யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
2026ஆம் ஆண்டில் கனடா தனது குடியேற்ற விதிகளை மேலும் கடுமையாக்கி, புதிய நிரந்தர குடியிருப்பாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்க தீர்மானித்துள்ளது.
2024 இறுதியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, 2025 நவம்பரில் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள், வேலைவாய்ப்பு இழப்பு விகிதத்தை குறைப்பது, வீட்டு வசதி பிரச்சினையை சமாளிப்பது, சுகாதாரம் போன்ற பொது சேவைகளின் அழுத்தத்தை தணிப்பது என்பதே முக்கிய நோக்கமாகக் கொண்டவை.
எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டாலும், திறமையான தொழிலாளர்கள், பிரெஞ்சு மொழி அறிவுள்ளவர்கள் மற்றும் கனடாவில் முன் அனுபவம் உள்ளவர்கள் ஆகியோருக்கு இனி முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த கட்டுப்பாடுகள் மூலம் கனடாவுக்கு வருபவர்கள் பொருளாதாரத்தில் பயனுள்ளதாக பங்களிக்கக்கூடியவர்களாக இருப்பதை அரசு உறுதி செய்கிறது என கால்கரியைச் சேர்ந்த குடியேற்ற ஆலோசகர் மந்தீப் லிதர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் குடியேற்றக் கொள்கை இனி குறைந்த எண்ணிக்கையுடன், ஆனால் அதிகத் தேர்வுத்தன்மையுடன் முன்னேறுகிறது,” என தெரிவித்துள்ளார்.
நிரந்தர குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வரும் நிலையை அவதானிக்க முடிகின்றது. இதனால், உயர் கல்வித் தகுதி மற்றும் தொழில்முறை அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே அதிகம் தேர்வு செய்யப்படுவார்கள் என லிதர் கூறுகிறார்.
* சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள். கொப்பளம் ஏற்படாது.
* தேவைக்கு அதிகமாக இஞ்சி இருந்தால் அதை மண்ணில் புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும் போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.
* பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க அதை இரண்டிரண்டாக நறுக்கி வைத்து விடுங்கள்.
* உருளைக் கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.
* முதல்நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை வரையில் வதங்காமல் இருக்க வேண்டுமா? பூவை ஈரத் துணியில் சுற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை நன்றாகக் கழுவிவிட்டு அந்தப் பாத்திரத்திற்குள் பூவை வைத்து மூடிவையுங்கள். பூ வாடாமல் வதங்காமல் வைத்த மாதிரியே இருக்கும்.
* ஜாம் பாட்டிலில் ஜாம் தீர்ந்து போனால் அதில் பாலை ஊற்றுங்கள். பாட்டிலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாம் பாலுடன் கலந்து கரைந்துவிடும். பிறகு அந்தப் பாலை அருந்தினால் சுவையாக இருக்கும். ஜாம் வீணாகாது.
* வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த ஜவ்வரிசியைச் சாதம்போல் வேகவைத்து மோரில் கரைத்து உப்புப்போட்டுச் சாப்பிட வயிற்றுப்போக்கு நிற்கும். வயிற்று வலியும் இருக்காது.
* குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு 5 மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.
* பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கிக் கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்துவர அல்சர் சீக்கிரமே குணமாகும்.
* தேனில் நெல்லிக்காய்ப்பொடி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்கவே இருக்காது.
* மூட்டு வலி, முழங்கால் வலியைக் குறைக்க முடக்கத்தான் கீரை, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துத் தோசை மாவில் கலந்து தோசை வார்த்துச் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
* மாதுளம் பழச்சாறுடன் இஞ்சிச்சாறு, தேன் கலந்து மூன்று வேளையும் அருந்தி வர வறட்டு இருமல் நீங்கும். தொண்டைக்கும் இதம் கிடைக்கும்.
* தக்காளியைச் சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும்.
* சொறி, வேர்க்குரு வராமல் தடுக்க பாசிப்பயறு, மஞ்சள் தூள், வேப்பிலையை மைபோல் அரைத்து உடலில் பூசி 10 நிமிடம் கழித்துக் குளித்து வாருங்கள். சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
* மாதுளம் பழச்சாற்றுடன் இஞ்சிச் சாறு கலந்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
* செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகும்.
* திராட்சைப் பழச்சாற்றை மூன்று வேளைகள் அருந்த குடல் புண் குணமாகும்.
* விளாம்பழத்தின் சதையுடன் திப்பிலியையும் மிளகையும் தூள் செய்து சேர்த்துப் பயன்படுத்த பித்த மயக்கம்; தொண்டை நோய்கள் குணமாகும்.
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
* எல்லா அசைவ சமையலுக்கும், குருமாக்களுக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அவசியம் அதை இஞ்சி அரை கிலோ , பூண்டு 300 கிராம் அளவில் உரித்து சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளலாம். அரைத்ததும் அதனுடன் சிறிது உப்பு தூள்,கலந்து வைக்கவேண்டும். சின்ன பேமிலிக்கு ஒரு மாதம் வரை போதும். நல்ல ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும். வேண்டுமானால் நாலில் ஒரு பங்கை எடுத்து பிரீஜரிலும் வைக்கலாம். சமையலை ரொம்ப சுலபமாக முடிக்கலாம், நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.
* புளிவிட்டு செய்யும் சமயலுக்கு வேலைக்கு சொல்பவர்கள் சுடு நீரில் ஊற போட்டு கரைக்கனும் என்ற அவசியம் இல்லை சிறிது உப்பு சேர்த்து இரவே ஊறபோட்டு விடலாம்.
* தேங்காய் நிறைய இருந்தால் அதில் உப்பை தடவி வைப்பார்கள், அதற்கு பதில் பத்தைகளாக போட்டோ (அ) பொடியாக அரிந்தோ அதை ஒரு பாக்கெட்டில் போட்டு பிரீஜரில் வைத்து கொள்ளலாம். தேவையான போது சட்னிக்கு,குருமாவிற்கு கொஞ்சம் எடுத்து சிறிது நேரம் தண்ணீரில் போட்டுவைத்தால் உடனே கழண்டு வந்துவிடும்.
* ஆப்பத்துக்கு, இடியாப்பத்துக்கு தேங்காய்பால் ஊற்றி சாப்பிட பால் எடுக்கும் போது அத்துடன் ஏலாக்காய் சேர்த்து அரைத்தால் நல்ல மணமாக இருக்கும்.
* தினம் இஞ்சி டீ குடிப்பவர்கள் அதை போட்டு தட்டி கொண்டு இருக்காமல் ஒரு பெரிய துண்டு அளவிற்கு கொர கொரப்பாக ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொண்டால் தினம் டீ கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து போட்டு கொள்ளலாம்.அல்லது கேரட் துருவியில் தினம் ஒரு துண்டு துருவிக்கொள்ளலாம்.
* பொரித்த எண்ணை மறுபடி பயன் படுத்தும் போது அதை வடிகட்டி கொள்ளுங்கள். முடிந்த வரை கொஞ்சமா எண்ணை பயன் படுத்தி பொரிக்கவும். மீதியை முன்று நாட்களுக்குள் முடிக்க பாருங்கள்.
* அடுத்த நாள் என்ன சமைக்க போகிறோம் என்பதை ஒரு நாள் முன்பே யோசித்து தேவையானதை வாஙகி வைத்து கொள்ளுங்கள்.காலையில் சமைக்கும் போது டென்ஷன் இல்லாமல் இருக்கும்.
* முருங்கக்காய் அதிகமாக இருந்தால் அதை அப்ப்டியே பிரிட்ஜில்வைத்து காயவிடாதீர்கள். அதை தோலெடுத்து ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து ஒரு கவரில் போட்டு பிரீஜரில் போட்டு வையுங்கள். முருங்கக்காய் சேர்த்து சமைக்கும் போது அப்ப எடுத்து அப்படியே கழுவி சேர்த்து கொள்ளலாம், இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்.
* குருமாக்களில் தேங்காயின் அளவை குறைத்து கொண்டு பாதம் சேர்த்து அரைத்து ஊற்றலாம். இது கொலஸ்ராயிலின் அளவை கட்டுபடுத்தும் குழந்தைகளுக்கும் மூளை வளர்சி அதிகரிக்கும். ரிச் டேஸ்டும் கிடைக்கும்.
* கருவேப்பிலை பிரெஷாக வாங்கி அதை கழுவி தண்ணீரை வடித்து ஒரு பேபப்ரில் சுருட்டி பிரிட்ஜில் வைத்தால் கொஞ்சம் நாள் ஆனதும் பொடித்தால் தூளாகிவிடும், அதை பிஸிபேளாபாத் இட்லி பொடி, மற்றும் பொடித்த கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கும் சமையலுக்கு பயன் படுத்தலாம்.
* பால் அடிப்பிடித்து, தீய்ந்த வாசனை வந்தால், அதில் ஒரு வெற்றிலையைப் போடவும். அடிப்பிடித்த வாசனை போய் விடும்.
* இரண்டு வாழைப்பழம், சிறிது சர்க்கரையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதில் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். ஏதாவது ஒரு எசென்ஸ் ஊற்றவும். புதுமையான சுவையான பாயசம் ரெடி.
* அல்வா செய்யும் போது, வெண்ணெயை அரைப் பதமாக உருக்கி வைத்துக் கொள்ளவும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அல்வா கிளறினால், நெய் பதமாக காய்ந்து ஸ்வீட் கமகமக்கும்.
* பூண்டைப் பொடியாக நறுக்கிப் பாலுடன் சேர்த்து தினமும் உட்கொண்டு வந்தால் இதயக் கோளாறு கட்டுப்படும்.,
* வெண்ணெய் காய்ச்சி இறக்கும் போது, அரை கரண்டி வெந்தயத்தைப் போட்டால் நெய் கமகமக்கும்.
* தண்ணீருக்கு பதிலாக பால் ஊற்றி, கேசரி பவுடர் போடாமல் செய்து பாருங்கள். வெண்மையாக பால் கோவாவுடன் போட்டி போடும் சுவை..!
* பாதுஷா செய்யப் போகிறீர்களா? சோடா, டால்டா இரண்டுடனும் கொஞ்சம் கெட்டியான புளிப்புத் தயிரும் சேர்த்துப் பிசைந்தால், பதர் பதராக மிருதுவாக, சர்க்கரைப் பாகில் ஊறி புதுச்சுவையோடு இருக்கும்.
* பீட்ரூட்டை பாலில் வேக வைத்துவிட்டு, பிறகு மசித்து செய்தால் ‘பீட்ரூட் அல்வா’ பிரமாதம்!
* மோர்க்குழம்பு மீதமாகிவிட்டதா? கொஞ்சம் கடலை மாவைப் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். எண்ணெயில் பொரித்துக் குழம்போடு சேர்க்கவும். வடைகறி மாதிரி அருமையாக இருக்கும்.
* மோர் நிறைய மீந்துவிட்டால், அதில் ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பைப் போட்டு வைக்கவும். விரைவில் புளிக்காமலும் வாடை வராமலும் இருக்கும்.
* கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும் போது சிறிது பால் பவுடர் சேர்க்கவும்… ருசி கூடும்.
* சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள அவசரத்துக்கு ஒன்றும் இல்லையா? கெட்டித் தயிரில் சிறிது சில்லி சாஸை கலந்து பரிமாறவும். அவசரத்துக்குக் கை கொடுக்கும் இந்த அபார ருசி.
* குளிர் காலத்தில் உறை மோர் விடும் போது, சிறிது புளி உருண்டையைப் போட்டால் கெட்டியான தயிர் கிடைக்கும்.
* தேங்காயை மெல்லியதாக நறுக்கி, தயிரில் போட்டு வைத்தால், இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
* மோர்க்குழம்பு செய்யும் போது, சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சேர்க்கவும். குழம்பு வாசனையாக, ருசியாக இருக்கும்.
* பால் சூடாக இருக்கும் போதோ, ஆறிப் போன பிறகோ உறை ஊற்றினால் தயிர் பக்குவமாக இருக்காது. இளஞ்சூட்டோடு இருக்கும் போது உறை ஊற்றினால், பக்குவத்தோடு கெட்டியாகவும் இருக்கும்.
* தயிர் பச்சடியில் வெங்காயத்துக்கு பதில் கோவைக்காயை சேர்த்தால் புதுச் சுவை.
* ஆப்பத்துக்கு அரைக்கும் போது, தேங்காய் தண்ணீர் சேர்க்கவும். மறுநாள் மாவு பொங்கி இருக்கும். அதில் அரை கப் சூடான பால் சேர்த்து பிறகு ஆப்பம் சுடவும். மென்மையாக இருக்கும்.
நல்லெண்ணெய் ! எள் , நெய் என்ற சொற்களின் கூட்டாக பிறந்தது , எண்ணெய் . எள் என்ற தானியத்தில் இருந்து பிரித்து எடுக்கும் நெய்யை குறிப்பது தான் இது . ஆனால் , எண்ணெய் என்பது எல்லா வகை தாவர எண்ணெய்களையும் குறிக்கும் பொதுச்சொல் ஆகிவிட்டது . எள் தானியத்தில் எடுக்கப்படுவதை குறிக்க , ' நல்லெண்ணெய் ' என்ற சொல் பயன்படுகிறது . உடல் நலத்துக்கு உகந்தது என்பதால் , ' நல்ல எண்ணெய் ' என்ற பொருள் தருகிறது . தமிழகத்தில் , சமையலில் அதிகம் பயன்படுகிறது நல்லெண்ணெய் .
ஆசியா கண்ட பகுதியில் , சீனர் , கொரியர் , ஜப்பானிய குடும்பங்களிலும் இதை அதிகம் உபயோகிக்கின்றனர் .
தமிழர்மருத்துவம் மற்றும் ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது . இதன் மகத்துவம் பற்றி பார்போம் ... அடிக்கடி உணவில் நல்லெண்ணெயை சேர்த்தால் உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும் . உடல் சூட்டை தணிக்கும் . சீராக வியர்வை வெளியேற உதவும் . இதில் , ' சீசேமோல் ' என்ற பொருள் இதய நோயை தடுக்கிறது . மக்னீஷியம் சத்து , நீரிழிவு நோயை தடுக்கும் . இதில் உள்ள ஜிங்க் சத்து எலும்பு வளர்ச்சிக்கு உதவும் . குடலியக்கம் சீராக நடக்கும் . செரிமானப் பிரச்சனையை தீர்க்கும் .
நம்மில் பல பேருக்கு அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை ஒரு நாளைக்கு பலமுறை நாம் குடிப்போம். இவை நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கக்கூடியவை. இதை ஒரு நாளைக்கு அடிக்கடி குடிப்பதால் நம் உடலுக்கு நல்லதல்ல. இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதை நாம் குடிப்பதை தவிர்த்து இயற்கையாக தயாரிக்கப்படும் சில மூலிகைகள் நிறைந்த பானங்களை குடிப்பதால் நம் உடலுக்கு நன்மையை அளிக்கிறது. இந்த மாதிரியான மூலிகைகள் நிறைந்த பானங்கை எடுத்துக் கொள்வதால் நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
பேரிச்சை விதை தேநீர் :
நாம் பேரச்சம் பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் கொட்டையை தூக்கி எரிந்து விடுவோம். பேரிச்சை பழத்தின் விதையை நன்கு வறுத்து பொடி செய்து பிறகு அதை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பால், பனங்கற்கண்டு சேர்த்து வாரம் ஒரு முறை இதை குடிக்கலாம்.
மேலும் பேரிச்சை விதை தேநீரில் தாமிரம், செலினியம், இரும்பு போன்ற தாதுபுக்கள் நிறைந்துள்ளது. இரத்த சோகை, தோல் பிரச்னைகள், ஞாபக மறதி ஆகியவை குணமாகும்.
ஆரஞ்சு தோல் தேநீர் :
ஆரஞ்சு பழத் தோலின் வெள்ளை பகுதியை நீக்கி பொடியாக நறுக்கி அதை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அதில் தட்டிய ஏலக்காய் சேர்த்து அந்த தண்ணீர் பாதியாக சுண்டிய பிறகு அதில் தேன் கலந்து குடித்து வரலாம்.
இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட், பிளவனோய்ட்ஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளதால் நம் உடலில் தோல் சம்மந்தமான பிரச்சனைகள் எது வராமல் தடுகிறது.
பெருமைக்காக செய்யும் செயல் எத்தனை உயர்வானதாக இருந்தாலும், அது கடவுளுக்கு விருப்பமானது அல்ல.
செய்யும் செயலை செவ்வனே முடிக்க உள்ளத்தில் துணிவு வேண்டும். ஒருபோதும் ஆத்திரப்படாதே.
பயணமோ மிக நீண்டது. எவ்வளவு தூரம் என்பதை கணக்கிட முடியாது.
தெய்வத்திடம் செய்யும் முறையீடு ஒருபோதும் வீண் போகாது. விடாது முயன்றால் வெற்றி பெறுவது உறுதி.
விருப்பத்திற்கு மாறாக நடந்தால் மனம் உடைந்து விடாதே. சஞ்சலம் சிறிதும் வேண்டாம். எப்போதும் அமைதியாக இருக்கப் பழகிக் கொள்.
உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. பஞ்சபூதங்களுக்கு அழிவு கிடையாது என்பதை உணர்ந்து கொள்.
படிப்பதை விட்டு விடாதே. நல்ல நூல்களைப் படி.
சகிப்புத்திறன் இல்லாவிட்டால் உலகில் எதையும் சாதிக்க முடியாது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். விவேகமான செயல்படுதல் நன்மதிப்பை உருவாக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தன வரவுகள் தாராளமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மிதுனம்
இணையம் சார்ந்த துறையில் புதுமையான சூழல் ஏற்படும். வருங்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்கள் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கலை துறையில் தனிப்பட்ட ஈர்ப்புகள் ஏற்படும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் அமையும். தான தர்ம செயல்களில் ஈடுபாடுகள் உண்டாகும். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும். ஆடம்பரமான பொருள்கள் மீது ஈர்ப்புகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
சிம்மம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். சிக்கலான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். புதிய முதலீடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடன் பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
செயல்பாடுகளில் ஒரு விதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். நெருக்கமானவர்கள் இடத்தில் அதிக உரிமை கொள்வதை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில வரவுகள் தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். உத்தியோகத்திலும் மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். தடங்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
பொதுக் காரியங்களில் ஈடுபாடுகள் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். பெற்றோரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனை குறையும். வீடு வாகனங்களை சரி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு புதிய முடிவுகளை எடுப்பீர்கள். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விருச்சிகம்
வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். மற்றவர்களின் பேச்சுகளுக்கு செவி சாய்க்காமல் செயல்படவும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வேலையாட்கள் இடத்தில் பொறுமையை கையாள்வது நல்லது. அலுவலகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீடு மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மகரம்
தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
கும்பம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உயர் கல்வியில் இருந்த குழப்பங்கள் மறையும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மாற்றத்தை உருவாக்கும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
மீனம்
தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். மூத்த உடன் பிறப்புகள் அனுகூலமான செயல்படுவார்கள். பணி நிமித்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனை சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிலும் ஆய்வு இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2.1.2026.
திதி
சுக்ல பக்ஷ சதுர்தசி - Jan 01 10:22 PM – Jan 02 06:53 PM
சுக்ல பக்ஷ பௌர்ணமி - Jan 02 06:53 PM – Jan 03 03:32 PM
நட்சத்திரம்
மிருகசீரிடம் - Jan 01 10:48 PM – Jan 02 08:04 PM
திருவாதிரை - Jan 02 08:04 PM – Jan 03 05:27 PM
கரணம்
கரசை - Jan 01 10:22 PM – Jan 02 08:38 AM
வனசை - Jan 02 08:38 AM – Jan 02 06:53 PM
பத்திரை - Jan 02 06:54 PM – Jan 03 05:11 AM
பவம் - Jan 03 05:11 AM – Jan 03 03:32 PM
யோகம்
சுப்ரம் - Jan 01 05:12 PM – Jan 02 01:06 PM
பராம்யம் - Jan 02 01:06 PM – Jan 03 09:05 AM
நல்ல நேரம்:
12:00 PM – 12:46 PM
12:15 PM – 01:40 PM
05:01 AM – 05:49 AM
கனடாவின் வன்கூவர் விமான நிலையத்தில், மது அருந்திய நிலையில் பணிக்கு வந்ததாக ஏர் இந்தியா விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால் டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் பல மணி நேரம் தாமதமானது.
வன்கூவரில் இருந்து டெல்லிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் விமானி, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை உடனடியாக கைது செய்தனர். கனடா சட்டப்படி விமானிகள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடுவது கடுமையான குற்றமாகும். விமானி கைது செய்யப்பட்டதால், பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே காத்திருக்க நேரிட்டது. மாற்று விமானி ஏற்பாடு செய்யப்படும் வரை விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய அந்த விமானி மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இன்று இரவு, கனடியர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் ஒன்று கூடி, புத்தாண்டின் தொடக்கத்தை கொண்டாடுவார்கள். நாடு முழுவதும் உள்ள குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றாகச் சேர்ந்து, வரவிருக்கும் ஆண்டை வரவேற்கும் நேரமிது.
புத்தாண்டு முன்னிரவில், கடந்த ஆண்டில் நமக்கு மகிழ்ச்சியளித்த தருணங்களையும், அவற்றை சிறப்பாக்கிய நமது வாழ்வில் உள்ள மனிதர்களையும் நாம் நினைவுகூருகிறோம்.
இந்த ஆண்டு எமது நாட்டிற்கு பல சவால்களை கொண்டு வந்திருந்தாலும், நாம் ஒரு விசேடமான, தாராள மனம் கொண்ட, அக்கறையுள்ள தேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது எவ்வளவு அதிஷ்டம் என்பதையும் அது நினைவூட்டியுள்ளது.
நாம் ஒன்றுபட்டிருக்கும்போது, ஒருவருக்கொருவர் கவனம் செலுத்தும்போது, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்ளும்போது தான் நாம் மிக வலிமையானவர்களாக இருக்கிறோம். அதுவே கனடாவை வலிமையான நாடாக உருவாக்குகிறது. இந்த ஆண்டு முடிவடையும் தருணத்தில், அதே ஊக்கத்தையும் அதே பெறுமதிகளையும்2026 ஆம் ஆண்டிலும் கொண்டு செல்ல வேண்டும் என்று நாம் உறுதி செய்கிறோம்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள், கனடா.” என மார்க் கார்னி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சுக்கை தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.
மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது. ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
ஜானி படத்தில் இடம்பெற்ற ஆசைய காத்துல தூது விட்டு பாடலில் இவர் நடித்திருப்பார், இவர் யார் என தெரியுமா? தமிழ் தெலுங்கில் பிரபல நடிகையாக விளங்கிய ஜெயசுதா, அதாவது பாண்டியன் படத்தில் ரஜினிகாந்தின் சகோதரியாக வரும் ஜெயசுதாவின் தங்கை ஆவார்.
இவரின் பெயர் சுபாஷினி, ஜானி படத்தில் இடம்பெற்ற அந்த ஆசைய காத்துல தூதுவிட்டு பாடல் இவருக்கு அதிகம் பெயர் வாங்கிக்கொடுத்தது.
இவர் 1980ல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த கரும்பு வில் என்ற படத்தில் சுதாகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பழம்பெரும் நடிகையான விஜய நிர்மலாவின் மருமகளும் இவரே. தமிழ், மலையாளம், கன்னடம், தாய்மொழி தெலுங்கில் அதிகம் நடித்துள்ளார் சுபாஷினி.
இவரை அறிமுகப்படுத்தியது இயக்குநர் ஸ்ரீதர், இவர்தான் தனது அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் சுபாஷினியை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து நட்சத்திரம் , கொண்டாட்டம், பாய்ஸ் என சில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் நடித்ததில் முக்கியமான திரைப்படம் கரும்பு வில் திரைப்படம்தான். நல்ல நடிகையான இவர் தெலுங்கில் நல்ல படங்களில் நடித்து இருந்தாலும், தமிழில் ஸ்ரீதரால் அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் நறுக்கு சுறுக்குன்னு பெரிய பெயர் பெற்ற படங்களில் நடிக்காதது வருத்தமே. அவ்வப்போது இடைவெளி விட்டே இவர் தமி சினிமாவில் நடித்து வருகிறார்.
இன்றும் இவர் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - 2026
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 1.1.2026.
இன்று இரவு 08.57 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி
இன்று இரவு 9:48 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.
இன்று மாலை 04.18 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.
இன்று காலை 09.36 வரை கௌலவம். பின்னர் இரவு 08.57 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று காலை 06.29 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 12.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சிந்தியா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகை சிந்தியா லூர்டே தயாரித்து, ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ‘அனலி’.
அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா எழுதி இயக்கியுள்ள திரைப்படத்தில், சக்தி வாசுதேவன், குமரவேல், இனியா, கபிர் துகான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சிந்தியா லூர்டே கூறும்போது, “‘வர்ணாஸ்ரமம்’, ‘தினசரி’ படங்களுக்குப் பிறகு 'அனலி' என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. கொஞ்சம் தனித்துவமானதாக இருக்கும்.
90-களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி ஆக்ஷன் படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் முதன் முறையாக முழுநீள ஆக்ஷன் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். நாயகர்களே நடிக்கத் தயங்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறேன். ஆக்ஷன் காட்சிகளில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன்.
இதில் ஹீரோ என்று யாரும் கிடையாது. நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் நிறைய கற்றுக் கொள்கிறேன். இந்தப் படத்திலும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என கற்றுக்கொண்டேன்” என்றார். இந்தப் படம் ஜன.2-ம் தேதி வெளியாகிறது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.






















