·   ·  10 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 503
  • More

யாரிடமும் சொல்ல முடியாத விஷயம்

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

அரசன் ராஜராஜனால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில்,

"உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்" என்ற இறைவனின் அசரீரியாக உணர்ந்திட்ட மன்னன் மந்திரியை அழைத்து அதற்கு விளக்கம் கேட்க,

"உன் மறைவில் என்பது உங்களால் கட்டப்பட்ட கோயில்" என்பதாகும்.

இடைச்சியின் நிழல் என்பது "இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கல்" கோபுரத்தின் மேல் இருப்பதாகும்.

பொன்மணித்தட்டாரின் இதயத்தில் என்பது பொருள் விளங்கவில்லை மன்னா" என்று கூறினார்.

இந்த ஊரில் பொன்மணித் தட்டார் என்பவர் இருந்தால் அழைத்து வருமாறு அரண்மனை ஆட்களை ராசராசன் அனுப்பிவைக்க, அவர்களும் கடைவீதியில் பொன் வியாபாரியிடம் விசாரித்து பொன்மணித்தட்டாரை கண்டு வணங்கி அவரை அரசன் அழைத்துவர சொன்ன செய்தியைக் கூற அவர்,

"நானோ எளியவன். அரசரிடம் எனக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லை மேலும் அரசனுக்கு தேவையான ஆபரணங்களை செய்யும் ஆற்றலும் என்னிடம் இல்லை. என்னிடம் இருப்பதோ கோணி வஸ்திரம் மட்டுமே இதைத்தவிர வேறொன்றும் இல்லை. ஆகையால் நான் அங்கு வரவில்லை" என்று கூறிவிட்டார்.

அதைஅறிந்த அரசன் பரிவாரங்களுடன் பொன்மணித்தட்டாரைப் பார்க்க வந்தார். பொன்மணித்தட்டாரை வணங்கித் தங்களின் இதயத்தில் இறைவன் எழுத்தருளி இருப்பதாகக்கேட்ட அசரீரி விடயத்தை எடுத்துக் கூறி சந்தேகம் போக்குமாறு கேட்டார்.

அதற்கு பொன்மணித்தட்டார் அரசனை நோக்கி ஆலயத்திற்கு நேரே வடக்கு திசையில் ஒரு குளம் வெட்டி அதன் நடுவில் சிறு கோயில் ஒன்று அமைத்து அங்கிருந்து பார்த்தல் கோபுரம் தெரிய வேண்டுமாறு அமைக்கச் சொன்னார். மேலும் அதனை அமைத்து எட்டாவது நாளில் இறைக்காட்சி கிடைக்குமென்றார்.

அவர் கூறியதற்கமைய சிவகங்கை தீர்த்தம் என்னும் திருக்குளத்தை அமைத்து பொன்மணித்தட்டார் மொழிந்தவாறு கட்டி முடித்த எட்டாம் நாள் மன்னர் அவர் வீட்டுக்குச்சென்று பொன்மணித்தட்டாரை அழைத்து வந்தனர்.

திருக்குளக்கோயிலுக்குச் செல்ல அரசன் தெப்பம் உள்ளதெனக்கூற,

அவரோ தண்ணீரின் மேல் நடந்தே சென்று கோயிலினுள் அமர்ந்து

அவரின் இயத்தில் இறைகாட்சியை எல்லோருக்கும் நல்கி அக்காட்சியோடு ஒளியாக மாறி கோபுரத்தில் கலந்தார். அவரின் சமாதி சிவகங்கைக் குளக்கோயிலில் இருக்கின்றது. இதனைக்கண்ட அரசனும் மற்றவர்களும் வணங்கி இறைவனை காணும் பாக்கியத்தைப் பெற்றதை எண்ணி வியந்தனர்.

இன்றும் பொன்மணி தட்டாரின் சமாதிக்கு அபிஷேகம் செய்த பின்னரே தான் தஞ்சை பிரகதீஸ்வரர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

  • 6
·
Added a post

ஆபிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன.

தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார்.

ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது.

இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள்.” என்று கட்டளையிட்டார்.

வேலைக்காரன் கெஞ்சினான், நான் உங்களுக்கு பத்து வருடங்களாக சேவை செய்தேன்,நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா? தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் ஒன்று தாருங்கள்! ”

ராஜா ஒப்புக்கொண்டார்.

அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான்.

காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக்கொண்டார்.

அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான்.

அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்கி அன்பு காட்டினான்.

பத்து நாட்கள் முடிந்தது.

வேலைக்காரனைத் தண்டிப்பதற்காக நாய்களிடம் தூக்கி எறியும்படி அரசர் உத்தரவிட்டார்.

அவன் தூக்கி எறியப்பட்டபோது, ​​அவை ஓடிவந்து அவனின் கால்களை நக்கத் தொடங்கின.

இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்!

இதைப் பார்த்து திகைத்த அரசன்,"என் நாய்களுக்கு என்ன நேர்ந்தது?" என்றான்.

வேலைக்காரன் பதிலளித்தான், "நான் பத்து நாட்களுக்கு மட்டுமே இந்த நாய்களுக்கு சேவை செய்தேன், அவை என் சேவையை மறக்கவில்லை. நான் உங்களுக்கு பத்து வருடங்கள் சேவை செய்தும் என் முதல் தவறைக்கூட மன்னிக்காமல் நான் உங்களுக்கு செய்த அனைத்தையும் மறந்து என்னை தண்டிக்க உத்தரவிட்டீர்கள்!"

அரசர் தனது தவறை உணர்ந்து வேலைக்காரனை விடுவிக்க உத்தரவிட்டார்.

நம்மிலும் எத்தனையோபேர் இப்படி இருக்கிறோம்.

ஒருவர் செய்த ஒரு தவறுக்காக, அவர் எமக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்து அவரை வாழ்நாளெல்லாம் ஒதுக்கி வாழும் எத்தனையோபேர் எம்மிலும் இல்லாமல் இல்லை. இருக்கிறார்கள்.

தவறு செய்வது மனித சுபாவம். இதை உணர்ந்து தவறுகளை மன்னிக்கப் பழகுவதும் மனித சுபாவம்•

  • 16

ஆற்றில் சுகமாக குளிக்கும் யானை

  • 16
·
Added a post

ஜலதோஷம், நெஞ்சு படபடப்பு ஆகியவற்றுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால், ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும் உடல் சமநிலைக்கு வந்துடும்.

இதய நோயாளிகளுக்கு இப்படியான பிரச்சினைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இதை செய்யலாம். பொடியாக நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

வெங்காயம் இரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

  • 17
·
Added a post

புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.

சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.

மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது.

திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.

இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது.

உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.

ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.

“வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.

கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!

உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறினான் அரசன்.

அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.

இது ஆறாவது சிலை.

ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.

உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.

இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள்.

“அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.

சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னிடம் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.

“அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.

அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொன்னான்.

மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விடுவேன் என்று தோன்றுகிறது. எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றான்.

“நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?

கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று பதட்டத்தோடு சொல்ல.

“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்” என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்..

சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.

ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.

கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை.

உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!

வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.

ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.

நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.

ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான்.

”உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்” என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.

சிற்பி இல்லை என்று தலையாட்டினார், “என்ன சொல்ல வருகிறாய்?” மன்னன் மறுபடியும் சீறினான்.

”இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்,” என்று சொல்ல….

“இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே” என்று மறுபடியும் சீறினான்.

”இல்லை அரசே .இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல,” என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.

உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது! தரையை நனைத்தது.

மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.

இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம்? ‘

தமிழ்நாட்டில் - கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.

வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.

கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர் திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும்.

உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!

கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான்.

அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!

தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.

தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.

இறைவி பெயர் தேகசௌந்தரி,

ஸ்தலமரம் அரசு,

தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.

கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும்.

குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம்.

எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள்!

கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்களேன்!

திருநல்லம் ஒரு முறையேனும் சென்று வாருங்கள். சிவ அழகில் சொக்கிப் போய் வருவது கண்கூடான உண்மை..

  • 24
·
Added a post

அடி மேல் அடி தான்.

அந்த காலத்தில் நாங்க எதுக்கெல்லாம் அடி வாங்கி இருக்கோம்னு இப்போது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆக்கிடுச்சு என்பதுதான் இங்கே மேட்டரே...

1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா மறுபடியும் அடி..

2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால் மறுபடியும் அடி..

3. அடி வாங்காமலேயே அழுதாலும் விழும் அடி..

4. பெரியவங்க உட்கார்ந்திருக்கும் இடத்தில் நின்னுட்டு இருந்தா அடி..

5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உட்கார்ந்திட்டே இருந்தா அடி.

6. பெரியவங்க உட்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தால் அடி.

7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டால் அடி..

8. தட்டில் சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அடி.

9. சூரியன் மறைஞ்ச பிறகு லேட்டா வீட்டுக்கு வந்தா, எங்க சுத்திட்டு வர்ரேன்னு ஒரு மொத்து.

10. அடுத்தவன் வீட்ல சாப்பிட்டு வந்தா அடி..

11. எப்போ பார்த்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருந்தா அடி.

12. ரொம்பவும் துள்ளிக் குதிச்சாலும் அடி.

13. மூத்தவங்களோட சண்டை போட்டு தோத்தா அடி..

14. சின்ன பசங்களோட சண்டை போட்டு ஜெயிச்சிட்டேன்னு கூவினா அடி.

15. ரொம்பவும் மெதுவா சாப்பிட்டா அடி.

16. அவசர அவசரமா அள்ளி போட்டு சாப்பிட்டாலும் அடி.

17. காணாது கண்டது போல கண்டமேனிக்கு சாப்பிட்டால் அடி.

18. பூரணமா சாப்பிடாமல் இருந்தால் அடி

19. சாப்பிட்ட பிறகும் தட்டை சுரண்டிட்டு இருந்தால் அடி,

20. பேசிட்டே சாப்பிட்டா அடி.

21. பெரியவங்க எழுந்த பிறகும் தூங்கிட்டு இருந்தா அடி.

22. விருந்தாளிங்க சாப்பிடுவதை பார்த்தால் அடி.

23. தடுமாறி நடந்து விழுந்தா உதை.

24. பெரியவங்களை முறைத்துப் பார்த்தால் அடி.

25. பெரியவங்க பேசும்போது முழிச்சா அடி.

26. அவங்க பேசும்போது முழிக்காம வெறிச்சு பார்த்தா அடி.

27. பெரியவங்களை ஓரக் கண்ணால பார்த்தால் அடி..

28. நண்பர்கள் தெருவில் ஃபுட்பால் ஆடும்போது நாம அவங்களோட சேர்ந்தால் அடி.

29. நண்பர்கள் விளையாடும் போது நாம உம்முன்னு வீட்ல உட்கார்ந்திருந்தாலும் அடி.

30. சாப்பிட்டபின் தட்டை அலம்பலேன்னா அடி.

31. சாப்பிட்ட தட்டை சரியா கழுவலைன்னா அடி.

32. சாப்பிட்ட தட்டை கீழே போட்டு நசுங்கல் ஏற்பட்டால் அடி.

33. கழுவின தட்டை ஒழுங்கா வைக்கலேன்னா அடி..

34. நகத்தை கடிச்சா அடி

34. குளிக்காவிட்டால் அடி.

35. காக்கா குளியலா குளிச்சு உடனே வந்தா முதுகுல பொளேர்.

36. உள்ள போயி ஒரு மாமாங்கம் ஆச்சுன்னா வெளில வந்தவுடன் அடி.

37. ஸ்கூல்ல மிஸ்பிஹேவ் பண்ணினேன்னு தெரிஞ்சா வீட்ல அடி.

38. தெருவில் போகிற கார் உரசிட்டு போச்சுன்னா அடி.

39. கார் அடிச்சு குத்துயிரும் குலையுயிருமா இருந்தாலும் அஜாக்கிரதைக்கு நாலு அடி.

40. கேட்ட கேள்விக்கு பதில் வரலைன்னா அடி.

41. பெரியவங்க பேசும்போது பதில் சொன்னா அடி.

42 லேட்டா கோவிலுக்கு போனா அடி.

43. ஃப்ரெண்ட்ஸ்ட்டேந்து ஓஸியா ஷூ வாங்கி போட்டுகிட்டா அடி.

44. அம்மா செலெக்ட் பண்ணின சட்டை பிடிக்கலைன்னா அடி

45. கடைசில அவங்க சூஸ் பண்னின ஷர்ட்டை செலெக்ட் பண்ணினா, இதுக்கு இம்புட்டு நேரமான்னு அடி.

46. வாத்தி சொல்லிகுடுத்த ரெண்டுங்கெட்டான் பதிலை பரிஷைல எழுதினா அதே வாத்தி ”சொந்தமா என்னடா gas விட்ர”ன்னு சொல்லி அடிக்கும்.

47. டீச்சர் தப்பு தப்பா நோட்ஸ் கொடுத்தாலும் நாம கரெக்ட் பதில் எழுதினா வாத்திட்ட ”நீ பெரிய பிஸ்தாவா”ன்னு சொல்லி வாங்கும் அடி..

48. வீட்ல பெற்றோர்கள் இடையில் அல்லது பெருசுங்க சண்டை மூட்ல இருந்தா நாம வாங்கும் அடி.

49. சொந்த காரங்கவீட்ல, நண்பர் வீட்ல பக்கிங்க மாதிரி சாப்பிட்டால், வீட்ல வந்து வாங்கும் அடி.

50 மூன்று தோசை/பூரியை தாண்டி இன்னொண்ணுன்னா வாங்கும் அடி.

51 எல்லாத்துக்கும் நெய்யா கேக்குதுன்னு முதுகுல பளார்.

52. சாப்பிட்ட பிறகு தட்டை நக்கினால் அடி.

53) காரணமும் தாண்டி காரணமே இல்லாமல் வாங்கும் அடி.

இன்னிக்கு பசங்களுக்கு இதெல்லாம் அபத்தமா தெரியலாம். ஆனால் கிட்டதட்ட கூட்டு குடும்பத்தில் பெரியோர்கள் - பங்காளிகளுடன் வாழ்ந்த அந்நாட்களில் இந்த அடிகள் வாங்கியது தான் எங்களுக்கு வாழ்வில் முன்னேற உதவின.

  • 25
·
Added a post

ஒரு காட்டில் ஓர் அதிசய விலங்கு வாழ்ந்து வந்தது. அதன் பாதிப்பகுதி விலங்கு வடிவம். மறுபாதி மனித வடிவம். ஆதலால், அது புருட மிருகம் என அழைக்கப்பட்டது.

அளவில்லாத வலிமை படைத்த மிருகம் அது. அதனால் அக்காட்டையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

வேற்றாளோ அல்லது வேற்று மிருகமோ அக்காட்டில் புகுந்தால், உடனே அவைகளை தனக்கு இரையாக்கி விடும்.

ஒரு நாள் வீமசேனன், எப்படியோ அக்காட்டின் வழியாக செல்ல நேர்ந்தது. அவனைக் கண்ட புருட மிருகம், இன்று நமக்கு நல்ல விருந்து கிடைத்தது என்று மகிழ்ந்தது. வீமனைப் பிடிக்க விரைந்தது. புருட மிருகத்தைக் கண்ட வீமன், தன் நாட்டை நோக்கி ஒடலானான்.

அவனைத் துரத்திய புருடமிருகம், ஒரு கட்டத்தில் அவனைப் பிடித்து விட்டது. ஆனால், அது பிடித்த போது, அவனுடைய வலது கால் தன் நாட்டிலும் இடது கால் அக்காட்டிலும் இருந்தது.

நீ என்னைப் பிடித்தது தவறு. நான் என் நாட்டைத் தொட்டுவிட்டேன். என்னை விட்டுவிடு என்றான் வீமன். இல்லை! இல்லை! நீ என் காட்டில் தான் பிடிபட்டாய்! ஆதலால் நான் உன்னை உண்பதில் தவறு இல்லை என்று வாதிட்டது புருடமிருகம்.

நம் வழக்கை நாமாகத் தீர்க்க முடியாது. இந்நாட்டு அரசரிடம் சென்று நீதிகேட்போம். அவர் சொற்படி நடப்போம் என்றான் வீமன். வீமன் யோசனையைப் புருட மிருகமும் ஒத்துக் கொண்டது. இருவரும் தருமன் சபையை அடைந்து, தம் வழக்கை எடுத்துரைத்தனர்.

உம் வழக்கில் தீர்ப்பு உரைப்பதற்கு முன், வீமன் பிடிபட்ட இடத்தைப் பார்க்க வேண்டும் என்றார் தருமன். உடனே தருமனும் அமைச்சரும் வீமனும் புருடமிருகமும் அந்த இடத்தை அடைந்தனர்.

இடத்தை ஆராய்ந்த தருமன் தன் தீர்ப்பை வழங்கினார். புருடமிருகமே! உன் பிரதிவாதி என் தம்பி என்பதற்காகப் பாரபட்சமாகத் தீர்ப்பு வழங்கமாட்டேன். உன் காட்டில் வீமன் உடலின் ஒரு பகுதி இருந்துள்ளது. மறுபகுதி எங்கள் நாட்டில் இருந்துள்ளது. ஆதலால், உன் காட்டில் இருந்த வீமன் உடலில் சரி பாதியை நீ உண்ணலாம் என்றான் தருமன்.

தண்டனை பெறுபவன் தம்பி என்று கூடப் பாராமல், நீதி வழுவாமல் தீர்ப்பு வழங்கிய தருமனைப் புருடமிருகம் பாராட்டியது.

தீர்ப்பின்படி வீமன் உடலின் பாதியை உண்ணத் தொடங்கியது.

அப்போது சகாதேவன் முன்னே வந்தான். பாண்டவரில், அனைத்து நீதி நூல்களும் அறிந்தவன் சகாதேவன். பகை என்று வெறுப்பதும், உறவு என்று விரும்புவதும் செய்யாத சமத்துவ அறிஞன்.

அத்தகைய சகாதேவன், தன் அண்ணனை நோக்கி, அண்ணா! நீதி தவறாமல் தீர்ப்பு வழங்கினீர்கள். ஆனால் அந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவது எப்படி என்று தாங்கள் நிர்ணயமாகக் கூறவில்லையே என்றான்.

தம்பி சகாதேவா, அந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவது எப்படி என்பது சகலகலை வல்லவனாகிய உனக்குத்தான் நன்கு தெரியும். அதனை நீயே சொல் என்றார் தருமன்.

அண்ணா! புருடமிருகம் வீமன் உடலில் பாதி உண்னும் போது மறுபாதியில் சிறு இரணமோ வலியோ ஏற்படக்கூடாது. அந்த வகையில் புருடமிருகம் உண்ணட்டும் என்றான் சகாதேவன். தருமன் சொன்ன தீர்ப்பைக் கண்டு அவனைப் பாராட்டிய புருடமிருகம், சகாதேவன் வழங்கிய திருத்தம் கண்டு மிகமிக மகிழ்ந்தது.

புருடமிருகம் தருமனை நோக்கி, அரசே! நான் அறக்கடவுள். உன் அறநீதியைப் பரிசோதிப்பதற்காகவே இப்படி ஒரு சோதனை மேற்கொண்டேன். இந்தச் சோதனையில் நீ வெற்றி பெற்று விட்டாய். வீமன் தன் வலிமையால் என்னைக் கொல்லமுடியும். ஆயினும் அறத்துக்குக் கட்டுப்பட்டுத் தண்டனை பெற முன் வந்தான். சகாதேவன் தான் கற்ற கலைத் திறத்தாலும் சமயோசித புத்தியாலும் அறநுணுக்கத்தை உணர்த்தினான்.

அறம் கர்ப்பதே கடனாகக் கொண்ட நீவிர் நெடுங்காலம் வாழ்க என்று வாழ்த்தி, புருடமிருக உருவம் நீங்கிய அறக்கடவுள் மறைந்தது.

  • 27
·
Added a post

அனுபவமற்ற ஒருவர் பல வேலைகளுக்கு சென்றார் ஆனால் அந்த வேலைகளில் நீண்ட காலம் தங்கியதில்லை. ஒவ்வொரு முறையும், அவர் மனச்சோர்வடைந்த மனநிலையுடன் வீடு திரும்புவார்.

அவரது மனைவி எப்போதும் அவரை ஆறுதல்படுத்துவார், ஒவ்வொறு முறையும், அவள் ஏமாற்றமடையவில்லை அல்லது கோபமடையவில்லை.

அவர் தனது முப்பது வயதை எட்டியபோது அவர் மொழிகளில் ஒரு திறமை பெற்றார். அவர் காது கேளாதோர் மற்றும் ஊமையருக்கான பள்ளியில் ஆலோசகராக ஆனார். பின்னர், அவர் ஊனமுற்றோருக்கான பள்ளியைத் திறந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஊனமுற்றோருக்கான கருவிகள் மற்றும் உபகரணங்களை விற்கும் பல்வேறு நகரங்கள் மற்றும் மாகாணங்களில் அவர் செயின் ஸ்டோர்களை நிறுவினார். அவர் பல கோடீஸ்வரர் ஆனார். அவர் ஜான் டோ!

ஒரு நாள் அவன் மனைவியிடம் கேட்டான். 'நான் என் எதிர்காலத்தை இருட்டாகப் பார்த்தபோது, ​​என் மீது உங்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதற்கான காரணம் என்ன?'

அவரது மனைவி அவருக்கு மிக எளிய பதிலை அளித்தார். 'ஒரு துண்டு நிலம் கோதுமை நடவு செய்ய ஏற்றதாக இல்லாதபோது, ​​நாம் பீன்ஸ் நடவு செய்ய முயற்சி செய்யலாம். பீன்ஸ் நன்றாக வளரவில்லை என்றால், நாம் பழங்கள் அல்லது பூசணிக்காயை நடவு செய்யலாம். தாவரங்கள் சிக்கனமாக இல்லாவிட்டால், அதற்கு பதிலாக பக்வீட் விதைகளை நாம் சிதறடிக்கலாம். இந்த விதைகள் ஒரு நாள் பூக்களாக மலரும். இந்த நிலத்தில், ஒரு விதை முளைத்து வளரும். '

மனைவியின் விளக்கத்தைக் கேட்ட அவர் அழுதார். அவரது மனைவியின் நம்பிக்கை, அன்பு, பொறுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவை நிலத்தில் உள்ள ஒரு விதையுடன் ஒப்பிடப்படுகின்றன. இந்த நிலத்தில் இந்த விதை நீடித்து அதிசயத்தை உருவாக்குகிறது.

"இந்த உலகில், பயனற்ற ஒருவர் இல்லை. அவர்கள் சரியான இடத்தில் தங்களை உறுதியாக நிலைநிறுத்தவில்லை"

  • 28
·
Added a post

நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சை பட்டாணி. பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் நிறைந்து காணப்படுகிறது.

பச்சை பட்டாணியில் ஆண்டிஅக்சிடண்டுகள் நிரம்பியுள்ளது. இது இதயத்திற்கு தேவையான ரத்தத்தை தடையின்றி சீராக செல்ல உதவும்.

பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து மிகுதியாக உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூளை செல்கள் புத்துணர்வு பெற்று ஞாபகத் திறன் அதிகரிக்கும், இது அல்சைமர் நோயை தடுக்கும்.

பச்சை பட்டாணியில் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ளது. பட்டாணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.

பச்சை பட்டாணி அதிக அளவு ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது.

ஃபோலேட்டுகள் பிறந்த குழந்தைகளில் நரம்புக் குழாய் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

அதிக புரோடீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பச்சை பட்டாணிகள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

  • 36
·
Added a post

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருமே சொகுசு வாழ்க்கையை வாழவே விரும்புகிறோம். இதனால் நம்மிடமிருந்த அந்த கால பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது.

என்னதான் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்தாலும், மறுபுறம் நோய்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் நமது முன்னோர்கள் கண்டறிந்த பல அற்புதமான விஷயங்களை நாம் மறந்து விடுகிறோம். அதில் ஒன்றுதான் கோரைப் பாயில் படுத்து உறங்குவது.

கோரைப் பாயில் படுத்து உறங்குவதால் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறதாம். இதனாலேயே நம் முன்னோர்கள் 'பாயில் படு, நோயை விடு' என்ற பழமொழியைக் கூறியுள்ளனர்.

பொதுவாகவே, பாய் வகைகளில் ஈச்சம் பாய், கோரைப் பாய், மூங்கில் பாய் என பலவகை உண்டு. இவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உடையதாகும். குறிப்பாக, பாய்க்கு உடல் சூட்டை உள்வாங்கும் தன்மை உள்ளதால், அது நமக்கு ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும்.

உடல் சோர்வாகவும், மந்தமாகவும் உணர்பவர்கள் பாயில் கொஞ்ச நேரம் படுத்து எழுந்தால் அவர்களின் சோர்வு நீங்குவதாக சொல்லப்படுகிறது. அத்துடன் கர்ப்பிணி பெண்கள் பாயில் உறங்கினால், அவர்களுக்கு முதுகு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்னைகள் வராது.

பிறந்த குழந்தையை பாயில் படுக்க வைப்பதனால் அவர்களுக்கு சுளுக்கு பிடிக்காது. இது குழந்தையின் முதுகெலும்பை சீர்படுத்தி, அவை வேகமாக வளர வழிவகுக்கும்.

இப்போதெல்லாம் சிலருக்கு இளம் வயதிலேயே கூன் விழுவதைப் பார்த்திருப்போம். இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் பாயில் தொடர்ந்து உறங்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வயதானவர்கள் பாயில் படுத்து உறங்குவது நல்லது. ஏனெனில், முதுமை காலத்தில் உடலில் இரத்த ஓட்ட பிரச்னை இருக்கும். அந்த சமயங்களில் பாயில் சமமாகப் படுக்கும்போது உடலுக்கு இரத்தம் சீராகப் பாய்கிறது. எனவே, நீங்கள் கட்டிலில் படுக்கும் பழக்கம் கொண்டிருந்தாலும் அதன் மேல் பாய் போட்டு படுங்கள்.

சராசரியாக நாம் வாங்கும் பாயை மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தரம் குறைந்துவிடும் என்பதால், அதன் பிறகு புதிய பாய் வாங்குவது நல்லது.

இன்றளவும் கல்யாணத்தில் சீர்வரிசை கொடுக்கும்போது கட்டிலோடு பாயும் கொடுக்கிறார்கள். அந்த அளவுக்கு பாரம்பரியம் வாய்ந்த பாய் நம் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும்.

  • 37
  • 33
·
Added a post

பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டை சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

இதய படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களையும் சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு.

பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த நிவாரணியாகும்.

கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சி பெற உதவியாக இருக்கும். மேலும் குழந்தைபேறுக்கு பின்னர் தாய்ப்பால் சுரப்பதற்கு காலை மற்றும் மாலையில் பேரிக்காய் சாப்பிட்டால் அப்பிரச்சனை சரியாகும்.

பேரிக்காய் உடல் எடையை குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. வளரும் குழந்தைகளுக்கு கால்சியம், இரும்பு சத்துக்கள் அவசியம் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.

  • 33
·
Added a post

நம் அறிவுக்கு அப்பால்பட்ட சக்திகள் பல இந்த பூமியில் இயங்குகிறது....

பெங்களுர் அருகே 'ஹாசன்' என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரே ஒரு நாள் முழுவதும் கோவில் திறக்கப்படும்.

அங்கே மூன்று சின்ன சின்னதாக கற்கள் இருக்கும். இந்த ஸ்வாமியின் பெயர் ஹாசன அம்மாள் என்று அழைக்கப்படுகிறது. மூன்று சிறு சிறு கற்கள் தான் அந்த ஹாசன அம்மாள். மூன்று கற்கள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும். அந்த சந்தனத்தை முழுவதும் சுரண்டி விட்டு அந்த ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். ஸ்வாமிக்கு அருகே இரண்டு பெரிய நெய் தீபங்கள் இருக்கும். கோவில் திறந்தவுடன் அந்த இரண்டு நெய் தீபத்திலும் இருக்கும் நெய்யை எடுத்து விட்டு புதிதாக நெய் ஊற்றப்படும்.

இதில் என்ன அதிசயம் என்றால் ஊற்றிய நெய் தீபம் அடுத்த ஆண்டு வரை அனையாமல் ஒரு வருடம் எரிந்து கொண்டே இருக்கும். நெய் எக்காரணம் கொண்டும் குறையவே குறையாது.

அது மட்டுமா?

இன்னும் நிறைய அதிசயங்கள் இருக்கிறது. முதலில் சொன்னது போல் ஸ்வாமியின் மீது இருக்கும் சந்தனம் சுரண்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சந்தனம் இயற்கையாகவே ஸ்வாமி மீது வருகிறது. அபிஷேகம் முடிந்த பிறகு ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

அதுவும் எப்படி சுட சுட கொதிக்க கொதிக்க நைவேத்தியம் செய்யப்படுகிறது. அவ்வளவு தானா என்றால் இல்லை. மேலும் ஒரு அதிசயம் நடை பெறுகிறது.

ஸ்வாமிக்கு முன் ஒரு குடம் நிறைய தண்ணீர் வைக்கப்பட்டு அதுவும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதில் என்ன அதிசயம் என்று தானே நினைக்கிறீர்கள். ஆமாம் அதிசயம் தான் ஒரு ஆண்டு கழித்து மீண்டும் கோவில் திறக்கும் போது தண்ணீர் கொஞ்சம் கூட குறைந்திருக்காது, நெய் தீபத்தில் கொஞ்சம் கூட நெய் குறைந்திருக்காது,

ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட அன்னம் கெடாமல் அதே சூட்டில் சுட சுட இருக்கும், சந்தனத்தை முழுவதும் எடுத்து விட்டு. அபிஷேகம் செய்து முடித்து வெறும் கற்களாக தான் நடை சாற்றப்படுகிறது.

ஆனால் மீண்டும் ஒரு ஆண்டு கழித்து கோவில் திறக்கும் போது மூன்று ஸ்வாமிகள் { கற்சிலை } மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும். இதெல்லாம் எப்படி சாத்தியம்? ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று பாருங்கள்.

  • 34

Good Morning

  • 91
·
Added a post
  • நரைமுடி என்பது பலருக்கும் தவிர்க்க முடியாத பிரச்னை.இதற்கு தீர்வாக இயற்கை முறையில் இந்த எண்ணெய்யை முயற்சித்து பார்க்கலாம்.
  • இந்த இயற்கை வழிமுறைகள் உச்சந்தலையை ஊட்டப்படுத்தி, வேர்க்கால்களை வலுவாக்கி முடியின் நிறத்தை இயற்கையாகவே மீட்டெடுக்க உதவுகின்றன.

தேவையானவை:

  1. தேங்காய் எண்ணெய் - 500 மில்லி (செக்கு எண்ணெய்)
  2. அவுரிப் பொடி - ஒன்றரை டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)
  3. நொச்சி இலை -ஒரு கைப்பிடி அளவு
  4. எலுமிச்சை - 1 (நான்காக நறுக்கிக் கொள்ளவும்)
  5. மஞ்சள் கரிசலாங்கண்ணி - 3, மருதாணி இலை - 3 கைப்பிடி அளவு
  6. கற்றாழை - ஒரு துண்டு
  7. சின்ன வெங்காயம் - 5
  8. ஆமணக்கு இலை - 2 கைப்பிடி அளவு
  9. கருவேலம் பட்டை - ஒரு துண்டு
  10. நெல்லிக்காய் - 5
  11. கசகசா - ஒன்றரை டீஸ்பூன்
  12. பாதாம் - 5
  13. சுரைக்காய் - 100 கிராம்
  14. வேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு,செம்பருத்தி இலை - 2 கைப்பிடி அளவு
  15. முருங்கைக் கீரை - 2 கைப்பிடி அளவு
  16. செம்பருத்தி பூ - 5
  17. தேங்காய்ப்பால் - 50 மில்லி

செய்முறை:

  • கசகசா, பாதாம் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து முதல் நாள் இரவில் ஊறவைத்துக் அரைத்துக்கொள்ளவும். சுரைக்காயை தோல் நீக்கி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • 100 கிராம் தேங்காய் எண்ணெய்யைத் தனியாக எடுத்து கருவேலம் பட்டையை அதில் ஊறவைக்கவும். ஒரு நாள் முழுவதும் ஊறவைத்த பின் தேங்காய் எண்ணெய் சிவப்பு நிறமாக மாறியிருக்கும்.
  • நொச்சி இலை, கரிசலாங்கண்ணி, மருதாணி, கற்றாழை, சின்ன வெங்காயம், ஆமணக்கு இலை, நெல்லிக்காய், செம்பருத்தி இலை, முருங்கைக் கீரையை தண்ணீரில் சுத்தம் செய்து அம்மியில் அரைத்துக்கொள்ளவும். அம்மி இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளலாம்.
  • அடுப்பில் வாணலியை வைத்து 400 கிராம் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஐந்து நிமிடம் எண்ணெய்யைச் சூடாக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால் ஊற்றி மூன்று நிமிடம் கொதிக்கவிடவும்.தேங்காய்ப்பாலின் பச்சை வாசனை அடங்கிய பின் சுரைக்காய் துண்டுகள், கசகசா விழுது சேர்த்து எண்ணெயைக் கொதிக்கவிடவும்.
  • எண்ணெய் 5 நிமிடம் கொதித்த உடன் அரைத்து வைத்துள்ள மூலிகையையும் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொதிக்கவிடவும்.
  • எண்ணெய்யின் நிறம் பச்சை நிறமாக மாறிய பின் எலுமிச்சை, அவுரிப்பொடி, செம்பருத்தி, சேர்த்து கொதிக்க விடவும்.
  • எலுமிச்சை எண்ணைய்யில் நன்றாக வெந்த பின் எண்ணெய்யின் நிறம் கறுப்பாக மாறியிருக்கும். இந்த பதம் வந்ததும் அடுப்பில் இருந்து எண்ணெய்யை இறக்கவும்.
  • எண்ணெயை வடிகட்டிக்கொள்ளவும்.
  • இத்துடன் கருவேலம் பட்டை ஊறவைத்த எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
  • சூடு ஆறியதும் எண்ணெயை ஒரு பாட்டிலில் நிரப்பி தினமும் பயன்படுத்தி வர நரைமுடியை தடுக்கலாம்.கூந்தலும் செழிப்பாக வளரும்.

குறிப்பு

  • மூலிகைகள் கிடைக்கவில்லை எனில் நாட்டு மருந்துக் கடைகளில் மூலிகைப் பொடி வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது சீஸன் சமயத்தில் மூலிகையை சேகரித்து காயவைத்துப் பொடித்து தேவையான போது எண்ணெய் காய்ச்சிக்கொள்ளலாம்.
  • மூலிகை நிறைந்த எண்ணெய் என்பதால் உடல் சூடு நீங்கி குளிர்ச்சி அடையும். சிலருக்கு சளித் தொல்லை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற பிரச்சனை உடையவர்கள் கற்றாழையின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம் அல்லது கூடுதலாக நொச்சி இலை சேர்த்துக்கொள்ளலாம்.
  • இரும்புப் பாத்திரத்தில் எண்ணெய் காய்ச்சினால் கூடுதல் பலன் கிடைக்கும்.
  • முடி அதிக வறட்சியாக உள்ளது எனில் செம்பருத்தி பூவின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம்.
  • குறிப்பு: 500 மில்லி தேங்காய் எண்ணெய்யை மூலிகை கலந்து காய்ச்சினால் 350 மில்லி கிடைக்கும்.

....இணையத்தகவல்

  • 96
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான செல்வாக்கு அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். தடைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

ரிஷபம்

குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். அமைதியான செயல்கள் உங்கள் மதிப்பை மேம்படுத்தும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் அலைச்சல் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்க்கவும். ஆக்கபூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மிதுனம்

முயற்சிகளில் இருந்த தடைகள் குறையும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் ஏற்படும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். மனதளவில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கடகம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணை வழியில் ஆதாயம் ஏற்படும். போட்டிப்பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்த சிக்கல்கள் ஓரளவு குறையும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

சிம்மம்

குழந்தைகள் வழியில் கலகலப்பான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பணிகளில் லாபத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கைகூடும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறையும். வாகன பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். மூலிகை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். இறைப்பணிகள் மூலம் அலைச்சல் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

துலாம்

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

விருச்சிகம்

புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். தனவருவாயிலிருந்து வந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

தனுசு

வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் வேகத்தைவிட விவேகம் அவசியம். எதிலும் திருப்தி அற்ற சூழ்நிலைகள் ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். துயரம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மகரம்

உடன் இருப்பவர்களினால் எதிர்பாராத செலவுகளும் நெருக்கடிகளும் உண்டாகும். உயர் அதிகாரிகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் அகலும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரிய தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

மீனம்

ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாகன பயணத்தால் அனுகூலம் ஏற்படும். செய்தொழில் நிமிர்த்தமான புதிய சிந்தனைகள் பிறக்கும். எதிர்பாராத சில பொறுப்புகள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். கல்வி பணிகளில் மேன்மை ஏற்படும். கால்நடை மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 94
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 17.2.2026.

இன்று மாலை 06.30 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று இரவு 10.17 வரை அவிட்டம். பின்னர் சதயம்.

இன்று அதிகாலை 02.47 வரை வரீயான். பின்னர் பரிகம்.

இன்று காலை 06.28 வரை சதுஷ்பாதம். பின்னர் மாலை 06.39 வரை நாகவம். பிறகு கிமிஸ்துக்கினம் .

இன்று இரவு 10.17 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=425&dpx=2&t=1771300486

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 101

இனிய காலை வணக்கம்.

இன்றைய தினம் அமாவாசை.

  • 97
·
Added a post
  • கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும்.
  • பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
  • கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.
  • காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழலாம்.
  • கடுக்காய் ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
  • மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, செரிமானம் கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
  • கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை தேக்கரண்டி வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
  • 15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு தம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
  • கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.
  • கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.
  • குறிப்பு: கடுக்காயில் சதைப் பகுதியை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது நாட்டு மருத்துவர்களின் ஆலோசனை. விதையில் நச்சு (விஷம்) இருப்பதால், அதை பயன்படுத்தக் கூடாது.
  • 175
·
Added a post

சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் ஏறி வந்தான் அவன்…

ஒரே ஒரு காரணத்திற்காக — தனது “அம்மா”வை பார்க்க.

பல வருடங்களுக்கு முன்பு, கேரளாவை சேர்ந்த ஒரு இந்து அக்கா சவுதி அரேபியாவில் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நாட்டில் வேலை பார்த்தாலும், அவர் இதயம் முழுவதும் தாய்மையால் நிரம்பியிருந்தது. பல குழந்தைகள் அவரது கைகளில் வளர்ந்தனர்.

அவர்களில் ஒருவன் — சிறிய கண்களுடன், எப்போதும் அவளது கையை பிடித்துக் கொண்டே இருப்பான். அவனை அவர் தன் வயிற்றில் பிறந்த குழந்தையை விட கூட அதிகமாக நேசித்தார்.

அவனுக்கு காய்ச்சல் வந்தால், இரவெங்கும் தூங்காமல் அவள் அவனருகே உட்கார்ந்து இருப்பாள்.

அவன் அழுதால், அவள் மனசு உடைந்துவிடும்.

காலம் கடந்தது…

சிறுவன் வளர்ந்து இளைஞனானான்.

அக்கா தன் நாட்டிற்குத் திரும்பி கேரளாவுக்கு சென்றுவிட்டார்.

ஆனால் அந்த சிறுவனின் நினைவில், அவள் மறைந்ததே இல்லை.

அவள் செய்த அன்பு, அவள் தந்த அரவணைப்பு — அவன் உள்ளத்தில் உயிரோடு இருந்தது.

பல மாதங்கள் தேடினான். பழைய தொடர்புகளைப் பார்த்தான். யாரிடமோ விசாரித்தான்.

இறுதியில், அவளது முகவரியை கண்டுபிடித்தான்.

ஒரு நிமிடமும் தாமதிக்கவில்லை.

விமான டிக்கெட் பதிவு செய்தான்.

சவுதியிலிருந்து நேராக கேரளாவுக்கு புறப்பட்டான்.

அவள் வீட்டின் கதவின் முன் நின்றபோது, அவன் இதயம் வேகமாக துடித்தது.

“அம்மா என்னை நினைவில் வைத்திருக்கிறாரா?”

“என்னை அடையாளம் காண்பாரா?”

கதவு திறந்தது.

வயது மேலெழுந்தாலும், அந்த அன்பு மாறவில்லை.

அவள் அவனை பார்த்த அந்த கணமே — அவளது கண்களில் கண்ணீர் பெருகியது.

கைகள் விரிந்தது.

“மகனே!” என்று அழைத்தாள்.

அவன் ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்தான் — சிறு வயதில் செய்ததைப் போல.

அவன் கண்ணீர் வடித்தான்.

அவள் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

அந்த தருணத்தில், மதம் இல்லை.

நாடு இல்லை.

மொழி இல்லை.

அங்கே இருந்தது — ஒரு தாய் மற்றும் மகன் மட்டும்.

அன்பின் உறவு மட்டும்.

மனிதர்களை பிரிக்க மதம் முயற்சிக்கலாம்.

ஆனால் அன்பு — எல்லைகளைத் தாண்டி செல்லும்.

  • 176
·
Added a news

கனடாவின் பிரான்ட்போர்ட் Brantford நகரைச் சேர்ந்த இறைச்சிக்கடை தொழிலாளர் சாக் பேக்கர் (Zac Baker) தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கி அனைவரினதும் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக இறைச்சி தொழிலில் பணியாற்றி வரும் சாக் பேக்கர் (Zac Baker), இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நிறுவனமொன்றில் தனது பணியைத் தொடங்கினார்.

2010 முதல் அவர் கேம்பிரிட்ஜ் விவசாய சந்தையில் வாரந்தோறும் தனது பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் நீண்டகால உறவுகளை உருவாக்கியுள்ளார்.

டிசம்பர் மாதத்தில், பல ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நெருங்கிய நண்பருக்காக தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முடிவு செய்தார்.

பரிசோதனைகளுக்காக டொராண்டோ பொது மருத்துவமனையில் விரிவான இரத்த பரிசோதனைகள் மற்றும் ஸ்கான்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர் பொருந்தக்கூடிய தானதாரராக அடையாளம் காணப்பட்டு, மார்ச் 2ஆம் திகதி அறுவை சிகிச்சை தினமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்கு முன்பே அவரது நண்பர் உயிரிழந்தார்.

“அவர் மறைவதற்கு ஒரு வாரம் முன்பு நாங்கள் நேரம் செலவிட்டு பேசிக்கொள்ள முடிந்தது. பொருந்திய தானதாரர் கிடைத்தது குறித்து அவருடன் பகிர்ந்துகொண்டோம்,” என பேக்கர் நினைவுகூர்ந்தார்.

அனைத்து ஏற்பாடுகளும் முடிந்திருந்ததால், தனது முடிவை மாற்றாமல், பெயர் குறிப்பிடாத (anonymous) நபருக்காக கல்லீரல் தானம் செய்யத் தீர்மானித்தார்.

பெறுநர் பட்டியலில் உள்ளவர்களில் சுமார் 25% பேர் பொருந்தும் உறுப்பு கிடைக்குமுன் உயிரிழக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கனடாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தேவைக்கேற்ற உறுப்புகள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுவதாகவும் கனடா கல்லீரல் அமைப்பின் பிரதிநிதி பிரே டெலானி-ஸ்மித் தெரிவித்தார்.

இதேவேளை, அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வாரம் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும் என்றும், பின்னர் குறைந்தது ஐந்து முதல் ஆறு வாரங்கள் முழுமையான ஓய்வு அவசியம் என்றும் பேக்கர் கூறினார்.

“கல்லீரலின் ஒரு பகுதியுடன் வாழ முடியாது என்று நினைத்தேன். ஆனால் அது மீண்டும் முழுமையாக வளர்கிறது – அதுவும் விரைவாக,” என அவர் விளக்கினார்.

  • 180
·
Added a news

கனடாவில் வாழும் ஒரு தம்பதியர், தங்கள் 70ஆவது காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளார்கள்.

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள ரெஜைனா நகரில் வாழ்கிறார்கள் எர்வின் மில்லர் (Erwin Miller) நேவா மில்லர் (Neva Miller) தம்பதியர். 

1955ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள லேக்லாண்ட் கல்லூரியில் படிக்கும்போது, மாணவர்கள் படைசூழ பியானோ வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞர், இளம்பெண்ணான நேவாவின் கண்ணில் பட்டுள்ளார்.

இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க, கண்டதும் காதல் பற்றிக்கொள்ள, இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஓராண்டு ஆனதும் எர்வினுக்கு ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது. ஆனால், அப்போதுதான் நேவா செவிலியர் பயிற்சிக்காக படித்துக்கொண்டிருந்திருக்கிறார். பயிற்சி முடிக்கும்வரை அவரால் திருமணம் செய்துகொள்ளமுடியாது என கல்லூரி விதிகள் கூற, உங்களுக்காக என் படிப்பையே இழக்கத் தயார் என்று கூறியுள்ளார் நேவா. 

திருமணமாகி கனடாவில் வந்து குடியமர்ந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் பிறந்துள்ளார்கள். எங்கள் அன்பில் இன்றுவரை எந்த மாற்றமும் இல்லை என்று புன்னகையுடன் கூறும் எர்வினின் கன்கள் பாசத்துடன் நேவாவையே பார்த்துக்கொண்டிருக்கின்றன.

எப்படி 70 ஆண்டுகள் இந்த அன்பு நீடித்தது என்று கேட்டால், அதற்கு ஒரு ரகசியம் உள்ளது என்கிறார் எர்வின்.

வாழ்க்கையில் நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி, எதைச் செய்தாலும் நாங்கள் இருவரும் இணைந்தே செய்தோம், அதிர்ஷ்டவசமாக எங்கள் வாழ்வில் கெட்டது அதிகம் நடக்கவில்லை என்கிறார் அவர்.

Image Courtesy : Globalnews.ca

  • 189
·
Added a news

கனடாவின் சஸ்கடூன் நகரைச் சேர்ந்த நபர் ஓருவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அதே நாளில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒளிந்துப் படம் பிடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் நீண்ட வரலாறு கொண்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைல் ரொனால்ட் ஹேமலக் என அடையாளம் காணப்பட்ட இவர், ஒளிந்துப் பார்வையிடுதல், தகாத செயல்கள் மற்றும் இரவு நேரத்தில் சட்டவிரோத நுழைவு உள்ளிட்ட மொத்தம் 70 குற்றங்களில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பெப்ரவரி 14ஆம் திகதி சஸ்காடூன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தால், விடுதலையற்கு முன்பே பொலிஸார் பொது எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

ஹேமலக் அதே மாலை முதலாம் அவன்யூ இன் 200-ஆம் பகுதி அருகே கைது செய்யப்பட்டார்.

விடுதலை விதிமுறைகளை மீறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹேமலக் 2017 மற்றும் 2020 ஆண்டுகளில் ஒளிந்துப் படம் பிடித்த குற்றத்தில் தண்டிக்கப்பட்டிருந்தார்.

மேலும் கடந்த ஆண்டு இறுதியில் 23 ஒளிந்துப் படம் பிடித்த குற்றங்களுக்கும், இரண்டு பரோல் விதிமுறை மீறல் குற்றங்களுக்கும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவருக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே அனுபவித்த சிறைக்காலத்திற்கு வழங்கப்பட்ட குறைப்பின் காரணமாக, அவருக்கு சுமார் ஏழு மாதங்கள் மட்டுமே மீதமிருந்தது.

ஒளிந்துப் படம் பிடித்த குற்றத்திற்காக வழங்கப்பட்ட தண்டனைகளில் இது நீண்டகால தண்டனைகளில் ஒன்றாகும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஹேமலக் நாளைய தினம் சஷ்காடூன் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.

  • 192
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சேவை பணிகளில் அனுகூலம் ஏற்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். தாயிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிறு தொழில் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தூரதேசப் பயணங்களில் இருந்த தாமதங்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

ரிஷபம்

பயனற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். இணையம் சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மிதுனம்

பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கடகம்

மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

சிம்மம்

கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளை விற்பனை செய்வதில் மூலம் லாபம் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் கிடைக்கும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இடமாற்ற தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

மறைமுகமான செயல்களில் சிந்தித்து செயல்படவும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்லவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையும் அதிகரிக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

விருச்சிகம்

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். வாதத் திறமைகள் மூலம் இழுபறியான காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் உதவிகள் மூலம் லாபங்கள் மேம்படும். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

தனுசு

வரவுக்கேற்ற செலவு விரயமும் உண்டாகும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. மற்றவரிடம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். சகோதரர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உங்கள் எண்ணங்களை மற்றவரிடம் திணிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

மகரம்

வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உழைப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்பு குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மீனம்

உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பயணம் சார்ந்த செயல்களில் அனுபவம் கிடைக்கும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 244