சினிமா செய்திகள்
அஜித்குமாரின் விடாமுயற்சி முழுத் திரைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது.
அஜித்குமாரின் சமீபத்திய படம் விடாமுயற்சி பைரசிக்கு இரையாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில், முழு திரைப்படமும் பல திருட்டு வலைத்தளங்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
Ads
 ·   ·  2516 news
  •  ·  1 friends
  • 1 followers

எட்கா இலங்கைக்கு மிகவும் அவசியமானது - முன்னாள் அமைச்சர் ராஜித வலியுறுத்து

இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையானது இலங்கைக்கு மிக அவசியமானது. அரசாங்கம் இந்தியாவுடன் அந்த உடன்படிக்கையில் நிச்சயமாக கைச்சாத்திட வேண்டும். அது இரண்டு நாடுகளுக்கும் பாரிய பொருளாதார நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் என்று முன்னாள் அமைச்சர்  ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எட்கா உடன்படிக்கை விவகாரம் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கின்றது. அண்மையில் இந்தியாவுக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது எட்கா உடன்படிக்கை தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் தெரிவித்திருந்தனர்.

அந்த அடிப்படையில் விரைவில் இது தொடர்பான பேச்சுக்கள் விரிவாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், எட்கா உடன்படிக்கை தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களும் அரசியல் தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எட்கா உடன்படிக்கையானது 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்திலிருந்து பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொள்வதின் ஊடாகவே இலங்கைக்கு பொருளாதார ரீதியில் அபிவிருத்தியை நோக்கி நகர முடியும். இலங்கைக்கு ஒரு சில நாடுகளுடன் மட்டுமே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை காணப்படுகிறது.

பல வருடங்களுக்கு முன்னர் மிகவும் கீழ் மட்டத்தில் காணப்பட்ட வியட்நாம் இன்று பொருளாதார ரீதியாக பாரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதற்கு அந்த நாடு பல்வேறு நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொண்டமையே முக்கிய காரணமாக இருக்கிறது.

எனவே இலங்கையும் தயங்காமல் சர்வதேச நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொள்ள வேண்டும். அதில் சாதக பாதகத் தன்மை காணப்படும். அவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அவற்றை கைச்சாத்திட்டால் மட்டுமே பொருளாதார ரீதியாக இலங்கை முன்னேற முடியும் என்பது எங்களது நிலைப்பாடாகும் என்றார்.

இதேவேளை எட்கா உடன்படிக்கை தொடர்பில் அண்மையில் ஊடகமொன்றுக்கு கருத்து கூறிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் அது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கடந்த வாரம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பொதுஜன பெரமுனவின் எம்.பி. நாமல் ராஜபக்ஷ இந்த உடன்படிக்கை தொடர்பில் இரண்டு தரப்பிலும் பரந்துபட்ட ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். அது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நல்லது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் உடன்படிக்கை தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் எப்போது ஆரம்பமாகும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதே உண்மை என்றும்  

000

  • 490
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads