சினிமா செய்திகள்
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!”  என சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர்
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
Ads
 ·   ·  7499 news
  •  ·  5 friends
  • I

    9 followers

டுவிட்டரை வாங்கியது ஏன்? - எலான் மஸ்க்

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வந்தார். இதையடுத்து, டுவிட்டரை வாங்கப்போவதாக கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் அறிவித்தார். 

இது தொடர்பாக நடந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் செய்தார். பின்னர் டுவிட்டரை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் டுவிட்டரில் இருக்கும் போலி கணக்குகள் குறித்த தகவல்களை நிறுவனம் வழங்க மறுப்பதாக கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அறிவித்தார். இதையடுத்து எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அக்டோபர் 28-ந்தேதிக்குள் (நேற்று) ஒப்பந்தத்தை இறுதிசெய்ய கெடு விதித்தது. இந்த சூழலில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டுவிட்டர் தலைமையகத்துக்குள் எலான் மஸ்க் நேற்று முன்தினம் நுழைந்தார். அப்போது அவர் கைக்கழுவ பயன்படுத்தப்படும் சிங்க் ஒற்றை கையில் எடுத்து சென்றார். இது தொடர்பான வீடியோவையும் அவர் டுவிட்டரில் பகிர்ந்தார்.

பின்னர் அவர் தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் சிறுது நேரம் ஆலோசனை நடத்தினார். இதன் மூலம் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. 

டுவிட்டர் உரிமையாளராக அவர் எடுத்த முதல் முடிவுகள், தலைமைச் செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் தலைமைச் சட்ட அதிகாரி விஜயா காடே ஆகியோரை நீக்கியது ஆகும் இப்போது, சட்ட வல்லுனர்கள் எலான் மஸ்கின் நிதிப் பொறுப்புகள், குறிப்பாக பணியாளர் இழப்பீடு மற்றும் வணிகத்திற்கான பணப்புழக்கத்தை பராமரிப்பது குறித்து கவலை தெரிவித்து உள்ளனர். டுவிட்டரின் தோராயமாக 7,500 பணியாளர்களுக்கு நிறுவனத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும். மேற்கூறிய மூன்று பணிநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மஸ்க் 200 மில்லியன் டாலருக்கும் அதிகமாக கொடுக்க வேண்டும்.ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, மஸ்க் பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்திருக்கலாம் என கருதுகின்றனர். எவ்வாறாயினும், ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் உள்ள தவறு மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பணத்தைப் பெறுவார்களா என்ற தெளிவின்மை நீண்ட வழக்குகளைத் போட தூண்டலாம்.

  • 232
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads