- · 1 friends
-
2 followers
யாரிடமும் சொல்ல முடியாத விஷயம்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தாயார் வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில பணிகள் நிறைவு பெறும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். வீடு மாற்ற தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
செய்கின்ற முயற்சியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். இழுபறியான சில செயல்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மிதுனம்
பொன் பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதானமான செயல்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கடகம்
உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. கல்வி சார்ந்த செயல்களில் சில மாற்றம் ஏற்படும். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும். சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான பயணங்கள் கைகூடும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். வியாபாரங்களில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுபகாரிய தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். துறைகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
துலாம்
எதிர்காலம் கருதி சில பணிகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தையுடன் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். வாகன வசதிகள் மேம்படும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி ஒரு தெளிவு பிறக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
விருச்சிகம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திடீர் இடமாற்றங்கள் நேரிடும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். போட்டி செயல்களில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
நண்பர்கள் வழியில் அலைச்சலும் எதிர்பாராத விரயங்களும் உண்டாகும். பணி புரியும் இடத்தில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக முடிவு பெறும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் வெளிப்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மகரம்
வாழ்க்கை துணைவர் பற்றிய புரிதல்கள் மேம்படும். மனதில் இருந்து வந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் நிம்மதி ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மீனம்
சபை தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் லாபம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தெளிவும் புரிதலும் பிறக்கும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் பிறக்கும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் இருந்த வேறுபாடுகள் விலகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உலகில் அதிகமாக வீணாக்கப்படுவது யாராலும் புரிந்துக் கொள்ளப்படாத அன்பு.
நீங்கள் பணத்தை கையாளவில்லை என்றால், அது உங்களை கையாளும்.
'எனக்குத் தெரியாது’ என்பது உலகின் மிகச்சிறந்த தற்காப்பு கலை.
இன்னும் கண்டுப்பிடிக்கப்படாத பொய்க்கு உண்மை என்று பெயர்.
கவலையை விட, மிகவும் கொடியது ஒருவரிடம் உள்ள சந்தேகமே.
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 24.4.2026
இன்று அதிகாலை 02.01 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று அதிகாலை 01.42 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.
இன்று காலை 07.52 வரை திருதி . பின்னர் சூலம்.
இன்று அதிகாலை 02.01 வரை வனிசை. பின்னர் பிற்பகல் 01.06 வரை பத்திரை. பிறகு பவம் .
இன்று அதிகாலை 05.59 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கனடாவில் பூமாலை (pollen) அலர்ஜியால் பாதிக்கப்படும் மக்களுக்கு 2026ஆம் ஆண்டில் வாழ்வதற்கு மிகவும் சவாலான நகரமாக விண்ட்சர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவா அடிப்படையிலான ஏரோபயோலொஜி (Aerobiology) ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி, கனடாவில் சுமார் 80 லட்சம் முதல் 1 கோடி மக்கள் வரை (ஐந்தில் ஒருவர்) மரங்கள், புல்வெளிகள் மற்றும் களைகள் மூலம் பரவும் பூமாலை அலர்ஜியால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் மூக்கடைப்பு, நீர்வடிவு, தும்மல், இருமல் மற்றும் கண் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஆய்வு தரவரிசை, பூமாலை பரவும் கால அளவு மற்றும் அதிக அல்லது மிக அதிக அளவிலான காற்றில் பரவும் பூமாலை நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அதிக பாதிப்பு உள்ள நகரங்கள் (2026)
1. விண்ட்சர்
2. ஹாமில்டன்
3. பேரி
4. விக்டோரியா
5. கிங்ஸ்டன்
ஆய்வில் குறிப்பிடப்பட்டதாவது, விண்ட்சர் நகரத்தில் சுற்றியுள்ள அடர்ந்த தாவர வளம், காலநிலை நிலைமைகள் மற்றும் அதிக அளவில் அலர்ஜி ஏற்படுத்தும் மரங்கள் (பர்ச், ஓக், ராக்வீட்) இருப்பதால் பூமாலை பரவல் அதிகமாக இருப்பதாகும்.
குறைந்த பாதிப்பு உள்ள நகரங்கள்
1. செயின்ட் ஜான்ஸ்
2. செயின்ட் ஜான்
3. ரெஜினா
4. மோன்க்டன்
5. ஹாலிஃபாக்ஸ் இந்த ஆய்வு, பருவகால அலர்ஜி பாதிப்புகள் கனடாவின் பல நகரங்களில் வாழ்வாதாரத்தை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
குற்றக் குழுக்கள் தெற்காசிய சமூகங்களை இலக்காகக் கொண்டு நடத்தும் மிரட்டல் வசூல் நடவடிக்கைகளில் இந்திய மாணவர்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கனடாவின் நிதி நுண்ணறிவு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய சிறப்பு அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் பண பரிவர்த்தனை நிறுவனங்கள் மிரட்டல் சம்பந்தப்பட்ட பணப்பரிவர்த்தனைகளை அடையாளம் காண பல்வேறு எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் ஆண்டுதோறும் வங்கிகள், கடன் சங்கங்கள், பங்குச் சந்தை நிறுவனங்கள், பண பரிமாற்ற சேவைகள், நிலமூலதன முகவர்கள் மற்றும் கேசினோக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பெறப்படும் கோடிக்கணக்கான தரவுகளை ஆய்வு செய்து பணமோசடி தொடர்பான தகவல்களை கண்டறிகிறது.
பின்னர், இந்த தகவல்கள் கனடிய பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்கு பகிரப்படுகின்றன.
2026ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்ட மிரட்டல் தொடர்பான நிதி நுண்ணறிவு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது கடந்த இரண்டு ஆண்டுகளை விட அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தகவல்களில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் 63,000க்கும் அதிகமான நிதி பரிவர்த்தனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த மிரட்டல் நடவடிக்கைகள் தற்போது தனிப்பட்ட சம்பவங்களை தாண்டி, மாகாணங்களைக் கடந்து ஒருங்கிணைக்கப்படும் “தொடர்ச்சியான அழுத்த முயற்சி” ஆக மாறியுள்ளதாகவும், குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பர்ட்டா, மானிடோபா மற்றும் ஒண்டாரியோ மாகாணங்களில் அதிகமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டின் வழியே வேதாளத்தை விக்ரமாதித்தியன் சுமந்து வந்து கொண்டிருந்த போது, அந்த வேதாளம் அவனிடம் இந்த கதையை கூறியது. சொர்ணபுரி என்ற நாட்டை மன்னன் வீரபாகு சீறும் சிறப்புமாக ஆண்டுவந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு பிறகு தன் நாட்டை ஆள வாரிசு இல்லையே என்று கவலை கொண்ட மன்னன், வீரமிக்க ஒருவன் தன் காலத்திற்கு பிறகு இந்த நாட்டை ஆளவேண்டும் என எண்ணினான். இதை பற்றி தனது மந்திரியிடம் ஆலோசித்தான்.
அப்போது இந்நாட்டின் எல்லையிலிருக்கும் ஆசிரமத்தில் ஒரு துறவி, இளைஞர்களுக்கு வீரக்கலைகளை கற்றுத்தந்து, அவர்களை மிகச்சிறந்த வீரர்களாக்குவதாகவும், அங்கு சென்று பார்த்தால் இந்நாட்டை ஆளும் தகுதியுடைய நபர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார். அதன் படி மன்னன் வீரபாகுவும், அவன் மந்திரியும் அந்த ஆசிரமம் சென்று தங்களின் எண்ணத்தை அந்த துறவியிடம் கூறினர். இதை கேட்ட அந்த துறவி, தான் அவர்களுக்கு உதவுவதாக கூறி, தனது ஆசிரமத்தின் மிகச் சிறந்த வீரர்களான ராமன், ஜெயன், கௌதமன் என்ற மூவரை அழைத்து, ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்குமாறும், ஒரு மாதத்திற்கு பிறகு இந்த ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தங்களின் அனுபவத்தை கூற வேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
ஒரு மாதத்திற்கு பிறகு அந்த மூவரும் ஆசிரமத்திற்கு திரும்பினர். அங்கு மன்னன் வீரபாகுவும் அவனது மந்திரியும் அந்த துறவியுடன் இருந்தனர். அப்போது ராமன், தான் இந்த ஒரு மாத காலம் வடதிசை நோக்கி பயணித்ததாகவும், அப்போது ஒரு நாட்டின் மன்னனுக்கு எதிராக சில இளைஞர்கள் ஒருவனின் வழிகாட்டுதலின் படி புரட்சியில் ஈடுபட, காட்டின் மறைவான இடத்தில் ஆயுத பயிற்சி மேற்கொண்டிருந்ததாகவும், எனவே அக்கூட்டத்தின் தலைவனை தான் அம்பெய்தி கொன்று விட்டதாகவும் கூறினான். இப்போது ஜெயன், தான் தென் திசையை நோக்கி பயணித்ததாகவும், அந்த திசையின் பல இடங்களில் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் அதிகமிருந்ததால் அங்குள்ள இளைஞர்களுக்கு, தான் வாள் போர் கலையை கற்றுத்தந்து அவர்கள் தங்களை தற்காத்து கொள்ள தான் உதவியதாக கூறினான்.
மூன்றாவதாக கௌதமன், தான் கிழக்கு திசையை நோக்கி பயணித்ததாகவும், தனது வீரத்தை காட்டக்கூடியதற்குண்டான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லையென்றாலும் வழியில் காட்டின் ஓரத்திலுள்ள ஒரு குளத்தில் ஒரு குட்டி யானை சிக்கி தவித்ததைக் கண்டு, தான் அந்த ஊர் மக்களின் உதவியுடன் அந்த குட்டி யானையை மீட்டு அதன் கூட்டத்தில் சேர்த்ததாகவும், பிறகு மக்கள் அனைவருக்கும் பிறருடன் சண்டையிடாமல் வாழ்வதை பற்றி அறிவுரை கூறியதாகவும் கூறினான். இதையெல்லாம் கேட்ட வீரபாகுவும், அவன் மந்திரியும் வீரம் நிறைந்த காரியங்கள் செய்த ராமன், ஜெயன் ஆகிய இருவரில் ஒருவரை தங்கள் வாரிசாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தாலும் அந்த துறவியின் கருத்தை கேட்க விரும்பினர்.
சிறிது நேரம் ஆலோசித்த பின்பு கௌதமனை வாரிசாக தேர்ந்தெடுக்கும் படி கூறினார் அந்த துறவி. “விக்ரமாதித்தியா அந்த துறவி கௌதமனை வாரிசாக தேந்தேடுக்க கூறியது ஏன்? எனக் கேட்டது வேதாளம்.
“ராமன் ஜெயன் புரிந்தது வீரமிக்க செயல்கள் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் ஒரு நாட்டை நிர்வகிக்க வெறும் வீரம் மட்டும் போதாது. அம்மக்களிடம் உள்ள ஏற்ற, தாழ்வுகளை நீக்கி அவர்களிடம் ஒரு ஒற்றுமை உணர்வு ஏற்படுத்தும் திறன் வேண்டும். அது கௌதமனிடம் அதிகமிருந்தது. மேலும் கௌதமனுக்கு வீரத்தை காட்டக் கூடிய சூழ்நிலை தான் அமையவில்லையே தவிர அவன் ஒன்றும் கோழையல்ல. எனவே கௌதமனை வாரிசாக ஏற்கும் படி அந்த துறவி கூறினார்” என விக்ரமாதித்தியன் கூறிய பதிலைக் கேட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில், என்.டி.ராமாராவின் ஆட்சியை கவிழ்த்து முதல்வரான, நாதள்ள பாஸ்கர் ராவ் (90) நேற்று காலமானார்.
வழக்கறிஞரான நாதள்ள பாஸ்கர் ராவ், காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1978-ல் எம்எல்ஏ ஆனார். இதையடுத்து சென்னா ரெட்டி அமைச்சரவையில் இடம் பிடித்தார். 1982-ல் என்.டி.ராமாராவ் தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி உருவானதில் முக்கியப் பங்கு வகித்தார். 1983-ல் ஆந்திர முதல்வராக என்.டி.ராமாராவ் பதவியேற்றார். அப்போது பாஸ்கர் ராவ் நிதி அமைச்சரானார். 1984-ல் என்டிஆர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
அப்போது அவரது ஆட்சியை கவிழ்த்து, ஆகஸ்ட் 16, 1984-ல் ஆந்திர முதல்வரானார். இதற்கிடையில் நாடு திரும்பிய என்.டி.ஆர், நீதி கேட்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து பாஸ்கர் ராவ், ஒரு மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வராக என்டிஆர் மீண்டும் பதவியேற்றார். நாதள்ள பாஸ்கர் ராவ், 1998-ல் காங்கிரஸ் எம்பியாக கம்மம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ல் பாஜகவில் இணைந்தார்.
பாஸ்கர் ராவ் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். இவரது மகன் நாதள்ள மனோகர், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்து, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் கூட்டணி அரசில் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். பாஸ்கர் ராவின் இறுதிச் சடங்குகள் இன்று ஹைதராபாத் பஞ்சகுட்டா மயானத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் ஈடேறும். மனை சார்ந்த செயல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த செயல்களில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்கள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
ரிஷபம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும் லாபமும் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கலைபணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மிதுனம்
உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்வதை குறைத்துக்கொள்ளவும். வேலையாட்கள் வழியில் அனுசரித்து செல்லவும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்டஎண் : 8
அதிர்ஷ்டநிறம் : அடர் நீலம்
கடகம்
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். பயணங்கள் மூலம் மனதளவில் மாற்றங்கள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளை பார்க்கவேண்டிய சூழல் அமையும். கால்நடைகளிடம் கவனத்துடன் இருக்கவும். துணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
சிம்மம்
உறவினர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். விவேகமான செயல்பாடுகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். நிர்வாக சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கன்னி
சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். சுப காரிய முயற்சிகள் கைகூடும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் மறையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
சுப காரிய முயற்சிகள் கைகூடும். மனதில் நினைத்திருந்த சில காரியங்கள் நிறைவேறும். சூழ்நிலை அறிந்து விட்டுக்கொடுத்து செயல்படவும். வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் திறமைகள் வெளிப்படும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
விருச்சிகம்
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல்நிலையில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் நிதானம் அவசியமாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிராக இருந்தவர்களின் பலம் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படும். கோபதாபங்களை குறைத்துக்கொள்ளவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்டஎண் : 9
அதிர்ஷ்டநிறம் : இளம் சிவப்பு
கும்பம்
குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். நிர்வாக சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணி நிமித்தமான பயணம் ஏற்படும். பழைய சிந்தனைகள் மூலம் நெருக்கடியான சூழல்கள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 23.4.2026
இன்று அதிகாலை 03.38 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று அதிகாலை 03.02 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.
இன்று காலை 10.36 வரை சுகர்மம் . பின்னர் திருதி.
இன்று அதிகாலை 03.38 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 02.49 வரை கரசை. பிறகு வனிசை .
இன்று அதிகாலை 05.59 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை







