- · 1 friends
-
2 followers
யாரிடமும் சொல்ல முடியாத விஷயம்
டொராண்டோ நகரின் எடோபிகோக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு ஆண் பாதசாரி உயிரிழந்ததாக டொராண்டோ போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து, கிப்லிங் அவென்யூவிற்கு மேற்கே உள்ள டண்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் அகார்ன் அவென்யூ சந்திப்பிற்கு அருகே இடம்பெற்றுள்ளது.
வாகனம் ஒன்று ஒரு நபரை மோதியதாக வந்த தகவலின் பேரில் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் 28 வயதுடைய ஆண் ஒருவர் கடுமையாக காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் தொடர்புடைய வாகனமும் அதன் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே இருந்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைக்கு, வாகன ஓட்டுநருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.
பாதசாரி சாலை கடக்கும் போது குறிப்பிட்ட கடக்கும் பாதையில் (crosswalk) இருந்தாரா என்பதும், இந்த விபத்தில் வேகம் ஒரு காரணமா என்பதும் தற்போது உறுதிப்படுத்த முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கு சாட்சியாக இருந்தவர்கள் அல்லது அந்தப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள், தங்களிடம் டாஷ்கேம் வீடியோ இருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு பனிப் பொழிந்து வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் 30 பேர் பலியாகி உள்ளனர்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. இதில் ஆமோரி, நிகாட்டா, ஹொக்கைடோ, அகிதா உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமோரியின் சில பகுதிகளில் 14 அடி வரை பனி குவிந்துள்ளது. இது 40 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவாகும்.
வீடுகள், கடைகள், அலுவலகங்களை பனி சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு கட்டட மேற்கூரைகளில் படிந்திருக்கும் பனியை அகற்றும் போதும், பனியில் புதைந்தும், அதிக குளிராலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த இரு வாரத்தில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பனி தொடர்பான விபத்துகளில், 290 பேர் காயமடைந்துள்ளனர்
கர்ப்பிணி கோலத்தில் சீதை... மரவுரி தரித்த ராமன்! சென்னையின் இதயப்பகுதியில் ஒரு ராமாயண அதிசயம்!
ராமாயண காவியத்தின் கிளைக்கதைகள் பல இடங்களில் நடந்திருந்தாலும், அன்னை சீதை தன் பிள்ளைகளான லவ-குசர்களுடன் வாழ்ந்த புண்ணிய பூமி நம்ம சென்னையில் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அதுதான் கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில்!
இந்த ஆலயத்தின் சிலிர்க்க வைக்கும் சிறப்புகளை விரிவாகப் பார்ப்போம்:
கோயம்பேடு - பெயரின் பின்னால் உள்ள சுவாரஸ்ய வரலாறு
ராமபிரான் அசுவமேத யாகம் நடத்தியபோது, அதன் குதிரையை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்த லவனும் குசனும் பிடித்துக் கட்டினர்.
கோ - அரசன் (ராமர்)
அயம் - இரும்பு
பேடு - வேலி அதாவது, அரசனின் குதிரையை இரும்பு வேலி அமைத்துக் கட்டி வைத்த இடம் என்பதே நாளடைவில் மருவி 'கோயம்பேடு' என்றானது.
எங்கும் காணாத ராமரின் அபூர்வ கோலம்
பொதுவாக எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் ராமபிரான் பட்டாபிஷேகக் கோலத்திலோ அல்லது வில் ஏந்திய வீரக் கோலத்திலோ தான் காட்சி தருவார். ஆனால், இங்கு சீதையைத் தேடி வந்தபோது இருந்த அதே 'மரவுரி தரித்த' (வனவாசி) கோலத்தில் மிக எளிமையாகக் காட்சி தருகிறார். ராமரின் இந்தத் தோற்றத்தைக் காண்பது மிகவும் அரிது.
அன்னை சீதையின் தாய்மைக் கோலம்
இத்தலத்தின் மற்றொரு மிக முக்கிய சிறப்பு, இங்கு அன்னை சீதை கர்ப்பிணி கோலத்தில் அருள்பாலிக்கிறார். வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் சீதை தங்கியிருந்த காலத்தை இது நினைவுபடுத்துகிறது. தாய்மைக்காக ஏங்கும் பெண்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த பிரார்த்தனை தலம்.
ஏன் இங்கு லட்சுமணனும் அனுமனும் இல்லை?
ராமர் சந்நிதி என்றாலே அங்கே லட்சுமணனும் அனுமனும் இருப்பது வழக்கம். ஆனால், இங்கு லவ-குசர்களுடன் ராமர் போர் புரிந்தபோது, லட்சுமணனும் அனுமனும் எதிரெதிர் துருவங்களாக நின்ற தலம் இது. எனவே, மூலவர் சந்நிதியில் ராமரும் சீதையும் மட்டுமே தனித்து எழுந்தருளியுள்ளனர். (அனுமனுக்குத் தனியே தீர்த்தக்கரையில் சந்நிதி உள்ளது).
விசேஷ வழிபாடுகளும் பலன்களும்
புத்திர பாக்கியம்: அறிவான மற்றும் வீரமான ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று விரும்பும் தம்பதிகள் இங்கு வந்து சீதா பிராட்டியிடம் மனமுருகி வேண்டிக்கொள்கிறார்கள்.
திருமணத் தடை நீங்க: 'பார்வதி சுயம்வர விருட்சம்' (வில்வம் மற்றும் வேம்பு இணைந்த மரம்) இங்குள்ளது. திருமணத் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் இந்த மரத்திற்குத் தாலி கட்டி வேண்டினால் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.
பித்ரு தோஷ நிவர்த்தி: லவ-குசர்களால் உருவாக்கப்பட்ட தீர்த்தத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது காசிக்கு நிகரான பலனைத் தரும் எனக் கருதப்படுகிறது.
ஆன்மீகத் தகவல்கள்
மூலவர்: வைகுண்டவாசப் பெருமாள் (பக்தவச்சலர்)
தாயார்: கனகவல்லி தாயார்
பழமை: அருணகிரிநாதரால் 'கோசைநகர்' எனத் திருப்புகழில் போற்றப்பட்ட தலம்.
தரிசன நேரம்: காலை 5.30 - 12.00 | மாலை 4.30 - 8.30
சென்னையில் இருப்பவர்கள் தவறவிடக்கூடாத தலம் இது. இந்த வாரமே உங்கள் குடும்பத்துடன் சென்று ராமபிரானின் அருளைப் பெற்று வாருங்கள்!
கரும்புச்சாறு பெரிய கொப்பரையில் காய்ச்சப்பட்டு ஆறினால் கிடைப்பது.
இரும்புச் சத்து நிறைந்தது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.
ஒரு வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது- சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம் என. அப்படியெல்லாம் கிடையாது. வெள்ளை சர்க்கரை நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த அளவு கெடுதலோ அதே அளவு அவர்களுக்கு நாட்டு சர்க்கரையும் கெடுதல்.
நாட்டுசர்க்கரையில் கெமிக்கல் எதுவும் இல்லை -என்று சொல்வார்கள். ஆனால் நாட்டு சர்க்கரை தயாரிக்கும்போது, காஸ்ட்டிக் சோடாவை கரும்புச் சாறு கொதிக்கும்போது சேர்ப்பார்கள். அதிலிருந்து அழுக்கை நீக்க.
ஆனால் அப்படி பார்த்தால் எந்த உணவையும் சாப்பிடமுடியாது. எப்படியாயிருந்தாலும் வெள்ளை சர்க்கரையைவிட கெமிக்கல்கள் குறைவே.
எனவே சர்க்கரை நோயாளிகளைத் தவிர நாட்டுச் சர்க்கரையை எல்லோரும் சாப்பிடலாம். எந்த கெடுதலும் இல்லை. (டயட் கான்ஷியஸாக இருப்பவர்களுக்கு- நாட்டு சர்க்கரையிலும் கலோரி அதிகம்தான்)
காபி, தேநீர் மற்றும் இதர பானங்களில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட்டால், அதுவும் தனிச் சுவை தரும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மேல்நிலை கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடைகள் மீது ஆர்வம் உண்டாகும். நிலம் மற்றும் வீடு விற்பனையில் பொறுமையை கையாளவும். தாயாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணம் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
ரிஷபம்
தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. இணைய துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பொருள்கள் மூலம் ஆதாயம் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுபவம் மேம்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். பணிபுரியும் இடத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
உறவினர்களின் உண்மை நிலைகளை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் சுகந்திர போக்கு மேம்படும். எதிர்பாராத சில விரயங்கள் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை
கன்னி
அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். தந்தை வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆராய்ச்சி தொடர்பான செயல்களில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். முயற்சி கைக்கூடும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உலகியல் நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். அரசு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கற்கும் திறனின் சில மாற்றங்கள் உண்டாகும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
விருச்சிகம்
வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
தனுசு
குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சில பயணம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்க்க முயல்வீர்கள். பழைய பாக்கிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடாமல் இருக்கவும். பொருளாதார விஷயங்களை பகிராமல் இருக்கவும். மற்றவர்கள் கருத்துக்களால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். வர்த்தக முதலீடுகளை குறைத்து கொள்வது நல்லது. தனம் தொடர்பான நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விளையாட்டான விவாதங்களை தவிர்க்கவும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
பணி புரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியாக இருந்து வந்த பாக்கிகள் கிடைக்கும். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உருவாகும். வழக்கு விஷயங்களில் இருந்த தாமதங்கள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
குழந்தைகளின் செயல்களில் கவனம் வேண்டும். வியாபர பணிகளில் விழிப்புணர்வு வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகளும் மேம்படும். நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். சமூக பணிகளில் பொறுப்புகள் கிடைக்கும். நேர்மை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
விசுவாவசு வருடம் தை மாதம் 21 ஆம் தேதி புதன்கிழமை 4.2.2026
இன்று அதிகாலை 02.59 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று அதிகாலை 12.24 வரை மகம். பின்னர் பூரம்.
இன்று அதிகாலை 04.55 வரை சோபனம். பின்னர் அதிகண்டம். கரணம்:
இன்று அதிகாலை 02.59 வரை கரசை. பின்னர் பிற்பகல் 02.54 வரை வணிசை. பின்பு பத்தரை.
இன்று காலை 06.35 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியெவ்ரே (Pierre Poilievre) ஆகியோர் இந்த வாரம் சந்திக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத்தின் புதிய அமர்வு தொடங்கியுள்ள நிலையில் இந்த சந்திப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை பிற்பகல் X சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், பிரதமரை அவசரமாக சந்திக்க விரும்புவதாக பொய்லியெவ்ரே தெரிவித்துள்ளார்.
“நடைமுறை தீர்வுகளை முன்வைக்கவும், பிற கருத்துகளை கேட்கும் மனப்பான்மையுடன் இணைந்து செயல்பட்டு விரைவான முடிவுகளை எட்டவும் இந்த சந்திப்பு அவசியம்,” என அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவின் சுங்க வரிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படவும், அமெரிக்காவுடன் சுங்க வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் கன்சர்வேட்டிவ் கட்சி தயாராக இருப்பதாகவும் பொய்லியெவ்ரே தெரிவித்தார்.
ஜனவரி இறுதியில் பிரதமர் கார்னிக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதிய பொய்லியெவ்ரே, நீண்ட காலமாக தாமதிக்கப்பட்ட கொள்கைகளை விரைவாக நடைமுறைப்படுத்த தனது கட்சியின் ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், அந்த கடிதத்திற்கு இதுவரை பதில் வரவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
- காய்ச்சலுக்கு நிலவேம்பு, துளசி குடிநீர்.
- இருமலுக்கு ஆடாதோடைக் குடிநீர்.
- சளியுடன் கூடிய இருமலுக்கு கற்பூரவள்ளி இலை.
- நீரேற்றம் விலக மஞ்சள் புகையை மோந்து பார்த்தல்.
- ஈளை, இருமலுக்கு முசுமுசுக்கை அடை, கண்டங்கத்தரி இலைக் கசாயம்.
- மலச்சிக்கல் தீர நிலாவரைப் பொடி
- வாய்நாற்றம், விக்கல் தீர தனியா விதை
- வாந்தி, சுவையின்மை தீர நெல்லித் துவையல்.
- கழிச்சலை நிறுத்த மாதுளம்பிஞ்சு, பொடுதலைச் சாறு.
- பல்முளைக்கும்போது உண்டாகும் காய்ச்சல்,பேதிக்குத் தாளிசபத்திரி பொடி இரண்டு சிட்டிகை.
- பல் முளைக்கும்போது உண்டாகும் கழிச்சலுக்குத் திராட்சைப் பழச்சாறு.
- சொறி,சிரங்கு சரியாக குப்பைமேனி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்துப் பூச வேண்டும்.
- நீர் எரிச்சல் தீர நன்னாரி ஊறல் நீர்
- வியர்க்குரு விலகப் பனை நுங்கு நீர்
- கண் நோய்க்கு பொன்னாங்கண்ணிக் கீரைக் கடைசல்.
- உடல் உறுதிபெற செவ்வாழைப் பழம்.
- பல் துலக்க ஆலம் விழுது, கருவேலங்குச்சி
- குளியலுக்கு நலுங்குமாவு.
ஒருநாள் அர்ச்சுனன் நன்கு துங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்திலுங்கூட அவன் வாய் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று ஜெபம் செய்து கொண்டே இருந்தது. அவன் உடலின் மயிர்க்கால் தோறும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்ற நாமஜெபம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த அற்புத பக்தியை அறிந்த கிருஷ்ணன் அந்த இடத்திற்கு வந்தார். அவனது பத்தினிமாரும் வந்தனர். நாரதர், சிவன், பிரம்மன் முதலிய தேவரெல்லாம் இந்த அதிசயம் காணத் திரண்டு வந்தனர்.
அர்ச்சுனனின் ஆழ்ந்த பக்தியைக் கண்டு அனைவரும் நாட்டியமாடத் தொடங்கினர். ஆனாலும் அர்ச்சுனனின் ஆழ்ந்த உறக்கம் கலையவில்லை.
தெய்வப்பற்று உடையவர்கள் தம்மை அறியாமலே எப்போதும் இறைவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். அந்த ஜெபம் அவர்கள் உடலின் அணுக்கள் தோறும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். இது பக்தியின் மேலான நிலை. உன்னத நிலை. அந்த நிலையை அடைந்து விட்ட அர்ச்சுனனை அனைவரும் முழுமனதோடு பாராட்டினர்.
காந்தியடிகளும் இந்த மேலான பக்தி நிலையை அடைந்திருந்தார். அதனால் தான் மீர் ஆலம் என்பவன், காந்தியின் தலையில் அடித்த போது ஹேராம்! என்றார். மதன்லாலின் குண்டு வெடித்தபோதும் ஹேராம்! என்றார். கோட்சேயின் குண்டு தனது உயிரையே பறிக்கும் போதும் ஹேராம்! என்றே அவர் வாயானது இறைவன் நாமத்தை உச்சரித்தது.
இதே போன்ற மேலான பக்தி நிலை அடைந்த ஒருவரின் வரலாறு ஒன்றை இங்கே பார்ப்போம்.
பண்டரிபுரத்தில், சோகாமேளர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் குலத்தொழில் செருப்புத் தைப்பது. அத்தொழில் அவருக்கான வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருந்தது. அவர் தொழில் செய்யும் போதும், உணவு உண்ணும்போதும், உறங்கும்போதும் நடக்கும்போதும் அவர் வாய் தானாகவே விட்டல! விட்டல! என்று நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கும்.
ஒரு விபத்தில் அவர் வீடு இடிந்து விட்டது. அவரும் அவருடன் இருந்த சிலரும் இடிபாடுகளில் சிக்கி மாண்டனர். இடிபாடுகளை அகற்றுவதற்குப் பலமாதங்கள் ஆகிவிட்டன. ஞானியாகிய சோகாமேளரின் திருமேனியைக் கண்டுபிடிக்க அவர்தம் சீடர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் ஒருவர் உடலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. எலும்புத் துண்டுகளே எஞ்சியிருந்தன.
இந்த எலும்புகளிலாவது சோகாமேளின் எலும்பைக் கண்டு வழிபட வேண்டுமென்று விரும்பினர் சீடர்கள். ஆனால் எலும்பை அடையாளம் காண்பது எப்படி? செய்வதறியாது சீடர்கள் திகைத்து நின்றனர்.
அப்போது பெரும் ஞானியாகிய நாமதேவர் அங்கு வந்தார். சீடர்களின் திகைப்பைக் கண்டு, அவர்களை அழைத்தார். அவர்கள் தங்கள் குருவின் எலும்பு கிடைக்கவில்லை என்று கூறினர். அதற்கு அவர், சோகாமேளரின் எலும்பை அடையாளம் காண்பது மிகவும் எளிது. ஒவ்வொரு எலும்பாக எடுத்துக் காதோரம் வைத்துப் பாருங்கள். எந்த எலும்பிலிருந்து விட்டல! விட்டல! என்ற ஒலி வருகின்றதோ அதுதான் சோகாமேளரின் எலும்பு என்று அறிந்து கொள்ளலாம் என்றார் நாம தேவர்.
என்ன அதிசயம்! ஓர் எலும்பிலிருந்து, நாமதேவர் சொன்னபடியே, விட்டல! விட்டல! என்ற இனிய ஒலி மெல்லிதாகக் கேட்டது.
வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் திருநாமத்தை உச்சரித்து வந்தமையால், சோகாமேளரின் எலும்பிலும் கூட அந்த ஒலி பதிந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. இதிலிருந்து நாமஜெபத்தின் பெருமையையும் சோகாமேளரின் பரமபக்தியையும் அறிந்து கொள்ளலாம்.
புதையல் எடுத்தது போல் பூரித்துப் போன சீடர்கள் அந்த எலும்பை வைத்துப் பூசித்து வந்தனர். நாமஜெபமும் செய்து வந்தனர். அங்கே தினந்தோறும் விட்டல விட்டல என்ற ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.
குடல் ஒட்டுண்ணிகள்: வயிறு/குடலில் உள்ள ஒட்டுண்ணிகள் அல்லது புழுக்கள் நிறைய அசcomகரியங்களைக் கொண்டுவருகின்றன. இது வயிற்றில் வலிக்கு வழிவகுக்கிறது மற்றும் உங்கள் பசியையும் பாதிக்கிறது. குடல் ஒட்டுண்ணிகளை அகற்ற உதவும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
வயிற்றில் உள்ள புழுக்கள் பெரும்பாலும் இரைப்பைக் குழாயில் உள்ளன. அவை இரைப்பைக் குழாயைப் பாதிக்கின்றன மற்றும் மற்ற உடல் பாகங்களையும் பாதிக்கின்றன. புழுக்கள் அல்லது ஒட்டுண்ணிகள் உடலில் நிறைய அசௌகரியங்களையும் அசௌகரியங்களையும் கொண்டு வருகின்றன. இது வயிற்று வலி, வாந்தி, பலவீனம், இரைப்பை பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
வயிற்றில் ஒட்டுண்ணிகள் இருப்பது, இறைச்சியை சாப்பிடுவது, அசுத்தமான தண்ணீரை குடிப்பது, சுகாதாரமான உணவை உண்ணாமல் இருப்பது மற்றும் மண் மற்றும் அசுத்தமான தண்ணீருடன் தொடர்பு கொள்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். வயிற்றில் உள்ள புழுக்களை அகற்ற மக்கள் பெரும்பாலும் மருந்துக்காக செல்கிறார்கள். இருப்பினும், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற உதவும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. வீட்டு வைத்தியம் பற்றி விரிவாக பேசலாம்.
வயிற்றிலிருந்து ஒட்டுண்ணிகள்/புழுக்களை எப்படி அகற்றுவது?
• மூல பப்பாளி
• பூண்டு
• பூசணி விதைகள்
• வேம்பு
• மஞ்சள்
¶ மூல பப்பாளி
பப்பாளிப் பழத்தில் பப்பேன் என்சைம் உள்ளது, இது இயற்கையில் ஆன்டெல்மிண்டிக் ஆகும். இது வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற உதவுகிறது. இதற்காக, 4 ஸ்பூன் வெந்நீரை எடுத்து, அதில் 1 தேக்கரண்டி, பப்பாளி பழச்சாறு சேர்க்கவும். இப்போது சிறிது தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இதை தினமும் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
¶ பூண்டு
வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற பூண்டு உதவுகிறது. பூண்டு ஒட்டுண்ணி எதிர்ப்பு உணவாகும், இது வயிற்றில் உள்ள புழுக்களை அகற்ற உதவுகிறது. மூல பூண்டில் அமினோ அமிலம் உள்ளது மற்றும் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் தன்மை கொண்டது. தினமும் காலையில் பூண்டு உட்கொள்வது வயிற்றில் உள்ள புழுக்களை அகற்ற உதவுகிறது.
¶ பூசணி விதைகள்
பூசணி விதைகளில் குக்குர்பிடாசின் என்று அழைக்கப்படும் ஒரு கலவை உள்ளது. இது ஒட்டுண்ணி எதிர்ப்பு தன்மையைக் கொண்டுள்ளது, இது வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற உதவுகிறது. 2 தேக்கரண்டி கொதிக்கவும். பூசணி விதைகள் தண்ணீரில். 30 நிமிடங்கள் கொதிக்க வைத்து, தண்ணீர் ஆறியவுடன் உட்கொள்ளவும்.
¶ வேம்பு
வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற வீட்டு வைத்தியம் உதவுகிறது. வேப்பம்பூ சாறு வயிற்றில் உள்ள புழுக்களை அகற்ற உதவுகிறது.
வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற வேம்பு இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேப்ப இலைகளை நசுக்கி அரைத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும். நீங்கள் ஒரு வாரத்திற்கு தினமும் குடிக்க வேண்டும் மற்றும் வித்தியாசத்தை பார்க்க வேண்டும்.
¶ மஞ்சள்
உடலில் இருந்து ஒட்டுண்ணிகள் அல்லது புழுக்கள் வெளியேற, ஒருவர் மஞ்சள் பயன்படுத்த வேண்டும். இது ஆண்டிசெப்டிக் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டது. இது வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை எளிதில் அகற்ற உதவுகிறது. ஒரு கிளாஸ் மோர் எடுத்து அதில் சிறிது மஞ்சள் சாறு சேர்க்கவும். இதை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள ஒட்டுண்ணிகள் வெளியேறும்.
இந்த பயனுள்ள வீட்டு வைத்தியம் மூலம் குடல்/வயிற்றில் உள்ள புழுக்களை எளிதில் அகற்றலாம். .
கற்றாழை தலைமுடிக்கு அற்புதமான நன்மைகளைத் தருகிறது. கற்றாழையில் கூந்தலுக்கு தேவையான 100 விதமான சத்துக்கள் உள்ளன.
கற்றாழை ஜெல்லில் உள்ள புரோட்டியோலைடிக் என்சைம் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
கற்றாழை ஜெல் உங்கள் கூந்தலை மென்மையாக பட்டு போன்று மாற்றும். மேலும் இது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு அழகான அடர்த்தியாக வளர பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்:
1 கற்றாழை தண்டு சிறிது,
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
தண்டை இரண்டு பகுதிகளாக வெட்டி, கற்றாழை ஜெல்லை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். இந்த
கற்றாழை ஜெல்லின் அரை கப் தேங்காய்
எண்ணெய்யுடன் கலக்கவும். கற்றாழை தேங்காய் எண்ணெயின் விகிதம் 1:1 ஆக இருக்க வேண்டும்.
இந்த கலவையை மிதமான சூட்டில் சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை சூடாக்கவும். அடுப்பை அணைத்து விட்டு குளிர்விக்கவும். கலவையை ஒரு இருண்ட பாட்டில் ஊற்றி, பயன்படுத்துவதற்கு முன்பு சுமார் 2 வாரங்களுக்கு குளிர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
நன்மைகள்:
இந்த வீட்டில் செய்த கற்றாழை தேங்காய் எண்ணெய் பொடுகு மற்றும் முடி உதிர்வுக்கு இது ஒரு சிறந்த எண்ணெய். இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது, பலவீனமான முடியை பலப்படுத்துகிறது. இது முடியை வலுவூட்டி, தலை முடி மற்றும் ஸ்கேல்ப் pH அளவை சமநிலையில் வைத்திருக்கும்.
அரவிந்த் சாமி புகழின் உச்சியில் இருந்தபோதே திரையுலகை விட்டு ஒதுங்கியவர், சமீபத்தில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் (IFFM) தனது வாழ்க்கையின் இருண்ட பக்கத்தைப் பற்றி மனம் திறந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி தற்போது வில்லன் – ஹீரோ என பயணித்து வரும் நடிகர் அரவிந்த் சாமி, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவம் மற்றும் விபத்தை சந்தித்தபோது ஏற்பட்ட போராட்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. விளம்பர படங்களில் நடித்தன் மூலம் தளபதி பட வாய்ப்பை பெற்ற இவர், அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் 'ரோஜா', 'பம்பாய்' போன்ற திரைப்படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பான் இந்தியா ஹீரோவாக பிரபலமானார். புகழின் உச்சியில் இருந்தபோதே திரையுலகை விட்டு ஒதுங்கிய அவர், சமீபத்தில் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் (IFFM) தனது வாழ்க்கையின் இருண்ட பக்கத்தைப் பற்றி மனம் திறந்துள்ளார்.
2005-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தில், தண்டுவடக் காயம் (Spinal Injury) அரவிந்த் சாமியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. இதனால் அவர் ஒரு பக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையானார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர் அனுபவித்த உடல் மற்றும் மன ரீதியான வேதனைகள் விவரிக்க முடியாதவை. அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டாம் என்று நான் எடுத்த முடிவால்தான் ஒன்றரை ஆண்டுகள் அந்த வலியைச் சுமந்தேன்," என்று அவர் கூறியுள்ளார்.
இந்த காயத்திற்காக அனைத்து மருத்துவ முறைகளையும் முயன்று பார்த்த அரவிந்த் சாமி, கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத மருத்துவரின் சந்திப்பு திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை அலோபதி மருத்துவத்தையே நம்பியிருந்த அரவிந்த் சாமிக்கு, ஆயுர்வேதம் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்தது. ஆயுர்வேத சிகிச்சை தொடங்கிய 3-வது நாளிலேயே அவர் நடக்கத் தொடங்கினார். ஆயுர்வேதத்தில் உள்ள "பழங்கால ஞானம்" தனக்கு உதவியதாக அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம் இது எனது தனிப்பட்ட அனுபவம் மட்டுமே. இதையே எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்று நான் கூறவில்லை. உங்களை கவனிக்கும் மருத்துவர்களின் அறிவுரையை மட்டுமே நீங்கள் பின்பற்ற வேண்டும்," என்று அவர் தெளிவுபடுத்தினார். இந்த 18 மாத கால போராட்டத்தை ஒரு உடல் ரீதியான பிரச்சனையாகப் பார்க்காமல், ஒரு மன ரீதியான சவாலாகவே எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ள அரவிநத் சாமி, வலி மற்றும் நடமாட முடியாத சூழலைத் தாங்கும் சக்தி நம் மனதில்தான் இருக்கிறது. அந்த நேரத்தில் "ஏன் எனக்கு இப்படி நடந்தது?" என்று ஒருபோதும் நான் வருந்தியதில்லை. மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க செஸ், பஸில்ஸ் மற்றும் போர்டு கேம்களை விளைாடினேன். இதன் மூலம் ஒரு நாளைச் சோர்வின்றி கடக்க முடிந்தது என்று கூறியுள்ளர்.
ஒரு கட்டத்திற்கு பிறகு, உடல்நிலை தேறிய அரவிந்த், தனது குழந்தைகளுக்காக நேரத்தைச் செலவிட விரும்பியுள்ளார். ஆனாலும் அவரை அறிமுகம் செய்த இயக்குனர் மணிரத்னம் தான் இயக்கிய கடல் படத்தில் மீண்டும் அவரை நடிக்க வைத்து அரவிந்த் சாமியின் ரீ-என்ட்ரிக்கும் காரணமாக இருந்தார். இது குறித்து பேசிய அவர், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை. மருந்துகள் உட்கொண்டதால் உடல் எடை அதிகரித்திருந்தது, தலைமுடி உதிர்ந்திருந்தது. நான் தயாராக இல்லை என்று அவரிடம் சொன்னேன்.
அந்த சமயத்தில் மணிரத்னத்தின் ஊக்கத்தால் உடல் மற்றும் மன ரீதியாகத் என்னைத் தயார்படுத்திக்கொண்டு 'கடல்' படத்தில் நடிக்க உதவியது என்று கூறியுள்ளர். கடல் படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், அரவிந்த் சாமியை மீண்டும் வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்தது. தற்போது அவர் 'காந்தி டாக்ஸ்' (Gandhi Talks) என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்று மீண்டும் ஒரு வெற்றிகரமான நடிகராக திகழும் அரவிந்த் சாமியின் பயணம் பலருக்கும் ஒரு சிறந்த உத்வேகம் என்று சொல்லலாம்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உங்கள் மீதான அவப்பெயர்கள் விலகும். தம்பதிகளுக்குள் நெருக்கமும் புரிதலும் அதிகரிக்கும். தன வரவுகள் திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
ரிஷபம்
மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். கல்வியில் இருந்த ஆர்வம் இன்மை குறையும். குண நலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
கற்றல் பணிகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். மனதில் இருக்கும் ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். தடைபட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆரோக்கியம் செயல்களில் கவனம் வேண்டும். அச்சம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உருவாகும். உணவு சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். தடைபட்ட பணிகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். செயல்பாடுகளில் மாற்றங்கள் வெளிப்படும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். சாலை பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். உத்தியோக பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். புரிதல் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் ஈடேறும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்களுக்கு தெளிவுகள் பிறக்கும். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் கைகூடும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
தொழில் சார்ந்த எண்ணங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றுவீர்கள். குழப்பங்களில் இருந்து தெளிவுகளை பெறுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் செல்வாக்குகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருத்துவம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். கால்நடை வளர்ப்பு பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். குடியுரிமை கிடைப்பதில் இருந்த வந்த தாமதங்கள் குறையும். மருத்துவத் துறைகளில் லாபங்கள் ஏற்படும். உணவு சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத்தன்மை ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். வியாபார பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். மற்றவர்கள் மூலம் எதிர்பார்த்த சில ஆதாயங்கள் தாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உதாசீன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பரமான சிந்தனைகளை தவிர்த்து சிக்கனமாக செயல்படுவீர்கள். வேலையாட்களிடம் நிதானம் வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். குழந்தைகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மகரம்
பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். இனிமையான பேச்சுக்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இலக்கியம் பணிகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
தனித் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
மீனம்
செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உருவாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். அரசு சார்ந்த ஆவணங்கள் கையாள்வதில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
விசுவாவசு வருடம் தை மாதம் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3.2.2026.
இன்று அதிகாலை 03.37 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று அதிகாலை 12.29 வரை ஆயில்யம். பின்னர் மகம் .
இன்று அதிகாலை 04.30 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம். கரணம் :
அதிகாலை 03.37 வரை கௌலவம். பின்னர் மாலை 03.18 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று அதிகாலை 12.29 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.35 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் நடிப்பில் இந்த ஆண்டும் அரை டஜன் படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒரு படம் தான் டி55. இப்படத்தை அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். அமரனை போல் இதுவும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
டி 55 திரைப்படத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனம்தான் தயாரிக்கிறது. அப்படம் குறித்த அறிவிப்புகள் கடந்த சில தினங்களாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி டி 55 திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக முதலில் அறிவித்திருந்தனர். அதன் பின்னர் நடிகை ஸ்ரீலிலா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
டி 55 திரைப்படத்தில் நடிக்க உள்ள மற்றொரு நாயகி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை சாய் பல்லவியும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அமரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் சாய் பல்லவி. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
அதேபோல் தனுஷ் உடன் சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் கூட்டணி அமைக்க இருக்கிறார் சாய் பல்லவி. இவர்கள் இருவரும் கடைசியாக மாரி 2 திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்படத்தில் தனுஷும் சாய் பல்லவியும் போட்டி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல் இன்றளவும் யூடியூபில் அதிக வியூஸ் அள்ளிய தமிழ் பாடல் என்கிற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

















