- · 1 friends
-
2 followers
Jinguchaa - Lyrical - Thug Life
Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வரவுக்கேற்ப செலவுகள் அமையும். தந்தை வழி சொத்துகளால் ஆதாயம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பணி நிமிர்த்தமான பயணத்தால் ஆதாயம் ஏற்படும். கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். இன்ப சுற்றுலா செல்வது தொடர்பான வாய்ப்புகள் அமையும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
ரிஷபம்
இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சிறு தொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். விளையாட்டு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கற்பனை துறைகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சிறு மாற்றங்களைச் செய்வீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். சில பயணங்கள் மூலம் புது விதமான அனுபவங்கள் ஏற்படும். தொழில் முயற்சிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பயனற்ற சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
சுரங்க தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வீடு மாற்ற சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். தொழில் நிமித்தமான பயணங்கள் கை கூடும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
சிம்மம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். முக்கிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய மனை தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். கனிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
இனம் புரியாத சில கனவுகள் மூலம் அமைதியின்மை உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் கால தாமதங்கள் உண்டாகும். புதுவிதமான பயணங்கள் மூலம் மாற்றங்கள் காணப்படும். குண நலன்களின் சில மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும்.தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் உருவாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுகள் வரும். தொழில் நிமிர்த்தமான பயணம் கைக்கூடும். மறைமுகமான சில விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். பணி புரியும் இடத்தில் சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எண்ணம் மற்றும் தோற்றங்களில் சிறுசிறு மாற்றங்கள் காணப்படும். வாழ்க்கை துணை வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
இணையம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படவும். ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்கான சூழல் சிலருக்கு அமையும். செய்கின்ற முயற்சிகளில் புதுவிதமான சூழ்நிலைகள் காணப்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மகரம்
எதிர்கால முதலீடுகள் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகள் மூலம் அலைச்சலும் அனுகூலமும் ஏற்படும். குழந்தைகள் வழியில் ஆதாயம் உண்டாகும். இணையம் துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கும்பம்
செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் நல்ல மாற்றம் ஏற்படும். வாகன பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது. தேவையற்ற விவாதங்களை குறைத்துக்கொள்ளவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. ஆடம்பரமான பொருள்களின் மீது ஆர்வம் உண்டாகும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும். புதிய நபர்களின் ஆதரவுகள் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். தொழில் சார்ந்த முயற்சிகளில் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விசுவாவசு வருடம் தை மாதம் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.2.2026.
இன்று காலை 08.46 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று காலை 09.35 வரை விசாகம். பின்னர் அனுஷம்.
இன்று அதிகாலை 02.37 வரை விருத்தி. பின்னர் துருவம்.
இன்று காலை 08.46 வரை கௌலவம். பின்னர் இரவு 10.01 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று அதிகாலை 09.35 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
மாசிடோனியாவின் விளையாட்டு மைதானம் சுட்டெரிக்கும் வெயிலிலும் ஜனத்திரளால் வழிந்து கொண்டிருந்தது..
யாருக்கும் அடங்காத , தெஸ்ஸாஸி நாட்டைச் சேர்ந்த அந்த குதிரை ,மைதானத்தில் யாரையும் நெருங்கவிடாமல் அருகில் வரும் அனைவரையும் துவம்சம் செய்து கொண்டிருந்தது.. மன்னர் பிலிப் இதை அடக்கப் போகும் வீரன் யார் ? என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்..
" இந்த குதிரையை அடக்கி ஆளும் வீரன் இந்த நாட்டில் இல்லையா?" .. கூவிக் கூவி மாசிடோனியாவின் மானத்தை வாங்கிக் கொண்டிருந்தான்..குதிரையின் சொந்தக்காரன். . மன்னர் அருகில் அமர்ந்திருந்த சிறுவன் அலெக்சாண்டர் தனது தந்தையிடம் திரும்பத் திரும்ப தான் அந்த குதிரையைத் தான் அடக்கப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தான். விளையாட்டாக எடுத்துக் கொண்டிருந்த மன்னர் பிலிப்.. தனது மகன் சொல்வது விளையாட்டல்ல என்பதைப் புரிந்து கொண்டார்.. "இந்தக் குதிரையை மட்டும் நீ அடக்கி விட்டால் அதை உனக்கே தருகிறேன்".. அரை மனதுடன் மைதானத்துக்கு அனுப்பி விட்டு , வீரர்களிடம் எச்சரிக்கையாக இருந்து , தேவைப்பட்டால் அலெக்சாண்டரை பாதுகாக்கும் படியும்..சைகை காட்டினார்.
மைதானத்தில் குதிரையை அருகில் நோட்டமிட்டான். குதிரையின் பளபளக்கும் சருமத்தில் விரல்களை மெதுவாக ஓடவிட்டான்.. வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.மிகவும் அமைதியாக சுற்றி வந்து , பின் மெதுவாக தொட்டுத் தொட்டு மெல்ல எதிர் திசையில் திருப்பினான்.
" என்னடா இவன்! எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் எல்லாம் மண்ணைக் கவ்வி விட்டார்கள் . இவன் பொடியன், அரசனுடைய மகன் என்பதால் சிரிக்கக் கூட பயமாக இருக்கிறது" என்று கிசுகிசுத்தனர்..
மைதானத்தில் சில நிமிடங்களில் குதிரையை மெதுவாக எதிர் திசையில் திருப்பிய அலெக்சாண்டர் , ஒரே தாவாக தாவி குதிரையின் மீது பாய்ந்து ஏறினான்.மைதானம் முழுவதையும் குதிரையுடன் வலம் வர, கரகோஷம் வானைப் பிளந்தது " இளவரசர் அலெக்சாண்டர்!! வாழ்க!" மன்னரால் தன் கண்களை நம்ப முடியவில்லை..வருங்காலம் ஒரு மிகப்பெரிய வீரனைக் காணத் தயாராகிவிட்டதை உணர்ந்தார். சொன்னது போலவே அக்குதிரையைப் பரிசளித்தார்.. அதன் பெயர் பியூசிபேலஸ்.
மன்னர் கேட்டார் " என் மகனே! நீ எவ்வாறு அக்குதிரையை அடக்கினாய்?"
" அப்பா! அந்தக் குதிரையின் கண்களில் பட்ட சூரியக் கதிர்கள் அதனை மிரள வைத்திருக்கிறது. இதைப் புரிந்து கொண்ட நான் ,அதனை அதன் எதிர் திசையில் திரும்பியதும் அமைதியாகி விட்டது." ..
மகனின் அறிவுக் கூர்மையை வியந்த மன்னர் ..மகனை ஆரத் தழுவிக் கொண்டார்.
இதன் பிறகு பியூசிபேலஸ் அலெக்சாண்டருடனேயே இறுதிவரை.. அவருக்கு தோள்கொடுத்தது.
கி.மு.326 ஜூலை மாதம் இந்தியாவின் ஜீலம் சீனாப் நதிகளுக்கிடையிலான பகுதியை ( தற்போதைய பஞ்சாப் ) ஆண்ட புருஷோத்தமன் என்ற மன்னர் போரசுடன் நடந்த போரில் அலெக்சாண்டர் வெற்றி அடைந்தாலும் அவரது குதிரை கடுமையான காயங்களால் மரணம் அடைந்தது. இதன் பின்னர் ஜீலம் நதியின் இருகரைகளிலும் இரு நகரங்களை உருவாக்கி, அதில் ஒரு நகருக்கு தனது பாசத்திற்குரிய குதிரையின் நினைவாக பியூசிபேலா என்று பெயரிட்டார்.
1. ஒருமுறை அனைத்து கிராம மக்களும் மழை வேண்டி பிரார்த்தனை செய்ய முடிவு செய்தனர். பிரார்த்தனை நாளில், மக்கள் அனைவரும் கூடினர்; ஆனால் ஒரு சிறுவன் மட்டும் குடையுடன் வந்தான். அதுதான் நம்பிக்கை. (FAITH)
2. நீங்கள் குழந்தைகளை காற்றில் வீசும்போது, அவர்கள் சிரிக்கிறார்கள், ஏனென்றால் நீங்கள் அவர்களைப் பிடிப்பீர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அதுதான் நம்பிக்கை.(TRUST)
3. ஒவ்வொரு இரவும் மறுநாள் காலையில் உயிருடன் இருப்பதற்கான எந்த உறுதியும் இல்லாமல் தூங்கச் செல்கிறோம், ஆனால் இன்னும் விழிப்பதற்காக அலாரங்களை அமைக்கிறோம். அதுதான் நம்பிக்கை. (HOPE)
4. எதிர்காலத்தைப் பற்றிய பூஜ்ஜிய அறிவு இருந்தபோதிலும் நாளை பெரிய விஷயங்களைத் திட்டமிடுகிறோம். அதுதான் நம்பிக்கை. (CONFIDENCE)
5.ஒரு முதியவரின் சட்டையில் “எனக்கு 80 வயது ஆகவில்லை; 64 வருட அனுபவத்துடன் எனக்கு 16 வயது இனிமை”. அதுதான் அணுகுமுறை. (ATTITUDE)
- தமிழ்நாட்டில் - திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவில், பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் செம்பு உலோகத்திலான முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஒரு தனித்துவமான திருத்தலமாகும்.
- சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இக்கோவில், 18 புனிதப் படிகள் கொண்ட நிலத்தடி குகை அமைப்பில் உள்ளது,
- இது இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது.
- இந்தக் கோயிலின் முன்புறத்தில் 15 அடியில் பெரிய சங்கிலி கருப்பன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் கோயிலில் சங்கிலி கருப்பன் சிலை அமைந்திருப்பது உலகத்திலேயே இங்கு மட்டுமாகத்தான் இருக்கும்.
- மூலவர்: செம்பு உலோகத்தினால் ஆன முருகன், பாதாளத்தில் வீற்றிருப்பதால் "பாதாள செம்பு முருகன்" என்று அழைக்கப்படுகிறார்.
- அமைவிடம்: திண்டுக்கல் - பழனி சாலையில், ரெட்டியார்சத்திரம், ராமலிங்கம்பட்டி போக்கர்நகரில் உள்ளது.
- போகரின் சீடரான திருக்கோவிலார், முருகப்பெருமானுக்கு ஒன்றரை அடி உயரத்தில் ஐந்து உலகக் கலவையான தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு சிலையைச் செய்து இங்கு நிறுவியிருக்கிறார்.
- இந்த முருகர் சிலைக்கு தினமும் அபிஷேகம் செய்து வருவது உடல் நலத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
- 18 சித்தர்களின் மூலிகை பிரசாதமான திருநீறு, 7 மாத கால தயாரிப்புக்குப் பின் வழங்கப்படுகிறது.
- கருங்காலி மாலை மற்றும் வேல் ஆகியவை இங்கு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- தைப்பூசம் மற்றும் கிருத்திகை தினங்களில் அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர்.
- பெரும்பாலான முருகன் கோயில்கள் மலையிலேயே அமைந்திருக்கும். ஆனால், இக்கோயிலுக்கு வரும்போது இறக்கமாகவும், போகும்போது ஏற்றமாகவும் இருக்கும். இதனால் இந்தக் கோயிலுக்கு சென்று வழிபடுவதால் வாழ்க்கையில் எப்போதும் ஏற்றமே கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
- இந்தக் கோயிலுக்குத் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் சென்று வந்தால் நினைத்தது கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- பாதாள முருகன் கோயிலில் கருங்காலி மாலையை முருகனின் திருப்பாதங்களில் வைத்து பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள்.
- கருங்காலி மாலை அணிவதால் செல்வ வளம் கிடைக்கும், ராகு-கேது தோஷம் நீங்கும், குழந்தைப் பேறு வாய்க்கும், மன அழுத்தம் குறையும், இரத்த அழுத்தம் சீராகும்.
- பதவி உயர்வு மற்றும் மன அமைதிக்காக பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.
1 இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்சினைகள் உட்பட.
2 சிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.
3 சிரிப்புதான் வலிக்கு மருந்து! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம், சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும்.
4 கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு.
5 உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…!
6 இதயம் வலித்தாலும் சிரி. அது உடைந்தாலும் சிரி.
7 என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம். ஆனால், நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது.
8 எனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு, ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது. அது சிரித்துக்கொண்டுதான் இருக்கும்.
9 பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது.
10 கண்ணாடி என் நண்பன் ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை.
11 ஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்து விடாதே.
12 உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.
13 போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.
14 எப்போதும் மழையில் நனைந்தபடியே நடக்கப் பிடிக்கிறது. என் கண்களில் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது என்பதால்.
15 நீ எப்போதும் வானவில்லைக் காண முடியாது… உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்!
16 நண்பர்களின் சிரிப்பைப் பார்க்கும் போது கண்ணீரை மறக்கிறேன், நண்பர்களின் கண்ணீரைப் பார்க்கும்போது சிரிப்பை மறக்கிறேன்.
17 வாழ்க்கை அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல, அனுபவிப்பதற்கு.
18 நீ மகிழ்ச்சியாய் இல்லாத போது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது. நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்து புன்னகை செய்கிறது. ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது.
19 உங்களை தனியாக விட்டாலே போதும்… வாழ்க்கை அழகானதாகத்தான் இருக்கும்.
20 புன்னகைத்துப் பாருங்கள்… வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்!
21 விவாதங்கள், மோதல்கள் அல்லது பிரச்சினைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும். வாழ்க்கை இப்படித்தான்.
22 ஒரு முறையாவது உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையைத் தவறவிட்டுவிடுவீர்கள்.
23 நண்பனுக்கு உதவுவது சுலபமானதுதான். ஆனால், உங்கள் நேரத்தை அவனுக்காக கொடுக்கும் வாய்ப்பு மிகவும் அரிதானது.
24அதிகமா சிந்திக்கிறோம். மிகக் குறைவாகவே உணர்கிறோம்.
25 கெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம்.
இராவணனை வீழ்த்துவது என்பது சாதாரண காரியமல்ல. அவரது பத்து தலைகளையும் ராமர் அறுக்க அறுக்க, அவை மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே இருந்தன. இதற்குப் பின்னால் ஒரு விசித்திரமான ரகசியம் இருந்தது.
ராவணனின் உடலில், அவரது நாபி (தொப்புள்) பகுதியில் ஒரு 'அமிர்த கலசம்' இருந்தது. பிரம்மன் கொடுத்த வரத்தினால் இது அவருக்குக் கிடைத்தது.
அந்த அமிர்தம் இருக்கும் வரை அவரது தலைகளை வெட்டினாலும் அவர் சாகமாட்டார். இந்த இரகசியம் இராமருக்கு முதலில் தெரியாது.
இராவணனின் தம்பி விபீஷணன் தான், "ராமனே! அவரது தலைகளைப் பாராதே, அவரது நாபியில் அம்பு எய்" என்று இந்த இரகசியத்தைச் சொன்னார்.
அதன் பின்னரே ராமர் தனது அம்பால் ராவணனின் நாபியில் இருந்த அமிர்தத்தை உலரச் செய்து, அவரை வீழ்த்தினார்.
வெற்றிக்காக எவ்வளவு போராடினாலும், சில நேரங்களில் சரியான 'யுக்தி' (Strategy) இல்லையென்றால் வெற்றி கிடைக்காது. இராவணனின் பலம் அவரது தலைகளில் இல்லை, அவரது நாபியில் மறைந்திருந்தது.
எதிரி எவ்வளவு பெரியவனாக இருந்தாலும், அவனது பலவீனம் எங்கே இருக்கிறது என்று அறிவதே உண்மையான வெற்றி. விபீஷணன் காட்டிய அந்த இரகசியம், தர்மம் வெல்வதற்குப் பேருதவியாக இருந்தது.
நமது வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் வருவதற்குப் பின்னால் ஒரு வேர் (Root Cause) இருக்கும். கிளைகளை வெட்டாமல், அந்த வேரை அழித்தால் மட்டுமே வெற்றி நிரந்தரமாகும்.
விஷக்கடிக்கு அடர்நிற வெற்றிலையை மென்று விழுங்கலாம் .
வெற்றிலையை நீரில் ஊற வைத்து , அந்த நீரைக் குடிப்பது , மலச்சிக்கலை குறைக்கும் . இனிப்போடு சேர்த்து பீடாவாக போடும்போது , மன அமைதி கிட்டும் .
ஒரு வெற்றிலை , ஒரு கல் உப்பு சேர்த்து மென்று முழுங்கினால் , வயிற்று உப்புசம் உடனடியாய் தீரும் .
காரம் - வெற்றிலை , - துவர்ப்பு - பாக்கு , கால்சியம் - சுண்ணாம்பு . இந்த மூன்று சுவைகளும் சேரும் போது , பல் உறுதியிலிருந்து , மூக்கு ,வயிறு , தலை என .
முழு உடல் சம்பந்தப்பட்ட பல சங்கடங்களுக்கு தீர்வாய் அமைகிறது . ஒரு சின்ன வெற்றிலையில் நீர்சத்து , புரோட்டீன் , கொழுப்பு , மினரல் , நார்சத்து , கால்சியம் , கார்போஹைட்ரேட் , வைட்டமின்கள் , பொட்டாசியம் என , இன்னும் நிறைய இருக்கிறது .
வெற்றிலை கஷாயம் : வெற்றிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி , நீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க விட்டு மிளகு , கிராம்பு , சுக்கு பொடி சேர்க்கவும் .
தண்ணீர் பாதியாக சுண்டும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும் . இந்த கஷாயத்தை குளிரவைத்த பிறகு வடிகட்டி குடிக்கவும் . இதனால் , பல நோய்கள் குணமாவதாக , ஆயுர்வேதம் கூறுகிறது .
சியா விதைகள் சுவைக்காக இல்லாமல் ஆரோக்கியம் கருதியே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சியா விதை உடல் குளுர்ச்சிக்கு மட்டுமன்றி பல நன்மைகளை தருகிறது.
உடல் குளுமைக்கு சியா விதைகள் உதவுவதால் குடிக்கும் நீரில் கூட ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கின்றனர். அதேபோல் பழச்சாறு மற்றும் ஃபலூடா போன்ற ஜூஸ் வகைகளிலும் சியா விதை சேர்க்கப்படுகிறது. இது சுவைக்காக இல்லாமல் ஆரோக்கியம் கருதியே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சியா விதை உடல் குளுர்ச்சிக்கு மட்டுமன்றி பல நன்மைகளை தருகிறது. அவை என்னென்ன பார்க்கலாம்.
நார்ச்சத்து நிரம்பியது :
சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், மாவுச்சத்து குறைவாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது. நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது. இதனால், குடல் நலன் மேம்படும்.
இதய நோய் ஆபத்துகள் குறைகின்றன : தினசரி உங்கள் உணவுப் பட்டியலில் சியா விதைகள் இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம். குறிப்பாக, ரத்தத்தில் உள்ள டிரிகிளைசைரைடு கொழுப்பை இது கரைக்கிறது. உடல் உள்ளுறுப்புகளின் வீக்கம் குறைவதுடன், இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. உடலுக்கு நன்மை பயக்கும் ஹெச்டிஎல் கொழுப்பு அதிகரிக்கும்.
எலும்புகள் பலப்படும் :
நமது எலும்புகளுக்கு வலுவூட்டக் கூடிய கால்சியம், புரதம், மேக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் சியா விதைகளில் இருக்கிறது. பால் பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு கால்சியம் சத்து கிடைக்க உதவியாக இருக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் :
உடலின் செல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடிய கிருமிகளை அழிப்பதில், சியா விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்துகளின் பங்கு அதிகமாகும். வயது முதிர்வை தடுக்கிறது.
உயர் தர புரதச்சத்து :
சியா விதைகளில் உயர் தரத்திலான புரதம் நிரம்பியிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆகவே, இதை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது நமக்கு பசி உணர்வு கட்டுப்படுகிறது. இதனால், இரவு நேர பசி அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிடும் ஆசை கட்டுப்படுத்தப்படுகிறது.
ஊட்டச்சத்துகள் நிரம்பியது :
ஒரு அவுன்ஸ் சியா விதைகளில் 11 கிராம் நார்ச்சத்து, 4 கிராம் புரதம், 5 கிராம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை நிரம்பியுள்ளது. இது தவிர 18 சதவீதம் கால்சியம், 30 சதவீதம் மேக்னீசியம், 27 சதவீதம் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. வெறும் 137 கலோரிகள் மட்டுமே உண்டு.
உடல் எடையை குறைக்கலாம் :
நிரம்பிய புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவிகரமாக இருக்கும். இதை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும்.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் :
சப்ஜா விதைகளைப் போன்றே சியா விதைகளிலும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. விலங்குகளில் இருந்து கிடைக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அளவுக்கு வராது என்றாலும், இதுவும் உடலுக்கு நன்மை தரக் கூடியதுதான்.
“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”
புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் .
இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .
அப்படி பரிமாறிய அந்த பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் , சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”
சிம்பிள் ...
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ... எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும் ஆதரவுகளும் மேம்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலை காணப்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
கல்வி பணிகளில் ஆலோசனைகள் மூலம் தெளிவுகள் பிறக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வேலையாட்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உருவாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மிதுனம்
மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். வாகன தொடர்பான பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கல்வியில் இருந்த குழப்பம் மறையும். உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செயல்படவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கிய சிக்கல்கள் குறையும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இணைய விளையாட்டுகளில் கவனம் வேண்டும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம்
தன தான்ய விருத்தி உண்டாகும். கமிஷன் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். பேச்சுத் திறமைகள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் எதிர்பாராத புதிய மாற்றம் பிறக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கன்னி
எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தொழில் ரீதியான புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவான முடிவுகள் உண்டாகும். சக ஊழியர்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் நிதானம் அவசியம். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விருச்சிகம்
சமூக பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்நிலை கல்வியில் மேன்மை உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
தனுசு
கற்கும் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் மூலம் அலைச்சலும் அனுபவம் கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். போட்டி சார்ந்த விஷயங்களை ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
புதிய நபர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். வழக்கு பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் குழப்பம் தோன்றும். கூட்டு வியாபாரத்தில் அலைச்சல் மேம்படும். இலக்கு பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். வர்த்தகத் துறைகளில் பொறுமை காக்கவும். எளிய பணிகள் தாமதமாகி முடிவு பெரும். யூக விளையாட்டுகளை தவிர்க்கவும். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி
மீனம்
எதையும் சமாளிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் தொடர்பும் ஏற்படும். சாகோதரர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். புதுவிதமான பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். பணிகளில் இருந்து வந்த சோர்வு நீங்கி துரிதம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விசுவாவசு வருடம் தை மாதம் 26 ஆம் தேதி திங்கட்கிழமை 9.2.2026.
இன்று காலை 07.05 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று காலை 07.07 வரை சுவாதி. பின்னர் விசாகம்.
இன்று அதிகாலை 02.14 வரை கண்டம். பின்னர் விருத்தி.
இன்று காலை 07.05 வரை பவம். பின்னர் இரவு 07.55 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று அதிகாலை 04.53 வரை சித்த யோகம். பின்னர் காலை 07.07 வரை அமிர்த யோகம். பிறகு மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.
முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.
இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
முருங்கை கீரை கால்சியம் , இரும்பு , வைட்டமின் ஏ , சி சத்துக்கள் நிறைய உள்ளன . அரைக்கிலோ வெண்ணெய் மற்றும் 80 கோப்பை பாலில் உள்ள வைட்டமின் ஏ சத்து ஆகியவற்றை , ஒரு கோப்பை முருங்கை இலை சூப் மூலம் நாம் பெறலாம் . கொதிக்கும் நீரில் கீரையை முருங்கை போட்டு , ஐந்து நிமிடத்திற்கு பிறகு , உப்பு , மிளகு . தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து , பாத்திரத்தை மூடி வைக்க பின்னர் வேண்டும் . வடிகட்டி கிடைத்த சூப்பை , தினமும் காலையில் பருகி வந்தால் , அனீமியா , ஜலதோஷம் , ஆஸ்துமா குறைவதை காணலாம் .
சத்தில்லாத குழந்தைகள் , முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி . மேலும் , ஆண்மை விருத்திக்கு முருங்கை சூப் உதவும் .சத்தில்லாத குழந்தைகள் , முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி .
மேலும் , ஆண்மை விருத்திக்கு முருங்கை சூப் உதவும் . சுத்தமான புதிய முருங்கை இலைகளை மிக்சியில் சுற்றி சாறு எடுத்து , அதை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கும் நீரில் மிதக்க விடவும் . சிறிது நேரம் கழித்து முருங்கை சாற்றின் தெளிவை மட்டும் வடிகட்டி , பால் , சர்க்கரை சேர்த்து கலக்கவும் . குழந்தைகளுக்கு தினமும் ஒருமுறை கொடுத்து வர , எலும்பு நன்கு வளர்ச்சி பெற்று திடமாகும் .
பாலுாட்டும் பெண்கள் , தினமும் முருங்கை கீரையை சாப்பிட்டால் , அதிகமாக பால் ஊறும் . மேலும் , அலர்ஜியால் துன்பப்படுவோருக்கு , முருங்கை கீரை உன்னத மருந்து . முருங்கை சாறுடன் , எலுமிச்சம் பழ சாற்றை கலந்து , முகத்தில் பூசி உலர்ந்த பின் , நீரில் கழுவி வந்தால் , பருக்கள் மறைந்து , முகம் பொலிவு பெறும் .
மாலைக்கண் நோய்க்கு இதன் சாற்றை தேனுடன் சேர்த்து பருகி , பயன் பெறலாம் . காயங்களின் மேல் வறுத்த முருங்கை இலையின் பொடியை பூசினால் , வலி குறையும் .
கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
தோல் அரிப்பு, சொறி போன்றவற்றிற்கு கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை
பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த சாறை குடித்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இலை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.
கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும்.
கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல்
குணமாகும். கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது.
இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.
தினமும் கற்பூரவள்ளி இலையினை சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். கற்பூரவள்ளி இலை வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
*1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.*
*2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.*
*3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.*
*4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. .*
*5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.*
*6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.*
*7. கர்ப்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.*
*8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது.*
*9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.*
*10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.*
*11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது.*
*12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.*
*13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.*
*14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.*
*15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது.* *மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.*
இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள். அதனால் தான் அவர்களின் ஆயுள் 120 வயது வரை திடகாத்திரமாக இருந்தது. ஆனால் இப்போது பல வகையான நோய்கள் சிறுவயதிலேயே தொற்றிக் கொள்கிறது.
முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள். ஆரோக்கியம் உங்கள் கையில் இருக்கிறது.
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்கியமாக அமைய வாழ்த்துகள்










