·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 500
  • More

Jinguchaa - Lyrical - Thug Life

Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman

Comments (0)
Login or Join to comment.
  • 1637

ஜோசியரின் சமாளிப்பு

  • 62
  • 66
  • 66
  • 66
·
Added a post

ஒரு மன்னர் உப்பரிகையில் நின்று கொண்டிருந்தார். நல்ல வெயில், உச்சி வேளை. அப்போது ஒரு இளைஞன் சாலையில் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தான்.

அரசர் அவனை அழைத்து, ஜூஸ் கொடுத்து உபசரித்தார். அதன்பின், "இந்த சித்திரை மாத உச்சி வெயிலில் எதற்கு இந்த ஓட்டம் ஓடுகிறாய்? அப்படி என்ன வேலை?" எனக் கேட்டார்.

"நான் ஒரு மளிகைக் கடை வைத்திருக்கிறேன், மன்னா. அதில் உழைத்துச் சேமித்து ஒரு தங்கக் காசை வாங்கி, கோட்டையின் கிழக்குச் சுவரில் ஒரு செங்கல்லை அகற்றி அதனுள் ஒளித்து வைத்தேன். இன்று ஆண்டவன் புண்ணியத்தில் மதியமே கடையில் உள்ள பொருள்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதனால், ஒளித்து வைத்த காசை எடுத்து, சரக்கு வாங்கி, கடையை மீண்டும் திறந்து விற்றால், மாலையில் நல்ல இலாபம் வரும்."

"அடடா, என்ன மினிமலிசம்? என்ன சிக்கனம்!" என்ற அரசர், "கோட்டையின் கிழக்குச் சுவர் இன்னும் ஒரு கல் தொலைவுதான் இருக்கிறது. அவ்வளவு தூரம் போகாதே. இந்தா, நானே ஒரு தங்கக் காசைக் கொடுக்கிறேன். வைத்துக்கொள்."

"நன்றி, அரசே. ஆனால் நான் கோட்டை மதில்சுவருக்குப் போனால் இரண்டு காசுக்கு பொருள் வாங்கி விற்கலாம். இன்னும் இலாபம் வரும்."

"ஹா, ஹா... நல்ல விவரமான பையன். இந்தா, நூறு காசு."

"அரசே, நான் மீண்டும் கோட்டை.."

"போதும், நிறுத்து. இந்தா ஆயிரம் காசு, போதுமா? இனியாவது கிழக்குச் சுவர் பக்கம் போகாமல் இருப்பாயா?"

"இல்லை, மன்னா. அதுவும் காசுதானே? நீங்கள் கோடி பொற்காசுகள் கொடுத்தாலும், கோட்டையின் கிழக்குச் சுவருக்குப் போய் அதையும் எடுத்துக்கொண்டுதான் போவேன்."

'அடடா, உழைத்துச் சம்பாதித்த காசுக்குத்தான் எத்தனை மதிப்பு! சரி, ஒன்று பண்ணலாம். என் பெண்ணை உனக்கு மணம் முடித்து வைத்து, பாதி நாட்டைக் கொடுக்கிறேன். அப்பவாவது கிழக்குச் சுவர் பக்கம் போகாமல் இருப்பாயா?"

"சரி, அரசே."

அதன்படியே திருமணம் நடந்தது. மன்னர் அதன்பின் "மருமகனே, உனக்குப் பாதி நாட்டைக் கொடுப்பதாகச் சொன்னேன். நாட்டின் எந்தப் பகுதி வேண்டும்?" எனக் கேட்க,

யோசித்த இளைஞன், "கிழக்குப் பகுதி நாட்டைக் கொடுங்கள், மன்னா" என்றானாம்.

எத்தனை செல்வம் சேர்ந்தாலும், மினிமலிஸ்டுகள் எப்போதும் ஒரு பைசாவைக் கூட வீணாக்க மாட்டார்கள் என மன்னர் அதன்பின் புரிந்துகொண்டார்.

  • 69
·
Added article

சி.வி.குமார் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘மாயவன்’. சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி நடித்த இந்த அறிவியல் புனைவு படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த ‘மாயவன்’ படத்தை 5 பாகமாக எடுக்க சி.வி.குமார் திட்டமிட்டுள்ளார்.

மாயவன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அறிவியல் புனைவு படத்துக்கு ‘எக்ஸ் ஒய்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தெலுங்கு நடிகையான ரத்திகா ரவீந்தர், அனிஸ் பிரபாகர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வர்ஷினி வெங்கட், பிரனா, பிரகதீஷ், தர், ரவுடி பேபி வர்ஷு, ஹுசைன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ் சார்பில் சாம்பசிவம் மற்றும் இன்டர்நேஷனல் வழங்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரிஹரன் ஆனந்தராஜா செய்துள்ளார். காந்த், இசை அமைக்கிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

“கதையம்சம், காட்சியமைப்பு, இசை மற்றும் கதாபாத்திரங்கள் வழியாக, தமிழ் சினிமாவில் அறிவியல் புனைவு வகையை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் படமாக இது இருக்கும்” என்கிறது படக்குழு.

  • 75
·
Added a news

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் உரையாற்றுவதற்கு எந்த அவசர பிரச்சினையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த G20 மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கனடாவின் எதிர்காலம் மற்றும் புதிய கூட்டாண்மைகளை ஏற்படுத்துவது தொடர்பில் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மீளவும் வர்த்தகம் தொடர்பில் விவாதங்களை முன்னெடுக்கும்போது நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒண்டாரியோ மாகாண அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வரி எதிர்ப்பு விளம்பரம் தொடர்பான சர்ச்சைகளின் காரணமாக டிரம்ப் நிர்வாகம் கனடாவுடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  • 85
·
Added a news

ஹூண்டாய் நிறுவனம் கனடாவில் 5,616 வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

பர்ஜ் கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள சேக் வால்வு கோளாறு காரணமாக எரிபொருள் கசிவு ஏற்பட்டு, தீ அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சில வாகனங்களில், பர்ஜ் கட்டுப்பாட்டு அமைப்பின் சேக் வால்வு, எரிபொருள் தொட்டி பெரிதாகும் நிலை உருவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் எரிபொருள் தொட்டி சூடான கூறுகளுடன் தொடும் அபாயம் உள்ளது; அதனால் எரிபொருள் கசிவு ஏற்படலாம் இந்த திரும்ப பெறல் 2020–2023 Hyundai Sonata மாடல்களுக்கு பொருந்தும்.

ஆனால் 1.6 லிட்டர் டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்ட குறிப்பிட்ட வாகனங்களே பாதிக்கப்பட்டுள்ளன. இந்த திரும்ப பெறல், முன்பு வெளியிடப்பட்ட 2025637 (Hyundai C0566) திரும்ப பெறலை மாற்றுகிறது.

அந்த திரும்ப பெறலின் கீழ் ஏற்கனவே பழுது பார்த்த வாகனங்களும் மீண்டும் இந்த பழுது பார்க்கப்பட வேண்டும். அறிவிப்பின்படி, ஹூண்டாய் நிறுவனம் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் தகவல் வழங்கி, அருகிலுள்ள டீலர்ஷிப்பில் சேக் வால்வை பரிசோதித்து மாற்றவும், ECU (எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு யூனிட்) மென்பொருளை புதுப்பிக்கவும் அறிவுறுத்தும்.

எரிபொருள் தொட்டியும் அதைச் சுற்றியுள்ள கூறுகளையும் பரிசோதித்து, தேவையானால் பழுது பார்க்கும். கடந்த இரண்டு மாதங்களில், ஹூண்டாய் நிறுவனம் கனடாவில் சுமார் 44,000 வாகனங்களை சீட்பெல்ட் கோளாறு, மேலும் 13,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஸ்டார்டர் மோட்டரில் உள்ள கோளாறு காரணமாக திரும்ப பெற்றது.

  • 85
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்

மேஷம்

மனதளவில் உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். வெளிவட்டத்தில் மதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும். தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட தூர ஒரு பயண வாய்ப்புகள் கைகூடும். ஆர்வம் நிறைந்த நாள்.

 அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

ரிஷபம்

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உருவாகும். வரவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பணி சார்ந்த அவசர முடிவுகளை தவிர்க்கவும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மிதுனம்

குழந்தைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் வழியில் இருந்த வேறுபாடுகள் விலகும். பயணங்கள் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கடகம்

குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோகத்தில் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

சிம்மம்

முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். புதுவிதமான கனவுகள் உருவாகும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கன்னி

உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கால்நடை விஷயங்களில் மேன்மை ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

துலாம்

பிள்ளைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் கருத்துக்கான மதிப்புகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

விருச்சிகம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். சூழ்நிலை அறிந்து திறமைகளை வெளிப்படுத்தவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

தனுசு

சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மகரம்

எதிர்காலம் சார்ந்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மருத்துவ செலவுகள் சிலருக்கு ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். பணி சார்ந்த அலைச்சல்கள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். சொத்து சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மீனம்

சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். அரசு விஷயங்களில் புரிதல்கள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 167
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 23.11.2025.

இன்று மாலை 06.11 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று மாலை 06.57 வரை மூலம் . பின்னர் பூராடம்.

இன்று காலை 11.44 வரை திருதி. பின்னர் சூலம்.

இன்று அதிகாலை 05.18 வரை தைத்தூலம். பின்னர் மாலை 06.11 வரை கரசை. பிறகு வனிசை.

இன்று காலை 06.14 சித்தயோகம். பின்னர் மாலை 06.57 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=336&dpx=2&t=1763872697

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.15 முதல் 11.15 மணி வரை

மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 169

Good Morning...

  • 186
·
Added a news

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கனடாவை குறை கூறி வருவதைத் தொடர்ந்து, தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதியும் தன் பங்குக்கு குறை கூற துவங்கியுள்ளார். 

கனேடியர்களின் வாழ்க்கத்தரம் முன்னேறாமல் இருப்பதற்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என அவர் கூறியுள்ளார். சமூக ஊடகமான எக்ஸில் கனடாவுகு எதிராக பல இடுகைகளை வெளியிட்டுள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதியான JD வேன்ஸ். அவற்றில், கனேடிய மக்களின் வாழ்க்கைத்தரத்தின் தேக்கநிலைக்கு, அதாவது, வாழ்க்கைத்தரம் மேம்படாமல் இருப்பதற்கு, வெளிநாட்டில் பிறந்தவர்கள் கனடாவில் வாழ்வதுதான் காரணம் என வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஆதாரமாக, கனடாவின் தனி நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதாவது, GDP அல்லது Gross Domestic Product அறிக்கையை காட்டியுள்ளார் வேன்ஸ். ஆனால், ஒரு நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டுமேதான் ஒரு நாட்டின் வாக்கைத்தரத்தை தீர்மானிக்கிறதா என ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

  • 319
·
Added a post

ஒரு சிறுவன் ஒரு முதியவரிடம் சென்று சொன்னான்.

"வாழ்க்கை உங்களுக்கு கற்றுத்தந்த மிகப்பெரிய பாடம் என்ன?"

முதியவர் சிறிது நேரம் நிறுத்திவிட்டு சொன்னார்.

"மன்னிக்கவும், ஆனால் நான் இப்போது பேசும் மனநிலையில் இல்லை. நான் மிகவும் கவலையாக இருக்கிறேன்"

பையன் கேட்டான்.

"என்ன விஷயம் ஐயா"

முதியவர் பதிலளித்தார்.

"எனது கருவுற்ற பசு இருபது மணி நேரத்திற்கும் மேலாக பிரசவ வலியில் உள்ளது. வலி அதிகமாக இருப்பதால் அது இறந்துவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்"

பையன் சொன்னான்.

"அதற்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும்"

முதியவர் முணுமுணுத்தார்.

"எனக்கு இந்த மாதிரி விஷயங்கள் பற்றி தெரியாது.நான் வயதானவன் மற்றும் பலவீனமானவன், என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் மற்றவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் நாம் கேட்டால், என் பசுவை இறப்பிலிருந்து காப்பாற்ற முடியும். நீ எனக்கு ஒரு உதவி செய்வாயா?"

சிறுவன் தலையை ஆட்டினான், பின்னர் முதியவர் .

" சாலையில் நீ நடந்து செல். வழியில் தென்படும் நான்கு பேரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். இறக்கும் என் பசுவைப் பற்றி அவர்களின் கருத்து என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்"

சிறுவன் உடனடியாக வெளியேறினான், பின்னர் ஒரு மணி நேரம் கழித்து திரும்பினான். முதியவரிடம் கூறினார்.

“நான்கு பேரிடம் ஆலோசனை கேட்டேன்... முதல் நபர் நீங்கள் உடனடியாக உள்ளூர் கால்நடை மருத்துவரை அழைக்குமாறு பரிந்துரைத்தார், இதனால் அவர் கன்றுக்குட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யலாம்.

இரண்டாவது நபர், பசுவை இயற்கையாகப் பெற்றெடுக்க அதிக நேரம் கொடுங்கள் என்றும் கால்நடை மருத்துவரை அழைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பரிந்துரைத்தார்.

மூன்றாவது நபர் பசு எப்படியும் இறந்துவிடும் அதற்கு முன் நீங்கள் பசுவைக் கொன்று இறைச்சியை விற்கவும், என்றும் பரிந்துரைத்தார்.

நான்காவது நபர் உங்கள் கைகளால் கன்றுக்குட்டியை வெளியே இழுத்து பசுவிற்கு உதவுமாறு பரிந்துரைத்தார்.

முதியவர் கூறினார்.

"சுவாரஸ்யமாக இருக்கிறது, எல்லாருடைய கருத்துக்களும் மிகவும் வேறுபட்டவை அல்லவா. அதனால் நான் எதைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?"

சிறுவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு சொன்னான்.

"எனக்கு முழு விஷயமும் மிகவும் குழப்பமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு அறிவுரைகளை வழங்கினர்"

முதியவர் சிரித்தார். பிறகு அந்த சிறுவனின் தோளில் தட்டி சொன்னார்.

"வாழ்க்கை எனக்குக் கற்றுத்தந்த மிகப் பெரிய பாடத்தை சொல்லுங்கள் என்று நீ என்னிடம் கேட்டபோது நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். அதைச் சொல்லாமல், அதை நீ அனுபவிக்கட்டும் என்று முடிவு செய்தேன். அவ்வாறு செய்யும்போது, ​​​​என் பசுவிற்கு வலி மற்றும் உதவி தேவை என்பது போல் கூறினேன்.

மக்களின் கருத்துக்கள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்பதை உனக்கு உணர வைக்க நான் விரும்பினேன்.

வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்னவென்றால், வெவ்வேறு நபர்கள் ஒரே விஷயத்தைப் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கலாம். நாம் ஒவ்வொருவருக்கும் விஷயங்களைப் பற்றிய சொந்த பார்வை உள்ளது. ஒருவரின் கருத்து உங்களுடையதை விட வித்தியாசமாக இருப்பதால், அவர்கள் தவறு என்று அர்த்தம் இல்லை. நம்முடைய கருத்து மற்றவர்களுடன் ஒத்துப்போவதில்லை என்று நினைப்பதால் நாம் சண்டையிடவோ, வாக்குவாதத்தில் ஈடுபடவோ கூடாது.

பிறரின் கருத்துக்களுடன் நாம் உடன்படாவிட்டாலும் திறந்த மனதுடன், மரியாதையுடன் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

  • 328
·
Added a post

சாதாரணமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்....

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.

  • 368
·
Added a post

●நெஞ்சு எரிச்சல் போகணுமா?

ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை….! மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

●சதை குறையணுமா?

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்...!

●காலையில் சரியாகமலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?

எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)...!

●உடம்பு வலிக்கிறதா?

உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்...!

●கால் பாதங்கள் வலிக்கிறதா?

எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்...!

●மூக்கு அடைப்பா?

மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்...!

●வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போதுவெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்...!

திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்...!

●ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு

அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்...!

●தரையை துடைக்கும் போது

அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்...!

●கடுமையான தலைவலியா?

தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்....!

●சுறுசுறுப்புக்கு சுக்கு வெந்நீர்’

தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.

  • 389
·
Added a post

ஒருமுறை மும்பையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் பணியில் இருந்த TTE (Train Ticket Examiner) இருக்கைக்கு அடியில் மறைந்திருந்த ஒரு பெண்ணைப் பிடித்தார். அவளுக்கு 13 அல்லது 14 வயது இருக்கும்.

TTE அந்த பெண்ணிடம் டிக்கெட்டை காண்பிக்கும்படி கூறினார். அந்தச் சிறுமி தன்னிடம் டிக்கெட் இல்லை என்று தயங்கித் தயங்கி பதிலளித்தாள்.

TTE உடனடியாக அந்த பெண்ணை ரயிலில் இருந்து இறங்குமாறு கூறினார்.

திடீரென்று, பின்னால் இருந்து ஒரு குரல், "அவளுக்கு நான் பணம் தருகிறேன்." தொழில் ரீதியாக கல்லூரி விரிவுரையாளராக இருந்த திருமதி உஷா பட்டாச்சார்யாவின் குரல் அது.

திருமதி பட்டாச்சார்யா அந்தப் பெண்ணின் டிக்கெட்டைப் பணம் கொடுத்து, அவளை அருகில் உட்காரச் சொன்னார். அவள் பெயர் என்ன என்று கேட்டாள்.

"சித்ரா", அந்த பெண் பதிலளித்தாள்.

"நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?"

"நான் செல்ல எங்கும் இல்லை," என்று பெண் கூறினார். தான் அனாதை என்பதை அப்பெண் அப்படி சொன்னாள்.

"அப்படியானால் என்னுடன் வா." திருமதி பட்டாச்சார்யா அவளிடம் கூறினார். பெங்களூரு சென்றடைந்த பிறகு, திருமதி பட்டாச்சார்யா சிறுமியை ஒரு NGO வசம் ஒப்படைத்தார். பின்னர் திருமதி பட்டாச்சார்யா டெல்லிக்கு மாறினார், பின்னர் சில ஆண்டுகளில் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்புகளை இழந்தனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, திருமதி பட்டாச்சார்யா, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரை ஆற்றுவதற்காக அழைக்கப்பட்டார்.

அவர் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். முடித்த பிறகு பில்லைக் கேட்டார். ஆனால் அவருடைய பில் ஏற்கனவே செலுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அவர் திரும்பிப் பார்த்தபோது, ​​கணவனுடன் ஒரு பெண் தன்னைப் பார்த்து சிரித்தாள். திருமதி பட்டாச்சார்யா அந்த தம்பதியினரிடம், "எனக்கு ஏன் கட்டணம் செலுத்தினீர்கள்?"

அதற்கு அந்த இளம்பெண், "மேடம், மும்பையிலிருந்து பெங்களூர் செல்லும் அந்த ரயில் பயணத்திற்கு நீங்கள் செலுத்திய கட்டணத்தை ஒப்பிடுகையில், நான் செலுத்திய பில் மிகவும் குறைவு.

இரு பெண்களின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது.

"ஐயோ சித்ரா... நீயா ..!!!" திருமதி பட்டாச்சார்யா மகிழ்ச்சியுடன் வியந்து கூறினார்

ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி, "மேடம் என் பெயர் இப்போது சித்ரா இல்லை. நான் சுதா மூர்த்தி. மேலும் இவர் என் கணவர்... நாராயண மூர்த்தி" என்றாள்.

ஆச்சரியப்பட வேண்டாம். இன்ஃபோசிஸ் லிமிடெட் தலைவரான திருமதி சுதா மூர்த்தி மற்றும் பல மில்லியன் இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தை நிறுவிய திரு. நாராயண மூர்த்தி ஆகியோரின் உண்மைக் கதைதான இது.

ஆம், மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் சிறிய உதவி அவர்களின் முழு வாழ்க்கையையும் மாற்றிவிடும்!

"துன்பத்தில் இருப்பவர்களுக்கு நல்லது செய்வதை தயவு செய்து தடுக்காதீர்கள், உதாரணமாக, அதைச் செய்ய உங்களுக்கு அதிகாரம் இருக்கும்போது".

இந்தக் கதைக்குள் சற்று ஆழமாகச் சென்றால்...

அக்ஷதா மூர்த்தி இந்த தம்பதியின் மகள் மற்றும் இப்போது இங்கிலாந்தின் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக்கின் மனைவி.

  • 461
·
Added a post

கால் மரத்துப்போதல், நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலிக்கு உதவும் எளிய வைத்தியம்;

ஜாதிக்காய் - 5

வேப்பம் எண்ணெய் - 100 மி.லி

ஜாதிக்காயை இடித்து நன்கு பொடியாக்கவும்.

வேப்ப எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் மிதமான சுட்டில் சுடுபடுத்தி இடித்த சாதிக்காய் பொடியை சேர்த்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.இப்போது தைலமாக மாறிவிடும்.

பிறகு இந்த தைலத்தை கால் முழுவதும் மேலிருந்து கீழாக மற்றும் கீழிருந்து மேலாக 15 நிமிடம் தடவி

1 மணிநேரம் உலர வைத்து விட்டு வெந்நீரில் கழுவவும்.

தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் கால் மறுத்துப்போதல், நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலி அறவே நீங்கும்.

  • 475
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் இருப்பது நல்லது. முதலீடு செயல்களை தவிர்க்கவும். சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

ரிஷபம்

திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். தந்திரமான சில விஷயங்களால் லாபத்தை உருவாக்குவீர்கள். அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் மேம்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மிதுனம்

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். முதலீடு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்த சில விஷயங்களில் தெளிவுகள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். வாழ்க்கையில் புதிய பாதைகள் புலப்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கடகம்

வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக விஷயங்களில் பொறுமை வேண்டும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

சிம்மம்

இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சிந்தனைகளில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய வாகனம் முயற்சிகள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். இரக்கம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

துலாம்

குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறதி பிரச்சனைகள் குறையும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். முதலீடு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பெருந்தன்மையான செயல்களால் மதிப்புகள் உயரும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

எந்த செயலிலும் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பழைய நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலக ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

தனுசு

நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆவண விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் பயணற்ற விவாதங்களை தவிர்க்கவும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

 

மகரம்

பொது காரியங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுப காரியங்களை முன் நின்று முடிப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். உழைப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

மீனம்

மனதளவில் புதிய பாதை புலப்படும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆன்மீகப் பணியில் விருப்பம் அதிகரிக்கும். சிறு சிறு கடன் பிரச்சனைகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். சிரமம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

  • 479

இனம்புரியாத இன்பங்களையும் மகிழ்ச்சிகளையும் நிறைவுகளையும் கொண்டுவரும் இனிய நாள்.

நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்.

  • 480
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை 22.11.2025

இன்று மாலை 04.24 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று மாலை 04.49 வரை கேட்டை. பின்னர் மூலம்.

இன்று காலை 11.29 வரை சுகர்மம். பின்னர் திருதி.

இன்று அதிகாலை 03.31 வரை பாலவம். பின்னர் மாலை 04.24 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று காலை 06.14 மரணயோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=335&dpx=2&t=1763780453

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.15 முதல் 11.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 489

Good Morning....

  • 488
·
Added article

பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, அவரின் மனைவி கன்னிகா ரவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

சினேகன் தற்போது மருத்துவர்களின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து கவலைப்படும் ரசிகர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும், என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர். சினேகன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். வைரல் காய்ச்சல் பரவி வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

சினேகன் மருத்துவமனையில் இருப்பதால், கன்னிகாவும் தனது இரண்டு குழந்தைகளுடன் மருத்துவமனையிலேயே இருந்து கவனித்து வருகிறார். உதவிக்கு கூட யாரும் இல்லாததால். குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

  • 609
·
Added article

ரஜினிகாந்த்தை வைத்து கமல் தயாரிக்கும் தலைவர் 173 படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார் சுந்தர். அவரது இந்த முடிவு அனைவருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் விலகியதால் அடுத்ததாக இப்படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்புதான் அனைவரிடமும் இருக்கிறது.

தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்து வித்தைகளை கற்றுக்கொண்டு முறைமாமன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். ஜெயராம், குஷ்பூ, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்தடுத்து அவர் இயக்கிய மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட்டாகின.

இதன் காரணமாக கோலிவுட்டின் சக்சஸ்ஃபுல் இயக்குநர்களில் ஒருவராக மாறினார். அவரது படங்கள் என்றாலே குடும்பங்கள் கொண்டாடும்படியான விஷயங்கள், நகைச்சுவைகள் இருந்ததால் அவர் படத்துக்கு சென்றால் அனைத்தையும் மறந்துவிட்டு சிரித்துவிட்டு வரலாம் என்ற இமேஜ் உருவாகிவிட்டது. மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்கூட சுந்தர்.சியின் படம் ரிலீஸாகிவிட்டால் தவறாமல் குடும்பத்துடன் சென்று தியேட்டரில் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர். சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காததுதான் காரணம் என்றும்; இல்லை இல்லை ரஜினி சொன்ன சில விஷயங்கள் சுந்தருக்கு ஒத்துவராததால் இந்த வெளியேற்றம் என்று ஆள் ஆளுக்கு பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் பற்றி சுந்தர். சி கொடுத்த பழைய பேட்டி ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

பேட்டியில் சுந்தர். சி, "அருணாச்சலம் கதைக்கான ஒன்லைனை ரஜினி என்னிடம் சொன்னபோது அது எனக்குப் பிடிக்கவில்லை. அவர் மீது இருக்கும் எதிர்பார்ப்புக்கும் அவர் திறனுக்கும் இது போதாது என நினைத்தேன், ஆனால் அவர் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்று இயக்குநர்கள் சொன்னால் அவர் கதையை மாற்ற மாட்டார்.. இயக்குநரை மாற்றுவார் என தெரியும். எனவே அதற்கு ஓகே சொல்லி அதை மெருகேற்றினேன்" என்று கூறியிருக்கிறார்.

  • 618