·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1276
  • More

யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.

இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments (0)
Login or Join to comment.
  • 39

சிரிப்பின் சத்தம் உங்கள் வீட்டை நிரப்பட்டும்,

சிறப்பான வெற்றிகள் உங்கள் பாதையை அலங்கரிக்கட்டும்,

இனிய கனவுகள் எல்லாம் நனவாகி

இன்பமான வாழ்வு உங்களை சுற்றியிருக்கட்டும்

  • 42
·
Added a post

என்னா ஈசு, சோர்வா இருக்கே!! என்னா ஆச்சு?

"என்னா ஆவும்? நேத்து தண்ணிய போட்டு ஏதோ வண்டியில கால விட்டு இப்போ போய் பெரியாஸ்பத்திரில கிடக்கு இதுங்க அப்பென். நான் ஆசுபத்திரிக்கும் வூட்டுக்கும் லோல் பட்டுனுகுறேன். என்ன பொறப்போ போ!" என்றபடி வந்த அழுகையை குழந்தைகள் முகத்தைப் பார்த்து அடக்கிக்கொண்டே சொன்னாள் ஈஸ்வரி, கற்பகத்திடம்.

"நான் வேணா புள்ளைங்கள பார்த்துக்கறேன். வேலைக்கு போய் வா. வேலைக்கு போனியா இல்லையா?"

"எங்க போனேன்? மூணு நாளா அலையுறேன். அவங்க இப்டிலாம் லீவு போட்டா நீ வர வாணாம்னுட்டாங்க. வேற இடம்தான் பார்க்கணும். அதுவரைக்கும் சோத்துக்கு இன்னா செய்யுறதுன்னுதான் ரோசனை. உக்காந்தேன். ஏதோ வாசபக்கம் வந்து ஜனங்க போக வர பார்த்தா எதுனா மனசு சுளுவா ஆவுமேன்னு." என்று பெருமூச்சு விட்டாள் ஈஸ்வரி.

கற்பகம், "இதோ இரு வாரேன்." என்றபடி சட்டென்று நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் தன் குடிசைக்கு ஓடினாள். தன் சின்ன ட்ரங்க் பெட்டியைக் குடைந்து இரண்டு சேலைகளை எடுத்துக்கொண்டு ஈஸ்வரியிடம் ஓடிவந்தாள்.

"இந்தா புள்ள. இதப் புடி. நாகராஜ் அண்ணனாண்ட சொல்றேன். அது வந்து இடம், நேரம், கட்சி மூணும் சொல்லும். நீ ஒண்ணும் சொல்லாம சரின்னு சொல்லிடு. எந்தக் கட்சி சொல்லுதோ அந்த சேலைய கட்டு. அது குடுக்கற சீட்டை மறக்காம கைல கொண்டுபோ. அங்க போனதும் சீட்ட வாக்கிக்குனு காசும் சோறும் குடுப்பாங்க. வாங்கிட்டு கூட்டம் முடியுற வரைக்கும் உட்கார்ந்துட்டு ஒழுங்கா வூடு வந்து புள்ளைங்களுக்கு சோத்தப் போடு. இன்னும் மூணு மாசம் கழிச்சு வேலைக்கு பார்த்துக்கலாம். இது இப்பதைக்கு உனக்கு தோதா இருக்கும்" என்று சொல்லிவிட்டு விறு விறுவென்று நடந்தாள்.

- முகநூல் பகிர்வு

  • 51
  • 45

நீங்கள் கோபமாய் இருக்கும் பொழுது உங்களது பேச்சையோ, செயலையோ தாமதப்படுத்துவது நல்லது.

காரணம், அந்தத் தாமதம் நீங்கள் அமைதியாவதற்குத் துணைபுரிகிறது.

உங்கள் எதிரிகளைக் குழப்பத்தில் அச்சுறுத்தும் மிக வலுவான ஆயுதங்கள் , உங்கள் மௌனமும், உங்கள் பொறுமையும்தான்.

வாழ்க்கையில் வெந்து, நொந்தவருக்குத் தான் தெரியும் தனிமையும், அமைதியும் அமிர்தம் என்று.

கோபத்தில் மௌனத்தைக் கையாள்பவர்கள், பெரும்பாலும் தோல்வியைச் சந்திப்பதில்லை.

  • 46
  • 53
  • 53
·
Added a post

* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.

* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

* சித்தம் தெளிய வில்வம்

* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* வாத நோய் தடுக்க அரைக் கீரை

* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* பருமன் குறைய முட்டைக்கோஸ்

* பித்தம் தணிக்க நெல்லிக்காய்

” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.

  • 62
·
Added a news

கனடாவில் சமீபத்தில் Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேறியது நினைவிருக்கலாம்.

அதைத் தொடர்ந்து, அதிக அளவில் கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி வருகிறார்கள் அமெரிக்கர்கள்!

வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை கனடாவில் இருந்தது. இந்த விதியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ’Lost Canadians’ என்றே அழைக்கப்படுகிறார்கள்.

2009இல் அறிமுகமான இந்த விடயம், வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில் அவர்கள் கனேடிய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு தடையாக இருந்தது.

2023ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஒன்ராறியோ உச்சநீதிமன்றம், இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதை முடிவுக்குக் கொண்டுவந்தது.

கனடா அரசும், இந்த சட்டத்தின் விளைவுகள் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க இயலாதவைதான் என ஒப்புக்கொண்டு ஒன்ராறியோ உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை.

இந்நிலையில், Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு மன்னர் சார்லஸ் சமீபத்தில் ஒப்புதலளித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கர்கள், அதிக அளவில் கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி வருகிறார்கள்.

அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 15க்கும் ஜனவரிக்கும் இடையில் மட்டும் 12,000க்கும் அதிகமான குடியுரிமை கோரும் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

அதில், ஜனவரி மாதத்தில் மட்டும் குடியுரிமை கோரி விண்ணப்பித்தவர்களில் 2,500 பேர் அமெரிக்கர்கள் என்கிறது கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு.

2025ஆம் ஆண்டில், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமை என்னும் வகையில் கனடாவில் குடியுரிமை கோரியவர்கள் 82,500 பேர். அவர்களில், பெரும் எண்ணிக்கையிலானவர்கள், அதாவது, 24,500 பேர் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 66
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உடன்பிறந்தவர்கள் மூலம் சில செலவுகள் வரும். வதந்திகளை நம்பி முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். வழக்கமான சில பணிகளில் திடீர் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் மாறுபட்ட வாய்ப்புகள் உருவாகும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

ரிஷபம்

உடன் பிறந்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்

மிதுனம்

தாராளமான தனவரவுகள் உண்டாகும். பணியாளர்களுக்கு செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் உருவாகும். கல்வியில் இருந்து வந்த ஆர்வ இன்மை குறையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார பணிகளில் பொருளாதாரம் உயர்வு உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

கடகம்

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பொதுமக்கள் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நீண்ட கால முதலீடுகள் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். விவசாய பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

சிம்மம்

உயர் பொறுப்பில் இருப்போர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆராய்ச்சி துறைகளில் முன்னேற்றம் காணப்படும். இழுபறியான சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். கமிஷன் பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உறுதி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கன்னி

தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். தோற்றப்பொழிவில் சில மாற்றம் உண்டாகும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரம் ரீதியான முயற்சிகளில் விவேகம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

துலாம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். துணைவர் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய பயணம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

விருச்சிகம்

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தீரும். உத்தியோக பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

தனுசு

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் ஒரு விதமான மந்ததன்மை உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர் பாலின மக்கள் விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். புதுவிதமான செயல் திட்டங்கள் உருவாகும். பயம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகரம்

தொழில் நிமித்தமான பயணங்கள் ஏற்படும். கால்நடை தொடர்பான செயல்பாடுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். சில அனுபவங்கள் மூலம் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

கும்பம்

மனதளவில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மறைமுகமான சில விஷயங்களை அறிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பாகப்பிரிவினை செயல்களில் விவேகம் வேண்டும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மீனம்

நெருக்கமான உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பெருத்தன்மையான செயல்பாடுகள் மூலம் நம்பிக்கை மேம்படும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் வருமான வாய்ப்புகள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 138
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 17.4.2026

இன்று மாலை 05.47 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று பிற்பகல் 12.05 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

இன்று காலை 07.08 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.

இன்று காலை 06.39 வரை சதுஷ்பாதம். பின்னர் மாலை 05.47 வரை நாகவம். பிறகு கிமிஸ்துக்கினம்.

இன்று காலை 06.02 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=484&dpx=2&t=1776395566

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 148

Good Morning...

  • 142
·
Added a post

தவறாக எழுதியது ‘பேனாவாக'

இருந்தாலும் எல்லோரும்

காகிதத்தைக்

கிழித்துப் போடுவதைப் போல.

தவறு செய்தவவரை விட்டுவிட்டு

இன்னொருத்தரிடம்,

குற்றம் கண்டுபிடிப்பதே இங்கு பலரின்வேலை..

பெரும்பாலான மனிதர்கள்

தன்னலம் மிக்கவர்களாக வலம் வருகிறார்கள்.

நேசித்தால் பிழைகளைப் பார்ப்பதில்லை,

வெறுத்தால்

நல்லதைப் பார்ப்பதில்லை.

விருப்பத்திற்கும், நேசத்திற்கும் வேறுபாடு உண்டு.

பூக்களை விரும்பும் அன்பர்கள் பறித்துச்சூடுகிறார்கள்,

பூக்களை நேசிப்பவர்கள்

செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.

உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அவர்களுடன் மகிழ்ச்சியாகப் பழகுங்கள்.

உங்களை யாருக்குப் பிடிக்கவில்லையோ,

அவர்கள் மகிழ்ச்சிக்காக

அவரை விட்டு விலகுங்கள் அமைதியாக.

  • 243

ஒருவரிடம் பல மணி நேரம்

பேசுவது நட்பல்ல...

அவரைப் பற்றி மற்றவரிடம் ஒரு நிமிடம் கூட தவறாக பேசாமல் இருப்பதே நட்பு!!

  • 239

ஒரு அறிவாளி

தன்னைச் சுற்றி

அறிவாளிகளையே

வைத்திருப்பான்

தன் அறிவை வளர்க்க....

ஒரு முட்டாள்

தன்னைச் சார்ந்தவர்கள்

அனைவரையும்

முட்டாளாகவே வைத்திருப்பான்

தான் மட்டுமே புத்திசாலி

என்ற நினைவோடு....

  • 237
  • 240
·
Added a post

புரூஸ் லீ வெறும் தற்காப்புக் கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த தத்துவவாதியும் கூட. அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான பாடங்கள் இதோ:

  1. "நீராக இரு" (Be Water, My Friend):
  2. தண்ணீர் ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுக்கும். அது மென்மையாகவும் இருக்கும், அதே சமயம் பாறையை உடைக்கும் வலிமையும் கொண்டது. வாழ்க்கையில் பிடிவாதமாக இருக்காமல், சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு (Adaptability) முன்னேற வேண்டும் என்பதே இதன் பொருள்.
  3. தேவையற்றதை நீக்கு (Eliminate the Unessential):
  4. "தினமும் எதையாவது சேர்ப்பது அறிவல்ல, தினமும் தேவையற்றதை குறைப்பதே அறிவு" என்பார் லீ. ஒரு கலையிலோ அல்லது வேலையிலோ சிறந்து விளங்க, மிக முக்கியமானவற்றில் மட்டும் கவனம் செலுத்தி, மற்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்க வேண்டும்.
  5. தொடர் பயிற்சி (Consistency and Practice):
  6. "பத்தாயிரம் உத்திகளை ஒருமுறை பயிற்சி செய்தவனைப் பார்த்து நான் பயப்படமாட்டேன்; ஆனால், ஒரே ஒரு உத்தியை பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனைப் பார்த்து பயப்படுவேன்" என்பது அவரது புகழ்பெற்ற பொன்மொழி. ஒரு விஷயத்தில் நிபுணத்துவம் பெறத் தீவிரமான பயிற்சியும், ஒருமுகப்பட்ட கவனமும் அவசியம்.
  7. உன்னையே அறிந்துகொள் (Self-Knowledge):
  8. மற்றவர்களைப் போலப் போலியாக இருக்க முயலக்கூடாது. "எப்போதும் உன்னைப் போலவே இரு, உன்னையே வெளிப்படுத்து, உன்னையே நம்பு" என்று அவர் போதித்தார். ஒருவரின் தனித்துவமே அவருடைய மிகப்பெரிய பலம்.
  9. செயலில் இறங்கு (Taking Action):
  10. "தெரிந்து வைத்திருப்பது மட்டும் போதாது, அதைச் செயல்படுத்த வேண்டும். விரும்புவது மட்டும் போதாது, அதைச் செய்ய வேண்டும்." வெறும் கனவு காண்பது பயன்தராது; அந்தக் கனவை நனவாக்க உடனடியாகச் செயலில் இறங்குவதே வெற்றிக்கான வழி.
  • 244

உங்கள் அன்புக்குரிய குழந்தைகளை இக்காலங்களில் படிப்பு எனும் உயரிய பண்பொழுக்கத்திலிருந்து விலகியிருக்க வழியமைக்காதீர்கள்.

குழந்தைகளை இக்காலங்களில் ஒவ்வொருநாளிலும்

அவர்கள் அறிந்த மொழிகளைக் (தாய்மொழியும்பிறமொழியும்)

குறைந்தபட்சம்

ஒருபக்கம்_படிக்கவேண்டும்

என்று கட்டாயப்படுத்துங்கள். நாளிதழ்களாகக்கூட இருக்கலாம்.

கட்டாயப்படுத்துதல் என்பது குழந்தைகள் மீதான வன்முறைதான்.

ஆனால் இந்த அனுமதிக்கப்பட்ட வன்முறை அவர்கள்

வளரிளம்_பருவங்களை அடையும்போதும்,

அப்பருவங்களைக்கடக்கும்போதும்

கடந்தபிறகும் ,

வன்முறையின்பால் சேராது

நன்முறையில் வாழ உதவும்.

  • 238
·
Added a post

தந்தையும் ஆறுவயது மகனும் மலைச்சாரலில் நடந்து கொண்டு இருந்தனர்..

மகனை ஒரு கல் தடக்கியது. "ஒழிந்து போ..!" என்று கோபத்தில் எட்டி உதைத்தான்..

"ஒழிந்து போ..!" என்று எங்கிருந்தோ பதில் குரல் வந்தது.

அப்பா இருக்கும் தைரியத்தில்..

"எதிரில் வந்தால் உன் முகத்தை பெயர்த்துடுவேன்..!"

என்று கத்தினான்..

அதே மிரட்டலாக பதில் வந்தது.

பையன் இந்த முறை மிரண்டான்..

அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டான்.

"என்னைக் கவனி..!"

என்றார் அப்பா.

"உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்றுகத்தினார்..

"உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்று அதே வார்த்தைகள் திரும்பி வந்தன.

அவர் அடுத்தடுத்து அன்பாகப் பேசிய வார்த்தைகள் அதேபோல் திரும்பி வந்தன.

மகனிடம் சொன்னார்.

"இதை எதிரொலி என்பார்கள்..! ஆனால் உண்மையில் இதுதான் வாழ்க்கை..!

அன்போ..,

கோபமோ..,

துரோகமோ..,

நீ மற்றவர்களுக்கு என்ன வழங்குகிறாயோ..,

அதுதான் உனக்கு திரும்பி வரும்..! உனக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கும்

வழங்க கற்றுக்கொள்..!" என்றார்.

  • 246
·
Added a post

என் பேரு தமிழரசன். ஊருக்கே நான் ‘அரசு வாத்தியார்’. அரசு பள்ளிக்கூடத்துல தமிழ் வாத்தியார். 35 வருஷ சர்வீஸ். கல்யாணம் ஆகல. ஏன் தெரியுமா? என் பசங்க தான் என் குடும்பம்

1989-ல வேலைக்கு சேர்ந்தேன். கிராமத்து பள்ளிக்கூடம். ஓலை கூரை. 40 பசங்க. செருப்பு இல்ல. சீருடை கிழிசல். சோத்துக்கு வழி இல்ல. ஆனா கண்ணுல கனவு இருந்துச்சு. "சார், நான் போலீஸ் ஆவேன்", "நான் டாக்டர்", "நான் கலெக்டர்". கேட்கும் போதே நெஞ்சு நிறையும்.

சம்பளம் 1200 ரூபாய். அதுல 800 ரூபாய்க்கு பசங்களுக்கு நோட்டு, பேனா, சாக்ஸ் வாங்குவேன். மதியம் சத்துணவு பத்தலன்னா என் வீட்டுல இருந்து தயிர் சாதம் கொண்டு வந்து கொடுப்பேன். "சார் நீங்க சாப்பிடலையா?"னு கேப்பாங்க. "நீங்க சாப்பிடுறத பார்த்தாலே எனக்கு வயிறு நிறையும்"னு சொல்வேன்.

என் கிட்ட படிச்ச பையன் பேரு முத்து. ரொம்ப சுட்டி. ஆனா படிப்புல புலி. "சார், நான் ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணி உங்கள கார்ல கூட்டிட்டு போவேன்"னு சொல்வான். நான் சிரிப்பேன். "முதல்ல 10-வது பாஸ் பண்ணுடா"னு.

10-வது ரிசல்ட். முத்து ஸ்கூல் ஃபர்ஸ்ட். ஆனா +1 சேர்க்க வழியில்ல. அப்பா குடிகாரன். "படிப்பெல்லாம் வேணாம். மாடு மேய்க்க போ"னு அடிச்சாரு. முத்து ராத்திரி 12 மணிக்கு என் வீட்டு கதவை தட்டினான். கண்ணெல்லாம் வீங்கி. "சார், என்னால படிக்காம இருக்க முடியாது சார்"னு அழுதான்.

அன்னைக்கு முடிவு பண்ணினேன். இவன படிக்க வைக்கணும். என் கல்யாணத்துக்காக சேர்த்து வச்சிருந்த 50,000 ரூபாய எடுத்தேன். அவன டவுன் ஸ்கூல்ல சேர்த்தேன். ஹாஸ்டல் ஃபீஸ் நான் கட்டினேன். மாசா மாசம் மணியார்டர் அனுப்பினேன்.

"சார், எதுக்கு எனக்காக இவ்வளவு பண்றீங்க?" லெட்டர் போட்டான்.

"நீ கலெக்டர் ஆனா தான்டா என் சம்பளத்துக்கு மரியாதை"னு பதில் எழுதினேன்

12 வருஷம் ஓடிடுச்சு. நான் ரிடையர் ஆகிட்டேன். யாருக்கும் சொல்லல. சின்ன வாடகை வீடு. பென்ஷன் 18,000. பாதி காசுல இப்பவும் ஸ்கூல் பசங்களுக்கு புக் வாங்கி கொடுப்பேன். தனியா தான் இருக்கேன். யாரும் இல்ல.

கடந்த மாசம். காலைல 6 மணி. வீட்டு வாசல்ல 3 கார் வந்து நின்னுச்சு. காக்கி சட்டை போட்ட போலீஸ் இறங்கினாங்க. பயந்துட்டேன். "என்ன ஆச்சு?"னு.

கார்ல இருந்து ஒருத்தர் இறங்கினாரு. வெள்ளை வேட்டி சட்டை. கம்பீரம். நேரா வந்து என் கால்ல விழுந்தாரு. "சார்"னு.

தூக்கி நிறுத்தினேன். யாருன்னு தெரியல. "தம்பி யாருப்பா நீ?"

அவர் கண்ணுல தண்ணி. "சார், என்ன தெரியலையா? நான் தான் சார் முத்து. உங்க முத்து."

உறைஞ்சு போய்டேன். என் முத்து. கிழிஞ்ச டவுசரோட வந்த பையன். இன்னைக்கு கலெக்டர். மாவட்ட ஆட்சியர். நம்ப முடியல.

"சார், 12 வருஷம் முன்னாடி நீங்க சொன்னீங்க. கலெக்டர் ஆகி கார்ல கூட்டிட்டு போவேன்னு. இன்னைக்கு வந்திருக்கேன் சார். ஏறுங்க"னான்.

ஊரே திரண்டு வந்துடுச்சு. நான் அழுதேன். 35 வருஷமா அழுததில்ல. அன்னைக்கு அழுதேன்

கார்ல ஏத்திக்கிட்டு போனான். எங்க தெரியுமா? நான் வேலை பார்த்த அதே ஓலை கூரை பள்ளிக்கூடத்துக்கு. இப்ப அது 3 மாடி கட்டிடம். பேரு என்ன தெரியுமா? "அரசு வாத்தியார் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி".

உள்ள போனேன். 1000 பசங்க. எல்லாரும் எழுந்து நின்னாங்க. "வணக்கம் ஐயா"னு. முத்து மைக் பிடிச்சான்.

"இவர் தான் என் வாத்தியார். இவர் இல்லனா நான் இல்ல. இன்னைக்கு இந்த மாவட்டத்துல ஒரு பையன் கூட படிக்காம இருக்க கூடாது. அதுக்கு என் சொந்த சம்பளத்துல இருந்து 50 லட்சம் நிதி. இதுக்கு பேரு 'அரசு வாத்தியார் கல்வி அறக்கட்டளை'."

நான் பேச முடியாம நின்னேன். பசங்க எல்லாரும் ஓடி வந்து என் கால்ல விழுந்தாங்க. "தாத்தா"னு.

சாயங்காலம் முத்து என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போனான். பெரிய பங்களா. "இனி இது தான் உங்க வீடு சார். நீங்க தனியா இருக்க கூடாது"னான்.

"வேணாம் தம்பி. எனக்கு என் வாடகை வீடு போதும்."

"அப்போ நானும் உங்க கூட அங்க வந்து இருக்கேன்"னான் பிடிவாதமா.

இன்னைக்கு என் வாடகை வீட்டுல நான், முத்து, அவன் மனைவி, 2 குழந்தைங்க. காலைல எழுந்தா "தாத்தா காபி"னு பேரன் கொண்டு வருவான்.

35 வருஷம் நான் விதைச்ச விதை. இன்னைக்கு மரமா நிக்குது. நிழல் கொடுக்குது. கனி கொடுக்குது

கல்யாணம் பண்ணலனு வருத்தப்பட்டேன். இன்னைக்கு 1000 பிள்ளைங்க என்ன "ஐயா"னு கூப்பிடுது. ஒரு கலெக்டர் என்ன "அப்பா"னு கூப்பிடுறான்.

வாத்தியார் வேலை சம்பளத்துக்கான வேலை இல்ல. அது சமூகத்துக்கான சேவை. நீ போடுற பிச்சை இல்ல. நீ கொடுக்குற பிச்சை தான் நாளைக்கு உனக்கு சோறு போடும்.

  • 247
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வங்கி தொடர்பான உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் நல்ல மாற்றம் உண்டாகும். உபரி வருமானம் குறித்த எண்ணம் மேம்படும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். சாந்தம் நிலவும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

ரிஷபம்

வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கிய தொடர்பான இன்னல்கள் குறையும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்த போட்டி குறையும். மனை சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். பொறுமை காக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சாம்பல்

மிதுனம்

தொழில் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் சார்ந்த விஷயங்கள் சாதகமாக நிறைவு பெறும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி உற்சாகம் உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். அரசு ரீதியிலான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். அலைச்சல் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

கடகம்

ஆராய்ச்சி சிந்தனைகள் மாணவர்களுக்கு மேம்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். சக ஊழியர்களின் மறைமுக ஆதரவு ஏற்படும். குருமார்களின் ஆசீர்வாதங்கள் மனதில் தெளிவை ஏற்படுத்தும். உங்கள் மீதான வதந்திகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். ஓய்வு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

சிம்மம்

செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தநிலை ஏற்படும். வெளியூர் வர்த்தகத்தில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். தந்தை வழி உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். பயம் அகலும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

கன்னி

சுபகாரிய தொடர்பான பேச்சுகளில் பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் அனுபவம் மேம்படும். வர்த்தக முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் குறையும். பேச்சு திறமையால் தொழிலில் ஆதாயம் அடைவீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை

துலாம்

வெளியூர் பயணம் சாதகமாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். அலுவலக பணிகளில் மரியாதைகள் அதிகரிக்கும். புதிய வேலைகளில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகன தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். குழப்பம் தீரும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

விருச்சிகம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை மேம்படுத்துவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய் மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். லாபம் பெருகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

உறவினர்கள் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கால்நடை வளர்ப்பு பற்றிய எண்ணங்கள் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாயத் துறைகளில் மேன்மை ஏற்படும். வெற்றி கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

புதிய முயற்சிகளில் சூழ்நிலை அறிந்து சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். சமூக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். நிறைவு தரும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

கும்பம்

குடும்பத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். விலை உயர்ந்த பொருள்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்து நெருக்கடிகள் குறையும். சினம் தவிர்க்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

கலை சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் அலைச்சலுக்கு பின்பு சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். நன்மை நடக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 317
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை 16.4.2026

இன்று இரவு 07.31 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

இன்று பிற்பகல் 01.00 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று காலை 09.31 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.

இன்று காலை 08.13 வரை பத்திரை. பின்னர் இரவு 07.31 வரை சகுனி. பிறகு சதுஷ்பாதம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=483&dpx=2&t=1776312347

நல்ல நேரம்..

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 330

Good Morning...

  • 326
·
Added a post

தூதுவளை இலைகளைப் பொடி செய்து அல்லது கஷாயமாகக் குடிப்பது ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறலைக் குணப்படுத்த உதவும்

இஞ்சி மற்றும் தேன்:

இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடிப்பது நுரையீரலில் உள்ள அடைப்புகளை நீக்கி சுவாசம் சீராக உதவுகிறது.

ஆவி பிடித்தல்:

சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து ஆவி பிடிப்பது மூச்சுப்பாதையில் உள்ள சளியை நீக்கி சுவாசம் இலகுவாக வழிவகுக்கும்

யோகா மற்றும் தியானம்:

பிராணாயாமம் போன்ற சுவாசப் பயிற்சிகள் நுரையீரலை வலுப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கின்றன

உடல் பருமன் கட்டுப்பாடு:

உடல் எடையைக் குறைப்பது இதயத்தின் மீதான அழுத்தத்தைக் குறைத்து மூச்சு வாங்குவதைக் கட்டுப்படுத்தும்.

தூங்கும் நிலை: தலைக்கு உயரமாக தலையணை வைத்துப் படுப்பது மூச்சு விடுவதை எளிதாக்கும்.

  • 416