·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 503
  • More

Jinguchaa - Lyrical - Thug Life

Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman

Comments (0)
Login or Join to comment.
  • 1949
·
Added article

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று (நவம்பர் 24, 2025) மும்பையில் காலமானார். அவருக்கு வயது 89.

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் காலமானார். 89 வயதான தர்மேந்திரா இந்த மாத தொடக்கத்தில் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் காலமானார். அவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • 97
·
Added article

தமிழ் சினி​மா​வின் முன்​னணி நடிக​ரான அஜித்​கு​மார் கார்​பந்தய வீரராக​வும் திகழ்ந்து வரு​கிறார். அவர், ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற கார் பந்தய நிறு​வனத்​தை​யும் சொந்​த​மாக வைத்​துள்​ளார்.

இந்நிறுவனம், துபாய், பெல்​ஜி​யம், ஸ்பெ​யினின் பார்​சிலோனா போன்ற பகு​தி​களில் நடந்த கார் பந்​த​யங்​களில் பங்​கேற்​றது. இதில் அவரது கார் ரேஸ் அணி, இரண்டு முறை மூன்​றாவது இடத்​தை​யும், ஒரு​முறை 2-வது இடத்​தை​யும் வென்​றுள்​ளது.

இந்​நிலை​யில், இத்​தாலி​யின் வெனிஸில் மறைந்த தொழில​திபரும் கார் பந்தய வீரரு​மான பிலிப் சாரியோலின் நினை​வாக, அஜித் குமாருக்கு 2025-ம் ஆண்​டின் ‘ஜென்​டில்​மேன் டிரைவர் விருது’வழங்​கப்​பட்​டுள்​ளது.

சர்​வ​தேச அளவி​லான கார் பந்​த​யத்​தில் இந்​தி​யா​வின் பெருமையை நிலை​நாட்​டியதற்​காக அவருக்கு எஸ்​ஆர்ஓ மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறு​வனம் இந்த கவுர​வத்தை வழங்​கி​யுள்​ளது.

இந்த விருதை பெறு​வதற்​காக அஜித்​கு​மார் தனது குடும்​பத்​துடன் இத்​தாலிக்​குச் சென்​றுள்​ளார். அங்​கிருந்து அவர் மனைவி ஷாலினி தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் புகைப்​படங்​களை பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்​கள், பிரபலங்​கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரி​வித்து வரு​கின்​றனர்.

‘குட் பேட் அக்​லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் மீண்​டும் நடிக்​கிறார் அஜித். இப்​படத்​தின் அறி​விப்பு ஜனவரி மாதம் வெளி​யாகும்​ என்​று தெரி​கிறது.

  • 97
·
Added a post

ரொம்ப நாளா நாள்பட்ட ஒற்றைத் தலைவலியால அவதிப்படறீங்களா? பார்க்காத வைத்தியமில்ல, ஆனா இந்த தலைவலியை சரிபண்ணவே முடியலையா? இனிமேல் அந்த கவலையை விடுங்க. இந்த ஒரே ஒரு சூப்பர் மூலிகை பானம் மட்டும் போதும். உங்களோட தலைவலி எந்த பக்கம் இருந்துச்சுன்னே தெரியாம போயிடும்.

லைவலியைப் பொருத்தவரைக்கும் பல வகைகள் இருக்கின்றன. அதற்கான காரணங்களும் பல இருக்கின்றன. ஆனால் தலைவலியிலேயே பல வகைகள் உண்டு. அதில் ஒற்றைத் தலைவலி தான் இருப்பதிலேயே சிரமமான ஒன்று. ஏனென்றால் மற்ற தலைவலிகளைப் போல இல்லாமல் இது கொஞ்சம் கொடுமையானதாகவே இருக்கும். மற்ற தலைவலி வந்தால் சில மணி நேரங்களில் சரியாகிவிடும். ஆனால் ஒற்றைத் தலைவலி அப்படியல்ல. நாள்கணக்கில் இருக்கும். எந்த வேலையுமே செய்ய முடியாது.

நெற்றியின் பாதியில் இருந்து ஒருபக்கத்தில் மட்டும் வலிக்கும். அது அப்படியு காதுக்குப் பின்னால் கழுத்தின் பின்பக்கம் வரைக்கும் வலி இருக்கும். வலியைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது. நீண்ட நேரம் வரைக்கும் இந்த வலி இருக்கும். சில சமயங்களில் ஒரு நாளைத் தாண்டி இரண்டு நாள் வரைக்கும் கூட வலி இருக்கும். மற்ற தலைவலி என்றால் அந்த பகுதியில் தான் வலி இருக்கும். நெற்றி மட்டும் தலையில் வெடுக் வெடுக்கென்று கரண்ட் ஷாக் அடிப்பது போல இழுக்கும்.

சின்னதாக ஏதாவது சத்தம் கேட்பது போல இருந்தால் கூட எரிச்சல் உணர்வு அதிகமாக இருக்கும். ிலருக்கு ஒற்றைத் தலைவலி வந்து விட்டாலே குமட்டல் மற்றும் வாந்தி உள்ளிட்ட உணவுகளும் இருக்கும். குறைந்தது ஒரு நாள் முதல் இரண்டு நாள் வரைக்கும் இந்த வலி இருக்கும். அப்படிப்பட்ட கொடுமையான ஒற்றைத் தலைவலிக்கு தான் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு சூப்பர் பானம் ஒன்றை தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருள்கள்

இஞ்சி - 1 இன்ச் அளவு,

மிளகு - 10,

எலுமிச்சை பழம் - 1,

மஞ்சள் - அரை ஸ்பூன்,

தண்ணீர் - 300 மில்லி,

இந்த எளிமையான வீட்டில் இருக்கும் பொருள்களை மட்டும் வைத்தே ஒற்றைத் தலைவலியைக் குறைக்கலாம். தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் ஆரம்பத்தில் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தலாம்.

இந்த எளிமையான பானத்தைத் தயார் செய்து குடிப்பதன் மூலம் ஒற்றைத் தலைவலி மட்டுமல்ல, நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இது ஜீரண ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில சேர்க்கப்படும் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. மிளகில் உள்ள பைபரின் மற்றும் எலுமிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் சி ஆகியவை கல்லீரல் கழிவுகளைச் சுத்தம் செய்யும்.

மேற்கண்ட இத்தனை நன்மைகள் கொண்ட பானத்தைக் குடித்தால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஒற்றைத் தலைவலியை சரிசெய்வதோடு நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கும் மிகப்பெரிய அளவில் உதவுகிறது.

  • 108
·
Added a news

கனடாவில் பிரபல யோகட் பானமான யோப்லாயிட் யோப் Yoplait YOP தயாரிப்புகள் சிலவற்றில், பிளாஸ்டிக் துண்டுகள் கலந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், கனடிய உணவு ஆய்வு அமைப்பு திரும்ப் பெறும் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பேக்கேஜ் கூறுகளில் உள்ள குறைபாட்டால் தயாரிப்பில் பிளாஸ்டிக் கலக்க வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த சுய விருப்ப அடிப்படையிலான மீளப் பெறல் மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

200 மில்லி லீற்றர் அளவு கொண்ட புளூபெரி, ஸ்ட்ரோபெரி, ஸ்ட்ரோபெரி–வாழை, பர்த்டே கேக், வனில்லா, வாழை, ராஸ்ப்பெரி, பீச், மந்தரின்,ட்ராபிக்கல், பிளாக்பெரி–ஸ்டார்ஃப்ரூட், லாக்டோஸ் ஃப்ரீ ஸ்ட்ரோபெரி–ராஸ்ப்பெரி, லாக்டோஸ் ஃப்ரீ மாம்பழம் போன்ற பானங்கள் இவ்வாறு மீளப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பான வகைகளினால் இதுவரையில் யாருக்கும் உடல் நலப் பிரச்சினைகள் எற்பட்டதாக தெரியவரவில்லை எனவும் எச்சரிக்கை அடிப்படையில் பானங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 116
·
Added a news

கனடாவின் சில பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் உணவிற்கான செலவுகளை மேற்கொள்ள முடியாது திண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரின்ஸ் எட்வர்ட் தீவு பல்கலைக்கழகம் (UPEI) மாணவர்கள் வாழ்வாதாரச் செலவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக உணவு வங்கியை பயன்படுத்தும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் 60% வரை அதிகரித்துள்ளது.

2022ம் ஆண்டில் உணவு வங்கிகளின் உதவியை நாடிய மாணவர் எண்ணிக்கை 2,900 எனவும் 2024ம் ஆண்டில் இந்த எண்ணிக்க 4,600 ஆக உயர்வடைந்துள்ளது எனுவும் தெரிவிக்கப்படுகின்றது.

விலைவாசி உயர்வு, வாடகை, கட்டணங்கள், புத்தகங்கள், மின்சாரம், தொலைபேசி பில்கள் ஆகியவற்றின் செலவுகளை சமாளிக்க பலர் இலவச உணவு உதவியை நாடுகின்றனர்.

உணவு மட்டும் அல்ல. வாடகை, கட்டணம், புத்தகம், மின்சாரம் என பல செலவுகள் உள்ளன. பல மாணவர்கள் பிற செலவுகளுக்காக உணவை விட்டு விடுகின்றனர் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர். கனடா முழுவதும் 20 வீதமான மாணவர்கள் உணவு பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

  • 117
  • 118
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

விமர்சித்தவர்கள் உங்கள் உதவிகளை நாடுவார்கள். தடைபட்ட பணிகளை முடிப்பீர்கள். தள்ளிப்போன சில காரியம் கைகூடும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். மனதில் இருந்த குழப்பம் விலகும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

ரிஷபம்

பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை ஏற்படும். குழந்தைகள் இடத்தில் பொறுமை வேண்டும். நிறை குறைகளை பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெறும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிலும் விவேகத்தோடு செயல்படவும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

 

மிதுனம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் நிறைவு பெறும். வீடு வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவுகள் மேம்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். சமூக தொடர்பான புதிய கண்ணோட்டம் உருவாகும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

கடகம்

தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்களிடத்தில் மதிப்புகள் உயரும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த தடுமாற்றம் குறையும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். நம்பிக்கை பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

சிம்மம்

மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபார பணிகளில் அனுகூலம் உண்டாகும். பிரபலமானவர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கன்னி

நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனைவி விஷயங்களில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

துலாம்

எதிலும் விவேகத்தோடு செயல்படுவீர்கள். பாகப்பிரிவினை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

விருச்சிகம்

கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். தோற்றப் பொழிவுகள் அதிகரிக்கும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். வேலையாட்கள் இடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். சில வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். முயற்சி சாதகமாகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி

 

தனுசு

தேக ஆரோக்கியம் பொழிவு கூடும். அலைபாயும் மனதினால் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மகரம்

தனவருவாய் தேவைக்கு இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல்கள் அமையும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் மேம்படும். மனதளவில் ஒருவிதமான தடுமாற்றங்கள் ஏற்படும். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கும்பம்

எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கமிஷன் பணிகளில் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் உயரும். உடல் ஆரோக்கியப் பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

மனதில் இருந்த கவலைகள் குறையும். நெருக்கமானவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் ஏற்படும். வேலையாட்கள் பற்றிய புரிதல்கள் உருவாகும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உழைப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

  • 210
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 8 ஆம் தேதி திங்கட்கிழமை 24.11.2025.

திதி

சுக்ல பக்ஷ சதுர்த்தி  - Nov 23 07:25 PM – Nov 24 09:22 PM

சுக்ல பக்ஷ பஞ்சமி  - Nov 24 09:22 PM – Nov 25 10:57 PM

நட்சத்திரம்

பூராடம் - Nov 23 07:27 PM – Nov 24 09:53 PM

உத்திராடம் - Nov 24 09:53 PM – Nov 25 11:57 PM

கரணம்

வனசை - Nov 23 07:25 PM – Nov 24 08:26 AM

பத்திரை - Nov 24 08:26 AM – Nov 24 09:22 PM

பவம் - Nov 24 09:22 PM – Nov 25 10:13 AM

யோகம்

சூலம் - Nov 23 12:08 PM – Nov 24 12:36 PM

கண்டம் - Nov 24 12:36 PM – Nov 25 12:49 PM

image_transcoder.php?o=sys_images_editor&h=337&dpx=2&t=1763959584நல்ல நேரம்:

காலை : 11.43 முதல் 11,48 மணி வரை

மாலை : 04.34 முதல் 06.20 மணி வரை

  • 229

உழைப்பு வெற்றியைத் தேடி தரும்

இனிய காலை வணக்கம்.

  • 228
  • 322

ஜோசியரின் சமாளிப்பு

  • 393
  • 397
  • 397
  • 393
·
Added a post

ஒரு மன்னர் உப்பரிகையில் நின்று கொண்டிருந்தார். நல்ல வெயில், உச்சி வேளை. அப்போது ஒரு இளைஞன் சாலையில் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தான்.

அரசர் அவனை அழைத்து, ஜூஸ் கொடுத்து உபசரித்தார். அதன்பின், "இந்த சித்திரை மாத உச்சி வெயிலில் எதற்கு இந்த ஓட்டம் ஓடுகிறாய்? அப்படி என்ன வேலை?" எனக் கேட்டார்.

"நான் ஒரு மளிகைக் கடை வைத்திருக்கிறேன், மன்னா. அதில் உழைத்துச் சேமித்து ஒரு தங்கக் காசை வாங்கி, கோட்டையின் கிழக்குச் சுவரில் ஒரு செங்கல்லை அகற்றி அதனுள் ஒளித்து வைத்தேன். இன்று ஆண்டவன் புண்ணியத்தில் மதியமே கடையில் உள்ள பொருள்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதனால், ஒளித்து வைத்த காசை எடுத்து, சரக்கு வாங்கி, கடையை மீண்டும் திறந்து விற்றால், மாலையில் நல்ல இலாபம் வரும்."

"அடடா, என்ன மினிமலிசம்? என்ன சிக்கனம்!" என்ற அரசர், "கோட்டையின் கிழக்குச் சுவர் இன்னும் ஒரு கல் தொலைவுதான் இருக்கிறது. அவ்வளவு தூரம் போகாதே. இந்தா, நானே ஒரு தங்கக் காசைக் கொடுக்கிறேன். வைத்துக்கொள்."

"நன்றி, அரசே. ஆனால் நான் கோட்டை மதில்சுவருக்குப் போனால் இரண்டு காசுக்கு பொருள் வாங்கி விற்கலாம். இன்னும் இலாபம் வரும்."

"ஹா, ஹா... நல்ல விவரமான பையன். இந்தா, நூறு காசு."

"அரசே, நான் மீண்டும் கோட்டை.."

"போதும், நிறுத்து. இந்தா ஆயிரம் காசு, போதுமா? இனியாவது கிழக்குச் சுவர் பக்கம் போகாமல் இருப்பாயா?"

"இல்லை, மன்னா. அதுவும் காசுதானே? நீங்கள் கோடி பொற்காசுகள் கொடுத்தாலும், கோட்டையின் கிழக்குச் சுவருக்குப் போய் அதையும் எடுத்துக்கொண்டுதான் போவேன்."

'அடடா, உழைத்துச் சம்பாதித்த காசுக்குத்தான் எத்தனை மதிப்பு! சரி, ஒன்று பண்ணலாம். என் பெண்ணை உனக்கு மணம் முடித்து வைத்து, பாதி நாட்டைக் கொடுக்கிறேன். அப்பவாவது கிழக்குச் சுவர் பக்கம் போகாமல் இருப்பாயா?"

"சரி, அரசே."

அதன்படியே திருமணம் நடந்தது. மன்னர் அதன்பின் "மருமகனே, உனக்குப் பாதி நாட்டைக் கொடுப்பதாகச் சொன்னேன். நாட்டின் எந்தப் பகுதி வேண்டும்?" எனக் கேட்க,

யோசித்த இளைஞன், "கிழக்குப் பகுதி நாட்டைக் கொடுங்கள், மன்னா" என்றானாம்.

எத்தனை செல்வம் சேர்ந்தாலும், மினிமலிஸ்டுகள் எப்போதும் ஒரு பைசாவைக் கூட வீணாக்க மாட்டார்கள் என மன்னர் அதன்பின் புரிந்துகொண்டார்.

  • 397
·
Added article

சி.வி.குமார் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘மாயவன்’. சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி நடித்த இந்த அறிவியல் புனைவு படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த ‘மாயவன்’ படத்தை 5 பாகமாக எடுக்க சி.வி.குமார் திட்டமிட்டுள்ளார்.

மாயவன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அறிவியல் புனைவு படத்துக்கு ‘எக்ஸ் ஒய்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தெலுங்கு நடிகையான ரத்திகா ரவீந்தர், அனிஸ் பிரபாகர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வர்ஷினி வெங்கட், பிரனா, பிரகதீஷ், தர், ரவுடி பேபி வர்ஷு, ஹுசைன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ் சார்பில் சாம்பசிவம் மற்றும் இன்டர்நேஷனல் வழங்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரிஹரன் ஆனந்தராஜா செய்துள்ளார். காந்த், இசை அமைக்கிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

“கதையம்சம், காட்சியமைப்பு, இசை மற்றும் கதாபாத்திரங்கள் வழியாக, தமிழ் சினிமாவில் அறிவியல் புனைவு வகையை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் படமாக இது இருக்கும்” என்கிறது படக்குழு.

  • 401
·
Added a news

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் உரையாற்றுவதற்கு எந்த அவசர பிரச்சினையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த G20 மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கனடாவின் எதிர்காலம் மற்றும் புதிய கூட்டாண்மைகளை ஏற்படுத்துவது தொடர்பில் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மீளவும் வர்த்தகம் தொடர்பில் விவாதங்களை முன்னெடுக்கும்போது நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒண்டாரியோ மாகாண அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வரி எதிர்ப்பு விளம்பரம் தொடர்பான சர்ச்சைகளின் காரணமாக டிரம்ப் நிர்வாகம் கனடாவுடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  • 412
·
Added a news

ஹூண்டாய் நிறுவனம் கனடாவில் 5,616 வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

பர்ஜ் கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள சேக் வால்வு கோளாறு காரணமாக எரிபொருள் கசிவு ஏற்பட்டு, தீ அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சில வாகனங்களில், பர்ஜ் கட்டுப்பாட்டு அமைப்பின் சேக் வால்வு, எரிபொருள் தொட்டி பெரிதாகும் நிலை உருவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் எரிபொருள் தொட்டி சூடான கூறுகளுடன் தொடும் அபாயம் உள்ளது; அதனால் எரிபொருள் கசிவு ஏற்படலாம் இந்த திரும்ப பெறல் 2020–2023 Hyundai Sonata மாடல்களுக்கு பொருந்தும்.

ஆனால் 1.6 லிட்டர் டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்ட குறிப்பிட்ட வாகனங்களே பாதிக்கப்பட்டுள்ளன. இந்த திரும்ப பெறல், முன்பு வெளியிடப்பட்ட 2025637 (Hyundai C0566) திரும்ப பெறலை மாற்றுகிறது.

அந்த திரும்ப பெறலின் கீழ் ஏற்கனவே பழுது பார்த்த வாகனங்களும் மீண்டும் இந்த பழுது பார்க்கப்பட வேண்டும். அறிவிப்பின்படி, ஹூண்டாய் நிறுவனம் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் தகவல் வழங்கி, அருகிலுள்ள டீலர்ஷிப்பில் சேக் வால்வை பரிசோதித்து மாற்றவும், ECU (எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு யூனிட்) மென்பொருளை புதுப்பிக்கவும் அறிவுறுத்தும்.

எரிபொருள் தொட்டியும் அதைச் சுற்றியுள்ள கூறுகளையும் பரிசோதித்து, தேவையானால் பழுது பார்க்கும். கடந்த இரண்டு மாதங்களில், ஹூண்டாய் நிறுவனம் கனடாவில் சுமார் 44,000 வாகனங்களை சீட்பெல்ட் கோளாறு, மேலும் 13,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஸ்டார்டர் மோட்டரில் உள்ள கோளாறு காரணமாக திரும்ப பெற்றது.

  • 412
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்

மேஷம்

மனதளவில் உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். வெளிவட்டத்தில் மதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும். தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட தூர ஒரு பயண வாய்ப்புகள் கைகூடும். ஆர்வம் நிறைந்த நாள்.

 அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

ரிஷபம்

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உருவாகும். வரவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பணி சார்ந்த அவசர முடிவுகளை தவிர்க்கவும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மிதுனம்

குழந்தைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் வழியில் இருந்த வேறுபாடுகள் விலகும். பயணங்கள் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கடகம்

குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோகத்தில் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

சிம்மம்

முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். புதுவிதமான கனவுகள் உருவாகும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கன்னி

உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கால்நடை விஷயங்களில் மேன்மை ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

துலாம்

பிள்ளைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் கருத்துக்கான மதிப்புகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

விருச்சிகம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். சூழ்நிலை அறிந்து திறமைகளை வெளிப்படுத்தவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

தனுசு

சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மகரம்

எதிர்காலம் சார்ந்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மருத்துவ செலவுகள் சிலருக்கு ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். பணி சார்ந்த அலைச்சல்கள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். சொத்து சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மீனம்

சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். அரசு விஷயங்களில் புரிதல்கள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 488
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 23.11.2025.

இன்று மாலை 06.11 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று மாலை 06.57 வரை மூலம் . பின்னர் பூராடம்.

இன்று காலை 11.44 வரை திருதி. பின்னர் சூலம்.

இன்று அதிகாலை 05.18 வரை தைத்தூலம். பின்னர் மாலை 06.11 வரை கரசை. பிறகு வனிசை.

இன்று காலை 06.14 சித்தயோகம். பின்னர் மாலை 06.57 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=336&dpx=2&t=1763872697

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.15 முதல் 11.15 மணி வரை

மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 487

Good Morning...

  • 504
·
Added a news

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கனடாவை குறை கூறி வருவதைத் தொடர்ந்து, தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதியும் தன் பங்குக்கு குறை கூற துவங்கியுள்ளார். 

கனேடியர்களின் வாழ்க்கத்தரம் முன்னேறாமல் இருப்பதற்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என அவர் கூறியுள்ளார். சமூக ஊடகமான எக்ஸில் கனடாவுகு எதிராக பல இடுகைகளை வெளியிட்டுள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதியான JD வேன்ஸ். அவற்றில், கனேடிய மக்களின் வாழ்க்கைத்தரத்தின் தேக்கநிலைக்கு, அதாவது, வாழ்க்கைத்தரம் மேம்படாமல் இருப்பதற்கு, வெளிநாட்டில் பிறந்தவர்கள் கனடாவில் வாழ்வதுதான் காரணம் என வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஆதாரமாக, கனடாவின் தனி நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதாவது, GDP அல்லது Gross Domestic Product அறிக்கையை காட்டியுள்ளார் வேன்ஸ். ஆனால், ஒரு நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டுமேதான் ஒரு நாட்டின் வாக்கைத்தரத்தை தீர்மானிக்கிறதா என ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

  • 635
·
Added a post

ஒரு சிறுவன் ஒரு முதியவரிடம் சென்று சொன்னான்.

"வாழ்க்கை உங்களுக்கு கற்றுத்தந்த மிகப்பெரிய பாடம் என்ன?"

முதியவர் சிறிது நேரம் நிறுத்திவிட்டு சொன்னார்.

"மன்னிக்கவும், ஆனால் நான் இப்போது பேசும் மனநிலையில் இல்லை. நான் மிகவும் கவலையாக இருக்கிறேன்"

பையன் கேட்டான்.

"என்ன விஷயம் ஐயா"

முதியவர் பதிலளித்தார்.

"எனது கருவுற்ற பசு இருபது மணி நேரத்திற்கும் மேலாக பிரசவ வலியில் உள்ளது. வலி அதிகமாக இருப்பதால் அது இறந்துவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்"

பையன் சொன்னான்.

"அதற்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும்"

முதியவர் முணுமுணுத்தார்.

"எனக்கு இந்த மாதிரி விஷயங்கள் பற்றி தெரியாது.நான் வயதானவன் மற்றும் பலவீனமானவன், என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் மற்றவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் நாம் கேட்டால், என் பசுவை இறப்பிலிருந்து காப்பாற்ற முடியும். நீ எனக்கு ஒரு உதவி செய்வாயா?"

சிறுவன் தலையை ஆட்டினான், பின்னர் முதியவர் .

" சாலையில் நீ நடந்து செல். வழியில் தென்படும் நான்கு பேரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். இறக்கும் என் பசுவைப் பற்றி அவர்களின் கருத்து என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்"

சிறுவன் உடனடியாக வெளியேறினான், பின்னர் ஒரு மணி நேரம் கழித்து திரும்பினான். முதியவரிடம் கூறினார்.

“நான்கு பேரிடம் ஆலோசனை கேட்டேன்... முதல் நபர் நீங்கள் உடனடியாக உள்ளூர் கால்நடை மருத்துவரை அழைக்குமாறு பரிந்துரைத்தார், இதனால் அவர் கன்றுக்குட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யலாம்.

இரண்டாவது நபர், பசுவை இயற்கையாகப் பெற்றெடுக்க அதிக நேரம் கொடுங்கள் என்றும் கால்நடை மருத்துவரை அழைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பரிந்துரைத்தார்.

மூன்றாவது நபர் பசு எப்படியும் இறந்துவிடும் அதற்கு முன் நீங்கள் பசுவைக் கொன்று இறைச்சியை விற்கவும், என்றும் பரிந்துரைத்தார்.

நான்காவது நபர் உங்கள் கைகளால் கன்றுக்குட்டியை வெளியே இழுத்து பசுவிற்கு உதவுமாறு பரிந்துரைத்தார்.

முதியவர் கூறினார்.

"சுவாரஸ்யமாக இருக்கிறது, எல்லாருடைய கருத்துக்களும் மிகவும் வேறுபட்டவை அல்லவா. அதனால் நான் எதைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?"

சிறுவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு சொன்னான்.

"எனக்கு முழு விஷயமும் மிகவும் குழப்பமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு அறிவுரைகளை வழங்கினர்"

முதியவர் சிரித்தார். பிறகு அந்த சிறுவனின் தோளில் தட்டி சொன்னார்.

"வாழ்க்கை எனக்குக் கற்றுத்தந்த மிகப் பெரிய பாடத்தை சொல்லுங்கள் என்று நீ என்னிடம் கேட்டபோது நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். அதைச் சொல்லாமல், அதை நீ அனுபவிக்கட்டும் என்று முடிவு செய்தேன். அவ்வாறு செய்யும்போது, ​​​​என் பசுவிற்கு வலி மற்றும் உதவி தேவை என்பது போல் கூறினேன்.

மக்களின் கருத்துக்கள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்பதை உனக்கு உணர வைக்க நான் விரும்பினேன்.

வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்னவென்றால், வெவ்வேறு நபர்கள் ஒரே விஷயத்தைப் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கலாம். நாம் ஒவ்வொருவருக்கும் விஷயங்களைப் பற்றிய சொந்த பார்வை உள்ளது. ஒருவரின் கருத்து உங்களுடையதை விட வித்தியாசமாக இருப்பதால், அவர்கள் தவறு என்று அர்த்தம் இல்லை. நம்முடைய கருத்து மற்றவர்களுடன் ஒத்துப்போவதில்லை என்று நினைப்பதால் நாம் சண்டையிடவோ, வாக்குவாதத்தில் ஈடுபடவோ கூடாது.

பிறரின் கருத்துக்களுடன் நாம் உடன்படாவிட்டாலும் திறந்த மனதுடன், மரியாதையுடன் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

  • 638