- · 1 friends
-
2 followers
Jinguchaa - Lyrical - Thug Life
Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman
விஜய் நடித்த ‘சிவகாசி’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
2005-ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சிவகாசி’. தற்போது இப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் புதிய ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் அசின், பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. விஜய்யின் ‘கில்லி’ படம் மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை புரிந்தது. இதனை கணக்கில் கொண்டு ஏ.எம்.ரத்னம் ‘சிவகாசி’ படத்தினையும் மறுவெளியீடு செய்ய முடிவு செய்திருக்கிறார்.
முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப்படும் இந்த முத்து ஆபரணங்கள் எத்தனையோ படையெடுப்புக்களில் இருந்து தப்பித்து வந்துள்ளன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் இது.
அது நவாப்கள் ஆட்சி செய்த காலம். நமது கோவில் சொத்துக்கள் பல கொள்ளையடிக்கப்பட்டன. பல கோவில்கள் தகர்க்கப்பட்டன.
அப்போது ஒரு படை அதன் தளபதி தலைமையில் தென்தமிழ்நாட்டில் உள்ள குடந்தை, மயிலாடுதுறை உள்ளிட்ட தலங்களை குறிவைத்து புறப்பட்டது.
வரும் வழியில் பல கோவிகளுக்குள் இப்படையினர் புகுந்து பல பொருட்களை கொள்ளையடித்தனர்.
வைத்தீஸ்வரன் கோவிலில் சரவணப் பிள்ளை என்பவர் அப்போது பொக்கிஷ காப்பாளராக இருந்தார்.
இத்தலத்தே எழுந்தருளியிருக்கும் முத்துக்குமார சுவாமி மீது பேரன்பும் பெரும் பக்தியும் கொண்ட அவர் முருகனுக்கு அடிக்கடி முத்து ஆபரணங்களை சூட்டி அழகு பார்ப்பார்.
கோவில் நகைகள் அனைத்திற்கும் உரிய கணக்குகளை நிர்வகித்து வந்த அவர், அவற்றை பத்திரமாக கையாண்டு முறையாக பராமரித்து வந்தார்.
நகைகளை அடிக்கடி சுத்தம் செய்து வைப்பார். அதன் பொலிவு எந்தவகையிலும் குறைந்துவிடக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் இப்படையினர் குடந்தைக்கு அருகவே ஒரு கோவிலில் கொள்ளையடித்தனர். அந்தக் கோவிலில் பணியாற்றிய சரவணப் பிள்ளையின் மைத்துனன் உடனே தனது மாமாவுக்கு இது குறித்து தகவலை தெரியப்படுத்தி அவரை உஷார்படுத்தினான்.
நவாப்பின் படைகள் விரைவில் வைத்தீஸ்வரன் கோவிலை முற்றுகையிடப் போகின்றனர் என்பதை அறிந்த சரவணப் பிள்ளை பதறி துடித்தார்.
“கொடியவர்கள், ஆண்டாண்டு காலமாக இங்குள்ள நகைகளை பறித்துச் சென்றால் என் செய்வேன்? முருகா நீயே துணை… உன் பொருளை காக்க என் உயிர்போனாலும் அது பற்றி எனக்கு கவலை இல்லை” என்று கதறியபடி முத்துக்குமார சுவாமியிடம் முறையிட்டார். பின்னர் கோவிலேயே கண்ணயர்ந்துவிட்டார்.
அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முத்துக்குமரன், “அன்பனே கவலை வேண்டாம். வரும் படைத்தளபதிக்கு நாம் சூலை நோயை தருகிறோம்.
அவன் வயிற்று வலியால் துடிப்பான்… என்ன மருந்து உட்கொண்டாலும் அவனுக்கு நோய் நீங்காது. நாளை காலை நீ அவனை சந்தித்து திருச்சாந்துருண்டையுடன் இந்த மருந்தைக் கொடு.
இதை உட்கொண்டவுடன் அவனுக்கு வலி நீங்கிவிடும். பிரதியுபகாரமாக கோவில் நகைகளை காப்பாற்றிக்கொள்” என்று கூறிவிட்டு மறைந்தான்.
திடுக்கிட்டு விழித்த சரவணப்பிள்ளை, தனது தலைமாட்டுக்கு அருகில் ஒரு சிமிழிக்குள் மருந்து இருப்பதைக் கண்டார்.
“முருகா… முத்துக்குமரா… கண்கண்ட தெய்வமே… உன் கருணையே கருணை” என்று முருகனின் கருணையை எண்ணி எண்ணி உருகினார்.
மறுநாள் விடிந்தது, தளபதியை தேடிப் புறப்பட்டார். புள்ளிருக்கு வேளூருக்கு சற்று தொலைவில் ஒரு இடத்தில் படைகள் கூடாரமிட்டு தங்கியிருப்பதை பார்த்தார்.
அங்கு சென்று விசாரித்தபோது, தளபதிக்கு உடல் நலமில்லாத காரணத்தால், மேற்கொண்டு படையை செலுத்தாமல் ஓய்வெடுப்பதாக வீரர்கள் கூறினர்.
அவர்களிடம் “உங்கள் தளபதியின் நோயை தீர்க்கும் மருந்து என்னிடம் உள்ளது. நீங்கள் அனுமதித்தால் அவரை சந்தித்து இதைக் கொடுப்பேன்” என்றார்.
காவலாளிகள் உடனே கூடாரத்தின் உள்ளே சென்று வலியால் வேதனையில் துடித்துக்கொண்டிருந்த தளபதியிடம் விஷயத்தைக் கூற, “உடனே அவரை அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
உள்ளே வந்த சரவணப் பிள்ளையையும் அவரது சிவப்பழமான தோற்றத்தையும் பார்த்தவுடனே அவனுக்கு அவர் மீது நம்பிக்கையும் மரியாதையும் ஏற்பட்டது.
“நான் பக்கத்து ஊருக்கு செல்லும் வழியில் இங்கே உங்கள் படையினர் முகாமிட்டிருப்பதை பார்த்தேன்.
என்ன ஏது என்று விசாரித்தபோது தாங்கள் உடல்நலமின்றி இங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் விஷயத்தை சொன்னார்கள்.
உங்களுக்கு விருப்பம் என்றால், என்னிடமுள்ள சரவரோக நிவாரணி ஒன்றை தருகிறேன்.
அதை உட்கொண்டால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வயிற்று வலி உடனே அகன்றுவிடும்!” என்றார் சரவணப் பிள்ளை.
‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற நிலையில் இருந்த தளபதிக்கு இவர் கூறியது அந்த ஆண்டவனே கூறியது போலிருந்தது.
“எத்தனையோ வைத்தியர்கள் இதுவரை வைத்தியம் பார்த்துவிட்டார்கள். ஒன்றும் பலனில்லை. நேரம் செல்ல செல்ல வலி தான் அதிகரிக்கிறது.
உங்களைப் பார்த்தால் ஏதோ இனம் புரியாத நம்பிக்கை மனதில் தோன்றுகிறது. நீங்கள் மட்டும் என் நோயை குணப்படுத்திவிட்டால் நீங்கள் கேட்பது எதுவானாலும் தருகிறேன்” என்றான்.
“முதலில் நீங்கள் இம்மருந்தை சாப்பிடுங்கள் தளபதியாரே… பிறகு பேசிக்கொள்ளலாம்” என்றவர், அந்த மருந்தை எடுத்து முருகனை தியானித்து சடாக்ஷர மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்தபடி தேனில் குழைத்து அதனுடன் வைத்தியநாதரின் பிரசாதமான திருச்சாந்துருண்டையும் தந்து உண்ணும்படி கேட்டுக்கொண்டார்.
நவாப்பின் தளபதியும் மருந்தை உட்கொள்ள அடுத்த சில நிமிடங்களில் வயிற்று வலி படிப்படியாக குறைந்து பின்னர் முற்றிலும் போயே போய்விட்டது.
தளபதிக்கு ஒரே மகிழ்ச்சி. “ஐயா… தக்க சமயத்தில் வந்து என் நோயை குணப்படுத்தினீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள். எது கேட்டாலும் தருகிறேன்”
“ஐயா.. நான் உங்களிடம் கேட்கப்போவது ஒன்றுமில்லை… புள்ளிருக்கு வேளூர் கோவிலை கொள்ளையடிக்கும் தங்கள் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தாங்கள் இப்போதே உங்கள் நவாப்பிடம் திரும்பிச் செல்லவேண்டும்”
இதை சற்று எதிர்பாராத அத்தளபதி, “இதென்ன விசித்திரமான் வேண்டுகோளாக இருக்கிறதே?” என்றான்.
சரவணப் பிள்ளை நடந்த அனைத்தையும் கூறினார். உடனே இஸ்லாமியரான அந்த தளபதிக்கு உடலெல்லாம் சிலிர்த்தது.
“என் நோய் நீக்கிய உங்கள் ஆண்டவனை நான் பார்க்கவேண்டும்” என்று தன் விருப்பத்தை தெரிவித்தான். சரவணப் பிள்ளை சற்று தயங்கினார்.
“உங்கள் கோவில் நகைகள் ஒன்றைக் கூட தொடமாட்டேன் இது சத்தியம்” என்று பிள்ளை அவர்களிடம் சத்தியமும் செய்துகொடுத்தான்.
பின்னர் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து உள்ளே நுழையாமல் முத்துக்குமார சுவாமியை முன்மண்டபத்தில் எழுந்தருளச் செய்து கண்குளிர தரிசித்தான்.
மேலும் சூலைநோயை நீக்கிய முத்துக்குமார சுவாமிக்கு தன்னிடம் உள்ள முத்துப்பந்தல், ஆலவட்டம், குடை, பல்லக்கு, கொடி, சாமரம் போன்ற பொருட்களை காணிக்கையாக கொடுத்தான்.
விசேஷ நாட்களில் தீபாராதனை முடிந்தவுடன், தனக்காக மற்றொரு தீபாராதனை செய்யும்படி பல நிபந்தங்களை ஏற்படுத்திவிட்டுச் சென்றான்.
இன்றும் இது வைத்தீஸ்வரன் கோவிலில் வழக்கத்தில் உள்ளது. நேரில் சென்றால் பார்த்து மகிழலாம்.
அவரை குடும்பத்தை சேர்ந்த ஒரு காய்கறியாகும். பயத்தங்காய் என்பது இளம் பச்சை நிறத்தில் பீன்ஸை போலவே இருக்கும். ஆனால் பீன்சை விட மெல்லியதாகவும், நீளமானதாகவும் இருக்கும். உள்ளே தட்டப்பயறை போல் இளம் பயிர்கள் இருக்கும். இதனை ‘காராமணி’ என்றும் கூறுவார்கள்.
பயத்தங்காயில் உள்ள பைட்டோகெமிக்கல் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் இரண்டும் புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டவை. பயத்தங்காயில் நார்ச்சத்து, ஃபோலேட், இரும்புச்சத்து, அத்தியாவசிய தாதுச்சத்துகள் மற்றும் வைட்டமின்களை கொண்டது. புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த காய் அவசியமான ஒன்றாகும். முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போட நினைப்பவர்களும் அடிக்கடி காராமணியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பயத்தங்காயில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் அதிகம். இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். நீரிழிவு கட்டுக்குள் வரும். இதயம், சிறுநீரகங்கள் உள்பட உடலின் முக்கிய உறுப்புகள் சீராக இயங்க அவசியத் தேவையான பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.
பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்
1. பயத்தங்காய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். இந்தக் காய் பசியைத் தூண்டி நீரைப் பெருக்கும். கபத்தை அகற்றும்.
2. இதைப் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தோ, கறி செய்தோ சாப்பிடலாம்.
3. காராமணியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியது. அடிக்கடி காராமணி சாப்பிட்டால் தொற்று நோய்கள் எளிதில் அண்டாது.
4. காராமணியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்கும். அடிக்கடி காராமணி சாப்பிட்டால் தொற்று நோய்கள் எளிதில் அண்டாது.
5. கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலேட் சத்து காராமணியில் நிறைய உண்டு. ஃபோலேட் சத்து நிறைந்த உணவுகள்தான் பிறக்கும் குழந்தையை நரம்பு மண்டலக் கோளாறுகள் இல்லாமல் காக்கும்.
6. பயத்தங்காயிலுள்ள நார்ச்சத்தானது எடைக்குறைப்புக்கு உதவி, நீரிழிவைக் கட்டுப் படுத்தி, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
7. பயத்தங்காய் வயிறு, கணையம் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் சீரான குடல் இயக்கத்துக்கு உதவி, சிறுநீர் பாதை அடைப்பை சரிசெய்து, சிறுநீர் நோய்களையும் சரியாக்குகிறது.
8. காராமணியில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ், இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
9. பயத்தங்காயில் உள்ள லிக்னின் என்னும் பொருள் சில வகையான புற்றுநோய், பக்கவாதம், ஹைப்பர் டென்ஷன் மற்றும் ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட நோய்களில் இருந்து காக்கிறது.
10. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து பயத்தங்காயில் அதிகமுள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் சீக்கிரமாகவும் அடர்த்தியாகவும் வளரும்
குஷ்பூ உச்ச நடிகர்களுக்கு இணையா மார்கெட்ல இருக்கும் போதே அறிமுகமானவங்க சிம்ரன்.
குஷ்பூக்கு பின்னால மீனா, ரம்பா, ரோஜா போல நிறைய பேர் இன்டஸ்ட்ரி உள்ள பிரபலமா இருந்தாலும். அந்த பீக் டச் பண்ணது சிம்ரன்தான். அதுக்கு ரொம்ப முக்கிய காரணமே புதியதலைமுறை நடிகர்கள் படங்கள் பிரபலமாகும் சமயம் இவங்க தமிழ் சினிமால அறிமுகம் ஆகறாங்க.
சீனியர் ஹீரோசோடு நடித்த நடிகைகள் இந்த தலைமுறை நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பில்லாமல் போனது. சிம்ரன் படங்களை பார்த்தாலே அதை சொல்லிட முடியும். அறிமுகமான வருடம் நேருக்கு நேர், ஒன்ஸ்மோர், விஐபி, பூச்சூடவானு க்ளாமரஸ் ரோல்.
அடுத்த வருடமே அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள்னு குடும்ப படங்களாவும். அதில் அவங்க ரோல் முக்கியமானதா பார்த்து பண்ணாங்க. அடுத்த வருடமே துள்ளாத மனமும் துள்ளும், வாலி இரு முக்கிய நடிகர்களோட படங்கள்லயும் ஹை பர்ஃபாமன்ஸ் ரோல்ல கலக்குனாங்க.
சிம்ரன் அவங்க கேரியர்ல அறிமுகமான இரண்டு வருடங்கள்ல அவங்க பீக் டச் பண்ண வாலி மூலமா தான் ஜோதிகா கெஸ்ட் ரோல்ல அறிமுகம் ஆகறாங்க. யார்டா இதுனு ஆடியன்ஸ் யாரையும் ஜோ பக்கம் திரும்பி பார்க்க விடாம சிம்ரன் அட்டகாசம் பண்ணிருந்தாங்க.
அதை விட ஆச்சர்யம் அந்த டைம்ல எதிரும் புதிரும், அந்தப்புறம் ரெண்டு படங்கள்லயும் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போனாங்க. இப்படி சிம்ஸ் உச்சத்தில் இருக்கும் இதே காலத்தில் ஜோதிகா அந்த இடத்திற்க்கு வருவாங்கனு வாலி சமயம் யாரும் கற்பனை கூட பண்ணிருக்க மாட்டாங்க.
மாயாவி படத்தில் சத்யன் சொல்லுவாரே நாங்க சிம்ரன் போஸ்டரே மூனு மணி நேரம் பார்ப்போம். நீயெல்லாம் ஓவர் ஆக்டிங்னு. கிட்டதட்ட அதே பெரும்பாலான ஆடியன்ஸ் மனநிலையாவும் இருந்தது. ஆனாலும் அவங்க தேர்ந்தெடுத்த படங்கள்ல ஒரு மேஜிக் இருந்தது. அதை ஜோ சரியா பயன்படுத்தினாங்க.
வாலி வந்த சமயமே பூவெல்லாம் கேட்டு பார் சூர்யாவோடு பண்ணாங்க. அடுத்த வருசமே முகவரி, குஷி, ரிதம், தெனாலி, சிநேகிதியேனு எல்லாமே முக்கியமான படங்கள். நல்ல ரோலும் கிடைச்சது. அதை மிக அழகா பண்ணிருந்தாங்க. ஆனாலும் அந்த ஓவர் ஆக்டிங்கற விசயம் நினைவில் இருந்து கொண்டேதான் இருந்தது.
ஆனா அடுத்த வருடத்தில் வந்த டும் டும் டும், பூவெல்லாம் உன் வாசம், 12பி படங்கள் அவங்க தனித்துவத்தை அடையாளம் காட்டியது. சந்திரமுகிக்கு பின்னால அவங்க பண்ண மொழி, வேட்டையாடு விளையாடு எல்லாமே முக்கியமான படங்கள் தான்.
நம்ம காலத்தில் குஷ்புக்கு பின்னால பீக் வந்தவங்க ரெண்டே பேர்தான். ஜோ & சிம்ஸ். அதுவும் ஒரே காலகட்டம் அதுதான் தனிச்சிறப்பு.
சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வருகிறது.
சோம்பு தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சோம்பு தண்ணீர் குடித்தால் வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரைந்து, தொப்பை குறைந்து சரியான உடல் அமைப்பை தரும்.
உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் குடித்தாலே போதும். ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டாமெலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
செரிமானமின்மையால் ஏற்படுகின்ற வயிற்றுவலிக்குச் சோம்புதண்ணீர் உடனடி தீர்வு தரும். தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சோம்பை நீரிலிட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், வயிற்றுவலி நீங்கும்.
சோம்பு தண்ணீர் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற வழிவகுக்கும்.
நாம் அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு சிறிதளவு சோம்பை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றங்கள் நீங்கி, பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த பெருஞ்சீரகம் உதவுகிறது.
கருப்பை சார்ந்த குறைபாடுகள், வயிற்றுப்புண், இருமல், மந்தம், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றிற்கு சோம்பு சிறந்த தீர்வைத் தரும்.
ஒரு பிராமணர் நாள்தோறும் பல வீடுகளுக்குச் சென்று உபாதானம் வாங்கிவருவது வழக்கம். அப்படிப் போகும்போது ஒவ்வொரு வீட்டிலும், “கிருஷ்ணாய நமஹ” என்று சொல்லி நிற்பார். அவர் வந்திருப்பது தெரிந்து வீட்டில் உள்ளவர்கள் அரிசி போடுவார்கள்.
ஒரு நாள் இந்தப் பிராமணர் ஒரு வீட்டுக்குள் சென்று, "கிருஷ்ணாய நமஹ” என்றார். வீட்டில் இருந்தவர்கள் எங்கோ பின்கட்டில் வேலையாக இருந்தார்கள். இந்தப் பிராமணர் வந்திருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டு மூன்று முறை அவர் சொல்லியும் யாரும் வரவில்லை. அங்கே ஒரு வெண்கலக் கிண்டி பளபளவென்று மின்னியது. நன்றாகத் தேய்த்திருந்தார்கள். யாராவது வருகிறார்களா என்று எதிர் நோக்கிக் காத்துநின்ற அந்த ஏழைப் பிராமணர் கண்ணிலே அந்தக் கிண்டி பட்டது; கருத்திலும் பட்டது. தாம் வந்திருப்பதை யாரும் கவனிக்கவில்லையென்பதை அறிந்து அவர் திரும்பிச் செல்ல எண்ணினார். முன்னே இருந்த கிண்டி அவர் ஆசையைத் தூண்டியது. ‘இங்கே ஒருவரும் இல்லையே! இதை யார் பார்க்கப் போகிறார்கள்?' என்று அதை எடுத்துப் பைக்குள் போட்டுக்கொண்டு போய் விட்டார்.
மறுநாள் வழக்கம் போல ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பிச்சை வாங்கிய அவர் இந்த வீட்டுக்கும் வந்தார். வரும் போதே அவர் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. வீட்டுக்குள் நுழைந்தார். முதல் நாள் அங்கிருந்த கிண்டியைத் திருடிய எண்ணம் முன் நின்றது. வழக்கம் போல, “கிருஷ்ணாய நமஹ" என்று சொல்லவேண்டியவர் தம்முடைய மனத்தில் கிண்டி உட்கார்ந்து கொண்டிருந்தமையால், “கிண்டியாய நமஹ” என்று சொல்லிவிட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் அதைக் கேட்டுத் திருட்டைக் கண்டுபிடித்து விட்டார்கள்.
இப்படி ஒரு கதையும், "கிண்டியாய நமஹ என்று வந்து நின்றான்" என்ற பழமொழியும் வழங்கி, வருகின்றன. நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து வரும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பிறக்கும். பேச்சுகளில் பொறுமை வேண்டும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
எதிலும் திட்டமிட்டு செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பல பணிகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கான பாராட்டுகள் கிடைக்கும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உருவாகும். வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் காணப்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சிம்மம்
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த எண்ணம் உண்டாகும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிற மொழி மக்களின் உதவிகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கூட்டாளிகள் வழியில் அனுசரித்து செல்லவும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம்
எதிர்பாராத சில காரியங்கள் நிறைவேறும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபார பயணங்களில் அனுகூலம் ஏற்படும். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்வாதங்களில் சிந்தித்து செயல்படவும். நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். கடன் செயல்களில் தெளிவுகள் உண்டாகும். தூக்கமின்மை பிரச்சனைகள் குறையும். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
தனுசு
சுப காரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்கால முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மகரம்
உணவு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் சார்ந்த வருமான சிந்தனைகள் மேம்படும். அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
கும்பம்
வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். மருத்துவ துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். அரசு செயல்களில் இருந்த தாமதம் விலகும். காப்பீடு துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்கவும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
அணுகுமுறையில் சில மாற்றம் காணப்படும். சொந்த ஊர் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்கள் உண்டாகும். அரசு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை 9.4.2026.
இன்று இரவு 07.32 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று காலை 07.17 வரை மூலம். பின்னர் பூராடம்.
இன்று மாலை 04.18 வரை பரிகம். பின்னர் சிவம்.
இன்று காலை 06.40 வரை பத்திரை. பின்னர் இரவு 07.32 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று காலை 06.05 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
01.வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.
02.இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல்இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.
03.செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேச ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.
04மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.
05.நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல. காய்கறிகளுள்ளே குறைவான சக்தி / கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான்.
06.விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்; பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.
07.வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத்தனிச்சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப்பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.
08.இக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமை மிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.
09.சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக் காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம். இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச்சாறு திகழ்கிறது.
10.வெள்ளரியைச் சமைத்துச் சாப்பிடும்போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகின்றன. எனவே, வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
11.வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தினால் குணம் தெரியும்.
12.பேதி நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தவேண்டும்.
13.வறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் கிடைக்கும் காலத்தில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.
14.தினமும் மிகச் சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும் போட்டு வைத்து மரக்கறி சாலட் போல் பரிமாறவேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச்செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும்.
15.இக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.
16.மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.
17.முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.
18.நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக்காய் என்றாலும் பெரிய வகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன்தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.
19.முடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், கந்தகமும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட்சாறு, இரு தேக்கரண்டி பசலைக்கீரைச்சாறு, பச்சடிக்கீரைச்சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.
20.காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில்தான் தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.
எம்ஜிஆரிடம் உதவி கேட்டுச் சென்ற கலைவாணரின் மகன் நல்லதம்பி (படத்தில் இருப்பவர்)..
கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன்.. ஆனா பணவசதி இல்ல.. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன்.. ‘எவ்வளவு தேவை?’ ன்னு கேட்டார்..
‘3 ஆயிரம் தேவைப்படுது’ ன்னு சொன்னேன்..
கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு, ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்..
காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க.. சாப்பிட்டு காத்திருந்தேன்..
அரசியல் காரணமா 1967 ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார்..
குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார்..
வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா’ன்னு கேட்டார்..
‘கலைவாணர் பையன் வந்திருக்கிறார்’ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார்..
நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல ‘டிபன் சாப்பிட்டியா?’ ன்னு கேட்டார்.. அடுத்து ‘காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?’ ன்னு கேட்டார்..
‘இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக்கு முன்னால உங்கள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’ன்னு சொன்னேன்..
‘முன்ன உங்கப்பா எவ்வளவு இன்கம் டாக்ஸ் கட்டுனாருன்னு தெரியுமா?’ ன்னு கேட்டார்..
‘எனக்குத் தெரியாது’ன்னு சொன்னேன்..
‘ஒன்றரைக்கோடி ரூபாய் வரி கட்டினாரு.. அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப் பாரு?’
ன்னு கேட்டார்..
‘பல கோடி ரூபா இருக்கும்’னு சொன்னேன்..
‘இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?’ன்னு கேட்டார்..
‘ஒன்னும் இல்லையே’ன்னு சொன்னேன்..
‘செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது. அதனாலதான் கல்விக்கு உதவி செஞ்சிருக்குறேன்.. அது உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்..
அவர் சொன்ன மாதிரியே நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சேன்.. இப்பவும்
எனக்கு மாசாமாசம் பென்ஷன் வருது... என்றார் கலைவாணரின் மகன் நல்லதம்பி.
தர்மலிங்கம் அந்த ஊரிலே பெரிய பணக்காரர் அவர்தான். அவருக்கு நான்கு பிள்ளைகள் மூன்று ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை உண்டு.
விவசாயம் வட்டி கொடவாங்கல், கமிஷன் கடை, பழ மண்டி, இப்படி பல தொழில் செய்து சம்பாதித்து வந்தார். ஏறக்குறைய ஒரு #ஜமீன்தார் போல் வாழ்ந்து வந்தார்.
சாரட்டு குதிரை வண்டி , அந்த சாரட்டு குதிரை வண்டியில் வரும்போது எல்லோரும் வணக்கம் சொல்வார்கள் அவருக்கு. முதன் முதலில் ஜீப் வாங்கியது அவர்தான்.
மூத்த பையனுக்கு திருமணம் வயது வந்து விட்டது பக்கத்தூரில் அவருக்கு சமமான வசதி படைத்த ஒருவர் வீட்டில் பெண் கேட்டு சென்றார்கள் அவர்களும் இவருடைய அந்தஸ்து வசதி எல்லாம் பார்த்து பொண்ணு கொடுக்க தயாரானார்கள்.
திருமணத்திற்கு இரண்டு விட்டார்களும் தயாரானார்கள் பட்டுச்ரிகையில் பளபளக்க சாரட்டு வண்டியில் வலம் வந்தார் மாப்பிள்ளை. பணக்காரர் வீட்டு திருமணம் சொல்லவா வேண்டும்..
காலை முர்த்தம் ஏழு மணிக்கெல்லாம் தாலி கட்டியாச்சு.
தாலி கட்டி முடிந்ததும் சாப்பாட்டுக்கு தயாரானார்கள்.. எல்லோருக்கும் வயிறார பந்தி பரிமாறி கொண்டிருந்தார்கள் சாப்பிட்ட எச்சிலை எடுப்பதற்கு ஆட்கள் இருப்பார்கள் கிராமத்தில்..
இலை எடுக்கும் முனியம்மா மகன் பள்ளிக்கூடம் போகும்போது .... அம்மா இன்னைக்கு இலை எடுக்க போயிருக்காங்க சாப்பாடு வாங்கிட்டு போய் பள்ளிக்கூடத்துல போய் சாப்பிடலாம் என்று ஒரு தூக்குவாளி கையில் கொண்டு வந்தான்.
அம்மா இந்த தூக்கு வாளியில் சோறு வைத்து கொடு நான் பள்ளிக்கூடத்தில் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொன்னான்.. அங்கே இருக்கும் ஒரு அம்மாவிடம் தூக்கம் வாளியை கொடுத்து ... என் மகனுக்கு கொஞ்சம் சோறு வைத்துக் கொடுங்கள் என்று முனியம்மாள் சொன்னாள்.
அந்த அம்மாவும் சோறு சாம்பார் கொஞ்சம் பொரியலும் வைத்து கையில் கொடுக்கும் போது தர்மலிங்கம் பார்த்து விட்டார்.. என்னமா நடக்குது?? இங்கே இலைஎடுக்க வந்த இலை மட்டும் தான் எடுக்கணும் இப்படி சோறு எல்லாம் கொண்டு போக கூடாது. நாங்க மிச்ச மீதி இருந்தா தான் கொடுப்போம் என்று கரராகச் சொன்னார். இல்லையா அய்யா என் மகன் பள்ளிக்கூடத்துக்கு போறான்
அம்மா வேலைக்கு போன இடத்துல சோறு வாங்கிட்டு போயிடலாம்னு வந்திருக்கிறான் என்று சொன்னாள்
அதெல்லாம் முடியாது போய் வேலையை பாரு என்று சொல்லி தூக்குவாளி பிடுங்கி தூக்கு வாளியில் இருக்கும் சோறை ஒரு பாத்திரத்தில் தட்டி விட்டார் தர்மலிங்கம்.. முனியம்மா கண்ணீருடன் இரு மகனே கொஞ்ச நேரம் இரு என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்..
அங்கே ஒரு பந்திய முடிந்து விட்டது எச்சிலையை எடுத்துக் கொண்டு வந்தாள்
எச்சிலையில் மிச்சம் இருக்கும் சோறை எடுத்து தூக்குவாளியில் வைத்துக் கொடுக்க மகனும் வாங்கிக் கொண்டு சென்று விட்டான்....
தன் மகனை நல்லா படிக்க வேண்டும் என்று எண்ணினாள் முனியம்மா.
முனியம்மா நினைத்தது போலவே அந்த பையனும் நல்லபடியாக படித்தான்.
பெயர் தான் தர்மலிங்கம் ஆனால் அவருக்கு நல்ல எண்ணம் கிடையாது ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவம் பார்ப்பதற்கு சொத்தை எல்லாம் இழந்து விட்டார். ஒருவருக்கு சொத்து இருக்கும் வரை தான் மதிப்பு சொத்து இல்லை என்றால் யாரும் மதிக்க மாட்டார்கள் தன் பிள்ளைகளும் மதிக்கவில்லை.
சாப்பாட்டுக்கு கூட ரேஷன் கடையில் தான் அரிசி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்...
முனியம்மா பையன் நல்லா படித்து அரசுத் துறையான நியாயவிலை கடையில் பணிக்கு அமர்த்தபட்டான்.
நியாய விலை கடையில் முதன் முதலில் அரிசி போடும் வாய்ப்பு கிடைத்தது
அரிசி வாங்குவதற்காக எல்லாரும் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள் அந்த வரிசையில் தர்மலிங்கமும் நின்று கொண்டிருந்தார். தர்மலிங்கத்துக்கு ஞாபகம் இல்லை இந்த பையன் யார் என்று. ஆனால் இந்த பையனுக்கு ஞாபகம் இருந்தது அன்று அம்மா சோறு வைத்து கொடுத்த தூக்க வாளியை பிடுங்கி வைத்துக் கொண்டவர் என்று....
அவரைப் பார்த்ததும் ஐயா வணக்கம் என்று சொன்னான் அவரும் வணக்கம்பா என்று மெதுவான குரலில் சொன்னார்....
ஐயா நான் யார் என்று தெரிகிறதா? என்று கேட்டான் முனியம்மா மகன்.... இல்லப்பா எனக்கு தெரியவில்லை என்று சொன்னார் தர்மலிங்கம்.
25 வருடத்திற்கு முன்னாடியே உங்க மகன் கல்யாணத்துக்கு எங்க அம்மா இலை நடக்க வந்தாங்க. அப்போது நான் பள்ளிக்கூடம் போகும்போது தூக்வாளியை கொடுத்து சோறு கேட்டேன் எங்க அம்மா சோறு போட்டு கொடுத்த போது நீங்கள் பிடுங்கி அதை கொட்டி விட்டீர்கள் என்று சொன்னான்
தர்மலிங்கத்துக்கு தான் செய்தது மறந்து போகுமா? என்ன அவர் ஒண்ணுமே பேசவில்லை.. அமைதியாக நின்று விட்டார்.
ஐயா உங்களுடைய ரேஷன் கார்டுக்கு அஞ்சு கிலோ அரிசி இது..... இந்த அஞ்சு கிலோ அரிசி நான் உங்களுக்கு கொடுக்கிறேன் நீங்க நல்லா சாப்பிடுங்க என்று சொன்னான்......
தர்மலிங்கத்துக்கு கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது
ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர் இருவரும் சூரியனை வணங்கினார்கள். அப்பொழுது சூரிய பகவான் அசரீரியாக தோன்றி "வேத குருவே.. உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன். இன்று சூரியனான நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள் என்று கூறி மறைந்தான்.
குருவும் சூரியனை வாங்கிவிட்டு சீடனை கவலையோடு பார்த்தார். இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே உள்ள கோவிலின் இறைவனை வணங்கினர். பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர். சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர சீடன் தூங்கினானே தவிர குரு தூங்கவில்லை. சீடனின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று நினைத்து விழித்து இருந்தார். அப்பொழுது ஒரு ராஜநாகம் படம் எடுத்தபடி சீடனின் அருகே அவனை கொல்ல வந்தது. இதை பார்த்து பதைபதைத்த குரு ராஜநாகமே நில் என்று ஆணையிட்டார். ராஜநாகமும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது.
குரு ராஜநாகத்தைப் பார்த்து, "நீ என் சீடனின் உயிரை எடுக்கவே வந்துள்ளதை நான் அறிவேன். குரு பக்தி மிகுந்த சீடனை காப்பாற்றுவது ஒரு குருவின் கடமை. அதனால் என் சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்க மாட்டேன்", என்று தடுத்தார்.
இப்பொழுது ராஜநாகம் பேசியது. "வேத குருவே உங்கள் சீடனின் கழுத்தில் என் நாவை வைத்து ரத்தத்தை உறிஞ்சு எடுக்க வேண்டும் என்பது எனக்கு காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே என் கடமையை செய்ய விடாமல் இப்படி தடுத்து என்னை நிறுத்தலாமா?" என்று முறை இட்டது. உடனே குரு "அப்படி என்றால் என் சீடனின் ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே உனக்கு காலன் இட்ட கட்டளை. சரி, சற்று பொறு.. நானே அவனது ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். அதை உறிஞ்சியதும் நீ உன் கடமையை செய்து விட்ட பலனை பெறுவாய்." என்று கூறி ஒரு சிறு கத்தியை எடுத்த குரு அதை சீடனின் கழுத்தில் வைத்து ரத்தம் வரும் அளவு ஆழம் வைத்து கத்தியை கீறினர். தன் கழுத்தில் கூர்மையாய் எதோ கீறுவதை உணர்ந்த சீடன் கண் விழித்து பார்த்தான். குரு தன் கழுத்தில் கத்தியை வைத்து கீறுவதை உணர்ந்து பின் கண்மூடி சிறிதும் அசையாமல் படுத்த படியே இருந்தான்.
சீடனின் பல துளி ரத்தத்தை எடுத்த குரு அதை ராஜநாகத்துக்கு ஊட்டிவிட்டார். ராஜநாகமும் குருவின் சாபத்துக்கு நாம் ஆளாகாமல் நம் கடமை நிறைவேறியதே என்ற மகிழ்வோடு ரத்தத்தை உறிஞ்சி விட்டு வந்த வழியே சென்றது.
குருவும் சீடனின் உயிரை காப்பாற்றிய நிம்மதியோடு அவனது கழுத்தில் முன்னமே தான் எடுத்து வைத்திருந்த பச்சிலை சாற்றை பிழிந்து சீடனின் கழுத்து பகுதியில் பற்று போட்டு விட்டு நிம்மதியோடு உறங்க சென்றார். சிறிது நேரம் இருவரும் நன்றாக களைப்பு தீர உறங்கிய பின் எழுந்து அமர்ந்தனர்.
அப்பொழுது சீடன் தன் கழுத்தில் பற்று இருப்பதை தொட்டு பார்த்து விட்டு எதுவும் குருவிடம் கேட்காமல் "குருவே நாம் நடை பயணத்தை தொடரலாமா?" என்று கேட்டான்.
குரு புன்னகையுடன், "சீடனே.. நீ சற்று முன் உறங்கும்போது நான் உன் கழுத்தில் கத்தி வைத்த போது நீ என்ன நினைத்தாய்? உனக்கு பயம் எதுவும் உண்டாகவில்லையா?" என்று புன்னகையுடன் கேட்டார்.
சீடன், "குருவே என் கழுத்தில் ஏதோ ஊறுவதை உணர்ந்தேன். விழித்தும் பார்த்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால் என் குருநாதராகிய தாங்கள் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் நான் நிம்மதியாக உறங்கினேன். இப்பொழுது எழுந்ததும் என் கழுத்தில் உள்ள மூலிகை பற்றை பார்த்தேன் என் குருநாதராகிய உங்களுக்கு என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால், எனக்கு அதிலும் எந்த வித கவலையும் இல்லை" என்று கூறி பணிந்து நின்றான். குருவும் சீடனை ஆற தழுவி எழுந்து அவனோடு நடக்கலானார்.
நண்பர்களே.. நமக்கு விதித்த படி நடக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் இறைவனே பொறுப்பு என்று அவனை சரணடைந்து விட்டால், நமக்கு நடக்க இருக்கும் தீமையும் இறைவன் அருளால் நன்மையாக நடக்கும். இதில் சீடன் தான் நாம். குரு தான் நம் கடவுள். ராஜநாகம் தான் நம் விதி.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தொழில் நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதில் புதிய தேடல்கள் பிறக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வரவுகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவுகளை எடுக்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் புதுவிதமான அறிமுகங்களும் அனுபவங்களும் ஏற்படும். வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களை சிந்தித்து செயல்படுதல் அவசியம் ஆகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிதுனம்
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். புதியவர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். ஓய்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வியாபார செயல்பாடுகளில் லாபங்கள் மேம்படும். மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த முடிவினை அளிக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
சிம்மம்
குழந்தைகளின் வருங்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அக்கம் பக்கம் வீட்டாருடன் இருந்த இன்னல்கள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். கலை சார்ந்த பணிகளில் நுட்பங்களை அறிவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கன்னி
குடும்பத்தில் புதிய நபர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அரசு காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
துலாம்
எந்த ஒரு செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். சுபமுயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுபவம் அதிகரிக்கலாம். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
பயணம் மற்றும் செயல்பாடுகளில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். அமைதியான பேச்சுகள் நல்ல மதிப்பை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். சாப்பாடு விஷயத்தில் கவனமுடன் இருக்கவும். திடீர் செய்திகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். மேலதிகாரிகளுடன் இருந்து வந்த வேறுபாடுகள் தீரும். வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தேவையில்லாத அலைச்சல் மூலம் சோர்வுகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மகரம்
எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். சிந்தனையில் தெளிவுகள் பிறக்கும். நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உயரதிகாரிகள் இடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆடம்பரமான செலவுகள் மூலம் விரயங்கள் உண்டாகும். சிரமம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
மனதில் சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். விவசாய பணிகளில் மாற்றமான சூழல் அமையும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம்
சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தன வருவாயில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபங்கள் மேம்படும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். வாக்குகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். கல்வி கற்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 25 ஆம் தேதி புதன்கிழமை 8.4.2026
இன்று மாலை 05.48 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று அதிகாலை 04.54 வரை கேட்டை. பின்னர் மூலம்.
இன்று மாலை 03.56 வரை வரீயான். பின்னர் பரிகம்.
இன்று அதிகாலை 04.26 வரை கரசை. பின்னர் மாலை 05.48 வரை வனிசை. பிறகு பத்திரை.
இன்று அதிகாலை 04.54 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.06 வரை அமிர்த யோகம். பின்பு மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
1. சீராக வளர்ந்துள்ள தர்ப்பூசணியை தேர்ந்தெடுங்கள். ஏனெனில், அந்த பழம் முழுவதும் கதிரவனின் ஒளி மற்றும் ஊட்டச்சத்து சீராக இருக்கும்.
2. கிட்டத்தட்ட ஒரே அளவுள்ள இரு பழங்களை கையில் தூக்கிப்பாருங்கள். எடை அதிகமுள்ள பழம் நீர்ச்சத்து மற்றும் சுவை மிகுந்தது (பழங்கள் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருக்க வேண்டும்).
3. பழத்தின் ஒரு பகுதியில் மஞ்சள் நிற திட்டு இருக்கிறதா என்று பாருங்கள். இந்த இடம் அந்த பழம் மண்ணில் நீண்ட நேரம் இருந்ததற்கான அடையாளம். நல்ல மஞ்சள் நிறத்தில் திட்டு இருந்தால் அது சரியான காலம் வரை செடியில் இருந்துள்ளது. கதிரவனின் ஒளியும் ஊட்டச்சத்தும் அதற்கு சுவையை அளித்திருக்கும். மாறாக, வெள்ளை நிற திட்டு இருந்தாலோ, அல்லது திட்டுகளே இல்லையென்றாலோ, அந்த பழம் தகுந்த காலத்திற்கு முன்னமேயே பறிக்கப்பட்டு விட்டது என்று பொருள். எனவே, சுவை குறைந்ததாக இருக்கும்.
4. அந்த பழத்தின் நிறம்: நன்றாக பழுத்த பழத்தில் கரும்பச்சை கோடுகள் இருக்கும். மேலும் அவற்றின் வெளித்தோல் மின்னாது.
5. தட்டிப் பார்ப்பது: இது பழக்கத்தில் தான் வரும் என்று இந்த வலைத்தளம் கூறுகிறது. எனவே, இதை அவரவர் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.
நான் வாங்கும் பொழுது முதல் நான்கு விஷயங்களை நன்றாக கவனித்து வாங்குவது வழக்கம்.
நடிகர் பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘ரஞ்ஜன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி உள்பட பலர் அறிமுகமாகின்றனர்.
இப்படத்தைத் தியாகராஜன் இயக்குகிறார். பிரீத்தி தியாகராஜன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படத்துக்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் பிரசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இது தெலுங்கில் வெற்றிபெற்ற ‘கோர்ட்’ படத்தின் ரீமேக். இதில் வழக்கறிஞராக பிரசாந்த் நடிக்கிறார்.
தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கதிரேசன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, பைவ்ஸ்டார் செந்தில், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், வெற்றிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இந்தப் படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கும். பிரசாந்துக்கும் எனக்கும் 35 வருட பழக்கம். 91-ம் ஆண்டு அவரை எப்படி பார்த்தேனோ, அப்படித்தான் இப்போதும் இருக்கிறார்.
பிரசாந்த் நடிப்பில் ஏற்கெனவே 3 படங்கள் இயக்கி இருக்கிறேன். அவர் நடிப்பில் மீண்டும் ஒரு படம் இயக்க நினைக்கிறேன். ஆக்ஷன் காட்சிகளில் விஜயகாந்த் சாருக்கு நிகரான திறமைகளைக் கொண்டவர் பிரசாந்த். அவர் அஸ்டாவதானி. அவருக்கு டைரக் ஷன், மியூசிக், எடிட்டிங் என அனைத்தும் தெரியும். அவர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நல்ல மனிதராக இருக்கிறார்” என்றார்.
பில் மோர்கன் (Bill Morgan) என்பவரின் கதை உலகின் மிகவும் பிரபலமான மற்றும் வியக்கத்தக்க தற்செயல் நிகழ்வுகளில் ஒன்றாகும்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்து, குறுகிய காலத்தில் இரண்டு முறை லாட்டரி வென்றவர்.
அவருக்குக் கிடைத்த அசாத்தியமான அதிர்ஷ்டங்கள் இதோ:
1. மரணத்திலிருந்து மீண்டது (1998)
ஒரு லாரி ஓட்டுநராக இருந்த பில் மோர்கன், ஒரு விபத்தில் சிக்கினார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது ஏற்பட்ட மருந்து ஒவ்வாமையால் (Allergic reaction) இதயத் துடிப்பு நின்றுவிட்டது. மருத்துவ ரீதியாக 14 நிமிடங்கள் அவர் இறந்ததாகக் கருதப்பட்டார். அதன் பிறகு கோமா நிலைக்குச் சென்ற அவரை, மருத்துவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை என்று கூறினர். ஆனால், 12 நாட்களுக்குப் பிறகு அவர் அதிசயத்தக்க வகையில் கண் விழித்தார்.
2. முதல் லாட்டரி வெற்றி
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்பிய அவர், ஒரு 'ஸ்க்ராட்ச் கார்டு' (Scratch card) லாட்டரி சீட்டை வாங்கினார். அதில் அவருக்கு சுமார் 17,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்பிலான கார் பரிசாகக் கிடைத்தது.
3. நேரலையில் அடித்த ஜாக்பாட்
அவரது இந்த 'மறுபிறவி' மற்றும் லாட்டரி வெற்றியைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிறுவனம், அதை ஒரு செய்தியாகப் பதிவு செய்ய அவரை அணுகியது. கேமராவிற்கு முன்னால் அவர் எப்படி லாட்டரி வென்றார் என்பதை மீண்டும் செய்து காட்டுவதற்காக (Re-enactment), ஒரு கடையிலிருந்து மீண்டும் ஒரு லாட்டரி சீட்டை வாங்கினார்.
அனைவரையும் திகைக்க வைக்கும் வகையில், அந்த நேரலையிலேயே அவர் சுரண்டிய அந்த இரண்டாவது சீட்டில் அவருக்கு 2,50,000 ஆஸ்திரேலிய டாலர் (சுமார் 1.4 கோடி ரூபாய் மதிப்பிற்கு மேல்) பரிசு விழுந்தது.
முக்கியமான தருணம்:
அந்த வீடியோவில் அவர் சீட்டைச் சுரண்டிவிட்டு, கேமராவைப் பார்த்து மிகவும் உணர்ச்சிகரமாக, "நான் இப்போதுதான் 2,50,000 டாலர்களை வென்றுள்ளேன், நான் விளையாடவில்லை!" என்று கூறுவது இன்றும் இணையத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு காட்சியாக உள்ளது.
ஒரே ஆண்டில் மரணத்தை வென்றது மற்றும் அடுத்தடுத்து இரண்டு முறை லாட்டரி வென்றது என பில் மோர்கன் உலகின் "மிகவும் அதிர்ஷ்டசாலி மனிதர்களில்" ஒருவராகக் கருதப்படுகிறார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். நண்பர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நிதானம் வேண்டும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையறிந்து செயல்படவும். எதிர்பாராத சில செய்திகள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
ரிஷபம்
புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமும் மகிழ்ச்சியான தருணங்களும் உருவாகும். வரவுகளில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். திறமையான பேச்சுக்கள் மூலம் காரிய சித்திகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். வரவுகளில் இருந்து வந்த இழுபறியான சூழல் குறையும். தனிப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். பேச்சுக்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஈர்ப்புகள் ஏற்படும். சிரமம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
எதிர்கால சேமிப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்த குழப்பம் நீங்கும். வித்தியாசமான அனுபவங்கள் மூலம் சில புரிதல்கள் உண்டாகும். பணியில் மாற்றமான சூழல்கள் அமையும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வர்த்தக வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி
சிம்மம்
நினைத்த பணிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். எண்ணங்கள் போக்கில் மாற்றம் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். விளையாட்டு செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
துலாம்
உத்தியோக ரீதியான வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். துரிதமான செயல்பாடுகள் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சுக்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் அனுகூலம் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். சில பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
தனுசு
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். வெளியூர் பயணங்களில் இருந்த இடையூறுகள் விலகும். ஆடம்பரமான பேச்சுக்களை நம்பி புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம்
அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தை வழியில் இருந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். முதலாளி வகையில் ஒத்துழைப்புகள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் மதிப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
உடன் இருப்பவர்கள் பற்றியும் உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் மேம்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். சமூக தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். பயம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மீனம்
பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். சமூக தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்க இயலும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். அலுவலகத்தில் மரியாதைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வருத்தம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 7.4.2026
இன்று மாலை 03.05 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
இன்று அதிகாலை 02.21 வரை அனுஷம். பின்னர் கேட்டை.
இன்று மாலை 03.27 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.
இன்று அதிகாலை 02.26 வரை கௌலவம். பின்னர் மாலை 03.05 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய்குமார், கயல் ஆனந்தி நடிக்கும் படம், ‘அறிவு’. மோட்டிவ்ட்ரோன் புரொடக் ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, மூணாறு பகுதிகளில் நடைபெற்றது. அங்குள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு நடந்தபோது, அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாதது தெரியவந்தது.
தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார். அதன்படி, பள்ளி முழுவதும் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் அவர்கள் தினசரி கல்வி பெற தேவையான அடிப்படை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட்டன. இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை. விருத்தாசலத்தில் தான் இருக்கிறது.
கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது.
தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.
இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரை பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு. திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.
கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.
நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிறந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.
தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்.
நூலகத்திற்கான தனி கட்டிடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும் கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார். இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.
பல்லடம் மாணிக்கம் அவர்கள், நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார். வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார். 24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.
தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார்.
பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்தத் தமிழ்நூல் காப்பகம் தான்.

