Category:
Created:
Updated:
உலக வாழ் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
விசுவாவசு என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, இன்று அதிகாலை மலர்ந்துள்ளது.
சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
புதுவருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி அதிகாலை 2.29 க்கு பிறந்தது. திருகணித பஞ்சாங்கத்தின் படி இன்று அதிகாலை 3.21 க்கு பிறந்தது.
மருத்துநீர் வைப்பதற்கான புண்ணிய காலம் நேற்றிரவு 11. 21 முதல் இன்று காலை 7.21 வரை உள்ளது.
புத்தாண்டில் சிவப்பு நிறப்பட்டாடை அல்லது சிவப்புக்கரை வைத்த வெள்ளை புது வஸ்திரம் அணிய வேண்டும்.
கைவிசேடம் பரிமாறுவதற்கு இன்று காலை 6.05 முதல் காலை 7.10 வரையும், காலை 9.05 முதல் இரவு 9.56 வரையும் சுபநேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
000