·   ·  3 videos
  •  ·  0 friends
  • 398
  • More

பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்

பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்

Comments (0)
Login or Join to comment.
·
Added article

கமல்ஹாசன் நடித்த புகழ்பெற்ற திரைப்படமான 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படம் காமெடி அம்சத்துடன் கூடிய கதையுடன் மட்டுமல்ல, அனைத்து கதாபாத்திரங்களின் ஆக்கமும் ரசிகர்களுக்கு நன்கு ஞாபகத்தில் உள்ளது.

இந்த படத்தில் சுவாமிநாதன் எனும் கேரக்டரில் தோன்றிய ஒரு துணை நடிகர் குறித்து தற்போது பரவும் செய்தி, ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் கமல்ஹாசனின் அறை தோழனாக, மெடிக்கல் காலேஜில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார்.

சமீபத்தில், ரெடிட் தளத்தில் ஒரு பயனர், “இந்த நடிகர் இப்போது எங்கு இருக்கிறார்?” என கேள்வி எழுப்ப, ஒருவர் பதிலளிக்கையில், “இவர் என் சகோதரரின் நண்பர். அவருடைய பெயர் ரத்தின சபாபதி. இவர் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்” என தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் உண்மை தானா என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இதை படித்த ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

  • 139
·
Added a news

அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மற்​றும் மத்​திய கிழக்​கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்​சி​யாக ஏவு​கணை​களை வீசி வரு​கிறது.

இந்த தாக்​குதல்​களால் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. கடந்த 2-ம் தேதி முதல் துபாய் உள்ளிட்ட நகரங்​களில் இருந்து சிறப்பு விமானங்​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. ஆனால் இவை போது​மான​தாக இல்​லை.

இந்​தி​யர்​கள் உட்பட ஆயிரக்​கணக்​கான வெளி​நாட்​டினர் துபா​யில் சிக்​கியுள்ளனர். அவர்​கள் சொந்த நாடு​களுக்கு திரும்ப ஏதுவாக எமிரேட்ஸ் நிறு​வனம் சார்​பில் மார்ச் 5, 6-ம் தேதி​களில் 100 சிறப்பு விமானங்​கள் இயக்​கப்​படு​கிறது.

ஈரான் ராணுவ தாக்​குதல்​களில் ஐக்​கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஏராள​மானோர் காயமடைந்​துள்​ளனர். அவர்​களுக்கு தேவையான அத்​தி​யா​வசிய மருந்​துகள் சிறப்பு விமானங்​களில் துபாய்க்கு கொண்டு வரப்​படும் என்று ஐக்​கிய அரபு அமீரக அதி​காரி​கள்​ தெரி​வித்​து உள்​ளனர்​.

  • 153
·
Added a news

ஈ​ரானின் அண்டை நாடான அஜர்​பைஜானின் நாக்​சை​வான் பகு​தி​யில் உள்ள விமான நிலை​யத்தை குறி​வைத்து நேற்று ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. அந்த நாட்​டில் அமெரிக்​கா​வின் ராணுவ தளம் இல்​லை. ஆனால் அமெரிக்​கா​வின் நெருங்​கிய நட்பு நாடாக அஜர்​பைஜைன் செயல்​படு​வ​தால் ஈரான் தாக்​குதல் நடத்​தி​யிருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இதற்கு தகுந்த பதிலடி தரு​வோம் என்று அஜர்​பைஜான் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

கத்​தார் தலைநகர் தோஹா​வில் உள்ள அமெரிக்க விமானப்​படைத் தளத்தை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது. ஐக்​கிய அரபு அமீரக தலைநகர் அபு​தாபி மற்​றும் இஸ்​ரேலின் பல்​வேறு பகு​தி​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது.

இஸ்​ரேல் ராணுவ வட்​டாரங்​கள் கூறும்​போது, “அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையி​லான போர் தீவிரமடைந்​துள்​ளது. ஈரானில் உள்ள குர்து கிளர்ச்​சிப் படைகளுக்கு ஆயுதங்​களை வழங்க அமெரிக்க ராணுவம் திட்​ட​மிட்டு உள்​ளது.

இதன்​மூலம் ஈரானுக்கு எதி​ரான போர் தீவிரமடை​யும். ஈரானில் ஆட்சி மாற்​றம் ஏற்​படும்​வரை தொடர்ந்து தாக்​குதல் நடத்​து​வோம். 2 வாரங்​கள் வரை போர் நீடிக்​கக்​கூடும்​" என்​று தெரி​வித்​தன.

  • 151
·
Added article

அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜனநாயகன் திரைப்படம், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு வாரத்திற்க பிறகு திரைக்கு வரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் கடைசி படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன். விஜயுடன் பூஜே ஹெக்டே, மமிதா மைஜூ நாயகிகளாக நடித்துள்ளனர். ஹெச். வினோத் இயக்கியுள்ளார் இப்படத்தை. கடந்த பொங்கல் அன்றே வெளியாக இருந்தது இப்படம். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாவதில் தாமதம் ஆனது. பட தயாரிப்பு நிறுவனமும், சென்சர் போர்டும் நீதிமன்றத்தில் முறையிட்டன. ஆனாலும் முடிவு எட்டாமல் இருந்தது. ஒருவழியாக தயாரிப்பு நிறுவனம் வழக்குகளை வாபஸ் பெற்றது. இதையடுத்து படம் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பபட்டது. இதனால் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் ஜன நாயகன் தேர்தலுக்கு பின்பே வெளியாகும் என கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்த பிறகு படத்திற்கான சென்சார் சான்றிதழ் மார்ச் 17ஆம் தேதிக்கு முன்பு கிடைக்கும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் வர இருப்பதால் தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஜனநாயகன் திரைப்படத்தை திரையிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

  • 128
·
Added article

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இளையராஜா காம்போ என்றால் அப்படம் நிச்சயம் வெற்றி என்றே சொல்லலாம். ஆனால், இவர்கள் கூட்டணியில் வந்த ஒரு எவர்கிரீன் பாடலை ரஜினி வேண்டாம் என்று நிராகரித்திருக்கிறார். பலமுறை அப்பாடலைக் கேட்டும் ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆனால் இளையராஜா சொன்ன ஒற்றை வார்த்தையில் ரஜினி அப்பாடலை படத்தில் வைக்க சம்மதித்தார். ரஜினியின் கணக்கு தப்புக்கணக்காகி போனதால், அப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. அது என்ன பாடல் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோமா?

1992ல் 'மன்னன்' பட வேலைகள் நடந்தன. அப்போது இளையராஜா 'அம்மா என்றழைக்காத' பாடலின் ட்யூனை போட்டுக் காட்டினார். அந்த நேரத்தில் ரஜினி ஒரு மாஸ் ஹீரோவாக, ஆக்‌ஷன் படங்களில் பிஸியாக இருந்தார். பாடலைக் கேட்ட ரஜினி, 'ராஜா, இந்தப் பாடல் மெதுவாக உள்ளது, என் இமேஜுக்கு செட் ஆகுமா? ரசிகர்கள் ஏற்பார்களா? வேறு பாடல் செய்யலாமா?' எனக் கேட்டார். ரஜினி தயங்குவதைக் கண்ட இளையராஜா, 'இதுவரை நீங்கள் ஒரு கமர்ஷியல் ஹீரோ. இந்தப் பாடல் உங்களை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கொண்டு செல்லும். இது உங்களை வேறு உயரத்திற்குக் கொண்டு செல்லும்' என்றார்.

இளையராஜாவின் அசைக்க முடியாத நம்பிக்கையை ரஜினி ஏற்றுக்கொண்டார். 'மன்னன்' வெளியானதும், இளையராஜா சொன்னது உண்மையானது. வாலியின் வரிகள், ஜேசுதாஸின் குரல், ரஜினியின் நடிப்பு அப்பாடலை காவியமாக்கியது. குடும்ப ரசிகர்கள் ரஜினியை தங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்க, அவரது 'பேமிலி ஆடியன்ஸ்' பல மடங்கு அதிகரித்தது. அன்று இளையராஜா சொன்னது வெறும் ஆறுதல் வார்த்தை அல்ல, அது ஒரு மகத்தான கலைஞனின் பார்வை.

  • 150
·
Added article

சூர்யாவின் ‘கருப்பு’ படம் ஏப்ரலில் வெளியாகும் என்று அதன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட போது ‘கருப்பு’ வெளியீடு குறித்து பேசியிருக்கிறார்.

அதில் சாய் அபயங்கர், “ஏப்ரல் மாதத்தில் ‘கருப்பு’ வெளியாகும். இப்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் வெறித்தனமாக போய்க் கொண்டிருக்கிறது. அப்படத்தில் கருப்பசாமி உள்ளிட்ட சில விஷயங்கள் இருக்கிறது. அதனை முன்வைத்து நிறைய விஷயங்களை செய்து வருகிறோம். தமிழ் கலாச்சாரத்தை உயர்த்து விதத்தில் எனது பின்னணி இசை இருக்கும் என கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் சூர்யா உடன் இப்படத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

  • 158
·
Added a news

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவிவரும் நிலையில், போரில் எங்கள் கூட்டாளர் நாடுகளுடன் இணைந்து நிற்போம் என கனடா பிரதமர் கூறியுள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது.

மத்திய கிழக்கில் போர்ச்சூழல் மும்முரமாகிவரும் நிலையில், போரில் தனது நாட்டின் ராணுவம் பங்கேற்கும் நிலை ஏற்படலாம் என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி அவுஸ்திரேலியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர், அவுஸ்திரேலிய பிரதமரான அந்தோனி அல்பானீஸுடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்தார். அப்போது கனடா பிரதமர் கார்னியிடம், ஈரான் போரில் கனடா ஈடுபடும் சூழ்நிலை உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர் கார்னி, இந்தக் கேள்வி ஒரு கருதுகோளாக (hypothetical question) இருக்கும் பட்சத்தில், போரில் பங்கேற்பதை ஒருபோதும் வெளிப்படையாக நிராகரிக்க முடியாது என்றார்.

மேலும், நாங்கள் எங்கள் கூட்டாளிகளுக்கு ஆதரவாக நிற்போம் என்றும், எப்போதும் கனடியர்களைப் பாதுகாப்போம் என்றும் கூறினார் பிரதமர் கார்னி.

இதில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், கனடா பிரதமர் கார்னி அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதே, அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைக்கவேண்டும் என வலியுறுத்துவதற்காகத்தான்.

  • 157
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதில் இருந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவும் புத்துணர்ச்சி பிறக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

ரிஷபம்

மனதில் இருந்த கவலைகள் குறையும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கிய இன்னல்கள் விலகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். இடமாற்ற முயற்சி கைகூடும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிதுனம்

உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்

விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

சிம்மம்

உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகளால் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் விலகும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். திடீர் பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கன்னி

தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சாதனை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

துலாம்

சம வயதினர் மூலம் மாற்றமான தருணங்கள் உருவாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார நிமித்தமான முதலீடுகள் மேம்படும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். எதிர்பாராத திடீர் பயணங்கள் மூலம் நெருக்கடிகள் தோன்றி மறையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

விருச்சிகம்

பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபார முயற்சிகளில் சிறுசிறு மாற்றங்கள் உண்டாகும். சமூக பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். தோற்றப்பொழிவுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். காப்பீடு பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் காணப்படும். தந்தைவழி தொழில் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

தனுசு

உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர் விரும்பி வருவார்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் உண்டாகும். சோர்வு விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

மகரம்

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சிந்தனை மனதில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த இழுபறி குறையும். விவசாய பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். திருப்பணி செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசி கிடைக்கும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

கும்பம்

புத்திரர்களால் அலைச்சல்கள் ஏற்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். பணியாட்கள் மூலம் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். தூர தேச பயண செயல்களில் விவேகம் வேண்டும். உயர்நிலை கல்வியில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இணைய முதலீடுகளில் பொறுமை வேண்டும். செயல்படும் விதத்தில் மாற்றம் காணப்படும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

மீனம்

சமூகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சகோதரர்கள் வழியில் ஒற்றுமை பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். பணி நிமித்தமான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

  • 124
  • 122
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6.3.2026.

விசுவாவசு வருடம் மாசி மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6.3.2026

திதி

 கிருஷ்ண பக்ஷ திருதியை  - Mar 05 05:03 PM – Mar 06 05:53 PM

கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி  - Mar 06 05:53 PM – Mar 07 07:17 PM

நட்சத்திரம்

அஸ்தம் - Mar 05 08:17 AM – Mar 06 09:29 AM

சித்திரை - Mar 06 09:29 AM – Mar 07 11:15 AM

கரணம்

பத்திரை - Mar 06 05:24 AM – Mar 06 05:53 PM

பவம் - Mar 06 05:53 PM – Mar 07 06:31 AM

பாலவம் - Mar 07 06:31 AM – Mar 07 07:17 PM

யோகம்

கண்டம் - Mar 05 07:45 AM – Mar 06 07:05 AM

வ்ருத்தி - Mar 06 07:05 AM – Mar 07 06:52 AM

image_transcoder.php?o=sys_images_editor&h=444&dpx=2&t=1772776046

நல்ல நேரம்:

12:07 PM – 12:54 PM

04:22 AM – 06:05 AM

04:58 AM – 05:46 AM

  • 131
  • 135
·
Added article

யாஷ் கதாநாயகனாக நடிக்கும் ’ டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’ படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் என பலர் நடித்துள்ளனர். கன்னடம், ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்துள்ள கேவிஎன் புரொடக் ஷன்ஸ் நிறுவனம் யாஷின் மாஸ்டர்மைண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் மார்ச் 19-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கி இருந்தன.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாகப் படத்தின் ரிலீஸ் தேதியை, ஜூன் 4-ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளனர். இதுபற்றி படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தப் படம் இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இணைவதற்கான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு வளைகுடா நாடுகள் முக்கிய சந்தையாக இருப்பதால், அங்கு நடைபெற்று வரும் சூழ்நிலைகளைத் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வந்தனர். விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, நீண்ட யோசனைக்குப் பிறகு ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.

  • 233
·
Added a post

வெள்ளரிக்காய் இதன் பிஞ்சும் காயும் கோடைக்கேற்ற இதமான உணவுகள். வெள்ளரிக்காய் தினசரி கொஞ்சம் சாப்பிட்டுவந்தால், சிறுநீர்ப்பாதை எரிச்சல் தீரும். சிறுநீர் இயல்பாகும். நா வறட்சி தீரும். உணவு உட்கொண்ட பிறகு சாப்பிட ஏற்றது இது.

வெள்ளரிக்காயில் 95 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளதால் இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் பயன்படுகிறது.

வெள்ளரி விதை வாய்ப்புண்ணை போக்கும் மருந்து.”சரியான உறக்கம் இல்லாததாலும், வயதாவதாலும் பலருக்குகண்களுக்குக் கீழே கருவளையங்கள் உண்டாகும். இவற்றைத்தவிர்க்க வெள்ளரியை விட சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.

வெள்ளரிக்காயை அரிந்து நசுக்கி, அதிலிருந்து சாறினை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சாறில் பஞ்சை முக்கி எடுங்கள்.கண்களை மூடிக்கொண்டு, கண்கள் மீது அந்தப் பஞ்சை வையுங்கள்.பதினைந்து நிமிடங்கள் இப்படி வைத்து எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாகும். கருவளையங்கள் மாயமாகும்.

இது தவிர,வெள்ளரியை அப்படியே சிறுசிறு துண்டுகளாக அரிந்தும் கண்கள் மீது வைக்கலாம்.பனிக்காலத்தில் உதடுகள் சிலருக்கு வெடித்து விடும் ரத்தக்கசிவே ஏற்படும் அளவுக்கு இது சிலருக்கு மோசமாகும்.இதற்கும் தீர்வாக இருப்பது வெள்ளரியே!

வெள்ளரியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி உதடுகள் மீது அப்படியே வைத்திருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் வைத்திருந்து எடுத்துவிடவும். இப்படி தினசரி செய்தால் உதடு வெடிப்பு சரியாகும்.

வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு, சிறுநீரக குழாய் எரிச்சல் ஆகியவை குணமாகும்.

வெள்ளரி பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டை புண் ஆகியவை குணமாகும்.

வெள்ளரிக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாயில் உண்டாகும் கிருமிகளை அழித்து, வாய்துர்நாற்றத்தை வரவிடாமல் தடுக்கும்.

  • 255
·
Added a post

மங்குஸ்தான் பழம் இனிப்பும், இலேசான புளிப்பும், சாற்றுத்தன்மையும் சிறிதளவும் நார்த்தன்மையுமுள்ள பழமாகவும் இருக்கும். மங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத்தில் இருக்கும்.

மங்குஸ்தான் பழத்தில் எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. 100 கிராம் மங்குஸ்தான் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.

உடல் கொழுப்பை அல்லது உடல் இடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழம் ஒரு சிறந்த வரபிரசாதம். மங்குஸ்தான் பழத்தைத் தினமும் ஒரு முறை என மூன்று வாரங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க முடியும்.

மங்குஸ்தான் பழத்தில் அதிக அளவு ‘வைட்டமின் சி’ சத்து அடங்கியுள்ளது. இது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ-ரெடிகல்களை விரட்டும் தன்மையும் ‘வைட்டமின் சி’க்கு உண்டு.

மங்குஸ்தானில் தயாமின், நியாசின், போலேட் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சியை மாற்றும் பணிகளில் இந்த வைட்டமின்கள் அதிக அளவில் உதவுகின்றன.

மங்குஸ்தான் பழத்தில் நார்ச் சத்து அதிகளவு உள்ளது. மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். மேலும் இது பக்கவாதம் மற்றும் இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.

மங்குஸ்தான் பழங்களைத் தினம்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு வருவது கண் பார்வை திறனுக்கு மிகவும் உகந்தது.

மங்குஸ்தான் பழம் இனிப்பும், இலேசான புளிப்பும், சாற்றுத்தன்மையும் சிறிதளவும் நார்த்தன்மையுமுள்ள பழமாகவும் இருக்கும். மங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத்தில் இருக்கும்.

மங்குஸ்தான் பழத்தில் எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. 100 கிராம் மங்குஸ்தான் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.

உடல் கொழுப்பை அல்லது உடல் இடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழம் ஒரு சிறந்த வரபிரசாதம். மங்குஸ்தான் பழத்தைத் தினமும் ஒரு முறை என மூன்று வாரங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க முடியும்.

மங்குஸ்தான் பழத்தில் அதிக அளவு ‘வைட்டமின் சி’ சத்து அடங்கியுள்ளது. இது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ-ரெடிகல்களை விரட்டும் தன்மையும் ‘வைட்டமின் சி’க்கு உண்டு.

மங்குஸ்தானில் தயாமின், நியாசின், போலேட் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சியை மாற்றும் பணிகளில் இந்த வைட்டமின்கள் அதிக அளவில் உதவுகின்றன.

மங்குஸ்தான் பழத்தில் நார்ச் சத்து அதிகளவு உள்ளது. மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். மேலும் இது பக்கவாதம் மற்றும் இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.

மங்குஸ்தான் பழங்களைத் தினம்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு வருவது கண் பார்வை திறனுக்கு மிகவும் உகந்தது.

  • 256
·
Added a post

பெண்கள் அனைவரும் எப்பொழுதும் அவரவர்களின் அழகில் கவனம் செலுத்துவது இயல்புதான். அவ்வாறு வசிகரிக்கும் அழகு பெற பப்பாளி பழ சாறை முகத்திற்கு மாஸ்க் போல் போட்டுக்கொள்ளலாம். 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

முகத்துக்கு நல்ல நிறம் கிடைப்பதற்கு பப்பாளிப் பழத்துடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து முகத்தில் நன்கு அப்ளை செய்ய வேண்டும். அதில் முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும்.

மேலும் சருமம் இளமையுடன் காட்சியளிக்க மிக்ஸியில் சிறிது பப்பாளி அன்னாசி மற்றும் தர்பூசணி போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.

கை விரல்கள் மிருதுவாக இருப்பதற்கு பப்பாளி பழக் கூழை அன்னாசி பழச் சாறுடன் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். அதனையடுத்து முட்டையின் மஞ்சள் கருவை வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன்சேர்த்து அடித்துக் கொள்ளுங்கள்.

இதனை பப்பாளி கூழுடன் கலந்து உங்கள் கை விரல்களை அதில் அரைமணி நேரம் ஊற விட வேண்டும். நக கண்களை மசாஜ் செய்யலாம். இதனால் உங்கள் நகம் மற்றும் கை விரல்கள் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மிளரும்.

முகம் பளிச் என்று எப்பொழுதும் இருப்பதற்கு பப்பாளியுடன் எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து அதனை முகத்தில் தேய்த்து ஊற வைத்து நீரில் கழுவினால் சருமத்தில் வெயிலின் தாக்கத்தினால் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி முகம் பளிச்சென்று காணப்படும்.

  • 255
·
Added a post

மன்னன் ஒருவன் பக்கத்து நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்றான். தோற்ற மன்னன் ஜெயித்த மன்னனிடம் தன் தோல்வியை ஒப்பு கொள்ள! ஜெயித்த மன்னன் அவனுக்கு நாட்டை திருப்பி தர முன் வந்தான்!

ஆனால் அவனுக்கு ஒரு காதலி இருந்தாள். அவள் ஒரு கேள்வியை ஜெயித்த மன்னனிடம் கேட்டு இருந்தாள். அதற்கான சரியான விடையை அவன் சொன்னான் என்றால் உடனே திருமணம் என்று சொல்லி இருந்தாள்.

அந்த கேள்வி!

ஒரு பெண் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?

ஜெயித்த மன்னனும் அவனிடம் இந்த கேள்விக்கு பதில் கண்டு பிடித்து சொல். உனக்கு நாட்டை திருப்பி தருகிறேன் எனக்கும் என் காதலியுடன் திருமணம் நடக்கும் என்று சொல்ல!

தோற்ற மன்னன் அந்த கேள்விக்கான விடையை தேடி அலைந்தான். கடைசியில் ஒரு சூனியக்காரி கிட்ட போனால் விடை கிடைக்கும் என்று சொல்ல அவளை சென்று பார்த்தான். அவளிடம் விடயத்தை சொல்ல அவளோ உனக்கு நாடு கிடைக்கும் எனக்கு என்ன கிடைக்கும் என்று அவள் சொல்ல! அதற்கு அவன் நீ என்ன கேட்டாலும் தருகிறேன் என்று சத்தியம் செய்தான்.

சூனியக் காரியும் விடையை சொன்னாள்.

" தன் சம்பந்த பட்ட முடிவுகளை தானே எடுக்க வேண்டும் என்று நினைப்பது தான் எந்த ஒரு பெண்ணும் தன் ஆழ் மனதில் நினைப்பாள் என்று சொல்ல!

அந்த விடையை ஜெயித்த மன்னனிடம் சொல்ல அவன் தன் காதலியிடம் சொல்ல உடனே அவர்களுக்கு திருமணம் ஆனது. இவனுக்கும் தோற்ற நாடு திரும்பி கிடைத்தது.

இப்பொழுது சூனியக் காரி கிழவியை போய் பார்த்து அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்க! அவள் தன்னை திருமணம் செய்து கொள்ளனும் என்றாள்.

மன்னனும் சரி என்று கொடுத்த வாக்கை காப்பாற்றினான். உடனே அவள் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள்.

மன்னன் ஆச்சரியம் அடைந்தான். அவள் சொன்னாள் மன்னா! நான் வீட்டில் கிழவியாக இருந்தால் உன்னுடன் வெளியே செல்லும்போது அழகிய பெண்ணாக மாறி விடுவேன்! அதே வீட்டில் அழகிய பெண்ணாக உன்னுடன் இருந்தால் வெளியே வரும்போது கிழவியாக மாறி விடுவேன்! இதில் எது வேண்டும் என்று நீ தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னாள்.

பக்குவம் அடைந்து இருந்த மன்னன் அவளிடம் இது உன் சம்பந்த பட்ட விடயம் உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய் என்று சொல்ல!

அவளோ மன்னா ஒரு பெண் தன் கணவனுடன் இருக்கும் எல்லா நேரங்களிலும் அழகாய் இருக்க தான் நினைப்பாள். அதனால் நான் எப்பொழுதும் அழகியன் இளம் பெண்ணாக இருப்பேன்!

நீ ஜெயித்து விட்டாய் என்று சொன்னாள்.

  • 255
·
Added a post

செல்வத்துக்கு எல்லாம் அதிபதி குபேரன் அருள் நமக்கு கிடைத்தால் செல்வத்திற்கு அதிபதியாக நாமும் திகழலாம் .

அதுபோலவே மகாலட்சுமியின் பரிபூரண அருள் லட்சுமி கடாட்சம் இருந்தால் எப்போதும் வீட்டில் செல்வம் நிறைந்து இருக்கும்.

மகாலட்சுமியின் அனுகிரகம் கிடைத்தாலே அஷ்ட லட்சுமிகளும் நம்முடைய வீட்டிலே வாசம் செய்து எல்லா அனுக்கிரகமும் கிடைக்கும் என்பதால்தான் இந்த லஷ்மி குபேர பூஜையை வழிபாடு செய்கின்றோம்.

வியாழன் கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணி வரை குபேரன் காலம் . அமாவாசை அடுத்து வரக்கூடிய வளர்பிறை நாளில் வியாழன் கிழமை தேர்ந்தெடுத்து குபேர பூஜையைை வழிபட்டால் குடும்பத்தில் செல்வம் பெருகும் .

இந்த குபேர பூஜையை எப்படி வழிபட வேண்டும் எனும் முறைகளைப் பற்றி பார்க்கலாம்..

எந்த ஒரு பூஜை செய்தாலும் கங்கா ஸ்நானம் செய்து முடித்தபின் ஆரம்பித்தல் நல்லது.

கங்கா ஸ்னானம் செய்யும் முறை..

ஸ்நானம் செய்யும் பொழுது ஒரு குவளை ஜலம் எடுத்து ஓம்' எனும் எழுத்தை மோதிர விரலால் எழுதி- நாம குளிக்கும் தண்ணீரை- கங்கை ஜலமாக நெனச்சு தலையில ஸ்நானம் செய்யும் போது ரொம்ப விசேஷத்தை தரும் .அப்படி செய்யும்போது அந்த ஜலமானது கங்கை நீராகவே மாறிவிடும் ..அதுல நாம் ஸ்நானம் செய்யும்போது நம்ம உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் நம்ம மனசும் எந்தவித தீய நோக்கத்திற்கும் செல்லாமல் மனமானது புனிதமாக மாறுகின்றது.

பட்டுப் புடவை அல்லது மஞ்சள் சிகப்பு என தெய்வத்திற்கு உகந்த கலரில் புடவை கட்டிக்கொண்டு தலையில் மல்லிகை பூ- பொட்டு -சந்தனம் குங்குமம் என் மிகவும் தெய்வீகமான நிலையில் தான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும் .

லட்சுமி குபேரர் படம் கடைகளில் கிடைக்கும். குபேர யந்திரத்தின் படமும் கடையில் வாங்கலாம் அல்லது வரைந்து கொள்ளலாம் .

1 - ‌பூஜை ஆரம்பிக்கும் போது ஐந்து முக விளக்கை ஏற்றி கிழக்கு நோக்கி லக்ஷ்மி குபேரர் படத்தை வைத்து -மஞ்சள் குங்குமம் இட வேண்டும்.

2 - தலைவாழை இலை வைத்து தெய்வத்தின் பார்வைக்கு இடதுபுறமாக- நமது பார்வைக்கு வலது புறமாக தலைவாழை இலை இருக்க வேண்டும்.

3 - நவதானியங்களை முதல்நாளே தயார் செய்து கொண்டு பூஜையின் போது ..

குபேர வழிபாட்டின் போது பூஜையில் வைக்கப்படும் நவதானியங்கள்.. 1- நெல் அல்லது அரிசி 2 -துவரை 3--உளுந்து 4 -பச்சைப் பயறு 5 - மொச்சை 6 - கோதுமை 7 - கொண்டைக்கடலை 8- எள் 9 - கொள்ளு Voice note

நவதானியங்களை வாழை இலையில் நடுவிலே பரப்பி

4- பித்தளை அல்லது வெள்ளி சொம்பில் நிறைவாக நீர் இட்டு -மஞ்சள்பொடி சேர்த்து மேலே மாவிலை கொத்து- அதற்கு மேல் பஞ்சோடு கொண்ட தேங்காய் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து மலர் கொண்டு அலங்கரித்து கலசத்தை ரெடி செய்து கொள்ள வேண்டும்.

5 - வாழை இலையின் வலது புறத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு -வாழைப்பழம் தட்சணை வைக்க வேண்டும் .

6- நமக்கு என்ன குறை இருந்தாலும் எல்லாமே நிவர்த்தியாக வேண்டும் என்று குலதெய்வத்தை முதலில் வேண்டிக் கொண்டு பின்னர் விநாயகப்பெருமானை ஆத்மார்த்தமாக வேண்டி லக்ஷ்மி குபேரரை‌ மனதால் நினைத்து பூஜை அறையை மிக அழகாக பூக்களால் அலங்கரித்து கொள்ள வேண்டும்.

7 - அதற்கு பின்னர் குபேர எந்திரம் வரைதல் வேண்டும்.

குபேர மந்திரம் வரையும் முறை

ஒரு மரப்பலகையில் மஞ்சள் பூசி நான்குபுறமும் குங்குமம் வைத்து அதன் மேல் இந்த குபேர எந்திரம் வரைதல் வேண்டும்.

குபேர எந்திர கோலம் படத்தில் இருப்பதைப் போல கட்டம் குங்குமத்தால் வரைந்து- ஸ்ரீ எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதி பச்சரிசி மாவால் எண்கள் எழுதி எண்களுக்கு பக்கத்தில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து- உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்து- இந்த பூஜையை வழிபட வேண்டும் .

ஸ்ரீ என்னும் எழுத்தானது -கட்டத்தின் நான்கு பக்கத்திலும் மஞ்சள் பொடியால் எழுதவேண்டும் .

கட்டத்தில் உள்ள எண்களின் பக்கத்தில் ஒரு ரூபாய் நாணயம் வைக்கும் அளவிற்கு கட்டத்தை பெரிதாக

வரைந்து கொள்ளவும்.

பூக்களால் அர்ச்சனை செய்யும்போது கட்டத்தில் உள்ள எண்கள் கலையாத வாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

8 ‌- காய்ச்சிய பசும்பால் -கற்கண்டு

பாயாசம் பூஜையிலே வைத்து படைத்தல்

9 - குபேரனுக்கு உகந்த எண் ஐந்து ஒரு தட்டு நிறைய ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்து -மனையிலே வடக்கு முகமாக அமர்ந்து-

இரு கைகளாலும்ஐந்து ரூபாய் நாணயங்களை அள்ளி எடுத்து மீண்டும் தட்டிலே போட்டு மீண்டும் அள்ளி அளகாபுரி அரசே போற்றி -என துவங்கும் குபேர பகவானின் 108 போற்றி சொல்லி முடிக்கும் வரை நாணயங்களை அள்ளி எடுத்து மீண்டும் தட்டில் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

இப்படி செய்யும்போது நாணயத்தின் ஒலி எழும்பும் சத்தத்தினால் ஓசையிலே மகிழ்ச்சி கொண்டு பூஜையை குபேர பகவான் மிக மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார் என்பது ஐதீகம்.

மேலும் மகாலட்சுமி 108 துதிப்பாடல்கள நமக்குத் தெரிந்த சுலோகங்களும் படிக்கலாம்

10 - தீபாரதனையை காட்டி பூஜையை நிறைவு செய்யலாம் . பண வரவு உள்ள இடங்களில் அதாவது கல்லாப்பெட்டி -அலமாரி மேசை மற்றும் பூஜை அறையில் அந்த நாணயத்தை வைத்தால் பொருட்செல்வம் கூடி விரைவில் செல்வ கடாட்சம் பெருகும்.

  • 256
·
Added a post

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அந்த வகையில் அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகமுண்டு. மரத்தடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்தாலோ, தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தாலோ, நிறைவான பலனை அடையலாம். அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் பிரதட்சணம் செய்து வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாவங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும்.

எந்த நேரத்தில் அரச மரத்தைச் சுற்றலாம் ?

சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.30 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று, நமது உடலுக்கு நன்மையைத் தரும். அந்த நேரத்தில் அரச மரத்தை சுற்றி வந்தால் அதிக நன்மைகள் அடையலாம்.

மற்ற நாட்களைவிட , சனிக்கிழமையன்று காலை நேரத்தில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதால் சனிக்கிழமைகளில், அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும்.

அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

குறிப்பாக, பல நாட்களாக குழந்தை பாக்கியமில்லாதவர்களின் தோஷத்தைப் போக்கி குழந்தை பாக்கியத்தைப் பெற அரச மரத்தை சுற்றிவரலாம்.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் காலை சுமார் 8.00 மணிக்குள், உடல் மற்றும் உள்ளத் தூய்மையுடனும், பக்தியுடனும் அரச மரத்தை 108, 54 அல்லது 12 முறை பிரதட்சணம் செய்ய (வலம் வர) வேண்டும். எல்லா நாட்களிலும் அரச மரத்தை பூஜைகள் பிரதட்சணம், நமஸ்காரம் செய்யலாம். நடுப்பகல், மாலை, இரவு போன்ற நேரங்களில் அரச மரத்தை வழிபாடு செய்வதை தவிர்த்தல் நல்லது.

அரசமரத்தை எந்தெந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும் :

திங்கட்கிழமை : சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை : துர்க்கை அம்மனை அர்ச்சித்து அரச மரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்யோக உயர்வு முதலான பல்வேறு வெற்றிகளும் கிடைக்கும்.

புதன்கிழமை : அரச மரத்தை வலம் வருபவர்களுக்கு வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும்.

வியாழக்கிழமை : தட்சிணாமூர்த்தியை வணங்கிய பின்பு, அரச மரத்தை பிரதட்சணம் செய்தால் கல்வி ஞானமும், கீர்த்தியும் பெற முடியும்.

வெள்ளிக்கிழமை : லட்சுமியை வணங்கி, அரச மரத்தை வலம் வந்தால் ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் உண்டாகும்.

சனிக்கிழமை : அன்று வலம் வருபவர்களுக்கு கஷ;டங்கள் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும்.

அரசமரத்தின் இலை, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

அரசமரத்தை சுற்றி வந்தால்

ஏற்படும் பயன்கள் ?*

🍀திருமணமாகாத ஆண்கள்/பெண்கள் சுற்றி வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

🍀மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

🍀தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🍀எல்லா தெய்வங்களின் அருளும் கிடைக்கும்.

🍀 அனைத்து விதமான செல்வ செழிப்புடனும் நீண்ட ஆயுளுடனும் வாழலாம்.

  • 324
·
Added a news

ஈரான் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் உளவுத்துறை அமெரிக்காவிற்கு இரகசியத் தூது அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் , இப்போதைக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் உளவுத்துறை அமைச்சை சேர்ந்த அதிகாரிகள், ஒரு மூன்றாவது நாட்டின் வழியாக அமெரிக்க மத்திய புலனாய்வு முகவரகததுக்கு (CIA) செய்தி அனுப்பியுள்ளனர். அதில், போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க தயாராக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே முறையான அல்லது தீவிரமான உரையாடல்கள் எதுவும் நடைபெறவில்லை எனத் தெரியவருகிறது. இது குறித்து பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில்,

"நாங்கள் இப்போதே எமது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் அணுசக்தி இலக்குகளை அழிக்கும் கூட்டு நடவடிக்கை தற்போது தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளதாக பென்டகன் தரப்பு கூறுகிறது.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இது குறித்து முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அளித்த ஒரு பேட்டியில், "ஈரான் தலைவர்கள் பேச விரும்புகிறார்கள், நானும் பேசச் சம்மதித்துள்ளேன்" என்று கூறியிருந்தார்.

ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஈரான் பேச விரும்புகிறது, ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார். இதேவேளை, போரை நிறுத்த தாம் தூதுவிட்டதாக கூறப்படும் தகவல்களை ஈரான் தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது.

ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த்-ரவாஞ்சி கூறுகையில்,

"நாங்கள் இப்போது எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம். அமெரிக்காவுக்கு எவ்வித செய்தியையும் நாங்கள் அனுப்பவில்லை" எனத் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • 335
·
Added a news

சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திவந்த இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கனடாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் பின்னணி கொண்டவரான நான்சி க்ரெவால் (45), செவ்வாயன்று இரவு மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். இரவு 9.30 மணியளவில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பொலிசாருடன் சென்ற மருத்துவ உதவிக்குழுவினர் நான்சியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

ஆனால், காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், நான்சி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகப் பிரபலமான நான்சி, இந்தியா கனடாவுக்கிடையிலான தூதரக உறவுகளில் ஏற்பட்ட விரிசல் மற்றும் இந்திய அரசியல், குறிப்பாக, தான் சார்ந்த பஞ்சாப் அரசியல் குறித்த கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 273
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் பொறுப்புகள் குறையும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உலகியல் நடவடிக்கை மூலம் சில மாற்றம் மனதளவில் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

ரிஷபம்

தன வரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தடங்கல் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மிதுனம்

பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார பணிகளில் இருந்த மந்தத்தன்மை விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கடகம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செயல்களில் திருப்தியான சூழல் அமையும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

சிம்மம்

குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

கன்னி

உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தவறிய சில வாய்ப்புகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும். மனதில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். இறை பணிகளில் ஆர்வம் ஏற்படும். உணவுகளில் சற்று கவனம் வேண்டும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். செலவுகளால் சில நெருக்கடியான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விருச்சிகம்

பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனை விற்பனையில் லாபம் மேம்படும். உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

தனுசு

உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியாக மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். விளையாட்டு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மகரம்

ஆன்மீக செயல்பாடுகளில் தெளிவுகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி செயல்களில் கவனத்துடன் இருக்கவும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கும்பம்

சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். உயர் கல்வியில் சிறு குழப்பம் தோன்றி மறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

மீனம்

மனதில் புதிய இலக்குகள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். வர்த்தகப் பணிகளில் லாபம் உண்டாகும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை

  • 314
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 5.3.2026

இன்று மாலை 06.04 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று காலை 09.09 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

இன்று காலை 08.34 வரை சூலம். பின்னர் கண்டம்.

இன்று அதிகாலை 05.53 வரை தைத்தூலம். பின்னர் மாலை 06.04 வரை கரசை. பின்பு வனிசை.

இன்று காலை 06.26 வரை அமிர்த யோகம். பின்னர் காலை 9.09 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=443&dpx=2&t=1772681819

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 314

Good Morning.....

Have a nice day!

  • 306
·
Added a news

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான நகரமாக பர்ரி அறிவிக்கப்பட்டுள்ளது.

டொரொன்டோவை தலைமையிடமாகக் கொண்ட காப்பீட்டு நிறுவனம் மை சொயிஸ் வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில், பர்ரி நகரம் மிகவும் ஆபத்தான நகரமாக முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்பு அந்த இடத்தை ப்ரான்போர்ட் பெற்றிருந்தது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் போக்குவரத்து விதிமுறை மீறல்களை விட விபத்துகளின் அதிகரிப்பேயாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

2020ஆம் ஆண்டிலிருந்து 200,000க்கும் மேற்பட்ட கார் காப்பீட்டு கோரிக்கைகளை (insurance quotes) ஆய்வு செய்து, 2026ஆம் ஆண்டுக்கான ஆபத்து நிலைகளை நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.

விபத்துகள் மற்றும் கவனச்சிதறல் ஓட்டம், அதிவேகம் போன்ற விதிமுறை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு எடைச்சார்ந்த சராசரி முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

நகரங்களுக்கு 0 முதல் 5 வரை மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 0 என்பது மிகவும் ஆபத்தானது; 5 என்பது மிகவும் பாதுகாப்பானது என்பதைக் குறிக்கிறது. பர்ரி நகரம் 0.6 என்ற மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளது. அந்நகரில் 14.54 சதவீத ஓட்டுநர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விபத்துகள் பதிவாகியுள்ளன. அதாவது, ஏழில் ஒருவருக்கு மேற்பட்டோர் மீண்டும் மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளனர். மேலும், 12.41 சதவீத ஓட்டுநர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்கள் பதிவாகியுள்ளன.

  • 452