·   ·  10 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 452
  • More

யாரிடமும் சொல்ல முடியாத விஷயம்

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். பேச்சு திறமை மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். உற்பத்தி சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

ரிஷபம்

கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மிதுனம்

கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். புண்ணிய தல பயணம் கைக்கூடி வரும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்  

 

கடகம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை  

 

சிம்மம்

எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு சார்ந்த ஆலோசனை கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அரசு பணிகளில் இருந்த இழுபறிகள் மறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கன்னி

தடையாக இருந்தவர்கள் விலகி செலவார்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வேலையில் பணியாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் பொறுமை வேண்டும். வங்கி சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல் மேம்படும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

துலாம்

பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளால் எதிர்பார்த்த சில ஒத்துழைப்புகள் தாமதமாக கிடைக்கும். புதிய முடிவுகளை தவிர்க்கவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

தனுசு

தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் இருந்து குழப்பங்கள் விலகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கும்பம்

பயணம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை குறைப்பீர்கள். உத்தியோக தொடர்பான பணிகளில் பொறுப்பும் அதிகாரமும் அதிகரிக்கும். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

மீனம்

அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்லவும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். வழக்கு பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்தத்தன்மை குறையும். எதிர்பாராத சில அதிஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

  • 91
·
Added a post

விசுவாவசு வருடம் தை மாதம் 14 ஆம் தேதி புதன்கிழமை 28.1.2026

இன்று பிற்பகல் 02.36 வரை தசமி. பின்னர் ஏகாதசி.

இன்று காலை 07.42 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.

இன்று அதிகாலை 01.40 வரை சுப்பிரம். பின்னர் இரவு 10:32 வரை பிராமியம். பிறகு ஐந்திரம்.

இன்று அதிகாலை 03.46 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 2 36 வரை கரசை. பின்பு வணிசை.

இன்று காலை 6:35 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=403&dpx=2&t=1769563539

நல்ல நேரம்.:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 99

Good Morning...

  • 96
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்களால் உற்சாகம் ஏற்படும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பேச்சு சாதுரியம் மூலம் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

ரிஷபம்

துணைவர்வழி உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும். சமூக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். கூட்டு வியாபாரம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மறதியால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

மிதுனம்

வெளியிடங்களில் கோபத்தை விட விவேகத்தை கையாளவும். வியாபாரம் நிமித்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பயனற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. புது விதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கடகம்

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மூத்த உடன் பிறந்தவர்கள் வழியில் சுப காரியங்கள் கைக்கூடும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சிம்மம்

அரசு காரியங்களில் இருந்த தாமதம் மறையும். சமூக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

கன்னி

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார செயல்களில் கவனம் வேண்டும். வேலையாட்கள் மாற்றம் குறித்த சிந்தனைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் கூடும். திட்டமிட்ட சில பணிகள் பலிதமாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

துலாம்

கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் தாமதம் உண்டாகும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். மாணவர்களுக்கு ஞாபக மறதி அவ்வப்போது தோன்றி மறையும். எதிர்பாராத சில செய்திகள் மூலம் விரயம் உண்டாகும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : கத்தரிபூ

விருச்சிகம்

செயல்பாடுகளில் சுதந்திர தன்மை வெளிப்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

தனுசு

எதிராக இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிந்தனைகளின் தெளிவு உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கலை சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்த தடுமாற்றம் குறையும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர்

மகரம்

குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய பொருள்கள் வாங்கும் பொழுது கவனம் வேண்டும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த மந்தத்தன்மை விலகும். வியாபார ரீதியான பயணங்கள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சனைகள் விலகும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைக்கூடும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபார கூட்டாளிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். பரிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

மீனம்

பொதுவாழ்வில் செல்வாக்கு மேம்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் வழியில் சில நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். உபரி வருமானத்தில் முயற்சிக்கு ஏற்ப பலன்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்து வந்த அலைச்சல்கள் குறையும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

  • 395
·
Added a post

விசுவாவசு வருடம் தை மாதம் 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 27.1.2026.

இன்று மாலை 04.57 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று காலை 09.20 வரை பரணி. பின்னர் கிருத்திகை.

இன்று அதிகாலை 03.31 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று காலை 06.04 வரை பாலவம். பின்னர் மாலை 04.57 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=402&dpx=2&t=1769495322

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 399

யாரையும் வெறுக்காதீர்கள்.

கனிவோடு பேசுங்கள்.

அன்பை வாரி வாரி கொடுங்கள்.

குறைவாக பெற்றுக்கொண்டாலும்

நிறைய நிறைய கொடுங்கள்.

  • 429

சிறு சிறு மகிழ்ச்சி நிகழ்வுகளை

மதிக்கத் தெரியாவிட்டால்

பெரு வெற்றிகளும்

வெறுமையாகிவிடும்!

  • 426

good morning

  • 430
·
Added a news

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பல பகுதிகளில் 60 செ.மீ.க்கும் அதிகமான பனிப்பொழிவு ஏற்படும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் முன்னறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, இன்று பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலைகள், நிர்வாகக் கட்டடங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களை மூடுவதாக டொரண்டோ மாவட்ட பாடசாலை சபை அறிவித்துள்ளது.

திங்கள்கிழமை நடைபெற இருந்த உயர்நிலைப் பரீட்சைகள் இந்த வாரத்தின் பிற்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

டொரண்டோ கத்தோலிக்க பாடசாலை சபையும் அனைத்து பாடசாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. பாடசாலை பேருந்து சேவைகள், குழந்தை பராமரிப்பு, பள்ளிக்கு முன்–பின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமை நடைபெற இருந்த பரீட்சைகள் ஜனவரி 29க்கு மாற்றப்பட்டுள்ளன.

ஸெயிண்ட் மைக்கேல்ஸ் கல்லூரி மற்றும் மேபின் பாடசாலை (தனியார் தொடக்கப் பள்ளி) திங்கள்கிழமை முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யோர்க், டர்ஹாம், டஃபரின்–பீல், ஹால்டன், ஹாமில்டன், நயாகரா, பகுதிகளில் இயங்கி வரும் பாடசாலைகளும் பிரெஞ்சு மொழிப் பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 639
  • 636
  • 637
  • 637
·
Added a post

கோயில் ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7. கோயில் மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம்.

1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் திருவார்புவில்இக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருக்கிறார். எனவே 23.58 மணி நேரமும், 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும். கோயில்

2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது. 11.58 மணி முதல் 12 மணி வரை.

இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும்

கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப்படுகிறது.

கிருஷ்ணா பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால், ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால், கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார்.

அந்த நிலையில் இருந்த கிருஷ்ணரே இக்கோவில் மூலவர் சிலை என்று மக்கள் நம்புகின்றனர்.

அபிஷேகம் முடிந்தபின்,மூலவரின் தலையை முதலில்உலர்த்தியபின், நைவேத்தியம் அவருக்குப் படைக்கப்படும், பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.

இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்கமாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

ஒருமுறை, கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது, ​​ஆண்டவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள்.

அந்த சமயத்தில் வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார்.

அப்போதிருந்து, கிரகணத்தின் போதும் அக்கோவில் மூடப்படுவதில்லை.

கிருஷ்ணர் தூங்கும் நேரம் தினமும் 11.58 மணி முதல் 12 மணி வரை. 2 நிமிடங்கள் மட்டுமே.

பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. தினமும் 11.58 மணி (ஆலயத்தை மூடுவதற்கு முன்பு) பூசாரி சத்தமாக "இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?" என அழைப்பார்.

பிரசாதம் வழங்குகளில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும்.

மற்றொரு முக்கிய விஷயம், நீங்கள் பிரசாதம் சுவைத்தால், நீங்கள் அதன் பிறகு பசியால் வாட மாட்டீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப்பிரச்சனை இருக்காதாம்.

கோவிலின் முகவரி,

திருவார்பு கிருஷ்ணா கோயில், திருவார்பு, -686020

கோட்டையம் மாவட்டம், கேரள மாநிலம்.

கோவில் திறப்பு நேரம் நள்ளிரவு 12.00 மணி முதல் நள்ளிரவு 11.58 மணி வரை.

  • 637
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

தனம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். வஞ்சனையான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாத திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

ரிஷபம்

தம்பதிகளுக்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். பயணங்களால் விரயங்கள் உண்டாகும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். சொத்து சார்ந்த செயல்களில் நிதானம் வேண்டும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்களால் நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். நினைத்த சில பணிகளில் போராட்டங்கள் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சில்வர்

 

மிதுனம்

உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். விவசாய பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். புதுவிதமான அணிகளின் மீது ஈர்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் உண்டாகும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். விவசாய துறைகளில் மேன்மை ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணியதை முடிப்பீர்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கன்னி

குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். வெளி வட்டாரங்களில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். எதிர்பாரத சில பொறுப்புகளால் நெருக்கடிகள் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் நிதானம் வேண்டும். உறுதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

துலாம்

நண்பர்களின் சந்திப்புகள் மகிழ்ச்சியை தரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் நினைவாற்றல் மேம்படும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

விருச்சிகம்

தந்தையிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பு மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

மகரம்

வாகன பயணங்களில் கவனம் வேண்டும். வங்கிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சமூக பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். வியாபார பணிகளில் கவனம் வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கும்பம்

குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். பணி நிமித்தமான அலைச்சல் மேம்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் வரவுகள் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மீனம்

உணவு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் ஏற்படும். மனை விற்பனையில் லாபம் ஏற்படும். பந்தய விஷயங்களில் கவனம் வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

  • 880
·
Added a post

விசுவாவசு வருடம் தை மாதம் 12 ஆம் தேதி திங்கட்கிழமை 26.1.2026.

இன்று இரவு 07.11 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று காலை 10.50 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

இன்று காலை 09.40 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று காலை 08.15 வரை பத்தரை. பின்னர் இரவு 07.11 வரை பவம். பின்பு பாலவம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=401&dpx=2&t=1769405827

நல்ல நேரம்:

காலை : 06.00 முதல் 07.00 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 891
  • 888
  • 1038

Good Morning...

  • 1040
·
Added article

பளிங்கு சிலை போல சினிமாத்துறையில் அறிமுகமான நடிகை கிரண், 'யாதீன்' என்கிற இந்தி படத்தில் முதன் முதலாக நடித்தார். அந்த படத்திற்கு பின் தமிழுக்கு வந்த இவர், சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் அன்பே சிவம், வின்னர், வில்லன் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்பு குறைய, திருமலை படத்தில் வாடியம்மா ஜெக்கம்மா பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

நடிகை கிரண் அதன் பின் 'நியூ' படத்தில் எஸ்.ஜேசூர்யாவுடன் பல விவகாரமான காட்சியில் நடித்தார். அந்த படத்திற்கு பின் மொத்தமாக காணாமல் போன கிரண், வருமானத்திற்கு வழியில்லாததால், இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். எனக்கு யாரும் நடிக் வாய்ப்பு கொடுக்கவில்லை, பட வாய்ப்பு கேட்டால், அட்ஜெஸ்ட்மென்டுக்கு அழைக்கிறார்கள் என கிரண் வெளிப்படையாகவே பேட்டி ஒன்றில் கூறினார். இதையடுத்து, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவரால் தாக்குபிடிக்க முடியாமல் போன வேகத்திலேயே வந்துவிட்டார். வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த கிரணுக்கு வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் 'சிவராத்திரி' பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

அந்த படத்திற்கு பிறகு கிரண் தனக்கு எதாவது படவாய்ப்பு வரும் என எதிர்பார்த்தார். ஆனால், எதுவும் வராததால், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோவை ஷேர் வெளியிடுவதை வேலையாக வைத்து இருக்கிறார். தற்போது இவர், மிகவும் கவர்ச்சியாக இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். சிலர் அந்த போட்டோவிற்கு லைக்குகளை போட்டாலும் சிலர், அவர் கண்டபடி திட்டி வருகின்றனர்.

  • 1234
·
Added article

வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளராக நடிகை பாவனா போட்டியிடப் போவதாக வெளியான செய்திகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இந்த வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டன, சில ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தன. தற்போது, ​​தனது புதிய படமான 'அனோமி' வெளியீட்டிற்கு முன்னதாக, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாவனா இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது பாவனா, கதாநாயகியாக நடித்து, இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கும் 'அனோமி' திரைப்படம் ஜனவரி 30 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். மரத் எழுதி இயக்கியுள்ளார். 'அனோமி' பாவனாவின் திரையுலகப் பயணத்தில் 90வது படமாகும். மர்ம, த்ரில்லர் படத்தில் பாவனா, தடயவியல் ஆய்வாளர் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் ரஹ்மான், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன், மற்றும் த்ரிஷ்யா ரகுநாத் ஆகியோர் நடித்துள்ளனர்.

சிரிப்புதான் வருது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் முன் செய்தியாளர்களிடம் பேசினார் பாவனா, அப்போது செய்தியாளர் ஒருவர், கேரள சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடப்போவதாக பரவும் செய்து பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பாவனா, நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை. இப்படி ஒரு செய்தி எப்படி வெளிவந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இதில், துளியும் உண்மையில்லை. அந்த செய்தியைப் பார்த்தபோது எனக்குச் சிரிப்புதான் வந்தது. அது ஒரு பெரிய நகைச்சுவை என்று பாவனா கூறியுள்ளார். நடிகை பாவனா கடந்த 2013ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 1236
·
Added a news

சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் கனடா பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவிற்குள் பொருட்கள் அனுப்ப சீனாவிற்கு கனடாவை ஒரு 'டிராப் ஆப் போர்ட்' ஆக மாற்றப் போகிறேன் என்று கவர்னர் மார்க் கார்னி நினைத்தால், அவர் மிகவும் தவறாக நினைக்கிறார்.

சீனா கனடாவை உயிருடன் சாப்பிடும், அதை முற்றிலுமாக விழுங்கும். அவர்களின் வணிகங்கள், சமூக கட்டமைப்பு மற்றும் பொது வாழ்க்கை முறை ஆகியவற்றை அழிக்க நினைக்கிறது.

 சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனடா பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கும் உடனடியாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும். இவ்வாறு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக இருக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் ஜனாதிபதி ட்ரம்ப் கூறி வந்தார். தற்போது கனடா பிரதமர் மார்க் கார்னியைகவர்னர் என ட்ரம்ப் விமர்சனம் செய்து உள்ளார்.

கடந்த காலத்தில் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவையும் கவர்னர் என குறிப்பிட்டு டிரம்ப் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

  • 1245
  • 1240
  • 1329
  • 1328