- · 1 friends
-
2 followers
Jinguchaa - Lyrical - Thug Life
Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman
நடிகை ஸ்ரீலீலா மாதவிடாய் குறித்து தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பவன் கல்யாணுடன் ஸ்ரீலீலா நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது.
அதில் கலந்துகொண்ட ஸ்ரீலீலாவிடம், ஒரு பெண்ணாக அவர் எதிர்கொண்ட பெரிய சவால் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஸ்ரீலீலா, “பெண்களுக்கு மாதவிடாய் என்பது சாக்குப்போக்கு கிடையாது. நான் பெரும்பாலான பாடல்களில் நடனமாடும்போது மாதவிடாய் காலத்தில்தான் இருந்தேன்.
உடல்ரீதியான தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும். உளவியல் ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ மாதவிடாயைக் காரணமாகச் சொல்லக்கூடாது” என்று கூறியிருந்தார். மருத்துவப் படிப்பை முடித்துள்ள ஸ்ரீலீலாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
மருத்துவம் படித்த ஒருவருக்கு மாதவிடாய் வலி, ஒரு பெண்ணின் அன்றாடச் செயல்பாடுகளை எவ்வளவு பாதிக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தும், ‘இது ஒரு சாக்குப்போக்கு அல்ல’ என்று அவர் கூறியது, அந்த வலியை அனுபவிக்கும் மில்லியன் கணக்கான பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பலர் விமர்சித்து வருகின்றனர்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் சர்னியா பகுதியில் அமைந்துள்ள லம்ப்டன் கல்லூரியின் வளாகத்தில் உள்ள மதுபான விடுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாணவர் நிர்வாகக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது, அதிகாலை 1 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காயமடைந்த நிலையில் மூன்று பேரை மீட்டுளள்னர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதான டேன் நிஸ்பெட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உள்ளூர் ஹாக்கி விளையாட்டுக் குழுக்களில் நன்கு அறியப்பட்டவரான இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனைய இருவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, லம்ப்டன் கல்லூரியின் பிரதான வளாகம் மற்றும் அதனுடன் இணைந்த அனைத்துப் பயிற்சி மையங்களும் இன்றயை தினம் மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சர்னியா பொலிஸார் இச்சம்பவத்தை ஒரு திட்டமிட்ட கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர் அல்லது காயமடைந்தவர்கள் அக்கல்லூரியின் மாணவர்களா? என்பதை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த படம், சுமார் 730 நாட்கள் (இரண்டு ஆண்டுகள்) நீண்ட போருக்குப் பிறகு ஒரு உக்ரைன் வீரர் வீட்டிற்கு திரும்பும் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை பதிவு செய்கிறது.
நீண்டகால மோதலின் மனிதச் செலவை இது வலுவாக காட்டுகிறது ௮ இழந்த நேரம், அனுபவித்த மன உளைச்சல், சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பும் ஆழமான ஆசை.
, இரண்டு ஆண்டுகளாக நீடித்த அபாயங்கள், குடும்பத்திலிருந்து விலகி இருந்த வேதனை, முன்ணணிப் பகுதிகளில் சந்தித்த கடினமான வாழ்க்கை ஆகியவை மறைந்துள்ளன.
எந்த நாடாக இருந்தாலும், ஒவ்வொரு சீருடைக்கும் பின்னால் சொல்லப்படாத ஒரு தனிப்பட்ட கதை இருக்கிறது என்பதை இந்த படம் நமக்கு நினைவூட்டுகிறது. இந்தப் படத்தை பார்க்கும் போது கல்மனசும் கரைந்துப் போகும்.
இனியுள்ள நாட்கள் சந்தோஷமாக இருக்க வாழ்த்துவோம்......
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயம் பணிகளில் மேன்மை உண்டாகும். திட்டமிட்ட செயல்களில் சாதகமான சூழல் அமையும். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகளும் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிதுனம்
மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். வெளியூர் பணிகளில் இருந்து வந்த தடைகள் குறையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களிடம் கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். பணி புரியும் இடத்தில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படவும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
சிம்மம்
திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கன்னி
கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் முதலீடுகளில் கவனம் வேண்டும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் அமையும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
தாய் வழி உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கிய சிந்தனைகள் மேம்படும். பங்குதாரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
விருச்சிகம்
உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
எதிர்காலம் தொடர்பான நிலையான சிந்தனைகள் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். பணிகளில் இருந்து வந்த சாதகமற்ற சூழல்கள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகரம்
குண நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தோற்றப்பொழிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும். பயம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கும்பம்
உலக நிகழ்வுகள் மூலம் மாற்றம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உறவினர்களுடன் சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். தவறிப் போன சில பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். மனதளவில் பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மீனம்
மனதளவில் புதிய தேடல்கள் பிறக்கும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். அரசு பணியில் இருந்த இழுபறிகள் விலகும். சக ஊழியர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை 11.4.2026
திதி
கிருஷ்ண பக்ஷ நவமி - Apr 10 11:15 PM – Apr 12 12:37 AM
கிருஷ்ண பக்ஷ தசமி - Apr 12 12:37 AM – Apr 13 01:17 AM
நட்சத்திரம்
உத்திராடம் - Apr 10 11:27 AM – Apr 11 01:39 PM
திருவோணம் - Apr 11 01:39 PM – Apr 12 03:14 PM
கரணம்
சைதுளை - Apr 10 11:16 PM – Apr 11 12:01 PM
கரசை - Apr 11 12:01 PM – Apr 12 12:38 AM
வனசை - Apr 12 12:38 AM – Apr 12 01:03 PM
யோகம்
ஸித்தம் - Apr 10 06:30 PM – Apr 11 06:38 PM
ஸாத்தியம் - Apr 11 06:38 PM – Apr 12 06:15 PM
நல்ல நேரம்:
அபிஜித் காலம் - 11:56 AM – 12:45 PM
அமிர்த காலம் - 06:38 AM – 08:23 AM, 04:08 AM – 05:51 AM
பிரம்மா முகூர்த்தம் - 04:39 AM – 05:27 AM
பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ‘துரந்தர் 2’. இத்திரைப்படம் கடந்த மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என
மதுரையைச் சேர்ந்த டி. ராகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில், இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
தேர்தலுக்கு பின் துரந்தர் 2 திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மதாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், தமிழகத்திலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு கொள்கைகளை இப்படம் பாராட்டும் வகையில் உள்ளதால் இத்திரைப்படத்தின் திரையிட்டிருப்பது, நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று வாதிட்டிப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், திரைப்படத்தின் எந்தப் பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன என்பதைக் குறிப்பிடவில்லை என தெரிவித்தனர்.
மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கிய சான்றிதழை மனுதாரர் எதிர்க்கவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.












