·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1290
  • More

யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.

இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments (0)
Login or Join to comment.
  • 60
  • 59
  • 59
  • 60
  • 95
·
Added a post

அநேகருக்கு பித்தம் தலைக்கேறி, உடல் சூட்டினால் ஏற்படும் உபாதைகள் சர்வ சாதாரணம். இவற்றுக்கான சில அற்புதமான, எளிமையான தீர்வுகள் நமது சமையலறையிலேயே இருக்கின்றன. அவை இதோ:

அகத்திக்கீரையின் ஆற்றல்:

அரிசி கழுவிய நீரில் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டால், உடல் சூடு தணிந்து, பித்தம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

இதை நீங்களும் வாரம் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்! இயற்கையான முறையில் ஆரோக்கியம் பெறுவோம்.

  • 122
  • 124
·
Added a post

1. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது. ஆனால், தலைவர் இரண்டு இடங்களில் போட்டியிடலாம்.

2. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது.

ஆனால் ஒரு அரசியல்வாதி சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம்.

3. ஒரு குடிமகன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ, ஒரு வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும்.

ஆனால், ஒரு அரசியல்வாதி பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம்.

4. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

ஆனால் ஒரு அரசியல்வாதி படிப்பறிவில்லாதவராகவும், மற்றும் 90 வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு கட்டளையிடலாம்.

5.ஒரு அரசு ஊழியர் 30 முதல் 35 ஆண்டுகள் சேவைக்குப் பிறகும் ஓய்வூதியம் பெற நிபந்தனைகள் உண்டு.

ஆனால் ஒரு எம் எல் ஏ, எம்பிக்கு எந்த நிபந்தனையும், இன்றி வாழ் நாள் முழுதும் ஓய்வூதியம் கிடைக்கும்.

- திரு. டி.கே. ஸ்ரீவாஸ்தவா,தலைமை அரசு வழக்கறிஞர், பம்பாய் உயர் நீதிமன்றம், பம்பாய்.

----------------------------------------------------------

குடிமகனுக்கு ஒரு நீதி, அரசியல்வாதிக்கு ஒரு நீதி என்று இருக்கும் தற்போதைய சட்டங்களை மாற்றி அமைக்க தேர்தல் சீர்திருத்த மசோதா ஒன்றை எந்தக் கட்சியாவது நாடாளுமன்றத்தில் கொண்டு வருமா?

மற்ற எல்லாவற்றையும் விடுங்கள்.

சட்ட மன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் விருப்பம் தெரிவிக்கும் வேட்பாளர்கள் எழுத்து மற்றும் நேர்முகம் என்று இரண்டு கட்டங்கள் கொண்ட ஒரு தகுதித் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்கிற ஒரே ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவார்களா?

அப்படி ஒரு மசோதாவை முதலில் சிந்திக்கக்கூட மாட்டார்கள். அப்படியே கொண்டுவந்தாலும் அந்த மசோதாவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டுகூட விழாது. ஏன் என்கிற காரணத்தைச் சொல்ல அவசியமில்லை.

  • 126
·
Added a post

குடல்_வற்றல்...ஆட்டுக்குடல்..

என்றும் இன்னும் பலபெயர்களில் அழைக்கப்படும் இத்திண்பண்டம் 1980களில் தமிழகம் முழுதும் பரவியது.இன்றுவரை இதன் சுவை யாவர்க்கும் இனியதே.இதனை உண்பதால் உடல்கேடோ..

நோயோ வந்ததாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.ஆனால் இது ஏனோ தமிழ்நாடு கேரளா ஆந்திரா வைத் தாண்டவே இல்லை..பாழ்படுத்தும் பானிபூரி பலநூறு மைல்கள் கடந்து இங்கு காலூன்றி உள்ளது. பெரும்தொழில்வாய்ப்பை உண்டாக்கித் தந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தொழில்முனைவர்களில் யாரோ ஒருவர் இத்திண்பண்டத்தின்மீது சற்றே_கவனம் செலுத்தினால் தரமேம்பாடும்,

வணிகநோக்கிலான வடிவ மேம்பாடும், உற்பத்தியில் தொழில்நுட்ப மேம்பாடும், ஏற்றுமதி தரத்திலான குழந்தைகளைக்கவரும் வண்ண வடிவமைப்போடு கூடிய பொட்டல மேம்பாடும் பெற்று உலகளாவிய கவனம் பெறும்.

மற்றப்பொருட்களைவிட உணவுப்பொருட்கள் உலக அளவில் வணிகவாய்ப்பை உடையன.உலகநாடுகளுக்கு

இந்திய உணவுகளின் மீது நம்பிக்கையும் மரியாதையும் உண்டு. அதிலும் தமிழகத்தின் உணவுகளுக்குப் பெரும்மதிப்பே உண்டு..

லேஸ் ,குர்குரே போன்ற நொறுக்குத் தீனிவகைகள் குழந்தைகளை ஆட்டிப்படைக்கின்ற விதத்தை நாமறிவோம்.

ஆட்டுக்குடல் வற்றலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக்கூடியது.தமிழகத்தின் சிறு குறு தொழில் முனைவோர்கள் யாராவது மாநில அளவிலாவது முயற்சிசெய்யலாமே...

  • 127
·
Added a post

இரவு தூங்கும் முன்பு இத ஒரு டீஸ்பூன் சாப்பிடுங்க....

ஆப்பிள் சீடர் வினிகரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கத்தை நம்மில் பலர் இன்று பின் பற்றி வருகின்றார்கள்.

ஆனால் இது அமிலத்தன்மை வாய்ந்தது என்பதால் வெறும் வயிற்றில் குடிப்பது அவ்வளவு நல்லதல்ல.

ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடித்தால் அது பல நன்மைகளை வழங்கும்.

குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடிப்பதால் எடை குறையும் அதிசயம் மிக வேகமாக நடக்கும்.

எடையைக் குறைக்க எப்படி உதவும்?

நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால் ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவி புரியும்.

உடல் கொழுப்பைக் குறைக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வினிகரில் உள்ள அசிடிக் அமிலம் உடலில் கொழுப்பு தேங்குவதை குறைக்கும், பசியை அடக்கும், செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் கொழுப்பு எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கும்.

ஆனால் எக்காரணம் கொண்டும் ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே குடிக்கக்கூடாது.

இல்லாவிட்டால் அது குமட்டலுக்கு வழிவகுப்பதுடன், பற்களின் எனாமலை அரித்துவிடும்.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகளும் எடையை குறைக்க விரும்பினால் மருத்துவ ஆலோசனையுடன் அச்சமின்றி ஆப்பிள் சீடர் வினிகரை இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் எடுத்து கொள்ளலாம்.

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் ஆப்பிள் சீடர் வினிகரை தொடர்ந்து உட்கொள்வது மிகவும் நல்லது.

இது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வது இன்சுனில் உணர்திறனை அதிகரிப்பதில் நன்மை பயக்கும்.

குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகரை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் குடிப்பது அதிக நன்மை பயக்கும்.

நல்ல தூக்கம் கிடைக்கும் :

தூக்கமின்மை பிரச்சனையானது உடல் பருமன் மற்றும் எரிச்சல் போன்வற்றிற்கு வழிவகுக்கும். ஆனால் இரவு தூங்கும் முன் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடித்தால், இரவு நேரத்தில் 7-8 மணிநேரம் நல்ல ஆழமான தூக்கத்தைப் பெறலாம்.

எனவே இனி தூங்கும் முன்பு ஆப்பிள் சீடர் வினிகரை பருகுங்கள்.

  • 145
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குழந்தைகள் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். கடுமையான முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். பத்திரிகை துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அண்டை அயலார் ஆதரவுடன் செயல்படுவார்கள். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

ரிஷபம்

அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பண விஷயத்தில் சிக்கனம் வேண்டும். பொன் பொருள் சேர்க்கை சார்ந்த எண்ணம் மேம்படும். வாக்கு சாமர்த்தியங்களால் நினைத்ததை முடிப்பீர்கள். வெளியூர் பொருள்களில் கவனம் வேண்டும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிதுனம்

மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். எதிர்பாராத சில மாற்றம் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். பூர்விக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். நேர்மறை சிந்தனையுடன் செயல்பட வேண்டும். மனதளவில் இருந்து வந்த இறுக்கங்கள் குறையும். கால்நடை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கடகம்

பயணம் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தனவரவுக்கு ஏற்ப விரயங்களும் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். கடன் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். புதிய வீடு மற்றும் நிலம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

சிம்மம்

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காண முயற்சிகள் கைகூடும். இழுபறியாக இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சூழ்நிலை அறிந்து பேசுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

கன்னி

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் கைக்கூடி வரும். புது விதமான ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். பணிகளில் இருந்து வந்த மந்த தன்மை படிப்படியாக குறையும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். முயற்சி கைகூடும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

துலாம்

உத்தியோக பணிகளில் உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். புனித தலம் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். குழந்தைகளின் உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

விருச்சிகம்

எண்ணிய சில பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். அதிகாரிகள் இடத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். நண்பர்களுடன் சில நெருடல்கள் தோன்றி மறையும். மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நிதானத்தை கடைபிடிக்கவும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

தனுசு

குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பயணங்களால் ஆதாயமும் அறிமுகமும் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலையாட்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மகரம்

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். அசதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

கும்பம்

கற்பனை கலந்த உணர்வுகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குண இயல்புகளில் மாற்றங்கள் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மீனம்

விவசாய பணிகளில் நுட்பமான ஆலோசனைகள் கிடைக்கும். உயர் கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய துறை சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். மதிப்புகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

  • 149
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 9 ஆம் தேதி புதன்கிழமை 22.4.2026

இன்று காலை 06.24 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று அதிகாலை 04.22 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.

இன்று பிற்பகல் 01.32 வரை அதிகண்டம் . பின்னர் சுகர்மம்.

இன்று காலை 06.24 வரை பாலவம். பின்னர் மாலை 04.01 வரை கௌலவம். பிறகு தைத்தூலம் .

இன்று அதிகாலை 04.22 வரை சித்தயோகம். பின்னர் அதிகாலை 05.59 வரை மரணயோகம். பிறகு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=488&dpx=2&t=1776820660

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 152

Good Morning....

  • 150
·
Added article

சமீபத்தில் நடிகை ராதிகா, 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவைச் சந்தித்து நலம் விசாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் "தாய்க்கிழவி படம் பார்த்தீர்களா?" என்று சிரித்துக்கொண்டே கேட்கிறார். ஆனால், அந்த வீடியோவில் பாரதிராஜாவை அந்த நிலையில் பார்ப்பதற்கே மிகவும் மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது.

​வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனை உடையில் மிகவும் தளர்ந்த நிலையில் இருக்கும் ஒருவரை, அவர் தனிப்பட்ட முறையில் ஓய்வெடுக்கும் போது இப்படி வீடியோ எடுத்து வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே தன் கட்டளைக்குக் கீழ் வைத்திருந்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவரது முதிர்ச்சியான காலத்தில் நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா?

​நலம் விசாரிக்கச் செல்வது நல்ல விஷயம் தான். ஆனால், அதை ஏன் கேமரா வைத்து ரெக்கார்ட் செய்து ஊருக்கெல்லாம் காட்ட வேண்டும்?

பிரபலங்கள் தங்களின் தனிப்பட்ட பப்ளிசிட்டிக்காகவோ அல்லது சோஷியல் மீடியா லைக்குகளுக்காகவோ ஒருவரின் முதுமையையும், இயலாமையையும் இப்படிப் பொதுவெளியில் காட்சிப்படுத்துவது அப்பட்டமான உரிமை மீறல் இல்லையா? ஒரு நோயாளியின் தனிப்பட்ட சுதந்திரம் (Privacy) இங்கு எங்கே போனது?

  • 218
·
Added a post

தந்தையின் இறுதிச் சடங்கிற்கு நான் வந்தேன்.

வந்த விதமே வேறுபட்டது—

சொகுசான எஸ்யூவி கார், கருப்பு சூட், விலையுயர்ந்த கண்ணாடி…

நான் வெற்றி பெற்ற மகன்.

இந்தக் குடும்பத்தின் தூண் நான் தான் என்று நம்பியவனாக வந்தேன்.

15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தேன்.

பணம் குறையவில்லை.

மாதம் தவறாமல் 400 டாலர்கள் அனுப்பினேன்.

“தந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று நிம்மதியாக இருந்தேன்.

நான் என் கடமையைச் செய்தேன் என்று நம்பினேன்.

அடக்கம் முடிந்தது.

வீட்டுக்குள் நுழைந்தேன்.

அங்கு இருந்த அமைதி—

அது வெறும் அமைதி இல்லை…

தந்தை இல்லாத வெற்றிடம்.

ஆனால் நான் அதை உணராமல்,

என் பழக்கப்படி குறைகளைத் தேட ஆரம்பித்தேன்.

“வீடு ஏன் இப்படி சீரழிந்திருக்கிறது?”

“சுவர் ஏன் பூசவில்லை?”

“தந்தை ஏன் இவ்வளவு ஒல்லியாகிவிட்டார்?”

“நல்லா கவனிக்கலையா?”

என் தம்பி…

எதுவும் சொல்லவில்லை.

அவன் சமையலறையில் அமர்ந்திருந்தான்.

பழைய டி-ஷர்ட்…

கண்களின் கீழ் கருவளையங்கள்…

கைகளில் காயங்கள்…

அவன் சோர்வாக இல்லை—

அவன் காலியாகிவிட்டான்.

நான் “தீர்வு” சொல்ல ஆரம்பித்தேன்:

“இந்த வீட்டை விற்றுவிடலாம்.

நாம் பங்கிட்டு கொள்வோம்.

நீ இங்கே இருந்ததால், உனக்கு அதிக பங்கு.”

அவன் என்னை நன்றி சொல்லுவான் என்று நினைத்தேன்.

ஆனால்…

அவன் மெதுவாக எழுந்து,

ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தை எடுத்தான்.

என் முன்னால் வைத்தான்.

“படி…” என்றான்.

அது ஒரு நாட்குறிப்பு.

அக்டோபர் 2:

தந்தை இரவு முழுக்க தூங்கவில்லை.

மூச்சு விட கஷ்டப்பட்டார்.

நான் அவரை நிமிர்த்தி வைத்தேன்.

மூன்று முறை அவர் என்னைத் தழுவிக் கொண்டு அழுதார்.

நவம்பர் 9:

மருந்துகளுக்குப் பணம் போதவில்லை.

என் மோட்டார் சைக்கிளை விற்றேன்.

டிசம்பர் 25:

தந்தை பேசவே இல்லை.

“மூத்த மகன் எங்கே?” என்று மெதுவாக கேட்டார்.

உன் பழைய குரல் பதிவை ஒலிக்க வைத்தேன்.

அதை கேட்டு சிரிக்க முயன்றார்.

ஜனவரி 10:

அவரை தினமும் தூக்குவதால்

என் முதுகு வலிக்கிறது.

ஆனா அவரை தனியாக விட முடியவில்லை.

பிப்ரவரி 3:

இன்று அதிகாலை 3 மணி…

அவர் பயந்து எழுந்தார்.

என் கையை பிடித்து விட்டார்.

“நான் போயிட்டா நீ தனியா இருக்க முடியுமா?” என்றார்…

என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

அதற்கு மேல் நான் படிக்க முடியவில்லை.

என் கண்கள் கலங்கின.

என் குரல் உடைந்தது.

தம்பி என்னைப் பார்த்தான்.

அவன் குரல் மெதுவாக இருந்தது—ஆனா குத்தியது.

“நீ 400 டாலர்கள் அனுப்பினாய்… நன்றி.

ஆனா நீ தினமும் நிம்மதியா தூங்கினாய்.

உனக்கு வார இறுதி இருந்தது.

உனக்கு வாழ்க்கை இருந்தது.

நான் 4 வருடமா ஒரு முழு இரவும் தூங்கல.

என் வேலை போச்சு.

என் வாழ்க்கை நின்றுபோச்சு.

தந்தை தனியா இருக்கக் கூடாது…

அவருக்கு பயமா இருந்த இரவுகளில்

யாராவது கையை பிடிக்கணும்…

அதுக்காக நான் இருந்தேன்.

பணம்…

அவரை தூக்காது.

அவரை ஆறுதல் சொல்லாது.

அவரோட பயத்தை எடுத்துக்கொள்ளாது.”

அவன் சிறிது நிமிடம் அமைதியாக இருந்தான்.

பிறகு சொன்னான்:

“வீட்டை நீயே வைத்துக்கொள்.

நான் என் பங்கை ஏற்கனவே கொடுத்துட்டேன்.

என் வாழ்க்கையையே கொடுத்துட்டேன்.”

அவன் தந்தை படுத்திருந்த அறைக்குச் சென்றான்.

பல வருடங்களுக்குப் பிறகு—

அவன் முதல் முறையாக ஆழ்ந்த தூக்கத்தில் விழுந்தான்.

நான் மட்டும் நின்றேன்.

என் கைக்கடிகாரம்…

என் காலணிகள்…

என் வெற்றி…

எல்லாம் ஒன்றும் இல்லாதது போல தோன்றியது.

நான் பணம் அனுப்பினவன்.

அவன் தந்தையுடன் இருந்தவன்.

நான் மருந்துக்கு பணம் கொடுத்தேன்.

அவன் மருந்தை தந்தையின் வாயில் வைத்தான்.

நான் சவப்பெட்டிக்கு பணம் கொடுத்தேன்.

அவன் தந்தையின் கையை

இறுதி மூச்சு வரை பிடித்திருந்தான்.

அடுத்த நாள்…

வீட்டின் முழு உரிமையையும்

அவனுக்கே மாற்றி விட்டேன்.

அது நியாயம் போல தோன்றியது.

ஆனா உண்மையில்—

அவன் செய்ததை நான் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது.

உண்மை:

தொலைவில் இருக்கும் மகன் — பணம் அனுப்புகிறான்.

அருகில் இருக்கும் மகன் — வாழ்க்கையை கொடுக்கிறான்.

இறுதி வரி:

நீதி என்பது சமமாகப் பகிர்வது அல்ல…

யார் அமைதியாக சுமை தூக்கினார்கள் என்பதை உணர்வதே உண்மையான நீதி.

  • 227
·
Added a post

முன்னோர்கள் சொன்ன உணவே மருந்து :

வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்.

பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம்.

இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது. (Raw and Uncooked). தேர்த்திருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்துவருவார்கள். வேர்க்க, விறுவிறுக்க தேர் இழுத்துவரும் பக்தர்களுக்காக பானாகம் வீட்டிற்கு வீடு தயாரித்துக் கொடுப்பார்கள். தாகமும், களைப்பும் தீரும் அளவுக்கு வயிறு நிறைய வாங்கி, வாங்கி பருகுவார்கள்.

இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானாகம் உள்ளே சென்றதும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி புதுத்தெம்புடன் தேரை இழுத்து கோவிலுக்கு கொண்டு சேர்ப்பார்கள். நீங்கள் இதுவரை பானகம் குடித்திராத நபராக இருந்தால் ஒருமுறை தயாரித்து சுவைத்துப்பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துவிடும்.

இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானத்தின் சுவை உங்களை மீண்டும் மீண்டும் பருகத்தூண்டும்.

தேவையான பொருட்கள்:

புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை

வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன்

சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன்

மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

செய்முறை:

வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும். மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும்.

கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்..

  • 221
·
Added a post

உங்கள் வாழ்க்கைத் துணையின் மதிப்பை உணர்வதில் ஒளிந்திருக்கும் உளவியல் உண்மை.

வாழ்க்கையில் நாம் எதையெல்லாம் இழக்கிறோம், எதையெல்லாம் தக்கவைத்துக் கொள்கிறோம் என்பதைத் தீர்மானிப்பது நமது ஞாபகசக்தி அல்ல.

அந்தப் பொருளின் மீது நாம் வைத்திருக்கும் 'மதிப்பு' தான். ஒரு சிறு பொருளாக இருந்தாலும் சரி, உணர்வுப்பூர்வமான உறவாக இருந்தாலும் சரி, நாம் எதை உயர்வாகக் கருதுகிறோமோ (Importance in life) அதை ஒருபோதும் கவனக்குறைவாகக் கையாளுவதில்லை.

இதை ஒரு தொழிலதிபரின் வாழ்வியலோடு விளக்குகிறது இந்தக் கதை.

ஒரு ஊரில் மிகப் பெரிய தொழிலதிபர் இருந்தார். அவருக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது; அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்துவிடுவார். பேனா தேவைப்படும் போதெல்லாம் புது பேனா வாங்குவார்.

இந்த பழக்கத்தால், விலை மலிவான பேனாக்கள் பலவற்றை வாங்கி வைத்துக்கொண்டு, ஒன்று தொலைந்துபோகும் போதெல்லாம் இன்னொன்றை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

என்னதான் இருந்தாலும், அவருடைய இந்தப் பழக்கம் அவருக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது. ஒருநாள் தனது நெருங்கிய நண்பரிடம் இந்த விஷயத்தைச் சொல்லிப் புலம்பினார்.

உடனே அவருடைய நண்பர் அவரை ஒரு கடைக்குக் கூட்டிச்சென்று, அங்கிருந்த 22 கேரட் தங்கத்தால் ஆன விலையுயர்ந்த பேனாவை வாங்கச் சொன்னார்.

"சரி, நண்பன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்" என்று கருதி, அவரும் அந்தப் பேனாவை வாங்கிக்கொண்டார். ஆறு மாதங்கள் கழித்து அந்த நண்பரை மீண்டும் சந்தித்தபோது, நண்பர் அந்தப் பேனா மறதியைப் பற்றி விசாரித்தார்.

அப்போது தொழிலதிபர், தன் பாக்கெட்டில் பத்திரமாக இருந்த தங்கப் பேனாவை எடுத்துக் காட்டினார். இப்போதெல்லாம் பேனாவை மறந்து எங்கேயும் வைப்பதில்லை என்றும், தனக்கு இருந்தப் பிரச்னையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் கூறினார்.

இதையேதான் நம்முடைய வாழ்க்கையிலும் நாம் செய்துகொண்டிருக்கிறோம். ஒரு பொருள் நம்மிடம் தங்குவதில்லை என்றால், அதற்கான சரியான மதிப்பை நாம் அதற்கு கொடுப்பதில்லை என்றுதான் அர்த்தம்.

நாம் எதை மதிப்பாக உணர்கிறோமோ, அதை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்வோம்.

நம் உடலின் மதிப்பை உணர்ந்தால், நாம் உட்கொள்ளும் உணவை ஆரோக்கியமானதாகத் தேர்ந்தெடுப்போம்.

பணத்தின் மதிப்பை உணர்ந்தால், அவசியமான செலவுகளை மட்டுமே செய்வோம்.

உறவுகளின் மதிப்பை உணர்ந்தால், அவை முறிந்துபோகும் அளவிற்கான எந்தச் செயலையும் செய்ய மாட்டோம்.

வாழ்க்கைதுணையின் மதிப்பை உணர்ந்தால், அவர்கள் மனம் கஷ்டப்படும்படியான காரியங்களைத் தவிர்க்க முயல்வோம்.

நீங்களும் உங்களிடம் பத்திரமாக இருக்கும் பொருளையும், இழந்த பொருளையும் ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள். எதற்கு மதிப்பு கொடுத்தீர்கள், எதை உதாசீனப்படுத்தினீர்கள் என்பது உங்களுக்கே புரியும்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.

எந்த நாளும் நல்லநாள்தான்.

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள பேரியற்கை அருள் புரியட்டும்…!

  • 228
·
Added a post

“பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு குயவன் ஜென் குருவிடம் சொன்னான்.

“பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.

“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்”

இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.

துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.

“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.

“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?” என்று ஆத்திரப்பட்டான் குயவன்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன்.” என்று குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

“நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?”

“நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்? எந்த தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?” என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

  • 230
·
Added a post

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். வியாபார சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர். அலுவலகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

மிதுனம்: இங்கிதமாகப் பேசுவது நல்லது. தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக் கூடும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.

சிம்மம்: குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பர். பிள்ளைகளால் பெருமையடைவீர். உடன்பிறந்தோரின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.

கன்னி: புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பணவரவு உண்டு. தம்பதிக்குள் நெருக்கம் கூடும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்: நீண்ட நாள் கனவுகள் நனவாகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். தந்தையின் உடல்நிலை சீராகும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

விருச்சிகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல் இருக்கும். குடும்பத்தினரின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுக்காதீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு: அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். புது பொறுப்பு, பதவி தேடி வரும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

மகரம்: குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிட்டும். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். வியாபார நுணுக்கங்களை கற்று கொள்வீர்.

கும்பம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். மாணவர்களின் கனவு நினைவாகும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த பகை நீங்கும். புதிய வாகனம் வாங்குவீர். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட பணிகள் முடியும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை ஏற்றுக் கொள்வீர்.

  • 239
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 21.4.2026

இன்று காலை 08.47 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று காலை 06.15 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.

இன்று மாலை 04.43 வரை சோபனம் . பின்னர் அதிகண்டம்.

இன்று காலை 08.47 வரை பத்திரை. பின்னர் இரவு 07.35 வரை பவம். பிறகு பாலவம் .

இன்று காலை 06.15 வரை அமிர்த யோ. பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 238

Good Morning....

  • 233
·
Added article

யார் இந்த சரளாம்மா?

எந்த வி.ஐ.பி-யின் பிறந்தநாள் வந்தாலும், தொலைக்காட்சியில், ‘நூறாண்டு காலம் வாழ்க... நோய் நொடியில்லாமல் வளர்க... ஊராண்ட மன்னர் புகழ்போலே... உலகாண்ட புலவர் தமிழ்போலே...’ என்று பின்னணியில் ஒலிக்கிற மூவர் குரல்களில் ஒரு குரல் இவருடையது. ‘பேசும் தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பாடிய சரளா இப்போது எப்படியிருக்கிறார்?

‘`பக்கவாதம் வந்து ஒரு வரி பாடறதுக்கே இன்னிக்குப் படாதபாடு பட்டுக்கிட்டிருக்குற நான், 50 வருஷத்துக்கு முன்னாடி வாழ்வாங்கு வாழ்ந்தவம்மா. பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர், கண்ணதாசன், வாலின்னு என் குரலைப் பாராட்டாத வி.ஐ.பி-க்களே இல்லை. அந்த அளவுக்குக் குரலால் கொடிகட்டிப் பறந்தவ நான்’’ என்கிற சரளாம்மாவின் குரலில் இப்போதும் இருக்கிறது கம்பீரம்.

‘`மயிலாப்பூரில் பிறந்தேன். இன்னிக்கு ஊருக்கு வெளியே இந்தச் சின்ன கூண்டுக்குள்ள இருக்கேன். சின்ன வயசுல சினிமாப் பாட்டுன்னா உயிரு. அம்மா பாடகி, அப்பா பாடகர் போன்ற பின்னணியெல்லாம் எனக்குக் கிடையாது. பாட்டுச் சொல்லிக்கொடுக்கக் குருவும் கிடையாது. சினிமா பாடல்களைக் கேட்டு நானா பாடக் கத்துக்கிட்டேன். அம்மாவுக்கு நான் பாட்டுப் பாடறது ரொம்பப் பிடிக்கும். அவங்க சப்போர்ட் இருந்ததால, எம்.ஆர்.ராதா நாடகம், தங்கவேலு நாடகத்திலெல்லாம் பாட்டுப் பாட ஆரம்பிச்சேன்.

ஒரு தடவை மயிலாப்பூர் ஆர்.ஆர் சபாவில் நடந்த நாடகத்தில் ‘பஞ்சவர்ணக்கிளி’ படத்தில் வருகிற ‘சத்தியம் சிவம் சுந்தரம்' பாடலைப் பாடிக்கிட்டிருந்தேன். அப்போ என் பாட்டைக் கேட்ட இசையமைப்பாளர் ராமமூர்த்தி (விஸ்வநாதன்), ‘உச்ச ஸ்தாயியிலும் எவ்வளவு இனிமையா இருக்கு இந்தப் பொண்ணோட குரல்’னு சொல்லி ‘தேன்மழை’ படத்துல பின்னணிப் பாடகியா அறிமுகப்படுத்தினார். அதுக்கப்புறம் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் ‘வருவாயா வேல்முருகா’, சீர்காழி கோவிந்தராஜனுடன் ‘சிந்தனையில் மேடைகட்டி’, இளையராஜா வுடன் ‘உனக்கெனத்தானே இந்நேரமா’... இப்படி 20 பாடல்கள்தான் சினிமாவில் பாடியிருக்கேன். ஆனா, மேடைக் கச்சேரிகளில் நான் பாடின பாடல்களை எண்ணவே முடியாது.

85 வயசாயிடுச்சு. நான்கு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மேடைக் கச்சேரி பண்ணிக்கிட்டுதான் இருந்தேன். திடீர்னு வந்த பக்கவாதம் பாட முடியாதபடிக்கு என் குரலை எடுத்துட்டுப் போயிடுச்சு. எவ்வளவோ மேடு பள்ளங்கள் பார்த்துட்டேன். இஸ்லாமியப் பாடல்கள் பாடறதுல ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு பெயர் வாங்கினது ஒரு காலம். பாட முடியாம முடங்கிக் கிடக்குறது ஒரு காலம்’’ என்கிறவர் பழைய நினைவுகளில் சில நொடிகள் மூழ்குகிறார்.

தன்னுடைய 13-வது வயதில் பாட ஆரம்பித்தவர் தொடர்ந்து 60 வருடங்கள் பாடியிருக்கிறார்.

  • 269
·
Added article

ரஜினிக்கு மனைவியாகவும் மன்னன் படத்தில் நடித்திருந்தார். இவர் அறிமுகம் ஆனது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் தான்.

விதி சில நேரங்களில் எவ்வளவு அழகாகத் தன் விளையாட்டைத் தொடங்குகிறது என்பதற்கு உதாரணமாக தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். எதிர்பாராமல் நடக்கும் ஒரு சிறு தற்செயல் நிகழ்வு, ஒருவரின் வாழ்க்கைப் பாதையையே எப்படி மாற்றியமைக்கிறது என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா, கார்த்திக், ராதா, ராதிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில் அவர் அறிமுகம் செய்த முன்னணி நடிகை ஒருவர் தான் விஜயசாந்தி. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், சோலோ ஹீரோயினாக பல வெற்றிப்படங்களையும் போலீஸ் கேரக்டரிலும் நடித்து அசத்தியுள்ளார்.

குறிப்பாக ரஜினிக்கு மனைவியாகவும் மன்னன் படத்தில் நடித்திருந்தார்.

இவர் அறிமுகம் ஆனது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் தான். இயக்குநர் பாரதிராஜா அவர்கள் ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் பஞ்சர் ஆனது. அதைச் சரிசெய்ய டிரைவர் குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும் எனக் கூறியுள்ளார். இதனால் "வெயிலில் நிற்பதை விட, அருகில் இருக்கும் இந்த ஸ்டூடியோவில் போய் அமருங்கள் சார்" என்று டிரைவர் சொல்ல, பாரதிராஜாவும் சம்மதித்து உள்ளே சென்றார்.

அந்த ஸ்டூடியோவில் சும்மா அமர்ந்திருக்கப் பிடிக்காமல், அங்கு இருந்த புகைப்படங்களை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே இருந்த ஒரு பெண்ணின் புகைப்படம் அவர் கண்களில் பட்டது. அந்தப் பெண் தான் பின்னாளில் புகழ்பெற்ற அந்த நடிகை. "யார் இந்தப் பெண்? இவரை உடனே பார்க்க வேண்டுமே!" என்று பாரதிராஜா ஆர்வம் காட்டினார். உடனடியாக அந்தப் பெண்ணின் தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இயக்குநர் பாரதிராஜா ஒரு புது முகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார், உங்கள் மகளின் புகைப்படம் அவருக்குப் பிடித்திருக்கிறது" என்ற செய்தி கேட்டு அந்தத் தந்தை தனது மகளை அழைத்துக் கொண்டு பாரதிராஜாவைச் சந்திக்கச் சென்றார். சந்திப்பு முடிந்த கையோடு, பாரதிராஜா அவருக்கு ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தச் சொன்னார். புகைப்படங்களில் அந்தப் பெண் மிக அழகாகவும், கேரக்டருக்கு பொருத்தமாகவும் இருந்தார். பாரதிராஜாவுக்குப் பிடித்துப் போனது. "ஓகே பண்ணிடலாம்!" என்று அவர் பச்சைக்கொடி காட்டிய அடுத்த சில நிமிடங்களிலேயே எல்லாம் மளமளவென நடந்தன.

மேக்கப், காஸ்டியூம் என அனைத்தும் மின்னல் வேகத்தில் முடிந்து, அந்தப் பெண் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். கார் பஞ்சர் ஆனது ஒரு தற்செயலான விஷயம் என்றாலும், அது ஒரு மாபெரும் கலைப்பயணத்தின் தொடக்கமாக அமைந்தது தான் விதியின் சுவாரஸ்யம். பின்னாளில் விஜயசாந்தி அரசியலிலும் அடியெடுத்து வைத்து அசத்திய நிலையில், தற்போது சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

  • 266
·
Added a post

புதுச்சேரியில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல் நிலை பள்ளி வாசலில் பெரிய கத்தரிக்கோல், தேங்காய் எண்ணெயுடன் தலைமை ஆசிரியர் நின்று கொண்டிருக்கின்றார்.

பள்ளி மாணவ-மாணவியர் மிகுந்த உற்சாகத்தோடு பள்ளிக்குள் செல்கையில், தலை கலைந்து இருக்கும் மாணவ மாணவியரை மட்டும் தனியே அழைத்து… தன்னுடைய கையில் இருக்கும் கத்திரிக்கோலால் முன்பகுதியில் வளர்ந்திருக்கும் முடிகளை கட் செய்து, தன் கையில் வைத்திருந்த தேங்காயெண்ணை பாட்டிலில் உள்ள தேங்காய் எண்ணெய் மாணவரின் கையில் ஊற்றி தலையில் தேய்க்கச்சொல்லி தன் கையாலேயே சீப்பால் தலையை வாரி விட்டு அனுப்புகின்ற இந்த நற்செயல் நமக்கும் நிச்சயம் பிரம்மிப்பூட்டும் விதத்தில் அமைகின்றது.

பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் அறிவுரை சொல்லியும், கேட்காததால் இந்த புதிய முயற்சியை கையாண்டு இருக்கும் இந்த ஆசிரியரின் முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியதே.

அன்பு* பண்பு *மாண்பு* எனும் வரம்பு மீறா பயிற்சிதனை பிள்ளைகளுக்கு நாம் அளிக்க .. சிந்தித்து செயல்பட்டு கரும்பு* இனிப்பு* பூரிப்பு* நிறைந்த வாழ்வுதனை அவர்கள் பெற்றுவிட்டால் இனிது இனிது வாழ்க்கை என்றும் இனிதன்றோ!

  • 269