- · 1 friends
-
2 followers
Jinguchaa - Lyrical - Thug Life
Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman
கல்லூரி விடுமுறை விட்டதோ, இல்லையோ உடனே காஞ்சிபுரத்திற்குப் பஸ் ஏறி விடுவார் அண்ணா. ஒவ்வொரு கல்லூரி விடுமுறைக்கும் அவர் வீடு சென்றபோது ஒரு மாற்றத்தைக் கூர்ந்து கவனித்து வந்தார். ஏழை, எளிய குடும்பம் ஆனதால் அண்ணாவின் கல்லூரிச் செலவை அந்தக் குடும்பம் தாங்க முடியவில்லை. ஆகவே, தொத்தா தான் அணிந்திருந்த நகைகளில் ஒவ்வொரு நகையாக அடமானம் வைத்து, அந்தப் பணத்தை அண்ணாவின் கல்லூரிச் செலவுக்குப் பயன்படுத்தி வந்தார்.
தொத்தா.. நான் கல்லூரிக்கு இனி போகப் போவதில்லை.
பதறிப் போய், ஏன்... ஏன்... துரை! இப்படிச் சொல்றே என்று தொத்தா கேட்டார்.
பின்னே என்ன?... நானும்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். உங்க நகைகளை வித்து என்னைப் படிக்க வைக்கிறீங்க. வீட்டையெல்லாம் வறுமையாக்கிவிட்டு நான் படிக்க வேண்டாம்.
அப்படிச் சொல்லாதேப்பா, நகை இருக்கும், போகும். நீ படிச்சுச் சம்பாதிக்கிறபோது தானாக வரும். எங்களுக்கு என்ன சொத்து இனி வேணும்? நீயும் உன் படிப்பும்தான் எங்க சொத்து. எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று தெரிஞ்சுக்கிட்டு நீ படிச்சா போதுமப்பா என்று தொத்தா பேசியதைக் கேட்டு அண்ணா கண் கலங்கினார். அன்றிலிருந்து படிப்பில் அதிக கவனம் செலுத்தினார்.
கல்லூரி வாலிபர்கள் பொழுதுபோக்கிலும் விளையாட்டிலும் ஈடுபடுவதைப் பார்த்துச் சபலமேற்படுகிறபோதெல்லாம் தொத்தாவின் நகைகள் அடமானத்தில் இருக்கின்றன என்பதைப் பற்றியும் வெறுங்கழுத்தோடு தொத்தா இருக்கிற காட்சியையும் நினைத்துக் கொள்வார் அண்ணா.
அருள்மிகு அமிர்தநாயகி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோயில், பாமணி 614014,
மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம்
*இது பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற சிறப்பினை உடையது.
*ஒரு காலத்தில் சுகல முனிவர் தன் தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக காசியை நோக்கி தன் சீடனுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது மாலை நேரத்தில் முனிவர் இளைப்பாறும் பொருட்டு சீடனிடம் அஸ்தி கலசத்தை கொடுத்து விட்டு சென்றார். சீடன் அதை திறந்து பார்த்தபோது அஸ்தி கலசத்தில் தங்க பூக்களாக இருந்தது. இதை அறிந்த
முனிவர் சுகலர் காசியை விட புனிதமான இடம் இந்த "பாம்பணி" என்று உணர்ந்தார். (பாம்பணி என்பதே மருவி பாமணி ஆயிற்று.)
ருத்ர தீர்த்தம் என்று அழைக்கப்பட்ட தற்போது வெட்டு குளம் என்று அழைக்கப்படுகிற குளத்தின் கரையில் காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி ஆலயம் அமைத்து அக்குளத்திலேயே தனது தாயாரின் அஸ்தியையும் கரைத்து இங்கேயே தங்கி விட்டார்.
*அப்போது அவர் தனது குடிலில் ஒரு பசுவை வளர்த்து வந்தார். ஒரு நாள் மேயச் சென்ற பசு தன்னை அறியாமலேயே புற்றின் மீது பாலை சுரந்தது. தினமும் அவ்வாறே செய்து வந்தது.
மேயச் சென்ற பசு ஏன் பாலை கொடுக்கவில்லை என்று எண்ணி ஒன்றும் புரியாமல் திகைத்த முனிவர் ஒருநாள் மேய்ச்சலுக்கு சென்ற பசுவை பின் தொடர்ந்து சென்றார். புற்றின் மீது பால் சுரப்பதை கண்ட அவர், ஒரு தடியால் பசுவை அடித்தார்.
பசு உடனே கோபமுற்று புற்றை முட்டியது. புற்று மூன்று பிளவாக பிளந்து உள்ளே இருந்த லிங்கம் வெளிப்பட்டது. பின்னர் பசு ஓடிச்சென்று தெற்கு திசையில் இருந்த குளத்தில் விழுந்து இறந்தது.
உடனே சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் கயிலாய காட்சி கொடுத்து பசுவை உயிர்த்தெழச் செய்தார்.
"உனது பால் அபிஷேகத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று பசுவிடம் கேட்டார்.
அதற்கு பசு, தன்னிடம் இருந்து கிடைக்கும் எல்லா பொருட்களும் சிவனுக்கே அர்ப்பணம் ஆக வேண்டும் என்று கேட்டது. பரமேஸ்வரனும் மிகவும் மகிழ்ந்து பசு கேட்ட வரத்
வரத்தைக் கொடுத்தார். அன்று முதல் பசுவிடம் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவை பஞ்ச கவ்யம் என்றழைக்கப்பட்டு புனிதமான பொருட்களாக,
ஈசனுக்கு இன்றும் அபிஷேகத்துக்கு உகந்ததாக ஆனது. சுகல முனிவரும் தன் தவறை உணர்ந்து ஈசனை வணங்கி பெரும்பேறு பெற்றார்.
*நாகநாதசுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதியில் பக்தர் களுக்கு தரிசனம் தருகிறார். காமதேனு முட்டியபோது சுயம்பு லிங்க மூலத்திருமேனி மூன்று பிரிவாகப் பிளந்த லிங்கம் இப்போது செப்புத் தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு விளங்குகிறது.
*புற்று மண்ணால் ஆன நாகநாத சுவாமிக்கு நேரிடையாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தினமும் இருவேளை அபிஷேகம் நடைபெற்று வருவது இத்தலத்தின் தனிப்பெரும் மகிமையாகும்.
மாம்பழச்சாறு அபிஷேகம் : திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது 4 மாங்கனிகள் தோன்றின. அதை எடுத்த பிரம்மன் ஒன்றை விநாயகருக்கும், மற்றொன்றை ஆறுமுகனுக்கும்
கொடுத்தார். மூன்றாவது கனியை காஞ்சியில் முளைக்கும்படி ஊன்றிவிட்டு, நான்காவது கனியை இத்தலத்திற்கு கொண்டு வந்து நாகநாத சுவாமிக்கு சாறு பிழிந்து அபிஷேகம் செய்தார். பிறகு அதன் விதையை பிரம்ம தீர்த்தத்தின் வட கரையில் ஊன்றினார். இதனால் மாமரம் இத்தல விருட்சமாகிறது. இன்றும் நாகநாதருக்கு மாம்பழச்சாறு அபிஷேகம் நடப்பது விசேஷம்.
*சுவாமி பாதாளத்தில் இருந்து சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால் பாதாளேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
*பச்சை திராட்சை நிவேதனம்: தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போரில் முசுகுந்த சக்கரவர்த்தி தேவர்களுக்கு ஆதரவாக சென்று அசுரர்களை போரிட்டு வென்றார்.
அதற்கு இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரியையும் (திராட்சை) அவருக்கு பரிசாக வழங்கினான். அவர் அந்த லிங்கத்துடனும், திராட்சையுடனும் திருவாரூர் தியாகேசர் சன்னிதிக்கு வந்தார். அப்போது "திருப்பாதாளேசுவரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று நிவேதனம் செய்வாயாக" என்று அசரீரி கேட்டது.
இதையடுத்து அவர் இங்கு வந்து திருப்பாதாளேஸ்வரரை பணிந்து திராட்சையை நிவேதனம் செய்தார். அதுமுதல் இங்கு கொடி முந்திரி எனப்படும் பச்சை திராட்சை சிறப்பு
நிவேதனம் செய்யப்படுகிறது.
திருமணத் தடை, புத்திர பாக்கியம், கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்த வேறுபாடுகள் நீங்கவும் இத்தல இறைவனை வழிபட்டால் பலன் கிடைக்கும்.
*இந்தக் கோவில் ராகு, கேது தோஷ பரிகார தலமாக விளங்கி வருகிறது.
கருவறை வாசலின் வலதுபுறம் சுவாமியை வணங்கிய நிலையில் மனித முகமும், சர்ப்ப உடலுமாய் தனஞ்செய முனிவராக ஆதிசேஷன் காட்சியளிக்கிறார்.
இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு - கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவர்த்தி அடைவர்.
*இங்கு பைரவரும் சனிபகவானும் சேர்ந்து அருள்பாலிப்பதால், இது சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது.
*அம்பாள் திருநாமம் அமிர்தநாயகி.
அம்பாள் சன்னிதி தனியாக பலிபீடம், கொடி மரத்தின் அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
*சோமாஸ் கந்தர் தைப்பூச தினத்தன்று பாமணி ஆற்றில் தீர்த்தம் கொடுப்பார். இவருக்கு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அபிஷேகம், பூஜைகள் செய்து வணங்கி, வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வரச் செய்து நைவேத்திய பிரசாதத்தை வினியோகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
*மன்னார்குடியில் இருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தூரத்தில் பாமணி ஆற்றின் வடபுறம் கோவில் அமைந்துள்ளது. மன்னார்குடியில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான பகை அவர்கள் சிறுவயதாக இருந்தபோதே தொடங்கிவிட்டது. குறிப்பாக, பீமனின் அபாரமான பலத்தைக் கண்டு அஞ்சிய துரியோதனன், அவனை தீர்த்துக்கட்ட ஒரு வஞ்சகத் திட்டத்தைத் தீட்டினான்.
பாண்டவர்கள் சிறுவர்களாக இருந்தபோது, அவர்களை ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றான் துரியோதனன். கங்கை நதிக்கரையில் 'பிரமாணகோடி' எனும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த விருந்தில், பீமனுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் கொடிய விஷத்தைக் கலந்து கொடுத்தான்.
உணவு உண்ட பீமன், விஷத்தின் தாக்கத்தால் மயங்கி ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றான். உடனே, துரியோதனன் பீமனை கயிற்றால் கட்டி, ஓடிக்கொண்டிருந்த கங்கை நதியில் தள்ளிவிட்டான்.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பீமன், நதியின் ஆழத்திலிருந்த நாகலோகத்தை அடைந்தான். அங்குள்ள நச்சுப் பாம்புகள் பீமனைத் தீண்டின. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பாம்புகளின் விஷம், பீமனின் உடலில் இருந்த உணவின் விஷத்தை முறியடித்தது (விஷத்திற்கு விஷமே மருந்து!).
மயக்கம் தெளிந்த பீமன், தன்னைச் சுற்றியிருந்த பாம்புகளைத் துவம்சம் செய்யத் தொடங்கினான். இதைக் கண்ட நாகர்களின் அரசனான வாசுகி, பீமனின் வீரத்தைப் பாராட்டி அவனை வரவேற்றார்.
நாகலோகத்தில் பீமனுக்குச் சிறப்பான உபசரிப்பு கிடைத்தது. அங்குள்ள தடாகங்களில் இருந்த அமுதம் நிறைந்த எட்டு கிண்ணங்களை பீமன் பருகினான். அந்த அமுதத்தின் சக்தியால், பீமனுக்கு ஆயிரம் யானைகளின் பலம் கிடைத்தது!
பல நாட்களுக்குப் பிறகு, முன்பை விட அதிக வலிமையுடன் பீமன் ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பினான். தன் தம்பி உயிரோடு வந்ததைக் கண்டு பாண்டவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். துரியோதனனின் சதி, பீமனை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக அவனை உலகின் அசைக்க முடியாத மாவீரனாக மாற்றியது.
நீதி: அதர்மம் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும், தர்மத்தின் வழியில் இருப்பவர்களை அது ஒன்றும் செய்ய முடியாது!
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்டது...
கோடிக்கணக்கில் விலை... அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. அதில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒருவன். துறு துறுவென்று எல்லாரிடமும், பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டு இருக்கிறான்.
இங்கிலாந்து கம்பெனியின் நிர்வாகிக்கு அந்தச் சிறுவனைக் கண்டதுமே ஏனோ பிடிக்கவில்லை. இரண்டொரு நாளில் இன்ஸ்டலேஷன் பணிகள் துவங்க இருக்க, ஜப்பான் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்.
“ஏப்பா.. அவ்ளோ துட்டுப் போட்டு வாங்கிருக்கோம். சர்வீஸ் டீம்ல சின்னப் பையனைலாம் சேர்த்தி அனுப்பிருக்கீங்க? என்ன டூர் வந்திருக்காங்களா? ஏர்போர்ட்ல இருந்து ரூமுக்கு அனுப்ச்சாச்சு. நாளைன்னைக்கு இன்ஸ்டால் பண்றப்ப அந்தப் பையன் மிஷின்ல கைய வைக்கக் கூடாது ஆமா. அதென்ன சின்னப்புள்ளைக சமாச்சாரமா?” - இதுதான் அவர் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம்.
உடனடியாக பதில் அஞ்சல் வந்தது. “மன்னிக்க வேண்டும். தவறுதான். நாங்கள், அந்தச் சிறுவனுக்கு பதில் கொஞ்சம் சீனியரை டீமுக்கு அனுப்புகிறோம். அந்தச் சிறுவன் அங்கே இருப்பான். ஆனால் கருவியைக் கையாள மாட்டான்” என்று பதில் வருகிறது. சொன்ன படியே கொஞ்சம் வயதில் மூத்தவர் வருகிறார். குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்தச் சிறுவனும் அவர்களுடன்தான் இருக்கிறான். ஆனால் அந்த மிஷின் வேலை செய்யும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறான். இந்தக் குழுவினார் டீ ப்ரேக், லஞ்ச் ப்ரேக்கெல்லாம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்து, இரண்டு நாட்களில் இயந்திரத்தை நிறுவி விடுகிறார்கள். வேலை வெற்றிகரமாக முடிந்து விடுகிறது.
வழியனுப்பும் போது, இந்த இங்கிலாந்து கம்பெனி நிர்வாகிக்கு சின்னதாக ஒரு குற்ற உணர்வு. என்ன இருந்தாலும் அவ்வளவு கடுமையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. அந்தச் சிறுவன் அவன் பாட்டுக்கு சிரித்த முகத்துடனேயே வளைய வருகிறான். அவனிடம் இதைச் சொல்லி விட்டால் மனது லேசாகி விடும் என்று உணர்கிறார். குழுவினர் எல்லாரும் இருக்க, சொல்கிறார்:
“ஸாரி.. ஆக்சுவலி பல கோடி ரூபாய் ப்ராஜக்ட். இன்ஸ்டால் பண்றப்ப எதும் சிக்கல் வந்தா அப்பறம், பணம் நேரம்னு பெரிய நஷ்டமாகிடும். அதான் கொஞ்சம் சீனியர் வேணும்னு கேட்டேன். மத்த படி ஐ லைக் த பாய். துறு துறுன்னு இருக்கான். ஆனா இந்த டீம்ல இப்படி ஒரு சின்னப்பையன் வந்தது எனக்கு சரின்னு படலை. அதான்..” என்று பாலிஷாகச் சொல்கிறார்.
அந்தச் சிறுவன் அதே புன்னகையுடனே இருக்க, புதிதாக வந்தவர் சொல்கிறார். “இட்ஸ் ஓகே சார். நாங்க வாடிக்கையாளர் கருத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம். நீங்க சொன்னதுமே என்னை அனுப்பி வெச்சாங்க. இப்ப மிஷின் நல்லபடியா இன்ஸ்டால் செஞ்சு, ஓடிட்டிருக்கு. ஆனா ஒரு விஷயம்..” தயங்குகிறார்.
”பரவால்ல.. எதாக இருந்தாலும் சொல்லுங்க”.
“நான் அந்தக் கம்பெனில ஸ்டோர் ல் வொர்க் பண்ற ஆளுதான். எனக்கு இந்த மிஷின் பத்தி ஏபிசிடி கூட தெரியாது”.
நிர்வாகி அதிர்ச்சியாகிறார். “அப்பறம் இன்ஸ்டலேஷனப்ப வேலை செஞ்சுட்டிருந்தீங்க?”
“இந்தப் பையன்கிட்ட போய் போய்க் கேட்டு அவன் சொல்றத மட்டும் பண்ணினேன் அவ்வளவுதான்”
“அந்தப் பையன் எப்படி மிஷின் பக்கமே வராம, உங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குடுத்திருக்க முடியும்?”.
“முடியும். ஏன்னா, இந்த மிஷினைக் கண்டு பிடிச்சதே அவன்தான்”
யாரையும் குறைவாக மதிப்பிடாதீர்கள்.
ஏக்கமாய் மரத்தில் அமர்ந்தது
கூடுதனின் வெறுமை ஊடுருவி...
கூண்டின் தனிமையாய் சிட்டுக்குருவி...!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சிறு தொழில் புரிபவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். பத்திரம் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் மீது இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எதிர்பாராத சில கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். நண்பர்களின் கருத்துக்களை புரிந்து முடிவு எடுக்கவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வங்கி செயல்களில் பொறுமை வேண்டும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம்
தொழில் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். சேமிப்பு மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். பயணங்கள் மூலம் இனிமையான அனுபவங்கள் ஏற்படும். பீரிதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
கடகம்
மன உறுதியுடன் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி
சிம்மம்
நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
குழந்தைகளால் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். பொழுது போக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்கவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
துலாம்
உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
நிர்வாகத் பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். வெளியூர் வேலை வாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மற்றவர்களின் கருத்துக்களால் உங்கள் இலக்குகளில் தடுமாற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை வேண்டும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். திடீர் பயணங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் வருமானம் அதிகரிக்கும். அறிவுத்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்கால துறைகளில் நிபுணத்துவம் வெளிப்படும். வரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்ளவும். சகோதர உறவுகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் இருந்த தடைகள் ஓரளவு குறையும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் வழி கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். விளையாட்டுகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். எழுத்து சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மீனம்
உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வேலை ஆட்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். இழுபறியான செயல்களையும் சாதுரியமான முறையில் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை 21.3.2026
இன்று அதிகாலை 04.28 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று அதிகாலை 04.12 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.
இன்று இரவு 08.58 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.
இன்று காலை 04.28 வரை கௌலவம். பின்னர் மாலை 03.27 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று காலை 06.17 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
நடன இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர் பிரபுதேவா. துவக்கத்தில் சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அப்படி அவர் நடனமாடிய எல்லா பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். இவருக்கென ரசிகர்களும் உருவாக்கினார்கள். குறிப்பாக இவர் நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். ஒரு கட்டத்தில் இயக்குநராக மாறி தமிழ் தெலுங்கு மொழிகளில் சில திரைப்படங்களை பிரபுதேவா இயக்கினார்..
அப்படியே பாலிவுட்டுக்கு சென்று சல்மான்கானை வைத்து சில படங்களை இயக்கினார். தற்போது நடன இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில்தான், மும்பையில் உள்ள தனது வீடுகளை சமீபத்தில் பிரபுதேவா விற்றது தெரியவந்திருக்கிறது.
அவருக்கு சொந்தமான இரண்டு அப்பார்ட்மெண்ட்டுகளை அவர் விற்பனை செய்துள்ளார். தென் மும்பை மகாலட்சுமி பகுதியில் உள்ள பிரம்மாண்ட குடியிருப்பில் 32 மற்றும் 33வது தளங்களில் இருந்த அவரின் இரண்டு வீடுகளைத்தான் அவர் விற்பனை செய்திருக்கிறார். 2012ம் வருடம் வாங்கிய இந்த இரண்டு வீடுகளும் தற்போது 14.80 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் பத்திரப்பதிவு நடந்ததாக கூறப்படுகிறது.
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இப்படம் கடந்து 9ம் தேதி ரிலீசாகவிருந்தது. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால் படம் வெளியாகவில்லை. எனவே, படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முதலில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. ஆனால் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால் அந்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திலே நடக்கலாம் என உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது.
இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டதால் படத்தின் தயாரிப்பாளர் வழக்கை நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றார். மேலும் மறுதணிக்கைக்கும் விண்ணப்பித்தார். ஆனால் 45 நாட்களுக்கு பிறகுதான் படம் மறுதணிக்கை செய்யப்பட்டது. அப்போது படத்தில் வரும் சில அரசியல் வசனங்களை சென்சார் போர்ட் மியூட் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது
குறிப்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லி ஆகியோர் இந்த படத்தில் ஒரு காட்சியில் செய்தியாளர்களாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் கேள்வி கேட்டு விஜய் பதில் சொல்வது போல காட்சியை எடுத்திருக்கிறார்கள். அந்த காட்சியில் வரும் வசனங்களைத்தான் தணிக்கை வாரியம் மீட் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர் சூழல், 1991-ஆம் ஆண்டு வளைகுடா போரின் போது ஏற்பட்ட மோசமான சுற்றுச்சூழல் பேரழிவை மீண்டும் நினைவூட்டுகிறது.
அன்று குவைத்திலிருந்து பின்வாங்கிய ஈராக் படைகள், சுமார் 750-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளுக்குத் தீ வைத்தன. இதனால் வெளியேறிய கரும்புகை பல மாதங்களாக வானத்தை மறைத்து, பகலையே இரவாக்கியது. இந்த நச்சுப்புகை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து, இமயமலை பகுதிகளான காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் 'கருப்பு பனிப்பொழிவு' ஏற்பட காரணமாக அமைந்தது.
தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் மீண்டும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன.
கனடாவின் கால்கரி சர்வதேச விமான நிலையத்தில் (YYC) சுமார் 7.5 லட்சம் டாலர்களுக்கும் அதிக மதிப்புள்ள 'கிரிஸ்டல் மெத்' (Crystal Meth) போதைப்பொருள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில், கனடா வான்வழி போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தின் (CATSA) சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டறியப்பட்டது.
சோதிக்கப்பட்ட ஒரு பயணப் பையினுள் (Checked bag) தனித்தனியாக சுற்றப்பட்ட மூன்று பொதிகள் இருந்தன. அவற்றில் மொத்தம் 15.5 கிலோகிராம் எடையுள்ள படிக வடிவிலான போதைப்பொருள் இருந்தது.
இதன் சந்தை மதிப்பு சுமார் 780,000 டொலர்கள் என காவல்துறை மதிப்பிட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, வன்கூவ நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ஒரு விமானத்திற்குள் புகுந்த காவல்துறையினர், சந்தேக நபரை அதிரடியாகக் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் வன்கூவர் வழியாக நியூசிலாந்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர் 38 வயதான லாயிட் டீ மாட்டாஃபா (Lloyd Tei Mataafa) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏற்றுமதி செய்ய முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் இன்று (வெள்ளிக்கிழமை) கால்கரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் நீங்கும். பயனற்ற அலைச்சல்களை தவிர்க்கவும். கலை பணிகளில் சிந்தித்து செயல்படவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இலக்குகளை நோக்கி செயல்களில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனவள கலையில் நாட்டம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். புதுவித பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மற்றும் பாக்கிகள் வசூலாகும். தெளிவுகள் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்டஎண் : 9
அதிர்ஷ்டநிறம் : வெண் மஞ்சள்
கடகம்
எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்டஎண் : 5
அதிர்ஷ்டநிறம் : சில்வர்
சிம்மம்
குடும்பத்தினரை விட்டுக் கொடுத்து பேசுவதை தவிர்க்கவும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். திடீர் பயணங்கள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். அலுவலக பணிகளில் ஆணவம் இன்றி செயல்படவும். செய்தொழிலில் விவேகம் வேண்டும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கன்னி
தள்ளிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் ஒற்றுமை ஏற்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் செல்ல நேரிடும். வியாபார பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். உழைப்பு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விருச்சிகம்
செயல்களில் ஆர்வமின்மை ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விவசாயத்தில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பொன் பொருள் மீது ஆர்வம் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்டஎண் : 4
அதிர்ஷ்டநிறம் : ஆரஞ்சு
தனுசு
உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மகரம்
முயற்சிக்கு ஏற்ப வெற்றியும் பாராட்டும் கிடைக்கும். புது விதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதுவிதமான கனவுகளை உருவாக்குவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். முத்திரை பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். தெளிவுகள் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றமான நிலை ஏற்படும். வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் மறைமுகமாக இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். இணையம் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
மற்றவர்களை பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். கல்வி பணிகளில் பொறுமை வேண்டும். தூர தேச பயண சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில செய்திகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். துணைவருடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்டஎண் : 8
அதிர்ஷ்டநிறம் : வெளிர் நீலம்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.3.2026.
இன்று அதிகாலை 04.59 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று அதிகாலை 05.11 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.
இன்று அதிகாலை 02.11 வரை சுப்பிரம். பின்னர் இரவு 11.42 வரை பிராம்மியம். பிறகு ஐந்திரம்.
இன்று காலை 04.59 வரை பவம். பின்னர் மாலை 04.43 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று காலை 06.18 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
டான்சன், எகிடோ இரு புத்த பிட்சுகள். ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது.
ஒரு வளைவில் திரும்பும்போது நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒருபுறத்தில் வேலைப்பாடுடன் கூடிய அழகிய பட்டுச் சேலையைக் கட்டியிருந்த அழகான இளம்பெண் அடுத்த பக்கம் போவதற்கு முடியாமல் நின்றுகொண்டிருந்தாள்.
“இங்கே வா!” என்று கூப்பிட்ட டான்சன் அவளைத் தூக்கிக்கொண்டு சகதியான தெருவின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்குக் கொண்டு போய் சேர்த்தார்.
அன்று இரவு மடத்திற்குத் திரும்பும்வரை எகிடோ எதுவும் பேசாமல் வந்தான். அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “நம்மைப் போன்ற புத்த பிட்சுகள் பெண்கள் அருகில் செல்வதுகூடத் தவறு. முக்கியமாக இளமையும் அழகும் வாய்ந்த பெண்கள் பக்கத்தில் செல்லவே கூடாது.
நீ ஏன் அவளைத் தொட்டுத் தூக்கிகொண்டு சென்றாய்?” என்றார். “நான் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டேன். நீதான் அந்தப் பெண்ணை இன்னும் சுமந்துகொண்டிருக்கிறாய்” என்றார்.
இப்படித்தான் நம்மில் பலரும் தேவையில்லாத பல விஷயங்களை, பிரச்சினைகளை, கஷ்டங்களைத் துாக்கிச் சுமந்து கொண்டிருக்கின்றனர்.
ஒன்று, பிரச்சினைகளை மனதின் உள்ளேயே பூட்டி வைத்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அல்லது பிரச்சினைகளைத் துாக்கிச் சுமந்துகொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம்.
அல்லது, பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடுவிடுகிறோம். பிரச்சினைகளை மனதில் இருந்து துாக்கியெறிந்து, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களே வெற்றி எனும் இலக்கை அடைகிறார்கள்.
கொய்யா, பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கொய்யா இலைகளில் பல ஆரோக்கிய குணங்கள் உள்ளன. இந்த இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது.
மேலும், உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும், முகப்பரு தழும்புகள் நீங்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம். கொய்யா இலையை நசுக்கி, முகப்பரு புள்ளிகளில் தடவவும். வறண்ட சருமத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு கப் கொய்யா இலை தண்ணீரை பயன்படுத்தலாம்.
கொய்யா இலையின் சில அழகுக் குறிப்புகள் இங்கே..
எண்ணெய் சருமத்திற்கு :
தேவையான பொருட்கள் :
• ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்
• ஐந்து தேக்கரண்டி தண்ணீர்
• இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு
செய்முறை :
கொய்யா இலைகள், தண்ணீரைக் கலந்து பேஸ்ட் செய்யவும்.
ஒரு கிண்ணத்தில், இரண்டு டேபிள் ஸ்பூன் பேஸ்ட் எடுத்து, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலக்கவும்.
இதை உங்கள் முகம், கை, கழுத்து பகுதிகளில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
டிப்ஸ்: அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தவும், உங்கள் சருமத்தை தெளிவாக வைத்திருக்கவும் இதை தினமும் பயன்படுத்தவும்.
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு :
தேவையான பொருட்கள் :
• ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்
• ஐந்து தேக்கரண்டி தண்ணீர்
• மஞ்சள்- சிட்டிகை
• ஒரு தேக்கரண்டி- கற்றாழை ஜெல்.
எப்படி செய்வது?
கொய்யா இலைகள், தண்ணீரைக் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.
ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் பேஸ்டுடன், ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்கவும்.
இதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
டிப்ஸ்: சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு 2-3 முறை இதை பயன்படுத்தவும்.
தோல் எரிச்சலுக்கு :
தேவையான பொருட்கள் :
• ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்
• ஒரு கப் தண்ணீர்
எப்படி செய்வது?
ஒரு கைப்பிடி கொய்யா இலைகளை ஒரு கப் தண்ணீருடன் சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
தீயை அணைத்து, தண்ணீரை வடிகட்டி இலைகளை அகற்றவும்.
வடிகட்டிய தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும்.
ஆறியதும் ஸ்ப்ரே பாட்டிலுக்கு மாற்றவும்.
உங்களுக்கு சென்சிட்டிவ் சருமம் இருந்தால், உங்கள் முகத்தை கழுவிய பின் இந்த ஸ்ப்ரேயைப் பயன்படுத்தவும்.
கொசு கடித்தால் அல்லது மற்ற தோல் எரிச்சல் இருந்தால் அதன்மீத ஸ்பிரே செய்யலாம்
டிப்ஸ்: முகப்பருக்கள் உள்ள சருமத்திற்கு மாஸ்க் பயன்படுத்த விரும்பினால், டீ ட்ரீ ஆயில் சில துளிகள் சேர்க்கவும்.
தலைமுடிக்கு :
முடி உதிர்வதை தடுக்கவும் கொய்யா இலை பயன்படுகிறது. உடலுக்கு ஆக்ஸிஜனேற்றிகள் உருவாக்கும் கொய்யா இலைகளை வேகவைத்து உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு கைப்பிடி கொய்யா இலைகள் சேர்த்து, சுமார் 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு இது மிதமான சூட்டில் இருக்கும் போது, உங்கள் முடியில் ஒவ்வொரு பகுதியாக பிரித்து அப்ளை செய்து, மெதுவாக மசாஜ் செய்யவும்.
மசாஜ் செய்வது இரத்த அழுத்தத்தை மேம்படுத்துகிறது, இது நுண்ணறைகளுக்கு அதிக ஊட்டச்சத்தை பெற உதவுகிறது. பிறகு ஒரு டவலால் தலைமுடியை போர்த்தி, 2 மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு சாதரண நீரில் கழுவவும்.
உங்கள் தலைமுடியை பளபளப்பாக வைத்திருக்க வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்துங்கள்.















