·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 470
  • More

Jinguchaa - Lyrical - Thug Life

Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman

Comments (0)
Login or Join to comment.
·
Added article

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் முனீஷ்காந்த், கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. விஜயலட்சுமி அவர் மனைவியாக நடித்துள்ளார். கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நவம்பர் 1-ம் தேதி வெளியாகும் இப்படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “குடும்பத்தில் வேறுபட்ட மனநிலையில் இருக்கும் கணவன்- மனைவி பற்றிய படம் இது.முனீஷ்காந்த் - விஜயலட்சுமி கணவன் மனைவியாக நடித்துள்ளனர்.

முனீஷ்காந்த்துக்கு கிராமத்தில் இடம் வாங்கி வீடு கட்டி நிம்மதியாக வாழ ஆசை. விஜயலட்சுமி நகரத்திலேயே வசதியாக வாழ நினைக்கிறார். இதனாலேயே இருவருக்கும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவர்கள் வாழ்வில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறேன். முதலில் குடும்ப கதையாகச் செல்லும் படம் பின்னர் வேறு டிராக்குக்கு மாறும். முனீஷ்காந்திடம் இப்படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது தயங்கினார். இந்த கதாபாத்திரம், குணச்சித்திரம், காமெடி, சென்டிமென்ட் என எல்லா பரிமாணங்களும் கொண்டது. இதற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்று விளக்கியதும் சம்மதித்தார். பார்வையாளர்களுக்கும் இப்படம் நெருக்கமாக இருக்கும்” என்றார்.

  • 68
·
Added a news

கனடாவின் வன்கூவர் பகுதியில் டாக்ஸி சாரதி ஒருவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபருக்கு நீதிமன்றம் வீட்டு காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது டாக்ஸியை பயன்படுத்தி குறித்த நபர் போதை பொருட்களை விநியோகம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

எம்.டி.ரபிக்குள் இஸ்லாம் என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போதை பொருளை வைத்திருந்தமை அவற்றை விநியோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இந்த நபர் மீது சுமத்தப்பட்டு இருந்தது. 56 வயதான குறித்த நபருக்கு 20 மாத கால வீட்டு காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மிக நுட்பமான முறையில் போதைப்பொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்கூவர் பகுதியில் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இந்த விசாரணையின் போது போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் தண்டிக்கப்பட்டுள்ளார். இந்த கடத்தல்கள் விநியோகங்களை வேறு நபர்கள் மேற்கொண்டிருந்தாலும் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்த காரணத்தினால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • 70
·
Added a news

உலகின் முதல் நிலை இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் புக்கர் விருது கனடாவை பிறப்பிடமாகக் கொண்ட டேவிட் ஸ்லே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது அண்மைய பிளெஸ் என்ற நாவலுக்கு இவ்வாறு புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஹங்கேரிய பிரஜை ஒருவர் ஈராக்கில் பணியாற்றி அதன் பின்னர் இங்கிலாந்தில் வாழும் போது அவர் எதிர்நோக்கும் சமூக பொருளாதார பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. கதைக்கரு மொழி பயன்பாடு போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த நாவலுக்கு விருது வழங்கப்பட்டதாக புக்கர் விருது வழங்கும் குழு தெரிவித்துள்ளது. புக்கர் விருதுக்காக சுமார் 153 நாவல்கள் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

டேவிட் கனடாவின் மொன்றியல் பகுதியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடிய தாய்க்கும் ஹங்கேரிய தந்தைக்கும் பிறந்தவரே இந்த டேவிட் ஸ்லே என்பதும் குறிப்பிடத்தக்கது. டேவிட் குடும்பத்தினர் பின்னர் இங்கிலாந்தில் குடியேறியதுடன் பின்னர், ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரியில் வாழ்ந்தார்.

இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டிலும் டேவிட்டின் ஆல் தட் மேன் இஸ் என்ற நாவல் புக்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவருக்கு அதில் முதல் பரிசு கிடைக்கவில்லை. 2019 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக கனடியர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

  • 76
·
Added article

சொந்த ஊரு விளாத்திக்குளம். அப்பா அம்மா கலப்புத்திருமணம் பண்ணிக்கிட்டவங்க. ஜார்க்கு மனைவி, ஒரு பையன், ஒரு பொண்ணுனு சின்னதா ஒரு குடும்பம்.1985-ல பிளஸ் டூ முடிச்சதும், லயோலா காலேஜ்ல பாதிரியார் அகஸ்டின் நடத்துன வீதிநாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். அப்போ கூத்துப்பட்டறை நடத்தின முத்துச்சாமி மாஸ்டர் கேரளாவுல நாடகம் போடுறதுக்கு ஆள் கேட்டிருக்கார். அப்போதான் ஜார்ஜ் மரியான் கூத்துப்பட்டறைக்குள்ள போனார். 1989ல இருந்து 2002 வரைக்கும் கூத்துப்பட்டறையில் 120 நாடகங்கள் வரைக்கும் பண்ணினார். அதுக்குப் பின்னால 2002ல நாசரோட `மாயன்’னு ஒரு படம் மூலமா சின்ன ரோல்ல நடிச்சார், ஜார்ஜ். அந்தப் படத்துலதான் பசுபதி உள்ளிட்ட பல கூத்துப்பட்டறை கலைஞர்கள் நடிச்சிருப்பாங்க.

காஞ்சீவரம் படத்தில் பிரியதர்ஷன் கிட்ட அஸிஸ்டெண்டா ஏ எல் விஜய் வேலை பார்த்தார். அவர் தான் ஜார்ஜை அந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்திருக்கார். அப்போது முதலே ஏ.எல்.விஜய்க்கு ஜர்ஜின் நடிப்பு பிடித்துப் போயிருக்கிறது. அப்புறமா அவர் இயக்கின பொய் சொல்லப் போறோம் படம் மூலமா ஜார்ஜை நடிக்க வச்சவர், அதைத்தொடர்ந்து மதராசப்பட்டினம், சைவம், தெய்வத்திருமகள்னு இவர் கொடுத்தது எல்லாமே நல்ல ரோல்கள்தான்

முதல்முதலா ஜார்ஜ் மரியன் சரத்குமார் நடிச்ச கம்பீரம் படத்துல நடிக்குறதுக்கு கமிட் ஆனார். வரைப் பார்க்காமலேயே டைரக்டர் இவரைப் பத்தி கேள்விப்பட்டு கமிட் பண்ணிட்டார். ஷூட்டிங்குக்கு முன்னாடி நாள் ஆள் ஷார்ட்டா இருக்குறதை நேர்ல பார்த்துட்டு, போலீஸ் ரோல்ல சரத்குமார் பக்கத்துல இவர் சரியா இருக்க மாட்டார்னு ரிஜக்ட் பண்ணிட்டார் இயக்குநர். ஆனா விதி வலியது… அதே ஜார்ஜ் மரியான் சினிமா வாழ்க்கையில போலீஸ் ரோல்லதான் அதிகமா நடிச்சிருக்கார். அதே போலீஸ் ரோல்ல கைதியில கொண்டாடப்பட்டதெல்லாம் பூமராங்கின் உச்சம்.

மதராசப்பட்டினத்தில் வாத்தியார் கேரெக்டர் ரொம்பவே இவரைக் கவனிக்க வச்சது. அதுவும் ஆர்யா குரூப்கிட்ட மாட்டிக்கிட்டு, எ..ஏ..பி..பீனு சொல்லிக் கொடுக்குற இடத்துல பயந்த சுபாவமா பார்வை பார்த்து அதை தன்னோட மாடுலேஷன்ல சொல்லியிருப்பார். இன்னொரு காட்சியில நைட்ல ஆர்யா குரூப் வந்து இங்கிலீஷ்ல நன்றி சொல்லணும்னு கேட்குற சீன்லயும் மனுஷன் அசால்ட்டா செய்திருப்பார். சைவம்ல இங்கிலீஷ் தெரியாம மாட்டிட்டு முழிக்கிறது, குடும்பமே சண்டைப்போட்டு பிரிஞ்சு கிடக்கும்போது பொய் சொல்லி கூப்பிடுறது, ஐயாக்கிட்ட சென்டிமென்டா பேசுறதுனு எல்லா எமோஷன்களையும் அவ்வளவு அழகா ஹேண்டில் பண்ணியிருப்பாரு.

அடுத்ததா கலகலப்பு க்ளைமேக்ச்ல காமெடி போலீஸ் கதாபாத்திரத்துல தங்கப்பதக்கம் சிவாஜி முதல் சிங்கம் சூர்யா வரைக்கும் போலீஸ் மாடுலேஷன்களை தெரிக்க விட்டிருப்பாரு மனுஷன். இடுப்புல கைய வச்சுகிட்டு அலக்ஸ் பாண்டியன் ஏன் இன்னும் உங்களுக்கு டிபார்ட்மெண்ட்ல பேண்ட் கொடுக்கலைனு பேசுறதெல்லாம் காமெடியின் உச்சமாவே இருக்கும். இங்கதான் தான் ஒரு பெர்பார்மர்ங்குறதை நிருபிச்சிருப்பார்.

அடுத்ததா பல படங்கள் நடிச்சாலும், ‘கைதி’ ஒரு மைல் கல்னே சொல்லலாம். அதுவரைக்கும் முப்பது படங்களுக்கு மேல நடிச்சிருந்தாலும், ‘கைதி’ அவருக்கு ஒரு துவக்கம்னே சொல்லலாம். நீங்க தான் கமிஷனர் ஆபீசை பாத்துக்கணும்னு சொன்ன உடனே யூனிஃபார்ம் மாட்டிக்கிட்டே ஓடி வர்றதாகட்டும், கதவை இழுத்து மூடுங்கடானு கத்துற இடம், ‘டேய் பசங்களா உங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, இந்த பொண்ணுக்கு எதுவும் ஆகாம பாத்துக்கணும்னு வசனங்கள் பேசுற இடம்னு ஒரு மெயின் ஹீரோவுக்கு கொஞ்சமும் குறையாத கேரெக்டர் ஜார்ஜ் மரியன் உச்சம் மிரட்டியிருப்பார். அதுவும் அவர் வர்ற சீன்ஸ்லாம் செம மாஸா இருக்கும்.

  • 80

மதிப்பற்றது என்று தெரிந்தும்

அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால்

நிம்மதியை இழக்க நேரிடும்.

  • 93

யாரையும் காயப் படுத்தவோ, குறைத்து நடத்தவோ செய்யாதீர்கள். இன்று நீங்கள் வலிமை மிக்கவராக , வாய்ப்பு மிக்கவராக , வசதி மிக்கவராக இருக்கலாம், ஆனால் காலம் உங்களை விட வலிமை வாய்ந்தது.

அன்பால் கட்டுங்கள். உலகை அழகாக்குங்கள்.

இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.

  • 94
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உறவினர்கள் மூலம் சஞ்சலங்கள் தோன்றி மறையும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். சக ஊழியர்களால் நிம்மதியான சூழல் அமையும். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வழக்கு பணிகளில் சில மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

ரிஷபம்

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

வியாபாரம் ரீதியான ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். திடீர் தனவரவுகள் உண்டாகும். நீண்ட கால முதலீடு குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். இறை சார்ந்த வழிபாடுகளில் ஆர்வம் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

கடகம்

சில விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வேலை ஆட்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். பணி சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். வழக்கு பணிகளில் அலைச்சல் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

சிம்மம்

குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் அமைதி இன்மை ஏற்படும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கன்னி

தன வரவுகள் சாதகமாக இருக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். கலை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். கடினமான விசயத்தையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

துலாம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான சிந்தனைகள் ஏற்படும். பொருளாதார ரீதியில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

விருச்சிகம்

பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். உத்யோக பணிகளில் பொறுமை வேண்டும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

தனுசு

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளி உணவுகளை குறைத்து கொள்வது நல்லது. துறை சார்ந்த பணிகளில் அலைச்சல் மேம்படும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கிடைக்க வேண்டிய சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மகரம்

மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். உறவினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். வெளியூர் பயணங்களில் ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் வரவுகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

கும்பம்

பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். இறை வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மீனம்

எதிர்பாராத சில செலவுகள் நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். உயர்கல்வியில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 280
·
Added a post

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 11.11.2025

இன்று காலை 07.06 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று அதிகாலை 01.40 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

இன்று மாலை 04.30 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று காலை 07.06 வரை வணிசை. பின்னர் மாலை 05.56 வரை பத்தரை. பின்பு பவம்.

இன்று அதிகாலை 01.40 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=324&dpx=2&t=1762853185

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 286
  • 289

Good Morning...

  • 318
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சகோதர வழியில் சாதகமான சூழல் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

ரிஷபம்

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி சார்ந்த பயணம் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். உடன் பிறப்புகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பணியாளர்களால் சில நெருக்கடிகள் தோன்றி மறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மிதுனம்

பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று செயல்படுத்தவும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாக நிறைவு பெறும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கடகம்

நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்து செல்லவும். உடன் இருப்பவர்களால் புதிய பாதைகள் உருவாகும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

சிம்மம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் வந்து சேரும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கன்னி

உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். பிடிவாதமாக செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் ஏற்படும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களில் தலை இடுவதை தவிர்க்கவும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

துலாம்

உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு வகைளில் ஆதாயம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வாகனம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் லாபம் ஓரளவு கிடைக்கும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாகி நிறைவு பெறும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்  

 

தனுசு

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவினங்களை அறிவீர்கள். தோற்றப்பொலிவில் சில மாற்றம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மகரம்

எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் ரீதியான சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கடன் பிரச்னைகள் குறையும். மனத்தில் இருந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். பண வரவு மத்தியமாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

கும்பம்

முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மதிப்புகள் மேம்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபமும் மத்தியமாக இருக்கும். தெய்வப்பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். மனதில் சிறு குழப்பம் தோன்றி மறையும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மீனம்

வியாபார நிமித்தமாக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கவனம் வேண்டும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 723
·
Added a post

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 24 ஆம் தேதி திங்கட்கிழமை 10.11.2025.

இன்று காலை 08.31 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று அதிகாலை 02.41 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று மாலை 06.54 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று காலை 08.31 வரை தைத்தூலம். பின்னர் இரவு 07.49 வரை கரசை. பின்பு வணிசை.

இன்று காலை 6.09 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=323&dpx=2&t=1762764855

நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 748
  • 748

Good Morning....

  • 749
·
Added a news

டொரண்டோ பகுதியில் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கனடிய சுற்றுச்சூழல் துறை இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த குளிர்கால பருவத்திற்கான முதல் பனிப்பொழிவு நிலைமை இன்றைய தினம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன போக்குவரத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் போக்குவரத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் சுமார் இரண்டு முதல் பத்து சென்றிமீற்றர் வரையான பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பனிப்பொழிவின்போது ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்கு டொரண்டோ நகராட்சி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலைகள் வழுக்கும் தன்மையை தடுக்க உப்பு கலந்த நீர் தெளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிப்பொழிவு அதிகமாக காணப்படுவதனாலும் குளிருடனான காலநிலையினாலும் வீடற்றவர்கள் தங்குவதற்கு கதகதப்பான தங்குமிடங்கள் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 990
·
Added a news

கனடாவில் இந்த ஆண்டில் காய்ச்சல் பரவுகை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்கள் இந்த ஆண்டு கடுமையான இன்ஃப்ளூயன்சா (Influenza) பருவத்துக்குத் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு காரணமாக, உலகளவில் பரவி வரும் மாற்றமடைந்த H3N2 வைரஸ் வகை, தற்போதைய தடுப்பூசியுடன் முழுமையாகப் பொருந்தாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் சுமார் 2% பேருக்கு இன்ஃப்ளூயன்சா தொற்று உறுதியானது என கனடா பொது சுகாதார அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகி, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் சாதனை அளவிலான பரவலை சந்தித்துள்ளது.

இங்கிலாந்தில் வழக்கமானதைவிட ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பருவகால காய்ச்சல் தொடங்கியுள்ளது; காய்ச்சல் நோயாளிகள் கடந்த ஆண்டைவிட மூன்றரை மடங்கு அதிகம் என்பதுடன், ஜப்பானிலும் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த அதிகரிப்புக்கு காரணமாக புதிய மாற்றமடைந்த H3N2 வகை இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது வயது முதிர்ந்தவர்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகை “H3N2 கடந்த சில ஆண்டுகளாக மாறாமல் இருந்தாலும், தற்போது வடக்கு நாடுகளுக்குள் பரவியபோது குறிப்பிடத்தக்க மரபணு மாற்றங்களை வெளிப்படுத்துகிறது.

இதனால் தற்போது வழங்கப்படும் தடுப்பூசியுடன் இது பொருந்தாமல் இருக்க வாய்ப்பு உள்ளது,” என பிரிட்டிஷ் கொலம்பியா நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் (BC CDC) தொற்றுநோய் நிபுணர் டாக்டர் டனுடா ஸ்கோவ்ரோன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். “H3N2 பருவங்கள் வழக்கமாக ‘மிக மோசமான காய்ச்சல் பருவங்களாக’ இருக்கும். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர்,” என டொண்டோ சினாய் ஹெல்த் சிஸ்டம் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் அலிசன் மெக்ஜியர் தெரிவித்துள்ளார்.

  • 993
·
Added a post

காலை காபியுடன் காகிதத்தைப் புரட்டும் வரை நாள் தொடங்கியதாகவே தோன்றாது. செய்தித்தாளின் ஒவ்வொரு பக்கத்தின் கீழும் நான்கு அல்லது ஐந்து சிறிய வண்ணப் புள்ளிகள் உள்ளன என்பதை எப்போதாவது நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

பலர் அவை வடிவமைப்பின் ஒரு பகுதி என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், அந்தப் புள்ளிகள் அச்சிடும் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை செய்தித்தாளின் “அச்சிடும் ரகசியம்”.

இந்த வண்ணப் புள்ளிகள் CMYK வண்ண அமைப்பின் ஒரு பகுதியாகும். C என்பது சியான் (வான நீலம்), M என்பது மெஜந்தா (இளஞ்சிவப்பு-சிவப்பு), Y என்பது மஞ்சள் மற்றும் K என்பது கறுப்பு ஆகியவற்றைக் குறிக்கின்றன.

ஒரு பத்திரிகையில் நீங்கள் காணும் ஒவ்வொரு வண்ணப் புகைப்படம், கிராஃபிக் அல்லது வண்ண உரையும் இந்த நான்கு வண்ணங்களின் கலவையுடன் உயிர்ப்பிக்கப்படுகின்றன. அவை சரியான விகிதத்தில் கலக்கப்படா விட்டால், படங்கள் தெளிவாகத் தெரிய மாட்டா.

ஒவ்வொரு பக்கத்தையும் அச்சிடும் போது அச்சு இயந்திரம் இந்த நான்கு வண்ணங்களையும் தனித் தனித் தட்டுகள் மூலம் தனித் தனியாக அச்சிடுகிறது.

அனைத்து வண்ணங்களும் ஒரே பக்கத்தில் சரியாகப் பொருந்தினால் மட்டுமே படம் தெளிவாகவும் அழகாகவும் இருக்கும். ஆனால் ஒரு நிறம் சரியாக அமையா விட்டாலும், முழு படமும் சிதைந்து விடும் அல்லது மங்கலாகி விடும்.

அதனால்தான் பக்கத்தின் அடிப்பகுதியில் உள்ள அந்த சிறிய வண்ணப் புள்ளிகள் அச்சுப் பொறிகளுக்கு “வண்ணங்கள் சரியாக அமைக்கப்பட்டுள்ளனவா?” என்பதற்கான குறிகாட்டிகளாகச் செயல்படுகின்றன.

அச்சிடும் போது சரியாகப் பயன்படுத்தப்படாத எந்த நிறத்தையும் தொழில் நுட்ப வல்லுநர்கள் அந்தப் புள்ளிகள் மூலம் உடனடியாக அடையாளம் காண முடியும்.

தே வைப்பட்டால், இயந்திர அமைப்புகளை உடனடியாகச் சரிசெய்யலாம். இந்த வழியில், பத்திரிகையின் ஒவ்வொரு பக்கமும் ஒரே தரத்துடன் அச்சிடப்படுகிறது.

டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆன் லைன் செய்திகள் பரவலாகி வருகின்றன, ஆனால், செய்தித் தாள்களின் தனித்துவம் குறையவில்லை.

ஒவ்வொரு எழுத்துக்கும், அதில் உள்ள ஒவ்வொரு படத்திற்கும் பின்னால், இவ்வளவு சிக்கலான தொழில் நுட்பச் செயல்முறை இருப்பது பலருக்குத் தெரியாது.

ஒரு காலத்தில், செய்தித்தாளில் வரும் செய்திகள் உண்மையில் முக்கிய ஆதாரமாக இருந்தன. இன்று டிஜிட்டல் உலகம் வேகமாக முன்னேறி வந்தாலும், அச்சுச் செய்தித் தாள்களின் முக்கியத்துவம் இன்னும் உள்ளது.

ஏனெனில் அந்தப் பக்கங்களில் அச்சிடப்படும் ஒவ்வொரு எழுத்தும் தரம், கவனிப்பு மற்றும் துல்லியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எனவே, இனி மேல் நீங்கள் செய்தித் தாளைப் படிக்கும் போது, ​​அந்த நான்கு வண்ணப் புள்ளிகளையும் பார்க்கும் போது, ​​அவை வெறும் அலங்காரம் மட்டுமல்ல, செய்தித் தாள் அச்சிடலின் தொழில் நுட்பத் திறனின் சின்னம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த சிறிய விவரங்கள்தான் நாம் தினமும் வைத்திருக்கும் செய்தித் தாளை ஒரு கலைப் படைப்பாக மாற்றுகின்றன.

  • 995
·
Added a post

சிவபெருமானுக்கு மிகவும் உகந்த மலர்கள் கொன்றையும் தும்பையும்தான். அதிலும் தும்பை பூ ஈசனுக்கு மிகவும் விருப்பமான பூ. வெள்ளை நிறத்தில் மிகவும் சிறியதாக இருக்கும்

இந்த பூ சிவ பூஜைக்கு மிகவும் உகந்தது. இது மிகவும் மருத்துவ குணம் வாய்ந்ததும் கூட. சிவபெருமான் ஏன் தும்பைப் பூவுக்கு தனது திருமுடியில் இடம் கொடுத்தார் என்கிற புராணக் கதையும் உண்டு.

முன்பு ஒரு காலத்தில் தும்பை என்ற பெண் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். சிவ பக்தையான தும்பை ஈசனை குறித்து தவம் செய்து வந்தாள். அவளது தவத்தை மெச்சிய ஈசன், அவள் முன் தோன்றி, ‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ எனக் கேட்க, எல்லோருமே ஈசனின் திருவடி நிழலில்தான் இருக்க ஆசைப்படுவார்கள்.

ஆனால், ஈசனை நேரில் தரிசித்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், ‘ஐயனே எனது திருமுடியின் மீது உனது திருவடி இருக்க வேண்டும்’ என்று கேட்பதற்கு பதில், ‘உனது திருமுடியின் மீது எனது திருவடிகள் இருக்க வேண்டும்’ என்று வரம் கேட்டு விட்டாள்‌ தும்பை.

ஈசனும், ‘அப்படியே ஆகட்டும்’ என்று அருள்புரிய, அப்போதுதான் ஈசனிடம் தான் கேட்ட வரம் தவறாகி விட்டது எனப் புரிந்து, ‘கடவுளே, தங்களை நேரில் தரிசித்த பதற்றத்தில் தவறாகக் கேட்டுவிட்டேன். என்னை மன்னித்தருளுங்கள்’ என வேண்ட, கருணைக்கடலான ஈசன், ‘தும்பையே உனது பக்தியின் பெருமையை விவரிக்க முடியாது.

நீ அடுத்த ஜன்மத்தில் பூவாகப் பிறந்து எனது திருமுடியை அலங்கரிப்பாய்’ என அருள் புரிந்தார்.

அன்று முதல் ஐந்து விரல்களைப் போன்ற இதழ்களைக் கொண்ட தும்பை பூ இறைவனுக்கு மிகவும் பிரியமானதாகிவிட்டது. எங்கும் கிடைக்கும் தும்பைப் பூவை கொஞ்சம் பறித்து அருகில் உள்ள சிவன் கோயிலில் கொடுத்து உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்வோம்.

மென்மையான பூக்களான தும்பைக்கு மன்னர்கள் காலத்தில் சிறப்பான இடம் இருந்தது. மன்னன் தும்பைப் பூ மாலை அணிந்துவிட்டாலே போருக்குத் தயாராகி விட்டான் என்று பொருளாகும்.

சங்க இலக்கியங்களில் தும்பைப் பூ சூடி போருக்குச் சென்ற மன்னர்களை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ராவணன் போருக்குப் புறப்பட்டபோது தும்பைப் பூ மாலை அணிந்து சென்றதாக கம்ப ராமாயணத்தில் எழுதியுள்ளார்.

ராவணனுக்கு எதிராக போர் கோலம் பூண்ட ஸ்ரீராமன் துளசி மாலை அணிந்து, அத்துடன் தும்பை பூ மாலையும் சூட்டிக்கொண்டான் என்கிறார் கம்பர்.

  • 1003
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதளவில் புதிய தைரியம் உருவாகும். சுபகாரியங்களுக்கான எண்ணங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் மேம்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியங்கள் ஆதரவாக இருப்பார்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

ரிஷபம்

தம்பதிகளுக்கு மனம் விட்டு பேசுவது நல்லது. புதிய ஆடைகளில் ஆர்வம் ஏற்படும். பொருளாதாரம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் உத்வேகம் ஏற்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மிதுனம்

சகோதரர்கள் வழியில் ஆதரவுகள் மேம்படும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கடகம்

விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் சில விரயம் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகமான சில போட்டிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் சார்ந்த பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

சிம்மம்

பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். பெற்றோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனை உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் ஆதரவுகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பாசி

 

கன்னி

சிறு வாய்ப்புகளிலும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளுக்காக சிலரின் உதவிகளை தேடுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்த வேறுபாடுகள் படிப்படியாக குறையும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

துலாம்

தம்பதிகளுக்குள் இருந்த பிரச்சனைகள் குறையும். நினைத்த பணிகள் கைக்கூடி வரும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

 

விருச்சிகம்

அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களில் விவேகம் வேண்டும். கொடுக்கல் வாங்கலால் வேறுபாடுகள் உண்டாகும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். வியாபார ரகசியங்களை பகிராமல் இருக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பணிகளில் முன் கோபமின்றி செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

தனுசு

சவாலான செயல்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஒற்றுமை ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

மகரம்

குடும்பத்தில் மதிப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். மனதளவில் இருந்த சஞ்சலங்கள் விலகும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்கள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்

 

மீனம்

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவு ஏற்படும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். அசதியும், சோர்வும் அவ்வப்போது தோன்றி மறையும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 1037
·
Added a post

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 9.11.2025

நாள் - மேல் நோக்கு நாள்

பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ பஞ்சமி  - Nov 09 04:25 AM – Nov 10 01:55 AM

கிருஷ்ண பக்ஷ சஷ்டி  - Nov 10 01:55 AM – Nov 11 12:08 AM

நட்சத்திரம்

திருவாதிரை - Nov 08 10:02 PM – Nov 09 08:04 PM

புனர்பூசம் - Nov 09 08:04 PM – Nov 10 06:48 PM

கரணம்

கௌலவம் - Nov 09 04:26 AM – Nov 09 03:05 PM

சைதுளை - Nov 09 03:05 PM – Nov 10 01:55 AM

கரசை - Nov 10 01:55 AM – Nov 10 12:56 PM

யோகம்

ஸித்தம் - Nov 08 06:31 PM – Nov 09 03:02 PM

ஸாத்தியம் - Nov 09 03:02 PM – Nov 10 12:04 PM

image_transcoder.php?o=sys_images_editor&h=322&dpx=2&t=1762696360

நல்ல நேரம்:

11:40 AM – 12:26 PM

  • 1048

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்

குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்.

- ஔவையார்.

சாகும் வரையில் ஒருவர் கெடுதியையே செய்தாலும், தன்னால் முடிந்த வரையில் அவரைக் காப்பாற்றுபவரே அறிவுடையார் ஆவார்.

மரம் தான் சாயும் வரையில் தன்னை வெட்டுபவனுக்குக் குளிர்ந்த நிழலைத் தந்து அவன் குற்றத்தை மறைப்பதைப் பாருங்கள். அப்படித்தான் இருக்க வேண்டும்.

  • 1044

good morning...

  • 1054
·
Added a news

கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடியர்களில் ஐந்தில் ஒருவர் (20%) கடந்த ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு கட்டணத்தை செலுத்தாமல் தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

நானோஸ் ரிசர்ச் நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், 55 வயதுக்கு குறைவானவர்கள், உணவுக்காக கார் கடன், கிரெடிட் கார்டு அல்லது மின்சார கட்டணங்களை நிலுவையில் வைக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மாதாந்த செலவுகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

18 முதல் 34 வயதுடையோரில் 18.1% பேர் சில சமயங்களில் அல்லது அடிக்கடி கட்டணம் செலுத்தாமல் விட்டதாக கூறியுள்ளனர். 35 முதல் 54 வயதினரிலும் இதேபோல 17.9% பேர் தெரிவித்துள்ளனர்.

  • 1314
·
Added a news

அமெரிக்க அணிக்கு ஆதரவாக தொப்பியணிந்த விவகாரத்தில் இளவரசர் ஹாரி கனடாவிடம் மன்னிப்பு கோரி உள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஹாலிவுட் நடிகை மேகனை திருமணம் செய்தபிறகு அரச குடும்பத்தை விட்டு வெளியேறினார். அதன்பின், தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இதற்கிடையே, கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேஸ்பால் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது.

இந்த தொடரின் 4-வது போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ் அணியும், கனடாவின் டொரண்டோ ப்ளூ ஜேஸ் அணியும் மோதின. இதனை பார்ப்பதற்காக ஹாரி தனது மனைவி மேகனுடன் சென்றிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்சின் தொப்பியை அணிந்திருந்தனர்.

இதற்கு காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள கனடாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஏனெனில் காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அவரது மகனான இளவரசர் ஹாரி அமெரிக்க அணிக்கு ஆதரவாக தொப்பியணிந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் அணியின் தொப்பி அணிந்ததற்காக இளவரசர் ஹாரி கனடாவிடம் மன்னிப்பு கோரி உள்ளார்.

  • 1382