·   ·  10 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 771
  • More

Jinguchaa - Lyrical - Thug Life

Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கடன் தொடர்பான விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் பொறுமை வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

ரிஷபம்

கௌரவப் பொறுப்புகள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். வாகன மாற்ற முயற்சிகள் கைகூடும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மிதுனம்

குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பேச்சில் நிதானமும் கவனமும் வேண்டும். கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கடகம்

உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். எதிர்பார்த்த சில பயணங்களில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். குழந்தைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உறவினர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

சிம்மம்

ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய தொடர்பான பேச்சுக்கள் கைகூடுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பொருளாதாரம் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கன்னி

மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். செய்கின்ற பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

துலாம்

குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். முக்கியமான சிலருடைய மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். மனதளவில் புது விதமான எண்ணங்கள் உருவாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாகன வசதிகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

விருச்சிகம்

பேச்சுத் திறமைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து செயல்படவும். அரசு துறைகளில் நெருக்கடிகள் குறையும். கால்நடைகள் மீது ஆர்வம் உண்டாகும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கல்வி சார்ந்த பயணங்கள் கைகூடும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு

புதுவிதமான பயணங்கள் மேற்கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மகரம்

வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். கல்வி பணிகளில் ஆர்வம் உண்டாகும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்

மனதளவில் ஒருவிதமான சோர்வுகள் வந்து நீங்கும். உடன் இருப்பவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் இருக்கவும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். அசைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மீனம்

கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வீடு மாற்றப்படும் சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் ஈர்ப்புகள் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். இன்னல்கள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 4
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை 21.2.2026.

இன்று அதிகாலை 04.32 வரை தைத்தூலம். பின்னர் மாலை 03.53 வரை கரசை. பிறகு வனிசை .

இன்று பிற்பகல் 02.12 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று இரவு 08.15 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

இன்று மாலை 04.58 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று அதிகாலை 03.02 வரை வனிசை. பின்னர் பிற்பகல் 03.12 வரை பத்தரை. பிறகு பவம் .

இன்று காலை 05.31 வரை அமிர்த யோகம். பின்பு இரவு 08.15 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=429&dpx=2&t=1771652350

நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 6

Good Morning..Have a Nice day!

  • 9

Good Morning

  • 33
·
Added article

டாலிவுட் நட்சத்திரங்களான ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. வழக்கமான பிரபலங்களின் ஆடம்பரத் திருமணங்களைப் போலல்லாமல், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நம்பகமான நண்பர்களுக்கு மட்டுமே இந்த விழாவில் அனுமதி.

தகவல்களின்படி, உதய்பூரில் உள்ள ஒரு பெரிய ஆனால் ஒதுக்குப்புறமான இடத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் ரகசியமாக கையாளப்பட்டுள்ளன. முழு விவரங்களும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் என்று கூறப்படுகிறது, இது சமீப காலங்களில் மிகவும் பாதுகாக்கப்படும் பிரபலங்களின் திருமணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த ஜோடியின் நோக்கம் தெளிவாக உள்ளது - சமூக ஊடகங்களின் பரபரப்பிலிருந்து விலகி, தங்கள் சிறப்பு நாளை அமைதியாகக் கொண்டாடுவது.

சர்வதேச பாதுகாப்பு ஏஜென்சியின் ஈடுபாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிகபட்ச தனியுரிமையை உறுதி செய்வதற்கும், எந்த தகவலும் கசிவதைத் தடுப்பதற்கும், இந்த ஜோடி ஒரு சிறப்பு வெளிநாட்டுப் பாதுகாப்புக் குழுவை ஏற்பாடுகளை மேற்பார்வையிட நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குழு, உள்ளூர் ராஜஸ்தான் அதிகாரிகளுடன் இணைந்து, திருமண இடத்தை பாதுகாத்து, விருந்தினர்களின் வருகையை நிர்வகிக்கும். தேவையற்ற ஊடுருவல்களைத் தவிர்க்க பாதுகாப்பான எல்லையை உருவாக்குவதே இதன் நோக்கம்.

திட்டமிடல் மிகவும் நுணுக்கமாக இருந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அழைப்பிதழ்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன, மேலும் தம்பதியினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை அமைதியாக இருக்குமாறு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

  • 141
·
Added article

தமிழில், 180, மாலினி 22 பாளை​யங்​கோட்​டை, காஞ்​சனா 2, ஓ காதல் கண்​மணி, மெர்​சல், திருச்​சிற்​றம்​பலம் உள்பட பல படங்​களில் நடித்​திருப்​பவர், நித்யா மேனன். தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடப் படங்​களில் நடித்து வருகிறார்.

‘திருச்​சிற்​றம்​பலம்’ படத்​தில் நடித்​தற்​காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற அவர், இப்​போது தயாரிப்பு நிறு​வனத்​தைத் தொடங்​கி​யுள்​ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்ள இவர், தனது தயாரிப்பு நிறு​வனத்​துக்கு ‘கியூரி புரொடக் ஷன்’ என்று பெயர் வைத்​துள்​ளார்.

  • 139
·
Added article

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘அண்டர் 18’ பட அறிவிப்பை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் நடிக்கும் புதிய படத்துக்கு ‘அண்டர் 18’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள்சாமி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பை வெற்றிமாறன் வெளியிட்டார்.

க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதுகின்றனர். இப்படத்தை எஸ்ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜெகதீஸ் தயாரிக்க உள்ளார்.

  • 140
·
Added a news

கனடாவின் ஒட்டாவாவில் இடம்பெற்ற கத்தி குத்திக்கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரைடியு நிலைய வணிக வளாகத்துக்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைப்பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருகிறது. காயமடைந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித அச்சமும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டின் நான்காவது கொலைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் Rideau Centre அருகே இடம்பெற்ற இரண்டாவது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமாகவும் இது குறிப்பிடப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அதே பகுதியில் மேலும் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி காயமடைந்திருந்தார்.

  • 139
  • 139
  • 137
  • 139
  • 139
  • 139
  • 140

ரமலானின் முக்கியத்துவம்

https://youtu.be/_CwlHpMyxno

  • 149
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். அரசு தொடர்பான செயல்களில் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகள் வழியில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

ரிஷபம்

பணிகளில் மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். இறைவழிபாட்டு ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சினம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

குடும்பத்தில் வரவிற்கேற்ப செலவுகள் இருக்கும். சமூக பணிகளில் விவேகத்துடன் இருக்கவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். சுபகாரிய பணிகளில் அலைச்சல் ஏற்படும். பயணம் மூலம் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். மேலதிகாரிகளுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கடகம்

உடன் பிறந்தவர்கள் மூலம் ஒத்துழைப்பான சூழல் அமையும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பிரபலமானவர்களின் தொடர்புகளால் மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்பும் மதிப்பும் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

சிம்மம்

தேர்வு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த எண்ணங்கள் நிறைவேறும். தாய்மாமன் வழியில் இருந்து வந்த மனவருத்தம் குறையும். தொழிலில் இருந்த சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூக தொடர்பான பணிகளில் அனுபவங்கள் அதிகரிக்கும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர்

கன்னி

உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வரவுகளை மேம்படுத்த ஆலோசனைகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

துலாம்

பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கைகள் மேம்படும். மனதில் நிலையான சிந்தனையுடன் எதிர்கால பணிகளை மேற்கொள்வீர்கள். துணைவருடன் அனுசரித்து செல்லவும். பயணம் மூலம் சோர்வுகள் உண்டாகும். திடீர் செலவுகள் மூலம் கையறுப்புகள் குறையும். கட்டிட பணிகளில் லாபங்கள் அடைவீர்கள். மருத்துவ தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

விருச்சிகம்

சகோதரர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் மேன்மைக்கான முயற்சிகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். புத்தக பணிகளில் ஆர்வம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

தனுசு

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். இன்சூரன்ஸ் காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும். வரவேண்டிய தனவரவுகள் கிடைக்கும். எதிர்கால முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலிலும் பொறுமை கடைபிடிக்கவும். எதிலும் விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றுவீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் மனதில் உருவாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

கும்பம்

முன் கோபம் இன்றி செயல்படுவது நல்லது. வெளி உணவுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். கல்வி செயல்களில் சிந்தித்து செயல்படவும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

மீனம்

சபை நிமித்தமான பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு புகழ் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மருமகன் வழியில் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். செலவுகளின் தன்மை அறிந்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 177
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.2.2026.

இன்று மாலை 03.53 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று இரவு 09.19 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று இரவு 07.33 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று அதிகாலை 04.32 வரை தைத்தூலம். பின்னர் மாலை 03.53 வரை கரசை. பிறகு வனிசை .

இன்று இரவு 09.19 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=428&dpx=2&t=1771565684

நல்ல நேரம்:

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 12.30.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 197
·
Added a post

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...

கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோஷத்தில் ராஜா, ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவில் இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.

'ராஜா ராஜா!' என்றழைக்க...

ராஜா ராஜா சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்...

தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக.

இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார்.

ராஜா ராஜனின் கனவும் கலைந்தது.

விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான்.

யாருக்கும் பதில் தெரியவில்லை.

பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான்.

கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான்.

சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்... நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார்.

எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.

இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை... நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.

எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்...

அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விஷயத்தை சொன்னோம்.

அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்...

என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது.

அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்... என்றான் சிற்பி.

இதை கேட்டதும் ராஜா ராஜனுக்கு எல்லாம் புரிந்தது...

எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான்.

ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே..."

என்று கண்ணீர் மல்கி...

பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்...

இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான்... நான் அல்ல...

இதற்கு இறைவனே சாட்சி என்றான்..."

  • 198

முழுமுதற் கடவுளாம் விநாயகரின் அருள் இன்று நம் அனைவருக்கும் கிடைக்கட்டும். வாழ்த்துகள்.

  • 198

Good Morning...

  • 199

காலை வணக்கம்

  • 204
  • 266
  • 266
  • 266