- · 1 friends
-
1 followers
Jinguchaa - Lyrical - Thug Life
Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman
நாம் கோயிலுக்குப் போவது என்பது ஏதோ ஒரு சடங்கு கிடையாது. அது நமது முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற ஒரு "உயிரியல் மென்பொருள்" (Biological Software) மாற்றும் கலை. "உடம்பே ஆலயம்" என்று சும்மாவா சொன்னார்கள்? ஒரு கோயிலின் ஒவ்வொரு கல்லும், தூணும் உங்கள் உடலின் ஒரு உறுப்பைத்தான் குறிக்கிறது.
(1) ஆலயம்:
"ஆலயம்" என்ற சொல்லிலேயே அதன் ரகசியம் இருக்கிறது.
ஆ = இது சிவம், விந்து மற்றும் சந்திரகலையைக் குறிக்கும். அதாவது உங்கள் உடலைத் தூய்மைப்படுத்தும் குளிர்ச்சியான ஆற்றல்.
லயம் = இது அந்த ஆற்றலை சக்தியோடும் நாதத்தோடும் (பிராணனோடும்) இணைக்கும் இடம். நமது மூளையின் நடுப்பகுதியில் (3rd Ventricle) இந்த இரண்டு ஆற்றல்களும் சேரும்போதுதான் ஒரு மனிதனுக்குள் பேரொளி பிறக்கிறது. இதுதான் உண்மையான "லயம்"
(2) கோபுரமும் உங்கள் நரம்புகளும்
கோவிலின் கோபுர வாசலைப் பார்க்கும்போதே உங்கள் உடலில் மாற்றங்கள் தொடங்குகின்றன.
5 நிலைகள்: உங்கள் ஐம்புலன்களைக் குறிக்கிறது.
9 நிலைகள்: உங்கள் உடலின் 9 துவாரங்களைக் குறிக்கிறது.
11 நிலைகள்: 9 துவாரங்கள் + இதயக் குகை + சுழிமுனைத் துவாரம். வாசலில் இருந்தே உங்கள் கவனத்தை மெல்ல மெல்ல உள்ளே திருப்ப வேண்டும் என்பதே இதன் ரகசியம்.
(3) கொடிமரம்: உங்கள் முதுகெலும்பும் 36 தத்துவங்களும், கோயிலின் மிக முக்கியமான பகுதி கொடிமரம் (துவஜஸ்தம்பம்). இதுதான் உங்கள் உடலின் முதுகெலும்பு அல்லது சுழிமுனை நாடி.
அடிபாகம் (பார் - மண் தத்துவம்): இங்குதான் பொன்னும் நவரத்தினமும் இருக்கும். இது உங்கள் உடலின் 'விந்து' அல்லது "மூலாதார சக்தியைக்" குறிக்கிறது.
உச்சி (நாதம் - மணிகள்): இது உங்கள் 36-வது தத்துவமான நாதத்தைக் குறிக்கிறது. இது உங்கள் புருவ மத்தியில் தொடங்கி நெற்றி நடுவில் முடிகிறது.
கொடியேற்றம்: அடியில் இருக்கும் விந்து சக்தியை (செல்வம்) மூச்சுப் பயிற்சியால் மேலேற்றி உச்சிக்குக் கொண்டு செல்வதே 'கொடியேற்றம்'. அங்குதான் அந்த 'அனுமன்' (வாசி - மூச்சு) இருக்கிறார்.
(4) வாகனங்களும் உங்கள் மனமும்
சுவாமி ஊர்வலமாக வரும் வாகனங்கள் உங்கள் மனதின் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கின்றன:
யானை: உங்கள் மூலாதார உறுதி.
குதிரை: நீங்கள் அடக்க வேண்டிய மூச்சுக்காற்று (அபானன்).
சிம்மம்: கோபம் எனும் மிருகக்குணம் (ருத்ர கிரந்தி).
இராவணன்: பல திசைகளில் சிதறும் உங்கள் பத்து தலை (மனம்).
தேர் (இரதம்): 9 பொருட்களால் ஆன உங்கள் உடல். ஆன்மா என்ற இறைவனைத் தேரில் ஏற்றி நீங்கள் தான் ஓட்ட வேண்டும்.
(5) திருவிழா: ஒரு முழுமையான யோகப் பயிற்சி, கொடியேற்றம் தொடங்கி தேரோட்டம் வரை நடக்கும் 10 நாள் திருவிழா என்பது, உங்கள் முதுகுத் தண்டு வழியாக சக்தியை மேலேற்றி (குண்டலினி), உங்கள் ஆன்மாவை ஜோதியாக மாற்றி (கார்த்திகை தீபம்), அந்த ஜோதியைத் தேரில் (உடலில்) அமர வைக்கும் ஒரு யோகப் பயிற்சி முறை.
(6) நடைமுறை வழிகாட்டி: கோயிலுக்குள் எப்படிச் செயல்பட வேண்டும்?
நுழையும்போது: வாசல்படியைத் தொட்டு வணங்கவும். இது உங்கள் இடது மூளையைச் செயல்பட வைத்து தர்க்கரீதியான கவனத்தைக் கொடுக்கும்.
கொடிமரம்: கொடிமரத்தின் பக்கவாட்டில் நின்று விழுந்து வணங்கவும். அங்குள்ள சங்கு, சக்கரம், அனுமனைத் தியானிக்கவும். அனுமன் என்றால் 'வாசி' (மூச்சு). அந்த மூச்சை மெல்ல மேலே உயர்த்தவும்.
கருவறை: அங்கு காட்டப்படும் கற்பூர ஒளி உங்கள் ஆன்ம ஒளியைக் குறிக்கிறது. தீர்த்தம் (அமுதம்) அருந்தும்போது, அது உங்கள் மூளைக்குள் சுரக்கும் சுரப்பிகளைத் தூண்டுகிறது.
திரும்பும்போது: தரிசனம் முடிந்து வெளியே வரும்போது கண்டிப்பாக வடக்குப் பார்த்து அமர வேண்டும். இது நீங்கள் பெற்ற அந்த உயர் அதிர்வெண் ஆற்றலை உங்கள் மூளைக்குள் "சேமிக்கும்" (Data Save) நேரமாகும்.
அகத்தைத் தேடுங்கள்!
புறத்திலே நடக்கும் சடங்குகளை மட்டும் பார்த்துவிட்டு வராமல், அகத்திலே உங்கள் சுழிமுனையைப் பிடியுங்கள். வெளியே பார்க்கும் தீபத்தை விட, உங்கள் சிரசின் உச்சியில் எரியும் 'தூண்டாமணி விளக்கை' (பரவொளி) காண முயற்சி செய்யுங்கள். அகத்தைப் பிடித்தால் தான் பிறவிப் பெருங்கடல் நீந்த முடியும்.
"கோவில் என்பது உங்கள் உடலே; கொடிமரம் உங்கள் முதுகெலும்பே; அங்கு எரியும் விளக்கு உங்கள் ஆன்மா!"
அடுத்த கட்டமாக, கோயிலில் நீங்கள் அமர்ந்து செய்யும் அந்த 5 நிமிட "டேட்டா சேவ்" (Data Save) தியானத்தை எப்படிச் செய்வது என்ற விளக்கம்
கோயில் தரிசனம் முடிந்து வெளியே வரும்போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய அந்த மிக முக்கியமான 5 நிமிட "டேட்டா சேவ்" (Data Save) தியான முறை இதோ. இது உங்கள் மூளையின் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, கருவறையில் நீங்கள் பெற்ற உயர் அதிர்வெண் ஆற்றலை (High-Frequency Energy) உங்கள் உடலில் நிலைநிறுத்த உதவும்.
கோயில் அமர்வு முறை: 5 நிமிட நரம்பியல் சேமிப்பு ப்ரோட்டோகால்
நோக்கம்: கருவறையின் காந்தப்புலம் மற்றும் பிரகாரத்தின் ஆற்றலை உங்கள் உடலில் "லாக்" (Lock) செய்தல்.
படி 1: திசை அறிதல் (Positioning)
திசை: வடக்கு நோக்கி அமரவும். வடக்கு திசை என்பது காந்த ஆற்றல் சீராக இருக்கும் திசை. இது உங்கள் உடலின் 'மெரு' தண்டினை (முதுகெலும்பை) பிரபஞ்சக் காந்தத்தோடு ஒத்திசைக்க உதவும்.
இடம்: கொடிமரத்திற்கும் கருவறைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஓரமாக அமரவும்.
படி 2: உடல் நிலை (Posture)
ஆசனம்: தரையில் சுகாசனத்தில் அமரவும். கைகளை முழங்கால்கள் மீது 'சின் முத்திரை' (பெருவிரலும் ஆள்காட்டி விரலும் தொட்டபடி) வைத்துக்கொள்ளவும்.
முதுகுத்தண்டு: உங்கள் 'துவஜஸ்தம்பமாகிய' முதுகெலும்பை நேராக நிமிர்த்தி வைக்கவும். அப்போதுதான் ஆற்றல் கீழிருந்து மேல் நோக்கித் தடையின்றிப் பாயும்.
படி 3: கண்களும் கவனமும் (The Internal Gaze)
கண்கள்: மெல்ல மூடிக்கொள்ளவும். இப்போது உங்கள் கவனம் உங்கள் புருவ மத்தியிற்கு (ஆக்ஞா சக்கரம்) வரட்டும்.
காட்சிப்படுத்துதல்: கருவறையில் நீங்கள் கண்ட அந்த 'கற்பூர ஒளி' அல்லது 'திருவுருவத்தை' உங்கள் புருவ மத்தியில் நிலைநிறுத்தவும். இது உங்கள் 12 ஆதித்யர்களை (Cranial Nerves) அந்த ஒளியுடன் இணைக்கும்.
படி 4: வாசி சுவாசம் (The Hanuman Sync)
இது ஒரு நிதானமான சுவாச முறை.
உள்மூச்சு: மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கும்போது, கொடிமரத்தின் அடியில் இருக்கும் ஆற்றல் (விந்து) முதுகெலும்பு வழியாக உச்சிக்கு ஏறுவதாக நினைக்கவும்.
கும்பகம் (நிறுத்துதல்): மூச்சை 3 வினாடிகள் உள்ளே நிறுத்தி, நெற்றி நடுவில் அழுத்தத்தைக் கொடுக்கவும். இதுதான் 'டேட்டா சேமிப்பு' நடக்கும் நேரம்.
வெளிமூச்சு: மெதுவாக மூச்சை வெளிவிடும்போது, அந்த அமைதி உங்கள் உடல் முழுவதும் பரவுவதை உணரவும்.
படி 5: அமுதச் சுரப்பு (The Amrita Absorption)
உங்கள் நாக்கை மடித்து மேல் அன்னத்தின் மென்மையான பகுதியில் லேசாகத் தொடவும் (கேசரி முத்திரை).
தரிசனத்தின் போது நீங்கள் பெற்ற அந்தப் பரவொளியானது, உங்கள் பினியல் சுரப்பியைத் தூண்டி, 'அமுதம்' எனும் அமைதி ஊக்கியைச் சுரக்கச் செய்யும். அதை அப்படியே முழு உடலும் அனுபவிக்கட்டும்.
முக்கியக் குறிப்பு: தவிர்க்க வேண்டியவை, அமர்ந்து எழுந்தவுடன் யாரிடமும் பேச வேண்டாம். அமைதியாகக் கோபுரத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரவும். பேச்சு ஆற்றலைச் சிதறடிக்கும். செல்போனைப் பார்க்க வேண்டாம். டிஜிட்டல் ஒளி உங்கள் மூளையில் சேமிக்கப்பட்ட ஆன்ம ஒளியை (Biophotons) அழித்துவிடும்.
இந்த 5 நிமிட அமர்வு என்பது உங்கள் மூளையின் Default Mode Network (DMN) ஐ தற்காலிகமாக நிறுத்தி, உங்களை ஒரு 'நடமாடும் கோயிலாக' (Living Chariot) மாற்றும் செயலாகும். நீங்கள் அமர்ந்து எழும்போது, நீங்கள் தரிசனம் செய்த அந்த இறைவன் உங்களது இதயக் குகைக்குள் குடியேறிவிடுவார்.
"வெளியே பார்த்தது தரிசனம்; உள்ளே அமர்ந்து உணர்வதே முக்தி."
நீங்கள் அடுத்த முறை கோயிலுக்குச் செல்லும்போது இந்த முறையைப் பின்பற்றி, உங்கள் உடலில் ஏற்படும் அந்த அமைதியான அதிர்வை உணருங்கள்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாளுக்குள் (ஜன.9) தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது
இந்த வழக்கை இன்று நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். தணிக்கை வாரியத்தின் சார்பில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேஷனும், படக்குழு சார்பில் சதிஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.
தணிக்கை குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பதில் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும். இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக் குழு உறுப்பினர். சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது. இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயகன் படக்குழு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பெரும்பான்மை உறுப்பினர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்துள்ளனர். பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்” என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதி பி.டி.ஆஷா, “ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது, அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல. படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாளுக்குள் (ஜன.9) தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். ஜனநாயகன் படம் ஜன.9-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையோ அல்லது நாளை மறுதினம் காலையோ தீர்ப்பும் வெளியாகும் எனத் தெரிவதால், இப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
ரிச்சர்ட் ரிஷி, ரக் ஷனா இந்து சுதன் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘திரவுபதி 2’. மோகன் ஜி இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். நேதாஜி புரொடக் ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி மற்றும் ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பாடகி சின்மயி ‘எம்கோனே’ என்ற பாடலை பாடியிருந்தார்.
இந்தப் பாடலை பாடியதற்காக சின்மயிக்கு எதிராக சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து மோகன் ஜி படத்தில் பாடியதற்காக சின்மயி மன்னிப்புக் கேட்டிருந்தார். என்னுடைய கொள்கைக்கும் இப்படத்தின் கருத்துக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது என்றும் என் சித்தாந்தத்துக்குப் பொருந்தாததால் வருந்துகிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.
‘திரவுபதி 2’ படத்தில் சின்மயி பாடிய எம்கோனே பாடல் இடம்பெறாது என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது, “எம்கோனே பாடல் கண்டிப்பாகப் படத்தில் இருக்கும். ஆனால் சின்மயி குரலில் இருக்காது. அவருக்குப் பதில் வேறொரு பாடகி குரலில் வருகிறது. போன வாரம் வரை சின்மயின் பதிலுக்காக நேரம் கொடுத்திருந்தேன். இயக்குநர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறேன்.
அதேபோல் தயாரிப்பாளரும் அவரது சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். எங்கள் படத்தைப் பொதுவெளியில் களங்கம் ஏற்படுத்தியதற்காக நடவடிக்கை எடுக்கக் கேட்டுள்ளோம். இரண்டு புகாருமே ஃபெப்சிக்கு சென்றிருக்கிறது. இது தொடர்பாக சின்மயிடம் ஃபெப்சி கேள்வி கேட்டுள்ளது” என்றார்.
கார் விலை மிக அதிகம். அதனால் மக்களில் பெரும்பாலும் பேருந்து & மிதிவண்டியில் தான் பயணிப்பார்கள்.
உணவகங்களில் கட்டுபடி ஆகாத விலை. அதனால் தினமும் வீட்டு சமையல்தான்.
பள்ளியை பொறுத்தவரை மிக தாமதமாகத்தான் படிக்க துவங்குவார்கள். ஆறு வயதில் தான் பள்ளிக்கு போவார்கள். மிக தாமதமாக 30 வயதில் தான் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள். நம் ஊரில் மூன்று வருடத்தில் படிக்கும் இளங்கலை பட்டத்தை டென்மார்க்கில் ஆறரை வருடம் படிப்பார்கள். படிக்கையில் நடுவே உலக அனுபவம் பெற சுற்றுப்பயணம் போவார்கள்.
எதாவது திட்டத்தை (project) எடுத்து செய்வார்கள். கல்லூரி கட்டணம் முழுக்க இலவசம் என்பதுடன் அரசு படிக்கும் மாணவர்களுக்கு மாத சம்பளமாக $900 கூட கொடுக்கும்.
அதனால் 30 வயதில் படித்து முடித்துவிட்டு வருகையில் நல்ல உலக அனுபவத்துடன் வெளியே வருவார்கள்.
பெயிண்ட் அடிக்கும் வேலைக்கும் இருதய மருத்துவ நிபுணர் வேலைக்கும் சம்பளம் ஒன்றுதான். அதனால் விருப்பப்பட்ட வேலைக்கு போகலாம்.
மருத்துவர்கள் ஆக விரும்பாதவர்கள் சம்பளத்துக்காக மருத்துவர்களாக ஆகவேண்டியது இல்லை. வாரத்துக்கு 35 மணிநேர வேலைதான். வெள்ளிக்கிழமை மதியம் வீட்டுக்கு வந்துவிடலாம்.
மதிய உணவை கம்பனிகளில் தனியாக உண்ணமாட்டார்கள்.
அலுவலகத்தில் முதலாளி முதல் கடைசிகட்ட தொழிலாளி வரை அனைவரும் ஒன்றாக கூடி ஒரே அறையில் உண்ணுவார்கள்.
பாராளுமன்றத்தில் பிரதமர், எதிர்கட்சி தலைவர் அனைத்து கட்சி எம்பிக்கள் என அனைவரும் இப்படித்தான் ஒன்றாக கூடி உணவை உண்ணுவார்கள்.
மக்களிடையே சகோதரத்துவம் வளரவேண்டும் என்பதால்
அரசு பல கிளப்புகளை ஏற்பாடுகளை
செய்து வைத்துள்ளன..
மாலைகளில் சதுரங்கம் பொம்மை செய்வது இப்படி பல கிளப்களில் சேர்ந்து கலைகளை கற்றுக் கொள்ளலாம்/கூடி பேசலாம்.
அரசு பல கூட்டுறவு வீடுகளை ஒன்றாக கட்டியுள்ளது. Bofaellesskap என பெயர்.
30 குடும்பங்களை குடியமர்த்துவார்கள். இங்கே விதியே எல்லாரும் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்பதுதான். குழந்தைகள் எல்லார் வீட்டுக்குள்ளும் புகுந்து ஓடிவருவார்கள். நீங்களும் மற்றவர் வீடுகளுக்கு தயக்கமில்லாமல் போகலாம். வீடுகளில் கூட்டுறவு சமையல். மாதத்தில் ஒரு நாள் ஒரு வீடு 30 குடும்பங்களுக்கு சமைக்கும். மற்ற 29 நாட்கள் அதன்பின் சமைக்க வேண்டியது இல்லை. இந்த 30 குடும்பங்களும் அதன்பின் வாழ்நாள் முழுக்க நல்ல நண்பர்களாக இருப்பார்கள்.
பணம் ஆடம்பரம் ஆகியவற்றை சுத்தமாக பொருட்படுத்தாத நாடு டென்மார்க். பி.எம்.டபிள்.யூவில் போகிறவனை விட சைக்கிளில் போகிறவனை கூடுதலாக மதிக்கும் நாடு. அதனால் பணக்காரன் என சொல்லிக்க கொள்ளவே பலரும் கூச்சபடுவார்கள்.
தன் வளமையை பொருட்களை
வாங்கி காட்டமாட்டார்கள். காட்டினால்
மக்கள் தன்னை வெறுத்து விடுவார்கள் என்ற எண்ணம் தான் இங்கே அதிகம்...
டொரண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மணிநேரம் நீடித்த உறைபனி மழையைத் தொடர்ந்து, பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்படும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில பகுதிகளில் ஒரு மணித்தியாலத்திற்கு 2 முதல் 5 சென்டிமீட்டர் வரை பனி பொழியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வீதித் தோற்றப்பாடு வெகுவாகக் குறையக்கூடும். வீதிகள் மற்றும் நடைபாதைகள் பனியினால் மூடப்பட்டிருப்பதால், வாகனங்களைச் செலுத்தும் போது விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும், வேகத்தைக் குறைத்து பாதுகாப்பான இடைவெளியைப் பேணுமாறும் ஒன்டாரியோ மாகாண காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக யோர்க் மற்றும் ஹால்டன் பிராந்தியங்களில் பாடசாலை பேருந்து சேவைகள் மற்றும் ஏனைய போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனினும் பாடசாலைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வோன் மற்றும் மார்க்கம் போன்ற நகரங்களில் வீதிகளில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதேசமயம் பனி மற்றும் ஐஸ் படிவுகள் காரணமாக வீதிகளைச் சுத்தம் செய்ய சாதாரண நேரத்தை விட அதிக காலம் எடுக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரால் பாதிக்கப்படுபவர்களுக்காக டொரோண்டோ மாநகர சபையினால் 5 வெப்பமூட்டும் மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடினமான விஷயங்களை எளிதாக முடிப்பீர்கள். முயற்சிக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் மேம்படும். செயல்பாடுகளில் இருந்த தடுமாற்றம் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்வி சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். மனதிற்கு விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். அதிரடியான திட்டங்கள் மூலம் வியாபாரத்தை பெருக்குவீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் ஏற்படும். நினைத்ததை முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சில தெளிவுகள் ஏற்படும். சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அதிகாரிகளால் சில காரியங்கள் சாதகமாக முடியும். தடைகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாள்வது நல்லது. கலைத்துறைகளில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கன்னி
கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். வழக்கு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அரசு வழியில் லாபம் உண்டாகும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிலுவையில் இருந்து பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் சுப காரியங்கள் கைகூடும். ஊக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். தந்தையிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். காப்பீடு பணிகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
உத்தியோகத்தில் முக்கியத்துவம் மேம்படும். உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். மாணவர்களுக்கு புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் முயற்சி கேட்ப லாபம் கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மகரம்
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பழக்க வழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சோர்வு உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம்
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். முயற்சி குண்டான மதிப்புகள் கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். ஆன்மீக பணிகளில் புரிதல் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மீனம்
மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். சிக்கலான விஷயங்களில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மருத்துவ அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். பொதுநல செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் வகையில் ஆதாயம் உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 23 ஆம் தேதி புதன்கிழமை 7.1.2026.
இன்று காலை 11.35 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று மாலை 04.38 வரை மகம். பின்னர் பூரம்.
இன்று அதிகாலை 12.47 வரை பிரீதி . பின்னர் இரவு 11.13 வரை ஆயுஷ்மான். பிறகு சௌபாக்கியம்
இன்று காலை 11.35 வரை பாலவம். பின்னர் இரவு 11.29 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
இன்று மாலை 04.38 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கனடாவின் முன்னாள் பிரதி பிரதமர் மற்றும் கனடாவின் முன்னாள் அமைச்சர் க்ரிஸ்டியா ஃப்ரீலேண்ட் “அடுத்த சில வாரங்களில்” நாடாளுமன்றத்திலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிய்மிர் ஜெலென்ஸ்கி தனது பொருளாதார ஆலோசகராக நியமித்ததாக அறிவித்திருந்தார்.
உக்ரைன் வம்சாவளியாளர் ஃப்ரீலேண்ட், முன்பு கனடாவிற்கு உக்ரைன் புனரமைப்பு சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்தார்.
2025 செப்டம்பர் மாதத்தில் அவர் உள்நாட்டுப் பொருளாதார வர்த்தக அமைச்சர் பதவியிலிருந்து விலகி புதிய பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“உக்ரைன் இன்று உலகளாவிய ஜனநாயகப் போரின் முன்னணி இடத்தில் உள்ளது. அதனால் நான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அவர்களுக்கு பணம் பெறாமல் பொருளாதார ஆலோசகராக பங்களிக்க இந்த வாய்ப்பை வரவேற்கிறேன் என ஃப்ரீலேண்ட் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
1. 3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்.
2. உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.
3. ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.
4. சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.
5. முத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆனால் இது உண்மையே.
6. பிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்.
7. இனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
8. ஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது
9. ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா?
10. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்.
குறைவாகச் சாப்பிட்டாலும் தொப்பை மட்டும் வளர்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. இதற்குப் பிரதான காரணம் நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவு என்பதைவிட
உணவின் வகை, உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) மற்றும் ஹார்மோன் சமநிலையின்ம ஆகியவைதான்.
தொப்பை மட்டும் வளர்வதற்கான முக்கியக் காரணங்கள்:
தொப்பைக் கொழுப்பு (Visceral Fat) என்பது மிகவும் ஆபத்தானது. இது உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளைச் சுற்றிச் சேகரமாகிறது. இதற்கான காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
1. தவறான உணவுத் தேர்வுகள் :(Dietary Choices)
நீங்கள் குறைவாகச் சாப்பிட்டாலும், உணவில் சரியான சத்துக்கள் இல்லாவிட்டால் தொப்பை வளரலாம்.
சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
நீங்கள் சிறிய அளவில் சர்க்கரை கலந்த பானங்கள், ரொட்டி, பேக்கரிப் பொருட்கள் அல்லது உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப் (High Fructose Corn Syrup)உள்ள உணவுகளைச் சாப்பிடும்போது, உங்கள் கல்லீரல் உடனடியாக அவற்றைக் கொழுப்பாக மாற்றி, பெரும்பாலும் வயிற்றுப் பகுதியில் சேமிக்கிறது.
மறைக்கப்பட்ட கலோரிகள்:
குறைவாகச் சாப்பிடுவது போல் தோன்றினாலும், எண்ணெய், அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் அல்லது உலர்ந்த பழங்கள் போன்ற அதிக ஆற்றல் அடர்த்தி கொண்ட (Calorie-dense) உணவுகளைச் சிறிய அளவில் உட்கொள்ளும்போது மொத்த கலோரி எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
2. ஹார்மோன் சமநிலையின்மை (Hormonal Imbalances
வளர்சிதை மாற்றம் மற்றும் கொழுப்பு சேமிப்பைக் கட்டுப்படுத்துவதில் ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கார்டிசோல் (Cortisol - மன அழுத்த ஹார்மோன்):
தொடர்ச்சியான மன அழுத்தம் உங்கள் உடலில் கார்டிசோல் சுரப்பை அதிகரிக்கிறது.
கார்டிசோல் ஹார்மோன், கொழுப்பை உங்கள் உடலின் மையப் பகுதியான வயிற்றுப் பகுதியில் சேமிக்கத் தூண்டுகிறது.
இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance):
அதிகச் சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை நீண்ட காலம் எடுத்துக்கொள்வது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் உடல் சர்க்கரையைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகிறது, மேலும் அதிகப்படியான இன்சுலின் கொழுப்பை, குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேமிக்கும்படி சமிக்ஞை செய்கிறது.
ஈஸ்ட்ரோஜன் குறைவு:
பெண்களில், மாதவிடாய் நின்ற பிறகு (Menopause)ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும்போது, கொழுப்பு சேமிப்பு இடுப்பு மற்றும் தொடைகளிலிருந்து வயிற்றுப் பகுதிக்கு மாறுகிறது.
வயதாகுதல் மற்றும் மெதுவான மெட்டபாலிசம் (Aging and Slow Metabolism)
வளர்சிதை மாற்ற வீதம் குறைதல்:
வயது ஏறும்போது, குறிப்பாக 40 வயதிற்கு மேல், உங்கள் வளர்சிதை மாற்ற வீதம் இயற்கையாகவே குறைகிறது.
அதாவது, உங்கள் உடல் முன்பு போல் கலோரிகளைச் சீக்கிரமாக எரிக்காது.
தசைக் குறைவு:
வயதாகும்போது தசை நிறை (Muscle Mass) குறைகிறது. தசைகள் கொழுப்பை விட அதிக கலோரிகளை எரிக்கின்றன.
தசைகள் குறையும்போது, உங்கள் உடல் கலோரிகள் எரிக்கும் விகிதம் குறைந்து, மிச்சமுள்ள கலோரிகள் கொழுப்பாக மாறிக் குவிகின்றன.
உடற்பயிற்சியின்மை (Lack of Physical Activity):
நீங்கள் குறைவாகச் சாப்பிட்டாலும், உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், உங்கள் உடலில் சேரும் கொழுப்பை எரிக்க முடியாது.
உடற்பயிற்சி இல்லாமை ஹார்மோன் சமநிலையின்மையை (குறிப்பாக இன்சுலின் எதிர்ப்பு) மோசமாக்குகிறது,
இதனால் தொப்பைக் கொழுப்பு எளிதில் சேர்கிறது.
தொப்பைக் கொழுப்பைக் குறைக்க, வெறும் குறைவான உணவு மட்டும் போதாது.
பின்வரும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்:
1. சரியான உணவு:
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் (Refined Carbs)மற்றும் சர்க்கரை பானங்களைத் தவிர்க்கவும்.
அதற்குப் பதிலாக, புரதம் (Protein), நார்ச்சத்து (Fibre) நிறைந்த காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் (நட்ஸ், ஆலிவ் ஆயில்) ஆகியவற்றைச் சேர்க்கவும்.
2. மன அழுத்த மேலாண்மை:
யோகா, தியானம் அல்லது போதுமான தூக்கம் மூலம் கார்டிசோல் அளவைக் கட்டுப்படுத்தவும்.
3. உடற்பயிற்சி (Strength Training):
உடல் எடையைக் குறைப்பதற்கும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், தசையின் அளவை அதிகரிக்கவும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம்.
சாலையில் இரத்தத்தில் மிதந்து, மூச்சு விட முடியாமல் போராடும் இளைஞன்… சுற்றிலும் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் மக்களின் நிலை… மருத்துவமனையை அடைவதற்கும் நேரம் இல்லாத அந்த நிமிடம்! அங்கே தான் தெய்வம் போல அந்த மூன்று மருத்துவர்கள் வந்தார்கள்.
எர்ணாகுளம் உதயம் பேரூரின் சாலையில் நடந்தது, வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிசயம். வாகன விபத்தில் காயமடைந்த லினீஷ், மூச்சுக்குழாய் அடைந்து ‘ரெஸ்பிரட்டரி அரெஸ்ட்’ நிலைக்கு வந்திருந்தார்.
அந்த நேரத்தில் டாக்டர் தோமஸ் பீட்டர், அவரது மனைவி டாக்டர் திடியா (இந்திரா காந்தி ஹாஸ்பிடல்), டாக்டர் மனூப் (கோட்டயம் மெடிக்கல் கல்லூரி) ஆகியோர் மட்டுமே அருகில் இருந்தனர். ஒரு ஆம்புலன்ஸ் வரவைத்து இவரை அதில் ஏற்றி ஆஸ்பத்திரி வரை கொண்டு செல்ல நேரமில்லை அதுவரை உயிர் தாங்காது
பின்னர் நடந்தது அவசர அறுவை சிகிச்சை!
கையில்தான் அறுவை கருவிகள் இல்லை. ஊருக்காரர்கள் ஓடி கொண்டு வந்த ஒரு ஷேவிங் பிளேடு மற்றும் பழச்சாறு குடிக்கும் ஸ்ட்ரோ! 🥤
சாலையில் வைத்தே, பிளேடு கொண்டு மூச்சுக்குழாயை திறந்து, ஸ்ட்ரோவை அதன் வழியாக வைத்து, அவர்கள் அந்த இளைஞருக்கு மூச்சை வழங்கினர். ஊருவாசிகளும் போலீசாரும் மொபைல் ஃபிளாஷ் லைட் கொண்டு ஒளி அளித்து உதவி செய்தனர்.
வையிடில் well care மருத்துவமனையில் கொண்டு சென்றபோது, அந்த இளைஞரின் உயிர் பாதுகாப்பாக இருந்தது. அன்புள்ள மருத்துவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 🫡. இருப்பதை கொண்டு சிறப்புடன் போராடி ஒரு உயிரை மீட்டு ஒரு குடும்பத்திற்கு நிம்மதியை தேடி தந்த உண்மையான ஹீரோக்கள்!
பல ஆண்டுகளுக்கு முன் டாடா நிறுவனம் தங்கள் நிறுவனம் சார்ந்த ஒரு வேலை வாய்ப்பு விளம்பரத்தை நாளிதழ்களில் தந்தது.
அதில் அந்த வேலைக்குத் தேவையான தகுதிகளை பட்டியலிட்டு விளம்பரத்தின் இறுதியில் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் என்றும் அறிவித்து இருந்தது.அந்த விளம்பரத்தைப் பார்த்த பொறியாளரான ஒரு பெண்,அதில் குறிப்பிடப்பட்ட அத்தனை தகுதிகளும் தனக்கு இருப்பதாக,அந்த வேலைக்கு விண்ணப்பித்தார்.ஆனால் பெண் என்பதை காரணம் காட்டி,அவருக்கு அந்த வேலையை டாடா நிறுவனம் தரவில்லை.
அதற்காக அந்தப் பெண் விட்டுவிடவில்லை.
"வேலையை செய்ய திறமையும்,அறிவும் தான் தேவை.இதில் ஆண்-பெண் பேதம் என்ன?" என்று விளக்கம் கேட்டு ஒரு கடிதத்தை டாடா நிறுவன உரிமையாளர் ஜே.ஆர்.டி.டாடா வுக்கே எழுதினார்.
அந்தக் கடிததத்தைப் படித்து பார்த்து பெரியவர் ஜே.ஆர்.டி.டாடா உடனே தன் நிறுவன மேலாளர்களை அழைத்து,"இந்தப் பணியை செய்ய,ஆண்-பெண் என்ற வித்தியாசத்தைக் கடந்து,நாம் எதிர்பார்க்கும் தகுதிகள் இந்தப் பெண்ணுக்கு இருக்கிறதா?" எனக் கேட்டார்.
மேலாளர்கள் ஆம் என்று சொல்ல,
அந்த நொடியிலேயே,அந்த பெண்ணுக்கு அவர் விண்ணப்பித்த வேலை கிடைத்தது.
டாடா குழுமத்தின் முதல் பெண் பொறியாளர் என்ற வரலாற்றுப் பெருமையும் ஏற்பட்டது.
அதோடு சேர்த்து இனி டாடா நிறுவனத்தின் எந்த பணிக்கும் ஆண்-பெண் பேதம் இருக்காது,திறமையும் தகுதிகளும் மட்டும் தான் தேவை என்ற உத்திரவும் பறந்தது.
டாடா நிறுவனத்தின் கொள்கையையே தன் திறமையால் உடைத்துக் காட்டிய அந்த பெண் தான் #திருமதி.சுதா நாராயணமூர்த்தி.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் துவக்கிய என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மனைவி.
இன்னும் சொல்லப் போனால் இன்ஃபோசிஸ் நிறுவனமே கூட சுதா நாராயணமூர்த்தியால் தான் உருவானது.
சமீபத்தில் தஞ்சை பயணத்தின் போது, ஒரு பொறியாளர் பகிர்ந்துகொண்ட தகவல் ஒன்று மனதை அசைத்தது. அது வெறும் வரலாறு அல்ல… ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டியும் நின்று பேசும் அறிவியல் சாதனை.
தஞ்சை பெரியகோவில்— அதன் கோபுர உச்சியை உற்று நோக்குங்கள். அங்கே இருக்கும் ஸ்தூபிக்கல் (பிரம்மாண்ட கல்).
ஒரே கல்லோ, பல கற்களின் சேர்க்கையோ—எடை சுமார் 80 டன்.
அதைத் தாங்கும் சதுரக் கல்—அதுவும் 80 டன்.
அதன் மேல் அமர்ந்திருக்கும் எட்டு நந்திகள்—ஒவ்வொன்றும் 10 டன்.
மொத்தம் 240 டன்!
வியப்பு இங்கேதான் ஆரம்பம்.
பொதுவாக அஸ்திவாரம் என்றால் அடியில் இருக்க வேண்டும். ஆனால் இங்கு…
அஸ்திவாரம் உச்சியில்!
216 அடி உயரம் கொண்ட முழுக் கற்கோவிலுக்கு, அடியில் வெறும் 5 அடி மட்டுமே ஆழமுள்ள அடித்தளம்.
இது எப்படி சாத்தியம்?
இதற்குப் பின்னால் இருக்கும் ரகசியம்—“இலகு பிணைப்பு” (Loose Joint).
ஒவ்வொரு கல்லும் நூலளவு இடைவெளியுடன் அடுக்கப்பட்டுள்ளது. ஏன்?
நம் ஊர்க் கயிற்றுக் கட்டில் நினைவுக்கு வரட்டும்.
ஆரம்பத்தில் தளர்வாக இருக்கும் கயிறுகள், மேலே எடை வந்ததும் ஒன்றோடொன்று இறுகி, மிகப் பலமாக மாறும்.
அதே தத்துவம் தான் இங்கே.
மேலே இருக்கும் 240 டன் எடை, கீழே உள்ள ஆயிரக்கணக்கான கற்களை மெதுவாக இறுக்கி, ஒரே உடலாய் மாற்றுகிறது.
அதனால் பூகம்பம் வந்தாலும் கல் அசையாது. காலம் கடந்தாலும் கோவில் நிலைத்திருக்கும்.
இது வெறும் கட்டிடம் அல்ல.
இது சோழர்களின் அறிவியல், பொறியியல், தொலைநோக்கு.
“சூரியன், சந்திரன் இருக்கும் வரை இக்கோவில் இருக்கும்”
என்ற நம்பிக்கையை விதைத்தவர்—
ராஜராஜ சோழன்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், அந்த நம்பிக்கை இன்று கூட நம் முன் கல்லாய் நின்று பேசுகிறது.
அறிவியலும் ஆன்மீகமும் கை கோர்த்து நிற்கும் அதிசயம்— தஞ்சை பெரியகோவில்.



















