யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கொய்யா இலைகளில் ஆல்பா-குளுக்கோசிடேஸ் அதிகம் நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் எதிரியாக செயல்படுகிறது, உடலில் குளுக்கோஸ் என்கின்ற சர்க்கரை மூல கூரை இது தடுக்கிறது.
கொய்யா இலை செரிமான மண்டலத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றும் பல்வேறு நொதிகளைத் தடுக்கிறது.
நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு உதவும் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கான உணவுகளில் ஒன்றாக கொய்யா இலைகள் செயல் படுகிறது.
சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் ஆகிய இரண்டு வகையான சர்க்கரைகளை உறிஞ்சுவதைத் தடுப்பதன் மூலம், இலையில் உள்ள சேர்மங்கள் உணவுக்குப் பிறகு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
கொய்யா இலை செரிமான மண்டலத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றும் பல்வேறு என்சைம்களைத் தடுக்கிறது, இது உங்கள் இரத்தத்தில் எடுத்துக்கொள்வதை குறைக்கும்.
கொய்யா இலைச் சாறு இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தி, நீண்டகால இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து இன்சுலின் சக்தியை அதிகரிக்கும்.
வெள்ளை, சிவப்பு, கருப்பு மற்றும் காட்டு கொய்யா என்று வகைகள் உண்டு. இதில் அனைத்து வகைகளிலும் நிறைந்த மருத்துவம் உள்ளது. முக்கியமாக சிவப்பு மற்றும் கருப்பு கொய்யக்கள் சிறப்பானது என்று கூறலாம்... மூலிகை வளர்ப்பு நிலையங்களில் சிவப்பு /கருப்பு கொய்யா செடிகளாக கிடைக்கும்.
கொய்யா இலை தரும் மருத்துவ பயன்கள்
1. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
2. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.
3. மாதவிடாயின் வலி அறிகுறிகளைப் போக்க உதவலாம்.
4. உங்கள் செரிமான அமைப்புக்கு பயனளிக்கலாம்.
5. எடை இழப்புக்கு உதவலாம்.
6. புற்றுநோய்க்கு எதிராக செயல்படும்.
7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்.
8. சருமத்திற்கு நல்லது.
9. கொழுப்பைக் குறைக்கிறது.
10. சளி மற்றும் இருமலை குணப்படுத்தும்.
11. முடி உதிர்தலைத் தடுக்கிறது.
12. பல்வலிக்கு தீர்வு தரும்.
13. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
14. இரைப்பை குடல் சிக்கல்களைத் தீர்க்கிறது.
15. உங்கள் மூளைக்கு நல்லது.
கே. பாலச்சந்தர் இயக்கி, மம்முட்டி நடித்த அழகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விக்ராந்த். அடுத்து ஆர் வி உதயகுமார் இயக்கிய கற்க கசடற படம் மூலம் இருபது வருடம் முன்பு ஹீரோ ஆனார்.
நல்ல நடிகர். உழைப்பாளி. அன்பானவர்.. பண்பானவர் விக்ராந்த். விஜய்யின் உறவினர் என்ற போதும் சினிமாவில் அவருக்கு உரிய உயரம் இன்னும் வரவே இல்லை.
நினைத்து நினைத்து பார்த்தேன், முதல் கனவே, எங்கள் ஆசான், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக சட்டப்படி குற்றம் உள்ளிட்ட பல படங்களில் பாண்டி நாடு, தாக்க தாக்க , கவண், சுட்டுக் பிடிக்க உத்தரவு, போன்ற படங்களில் நடித்தும் அவருக்கு இன்னும் ஒரு பிரேக் அமையவில்லை. எனினும் தொடர்ந்து போராடும் குணமும் உழைப்பும் நிறைந்தவர் .தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியதே இல்லை.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீகின் முக்கியமான கிரிக்கெட் வீரர் கூட. அப்புறம் அவருக்கு ‘ LBW’ கிடைத்ததில் ஆச்சரியம் என்ன? நடிகர் விக்ராந்த் நடிப்பில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள புதிய வலைதளத் தொடர் ‘LBW – அதாவது லவ் பியாண்ட் விக்கெட்’
’ஹார்ட்பீட்’, ’போலீஸ் போலீஸ்’ மற்றும் ’ஆஃபீஸ்’ போன்ற லாங்-ஃபார்மேட் வெப் சீரிஸ்களைத் தொடர்ந்து தற்போது கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய வெப்சீரிஸை ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் அறிமுகப்படுத்துகிறது. ’ஹார்ட்பீட்’ வெப்சீரிஸை தயாரித்த அட்லீ ஃபேக்டரி தயாரித்திருக்கும் இந்தத் தொடர் மூலம் நடிகர் விக்ராந்த் ஓடிடி தளத்தில் அறிமுகமாகிறார். ஜனவரி 1, 2026 முதல் LBW ப்ரீமியர் ஆகிறது.
அருணா ராக்கி திரைக்கதை எழுதியிருக்க கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்ஷதா, நவீன், நிகில் நாயர் மற்றும் விஸ்வ மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தத் தொடர் குறித்து நடிகர் விக்ராந்த் , ” எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டுடன் ஓடிடி தளத்தில் அறிமுகமாவது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. கிரிக்கெட் எப்போதும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. கிரிக்கெட்டுடன் இருக்கும் ஆழமான தொடர்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்த LBW எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்கும் இது பிடித்தமானதாக இருக்கும்” என்றார்.
சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்பியதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள். அவர் ஒரு தமிழர் ஆவார்.
விவேகானந்தர் இந்தியா முழுவதும் ஒரு துறவியாகச் சுற்றி வந்தபோது, அவர் மதுரைக்கும் இராமநாதபுரத்திற்கும் சென்றார். அப்போது விவேகானந்தரின் அறிவாற்றலையும் ஆன்மீகச் செழுமையையும் கண்ட மன்னர் பாஸ்கர சேதுபதி, அவரை அமெரிக்காவிற்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
* நிதி உதவி: சிகாகோ மாநாட்டிற்குச் செல்வதற்கான பயணச் செலவுகளை ஏற்க மன்னர் முன்வந்தார்.
* சீடர்களின் பங்கு: இவருடன் சென்னை (மெட்ராஸ்) சீடர்களும், குறிப்பாக அலாசிங்க பெருமாள் (இவரும் ஒரு தமிழர்) என்பவர் வீடு வீடாகச் சென்று நிதி திரட்டி விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைப்பதில் பெரும் பங்காற்றினார்.
* பிற மன்னர்கள்: மைசூர் மன்னர் மற்றும் கேத்ரி மன்னர் அஜீத் சிங் ஆகியோரும் விவேகானந்தருக்கு நிதியுதவி அளித்தனர்.
1893-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமய மாநாடு (Parliament of the World's Religions) நடைபெற்றது.
* நோக்கம்: பாரதத்தின் பழமையான இந்து மதத்தின் (சனாதன தர்மம்) பெருமைகளையும், வேதாந்த கருத்துக்களையும் உலகிற்கு உணர்த்த ஒரு தகுதியான நபர் தேவைப்பட்டார்.
* மன்னரின் எண்ணம்: பாஸ்கர சேதுபதி தமக்கு வந்த அழைப்பையே விவேகானந்தரிடம் கொடுத்து, "உங்களைப் போன்ற ஒருவர்தான் அங்கு உரையாற்ற தகுதியானவர்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்.
3. தமிழர் என்ற பெருமை
விவேகானந்தரை முதன்முதலில் அடையாளம் கண்டு, அவரை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய பெருமை தமிழகத்தையே சாரும்.
* பாஸ்கர சேதுபதி அவர்கள் இன்றைய தமிழ்நாட்டின் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னர்.
* விவேகானந்தர் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பியபோது, முதலில் தமிழகத்தின் பாம்பன் கடற்கரையில்தான் இறங்கினார். அப்போது மன்னர் பாஸ்கர சேதுபதி விவேகானந்தரின் பாதங்கள் தரையில் படக்கூடாது என்பதற்காக, அவரை ஒரு சாரட்டில் அமர வைத்து, குதிரைகளுக்குப் பதிலாகத் தாமே அந்தச் சாரட்டை இழுத்துச் சென்றார் என்பது வரலாறு.
"மன்னர் பாஸ்கர சேதுபதி ஒரு 'ராஜரிஷி' (மன்னர்களில் துறவி போன்றவர்)" என்று சுவாமி விவேகானந்தர் புகழ்ந்துள்ளார்.
1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தை இயக்கிய கே.பாலச்சந்தர் இந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் 4 படங்களுக்கு இசையமைத்திருந்த நிலையில், ஒரு கட்டத்தில் இவர்களுக்கு இடையே ஏற்பட்டதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளே வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை?
தமிழ் சினிமாவில் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மையமாக வைத்து அதற்கு திரைக்கதை அமைத்து படங்கள் இயக்கியவர் கே.பாலச்சந்தர். இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், இவர் சினிமாவுக்கு வந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவரை அனுகவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதே சமயம் சிவாஜி நடிப்பில் ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருந்தார். எதிரொலி என்ற பெயரில் வெளியான இந்த படம் நெகடீவ் விமர்சனங்களை பெற்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர், நாகேஷ் நாயகனாக நடிக்க ஒரு சில படங்களை இயக்கியுள்ளார் அவருக்கு பிடித்த நடிகரும் நாகேஷ்தான்.
ஆரம்பத்தில் தனது படங்களுக்கு, தான் நாடகங்களில் பணியாற்றும்போது நெருங்கிய நட்புடன் இருந்த வி.குமார் என்பவரை இசையமைப்பாளராக பயன்படுத்திக்கொண்ட பாலச்சந்தர், அடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். 1970-களின் இறுதியில் இளையராஜா தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி வரவேற்பை பெற்று வந்த காலக்கட்டங்களிலும், பாலச்சந்தர் எம்.எஸ்.வியுடன் பணியாற்றி பல வெற்றிகளை குவித்து வந்தார்.
1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தை இயக்கிய கே.பாலச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக இளையராஜாவை அணுகியுள்ளார். இசை தொடர்பான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இன்றும் இந்த பாடல்கள் கேட்டு ரசிக்கும் வகையில் புதுமையாக அமைந்திருப்பதே அதன் சிறப்பு தான். சிந்து பைரவியை தொடர்ந்து, மனதில் உறுதி வேண்டும், புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா, கடைசியாக கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1989-ம் ஆண்டு வெளியான புதுப்புது அர்த்தங்கள் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படம் வெளியான 1989-ம் ஆண்டு இளையராஜா 32 படங்களுக்கு இசையமைத்துள்ளார். புதுப்புது அர்த்தங்கள் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால், படத்தில் பின்னணி இசையை முடித்து தருமாறு கே.பாலச்சந்தர் இளையராஜாவிடம் கூறியுள்ளார். இப்போது நேரம் இல்லை. அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இளையராஜா கூறியுள்ளார். ஒரு கட்டத்தில், கங்கை அமரனை வைத்து பண்ணலாமா என்று இளையராஜா கேட்டபோது கே.பாலச்சந்தர் மறுத்துள்ளார்.
இளையராஜா இந்த படத்திற்கு பின்னணி இசைய அமைக்க தாமதம் செய்வதை அறிந்த கே.பாலச்சந்தர், நீங்கள் ஏற்கனவே போட்ட பின்னணி இசை உள்ளது அதை இந்த படத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்க, இளையராஜாவும் அப்போது சரி என்று கூறியுள்ளார். அதன்பிறகு அந்த படத்திற்கு பின்னணி இசை சேர்க்கப்பட்டு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாடல்களும், பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அப்போது புதுப்புது அர்த்தங்கள் படம் வெளியாகிவிட்டது என்று இளையராஜாவிடம் தகவல் கிடைத்துள்ளது.
நான் பின்னணி இசை அமைக்காமல் எப்படி வெளியானது என்று இளையராஜா கேட்க, நடந்ததை பாலச்சந்தர் தரபு கூறியுள்ளனர். அதை ஏற்றுக்கொள்ளாத இளையராஜா, படத்தின் காட்சிகளை பார்த்து நான் அமைக்காத இசை ஏதோ ஒரு நினைவில் இசைமைத்தது என் பெயரில் படத்தில் வந்துகொண்டு இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இனி பாலச்சந்தர் படங்களுக்கும், அவர் தயாரிக்கும் படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார் என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
தாளிசாதி வடகம்
சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த சித்தா மருந்து.
ஒரு குப்பியில் 100 உருண்டைகள் இருக்கும்.
சித்தா மருந்து கடைகள் மற்றும் இணைய வழி வாங்கலாம்.
எல்லா வயதினரும் உபயோகிக்கலாம்.
ஒரு நாளில் 2 அல்லது 3 வேளை மருந்து உருண்டையை வாயில் போட்டு மென்றுவரவேண்டும்.
குறுகிய இடைக்காலத்தில் இருமலுடன் சளி வாய் வழியாக வெளியேறி நல்ல குணம் கிடைக்கும்.
மாறிவரும் மழைப்பொழிவு மற்றும் கடுமையான வானிலை மாற்றங்கள் அதனோடு நோய்களையும் கொண்டு வருகிறது. மழையால் தேங்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாவதோடு சளி இருமல், மலேரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு போன்றவை ஏற்படுகிறது. பருவமழையிலிருந்து வரும் நோய்களை தடுத்திட சில மூலிகைகள் நமக்கு உதவலாம். இது நோய் தடுப்பதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும்.
மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அளிக்க துளசி :
மழைக்காலத்தில் துளசி சேர்ப்பது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை நிறைவாக கொடுக்கும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் வயதான எதிர்ப்பு மற்றும் அழற்சி பண்புகள் உள்ளன.துளசி செடியை வீட்டில் வைத்திருப்பது உண்டு.
சளி மற்றும் இருமல் காலங்களில் ஒரு கப் சூடான துளசி தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது தொற்றுநோயை எதிர்த்து போரடும். மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஆண்டி பாடிகளை தூண்டும் அருமருந்து இது. பல நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்க செய்கிறது.
மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அமிழ்தவல்லி :
இது ஒரு அதிசய மூலிகை. இதன் நுகர்வு எப்போதும் எந்த நேரத்திலும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். அமிழ்தவல்லி ஈரப்பதம் கொண்டது. மழைக் காலங்களில் சருமத்தில் நச்சு சேர்க்காமல் தடுக்கிறது.
இது உடல் இரத்த சர்க்கரை அளவு குறைப்பதோடு டைப்2 டயாபட்டீஸ் எதிர்த்து போராடுகிறது. இதன் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகின்றன. உடலில் நச்சுக்களை வெளியேற்றுகின்றன. பருவமழை காலத்தில் இது சிறந்த மூலிகை என்று சொல்லலாம்.
மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மஞ்சள் :
மஞ்சள் தங்க மசாலா ஆகும். ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் இது முக்கியமானது. இது பல தோல் பராமரிப்பு பொருள்களில் முக்கியமானது. சூடான ஒரு டம்ளர் பாலில் சேர்க்கப்படும் போது அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உண்டாகும் காயங்களை ஆற்ற உதவுகிறது நாள்பட்ட உடல் வலிகளுக்கு ஓய்வு அளிக்கிறது. மழைக்காலங்களில் காயங்கள் பொறுமையாக குணமாகும். ஆனால் மஞ்சள் அதற்கு உதவுகிறது.
ஈரப்பதம் காரணமாக சருமம் வறட்சிக்குள்ளாவதை தடுக்கிறது. மழையின் போது செரிமானம் சிக்கலாகும். அதை சீர்செய்ய மஞ்சள் உதவுகிறது. மேலும் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இதனால் எடை இழப்பு சாத்தியமாகிறது.
மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க திரிபலா :
திரிபலா சளி, இருமல், வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா, காய்ச்சல், தலைவலி, டிஸ்பெசியா மற்றும் தொண்டைப்புண் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அதிசய மருந்து ஆகும். பருவமழைக் காலங்களில் செரிமானம் குறையும் போது இவை உதவுகிறது.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மோசமான குளிர்ச்சியை குணப்படுத்த செய்கிறது. இது மழைக்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. திரிபலா சிறந்த குடல் சீராக்கி மற்றும் இரத்த சுத்திகரிப்பு என்பதால் இது மலச்சிக்கலையும் குணப்படுத்த செய்கிறது.
மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இஞ்சி :
இஞ்சி தொண்டைப்புண், சளி, இருமல், காய்ச்சலுக்கு சிறந்த மூலம் ஆகும். இது உடலை இயற்கையாகவே குணப்படுத்துகிறது மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இஞ்சியில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது.
தேநீரில் இஞ்சி சேர்த்து, இஞ்சியை நீரில் கொதிக்க வைத்து என்று சேர்த்து வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிமதுரம் :
அதிமதுரம் என்பது சிறந்த மூலிகை. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளால் செறிவூட்டப்பட்டுள்ளது. ஆஸ்துமா அல்லது கடுமையான இருமலுடன் கூடிய நெஞ்சு சளி போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு அதிமதுரம் பல அற்புதங்களை செய்கிறது.
பருவமழை மூச்சுத்திணறல் பிரச்சனைகளை அதிகரிக்கும் என்பதால் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு இந்த மூலிகை சிறந்ததாக இருக்கும்.
ஆசியாவை தாயகமாகக் கொண்ட கொத்தமல்லி, நம் உணவில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் தான் இது அதிகம் விளைகிறது. மற்ற நாடுகளை விட இந்திய கொத்தமல்லிக்குத் தான் மவுசு அதிகம்.
பச்சை கொத்தமல்லி, உணவில் நறுமணத்தை அதிகரிக்கிறது. அதோடு வாயுவை போக்க, பித்தத்தை தணிக்க, உடல் சூட்டை குறைக்க, நஞ்சை முறிக்க, போதையை தீர்க்க, ரத்த அழுத்தத்தை குணப்படுத்த, இதய பலத்தை பெருக்க சிறந்த மருந்தாகும்.
நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி1, சி, ஈ என, பல வைட்டமின் சத்துக்கள், இரும்புச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து என, உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களின் அஞ்சறை பெட்டியாக இருக்கிறது.
ஜீரணத்திற்கு உறுதுணையாகவும், அஜீரணம், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்னைகளை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதில், ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கலாம். அதுமட்டுமின்றி வேகமாக அதிகரிக்கும் உடல் எடையையும் இது கட்டுப்படுத்தும்.
கொத்தமல்லி இலையில், 'டோடேசெனால்' என்ற ரசாயனப் பொருள் உள்ளது. இது, உணவு, 'புட் பாய்சன்'ஆவதற்கு காரணமான கிருமியை கொன்று விடுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர், அமெரிக்க விஞ்ஞானிகள்.
நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் நரம்பியல் மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மார்பக புற்றுநோயைக் கட்டுப்படுத்த, கொத்தமல்லியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கிறது, கொத்தமல்லி. இது, உடலில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் இலை சாற்றின் உதவியுடன், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்துவது மிகவும் எளிதானது.
மூக்கடைப்பு மற்றும் மூக்கு சம்பந்தப்பட்ட பல தொல்லைகளுக்கு கொத்தமல்லி தழையை துவையலாக செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட சரியாகும்.
சிறுநீரக கற்கள் உட்பட அனைத்து சிறுநீரக பிரச்னைகளையும் சரி செய்கிறது.
உடலைக் குளிர்ச்சியாக்கும், உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும். எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சாறு கலந்து பருகி வந்தால், வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும்.
கொத்தமல்லி இலைகளை அரைத்து முகத்தில் பூசுவதால் தோல் சுருக்கம் மற்றும் தோல் கருமை மறையும். கொத்தமல்லியை அரைத்து கண்களுக்கு மேல் பற்று போடுவதால், கண் பிரச்னைகள் குறைகிறது.
மாதவிலக்கு ஒழுங்கின்மை உடைய பெண்கள், தினம் கொத்தமல்லி இலை ஜூஸ் அருந்துவது நல்லது. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் நோய்களுக்கு, கொத்தமல்லி இலை நிவர்த்தி அளிக்கவல்லது.
கொத்தமல்லியை சாப்பிடுவதால், பெண்களுக்கு கருப்பை வலுப்படும். சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தும். கொத்தமல்லித்தழையை அரைத்து, மோரில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
தினமும் நாம் உண்ணும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால், நோயற்ற, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.
"வசதியான குடும்பத்துல பிறந்தவ தான் நான். என்னோட சேர்த்து வீட்ல நாலு பொண் ணுங்க. எல்லாரும் நல்லா படிச்சவங்க. நான் மட்டும்தான் படிக்கல. சின்ன வயசிலேயே டிராமால நடிக்க ஆரம்பிச்சுட்டேன். திருச்சியில டிராமா போட ஆரம்பிச்சா, அப்படியே மதுரை, கோயம்புத்தூர்னு சுத்திட்டு சென்னைக்கு வந்து சேர்வோம். மூணு ஷோ நடிச்சா, பத்து ரூபா சம்பளம். அப்போ ஒரு சவரன் பவுனே 50 ரூபாதான். அதனால இந்த பத்து ரூபாய் சம்பளம் பெரிசா தெரியும். நாடகங்களில் நடிச்சுக்கிட்டிருக்கும்போது ஒரு சாக்லெட் விளம்பரத்துல நடிச்சேன். அந்த விளம்பரத்தைப் பார்த்துதான் எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது.
முதல் படத்துலயே ஜெமினி, சாவித்திரி, எம்.ஆர்.ராதா, முத்துராமன்னு பெரிய பெரிய நடிகர்களோட நடிக்கிற வாய்ப்பு. எம்.ஜி.ஆர், சிவாஜின்னு ஜாம்பவான்களோடவும் நடிச்சிட்டேன். ரசிகர்களிடமிருந்து பட்டத்தையும், பாராட்டையும் வாங்கியிருக்கேன். நினைச்சிப் பார்த்தா சந்தோஷமாதான் இருக்கு. அதே சமயம் நான் பெருசா சாதிச்சிட்டதாவும் நினைக்கல. இந்த உலகத்தில உள்ள அத்தனை பேருமே கற்றது கை மண் அளவுதான்!’’ - தத்துவமும் பழுத்த அனுபவத்தின் பக்குவமும், கே.ஆர்.விஜயாவின் பேச்சில் மணக்கிறது.
‘‘இன்னிக்கு ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆயிட்டா, அதுக்கப்புறம் அம்மா, அக்கா கேரக்டர்கள்லதான் நடிக்க முடியும்னு சொல்றாங்க! ஆனா, என்னோட முதல் படம் ‘கற்பகம்’ ரிலீஸான ரெண்டே வருஷங்கள்ல எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அதுக்கு அப்புறம் நான் ஹீரோயினா மட்டும் 300 படங்கள்ல நடிச்சேன். கதாபாத்திரம் அர்த்தமுள்ளதா இருந்தா மட்டும்தான் யாரா இருந்தாலும் நிற்க முடியும்... நீடிக்க முடியும்.
எனக்கு ‘கற்பகம்’, ‘இதயக் கமலம்’, ‘தீர்க்க சுமங்கலி’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரி சூலம்’னு நிறைய படங்கள் அப்படி அமைஞ்சுது. ‘உங்கள மாதிரி ஒரு மருமகள் வேணும்’... ‘உங்கள மாதிரி மாமியார் அமையணும்’... ‘உங்கள மாதிரி அம்மா வேணும்’னு ஒவ்வொரு காலகட்டத்துலயும் ரசிகர்கள் என்கிட்ட பேசறதைக் கேட்கிற பாக்கியம் அமைஞ்சது. இதுதாங்க ஒரு நடிகைக்கு வேணும். ரசிகர்கள் தன் வீட்டுப் பொண்ணா நம்மளைப் பார்க்கணும். அப்படிப் பார்த்துட்டா எல்லா வயசுலயும் ஹீரோயினா நடிக்கலாம்.
- கே.ஆர். விஜயா
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
அரசு வழியில் இருந்த நெருக்கடி நீங்கும். மனதில் புதிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து செல்லும். ஆதாயகரமான முயற்சிகள் நிறைவேறும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
எதிலும் அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களால் வருத்தங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் மறைமுக ஒத்துழைப்புகள் கிடைக்கும். நண்பர்களிடத்தில் சூழ்நிலைக்கேற்ப விட்டுக் கொடுத்து செல்லவும். சில முக்கியமான வேலைகள் முடிவு பெறும் வியாபார புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். உறவினர்கள் மத்தியில் முக்கியத்துவம் ஏற்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். சில மாற்றங்கள் மூலம் மேன்மைகளை உருவாக்குவீர்கள். விலகி இருந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரம் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். புதிய நபர்களிடத்தில் அமைதி வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அமையும். மறதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி
மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வாகனம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் லாபம் ஓரளவு கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாகி நிறைவு பெறும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். புதியவர்களின் அறிமுகங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். வேலையாட்கள் நியமன எண்ணங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். இறை வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
எதிர்பாராத சில செலவுகள் நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். உயர்கல்வியில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
உறவினர்கள் மூலம் சஞ்சலங்கள் தோன்றி மறையும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். சக ஊழியர்களால் நிம்மதியான சூழல் அமையும். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வழக்கு பணிகளில் சில மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். நுட்பமான விஷயங்களை எளிதாக புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மீனம்
தம்பதிகளுக்குள் நெருக்கங்கள் அதிகரிக்கும். சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தோற்ற பொலிவுகள் மேம்படும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். விருப்பமான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். அலுவலகப் பணிகளில் துரிதம் ஏற்படும். எதிர்பாராத சில சிற்பங்களால் மாற்றங்கள் உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 30.12.2025.
இன்று அதிகாலை 03.50 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று அதிகாலை 02.40 வரை அஸ்வினி. பின்னர் பரணி.
இன்று அதிகாலை 01.25 வரை சிவம். பின்னர் இரவு 10.20 வரை சித்தம். பிறகு சாத்தியம்.
இன்று அதிகாலை 3.50 வரை கரசை. பின்னர் மாலை 03.42 வரை வணிசை . பிறகு பத்தரை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.46 மணி வரை
காலை : 10.30 முதல் 11.00 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிலும் படபடப்பு இன்றி பொறுமையுடன் செயல்படவும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் செயல்களில் மேற்கொள்வது மேன்மை தரும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
ரிஷபம்
குடும்பத்தில் பொறுப்புக்கள் மேம்படும். கொடுக்கல் வாங்கலில் திருப்த்தியான சூழல் ஏற்படும். தொழில் மாற்ற முயற்சிகள் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்புகள் குறையும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். பயணங்களில் பிரியமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம்
சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சுகளில் நிதானம் வேண்டும். சகோதரர்கள் வழியில் அலச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சினம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கடகம்
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப பிரச்சனைகளை பகிர்வதை தவிர்க்கவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபார பயணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூட்டாளிகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
கன்னி
முடிவுகள் எடுப்பதில் தாமதம் உண்டாகும். உங்கள் மீது சிறு சிறு விமர்சனங்களை தோன்றி மறையும். எதிலும் கோபம் இன்றி செயல்படவும். ஆடம்பரமான செலவுகளால் கையிருப்புகள் குறையும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வியாபாரம் நிமித்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். உறவினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். வெளியூர் பயணங்களில் ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். உத்தியோக பணிகளில் வரவுகள் மேம்படும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். எதிர்ப்பு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
விருச்சிகம்
கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். விருந்தினர்கள் வருகைகள் உண்டாகும். நீண்ட நாள் தடைப்பட்ட சில பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
தனுசு
முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மதிப்புகள் மேம்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபமும் மத்யமாக இருக்கும். தெய்வப்பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். மனதில் சிறு குழப்பம் தோன்றி மறையும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
வியாபார நிமித்தமாக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கவனம் வேண்டும். அசதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை அறிவீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சொத்து விற்பனையில் லாபகரமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
மனதில் தெளிவுகள் ஏற்படும். தடைபட்ட சில வரவுகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். தந்திரமான சில செயல்களால் வியாபாரத்தில் லாபத்தை மேம்படுத்துவீர்கள். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 29.12.2025.
இன்று அதிகாலை 04.41 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று அதிகாலை 04.04 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.
இன்று காலை 04.19 வரை பரிகம். பிறகு சிவம்.
இன்று அதிகாலை 04.41 வரை கௌலவம். பின்னர் மாலை 04.16 வரை தைத்தூலம் . பிறகு பரிகம்.
இன்று அதிகாலை 04.04 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உறவுகள் வழியில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
ரிஷபம்
கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். திடீர் பணவரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் ஏற்படும். அணுகு முறையில் சில மாற்றம் ஏற்படும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். நன்மை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். நட்பு வட்டம் விரிவடையும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆடை ஆபரணங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
சிம்மம்
அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களில் விவேகம் வேண்டும். கொடுக்கல் வாங்கலால் வேறுபாடுகள் உண்டாகும். வியாபார ரகசியங்களை பகிராமல் இருக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பணிகளில் முன் கோபமின்றி செயல்படவும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கன்னி
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவினங்களை அறிவீர்கள். தோற்ற பொழிவில் சில மாற்றம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். சினம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் ரீதியான சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். மனத்தில் இருந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். பண வரவு மத்தியமாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மறதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
தனுசு
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவு ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அசதியும், சோர்வும் அவ்வப்போது தோன்றி மறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
நண்பர்களுக்கு இடையே விவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
தேக ஆரோக்கியம் பொலிவு கூடும். அலைபாயும் மனதினால் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
நீதியரசர் சூரியமூர்த்தி அவர்கள் கூறுகிறார்,
"எனக்கு அப்போது ஒரு பதினைந்து பதினாறு வயது இருக்கும், தீவிர கடவுள் மறுப்பாளராக இருந்தேன். அந்த சமயத்தில், எங்கள் கிராமத்தில், எங்களுக்கு சொந்தமாக ஒரு தென்னந் தோப்பு இருந்தது. அதில், ஒரு இஸ்லாமிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்தில், ஒரு நபரிடம், மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட விஷக்கடி கண்ட மக்கள் வருவார்கள். அப்படி வரும் அவர்களிடம், அந்த நபர் அவர்கள் தலையின் மீது ஒரு வேப்பிலை கொத்து வைத்து, ஏதோ உச்சரிப்பார் , பிறகு அந்த நோயாளி நலமுடன் வீடு திரும்புவார்.. இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. அந்த இஸ்லாமிய நபரிடம், "நீங்கள் முனுமுனுக்கும் விஷயம்தான் என்ன?" என்று நான் கேட்டபொழுது, "உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, உன்னிடம் இதை கூற முடியாது. ஒருவேளை உனக்கு நம்பிக்கை வந்தால் பிறகு வா பார்க்கலாம்" என்று கூறி அனுப்பிவிட்டார்.
காலங்கள் உருண்டோடின. நான் சட்டம் பயின்று, வேலை கிடைத்து, படிப்படியாக பாண்டிச்சேரியின் நீதிபதியாக உயர்ந்துவிடடேன். இந்த காலங்களில் நான் தீவிர சைவசமய நம்பிக்கையாளனாகவும் மாறி இருந்தேன். ஒரு நாள் எனக்கு அந்த இஸ்லாமிய நபரின் நினைவு வந்தது.. உடனடியாக நேரில் எங்கள் தென்னந்தோப்புக்கு சென்று, அவரிடம், "இப்பொழுதாவது கற்றுத் தருவீர்களா?" என்று கேட்க, ஆச்சரியத்துடன் என்னை நோக்கிய அவர், "போய் குளித்துவிட்டு வா.. உனக்கு உபதேசிக்கிறேன்" என்றார்.
நான் குளித்து முடித்து வந்ததும், என்னைக் கீழே அமரச் செய்து என் காதில் அவர் அந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சரியம் தாளவில்லை.. ஏனெனில் அவர் ஓதியது திருநாவுக்கரசர், விஷம் கண்டு இறந்து விட்ட அப்பூதியடிகளின் மகனை காப்பாற்ற பாடிய தேவாரப் பாடல்..
அவர் அந்த முழு பதிகத்தையும் என் காதில் ஓதி முடித்தவுடன், "இது எங்கள் தேவாரப்பாடல் ஆயிற்றே" எனக்கேட்க.. "அவர் எனக்கு இதெல்லாம் தெரியாது. என் குருநாதர் எனக்கு சொல்லி கொடுத்தார் அதைக் கொண்டு நான் வைத்தியம் செய்கிறேன்" என்று கூறி எனக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இன்னதென்று தெரியவில்லை, அதன் அர்த்தமும் தெரியவில்லை.. அதன் மூலமும் உணரவில்லை.. ஆனாலும் நம்பிக்கையுடன் ஓதுபவர்களுக்கு அதன் பலன்கள் கிடைக்கிறது.
தேவாரப் பாடல்கள் அனைத்தும் மந்திரச் சொற்களால் நிரம்பியவை. அவைகள் தமிழ் வேதத்தின் ஒரு அங்கம். நம் தமிழ் மக்கள் குறைதீர்க்க இறைவன் நமக்கு அளித்த பொக்கிஷம்.. இது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்?
திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பாக, 'விதியை வெல்வது எப்படி?' என்று ஒரு புத்தகம் சில காலங்களுக்கு முன் வெளியானது. சகாய விலையில் கிடைக்கும் அந்த புத்தகம் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும். அதில் எந்த பதிகம் எந்த பலனை அளிக்கும்? என்று விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 28.12.2025.
இன்று காலை 07.46 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று அதிகாலை 05.18 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.
இன்று காலை 07.20 வரை வரீயான். பிறகு பரிகம்.
இன்று காலை 07.46 வரை பவம். பின்னர் மாலை 06.14 வரை பாலவம் . பிறகு கௌலவம்.
இன்று அதிகாலை 05.18 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.25 வரை மரண யோகம். பிறகு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 03.00 முதல் 04.00 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை




























