யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அடுத்தடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர அவர் கைவசம் உள்ள மற்றொரு திரைப்படமான டியூடு, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில் டியூடு படத்தின் பிசினஸ் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சுமார் ரூ.25 கோடிக்கு டியூடு படத்தின் ஓடிடி உரிமம் விற்பனையாகி உள்ளதாம். பிரதீப் ரங்கநாதனின் கெரியரில் அதிக விலைக்கு விற்பனையான படமும் இதுதான். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தைவிட பிரதீப் ரங்கநாதனின் டியூடு படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கி இருக்கிறது. மதராஸி திரைப்படத்தின் ஓடிடி உரிமம் வெறும் ரூ.23 கோடிக்கு தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இதன்மூலம் ஹீரோவாக நடிக்கும் 3வது படத்திலேயே சிவகார்த்திகேயனை ஓவர்டேக் செய்து மாஸ் காட்டி இருக்கிறார் பிரதீப்.
கனடாவில் விமான பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
மனிடோபா (Manitoba) - ஸ்டெயின்பாக் (Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில், குறித்த இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வின்னிபெக்கில் (Winnipeg) இருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில், தெற்கு விமான நிலையம் அருகே இருவரும் விமானத்தைத் தரையிறக்க முயன்றவேளை, 400 மீற்றர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்துக்குள்ளான விமானங்கள் தீப்பிடித்ததில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில், கனடா போக்குவரத்து பாதுகாப்புச் சபை விசாரணைகளை நடத்தி வருவதாக, கூறப்படுகின்றது.
கனடாவில் குடியுரிமை மற்றும் வேலை அனுமதிக்காக விண்ணப்பிக்க விரும்பிய பலரிடம் பொய்யான குடிவரவு சேவைகளை வழங்கியதாக குற்றம் சும்தி 43 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2023 மே 31 முதல் 2025 மே 31 வரையான காலப்பகுதியில் யோங் வீதி மற்றும் எக்லிங்டன் அவென்யூ பகுதிகளில் குற்றவாளி குடிவரவு ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.
மக்கள் குறித்த பெண்ணிடம் பணம் செலுத்திய பின், அரசாங்க ஆவணங்கள் போல உருவாக்கப்பட்ட பொய்யான ஆவணங்கள் வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த ஆவணங்கள் திகதிகள் தவறானவையாக இருப்பதும், வழங்கப்பட்ட சேவைகள் சட்டபூர்வமானவை அல்ல என்பதும் பாதிக்கப்பட்டவர்களால் உணரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாரியா கொர்புஸ் என்ற 43 பெண் மீது போலி ஆவணத் தயாரிப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த பெண் தொடர்பில் மேலும் தகவல்கள் தெரிந்தால், டொராண்டோ பொலிசாரை 416-808-5300 என்ற எண்ணிலும், அல்லது அநாமேதய முறையில் தகவல் அளிக்க விரும்பும்வர்கள் Crime Stoppers-ஐ 416-222-TIPS (8477) என்ற எண்ணிலும் தொடர்புகொள்ள முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் .
“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.
ஜட்ஜூக்கு சுருக்கென்றது.
பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ்.
ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார்,
“இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு”
பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்.
ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார்.
“பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார்.
அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள்.
முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.
அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!
எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் வந்தார்.
“சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.
“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி.
“பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.
ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார்.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.
சில senior தம்பதிகளை பொது இடங்களில் பார்த்து இருப்போம்.
அந்நியோன்யமாக, ஒருவருக்கொருவர் அனுசரணையாக, புன்னகையோடு, உலகமே தங்கள் இல்லற உறவில்தான் இயங்குகிறது என்ற தோரணையோடு வாழ்வை அதன் போக்கில் செல்ல விட்டு
ரசித்து பயணிப்பார்கள்.
இவர்கள் உண்மையிலேயே கடவுளின் குழந்தைகள்.
பொது இடங்களில் கணவனை விட்டு கொடுக்காமலும், அதே போல மனைவியின் சுய மரியாதைக்கு பங்கம் வராமல் அரண் போல காக்கும் கணவனும் இன்றைய காலகட்டத்தில் வேற்றுலகவாசிகள்போல உணர வைப்பார்கள்.
என்ன பெரிய பிரச்னை ?வாங்க ஒரு கை பாத்துடலாம் என்று அனுசரணையோடு பக்கபலமாக நிற்கும் துணைவி கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்.
பஸ்ஸில் உள்ள சிறு இடத்தில், தன் தேவையை குறுக்கி கொண்டு மனைவியை செளகரியமாக அமர வைக்கும் போது, தன் கணவனை பார்த்து பெருமிதமாக புன்னகைத்து, அட ஏங்க நீங்க, நல்லா உட்காருங்க என்று ஆத்மார்த்தமாக சொல்லும்போது அது கவிதை.
உறவுகளுக்குள் ஒருமித்த உணர்வும், தோழமையும் இருந்தால், அது ஒரு
அற்புதமான சங்கீதம்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலை மாற்றம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கமிஷன் துறைகளில் லாபம் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப மேன்மை ஏற்படும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மறைமுக திறமையால் மதிப்புகள் உயரும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மிதுனம்
எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பணிகளில் சில சாதகமான சூழல் உண்டாகும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். கூட்டாளிகள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தம்பதிகளுக்கிடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். உதவிகள் செய்யும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சார்ந்த எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
தடைப்பட்டுவந்த தனவரவுகள் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களில் கவனத்துடன் படிக்கவும். கொடுக்கல்-வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் காணப்படும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். பிள்ளைகளால் அலைச்சல்களும் சிறு சிறு விரயங்களும் உண்டாகும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கன்னி
உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். தந்தை வழி உறவினர்களின் ஆதரவுகள் மனதிற்கு திருப்தி ஏற்படுத்தும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
உடன் பிறந்தவர்கள் வழியில் சாதகமான சூழல் ஏற்படும். சங்கீத பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகள் மேம்படும். வழக்குகள் பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விருச்சிகம்
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். முகத்தில் இருந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலம் சீராகும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பகை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
பிரபலமானவர்களின் சந்திப்புகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. வாகன பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் குணம் அறிந்து செயல்படுவீர்கள். வருமான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். உணர்வுகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான சிந்தனைகள் பிறக்கும். உத்தியோக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
மகரம்
தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். புதிய விஷயங்கள் கற்பதில் அலைச்சல்கள் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த பொறுப்புகள் படிப்படியாக குறையும். தடை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கும்பம்
மேல் அதிகாரிகள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். சிக்கனமாக செயல்படுவதால் நெருக்கடிகள் குறையும். பெரிய மனிதர்களின் மறைமுக ஆதரவுகள் மூலம் தீர்வுகள் கிடைக்கும். கடன் வாங்கி முதலீடு செய்வதை தவிர்க்கவும். இணைய பணிகளில் வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மீனம்
தன வரவுகளால் செல்வ வளம் மேம்படும். தொழில் நிமித்தமான பயணங்கள் சாதகமாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். தடைப்பட்ட கட்டிடப் பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். ஆசை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை 10.7.2025.
இன்று அதிகாலை 02.35 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.
இன்று காலை 06.09 வரை மூலம். பின்னர் பூராடம்.
இன்று இரவு 10.47 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.
இன்று அதிகாலை 02.35 வரை . வணிசை. பின்னர் பிற்பகல் 02.53 வரை பத்தரை. பிறகு பவம்.
இன்று அதிகாலை 05.58 வரை மரணயோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
7. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.
12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.
இப்போதெல்லாம் இந்த நடிகர் பணக்கார அப்பா, அந்த நடிகர் ஏழை அப்பா என்றெல்லாம் பார்க்கப்படுகிறது. அதன்படியே கேரக்டர்களும் கொடுக்கப்படுகின்றன. ஆனால், ரங்காராவ் இப்படியாக கோடு கிழித்து, எல்லை வைக்கமுடியாத அசுரத்தனமான நடிகர். ஒரு படத்தில் பணக்கார அப்பாவாக இருப்பார். கோட்டும்சூட்டும் போட்டுக்கொண்டு, பைப் பிடித்தபடி வருவார். இன்னொரு படத்தில் அழுக்குச் சட்டையும் பழுப்பு வேட்டியுமாக, குடிசையில் இருப்பார்.
வறட்டு கெளரவம் கொண்ட பணக்காரன், தர்ம சிந்தனையுள்ள பணக்காரன், பாசத்துக்கு ஏங்கும் அப்பா, மோசம் செய்யும் அப்பா, நம்பியவரை ஏமாற்றும் அப்பா, நம்பி ஏமாறும் அப்பா, முசுடாக இருக்கும் அப்பா, காமெடி கலகல அப்பா என்று எந்த வேடமாக இருந்தாலும் அதை ரங்காராவிடம் கொடுத்தால், அவர் பார்த்துக்கொள்வார். அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே உலவவிட்டுவிடுவார் என்று இயக்குநர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தார்கள்.
‘கல்யாண சமையல் சாதம்’ என்கிற ரங்காராவையும் ரசித்துச் சிரித்தோம். ‘முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக’ என்கிற ரங்காராவையும் பார்த்துக் கலங்கிக் கதறினோம். ‘எங்கவீட்டுபிள்ளை’யில் சரோஜாதேவியின் அப்பாவாக வந்து படம் முழுக்க டைமிங் காமெடியில் அதகளம் பண்ணியதை ரசித்தோம். சிவாஜியுடன் ‘செல்வம்’ படத்தில் ஜாலி டாக்டராக வந்து காமெடிப் பட்டாசுகளைக் கொளுத்திபோட்டுக் கொண்டே இருந்ததையும் ரசித்தோம்.
‘எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நானென்றான்...’ என்று ‘ரங்கன்...’ என்று உருகிப் பாடுகிற ‘படிக்காத மேதை’ செல்வந்ந்தர் ரங்காராவ், காலத்துக்கும் மனதில் நிற்பார்.’வாழையடி வாழை’ படத்தில் அப்படியொரு அற்புதமான பணக்கார மாமனாராக வந்து, ஒவ்வொரு கேரக்டரையும் டியூன் செய்து நல்வழிப்படுத்துவார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் படம் இது. இந்த ரங்காராவின் கேரக்டரின் நீட்சியாகத்தான், விசுவின் கேரக்டர்களும் நாரதர் நாயுடு மாதிரியான கதாபாத்திரங்களும் அமைக்கப்பட்டன என்பதாகத்தான் தோன்றுகிறது.
‘சர்வர் சுந்தரம்’ படத்தில் முக்கியமான கேரக்டரெல்லாம் இல்லை. திரைப்பட இயக்குநராக ஒரு காட்சியில் வருவார். ஆனால், அந்த ஒரு காட்சியாலே நம் மனதில் இடம்பிடித்தார். அதுதான் ரங்காராவ்.
’’ரங்காராவ் அண்ணா, அற்புதமான நடிகர். நடிப்பு மேதை’ என்று சிவாஜி புகழ்ந்து உருகியிருக்கிறார். ‘என்ன பெரிய விருது? சிவாஜி திரையில் சிரித்தால் ரசிகர்கள் சிரித்தார்கள். சிவாஜி அழுதால் ரசிகர்களும் அழுதார்கள். சிவாஜி ஆவேசமானால் ரசிகர்களும் ஆவேசமானார்கள். ஒரு நடிகனுக்கு இவைதான் விருது. இதைவிட வேறு பெரிய விருதுகள் ஏதுமில்லை ஒரு கலைஞனுக்கு. சிவாஜி அப்படி எத்தனையோ விருதுகளை வாங்கிய மகா கலைஞன்’ என்று ரங்காராவ் புகழ்ந்திருக்கிறார்.
‘சபாஷ் மீனா’, ‘தெய்வத்தின் தெய்வம்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என ரங்காராவ் அசத்தி பிரமிக்க வைத்த படங்களின் பட்டியல் நீளம்.
தெலுங்குத் திரையுலகம் நூற்றாண்டு கொண்டாடிய போது, பல நூறு ஆண்டுகளானாலும் மறக்கமுடியாத கலைஞனாகத் திகழும் ரங்காராவுக்கு தபால் தலை வெளியிட்டு தன்னை கெளரவப்படுதிக் கொண்டது. பின்னர், ஆந்திரத்தில் இவருக்கு இரண்டு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டன.
"என்னங்க.. உங்க கார்டை குடுங்க. கொஞ்ச நாள் நான் வச்சுக்குறேன்.."
"ஏன் திடீர்னு கார்டு கேட்கிற?"
"ஏதாவது emergencyனா.. அதான்.."
"2 நாள் கழிச்சு தறேன்.."
"இல்ல எனக்கு இப்பவே வேணும்.. முக்கியமான பொருள் வாங்கணும் அர்ஜெண்ட்டா.."
"உனக்கு என்ன அர்ஜெண்ட்னு எனக்கே தெரியும். நாளைக்கு என் பிறந்தநாளுக்கு கிஃப்ட்னு சொல்லி என் கார்டுலேயே ஏதாவது ஆர்டர் போடுவ. அதனால நான் 2 நாள் போகட்டும் தர்றேன்.."
"ஏன்ங்க உங்க சர்ப்ரைஸ நீங்களே கெடுக்குறீங்க?"
"அதுக்கு தான் உன் கைல காசே குடுக்காம வச்சுருக்கேன்.. "
"உங்களுக்கு ஏதாவது நான் குடுக்கணும்னு ஆசை படுறேன்.. பேசாம வர்றீங்களா buffet கூட்டிட்டு போறேன்.."
"கூட்டிட்டு போய்.. அங்க இதே கார்டை தான் தேய்க்க போற.."
"பார்த்தீங்களா.. இதுக்கு தான் நான் அப்பவே வேலைக்கு போறேன்னு சொன்னேன். நீங்க தான் நீ வீட்ல இரு. நான் உன்னை ராணி மாதிரி பார்த்துப்பேன்னு சொன்னிங்க. இதுவே நானே சம்பாரிச்சு..."
He:
"நீ பேசாம அமைதியா நான் சொல்லுறதுக்கெல்லாம் அந்த ஒரு நாளாச்சு தலையாட்டிட்டு இருக்குறது தான் நீ எனக்கு தரப்போற பிறந்த நாள் பரிசு. காசும் செலவாகாது.. நானும் நிம்மதியா இருப்பேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. "
வெட்சி பூ பெருவாரியான மக்களால் இட்லி பூ எனவும் அழைக்கப்படுகிறது. குல்லை, செச்சை, செங்கொடுவேரி, சேதாரம் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறது. அழகுக்காக வளர்க்கப்படும் வெட்சி செடியின் பூ, இலைகள் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது.
சளியை கரைத்து வெளியேற்றும். ரத்தம் கலந்து சளி வெளியேறும் பிரச்னையை தீர்க்க கூடியது. வெட்சி செடியின் இலைகளை அரைத்து போடும்போது தோல்நோய்கள் குணமாகும். கொப்புளங்கள், அரிப்பு, தடிப்பை சரிசெய்யும். அடிபட்ட இடத்தில் தசை நசுங்கி ரத்தநாளங்கள் சீர்கெட்டு போகும் நிலையில் மேல்பற்றாக போடும்போது புண்கள் விரைவில் ஆறிப்போகும். வயிற்றுப்போக்கை நிறுத்த கூடியது.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நீர்விடாமல் அரைத்த வெட்சி பூவை சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை வடிகட்டி பூசி வர தோல்நோய்கள் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலையில் தேய்த்து குளித்துவர பொடுகை போக்கி முடிக்கு வளத்தை கொடுக்கிறது.
வெட்சி பூ உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது. உடல் அசதி, கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை இருக்கும் போது வெட்சிப்பூ தேநீரை காலை, மாலை என இருவேளைகள் குடிக்க வேண்டும்.
பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வெட்சி பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். புற்றுநோய் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாக இது விளங்குகிறது.
ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் நேற்று (08) உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது. மிகவும் வயதான யானையாக இருந்ததால், அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது.
வத்சலா யானையின் முன் கால்களின் நகங்களில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, காப்புக்காட்டின் ஹினௌடா பகுதியில் உள்ள கைரையன் வடிகால் அருகே எழுந்து நடக்க இயலாமல் படுத்துக் கொண்டது.
வனத்துறை ஊழியர்கள் இந்த யானையை தூக்க நிறைய முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் வத்சலா யானை செவ்வாய்க்கிழமை (08) பிற்பகலில் உயிரிழந்தது.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக, சமீப காலமாக இந்த யானை பார்வையை இழந்ததால், அதனால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை என புலிகள் காப்பகம் தெரிவித்தது.
அமெரிக்காவிற்கான பயணங்களை கனடியர்கள் தொடர்ந்தும் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்குப் பயணிக்க கனடியர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அதே நேரத்தில் நாடளாவிய உள்நாட்டு சுற்றுலா திடீரென உயர்வடைந்து வருகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வேளையில், பரபரப்பான கோடை விடுமுறை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணத்துறையில் செயல்படும் நிறுவனங்களின் தகவலின்படி, உள்ளூர் இடங்களுக்கு முன்பதிவுகள் அதிகரித்து, கனடாவில் உள்ள தனித்துவமான சுற்றுலா தலங்களை ஆராய்வதில் மக்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள்.
இந்த ஆண்டில் கனடியர்கள் அதிக அளவில் உள்ளூர் பயணங்களில் ஈடுபடுகிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பயண மாற்றங்கள் அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களால் ஏற்படுகிறதா என்பது தெளிவில்லை. இருப்பினும், இந்த மாற்றங்கள் கனடிய உள்ளூர் பொருளாதாரத்திற்கு நன்மை தரும் என பயண நிறுவங்கள் நம்புகின்றன.
சிலரால் மட்டும் எப்படி எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?
அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க என்ன வேண்டும்..? பணம்..? பதவி
ஒரு பெரிய பங்களா..? ஆடம்பர வாழ்க்கை…….
இவை மட்டும் கிடைத்து விட்டால் போதுமா..? காலம் முழுவதும் கவலைகளின்றி சந்தோஷமாக இருந்து விடுவோமா..?
சந்தோஷம் எதில் தான் இருக்கிறது?
ரொம்ப சுலபம்.............. நம் “எண்ணத்தில்” தான் அது இருக்கிறது.
1.எல்லா மனிதர்களையும், எல்லா நிகழ்வுகளையும் கொண்டாடுங்கள்!
உங்களைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு நல்ல விஷயங்களையும் கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது, எரிச்சலை ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலை பார்த்திருப்பீர்கள். அதே சாலையின் ஓரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசித்திருக்க மாட்டீர்கள். உங்களை சுற்றியிருக்கும் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரின் நல்ல விஷயங்களை ரசியுங்கள்..கொண்டாடுங்கள்..மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.. குழந்தைகளிடம் இதை நாம் கற்கலாம், எதையுமே ரசித்து பார்த்து மகிழ்வது குழந்தைகளின் குணம்.
2.நல்ல நண்பர்களை சம்பாதியுங்கள்!
உளவியல் ஆய்வின் படி, ஒருவரின் மனதின் மகிழ்ச்சியை அவரை சுற்றியிருக்கும் விஷயங்களே முடிவு செய்கின்றன. எனவே, மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களை குறைசொல்லாத, உங்களை நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தை செலவிடுங்கள்..! இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்காமல் வைத்திருக்கும்.
3.பிடித்ததைச் செய்யவும்!
பிடித்த விஷயங்களை செய்யம்போது, மனம் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும். பலருக்கு, வாழ்க்கையின் மீது வெறுப்பு வர, பிடிக்காத வேலையை செய்து கொண்டிருப்பதே காரணமாக இருக்கும். வேண்டாம் என தவிர்க்கவும் பொருளாதார சூழல் இடம் தராது. அதே சமயம் உங்களுக்கு பிடித்த சினிமா பார்ப்பதையோ, புத்தகம் படிப்பதையோ, பயணம் செல்வதையோ யாராலும் தடுக்க முடியாதே? இவற்றை அடிக்கடி செய்யுங்கள்..மகிழ்ச்சி அதிகரிக்கும்.
4.செய்வதை திருந்தச் செய்யவும்!
நீங்கள் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதில் உங்கள் மனமும், உடலும் ஒன்றி இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மனம் தேவையற்ற சிந்தனைகள் பற்றி நினைக்காது. தேவையற்ற சிந்தனைகள் மூளையை குழப்பாமல் இருந்தாலே, மகிழ்ச்சியும் குறையாது.
5.கற்றுக் கொள்வதை நிறுத்தாதீர்கள்!
சில ஆய்வுகளின் படி, புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பதன் மூலம், மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்குமாம். இதனால் உங்களது துன்ப நினைவுகளை அது அசைபோடாது எப்போதும் பிசியாக இருக்க வைக்கும். எனவே மனம் எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கும்.
6.தடை..அதை உடை.!
எப்போதும், எந்த இடத்திலும் பிரச்சினைகளே இருக்கக்கூடாது என நினைக்காதீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும், அதனை தாங்கும் வலிமை வளரவேண்டும் என நினையுங்கள். நீங்கள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள உங்கள் தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும். தன்னம்பிக்கையை வளர்த்தலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
7.எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது!
நீங்கள் அடிக்கடி கவலைப்படும் நபராக இருந்தால், உங்கள் கடந்த காலத்தில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். சோக நினைவுகள் வருத்தத்தை தந்தாலும், அவை நடந்து முடிந்த விஷயங்கள். அவற்றை மாற்றவும் முடியாது. எனவே இல்லாத, கடந்த காலத்தை நினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ்காலத்தில் வாழுங்கள். நடப்பதை மட்டுமே நினையுங்கள்.. பாதி கவலைகள் பறந்தோடும்.
8.அடிக்கடி சிரியுங்கள்!
அடுத்த நொடி, என்ன நடக்கும் என்பது கூட தெரியாத, நிச்சயமற்ற வாழ்க்கைதானே நாம் வாழ்வது? இதில் ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்க வேண்டும்? நகைச்சவை உணர்வு கொண்டவராக மாறிவிடுங்கள்..முடியவில்லையா? ஒரு நகைச்சுவை படம் பார்க்கலாம். ஹியூமர் நிரம்பி வழியும் நண்பர்களுடன் பேசலாம்..சிரிப்பு நமக்கு கிடைத்திருக்கும் பரிசு..அதைப் பயன்படுத்துங்கள்.. அதுதான் உங்கள் கோபத்தை, விரக்தியை விரட்டும் மருந்து..
9.மன்னிக்க கற்றுக்கொள்வோம்!
கோபம் என்பது அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சுயதண்டனை. அதை ஏன் அடிக்கடி அனுபவிக்க வேண்டும்? பதிலாக அவர்களை மன்னித்துப்பாருங்கள்.. உங்கள் மனமும் மகிழும்..உங்கள் குணமும் வளரும்.. தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லைதானே? எனவே மறப்போம், மன்னிப்போம்..என இருந்தால், உங்கள் மதிப்பையும், மகிழ்ச்சியையும் இது இன்னும் அதிகாரிக்கும்தானே !
10.நன்றி சொல்வது, நன்று!
உங்களை சுற்றியிருப்பவர்களிடம் அடிக்கடி நன்றி சொல்லுங்கள்..அவர்கள் செய்யும் சிறிய உதவியோ, பெரிய உதவியோ அதனைப் பாராட்ட மறக்காதீர்கள். நன்றி சொல்ல மறக்காதீர்கள்.
11.உறவின் ஆழம் அதிகரிக்கட்டும்!
வீடு, அலுவலகம், சுற்றம் என சமூகத்தில் பல பேரிடம் நாம் இணைந்தே வாழ்கிறோம். அப்படி நாம் கொண்டுள்ள சொந்தங்களில், நெருக்கமான உறவுகளுடன் நேரம் செலவிடும் போது, அதிக மகிழ்ச்சி அடைகிறோம். அப்படி நெருக்கமான மனிதர்களை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். உற்சாகம் அதிகமாகும்.
12.ஆதலால் அதிகம் காதல் செய்!
நீங்கள் விரும்புவது போன்று, மனிதர்கள் வேண்டுமென்றால், இந்த உலகில் யாருமே கிடைக்கமாட்டார்கள். எனவே உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்தவரை அளவுக்கதிகமாக விரும்புங்கள்.. காரணம் அன்பு செய்தல் அவ்வளவு சுகம் !
13.நமக்கு நாமே நல்லது!
உலகில் உங்களது மிகச்சிறந்த காதலன் / காதலி நீங்களாகவே இருக்க வேண்டும். உங்கள் உடலின் மீது உங்களுக்கு மிகுந்த அக்கறை நிச்சயம் தேவை. சுவர் இருந்தால்தானே சித்திரம்? எனவே, உணவு, உறக்கம் என உங்கள் விஷயங்களில், குறிப்பாக உங்கள் உடல் நலனில் அதிக கவனம் இருக்கட்டும்.
நீங்கள் முதலில் உங்களை விரும்புங்கள்.
ரசியுங்கள்……. கொண்டாடுங்கள்…வாழ்க்கை வாழத் தானே…..