யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சகோதர வகையில் பயனடைவீர்கள். இழுபறியாக இருந்த கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். பண வரவு உண்டு.
ரிஷபம்: எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வெளி வட்டாரத்தில் பாராட்டு கிடைக்கும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.
மிதுனம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் மன நிம்மதி கிடைக்கும். பெற்றோர் உடல்நிலை சீராகும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
கடகம்: எதிர்பார்த்த உதவிகள், வாய்ப்புகள் தடைபடும். பேச்சில் நிதானம் அவசியம். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். பயணத்தின்போது கவனம் தேவை. நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.
சிம்மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உத்யோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாகனப் பழுது நீங்கும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.
கன்னி: வருங்கால வளர்ச்சிக்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழுதான வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. வியாபாரத்தில் வராக்கடன் வந்துசேரும்.
துலாம்: உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். எக்காரியத்திலும் பொறுமை தேவை.
விருச்சிகம்: சொந்த பந்தங்கள் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் வீணாக தலையிடாதீர்கள்.
தனுசு: தடைபட்ட வேலையை உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சில சிக்கல்களுக்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வெளி உணவுகள் வேண்டாம். பயணத்தில் கவனம் தேவை.
மகரம்: எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டு பார்க்க நேரிடும். கணவன் - மனைவி இடையே மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.
கும்பம்: திடீர் வெளியூர் பயணம் மற்றும் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நிதானமாக செயல்படுங்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கலைப் பொருட்கள் சேரும்.
மீனம்: வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிகப் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை 13.4.2026
இன்று இரவு 10.26 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று பிற்பகல் 01.22 வரை அவிட்டம். பின்னர் சதயம்.
இன்று பிற்பகல் 02.42 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.
இன்று காலை 10.27 வரை பவம். பின்னர் இரவு 10.26 வரை பாலவம். பிறகு கௌலவம்.
இன்று பிற்பகல் 01.22 வரை அவிட்டம். பின்னர் சதயம்.
இன்று பிற்பகல் 02.42 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.
இன்று காலை 06.03 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30 முதல் 07.30 மணி வரை
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
ஸ்கார்பாரோ பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
கென்னடி சாலை மற்றும் எல்ஸ்மியர் சாலை சந்திப்புப் பகுதியில் பல வாகனங்கள் தீப்பற்றி எரிவதாகக் காலை 5:05 மணியளவில் டொராண்டோ காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த டொராண்டோ தீயணைப்புப் படையினர், அங்குள்ள கார் விற்பனை நிலையம் (Car Dealership) ஒன்றில் நான்கு வாகனங்கள் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டறிந்து, விரைவாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு எவரும் இருக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு தீயணைப்பு வாகனம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, விசாரணையின் நிமித்தமாக கென்னடி சாலையின் வடக்கு நோக்கிய பாதைகள் ஷ்ரோப்ஷையர் டிரைவ் பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
1300 ஆண்டுகள் நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை அறிவியலை அதிரவைத்துள்ளது.
பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் மனிதர்களை போல் படுத்த நிலையில் 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை காணப்பட்டு வருகின்றது.
நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை, எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும், இதற்கான அர்ச்சனைகளும், அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன. மேலும் நீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற பக்தர்கள் எப்போதும் இங்கு வந்த வண்ணமே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விமானத்தினுள், விமானியின் அறையை சுத்தம் செய்யும் ஒரு பணியாள், விமானியின் காபினெட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது,
"விமானத்தை பறக்க வைப்பது எப்படி?(தொகுதி 1)" என்று தலைப்பிட்ட ஒரு புத்தகத்தை பார்த்தார்.
அவர் முதல் பக்கத்தைத் திறந்தார்: "என்ஜினை ஆன் செய்ய, சிவப்பு பொத்தானை அழுத்தவும்" என்று இருந்தது. அவர் அவ்வாறே செய்தார், விமான இயந்திரம் இயங்க தொடங்கியது.
அவர் மகிழ்ச்சியுடன் அடுத்த பக்கத்தைத் திறந்தார்..
"விமானத்தை நகர்த்த, நீல பொத்தானை அழுத்தவும்... "அவர் அவ்வாறே செய்தார், விமானம் அற்புதமான வேகத்தில் நகரத் தொடங்கியது.
அவர் பறக்க விரும்பினார், எனவே அவர் மூன்றாவது பக்கத்தைத் திறந்தார்: விமானத்தை பறக்க வைக்க, பச்சை பொத்தானை அழுத்தவும்.."
அவர் அவ்வாறே செய்தார், விமானம் பறக்கத் தொடங்கியது.
உற்சாகமாக இருந்தார்...!!
இருபது நிமிடங்களுக்குப் பிறகு, பறந்து திருப்தி ஆன பின், விமானத்தை தரையிறங்க விரும்பினார், எனவே அவர் நான்காவது பக்கத்திற்குச் செல்ல முடிவு செய்தார்.. நான்காம் பக்கத்தில், "விமானத்தை எவ்வாறு தரையிறக்குவது என்பதை அறிய, அருகிலுள்ள புத்தகக் கடையில் தொகுதி 2 ஐ வாங்கவும்!"
!!!!!!!
முழுமையான தகவல் இல்லாமல் எதையும் முயற்சிக்காதீர்கள். பாதி கற்பது ஆபத்தானது மட்டுமல்ல அழிவுகரமானதும் கூட. முழுமையாக கற்றுக்கொண்டு செயலில் இறங்குங்கள்.
- மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையும் உடையது. அதுமட்டுமில்லாமல் உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.
- உணவைச் இலகுவாக செரிக்க வைக்கின்றது.
- உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.
- மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
- மிளகு, சுக்கு, சிற்றரத்தை, அதி மதுரம் ஆகிய இவற்றை சமமாக எடுத்துக் கஷாயம் செய்து மூன்று வேளை குடித்து வர ஜலதோஷத்தோடு உள்ள ஜூரமும் இருமலும் குணமாகும்.
- சின்ன வெங்காயம், மிளகு, கிராம்பு இவைகளை மையாக அரைத்து சிறிது தேனில் கலந்து சாப்பிட்டு வர, நெஞ்சுவலி நீங்கும்.
- அடுக்குத் தும்மல் பிரச்சனை அடிக்கடி வருகிறதா? எனில், மிளகை தூள் செய்து அந்தப் பொடியை நெருப்புத் தணலில் இட்டு அதிலிருந்து வரும் புகையை இழுக்க அடுக்குத் தும்மல் நின்று விடும்.
- மிளகுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும். சளித் தொல்லை இருக்காது.
- இருமல் தொந்தரவு இருந்தால் டீ அல்லது பாலில் மிளகு, ஏலக்காய், இஞ்சி, ஓமம் ஆகியவற்றை அரைத்துப் போட்டு குடியுங்கள் இருமல் பிரச்சனை நீங்கும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வியாபார பணிகளில் முதலீடுகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். சிற்ப பணிகளில் கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
பொது பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை சீரமைப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் புதிய பதவிகள் கிடைக்கும். நன்மை பயக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சாந்தம் நிலவும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
குடும்பத்தில் சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் உடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். நேர்மறையான சிந்தனைகள் மேம்படும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த சில செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். குழப்பம் தீரும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சிம்மம்
நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவுகள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். பயணங்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி கிட்டும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
கன்னி
உணவு முறையில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடமிருந்து வந்த வேறுபாடுகள் குறையும். மறதி பிரச்சனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். திருப்பங்கள் நிறைந்த சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும் மந்த தன்மையும் ஏற்படும். நலம் சூழும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
துலாம்
மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். சுபம் தரும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணம் முலம் மாற்றமான அனுபவம் கிடைக்கும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை தவிர்க்கவும். மேலதிகாரிகளிடம் உதவி கிடைக்கும். லாபம் பெருகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
தனுசு
சகோதர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். போட்டி மனப்பான்மையை குறைத்து கொள்வது நல்லது. காது தொடர்பான இன்னல்கள் குறையும். இசை சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கனிவான செயல்பாடுகளால் மதிப்புகள் அதிகரிக்கும். அமைதி பொங்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகரம்
கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படும். பேச்சுவார்த்தைகளால் சாதகமான சூழல் அமையும். தன வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். பணி நிமித்தமான சில பொறுப்புகள் குறையும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்து செயல்படவும். உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பெருமை சேரும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கும்பம்
பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் பலரின் ஆதரவுகளையும் பெறுவீர்கள். உயரதிகாரிகளிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிலும் திருப்தியின்மையான சூழல் உண்டாகும். புதிய செயல்களை மேற்கொள்ளும் பொழுது சிந்தித்து செயல்படுதல் அவசியம். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. சினம் அகலும் நாள்.
அதிர்ஷ்டஎண் : 1
அதிர்ஷ்டநிறம் : வெளிர் பச்சை
மீனம்
பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். தேர்ச்சி அடையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12.4.2026
இன்று இரவு 10.28 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று பிற்பகல் 12.33 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.
இன்று மாலை 03.41 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று காலை 10.13 வரை பத்திரை. பின்னர் இரவு 10.28 வரை கரசை. பிறகு பவம்.
இன்று காலை 06.04 வரை சித்தயோகம். பின்னர் பிற்பகல் 12.33 வரை அமிர்த யோகம். பிறகு மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
நடிகை ஸ்ரீலீலா மாதவிடாய் குறித்து தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பவன் கல்யாணுடன் ஸ்ரீலீலா நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது.
அதில் கலந்துகொண்ட ஸ்ரீலீலாவிடம், ஒரு பெண்ணாக அவர் எதிர்கொண்ட பெரிய சவால் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஸ்ரீலீலா, “பெண்களுக்கு மாதவிடாய் என்பது சாக்குப்போக்கு கிடையாது. நான் பெரும்பாலான பாடல்களில் நடனமாடும்போது மாதவிடாய் காலத்தில்தான் இருந்தேன்.
உடல்ரீதியான தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும். உளவியல் ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ மாதவிடாயைக் காரணமாகச் சொல்லக்கூடாது” என்று கூறியிருந்தார். மருத்துவப் படிப்பை முடித்துள்ள ஸ்ரீலீலாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
மருத்துவம் படித்த ஒருவருக்கு மாதவிடாய் வலி, ஒரு பெண்ணின் அன்றாடச் செயல்பாடுகளை எவ்வளவு பாதிக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தும், ‘இது ஒரு சாக்குப்போக்கு அல்ல’ என்று அவர் கூறியது, அந்த வலியை அனுபவிக்கும் மில்லியன் கணக்கான பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பலர் விமர்சித்து வருகின்றனர்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் சர்னியா பகுதியில் அமைந்துள்ள லம்ப்டன் கல்லூரியின் வளாகத்தில் உள்ள மதுபான விடுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாணவர் நிர்வாகக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது, அதிகாலை 1 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காயமடைந்த நிலையில் மூன்று பேரை மீட்டுளள்னர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதான டேன் நிஸ்பெட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உள்ளூர் ஹாக்கி விளையாட்டுக் குழுக்களில் நன்கு அறியப்பட்டவரான இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனைய இருவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, லம்ப்டன் கல்லூரியின் பிரதான வளாகம் மற்றும் அதனுடன் இணைந்த அனைத்துப் பயிற்சி மையங்களும் இன்றயை தினம் மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சர்னியா பொலிஸார் இச்சம்பவத்தை ஒரு திட்டமிட்ட கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர் அல்லது காயமடைந்தவர்கள் அக்கல்லூரியின் மாணவர்களா? என்பதை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த படம், சுமார் 730 நாட்கள் (இரண்டு ஆண்டுகள்) நீண்ட போருக்குப் பிறகு ஒரு உக்ரைன் வீரர் வீட்டிற்கு திரும்பும் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை பதிவு செய்கிறது.
நீண்டகால மோதலின் மனிதச் செலவை இது வலுவாக காட்டுகிறது ௮ இழந்த நேரம், அனுபவித்த மன உளைச்சல், சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பும் ஆழமான ஆசை.
, இரண்டு ஆண்டுகளாக நீடித்த அபாயங்கள், குடும்பத்திலிருந்து விலகி இருந்த வேதனை, முன்ணணிப் பகுதிகளில் சந்தித்த கடினமான வாழ்க்கை ஆகியவை மறைந்துள்ளன.
எந்த நாடாக இருந்தாலும், ஒவ்வொரு சீருடைக்கும் பின்னால் சொல்லப்படாத ஒரு தனிப்பட்ட கதை இருக்கிறது என்பதை இந்த படம் நமக்கு நினைவூட்டுகிறது. இந்தப் படத்தை பார்க்கும் போது கல்மனசும் கரைந்துப் போகும்.
இனியுள்ள நாட்கள் சந்தோஷமாக இருக்க வாழ்த்துவோம்......














