·   ·  3 videos
  •  ·  0 friends
  • 317
  • More

பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்

பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

ஒரு மகன் தன் தந்தையிடம் சென்று அப்பா நான் இருக்கிற இடத்தில் எனக்கு மரியாதை இல்லை என்று சொன்னான். யாருமே என்னை மதிப்பதில்லை என்று வருத்தப்பட்டான்.

அவனிடம் அப்பா ஒரு வாட்ச் கொடுத்து இதை விற்று கொண்டு வா என்று சொன்னார்.

அவன் ஒரு வாட்ச் ரிப்பேர் கடைக்கு சென்று அதை காட்டிய போது அம்பது ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னார்கள்.. அவன் அதை அப்பாவிடம் வந்து சொன்னான். இதை ஒரு நகைக்கடையில் கொண்டு போய் கொடு என்று சொன்னார்.

நகைக்கடையில் அவர்கள் தம்பி இது பழைய தங்கம் அதனால் ஒரு 500 ரூபாய் தருகிறோம் என்று சொன்னார்கள்.. ஆச்சரியம் அவன் அப்பாவிடம் வந்து அப்பா இதற்கு 500 ரூபாய் தருகிறார்களே என்று சொன்னான்.

அவனப்பா சிரித்துக் கொண்டே இதை ஒரு மியூசியத்தில் கொடு என்று சொன்னார்... அவர்கள் தம்பி இது மிகவும் பழமையான வாட்ச் இதை நாங்கள் ஐம்பதாயிரத்திற்கு எடுத்துக் கொள்கிறோம்.. அதிகம் தேவைப்பட்டாலும் தருகிறோம் என்று சொன்னார்கள்.... அவன் அதை தன் அப்பாவிடம் வந்து சொன்னான்..

அப்பொழுது அவன் அப்பா சொன்னார் உனக்கு மதிப்பில்லை என்று நீ உணருமிடம் நீ இருக்க தகுதியில்லாத இடம் நீ இருக்கும் இடத்தை மாற்று உன் மதிப்பு தானாய் உயரம் என்று சொன்னார்.

மதிப்பு என்பது பொருளில் இல்லை அது போய் சேரும் இடத்தில் இருக்கு! உன் மதிப்பு எங்கே என்று நீ தான் தேடி செல்ல வேண்டும் என்றார்!

  • 186
·
Added a post

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

மூக்கடைப்பு: இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழா படுக்கவேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாச பாதயை சுத்தப்படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும். உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

எலுமிச்சை பழச்சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  • 187
·
Added a post

முந்தைய காலத்தில் உடலில் வரும் சிறு சிறு நோய்களுக்கு கூட வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தான் சரி செய்தனர்.

ஆனால் இன்றைய காலத்தில் பலர் சிறு வியாதி என்றால் கூட உடனடியாக மருத்துவநிலையங்களுக்கு சென்று வைத்தியரின் ஆலோசனை கூட இல்லாமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இது உண்மையில் சில சமயங்களில் ஆபத்தையே விளைவிக்கும்.

இதனை தவிர்த்து சில எளிய முறையில் வைத்தியங்களை மேற்கொண்டால் உடலுக்கு ஆரோக்கியத்தையே தரும்.

அந்தவகையில் சிறு சிறு நோய்களுக்கு தீர்வு அளிக்கும் சில சித்த மருத்துவ குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

• குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

• தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

• தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

• ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும்.

• இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் சாப்பிடலாம்.

• பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

• அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

• உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

• கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

• வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

  • 192
·
Added a post

ஜென்மம் ஜென்மாய் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே தலம் கோடீஸ்வரர் திருக்கோயில்...

1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர்.

இங்குள்ள சனிபகவான் “பாலசனி’ என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது.

மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, “உத்திரவாஹினி’ யாக அதாவது தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது.

இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது பூர்வ நம்பிக்கை. இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது.

இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது. விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் மதியால் குறைக்க முடியும். விதியினால் கஷ்டப்படுபவர்கள் இத்தலம் வந்து தரிசித்தால் அதன் பாதிப்பு வெகுவாக குறையும்.

ஒரு சமயம் கைலாசத்தையும், திரிக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய் விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட பூமி இது. இங்கே கணபதியின் மகிமையும் கூடியுள்ளது. இந்த இடத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கிறது. இங்கே காவிரி உத்திரவாஹினியாக இருக்கிறாள்.

என்னுடைய சன்னதியில் இருக்கும் இந்த உத்திரவாஹினியில், கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும். இவ்வாறு பகவான் கூறி அருளிய தலம் இது.

அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்,

திருக்கோடிக்காவல்,(வழி)

நரசிங்கன் பேட்டை–609 802.

திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

  • 207
·
Added a post

கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என வகைகள் கொண்டது.

வெற்றிலை சாற்றுடன் சிறிது அளவு நீர் மற்றும் பால் கலந்து குடித்தால் , சிறுநீர் பிரியும்.

கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்ட , மூச்சுத்திணறல்,இருமல் சரியாகும்.

வெற்றிலை சாற்றுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து, தேன் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு உண்டான சளி, இருமல் போன்றவை குணமாகும்.

வெற்றிலையை தீயில் வாட்டி, அதனுள் துளசி இலைகளை வைத்து, கசக்கி பிழிந்து சாறு எடுத்து, 10 மாத குழந்தைக்கு காலையும் மாலையும் 10 சொட்டு வீதம் கொடுத்து வந்தால் சளி, இருமல் குணமாகும்.

வெற்றிலையை தீயில் வாட்டி, மார்பில் பற்றிட சளி குறையும்.

கம்மாறு வெற்றிலைச்சாறு 15 மி.லி எடுத்து அதனுடன் வெந்நீர் கலந்து குடித்து வந்தால், வயிற்று உப்புசம், மந்தம், தலைவலி, நீரேற்றம், வயிற்றுவலி குணமாகும்.

வெற்றிலையில் ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, கட்டிகளின் மேல் வைத்து கட்ட கட்டிகள் உடைந்து சீழ் வெளியாகும். இரவில் கட்டுவது நல்லது.

கொழுந்து வெற்றிலையுடன் (ஒன்று) ஐந்து மிளகு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரம் சாப்பிட்டு வர இரைப்பை குடல்வலி, செரிமானம், மலச்சிக்கல் குணமாகும்.

வெற்றிலையை தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்ட,

குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் அதிகமாக சுரக்கவும், மார்பில் பால் கட்டுவதால் வரக்கூடிய வீக்கத்தை கரைக்கும்.

தேள் கடி விஷத்தை முறிக்க இரண்டு இலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டு, அத்துடன் தேங்காய்த்துண்டுகள் சிலவற்றையும் மென்று சாப்பிடவிஷ கடி குணமாகும். விஷப்பூச்சிகள் எது கடித்தாலும் குணமாகும்..

வெற்றிலை 4, வேப்பிலை ஒரு கைப்பிடி, அறுகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து, 500 மி.லி தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து 150 மி.லி ஆக வற்றியதும் வடிகட்டி, தினமும் மூன்று வேளை சாப்பிடும் முன் குடித்து வர சர்க்கரையின் அளவு குறையும்.

  • 207
·
Added article

இயக்குநர் சுந்தர்.சி-க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவரது பிறந்தநாளில் நடிகையும் அவரின் மனைவியுமான குஷ்பூ தகவல் தெரிவித்தார். அவருக்கு என்ன ஆனது?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. பல வெற்றிப்படங்களை இயக்கிய இவர் அண்மையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் ஒப்பந்தமான சில நாட்களிலேயே விலகிய அவர், ரஜினி படத்தை இயக்கப்போவதில்லை என்றும் அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

தற்போது விஷாலை வைத்து ஒரு படமும், நயன்தாரா முன்னணி நாயகியாக வைத்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தையும் சுந்தர் சி இயக்கி வருகிறார். இன்று சுந்தர் சியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

விஐபி பிரேக் தரிசனம் மூலம் வழிபட்ட குஷ்புவுக்கு, தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சாமி கும்பிட்ட பின் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய குஷ்பு, இன்று என்னுடைய கணவர் சுந்தர் சி பிறந்தநாள். சிறிய அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அவரால் வர இயலவில்லை. எனவே நான் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து ஏழுமலையானை வழிபட்டேன் என்று அப்போது கூறினார். ஆனால் அவருக்கு என்ன அறுவை சிகிச்சை என்ற விவரங்களை குஷ்பூ தெரிவிக்கவில்லை.

இதனிடையே, சுந்தர் சியின் பிறந்தநாளையொட்டி வீடியோ வெளியிட்டு அவரது அவ்னி மீடியா நிறுவனம், மூன்று தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்து வரும் பொழுதுபோக்கின் மன்னர் என்று புகழ்ந்துள்ளது.

ஆம்பள, ஆக்சன் படங்களைத் தொடர்ந்து விஷால், ஹிப் ஆப் தமிழா, சுந்தர் சி இணையும் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 271
·
Added a post

மரணமடைந்தவர்களின் இறுதி பயணத்தில் துணையாக நின்று, அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் அளிக்கும் மனிதன்தான் வினு.

அவர் ஒரு சாதாரண சவ அடக்கத் தொழிலாளி அல்ல; யாரும் தொடத் தயங்கும், அழுகிப் போனதும் சிதைந்ததும் ஆன உடல்களை இதயத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, அவர்களின் உறவினர்களிடம் மரியாதையுடன் ஒப்படைக்கும் ஒரு புனித மனிதர். செய்தித்தாளில் வெளிவந்த அந்த நேர்காணலைப் பார்க்கும்போது, வினுவின் ஒவ்வொரு சொல்லும் நம்முள்ளத்தை உலுக்கி விடுகிறது.

சடங்கு செய்ய உரிய கூலியை கேட்டபோது, ஒரு கோடீஸ்வரன் ஒரு ரூபாய் நாணயத்தை வினுவின் முன் எறிந்த சம்பவம் நம்மை ஆழமாக காயப்படுத்தும். உலகம் முழுவதும் மதிக்கப்படும் அந்த பெரிய மனிதன் காட்டிய கொடூரத்தின் சின்னமாக அந்த நாணயத்தை வினு இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறார். அவமதிக்கப்பட்ட அந்த தருணங்களை நினைத்து பலமுறை அழுதிருந்தாலும், வினு தன் பாதையை ஒருபோதும் கைவிடவில்லை.

ரயில் மோதி சிதைந்த ஒரு முதியவரின் உடலை, யாரும் தொடத் தயங்கிய ஒரு அழுக்குக் கால்வாயிலிருந்து எடுத்து வந்ததும் வினுவே. இறுதிச்சடங்குகளுக்காக உடலை தயார் செய்தபோது, “இனி காபிர் தொட வேண்டாம்” என்று சொல்லி அவரை ஒதுக்கிய மதப் பண்டிதர்களுக்கு, அந்த மகன் சொன்ன பதில் உலகத்துக்கே ஒரு பெரிய பாடமாக இருந்தது. “என் அப்பாவை அந்த சேற்றிலிருந்து எடுத்து வந்தது இந்த காபிர்தான்; ஆகவே இவர் தொட்டாலே போதும், மீதிச் சடங்குகளை செய்யலாம்” என்று மகன் சொன்னபோது, அந்த அன்பின் முன் வினுவின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.

தொழிலின் பெயரால் பலர் அவரை ‘பிணம் எடுப்பவன்’ என்று அவமதித்துள்ளனர். தன்னைத் துன்புறுத்தியவர்களும், தன் முகத்தில் துப்பியவர்களும் இறந்தபின், அவர்களின் உடல்களையும் வினுவே எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் அந்த உடல்களிடம், “இப்போது உனக்கு துணையாக நான் மட்டும்தானே இருக்கிறேன்?” என்று கேட்பார். பசிக்கும்போதும் உடலின் அருகில் உட்கார்ந்தே உணவு உண்ண தயங்காத வினுவுக்கு, எல்லா உடல்களும் ஒன்றே. தன் சொந்த மகளின் உடலையும் தன் கைகளாலேயே மண்ணில் ஒப்படைக்க நேர்ந்த தந்தை அவர்.

இன்று 40 வயதை கடந்த வினு, 25 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகிறார். மரணம் எப்போது வேண்டுமானாலும் தன்னைத் தேடி வரலாம் என்று அவர் நம்புகிறார். தன் மரணத்திற்கு முன்பாக, ஆதரவற்றவர்கள் திரும்பிச் செல்ல ஒரு ஆறு அடி மண்ணை எங்காவது ஒதுக்கி வைத்திருக்க வேண்டும் என்பதே வினுவின் ஒரே ஆசை. மனிதன் என்பவன் இவ்வளவுதான் என்பதை உலகத்துக்குக் காட்டும் ஒரு பெரிய பாடப்புத்தகமே வினு என்ற மனிதன்.

  • 278
  • 366
  • 367
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். விவசாய பணிகளில் சாதகமான சூழல்கள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். சமூகத்தில் பெரியோர்களின் அறிமுகங்கள் உருவாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உறுதி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

ரிஷபம்

இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட சில பணிகளை மாறுபட்ட முறையில் செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிதுனம்

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். முகத்தில் புதுவிதமான பொழிவுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் நிமித்தமான ரகசியங்களை பகிர வேண்டாம். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும். உயர் பதவிகளில் இருப்பவர்கள் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

கடகம்

பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

சிம்மம்

கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்த தன்மையை ஏற்படுத்தும். திடீர் பயணம் மூலம் அலைச்சல் அதிகரிக்கும். தேவையில்லாத சிந்தனைகள் மூலம் மனதில் ஒருவிதமான தயக்கம் ஏற்படும். இணையம் முதலீடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

கன்னி

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். போட்டித் தேர்வுகள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தனம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

துலாம்

நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புது விதமான அனுபவங்கள் உருவாகும். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த இடம் மாற்றம் சாதகமாகும். மகிழ்ச்சியை தரும் இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். நிர்வாக ஆற்றல் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

விருச்சிகம்

வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். எளிமையான சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். இணைய துறைகளில் மாற்றமான சூழல் ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து நட்புகளை வைத்துக் கொள்ளவும். கூட்டு வியாபாரம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு

இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். மனதில் புது விதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். நிர்வாகத்தில் தனித்திறமை புலப்படும். மருத்துவ தொடர்பான துறைகளில் ஆர்வம் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

தொழிலில் புதிய வாய்ப்புகள் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை அறிவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சமூக பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோக தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பணிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கும்பம்

நண்பர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். மனை சார்ந்த கடனுதவிகள் சாதகமாக அமையும். வழக்கு செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார நிமித்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். புதுவிதமான உடைகளின் சேர்க்கை ஏற்படும். நேர்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மீனம்

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். நண்பர்களின் வருகைகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற சிந்தனைகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். தவறிப் போன சில பொருட்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

  • 442
·
Added a post

விசுவாவசு வருடம் தை மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 23.1.2026.

இன்று அதிகாலை 02.08 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று பிற்பகல் 02.08 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.

இன்று மாலை 03.46 வரை பரிகம். பின்னர் சிவம்.

இன்று அதிகாலை 02.08 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 02.33 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=398&dpx=2&t=1769153467

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 374

Good Morning....

  • 434
·
Added a post

உடலிலுள்ள கழிவுகள் வெளியேற்றவும் மற்றும் Belly fat குறையவும்,ஜீரணத்திற்கும், மெட்டபாலிசம் அதிகரிக்கவும் சிறந்த

7 வகையான பழச்சாறுகள் (Natural Detox Drinks)

1.எலுமிச்சை–தேன்–சுடுநீர்:

வெந்நீரில் ½ எலுமிச்சை சாறு,

1 ஸ்பூன் தூய தேன்

காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்

பயன்:

உடல் கொழுப்பைக் கரைக்கும்

ஜீரணம் சீராகும்,

bloating குறையும்

2. வெள்ளரிக்காய் + இஞ்சி + எலுமிச்சை :

1வெள்ளரிக்காய்,சிறிது இஞ்சி,½ எலுமிச்சை சாறு

1 கப் தண்ணீர்

மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்கவும்.

பயன்:

வயிற்று கொழுப்பு குறையும்,உடலின் அழற்சி குறையும்

3. அஜ்வைன் (Omam) Water:

1 டீஸ்பூன் ஓமம்,இரவே 1 கப் தண்ணீரில் ஊறவைத்து

காலையில் வடிகட்டி வெற்றுவயிற்றில் குடிக்கவும்

பயன்:

அஜீரணம், bloating, gas குறையும்.

பெல்லி ஃபேட் குறைய உதவும்

4.அலோவேரா–லெமன் ஜூஸ்:

2 ஸ்பூன் அலோவேரா ஜெல்,1 கப் தண்ணீர்,

½ எலுமிச்சை

பயன்:

கொழுப்பை கரைக்கும்.

குடல்சூட்டைகுறைக்கும்

5. பப்பாளி + எலுமிச்சை Juice:

சில பப்பாளி துண்டுகள்,½ எலுமிச்சை

மிக்ஸியில் அரைத்து குடிக்கவும்

பயன்:

ஜீரணத்தை மிக வேகமாக சீராக்கும்

வயிறு கொழுப்பு குறைக்க உதவும்.

6. ஆப்பிள் சிடர் வினிகர் (ACV) Drink:

1 கப் வெந்நீர்,

1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் (ACV)

½ ஸ்பூன் தேன் (optional)

பயன்:

மெட்டபாலிசம் அதிகரிக்கும்

வயிற்றுப்பகுதியில் fat storage குறையும்

7. இஞ்சி–எலுமிச்சை Water:

சிறிது இஞ்சி,½ எலுமிச்சை,1 கப் வெந்நீர்

பயன்:

bloating, gas குறையும்,

பெல்லி ஃபேட் குறையும்

தினமும் ஒன்று என மாற்றி குடிக்கலாம்

அதிக சர்க்கரை சேர்க்க வேண்டாம்

காலை வெறும் வயிறு குடித்தால் சிறந்த பலன்கிடைக்கும்

இரவு நேர ஜங்க் ஃபுட், அதிக எண்ணெய் தவிர்த்தால் பெல்லி ஃபேட் வேகமாக குறையும்.

  • 595
·
Added a post

வாழைப்பூ சமையலில் சேர்க்க மிகவும் ஆரோக்கியமான காய்கறி ஆகும். இது இரத்த சோகை, நீரிழிவு மற்றும் பெண்களின் கர்ப்பப்பை சார்ந்த கோளாறுகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

முக்கியமாக, சமீபத்திய ஆய்வுகளின்படி, வாழைப்பூவின் சாறு புற்றுநோய் உயிரணுக்களின் பெருக்கத்தைத் தடுக்கும் வல்லமை கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய மகத்துவம் வாய்ந்த வாழைப்பூவை சமைப்பதற்கு முன் சுத்தம் செய்வதே பலருக்கு சவாலாக உள்ளது.

ஆனால், இந்த எளிய தந்திரத்தைப் பயன்படுத்தினால், மொத்த வாழைப்பூவையும் 2 நிமிடங்களில் கைகளில் கறை படியாமல் எளிதாக சுத்தம் செய்துவிடலாம். இதனை எப்படி செய்வது என்று ஃபதூஸ் சமையல் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி

வாழைப்பூவை சுத்தம் செய்ய பலரும் பயப்படுவது, அதன் பிசின் போன்ற பால் கைகளில் ஒட்டிக் கறையாக மாறும் என்பதால் தான். இதோ அதற்கான தீர்வு:

ட்ரிக் 1: முதலில், உங்கள் கைகளில் சிறிதளவு எண்ணெய் (அ) உப்பு எடுத்து நன்கு தடவிக் கொள்ளுங்கள். இது, வாழைப்பூவில் இருந்து வெளிவரும் பால் கைகளில் ஒட்டி கறை படியாமல் தடுக்கும்.

ட்ரிக் 2: வாழைப்பூவை எடுத்து அதன் வெளி இதழ்களை (தோகைகளை) ஒன்றன் பின் ஒன்றாகப் பிரிக்கவும். ஒவ்வொரு இதழின் உள்ளேயும் பூக்கள் இருக்கும். வெளி இதழ்கள் சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் இருக்கும்.

ட்ரிக் 3: ஒவ்வொரு பூவையும் எடுத்து, உள்ளே இருக்கும் இரண்டு கடினமான பகுதிகளை அகற்ற வேண்டும்:

ட்ரிக் 4: நடுவில் நீளமாக, மெல்லிய குச்சி போல இருக்கும் கடினமான நரம்பை நீக்கிவிடவும். இது செரிமானத்திற்குத் தொந்தரவு கொடுக்கும்.

ட்ரிக் 5: நரம்புக்கு அருகில் ஒரு மெல்லிய, ஒளி ஊடுருவக்கூடிய, ரப்பர் போன்ற இதழ் இருக்கும். அதையும் நீக்க வேண்டும்.

ட்ரிக் 6: வாழைப்பூவின் உட்பகுதியில், சிறிய வெள்ளை நிறத்தில் இருக்கும் பூக்களை சுத்தம் செய்யத் தேவையில்லை. ஏனெனில், அந்த நுனிப் பூக்களில் கடினமான நரம்புகள் பெரும்பாலும் இருக்காது.

இப்படி எளிமையான முறையில், வேகமாகவும், கைகளில் கறை படியாமலும் வாழைப்பூவை சுத்தம் செய்த பிறகு, நீங்கள் சமைக்கப் பயன்படுத்தலாம். சுத்தம் செய்து நறுக்கிய வாழைப்பூ கருக்காமல் இருக்க, அதை சிறிது மோர் (தயிரில் சிறிது நீர் கலந்தது) கலந்த தண்ணீரில் போட்டு வைத்திருப்பது நல்லது.

இதனால் வாழைப்பூவின் துவர்ப்பும் குறையும். பிறகு சமைப்பதற்கு முன் அதைத் தண்ணீரில் அலசிப் பயன்படுத்தலாம். வாழைப்பூ பொரியல், வடை, கூட்டு, ரசம் என எந்த வடிவில் எடுத்துக் கொண்டாலும், அதன் ஆரோக்கிய நன்மைகள் முழுமையாக நமக்குக் கிடைக்கும்.

  • 597
·
Added a post

பெல்ஜியத்தில், 70 ஆண்டுகளாக டிராஃபிக் ஜாமில் சிக்கி நிற்கும் கார்கள் பற்றிய மர்மம் நீடிக்கிறது. தெற்கு பெல்ஜிய பகுதியில்தான் 500 பழமையான கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த டிராஃபிக் ஜாம் மர்மம் பற்றி பல்வேறு கதைகள் றெக்கை கட்டி பறந்தாலும், உண்மையான காரணம் இதுவரை தெளிவு செய்யப்படவில்லை. அந்த டிராஃபிக் ஜாம் மர்மம் பற்றி உலவும் பொதுவான வரலாற்று தகவல்கள்:

பெல்ஜிய வனாந்திரம்

பெல்ஜியம் நாட்டின் சாட்டிலான் என்ற இடத்தில் இருக்கும் வனாந்திரத்தில்தான் இந்த கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அந்த கார்கள் மழையிலும், வெயிலிலும் சிதைந்து எலும்பு கூடு போல் காட்சியளிக்கின்றன.

ஒரு பக்கம் மலைமுகடாலும், மறுபுறம் அடர்ந்த காடுகளாலும் மறைக்கப்பட்டிருக்கும் அந்த ரகசிய இடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் கண்டிபிடிக்க இயலாத அளவுக்கு அங்கு அத்தனை கார்களை யார் நிறுத்திச் சென்றனர் என்பதே இப்போது ஆச்சரியத் தகவல்.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த தருணத்தில், அங்கு பணியில் இருந்த அமெரிக்க போர் வீரர்கள் தாங்கள் பயன்படுத்திய கார்களை இந்த வனாந்திர சாலையில் ரகசியமாக நிறுத்திவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு பக்கம் மலைமுகடும், அடர்ந்த மரங்கள் நிறைந்த அந்த சாலையை அவர்கள் தேர்ந்தெடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

அதாவது, மீண்டும் அந்த கார்களை பெறுவதற்கான வாய்ப்பு இருந்தால், எடுத்துச் செல்லலாம் என்று எண்ணி இந்த கார்களை அமெரிக்க போர் வீரர்கள், அதிகாரிகள் அங்கு ரகசியமாக விட்டுச் சென்றனராம். மேலும், நாடு திரும்பும் மகிழ்ச்சியில் இந்த கார்களை எடுத்துச் செல்வது கடினம் என்றும் எண்ணியும் இங்கே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் இரண்டாம் உலகப் போர் நடந்த காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்றும், அதற்கு பிறகான காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும், இந்த கார்களுக்கு இதுவரை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. எனவே, இது அமெரிக்க போர் வீரர்கள் விட்டுச் சென்ற கார்கள்தான் என்று ஆணித்தரமாக கூறப்படுகிறது. அதாவது, போர் முடிவுக்கு வந்த மகிழ்ச்சியில் குடும்பத்தினரை காண்பதற்காக இந்த கார்களை விட்டுவிட்டு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. 70 ஆண்டுகால டிராஃபிக் ஜாம் என்றே இந்த கார் கல்லறையை பத்திரிக்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த கார் கல்லறை தோட்டம் பற்றி 70 ஆண்டுகளுக்கு பின்னரே இப்போது வெளியில் தெரிந்துள்ளது. அந்தளவு ரகசியமான இடத்தில் அந்த கார்களை நிறுத்தி சென்றதுதான் இப்போதும் ஆச்சரியத்துக்கிடமான தகவல்.

  • 599

Good Morning

  • 689
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

ரிஷபம்

மனதளவில் இருந்து வந்த கவலைகள் குறையும். சமூகம் பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மிதுனம்

வேளாண்மை பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணை மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத் தொடர்பான பயணங்கள் கைகூடும். ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனைவியுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் மாற்றமான சிந்தனைகள் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வாகன பயணங்களில் ஆவணங்களில் கவனம் வேண்டும். எதிர்கால சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வர்த்தக தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

சிம்மம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பார்த்திருந்த தனவரவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் நட்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். உடன் இருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

கன்னி

எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவமும் மதிப்புகளும் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்துவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

துலாம்

வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். சுபகாரிய பயணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

விருச்சிகம்

குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் உருவாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மூலம் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். ஆசைகள் மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

தனுசு

மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மீதான ஆர்வம் மேம்படும். பாகப்பிரிவினை செயல்பாடுகளில் சாதகமான சூழல்கள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

மகரம்

தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாக்கு சாதுர்த்தியம் மூலம் ஆதாயமடைவீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கும்பம்

எதிர்பாராத அதிர்ச்சிகரமான வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். கணிப்பொறி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உயர்கல்வி பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். சாஸ்திரம் தொடர்பான தெளிவுகள் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மீனம்

பணிபுரியும் இடத்தில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். திடீர் பயணம் மூலம் அலைச்சல் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். கால்நடைகளிடம் சற்று அனுசரித்து செல்லவும். வங்கி பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியாக இருந்த வரவுகள் கிடைக்கும். உறுதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

  • 984

சில்லென குளிர்ந்த காலையில்

சிலிர்த்தது குளித்த கருங்குயில்

சிக்கென சிறைபிடிக்க அலைபேசியில்...

சிறகடித்து பறந்ததே ஆகாயத்தில்.

-விஜி

  • 992
·
Added a post

விசுவாவசு வருடம் தை மாதம் 8 ஆம் தேதி வியாழக்கிழமை 22.1.2026

இன்று அதிகாலை 02.58 வரை திருதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று பிற்பகல் 02.33 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.

இன்று மாலை 05.53 வரை வரீயான். பின்னர் பரிகம்.

இன்று அதிகாலை 02.58 வரை கரசை. பின்னர் பிற்பகல் 02.33 வரை வணிசை. பிறகு பத்தரை.

இன்று காலை 06.34 வரை சித்த யோகம். பின்னர் பிற்பகல் 2.33 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=397&dpx=2&t=1769049482

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 1009

Good Morning....

Have a Nice day...

  • 998
  • 1134
  • 1137
  • 1145
·
Added a post

முகத்தைப் பார்த்தால் உங்களுக்கு அவரை அடையாளம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 50-வது நபருக்கும் அவர் கடன் கொடுத்திருக்கிறார்!

அவரிடம் 1.70 லட்சம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது, ஆனாலும் அவரிடம் எந்தவித ஆடம்பரமோ அல்லது அகங்காரமோ துளியும் இல்லை. அவர் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறார், முன்பு ஃபியட் கார் வைத்திருந்தவர், இப்போது மாருதி ஆல்டோ ஓட்டுகிறார்.

அவர் கைபேசிகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்; அவரிடம் ஒரு சாதாரண கீபேட் ஃபோன் உள்ளது, ஆனால் அதுவும் அவருடைய ஓட்டுநரிடம்தான் இருக்கும். அவர் அதைத் தன்னுடன் வைத்துக்கொள்வதில்லை. அந்த ஃபோனில் ஐந்து பேர் மட்டுமே அவரை அழைக்க முடியும் – அவருடைய குடும்பத்தினர் மற்றும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி – அதுவும் மிக அவசரமான சூழ்நிலையில் மட்டுமே.

அவர் தனது வருமானத்தில் 30-40 ஆயிரம் ரூபாயை மட்டுமே தனக்காக வைத்துக்கொண்டு, மீதமுள்ள அனைத்தையும் தானமாக அளித்துவிடுகிறார். அவர் செருப்பு அணிந்துகொண்டு, மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைத் தானே சென்று வாங்குகிறார். அவரிடம் 5-6 ஜோடி ஆடைகள் மட்டுமே உள்ளன, அவற்றை அவர் துவைத்து மாற்றி மாற்றி அணிகிறார்.

இந்த நபர் வேறு யாருமல்ல, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் *ஸ்ரீராம் மூர்த்தி தியாகராஜன்* தான். அவர் ஸ்ரீராமரைப் போல எளிமையான மற்றும் பணிவான வாழ்க்கையை வாழ்கிறார், மேலும்

சமீபத்தில் ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக 6866 கோடி ரூபாயை தானமாக வழங்கியுள்ளார்.

*அவருடைய எளிமையைப் பற்றி நினைத்தாலே... மயக்கமே வந்துவிடும்!

  • 1145