·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1253
  • More

யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.

இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments (0)
Login or Join to comment.
  • 33
  • 33
  • 33
  • 31
  • 33
  • 33
·
Added article

பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ‘துரந்தர் 2’. இத்திரைப்படம் கடந்த மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என

மதுரையைச் சேர்ந்த டி. ராகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில், இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

தேர்தலுக்கு பின் துரந்தர் 2 திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மதாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், தமிழகத்திலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு கொள்கைகளை இப்படம் பாராட்டும் வகையில் உள்ளதால் இத்திரைப்படத்தின் திரையிட்டிருப்பது, நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று வாதிட்டிப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், திரைப்படத்தின் எந்தப் பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன என்பதைக் குறிப்பிடவில்லை என தெரிவித்தனர்.

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கிய சான்றிதழை மனுதாரர் எதிர்க்கவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

  • 35
·
Added a news

கனடாவின் மாண்ட்ரியலில் உள்ள பெண் நோயாளிகளிடம் மருத்துவ ஒழுக்கவிதிகளை மீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மகப்பேறு மருத்துவர் ராபர்டோ பெர்னாண்டஸ் என்பவருக்கு மூன்று மாத கால பணி இடைநீக்கம் விதித்து கியூபெக் மருத்துவர் சங்கம் (Quebec’s College of Physicians) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட 80 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அறிக்கையில், டாக்டர் பெர்னாண்டஸ் தனது நோயாளிகளைத் தொடர்ச்சியாக அவமதித்ததாகவும், அவர்களின் வலியைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் எட்டுப் பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த சாட்சியத்தில், கருப்பையக சாதனத்தை (IUD) மாற்றச் சென்றபோது, மருத்துவர் எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி மிகவும் கொடூரமான முறையில் நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

"வலி தாங்க முடியாமல் நான் அலறியபோதும், கத்துவதில் பயனில்லை என்று கூறி அவர் தனது பணியைத் தொடர்ந்தார்; சிகிச்சைக்குப் பின் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து சென்றார்" என்று அந்தப் பெண் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த சிகிச்சைக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்குக் கடுமையான கருப்பைத் தொற்று ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மற்றொரு நோயாளி, மருத்துவர் தன்னிடம் மிகவும் ஆக்ரோஷமான தொனியில் பேசியதாகவும், இது போன்ற சிறிய பிரச்சனைகளுக்கு தன்னிடம் வராமல் பொது மருத்துவரைப் பார்க்குமாறு கூறி அவமதித்ததாகவும் புகாரளித்துள்ளார்.

டாக்டர் பெர்னாண்டஸ் மீண்டும் இது போன்ற தவறுகளைச் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை வாரியம் கருதினாலும், அவர் இடைநீக்க காலத்திற்குப் பிறகு மீண்டும் பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. எனினும், அவர் நோயாளிகளிடம் மென்மையாக நடந்துகொள்ளவும், தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தவும் இந்த மாதம் முதல் ஆறு மாத கால சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

  • 35
·
Added a post

நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்கு் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான்.

எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும் பழிக்குப் பழி வாங்க நினைக்காமலும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

அசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள்.

தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.

ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு, அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியாரிடம் விவரம் சொல்ல வந்த அனுமன், பிராட்டியை வணங்கி, ”தாயே, ஶ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்” என்று கூறினார்.

அனுமன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த சீதை, ”அனுமனே, நான் முன்பொரு முறை உயிர் துறக்க நினைத்த நேரத்தில், நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போதும் ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்குத் தெரிவித்தாய். ஏற்கெனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தைத் தந்துவிட்டேன். முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார்.

அதற்கு அனுமன், ”தாயே, எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்றேதான். கடந்த பல மாதங்களாக உங்களைப் பாடாகப் படுத்திய இந்த அரக்கிகளை, நான் தீயில் இட்டுக் கொளுத்தவேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்கவேண்டும்” என்று அனுமன் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனைப் பார்த்து, ”அனுமனே, நீ நினைப்பதுபோல் இந்த அரக்கியர் என்னைத் துன்புறுத்தி இருந்தாலும், அதற்காக இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்கு காரணம், நான் முன்பு செய்த செயலின் விளைவுதான்.

பொன்மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு, அதைப் பிடித்து வர என் கணவரை அனுப்பியதும், சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும், ‘லட்சுமணா, லட்சுமணா’ என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை அனுப்பிப் பார்க்கச் சொன்னேன்.

அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று மறுத்துக் கூறியும், நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்துப் பேசினேன்.

ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களைக் கண்ணிமைபோல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியதுதான், இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்குக் காரணம்.

எனவே, நீ அரக்கியர்களை ஒன்றும் செய்துவிடாதே. அவர்கள் அரக்கியர்கள் என்றாலும் பெண்கள். அவர்களுக்குத் தீங்கு செய்து நீ பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ளாதே” என்று கூறினார். அனுமன் உண்மையைப் புரிந்துகொண்டார்.

நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.

இதைத்தான் மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது. சிறுவயதில் அவர் தும்பியின் வாலில் கூரிய முனை கொண்ட தர்ப்பைப் புல்லைச் செருகியதால், பிற்காலத்தில் மன்னன் ஒருவனால் கழுவில் ஏற்றப்பட்டார்.

மகரிஷியான தனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டது என்று ஆணிமாண்டவ்யர் தர்மதேவதையிடம் கேட்டபோது, சிறுவயதில் அவர் தும்பியைத் துன்புறுத்தியதுதான் காரணம் என்று கூறியது.

இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை, ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கின்னா தாமே வரும்’ என்று நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

  • 36
·
Added a post

நாம் சிலரைச் சந்தித்த சில நிமிடங்களிலேயே அவர்களைப் பிடித்துவிடும். ஆனால், சிலரிடம் எவ்வளவு நேரம் பேசினாலும் ஒரு ஒட்டுதல் இருக்காது. ஏன் இப்படி நடக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா?

உளவியலின்படி, மக்கள் தங்களைப் போலவே இருக்கும் நபர்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். இந்த உளவியல் உண்மையை அடிப்படையாகக் வைத்து, எதிரில் இருப்பவரை நமக்குத் தெரியாமலேயே ஈர்க்கும் ஒரு அற்புதமான கலையைத்தான் 'மிரரிங்' (Mirroring) என்று உளவியலாளர்கள் சொல்கின்றனர்.

அது என்னது 'மிரரிங்'?

பெயரிலேயே இதற்கான அர்த்தம் இருக்கிறது. 'கண்ணாடி' (Mirror) எப்படி நம் பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்கிறதோ, அதேபோல் நாமும் எதிரில் இருப்பவரின் செய்கைகளை, பேச்சுவழக்கை, உடல்மொழியைப் பிரதிபலிப்பதுதான் மிரரிங். இரண்டு நெருங்கிய நண்பர்கள் அல்லது காதலர்களைக் கவனித்துப் பாருங்கள்.

அவர்கள் அறியாமலேயே ஒரே மாதிரியாக உட்கார்ந்திருப்பார்கள், ஒரே நேரத்தில் கையை அசைப்பார்கள், ஒரே மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். இதை நாம் செயற்கையாக, செய்வதன் மூலம் அறிமுகமில்லாத ஒருவரைக் கூட நம் நண்பராக்க முடியும்.

உடல்மொழியில் மிரரிங்!

ஒருவர் உங்களிடம் பேசும்போது காலின் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்களும் அதேபோல உட்காரும்போது, அவர் ஆழ்மனதில் "இவன் என்னைப் போலவே இருக்கிறான், இவன் பாதுகாப்பானவன்" என்ற எண்ணம் உருவாகிறது.

அதேபோல் அவர்கள் முன்னோக்கிச் சாய்ந்து பேசினால், நீங்களும் சாயலாம். அவர்கள் கைகளை அசைத்துப் பேசினால், நீங்களும் பேசும்போது அதே பாணியைக் கடைப்பிடிக்கலாம். இது ஒரு மிகச் சிறந்த பிணைப்பை உருவாக்கும்.

குரல் மற்றும் வார்த்தைகள்!

உடல்மொழி மட்டுமல்ல, குரலையும் மிரரிங் செய்யலாம். எதிரில் இருப்பவர் மெதுவாக, நிதானமாகப் பேசுகிறவர் என்றால், நீங்கள் மட்டும் படபடவெனப் பேசினால் அவருக்குப் பிடிக்காது. நீங்களும் உங்கள் வேகத்தைக் குறைத்துப் பேச வேண்டும்.

அவர்கள் உற்சாகமாகப் பேசினால், நீங்களும் அந்த உற்சாகத்தைக் காட்ட வேண்டும். மேலும், அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சில வார்த்தைகளைக் கவனித்து, அதே வார்த்தைகளை நீங்களும் உங்கள் பேச்சில் பயன்படுத்தும்போது, அவர்கள் உங்களை தங்களில் ஒருவராக உணர ஆரம்பிப்பார்கள்.

எச்சரிக்கை!

இந்த வித்தையில் மிக முக்கியமான விஷயம் 'நேர்த்தியாக' செய்வது. அவர் மூக்கைத்தொட்டால், உடனே நீங்களும் மூக்கைத்தொட்டால் அது அவரைக் கிண்டல் செய்வது போலாகிவிடும். அவர் ஒரு செயலைச் செய்த சில வினாடிகள் கழித்து அல்லது மெதுவாக நீங்களும் அதைச் செய்யவேண்டும்.

இது இயற்கையாக நடக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடித்துவிட்டால், அது மிகப்பெரிய எதிர்மறை விளைவை ஏற்படுத்திவிடும். எனவே, இதை ஒரு கலையாகப் பயிலவேண்டும்.

எதிரில் இருப்பவரின் உடல்மொழி மற்றும் பேச்சுக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளும்போது, உலகம் உங்களை ரசிக்கத் தொடங்கும். உங்களைப் போலவே இருக்கும் ஒருவரை உங்களுக்குப் பிடிக்காமல் போகாது என்பதுதான் இதன் அடிப்படை உளவியல்.

  • 38
·
Added article

முடியவே முடியாது. இவனெல்லாம் நிச்சயமாக சினிமாவுக்கு வர வாய்ப்பே இல்லை."

ஒரு சிறுவனின் ஜாதகத்தை பார்த்து விட்டு, ஒரு ஜோதிடர் கணித்த கணிப்பு இது. "நான் சொல்வதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இவன் ஜாதகப்படி, திரை உலகத்துக்கும் இவனுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது."

இப்படி அந்த ஜோதிடர் சொன்னதைக் கேட்டு, அந்த சிறுவனின் தாய் கவலை அடைந்தார். ஏனென்றால் சினிமாவுக்கு போய் ஜெயித்துக் காட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்று அடம் பிடித்தான் அவருடைய மகன்.

ஜோதிடர் சொன்ன எதிர்மறையான கருத்தைக் கேட்டு அந்தப் பையன் வருத்தம் கொள்ளவில்லை; வைராக்கியம் கொண்டான்.

அந்த ஜோதிடரின் இடத்தில் வைத்தே அவரிடம் சவால் விட்டான்.

"ஜோதிடர் அய்யா, நல்லா கேட்டுக்கோங்க. உங்கள் ஜோதிடத்தை நான் பொய்யாக்கிக் காட்டுகிறேன். சினிமாவில் நிச்சயமாக ஜெயித்து காட்டுகிறேன். உங்கள் கணிப்பு தப்பு என்பதை கட்டாயம் நிரூபிப்பேன்."

புறப்பட்டுப் போனான். போராடினான்.

புதிய புதிய முயற்சிகள் செய்தான்.

ஜோதிடரிடம் சவால் விட்டுச் சொன்னதை வெகு சீக்கிரத்திலேயே நிறைவேற்றிக் காட்டினான்.

அந்தச் சிறுவன்தான் பின்னாளில் பின்னணி பாடல்களில் தனி முத்திரை பதித்த பி.பி. ஸ்ரீனிவாஸ். டிஎம்எஸ் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்த காலத்திலேயே, தனக்கென்று ஒரு தனிக்கொடியை பறக்க விட்ட தனித்துவமான பாடகர்.

எத்தனை எத்தனை இனிய பாடல்கள் !

காலங்களில் அவள் வசந்தம்...

மயக்கமா கலக்கமா...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

ரோஜா மலரே ராஜகுமாரி...

நிலவே என்னிடம் நெருங்காதே...

'இனிமைக்கு இன்னொரு பெயர் பிபி ஸ்ரீநிவாஸ்' என்று எல்லோரையும் சொல்ல வைத்தார் பி பி ஸ்ரீநிவாஸ்.

சின்ன வயது ஜோதிடர் சம்பவம் பற்றி, பிற்காலத்தில் அவரிடம் கேட்டபோது, "ஜோதிடம் உண்மையோ பொய்யோ, எனக்கு தெரியாது. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.

நாம் உண்ணும் ஒவ்வொரு தானியத்திலும் நம் பெயர் எழுதியிருந்தால்தான் நாம் சாப்பிட முடியும். அது போலத்தான் நான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் ஆண்டவன் என் பெயரை எழுதியிக்கிறான். அதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது" என்று சொன்னார் பிபி ஸ்ரீநிவாஸ்.

அதனால்தான் ஏ எம் ராஜா பாட வேண்டிய 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பி பி ஸ்ரீநிவாஸ் பாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தப் பாடலை பாடிய பிறகு, அவரது புகழ் நினைத்தே பார்க்க முடியாத உயரத்திற்கு சென்றது.

'நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை...'

  • 43
·
Added a post

வெயில் காலத்தில் வரும் தோல் அரிப்பு, படர்தாமரை, தோல் நோய்களுக்கு இயற்கை வைத்தியம்.

மிளகை நெய்யுடன் சேர்த்து நன்கு அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பாக படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வைத்திருந்து காலையில் சீயக்காய் பொடியை தேய்த்து கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் ஏற்படும் படர்தாமரை குறையும்.

🟠 பூவரசங் காய்

பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குறையும்.

🟠 சந்தனம்

சந்தனக்கட்டையை எலும்மிச்சம் பழ சாற்றில் உரைத்து பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்.

🟠 குப்பை மேனி

ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் விடவும். ஒரு பங்கு குப்பை மேனி மற்றும் கீழா நெல்லி சேர்ந்த இலை பசை சேர்க்கவும். சிறுதீயில் வைத்து தைலப்பதத்தில் காய்ச்சவும். ஆற வைத்து எடுத்து வைத்து பூசி வர படர்தாமரை சரியாகும்.

தோலை பற்றி தொல்லை தரும் படர்தாமரைக்கு குப்பை மேனி மருந்தாகிறது. இது பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது.

🟠 கீழாநெல்லி

கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மட்டும் இல்லை.. தோல் நோய்களை போக்கும் தன்மையும் கொண்டது. கீழாநெல்லியை அரைத்து பற்று போட்டால் படர்தாமரை நோய் விலகும்.

🟠 பூண்டு

பூண்டு இந்த படர்தாமரைக்கு மருந்தாக பயன்படுகிறது. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு நசுக்கி வைத்த பூண்டு பற்களை சேர்க்கவும். இதை தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். வடிக்கட்டி படர்தாமரை இருக்கும் இடத்தில் காலை, மாலை வேளையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால் படர்தாமரை சரியாகும்.

🟠 தும்பை இலைகள்

தும்பை இலைகளை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் தும்பை இலை பேஸ்டை எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்துவர படர்தாமரை விரைவில் குணமாக்கும்

  • 43
·
Added a post

பூனை குறுக்கே போனால் அந்த வழியாக ஏன் போகக் கூடாது என்று தெரியுமா?

பூனைகள் குடியிருப்பு பகுதிகளில் வாழும்.மன்னர் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால் இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்குச் சென்றிருப்பார்கள் சிறுவர்கள்,வயதானவர்கள், பெண்கள் மட்டுமே வீட்டில் இருப்பார்கள் ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, வந்த திசையை மாற்றி வேறு திசையில் குதிரைகளில் செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள். இது போன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..???பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!

  • 44
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர். தலைவலி, தூக்கமின்மை நீங்கும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம்: இழுபறியில் இருந்த சில பணிகள் முடியும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகரீதியான பயணங்களில் கவனம் தேவை.

கடகம்: பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டு. வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் காண்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். புது வேலை கிட்டும். தந்தையின் உடல் நலம் சீராகும். பால்ய நண்பர்கள் தேடி வருவர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர்.

கன்னி: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல்நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. வியாபாரத்தில் விவாதங்கள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். அலுவலகரீதியான பயணங்கள் திருப்தி தரும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.

துலாம்: முக்கிய பிரமுகர்கள் சிலரை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் மாற்றம் வரக்கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்கள் உதவிகரமாக இருப்பர். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும்.

விருச்சிகம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தால் பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருக்கவும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

தனுசு: உறவினர், நண்பர்களால் செலவு வரக்கூடும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி தங்கும். வாகனத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

மகரம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் பாசமழையில் நனைவீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். கடையை புதிய இடத்துக்கு மாற்றுவீர்.

கும்பம்: திடீரென்று அறிமுகமாகும் சிலரால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரம் சிறக்கும்.

மீனம்: தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் தீரும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்கு விற்றுத் தீரும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

  • 156
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 10.4.2026

இன்று இரவு 08.59 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று காலை 09.27 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.

இன்று மாலை 04.26 வரை சிவம். பின்னர் சித்தம்.

இன்று காலை 08.15 வரை பாலவம். பின்னர் இரவு 08.59 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=478&dpx=2&t=1775793399

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 156

Good Morning...

  • 151
·
Added article

விஜய் நடித்த ‘சிவகாசி’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

2005-ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சிவகாசி’. தற்போது இப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் புதிய ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் அசின், பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. விஜய்யின் ‘கில்லி’ படம் மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை புரிந்தது. இதனை கணக்கில் கொண்டு ஏ.எம்.ரத்னம் ‘சிவகாசி’ படத்தினையும் மறுவெளியீடு செய்ய முடிவு செய்திருக்கிறார்.

  • 244
·
Added a post

முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப்படும் இந்த முத்து ஆபரணங்கள் எத்தனையோ படையெடுப்புக்களில் இருந்து தப்பித்து வந்துள்ளன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் இது.

அது நவாப்கள் ஆட்சி செய்த காலம். நமது கோவில் சொத்துக்கள் பல கொள்ளையடிக்கப்பட்டன. பல கோவில்கள் தகர்க்கப்பட்டன.

அப்போது ஒரு படை அதன் தளபதி தலைமையில் தென்தமிழ்நாட்டில் உள்ள குடந்தை, மயிலாடுதுறை உள்ளிட்ட தலங்களை குறிவைத்து புறப்பட்டது.

வரும் வழியில் பல கோவிகளுக்குள் இப்படையினர் புகுந்து பல பொருட்களை கொள்ளையடித்தனர்.

வைத்தீஸ்வரன் கோவிலில் சரவணப் பிள்ளை என்பவர் அப்போது பொக்கிஷ காப்பாளராக இருந்தார்.

இத்தலத்தே எழுந்தருளியிருக்கும் முத்துக்குமார சுவாமி மீது பேரன்பும் பெரும் பக்தியும் கொண்ட அவர் முருகனுக்கு அடிக்கடி முத்து ஆபரணங்களை சூட்டி அழகு பார்ப்பார்.

கோவில் நகைகள் அனைத்திற்கும் உரிய கணக்குகளை நிர்வகித்து வந்த அவர், அவற்றை பத்திரமாக கையாண்டு முறையாக பராமரித்து வந்தார்.

நகைகளை அடிக்கடி சுத்தம் செய்து வைப்பார். அதன் பொலிவு எந்தவகையிலும் குறைந்துவிடக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்து வந்தார்.

இந்நிலையில் இப்படையினர் குடந்தைக்கு அருகவே ஒரு கோவிலில் கொள்ளையடித்தனர். அந்தக் கோவிலில் பணியாற்றிய சரவணப் பிள்ளையின் மைத்துனன் உடனே தனது மாமாவுக்கு இது குறித்து தகவலை தெரியப்படுத்தி அவரை உஷார்படுத்தினான்.

நவாப்பின் படைகள் விரைவில் வைத்தீஸ்வரன் கோவிலை முற்றுகையிடப் போகின்றனர் என்பதை அறிந்த சரவணப் பிள்ளை பதறி துடித்தார்.

“கொடியவர்கள், ஆண்டாண்டு காலமாக இங்குள்ள நகைகளை பறித்துச் சென்றால் என் செய்வேன்? முருகா நீயே துணை… உன் பொருளை காக்க என் உயிர்போனாலும் அது பற்றி எனக்கு கவலை இல்லை” என்று கதறியபடி முத்துக்குமார சுவாமியிடம் முறையிட்டார். பின்னர் கோவிலேயே கண்ணயர்ந்துவிட்டார்.

அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முத்துக்குமரன், “அன்பனே கவலை வேண்டாம். வரும் படைத்தளபதிக்கு நாம் சூலை நோயை தருகிறோம்.

அவன் வயிற்று வலியால் துடிப்பான்… என்ன மருந்து உட்கொண்டாலும் அவனுக்கு நோய் நீங்காது. நாளை காலை நீ அவனை சந்தித்து திருச்சாந்துருண்டையுடன் இந்த மருந்தைக் கொடு.

இதை உட்கொண்டவுடன் அவனுக்கு வலி நீங்கிவிடும். பிரதியுபகாரமாக கோவில் நகைகளை காப்பாற்றிக்கொள்” என்று கூறிவிட்டு மறைந்தான்.

திடுக்கிட்டு விழித்த சரவணப்பிள்ளை, தனது தலைமாட்டுக்கு அருகில் ஒரு சிமிழிக்குள் மருந்து இருப்பதைக் கண்டார்.

“முருகா… முத்துக்குமரா… கண்கண்ட தெய்வமே… உன் கருணையே கருணை” என்று முருகனின் கருணையை எண்ணி எண்ணி உருகினார்.

மறுநாள் விடிந்தது, தளபதியை தேடிப் புறப்பட்டார். புள்ளிருக்கு வேளூருக்கு சற்று தொலைவில் ஒரு இடத்தில் படைகள் கூடாரமிட்டு தங்கியிருப்பதை பார்த்தார்.

அங்கு சென்று விசாரித்தபோது, தளபதிக்கு உடல் நலமில்லாத காரணத்தால், மேற்கொண்டு படையை செலுத்தாமல் ஓய்வெடுப்பதாக வீரர்கள் கூறினர்.

அவர்களிடம் “உங்கள் தளபதியின் நோயை தீர்க்கும் மருந்து என்னிடம் உள்ளது. நீங்கள் அனுமதித்தால் அவரை சந்தித்து இதைக் கொடுப்பேன்” என்றார்.

காவலாளிகள் உடனே கூடாரத்தின் உள்ளே சென்று வலியால் வேதனையில் துடித்துக்கொண்டிருந்த தளபதியிடம் விஷயத்தைக் கூற, “உடனே அவரை அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.

உள்ளே வந்த சரவணப் பிள்ளையையும் அவரது சிவப்பழமான தோற்றத்தையும் பார்த்தவுடனே அவனுக்கு அவர் மீது நம்பிக்கையும் மரியாதையும் ஏற்பட்டது.

“நான் பக்கத்து ஊருக்கு செல்லும் வழியில் இங்கே உங்கள் படையினர் முகாமிட்டிருப்பதை பார்த்தேன்.

என்ன ஏது என்று விசாரித்தபோது தாங்கள் உடல்நலமின்றி இங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் விஷயத்தை சொன்னார்கள்.

உங்களுக்கு விருப்பம் என்றால், என்னிடமுள்ள சரவரோக நிவாரணி ஒன்றை தருகிறேன்.

அதை உட்கொண்டால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வயிற்று வலி உடனே அகன்றுவிடும்!” என்றார் சரவணப் பிள்ளை.

‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற நிலையில் இருந்த தளபதிக்கு இவர் கூறியது அந்த ஆண்டவனே கூறியது போலிருந்தது.

“எத்தனையோ வைத்தியர்கள் இதுவரை வைத்தியம் பார்த்துவிட்டார்கள். ஒன்றும் பலனில்லை. நேரம் செல்ல செல்ல வலி தான் அதிகரிக்கிறது.

உங்களைப் பார்த்தால் ஏதோ இனம் புரியாத நம்பிக்கை மனதில் தோன்றுகிறது. நீங்கள் மட்டும் என் நோயை குணப்படுத்திவிட்டால் நீங்கள் கேட்பது எதுவானாலும் தருகிறேன்” என்றான்.

“முதலில் நீங்கள் இம்மருந்தை சாப்பிடுங்கள் தளபதியாரே… பிறகு பேசிக்கொள்ளலாம்” என்றவர், அந்த மருந்தை எடுத்து முருகனை தியானித்து சடாக்ஷர மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்தபடி தேனில் குழைத்து அதனுடன் வைத்தியநாதரின் பிரசாதமான திருச்சாந்துருண்டையும் தந்து உண்ணும்படி கேட்டுக்கொண்டார்.

நவாப்பின் தளபதியும் மருந்தை உட்கொள்ள அடுத்த சில நிமிடங்களில் வயிற்று வலி படிப்படியாக குறைந்து பின்னர் முற்றிலும் போயே போய்விட்டது.

தளபதிக்கு ஒரே மகிழ்ச்சி. “ஐயா… தக்க சமயத்தில் வந்து என் நோயை குணப்படுத்தினீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள். எது கேட்டாலும் தருகிறேன்”

“ஐயா.. நான் உங்களிடம் கேட்கப்போவது ஒன்றுமில்லை… புள்ளிருக்கு வேளூர் கோவிலை கொள்ளையடிக்கும் தங்கள் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தாங்கள் இப்போதே உங்கள் நவாப்பிடம் திரும்பிச் செல்லவேண்டும்”

இதை சற்று எதிர்பாராத அத்தளபதி, “இதென்ன விசித்திரமான் வேண்டுகோளாக இருக்கிறதே?” என்றான்.

சரவணப் பிள்ளை நடந்த அனைத்தையும் கூறினார். உடனே இஸ்லாமியரான அந்த தளபதிக்கு உடலெல்லாம் சிலிர்த்தது.

“என் நோய் நீக்கிய உங்கள் ஆண்டவனை நான் பார்க்கவேண்டும்” என்று தன் விருப்பத்தை தெரிவித்தான். சரவணப் பிள்ளை சற்று தயங்கினார்.

“உங்கள் கோவில் நகைகள் ஒன்றைக் கூட தொடமாட்டேன் இது சத்தியம்” என்று பிள்ளை அவர்களிடம் சத்தியமும் செய்துகொடுத்தான்.

பின்னர் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து உள்ளே நுழையாமல் முத்துக்குமார சுவாமியை முன்மண்டபத்தில் எழுந்தருளச் செய்து கண்குளிர தரிசித்தான்.

மேலும் சூலைநோயை நீக்கிய முத்துக்குமார சுவாமிக்கு தன்னிடம் உள்ள முத்துப்பந்தல், ஆலவட்டம், குடை, பல்லக்கு, கொடி, சாமரம் போன்ற பொருட்களை காணிக்கையாக கொடுத்தான்.

விசேஷ நாட்களில் தீபாராதனை முடிந்தவுடன், தனக்காக மற்றொரு தீபாராதனை செய்யும்படி பல நிபந்தங்களை ஏற்படுத்திவிட்டுச் சென்றான்.

இன்றும் இது வைத்தீஸ்வரன் கோவிலில் வழக்கத்தில் உள்ளது. நேரில் சென்றால் பார்த்து மகிழலாம்.

  • 249
·
Added a post

அவரை குடும்பத்தை சேர்ந்த ஒரு காய்கறியாகும். பயத்தங்காய் என்பது இளம் பச்சை நிறத்தில் பீன்ஸை போலவே இருக்கும். ஆனால் பீன்சை விட மெல்லியதாகவும், நீளமானதாகவும் இருக்கும். உள்ளே தட்டப்பயறை போல் இளம் பயிர்கள் இருக்கும். இதனை ‘காராமணி’ என்றும் கூறுவார்கள்.

பயத்தங்காயில் உள்ள பைட்டோகெமிக்கல் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் இரண்டும் புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டவை. பயத்தங்காயில் நார்ச்சத்து, ஃபோலேட், இரும்புச்சத்து​, அத்தியாவசிய தாதுச்சத்துகள் மற்றும் வைட்டமின்களை கொண்டது. புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த காய் அவசியமான ஒன்றாகும். முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போட நினைப்பவர்களும் அடிக்கடி காராமணியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பயத்தங்காயில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் அதிகம். இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். நீரிழிவு கட்டுக்குள் வரும். இதயம், சிறுநீரகங்கள் உள்பட உடலின் முக்கிய உறுப்புகள் சீராக இயங்க அவசியத் தேவையான பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.

பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்

1. பயத்தங்காய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். இந்தக் காய் பசியைத் தூண்டி நீரைப் பெருக்கும். கபத்தை அகற்றும்.

2. இதைப் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தோ, கறி செய்தோ சாப்பிடலாம்.

3. காராமணியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியது. அடிக்கடி காராமணி சாப்பிட்டால் தொற்று நோய்கள் எளிதில் அண்டாது.

4. காராமணியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்கும். அடிக்கடி காராமணி சாப்பிட்டால் தொற்று நோய்கள் எளிதில் அண்டாது.

5. கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலேட் சத்து காராமணியில் நிறைய உண்டு. ஃபோலேட் சத்து நிறைந்த உணவுகள்தான் பிறக்கும் குழந்தையை நரம்பு மண்டலக் கோளாறுகள் இல்லாமல் காக்கும்.

6. பயத்தங்காயிலுள்ள நார்ச்சத்தானது எடைக்குறைப்புக்கு உதவி, நீரிழிவைக் கட்டுப் படுத்தி, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

7. பயத்தங்காய் வயிறு, கணையம் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் சீரான குடல் இயக்கத்துக்கு உதவி, சிறுநீர் பாதை அடைப்பை சரிசெய்து, சிறுநீர் நோய்களையும் சரியாக்குகிறது.

8. காராமணியில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ்​, இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

9. பயத்தங்காயில் உள்ள லிக்னின் என்னும் பொருள் சில வகையான புற்றுநோய், பக்கவாதம், ஹைப்பர் டென்ஷன் மற்றும் ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட நோய்களில் இருந்து காக்கிறது.

10. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து பயத்தங்காயில் அதிகமுள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் சீக்கிரமாகவும் அடர்த்தியாகவும் வளரும்

  • 251
·
Added article

குஷ்பூ உச்ச நடிகர்களுக்கு இணையா மார்கெட்ல இருக்கும் போதே அறிமுகமானவங்க சிம்ரன்.

குஷ்பூக்கு பின்னால மீனா, ரம்பா, ரோஜா போல நிறைய பேர் இன்டஸ்ட்ரி உள்ள பிரபலமா இருந்தாலும். அந்த பீக் டச் பண்ணது சிம்ரன்தான். அதுக்கு ரொம்ப முக்கிய காரணமே புதியதலைமுறை நடிகர்கள் படங்கள் பிரபலமாகும் சமயம் இவங்க தமிழ் சினிமால அறிமுகம் ஆகறாங்க.

சீனியர் ஹீரோசோடு நடித்த நடிகைகள் இந்த தலைமுறை நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பில்லாமல் போனது. சிம்ரன் படங்களை பார்த்தாலே அதை சொல்லிட முடியும். அறிமுகமான வருடம் நேருக்கு நேர், ஒன்ஸ்மோர், விஐபி, பூச்சூடவானு க்ளாமரஸ் ரோல்.

அடுத்த வருடமே அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள்னு குடும்ப படங்களாவும். அதில் அவங்க ரோல் முக்கியமானதா பார்த்து பண்ணாங்க. அடுத்த வருடமே துள்ளாத மனமும் துள்ளும், வாலி இரு முக்கிய நடிகர்களோட படங்கள்லயும் ஹை பர்ஃபாமன்ஸ் ரோல்ல கலக்குனாங்க.

சிம்ரன் அவங்க கேரியர்ல அறிமுகமான இரண்டு வருடங்கள்ல அவங்க பீக் டச் பண்ண வாலி மூலமா தான் ஜோதிகா கெஸ்ட் ரோல்ல அறிமுகம் ஆகறாங்க. யார்டா இதுனு ஆடியன்ஸ் யாரையும் ஜோ பக்கம் திரும்பி பார்க்க விடாம சிம்ரன் அட்டகாசம் பண்ணிருந்தாங்க.

அதை விட ஆச்சர்யம் அந்த டைம்ல எதிரும் புதிரும், அந்தப்புறம் ரெண்டு படங்கள்லயும் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போனாங்க. இப்படி சிம்ஸ் உச்சத்தில் இருக்கும் இதே காலத்தில் ஜோதிகா அந்த இடத்திற்க்கு வருவாங்கனு வாலி சமயம் யாரும் கற்பனை கூட பண்ணிருக்க மாட்டாங்க.

மாயாவி படத்தில் சத்யன் சொல்லுவாரே நாங்க சிம்ரன் போஸ்டரே மூனு மணி நேரம் பார்ப்போம். நீயெல்லாம் ஓவர் ஆக்டிங்னு. கிட்டதட்ட அதே பெரும்பாலான ஆடியன்ஸ் மனநிலையாவும் இருந்தது. ஆனாலும் அவங்க தேர்ந்தெடுத்த படங்கள்ல ஒரு மேஜிக் இருந்தது. அதை ஜோ சரியா பயன்படுத்தினாங்க.

வாலி வந்த சமயமே பூவெல்லாம் கேட்டு பார் சூர்யாவோடு பண்ணாங்க. அடுத்த வருசமே முகவரி, குஷி, ரிதம், தெனாலி, சிநேகிதியேனு எல்லாமே முக்கியமான படங்கள். நல்ல ரோலும் கிடைச்சது. அதை மிக அழகா பண்ணிருந்தாங்க. ஆனாலும் அந்த ஓவர் ஆக்டிங்கற விசயம் நினைவில் இருந்து கொண்டேதான் இருந்தது.

ஆனா அடுத்த வருடத்தில் வந்த டும் டும் டும், பூவெல்லாம் உன் வாசம், 12பி படங்கள் அவங்க தனித்துவத்தை அடையாளம் காட்டியது. சந்திரமுகிக்கு பின்னால அவங்க பண்ண மொழி, வேட்டையாடு விளையாடு எல்லாமே முக்கியமான படங்கள் தான்.

நம்ம காலத்தில் குஷ்புக்கு பின்னால பீக் வந்தவங்க ரெண்டே பேர்தான். ஜோ & சிம்ஸ். அதுவும் ஒரே காலகட்டம் அதுதான் தனிச்சிறப்பு.

  • 256
·
Added a post

சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

சோம்பு தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சோம்பு தண்ணீர் குடித்தால் வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரைந்து, தொப்பை குறைந்து சரியான உடல் அமைப்பை தரும்.

உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் குடித்தாலே போதும். ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டாமெலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

செரிமானமின்மையால் ஏற்படுகின்ற வயிற்றுவலிக்குச் சோம்புதண்ணீர் உடனடி தீர்வு தரும். தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சோம்பை நீரிலிட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், வயிற்றுவலி நீங்கும்.

சோம்பு தண்ணீர் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற வழிவகுக்கும்.

நாம் அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு சிறிதளவு சோம்பை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றங்கள் நீங்கி, பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த பெருஞ்சீரகம் உதவுகிறது.

கருப்பை சார்ந்த குறைபாடுகள், வயிற்றுப்புண், இருமல், மந்தம், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றிற்கு சோம்பு சிறந்த தீர்வைத் தரும்.

  • 260
·
Added a post

ஒரு பிராமணர் நாள்தோறும் பல வீடுகளுக்குச் சென்று உபாதானம் வாங்கிவருவது வழக்கம். அப்படிப் போகும்போது ஒவ்வொரு வீட்டிலும், “கிருஷ்ணாய நமஹ” என்று சொல்லி நிற்பார். அவர் வந்திருப்பது தெரிந்து வீட்டில் உள்ளவர்கள் அரிசி போடுவார்கள்.

ஒரு நாள் இந்தப் பிராமணர் ஒரு வீட்டுக்குள் சென்று, "கிருஷ்ணாய நமஹ” என்றார். வீட்டில் இருந்தவர்கள் எங்கோ பின்கட்டில் வேலையாக இருந்தார்கள். இந்தப் பிராமணர் வந்திருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டு மூன்று முறை அவர் சொல்லியும் யாரும் வரவில்லை. அங்கே ஒரு வெண்கலக் கிண்டி பளபளவென்று மின்னியது. நன்றாகத் தேய்த்திருந்தார்கள். யாராவது வருகிறார்களா என்று எதிர் நோக்கிக் காத்துநின்ற அந்த ஏழைப் பிராமணர் கண்ணிலே அந்தக் கிண்டி பட்டது; கருத்திலும் பட்டது. தாம் வந்திருப்பதை யாரும் கவனிக்கவில்லையென்பதை அறிந்து அவர் திரும்பிச் செல்ல எண்ணினார். முன்னே இருந்த கிண்டி அவர் ஆசையைத் தூண்டியது. ‘இங்கே ஒருவரும் இல்லையே! இதை யார் பார்க்கப் போகிறார்கள்?' என்று அதை எடுத்துப் பைக்குள் போட்டுக்கொண்டு போய் விட்டார்.

மறுநாள் வழக்கம் போல ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பிச்சை வாங்கிய அவர் இந்த வீட்டுக்கும் வந்தார். வரும் போதே அவர் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. வீட்டுக்குள் நுழைந்தார். முதல் நாள் அங்கிருந்த கிண்டியைத் திருடிய எண்ணம் முன் நின்றது. வழக்கம் போல, “கிருஷ்ணாய நமஹ" என்று சொல்லவேண்டியவர் தம்முடைய மனத்தில் கிண்டி உட்கார்ந்து கொண்டிருந்தமையால், “கிண்டியாய நமஹ” என்று சொல்லிவிட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் அதைக் கேட்டுத் திருட்டைக் கண்டுபிடித்து விட்டார்கள்.

இப்படி ஒரு கதையும், "கிண்டியாய நமஹ என்று வந்து நின்றான்" என்ற பழமொழியும் வழங்கி, வருகின்றன. நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து வரும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

  • 264
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பிறக்கும். பேச்சுகளில் பொறுமை வேண்டும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

ரிஷபம்

எதிலும் திட்டமிட்டு செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பல பணிகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மிதுனம்

சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கான பாராட்டுகள் கிடைக்கும். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கடகம்

சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உருவாகும். வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் காணப்படும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சிம்மம்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த எண்ணம் உண்டாகும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிற மொழி மக்களின் உதவிகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கன்னி

நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கூட்டாளிகள் வழியில் அனுசரித்து செல்லவும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

துலாம்

எதிர்பாராத சில காரியங்கள் நிறைவேறும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபார பயணங்களில் அனுகூலம் ஏற்படும். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

விருச்சிகம்

ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்வாதங்களில் சிந்தித்து செயல்படவும். நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். கடன் செயல்களில் தெளிவுகள் உண்டாகும். தூக்கமின்மை பிரச்சனைகள் குறையும். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

தனுசு

சுப காரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்கால முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்ப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

மகரம்

உணவு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் சார்ந்த வருமான சிந்தனைகள் மேம்படும். அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

கும்பம்

வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். மருத்துவ துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். அரசு செயல்களில் இருந்த தாமதம் விலகும். காப்பீடு துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்கவும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

அணுகுமுறையில் சில மாற்றம் காணப்படும். சொந்த ஊர் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்கள் உண்டாகும். அரசு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 364
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை 9.4.2026.

இன்று இரவு 07.32 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று காலை 07.17 வரை மூலம். பின்னர் பூராடம்.

இன்று மாலை 04.18 வரை பரிகம். பின்னர் சிவம்.

இன்று காலை 06.40 வரை பத்திரை. பின்னர் இரவு 07.32 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று காலை 06.05 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=477&dpx=2&t=1775705315

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 368