·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1224
  • More

யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.

இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார்.

என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள்.

அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.

ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசித்தார்.

பீர்பாலை பார்த்தார்.

பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்.

மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.

கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன்.

அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.

பயம் ஒரு பெரிய நோய் என்றார்.

நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

  • 8
·
Added a post

ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். தினமும் யாராவது ஒருவருக்கு ஏதாவது கொடுக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. அப்படி ஒரு பழக்கம். அதுமட்டுமல்ல அவர் கொடுப்பது அடுத்தவர்களுக்கு தெரியாது. அவ்வளவு ரகசியமாக கொடுப்பார்.

ஒரு நாள் இரவு அவர் ஏற்கனவே தயாராக கட்டி வைத்திருந்த பண முடிப்பை கையில் எடுத்துக் கொண்டார். வீட்டை விட்டு வெளியில் வந்தார். தெருவில் இறங்கி நடந்தார். இன்றைக்கு யாருக்கு தர்மம் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருட்டில் நடந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஒருவர் வருவது போல் இருந்தது. உடனே அவரிடம் போனார் . தன்னிடமிருந்த பண முடிப்பை அவசரம் அவசரமாக அவர் கையில் திணித்து விட்டு திரும்பி வந்துவிட்டார்.

அப்பாடா ஒரு வழியாக தருமம் செய்தாகி விட்டது என்கின்ற மகிழ்ச்சி.. மனநிறைவு அவர் முகத்தில்.. நிம்மதியாக தூங்கி எழும்பினார்.

மறுநாள் காலையில் ஊர் பூராவும் ஒரே பேச்சு . நேத்து ராத்திரி ஒரு திருடன் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் விட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இதை கேள்விப்பட்டதும் பெரியவருக்கு வருத்தமாகிவிட்டது. போயும் போயும் ஒரு திருடனுக்கு உதவி செய்தோம் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்தார்.

சரி இன்றைக்கு யாருக்காவது உதவி செய்வோம் என்று முடிவு பண்ணினார். எதிரில் ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. உடனே அந்தப் பெண்ணிடம் பணத்தை கொடுத்துவிட்டு போனார். மறுநாள் காலையில் ஊர் பூராவும் நேத்து ராத்திரி விபச்சார பெண்ணின் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் என்று பேச்சு. அடடா இன்றைக்கும் தவறு நடந்து விட்டது என்று வருத்தப்பட்டார். இருக்கட்டும் இன்றைக்கும் ஏதாவது தர்மம் செய்வோம் என்று நினைத்தார்.

மூன்றாம் நாள் இரவும் புறப்பட்டார். அப்போதும் எதிரில் ஒருவர் வந்தார். இவர் பணத்தை கொடுத்தார். மறுநாள் மக்கள் இரவு ஒரு செல்வந்தர் கையில் யாரோ பணத்தை கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

தினம் தினம் இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டு படுத்து தூங்கினார். அன்று இரவு ஒரு கனவு. அந்த கனவில் இறைவன் வந்தார். நீ கொடுத்த தர்மம் வீணாகப் போய்விடவில்லை. உன்னிடம் பணம் வாங்கிய அந்த திருடன் தவறை உணர்ந்து திருந்தி விட்டான். அந்தப் பெண்ணும் தெளிந்து திருந்திவிட்டாள். அந்த செல்வந்தனும் கொடையாளி ஆகிவிட்டான் என்று கடவுள் சொன்னார். அதாவது நல்ல மனதுடன் தர்மம் செய்தால் அது ஒருபோதும் வீணாகப் போய் விடாது. அது மட்டுமல்லாமல் தருமம் தன்னை மட்டுமல்ல அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்று சக்தி வாய்ந்தது.

  • 9
·
Added a post
  • எளிமையான உணவுகளில்கூட நல்ல ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்தலாம். அப்படிப்பட்ட எளிய உணவுகளில் ஒன்றுதான் அவித்த வேர்க்கடலை.
  • நிலக்கடலையில் உள்ள குறைந்த கிளைஸ்மிக் இன்டெக்ஸ் உடலின் இரத்த சர்க்கரை அளவை சரியாக வைக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது தவிர்க்கப்படுகிறது.
  • வறுத்த நிலக்கடலையை விட வேகவைத்த நிலக்கடலையில் சத்துக்கள் அதிகம் என கூறப்படுகிறது.
  • வேகவைத்த நிலக்கடலையில் புரதம், வைட்டமின்கள், மினரல்கள் அதிகம் உள்ளன. இது உண்பதற்கு மிகுந்த சுவையாக இருப்பதோடு, சத்துக்களையும் அள்ளித் தருகிறது.
  • நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • வேகவைத்த நிலக்கடலையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. மகாத்மா காந்தி தினமும் அவித்த வேர்க்கடலை ஒரு கைப்பிடியும் ஆட்டுப்பாலும்தான் முக்கிய உணவாக எடுத்துக்கொண்டார்.
  • தினமும் 40 கிலோ மீட்டர் தொலைவு நடக்கும் வலிமையை அது அவருக்குத் தந்தது என்று சத்திய சோதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 9
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.

ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதியுண்டு. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

மிதுனம்: முன்கோபத்தை குறைப்பது நன்மை தரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். ஓரளவு லாபம் பார்ப்பீர்.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகரீதியாக இருந்த பிரச்சினைகள் தீரும். சக ஊழியர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

சிம்மம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். முன் கோபம் விலகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்கள் கிடைப்பர்.

கன்னி: பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சொந்த ஊர் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். திட்டமிட்ட பணியை முடிக்க போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

துலாம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழல், தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள். தெய்வீக ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் அதிக லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். கையில் பணம் புரளும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

தனுசு: அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். முன்கோபத்தை குறைப்பீர். அரசால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் செல்வீர். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும்.

மகரம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மனவலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மதிப்பு உயரும்.

மீனம்: திட்டமிட்ட பணிகளை முடிக்க போராடுவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகரீதியான பயணம் அலைச்சல் தரும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை தாமதப்படுத்துவது நல்லது.

  • 116
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 19 ஆம் தேதி வியாழக்கிழமை 2.4.2026.

இன்று காலை 07.57 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.

இன்று மாலை 05.46 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.

இன்று பிற்பகல் 02.24 வரை துருவம். பின்னர் வியாகாதம்.

இன்று காலை 07.57 வரை பவம். பின்னர் இரவு 08.24 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று காலை 06.10 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=471&dpx=2&t=1775101655

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 115
  • 107
  • 106
  • 109

Good Morning...

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 108
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். அலுவலகரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

ரிஷபம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பார்கள். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும்.

கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக டென்ஷன் இருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டிவரும்.

துலாம்: முரண்டு பிடித்த பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பர். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். பேச்சில் தெளிவு பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு. அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடாதீர்கள்.

விருச்சிகம்: எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது.

தனுசு: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிம்மதி தரும். பூர்வீக நிலம், வீடு தொடர்பான வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

மகரம்: அணுகுமுறையை மாற்றி தடைபட்ட பணியை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். புதிய பங்குதாரர் அறிவுரை வழங்குவார். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.

கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வாகனத்தில் நிதானம் தேவை. அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிட்டும். தந்தைவழி உறவினர்களை சந்தித்து மகிழ்வீர். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கிக் கடனை பைசல் செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கிட்டும்.

  • 278

மகிழ்ச்சி என்பது மனதோடு

தொடர்புடையது மட்டும் அல்ல...

நம்மைச் சுற்றி இருக்கும்

மனிதர்களோடும் தொடர்புடையது...!!

வாழ்த்துகள்..!!

  • 292
  • 293
  • 295
·
Added a post

1-4-2026

ஏப்ரல் முட்டாள்கள் நாள் ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வரலாறு இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார்.

இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. எனினும் இந்தப் “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்த புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

  • 304
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 18 ஆம் தேதி புதன்கிழமை 1.4.2026.

இன்று காலை 07.37 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று மாலை 04.37 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

இன்று மாலை 03.06 வரை விருத்தி. பின்னர் துருவம்.

இன்று காலை 07.37 வரை வனிசை. பின்னர் இரவு 07.47 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று மாலை 04.37 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=470&dpx=2&t=1775013778

நல்ல நேரம்:

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 303
  • 299
  • 297

Good Morning....

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற இறைவனை வேண்டுவோம்.

  • 298
  • 370
  • 369
·
Added a news

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்தை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியிருந்தாலும், இறப்பிற்கான காரணம் குறித்து மௌனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பகவல்பூரில் இவரது இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில், இது திட்டமிடப்பட்ட தாக்குதலா அல்லது உடல்நலக் குறைவா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், புல்வாமா மற்றும் உரி தாக்குதல்களில் தொடர்புடைய இந்த அமைப்புக்கு தாஹிர் அன்வாரின் மறைவு பெரும் பின்னடைவாகும்.

இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் ஒவ்வொருவராக கொல்லப்பட்டு வருவது, அந்நாட்டிலுள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் சிதைந்து வருவதையே காட்டுகிறது. அசாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தளபதிகளின் தொடர் இழப்புகள், அந்த அமைப்பின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.

  • 385
·
Added a news

லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து கடந்த பல நாட்களாகவே இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் லெபனான் நாட்டுக்குள் நுழைந்தும் இந்த தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் தெற்கு லெபனானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

லெபனனில் குடியிருப்பு பகுதிகள், வணிக கட்டிடங்கள் மற்றும் எரிபொருள் நிலையம் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மேலும் லெபனான் எல்லையில் உள்ள தைய்பே, லிதானி ஆகிய நகரங்களில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பல தங்களின் மீது தாக்குதல் நடத்தி சிலரை கொன்றதாக இஸ்ரேல் கூறி இருக்கிறது.

இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலால் தெற்கு லெமனானின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள லெபனான் அதிபர் ஜோசப், ‘அமைதியை குலைப்பவர்களின் கை வெட்டப்படும்’ என என எச்சரித்திருக்கிறார்.

  • 382
·
Added article

முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தின் வியாபாரம் என்பது குறுகிய வட்டத்தில்தான் இருந்தது. அதாவது தமிழ் படங்கள் தமிழ்நாட்டிலும், தெலுங்கு படங்கள் ஆந்திராவிலும், கன்னட திரைப்படங்கள் கர்நாடகாவிலும், ஹிந்தி படங்கள் வட இந்தியாவில் மட்டுமே வசூலை பெற்றுவந்தது. ஒரு கட்டத்தில் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட படங்கள் மற்றும் அளவில் டப் செய்யப்பட்டு வெளியாவது அதிகரித்துக் கொண்டே வந்தது.

தற்போது ஒரு மொழியில் உருவாகி மற்ற மொழிகளிலும் வெளியாகும் படங்களை ஏர் இந்தியா படங்கள் என்ன சொல்கிறார்கள் ஒவ்வொரு மொழியிலும் உள்ள அதிக சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் அதில் ஹீரோவாக நடிக்கிறார்கள் அதிகபட்சத்தில் உருவாக்கும் அந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகி வருகிறது. அதை பேன் இண்டியா திரைப்படம் என சொல்கிறார்கள்.

அதுவும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் பேன் இண்டியா படமாக வெளியாகி வசூலை அள்ளியது. அதன்பின் KGF, KGF2 , காந்தாரா, காந்தாரா 2, புஷ்பா, புஷ்பா 2 போன்ற பல திரைப்படங்கள் பேன் இண்டியா படங்களாக வெளிவந்து வசூலை அள்ளியது.

முதலிடத்தில் அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படம் இருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் 2070 கோடி வசூல் செய்தது. அடுத்து வரிசையாக பாகுபலி 2 - 1810 கோடியும், புஷ்பா 2 - 1742 கோடியும், துரந்தர் 1354 கோடியும், RRR 1230 கோடியும், துரந்தர் 2 - 1226 கோடியும் (ஒரு வாரத்தில்), KGF 2- 1215 கோடியும், ஜவான் 1160 கோடியும், பதான் 1055 கோடியும், கல்கி 2898 கிபி 1042 கோடியும் வசூல் செய்திருக்கிறது.

  • 415
·
Added article

லெஜென்ட் சரவணா நிறுவனர் சரவணன் நடித்துள்ள திரைப்படம் லீடர். இந்த திரைப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அறந்தாங்கி நிஷா ‘நான் படத்தில் லெஜென்ட் சரவணாவை திட்டியிருக்கிறேன். எனவே நான் சில நாட்களுக்கு சரவணா துணிக்கடை பக்கம் போக முடியாது. இந்த படத்தில் என் கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அப்படியே படத்திலும் இருந்தார். நான் வாயை திறந்து விடுவாரா என்னை எட்டிப் பார்த்தேன். உங்கள் கணவரிடம் ரியாக்சன் குறைவாக இருக்கிறது என இயக்குனர் சொன்னர். 10 வருடங்களாக அவரிடம் எந்த ரியாக்சனும் இல்லை. இந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும்.. இந்த படத்தில் நிஷாவையே ஹீரோயினாக போட்டிருக்கலா என லெஜண்ட் சரவணா யோசித்திருப்பார்’ என்று பேசினார்.

அவருக்கு பின் பேச வந்த நடிகர் விடிவி கணேஷ், ‘இங்க நிறைய பேர் பேசினாங்க.. எல்லாரும் படத்த பத்தி பேசினாங்க.. ஆனா அறந்தாங்கி நிஷா தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பேசினாங்க. அவங்க படத்தை பற்றி எதுவும் சொல்லல.. அவங்க ஹீரோயின் ஆக வேண்டுமா?.. விவஸ்தையே இல்லையா?. இதெல்லாம் கேட்டா நமக்கு சிரிப்புதான் வருது’ என்று பேசினார்.. அவர் பேச பேச லெஜண்ட் சரவணன் முகமே மாறிவிட்டது.. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரால்கி வருகிறது. பலமுறை சினிமா மேடைகளில் விடிவி கணேஷ் இப்படி சர்ச்சையாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

  • 413