சினிமா செய்திகள்
மீண்டும் வெளியாகிறது 'எந்திரன்' திரைப்படம்
'எந்திரன்' திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகவுள்ளது. அதாவது, முதல்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து 4k அல்ட்ரா எச்.டி.தரத்தில் டால்பி அட்
 'மாமன்னன்' படத்தின் பாடல்கள் வெளியீடு
இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நட
அனுஷ்கா படத்தில் பாடிய தனுஷ்
தற்போது நடிகை அனுஷ்கா இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில்
கவர்ச்சியாக நடிப்பேன் - துஷாரா விஜயன்
துஷாரா விஜயன் அளித்துள்ள பேட்டியில், "படங்கள் தேர்வில் எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். 'கழுவேத்தி
அழகி ஐஸ்வர்யா ராயின் முகத்தில் சுருக்கங்கள்
பாலிவுட்டின் ராணி என்று கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு, 1997-ல் மணிரத்னத்தின் 'இருவர்' படத்தில் கதாநாயகியாக தனது தி
பல தொழில்களில் கல்லாக்கட்டும் விஜய்
விஜய் தான் தற்போது உள்ள டாப் நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கி வருகிறார். அதுவும் தளபதி 68 படத்திற்கு 200 கோடி விஜய் சம்பளம் பெற உள்ளார் என்ற தகவலும்
காதலில் வயதிற்கு வேலை இல்லை என்ற ஆஷிஷ் வித்யார்த்தி
தமிழ் மற்றும் பிறமொழி படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்து மிரட்டியயவர் தான் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ் சினிமாவிற்கு த
45 வயது நடிகரின் மேல் காதலில் விழுந்த யாஷிகா ஆனந்த்
நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அதிக புகழ்பெற்றார். அதைத்தொடர்ந்து விபத்து, தோழியின் மரணம் என பல பிரச்
கவர்ச்சி காட்டாமல் ஜெயித்த 5 நடிகைகள்
நடிகைகளை பொறுத்தவரை படத்தில் வாய்ப்பு கிடைக்க ஒரு சில விஷயத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். ஒரு சில நேரங்களில் படத்திற்கு ஏற்ப கவர்ச்
நடிகை வைபவி உபாத்யாய் கார் விபத்தில் பலி
இந்தி மொழியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர், சாராபாய் vs.சாராபாய். இந்த தொடர் 2011ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை வெற்றிகர
கழிவறையில் விழுந்து இளம் நடிகர் சாவு
ட்விஸ்ட்டுகள், சர்ச்சைகள், சண்டைகள் என பரபரவென கடக்கும் Splits Villa நிகழ்ச்சியின் 9 ஆவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலிவுட் நடிகர் ஆதித்யா சி
நடிகர் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது
சரத்பாபு 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணம் செய்தவர். 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய வ
Ads
 ·   · 656 news
  •  · 16 friends
  • S

    24 followers

தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் தெரிவித்தார்.

தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் இன்றைய தினம் தெரிவித்தார்.


இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினான் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை அவர்களது காரியாலயத்தில் இன்று சந்தித்தார்.


இந்த சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களால் தமிழர்கள் தற்போது அரச இயந்திரங்களால் நசுக்கப்படும் முறை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.


தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வதற்கு இப்போது இருக்கும் அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி தடைகள் விதிப்பது தொடர்பாகவும் அதனை மீறி நினைவேந்தல்கள் இடம்பெற்றால் புலனாய்வாளர்கள் மூலமாக நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்துவது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டதுடன் இதேவேளை அரசாங்கம் பாரிய விழாக்களை எந்தவித தடைகளும் இன்றி நடாத்துவது குறித்தும் சுட்டிக்காட்டினார்.


அத்துடன் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாலும் தமிழ் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் உள்ள பின்னடைவாலும் இலங்கையில் வட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.


அத்துடன் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பாகவும் தமிழர்களின் பூர்விக அடையாளங்களை அழித்து பௌத்த சிங்கள அடையாளங்களை திணிப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.



இதேவேளை மாகாண சபைகளினுடைய அதிகாரத்திற்குள் இருக்கின்ற பாடசாலைகள், வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றது. அத்துடன் வெளியில் காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் போது இருக்கின்ற அதிகாரத்தினையும் இலங்கை அரசு மாகாணங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள் எனவும் இதுவரை மாகாண அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வடக்கு மாகணங்களில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் கட்டுப்பாடுகளை இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதுடன் மாகாண பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக ஆக்குவதன் ஊடாகவும் தமிழர்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது எனவும் கனேடியத் தூதுவருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன்,


கனேடிய தேசிய விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கும் ஜெனிவா தீர்மானங்களில் கனடிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் ஒத்துழைப்புகளுக்கும் கனேடிய அரசிற்கும் நன்றி தெரிவித்தார்.


கனடிய அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் பக்கசார்பு இன்றியும் தொடர்ந்தும் ஜெனிவா தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம் எனவும் கனடிய தூதுவர் Decide Mckinnon இன் உறுதிமொழியோடு கலந்துரையாடல் சுமுகமாக முடிந்தது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 631
  • More
Comments (0)
    Info
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads