- · 1 friends
-
2 followers
யாரிடமும் சொல்ல முடியாத விஷயம்
கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), எதிர்வரும் மார்ச் 16-ஆம் திகதி பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்துப் பேசவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வ ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.
2025-இல் பதவியேற்றது முதல் ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதில் பிரதமர் கார்னி அதிக ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆர்க்டிக் பிராந்தியம் மற்றும் நேட்டோ (NATO) அமைப்பில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
பிரதமர் தனது பயணத்தை நோர்வேயில் தொடங்குகிறார். அங்கு ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே நடைபெறும் "கோல்ட் ரெஸ்பான்ஸ்" (Cold Response) என்ற நேட்டோவின் இராணுவப் பயிற்சியைப் பார்வையிடவுள்ளார்.
அத்துடன் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரைச் சந்தித்து வர்த்தகம், தூய்மையான எரிசக்தி மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
நோர்வேயைத் தொடர்ந்து லண்டன் செல்லும் பிரதமர், அங்கு பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மரைச் (Keir Starmer) சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்புத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளார்.
1. ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.
2. முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
3. தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.
4. பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.
5. துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.
6. வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.
7. உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.
8. நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணெயை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்
9. பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
10. முட்டையின் வெள்ளைகரு, தேன், மாதுளை ஜூஸ் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் முகத்தில் பூசிவிட்டு முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.
காலையில் எழுந்ததும் முதல் முதலில் நம் வயிற்றுக்கு செல்லும் இந்த டீ ஆனது நல்ல ஆரோக்கியமான ஒன்றாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்குத்தான் இந்த மஞ்சள் டீ. இதை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலுக்கு அத்தனை நன்மைகளும் ஆரோக்கியமும் கிடைக்கும். பொதுவாகவே மஞ்சள் ஒரு கிருமி நாசினி. உடலுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம். அது மட்டும் இல்லாமல் இதில் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் ஈ, விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, சிங்க் போன்று அத்தனை சத்துக்கள் அடங்கியுள்ளது.
இது மட்டுமில்லாமல் கேன்சரை உருவாக்கும் செல்களின் அளவை கூட இந்த மஞ்சள் குறைத்து விடும். இன்று வரைக்கும் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நோய்க்கு கூட வருவதற்கு முன் காக்கும் மருந்தாகவும், வந்த பின் அதன் தாக்கத்தை குறைக்கவும் இந்த மஞ்சள் பயன்படுகிறது என்றால் நீங்களே நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்: மஞ்சள் -1/2 டீஸ்பூன், மிளகு – 1/4 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, சீரகம் – 1/4 டீஸ்பூன், நெய் அல்லது வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து விடுங்கள். அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு டீ கப்பில் மஞ்சள், மிளகு, சீரகம், உப்பு, நெய் அல்லது வெண்ணெய் இவை அனைத்தும் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு அதில் நன்றாக கொதித்து கொண்டிருக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து ஊற்றியவுடன், ஒரு சிறிய தட்டு வைத்து அந்த டீ கப்பை மூடி விடுங்கள். ஒரு நிமிடம் கழித்து திறந்ததும் அதில் நாம் சேர்த்திருக்கும் அனைத்தும் பொருட்களும் கரைந்து உருகி இருக்கும். இப்போது ஒரு ஸ்பூன் கொண்டு அடியில் தங்கியிருக்கும் மிளகு, சீரகம் இது எல்லாம் நன்றாக கலக்கும் படி கலந்து விட்டு மிதமான சூட்டிலே இதைக் குடித்து விடுங்கள். ஆறிய பிறகு இதை குடிக்கக்கூடாது.
இதை தினமும் ஒரு முறையாவது குடித்து வந்தால் தொண்டை சார்ந்த எந்த பிரச்சினையும் உங்களை நெருங்காது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த மஞ்சள் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் அவர்கள் இதை தவிர்த்து விடலாம்.
பழமையான இந்திய இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். இந்த மகாகாவியம் மனித வாழ்க்கையின் பல நுணுக்கமான உண்மைகளை கதைகளின் மூலம் எடுத்துரைக்கிறது. அத்தகைய ஒரு ஆழமான வாழ்க்கைப் பாடத்தை உணர்த்தும் சம்பவம் சல்லியன் சம்பந்தப்பட்டதாகும்.
“அவசியமில்லாமல் பிறர் வீட்டில் சாப்பிடக்கூடாது” என்ற பழமொழி போன்ற வாழ்க்கை நெறி எவ்வாறு உருவானது என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.
சல்லியன் யார்?
மகாபாரதத்தில் வரும் வீரர்களில் ஒருவர் சல்லியன். இவர் மாத்ரா நாட்டின் மன்னன்.
அவருக்கு நகுலன் மற்றும் சகாதேவன் இருவரும் மருமகன்கள். ஏனெனில் பாண்டவர்களின் தந்தையான பாண்டு மன்னனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்:
குந்தி
மாத்ரி
குந்திக்கு பிறந்தவர்கள்:
தர்மர்
பீமன்
அர்ஜுனன்
மாத்ரிக்கு பிறந்தவர்கள்:
நகுலன்
சகாதேவன்
மாத்ரியின் சகோதரனாக இருந்ததால் சல்லியன் இவர்களின் தாய் மாமனாக விளங்கினார்.
சல்லியன் மிகுந்த வீரமும் திறமையும் கொண்டவன்.
வில்ல்வித்தையில் வல்லவன்
வாள் சண்டையில் வல்லவன்
தேரோட்டுவதிலும் அசாதாரண திறமை பெற்றவன்
ஆனால் அவனுக்கு ஒரு பெரிய பலவீனம் இருந்தது — பசி.
பசி வந்துவிட்டால் அவனால் எதையும் சிந்திக்க முடியாது. பசியை அடக்குவது அவனுக்குப் பெரிய சவாலாக இருந்தது.
துரியோதனன் செய்த திட்டம்
துரியோதனன் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் போர் நடக்கவிருக்கிறது என்பதை அறிந்திருந்தான்.
சல்லியன் தனது மருமகன்களான பாண்டவர்களுக்கு உதவப் பெரும் படைகளுடன் வருகிறார் என்ற செய்தி அவனுக்குக் கிடைத்தது.
அதை கேட்டதும் துரியோதனன் ஒரு சூழ்ச்சி செய்தான்.
சல்லியன் வரும் பாதையில்:
பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்டன
அறுசுவை உணவுகள் தயாரிக்கப்பட்டன
படைகளுக்கும் சல்லியனுக்கும் விருந்து அளிக்கப்பட்டது.
அந்த விருந்து மிகவும் சிறப்பாக இருந்தது.
பசியால் தவித்திருந்த சல்லியன் அந்த உணவை வயிறு நிறைய உண்டான்.
உணவு முடிந்ததும் சற்றுநேரம் இளைப்பாறியபடி அவன் சிந்தித்தான்:
“இவ்வளவு பெரிய விருந்தை அளித்தவர் யார்?
அவருக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?”
என்று அறியாமலே உரக்கச் சொன்னான்.
அந்த நேரத்தில் மறைந்து நின்றிருந்த துரியோதனன் முன் வந்து,
“மாமா! சௌக்கியமா?”
என்று கேட்டான்.
அப்போது தான் சல்லியனுக்கு உண்மை புரிந்தது.
“அடடா! இது துரியோதனன் ஏற்பாடு செய்த விருந்தா? தெரியாமல் சாப்பிட்டுவிட்டேனே!” என்று அவன் வருந்தினான்.
ஆனால் துரியோதனன் சிரித்தபடி கூறினான்:
“வரப்போகும் போரில் எனக்கு துணையாக நின்றால் போதும்.
அதுவே எனக்கு நீங்கள் செய்யும் கைமாறு.”
ஒருமுறை விருந்தை ஏற்றுக்கொண்ட பிறகு மறுப்பது தர்மத்திற்கு எதிராக இருக்கும் என்று நினைத்த சல்லியன் வேறு வழியின்றி கௌரவர்களின் தரப்பில் போரிட ஒப்புக்கொண்டான்.
இது தான் “செஞ்சோற்றுக் கடன்” என்று சொல்லப்படும் நிலை.
கிருஷ்ணன் செய்த இன்னொரு சூழ்ச்சி
போர் தொடங்கியபோது பல நாட்கள் கடுமையாக நடைபெற்றது.
ஒருநாள் போர்க்களத்தில் மீண்டும் சல்லியனுக்கு கடும் பசி ஏற்பட்டது.
அப்போது அருகில் இருந்து நெய் மணம் வீசும் சுவையான உணவின் வாசனை வந்தது.
அவன் அந்த வாசனையைப் பின்தொடர்ந்து ஒரு சமையல் கூடத்துக்குச் சென்றான்.
அங்கு பலவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தன.
பசி காரணமாக அவன் மீண்டும் வயிறு நிறைய சாப்பிட்டான்.
பிறகு அவன் எண்ணினான்:
“இவ்வளவு அற்புதமான உணவை செய்தவர் யார்? அவரை பாராட்ட வேண்டும்.”
என்று சமையல் கூடத்திற்குள் சென்றான்.
அங்கே என்ன ஆச்சரியம்!
முண்டாசு கட்டிக் கொண்டு கரண்டியுடன் சமையல் செய்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல —
கிருஷ்ணன்!
சல்லியன் மகிழ்ச்சியுடன் கூறினான்:
“இவ்வளவு சுவையான உணவை நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை.
உனக்கு நான் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும்.
என்ன வேண்டும் கேள்!”
அப்போது கிருஷ்ணன் சிரித்தபடி கூறினான்:
“நீ தேரை ஓட்டும்போது ஒரு சக்கரம் பள்ளத்தில் இறங்கினாலும், அதை ஒரு நொடியில் மீண்டும் மேலே ஏற்றி தேரை ஓட்டுவாயாம்.
அந்த வித்தையை எனக்கு சொல்லிக் கொடு.”
சல்லியன் எந்த சந்தேகமும் இல்லாமல் அந்த ரகசியத்தை கிருஷ்ணனுக்கு கற்றுக் கொடுத்தான்.
கர்ணன் – அர்ஜுனன் யுத்தம்
மகாபாரதப் போரின் 17-வது நாள் மிக முக்கியமானது.
அன்று கர்ணன் மற்றும் அர்ஜுனன் நேருக்கு நேர் மோதினர்.
கர்ணனின் தேரை ஓட்டியது சல்லியன்
அர்ஜுனனின் தேரை ஓட்டியது கிருஷ்ணன்
போர் கடுமையாக நடந்தது.
அர்ஜுனனின் அம்புகள் மழைபோல் பொழிந்தன.
அந்த நேரத்தில் கர்ணன் தனது சக்திவாய்ந்த நாகாஸ்திரத்தை அர்ஜுனனின் தலையை நோக்கி செலுத்தினான்.
அப்போது கிருஷ்ணன் சல்லியனிடமிருந்து கற்ற வித்தையை பயன்படுத்தினான்.
ஒரு நொடியில் தேரின் சக்கரத்தை பள்ளத்தில் இறக்கி அர்ஜுனனின் தலையை கீழே குனியச் செய்தான்.
அந்த அம்பு அர்ஜுனனின் தலையைத் தாக்காமல் தப்பித்து விட்டது.
இதனால் அர்ஜுனன் உயிர் பிழைத்தான்.
இந்தக் கதையின் வாழ்க்கைப் பாடம்
இந்த சம்பவம் நமக்கு ஒரு பெரிய உண்மையை உணர்த்துகிறது.
அதாவது:
தேவையில்லாமல் பிறர் வீட்டில் சாப்பிடக்கூடாது
சாப்பிட்டால் அது ஒரு கடனாக மாறிவிடும்
அந்தக் கடன் சில நேரங்களில் நம்மை விரும்பாத பாதைக்கு இழுத்துச் செல்லலாம்.
இதனால் தான் பழங்காலத்தில் ஒரு நல்ல பழக்கம் இருந்தது.
ஒருவர்:
மருமகன் வீட்டிற்கு
உறவினர் வீட்டிற்கு
சென்றாலும் வெறும் கையுடன் செல்ல மாட்டார்கள்.
அரிசி, காய்கறி, பழங்கள் போன்றவற்றை எடுத்துச் சென்று கொடுத்து விட்டு தான் அங்கு உணவு உண்ணுவார்கள்.
“வெறும் கையை வீசிக் கொண்டு போய் சாப்பிடக்கூடாது” என்ற நெறி இந்தப் பழமையான வாழ்க்கை அறிவிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். உங்கள் மீதானே நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். இறை சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். திடம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
ரிஷபம்
உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையை கடைபிடிக்கவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
அரசு சார்ந்த பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு புத்துணர்ச்சியும் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைபட்ட பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கைக்கான சிந்தனைகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
வியாபார பணிகளில் போட்டிகள் மேம்படும். தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வேள்வி பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
கன்னி
கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்கவும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடலில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
துலாம்
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். இசை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குறுகிய தூர பயணங்கள் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விருச்சிகம்
சுபகாரிய தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். பற்கள் சார்ந்த பிரச்சினைகள் குறையும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தனிப்பட்ட செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பொருளாதார தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன் பொருள் சேர்க்கை சேரும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
தனுசு
முன்கோபத்தால் தர்மசங்கடமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொது இடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மகரம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தொழில் நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். உடன் இருப்பவர்களால் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். வியாபார பணிகளில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
கும்பம்
உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபார செயல்களில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சூழல் அமையும். பழக்கவழக்கங்களில் புதுமையும் உருவாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
கல்வியில் இருந்த மந்த தன்மை குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் ஏற்படும். பயணங்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். மருத்துவ சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பரிசுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விசுவாவசு வருடம் மாசி மாதம் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 13.3.2026.
இன்று அதிகாலை 05.56 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று அதிகாலை 12.12 வரை மூலம். பின்னர் பூராடம்.
இன்று காலை 09.54 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.
இன்று அதிகாலை 05.56 வரை கரசை. பின்னர் மாலை 06.39 வரை வணிசை. பின்பு பத்திரை.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.00 முதல் 10.00 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணம், நார்த் சிட்னி பகுதியில் பாடசாலை பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.
ஆர்ச்சிபால்ட் அவென்யூ மற்றும் பிளசன்ட் ஸ்ட்ரீட் சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் காரை ஓட்டிச் சென்றவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 29 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். விபத்தைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சில மாணவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கனடாவின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre), வர்த்தகம் மற்றும் எரிசக்தி தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தைகளுக்காக இந்த வாரம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் விதிக்கப்படும் வரிகளை நீக்கி, தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்ய அவர் வலியுறுத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வட அமெரிக்காவின் ஒருங்கிணைந்த வாகனத் தொழில்துறையைப் பாதுகாப்பது குறித்து டெட்ராய்ட் (Detroit) பகுதியில் உள்ள வாகனத் துறைத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கனடாவின் எரிசக்தி வளங்களுக்கு அமெரிக்காவில் ஆதரவு திரட்டும் வகையில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் மற்றும் ஆஸ்டின் நகரங்களுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு மனநிறைவை தரும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ரிஷபம்: சில காரியங்களை முடிப்பதில் தடைகள் வந்து போகும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை கேட்டு செயல்படவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது வேலை அமையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
கடகம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல் இருக்கும். முன்கோபம் தவிர்ப்பீர். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் தேடி வருவர். கையில் பணம் புரளும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். அலுவலகரீதியாக இருந்து வந்த குழப்பங்கள் தீரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
கன்னி: பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். உடன் பிறந்தவர்களின் ஆதரவுண்டு. வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
துலாம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவுவர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
விருச்சிகம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
தனுசு: பழைய கடன், பகையை நினைத்து பயம் வரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் போராட்டம் இருக்கும்.
மகரம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு காரியம் விரைந்து முடியும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை விலகும். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
மீனம்: நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவர். பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்து பேசுவார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
விசுவாவசு வருடம் மாசி மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை 12.3.2026
இன்று அதிகாலை 04.05 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று முழுவதும் மூலம்.
இன்று காலை 09.37 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.
இன்று அதிகாலை 04.05 வரை கௌலவம். பின்னர் மாலை 05.00 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று காலை 06.23 வரை மரணயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
1)பசியைத் தூண்டுவதற்கு :
காலையில் ஒரு வெற்று வயிற்றில் எலுமிச்சை தண்ணீரை குடிக்கவும். உணவுக்கு முன், அரைத்த இஞ்சியை பாறை உப்புடன் உட்கொள்ளுங்கள்.
2)இரத்த சுத்திகரிப்புக்கு :
எலுமிச்சை, கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், கீரை, ஆப்பிள், பசில், வேப்பம் மற்றும் பேல் இலைகளின் சாறு.
3)ஆஸ்துமாவுக்கு :
பூண்டு, இஞ்சி, துளசி, பீட்ரூட், முட்டைக்கோஸ், கேரட், இனிப்பு திராட்சை சாறு, பச்சை இலை காய்கறிகளின் சூப் அல்லது முங் பருப்பு சூப், மற்றும் தூய ஆடு பால் ஆகியவை நன்மை பயக்கும். நெய், எண்ணெய் மற்றும் வெண்ணெய் தவிர்க்கப்பட வேண்டும்.
4)உயர் இரத்த அழுத்தத்திற்கு :
கேரட், திராட்சை, இனிப்பு சுண்ணாம்பு (மொசம்பி) மற்றும் கோதுமை புல் ஆகியவற்றின் சாறு. மன மற்றும் உடல் ஓய்வு அவசியம்.
5)குறைந்த இரத்த அழுத்தத்திற்கு :
இனிப்பு பழங்களின் சாறுகளை உட்கொள்ளுங்கள், ஆனால் புளிப்பு பழங்களைத் தவிர்க்கவும். திராட்சை மற்றும் இனிப்பு சுண்ணாம்பு சாறு அல்லது பால் ஆகியவை நன்மை பயக்கும்.
6)மஞ்சள் காமாலை :
திராட்சை, ஆப்பிள், நெல்லிக்காய் மற்றும் இனிப்பு சுண்ணாம்பு.
திராட்சை கிடைக்கவில்லை என்றால், திராட்சையும் தண்ணீரில் ஊறவும், அந்த தண்ணீரை குடிக்கவும்.
கரும்பு சாற்றை குடிக்கவும்.
7)பருக்கள்/முகப்பரு:
கேரட், தர்பூசணி, வெங்காயம், துளசி மற்றும் கீரை சாறு.
8)கீழ்வாதத்திற்கு :
பூண்டு, இஞ்சி, கேரட், கீரை, வெள்ளரி, முட்டைக்கோஸ், புதிய கொத்தமல்லி, தேங்காய் நீர், ஆப்பிள்கள் மற்றும் கோதுமை கிராஸ் சாறு.
9)அமிலத்தன்மைக்கு :
கேரட், கீரை, வெள்ளரி, துளசி மற்றும் பிற பழங்களின் சாறு. திராட்சை, இனிப்பு சுண்ணாம்பு சாறு மற்றும் பால் ஆகியவை நன்மை பயக்கும்.
10புற்றுநோய்க்கு :
கோதுமை புல் சாறு, கேரட் சாறு மற்றும் திராட்சை சாறு.
11)அழகு மற்றும் ஒளிரும் சருமத்திற்கு :
தேங்காய் நீர் சாறு காலை மற்றும் பிற்பகலில் குடிக்கவும். தேங்காய் நீரால் உங்கள் முகத்தை சுத்தம் செய்யுங்கள்.
12)கொதி மற்றும் தோல் நோய்த்தொற்றுகளுக்கு :
கேரட், கீரை, வெள்ளரி, முட்டைக்கோஸ் மற்றும் தேங்காய் சாறு.
13)பெருங்குடல் அழற்சிக்கு :
கேரட், கீரை, முட்டைக்கோஸ் மற்றும் அன்னாசிப்பழம் சாறு. 70% கேரட் சாற்றை மற்ற பழச்சாறுகளுடன் இணைக்கவும். பீட்ரூட், தேங்காய், வெள்ளரி மற்றும் முட்டைக்கோஸ் சாறு ஆகியவற்றின் கலவையும் உதவியாக இருக்கும்.
14)புண்களுக்கு :
திராட்சை, கேரட் மற்றும் முட்டைக்கோஸ் சாறு. பால் மட்டுமே உணவில் இருப்பது முக்கியம்.
15)குளிர் மற்றும் இருமலுக்கு :
முள்ளங்கி, இஞ்சி, பூண்டு, துளசி மற்றும் கேரட் சாறு. மேலும், முங் பருப்பு அல்லது பச்சை காய்கறி சூப்.
16)மூச்சுக்குழாய் அழற்சிக்கு :
பப்பாளி, கேரட், இஞ்சி, துளசி, அன்னாசி சாறு.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். தற்போது உச்ச தலைவராக அவருடைய மகன் மொஜ்தாபா காமேனி பொறுப்பேற்றிருக்கிறார். அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது.
பழைய தலைவரை கொன்றது போல, புதிய தலைவரை எளிதில் கொல்ல முடியாது என்றும், அவருக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் சர்வதேச அளவில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தாபா காமேனி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரைப் பாதுகாக்க, ஈரானின் மிகவும் ரகசியமானதும் சக்தி வாய்ந்ததுமான 'NOPO' (பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் படை) களமிறக்கப்பட்டுள்ளது. பயிற்சி: ஈரான் காவல்துறையிலேயே மிக உயர்தரப் பயிற்சி பெற்ற 'பிளாக்-கிளாட்' (கருப்பு உடை) சிறப்புப் படை இது.
மத்திய கிழக்கில் நடந்துவரும் போரால், கனடாவில் உணவுப்பொருட்கள் விலை உயரலாம் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
உலகின் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என பொதுவாகவே கூறப்படுவதுண்டு.
அவ்வகையில், ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியைத் தொடர்ந்து, எண்ணெய் தயாரிப்பு மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்து விடயத்தில் பிரச்சினை உருவாகியுள்ளது.
கனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்தில், தன்னை ஒரு குடிவரவு சட்டத்தரணி என்று பொய்யாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த பெப்ரவரி 26-ஆம் திகதி கிச்சனர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
பாதிக்கப்பட்ட நபர், வேலைக்கான வீசா விண்ணப்பத்தைப் பெறுவதற்காக ஒரு சட்டத்தரணியின் உதவியை நாடியுள்ளார்.
இதற்காக 2024 மே மாதம் முதல் 2025 ஜூலை மாதம் வரை பல கட்டங்களாகப் பணம் செலுத்தியுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் எவ்வித விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை அறிந்த பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.
தேடப்படும் நபர் கிச்சனர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஹர்ஷரன் அலுவாலியா (Harsharan Ahluwalia) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்: 5,000 டொலர்களுக்கு குறைவான மோசடி (3 வழக்குகள்), ஆள்மாறாட்டம்/போலி அடையாளம் (3 வழக்குகள்) பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணையில், அலுவாலியா ஒரு பதிவுசெய்யப்பட்ட சட்டத்தரணி அல்ல என்பது உறுதியானது. இவர் 2025 மார்ச் மற்றும் 2026 ஜனவரி மாதங்களிலும் இதேபோன்ற குடிவரவு மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை 7,000-க்கும் அதிகமான கனடியர்கள் வெளியேறியுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மார்ச் 4 முதல் மார்ச் 8 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 4,300-க்கும் மேற்பட்ட கனடியர்கள், நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டார். இவர்கள் நேரடி மற்றும் மாற்று விமானப் பாதைகள் ஊடாக கனடாவை வந்தடைந்துள்ளனர்.
வர்த்தக ரீதியிலான விமானங்களைப் பயன்படுத்தி வெளியேறுமாறு ஊக்குவிக்கும் அதேவேளை, தேவைப்பட்டால் விசேட விமானங்கள் (Charter flights) மற்றும் பேருந்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.
சுமார் 871 பேர் துருக்கி போன்ற பாதுகாப்பான மூன்றாம் நாடுகளுக்குச் சென்றுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உதவி கோரி வரும் அழைப்புகளின் எண்ணிக்கை தற்போது பாதியாகக் குறைந்துள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் சுட்டிக்காட்டினார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிர்பாராத பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். சகோதர்களிடம் சிந்தித்து செயல்படவும். விளையாட்டு செயல்களில் பொறுமை வேண்டும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். எண்ணிய பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். புதிய மின்னணு மின்சார சாதனங்களில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
ரிஷபம்
எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். அரசு விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். தவறிப் போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல்களும் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவால் பொருளாதார சிக்கல்கள் குறையும். கீர்த்தி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
தாய்மாமன் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கடகம்
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்த தன்மை குறையும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சிம்மம்
எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை பற்றிய எண்ணம் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
கன்னி
பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். கால்நடை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். இணையம் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பழக்க வழக்கங்களில் சிறு மாற்றம் ஏற்படும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
துலாம்
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் கிடைக்கும். உத்தியோக செயல்களில் துரிதம் உண்டாகும். மனதளவில் புதிய தெளிவுகள் பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் அனுபவம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பரிசுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
வியாபாரத்தில் இடமாற்ற எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மதிப்புகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
தனுசு
வேள்வி பணிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவருடன் பயணங்கள் சென்று வருவீர்கள். நிர்வாக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். புதுமையான விஷயங்கள் மீது ஆர்வம் உண்டாகும். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடற்பயிற்சி விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். காப்பீடு செயல்களில் சிந்தித்து செயல்படவும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கும்பம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். வீடு மற்றும் வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உலகில் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். புதிய முயற்சிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். சுபகாரிய செயல்பாடுகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
செல்வ சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணையம் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்‘
விசுவாவசு வருடம் மாசி மாதம் 27 ஆம் தேதி புதன்கிழமை 11.3.2026.
இன்று அதிகாலை 02.02 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று இரவு 09.49 வரை கேட்டை. பின்னர் மூலம்.
இன்று காலை 09.10 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.
இன்று அதிகாலை 02.02 வரை பவம். பின்னர் மாலை 03.04 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று இரவு 09.49 வரை சித்தயோகம் பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

