யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் அண்மைய வாரங்களில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அண்மையில், நார்த் பே பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் இருந்து 250,000 டொலர் தொகை மோசடி செய்யப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களில் கிரிப்டோகரன்சி மோசடிகள், ஆன்லைன் சந்தை ஏமாற்றங்கள், காதல் மோசடிகள் மற்றும் பரிசு அட்டை மோசடிகள் தொடர்பான பல புகார்களுக்கு எங்கள் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நார்த் பே பகுதியில் ஒருவர் 2025 ஜூலை மாதம் முதல் போலியான இணையதளம் மற்றும் கணக்கில் பணம் செலுத்தி வந்ததாகவும், அது முதலீட்டு மோசடியாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிகவும் நூதனமான முறையில் மோசடிகள் இடம்பெறுவதாகவும் பல்வேறு வழிகளில் மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து, சிறிது சோடா உப்பையும் கலந்து குடித்தால், வயிற்று வலி நீங்கும்.
* அகத்திக்கீரையில், 65 விதமான சக்திகள் அடங்கி இருக்கின்றன. மலச்சிக்கல், பித்தம் அதிகமாக உள்ளோர், அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும். வெயிலில் அலையும் வேலை உடையவர்களும், காபி, டீ சாப்பிடுபவர்களும் அகத்திக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* வேப்பிலை, மருதாணி, மஞ்சள் ஆகிய மூன்றையும் அரைத்து குதிகால் வெடிப்பில் பூசி வந்தால், பித்த வெடிப்பு குணமாகும். இரவு படுக்க போகும்போது, இந்த மருந்தை போடுவது நல்லது.
* உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவில்லை. மூட்டு வலிக்கிறது என்று சொல்பவர்கள், தேங்காய் எண்ணெயில் கற்பூர கட்டியை சிறிதளவு போட்டு கலக்கி, சூடுபடுத்திய பிறகு மூட்டுகளில் பூசி வந்தால், கீல் வாத வலி, மூட்டு வலி குணமாகும்.
* கறிவேப்பிலையை துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தை போக்கும். சுக்கும், பனை வெல்லமும் போட்டு காய்ச்சிய நீரை குடித்து வந்தால், பித்தம் ஏற்படாது.
* செம்மண்ணை தண்ணீரில் கரைத்து அடுப்பில் சுட வைத்தால், கெட்டியாக சூடாக இருக்கும். இந்த மண்ணை காலில் வீக்கம் உள்ள இடத்தில் கை பொறுக்குமளவு சூடாக எடுத்து, இரவு நேரத்தில் பூச வேண்டும். காலையில் வீக்கம் குறைந்து காணப்படும். இரண்டு மூன்று முறை போட்டால், பூரண குணமடையும். இது, யானைக்கால் உள்ளவர்களுக்கு பொருந்தாது. திடீர் வீக்கம், இடிபட்ட வீக்கம் இவைகளுக்கு மட்டும் பொருந்தும். கடையில் விற்கும் காவியில் போடக் கூடாது, செம்மண்ணில் தான் போட வேண்டும்.
* ஒரு தேக்கரண்டி மிளகு துாள், சிறிதளவு இஞ்சி, ஒரு பிடி துளசி இலை சேர்த்து கஷாயம் போல் செய்து சர்க்கரை, பால் சேர்த்து அருந்த, தொண்டை வலி, சாதாரண ஜுரம் ஆகியவை குணமாகும்.
வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு மூட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தான்.
வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ளம் அவனை நிலை தடுமாற செய்தது.
இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிட்டான். உடனே "ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே யாராவது காப்பாற்றுங்கள்" என்று கதறினான்.
அந்த ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது.
உடனே அவன் ஆற்றில் குதித்து கடுமையாக போராடி அந்த பணமூட்டையை எப்படியோ மீட்டு எடுத்து கரையை அடைந்தான்.
இந்த பண மூட்டையை காப்பாற்ற சொல்லி யாரோ கதறினீர்களே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ? நான் உங்கள் பண மூட்டையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சத்தம் போட்டு அழைத்தான். ஆனால் வெகு நேரம் ஆகியும் யாரும் அதை பெற வரவில்லை.
பிறகுதான் அவனுக்கு புரிந்தது, அந்த பண மூட்டைக்கு சொந்தக்காரர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என்று. "ஐயோ பாவம், அந்த பணக்காரர் இந்த பண மூட்டைக்கு பதிலாக தன்னை காப்பாற்றும்படி குரல் கொடுத்திருந்தால் அவரை காப்பாற்றி இருப்பேனே" என்று அந்த மீனவன் வருந்தினான்.
இப்படிதான் நாமும் நம் தேவைகளை சில நேரங்களில் இறைவனிடம் சரியாக கேட்காமல் வெறும் பணத்தையும் வசதிகளையும் மட்டுமே கேட்கிறோம். அதனால் பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் நிம்மதியை தரும் ஆரோக்கியத்தையும் மனநிறைவையும் பொருட்படுத்துவதேயில்லை..!!
ரஷ்ய நாட்டு யூதர் ஒருவருக்கு இஸ்ரவேலில் சென்று குடியேற அனுமதி கிடைத்தது.
ரஷ்ய விமான நிலையத்தில் அவரது பொதிகளை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரி, லெனினின் உருவச்சிலை ஒன்று அவரிடம் இருப்பதைக் கண்டார்.
இது என்ன?" என்று அவரிடம் அந்த அதிகாரி வினவினார். "தப்பு...சேர்...! உங்கள் கேள்வியே தப்பு...! இவர் யார் என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்...! இவர்தான் கம்யூனிஸத்தின் தந்தை லெனின்! ரஷ்ய மக்களுக்கு நல்லது செய்தவர், நாட்டின் வளர்ச்சிக்கு தீபம் ஏற்றியவர். இந்த மாமனிதரின் ஞாபகர்த்தமாக இதை நான் என்னுடன் கொண்டுசெல்கிறேன்." என்று அந்த ரஷ்ய யூதர் பதிலளித்தார். "சரி, நீங்கள் போகலாம் " என்றார் அந்த அதிகாரி.
இஸ்ரவேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய போது அங்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.
அங்குள்ள அதிகாரி "இது என்ன?" என்று வினவினார். "தப்பு...சார்...! இவன் யார்? என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்!
இவன்தான் பித்துப் பிடித்த மகா கொடியவன், லெனின்! இவனின் கொடுமையால்தான் நான் ரஷ்யாவை விட்டு வரவேண்டியதாயிற்று! நாளாந்தம் இவன் முகத்தைப் பார்த்து திட்டித் தீர்க்கவே இந்த உருவச்சிலையை என்னுடன் கொண்டுவந்தேன்." என்றார்.
இதைக் கேட்டு பெருமிதம் அடைந்த அதிகாரி "சரி, நீங்கள் போகலாம்." என்றார்.
தனது குடியிருப்புக்கு சென்ற ரஷ்ய யூதர், அந்த உருவச்சிலையை தன் வீட்டின் முன் மண்டபத்தில் தெரியும் படியாக மாட்டிவைத்தார். பின்னர் தான் இஸ்ரவேல் தேசத்தில் குடியேருவதை முன்னிட்டு தனது நண்பர்களை, உறவினர்களை அழைத்து விருந்து படைத்தார்.
அங்கே வந்த விருந்தினர்கள் அந்த உருவச்சிலையைக் கண்டு "இவர் யார்?" என்று வினவினார்கள். "தப்பு மக்களே...! இது என்ன?" என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்." இது 24 கரட் கொண்ட 10 கிலோ கிராம் தங்கம்! நான் இதை வரி ஏதும் கட்டாமல், சுங்கத்துறையிடம் சிக்காமல் சாதுரியமாக கொண்டு வந்தேன்." என பெருமையுடன் பதில் அளித்தார்.
பித்தலாட்டம் என்பது: மக்களிடம் ஒரே விடயத்தை பற்பல விதமாக, அதுவும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் புரிய வைக்கும் சூட்சுமமாகும்!
- சோற்றுக் கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் வழவழப்பான விழுதுடன் 1 குவளை
- (Cup) மருதாணி இலையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இதோடு 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள்.
- நான்கு நாட்களுக்கு ஒரு முறை இது போல் குளித்து வந்தால், கருப்பு, சிவப்பு, பழுப்பு என மூவண்ணங்களில் கூந்தல் மின்னும்
- வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொண்டு தலைமுடியைக் கழுவி வந்தால் முடி கொட்டுதல் நிற்கும்
- தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் இவற்றின் பொடிகளை ஒன்றாய்க் கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்துவிட்டு, காலையில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடிகொட்டுதல் குறையும்.
- நெல்லிக்காயை நன்கு சூரிய ஒளியில் உளர்த்தி, நன்கு அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து எடுத்துக்கொண்டு, எண்ணெய்யை கொதிக்க வைக்கவும். பின்னர் எண்ணெய் ஆறியதும் வடிகட்டி எடுத்துக்கொண்டு தலையில் தேய்த்துவந்தால் முடி கருமையாகும்!
- கறிவேப்பிலையை பச்சையாக அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி அதன் பின் தலையில் தேய்த்துவர தலைமுடி நன்கு வளரும்; கருமையாகவும் இருக்கும்
- கேரட், எலுமிச்சை சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி எடுத்துக்கொண்டு தலையில் தேய்த்துவர தலைமுடி நன்கு வளரும்
1. நீங்கள் பதட்டமாக இருந்தால், உங்கள் மூக்கை கிள்ளுங்கள்; நீங்கள் அமைதியாகிவிடுவீர்கள்.
2. பதட்டத்தைக் குறைக்க உங்கள் கையை மேலே தூக்கி வைக்கவும், மெதுவாகவும் ஆழமாகவும் சுவாசிக்கவும்.
3. ஆற்றல் அளவை அதிகரிக்க குளிர்ந்த நீரை .உங்கள் முகத்தில் தெளிக்கவும் அல்லது விறுவிறுப்பான நடை பயிற்சி செய்யவும்.
4. உங்களுக்கு மூக்கு அடைப்பு இருந்தால், உங்கள் வாயின் மேற்கூரையில் ஒரு ஐஸ் கட்டியை வைக்கவும்.
5. உங்களால் தூங்க முடியாவிட்டால், 1 நிமிடம் வேகமாக கண் சிமிட்டுங்கள்.
6. உங்களுக்கு மயக்கம் ஏற்பட்டால், சமநிலையை மீட்டெடுக்க உங்கள் புருவங்களுக்கு இடையில் சில நொடிகள் அழுத்தவும்.
7. விக்கல்களை நிறுத்த, ஆழ்ந்த மூச்சை எடுத்து, 10 வினாடிகள் பிடித்து, இரண்டு முறை விழுங்கி, மூச்சை வெளியே விடுங்கள்.
8. உங்களுக்கு தலைவலி இருந்தால், நிவாரணத்திற்காக உங்கள் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையிலான இடத்தை மசாஜ் செய்யவும்.
9. கவனத்தை மேம்படுத்த, சூயிங் கம் மெல்லுங்கள் - இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்களை விழிப்புடன் வைத்திருக்கும்.
10. உங்களுக்கு குமட்டல் ஏற்பட்டால், உங்கள் வயிற்றை அமைதிப்படுத்த எலுமிச்சை அல்லது இஞ்சியை முகர்ந்து பாருங்கள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். புதிய வாகன சேர்க்கை உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
ரிஷபம்
எதிலும் பொறுமையுடன் செயல்படவும். அரசு காரியத்தில் சிந்தித்து செயல்படவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு வந்து செல்லும். பெரியவர்களிடம் நன்மதிப்புகள் உண்டாகும். பொறுமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் தெளிவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கடகம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். செயல்களில் இருந்த எதிப்புகள் மறையும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் ஆதரவான சூழல் அமையும். பயணம் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். துணைவர் வழி உறவினர்களால் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு ஏற்ற படி இருக்கும். நெருக்கடியான சில பிரசனைகள் குறையும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
துலாம்
பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பிறமொழி மக்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உதவி செய்யும் பொழுது கவனம் வேண்டும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் செயல்படுவது நல்லது. உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியான அறிமுகத்தால் லாபம் மேம்படும். மனதிற்கு இதமான செய்திகள் கிடைக்கும். நவீன கருவிகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
தனுசு
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். சேமிப்பு குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மகரம்
நினைத்த பணிகளை முடிப்பீர்கள். பழைய நினைவுகள் மூலம் சில தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். நவீன யுக்திகள் மூலம் வியாபாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். சமூக தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
வெளியூர் பயணங்களாலும் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். மாற்றமான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உறவினர்களால் மனவருத்தம் தோன்றி மறையும். வாகன விரயம் ஏற்பட்டு நீங்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
அரசு துறைகளில் அலைச்சல் உண்டாகும். சிறிய முதலீட்டில் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வங்கி சார்ந்த உதவிகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 20 ஆம் தேதி வியாழக்கிழமை 6.11.2025.
இன்று மாலை 05.08 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று காலை 08.39 வரை பரணி . பின்னர் கிருத்திகை.
இன்று காலை 09.41 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.
இன்று காலை 06.18 வரை பாலவம். பின்னர் மாலை 05.08 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
இன்று காலை 08.39 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கனடிய அரசாங்கம் , வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளது.
கனடாவின் ஃபெடரல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க கனoa அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2025ஆம் ஆண்டு, 673,650 பேருக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டில், அதாவது, 2026 இல் 385,000 பேருக்கு மட்டுமே தற்காலிகக் குடியிருப்பு அனுமதி வழங்கப்பட ள்ளது.
அத்துடன், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில், ஆண்டுக்கு 370,000 பேருக்கு மட்டுமே தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்பட உள்ளது. முன்னர், 2026இல் 516,000 பேருக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க இருப்பதாக புலம்பெயர்தல் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை 385,000ஆக அரசாங்கம் குறைத்துள்ளது. இந்த மாற்றம், தற்காலிக குடியிருப்பு அனுமதிகளை குறைப்பதன் மூலம் கனடாவுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதையே காட்டுகிறது.
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்து வெளியான படம் ‘ஆர்யன்’. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் முதல் 3 நாட்கள் நன்றாக இருந்தது. மேலும், இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமமும் விற்கப்பட்டு விட்டதால் விஷ்ணு விஷாலுக்கு லாபகரமான படமாகவே ‘ஆர்யன்’ அமைந்தது.
இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். இதில் “ஒரு படத்தின் கதையில் நாயகனாக அல்லது தயாரிபபாளராக எதில் தலையிடுவீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஷ்ணு விஷால், “நான் தலையிடாத அனைத்து சினிமாவும் வெற்றியடைவது இல்லை. சினிமாவை பொறுப்புணர்வுடன் பார்க்கிறேன். எனது தயாரிப்பு மட்டுமல்ல, நடிகனாகவும் என்னுடைய பொறுப்பு இருப்பதாக நம்புகிறேன்.
ஏனென்றால் இயக்குநருக்காக மட்டும் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதில்லை. படம் பார்க்கும் போது நடிகரைத் தான் திட்டுகிறார்கள். அப்படியிருக்கும் போது அதை பொறுப்புடன் செய்ய வேண்டும். எந்த தயாரிப்பாளர், இயக்குநராக இருந்தாலும் போய் கதையில் உள்ள மாற்றங்களைச் சொல்வேன். அப்படியிருப்பதால் மட்டுமே இப்போது வரை எனது பெரும்பாலான படங்கள் வெற்றியடைந்து இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
”தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுப்பதால், புதிய தயாரிப்பாளர்களுக்கு உங்களது அட்வைஸ் என்ன” என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால், “யாருக்கும் அட்வைஸ் சொல்ல வேண்டாம். எனது பரிந்துரை வேண்டுமானால் நடிகர்களுக்கு சொல்கிறேன். கொஞ்சம் சம்பளம் குறைவாக வாங்கச் சொல்வேன். அப்படியிருந்தால் மட்டுமே படத்தின் உருவாக்கத்திற்கு செலவு செய்ய முடியும்” என்று பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என வலம் வந்தவர் கங்கை அமரன். இளையராஜாவின் சகோதரரான இவர், இப்போது முதன்மை பாத்திரத்தில் நடிகராகக் களமிறங்குகிறார்.
அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கும் படம், ‘லெனின் பாண்டியன்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன் சில படங்களில் சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டியுள்ள அவர், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஒரு நிமிட வீடியோவில் கங்கை அமரனின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் கிராமத்து முதியவராக துரைராசு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இதையடுத்து நடிகர் சரத்குமார் உள்பட பல திரைபிரபலங்களும் ரசிகர்களும் அவரை பாராட்டியுள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நடிகை டயான் லாட் (வயது 89).1950-களில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டயான் லாட், ஹாலிவுட் திரைப்படங்களில் பல வலிமையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியான, `சைனா டவுன்', `கோஸ் ஆப் மிஸிஸிப்பி', `பிரைமரி கலர்ஸ்', `28 டேஸ்', உள்பட பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
‘ஆலிஸ் டஸ் நாட்ன்லிவ் ஹியர் எனிமோர்’, ‘வைல்ட் அட் ஹார்ட்’, ‘ராம்ப்ளிங் ரோஸ்’ ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இருந்தாலும் அவருக்கு கிடைக்கவில்லை. இவர் மகள் லாரா டெர்னும் பிரபல நடிகை ஆவார். `ஒயிட் லைட்னிங்’, ‘வைல்ட் அட் ஹார்ட்', ‘சிட்டிசன் ரூத்’, ‘டாடி அண்ட் தெம்’ போன்ற சில படங்களில் இருவரும் தாய்- மகளாக நடித்தனர்.
கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த டயான் லாட் திங்கட்கிழமை காலமானார். இதை அவர் மகள் லாரா டெர்ன் உறுதிப்படுத்தி, அஞ்சலியையும் வெளியிட்டுள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"சோறு கண்ட இடம் சொர்க்கம்"....
இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் என்ன?...,
ஒரு வீட்டிற்கு விருந்துக்குப் போய், அங்கேயே டேரா போட்டு விடுபவர்களைப் பார்த்து உனக்கு சோறு கண்ட இடம் சொர்க்கமாயிற்றே என்று வேடிக்கையாக சொல்வது வழக்கம்.
உண்மையில் இந்த பழமொழி ஏன் வந்தது தெரியுமா?
சிவலிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமியன்று வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் செய்வர். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றார்கள். பிற்காலத்தில், இந்த சுலவடையை, நீண்ட நாட்கள் தங்கும் விருந்தாளிகளைக் கேலி செய்வதற்கு பயன்படுத்தி விட்டார்கள்
ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தைக் கொண்டு முழுக்காட்டுவது இந்த நாளின் சிறப்பாகும். இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்குகிறது.
இந்த அன்னாபிஷேக நாளன்று சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்படுகிறது. லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன
"உலகில் வாழும் மானிடர்களுக்கு மட்டுமல்ல; இவ்வுலக வாழ்வை நீத்தவர்களுக்கும் பிண்டமாக அன்னம் அளிக்கப்படுகிறது' என்று வேதநூல்கள் கூறுகின்றன. இதனையெல்லாம் நினைவு கூர்ந்துதான் துலா மாதமான ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று, சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது.
சிவலிங்கத்தில் காணப்படும் அன்னத்தின் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கத்தின் உருப்பெறும். அதாவது சிவரூபமாகும். இதனை தரிசிப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்குப் பஞ்சமில்லை என்பது ஐதீகம்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
புதிய முயற்சிகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளால் எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். மற்றவர்களின் தலையீடுகளை குடும்பத்தில் குறைத்துக் கொள்ளவும். வியாபார பேச்சுவார்த்தைகளில் பொறுமையை கையாளவும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நற்பெயரை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல ம்
மிதுனம்
உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவான சூழல் ஏற்படும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் மேன்மை ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் கைகூடும். அதிரடியான சில செயல்பாடுகள் மூலம் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். பணி நிமித்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சமூக பணிகளில் அலைச்சல் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
சிம்மம்
எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். மூத்த உடன் பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சமூகப் பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேக நலனில் கவனம் வேண்டும். புதிய பயணங்களால் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். நற்பெயர் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்
கன்னி
திடீர் முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். எதிலும் கோபம் இன்றி மற்றவர்களின் கருத்தை கேட்கவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது விரயங்களை தவிர்க்கும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
துலாம்
வாழ்க்கை துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் அறிமுகங்கள் அதிகரிக்கும். சவாலான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். திறமைகள் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
சிறு தூர பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த சஞ்சலம் மறையும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
உடன் இருப்பவர்களின் பற்றிய புரிதல் அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நினைத்த காரியத்தில் புதிய வியூகங்களை அமைப்பீர்கள். கால்நடைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
குடும்பத்தாரின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உறவுகளிடம் எதிர்பார்த்து உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடு குறித்த சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அதிரடியான சில செயல்கள் மூலம் புதுமையான வாய்ப்புகள் அமையும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
உறவுகள் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். பாடங்களில் இருந்த குழப்பங்கள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன ம்
மீனம்
சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். செலவுகளை குறைப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரைகுறையாக இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்த தடுமாற்றம் விலகும். வியாபாரத்தில் இழந்த வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 19 ஆம் தேதி புதன்கிழமை 5.11.2025.
இன்று இரவு 07.27 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.
இன்று காலை 10.14 வரை அஸ்வினி . பின்னர் பரணி.
இன்று பிற்பகல் 12.46 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.
இன்று காலை 08.35 வரை பத்தரை. பின்னர் இரவு 07.27 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று காலை 06.04 வரை சித்தயோகம். பின்னர் காலை 10.14 வரை மரணயோகம். பின்பு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சீனாவில், லீ ஆங் என்ற பெண்ணுக்குத் திருமணமாகி , தன் கணவன் வீட்டிற்குச்சென்று வாழத் துவங்குகிறாள். அங்கு லீ ஆங்கிற்கும் அவள் மாமியாருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை. எதற்கெடுத்தாலும் வாக்குவாதம், சண்டை, சச்சரவு. நாள்தோறும் இருவருக்கிடையே வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.
லீ ஆங்கின் கணவனோ இருதலைக் கொள்ளி எறும்பு போல திண்டாடினான். ஒரு நாள் லீ ஆங், அவள் தகப்பனாரின் நண்பரைப் பார்க்கச் சென்றாள். அவர்
பச்சிலை, மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர். அவரிடம் லீ ஆங், தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள சண்டை பற்றிக்கூறி மாமியாரைக் கொன்றுவிட வழி
கேட்டார்.
அந்த நாட்டு மருத்துவர் மூலிகைப்
பொடி ஒன்றைக் கொடுத்து, இது மெல்லக்கொல்லும் நஞ்சு, இதை தினம் உன் மாமியார் சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொடு, ஒரு சில மாதங்களில் இயற்கை மரணம் போல் இறந்து விடுவார் என்று கூறினார். மேலும், மிகவும் கவனமாக செயல்படவேண்டும்; முக்கியமாக உன் மாமியாரிடம் மிகுந்த அன்போடு நடந்து கொள் , அப்பொழுதுதான் உன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது. எல்லாம் ஒரு சில மாதங்கள் தானே என்று கூறி அனுப்பி
வைத்தார்.
மருந்தை உணவில் கலந்து,
அன்புடன் மாமியாருக்கு பரிமாறினாள் மருமகள். மருமகளின் அன்பைக் கண்டு மாமியாரும் அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். நாளடைவில் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.
மாதங்கள் சென்றன....
மாமியாரின் அன்பில் திக்குமுக்காடிய லீ ஆங் மருத்துவரிடம் ஓடினாள் . "ஐயா, இந்த மருந்துக்கு மாற்று மருந்து கொடுங்கள்" என கெஞ்ச "ஏன் இப்படி ?" என அவர் கேட்க, "என் மாமியாரை நான் இழக்க விரும்பவில்லை" என அழுதாள்.
அந்த மருத்தவர் சொன்னார், "நான் நஞ்சு, மருந்து எதுவும் கொடுக்கவில்லை; அது வெறும் சத்துப்பொடி தான். அப்போது நஞ்சு உன் மனதில் தான் இருந்தது. நீ அன்பாய் நடந்து கொண்டதால் உன் மனதில் இருந்த நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இப்பொழுது முழுவதும் நீக்கப்பட்டு விட்டது.
சந்தோஷமாய் போய் வா" என்று அனுப்பினார்.
கனடாவில் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்திய மாணவர்கள் சமர்ப்பித்த கல்வி அனுமதி (Study Permit) விண்ணப்பங்களில், 74 சதவீதம் ஓகஸ்ட் மாதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக 'ரொய்ட்டர்ஸ்' தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பதிவான 32% நிராகரிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
கல்வி அனுமதிக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் 2023 ஓகஸ்ட்டில் இருந்த 20,900 இலிருந்து, 2025 ஓகஸ்ட்டில் 4,515 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.
மோசடிமிக்க கல்வி அனுமதிகளை தடுப்பதற்காக கனடா அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளே அதிகப்படியான நிராகரிப்புகளுக்கு முக்கியக் காரணமாக என கூறப்படுகிறது.
கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு தங்க மோதிரம் ஒன்றை கண்டெடுத்ததாக சிமோன் ஹில்ட்பிராண்ட் த்தீசன் என்ற பெண் தெரிவித்துள்ளார்.
தனது மகளுக்கு கிடைக்கப்பெற்ற இனிப்பு பண்டங்களை வீட்டின் அறையில் பிரித்து வகைப்படுத்திய போது அதில் தங்க மோதிரம் ஒன்று இருப்பதை குறித்த பெண் அவதானித்துள்ளார். யாரோ ஒருவருடைய திருமண மோதிரம் என்பதையும் அவர் ஊகித்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் இந்த மோதிரத்தை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என தான் கருதியதாக பெண் குறிப்பிட்டுள்ளார்.
பெறுமதியான இந்த மோதிரம் வேறொருவரின் கைகளில் செல்லக்கூடாது என்பதற்காக மிகவும் குறைந்த விபரங்களை உள்ளடக்கி சமூக ஊடகத்தில் மோதிரம் பற்றிய ஒரு பதிவை இட்டுள்ளார். முகநூலில் இந்த மோதிரம் பற்றிய பதிவு ஒன்றை குறித்த பெண் இட்டுள்ளார்.
முகநூலில் இந்த பதிவு இடப்பட்டு சில மணித்தியாலங்களில் தங்களது சகோதரரின் மோதிரம் தொலைந்து விட்டதாக தகவல் அனுப்பி வைக்கப்பட்டதாகத குறித்த பெண் தெரிவித்துள்ளார். இந்த மோதிரம் பற்றிய தகவல்களை குறித்த நபர்கள் சரியான அடிப்படையில் வழங்கியதன் காரணமாக மோதிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
ஒரு தம்பதி 50வயதில் குழந்தை பெற்றுக் கொள்கின்றார்களா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
ஒரு பெண் பலகாலம் சென்று திருமணம் முடிக்கவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
அவன் 30வயது கடந்தும் ஒழுங்கான தொழில் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறானா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
அவள் பேரப்பிள்ளைகளை கண்டபிறகும், தன் கணவனோடு
கைகோர்த்து வீதியில் நடக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
அவள் கல்விக்காக வெகுதொலைவில் சென்று தனியே தங்கியிருந்து படிக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
அவரவர் அவர் விரும்பியவாறு வாழ்ந்து கொள்ளட்டும்... அவர்களுக்கு வெளியில் சொல்லமுடியாத... உங்களால் கற்பனை பண்ணமுடியாத அளவு சோகங்களும்,துயரங்களும் இருக்கும்.
அவர்களைக்கண்டால்,கொஞ்சம் புன்னகையுடன் உரையாடுங்கள்.
முடியாவிட்டால்,மௌனமாக கடந்துவிடுங்கள்.. அது போதும்..
உங்களது வாழ்க்கை உங்களுக்கானது...
அவர்களது வாழ்க்கை அவர்களுக்கானது...
புறம் பேசி அலைவதைவிட, இத்தகைய மன நிலை அமையப் பெற்றால் நாம் உயர்நதவர்கள் தானே..!





















