- · 1 friends
-
யாரிடமும் சொல்ல முடியாத விஷயம்
அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. அந்த அதிசயங்களுக்கான விடைகளும் பலராலும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு அதிசயம் நிறைந்த, நம்மை வியக்கவைக்கும் விடை தெரியாத அதிசயம்தான் கான்பூரில் இன்றும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. மழை வருமா? வராதா? என்பதை பொதுவாக எல்லோரும் வானத்தைப் பார்த்து அறிவதுதான் வழக்கம். ஆனால், ஒரு ஊரில் உள்ள மக்கள் மழைக்காக வானத்தைப் பார்க்க மாட்டார்கள். மாறாக, அங்குள்ள கோயிலுக்குச் சென்று அறிவார்கள். ஆம், மழை வருமா? வராதா? என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு அதிசய கோயில் உள்ளது. அது உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் அமைந்திருக்கும் பகவான் ஜெகந்நாதர் ஆலயம்தான் அது.
சுமார் ஆயிரம் வருடங்கள் பழைமையான இந்தக் கோயிலின் மேற்கூரையிலிருந்து வருடா வருடம் திடீரென நீர் சொட்டுகிறது. சொட்டும் நீரின் அளவைப் பொறுத்து அந்த வருடம் எவ்வளவு மழை பொழியும் என்பதை அந்த ஊர் மக்கள் அறிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்குவதற்கு ஏழு நாட்கள் முன்பாகவே அந்தக் கோயிலின் உள்பகுதியில் மழை பெய்யத் தொடங்கி விடுகிறது. ஏழு நாட்களும் அந்த மழை நிற்பதே இல்லை. ஆனால், வெளியில் பருவ மழை பெய்யத் தொடங்கியதும் கோயிலின் உள்ளே மழை நின்று விடுகிறது. இதற்கான காரணம் இன்னும் யாருக்கும் தெரியவில்லை.
அந்தக் கோயிலின் உள்ளே மழை பெய்யத் தொடங்கிய ஏழு நாட்களில் அந்த ஊரில் பருவ மழை தொடங்கிவிடும் என்பது அந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஈரப்பதம் மட்டும் இருந்தால் மிதமான மழை பெய்யும், நீர் துளிர்த்து தரையில் விழுந்தால் கனமழை என்று அர்த்தம். இதற்கான காரணத்தை கண்டறிய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள். ஆனால், இதுவரையிலும் அதற்கான விடையை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இங்கு சொட்டும் நீரின் அளவைப் பொறுத்தே அந்த வருடத்தில் தங்கள் நிலத்தில் என்ன பயிரிடலாம் என்பதை முடிவு செய்கின்றனர். அதோடு, இந்தக் கோயிலில் உள்ள கடவுளுக்கு வருடா வருடம் சிறப்பு பூஜை செய்து அதிக அளவில் நீர் சொட்ட வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றனர்.
நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகற்காய் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
2. பாகற்காய் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
3. பாகற்காய் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
4.பாகற்காய் வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
5. ஒரு பிடி கொடுப்பாகற் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
6. பாகற்காய் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
7. பாகற்காய் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகற்காய் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
9. ஓர் அவுன்ஸ் பாகற்காய் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.
11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.
13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடும்.
*சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்*.
*ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்*.
*“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்*.
*அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்*.
*“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான்*.
*நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்*.
*அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை !” என்றார்*.
*“அது என்ன ?! ” என்று கேட்டான் அர்ஜுனன்*.
*“நேரம் வரும் போது சொல்கிறேன் !” என்றார் வியாசர்*.
*பல ஆண்டுகள் கழிந்தன*.
*மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான்*.
*“அர்ஜுனா ! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன்*.
*அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!” என்று கூறினான் கண்ணன்*.
*கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் , தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள்*.
*அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்*.
*அதுவும் வெறும் சாதாரணத் திருடர்களிடம்*
*வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர்*.
*“அர்ஜுனா ! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது !” என்று கூறினார் வியாசர்*.
*"கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது*.
*இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே ! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்*.
*அதற்கு வியாசர் , “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்*.
*மேலும் , “ சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய்*.
*ஆனால் கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்*.
*அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறி சமாளித்து , காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான் !” என்றார் வியாசர்*.
*இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது*.
*இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”*
*( பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்*.
*இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல :’ என்று அழைக்கப்படுகிறார்*.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். தாய்மாமன் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான முதலீடுகள் மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குறுகிய கால கடன் பிரசனைகள் குறையும். தடைபட்ட முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் கவலைகள் மனதில் இருந்து விலகும். எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். கலைத்துறைகளில் நல்வாய்ப்புகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மிதுனம்
உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதளவில் இருந்த இறுக்கங்கள் குறையும். நறுமண பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். தொழில் நிமித்தமான நட்பு வட்டம் விரிவடையும். அரசு சார்ந்த சில உதவிகள் சாதாகமாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கடகம்
தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். முயற்சிகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். செலவு விஷயங்களை திட்டமிட்டு செயல்படுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்தவும். உயர் அதிகாரிகளை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். வேலையாட்களால் சிறு அலைச்சல்கள் உண்டாகும். சொத்து பிரச்சனைகளில் பொறுமையை கையாள்வது நல்லது. அரசு காரியங்களில் சில விரயங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும். வெளியூர் பயண சிந்தனைகள் அதிகாரிக்கும். மனதிற்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
துலாம்
தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். வியாபார விஷயங்களில் ஒத்துழைப்புகள் மேம்படும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விருச்சிகம்
சகோதர, சகோதரிகளுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனை சார்ந்த விஷயங்களால் லாபங்கள் மேம்படும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். புதிய கருவிகள் வாங்கும் செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
தனுசு
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பரமான விஷயங்களால் குழப்பங்கள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் நம்பிக்கையை உருவாக்கும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
மகரம்
தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தொண்டையில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். விற்பனை பிரிவில் ஆதாயம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
சுபகாரியம் சார்ந்த செயல்களில் காலதாமதம் உண்டாகும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் அசதியினால் வேலையில் ஆர்வமின்மை ஏற்படும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 15.7.2025.
இன்று அதிகாலை 12.30 வரை சதுர்த்தி. பின்னர் இரவு 10.47 வரை பஞ்சமி. பின்பு சஷ்டி.
இன்று காலை 07.17 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.
இன்று மாலை 03.08 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்.
இன்று அதிகாலை 12.30 வரை . பாலவம். பின்னர் காலை 11.39 வரை கௌலவம். பிறகு இரவு 10.47 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று அதிகாலை 05.59 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
கனடாவில் ஒரு தம்பதியர் குப்பை கொட்டும் வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அவர்கள் மீது இனரீதியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
கனடாவில், சாலையோரமாக ஓரிடத்தில் தங்கள் காரை நிறுத்திய தம்பதி, தங்கள் கைகளிலிருந்த பைகளிலிருந்து எதையோ எடுத்து வீசுவதைக் காட்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடகமான எக்ஸில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த தம்பதியர் இந்தியர்கள் என்றும், அவர்கள் குப்பை கொட்டுவதாகவும் கூறி அவர்களை விமர்சித்துவருகிறார்கள் பலர்.
அவர்கள் இந்தியாவை கெடுத்துவிட்டார்கள். அவர்களை கனடாவையும் கெடுக்க விடக்கூடாது என்கிறார் ஒருவர்.
இவர்களால் எல்லா புலம்பெயர்ந்தோருக்கும் கெட்ட பெயர் என்கிறார் மற்றொருவர்.
ஒருவேளை அவர்கள் ஏதாவது பறவைகள் அல்லது விலங்குகளுக்கு உணவளிக்கிறார்களோ என்றும் ஒருவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜமின்தாரின் மகன் என்பது பலரும் அறியாத தகவல்...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு தான் எம்.எஸ்.பாஸ்கரின் சொந்த ஊர்
எம்.எஸ்.பாஸ்கரின் தந்தை RM.சோமுத்தேவர் அவர்கள் ஜமீன்தாராக இருந்தார்,
ஊர் மக்களால் RMS என்று அன்புடன் அழைக்கப்பட்டார்
அந்த பகுதியில் அவருடைய வார்த்தைக்கு யாரும் மறு பேச்சு பேச மாட்டார்கள் அந்த அளவுக்கு அவருக்கு செல்வாக்கும் மதிப்பும் இருந்தது...
எம்.எஸ் பாஸ்கர் அப்பா சோமுதேவர் வள்ளல் போல் இருந்தவர். யார் உதவி கேட்டாலும் உடன் கொடுத்து உதவுவார்.
அந்த காலகட்டத்திலேயே 1965களில் வெள்ள கார் வைத்திருந்தார்..
இடும்பவனத்தில் தென்னை தோப்பு நில்ம்..வைத்திருந்தார்
எம்ஜிஆர் இவர் கிட்ட பணம் கேட்டு வாங்குவார் இவருக்கு பணம் தேவை என்றால் எம்ஜிஆரிடம் கேட்டும் வாங்குவார் அந்தளவுக்கு எம்ஜிஆர் அவர்களிடம் நெருங்கிய நட்பு இருந்தது
எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இருவரையும் சமாதானப்படுத்த கூடிய ஒரே நபர் சோமுத்தேவர் தான் என்று இரு தரப்பினர் விரும்பியதாகவும், இதனை அடுத்து இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த சென்னைக்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தி பிரச்சினையை முடித்து வைத்துள்ளார்
கலைஞர் வீட்டுக்கு போனால் கலைஞர் வீட்டு வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து செல்லும் அளவுக்கு நெருங்கிய நட்பு
மணலி கந்தசாமி அவர்களிடம் நெருங்கிய நண்பர்
மாரியப்ப வாண்டையார்
முத்தையா செட்டியர்
புதுவை முதல்வராக இருந்த பாரூக் மரைக்காயர்
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பட்டுகோட்டை நாடிமுத்து பிள்ளை...
அத்தி வெட்டி அய்யா உக்கடை தேவர்.
பூண்டிதுளசி அய்யா வாண்டையார் எல்லோரும் அவரது நட்பு வட்டம்....
இவர் பரம்பரை காங்கிரஸ் காரர் என்றாலும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடு பட்டவர்களுக்கு நிதி உதவி செய்து அதிகமாக செலவு செய்தவர்
தஞ்சாவூர் ஜில்லா போர்டு தேர்தலில் நின்றார்...பஞ்சாயத்து பேசுவதில் வல்லவர்...மக்கள் மனதில் நின்ற வள்ளல்..
தன் மகன் பாஸ்கரை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று சோமு தேவர், எம்.எஸ்.பாஸ்கரை நாகப்பட்டினத்தில் பள்ளியில் படிக்க வைத்தார், நாகையில் படிக்கும்போதே பாஸ்கர் நாடகத்தில் நடித்தார். அவருக்கு நடிப்பு என்பது சிறுவயது முதலே ரத்தத்திலேயே ஊறி இருந்தது.
இந்த நிலையில் தான் 1971-ல் சோமு தேவர் தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் மேற்ப்படிப்புக்காக சோமு தேவர் தனது குடும்பத்துடன் சென்னையிலேயே செட்டிலானார்.
சென்னை பச்சையப்பா கல்லூரியில்தான் எம்.எஸ்.பாஸ்கர் பட்டப்படிப்பு படித்தார். எம்.எஸ்.பாஸ்கரின் இரண்டு சகோதரிகளும் டப்பிங் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது தனது சகோதரியுடன் டப்பிங் செய்யும் ஸ்டூடியோவுக்கு எம்.எஸ்.பாஸ்கர் சென்றபோதுதான் ஆண் குரலுக்கு டப்பிங் கொடுக்க வந்தவர் வரவில்லை என்பது தெரிய வந்தது. அப்போது எம்.எஸ்.பாஸ்கரை டப்பிங் குரல் கொடுக்க கூறிய போது அவர் ஒரே டேக்கில் அனைத்தையும் டப்பிங் செய்து முடித்ததை பார்த்து டப்பிங் கலைஞர்கள் ஆச்சரியமடைந்தனர். இதனை அடுத்து அவருக்கு முதல் சம்பளமாக ரூபாய் 25 கொடுக்கப்பட்டது.
அதன்பிறகு அவர் பல படங்களில் டப்பிங் பேசினார். ஹாலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் செய்யும் போது நகைச்சுவை கேரக்டர்களுக்கு பெரும்பாலும் எம்.எஸ்.பாஸ்கர்தான் குரல் கொடுத்திருப்பார்.
டப்பிங்கில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் அவர் எல்ஐசியில் வேலை பார்த்தார். ஒரு பக்கம் நாடகத்தில் இன்னும் நடித்துக் கொண்டிருந்தார்.
விசு இயக்கிய ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் பிறகு பல திரைப்படங்களில் அவர் காமெடி கேரக்டரில் நடித்தார்.
அப்போது அவருக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற தொடரில் பட்டாபி என்ற கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழைப் பெற்றுக் கொடுத்தது.
இயக்குனர் பாலசந்தர் இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாய்ப்பு வாங்கி கொடுத்தார்
காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் அவர் அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக ’சிவகாசி’ படத்தில் காமெடி வக்கீல் கேரக்டரில் நடித்திருப்பார்.
எம்.எஸ்.பாஸ்கர் ஒரு மிகச் சிறந்த குணசித்திர நடிகர் என்பதை நிரூபித்த படம் என்றால் ’உத்தம வில்லன்’ தான். கமல்ஹாசனுக்கு இணையாக அந்த படத்தில் அவர் சிறப்பாக நடித்திருப்பார். கமல்ஹாசன் மிகவும் அவரை பாராட்டி மகிழ்ந்தார்
எம்.எஸ்.பாஸ்கர் தற்போதும் பிசியாக நடித்து வருகிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மகளும் ஒரு டப்பிங் கலைஞராக இருந்து வருகிறார்.
எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ’96’ திரைப்படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்தார். அவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக்காக முயற்சித்து வருகிறார்..
செப்டம்பர் 13 தேதி 1957ல் ஜமீன்தாரின் மகனாக பிறந்து செல்வாக்காக வளர்ந்து இருந்தாலும் எந்த விதமான ஆடம்பரமும் இன்றி சாதாரணமாக இருப்பதுதான் எம்.எஸ்.பாஸ்கரின் சிறப்பு. அதேபோல் அவருடைய குடும்பத்தினரும் மிக எளிமையாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அற்புதமான குணசித்திர நடிகர் மட்டுமின்றி இவரது புகழுக்கு மணிமகுடமாக பெருந்தலைவர் காமராஜர் திரைபடத்தில் காமராஜர் பேசியது போலவே காதுகளில் ஒலிக்க செய்தவர் மதிப்புகுறிய எம் எஸ் பாஸ்கர் அவர்கள்.
அது மட்டுமல்ல தென் மாவட்ட நாடார்களின் பேச்சுகளையும் சென்னை பூர்வகுடி பேச்சுக்களையும் கோவை கவுண்டர்களின் கொங்கு தமிழ் பேச்சுக்களையும் அச்சி அசலாக பேசக்கூடிய அற்புத கலைஞர்.
இவரின் தமிழ் உச்சரிப்பு மேலும் பல பாத்திரங்களில் சிறப்பாக நடிப்பதில் வல்லவர்.
இவ்வளவு புகழுக்கும் சொந்தக்காரரான எம்எஸ்.பாஸ்கர் அவர்கள் பாஜக மூத்த தலைவரான பேட்டை சிவா அவர்களின் மாமா என்பது தனி சிறப்பு ஆகும்.
இவரது உடன் பிறந்தவர் மகன் மகள் பேரன் பேத்திகள் தம்பிக்கோட்டை கீழக்காடுட்டிலும், சென்னையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
✨ உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால், உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.
✨ உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் ஒருவன். உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.
✨ உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.
✨ நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.
✨ நோயின்றி காலையில், புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே, உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி.
✨ பார்வையும், செவித் திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும், இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்.
✨ போர், பட்டினி, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்.
✨ கொடுமைகளுக்கு உள்ளாகாமல், நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால், உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்.
✨ உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால், நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்.
✨ தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.
✨ உலகம் முழுதும், சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.
✨ கல்வி அறிவு பெற்று, இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால், உலக அளவில் எழுத படிக்க இயலாத 80 கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்.
✨ இணையத்தில் இந்த செய்தியை, உன்னால் படிக்க முடிந்தால், அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்.
✨ உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால், அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும், நம்பிக்கையும் இல்லாதவர்களை விட, நீ கொடுத்து வைத்தவன்.
✨ நீங்கள் அனுபவித்து வரும், வசதிகளையும், தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல், ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல், கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது, நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன !? நீங்கள் அதிர்ஷடசாலி தான்...
✨ வீண் கவலைகளை விட்டு, அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதை பொருட்கள் என்பவற்றை விட்டு விட்டு, நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்.
ஒரு பேச்சாளர் அன்று தான் பேச்சில் சிரிப்பின் அவசியத்தை பற்றி பேசினார்!
வந்திருந்த மக்களை பார்த்து நீங்கள் வீட்டில்
வாய் விட்டு சிரித்தால் கட்டாயம் நோய் உங்களை விட்டு ஓடி போய் விடும் என்று பேசினார் !
இந்த பேச்சை கேட்டு விட்டு ஒருவன் வீட்டுக்கு போய் விட்டு மறு நாள் ! வந்து பேச்சாளரை .சந்தித்து !
ஐயா தங்களுக்கு நன்றி சொல்லி விட்டு செல்ல வந்தேன் என்று சொன்னார்!
பேச்சாளர் புரியாமல் என்ன நடந்தது என்று கேட்க!
அதற்கு சொன்னார் நீங்கள் நேற்று நீங்கள் பேசும் போது சொன்னீர்கள்!
வாய் விட்டு சிரித்தால் கட்டாயம் நோய் உங்களை விட்டு ஓடி போய் விடும் என்று !
நீங்க சொன்ன மாதிரியே என் வீட்டுக்கு போனேன் வழக்கமான சண்டை நான் உடனே மனைவியை பார்த்து
வாய் விட்டு சிரித்தேன்!
அவ்வளவு தான் என் பெண்டாட்டி கோபித்து கொண்டு அவள் அம்மா வீட்டுக்கு போய் விட்டாள்!
மிக்க நன்றி ஐயா என்றாராம்!
வயது ஆக எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, கால்சியம் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும். எலும்பு தேய்மானம் அதிகமாக இருந்தால் எலும்பு நடக்கக்கூட மிகவும் கஷ்டப்படுவார்கள் முதியவர்கள்.
முதியவர்களுக்கு மட்டுமல்ல 40 வயதை தாண்டி விட்டாலே எழும்பு தேய்மானமும் சரி, கால்சியம் பிரச்சனையும் , மூட்டு வலியும் சேர்ந்து வந்து வருகின்றது.
இந்த பத்து விதைகளை இப்படி நீங்கள் பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக எலும்பு தேய்மானம், கால்சியம் பிரச்சனை ஆகியவை ஓடியே விடும்.
தேவையான பொருட்கள்:
1. முருங்கை விதை- 5 g
2. நெய் 1 ஸ்பூன்
3. பால்- 1 டம்ளர்
4. நாட்டு சர்க்கரை
செய்முறை:
1. முதலில் முருங்கை விதைகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள்.
2. அப்படி இல்லையெனில் மிகவும் முத்திய முருங்கைக்காய் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த விதைகளை மட்டும் தனியே எடுத்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
3. அந்த முருங்கை விதை உள்ளே பருப்பு இருக்கும் அந்த பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
4. 5 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
5. ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றி இந்த முருங்கை விதைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
6. நன்கு வறுத்த உடன் இதனை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
7. இதை ஒரு ஸ்பூன் அளவிற்கு பாலில் சேர்த்து கொதிக்க வைத்து சுவைக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
கண் பிரச்சனை கண் மங்குதல் கால்சியம் குறைபாடு எலும்பு பிரச்சனை எலும்பு தேய்மானம் கால் வீக்கம் கெட்ட கொழுப்பு ஆகிய அனைத்தும் நீங்கும்.
அனைவரையும் ஈர்க்கும் நறுமணம் கொண்டது, செண்பகப்பூ, மர வகையை சேர்ந்த மருத்துவ குணம் கொண்ட மலர், இது.
செண்பக மரப்பட்டையை ஒன்று இரண்டாக இடித்து, 20 பங்கு நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி தினமும் இருவேளை குடித்து வர, நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாகும்.
செண்பகப் பூவிலிருந்து, நறுமண எண்ணெய் மற்றும் அத்தர் போன்றவை எடுக்கப்படுகின்றன.
செண்பகப்பூ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால், முடி உதிர்தல் சரியாகும். தலைவலி, கண் நோய்கள் நீங்கும். மூட்டு வாதத்தை குணமாக்கும்.
பூச்சிக்கொல்லி மருந்தாகவும் செயல்படுகிறது.
உடல் வலுவடைய செண்பகப்பூ சிறந்த மருந்தாகும். பூவை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, அதில், தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும்.
செண்பகப்பூ பொடியை தினமும் இருவேளை, தேனுடன் கலந்து சாப்பிட்டு வர, பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும்.
செண்பகப் பூ பொடியில் கஷாயம் செய்து காலை, மாலை இருவேளை அருந்தி வந்தால், ஆண்மை குறைவு நீங்கும்.
செண்பகப் பூவை கஷாயம் செய்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நரம்பு தளர்ச்சி நீங்கும்.
செண்பகப்பூவுடன், 100 மில்லி நீர் விட்டு காய்ச்சி, 50 மில்லி காலை, மாலை என, இருவேளை குடித்து வர, மேக நோய்கள், நீர்சுருக்கு, வெள்ளை வெட்டை மற்றும் சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
செண்பக இலையை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட, வயிற்று வலி குணமாகும். கஷாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால், கண் பார்வை தெளிவு பெறும்.
செண்பக மரப்பட்டை, வேப்ப மரப்பட்டை சம அளவு எடுத்து, இடித்து, நான்கு மடங்கு நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி, காலை, மாலை என, இரண்டு வேளை குடித்து வர, குளிர் காய்ச்சல் நீங்கும்.
வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில், கண்ணும் கண்ணும் கலந்து என்கிற மிகவும் பிரபலமான ஒரு போட்டி நடனம் வரும்.
ஹீராலால் என்ற டான்ஸ் மாஸ்டர் இரு நாட்டிய தாரகைகளுக்கும் நடன அசைவுகள் சொல்லித்தந்தார்.
படத்தின் தயாரிப்பாளர் வாசனிடம் ஒரு கொள்கை இருந்தது. அவரிடம் வேலை செய்தவர்கள் எல்லாம் எழுபது வயதைத் தாண்டி இருக்கவேண்டும். மேக்கப், லைட்போய், காமிராக்காரர், வசனகர்த்தா இப்படி எல்லாரும் வாசனுடைய வயதுக்காரர்களாக இருந்தார்கள். ஒரு லைட்டை தள்ளி வைப்பது என்றால்கூட அரைமணி நேரம் எடுக்கும், அதனால் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நகர்ந்தது.
பத்மினிக்கு மற்றப் படப்பிடிப்புகள் இருந்தன. வைஜயந்தி மாலா வடக்கில் இருந்து இதற்காகவே வந்திருந்தார். பத்மினி இல்லாத சமயங்களில் வைஜயந்தி மாலா ஹீராலாலிடம் ரகஸ்யமாக சில நடன அசைவுகளை ஒத்திகை பார்த்து வைத்துக்கொள்வார்.
படப்பிடிப்பு சமயம் பத்மினியின் நடனம் அமோகமாக அமைந்தது. வைஜயந்தி மாலா புளகாங்கிதம் அடையவில்லை. அவர் ‘சாதுர்யம் பேசாதேடி, என் சலங்கைக்கு பதில் சொல்லடி’ என்று தோளிலே சடைதுவழ, காலிலே தீப்பொறி பறக்க, புயல்போல சுழன்றபடி மேடையிலே தோன்றுவார்.
ஒருமுறை இருவரும் ஆடும்போது பத்மினியின் நிழல் வைஜயந்தி மாலாவின்மேல் விழுந்தது. பத்மினி மன்னிப்பாக நடனத்தை நிறுத்தி ‘என்னுடைய நிழல் உங்கள் மேலே விழுகிறது’ என்றார். உடனேயே வைஜயந்தி மாலா ஆங்கிலத்தில் இரண்டு அர்த்தம் தொனிக்க ‘It’s only a passing shadow’ என்றார்.
தமிழ் நாட்டின் முதல் நடிகையை பார்த்து ‘நகரும் நிழல்’ என்று சொன்னது பத்மினியைப் புண்படுத்தி விட்டது. அந்த இரண்டு வார்த்தைகளுக்காக தான் இரண்டு இரவுகள் தொடர்ந்து அழுததாக பத்மினி கூறினார்.
படம் வெளிவந்த போது நாட்டிய தாரகை யார் என்பதில் ஒருவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வியாபார இடமாற்றம் குறித்த முயற்சிகள் கைகூடும். பணி சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். சமூக பணிகளில் செல்வாக்கு உயரும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உருவாகும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
அதிகார பதவியில் இருப்பவர்களால் நன்மைகள் ஏற்படும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். பயணம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
பிள்ளைகள் மூலமும் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
சிம்மம்
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். தடைப்பட்ட பணிகள் முடியும். உடல் தோற்றப்பொழிவு மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். எதிர்பாராத சில திருப்பங்கள் பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கன்னி
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். பயணங்களின் போது அலைபேசிகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்களுடன் அதிக நேரம் உரையாடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
துலாம்
சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விளையாட்டான பேச்சுக்களை தவிர்ப்பது பகைமையை குறைக்கும். மனதளவில் வித்தியாசமான கற்பனைகள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விருச்சிகம்
உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் ஆதாயம் மேம்படும். பயணம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார ரீதியாக ஒத்துழைப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
கருத்துக்களுக்கு மதிப்புகள் உயரும். அரசு வழியில் உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். வித்தியாசமான அணுகுமுறைகளால் நினைத்ததை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகரம்
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைப்பட்ட பணிகள் முடியும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்கள் பிறக்கும். அலுவலகத்தில் உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கும்பம்
எதிலும் அலட்சியம் இன்றி செயல்படவும். எடுத்துச் செல்லும் இடங்களில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால் மனவருத்தங்கள் நேரிடும். வியாபார போட்டிகள் அதிகரிக்கும். பணி சார்ந்த ரகசியங்களில் விவேகம் வேண்டும். எதிர்பார்க்க சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். துணிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
சுப செலவுகளால் கையிருப்பு குறையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். சச்சரவான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். ஆடம்பரமான பொருள்கள் மீது ஈர்ப்புகள் உண்டாகும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை 14.7.2025
இன்று அதிகாலை 01.50 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று காலை 07.58 வரை அவிட்டம். பின்னர் சதயம்.
இன்று மாலை 05.24 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.
இன்று அதிகாலை 01.50 வரை . பத்தரை. பின்னர் பிற்பகல் 01.10 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று அதிகாலை 05.59 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை