யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - 2026
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 1.1.2026.
இன்று இரவு 08.57 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி
இன்று இரவு 9:48 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.
இன்று மாலை 04.18 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.
இன்று காலை 09.36 வரை கௌலவம். பின்னர் இரவு 08.57 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று காலை 06.29 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 12.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சிந்தியா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகை சிந்தியா லூர்டே தயாரித்து, ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ‘அனலி’.
அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா எழுதி இயக்கியுள்ள திரைப்படத்தில், சக்தி வாசுதேவன், குமரவேல், இனியா, கபிர் துகான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சிந்தியா லூர்டே கூறும்போது, “‘வர்ணாஸ்ரமம்’, ‘தினசரி’ படங்களுக்குப் பிறகு 'அனலி' என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. கொஞ்சம் தனித்துவமானதாக இருக்கும்.
90-களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி ஆக்ஷன் படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் முதன் முறையாக முழுநீள ஆக்ஷன் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். நாயகர்களே நடிக்கத் தயங்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறேன். ஆக்ஷன் காட்சிகளில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன்.
இதில் ஹீரோ என்று யாரும் கிடையாது. நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் நிறைய கற்றுக் கொள்கிறேன். இந்தப் படத்திலும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என கற்றுக்கொண்டேன்” என்றார். இந்தப் படம் ஜன.2-ம் தேதி வெளியாகிறது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். இதனை மறைமுகமாக பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்துக் கொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் எப்போது என்பது தெரியாமல் இருந்தது.
தற்போது, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் உதய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படமொன்றின் நாயகியாக ராஷ்மிகா ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பின்பும் ராஷ்மிகா தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
’கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படத்தில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதன் மூலமே இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பரமபத சோபனம் என்ற இவ்விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் பழமையான, தொன்மையான விளையாட்டு.
இந்த விளையாட்டை பதிமூன்றாம் நூற்றாண்டின் கவிஞரான ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கூறுகிறார்கள்.
தொன்மையான பரமபதம் [துணியில் வரையப் பட்டது]
பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது. ஆரம்பத்தில் உருவாகிய பரமபதத்தில் 12 இடம் உண்மையையும், 51 இடம் நம்பிக்கையையும், 57 இடம் பெருந்தன்மையையும், 76 இடம் ஞானத்தையும், 78 இடம் சன்யசத்தையும் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் மட்டும் தான் ஏணிகள் இருக்கும். இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.
41 கட்டத்தில் கீழ்ப்படியாமை, 44 கட்டம் அகந்தை, 49 கட்டம் ஈனம், 52 இடம் களவு, திருட்டு, 58 இடம் பொய், புரட்டு, 62 மதுபானம் அருந்துதல், 69 இடம் கடன், 73 இடம் கொலை, 84 கோபம், வெஞ்சினம், வஞ்சம், 92 கர்வம், 95 பெருமை, 99 காமம் ஆகிய இடங்களில் பாம்புகள் காணப்பட்டன. பாம்புகள் ஏழ்மை, வறுமை, தரித்திரம், செல்வம், அறிவு வற்றுதல், ஆதரவற்ற நிலை, பிச்சை போன்ற கஷ்டங்களை கொடுக்கும்.
இரண்டு முதல் நான்கு பேர் வரை விளையாடக் கூடிய இந்த விளையாட்டு, தாயக்கட்டை உருட்டி அதில் வரும் எண்ணுக்குத் தகுந்தவாறு கட்டங்களில் காயை நகர்த்திச் செல்ல வேண்டும். விளையாட்டை ஆரம்பிக்க ''தாயம்'' அதாவது ''ஒன்று'' விழ வேண்டும். முதலில் மோக்ஷம் பெற்றவர் வெற்றி பெற்றவராவார். நூறாம் கட்டம் நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்று அழைக்கப்பட்டது.
பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே....
1. முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே கொண்டு போய் விட்டு விடும்.
2. இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம்.
3. இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது அதை விடப் பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் “திரும்பத் திரும்ப வந்து… பல சுழற்சிகள் ஆகி நாம் மேலே போகின்றோம்.
4. இன்னும் இரண்டே கட்டம்…! எல்லாவற்றையும் விடப் பெரிய பாம்பு அங்கே இருக்கின்றது.
5. பயத்தால் உருட்டிய உடனே தாயம் விழுந்து விடும். மீண்டும் அந்த விஷமான நிலைகள் பட்டவுடனே “ஜர்ர்ர்...” என்று கீழே இங்கே பற்றிக்குள் கொண்டு வந்து நம்மை விட்டு விடும்.
6.ஆகவே கீழ் நிலைக்குக் கொண்டு வந்து மிக மோசமான சரீரங்களை எடுக்கும் நிலையை அது மீண்டும் உருவாக்கி விடுகின்றது.
7.வாழ்க்கையில் நடக்கும் இத்தகைய பேருண்மைகளை நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் ஏகாதசி...
பரமபதத்தை அடைய வேண்டும் என்றால் விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் பெற்று அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது. அன்றைய நாளில் சொர்க்கவாசல் என்று கோவில்களை எல்லாம் திறந்து வைப்பார்கள். நமக்கு இதைக் கதையாகச் சொல்லி ஏதோ பேருக்கு சொர்க்க வாசல் வழியாகச் சென்று ஸ்மியைக் கும்பிட்டோம்… போனோம்… வந்தோம்… ராத்திரி எலாம் விழித்திருந்தோம்… இரவு பரமபதம் விளையாடினோம் என்ற எண்ணம் தான் இருக்கும். [இன்று உள்ள சிலருக்கு இந்தப் பரமபதம் படம் என்றால் கூட என்ன…! என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை]
இந்த பரமபதத்தின் இரகசியம் தான் என்ன….
மனதின் குணங்கள் 13....
1 . ராகம்
2 . துவேஷம்
3 . காமம்
4 . குரோதம்
5 . உலோபம்
6 . மோகம்
7 . மதம்
8 . மச்ச்சரம்
9 . ஈரிஷை
10 . அசூயை
11 . டம்பம்
12 . தர்பம்
13 . அஹங்காரம்
குணங்களை மாற்ற கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள்.
1 . சகுனம்
2 . ஸ்தோத்திரம்
3 . தியானம்
4 . யாகம்
5 . மெளனம்
6 . பக்தி
7 . சித்தி
8 . சிரத்தை
9 . ஞானம்
10 . வைராக்கியம்
இந்த 10 குணங்களையும் அவற்றை செம்மை படுத்தி நாம் பரவசு தேவனின் பரம பதத்தினை அடையும் வழிகளையும் உதாரணங்களுடன் விளக்குவதே நாம் வெறும் சதுரங்க கட்டைகளை உருட்டி பாம்பு, ஏணி என விளையாடும் பரமபத சோபன படம். பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும் படம்.
நம் வாழ்க்கையில் எல்லாம் நல்லதைச் செய்வோம். அதே சமயம் நம்மை அறியாதபடி வேதனை என்ற நிலைகள் வரும் போது அந்த விஷமான நிலைகள் “கொத்தப்பட்டு…!” நம் உடலுக்குள் நோய்களாகி விடுகின்றது.
நோயாகி விட்டால் இந்த மனிதச் சரீரத்தை இழந்து மீண்டும் இழி நிலையான சரீரத்தைப் பெற்று விடுகின்றோம்.
1. அதிலிருந்து மீண்டு மீண்டும் மனிதனாக வளர்ச்சியாகி பல கோடி சரீரங்களைப் பெற்று…
2. மீண்டும் இழந்து மீண்டும் வளர்ச்சி பெற்று…
3. இப்படியே இழந்து இழந்து… இன்று நாம் இந்தச் சுற்றிலேயே தான் இருக்கின்றோமே தவிர
4. மெய் வழியின் தன்மையை அடையும் தன்மை (பரமபதத்தை) இல்லாது நாம் இருக்கின்றோம்.
5.அந்த மெய் வழி செல்வதற்கு என்ன வழி? என்ற நிலையைத்தான் அன்று மெய் ஞானிகள் பரமபதத்தின் மூலம் உணர்த்தினார்கள்.
பரமபதம் அடைவது என்றால்…
1.பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களிலிருந்து அடுக்கடுக்காகச் சென்று
2.மனித நிலைகள் பெற்று மனித நிலைகளிலிருந்து
3.உயிரை ஒளியாக மாற்றி உச்சியிலே செல்லும் போது தான்
4.அதாவது இந்த உடலை விட்டு [வெளியிலே] விண்ணிலே சென்று ஒளியாக நிற்க கூடிய நிலையைப் பரமபதமாகக் காட்டி
5.அதற்குகந்த நாளாக நாம் ஏகாதசியைக் காட்டினார்கள் ஞானிகள்.
பரமபத சோபன படம் என்பது பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும், சோபிக்கும் படம்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
செயல்பாடுகளில் இருந்த தடைகளை அறிவீர்கள். நீண்ட நாள் சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
ரிஷபம்
சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இள நீலம்
மிதுனம்
எதிர்காலம் சார்ந்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளை அரவணைத்து செல்லவும். மருத்துவ செலவுகள் சிலருக்கு ஏற்படும். செயல்பாடுகளால் ஒரு விதமான அசதிகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சிந்தனைகளை கவனம் வேண்டும். பணி சார்ந்த அலைச்சல்கள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நினைத்த காரியம் கைக்கூடி வரும். சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மனதிருப்தியை ஏற்படுத்தும். துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சிம்மம்
பணியிடத்தில் மதிப்புகள் மேம்படும். துணைவரிடத்தில் ஒத்துழைப்புகள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விவசாயம் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். விவாத போக்குகளை தவிர்த்துக் கொள்ளவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். விதண்டாவாத பேச்சுக்களை தவிர்க்கவும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
துலாம்
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளி உணவுகளை குறைத்து கொள்வது நல்லது. துறை சார்ந்த பணிகளில் அலைச்சல் மேம்படும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கிடைக்க வேண்டிய சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விருச்சிகம்
புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நவீன கருவிகளை வாங்குவதற்கான சூழல் ஏற்படும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தன வரவுகள் சாதகமாக இருக்கும். சுப காரியம் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் உருவாகும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சஞ்சலங்களால் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். வருத்தம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வேற்றுமை குறையும். பொன் பொருள் சேர்க்கை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். சிறு கடன்களை அடைப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கும்பம்
உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். நெருக்கடியான சில சூழ்நிலை சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி பணிகளில் இருந்த ஆர்வமின்மை குறையும். வேலை மாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். மறைமுகமான சில எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தனம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மீனம்
எதிர்கால தொடர்பான சில பணிகளை முடிப்பீர்கள். தனவருவாயில் இருந்த நெருக்கடிகள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இடம் மாற்றம் குறித்த எண்ணங்கள் உருவாகும். குறுதொழில் சார்ந்த முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 16 ஆம் தேதி புதன்கிழமை 31.12.2025
இன்று அதிகாலை 01.34 வரை ஏகாதசி. பின்னர் இரவு 11.16 வரை துவாதசி. பிறகு திரியோதசி.
இன்று அதிகாலை 01.03 வரை பரணி. பின்னர் இரவு 11.26 வரை கிருத்திகை. பிறகு ரோகிணி.
இன்று இரவு 07.13 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று அதிகாலை 01.34 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 12 25 வரை பவம்.
பிறகு இரவு 11.16 வரை பாலவம். பின்பு கௌலவம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை



















