சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  663 news
  •  ·  15 friends
  • S

    23 followers

தேனி அருகே மனைவியை கொன்று நாடகமாடிய ராணுவ வீரர் கைது..!

தேனி பாரஸ்ட் ரோடு 12-வது தெருவைச் சேர்ந்த சிவக்குமார் மகன் ஈஸ்வரன்(வயது 26). ராணுவ வீரரான இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த செல்வம் மகள் கிரிஜா பாண்டி (24) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமான ஒரே வருடத்தில் கிரிஜா பாண்டி தனது கணவர் ஈஸ்வரன் மீது உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பிறகு சென்னை ரெஜிமெண்ட் ராணுவ படையில் பணிபுரிந்து வந்த ஈஸ்வரன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு கணவன்-மனைவியை சமாதானம் செய்த இரு குடும்பத்தினரும் தேனியில் சேர்ந்து வாழுமாறு கூறியுள்ளனர்.

அதன் பிறகு அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இனிமேல் உனது குடும்பத்தினரை பார்க்க கூடாது என்று கிரிஜா பாண்டியிடம் ஈஸ்வரன் கூறியுள்ளார். அதன் பிறகு இருவரும் வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டனர்.

தனது மகளிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்காததால் சந்தேகமடைந்த செல்வம் தேனிக்கு வந்து விசாரித்துள்ளார். ஆனால் அவர்கள் எங்கு இருக்கின்றனர்? என்பதே தெரியாமல் இருந்துள்ளது. இது குறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் அளித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஈஸ்வரன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்கவே அங்கு சென்று அவரை தேனிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதியன்று தனக்கும் தனது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்து அவரை தாக்கியதால் இறந்து விட்டார் என்றும் போலீசிடம் தெரிவித்தார்.

அதன் பிறகு பழனி போலீஸ் பட்டாலியனில் பணிபுரிந்து வரும் தனது சகோதரரான சின்ன ஈஸ்வரனுடன் சேர்ந்து கிரிஜா பாண்டியின் உடலை சாக்கு பையில் போட்டு முல்லை பெரியாற்றில் வீசி விட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஈஸ்வரனை போலீசார் கைது செய்து தனது மனைவியின் உடலை வீசிய இடத்தை அடையாளம் காட்டுமாறு கூறினர். அவர் அடையாளம் காட்டிய இடத்தில் அன்றைய தினம் ஏதேனும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதா? என்று தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாரிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் 2 வருடத்துக்கு பிறகு கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த சின்ன ஈஸ்வரனையும் தேனிக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  • 482
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads