சினிமா செய்திகள்
அஜித்குமாரின் விடாமுயற்சி முழுத் திரைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது.
அஜித்குமாரின் சமீபத்திய படம் விடாமுயற்சி பைரசிக்கு இரையாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில், முழு திரைப்படமும் பல திருட்டு வலைத்தளங்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
Ads
 ·   ·  2516 news
  •  ·  1 friends
  • 1 followers

முதல் 10 ஓவர்கள் முடிவில் அரசாங்கத்தின் முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டன - சம்பிக்க ரணவக்க

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாட வந்துள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறினாலும், முதல் 10 ஓவர்கள் முடிவில், அரசாங்கத்தின் பல விக்கெட்டுகள் விழுந்துவிட்டதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு - வெள்ளவத்தை மயூரபதி ஆலயத்தில் நேற்று (14) காலை நடைபெற்ற தைப்பொங்கல் சிறப்பு மத வழிபாடுகளில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்- இன்று எரிபொருள் கட்டணங்கள், மின்சாரக் கட்டணங்கள் அல்லது அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எதுவாக இருந்தாலும், இவை எதுவும் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை காணமுடிகின்றது.

“நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாடுகிறோம்” என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார். முதல் பத்து ஓவர்கள் இப்போது முடிந்துவிட்டன. பல விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருப்பதையும் நாமும் காண முடிகின்றது

தான் சொன்னதை நிரூபிக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ முடியாத மிகவும் உதவியற்ற நிலையில் ஜனாதிபதி இருப்பதை நாம் காண்கிறோம். பிரதமர் மிகவும் உதவியற்ற சூழ்நிலையில் சிக்கியிருப்பது போல் தெரிகிறது.

மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மீண்டும் நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். பொதுப் பயன்பாட்டு ஆணையம் இந்த அரசாங்கத்தின் மீது வலுவான செல்வாக்கைச் செலுத்தி மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஆனால் அரசாங்கம் விலையை குறைக்கத் தயாராக இல்லை. வாகன இறக்குமதியிலிருந்து 280 பில்லியன் வரிகளை வசூலிக்க சுங்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களிடமிருந்தே பெறப்படவுள்ளது.

தேர்தலுக்கு முன்பு அவர்கள் சொன்ன எல்லா விடயங்களுக்கும் பின்னரும் நாட்டில் மருந்து பற்றாக்குறை நீடிக்கின்றது. மருத்துவ மோசடி மீண்டும் நடக்கிறது. டெஸ்ட் போட்டியின் முதல் பத்து ஓவர்கள் விளையாடப்பட்டுவிட்டன.

எவ்வாறாயினும், சரியான நேரம் வரும் போது நாட்டு மக்கள் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள். எனவே பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

உணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டன, இளைஞர்களுக்கான மோட்டார் சைக்கிள் கனவுகளை நனவாக்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டன.

மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதற்கும், வசூலிக்கப்படும் எரிபொருள் வரியை குறைப்பதற்கும் உறுதியளித்தனர். இவை எங்களுக்கு நன்றாக நினைவில் உள்ளன” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

000

  • 376
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads