- · 1 friends
-
2 followers
யாரிடமும் சொல்ல முடியாத விஷயம்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பல பகுதிகளில் 60 செ.மீ.க்கும் அதிகமான பனிப்பொழிவு ஏற்படும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் முன்னறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, இன்று பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகள், நிர்வாகக் கட்டடங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களை மூடுவதாக டொரண்டோ மாவட்ட பாடசாலை சபை அறிவித்துள்ளது.
திங்கள்கிழமை நடைபெற இருந்த உயர்நிலைப் பரீட்சைகள் இந்த வாரத்தின் பிற்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
டொரண்டோ கத்தோலிக்க பாடசாலை சபையும் அனைத்து பாடசாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. பாடசாலை பேருந்து சேவைகள், குழந்தை பராமரிப்பு, பள்ளிக்கு முன்–பின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமை நடைபெற இருந்த பரீட்சைகள் ஜனவரி 29க்கு மாற்றப்பட்டுள்ளன.
ஸெயிண்ட் மைக்கேல்ஸ் கல்லூரி மற்றும் மேபின் பாடசாலை (தனியார் தொடக்கப் பள்ளி) திங்கள்கிழமை முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யோர்க், டர்ஹாம், டஃபரின்–பீல், ஹால்டன், ஹாமில்டன், நயாகரா, பகுதிகளில் இயங்கி வரும் பாடசாலைகளும் பிரெஞ்சு மொழிப் பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7. கோயில் மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம்.
1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் திருவார்புவில்இக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருக்கிறார். எனவே 23.58 மணி நேரமும், 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும். கோயில்
2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது. 11.58 மணி முதல் 12 மணி வரை.
இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும்
கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப்படுகிறது.
கிருஷ்ணா பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால், ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால், கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார்.
அந்த நிலையில் இருந்த கிருஷ்ணரே இக்கோவில் மூலவர் சிலை என்று மக்கள் நம்புகின்றனர்.
அபிஷேகம் முடிந்தபின்,மூலவரின் தலையை முதலில்உலர்த்தியபின், நைவேத்தியம் அவருக்குப் படைக்கப்படும், பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.
இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்கமாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள்.
ஒருமுறை, கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது, ஆண்டவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள்.
அந்த சமயத்தில் வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார்.
அப்போதிருந்து, கிரகணத்தின் போதும் அக்கோவில் மூடப்படுவதில்லை.
கிருஷ்ணர் தூங்கும் நேரம் தினமும் 11.58 மணி முதல் 12 மணி வரை. 2 நிமிடங்கள் மட்டுமே.
பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. தினமும் 11.58 மணி (ஆலயத்தை மூடுவதற்கு முன்பு) பூசாரி சத்தமாக "இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?" என அழைப்பார்.
பிரசாதம் வழங்குகளில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும்.
மற்றொரு முக்கிய விஷயம், நீங்கள் பிரசாதம் சுவைத்தால், நீங்கள் அதன் பிறகு பசியால் வாட மாட்டீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப்பிரச்சனை இருக்காதாம்.
கோவிலின் முகவரி,
திருவார்பு கிருஷ்ணா கோயில், திருவார்பு, -686020
கோட்டையம் மாவட்டம், கேரள மாநிலம்.
கோவில் திறப்பு நேரம் நள்ளிரவு 12.00 மணி முதல் நள்ளிரவு 11.58 மணி வரை.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தனம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். வஞ்சனையான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாத திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
ரிஷபம்
தம்பதிகளுக்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். பயணங்களால் விரயங்கள் உண்டாகும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். சொத்து சார்ந்த செயல்களில் நிதானம் வேண்டும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்களால் நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். நினைத்த சில பணிகளில் போராட்டங்கள் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
மிதுனம்
உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். விவசாய பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். புதுவிதமான அணிகளின் மீது ஈர்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் உண்டாகும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். விவசாய துறைகளில் மேன்மை ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணியதை முடிப்பீர்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். வெளி வட்டாரங்களில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். எதிர்பாரத சில பொறுப்புகளால் நெருக்கடிகள் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் நிதானம் வேண்டும். உறுதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
துலாம்
நண்பர்களின் சந்திப்புகள் மகிழ்ச்சியை தரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் நினைவாற்றல் மேம்படும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
தந்தையிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பு மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகரம்
வாகன பயணங்களில் கவனம் வேண்டும். வங்கிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சமூக பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். வியாபார பணிகளில் கவனம் வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். பணி நிமித்தமான அலைச்சல் மேம்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் வரவுகள் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மீனம்
உணவு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் ஏற்படும். மனை விற்பனையில் லாபம் ஏற்படும். பந்தய விஷயங்களில் கவனம் வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விசுவாவசு வருடம் தை மாதம் 12 ஆம் தேதி திங்கட்கிழமை 26.1.2026.
இன்று இரவு 07.11 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று காலை 10.50 வரை அஸ்வினி. பின்னர் பரணி.
இன்று காலை 09.40 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று காலை 08.15 வரை பத்தரை. பின்னர் இரவு 07.11 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.00 முதல் 07.00 மணி வரை
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
பளிங்கு சிலை போல சினிமாத்துறையில் அறிமுகமான நடிகை கிரண், 'யாதீன்' என்கிற இந்தி படத்தில் முதன் முதலாக நடித்தார். அந்த படத்திற்கு பின் தமிழுக்கு வந்த இவர், சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் அன்பே சிவம், வின்னர், வில்லன் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்பு குறைய, திருமலை படத்தில் வாடியம்மா ஜெக்கம்மா பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
நடிகை கிரண் அதன் பின் 'நியூ' படத்தில் எஸ்.ஜேசூர்யாவுடன் பல விவகாரமான காட்சியில் நடித்தார். அந்த படத்திற்கு பின் மொத்தமாக காணாமல் போன கிரண், வருமானத்திற்கு வழியில்லாததால், இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். எனக்கு யாரும் நடிக் வாய்ப்பு கொடுக்கவில்லை, பட வாய்ப்பு கேட்டால், அட்ஜெஸ்ட்மென்டுக்கு அழைக்கிறார்கள் என கிரண் வெளிப்படையாகவே பேட்டி ஒன்றில் கூறினார். இதையடுத்து, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவரால் தாக்குபிடிக்க முடியாமல் போன வேகத்திலேயே வந்துவிட்டார். வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த கிரணுக்கு வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் 'சிவராத்திரி' பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
அந்த படத்திற்கு பிறகு கிரண் தனக்கு எதாவது படவாய்ப்பு வரும் என எதிர்பார்த்தார். ஆனால், எதுவும் வராததால், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோவை ஷேர் வெளியிடுவதை வேலையாக வைத்து இருக்கிறார். தற்போது இவர், மிகவும் கவர்ச்சியாக இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். சிலர் அந்த போட்டோவிற்கு லைக்குகளை போட்டாலும் சிலர், அவர் கண்டபடி திட்டி வருகின்றனர்.
வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளராக நடிகை பாவனா போட்டியிடப் போவதாக வெளியான செய்திகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இந்த வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டன, சில ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தன. தற்போது, தனது புதிய படமான 'அனோமி' வெளியீட்டிற்கு முன்னதாக, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாவனா இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது பாவனா, கதாநாயகியாக நடித்து, இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கும் 'அனோமி' திரைப்படம் ஜனவரி 30 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். மரத் எழுதி இயக்கியுள்ளார். 'அனோமி' பாவனாவின் திரையுலகப் பயணத்தில் 90வது படமாகும். மர்ம, த்ரில்லர் படத்தில் பாவனா, தடயவியல் ஆய்வாளர் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் ரஹ்மான், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன், மற்றும் த்ரிஷ்யா ரகுநாத் ஆகியோர் நடித்துள்ளனர்.
சிரிப்புதான் வருது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் முன் செய்தியாளர்களிடம் பேசினார் பாவனா, அப்போது செய்தியாளர் ஒருவர், கேரள சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடப்போவதாக பரவும் செய்து பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பாவனா, நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை. இப்படி ஒரு செய்தி எப்படி வெளிவந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இதில், துளியும் உண்மையில்லை. அந்த செய்தியைப் பார்த்தபோது எனக்குச் சிரிப்புதான் வந்தது. அது ஒரு பெரிய நகைச்சுவை என்று பாவனா கூறியுள்ளார். நடிகை பாவனா கடந்த 2013ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் கனடா பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவிற்குள் பொருட்கள் அனுப்ப சீனாவிற்கு கனடாவை ஒரு 'டிராப் ஆப் போர்ட்' ஆக மாற்றப் போகிறேன் என்று கவர்னர் மார்க் கார்னி நினைத்தால், அவர் மிகவும் தவறாக நினைக்கிறார்.
சீனா கனடாவை உயிருடன் சாப்பிடும், அதை முற்றிலுமாக விழுங்கும். அவர்களின் வணிகங்கள், சமூக கட்டமைப்பு மற்றும் பொது வாழ்க்கை முறை ஆகியவற்றை அழிக்க நினைக்கிறது.
சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனடா பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கும் உடனடியாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும். இவ்வாறு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக இருக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் ஜனாதிபதி ட்ரம்ப் கூறி வந்தார். தற்போது கனடா பிரதமர் மார்க் கார்னியைகவர்னர் என ட்ரம்ப் விமர்சனம் செய்து உள்ளார்.
கடந்த காலத்தில் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவையும் கவர்னர் என குறிப்பிட்டு டிரம்ப் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பழைய முதலீடுகளால் சில சஞ்சலங்கள் ஏற்படும். போட்டி விஷயங்களில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். நினைத்த சில பணிகளால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆர்வம் இன்மை ஏற்படும். மனதளவில் பற்றற்ற தன்மை ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
ரிஷபம்
குழந்தைகளின் உணர்வுகளை அறிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்களால் நெருக்கடிகள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மிதுனம்
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கைகூடும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் புதிய கண்ணோட்டமும் பிறப்பும். வியாபார தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். வரவுகளில் சற்று கவனம் வேண்டும். அனுபவமான பேச்சுக்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபங்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பான சூழல்கள் அமையும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
கன்னி
எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோக ரீதியாக அலைச்சல்கள் மேம்படும். அரசு வகையில் அனுசரித்து செல்லவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ளவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
உயர் அதிகாரிகளால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்த தன்மை குறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விருச்சிகம்
கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். தியானம் மற்றும் மன ஒருமைப்பாட்டு செயல்களில் ஆர்வம் ஏற்படும். எடுத்த காரியம் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உருவாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
தனுசு
பொழுது போக்கான செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். கடன் செயல்களில் பொறுமை காக்கவும். தந்தை வழியில் இருந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். மாமன் உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். நுட்பமான செயல்களையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். பூர்விக சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மகரம்
புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். வரவுகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதளவில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கும்பம்
வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். கருத்துக்களுக்கு மதிப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மீனம்
கணித துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். ஆடை ஆபரணம் சேர்க்கை சிலருக்கு சாதகமாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். அன்பு வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
விசுவாவசு வருடம் தை மாதம் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 25.1.2026,
இன்று இரவு 09.19 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று பிற்பகல் 12.11 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.
இன்று காலை 10.42 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.
இன்று காலை 10.30 வரை கரசை. பின்னர் இரவு 9.19 வரை வணிசை. பின்பு பத்தரை.
இன்று காலை 6 34 வரை மரணயோகம். பின்னர் பிற்பகல் 12.11 வரை அமிர்தயோகம். பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
அருண் பள்ளிச் சீருடை அணிந்து எனக்காக வாசலில் காத்திருந்தாள். நான் அவனை பள்ளியில் விட்டு விட்டு அலுவலகம் போக வேண்டும். அவசரம் அவசரமாக புறப்பட்டு கொண்டிருந்தேன்.
வழக்கமான பல்லவியை ஆரம்பித்தாள் என் மனைவி மீனா.
“அப்பாடி இந்த சின்ன வயசிலேயே இந்த பெண்ணுக்கு இந்த கர்வம் கூடாது” என்றாள்.
உடனே நான் “என்ன விஷயம்” என்று கேட்டேன்.
“எதிர் வீட்டு சுமி கான்வெண்டுக்கு காரிலேயே போகிறாள்.
நம் அருணையும் உங்கள் பழைய ஸ்கூட்டரையும் கேவலமாக பார்த்துக் கொண்டே போகிறாள் என்ன திமிர் அவளுக்கு” என்றாள்.
தினமும் தான் அருணை ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு செல்லும் போது எதிர் வீட்டு பெண் சுமி காரில் இருந்தே பார்க்கும். அன்று ஒரு விசேஷத்திற்காக என் மனைவி
மீனாவை ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டேன், என் மகன் உடல் நலம் சரியில்லாததால் பள்ளிக்கு போகவில்லை. அப்பொழுது “அங்கிள் அங்கிள் என்னை ஸ்கூல்ல டிராப் பண்ணுகிறீர்களா?
எங்கள் வீட்டு கார் ரிப்பேர். ரிக்க்ஷாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினாள் சுமி.
என் மனைவியின் முகம் சிறுத்தது. இருந்தாலும் நாள் சுமியை ஸ்கூட்டரில் முன் பக்கத்தில் ஏற்றிக் கொண்டு கிளம்பினேன்.
வழியெல்லாம் சுமி ஹாரனை அழுத்தி அந்த சந்தத்தை அனுபவித்துக் கொண்டு வந்தாள்.
திருப்பங்களில் கை காட்டி சைகை செய்து கொண்டு வந்தாள்.
பள்ளி வத்ததும் “தேங்ய்யூ அங்கிள்” என்று எனக்கு டாடா காண்பித்துவிட்டு தன் நண்பர்களை அழைத்து, “இன்று நான் அந்த அங்கிளுடன் ஸ்கூட்டரில் ஜாலியாக வந்தேன்” என்று குதூகலித்தாள்.
நானும், என் மனைவியும் மீனாவின் முகத்தை பார்த்தோம்.
உடனே மீனா “அடப்பாவமே ஸ்கூட்டரில் போக வேண்டும் என்று இந்தப் பெண் எவ்வளவு ஆசைப்பட்டிருக்கிறாள். அதனால் தான் நம் ஸ்கூட்டரை தினமும் பார்த்து கொண்டு சென்றாளா?
நான்தான் இவளை தவறாக நினைத்துக் கொண்டேன்” என்று கூறினாள்.
நான் அதற்கு “அடி பைத்தியமே! குழந்தைகள் குழந்தைகளாக தான் இருக்கிறார்கள். நாம் தான் மற்றவர்களைப் பார்த்து பொறாமை படுகிறோம்” என்று சொல்ல மனைவியும் அதை ஆமோதித்து தலை ஆட்டினாள்.
















