- · 1 friends
-
2 followers
யாரிடமும் சொல்ல முடியாத விஷயம்
கனேடிய தயாரிப்புகள் என மக்களை நம்பவைத்த நிறுவனம் ஒன்றிற்கு 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக மிரட்டியதும், கனடா மீது கூடுதல் வரிகள் விதித்ததும் கனேடியர்கள் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, அமெரிக்காவைப் புறக்கணிக்கும் பல்வேறு விடயங்களைச் செய்து, அதன் மூலம் ட்ரம்புக்கு சவால் விட நினைக்கிறார்கள் கனேடியர்கள்.
அமெரிக்கத் தயாரிப்புகளை புறக்கணிப்பதன் மூலம், வேறு வகையில் கூறினால், உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் தங்கள் நாட்டுப்பற்றை காட்ட விரும்புகிறார்கள் பலர்.
விடயம் என்னவென்றால், உள்நாட்டு தயாரிப்புகள் என மக்கள் கருதும் பல தயாரிப்புகள் உண்மையில் அமெரிக்க தயாரிப்புகள் என தெரியவந்துள்ளது.
குறிப்பாக, Betty Crocker’s chocolate chip cookie mix என்னும் தயாரிப்பில், ’Canada's #1 Selling Baking Mix Brand’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, Habitant pea soup என்னும் உணவின் டின் மீது ’Designed in Canada’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், McCain Super Spirals french fries என்னும் உணவுப்பொருளின் லோகோவில், maple இலையின் படமும், ’Proud Canadian Company’ என்னும் சொற்களும் இடம்பெற்றுள்ளன.
விடயம் என்னவென்றால், இந்த தயாரிப்புகளை திருப்பி பின்பக்கம் பார்த்தால், அவற்றில், ’Product of USA’, அதாவது, முன்பக்கம் பார்த்தால் கனேடிய தயாரிப்புகள் போல் தோன்றும் இந்த உணவுபொருட்களின் கவர் அல்லது டின்களின் பின்பக்கத்திலோ, அமெரிக்க தயாரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் செய்யும் இந்த விடயம், தங்களை ஏமாற்றுவது போல் உள்ளதாக வருத்தம் தெரிவித்திருந்தார்கள் கனேடியர்கள் பலர்.
கனேடிய தயாரிப்பு என மக்களை தவறாக வழிநடத்தும் விதத்தில் விளம்பரம் செய்திருந்த Real Canadian Superstore என்னும் நிறுவனத்துக்கு கனடா உணவு கண்காணிப்பு ஏஜன்சி அபராதம் விதித்துள்ளது.
Image Courtesy: The Canadian Press
கியூபாவில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, கனேடிய விமான நிறுவனங்களின் கடைசி விமானங்களும் கியூபாவை விட்டு வெளியேறியுள்ளதாக கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கியூபாவிலிருந்து இதுவரை சுமார் 27,900 க்கும் மேற்பட்ட கனேடியப் பயணிகள் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அனிதா ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
கியூபாவில் நிலவும் எரிபொருள், மின்சாரம், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் காரணமாக, அந்நாட்டிற்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடா தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏயார் கனடா, வெஸ்ட்ஜெட் மற்றும் ஏயார் ட்ரான்சாட் ஆகிய முக்கிய நிறுவனங்கள் கியூபாவிற்கான தமது சேவைகளை காலவரையறையின்றி நிறுத்தியுள்ளன. கியூப விமான நிலையங்களில் எரிபொருள் கிடைப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மையே இதற்குக் காரணமாகும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கியூபாவிற்கு எரிபொருள் வழங்கும் நாடுகளுக்கு எதிராக வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தியுள்ளமை, இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஜனவரி மாத தொடக்கத்தில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கியூபாவிற்கான எண்ணெய் விநியோகம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கியூபாவில் இன்னும் சுமார் 7,000 க்கும் மேற்பட்ட கனேடியர்கள் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டொராண்டோ பெரும்பாக பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு உருகுதல் மற்றும் வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படும் மழை காரணமாக நீர்நிலைகளின் அருகே அபாய நிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கப்படவில்லை.
எனினும், மொத்த மழைவீழ்ச்சி, அதிகரித்த வெப்பநிலை மற்றும் பனி உருகுதல் ஆகியவற்றின் இணைப்பால் அனைத்து ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து, நீரோட்டம் வழக்கத்தை விட வேகமாகும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்த காலநிலை மாற்றத்தால் நீர்மட்டம் திடீரென மாறக்கூடும். வேகமான மற்றும் பலமான நீரோட்டம், நிலைகுலைந்த ஆற்றங்கரைகள் மற்றும் பாதுகாப்பற்ற பனிப்படலம் ஆகியவை மக்களுக்கு ஆபத்தாக இருக்கும்” எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேசிய வானிலை அமைப்பான Environment Canada தெரிவித்ததாவது, டொராண்டோவில் வெள்ளிக்கிழமை 10 முதல் 15 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் அதேநேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 4°C வரை உயரக்கூடும் எனவும் கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது இந்த பருவத்திற்கு வழக்கத்தை விட சுமார் 3°C அதிகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. சனிக்கிழமையும் 4°C வரை வெப்பநிலை காணப்படும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை 0°C என்ற இயல்பான நிலைக்கு மீண்டும் திரும்பும் என முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
டொராண்டோ துறைமுகப் பகுதிக்குச் செல்லும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தேவையற்ற சாகசங்களைத் தவிர்த்து, ஆறுகள், குளங்கள் மற்றும் துறைமுகப் பகுதிகளின் அருகே செல்லாமல் இருப்பது பாதுகாப்பிற்காக அவசியம் என அதிகாரிகள், வலியுறுத்தியுள்ளனர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கடன் தொடர்பான விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் பொறுமை வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
கௌரவப் பொறுப்புகள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். வாகன மாற்ற முயற்சிகள் கைகூடும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பேச்சில் நிதானமும் கவனமும் வேண்டும். கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். எதிர்பார்த்த சில பயணங்களில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். குழந்தைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உறவினர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
சிம்மம்
ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய தொடர்பான பேச்சுக்கள் கைகூடுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பொருளாதாரம் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி
மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். செய்கின்ற பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
துலாம்
குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். முக்கியமான சிலருடைய மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். மனதளவில் புது விதமான எண்ணங்கள் உருவாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாகன வசதிகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.
மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விருச்சிகம்
பேச்சுத் திறமைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து செயல்படவும். அரசு துறைகளில் நெருக்கடிகள் குறையும். கால்நடைகள் மீது ஆர்வம் உண்டாகும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கல்வி சார்ந்த பயணங்கள் கைகூடும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
புதுவிதமான பயணங்கள் மேற்கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். கல்வி பணிகளில் ஆர்வம் உண்டாகும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
மனதளவில் ஒருவிதமான சோர்வுகள் வந்து நீங்கும். உடன் இருப்பவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் இருக்கவும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். அசைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வீடு மாற்றப்படும் சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் ஈர்ப்புகள் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். இன்னல்கள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விசுவாவசு வருடம் மாசி மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை 21.2.2026.
இன்று அதிகாலை 04.32 வரை தைத்தூலம். பின்னர் மாலை 03.53 வரை கரசை. பிறகு வனிசை .
இன்று பிற்பகல் 02.12 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று இரவு 08.15 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.
இன்று மாலை 04.58 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.
இன்று அதிகாலை 03.02 வரை வனிசை. பின்னர் பிற்பகல் 03.12 வரை பத்தரை. பிறகு பவம் .
இன்று காலை 05.31 வரை அமிர்த யோகம். பின்பு இரவு 08.15 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
டாலிவுட் நட்சத்திரங்களான ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. வழக்கமான பிரபலங்களின் ஆடம்பரத் திருமணங்களைப் போலல்லாமல், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நம்பகமான நண்பர்களுக்கு மட்டுமே இந்த விழாவில் அனுமதி.
தகவல்களின்படி, உதய்பூரில் உள்ள ஒரு பெரிய ஆனால் ஒதுக்குப்புறமான இடத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் ரகசியமாக கையாளப்பட்டுள்ளன. முழு விவரங்களும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் என்று கூறப்படுகிறது, இது சமீப காலங்களில் மிகவும் பாதுகாக்கப்படும் பிரபலங்களின் திருமணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த ஜோடியின் நோக்கம் தெளிவாக உள்ளது - சமூக ஊடகங்களின் பரபரப்பிலிருந்து விலகி, தங்கள் சிறப்பு நாளை அமைதியாகக் கொண்டாடுவது.
சர்வதேச பாதுகாப்பு ஏஜென்சியின் ஈடுபாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிகபட்ச தனியுரிமையை உறுதி செய்வதற்கும், எந்த தகவலும் கசிவதைத் தடுப்பதற்கும், இந்த ஜோடி ஒரு சிறப்பு வெளிநாட்டுப் பாதுகாப்புக் குழுவை ஏற்பாடுகளை மேற்பார்வையிட நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குழு, உள்ளூர் ராஜஸ்தான் அதிகாரிகளுடன் இணைந்து, திருமண இடத்தை பாதுகாத்து, விருந்தினர்களின் வருகையை நிர்வகிக்கும். தேவையற்ற ஊடுருவல்களைத் தவிர்க்க பாதுகாப்பான எல்லையை உருவாக்குவதே இதன் நோக்கம்.
திட்டமிடல் மிகவும் நுணுக்கமாக இருந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அழைப்பிதழ்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன, மேலும் தம்பதியினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை அமைதியாக இருக்குமாறு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழில், 180, மாலினி 22 பாளையங்கோட்டை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர், நித்யா மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.
‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற அவர், இப்போது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இவர், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘கியூரி புரொடக் ஷன்’ என்று பெயர் வைத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘அண்டர் 18’ பட அறிவிப்பை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.
ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் நடிக்கும் புதிய படத்துக்கு ‘அண்டர் 18’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள்சாமி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பை வெற்றிமாறன் வெளியிட்டார்.
க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதுகின்றனர். இப்படத்தை எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெகதீஸ் தயாரிக்க உள்ளார்.
கனடாவின் ஒட்டாவாவில் இடம்பெற்ற கத்தி குத்திக்கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரைடியு நிலைய வணிக வளாகத்துக்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைப்பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருகிறது. காயமடைந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித அச்சமும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாண்டின் நான்காவது கொலைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் Rideau Centre அருகே இடம்பெற்ற இரண்டாவது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமாகவும் இது குறிப்பிடப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அதே பகுதியில் மேலும் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி காயமடைந்திருந்தார்.




