- · 1 friends
-
2 followers
Jinguchaa - Lyrical - Thug Life
Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman
ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘அயலான்’ ஆகிய படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருந்தது. இது தகவலாக இருந்தாலும், யார் தயாரிப்பாளர், எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட எதுவுமே முடிவாகாமல் இருந்தது. தற்போது சூரி – ரவிக்குமார் இணையும் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
‘டியூட்’ படத்துக்குப் பின், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் இதுவாகும். இதனை பெரும் பொருட்செலவில் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக அறிவிக்கப்பட்ட போஸ்டரின் மூலம், 2015-ம் ஆண்டு வெள்ளம் வந்த சமயத்தில் நடைபெறும் கதையாக இதனை ரவிக்குமார் வடிவமைத்திருப்பது உறுதியாகிறது.
தற்போது ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூரி. அதனை முடித்துவிட்டு ரவிக்குமார் படத்தினை தொடங்க முடிவு செய்திருக்கிறார். இதில் சூரியுடன் நடிக்க இருப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இயக்குநர் பாலா, சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கும் வீடியோ பதிவொன்று இணையத்தில் வைரலானது. அதில் விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருந்தார் சமுத்திரக்கனி. அவரும் பேசியது விஜய்யை தான் என்று இணையத்தில் ரசிகர்கள் பலரும் அவரை வசைபாட தொடங்கினார்கள்.
அந்த வைரலான வீடியோ பதிவு குறித்து சமுத்திரக்கனியிடம் பேட்டியொன்றில் கேட்கப்பட்டது. அதற்கு, “நான் பேசும் போது வீடியோ எடுக்கிறார்கள் என தெரியும். ஆனால் ஆரம்பத்தில் இருந்து என்ன பேசினேன் என்பதை எடுக்கவில்லை. இறுதியாக பேசியதை மட்டுமே எடுத்தார்கள். நானும் எடுக்கட்டும் என விட்டுவிட்டேன். எனக்கு மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது. சந்தோஷமோ, வேதனையோ அதை அப்படியே பேசிவிட்டு, அடுத்த தளத்துக்கு சென்றுவிடுவேன்.
அந்த வீடியோ பதிவு வந்துவிட்டது. அதற்கு மேல் மானே, தேனே எல்லாம் சேர்த்து வேலையை பார்த்துவிட்டார்கள். அதனை நான் ஒரு குற்றமாக நினைக்கவில்லை. அதே போல் பேசிவிட்டு பின் வருந்தவும் இல்லை. என் மனதில் பட்டதை தானே பேசியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.
சீடன் ஒருவன் குருவிடம் ஆலோசனை கேட்க வந்தான்.
குருவே ! எனக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி நிம்மதியே இல்லை என்றான்.
குரு - கவலை படாதே மகனே! நீ அங்கே இருக்கும் தோட்டத்தில் இருக்கும் நிறய வண்ணத்து பூச்சியில் ஒன்றை பிடித்து வா என்றார் சீடனிடம்!
சீடன் ஓடி சென்று பட்டாம் பூச்சியை பிடிக்க அங்கு இங்கும் ஓடி கடைசியில் களைத்தே போனான்.
குரு அவனை அழைத்து அமைதியாக அமர சொன்னார், சுற்றி இருக்கும் அழகிய இயற்கையை ரசிக்க சொன்னார்.
உடல் மற்றும் மன அமைதி கொண்டவனாக அமர்ந்து இருக்க, அவனை சுற்றிலும் அவன் மேலும் வண்ணத்து பூச்சிகள் அமர ஆரம்பித்தன.
குரு அப்பொழுது சீடனிடன் சொன்னார். மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சி மாதிரி. நீ துரத்தி கொண்டு ஓடினாள் அது ஓடும், அமைதியாக இருந்து இருக்கும் அழகிய வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்து விட்டால் மகிழ்ச்சி உன்னை வந்து அடையும்.
ஒரு முறை பெர்னாட்ஸா காலையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தாராம் . அப்போ அந்த வழியாக அவரின் நண்பர் தன் நாயுடன் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தாராம்.
பெர்னாட்ஷா புன்னகையுடன் அவரை பார்த்து " என்ன நாயுடன் நடை பயிற்சியா என்று கேட்டாராம் ! "
அதற்கு அந்த நண்பர் நக்கலாக.....
" நான் உங்களுடன் போகலாம் என்று இருந்தேன் ! ஆனால் நாய் தான் கிடைத்தது ! " என்றாராம் !
அதற்கு பெர்னாட்ஷா கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் ......" நான் நாயுடன் பேசி கொண்டிருக்கிறேன் " என்றாராம் !
நண்பர் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாராம் !
இன்றைய நவீன உலகில் 'மைக்ரோ பிளாஸ்டிக்' என்பது கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இவை நமது உடலில் தங்கி நீண்ட கால ஆரோக்கியச் சீர்கேடுகளை உண்டாக்குகின்றன.
ஆனால், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படும் புளியங்கொட்டை இதற்கு ஒரு தீர்வாக அமையும் எனப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புளியங்கொட்டையில் உள்ள சில குறிப்பிட்ட உட்பொருட்கள், உடலில் உள்ள பிளாஸ்டிக் துகள்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி அவற்றைச் சேகரிக்கின்றன.
இதன் மூலம் நமது உடல் அந்த நச்சுக்களை இயற்கையாகவே வெளியேற்றுவது எளிதாகிறது. சுமார் 90% வரையிலான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை நீக்கும் திறன் இதற்கு உண்டு என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நமது முன்னோர்கள் புளியங்கொட்டையைப் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தியதன் ரகசியம் இப்போது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. இயற்கை நமக்குத் தந்த பொக்கிஷங்களை அழியாமல் காப்போம்!
1. வளர்ந்த மனித உடலில் 600 தசைகள். நூற்றுக்கும் மேலான இணைப்புகள். ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள இரத்தக் குழாய்கள் 13000 மில்லியன் உயிரணுக்களும் உள்ளன.
2. மனிதனுக்குள்ள 206 எலும்பு களில் பெரும்பாலானவை கைகளிலும் கால்களிலும் உள்ளன.
3. ஆண்களில் விந்துவை உண்டாக்கும் விரை (விந்தகம்) நாள் ஒன்றுக்கு 10 மில்லியன்வரை விந்து உயிரணுக்களை உற்பத்தி செய்யும். இவை அப்படியே உயிருடன் ஆறு மாத காலம் இருந்தால் மற்றொரு உலக ஜனத்தொகையை உருவாக்கக்கூடும்.
4. மனித இதயம் ஒரு இயல்பான வாழ்நாளில் 2000 மில்லியன் முறை துடிக்கும். இந்த கால கட்டத்தில் 500 மில்லியன் இரத்தத்தை பம்ப் செய்யும். மனிதன் தூங்கும்போது கூட இதயம் ஒரு மணி நேரத்தில் சுமார் 340 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்யும். ஒரு நாளைக்கு 1 லட்சம் முறைதுடிக்கும்.
5. இளைஞனின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 லிருந்து 72 முறை. ஆனால் இளம் பெண்ணின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 78 லிருந்து 82 முறைஇருக்கும்.
6. மனிதனின் சிறுநீரகத்தில் ஒரு மில்லியன் வடி கட்டிகள் இருக்கின்றன. அவை ஒரு நிமிடத் திற்கு 1.3 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகின்றன. அந்த வடிப்பில் ஏற்பட்ட கழிச்சலை சிறுநீரகம் வெறியேற்றுகின்றன.
7. மனித உடலில் உள்ள இரத்தத்தை நிமிடத்திற்கு 4.5 லிட்டர் விகிதம் நுரையீரலில் சுத்தப் படுத்தும்.
8. மனித உடலில் சிவப்பணுக்களை எலும்புச் சோறு (எலும்பின் மச்சை) தயாரிக்கிறது. அந்த அணுக்கள் 100லிருந்து 120 நாட்கள் வாழ்கின்றன. மனித வாழ்வில் சுமார் அரை டண் சிகப்பணுக்கள் தயாராகும்.
9. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 50 டண் உணவை சாப்பிடுகிறான். 50 ஆயிரம் லிட்டர் திரவத்தை குடிக்கிறான்.
10. நாம் தினமும் கண் இமை களை திறக்கவும் மூடவும் செய்கிறோம் அல்லவா? இந்த செயல் 6 வினாடிக்கு கொருமுறை நடக்கிறது. அதன்படி இந்த சிமிட்டலை நாம் நம்முடைய வாழ் நாளில் 250 மில்லியன் முறை (25 கோடிமுறை) செய்கிறோம்.
11. மனிதனுக்கு 15 வயது வரையில்தான் மூளை வளரும்.
12. சாதாரண மனிதனின் தலையில் 10 ஆயிரம் ரோமங்கள் உள்ளன.
13. ஒரு விஞ்ஞானி, மனிதனின் மரணத்திற்கு சில நொடிகளுக்கு முன்பு இருந்த எடையும் மரணமடைந்த உடனே இருந்த எடையும் ஒப்பிட்டு பார்த்து 21 கிராம் குறைவாக இருந்ததை அறிந்து அதன்மூலமாக ஜீவான்மாவின் எடை 21 கிராம் என்று நிரூபித்தார்.
14. நாம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 25 முறை கண் இமைகளை மூடி திறக்கிறோம்.
15. ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளில் (24 மணிகளில்) 23000 முறை மூச்சிழுப்பான்.
16.பெரும்பாலோர் இரவுத் தூக்கத்தில் 40 முறை அப்படியும் இப்படியும் புரளுவார்கள்.
17. மனித உடலில் உள்ள அனைத்து இரத்தக் குழாய்களை வரிசையாக இணைத்தால் மொத்தம் ஒரு லடசம் கி.மீ நீளத்திற்கு சேரும். அந்த நீளம் பூமத்திய ரேகையை நான்கு தடவை சுற்றிவரக்கூடும்.
18. மனிதன் மனமார சிரிக்கும் பொழுது 17 தசைகளும், கோபப்படும்பொழுது 43 தசைகளும் சுருக்கமடைகின்றன.
காலையில் கண் விழித்து எழுந்ததும்! மனைவி கணவனை பூரி கட்டையால் மண்டையில் ஒரே அடி அடித்தார்!
கணவன் குழப்பத்துடன்! எதற்கு அடிக்கிராய் என்று கேட்க!
உங்கள் சட்டையை துவைக்க போடும்
போது ஒரு துண்டு சீட்டு இருந்தது அதில் ரோசி ! என்று இருந்தது அதனால் தான் அடித்தேன்!
ஐயோ ! அது நேற்று குதிரை ரேசில் நான் பணம் கட்டிய குதிரையின் பெயர் என்று சொல்ல!
மனைவி கண்ணீருடன் கணவனிடம் மன்னிப்பு கேட்டு கொண்டார்!
மறு நாள் காலையில் எழுந்தான்! இன்றும் தயாராக இருந்த மனைவி அதே பூரி கட்டையால் கணவனின் மண்டையில் அடித்தார்!
கணவன் புரியாமல் இன்னைக்கு என்ன ஆச்சு என்ற கேட்க!
அதற்கு மனைவி கோபமாக சொன்னார்!
" நேற்று நீங்க பணம் கட்டிய குதிரை காத்தால இருந்து மூன்று மிஸ்டு கால் கொடுத்து இருக்கு! அதான்!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாரிசுகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். ஒப்பந்தம் விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
ரிஷபம்
செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து அதற்கு தகுந்தாற்போல செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களுக்கு இடையே இருந்து வந்த சலசலப்புகள் குறையும். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் பிறக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
சிம்மம்
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் பிறக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கன்னி
தவறிய சில பொருள்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல ஒரு மாற்றத்தை தரும். விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உண்மையானவர்களை புரிந்து கொள்வீர்கள். உணவு பழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். பிற மொழி மக்களின் உதவிகள் கிடைக்கும். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைப்பட்ட சில வேலைகள் முடியும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுகளில் கனிவு வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நேரம் தவறி உணவு உண்பதை குறைத்துக் கொள்ளவும். எதிலும் பதற்றம் இன்றி பொறுமையுடன் செயல்படும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். புதிய கூட்டாளிகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் ஒற்றுமை மேம்படும். நண்பர்களின் உதவிகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உருவாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புக்கள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம்
நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுகூலமான சூழல்கள் அமையும். தடைப்பட்ட சில காரியங்கள் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
தொழில் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். பணி புரியும் இடத்தில் பொறுப்புக்கள் மேம்படும். பூர்விக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மீனம்
சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். பொன் பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். விவசாயம் துறைகளில் மேன்மை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 11 ஆம் தேதி புதன்கிழமை 25.3.2026.
இன்று மாலை 05.10 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று இரவு 08.34 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.
இன்று காலை 08.52 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.
இன்று காலை 06.20 வரை கரசை. பின்னர் மாலை 05.10 வரை வணிசை. பிறகு பத்திரை.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஏர் கனடா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம், அதாவது, மார்ச் மாதம் 22ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இரவு, கனடாவின் மொன்றியலிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள LaGuardia விமான நிலையத்தில் சென்று இறங்கிய ஏர் கனடா விமானம் ஒன்று, தீயணைக்கும் ட்ரக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விமானம் பத்திரமாக தரையிறங்க, இன்னும் சில நிமிடங்களில் விமானத்திலிருந்து இறங்கிவிடலாம் என்னும் எண்ணத்திலிருந்த பயணிகள், எதிர்பாராத ஒரு அதிர்ச்சியை சந்தித்தார்கள்.
அதே விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு விமானத்தில் ஏதோ துர்நாற்றம் வீசுவதாக தகவல் கிடைக்க, அந்த விமானத்தை பரிசோதிப்பதற்காக செல்வதற்காக தீயணைக்கும் வாகனம் ஒன்று விமான கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கோர, அலுவலர் ஒருவர் அதற்கு அனுமதி கொடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அந்த தீயணைப்பு வாகனம் வேகமாக புறப்பட, அப்போது ஏர் கனடா விமானம் வந்து விமான ஓடுபாதையில் தரையிறங்கியுள்ளது.
விமானம் தரையிறங்கும் நேரத்தில் தீயணைப்பு வாகனத்துக்கு அனுமதி கொடுத்தது தவறு என்பதை உணர்ந்த விமான கட்டுப்பாட்டு அலுவலர், தீயணைப்பு வாகனத்தை நிறுத்துமாறு அவசர அவசரமாக குரல் கொடுக்க, ஆனால், அதற்குள் காலம் கடந்துவிட்டது.
மணிக்கு 39 கிலோமீற்றர் வேகத்தில் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த விமானம் ட்ரக் மீது மோத, விமானத்தின் முன்பகுதி சிதைந்துபோனது.
இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில், விமானத்தை செலுத்திக்கொண்டிருந்த விமானியும் சக விமானியும் உயிரிழந்துள்ளார்கள்.
விமானத்தில் 72 பயணிகளும் நான்கு பணிப்பெண்களும் இருந்த நிலையில், அவர்களில் 41 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பலர் பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது, உயிரிழந்த விமானிகள் குறித்த சில விவரங்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தை இயக்கியவர் ஆண்டோயின் ஃபாரஸ்ட் (30). கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஃபாரஸ்ட், சிறுவயது முதலே விமானியாகும் ஆசை கொண்டிருந்தவர் என்றும், கடின உழைப்பாளி என்றும் அவரது சகாக்கள் கூறுகிறார்கள்.
ஃபாரஸ்டின் சக விமானியின் பெயர் மெக்கன்ஸி குந்தர் (Mackenzie Gunther). ஒன்ராறியோவில் விமான பயிற்சி பெற்ற குந்தரைக் குறித்து அதிக தகவல்கள் வெளியாகவில்லை.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. வரும் மே மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க நாலு பேரு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளது.
இந்நிலையில், பாடகர் அசல் கோலார் எழுதியுள்ள ‘நாங்க நாலு பேரு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் நடிகர் சிலம்பரசன், சாய் அப்யங்கர் மற்றும் அசல் கோலார் இணைந்து பாடி உள்ளனர்.
சுமார் 3.28 நிமிடம் ரன் டைம் கொண்ட பாடலின் பெரும்பாலான புரோமோ காட்சியில் ஆர்.ஜே.பாலாஜி வருகிறார். இந்தப் படத்தில் அவர் ‘பேபி கண்ணன்’ என்ற பாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்த பாடலின் புரோமோவில் கடைசியாக சில நிமிடங்கள் மட்டுமே சூர்யா வருகிறார். மற்ற நேரம் அனைத்தும் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் படக்குழுவினர் உள்ளனர்.
மும்பையின் மோசமான சாலைகளால் தனது தொழில் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக நடிகையும் நடனக் கலைஞருமான சுதா சந்திரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "படப் பிடிப்புத் தளத்துக்கு நான் ஒருபோதும் தாமதமாகச் செல்வதில்லை. ஆனால் இப்போதெல்லாம், சாலைகளின் மோசமான நிலை காரணமாக, அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்கள் தாமதமாகச் சென்று சேர்கிறேன்; இது எனது தயாரிப்பாளருக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. வேலைகளும் தாமதமாகின்றன.
கூடவே, மன அழுத்தமும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருப்பதால், ஒரே இடத்தில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை நகர முடியாமல் சிக்கிக் கொள்ளும் நிலை இருக்கிறது; அந்தச் சூழலில் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க வழி இருப்பதில்லை. ஓராண்டுக்குப் பிறகு நான் ‘மத் ஐலேண்ட்’-டுக்குச் சென்றேன். அங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதைப் புரிந்துகொண்டாலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ யாரும் இல்லை. அதுவே முக்கிய பிரச்சினைக்கு காரணம். இப்போது ஒரு கதையில் என் கதாபாத்திரத்தைக் கேட்பதை விட, படப்பிடிப்பு நடைபெறும் இடம் எது என்பதையே அதிகம் விசாரிக்கிறேன். பயணத்தில் ஏற்படும் சிரமங்கள் காரணமாக, என்னால் பல வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பலாப்பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்திற்கு உதவி புரிகிறது.
வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்கவல்லது. அதாவது வயது முதிர்வை தள்ளிப் போடுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுக்கிறது.
கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பலாப்பழம் புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுகிறது.
பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள கொட்டைகளும் பல்வேறு நன்மைகள் கொண்டது. பலாப்பழ கொட்டைகளை பாலில் சில நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு அதை நன்கு அரைத்து,முகத்தில் தோல் சுருக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கங்கள் நீங்கும். இதை தொடர்ந்து 6 வாரங்களுக்கு மேல் செய்து வந்தால் சிறப்பான பலன் உண்டு.
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன.
பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும்.
ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும் திறன் பலாப்பழத்திற்கு உண்டு. குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் பலாப்பழம் பேருதவி புரிகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்ப பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களில் அனுகூல பலன்கள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாக்குறுதி அளிப்பதை தவிர்ப்பது நல்லது. புதிய வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
ரிஷபம்
தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். இணைய வர்த்தகத்தில் கவனம் வேண்டும். சுப காரிய தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். ஆடம்பரமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கடகம்
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்து இருந்த பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் புரிதல் அதிகரிக்கும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்குகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சிம்மம்
அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சபை தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கன்னி
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். அணுகுமுறைகளில் மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வீடு வாகனங்களை சரி செய்வீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் ஆதரவுகள் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான உத்வேகம் பிறக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
துலாம்
மனதில் ஒரு விதமான கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்கள் மூலம் அலைச்சல் ஏற்படும். அரசு செயல்களில் இருந்த முரண்பாடுகள் மறையும். பணிபுரியும் இடத்தில் ஆர்வமின்மை ஏற்படும். நயமான பேச்சுக்களை நம்பி கருத்துக்களை பகிர வேண்டாம். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். திடம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விருச்சிகம்
மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். நண்பர்கள் உதவிகளால் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் உயரும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். நுட்பமான விஷயங்களை எளிதாக புரிந்து கொள்வீர்கள். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
சவாலான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். விளையாட்டு செயல்களில் ஆதாயம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் ஏற்படும். மின் சாதனப் பொருட்களில் கவனம் வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பூர்வீக வீட்டை மாற்றி அமைப்பீர்கள். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மகரம்
வியாபாரத்தில் சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கும்பம்
ஆரோக்கிய விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் பற்றிய தன்மைகளை அறிந்துகொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளும் தன வரவுகளும் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை வெற்றி கொள்வீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 24.3.2026.
இன்று இரவு 7.30 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று இரவு 10.10 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.
இன்று காலை 11.57 வரை ப்ரீதி. பின்னர் ஆயுஷ்மான்.
இன்று காலை 8.42 வரை கௌலவம். பின்னர் இரவு 07.30 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று இரவு 10.10 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா தோன்றும் ‘முதல் முதலாய்’ என்ற மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர், இயக்குநர் மற்றும் நடன இயக்குநராக வலம் வருபவர் பிரபுதேவா. அவரது மகன் ரிஷி தேவா இன்டி மியூசிக்கல் வீடியோ மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி இருக்கிறார். இந்த வீடியோ பதிவில் அசத்தலாக நடனமாடி, நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.
‘முதல் முதலாய்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படலை ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் எழுதி இசையமைத்துள்ளார். இதனை ஜி.வி.பிரகாஷ்குமார் பாடியிருக்கிறார். இதில் ரிஷி தேவா மற்றும் கைரா இருவரும் இணைந்து நடனமாடி இருக்கிறார்கள்.
இப்பாடல் காதல், அப்பாவித்தனம், மறக்க இயலாத தருணங்கள் உள்ளிட்டவற்றை பாடல் வரிகளாக எழுதியிருக்கிறார்கள்.
இப்பாடலை ட்ரஸ்டினா ஐசக் இயக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த ஆல்பம் பாடலை சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சிறுவர்கள் வீட்டில் உள்ள பொருட்களைத் தவறுதலாக உட்கொள்வதால் ஏற்படும் நச்சுப் பாதிப்புகள் (Accidental Poisoning) சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
இது குறித்து ஒண்டாரியோ நச்சுத்தன்மை கட்டுப்பாட்டு மையம் (Ontario Poison Centre) மற்றும் சுகாதார நிபுணர் டாக்டர் பால் ரூமெலியோடிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் ஒண்டாரியோ நச்சுத்தன்மை கட்டுப்பாட்டு மையம் நாளொன்றுக்கு சராசரியாக 189 நச்சுப் பாதிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 6 வயதிற்குட்பட்ட சுமார் 24,000 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் சில ஆபத்தான வீட்டு உபயோகப் பொருட்களை உணவுப் பொருட்கள் என தவறாக கருதி உட்கொள்கின்றனர்.
வண்ணமயமான ஜன்னல் மற்றும் தரை சுத்திகரிப்பான்கள் (Cleaning liquids) குளிர்பானங்கள் அல்லது பழச்சாறுகளைப் போலவே இருப்பதால் சிறுவர்கள் அவற்றைக் குடிக்க நேரிடுகிறது.
சலவை மற்றும் பாத்திரங்களைக் கழுவும் 'பாட்கள்' (Pods), இவை மிட்டாய்களைப் போல காட்சியளிப்பதால் சிறுவர்கள் அவற்றை மெல்லுகின்றனர்.
இவை வாயில் வெடிக்கும் போது கடுமையான பாதிப்புகளை உண்டாக்குகின்றன. விட்டமின் மாத்திரைகள் (Vitamins) மிட்டாய்களைப் போன்ற சுவையிலும் வடிவத்திலும் இருக்கும் வைட்டமின் மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியும்.
கஞ்சா கலந்த தின்பண்டங்கள் (Edible Cannabis): சாக்லேட் மற்றும் பிஸ்கட் வடிவில் வரும் கஞ்சா தயாரிப்புகள் சிறுவர்களை எளிதில் ஈர்க்கின்றன.
டொரண்டோ பெரும்பாக பகுதிகளில் (GTA) ஞாயிற்றுக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக அபாயகரமான சூழல் உருவாகியுள்ளதால், நீர்நிலைகளிலிருந்து விலகி இருக்குமாறும், மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்யுமாறும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டொரண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆணையம் (TRCA) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள நீர் பாதுகாப்பு குறித்த ஆலோசனையில் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் மழை, வெப்பமான காலநிலை மற்றும் உருகும் பனி ஆகியவை இணைந்து டொரண்டோ பிராந்திய ஆறுகளில் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடும்.
தற்போதைக்கு பெரும் வெள்ள அபாயம் ஏதும் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒண்டாரியோவின் தற்போதைய நிலை இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக தெற்கு மற்றும் மத்திய ஒண்டாரியோவின் பல பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அவை 'நீர் பாதுகாப்பு எச்சரிக்கையாக' (Water Safety Advisories) குறைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், ஒட்டாவா முதல் சர்னியா வரை பரவியுள்ள குறைந்தது 14 பாதுகாப்பு ஆணையங்கள் இன்னும் இந்த பாதுகாப்பு எச்சரிக்கையை நடைமுறையில் வைத்துள்ளன. இந்த வாரம் டொரண்டோவில் பெரிய அளவில் மழை இருக்காது என்று கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


