- · 1 friends
-
2 followers
Jinguchaa - Lyrical - Thug Life
Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman
டான்சன், எகிடோ இரு புத்த பிட்சுகள். ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது.
ஒரு வளைவில் திரும்பும்போது நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒருபுறத்தில் வேலைப்பாடுடன் கூடிய அழகிய பட்டுச் சேலையைக் கட்டியிருந்த அழகான இளம்பெண் அடுத்த பக்கம் போவதற்கு முடியாமல் நின்றுகொண்டிருந்தாள்.
“இங்கே வா!” என்று கூப்பிட்ட டான்சன் அவளைத் தூக்கிக்கொண்டு சகதியான தெருவின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்குக் கொண்டு போய் சேர்த்தார்.
அன்று இரவு மடத்திற்குத் திரும்பும்வரை எகிடோ எதுவும் பேசாமல் வந்தான். அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “நம்மைப் போன்ற புத்த பிட்சுகள் பெண்கள் அருகில் செல்வதுகூடத் தவறு. முக்கியமாக இளமையும் அழகும் வாய்ந்த பெண்கள் பக்கத்தில் செல்லவே கூடாது.
நீ ஏன் அவளைத் தொட்டுத் தூக்கிகொண்டு சென்றாய்?” என்றார். “நான் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டேன். நீதான் அந்தப் பெண்ணை இன்னும் சுமந்துகொண்டிருக்கிறாய்” என்றார்.
இப்படித்தான் நம்மில் பலரும் தேவையில்லாத பல விஷயங்களை, பிரச்சினைகளை, கஷ்டங்களைத் துாக்கிச் சுமந்து கொண்டிருக்கின்றனர்.
ஒன்று, பிரச்சினைகளை மனதின் உள்ளேயே பூட்டி வைத்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அல்லது பிரச்சினைகளைத் துாக்கிச் சுமந்துகொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம்.
அல்லது, பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடுவிடுகிறோம். பிரச்சினைகளை மனதில் இருந்து துாக்கியெறிந்து, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களே வெற்றி எனும் இலக்கை அடைகிறார்கள்.
கொய்யா, பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கொய்யா இலைகளில் பல ஆரோக்கிய குணங்கள் உள்ளன. இந்த இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது.
மேலும், உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும், முகப்பரு தழும்புகள் நீங்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம். கொய்யா இலையை நசுக்கி, முகப்பரு புள்ளிகளில் தடவவும். வறண்ட சருமத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு கப் கொய்யா இலை தண்ணீரை பயன்படுத்தலாம்.
கொய்யா இலையின் சில அழகுக் குறிப்புகள் இங்கே..
எண்ணெய் சருமத்திற்கு :
தேவையான பொருட்கள் :
• ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்
• ஐந்து தேக்கரண்டி தண்ணீர்
• இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு
செய்முறை :
கொய்யா இலைகள், தண்ணீரைக் கலந்து பேஸ்ட் செய்யவும்.
ஒரு கிண்ணத்தில், இரண்டு டேபிள் ஸ்பூன் பேஸ்ட் எடுத்து, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலக்கவும்.
இதை உங்கள் முகம், கை, கழுத்து பகுதிகளில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
டிப்ஸ்: அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தவும், உங்கள் சருமத்தை தெளிவாக வைத்திருக்கவும் இதை தினமும் பயன்படுத்தவும்.
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு :
தேவையான பொருட்கள் :
• ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்
• ஐந்து தேக்கரண்டி தண்ணீர்
• மஞ்சள்- சிட்டிகை
• ஒரு தேக்கரண்டி- கற்றாழை ஜெல்.
எப்படி செய்வது?
கொய்யா இலைகள், தண்ணீரைக் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.
ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் பேஸ்டுடன், ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்கவும்.
இதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
டிப்ஸ்: சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு 2-3 முறை இதை பயன்படுத்தவும்.
தோல் எரிச்சலுக்கு :
தேவையான பொருட்கள் :
• ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்
• ஒரு கப் தண்ணீர்
எப்படி செய்வது?
ஒரு கைப்பிடி கொய்யா இலைகளை ஒரு கப் தண்ணீருடன் சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
தீயை அணைத்து, தண்ணீரை வடிகட்டி இலைகளை அகற்றவும்.
வடிகட்டிய தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும்.
ஆறியதும் ஸ்ப்ரே பாட்டிலுக்கு மாற்றவும்.
உங்களுக்கு சென்சிட்டிவ் சருமம் இருந்தால், உங்கள் முகத்தை கழுவிய பின் இந்த ஸ்ப்ரேயைப் பயன்படுத்தவும்.
கொசு கடித்தால் அல்லது மற்ற தோல் எரிச்சல் இருந்தால் அதன்மீத ஸ்பிரே செய்யலாம்
டிப்ஸ்: முகப்பருக்கள் உள்ள சருமத்திற்கு மாஸ்க் பயன்படுத்த விரும்பினால், டீ ட்ரீ ஆயில் சில துளிகள் சேர்க்கவும்.
தலைமுடிக்கு :
முடி உதிர்வதை தடுக்கவும் கொய்யா இலை பயன்படுகிறது. உடலுக்கு ஆக்ஸிஜனேற்றிகள் உருவாக்கும் கொய்யா இலைகளை வேகவைத்து உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு கைப்பிடி கொய்யா இலைகள் சேர்த்து, சுமார் 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு இது மிதமான சூட்டில் இருக்கும் போது, உங்கள் முடியில் ஒவ்வொரு பகுதியாக பிரித்து அப்ளை செய்து, மெதுவாக மசாஜ் செய்யவும்.
மசாஜ் செய்வது இரத்த அழுத்தத்தை மேம்படுத்துகிறது, இது நுண்ணறைகளுக்கு அதிக ஊட்டச்சத்தை பெற உதவுகிறது. பிறகு ஒரு டவலால் தலைமுடியை போர்த்தி, 2 மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு சாதரண நீரில் கழுவவும்.
உங்கள் தலைமுடியை பளபளப்பாக வைத்திருக்க வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்துங்கள்.
செத்துப்போன ஒருவன் நரகத்துக்கு அனுப்பப்பட்டான். நரகத்தில் மூன்றுவிதமான தண்டனை முறைகள் இருந்தன.
மூன்றையும் பார்த்துவிட்டு எந்த தண்டனையை ஏற்றுக்கொள்வதென்று அவனே முடிவு செய்துகொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.
முதலாவது அறைக்குப் போனவன், அங்கே எல்லோரும் தலைகீழாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். ஒவ்வொருவர் முகத்திலும் வலியின் அவஸ்தை பிரதிபலித்தது.
இது வேண்டாம் என்று அடுத்த அறைக்குப் போனான். அங்கே... எல்லோரும் தலையில் பனிக்கட்டிகளைச் சுமந்தபடி இருந்தார்கள். பனிக்கட்டிகள் உருகி வழிந்துகொண்டிருக்க, அந்தக் குளிர்ச்சியில் ஜில்லிட்டு நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நிமிடம் அந்த வேதனையை எண்ணிப் பார்த்தவன்,
'ஐயோ... இது வேண்டாம்' என்று அடுத்த அறைக்குத் தாவினான். மூன்றாவது அறையில் ஆச்சரியம்! அங்கிருந்தவர்கள் படுரிலாக்ஸ்டாக காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
'ஆஹா.. இதுதான் நான் தேடிவந்த இடம். இங்கேயே நான் இருந்துவிடுகிறேனே' என்று தன் முடிவையும் சொல்லிவிட்டான்.
'நீங்கள் போய் இந்தக் குழுவில் சேர்ந்துகொள்ளலாம்' என்று அனுமதியும் தரப்பட, உள்ளே போய் ஒரு கப் காபி வாங்கி சுவைக்க கையிலெடுத்ததும் அங்கே ஒரு எஜமானரின் குரல்..
''ஓகே.!
உங்களது காபி இடை வேளை முடிந்துவிட்டது. எல்லோரும் அந்த தீச்சட்டியை எடுத்துத் தலையில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதனால் லலித் தயாரிப்பில் உருவாகியிருந்த ‘ஹாய்’ படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக ‘எல்.ஐ.கே’ படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவித்துள்ளது படக்குழு.
ஏப்ரல் 3-ம் தேதி ‘எல்.ஐ.கே’ வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்ட பலர் பிரதீப் ரங்கநாதன் உடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் பணிபுரிந்துள்ளார்.
’எல்.ஐ.கே’ வெளியாக இருப்பதால், ‘ஹாய்’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களையுமே லலித் குமார் தயாரித்துள்ளார். ‘எல்.ஐ.கே’ பட விவகாரத்தில் லலித் குமார் – விக்னேஷ் சிவன் இருவருக்குமே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால், அவை சரி செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ள படம் ‘லீடர்’. இதன் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்து, படத்தின் தணிக்கைப் பணிகளும் முடிவுற்றது. இதனால் ஏப்ரல் 9-ஆம் திகதி ‘லீடர்’ வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா, ஷாம், லால், சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லீடர்’. லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதனை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘லீடர்’ படத்தினைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தினையும் துரை.செந்தில்குமாரே இயக்கவுள்ளார். இப்படத்தின் வெளியீட்டுக்கு பின்பு, அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில், நாளை மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து கலந்தாலோசிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம், தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நாளை 20.03.2026 (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.
சென்னை அண்ணாநகர் சாம்கோ ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
திடீர் திருப்பங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். குடும்பத்தில் சில மன வருத்தம் நேரிடலாம். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். விலகி இருந்தவர் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பூர்வீக வீட்டை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் மேம்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
மிதுனம்
மனதளவில் புதிய தெளிவுகள் ஏற்படும். மாணவர்களின் கற்றலில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். தொழில் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் அதிகரிக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். அறிமுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இள நீலம்
கடகம்
பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் ஏற்படும். திறமைக்கு உண்டான அங்கீகாரமும் மதிப்பும் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம்
குடும்பத்தில் சிறுசிறு ஆரோக்கியமற்ற விவாதங்கள் தோன்றி மறையும். கடன் செயல்களில் பொறுமை வேண்டும். நெருக்கடியான சூழ்நிலைகள் மூலம் வருத்தங்கள் உண்டாகும். வழக்கு செயல்களில் இழுபறியான சூழல் ஏற்படும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கால்நடை பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வெளி வட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
வீட்டில் சுப காரியம் நடைபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த குழப்பம் விலகும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். சேமிக்கும் பழக்கம் மேம்படும். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக குறையும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திட்டமிட்ட செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான கோப்புகள் மற்றும் பொருட்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபகரமான சூழல் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். எதிர்பார்த்திருந்த சில வாய்ப்புகள் சாதகமாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். கால்நடை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மகரம்
உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் சாதகமாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
பொருளாதார ரீதியாக சிறப்பான நிலை இருக்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பயணங்கள் மூலம் ஆதாயமும் லாபமும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம்
மற்றவர்கள் செயல்களில் தலையிடுவதை குறைக்கவும். நினைத்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது அமைதியை கொடுக்கும். இனம் புரியாத புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 5 ஆம் தேதி வியாழக்கிழமை 19.3.2026
இன்று காலை 07.29 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.
இன்று அதிகாலை 05.53 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.
இன்று அதிகாலை 04.25 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.
இன்று காலை 07.29 வரை நாகவம். பின்னர் மாலை 06.14 வரை கிமிஸ்துக்கினம். பின்பு பவம்.
இன்று அதிகாலை 05.53 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் (GTA) வீடுகளின் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சில குறிப்பிட்ட பகுதிகளில் 500,000 டாலர்களுக்கும் குறைவான விலையில் வீடுகள் விற்பனையாகியுள்ளதாக 'Wahi' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாத விற்பனை தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிராம்ப்டன் (Queen Street Corridor): இங்கு வீடுகளின் சராசரி விற்பனை விலை 407,000 டொலராகும்.
இதுவே டொராண்டோ பெரும்பாக பகுதியிலேயே மிக மலிவான இடமாக காணப்படுகின்றது.
இங்கு அதிகப்படியான அடுக்குமாடி குடியிருப்புகள் (Condos) இருப்பதே விலை குறைவாக இருக்க முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
பிளெமிங்டன் பார்க் (Flemingdon Park): டொராண்டோ நகரின் எல்லைக்குள் மலிவான இடமாக இது கருதப்படுகிறது. இங்கு சராசரி விலை 452,000 டொலராக உள்ளது.
தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இதில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு கரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இதன் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 40 வயதிலும் தனது கனவுகளைத் துரத்தும் சர்வதேசத் துப்பாக்கிச் சுடும் வீரராக, சூர்யா நடித்துள்ளார். அவரை காதலிக்கும் 20 வயது பெண்ணாக மமிதா பைஜு நடித்துள்ளார். இருவருக்குமான வயது வித்தியாசம் கொண்ட வழக்கத்துக்கு மாறான காதல் கதை இதன் டீஸரில் தெரிகிறது. “பல லேயர்கள் உள்ள வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.
அவருடைய ஸ்டைலான தோற்றம், கதைக்குப் புத்துணர்ச்சியை அதிகரிக்கும். மமிதா பைஜுவின் நடிப்பு, வெங்கி அட்லூரியின் வசனங்கள் என இப்படம் எமோஷனல் டிராமாவாக ரசிகர்களை ஈர்க்கும்” என்கிறது படக்குழு.
துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘கேடி: தி டெவில்’. இதில் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா, நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரேம் இயக்கி உள்ள இப்படத்தை கே. வி. என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ளார். அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இப்படம், ஏப் 30-ல் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தில் இருந்து சமீபத்தில் குத்துப்பாடல் ஒன்று பல்வேறு மொழிகளில் வெளியானது. அப்பாடலில் நோரா ஃபதேஹி, சஞ்சய் தத் இணைந்து ஆடியிருந்தனர். இப்பாடலை இந்தியில் ரகிப் ஆலம் என்பவர் எழுதியுள்ளார். அப்பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது.
இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நடன அசைவுகளும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்தி பாடகர் அர்மான் மாலிக், இயக்குநர் ஓனிர் உள்பட பல பிரபலங்களும் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கீழ்த்தரமான பாடல் என்று தங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர். இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆபாசமான வரிகள் மற்றும் காட்சிகள் தொடர்பாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி, பாடலை உடனடியாக நீக்க உத்தரவிட்டது. இதனால், இப் பாடல் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சமூக ஆர்வலரும் வழக்கறிஞரான வினீத் ஜிண்டால் என்பவர், இந்தப் பாடலுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் மூத்த தளபதி கோலம்ரெசா சுலைமானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது ஈரான்.
செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட இந்த கொத்து குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஈரான், கொத்து குண்டுகளை அடிக்கடி பிரயோகப் படுத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. “ஈரான் ராணுவம் க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வீசுகிறது அவை நடுவானில் பல்வேறு சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து பரந்துபட்ட பகுதியை குறிவைத்து விழுவதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமாக இருக்கிறது” என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
போர் பதற்றச் சூழல் சற்றும் குறையாத சூழலில், ஈரானின் கடற்கரை பகுதிகளை அமெரிக்க ராணுவம் குறிவைத்துள்ளது. கடற்கரை பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஈரான் ஏவுகணைக் கப்பல்களை அழித்து ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை 3% உயர்ந்தது. பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதிலிருந்தே எண்ணெய் விலை 45% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போர் ஜூன் மாதம் வரை நீடிக்கும் பட்சத்தில் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்துக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஈரான் கடற்கரை பகுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். திடீர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் கைகூடும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
ரிஷபம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். திடீர் வாய்ப்புகள் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைத் துறையில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். சுப காரிய முயற்சிகள் கைகூடும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை ஏற்படும். மருத்துவத் துறையில் முயற்சிக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் நிதானம் வேண்டும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். சமூகமும் பற்றிய சில நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் உண்டாகும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
சிம்மம்
மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். கடினமான விஷயங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். கற்பனைத் துறைகளில் சாதகமான சூழல்கள் அமையும். வர்த்தக விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். திடீர் வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை விற்பனையில் இருந்த தாமதங்கள் விலகும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். கூட்டாளிகளிடம் சில நெருக்கடியான சூழல்கள் உருவாகும். அரசுப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். போட்டி தேர்வுகளில் இருந்த மந்த நிலை மறையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
துலாம்
மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வேலை ஆட்களால் ஆதரவான சூழல் உருவாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். விவேகமான செயல்பாடுகளால் மதிப்புகளை உருவாக்குவீர்கள். வர்த்தக விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். இழந்த பொருளை மீட்பதற்கான எண்ணங்கள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி விஷயங்களில் இருந்த தடுமாற்றம் குறையும். நண்பர்களின் அறிமுகங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
தனுசு
சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். வாகனங்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். தோற்றப்பொலிவுகளில் மாற்றங்கள் உருவாகும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். மற்றவரிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். அன்பு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகரம்
தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மதிப்புகள் உயரும். பார்வை தொடர்பான சிக்கல்கள் குறையும். கல்வியில் ஆர்வம் ஏற்படும். வாக்கு சாமர்த்தியத்தின் மூலம் சாதாரணமான சூழல்களை உருவாக்குவீர்கள். கொள்கை பிடிப்பு குணம் மேம்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கும்பம்
நீண்ட நாள் எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த சில வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சிலரின் அறிமுகங்கள் மூலம் மாற்றம் ஏற்பட முடியும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு
மீனம்
உயர்கல்வியில் சில தடுமாற்றங்கள் உண்டாகும். வீடு மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். உறவுகளுடன் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பொருட்கள் விற்பனையில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட தூர பயணம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். வாசனை பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 4 ஆம் தேதி புதன்கிழமை 18.3.2026.
இன்று காலை 08.28 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.
இன்று காலை 06.08 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.
இன்று அதிகாலை 04.53 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று காலை 08.28 வரை சகுனி. பின்னர் இரவு 07.58 வரை சதுஸ்பாதம். பின்பு நாகவம்.
இன்று காலை 06.19 வரை மரண யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சசி – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வந்த படம் ‘நூறு சாமி’. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது.




















