- · 1 friends
-
1 followers
Jinguchaa - Lyrical - Thug Life
Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman
ஒரு முறை நடிகவேள் M R ராதா தனது விலை உயர்ந்த காரை தனது வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார்
அந்த வழியாக ஓடிச்சென்ற தெரு நாய்
ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது.
இதைப் பார்த்த நடிக வேள் M R ராதா சிரித்தார்
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது உதவியாளர் " ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து விரட்டி விடாமல் சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் " என்று ஆச்சரியத்துடன் கேட்டார்
அதற்கு அவர் மிகவும் சாந்தமாக,
அந்த நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது. அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. அதைப் பற்றி சொன்னாலும் அதற்குப் புரியாது "
என்று சிரித்துக் கொண்டே கூறினார்
கேள்வி கேட்டவர் இப்படி
ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்ல
இது போலத் தான் உங்கள் வாழ்விலும் உங்கள் மதிப்பை அறியாதவர்கள் உங்களை அவமானப்படுத்தும் போதும், கேலி செய்யும் போதும் அவர்களைப் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்.
ஏன் என்றால் அந்த நாய்களுக்கு சொன்னாலும் புரியாது . நாம் என்ன அறிவுரை சொன்னாலும் திரும்ப திரும்ப
அது சொன்னதையே செய்யும். அதை சிரித்துக் கொண்டே கடந்து போங்கள்.
கார் அழுக்கானால் கழுவினால சுத்தம் ஆகிவிடும். ஆனால் கோபப்பட்ட நம்ம மனசு அழுக்காகும். எப்ப பார்த்தாலும் அந்த நாயை கல்லெடுத்து அடிக்கலாமே என்ற
எண்ணம் வரும்.அது நமக்கு நல்லதல்ல.
இது எல்லா விசயத்துக்கும் பொருந்தும்.
உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள் நீங்கள் செயல் வீரராக இருங்கள் அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள்.
எத்தனையோ பிரச்னைகள் நீங்கும்.
நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். பதிலில்லை.
முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார்.
ஒன்றும் நடக்கவில்லை.
காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர்.
மிக விரிவான விஞ்ஞான பூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.
தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார்.
காகிதங்களைப் புரட்டிய நேரு கையை விரித்தார் ..
" இதெல்லாம் சாத்தியமில்லை..!"
"ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர் அனுபவமுள்ள ஒரு பொறியாளர். இந்த திட்டத்தை மறுக்க இரண்டு காரணங்கள்தான் உள்ளன.
ஒன்று இந்த நாட்டில் பொறியியல் படிப்பு தரமாக இல்லை. அல்லது இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தகுதி அரசியல்வாதிகளான நமக்கு இல்லை.."
கேம்ப்ரிட்ஜில் படித்த அறிவாளி நேருவை கிழிகிழியென கிழித்துப் போட்டார் கைநாட்டு பேர்வழி காமராஜர்.
காமராஜருக்கு கை சுத்தம் ..! அதனால் பிரதமராவது, பெரிய தலைவராவது ,. ..
அடுத்தமுறை பொறியாளருடன் நேருவைச் சென்று சந்தித்தார், விளக்கினார். முதலீடு 150 கோடி என்றார் காமராசர்.
"திட்டம் ஓகே.. நிதியில்லையே.. தமிழக அரசு நடத்தலாம்..."
"அரசின் ஆண்டு வருமானம் 150 கோடி ..
எங்களால் எப்படி....?"
" நிலக்கரியை வெளியே கொண்டுவர மூன்றாண்டுகள் ஆகும் என்கிறார். ஆண்டுக்கு 50 கோடி போடுங்க..." என்கின்றார் பிரதமர்.
முடிவெடுத்தார் தமிழக முதல்வர் தமிழர் காமராசர். தமிழ்நாடுதானே காமராசருக்கு குடும்பம்.
1954 ல் 50 கோடி ஒதுக்கினார். பணிகள் தொடங்கப்பட்டன.
அடுத்த வருடம் 50 கோடி.
1956 ல் கடைசி தவணையைக் கொடுத்துவிட்டு தவிக்கத் தொடங்கினார்.
பிள்ளை பெண்டாட்டிகளுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற இன்றைய ஊழல் பெருச்சாளிகளின் கவலையல்ல.
மக்கள் வரிப்பணமாச்சே.. மத்திய அரசு கேள்வி கேட்குமே ...!
சுரங்கப் பணிகள் முடிவடைந்து, நிலக்கரியை வெட்டியெடுத்து வெளியே கொண்டு வரும் நாளில்....
முதல்வர் நெய்வேலி வந்தார். சுரங்கத்தில் நின்றார்.
அதோ..
நீரும் நிலக்கரியும் கலந்து வழியும் கனிம வளத்தை தலையில் சுமந்தபடி தொழிலாளிகள் வருகின்றனர்.
ஓடினார் முதல்வர்....
தமிழ் மண்ணின் வளம்.. தமிழர் நலம் அல்லவா தலையிலிருந்து கறுப்பு தங்கமாக வழிகிறது ?
தாவியணைத்தார் அந்த தொழிலாளியை... கரியை அள்ளி கைகளால் முகர்ந்தார். ஆனந்தக் கூத்தாடினார்.
வெள்ளை கதர் சட்டை , கறுப்பாகி மின்னியது.
இன்று ஆண்டுக்கு லாபம் 2000 கோடிகள்...!
இந்த பதிவை படித்த போது என்னையுமறியாமல் என் கண்கள் நனைந்தன.
இப்படியும் ஒரு மனிதர் இவரன்றி பிறந்ததுமில்லை ! இனி பிறக்கபோவதுமில்லை !
ஆனால் இருக்கும் வரை அவர் அருமை தெரியவில்லை.
தினசரி அதிகாலையில் கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழிப்பதற்கு சவரத் தொழிலாளி ஒருவன் அரண்மணைக்கு வருவது வழக்கம்.
தினசரி காலையில் முகத்தை மழித்து முடியைத் திருத்துபவராதலால் அந்தத் தொழிலாளியிடம் வேடிக்கையாக எதையாவது பேசுவது கிருஷ்ணதேவராயரின் வழக்கம்.
அவனும் மன்னர் கேட்கும் கேள்விகளுக்கு இணக்கமாகப் பதிலுரைப்பான்.
ஒருநாள் அவன் கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழித்துக் கொண்டிருக்கும் போது,”நீ நாட்டு மக்களிடம் சகஜமாகப் பழகுபவனாயிற்றே.
நமது நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த நிலையில் இருக்கிறது என்று உனக்குத் தெரிந்திருக்குமே என்றார். ”
மேன்மை தாங்கிய மகாராஜா அவர்களே! தங்களுடைய ஆட்சியில் மக்கள் நன்கு சுபிட்சமாக இருக்கின்றனர்.
மக்களின் ஒவ்வொருவர் இல்லத்தில் குறைந்தபட்சம் எலுமிச்சம்பழம் அளவிற்குத் தங்கம் இருக்கிறது. அதனால் எவரும் கவலையில்லாமல் இருக்கின்றனர்” என்றார் சவரத்தொழிலாளி.
சவரத் தொழிலாளி சென்ற பின்னர் எப்போதும் போன்று மன்னரைக் காண அப்பாஜி வந்தார்.
அப்பாஜியிடம் சவரத் தொழிலாளி கூறியதை மன்னர் கூறினார். ”இவன் இப்படிக் கூற என்ன காரணம்? இவன் சொன்னது போன்று எப்படி எல்லோரிடமும் எலுமிச்சம்பழ அளவில் பொன் இருக்கும்? எலுமிச்சம்பழ அளவு பொன் என்பது சாதாரண மக்கள் வைத்திருக்க முடியாது! பெரும் பணக்காரர்களிடத்தில் அல்லவா இருக்கும்.
ஆகையினால் இதுபற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்!” என்று வினவினார்.
”இதற்கு விரைவில் விடையைக் கூறுகிறேன்” என்று அப்பாஜி மன்னரிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
மறுநாள் வழக்கம்போல் சவரத் தொழிலாளி அரண்மனைக்கு வந்து கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழித்துக் கொண்டிருந்தான்.
அச்சமயம் அப்பாஜி, காவலர்களை அழைத்து ”சவரத் தொழிலாளியின் இல்லத்தை சோதனை செய்துவிட்டு
விரைவில் வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.
காவலர்கள் சவரத் தொழிலாளியின் இல்லத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, அடப்பப் பெட்டியில் எலுமிச்சம்பழ அளவுக்கு பொன் இருப்பதைக் கண்டு வந்து கூறினர்.
அத னை மன்னரிடம் கொடுத்துவிட்டு, மன்னர் பெருமானே! அடுத்த நாள் சவரத் தொழிலாளி வந்ததும், முதலில் கேட்டது போன்று கேளுங்கள். அவனிடமிருந்து வேறு விதமான பதில் கிடைக்கும்” என்றார் அப்பாஜி.
வழக்கம் போல் காலை கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழிக்க சவரத் தொழிலாளி வந்தமர்ந்தான்.
வரும்போதே அவனது முகம் வாடியிருந்தது. அவன் தனது
வேலையை ஆரம்பிக்கும் சமயம்,
”இப்பொழுது குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஏதாவது மாறுதல் உண்டாகியிருக்கிறதா?” என்று வினவினார் மன்னர்.
”பெருமதிப்பிற்குரிய மகாராஜா அவர்களே! அதை ஏன் கேட்கின்றீர்கள்? எல்லோரும் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர்.
கையில் இருக்கும் எலுமிச்சம் பழ அளவு தங்கத்தை இழந்துவிட்டால் மக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?” என்று சவரத் தொழிலாளி கண்களில் நீர் மல்க தொண்டை அடைக்கக் கூறினான்.
அச்சமயம் வந்த அப்பாஜி, ”மன்னர் பெருமானே! இப்போது விடை தெரிந்து விட்டதா? உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் தன்னுடைய மன இயல்புக்கு ஏற்பதான் மற்றவர்களின் நிலையை நிர்ணயிக்கின்றனர்.
தன்னைப் போல்தான் பிறரும் இருப்பார்கள் என்று நினைக்கின்றனர்.
தான் நல்ல வருமானத்துடன் வாழ்ந்தால் மற்றவர்களும் அப்படித்தான் வாழ்வார்கள் என்றும், தான் கஷ்டநிலையில் வாழ்ந்தால் மற்றவர்களும் கஷ்டத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று மனப்பக்குவத்தில் வாழ்கின்றனர்” என்றார் அப்பாஜி.
உடனே காவலனை அழைத்து, ”கஜானாவில் பாதுகாப்புடன் இருக்கும் எலுமிச்சம்பழ அளவு பொன்னைக் கொண்டு வந்து சவரத் தொழிலாளியிடம் கொடுங்கள்” என்று ஆணையிட்டார் மன்னர்.
கொண்டு கொடுத்த பொன்னுடன் சிறிது பொன்னும் பரிசாகச் சவரத் தொழிலாளிக்குக் கொடுத்தார். அவனும் மனம் மகிழ்ந்து பணிவுடன் வணங்கி இன்முகத்துடன் வாங்கிச் சென்றான். மனித இயல்பை விளக்கிக் காட்டிய அப்பாஜியின் அறிவுத் திறமையைப் பாராட்டினார் கிருஷ்ணதேவராயர்.
• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.
• முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.
• முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
• இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.
• முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
• கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.
• ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.
முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்.....
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
புரதம் - 6.7%
கொழுப்பு - 1.7%
தாதுக்கள் - 2.3%
கார்போஹைட்ரேட்கள் - 12.5%
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 16.12.2025.
இன்று முழுவதும் துவாதசி.
இன்று மாலை 04.28 வரை சுவாதி . பின்னர் விசாகம்.
இன்று மாலை 03.04 வரை அதிகண்டம். பிறகு சுகர்மம்.
இன்று பிற்பகல் 12.41 வரை கௌலவம். பின்னர் தைத்தூலம்.
இன்று காலை 06.22 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 04.28 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இஞ்சியில் பல்வேறு மருத்துவ நன்மைகள் இருந்தாலும், அதை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்பதைப் பற்றி காண்போம்.
* தினமும் இஞ்சியின் சாற்றை, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாவதுடன், விரைவாக உடலின் எடையைக் குறைக்கலாம்
* வாரம் இரண்டு முறை, இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் மற்றும் சோர்வு பிரச்னைகள் குணமாகும்
* வாரம் ஒரு முறை, இஞ்சியை சுட்டு சாப்பிட, பித்தம் மற்றும் கபம் நோய்கள் விரைவாக குணமாகும். அதேபோல், இஞ்சி சாற்றில் வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால், வாதக் கோளாறுகள் நீங்கி, உடலில் பலம் உண்டாகும்
* இஞ்சியை புதினா இலையோடு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவை குணமாகும்
* காலையில் இஞ்சி சாற்றில், சிறிதளவு உப்பு கலந்து, மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், மலச்சிக்கல் விரைவில் குணமாகும்
* இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என, இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மார்பு வலி குணமாகும்.
* இஞ்சி சாற்றோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்
* இஞ்சி சாற்றில், எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பசி உணர்வை ஏற்படுத்தும். அதேபோல் இஞ்சி, மிளகு ஆகிய இரண்டையும் அரைத்து சாப்பிட்டு வந்தால், அஜீரணம் ஏற்படாது
* இஞ்சியை வதக்கி, அதில் தேன் மற்றும் நீர் விட்டு, கொதிக்க வைத்து, காலை, மாலை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு விரைவில் குணமாகும். இஞ்சியை அரைத்து நீரில் கலந்து, அதனுடன் துளசி இலையின் சாறை சேர்த்து, ஒரு வாரம் சாப்பிட்டால், வாய்வு தொல்லை குணமாகும்
* இஞ்சி சாற்றில் தேன் கலந்து, தினமும் காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர, நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
1. வாரம் ஒரு முறை வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கை, கால்களில் ஏற்படக்கூடிய எரிச்சல் நீங்கும். மேலும் அதிகாலையில், தினமும் 5 நிமிடம் கைகள் மற்றும் கால்களை மெதுவாக நீட்டி மடக்கும் பயிற்சியை செய்து வந்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
2. வாரத்தில் இரண்டு நாட்கள் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தேங்காய் பாலுடன், கருப்பட்டி சேர்த்து குடித்து வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். அல்சர் போன்ற பிரச்சனைகள் வராது.
3. செவ்வாழைப் பழத்தை தினமும் இரவு நேரங்களில் உணவிற்குப்பின் சாப்பிட்டு வந்தால், பல்லில் ஏற்படக்கூடிய இரத்தக் கசிவு நீங்கும். பல் சொத்தை போன்ற பிரச்சனைகளும் வராது.
4. கருவேப்பிலையை துவையல் செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடுகள் சீராகும். நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கவும் உதவி செய்யும்.
5. முகம் பளபளப்பாகவும், முகப்பறு மறையவும் சந்தன கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
6. மலக்குடல் பிரச்சனைகள் வராமல் தடுக்க, அகத்திகீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிடலாம். குறிப்பாக அகத்தி கீரையை நன்றாக வேகவைத்து சமைத்து சாப்பிடுங்கள்.
7. சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும், பாத எரிச்சல் சரியாகும்.
8. தேனில் ஊரவைத்த நெல்லிக்காயை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர இதயம் மற்றும் நுரையீரல் வலிமை பெறும்.
9. வேப்ப எண்ணெயை லேசாக சூடு செய்து கை மற்றும் கால்விரல் இடுக்குகலில் தடவினால் சேற்றுப் புண்கள் குணமாகும்.
10. வாரம் ஒருமுறை இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலோ (அல்லது) வாரம் ஒருமுறை திராட்சை சாறு குடித்துவந்தாலோ இரத்தம் சுத்தமாகும்.
ஒருவன் "என்னிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. தேவை உள்ள மக்களே திரண்டு மெரினா பீச்சுக்கு வாருங்கள்" என அறிவித்தான். மக்களும் லட்சக்கணக்கில் திரண்டனர். அப்போது அங்கே வருகை தந்த அந்த கோடிஸ்வரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டான்.
"என்னிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு பணம் உள்ளது. ஆகவே யாரும் அடித்துக் கொள்ளாமல் வரிசையாக நில்லுங்கள்" என்றான். உடனே அனைவரும் வரிசையாக நின்றனர். வரிசை செங்கல்பட்டு வரை நீண்டது.
அப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டான் அந்த கோடிஸ்வரன். அதாவது "முதலில் நிற்பவருக்கு ஒரு ரூபாயும், இரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும் ஆயிரமாவதாக நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும், லட்சமாவதாக நிற்பவருக்கு ஒரு லட்ச ரூபாயும்" என கண்டிசன் போட்டு விட்டு ஒவ்வொருவராக வாருங்கள் என அழைத்துள்ளான்.
முதலில் நின்றவர் இங்கு என்ன நடக்கிறது என்று கேட்டு ஒதுங்கிவிட்டார். இரண்டாவதாக நின்றவர் டீ குடிக்க போறேன் என சென்று விட்டார். மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்து விட்டார். இப்படியே.. முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் நாம் பஸ் பிடித்து செங்கல்பட்டு சென்று அங்கே கடைசியாக இணைந்து கொள்வோம் என்று பேசிக் கொண்டார்கள். இப்படியே யாருமே கடைசி வரையில் பணம் பெற வரவே இல்லை...
மனித மனம் கிடைப்பதில் ஒருபோதும் திருப்திப் படுவதே இல்லை..!!
வறுமைக்கோட்டில் குடும்பம் ஒன்று இருந்தது. வாழ்ந்து கெட்ட குடும்பம். தலைவன், தலைவி, மகன், மகள் என நான்கு பேர் இருந்தனர். சோம்பேறிகள் என எந்த வேலையும் கிடைக்கவில்லை. கால் வயிற்றைக் கூட தண்ணீரில்தான் கழுவிக் கொண்டனர். கண்ணீர் வடிக்கக் கூட தெம்பற்ற நிலை.
இவர்களின் நிலையைப் பார்த்து பரிதாப்பட்ட ஒருவர், அந்த ஊரின் மலையடிவாரத்தில் காலம் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாமியாரைப் போய் பாருங்கள். ஏதாவது அருள்வாக்கு சொல்வார் என்றார்.
சரியென்று அடுத்த நாள் அதிகாலையிலேயே கிளம்பி சாமியை பார்க்க சென்றார். ஒரு ஓலைக் குடிசையில் சாமி சப்பணமிட்டு அமர்ந்து ஏதோ தியானம் செய்து கொண்டிருந்தார். தியானத்தை முடிக்கும் வரை காத்திருந்த அவர், "சாமி நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்" என்றார்.
"சொல் மகனே என்ன பிரச்சினை உனக்கு ? "
"சாமி ... எங்க குடும்பத்துல என்னையும் சேர்த்து நாலு பேர் இருக்கோம். வசதியா வாழ்ந்து நொடிச்சுப் போனதால இந்த ஊருல எங்கள்ல யாருக்குமே வேலை கிடைக்கல. நல்லா சாப்பிட்டு பல மாசம் ஆகிப் போச்சு. உங்களை சந்திச்சா ஏதாவது நல்ல வழி சொல்வீங்கனு ஒருத்தர் சொன்னார். அதான் வந்தேன் சாமி " என்றார் பவ்யமாக.
"உனக்கு உழைத்து சாப்பிட ஆசையா, முன்பு போல் உட்கார்ந்து சாப்பிட ஆசையா? "
"உட்கார்ந்து சாப்பிட்டு கெட்டது போதும். இனி உழைத்து சாப்பிடத்தான் ஆசை சாமி "
"சரி அதோ அந்த மூலையில் ஒரு மூட்டை அரிசியும் அந்த அரிசி தீரும் வரைக்குமான மளிகைப் பொருட்களும் இருக்கின்றன. எடுத்துக் கொள் "
"சாமி நான் உட்கார்ந்து சாப்பிட விரும்பவில்லை. இது தீர்ந்த பின் மீண்டும் இதே நிலைக்குதான் வருவேன். நிரந்தர தீர்வு தாருங்கள் சாமி "
"அவசரப்படாதே மகனே. நான் சொல்வதை மட்டும் செய். ஆனால் ஒரு நிபந்தனை. இன்று கால் படி அரிசியை சமை. நாளை அதை இரட்டிப்பாக்கி அரை படி சமை. நாளை மறுநாள் அதையும் இரட்டிப்பாக்கி ஒரு படி அரிசி சமை. இப்படியே ஒவ்வொரு நாளும் முதல் நாளை விட இரட்டிப்பாக சமை. ஒரு அரிசி கூட வீணாக கூடாது. என்னைக் கேட்காமல் உன் வீட்டார் தவிர யாருக்கும் சாப்பாடு போடக் கூடாது"
"சாமி இதெப்படி நிரந்தர தீர்வாகும்? "
"நான் சொல்வதை மட்டும் செய்வதென்றால் இவற்றை எடுத்துப் போ. இல்லையென்றால் நீ இப்படியே போகலாம் "
"நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன். கோவப்படாதீங்க சாமி"
சாமி சிரித்துக் கொள்ள, அரிசியையும் மளிகைப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
அன்று கால் படி அரிசி சமைத்து கொஞ்சமாய் குழம்பு வைத்து நான்கு பேரும் சாப்பிட்டார்கள். அனைவருக்கும் அரை வயிறு நிரம்பியது. அடுத்த நாள் அரைப்படி சமைத்து குழம்பு வைத்து வயிறாற சாப்பிட்டார்கள். மூன்றாம் நாள் ஒரு படி சமைத்து சாப்பிட்டது போக பாதி சாதம் மிஞ்சியது.
வீணாக்க கூடாதே என்ன செய்வது என யோசித்தவர், அடுத்த அரை மணி நேரத்தில் சாமியிடம் ஓடினார்.
"சாமி நீங்கள் சொன்னது போல ஒவ்வொரு நாளும் இரட்டிப்பாக சமைத்தேன். ஆனால் இன்று பாதி மிஞ்சி விட்டது. என்னைக் கேட்காமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றீர்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும். எங்களுக்கு அரைப்படியே போதுமானது. அதை மட்டும் தினமும் சமைத்துக் கொள்ளவா? "
"அரிசி தீரும் வரை இரட்டிப்பாக சமைப்பதை நிறுத்தக் கூடாது என்பது நிபந்தனை. மிஞ்சியதை அக்கம் பக்கத்தினருக்கு கொடு"
"சரிங்க சாமி " கும்பிட்டு விட்டு கிளம்பினார். வீட்டிற்கு சென்றதும் மிஞ்சிய சாதத்தை அக்கம் பக்கத்தினர் நான்கு பேருக்கு கொடுத்தார். அவர்கள் சாப்பிட்டு விட்டு "ஆகா அருமையான சாப்பாடு" என புகழ்ந்தார்கள்.
மறுநாள் இரண்டு படி அரிசியைப் பொங்கி சாப்பிட்டது போக பதினைந்து பேர் அளவு சாப்பாடு மிஞ்சியது. இப்படியே போனால் அரிசி ஒருவாரத்தில் முடிந்து விடுமே என்ற கவலையில் மீண்டும் சாமியைப் பார்க்க ஓடினார்.
"சாமி இன்னைக்கு பதினைந்து ஆள் சாப்பாடு மிஞ்சி விட்டது. இப்படி சமைத்தால் ஒருவாரம் கூட அரிசி வராதே "
"நீ சுவையாக சமைக்கிறாயா? "
"ஆமாம் சாமி. நேற்று சாப்பிட்ட அனைவரும் எந்த ஓட்டல்லயும் இவ்வளவு ருசியான சாப்பாடு கிடைப்பதில்லைனு பேசிக்கிறாங்க "
"அப்படியானால் மீதமாகும் சாப்பாட்டை நீ விற்பனை செய்"
"சரிங்க சாமி " என்று சந்தோசமாய் வணங்கி வீட்டுக்கு வந்தவர் சாப்பாடு நாற்பது ரூபாயென விற்க ஆரம்பித்தார். பத்து சாப்பாடு மட்டுமே விற்றது. அஞ்சு சாப்பாடு மிஞ்சியது.
அடடா இன்னைக்கு பதினைஞ்சு சாப்பாடே விக்கல. நாளைக்கு எப்படி நாப்பது சாப்பாட்டை விக்கிறது என்ற கவலை வர அடுத்த அரைமணி நேரத்தில் சாமியின் முன் நின்றார்.
"சாமி பத்து சாப்பாடுதான் வித்துச்சு. இன்னைக்கே அஞ்சு மிஞ்சிருச்சு. நாளைக்கு நாலு படி பொங்குனா வீணாப் போகுமே சாமி "
"ஒரு சாப்பாடு எவ்வளவுனு வித்தே? "
"நாப்பது ரூபாய்க்கு வித்தேன் சாமி "
"ஒரு சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவாகும்? "
"ஒரு சாதத்துக்கு அஞ்சு ரூபா வச்சா குழம்பு மற்றும் தொட்டுக் கொள்ளும் வகையறாக்களுக்கு பத்து ரூபாயாகும். மொத்தம் ஒரு சாப்பாட்டுக்கு பதினைந்து ரூபாய் செலவாகும் சாமி "
"உன் உழைப்புக்கு அஞ்சு ரூபாய் சேர்த்து வச்சாலும் ஒரு சாப்பாடு தயாரிக்க ஆகும் செலவு இருபது ரூபாயை தாண்டாது. நீ அதையும் இரு மடங்காங்கி விற்றால் எப்படி விற்பனையாகும்? "
"அப்படி விற்றால்தானே நாளை ஏதோ ஒரு வகையில் நஷ்டம் வரும் போது சமாளிக்க முடியும் "
"இதுதான் நிறையப் பேர் செய்யும் தவறு. குறைந்த லாபம் அதிக விற்பனை என்பதே புத்திசாலிகள் கடைபிடிக்கும் அழகான வியாபார முறை. நாம் செய்யும் தொழிலில் அனைவருக்கும் பயன் இருக்க வேண்டும். நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமென நினைப்பவன் நல்ல வியாபாரி ஆக முடியாது "
"இப்போது நான் எவ்வளவு விலை வைக்க வேண்டும் சாமி "
"உன் குடிசையின் முன்னால், 'வீட்டுமுறை சாப்பாடு ரூபாய் இருபது மட்டும்' என்று ஒரு அட்டையில் எழுதி தொங்கவிடு "
"சரிங்க சாமி " என்று அரை மனதுடனே நகன்றார் அவர்.
அடுத்த நாளிலிருந்து இருபது ரூபாய்க்கு சாப்பாடு விற்பனை செய்ய சக்கை போடு போடத் தொடங்கியது வியாபாரம்.
நான்கே நாட்களில் அரிசி மூட்டை காலியாக, அதுவரை சேர்ந்த பணத்தை எடுத்துக் கொண்டு சாமியிடம் சென்றார். அவர் முகத்தில் பார்த்த சந்தோசத்தை கண்டு சாமி கேட்டார்.
"என்ன மகனே மகிழ்ச்சியாய் இருக்கிறாயா? "
"தங்கள் ஆசியாலும் ஆலோசனையாலும் மிக நலமாக இருக்கிறேன் சாமி. இந்தாங்க ... இதுவரை சாப்பாடு விற்ற பணம். இது உங்களைச் சேர வேண்டியது சாமி"
"அதை நீயே வைத்துக் கொள். அதில் மூன்று மூட்டை அரிசியும் மூன்று பை மளிகைப் பொருட்களும் வாங்கி, ஒரு மூட்டையை நீ வைத்துக் கொள் . நான் கொடுத்த மூட்டைக்கு இரட்டிப்பு கணக்கில் இரண்டு மூட்டைகளை எனக்குக் கொடுத்து விடு. இனி நீ உன் வியாபாரத்திலிருந்து எனக்கு எதுவும் தர வேண்டியதில்லை"
"உங்களுக்கு எதற்கு சாமி இரண்டு மூட்டை அரிசியும் மளிகையும் "
"உன்னைப் போல் இன்னும் பல தங்க மகன்களை உருவாக்கும் பணி இருக்கிறது மகனே "
"மகானே" என்று சாமியின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார் அவர்...
விசு படத்தில் வெயிட்டான கேரக்டர் : விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர் : இவரை யார்னு தெரியுதா?
பழம்பெரும் நடிகை ஒருவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விசு நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சரோஜினி கேரக்டரில் நடித்திருந்த நடிகை இளவரசியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குடும்பத்தின் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்திய படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் விசு. இவர் இயக்கத்தில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியாகி தேசிய விருதை வென்ற படம் தான் சம்சாரம் அது மின்சாரம். விசு, ரகுவரன், பாண்டியன், லட்சுமி, டெல்லி கணேஷ், மனோரமா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
குடும்ப உறவுகளுக்குள் நடக்கும், பிரச்சனை, மனவருத்தங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் காமெடி காட்சிகள் இல்லை என்பதால், மனோரமாவை படத்தில் இணைத்துள்ளனர். அதற்கு ஏற்றார்போல் காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பில் அசத்திய மனோரமான கண்ணம்மா என்ற கேரக்டரில் அசத்தியிருந்தார். குறிப்பாக ‘’கம்முனு கெட’’ என்று அவர் சொல்லும் வசனம் தற்போதுவரை பிரபலமாக உள்ளது.
அதேபோல் பிரிந்த கூட்டு குடும்பத்தை இணைக்க பாடுபடும் மருமகளாக லட்சுமி சிறப்பாக நடித்திருந்தார். இந்த படம் தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தில் அம்மையப்பன் முதலியார் கேரக்டரில் நடித்த விசுவின் திமிர் பிடித்த மகள் சரோஜினி கேரக்டரில் நடித்தவது நடிகை இளவரசி.
படத்தில் இவரை பார்த்தாலே பலருக்கும் கோபம் கோபமாக வரும். தமிழில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்த இவர், தமிழ் தவிர்த்து கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் 2001-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியாக சீரிவரும் காளை படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்திருந்தார்.
ஒரு வங்கி அதிகாரியை திருமணம் செய்துகொண்ட நடிகை இளவரசி, கணவர் மற்றும் குழந்தையுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.
எல்லா கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன்.
காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.
அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்.
ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!" என்று சொன்னது,
அவனை மிகவே யோசிக்க வைத்தது.
அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான்.
ஆனால், காந்தியை அவ்வப்போது உற்றுப் பார்த்தான்.
இலேசாக புன்முறுவல் காட்டினான்.
ஒரு நாள் "மிஸ்டர் காந்தி"!என்று கனிவாக அழைத்து
நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்;
என்ன வேண்டும் என்றான்?
ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார் காந்தி. அவன் "பைபிள்" சார்ந்த இரு நூல்களைப் பரிசாக கொடுத்தான்.
இந்தத் தொடக்கம் நட்பாக மாறியது; வளர்ந்தது.
ஒரு நாள் காந்தியிடம் வந்த ஸ்மட்ஸ், நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஓரு வருத்தமான செய்தியையும், கொண்டு வந்துள்ளேன் என்றான்.
மகழ்ச்சி எது? வருத்தம் எது? என்று கேட்டார் காந்தி.
இன்று உங்களுக்கு விடுதலை. இது மகிழ்ச்சியான செய்தி.
ஆனால், உங்களைப் பிரிய என்னால் முடியவில்லை.
இது வருத்தமான செய்தி என்றான் ஸ்மட்ஸ்.
காந்தி சொன்னார், "நானும் உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன்; என் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி, தான் சிறையில் தைத்த பூட்சை அவரிடம் கொடுத்தார்.
ஆவலோடு அணிந்து பார்த்த ஸ்மட்ஸ் கேட்டான்,
"இவ்வளவு துல்லிமாகத் தைக்க, என் கால்களின் அளவு எப்படிக் கிடைத்தது" என்று கேட்க, சிரித்தபடி காந்தி தனது மார்புத் துண்டை அகற்றினார்;
ஆரம்பத்தில் ஸ்மட்ஸ் காலால் உதைத்தபோது ஏற்பட்ட வடுக்கள் அங்கு இருந்தன.
"இந்த வடுக்களை அளந்துதான் தைத்தேன்" என்று காந்தி சொன்னார்.
"தடால்" என்று சத்தம்;
ஸ்மட்ஸ் கீழே விழுந்து காந்தியின் கால்களைப் பிடித்துக் கதறினான்.
"நான் மிருகம்! கொடிய, கேவலமான, மிருகம்!!
என்னை மன்னித்து விடுங்கள். இனி யாரையும் அடிக்க மாட்டேன்" என்றார்.
ஒரு நிமிடத்தில், ஒரு கொடிய மிருகம், மென்மையான மனிதனாக மாறியது.
"கல்லையும் கனியாக மாற்றலாம்" என்று இதைத்தான் சொன்னார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஸ்மட்ஸ் சத்தியம் செய்தான்.
"இந்த பூட்ஸ்தான் இனி எனக்குக் கடவுள்; இதை மட்டுமே வணங்குவேன்" அணியமாட்டேன்
என்று சொல்லி அந்த பூட்சை தன் பூஜை அறையில் வைத்து அப்படியே வணங்கினான்.
*"நாம் நினைத்தால், யாரையும் மன்னிக்கவும் முடியும். மாற்றவும் முடியும்".* மன்னிக்கின்ற மனம் தான் மனிதனை மகாத்மாவாக மாற்றும்.
அன்பே சிவம்!!!கருணையே யேசு!!! நற்பண்பே நபிகள்!!!!
மனிதன் மகிழ்வுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்திட மாமனிதமே மிகச்சிறந்த பண்பு.
ரஷ்ய நாட்டு யூதர் ஒருவருக்கு இஸ்ரேலில் சென்று குடியேற அனுமதி கிடைத்தது.
ரஷ்ய விமான நிலையத்தில் அவரது பொதிகளை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரி, லெனினின் உருவச்சிலை ஒன்று அவரிடம் இருப்பதைக் கண்டார்.
இது என்ன?" என்று அவரிடம் அந்த அதிகாரி வினவினார். "தப்பு...சார்...! உங்கள் கேள்வியே தப்பு...! இவர் யார் என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்...! இவர்தான் கம்யூனிஸத்தின் தந்தை லெனின்! ரஷ்ய மக்களுக்கு நல்லது செய்தவர், நாட்டின் வளர்ச்சிக்கு தீபம் ஏற்றியவர். இந்த மாமனிதரின் ஞாபகர்த்தமாக இதை நான் என்னுடன் கொண்டுசெல்கிறேன்." என்று அந்த ரஷ்ய யூதர் பதிலளித்தார். "சரி, நீங்கள் போகலாம் " என்றார் அந்த அதிகாரி.
இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய போது அங்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.
அங்குள்ள அதிகாரி "இது என்ன?" என்று வினவினார். "தப்பு...சார்...! இவன் யார்? என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்!
இவன்தான் பித்துப் பிடித்த மகா கொடியவன், லெனின்! இவனின் கொடுமையால்தான் நான் ரஷ்யாவை விட்டு வரவேண்டியதாயிற்று! நாள் தோறும் இவன் முகத்தைப் பார்த்து திட்டித் தீர்க்கவே இந்த உருவச்சிலையை என்னுடன் கொண்டுவந்தேன்." என்றார்.
இதைக் கேட்டு பெருமிதம் அடைந்த அதிகாரி "சரி, நீங்கள் போகலாம்." என்றார்.
தனது குடியிருப்புக்கு சென்ற ரஷ்ய யூதர், அந்த உருவச்சிலையை தன் வீட்டின் முன் மண்டபத்தில் தெரியும் படியாக வைத்தார். பின்னர் தான் இஸ்ரவேல் தேசத்தில் குடியேருவதை முன்னிட்டு தனது நண்பர்களை, உறவினர்களை அழைத்து விருந்து படைத்தார்.
அங்கே வந்த விருந்தினர்கள் அந்த உருவச்சிலையைக் கண்டு "இவர் யார்?" என்று வினவினார்கள். "தப்பு மக்களே...! இது என்ன?" என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்." இது 24 கரட் கொண்ட 10 கிலோ கிராம் தங்கம்! நான் இதை வரி ஏதும் கட்டாமல், சுங்கத்துறையிடம் சிக்காமல் சாதுரியமாக கொண்டு வந்தேன்." என பெருமையுடன் பதில் அளித்தார்.
கதையின் சுருக்கம்.
பித்தலாட்டம் என்பது: மக்களிடம் ஒரே விடயத்தை பற்பல விதமாக, அதுவும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் புரிய வைக்கும் சூட்சுமமாகும்!
பிரபல நடிகையான குஷ்பு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தனக்கும், கார்த்திக்கும் இடையே நடந்த மோதல் குறித்து பேசினார்.
அவர் பேசும் போது, “ நாங்கள் நடிகர் கார்த்தியை முரளி என்றுதான் அழைப்போம். அப்போது நான் ஒரு குறிப்பிட்ட பார்லருக்கு அடிக்கடி செல்வேன். அங்கு முரளியும் வருவார். அங்குதான் அவரை நான் முதல் முறையாக பார்த்தேன்.
அப்போது அவர் நடித்த அக்னி நட்சத்திரம், மௌன ராகம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. இதனால் அவரை பார்த்த அந்த கணம், நான் அப்படியே உறைந்து போய் நின்றேன். எங்களது நட்பு அங்கிருந்துதான் தொடர்ந்தது.
முதல் முறையாக நாங்கள் வருஷம் 16 திரைப்படத்தில் தான் ஒன்றாக இணைந்து நடித்தோம். எனக்கு அவருடன் இணைந்து வேலை செய்வது என்பது மிகவும் ஈசியாக இருந்தது. காரணம் நாங்கள் முன்னரே ஒருவருக்கொருவர் நன்றாக பழக்கமாகி இருந்தோம்
வருஷம் 16 திரைப்படத்திற்குப் பிறகு நாங்கள் பெரிதாக எந்த திரைப்படங்களிலும் ஒன்றாக இணைந்து பணியாற்றவில்லை. கிழக்கு வாசல் திரைப்படத்தில் மட்டும் இணைந்து நடித்தோம். அந்த இடைவெளிக்கு, ஒரு சண்டை காரணமாக அமைந்தது. இதனால் நாங்கள் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தோம்.
அவரிடம் சென்று படத்தில் குஷ்பு தான் கதாநாயகி என்று சொன்னால், அவர் கதாநாயகியை மாற்றுங்கள் என்று சொல்வார். என்னிடம் யாராவது வந்து கார்த்திக் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டால், இல்லை இல்லை வேண்டாம் நீங்கள் வேறு கதாநாயகியை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன்
அதன் பின்னர் விக்னேஸ்வர் திரைப்படத்தில் தான் நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தோம். அதற்கு காரணம் அந்த படத்தின் இயக்குனர் ரகு. ரகு எங்களிடம் இது நண்பர்களுக்கு இடையே வந்திருக்கும் பிரச்சினை, இதனையும், தொழிலையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் என்று சமாதானப்படுத்தினார்.
இதனையடுத்து நான் அப்படி என்றால் நீங்கள் முரளியிடம் சென்று சம்மதம் வாங்கி வாருங்கள் என்று சொன்னேன். முரளியோ, என்னிடம் சம்மதம் வாங்கி வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதனையடுத்து இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசுங்கள் என்று சொல்லி எங்களை உட்கார வைத்து பேச வைத்தார்கள். அதன் பின்னர்தான் நாங்கள் விக்னேஸ்வர் திரைப்படத்தில் இணைந்து நடித்தோம். அங்கு ஆரம்பித்த நட்பானது இன்று வரை தொடர்கிறது. கார்த்தி எனக்கு எப்போதுமே மிகவும் ஸ்பெஷல் தான். கார்த்தியிடம் ஒரு விதமான மாய சக்தி இருக்கிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமின்றி நடக்கும். எதிர்பார்ப்புகள் சில நிறைவேறும். தான தர்மங்களில் மனம் ஈடுபடும். பிரமுகர்களின் சந்திப்புகளால் ஆதாயம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
ரிஷபம்
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் ஏற்படும். கனிவான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாளுவீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளியூரில் இருந்து அனுகூலமான தகவல்கள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு தகுந்த விதத்தில் இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். பணியாளர்களால் லாபம் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
தாய் வழி உறவுகளிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். புதிய வேலைகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். பயணங்களால் அனுபவம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
சிம்மம்
இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
நினைத்த பணிகளில் தாமதம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்ப்படுத்தும். சக ஊழியர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நற்செய்தி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
துலாம்
இனம் புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். பார்வை தொடர்பான சிக்கல்கள் குறையும். வீண் விவாதங்களில் தலையிட வேண்டாம். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் வளைந்து செல்வது நல்லது. வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்கு வரும். விவசாய பணிகளில் அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். சக ஊழியர்களால் வருத்தங்கள் நேரிடும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
தனுசு
குடும்ப பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு பெருகும். வியாபாரம் சிறப்பாக அமையும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மகரம்
தொழில் ரீதியான எண்ணம் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பெரிய மனிதர்களின் சந்திப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
பண வரவு தாமதாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். பழைய சிக்கல்கள் சில குறையும். கணவன், மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மீனம்
செய்யும் பணிகளில் சற்று கவனம் மீண்டும். ஜாமீன் விஷயங்களை தவிர்க்கவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்துவது நல்லது. நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை பெற்று தரும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கேலி என்ற பெயரில், தரமற்ற பேச்சுகளை பேசுவது, கீழ்நிலை குணம் கொண்டோரின் இயல்பு.
நல்லவர், கெட்டவர் என்று பாராமல், யோசியாமல் பேசும் அறிவற்ற பேச்சினால் ஏற்படும் விளைவை விளக்கும், சிலப்பதிகார நிகழ்வு இது:
மாதவியிடம் பொருளை எல்லாம் இழந்த கோவலன், மீண்டும் வணிகம் செய்து பொருளீட்டுவதற்காக, தன் மனைவி கண்ணகியுடன், மதுரை நகர் நோக்கி சென்று கொண்டிருந்தான்; வழியில், கவுந்தி அடிகள் எனும் தவ மூதாட்டியை சந்திக்க, அவர்களுக்கு வழித் துணையாக வந்தார், கவுந்தி அடிகள்.
மூவரும் பயணத்தை தொடர, வழியில், காமுகன் ஒருவன், தன் காதற் கிழத்தியோடு வந்தான். அவ்விரு வரும், கோவலன் - கண்ணகியின் கண்ணியமான அழகை கண்டு வியந்து, கவுந்தி அடிகளிடம், அம்மையே... மன்மதனும், ரதியையும் போன்றிருக்கும் இவர்கள் இருவரும் யார்? எனக் கேட்டனர்.
இவர்கள் என் மக்கள்... என்றார், கவுந்தி அடிகள்.
அதைக் கேட்டதும், இருவரும் நகைத்து, அம்மையே... ஒரு வயிற்றில் பிறந்தோர், கணவன், மனைவியாவது, நீர் கற்ற நீதி நூல்களில் உள்ளதோ... என சொல்லி, கேலி செய்து சிரித்தனர்.
இதைக் கேட்டு, செவிகளை பொத்தி, நடுங்கி நின்றாள், கண்ணகி. இதனால், கோபமடைந்த கவுந்தி அடிகள், முறை தவறி, இழிவாக பேசிய நீங்கள் இருவரும், நரிகளாகப் போகக் கடவது... என, சாபம் கொடுத்தார்.
உடனே அவர்கள் நரிகளாக மாறினர்.
அவர்களுக்காக மனம் இரங்கிய கோவலனும், கண்ணகியும், அம்மையே... நல்லொழுக்க நெறியிலிருந்து விலகிய இவர்கள், தமது அறியாமையில் இவ்வாறு பேசி விட்டனர்.
இவர்கள் தவறை மன்னித்து, சாப விமோசனம் அளிக்க வேண்டும்... என்று வேண்டிக் கொண்டனர். அதன் காரணமாக, 12 மாதங்கள் நரிகளாக திரிந்து, துன்பத்தை அனுபவித்து, பின், சுய உருவை அடைவர்... என, சாப விமோசனம் அளித்தார்,
கவுந்தி அடிகள். குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது என்பார், திருவள்ளுவர்.
நல்ல பண்புகளை உடைய பெரியோரின் சினத்திலிருந்து, ஒருவரை காத்தல் அரிது என்பதை உணர்ந்து, எதை அடக்குகிறமோ இல்லையோ, நாவை அடக்கி, வீண் பேச்சை தவிர்க்க வேண்டும்.
மறந்தும், அடுத்தவர்களை இழிவாக பேசக் கூடாது!
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 29 ஆம் தேதி திங்கட்கிழமை 15.12.2025.
இன்று இரவு 11.43 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று பிற்பகல் 02.09 வரை சித்திரை . பின்னர் சுவாதி.
இன்று காலை 10.55 வரை பவம். பின்னர் இரவு 11.43 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று பிற்பகல் 02.09 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ஸ்ரேயா சரண், இந்த முறையும் தனது புதிய புகைப்படங்களால் இணையத்தை கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான போட்டோஷூட் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது.
எளிமையும் எலிகன்ஸும் கலந்த கருப்பு உடையில் கவர்ச்சியாக நடிகை ஸ்ரேயா சரண் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள், ரசிகர்களின் கவனத்தை ஒரே நேரத்தில் ஈர்த்துள்ளன. அதிக அலங்காரமின்றி, ஸ்டைலிஷ் மேக்கப், கூர்மையான பார்வை மற்றும் கிளாசியான உடைத் தேர்வு ஆகியவை இந்த புகைப்படங்களுக்கு தனி அழகை சேர்த்துள்ளன. "Black is always powerful" என்பதை நிரூபிக்கும் வகையில், ஸ்ரேயாவின் இந்த போஸ் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.



















