·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 112
  • More

Jinguchaa - Lyrical - Thug Life

Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman

Comments (0)
Login or Join to comment.

பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமலும்...

வேண்டாத விஷயங்களில் கவலை செலுத்தாமலும்..

தேவையற்ற

கேள்விகளுக்கு

பதில் சொல்லாமல் இருந்தாலே போதும்....

உடலும் மனமும் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும்.

  • 123
·
Added a post

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் அன்று நான் அரவிந்தனைச் சந்தித்தேன். நாகர்கோவில் ஜெயிலின் எதிரிலுள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறான். அவனை நான் அடையாளம் கண்டு கொண்டேன். ஏனோ என் முகம் அவனுக்குப் பிடிகிட்டவில்லை. அந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் என்னுடைய நண்பர். அவனிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று அனுமதி பெற்றுக் கொண்டு ஒரு டீக்கடைக்கு அழைத்து வந்தேன். ஒரு பெரும் தயக்கத்தோடு என் கூட வந்தான். குற்ற உணர்வாய்க் கூட இருக்கலாம்.

அப்போது நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படித்தோம். அரவிந்தன் மிக நன்றாகப் படிப்பவன். நானொரு தான்தோன்றி. பாடத்தை வகுப்பில் படிப்பதோடு சரி. வீட்டுக்கு வந்ததும் ஊர்மாடு மேய்ப்பதுதான் வழக்கம். வீட்டிலும் புத்தகத்தைத் திறந்ததேயில்லை. பார்டர் லைனிலாவது பாசாகி விடுவேன் என்று அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தெரியும். அவர்களும் நீ இந்த படிப்பைத்தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதெல்லாம் கிடையாது.

ஒருநாள் அப்பா என்னிடம், நீ ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்று கூறிய போது, நான் ஒரு பஸ் கண்டக்டராகவே ஆசை என்று கூறியதால் அவர் என்னை ஒரு சில்லறைப் பயல் என்று அடையாளம் கண்டு கொண்டு ஒதுங்கி விட்டார்.

அப்பாவின் ஒரே கண்டிஷன் என்னவென்றால், “நீ என்ன மார்க் எடுத்தாலும் உன்னுடைய பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்திட்டுத் தருவேன். என் கையெழுத்தை மட்டும் கேவலமாக வரைந்து அசிங்கப் படுத்தாதே!” என்பதுதான். அவரது கையெழுத்து ஒரு மிகப்பெரிய முட்டையில் துவங்கி குட்டி குட்டி முட்டைகளாக எதிர்த் திசையில் போய் சோகமாக முடிவடையும். கீழே ஒரு கோடு போட்டு அன்றைய தினத்தைக் குறித்து தனது கையெழுத்தைக் கல்வெட்டாய் உருவேற்றுவார்.

பிட் எழுதுகிற நேரத்தில் அந்தப் பாடத்தைப் படித்துவிடலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்ததால் நான் பிட் எழுதி பரீட்சை எழுதியதில்லை. தேர்வு வேளையில் நன்றாகப் படிக்கும் மாணவர்களைச் சீண்டி தங்களது விடைத்தாளை காட்டுமாறு பல்லிளிக்கும் சக மாணவர்களை நான் மதிப்பதேயில்லை. தங்களது விடைத்தாளை ஒளித்து வைத்து எழுதும் மாணவர்களை நான் கால் காசுக்கு பெறாதவர்கள் என்று முகத்தில் துப்ப எண்ணியதுண்டு.

அரவிந்தும் அப்படிப் பட்டவன்தான். யாரைப்பார்த்தும் பிட் அடிக்க மாட்டான். அவன் என்னுடைய நெருங்கிய நண்பன். எங்கு சென்றாலும் என்னோடே கூட வருவான். கிரவுண்டுக்கு விளையாடப் போனாலும் அவனோடுதான். நாகர்கோவிலில் மொத்தம் நான்கே சாலைகள்தான். அதில் எங்கள் கால்கள் படாத மூலை முடுக்கே கிடையாது. என்னிடம் அப்போது ஒரு ஹீரோ ஜெனரேஷன் எக்ஸ் சைக்கிள் இருந்தது. நாங்கள் பெரும்பாலும் டபுள்ஸ்தான் போவோம். அவன் என்னைவிடவும் கனத்த சரீரம் உடையவன். ஆனாலும் அவனை முன்பக்கம் பாரில் உட்கார வைத்து நான் மிதிப்பேன்.

அவன் வீட்டிலிருந்து இரண்டு பஸ் ஏறி பள்ளிக்கு வருவான். சாயங்காலம் நான்தான் அவனை பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் விடுவேன். அவனது வீடு பள்ளியிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. எனக்கு அவ்வளவு தூரம் வரைக்கும் பயணிக்க வீட்டில் தடை இருந்தது. ஆறு மணிக்கு முன்னால் வீட்டில் போய் உட்காரவில்லையென்றால் அடுத்த நாள் சைக்கிள் சீட்டில் உட்கார முடியாது. உட்கார்ந்தால் வலிக்கும்.

ஒரு தேர்வு நாளொன்றில் அரவிந்தன் தன்னுடைய மேதமைத் தனத்தைக் காட்ட எண்ணி சக பாவப்பட்ட மாணவன் பிட் அடிக்கவே அதை ஒரு குடிகார ஆசிரியரிடம் அரவிந்தன் காட்டிக் கொடுக்க அந்தக் குடிமகான் அவனை வெளுத்து விடைத் தாளோடு சேர்த்து வெளியில் வீசிவிட்டார். முதன் முறையாக அரவிந்தன் மீது எனக்குத் தீராத கோபம் வந்தது. எனக்குக் கோபம் வந்துவிட்டால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியாது என்பது அரவிந்தனுக்கு அன்றுதான் தெரிந்தது. அரவிந்தனின் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. மூக்கிலும் முட்டியிலும் சிராய்ப்பு. பள்ளியின் பின்பக்கம் நின்று கொண்டு அந்தக் குடிகார ஆசிரியரின் நெஞ்சில் சரளைக் கல்லை குறிபார்த்து எறிந்ததில் குறி தவறாமல் அவரது மண்டை கீறியது.

பெரும் பஞ்சாயத்து நடந்து முடிந்தபின்பு அரவிந்தனுக்கும் எனக்கும் மிகப்பெரிய இடைவெளி. ஒரே வகுப்பில் இருந்தாலும் வேறு வேறு கிரகத்தில் அமர்ந்திருந்தோம். அவனது பிரிவை என்னால் தாங்கவே முடியவில்லை. அந்த சம்பவத்துக்குப் பின்பு அந்த ஆசிரியரை எல்லாரும் “மண்டகீறி மாணிக்கம்” என்று அழைத்தது எனக்கு வேறு இன்னொரு தலைவலியை உருவாக்கியது.

அவர் தேவையில்லாமல் என்னைச் சீண்டி எப்படியாவது என்னை டீ சி கொடுத்து வெளியில் தள்ளிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார். ஒருமுறை அவர் என்னை அவதூறாகப் பேசியதால் நான் மதியம் வீட்டுக்குச் சென்று தாத்தாவின் கத்தியை எடுத்து வந்து மாணிக்கத்தின் ஸ்கூட்டர் சீட்டைக் கிழித்து விட்டு, நேராக அவரிடம் சென்று, “இன்னிக்கி உம்ம வண்டிக்க சீட்டு! இனிமேலால் வம்புக்கு வந்தீருன்னா ஒமக்க நெஞ்சி! பிண்டாளுத ஒமக்கு அவ்ளதாம் மரியாத பாத்துக்காரும்!” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதன் பின் தொல்லை இல்லை.

ஆனாலும் அரவிந்தன் என்னிடம் பேசவேயில்லை. என்றாவது ஒருநாள் பேசிவிட மாட்டானா என்று ஏங்கிப் போயிருந்தேன். அவனில்லாமல் என்னிடம் யார் யாரோ பேச முயன்று தோற்றுப் போனார்கள். நானும் யாரிடமும் நெருங்கவேயில்லை. இன்னுமொரு நட்பு எனக்குத் தேவையில்லாமல் போயிருந்தது. எப்போதும் தனிமைதான் துணைவன்.

அப்படியிருக்கும் போது ஒருநாள் அரவிந்தன் என்னை அவனது வீட்டிற்கு சனிக்கிழமை வருமாறு அழைத்ததாக தகவல் சொல்லி அனுப்பினான். அன்றுதான் எனக்கு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் எல்லாமே... அன்றிரவு முழுக்க எனக்குத் தூக்கமேயில்லை. சனிக்கிழமை வந்தது. எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட பன்னிரெண்டு கிலோமீட்டர்கள் சைக்கிள் மிதித்து அவனது வீட்டிற்குச் சென்றேன்.

மனம் முழுக்க படபடப்பு, ‘என்ன சொல்வானோ? நான் என்ன பேச?’

அவனது வீட்டுக் கதவைத் தட்டினேன். அவனது அம்மா கதவைத் திறந்தாள்.

“நீதானேடே அரவிந்தனுக்க வாய அடிச்சி ஒடச்ச? அப்பொரம் எதுக்குப்போ இங்க வந்த? அவனுக்கு ஒன்னய பாக்க இஷ்டமில்லியாம்! கிளம்பு!”

நான் கெஞ்சினேன், “அம்மா! ஒரே ஒரு தடவ அவன பாத்துட்டுப் போயிர்ரென்! அவன கூப்புடுங்கம்மா!”

அவள் செவி சாய்க்கவில்லை. என் கூக்குரலை பலர் நின்று பார்த்துவிட்டுப் போனார்கள். சத்தமாகக் கத்தினேன். “அரவிந்தா இதுக்கா என்னய இவ்ளோ தூரம் வார வச்ச?”

என்னுடைய கண்ணீர் நிற்கவில்லை.

என்னுடைய சைக்கிளுக்கு என்ன துக்கமோ? அதன் டயர் வேறு மூச்சை விட்டிருந்தது. சைக்கிளைக் கையில் பிடித்துக் கொண்டு அரை டவுசரோடு சாலையில் தனிமையாக அழுது கொண்டே நடந்து வந்த பரிதாபத்துக்குரிய அந்த நாள் இன்றைக்கு நினைத்தாலும் அழுகையைத் துவங்கும். பஞ்சர் ஒட்டக் கூட அப்போது காசு இல்லை. நான் இவ்வளவு தூரம் வரும் விஷயம் வீட்டிற்குத் தெரியாது. தெரிந்தால் அனுமதி கிடைக்காது ஆகையால் எதுவும் சொல்லவில்லை. வீடு வந்து சேர மூன்று மணிநேரங்கள் ஆகிப் போயிருந்தன.

‘அரவிந்தன் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? என்னைக் கேவலப் படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தால் என்னை அம்மணமாக ஓட விட்டிருக்கலாமே? ஏன் இப்படி காயப் படுத்தினான்? இப்படியெல்லாமா ஒருவனைப் பழி வாங்குவார்கள்? அவனது அன்பை நாடிப் போனது தவறே இல்லை! ஆனால் அதற்காக இப்படியா?’

என்னால் துக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. உடைந்து அழுதபடியே சாலையில் நடந்த அந்த மூன்று மணிநேரங்கள் என்னுடைய வாழ்வில் என்றுமே மறக்காது. அன்றைக்கு அப்பாவிடம் அழுது புலம்பி நான் இனிமேல் அந்தப் பள்ளிக்குப் போகவே மாட்டேன் என்று சொல்லி அடுத்தநாள் அப்பா போய் டீசி வாங்கி வந்து என்னை வேறொரு பள்ளியில் சேர்த்தார்.

அங்கு புது நண்பர்கள், புது தோழிகள் என்று எல்லாம் மாற ஆரம்பித்தன! அரவிந்தனின் அந்தப் பழிவாங்கல் மட்டும் மனதை விட்டு அகலவேயில்லை. அன்றைக்கு என்னை சந்திக்க விரும்பாத அரவிந்தன் இதோ பாரத் பெட்ரோலியம் சீருடையில் டீக்கடையில் என் முன்பாகத் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறான்.

நான் ஒரு பெரும்துக்கத்தில் அவனிடம் கேட்டேன், “அரவிந்தா! நீ மட்டும் அன்றைக்கு என்னை வெளியில் வந்து பார்த்திருந்தால்?”

என் வாயிலிருந்து வார்த்தைகள் துண்டு துண்டாக வந்து விழுந்தன. எனக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது. அவன் தலையைக் குனிந்து கொண்டான். நான் மீண்டும் கேட்டேன்.

“என்னை ஏன் உதாசீனப் படுத்தினாய் அரவிந்தா? என் கன்னத்தில் அறைந்திருக்கலாமே?”

இம்முறை நான் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். டீக்கடையில் எல்லாரும் எங்களைப் பார்த்தார்கள். அரவிந்தன் குனிந்து உட்கார்ந்து அழுததில் அவனது ஒருசொட்டுக் கண்ணீர்த்துளி டீ கிளாசில் விழுந்தது. கொஞ்ச நேரம் அமைதி.

எழுந்து காரை நோக்கி நடந்தோம். அந்தச் சூழல் சகஜமாக கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டது. அரவிந்தன் தன்னுடைய மவுனத்தைக் கலைத்து விட்டு அவனது அப்பாவின் மரணத்துக்குப் பிற்பாடு படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு வந்ததாகச் சொன்னான். பின்னர் என்னிடம்,

“லேய் ப்ரெவு! நீ அப்போலாம் அவ்ளோ புஸ்கு புஸ்குன்னு இருப்ப? இப்ப தாடியெல்லாம் வச்சி ஆளு சாமியார் மாறி ஆயிட்டியே மக்கா?”

“சும்மாதாம் மக்ளே... ஒரு பந்தாவுக்கு வச்சிருக்கேன்! வேற என்ன வித்தியாசம்லாம் என்கிட்ட தெரியிது அரவிந்தா?”

“அப்போ மாட்டுன டவுசர இப்பவும் கழத்தல பாத்தியா?”

அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. நான் அவனைக் கட்டியணைத்துக் கொண்டு மீண்டும் அழுதேன். நட்பு ஒன்று மட்டும்தான் எல்லார் முன்பாகவும் நம்மைக் கொண்டு போய் நிறுத்தும்! மண்டியிடச் செய்யும்! மானம் கெடுத்தும்! வாழ்வைக் காப்பாற்றும்! சாகும் வரைக்கும் வாழ்வதுதான் வாழ்வு.

  • 136
  • 144

முதல்மனிதன் உருவானபோது காடு அவனை பயமுறுத்தியது.

2ம்மனிதன் உருவானபோது காடு அவனுக்கு பழக்கமானது.

3ம்மனிதன் உருவானபோது காடு அவனுக்கு கற்றுக் கொடுத்தது.

4ம்மனிதன் உருவானபோது காடு அவனிடம் கட்டுப்பட்டது.

அடுத்தடுத்த மனிதர்கள் உருவானபோது காடு அவர்களிடம் காயப்பட்டது.

-நா.முத்துக்குமார்

  • 144
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வித்தியாசமான அணுகுமுறைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கல்வியில் மேன்மை ஏற்படும். அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

 

ரிஷபம்

சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவு கை கொடுக்கும். அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்தநிலை குறையும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மிதுனம்

விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். வியாபார ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்வது நன்மையை உருவாக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கடகம்

மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருக்கவும். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். நினைத்த சில செயல்களில் தாமதம் ஏற்படும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். கல்வி தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

சிம்மம்

செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். தோற்ற பொழிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வழியில் ஆதரவுகள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய நட்புகளால் உற்சாகம் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

கன்னி

வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். சமூக வாழ்க்கையில் மரியாதை அதிகரிக்கும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுகள் மேம்படும். சிக்கல்கள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

துலாம்

கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உணவு சம்பந்தப்பட்ட துறைகளில் மதிப்புகள் உயரும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். ரகசிய பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

விருச்சிகம்

நீண்ட நாள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறீர்கள். மாமன் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது சிக்கல்களை குறைக்கும். மனதளவில் வித்தியாசமான சிந்தனைகள் பிறக்கும். பயண செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கால்நடைகளால் சில விரயங்கள் ஏற்படும். புதிய வீடு வாங்குவது சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

தனுசு

பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசு விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் சில அலைச்சல்களால் புதிய அனுபவம் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தடைப்பட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். சிக்கல்கள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிகப்பு

 

கும்பம்

சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற பயணங்களை தவிர்க்க முடியும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் உருவாகும். உத்தியோக பணிகளில் ஆர்வம் இன்மை உண்டாகும். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். மனதளவில் ஒரு விதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர் இடத்தில் கனிவு வேண்டும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மீனம்

விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடலில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். மேலதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். செயல்களில் நிதானத்தை கையாள்வது நல்லது. ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 158
·
Added a post

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 13.7.2025..

இன்று அதிகாலை 02.47 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று காலை 08.14 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.

இன்று இரவு 07.18 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.

இன்று அதிகாலை 02.47 வரை . கரசை. பின்னர் மாலை 02.19 வரை வனிசை. பிறகு பத்தரை.

இன்று அதிகாலை 05.58 வரை சித்தயோகம். பின்பு காலை 08.14 வரை அமிர்த யோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=48&dpx=1&t=1752370917

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 03.15 முதல் 04.15 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 174

Good Morning...

  • 176
மீசாலை மக்கள் ஒன்றுகூடல்
  • 347

Meesalai Get-Together

  • 367
·
Added a news

கனடாவின் ஒண்டாரியோவிலுள்ள Quadeville என்னுமிடத்தில், கடந்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 23ஆம் திகதி எட்டு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனாள். மறுநாள், அதாவது, 24ஆம் திகதி, நள்ளிரவு அவள் கண்டுபிடிக்கப்பட்டாள். பொலிசார் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இன்னமும் அவள் மருத்துவமனையில்தான் இருக்கிறாள்.

முதலில், அவளை ஏதோ காட்டு மிருகம் தாக்கியிருக்கலாம் என பொலிசார் நினைத்துள்ளார்கள். இந்நிலையில், அவளது உடலில் இருக்கும் காயங்களிலிருந்து எந்த விலங்கின் DNAவும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 

தற்போது, இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக பொலிசார் கிழக்கு ஒண்டாரியோவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனைக் கைது செய்துள்ளார்கள். அவன் மீது, அந்த சிறுமியை கொலை செய்ய முயன்றது மற்றும் சீரழித்தது தொடர்பில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை அவன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளான்..

அந்த சிறுவன் 18 வயதுக்கு குறைவான வயதுடையவன் என்பதால், அவன் யார், அவனுக்கும் அந்த சிறுமிக்கும் என்ன உறவு என்பது போன்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

  • 388
·
Added a post

திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் திருத்தலத்தில் உள்ளது, லலிதாம்பிகை உடனாய மேகநாத சுவாமி திருக்கோவில். லலிதாம்பிகை சன்னிதியில் நடைபெறும் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசித்திப் பெற்றது.

திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் திருத்தலத்தில் உள்ளது, லலிதாம்பிகை உடனாய மேகநாத சுவாமி திருக்கோவில். இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்கர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அருள்கிறார். கோவிலுக்குள் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் லலிதாம்பிகை சன்னிதி இருக்கிறது.

கருவறையில் வீற்றிருக்கும் லலிதாம்பிகை, வலது காலை மடக்கி, இடது காலை தொங்க விட்ட நிலையில், அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த அன்னைக்கு லலிதா சகஸ்ரநாமம், லலிதா நவரத்ன மாலை படித்து வழிபட்டால், அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்கிறார்கள். இந்த லலிதாம்பிகை சன்னிதியில் நடைபெறும் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசித்திப் பெற்றது.

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் சன்னிதியில் நடத்தப்படும் நெய்க்குள தரிசனம் வருடத்திற்கு மூன்று முறை நடத்தப்படும். அவை, வைகாசி மாத பவுர்ணமி தினம், நவராத்தி விழா கொண்டாடப்படும் இறுதி நாளான விஜயதசமி மற்றும் மாசி மாதத்தில் அஷ்டமியும், நவமியும் இணையும் தினம் ஆகியவையாகும்.

இந்த தினங்களில் லலிதாம்பிகையின் சன்னிதிக்கு முன்பாக 15 அடி நீளம், 4 அடி அகலத்திற்கு வாழை இலைகளை பரப்பி வைப்பார்கள். அதன் இரு மருங்கிலும் மட்டை மற்றும் தென்னை ஓலைகளைக் கொண்டு அணைபோடுவார்கள். 15 அடி நீளமும் மூன்று பாகமாக பிரிக்கப்படும். அம்பாளின் சன்னிதி முன்பாக அமைந்த முதல் பாகத்தில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம், அடுத்ததாக புளியோதரை, இறுதியாக தயிர் சாதம் படைக்கப்படும்.

சர்க்கரைப் பொங்கலின் நடுவே குளம் போன்று அமைத்து, அதில் அதிக அளவு நெய்யை ஊற்றுவார். இதனால் அதற்கு 'நெய்க்குளம்' என்று பெயர். லலிதாம்பிகைக்கு அபிஷேகம் முடிந்ததும் திரையிடப்பட்டு அலங்காரங்கள் செய்யப்படும். அதன்பின்னர் திரையை விலக்கும் போது, நெய்க்குளத்தில் அன்னையின் அலங்கார ரூபம் தெரியும். இதனை 'நெய்க்குள தரிசனம்' என்பார்கள். இந்த கண் கோடி தரிசனத்தைக் காணும் பக்தர்களின் வாழ்வில் துன்பங்கள் விலகும். மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்!!

  • 392
·
Added a post

நம்மில் பலருக்கு நரை முடி பிரச்சனை இருக்கும். இதற்கு நாம் ஹேர் டையை உபயோகிப்போம்.

ஆனால் அவசரமாக வெளியே கிளம்பும் போது தலைக்கு குளித்து காய வைத்து, மறுபடி ஹேர் டை உபயோகித்து, தலையை அலசிச் செல்ல நேரம் இல்லா சமயத்தில் இந்த இன்ஸ்டண்ட் ஹேர் டை பேக் உங்களுக்கு உபயோகப்படும்.

தேவையான பொருட்கள்:

கருஞ்சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலா இல்லாத பிளைன் டீத்தூள் - 2 டீ ஸ்பூன்

கடுகு எண்ணெய்

செய்முறை:

ஒரு இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கருஞ்சீரகத்தை 2 டேபிள் ஸ்பூன் அளவு போட்டு வறுக்கவும் அது வறுபடும் போதே அதனுடன் டீத்தூள் 2 டீ ஸ்பூன் சேர்த்து நன்கு வறுக்கவும்.

புகை வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து விட்டு நன்கு வறுக்கவும்.

இரண்டும் நன்கு வறுபட்டு கருஞ்சீரகம் வாசனை வரும்.

நன்கு வறுபட்டவுடன் அதனை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

ஆறிய பின் அதனை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுக்கவும்.

அதன் பின் அந்தக் கலவையை கையால் அலைந்து பாருங்கள் நைசாக இல்லையென்று உங்களுக்கு தோன்றினால் சல்லடையால் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

பின் அதனை ஒரு கண்ணாடி பாட்டிலிலோ அல்லது பிளாஸ்டிக் டப்பாவிலோ சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் வெளியே அவசரமாக கிளம்பும் போது உங்களுக்கு தேவைப்படும் அளவு இந்தக் கலவையை எடுத்து ஒரு பவுலில் போட்டு அதனுடன் 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து தலையில் அப்ளை செய்து விட்டு 10 நிமிடத்தில் நீங்கள் வெளியே கிளம்பி விடலாம் தலையில் தேய்த்து சீவியது போல் மட்டுமே இருக்கும்.

நீங்கள் அடுத்து தலையை அலசும் வரை இது உபயோகப்படும்.

இதை நீங்கள் ஹேர் பேக்காகவும் பயன்படுத்தலாம்.

இந்தக் கலவையை முடியின் வேர்க்கால்களில் படும் படி நன்கு தேய்த்து 1 மணி நேரம் கழித்து அலசலாம்.

இதை அடிக்கடி செய்து வர தலைமுடி இயற்கையாகவே கருமையாக வளரத் தொடங்கும்.

கடுகு எண்ணை தலை முடி வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாகும்.

  • 396
  • 397
  • 400
·
Added a post

கணவர்களுக்கு சில அறிவுரைகள்....

முதலாவதாக மனைவியையும் மனைவி வீட்டாரையும் மரியாதை கொடுத்து மதிக்க வேண்டும்;

மனைவியுடன் சண்டை வரும் போது மனைவி வீட்டாரை இழுக்கக் கூடாது;

மனைவியின் உடல் குறைகளை குத்திக் காட்டிப் பேசக்கூடாது.

தரக்குறைவான வார்த்தைகளைப் பாவிக்காதீர்கள்.

மனைவியுடன் வெளியே போகும் போது சிடு மூஞ்சியாக இல்லாமல் இயல்பாக கூட்டிப் போங்கள்.

உங்கள் பெற்றோரிடம் மனைவியைப் பற்றிப் பெருமையாகக் கூற வேண்டும்.

வெளியே இருக்கும் போது தொலைபேசியில் பேசி உனக்கு ஏதாவது வேண்டுமா... சாப்டியா... என விசாரிக்கணும்.

அவள் ஆசைப்படுவதை உணர்ந்து முடியுமான வரை வாங்கிக் கொடுக்கனும் .

அடிக்கடி வெளியே கூட்டிச் செல்ல வேண்டும்.

மனைவியின் சமையலை குறை கூறாமல் பக்குவமாக புரிய வைக்கணும்.

முடியும் பொழுது நீங்க சமையல் சமையல் செய்து மனைவியை அசத்தணும்.

அடிக்கடி அன்பாக தோளில் தடவி பேசுங்கள்.

முடியும் பொழுதெல்லாம் சிறு சிறு தொகை பணம் கொடுத்து வையுங்கள்.

அடிக்கடி அவள் பிறந்த வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள்.

மனைவி உடல்நிலை சரியில்லை என்றால் நீங்கள் விடுமுறை எடுத்து அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுங்கள்.

வீட்டில் அவள் எடுக்கும் முடிவுகளை மறுக்காதீர்கள்... தவறாயின் புரிய வையுங்கள்.

அடிக்கடி அவளின் நல்ல செயல்களைப் பாராட்டுங்கள்.

நீ எனக்கு கிடைத்தது என் அதிர்ஸ்டம் என்று கூறுங்கள்.

உங்கள் வெளி விஷயங்களை இரவில் மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவளின் நீண்ட கால விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வையுங்கள்.

மனைவியாக இருந்தாலும் ஒரு பெண்ணிற்கான மரியாதையை கொடுங்கள்.

அவளிற்கு பிடிக்காத விடயங்களை தவிருங்கள்.

முக்கியமாக திடீர் என நண்பர்களுடன் வந்து நிக்காதீர்கள்..

ஒரு கணவனானவன் மனைவியை எவ்வாறெல்லாம் நடத்த வேண்டும் ?

தனியறையில் காதலுடன்

சமுதாயத்தில் தலைவியாக

குழந்தைகள் மத்தியில் பாசத்துடன்

உறவுகள் மத்தியில் கண்ணியத்துடன் …

நண்பர்கள் முன்னிலையில் மரியாதையுடன் …

முடியாத வேளையில் தாயாக …

கொஞ்சும் வேளையில் குழந்தையாக …

30-ல் தோழியாக …

40-ல் நாயகியாக …

50-ல் அவளை அவளாக …

60-ல் அம்மாவாக …

70ல் ஏஞ்சலாக …

80-ல் எல்லாமாக, அவளையே எல்லாமாக …

இப்படி இருந்தால் கணவன் மனைவி உறவு சந்தோஷம் இருக்கும்...

  • 402
·
Added a post
மிக அரிதாக நடப்பதை “அத்தி பூத்தாற்போல “ என்று சொல்வார்கள்.
  • 406
·
Added a post

தெற்கு ஆஸ்திரேலியாவில் கூப்பர் பேடி என்றழைக்கப்படும் கிராமம் முழுவதுமே பூமிக்கு அடியில் தான் இருக்கிறது.

இங்கு வீடுகள் மட்டுமின்றி, அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் என அனைத்தும் காணப்படுகின்றது.

இந்த நிலத்தடி கிராமத்தில் இணைய வசதி கூட உள்ளதாம்.

இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தைப் பற்றி நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் ஏராளம்.

பாலைவனமாக இருந்த இந்த கூப்பர் பேடி கிராமத்தில் சுரங்கப் பணிகள் 1915 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இது ஆரம்பத்தில் மாணிக்கக்கல் எடுக்கும் சுரங்கமாக இருந்தது.

இப்பகுதியில் சுரங்கங்கள் தோன்றிய பின்னர், மக்கள் காலியாக உள்ள சுரங்கங்களின் உள்ளே சென்று வாழத் தொடங்கியுள்ளனர்.

நாளடைவில் இங்கு காலத்திற்கு ஏற்ப தட்ப வெப்பநிலை சரியாக இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.

கோடைக்காலத்தில் இங்கு வெப்பநிலை 45டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பூமியைக் குடைந்து குடியேறியுள்ளனர்.

பூமிக்கு உள்ள குடியேறிய பின்னர் கோடை மற்றும் குளிர் காலங்களில் எந்தவொரு கஷ்டமும் இல்லாமல் தட்ப வெப்பநிலை சீராக இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கூப்பர் பேடியின் கிராமத்தில் உள்ள நிலத்தடி வீடுகளுக்கு கோடையில் ஏ.சியோ அல்லது குளிர்காலத்தில் ஹீட்டர்களோ தேவைப்படுவது இல்லை.

இவர்களுக்கு தண்ணீர் 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கிற பகுதியிலிருந்து குழாய் மூலமாக கொண்டு வரப்படுகிறது.

இது உலக அளவில் பேமஸ் ஆனதால், இங்கு பல ஹாலிவுட் படங்களும் படமாக்கப்பட்டுள்ளன.

கூப்பர் பேடி இப்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது. மக்கள் இங்கு சுற்றுலாவிற்காக வந்து செல்கிறார்கள்.

சுற்றுலா மூலம் கூப்பர் பேடி கிராமம் கணிசமான வருவாயை ஈட்டுகிறது.

  • 410
·
Added a post

கிளியோபாட்ரா என்றவுடன் அவர் ஒரு பேரழகி; கழுதைப் பாலில் குளித்து தன் அழகை மேம்படுத்திக் கொண்டவர், என்பன போன்ற கதைகள்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது…

கிளியோபாட்ரா தொடர்பான ஹாலிவுட் திரைப்படங்களும் அவரை ஒரு “செக்ஸ் சிம்பலாகத்தான்” நமக்கு அறிமுகப் படுத்துகின்றன..

ஆனால் உண்மையில் கிளியோபாட்ரா ஒரு பன்முகத்தன்மையும் நுண்ணறிவாற்றலும் மேதமையும் கொண்ட பன்மொழி வித்தகர்; ஆய்வாளர்; மருத்துவர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா…?

1. கிளியோபாட்ரா தனது 17வது வயதில் அரசியாக முடிசூட்டிக் கொண்டார்.

2. அவரால் 9 மொழிகளில் எழுத, படிக்க, பேச முடியும்.

3. அவருக்கு பண்டைய எகிப்திய மொழி தெரியும்

4. அவரது காலத்தில், எகிப்திய மொழி சித்திர எழுத்துக்களை படிக்கத் தெரிந்த ஒரு சிலரில் கிளியோபாட்ராவும் ஒருவர்.

5. அவருக்கு கிரேக்க மொழி தெரியும்.

6. பார்த்தியன், ஹிப்ரூ, மெடஸ், டிராகுலாடைட்டிஸ், சிரியன், எத்தியோப்பியன் மற்றும் அரபி மொழிகளில் சரளமாக எழுத, படிக்க, பேசத் தெரியும் அவருக்கு..

7. இது தவிர, அவர் உலக அரசியல், புவியியல், வரலாறு, வானியல், கணிதம், மருத்துவம், அல்கெமி எனப்படும் ரசவாதம் (தகரத்தை தங்கமாக்கும் வேதியியல்), விலங்கியல், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார்.

கிளியோபாட்ரா தனக்கென தனியாக ஒரு சோதனைச் சாலையை உருவாக்கி அதில் தனது ஆய்வுகளை நடத்தி வந்தார்.

மூலிகைகள் அழகுக் குறிப்புகள் பற்றிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.

அவரது புத்தகங்கள் புகழ்பெற்ற அலெக்சாண்டரியா நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் கி மு 319 இல் அந்த நூலகத்தில் நிகழ்ந்த ஒரு தீவிபத்தில் அந்த புத்தகங்கள் தீக்கிரையாயின என்று கூறப்படுகிறது.

புகழ்பெற்ற ரோமானிய இயற்பியலாளர் கலன் (Galen of Pergamon) கிளியோபாட்ராவின் மருத்துவக் குறிப்புகளை மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளார்.

அவற்றில் முக்கியமானது வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் எண்ணெய் தயாரிப்பு முறைகள் குறித்தவை ஆகும்.

அறிவியல் மற்றும் மருத்துவம் குறித்த பல்வேறு ஆய்வுகள் செய்து அவற்றை அனைவருக்கும் பயன் தரும் வகையில் எழுதி வைத்த பேரழகி கிளியோபாட்ரா என்ற மனிதகுலத்தின் போற்றத்தகு ஆளுமை தன் 39வது வயதிலேயே இறந்துவிட்டார்.

  • 414
·
Added article

தன்னை மறந்து சொக்கிப் போனார் கண்ணதாசன்,

அந்தப் பருவ மங்கை துள்ளிக் குதித்து பந்து விளையாடும் பேரழகில்..!

இது நடந்தது 'ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது.

அந்தப் படத்தில் அபிராமி பட்டர்,

அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும் பாடல்.

இந்தக் காட்சிக்கு 'அபிராமி அந்தாதி' பாடல்களைத்தான் பயன்படுத்த முதலில் திட்டமிட்டிருந்தார் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

ஆனால் அவர் எதிர்பார்த்த உணர்வுகள் அதில் வரவில்லை.

"அழைத்து வாருங்கள் கண்ணதாசனை!"

வந்தார் கண்ணதாசன்.

காட்சியை விளக்கினார் இயக்குநர்.

கண்ணதாசன் தயாரானார் :

"முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம். எழுதிக் கொள்ளுங்கள்."

கண்ணதாசன் சொல்லச் சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார்.

"மணியே மணியின் ஒளியே

ஒளிரும் மணி புனைந்த

அணியே

அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்

பிணியே

பிணிக்கு மருந்தே

அமரர் பெருவிருந்தே

பணியேன் ஒருவரை

நின் பத்ம பாதம் பணிந்த பின்னே."

இந்த இடத்தில் பாடலை நிறுத்திய கண்ணதாசன் "போதும் அபிராமி அந்தாதி" என்றார்.

கண்களை மூடிக் கொண்டு மௌனமானார் கண்ணதாசன்.

சில நிமிட அமைதிக்குப் பிறகு வந்தவை அவரது சொந்த வார்த்தைகள்:

"சொல்லடி அபிராமி

வானில்

சுடர் வருமோ

எனக்கு இடர் வருமோ?"

வார்த்தைகள் வந்து விழ விழ, அதைப் பிடித்து எழுத்தில் வடித்துக் கொண்டார் உதவியாளர்.

கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பாடல் முடிந்து விட்ட வேளை அது.

பாடலின் இறுதி வரிகளாக என்ன என்னவோ சொல்லிப் பார்க்கிறார் கண்ணதாசன். எதுவும் திருப்தி தரவில்லை அவருக்கு.

மீண்டும் கொஞ்ச நேரம் கண்களை மூடுகிறார் கண்ணதாசன் .

அவர் கண்களுக்குள் ஒரு இளம்பெண் துள்ளிக் குதித்து வந்து பந்து விளையாடுகிறாள்.

அவள் பந்து விளையாடும் அந்த அழகில் சொக்கிப் போகிறார் கண்ணதாசன்.

ஆம். திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல் கண்ணதாசன் கண்களுக்குள் திரும்ப திரும்ப வருகிறது.

( தென்காசியை அடுத்த மேலகரத்தில்

18 -ஆம் நூற்றாண்டில் வசித்து வந்த திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய பாடல்கள்தான் திருக்குற்றாலக் குறவஞ்சி )

அந்த குற்றாலக் குறவஞ்சியில் வரும் நாயகி வசந்தவல்லி பந்தாடும் அழகைப் பற்றிச் சொல்லும் வரிகள்.

பந்து துள்ளுவதைப் போல,

பாடல் வரிகளும் கூட துள்ளும்.

இதோ, அந்தப் பகுதி :

வசந்தவல்லி பந்தடித்தல்

செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்

என்றாட -

இடை

சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை

கலந்தாட -

இரு

கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து

குழைந்தாட -

மலர்ப்

பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி

பந்து பயின்றாளே.

இவைதான் குற்றாலக் குறவஞ்சி வரிகள்.

இந்த பந்து விளையாட்டுப் பாடலை,

பற்றிப் பிடித்துக் கொண்டார் கண்ணதாசன். முதல் மூன்று வரிகளை வார்த்தை மாறாமல் அப்படியே எடுத்துக் கொண்டு, கடைசி வரியை மட்டும் இப்படி மாற்றி முடித்தார்.

"மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்

நிலவு எழுந்தாட

விரைந்து வாராயோ

எழுந்து வாராயோ

கனிந்து வாராயோ..."

இப்படித்தான் உருவானது அந்த 'ஆதிபராசக்தி' பாடல்.

நிச்சயமாக டி.எம்.எஸ்சைத் தவிர வேறு யாரும் இப்படி உயிரைக் கொடுத்துப் பாடி இருக்க முடியாது.

எஸ்.வி.சுப்பையாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.

கண்ணதாசனைத் தவிர வேறு எவரும் இத்தனை பொருத்தமாக வார்த்தைகளைக் கோர்த்து

இந்தப் பாடலை வடித்திருக்க முடியாது.

  • 428
·
Added a post

நம் முன்னோர்கள் மற்றும் சித்த வைத்தியத்தில் கூறியுள்ளபடி தினம் இருமுறை வாரம் இருமுறை மாதம் இருமுறை வருடம் இருமுறை என்று செய்தால் உடலில் உள்ள உறுப்புக்கள் தானாகவே தூய்மையாகி விடும்

தினம் இருமுறை என்றால் காலை மாலை பல் துலக்கி மலம்கழித்தல். இம்மாதிரி பல்லை ஒழுங்காக துலக்கினால் கண்களும் இதயமும் நன்றாக இருக்கும். கண்களுக்குச் செல்லும் நரம்புகள் பற்கள்தாடை வழியாகச்செல்கின்றன. எனவே கண்கள் பாதுகாக்கப்படும். வாயில் உள்ள பாக்டீரியாக்களை அப்புறப்படுத்தாமல் இருந்தால் அப்பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலந்து இதயத்துக்குச் செல்லும். எனவே இதயம் பாதிக்கப்படும்.

இருமுறை மலம் கழித்தால் வயிறு சுத்தமாகி விடும் வாயு சேராது. உணவில உள்ள சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கும்.

வாரம் இருமுறை என்றால் புதன்கிழமையும், சனிக்கிழமையும் நல்ல எண்ணெய் குளியல் தேவை. இதனால் உடல் உஷ்ணம் குறைந்து உள்ளுறுப்புக்கள் நன்கு வேலை செய்யும்.

மாதம் இருமுறை என்றால் உடல்உறவு. மனைவியுடன் கொள்ளுதல். அடிக்கடி உறவு கொள்ளாமல் மாதம் இருமுறை செய்தால் நல்ல குழந்தைகள் வலுவாக பிறப்பார்கள். அடிக்கடி உறவு கொண்டால் விந்து கெட்டவன் நொந்து கெட்டாண் என சொல்வர் உள்நரம்புகள் வலுவாக இருக்கும்.

வருடம் இருமுறை என்றால் பேதி எடுத்தல் மற்றும் வாமனம் செயதல். 6 மாதஙகளுக்கு ஒருமுறை விளக்கெண்ணெய் போன்ற மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டு வந்தால் வயிறு சுத்தமாகி உற்சாகம் கிடைக்கும். அடுத்து வாமனம் அதாவது வாய்வழியே சில மருந்துகளைச் சாப்பிட்டு வாந்தி எடுத்தல். இதனால் நமது வாய் முதல் மலக்குடல் முடிவு வரை சுத்தமாகி உடல் முழுவதும் எல்லா உறுப்புக்களும் நன்றாக வேலை செய்யும் வியாதியே வராது 100 வயது நலமாக வாழலாம்

  • 431
·
Added a post

ஒரு பணக்காரனுக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்!

வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும்,

அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவிக்கிறான்!

போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்,.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்... இப்படியாக!

அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறான்.

"இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவனுக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்!"

அவன் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது...

"அது மட்டுமில்லை... கூடவே ஒரு 15 மில்லியன் டாலர்கள் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன்.. அப்பொழுதுதானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்!"

"சரி... உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள்! என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்" என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்!

சொல்லி முடித்தவுடன்... மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது... அந்தப் பணக்காரனின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து, டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது!

அவ்வளவுதான்! அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்!

"இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம்! எவன் இதில் ஜெயிக்கிறான் னு?" “நிச்சயமா எவனாலும், முடியாது!” என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர்!

அப்பொழுது,…

திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம்!

அத்தனை பெரும் மூச்சுக்கூட விட மறந்து,..

உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர்!

அந்த இளைஞன்,.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி விலகி, வேகமாய் நீந்தி,

அடுத்த கரையில் விருட்டென ஏறி,

வெடவெடவென நின்றான்!

பணக்காரனால், தன் கண்களை நம்பமுடியவில்லை!

"பிரமாதம்.! நான் தர்றதா சொன்ன விஷயங்களுக்கும் மேல,.. உனக்கு என்ன வேணுமோ கேளு!

நான் தர்றேன்! எதுவாக இருந்தாலும்!"

அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை!

வாய் தந்தியடித்தது, மிரட்சியில்!

கண்கள் அரண்டு போய் இருந்தது!

பின், ஒருவித வெறியுடன்...

"அதெல்லாம் இருக்கட்டும்...

என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்!!!

நீதி-1 :

முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை... உன் திறமை என்னவென்று,

உனக்கே தெரியாது! (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான்,.. என்பதும் புரியவரும்!!!)

நீதி-2 :

உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள்...

உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே! (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே!)

நீதி-3 :

சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,

நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும்!

நீதி-4 :

சிலருக்கு,.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது! (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும்! பெற்றோரை நம்புங்கள்!)

  • 439
·
Added a post

திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோயிலில், பக்தர்கள் திருவாசகம் வாசிக்கும்போது,

சுவாமி பின்னால் இருக்கும் விளக்கு தானாகவே எரிகிறது!

அது மட்டுமல்ல... எண்ணெய் இல்லாமல், வெறும் தண்ணீர்தான் இருக்கும்.

அப்படி இருந்தும், அழகாக ஜோதி எரிந்து – பிறகு தானாகவே அணைந்து விடுகிறது.

இது ஒரு இயற்கை அல்ல.

சிவனின் அருள், பக்தியின் பலம் – இவை ஒன்றாகும் போது தான் இப்படி நடக்கும்.

  • 441
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வருமான உயர்வு குறித்த முயற்சிகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் பொறுமையை கையாள்வது நல்லது. வர்த்தகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் வெண்மை

 

ரிஷபம்

புதுவிதமான திட்டங்களை மனதில் உருவாக்குவீர்கள். கொடுக்கல் வாங்கலில் திருப்தியான சூழல் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்குவீர்கள். தன வரவுகளில் இருந்த தாமதம் குறையும். அரசு பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

மிதுனம்

பேச்சு திறமைகள் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்புகள் உருவாகும். தந்தைவழி உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். கடன் தொடர்பான சிந்தனைகள் மனதில் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

கடகம்

நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். சிந்தனைப்போக்கில் சில மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் அமையும். தொழில் தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கல்வி பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

சிம்மம்

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கன்னி

மனதில் புது விதமான புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். நுட்பமான சிந்தனைகள் மூலம் பாராட்டுக்கள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

துலாம்

உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் நிமித்தமான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீக தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

விருச்சிகம்

மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இழுபறியான பிரச்சனைகளுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் அனுசரித்துச் செல்வதன் மூலம் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் உடல் உழைப்பு கூடுதலாக இருக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

தனுசு

சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். தொழில்நுட்ப கருவிகளால் விரயம் உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மகரம்

கல்வி பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் முன்கோபம் இன்றி விவேகத்துடன் செயல்படவும். தற்பெருமையான பேச்சுகளை குறைத்துக்கொள்ளவும். உத்தியோகம் விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. வாகன பராமரிப்பு தொடர்பான செலவுகள் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

கும்பம்

நினைத்த சில பணிகளை அலைச்சல்களுக்கு பின்பு முடிப்பீர்கள். மனம் விட்டு பேசுவதன் மூலம் கவலைகள் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த சாதகமான சூழல்கள் அமையும். துன்பம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மீனம்

மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உருவாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

  • 621
·
Added a post

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை 12.7.2025.

இன்று அதிகாலை 03.15 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று காலை 08.04 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

இன்று இரவு 08.51 வரை விஷ்கம்பம். பின்னர் பிரீதி.

இன்று அதிகாலை 03.15 வரை . கௌலவம். பின்னர் மாலை 03.01 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=47&dpx=1&t=1752294310

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 632