- · 1 friends
-
2 followers
Jinguchaa - Lyrical - Thug Life
Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman
ஒரு நாள் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள். சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்; குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.
"குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன?" எனக்கு கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் என்றான். குரு சீடனுக்கு பதிலை எப்படி விளக்குவது என்று சற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது.
குரு, அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். தம்பி! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்றார். அவனும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். குளத்தில் நிறைய மீன் கிடைக்கிறது என்றான்.
குருவோ, எனக்கு வேண்டாம் தம்பி என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்து விட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பி விட்டான்.
ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை குரு பார்த்து விட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப் பை இருந்தது. குரு அதை உற்றுப் பார்த்தார்; அது பையின் நிறமல்ல, அதிலிருக்கும் பொரியின் நிறம் என்பதை தெரிந்து கொண்டார். அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன.
குரு, அவரிடமும் பேச்சு கொடுத்தார். என்ன பெரியவரே! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்று சற்று முன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடம் கேட்டார். பெரியவரும், ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன் என்றார். அவரிடம் பேசி முடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார்.
பார்த்தாயா! இருவரும் மீனின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் "மீனென்றால் உயிர்" என்று கூறும் போதே தெரிந்திருக்கும். அந்த இளைஞன், மீன்களை "ருசி" என்னும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான். ஆனால்., அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது, ஆனால்., இருவரின் நோக்கம் வேறு. மொத்தத்தில்,
*அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை; சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது, நிரந்தரமானது* என்று
குரு சீடனுக்கு புரிய வைத்தார்.
1. எந்த தலைபோகும் அவசரமாக இருந்தாலும் – ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையைச் செய்யுங்கள்.
2. பிரச்னையை முழுவதும் புரிந்து கொண்ட பின் செயல்படத் துவங்கவும். பிரச்னை எதுவாக இருந்தாலும் – அதை முதலில் புரிந்துகொள்ளவும்.அடுத்தது அலசி ஆராயவும்.கடைசியில் பிரச்னை முடிச்சை அவிழ்க்கவும். (Understand the problem – Analyse the problem – Attack the problem)
3. காது கொடுத்துக் கேளுங்கள். எதிராளி – (உங்கள் செல்ல பப்லுக்குட்டியோ... உங்கள் ஜெனரல் மானேஜரா) அவர் சொல்ல வந்ததை முழுவதும் சொல்லட்டும். குறுக்கே பேசாமல் உன்னிப்பாக கவனியுங்கள். கேட்பதை மனதில் வாங்கிக்கொண்டு பிறகு பதில் பேசலாம்.
4. கேள்வி கேளுங்கள். மிகவும் அற்புதமாகத் தோன்றும் சந்தேகத்தைக் கூட உதாசீனப்படுத்தாமல் விடை காண முயலவும், ஒர சிறிய கேள்வி வரவழைக்கும் விடைகளால் உங்கள் பிரச்னைக்கு முற்றிலும் ஒரு புதிய பரிமாணமே கிடைத்தாலும் கிடைக்கும்.
5. யாரொருவருடன் பேசும்போதும் அவருடைய கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அடுத்தவர் உங்களிடம் பேசும்போதும் அவர் கண்களையும் முகபாவங்களையும் உன்னிப்பாகக் கவனிப்பது முக்கியம். இதனால் நீங்கள் எதிராளியின் நம்பிக்கையை எளிதில் பெறுவீர்கள்.
6. மாறுதல்களை எளிதாக ஏற்றுக்கொள்ளுங்கள். நேற்று சரியான முறை என்று நாம் நினைப்பது இன்று மாறிவிடுகிறது. திறந்த மனதுடன் புதிய முறைகளை வரவேற்பது உங்கள் வெற்றியைச் சுலபமாக்கும்.
7. தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள். நம்மில் யாருமே ‘சூப்பர் பர்ஃபெக்ட்’ இல்லை. தவறைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ள முற்பட்டால் யாருமே உங்களைத் தாழ்வாக நினைக்க மாட்டார்கள். மாறாக, உங்கள் மதிப்பு உயரக் கூடும்.
8. சொல்ல வந்ததை எளிமையாகச் சொல்லுங்கள். சுற்றி வளைத்த, ஜாடை மாடை பூடகப் பேச்சோ, உங்கள் மொழிப்புலமையை வெளிக்காட்ட உதவும் பல்லை உடைக்கும் சொற்களோ தேவையில்லை.
ஒரு குழந்தை கூடப் புரிந்துகொள்ளக்கூடிய எளிய முறையில் பேசுங்கள். அதற்குத்தான் எதிர்பார்த்த பலன் இருக்கும்.
9. அமைதியாக இருங்கள். வீட்டிலோ - வெளியிலோ – எங்குதான் பிரச்னைகளில்லை? அதுவும் நம் ரத்தக் கொதிப்பை எகிற வைக்கும் விஷயங்களுக்குக் குறைவா, என்ன?
சட்டென்று பதிலடி (வார்த்தைகளால்தான்!) கொடுக்கும் முன் ஒரு நிமிடம் ஆழமாக மூச்சிழுங்கள். பிறகு சொல்ல வேண்டியதை அழுத்தமாகவும் நிதானமாகவும் யோசித்துச் சொல்லுங்கள்.
படபடப்பாய் பொரிந்து தள்ளுவது சுலபம். ஆனால் அது பிரச்னையை திசை மாற்றிவிடும். அதனால் நிகர நஷ்டம் உங்களுக்குத்தான்.
10. கடைசியாக... அடிக்கடி புன்னகையுங்கள்.
காசா பணமா செலவு? ஒரு சிறு புன்னகை பல சிக்கல்களை அவிழ்க்கும். பாதைகளை சீராக்கும். உங்கள் முகத்தையும் கூட இன்னும் அழகாக ஆக்கும்!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பங்குதாரர்களுடன் இருந்த கருத்துமோதல் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.
மிதுனம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்ப உறுப்பினர்களிடம் முன்கோபத்தை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். அலுவலகரீதியான பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டுவீர்கள்.
சிம்மம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
கன்னி: குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்துமோதல்கள் வரலாம். சில வேலைகளை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. பயணங்கள் அலைச்சல் தரும். பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
துலாம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். தெய்வீக ஈடுபாடு கூடும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நன்மை தரும். மேலதிகாரிகள் பாராடுவர்.
தனுசு: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மன வலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்ற முயற்சிப்பீர்கள்.
மகரம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். முன் கோபம் விலகும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
கும்பம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மீனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி உண்டு. திடீர் பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
விசுவாவசு வருடம் தை மாதம் 22 ஆம் தேதி வியாழக்கிழமை 5.2.2026.
இன்று அதிகாலை 02.50 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று அதிகாலை 12.49 வரை பூரம். பின்னர் உத்திரம் .
இன்று அதிகாலை 03.38 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.
இன்று அதிகாலை 02.50 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 02.54 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று காலை 06.35 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
டொராண்டோ நகரின் எடோபிகோக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு ஆண் பாதசாரி உயிரிழந்ததாக டொராண்டோ போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து, கிப்லிங் அவென்யூவிற்கு மேற்கே உள்ள டண்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் அகார்ன் அவென்யூ சந்திப்பிற்கு அருகே இடம்பெற்றுள்ளது.
வாகனம் ஒன்று ஒரு நபரை மோதியதாக வந்த தகவலின் பேரில் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் 28 வயதுடைய ஆண் ஒருவர் கடுமையாக காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் தொடர்புடைய வாகனமும் அதன் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே இருந்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைக்கு, வாகன ஓட்டுநருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.
பாதசாரி சாலை கடக்கும் போது குறிப்பிட்ட கடக்கும் பாதையில் (crosswalk) இருந்தாரா என்பதும், இந்த விபத்தில் வேகம் ஒரு காரணமா என்பதும் தற்போது உறுதிப்படுத்த முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கு சாட்சியாக இருந்தவர்கள் அல்லது அந்தப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள், தங்களிடம் டாஷ்கேம் வீடியோ இருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு பனிப் பொழிந்து வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் 30 பேர் பலியாகி உள்ளனர்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. இதில் ஆமோரி, நிகாட்டா, ஹொக்கைடோ, அகிதா உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமோரியின் சில பகுதிகளில் 14 அடி வரை பனி குவிந்துள்ளது. இது 40 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவாகும்.
வீடுகள், கடைகள், அலுவலகங்களை பனி சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு கட்டட மேற்கூரைகளில் படிந்திருக்கும் பனியை அகற்றும் போதும், பனியில் புதைந்தும், அதிக குளிராலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த இரு வாரத்தில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பனி தொடர்பான விபத்துகளில், 290 பேர் காயமடைந்துள்ளனர்
கர்ப்பிணி கோலத்தில் சீதை... மரவுரி தரித்த ராமன்! சென்னையின் இதயப்பகுதியில் ஒரு ராமாயண அதிசயம்!
ராமாயண காவியத்தின் கிளைக்கதைகள் பல இடங்களில் நடந்திருந்தாலும், அன்னை சீதை தன் பிள்ளைகளான லவ-குசர்களுடன் வாழ்ந்த புண்ணிய பூமி நம்ம சென்னையில் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அதுதான் கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில்!
இந்த ஆலயத்தின் சிலிர்க்க வைக்கும் சிறப்புகளை விரிவாகப் பார்ப்போம்:
கோயம்பேடு - பெயரின் பின்னால் உள்ள சுவாரஸ்ய வரலாறு
ராமபிரான் அசுவமேத யாகம் நடத்தியபோது, அதன் குதிரையை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்த லவனும் குசனும் பிடித்துக் கட்டினர்.
கோ - அரசன் (ராமர்)
அயம் - இரும்பு
பேடு - வேலி அதாவது, அரசனின் குதிரையை இரும்பு வேலி அமைத்துக் கட்டி வைத்த இடம் என்பதே நாளடைவில் மருவி 'கோயம்பேடு' என்றானது.
எங்கும் காணாத ராமரின் அபூர்வ கோலம்
பொதுவாக எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் ராமபிரான் பட்டாபிஷேகக் கோலத்திலோ அல்லது வில் ஏந்திய வீரக் கோலத்திலோ தான் காட்சி தருவார். ஆனால், இங்கு சீதையைத் தேடி வந்தபோது இருந்த அதே 'மரவுரி தரித்த' (வனவாசி) கோலத்தில் மிக எளிமையாகக் காட்சி தருகிறார். ராமரின் இந்தத் தோற்றத்தைக் காண்பது மிகவும் அரிது.
அன்னை சீதையின் தாய்மைக் கோலம்
இத்தலத்தின் மற்றொரு மிக முக்கிய சிறப்பு, இங்கு அன்னை சீதை கர்ப்பிணி கோலத்தில் அருள்பாலிக்கிறார். வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் சீதை தங்கியிருந்த காலத்தை இது நினைவுபடுத்துகிறது. தாய்மைக்காக ஏங்கும் பெண்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த பிரார்த்தனை தலம்.
ஏன் இங்கு லட்சுமணனும் அனுமனும் இல்லை?
ராமர் சந்நிதி என்றாலே அங்கே லட்சுமணனும் அனுமனும் இருப்பது வழக்கம். ஆனால், இங்கு லவ-குசர்களுடன் ராமர் போர் புரிந்தபோது, லட்சுமணனும் அனுமனும் எதிரெதிர் துருவங்களாக நின்ற தலம் இது. எனவே, மூலவர் சந்நிதியில் ராமரும் சீதையும் மட்டுமே தனித்து எழுந்தருளியுள்ளனர். (அனுமனுக்குத் தனியே தீர்த்தக்கரையில் சந்நிதி உள்ளது).
விசேஷ வழிபாடுகளும் பலன்களும்
புத்திர பாக்கியம்: அறிவான மற்றும் வீரமான ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று விரும்பும் தம்பதிகள் இங்கு வந்து சீதா பிராட்டியிடம் மனமுருகி வேண்டிக்கொள்கிறார்கள்.
திருமணத் தடை நீங்க: 'பார்வதி சுயம்வர விருட்சம்' (வில்வம் மற்றும் வேம்பு இணைந்த மரம்) இங்குள்ளது. திருமணத் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் இந்த மரத்திற்குத் தாலி கட்டி வேண்டினால் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.
பித்ரு தோஷ நிவர்த்தி: லவ-குசர்களால் உருவாக்கப்பட்ட தீர்த்தத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது காசிக்கு நிகரான பலனைத் தரும் எனக் கருதப்படுகிறது.
ஆன்மீகத் தகவல்கள்
மூலவர்: வைகுண்டவாசப் பெருமாள் (பக்தவச்சலர்)
தாயார்: கனகவல்லி தாயார்
பழமை: அருணகிரிநாதரால் 'கோசைநகர்' எனத் திருப்புகழில் போற்றப்பட்ட தலம்.
தரிசன நேரம்: காலை 5.30 - 12.00 | மாலை 4.30 - 8.30
சென்னையில் இருப்பவர்கள் தவறவிடக்கூடாத தலம் இது. இந்த வாரமே உங்கள் குடும்பத்துடன் சென்று ராமபிரானின் அருளைப் பெற்று வாருங்கள்!
கரும்புச்சாறு பெரிய கொப்பரையில் காய்ச்சப்பட்டு ஆறினால் கிடைப்பது.
இரும்புச் சத்து நிறைந்தது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.
ஒரு வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது- சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம் என. அப்படியெல்லாம் கிடையாது. வெள்ளை சர்க்கரை நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த அளவு கெடுதலோ அதே அளவு அவர்களுக்கு நாட்டு சர்க்கரையும் கெடுதல்.
நாட்டுசர்க்கரையில் கெமிக்கல் எதுவும் இல்லை -என்று சொல்வார்கள். ஆனால் நாட்டு சர்க்கரை தயாரிக்கும்போது, காஸ்ட்டிக் சோடாவை கரும்புச் சாறு கொதிக்கும்போது சேர்ப்பார்கள். அதிலிருந்து அழுக்கை நீக்க.
ஆனால் அப்படி பார்த்தால் எந்த உணவையும் சாப்பிடமுடியாது. எப்படியாயிருந்தாலும் வெள்ளை சர்க்கரையைவிட கெமிக்கல்கள் குறைவே.
எனவே சர்க்கரை நோயாளிகளைத் தவிர நாட்டுச் சர்க்கரையை எல்லோரும் சாப்பிடலாம். எந்த கெடுதலும் இல்லை. (டயட் கான்ஷியஸாக இருப்பவர்களுக்கு- நாட்டு சர்க்கரையிலும் கலோரி அதிகம்தான்)
காபி, தேநீர் மற்றும் இதர பானங்களில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட்டால், அதுவும் தனிச் சுவை தரும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மேல்நிலை கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடைகள் மீது ஆர்வம் உண்டாகும். நிலம் மற்றும் வீடு விற்பனையில் பொறுமையை கையாளவும். தாயாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணம் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
ரிஷபம்
தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. இணைய துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பொருள்கள் மூலம் ஆதாயம் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுபவம் மேம்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். பணிபுரியும் இடத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
உறவினர்களின் உண்மை நிலைகளை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் சுகந்திர போக்கு மேம்படும். எதிர்பாராத சில விரயங்கள் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை
கன்னி
அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். தந்தை வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆராய்ச்சி தொடர்பான செயல்களில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். முயற்சி கைக்கூடும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உலகியல் நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். அரசு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கற்கும் திறனின் சில மாற்றங்கள் உண்டாகும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
விருச்சிகம்
வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
தனுசு
குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சில பயணம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்க்க முயல்வீர்கள். பழைய பாக்கிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடாமல் இருக்கவும். பொருளாதார விஷயங்களை பகிராமல் இருக்கவும். மற்றவர்கள் கருத்துக்களால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். வர்த்தக முதலீடுகளை குறைத்து கொள்வது நல்லது. தனம் தொடர்பான நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விளையாட்டான விவாதங்களை தவிர்க்கவும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
பணி புரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியாக இருந்து வந்த பாக்கிகள் கிடைக்கும். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உருவாகும். வழக்கு விஷயங்களில் இருந்த தாமதங்கள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
குழந்தைகளின் செயல்களில் கவனம் வேண்டும். வியாபர பணிகளில் விழிப்புணர்வு வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகளும் மேம்படும். நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். சமூக பணிகளில் பொறுப்புகள் கிடைக்கும். நேர்மை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
விசுவாவசு வருடம் தை மாதம் 21 ஆம் தேதி புதன்கிழமை 4.2.2026
இன்று அதிகாலை 02.59 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று அதிகாலை 12.24 வரை மகம். பின்னர் பூரம்.
இன்று அதிகாலை 04.55 வரை சோபனம். பின்னர் அதிகண்டம். கரணம்:
இன்று அதிகாலை 02.59 வரை கரசை. பின்னர் பிற்பகல் 02.54 வரை வணிசை. பின்பு பத்தரை.
இன்று காலை 06.35 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியெவ்ரே (Pierre Poilievre) ஆகியோர் இந்த வாரம் சந்திக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத்தின் புதிய அமர்வு தொடங்கியுள்ள நிலையில் இந்த சந்திப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை பிற்பகல் X சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், பிரதமரை அவசரமாக சந்திக்க விரும்புவதாக பொய்லியெவ்ரே தெரிவித்துள்ளார்.
“நடைமுறை தீர்வுகளை முன்வைக்கவும், பிற கருத்துகளை கேட்கும் மனப்பான்மையுடன் இணைந்து செயல்பட்டு விரைவான முடிவுகளை எட்டவும் இந்த சந்திப்பு அவசியம்,” என அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவின் சுங்க வரிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படவும், அமெரிக்காவுடன் சுங்க வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் கன்சர்வேட்டிவ் கட்சி தயாராக இருப்பதாகவும் பொய்லியெவ்ரே தெரிவித்தார்.
ஜனவரி இறுதியில் பிரதமர் கார்னிக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதிய பொய்லியெவ்ரே, நீண்ட காலமாக தாமதிக்கப்பட்ட கொள்கைகளை விரைவாக நடைமுறைப்படுத்த தனது கட்சியின் ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், அந்த கடிதத்திற்கு இதுவரை பதில் வரவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
- காய்ச்சலுக்கு நிலவேம்பு, துளசி குடிநீர்.
- இருமலுக்கு ஆடாதோடைக் குடிநீர்.
- சளியுடன் கூடிய இருமலுக்கு கற்பூரவள்ளி இலை.
- நீரேற்றம் விலக மஞ்சள் புகையை மோந்து பார்த்தல்.
- ஈளை, இருமலுக்கு முசுமுசுக்கை அடை, கண்டங்கத்தரி இலைக் கசாயம்.
- மலச்சிக்கல் தீர நிலாவரைப் பொடி
- வாய்நாற்றம், விக்கல் தீர தனியா விதை
- வாந்தி, சுவையின்மை தீர நெல்லித் துவையல்.
- கழிச்சலை நிறுத்த மாதுளம்பிஞ்சு, பொடுதலைச் சாறு.
- பல்முளைக்கும்போது உண்டாகும் காய்ச்சல்,பேதிக்குத் தாளிசபத்திரி பொடி இரண்டு சிட்டிகை.
- பல் முளைக்கும்போது உண்டாகும் கழிச்சலுக்குத் திராட்சைப் பழச்சாறு.
- சொறி,சிரங்கு சரியாக குப்பைமேனி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்துப் பூச வேண்டும்.
- நீர் எரிச்சல் தீர நன்னாரி ஊறல் நீர்
- வியர்க்குரு விலகப் பனை நுங்கு நீர்
- கண் நோய்க்கு பொன்னாங்கண்ணிக் கீரைக் கடைசல்.
- உடல் உறுதிபெற செவ்வாழைப் பழம்.
- பல் துலக்க ஆலம் விழுது, கருவேலங்குச்சி
- குளியலுக்கு நலுங்குமாவு.
ஒருநாள் அர்ச்சுனன் நன்கு துங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்திலுங்கூட அவன் வாய் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று ஜெபம் செய்து கொண்டே இருந்தது. அவன் உடலின் மயிர்க்கால் தோறும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்ற நாமஜெபம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த அற்புத பக்தியை அறிந்த கிருஷ்ணன் அந்த இடத்திற்கு வந்தார். அவனது பத்தினிமாரும் வந்தனர். நாரதர், சிவன், பிரம்மன் முதலிய தேவரெல்லாம் இந்த அதிசயம் காணத் திரண்டு வந்தனர்.
அர்ச்சுனனின் ஆழ்ந்த பக்தியைக் கண்டு அனைவரும் நாட்டியமாடத் தொடங்கினர். ஆனாலும் அர்ச்சுனனின் ஆழ்ந்த உறக்கம் கலையவில்லை.
தெய்வப்பற்று உடையவர்கள் தம்மை அறியாமலே எப்போதும் இறைவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். அந்த ஜெபம் அவர்கள் உடலின் அணுக்கள் தோறும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். இது பக்தியின் மேலான நிலை. உன்னத நிலை. அந்த நிலையை அடைந்து விட்ட அர்ச்சுனனை அனைவரும் முழுமனதோடு பாராட்டினர்.
காந்தியடிகளும் இந்த மேலான பக்தி நிலையை அடைந்திருந்தார். அதனால் தான் மீர் ஆலம் என்பவன், காந்தியின் தலையில் அடித்த போது ஹேராம்! என்றார். மதன்லாலின் குண்டு வெடித்தபோதும் ஹேராம்! என்றார். கோட்சேயின் குண்டு தனது உயிரையே பறிக்கும் போதும் ஹேராம்! என்றே அவர் வாயானது இறைவன் நாமத்தை உச்சரித்தது.
இதே போன்ற மேலான பக்தி நிலை அடைந்த ஒருவரின் வரலாறு ஒன்றை இங்கே பார்ப்போம்.
பண்டரிபுரத்தில், சோகாமேளர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் குலத்தொழில் செருப்புத் தைப்பது. அத்தொழில் அவருக்கான வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருந்தது. அவர் தொழில் செய்யும் போதும், உணவு உண்ணும்போதும், உறங்கும்போதும் நடக்கும்போதும் அவர் வாய் தானாகவே விட்டல! விட்டல! என்று நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கும்.
ஒரு விபத்தில் அவர் வீடு இடிந்து விட்டது. அவரும் அவருடன் இருந்த சிலரும் இடிபாடுகளில் சிக்கி மாண்டனர். இடிபாடுகளை அகற்றுவதற்குப் பலமாதங்கள் ஆகிவிட்டன. ஞானியாகிய சோகாமேளரின் திருமேனியைக் கண்டுபிடிக்க அவர்தம் சீடர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் ஒருவர் உடலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. எலும்புத் துண்டுகளே எஞ்சியிருந்தன.
இந்த எலும்புகளிலாவது சோகாமேளின் எலும்பைக் கண்டு வழிபட வேண்டுமென்று விரும்பினர் சீடர்கள். ஆனால் எலும்பை அடையாளம் காண்பது எப்படி? செய்வதறியாது சீடர்கள் திகைத்து நின்றனர்.
அப்போது பெரும் ஞானியாகிய நாமதேவர் அங்கு வந்தார். சீடர்களின் திகைப்பைக் கண்டு, அவர்களை அழைத்தார். அவர்கள் தங்கள் குருவின் எலும்பு கிடைக்கவில்லை என்று கூறினர். அதற்கு அவர், சோகாமேளரின் எலும்பை அடையாளம் காண்பது மிகவும் எளிது. ஒவ்வொரு எலும்பாக எடுத்துக் காதோரம் வைத்துப் பாருங்கள். எந்த எலும்பிலிருந்து விட்டல! விட்டல! என்ற ஒலி வருகின்றதோ அதுதான் சோகாமேளரின் எலும்பு என்று அறிந்து கொள்ளலாம் என்றார் நாம தேவர்.
என்ன அதிசயம்! ஓர் எலும்பிலிருந்து, நாமதேவர் சொன்னபடியே, விட்டல! விட்டல! என்ற இனிய ஒலி மெல்லிதாகக் கேட்டது.
வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் திருநாமத்தை உச்சரித்து வந்தமையால், சோகாமேளரின் எலும்பிலும் கூட அந்த ஒலி பதிந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. இதிலிருந்து நாமஜெபத்தின் பெருமையையும் சோகாமேளரின் பரமபக்தியையும் அறிந்து கொள்ளலாம்.
புதையல் எடுத்தது போல் பூரித்துப் போன சீடர்கள் அந்த எலும்பை வைத்துப் பூசித்து வந்தனர். நாமஜெபமும் செய்து வந்தனர். அங்கே தினந்தோறும் விட்டல விட்டல என்ற ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.














