- · 1 friends
-
1 followers
Jinguchaa - Lyrical - Thug Life
Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman
பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, அவரின் மனைவி கன்னிகா ரவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
சினேகன் தற்போது மருத்துவர்களின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து கவலைப்படும் ரசிகர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும், என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர். சினேகன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். வைரல் காய்ச்சல் பரவி வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
சினேகன் மருத்துவமனையில் இருப்பதால், கன்னிகாவும் தனது இரண்டு குழந்தைகளுடன் மருத்துவமனையிலேயே இருந்து கவனித்து வருகிறார். உதவிக்கு கூட யாரும் இல்லாததால். குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
ரஜினிகாந்த்தை வைத்து கமல் தயாரிக்கும் தலைவர் 173 படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார் சுந்தர். அவரது இந்த முடிவு அனைவருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் விலகியதால் அடுத்ததாக இப்படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்புதான் அனைவரிடமும் இருக்கிறது.
தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்து வித்தைகளை கற்றுக்கொண்டு முறைமாமன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். ஜெயராம், குஷ்பூ, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்தடுத்து அவர் இயக்கிய மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட்டாகின.
இதன் காரணமாக கோலிவுட்டின் சக்சஸ்ஃபுல் இயக்குநர்களில் ஒருவராக மாறினார். அவரது படங்கள் என்றாலே குடும்பங்கள் கொண்டாடும்படியான விஷயங்கள், நகைச்சுவைகள் இருந்ததால் அவர் படத்துக்கு சென்றால் அனைத்தையும் மறந்துவிட்டு சிரித்துவிட்டு வரலாம் என்ற இமேஜ் உருவாகிவிட்டது. மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்கூட சுந்தர்.சியின் படம் ரிலீஸாகிவிட்டால் தவறாமல் குடும்பத்துடன் சென்று தியேட்டரில் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர். சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காததுதான் காரணம் என்றும்; இல்லை இல்லை ரஜினி சொன்ன சில விஷயங்கள் சுந்தருக்கு ஒத்துவராததால் இந்த வெளியேற்றம் என்று ஆள் ஆளுக்கு பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் பற்றி சுந்தர். சி கொடுத்த பழைய பேட்டி ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
பேட்டியில் சுந்தர். சி, "அருணாச்சலம் கதைக்கான ஒன்லைனை ரஜினி என்னிடம் சொன்னபோது அது எனக்குப் பிடிக்கவில்லை. அவர் மீது இருக்கும் எதிர்பார்ப்புக்கும் அவர் திறனுக்கும் இது போதாது என நினைத்தேன், ஆனால் அவர் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்று இயக்குநர்கள் சொன்னால் அவர் கதையை மாற்ற மாட்டார்.. இயக்குநரை மாற்றுவார் என தெரியும். எனவே அதற்கு ஓகே சொல்லி அதை மெருகேற்றினேன்" என்று கூறியிருக்கிறார்.
அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தை ஹெச்.வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் என ஏராளமானோர் நடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது ஜனநாயகன்.
படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் பெரிய மைல் கல்லாக அமையும் என்பது தளபதி ரசிகர்களின் திண்ணமான நம்பிக்கை. ஜனநாயகன் வருவதால்தான் 9ஆம் தேதி வெளியாகவிருந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி சில நாட்கள் தாமதமாக ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.
படத்தில் இடம்பெற்றிருக்கும் தளபதி கச்சேரி என்ற பாடல் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. தெருக்குரல் அறிவு பாடலை எழுத விஜய், அனிருத், அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருந்தார்கள். வழக்கம்போல் பாடல் பலரது வரவேற்பை பெற்றது. அதிலும் விஜய், பூஜா, மமிதா ஆகியோரின் நடனமும் கவனத்தை ஈர்க்க; விஜய்யை இப்படி ஜாலியான டான்ஸோடு பார்ப்பது இதுதான் கடைசியோ என்று ரசிகர்கள் வருத்தப்படவும் ஆரம்பித்தார்கள்.
பாடலின் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை கொண்டாடும் வகையிலும், அவர் அனைத்தையும் மாற்றப்போகிறார் என்பதையும் குறிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தன. அதேசமயம் மமிதாவின் காஸ்ட்யூமை பார்த்து ஆஹா இது பகவந்த் கேசரி படத்தில் இடம்பெற்ற பாடலில் இடம்பெற்ற மாதிரியே இருப்பதால் இது அந்தப் படத்தின் ரீமேக்தானோ என்றும் சந்தேகத்தை கிளப்பினார்கள்.
படத்தின் ஆடியோ வெளியீட்டு எங்கே, எப்போது நடக்கும் என்ற ஆவலும் இருந்தது. இந்நிலையில் அதுகுறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 27ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வீடியோவில் மலேசிய வாழ் விஜய் ரசிகர்கள் அவரை பற்றி எமோஷனலாக பேசும் காட்சிகளும் இருக்கின்றன. முன்னதாக, திமுகவை தொடர்ந்து விஜய் அட்டாக் செய்துவருவதால் ஆளுங்கட்சி சார்பில் ஜனநாயகன் படத்துக்கும், அதன் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கும் அழுத்தம் வரலாம்; எனவே வெளிநாட்டில் நடத்த விஜய் திட்டமிட்டிருக்கிறார் என்று தகவல்கள் வந்தன. இப்போது வந்திருக்கும் அறிவிப்பு அவை அனைத்தும் உண்மைதான் என்பதை உறுதி செய்திருக்கிறது.
விலைவாசி உயர்வு காரணமாக, கனேடியர்கள் தங்கள் உணவுப்பழக்கத்தையே மாற்றிவிட்டதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
பொதுவாகவே, கொரோனா காலகட்டத்துக்கு முன் காலாவதி திகதி பார்த்து உணவுப்பொருட்களை வாங்கிய பல நாட்டு மக்கள், இப்போது, எந்த உணவு விலை குறைவு என்று பார்த்து வாங்கத் துவங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக, கனேடியர்கள் தங்கள் உணவுப்பழக்கத்தையே மாற்றிவிட்டதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
Dalhousie பல்கலையும், Caddle என்னும் ஒன்லைன் தரவுத் தளமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வொன்றைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஐந்தில் நான்குபேர், இப்போது தங்களுக்கு அதிக பாரமாக உள்ள செலவு உணவுப்பொருட்கள் வாங்குவதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பாதிபேர், விலைவாசி உயர்வு காரணமாக, தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குவது, கூப்பன்கள் பயன்படுத்துவது அல்லது ஒன்லைனில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் இடங்களில் பொருட்கள் வாங்குவது என தாங்கள் உணவுப்பொருட்கள் வாங்கும் விதமே மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
செலவுகளைக் குறைப்பதற்காக, வெளியே சாப்பிடச் செல்வது குறைந்துள்ளதாகவும், பெரும்பாலும் வீடுகளில் சமைத்து உண்ணுவதாகவும், brand பார்த்து எந்த பொருள் விலைகுறைவாக உள்ளது என்பதைக் கவனித்து வாங்குவது, ஐஸ்கிரீம் போன்ற விடயங்களையும், மாமிசம், பழங்கள் போன்ற உணவுப்பொருட்களை குறைவாக வாங்குவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
பிரேசிலில் ஐ.நா காலநிலை உச்சிமாநாடு நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டு அரங்கில் நேற்று (20) இரவு திடீரென தீ பரவியதில், தீயில் சிக்கி 13 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரங்கில் தீ பரவியதும், மாநாட்டில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஓட்டமெடுத்துள்ளனர். எனினும், இந்த அசம்பாவைதத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா காலநிலை உச்சி மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு, திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கிளம்பிய புகையை சுவாசித்த 13 பேருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பிரேசிலின் பெலெமில் உள்ள COP30 அரங்கில் கடந்த திங்கட்கிழமை 10ஆம் திகதி தொடங்கிய இந்த உச்சிமாநாடு, இன்றோடு (21) நிறைவடைகின்றது.
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 21.11.2025.
இன்று பிற்பகல் 02.37 வரை பிரதமை. பின்னர் துவிதியை
இன்று பிற்பகல் 02.26 வரை அனுஷம் . பின்னர் கேட்டை.
இன்று காலை 11.02 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.
இன்று அதிகாலை 01.34 வரை கிமிஸ்துக்கினம். பின்னர் பிற்பகல் 02.37 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று பிற்பகல் 02.26 சித்த யோகம். பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நினைத்த காரியங்களில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகள் அமையும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். வேலையாட்கள் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
ரிஷபம்
குழந்தைகளின் எண்ணங்களைப் பிரிந்து செயல்படுவீர்கள். மனைவி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ஒத்துழைப்பன சூழல் அமையும். உத்தியோகத்தில் தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உயர் அதிகாரிகள் பாராட்டும் விதத்தில் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் ஏற்படும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். புதுவிதமான கனவுகள் உருவாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
உறவினர்களின் சந்திப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு மேம்படும். தனிப்பட்ட கருத்துகளில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த சிக்கல்கள் குறையும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
கன்னி
இழுபறியான சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
துலாம்
வரவுக்கு ஏற்ப விரயங்கள் ஏற்படும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். பேச்சுத் திறமைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் இருந்த தாமதங்கள் விலகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
விருச்சிகம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும்.கணவன் - மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
வியாபாரத்தில் திடீர் விரயங்கள் உண்டாகும். பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வாகன பயணங்களில் மிதவேகம் நன்று. மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். பேச்சுகளில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். அரசு துறையில் சாதகமான சூழல் அமையும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செல்வ சேர்க்கைக்கான சிந்தனைகள் மேம்படும். சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கும்பம்
பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். பணி சார்ந்த முயற்சிகள் பலிதமாகும். அரசு சார்ந்த உதவிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்பு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
உழைப்புக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதயகரமான சூழல் உண்டாகும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் செல்வாக்கு அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். நன்மை
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி வியாழக்கிழமை 20.11.2025.
இன்று பிற்பகல் 12.31 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.
இன்று காலை 11.53 வரை விசாகம். பின்னர் அனுஷம்.
இன்று காலை 10.29 வரை ஷோபனம். பின்னர் அதிகண்டம்.
இன்று பிற்பகல் 12.31 வரை சகுனி. பின்னர் கிமிஸ்துக்கினம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்திருக்கும் திரைப்படம் தான் 'வாரணாசி'. இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கீரவாணி இசையமைத்து இருக்கும் திரைப்படம் 1200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிற்கு வழக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய மகேஷ் பாபு, இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன் என்றார். இந்த விழாவுக்கு மட்டும் ரூ.25 கோடி செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், மகேஷ் பாபு ருத்ரா எனும் கதாபாத்திரத்திலும், பிரியங்கா சோப்ரா மந்தாகினி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ராமாயணக் காலத்தில் தொடங்கி இன்றைய நவீன காலத்துடன் இணைத்து வகையில் 'வாரணாசி' கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது இந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் ஆகும். த்ரிஷா, நயன்தாரா, தீபிகா போன்ற முன்னணி நடிகைகள் ரூ.5-10 கோடி சம்பளம் பெறும் நிலையில் பிரியங்கா சோப்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நயன்தாரா நேற்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலர் நயன்தாராவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்த நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு சூப்பர் கிப்டை பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தொகுப்பாளனியாக தனது பயணத்தை தொடங்கிய நயன்தாரா, மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த பிறகு தமிழில் அய்யா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். இவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவரின் 41வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன், தனது காதல் மனைவிக்கு Black Badge spectre உயர்தர சொகுசு காரை பரிசாக அளித்து இருக்கிறார். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உயிர், நீ பிறந்தா தினம்.... வரம், உன்னை உண்மையாகவே, வெறித்தனமாக, ஆழமாக நேசிக்கிறேன். என் அழகியே உன்னை நேசிக்கிறேன். உன் உயிர், உலக், பெரிய உயிர், உன் அன்பான மக்களிடமிருந்து அதிக உள்ள அன்பு நிறைந்த வாழ்க்கையுடனும் நன்றி கூறுகிறேன். பிரபஞ்சம் மற்றும் எல்லாம் வல்ல கடவுள் எப்போதும் சிறந்த தருணங்களை நமக்கு ஆசீர்வதிக்கிறார் ஏராளமான அன்பு, அசைக்க முடியாத நேர்மறை மற்றும் தூய நல்லெண்ணத்தால் மட்டுமே நிரம்பி இருக்கிறது என பதிவிட்டுள்ளார். காதல் மனைவி நயன்தாராவிற்காக அவர் பரிசாக அளித்து இருக்கும் காரின் விலை, Rs. 9.97 கோடி ஆகும். இந்த காரின் விலையை கேள்விப்பட்டு ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.
சுனிதா கோகோய் முதலில் ஜூனியர் சுபாயா நடன ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர். அதைத் தொடர்ந்து 'த்ரீ' திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் பள்ளித் தோழியாக நடித்திருந்தார். அதன் பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கினார். அதன் பின், பிக் பாஸ் தமிழ் சீசனில் பங்கேற்று இன்னும் பரவலாக பேசப்பட்டார். அவரது இயல்பான பேச்சு, உற்சாகமான நடத்தை, டான்ஸ் திறன் ஆகியவற்றின் மூலம் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி சுனிதா, வெப் சீரிஸ்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில், ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும், சுனிதா தனது ஃபிட்னஸ் ஜர்னி, நடன ரீல்ஸ், பயண புகைப்படங்கள், ஃபேஷன் ஷூட்ஸ் போன்றவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார். அவரது ஒவ்வொரு பதிவும் ஆயிரக்கணக்கான லைக்குகளையும், நூற்றுக்கணக்கான கருத்துக்களையும் பெற்று வைரலாகிறது. அந்த வகையில் தற்போது இவர், நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதுநாள் வரை இதுபோன்ற கவர்ச்சியை காட்டாத சுனிதா திடீரென கவர்ச்சியில் எல்லை மீறியுள்ளது அவரது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் சுனிதாவை திட்டி வருகின்றனர்.
28இல் நுழைந்தாய்..
68இல் பிரிந்தாய்.
40வருட தாம்பத்யம்..
அதிக கொஞ்சல்கள்,
கம்மி சண்டைகள்..
அணுசரித்துப் போவதில் மன்னி நீ..
என்னையும் தான் இருக்கச் சொன்னாய்..
நீ இருந்தவரையில் அப்படி நான் இல்லை..
பஞ்சாயத்து பண்ண நீ இருந்தாய்.
நீ இல்லாத இப்போது
அனுசரித்து மட்டும் தான்
போக வேண்டி இருக்கிறது.
Kitchenஇல் நடக்கும் யுத்தம்..
பாத்திரம் தேய்க்க big boss போல shift..
காபி சூடாக இல்லை என்று எத்தனை தடவை கோபப்பட்டு இருப்பேன்
இப்போது பிரச்சினைகள் எப்போதும் சூடாக இருப்பதால் காணாமல் போய் விட்டது காஃபி
நம் ரூமில் நடுஇரவில் A/c ஆஃப் ஆகிவிடுகிறது.
Hallஇல் தூங்கினால் என்ன என்று ஜாடை மாடையாக உபதேசம்.
அனாயாசமாக 25 பேருக்கு சமைப்பாயே..
அதில் சுவையாய்
மணமும் இருக்கும்
உன் மனமும் இருக்கும்
இன்று எனக்கு google சமையல் பிடிக்கவே இல்லை.
ஒரே ஒரு நாள் எனக்காக இறங்கி வருவாயா நீ
இதமாக உன் கை விரல்களை
கோர்த்து கொண்டு காதலோடு சில மணி நேரம் காலாற நடக்க ஆசை
எனக்குப் பிடித்ததில் நீ செய்யாமல் போனது ஓன்று தான்.
கண்தானம்.
என்னையும் தடுத்தாய்..
நீ சொன்ன காரணம் மண்ணுலகில் கண்தானம் செய்துவிட்டால் விண்ணுலகிற்கு நீங்கள் வரும்போது எப்படி அடையாளம் கண்டுபிடிப்பேன் என்று கூறினாயே..
உண்மைதான்.
முன்போல் இல்லை உடல்நிலை.
எனக்கொரு இடம் முன்பதிவு செய்..
சந்திப்போம் விரைவில்.....
மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்
நமக்கே நமக்கான
வாழ்க்கையை
நமக்காக நாம் வாழ.
(மனதை கலங்க வைத்த கடிதம்)
ஒருமுறை ஆசிரமத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு செய்வதறியாது, தங்கியிருந்த பக்தர்களிடம்,'இன்று இரவு உணவோடு உக்கிராணம் காலி.
நாளை காலை உணவு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்' என்று நிர்வாகத்தால் பணிவோடு வேண்டுகோள் விடப்பட்டது.
சிலர் ஊருக்கு கிளம்ப விழைந்து பகவானிடம் உத்தரவுக்கு வந்த போது பகவான் காதுக்கு விஷயம் சென்றது.
பகவான் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
"காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?
இந்த மலை இருக்கு.
பேசாம எல்லாம் போய்த் தூங்குங்கோ" என்று கூறி மௌனமானார்.
வழக்கம் போல அதிகாலை பகவான் கிச்சனுக்குள் நுழைந்தார்.
"என்ன இருக்கு?"என்று கேட்டார்.
'கொஞ்சம் நொய் குருணை தான் இருக்கு'என்றனர்.
"சரி எடுத்துக்கொண்டு வா!"
என்று கூறிவிட்டு அடுப்பைப் பற்ற வைத்தார்.
காலை 5:30 மணி,கைப்பிடி குருணையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு பாத்திரத்தில் போட்டுக் கழுவினார்.
உலை கொதித்ததும் அரிசியைப் போட்டார்.
அருகில் இருந்த அண்ணாமலை சுவாமி,'என் ஒருவனுக்கே இது பத்தாது.
எப்படி இத்தனை பேர் சாப்பிடறது இதை!' என்று வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அரிசி பொங்கி வந்த போது ஒரு பக்தர் தரிசனத்துக்கு 2 லிட்டர் பாலுடன் வந்தார்.
பகவான் பெரிய பாத்திரத்தை வைத்து அதில் பாலையும், அரிசியையும் சேர்த்து வேகவைத்தார்.
சில நிமிடங்களில் ஒரு பக்தர் கற்கண்டு, உலர் திராட்சையுடன் தரிசிக்க வந்தார்.
பகவான் அதைச் சுத்தம் செய்து அதையும் பாத்திரத்தில் போட்டார்.
ஆறரை மணி அளவில் அது முடிவுக்கு வந்த போது கும்பகோணத்தில் இருந்து பக்தர்கள் சிலர் வந்தனர்.
அவர்கள் பெரிய பானையில் இட்லி, வடை,சட்னி,மலைவாழைப்பழம்,
தொன்னை முதலியன கொண்டு வந்திருந்தார்கள்.
வழக்கமாக காலை 7 மணிக்கு பகவான் குளித்துவிட்டு வந்து, அனைவரும் அமர்ந்து அருமையான உணவு உண்டனர்.
பகவான் தயாரித்த பாயாசம் அந்தத் தொன்னையில் எல்லோருக்கும் பரிமாறப்பட்டது.











