யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சில தினங்களாகவே மிருணாள் தாகூர் குறித்த காதல் வதந்திகள் சமூக வலைதளத்தில் உலவி வருகின்றன. கடந்த வாரம் தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தகவல்கள் பரவின. அதற்கு “இலவச விளம்பரம்” என்று கிண்டலாக பதிலளித்திருந்தார் மிருணாள் தாகூர்.
அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை காதலித்து வருகிறார் மிருணாள் தாகூர் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “அவர்கள் பேசுவது எனக்கு சிரிப்புதான் வருகிறது. வதந்திகள் எப்போதுமே இலவச விளம்பரம்தான். அது எனக்கு பிடித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் மிருணாள் தாகூர்.
தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மிருணாள் தாகூர். முக்கியமாக, அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியில் உருவாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிருணாள் தாகூர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தித்வா ( ditwah ) சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்தவகையில், இன்று திங்கட்கிழமை (01) காலை 9:00 மணி வரை 355 பேர் உயிரிழந்துள்ளதோடு, 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 59,266 குடும்பங்களைச் சேர்ந்த 209,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி (88) , நுவரெலியா (75) , பதுளை (71), குருநாகலை (37) , மாத்தளை (23) மற்றும் கேகாலை (12) ஆகிய பகுதிகளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உண்மை சரித்திர சம்பவம்.
அலாவுதீன் கில்ஜி எனும் அயோக்கியனின் காமப்பசிக்கு இரையாவதைவிட, தீயில் குளிப்பது “மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே” என்று தீயில் குளித்தாள் பேரழகி பத்மினி; அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்த சரித்திர சம்பவம்.....
ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள சித்தூரை பீமசிங்கன் என்பவன் ஆண்டு வந்தான். அவளுடைய மனைவியின் பெயர் பத்மினி. தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். அவளுடைய அழகு பற்றிய செய்தி வட இந்தியா முழுதும் பரவியிருந்தது.
அலாவுதீன் கில்ஜிக்கு, எல்லா முஸ்லீம் மன்னர்களுக்கும் இருந்தது போல பல மனைவியர் இருந்தனர். அவன், சித்தூர் ராணி பத்மினியையும் அபகரிக்க விரும்பினான். ஆகவே பெரும்படையுடன் புறப்பட்டு ராஜஸ்தானுக்கு வந்து சித்தூரை முற்றுகையிட்டான். சித்தூரை வெல்ல முடியாதென்று தெரிந்தது. ‘கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாக, “நான் சித்தூரை வெல்ல வரவில்லை என்றும், பத்மினியின் அழகை ஒரே ஒரு முறை பார்த்துச் செல்லவே வந்ததாகவும்” பீம சிங்கனுக்குச் செய்தி அனுப்பினான்.
பீம்சிங்கன், அவன் வார்த்தையை நம்பி, ஓரிரு வீரர் துணையுடன் கோட்டைக்குள் வரலாமென்றும், ரஜபுத்ரப் பத்தினிப் பெண்கள் வேறு ஆடவரைப் பார்க்கக் கூடாதாகையால் நிலைக் கண்ணாடியில் மட்டும் அவள் உருவத்தைப் பார்க்கலாம் என்றும் நிபந்தனை போட்டான். உடனே அலாவுதீனும் இரண்டொரு வீரருடன் வந்து கண்ணாடியில், பேரழகி பத்மினியைப் பார்த்தான். ஏதேனும் சதி செய்து அவளைக் கவரவேண்டும் என்று எண்ணி, மனதில் சதித்திட்டம் தீட்டினான்.
“நான் உன்னை நம்பி, உன் கோட்டைக்குள், தனியே வந்தேனே. நீயும் என்னை நம்பி என் கூட வந்து வழியனுப்பக்
கூடாதா?” என்று பீம சிங்கனிடம் அலாவுதீன் சொன்னான். ரஜபுத்ர இந்துக்கள், சத்ய சந்தர்கள்; உண்மை விளம்பிகள்; டில்லித் துலுக்கர்கள் போல உடல் முழுதும் விஷ ரத்தம் ஓடுபவரல்ல. ஆகவே அலாவுதீனை நம்பி அவன் கூட குதிரையில் செல்லுகையில், அலாவுதீன் உத்தரவிட்டவுடன் ஆப்கானியப் படைகள், பீமசிங்கனைச் சூழ்ந்து கொண்டன. அவனைக் கைது செய்து டில்லிக்குக் கொண்டு சென்றான் அலாவுதீன்.
“உன் மனைவியை என்னிடம் ஒப்புவித்தால் நான், உன்னை விடுவித்து, மீண்டும் சித்தூரின் மன்னனாக்குவேன்” என்று அலாவுதீன் சொன்னான். ஆனால்
பீமசிங்கன் இணங்கவில்லை. இந்தச் செய்தி சித்தூர் வரை சென்றது.
பீமசிங்கனின் மனிவியான பத்மினி மஹா புத்திசாலி; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வஞ்சனையை வஞ்சனையால்தான் வெல்ல வேண்டும் என்று கருதி, அலாவுதீன் கில்ஜிக்குச் செய்தி அனுப்பினாள். என் கணவனை நீ விடுவிப்பாயானால், நான் உன்னிடம் வரத்தயார். ஆயினும் ரஜபுதனப் பெண்கள், எல்லோரும் காணும்படி வெளியே உலவ மாட்டார்கள். ஆகவே என் பரிவாரம் புடை சூழ மூடிய பல்லக்குகளில் வருவோம்” என்றாள். அலாவுதீனும் ஆவலுடன் காத்திருந்தான்.
சித்தூர் கோட்டையிலிருந்து 70 மூடு பல்லக்குகள் புறப்பட்டன. ஒன்றில் கூட பெண்கள் கிடையாது. அத்தனையிலும், தேர்ச்சிபெற்ற 70 வீரர்கள் மறைந்திருந்தனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள், ஒவ்வொரு பல்லக்கையும் சுமந்தனர். அவர்கள் அனைவரும் வீரர்கள். பல்லக்குகளில் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். பாந்தால் என்பவன் அவர்களை டில்லியை நோக்கி அழைத்துச் சென்றான். அவன், “பத்மினி, கடைசியாக ஒரு முறை கணவனைப் பார்த்து
விட்டு உன்னிடம் வருவாள்” என்று அலாவுதீனிடம் சொன்னவுடன் “பத்மினியின் பல்லக்கை” கூடாரத்துக்குள் அனுப்பினான். அதிலிருந்த வீரன் வெளியே குதித்து பீமசிங்கனை குதிரையின் மேல் வைத்து தப்பிக்கச் செய்தான். உடனே பெரும் சண்டை நிகழ்ந்தது. இரு தரப்பும் வீரர்களை இழந்தன.
ஓரிரு ஆண்டுகள் உருண்டோடின. அலாவுதீனின் வெறி அடங்கவில்லை. எப்படியும் பத்மினியை அடைந்தே தீருவதென்று முடிவு செய்து, மீண்டும் படையெடுத்து சித்தூரை முற்றுகையிட்டான். இப்பொழுது பீமசிங்கன் பலவீனமான நிலையில் இருந்தான்; ஏனெனில் முந்தைய போர்களில் முக்கியப் படைத் தலைவர்களை இழந்து விட்டான். ஒரு கட்டத்தில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தது. தன் மகனை அருகாமையிலுள்ள ரஜபுதன ராஜ்யத்துக்கு அனுப்பி பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லி விட்டு வீரதீரப் போரில் ஈடுபட்டு உயிர் துறந்தான்
பீமசிங்கன்.
ரஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள்; அரண்மனையின் அந்தப் புரத்தில் மாபெரும் தீ வளர்த்தனர். அதில் நூற்றுக் கணக்கானோர், பேரழகி பத்மினியுடன் குதித்து சாம்பலாயினர். வெற்றிக் களிப்புடன் கோட்டைக்குள் நுழைந்த அலாவுதீனுக்கு, வீரர்களின் பிணங்களும், வீரத்தாய்மார்களின் சாம்பலுமே கிடைத்தது!
பாரத நாடு உள்ள வரை, பத்மினியின் புகழும் நீடிக்கும்! ரஜபுதனக் கோட்டை கொத்தளங்களும், பாலைவன மணல் துகள்களும் இன்றும் கூட பத்மினியின் புகழைப் பாடிக் கொண்டிருக்கின்றன.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு மஹா தீபம் ஏற்றப் படவுள்ள கொப்பரை, கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபக்கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சிக்கு இன்று எடுத்துச் செல்லப்படும்.
திருக்கார்த்திகை அன்று அதிகாலை, நான்கு மணிக்கு, கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள், "ஏகன், அனேகன்" என்பதை விளக்கும் பரணி தீபமும், மாலை, ஆறு மணிக்கு, 2668.அடி உயர மலை உச்சியில், "அனேகன், ஏகன்" என்பதை விளக்கும், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, ஆறு அடி உயர இராட்சதக் கொப்பரை புதுப்பிக்கப்பட்டு,மலை உச்சிக்கு அரோகரா முழக்கத்துடன் கொண்டு செல்லப்படும்.
இதில், ஏற்றப்படும் மஹா தீபத்தை, பல கி.மீ வரை பார்க்க முடியும். கொப்பரை, வெப்பத்தால் சேதமாகாமல் இருக்க, மேல்பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவும், 300 கிலோ எடையில், கால் அங்குலம் தடிமன் கொண்டதாகவும், 20 வளையங்களுடன் கூடிய செப்புத் தகட்டில் செய்யப்பட்டுள்ளது.
கொப்பரைக்குக், காவி வர்ணம் பூசப்பட்டு, ‘"சிவ சிவ’" என்ற வாசகம் எழுதப்பட்டு, விபூதிப் பட்டையுடன் கூடிய லிங்கம், அர்த்தநாரீஸ்வரர் உருவத்தின் மேல், தீப விளக்கு எரிவது போலும், அதில், அர்த்தநாரீஸ்வரர் உருவாய் எழுவது போலவும் படம் வரையப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த கொப்பரை கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை 2668 அடி உயரம் கொண்டது. தற்போது தமிழக அரசு இதன் உயரம் 2787 அடிகள் என அறிவித்துள்ளது. இதன் உச்சியில் பிரம்மாண்டமான கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த தீப உற்சவம். மலைமேல் மகாதீபம் என்ற பெருமை இங்கு மட்டுமே உள்ளது. பின்னாட்களில் திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றும் வழக்கம் உண்டானது.
மகாதீபம் ஏற்றும் உரிமை செம்படவர் எனப்படும் மீனவர் இனத்தவருக்கு உரியது. மீனவர் தலைவரான பர்வதராஜன் என்பவனின் மகளாகப் பார்வதி தேவி பிறந்தார். மீன் போன்ற அழகிய விழிகளை உடையவள் என்ற பொருளில் ''கயல் கண்ணி'' என்று பெயரிட்டனர். பலரும் ''கயல் கன்னி'' என்று குறிப்பிடுகின்றனர்; இது தவறு. ''கயல் கண்ணி '' என்பதே சரி. மீனாட்சி அம்மனுக்கு அங்கயற்கண்ணி, அதாவது அம் + கயல் + கண்ணி என்று ஒரு பெயர் உண்டு. இந்த கயல் கண்ணியினைச் சிவபெருமான், மீனவ இளைஞனாக வந்து, மணந்து, தேவியின் சாபம் நீக்கி, இருவரும் சிவ பார்வதியாக பருவதராஜனுக்குத் தரிசனம் தந்தனர். இதனால் மீனவர்களுக்குப் பருவதராஜகுலத்தார் என்று பெயர் ஏற்பட்டது. செம்படவர் என்ற பெயரும் இதே பொருளில்தான். படகுகளில் செல்வதால் படவர்; சிவன் + படவர் என்பதே செம்படவர் என்று ஆனது. இந்த பருவதராஜகுலத்தார் தான் தலைமுறை தலைமுறையாக மகாதீபம் ஏற்றும் உரிமைகளை உடையவர்கள். தீபத் திருவிழாவின் பத்தாம் நாள் மாலையில் மலைமேல் ஏற்றுவதற்காக தீபக் கொப்பரை, மலைமீது முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டிருக்கும்.
தீபத் திருவிழாவில் தீபம் ஏற்றும் கொப்பரை பற்றியும் வரலாறு உண்டு. ஆதி காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் செய்து கொடுத்துள்ளனர். அது பற்றி தகவல் திரட்ட படவில்லை. புதுயுகம் [1668] ஆம் ஆண்டு, பல ஆண்டுகள் முன்பு வேங்கடபதி என்பவர் நாலரைபாகம் எடைகொண்ட இது எந்தவகை எடை என்று தெரியவில்லை வெண்கலத்தால் செய்யப்பட்ட கொப்பரை செய்து அளித்துள்ளார். கோயிலில் இது பற்றிய குறிப்பு பதிவாகி உள்ளது. இது, தொடர்ந்து நெடுங்காலம் பயன்படுத்தப்பட்டதால் சேதமடைந்தது.
இதையடுத்து, இப்போது உள்ள கொப்பரையின் வடிவமைப்பு உருவானது. இது 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 92 கிலோ செம்பு 110 கிலோ இரும்புச் சட்டங்களால் வடிவமைக்கப்பட்டது. கொப்பரையில் அடிப்பாகம் 27 அங்குல விட்டமும் மேற்புறம் 37 அங்குல விட்டமும் உடையது. மொத்த உயரம்57 அங்குலம். இந்தக் கொப்பரையைத் தயார் செய்து தரும் பணியைப் பக்திபூர்வமாக செய்து வருபவர் சுமார் 70 வயதான மண்ணு நாட்டார் என்ற பருவதராஜகுலப் பெரியவர்.
அவருடைய மகன் பாஸ்கர், இவ்வாறு கூறுகிறார்......
கார்த்திகை தீபத் திருவிழாவின் சிறப்பே "மகா தீபம்" தான். இந்த "மகா தீபம்" 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் டிசம்பர் 3ஆம் தேதி மாலை ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றும் உன்னதமான இந்தப் பணியை, "நாட்டார்கள்" என்று அழைக்கப்படும் பர்வதராஜ குலத்தைச் சேர்ந்தவர்களான நாங்கள், தலைமுறை தலைமுறையாகச் செய்து வருகிறோம். மகா தீபத்துக்கான பிரம்மாண்டமான கொப்பரை தயாரிப்பதில் இருந்து, மலை மீது ஜோதியை ஏற்றுவது வரையிலான இறைப்பணியைச் செய்வது குல வம்சத்தினர்தான்.
திருவண்ணாமலை பாத்திர வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 1991ம் ஆண்டு அச் சங்கத்தின் சார்பாக தீபம் ஏற்றும் மகாதீப கொப்பரையை நன்கொடையாக வழங்கினார்கள். மேற்படி தீபம் ஏற்றும் கொப்பரையினை செய்திடும் பணியினை திருவண்ணாமலை பாத்திர தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த திரு.வ.மண்ணு நாட்டார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் நாங்கள், கடந்த 1991ம் ஆண்டில் இருந்து கொப்பரையைச் செய்வது மற்றும் வருடம்தோறும் பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்யும் வாய்ப்பை அண்ணாமலையார் அருளால் பெற்றிருக்கிறோம்.
மலை மீது ஏற்றப்படும் ஜோதி பிரகாசமாக சுடர்விட முக்கிய காரணம் அதன் கொப்பரையே. கடந்தமுறை கொப்பரை தாமிரத்துடன் இரும்பு கலந்து தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை முழுக்க முழுக்க தூய தாமிரத்தகட்டினால் (செம்புத்தகடு) தயாரிக்கப்பட்ட கொப்பரையையே "மகா தீபம்" ஏற்ற பயன்படுத்துகிறோம். ஆகம விதிகளின்படி மகா தீபக் கொப்பரை, மொத்த உயரம் 57 அங்குலம். அதன் வாய் 37 அங்குல விட்டமும் கொண்டதாக வடிவமைக்கப்படும்.
மகா தீபத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கொப்பரை பழுதானதால் 2016ம் ஆண்டு ஆண்டு புதிய கொப்பரை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை என் தந்தை மண்ணு நாட்டார் தயாரித்துத் தந்துள்ளார். அவர் தயாரித்துத் தரும் மூன்றாவது கொப்பரை இது.
சுமார் இரண்டு இலட்சம் மதிப்பில், மொத்த உயரம் 57 அங்குல உயரத்தில், கீழ்வட்ட சுற்றளவு 27 அங்குலம், மேல்வட்ட சுற்றளவு 37 அங்குலம், 200 கிலோ எடையில் கொப்பரை செய்யப்பட்டுள்ளது. ''இவ்வாறு அவர் மகன் பாஸ்கர் கூறினார்.
இன்றுவரை எம் சித்தர்களின் குரல் அமைப்புக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம் கடந்த 7 வருடங்களாக திருக்கார்த்திகை மஹா தீபமேற்ற 1,008 லிட்டர் நெய் கொடுத்து வருகிறோம். இந்த மாபெரும் பாக்கியத்தை அண்ணாமலையான் அளித்துள்ளான். தொடர்ந்தும் இந்த பணி எத்தனை வருடமானாலும் அவனருளால் தொடரும்
1987-ஆம் ஆண்டு, அமெரிக்கர் ஸ்டீவ் ரோத்ஸ்டீன், அமெரிக்கன் ஏர்லைன்ஸிடமிருந்து 2,50,000 அமெரிக்க டாலர் கொடுத்து “கோல்டன் டிக்கெட்” ஒன்றை வாங்கினார். இந்த டிக்கெட், அவருக்கு வாழ்நாளெல்லாம் வரம்பின்றி அந்த விமான சேவையில் பயணம் செய்யும் உரிமையையும், மேலும் 1,50,000 டாலருக்கு ஒரு துணை பயணிக்கான டிக்கெட்டையும் வழங்கியது.
ஸ்டீவ் ரோத்ஸ்டீன் 10,000-க்கு மேற்பட்ட விமானப் பயணங்களை முன்பதிவு செய்தார். சில சமயங்களில், ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் சாப்பிடத்தான் அல்லது ஒரு போட்டியைப் பார்ப்பதற்காகத்தான் அவர் பயணம் செய்து, சில மணி நேரத்திலேயே திரும்பிவந்துவிடுவார். சில சமயங்களில் இல்லத்தரசர்களை (homeless) அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல அவர்களுடன் பயணம் செய்தார். சில சமயங்களில் “ட்ரீமர்” ஒருவருக்காக ஒரு காலியிடத்தை முன்பதிவு செய்தார். சில நேரங்களில் விமான டிக்கெட் பதிவு செய்து, விமானத்தில் ஏறவே இல்லை.
ஸ்டீவ் ரோத்ஸ்டீன் விமான கம்பனிக்கு மொத்தம் 21 மில்லியன் டாலர் செலவாகியதால், 2008-ல் நிறுவனம் அவரது இலவச வாழ்நாள் பயண டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் சட்டமே மேலானது என்பதால், டிக்கெட் ரத்து செய்யப்பட்ட பிறகு, ஸ்டீவ் ரோத்ஸ்டீன் விமான கம்பனிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவர் இழப்பீடு கோரினார், வழக்கில் வென்றார், மேலும் 3 மில்லியன் டாலர் வழங்கப்பட்டன. அவரது இலவச வாழ்நாள் டிக்கெட் தொடர்ந்து செல்லுபடியாகவே இருந்தது.
* குளிர்காலத்தில் இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை மற்றும் பசைத்தன்மை உள்ள உணவுகள் நல்லது.
* கோதுமை கஞ்சி மற்றும் ஆட்டுக்கால் சூப்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இது உடலுக்கு சூட்டைத் தரும். சுரைக்காய், பறங்கிக்காய் போன்ற நீர்க்காய்கள் பனிக்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை.
* பப்பாளி, அன்னாசி பழங்கள் சாப்பிடலாம். நாட்டுக்கோழி மற்றும் வெள்ளாட்டுக் கறி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* கதகதப்பான உடைகளுடன் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது, குளிர்கால தசை இறுக்கத்தை சீராக்கும். வெயில் படும்படியாக இருப்பது நல்லது.
* குளிர்காலங்களில் பச்சைத் தண்ணீரை தவிர்த்து, சுடு தண்ணீரில் குளிக்கலாம். உங்களின் உடைகள், விரிப்புகள் கதகதப்பாக இருக்கட்டும்
* குளிரால், சளி உறைந்து போகும். தொண்டையைச் செருமி துப்பினால் கூட சளி வராது. நல்லெண்ணெயில் மிளகு, சீரகம் பொரித்து வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.
* வெதுவெதுப்பாய் இருக்கும் எண்ணெயை, ஐந்தாறு சொட்டு மூக்கு வழியாக விட்டால், தொண்டை வழியாக இறங்கி சளியை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து வெளியேற்றும்
* ஒரு லிட்டர் தண்ணீரில், கோரைக் கிழங்கு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) - 10 கிராம், சுக்கு - 5 கிராம் சேர்த்து, அரை லிட்டராக கொதிக்க வைத்து குடிக்க, மார்பில் சளி கட்டாது. துளசி தீர்த்தமும் பலன் தரும்
* சுற்றிலும் பனியாய், வானம், மப்பும் மந்தாரமுமாய் இருந்தால், சாம்பிராணி புகை போட்டு, அந்தப் புகையில், போர்வையை காட்டுங்கள். அந்த துணியால் உடம்பைப் போர்த்த கதகதப்பு கூடும். இதுவும் பழங்காலத்தில் இருந்த ஒரு பழக்கம்.
மேஷம்
மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கடின உழைப்பிற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். சக ஊழியர்களால் சிறு சிறு வருத்தங்கள் நேரிடும். பிறமொழி மக்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மூத்த சகோதரர்களால் பயனடைவீர்கள். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பொறுப்பும், அதிகாரமும் மேம்படும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்விகள் நல்ல மாற்றம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிதுனம்
சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற எண்ணங்கள் மேம்படும். திட்டமிட்ட பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களால் சில பணிகளை முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
உடன் பிறந்தவர்கள் இடத்தில் ஒத்துழைப்புகள் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். வருத்தம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
மனதில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டும் நிங்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். சில இழுபறிகளுக்கு பின்பு எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடத்தில் பொறுமை வேண்டும். உத்தியோகப் பணிகளில் திருப்பங்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கன்னி
சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு காரியங்களில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
துலாம்
சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உருவாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். கடன் சார்ந்த சில உதவிகள் சிலருக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
விருச்சிகம்
பேச்சுக்களின் அனுபவம் வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பாகப்பிரிவினை பிரச்சனைகள் குறையும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்புங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சோர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
நினைத்த பணிகளில் இருந்த தடைகள் குறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
சுபகாரிய நிகழ்ச்சிகள் கலந்து கொள்வீர்கள். சிறு துர பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய முயற்சிகளில் இருந்து தடைகள் விலகும். வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தொழில்நுட்பக் கருவிகளால் ஆதாயமடைவீர்கள். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
கும்பம்
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். தோற்றப்பொலிவு மேம்படும். நண்பர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டு பேசுவது புரிதலை உருவாக்கும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் நேரிடும். உடல் நலனில் கவனம் வேண்டும். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை 1.12.2025
இன்று பிற்பகல் 02.36 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி
இன்று இரவு 07.52 வரை ரேவதி . பின்னர் அஸ்வினி. நாமயோகம் : இன்று அதிகாலை 01.04 வரை சித்தி. பின்னர் இரவு 10.16 வரை வியதீபாதம். பிறகு வரீயான்.
இன்று அதிகாலை 03.32 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 02.36 வரை பத்திரை. பிறகு பவம்.
இன்று காலை 06.14 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15முதல் 07.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அவரது நீண்டநாள் காதலி ஹெயிடனை திருமணம் செய்துகொண்டார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கும், அவரது நீண்டநாள் காதலி ஜோடி ஹெயிடனுக்கும் இன்று கான்பெரா நகரில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதன்மூலம், பதவியேற்ற பிறகு திருமணம் செய்துகொண்ட முதல் ஆஸ்திரேலிய பிரதமர் எனும் பெருமையை அவர் அடைந்துள்ளார்.
இதனைத் தொடந்து, பிரதமர் அல்பானீஸ் - ஹெயிடன் தம்பதிக்கு ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கும், அந்நாட்டின் முன்னாள் அரசியல் தலைவர் கார்மல் டெபட் என்பவருக்கும் திருமணமாகி, கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பிரதமர் அல்பானீஸும், ஹெயிடனும் காதலித்து வந்த நிலையில், முக்கிய அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரங்களில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலை நாளை இருக்காது.
நேற்றைய நிலை இன்று இருக்காது.
காலமும் சூழலும் இயற்கையில் மாறிக்கொண்டே தான் இருக்கும்.
இயற்கையை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் மாற்றக்கூடியவற்றை மாற்ற வேண்டியதும் உயிர்க் குலத்தின் முன்னுள்ள நல்வழி.
குழப்பங்கள் தீரும்.
குடைச்சல்கள்நீங்கும்.
நல்லவர்கள் உங்களோடு உடன் வருவார்கள். உலகம் உங்கள் பின் வரும்.
நம்பிக்கையை எப்போதும் கைவிடாதீர்கள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வேலை ஆட்கள் இடத்தில் ஒத்துழைப்புகள் குறையும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் சாதகமாகும். இனம் புரியாத புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். எதிலும் முன் கோபம் இன்றி செயல்படவும். உயர்வு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
ரிஷபம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள்கள் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தாமதங்கள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலை துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கைத்தொழிலில் மேன்மை உண்டாகும். அசதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மிதுனம்
பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவுகள் வழியில் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை தரும். மருத்துவப் பணிகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். சொத்து சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். லாபம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் விலகும். வர்த்தகத்தில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சிம்மம்
விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கணவன் மனைவி கிடைய விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் அமையும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். துணைவருடன் ஒற்றுமை மேம்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். கலைத்துறையில் பொறுமை வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். சமூகத்தில் புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விருச்சிகம்
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வித்தியாசமான உணவுகளை தவிர்க்கவும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நாவல் விஷயங்களில் தனிப்பட்ட ஈடுபாடுகள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
தனுசு
எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன் விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கமிஷன் வகையில் ஆதாயம் ஏற்படும். சக ஊழியர்களால் திருப்தி ஏற்படும். பயணங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடி வரும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
குடும்பத்தாரில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபார யுகங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மீனம்
மனதில் இருந்த தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். எதிலும் சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியம் சார்ந்து சில விரயம் உண்டாகும். பங்குதாரர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்கவும். குறைவாகப் பேசினாலும் குறை இல்லாமல் பேசவும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
காய்கறி வாங்குவது ஒரு கலை -
நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. இது கசப்பான உண்மை. கேட்டால் அதெல்லாம் என் மனைவி பார்த்துக்கொள்வாள் என்பார்கள்.
நிறைய பெண்களுக்கும் கூட இதைப்பற்றி சரியாக தெரிவதில்லை.
அதற்காகத்தான் இந்தப் பதிவு.
காய்கறி வாங்குவது ஒரு கலைதான். நல்ல காய்கறியாகவும் வாங்க வேண்டும். அவை வீணாகாதபடி பாதுகாக்கவும் வேண்டும்.
சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்...
வாழைக்காய்:
முதலில் வாழைக்காய். வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை.
வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும்.
வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு, ஒரு வாளித் தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்.
உருளைக்கிழங்கு:
செம்மண்ணில் பயிரான உருளைக் கிழங்குகளே உயர்வானவை. கெட்டியாகவும் தழும்புகள் இல்லாமலும் ஓட்டைகள் இல்லாமலும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.
பச்சையாகவோ அல்லது பச்சை நிறத் தழும்புகள் உள்ள உருளைக்கிழங்குகள் நன்றாக இருப்பதில்லை. சிறுமுளை கண்டவற்றையும், தோல் சுருங்கியவற்றையும் வாங்குதல் கூடாது.
முள்ளங்கி:
முள்ளங்கியை, சற்றுப் பருத்து நீண்டிருப்பதாகவும், நடுவில் இலைகளும் ஓரத்தில் பச்சை இலைகளும் இருப்பதாகவும் பார்த்து வாங்கவேண்டும். கையால் தட்டிப் பார்த்தால் சில பொத் பொத்தென்று சத்தம் கேட்கும்.
சோளத் தட்டுப் போல் இருக்கும். அவைகளை வாங்குதல் கூடாது.
சமைக்க உதவாது. முக்கியமான ஒன்று வாங்கிய அன்றோ அல்லது மறுநாளோ சமைத்துவிட வேண்டும்.
முருங்கைக்காய்:
முருங்கைக்காயை நல்ல கரும்பச்சை நிறத்தில் சற்றுப் பருமானாகவும் (ரொம்ப இல்ல) உருண்டையாகவும் இருந்தால் வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் வாங்கக் கூடாது.
இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டு லேசாக முறுக்கினால் சற்று வளைந்துகொடுக்க வேண்டும். அது இளசாக இருக்கும். கட்டைபோல் இருந்தாலோ அல்லது முறுக்கும்பொழுது மளமளவென்று சத்தம் கேட்டாலோ வாங்காதீர்கள்.
அது முற்றலாய் இருக்கும். முப்பட்டையாகவோ, சற்று மஞ்சள் கலந்த பச்சைநிறத்திலோ, விதைகள் வெளியே தெரியும்படியாகவோ, முட்டி முட்டியாகவோ இருந்தால் காய் முற்றலென்று தெரிந்துகொள்ளலாம்.
காய்களை வாங்கி வந்தவுடன் ஒரு வாளித்தண்ணீரில் பாதிக்காய்கள் முழுகும்படி போட்டு வைக்கவேண்டும்.
தக்காளி:
தக்காளியைக் கெட்டியாக உருண்டையாக, செங்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். முண்டும் முரடுமாக இருந்தால் சற்று அதிகமாகவும், சதைப்பகுதி குறைவாகவும் இருக்கும்.
உடனே சமைக்க வேண்டுமென்றால் நன்றாக பழுத்திருந்தாலும் கெட்டியாக இருக்கும்படி பார்த்து வாங்கவேண்டும்.
பழம் மெத்து மெத்தென்று இருந்தால் சாறு கெட்டுப்போயிருக்கும். காம்புக்கு அருகே நல்ல பச்சையாகவும், அடிப்பாகத்தில் சிவப்பாகவும் இருப்பதை பார்த்து வாங்கினால் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
நாளைக்கு பழம் வேண்டுமென்றால் அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் நன்றாக பழுத்துவிடும்.
பீன்ஸ்:
பீன்ஸ் புதியவையாக இருந்தால் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். ஒடித்தால் வெடுக்கென்று உடையும். சமைப்பதற்கு அதுதான் நல்லது. முற்றின காய்கள் வெளிர்ப்பச்சையாக இருக்கும்.
நாள்பட்டவையாக இருந்தாலும் வதங்கி வெளிர்ப்பச்சை காட்டும் அவை சமையலுக்கு உதவாதவை. விதைகள் புடைத்துக்கொண்டிருந்தால் தோல் பயன்படாது. விதைகளைத்தான் உபயோகப்படுத்த முடியும்.
இவை மெத்தென்றோ ஈரமாகவோ இருந்தால் சீக்கிரத்தில் அழுகிப் போய்விடும்.
இவற்றை ஒன்றோடொன்று படாமல் காற்றோட்டமாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பூஞ்சைக்காளான் பிடித்து விடும்.
அவரைக்காய்:
அவரைக்காய் வாங்குதற்கும் ஏறக்குறைய பீன்ஸ் போலத்தான். அதன் நடைமுறைகள்தான்.
மேலும் அவரை முற்றியிருந்தாலும் மளுக்கென்று உடையாது. சமையலுக்கு பிஞ்சு அவரைக்காயே உகந்தது.
கத்தரிக்காய்:
கத்தரிக்காயை சிறு ஓட்டைகூட இல்லாமல் பார்த்து வாங்கினால்தான் உள்ளே புழு இல்லாமல் இருக்கும். காய் முழுவதும் ஒரே நிறத்தில் பளபளவென்று இருத்தல் வேண்டும்.
காம்புடன் கூடிய வால்பகுதி நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல். இலைப்பகுதி குட்டையாக இருந்தாலும் முற்றலே. ஆழ்ந்த ஊதா நிறத்தில் உள்ள காய்கள் நல்லது.
பச்சை நிற காய்களும் ஏற்றவையே. பச்சைக் காயில் மேலே வெள்ளை வரிகள் இருந்தால் கசக்கும். குழம்பே கசப்பாகிவிடும்.
காம்பிள் முள் இருந்தால் நல்லவையே. காம்பு கறுத்து சுருங்கியிருந்தால் நாள்பட்ட காய் என்று அர்த்தம். காயை நறுக்கியவுடன் அரிசி கழுவும் நீரில்போட்டால் கறுப்பாகாமல் இருந்தால் நல்ல காய் என்ற அர்த்தம்.
வெண்டைக்காய்:
வெண்டைக்காயில் பச்சைநிற காய்தான் சுவையுள்ளது. மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தால் வாங்கவேண்டாம்.
ருசி இருக்காது. வெண்டைக் காயின் நுனியை உடைத்தால் பட்டென்று உடையவேண்டும்.
அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்துகொடுத்தாலோ அல்லது இரண்டாக பிளந்தாலோ அது முற்றல்.
காம்பு சுருங்கியிருந்தாலும் முற்றல். ஓட்டை இல்லாமல் வாங்குங்கள். புழு இருக்க வாய்ப்புண்டு.
வெங்காயம்:
வெங்காயத்தில் நாட்டு வெங்காயம் சாம்பார் வெங்காயம்தான் ருசியானது. உடம்புக்கும் நல்லது.
பொதெபொதெவென்று ஊறியதை வாங்கக் கூடாது. வெங்காயத்தின நடுவில் சோளத்தட்டு போல இருந்தால் வாங்கக் கூடாது.
வெங்காயத்தின் நுனிப் பாகத்தை அழுத்தினால் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி மெத்தென்று இருந்தால் அழுகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.
முட்டைக்கோஸ்:
இலைகள் வெள்ளையாக இருக்கும் முட்டைக்கோஸ்கள் சற்று முரடாக இருக்கும். பச்சையாக உள்ளவை இளசாக இருக்கும். காய் உருவத்தில் சிறிது கெட்டியாக கனமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருந்ததால் காய் புதியது என்று அர்த்தம். வாங்கும்போது காம்பை முகர்ந்து பார்த்து வாங்கவேண்டும். பழையது நாற்றமடிக்கும்.
பீர்க்கங்காய்:
பச்சைப் பசேல் என்று இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். காயின் மேலுள்ள நரம்புகள் மிகவும் எடுப்பாக இருந்து வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றலாகும்.
சற்று மெல்லிய காய்களை, நன்றாக பச்சையாக இருக்கும்படியும் நரம்புகள் உள்ளடங்கி இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும்.
பிஞ்சுக்காய் மேலே வரிகளுடன் மேலே வரிகளுடன் மெல்லியதாக நீண்டிருக்கும். பச்சையாக இருக்கும்.
சேப்பங்கிழங்க:
சேப்பங்கிழங்கு நீளவாட்டத்தைவிட உருண்டை வடிவமாக இருப்பதைப் பார்த்து வாங்கினால் சவுகரியாக இருக்கும். மேலே நிமிண்டிப் பார்த்தால் தோல் வரும்.
உள்ளெ வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு.
ஆனால் நீள்வட்டக் கிழங்கில் சத்து அதிகம்.
புடலங்காய்:
புடலங்காய் நீண்டு மெல்லியதாக இருந்து மளுக்கென்று உடைந்தால் நல்ல பிஞ்சுக்காய். சுவையாக இருக்கும்.
பச்சை மிளகாய்:
பச்சை மிளகாயில் காம்பும் காயும் பச்சையாக இருந்தால் புதியது. காம்புகள் சுருங்கியிருந்தாலும், கறுத்து இருந்தாலும் பழையது.
எலுமிச்சம் பழம்:
நல்ல மஞ்சளாகவும், தோல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்கினால் நல்லது.
காய் மெத்தென்று அமுங்கினாலும், காம்புக்கு அருகில் கன்றியிருந்தாலும் நாட்பட்ட பழமாகும். வாங்க வேண்டாம்.
கொத்துமல்லி, கருவேப்பிலை:
கடைசியாக இந்த கருவேப்பிலை, கொத்துமல்லி. கொத்துமல்லி, கீரை வகைகளில் பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும் பார்த்துவாங்க வேண்டும்.
கறிவேப்பிலையில் சிறிய வகையே மிக்க மணமுள்ளது. மெலிதாக நீண்ட இலைகளில் அவ்வளவு மணம் இருப்பதில்லை.
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 30.11.2025.
இன்று மாலை 04.28 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று இரவு 09.08 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.
இன்று அதிகாலை 03.37 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.
இன்று அதிகாலை 05.16 வரை தைத்தூலம். பின்னர் மாலை 04.28 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று காலை 06.14 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.00 முதல் 07.00 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
கனடா நாட்டில் உள்ள பிராம்டன் நகரின் மேக் லாக்லின் சாலை மற்றும் ரீமெம்பரன்ஸ் சாலை சந்திக்கும் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.இதில் கீழ் தளத்தில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். மேல் தளத்தில் வசித்தவர்களில் 4 பேர் தீயில் சிக்கி உடல் கருகினர்.
கர்ப்பிணியான ஆரஷ்வீர் கவுர் என்ற பெண் உயிர் பிழைக்க ஜன்னலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். எனினும் கருவில் இருந்த குழந்தை இறந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். தீயில் கருகியவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
தீ விபத்தில் காயமடைந்த ஒரு சிறுவன் உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை 29.11.2025.
இன்று மாலை 06.03 வரை நவமி. பின்னர் தசமி
இன்று இரவு 10.07 வரை பூரட்டாதி . பின்னர் உத்திரட்டாதி.
இன்று அதிகாலை 05.52 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.
இன்று காலை 06.40 வரை பாலவம். பின்னர் மாலை 06.03 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
இன்று காலை 06.14 வரை சித்தயோகம். பின்னர் இரவு 10.07 வரை மரணயோகம். பிறகு சித்தயோகம் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 08.00 முதல் 09.00 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை













