சினிமா செய்திகள்
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ
கைதி படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தன மூலம் ரசிகர்கள் மனதில் அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அ
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நீர்வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பெருந் தொகையினை சரியான முறையில் பயன்படுத்தி பயனாளர்கள் தங்களுடைய வாழ்வை வளப்படுத்திக் கொள்வதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பங்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நீர்வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பெருந் தொகையினை சரியான முறையில் பயன்படுத்தி பயனாளர்கள் தங்களுடைய வாழ்வை வளப்படுத்திக் கொள்வதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு செய்ய முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.வடக்கு மாகாணத்தில் கடலட்டை வளர்ப்பு, கடல் பாசி செய்கை மற்றும் கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்புகின்ற தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்து பயனாளர்களுக்கு ஆரம்ப முதலீடுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாகவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.கடற்றொழில் அமைச்சின் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்தத் திட்டங்களிற்காக களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பிரிவினால் சுமார் 11 கோடி 65 லட்சம் ரூபாய்களும் சமுர்த்தித் திட்டத்தின் ஊடாக சுமார் 2 கோடி 90 லட்சம் ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.அதனடிப்படையில், களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவினரால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வடக்கு மாகாணத்தில் கடல் பாசி செய்கை மேற்கொள்வதற்காக 100 பயனாளர்களும் கலட்டை வளர்ப்பிற்காக 100 பயனாளர்களும் கொடுவா மீன் வளர்ப்பிற்காக 50 பயனாளர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.அதனைவிட தெரிவு செய்யபட்ட நன்னீர் நிலைகளில் இறால் மற்றும் மீன் குஞ்சுகளை விடுவதன் மூலம் அந்தந்தப் பிரதேச மக்களுக்க வாழ்வதாரத்தினை எற்படுத்தல் போன்ற சுமார் 7 வேலைத் திட்டங்கள் திட்டமிடப்பட்டு அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதேபோன்று சமுர்த்தித் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி கடல் பாசி செய்வதற்கு 115 பயனாளர்களும் கொடுவா மீன் வளர்ப்பிற்கு 60 பயனாளர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.குறித்த இரண்டு திட்டங்களிற்காகவும் தெரிவு செய்யப்படுகின்ற பயனாளர்களுக்கு கடல் பாசி வளர்ப்பிற்கு தலா ஒரு இலட்சம் ரூபாய்களும் கொடுவா மீன் வளர்ப்பிற்காக தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்களும் கடலட்டை வளப்பிற்காக தலா 5 இலட்சம் ரூபாய்களும் வழங்கப்படவுள்ளன.குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பயனாளர்கள் தெரிவுகள் ஆரம்பிக்கபட்டுள்ள நிலையில், திட்டங்கள் தொடர்பாக பயனாளர்களுக்கு தெளிவுபடுத்தி, இந்த நிதியுதவியைப் ஆரம்ப முதலீடுகளாகக் கொண்டு நீடித்த பொருளாதார நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பயனாளர்கள் தொடர்ச்சியாக வழிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 648
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads