். பின்னர் இரவு 09.01 வரை தைத்தூலம். பிறகு கரசை .

இன்று அதிகாலை 12.06 வரை அமிர்த யோகம். பின்னர் அதிகாலை 05.57 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=495&dpx=2&t=1777429590

நல்ல நேரம்:

காலை : 11.00 முதல் 12.00 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 351

Good Morning....

  • 341
  • 422
  • 426