- · 1 friends
-
2 followers
கண்மணியே காதல் என்பது
பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்
பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
திரைப்படம்: ஆறிலிருந்து அறுபது வரை
பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
ஆண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
ஆண்
: மேளம் முழங்கிட தோரணம் ஆடிட…
காலமும் வந்ததம்மா…
நேரமும் வந்ததம்மா…
பெண்
: பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்…
பாடிடும் எண்ணங்களே…
இந்தப் பாவையின் உள்ளத்திலே…
ஆண்
: பூவிதழ் தேன் குலுங்க…
சிந்தும் புன்னகை நான் மயங்க…
பெண்
: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
சாய்ந்திருப்பேன்… வாழ்ந்திருப்பேன்…
ஆண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
பெண்
: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
பெண்
: பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது…
காரணம் நீயறிவாய்…
தேவையை நானறிவேன்…
ஆண்
: நாளொரு வேகமும் மோகமும் தாபமும்…
வாலிபம் தந்த சுகம்…
இளம் வயதினில் வந்த சுகம்…
பெண்
: தோள்களில் நீயணைக்க…
வண்ணத் தாமரை நான் சிரிக்க…
ஆண்
: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
தோரணமாய் ஆடிடுவேன்…
பெண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
ஆண்
: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
பெண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் தூக்கமின்மை உண்டாகும். பழைய பிரச்சனைகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். மதி நுட்பத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சாஸ்திரம் சார்ந்த பணிகளில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். நண்பர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். அரசு பணியில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். சக ஊழியர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். போட்டிகளில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். எதிலும் விடாப்பிடியாக செயல்படுவீர்கள். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கடகம்
தன வருவாய் மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஆதரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளரின் ஒத்துழைப்புகள் மேம்படும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
சிம்மம்
நண்பர்களின் ஆதரவால் நன்மைகள் கிடைக்கும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல்கள் அமையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கன்னி
இனம் புரியாத சில சிந்தனைகளால் மனக்குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் உடல் சோர்வை ஏற்படுத்தும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் பிறக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புதிய புரிதல்கள் ஏற்படும். தொழில் நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் நிதானம் வேண்டும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்புகள் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். மனதில் எண்ணிய ஆசைகள் நிறைவேறும். பிற மொழி பேசும் மக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். திருத்தல தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். நிர்வாக பணிகளில் பொறுப்பும் திறமையும் வெளிப்படும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செயல்பாடுகளில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பயணம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். புதுவிதமான அனுபவங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மற்றவர்களின் செயல்பாடுகள் மூலம் ஆதாயம் மேம்படும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மகரம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். சிந்தனைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். வாகன பயணத்தில் மிதவேகம் நன்று. பத்திரம் தொடர்பான துறைகளில் விழிப்புணர்வு வேண்டும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
மனதில் ஆன்மிக நாட்டம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். சுபகாரிய எண்ணம் பலிதமாகும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி
மீனம்
விலகி சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். இடப்பெயர்ச்சி சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். குறுகிய பயணத்தால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வாரிசுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உருவாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தென்னிந்தியா மற்றும் பாலிவுட் படங்களில் தனது நடிப்பால் கவர்ந்த பிரகாஷ் ராஜ், சமீபத்தில் கேரள இலக்கிய விழாவில் உரையாற்றினார். 'எதிர்ப்பை குற்றமாக்குதல்! பேசினால் யார் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்?' என்ற தலைப்பில் பேசும்போது, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சமீபத்திய சர்ச்சையை உதாரணமாகக் குறிப்பிட்டார். மேலும், கங்கனா ரனாவத் ரஹ்மானை விமர்சித்ததையும், மக்கள் 'முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார்கள்' என்று கூறியதையும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜ், ரஹ்மான் தொடர்பான சர்ச்சை குறித்து பேசுகையில், “ஏ.ஆர். ரஹ்மானுக்கு என்ன நடக்கிறது? பொதுவெளியில் என்ன விவாதம் நடக்கிறது? மா துஜே சலாம். ஜெய் ஹோ. இரண்டு ஆஸ்கர்கள். நீங்கள் மகிழ்ச்சியடைந்தீர்கள். உங்கள் தகவலுக்காக, அவர் வேலைக்காக கெஞ்சவில்லை, அவர் அதற்கும் மேலானவர், இதுதான் உண்மை.”
ரஹ்மான் ஒரு நேர்காணலில் 'சாவா' படத்தை 'பிளவுபடுத்தும்' படம் என்று கூறியதற்காக விமர்சிக்கப்பட்டார். பாலிவுட்டில் தனக்கு வேலை கிடைக்காததற்கு 'மதவாத' காரணங்கள் இருப்பதாகக் கூறிய பிறகு கங்கனா பதிலளித்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "அன்புள்ள @arrahman ஜி, திரைப்படத் துறையில் காவி கட்சிக்கு ஆதரவளிப்பதால் நான் நிறைய பாகுபாடு மற்றும் பாரபட்சத்தை எதிர்கொள்கிறேன், ஆனால் உங்களை விட பாரபட்சமான மற்றும் வெறுப்பை பரப்பும் நபரை நான் பார்த்ததில்லை என்று சொல்ல விரும்புகிறேன்."
இந்திரா காந்தி அடிப்படையிலான தனது 'எமர்ஜென்சி' படத்திற்கு இசை அமைக்க மறுத்ததாகக் கூறி, அவர் மேலும் கூறினார், “நான் இயக்கிய 'எமர்ஜென்சி' படத்தின் கதையை உங்களுக்குச் சொல்ல விரும்பினேன். ஆனால் கதை சொல்வதை விடுங்கள், நீங்கள் என்னை சந்திக்கவே மறுத்துவிட்டீர்கள். நீங்கள் எந்த பிரச்சாரப் படத்திலும் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று எனக்குச் சொல்லப்பட்டது. முரண்பாடாக, 'எமர்ஜென்சி' அனைத்து விமர்சகர்களாலும் ஒரு சிறந்த படைப்பு என்று பாராட்டப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட படத்தை ஒருதலைப்பட்சமானது என்று கூறவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் வெறுப்பால் குருடாகிவிட்டீர்கள். உங்களைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.
இந்த முழு சர்ச்சைக்குப் பிறகு, ரஹ்மான் ஒரு வீடியோ அறிக்கையில் இந்தியா மற்றும் இசை மீதான தனது அன்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். யாரையும் புண்படுத்தும் எண்ணம் தனக்கு ஒருபோதும் இல்லை என்றும் அவர் கூறினார். சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது, ஆஸ்கர் வென்ற இசை அமைப்பாளர் இப்போது இதிலிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
டொராண்டோவின் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள டிம் ஹார்டன்ஸ் காபி கடைக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மாலை, லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் பெல்லமி ரோட் நார்த் சந்திப்புக்கு அருகிலுள்ள டிம் ஹார்டன்ஸ் கடையில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் சிறுவனை மீட்டதாக டொராண்டோ பொலிஸ் பரிசோதகர் எர்ரோல் வாட்சன் தெரிவித்தார்.
டொராண்டோ அவசர மருத்துவ சேவையினரின் தகவலின்படி, அந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. அவரின் சரியான வயதையும் பொலிஸார் தெரிவிக்க மறுத்துள்ளனர்.
சம்பவத்தின் போது கடையில் இருந்த ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும் வாட்சன் கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கொலை விசாரணைப் பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தற்போது அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டிற்கு வழிவகுத்த காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை.
1. குழந்தைகளின் பல்வேறு நோய்களுக்கு புங்க எண்ணெய் சிறந்த வீட்டு மருந்தாகப் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறுகள், இருமல், சளி, பேதி, பசியின்மை போன்றவற்றைப் போக்கும்.
2. புங்க எண்ணெய் சரும நோய்களையும் தீர்க்கக் கூடியது. இந்த எண்ணெய் மூல உபத்திரத்திற்கு சிறந்த மருந்தாகும். மார்புச் சளி, தீர இருமலுக்கு புங்க எண்ணெய் பயன்படுகிறது. சரும நோய்களுக்கும், ஆறாத புண்களுக்கும், கீழ்வாதத்திற்கும் புங்க எண்ணெய் பயன்படுகிறது. புங்க எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதுடன், பளபளக்கச் செய்யும்.
3. தினமும் உடலில் புங்க எண்ணெயைத் தடவி வந்தால் சரும நோய்கள் ஏற்படாது. புங்க எண்ணெய்யை பயன்படுத்தி சோரியாஸிஸ்சுக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது.
4. புங்க எண்ணெய் ஆஸ்துமா, நெஞ்சுக் கோளாறுகளுக்கு மருந்தாகிறது. புங்க எண்ணெய்யை நெஞ்சின் மீது பூசுவதால் நெஞ்சு சளி, இருமல் குறைகிறது. தலையில் பொடுகு இருந்தால் இதை தடவி பத்து நிமிடம் கழித்து குளித்தால், அரிப்பு சரியாகும்.
5. புன்னை எண்ணெய் அனைத்து முடிப் பராமரிப்பு எண்ணெய்களிலும் பெரும்பாலும் சேர்கபடுகிறது. புன்னை எண்ணெய் முடிஇழப்பைச் சரிசெய்யவும், புதிய முடிவளர்ச்சிக்கும் உதவி புரிகிறது. முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர இந்த எண்ணெய் உதவுகிறது.
6. இயற்கையாகவே புன்னை எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பானாகச் செயல்படுவதால் விளையாட்டு வீரர்களுக்கு காலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாக உபயோகபடுத்தப்படுகிறது.
7. நகச்சுற்று ஏற்படுத்தும் பூஞ்சைகளுக்கு எதிராக புன்னை எண்ணெய் சிறப்பான பலனை தருகிறது.
8. சொரியாஸிஸை குணப்படுத்துவதில் புன்னை எண்ணெய் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
9. புன்னை மரத்து இலைகளை அரைத்து, நெற்றியில் பற்று போல தடவி வர, ஒற்றைத் தலைவலி மற்றும் தலைச் சுற்றல் போன்ற பாதிப்புகள் விலகும்.
10. புன்னை பூவை நிழலில் உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை கொடுத்து வர டைபாய்டு தீரும்.
11. புன்னை எண்ணெய் தீக்காயங்களை ஆற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
12. முகச்சுருக்கங்களை நீக்குவதிலும் வரவிடாமல் தடுப்பதிலும் புன்னை எண்ணெய் சிறந்த பலன் தரும்.
13. செல்ல பிராணிகளுக்கு ஏற்படும் அரிப்பு மற்றும் புண்களுக்கு புன்னை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மேலும் விலங்குகளுக்குப் பளபளப்பையும், ரோமத்தை அழகாக்கவும் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
14. படர்தாமரையைக் குணப்படுத்த இந்த எண்ணெய் உதவுகிறது.
15. உடல் அரிப்பை, வறண்ட சருமத்தை மாற்றவும், நீக்கவும், சொறி, சிரங்கு வியாதிகளைக் குணப்படுத்தவும் புன்னை எண்ணெய் பயன்படுகிறது.
16. புன்னை எண்ணெய் உதட்டு வெடிப்புகளைத் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பாதிப்புக்கு ஏற்ப வைத்தியர்களின் அறிவுரைப்படி இந்த எண்ணெய் பயன்படுத்தலாம்
உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டீ, காபி அருந்துவது குறைந்து கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக மக்கள் " "கிரீன் டீ" அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்
. . உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள " கிரீன் டீ" உதவுவதாக நம்பப்படுகிறது.தினமும் காலையில் பருகுவதால், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப் பட்டு, புத்துணர்ச்சி தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது அதேபோல், இயற்கை ஆர்வலர்களால் குறிப்பிடப்படும் இன்னொரு வகை
,. " புளு டீ " ஆகும். நீல நிற சங்குப்பூவின் மூலம் தயாரிக்கப்படுவதே " புளு டீ" -ன் சிறப்பு
- . புளு டீ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது.
- இதில் ஆன்டி— கிளைகேஷன் இருப்பதால், வயது முதிர்வைத் தடுத்து, இளமையை பாதுகாத்துக்கொள்ள உதவுவதாக நம்பப்படுகிறது.
- தலையின் மேற்புறத்தில் உள்ள நுண் துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது.
- உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கிறது.
- நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- " புளு டீ" யில் உள்ள " ஃப்ளேவனாய்ட்ஸ் என்ற ரசாயனம் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.
- உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
- நோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
- தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் அதற்கு உண்டு.
- அஜீரணத்தை குணமாக்க வல்லது.
- வயிற்றில் உண்டாகும் புண், எரிச்சல் ஆகியவற்றை தடுக்கிறது.
- உடலின் வெப்ப நிலையைச் சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
- மன அழுத்தத்தைக் தவிர்க்க உதவுகிறது.
- " புளு டீ " தயாரிக்கும் முறை:
- "கிரீன் டீ" தயாரிப்பது போன்றே இதையும் தயாரிக்க வேண்டும். .
கொதிக்க வைத்த தண்ணீரில் சில நீலநிற சங்குப்பூக்களை போட்டு, ஐந்து நிமிடம் கழித்து, இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழச்சாறு சில சொட்டுகள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன் கலந்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம்.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் கட்டாயம் தகுந்த ஆலோசனையின்றி " புளு டீ" அருந்தக்கூடாது.
சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும் குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.
Bitter gourd in hot water can help you. No matter how busy u r, u need to read this, then spread to friends and others. Spread the love.
பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.
Hot bitter gourd can kill cancer cells!
சூடான பாகற்காய் சுடுநீர் .....கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது.
Cut 2-3 thin slices of bitter gourd n put in a glass, pour hot water, water will become alkaline (alkaline). Drink every day. For anyone, it will be useful.
பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்.
Hot water bitter gourd will emit an anti-cancer substance. This is a new development in the world of natural medicine, useful in treating cancer.
பாகற்காயில் உள்ள கேன்சர் நோயினை எதிர்க்கும் மருத்துவ பொருளினை சுடு தண்ணீரில் வெளியேற்றி விடும். இயற்கை மருத்துவத்துறையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
Hot water bitter gourd extract will affect the cyst and tumor. Already proven, it can help various kinds of cancer.
இந்த பாகற்காய் இரசமானது கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் மீது தீவிரமாக செயல்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபனமாகியுள்ளது. மேலும் இது பல்வேறு வகையான புற்றுநோய்களையும் தீர்க்க உதவுகிறது.
Using bitter gourd in treating cancer, it will only kill the malignant cells of the tumor. It will not affect healthy cells.
நாம் இந்த பாகற்காய் இரசத்தினை தொடர்ந்து பயன்படுத்தும் அது புற்றுநோய் கட்டியில் தீவிரமாக பரவக்கூடிய செல்கள் மீது அதிதீவிரமாக செயல் பட்டு Malignant எனப்படும் வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. தவிர பாதிக்கப்படாத மற்ற செல்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.
In addition, amino acids and polyphenol oxidase in bitter gourd, can balance high blood pressure, blood circulation, reduce blood clotting and can prevent the occurrence of deep vein thrombosis.
இது மட்டுமல்லாமல் பாகற்காயில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் பாலிஃபினல் ஆக்சைடுகள் நமது உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தினை சமன் செய்கிறது. இரத்த நாளங்களில் சீரான இரத்த ஓட்டத்தினையும், நாளத்தில் உள்ள இரத்த அடைப்புகளையும் சீர்செய்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் முதல் வயதான முதியவர்கள் வரை இன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியால் அவதிப் படுபவர்கள் ஏராளம். இந்த இடுப்பு வலிக்கு அவர்கள் செய்யும் வேலை கூட ஒரு காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி உண்டாகிறது. அதிலும் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்களுக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப் படுவதால் அவர்கள் தொடர்ச்சியான இடுப்பு வலியால் அவதிப் படுகிறார்கள். முறையான உடற்பயிற்சி இல்லாத காரணத்தாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது.
👉🏻இதற்கு தீர்வு என்ன?
நீங்கள் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்கள் என்றால், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் அடிக்கடி இருக்கையை விட்டு எழுந்து செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட கணினி மேஜைகளை பயன்படுத்த வேண்டும்.கணினி மேஜையின் உயரத்தை ஏற்றி இறக்கி பயன்படுத்துவது போல் வடிவமைத்துக் கொண்டால் நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் உயரத்திற்கு ஏற்ப மேஜையின் உயரத்தை மாற்றிக் கொள்ள எளிதாக இருக்கும். தினமும் வேலை முடிந்ததும் உடற் பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
கணினி முன் அமர்ந்து பணியாற்றும் போது நாற்காலியில் நன்றாக நிமிர்ந்த நிலையில் அமர்ந்து பணியாற்ற வேண்டும்.
தொடர்ந்து ஒரே மாதிரி அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்பு பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு முதுகுத் தண்டின் ஜவ்வில் தேய்மானம் ஏற்படுவதாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது.
நீங்கள் ஹை ஹீல்ஸ் அணியும் பழக்கம் உள்ளவர்கள் எனில் அதனால் கூட உங்களுக்கு இடுப்பு வலி முதுகு வலி ஏற்படலாம். உயரமான குதிகால் கொண்ட செருப்புகளை அணிந்து நீண்ட நேரம் நடக்கும் பொழுது உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்துவதால் முதுகு வலி, இடுப்பு வலி ஏற்படுகிறது. அதனால் உயரமான குதிகால் கொண்ட செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
👉இதற்கான எளிய தீர்வுகள் என்ன?
✍️கொள்ளு ரசம் வைத்துக் குடித்தால் இடுப்பு வலி குணமாகும். கொள்ளு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.
✍️மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் வயிற்று வலி நீங்க வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
✍️வெள்ளைப் பூண்டு மற்றும் கருப்பட்டி இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.
✍️மிளகை வறுத்து அதில் எள் எண்ணெய் கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.
✍️உணவில் உளுந்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் இடுப்பு வலி சரியாகும். உளுந்தை களி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.
மூட்டு வலி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். முக்கியமான சில காரணிகள்:
1. **வயது**: வயது அதிகரிக்கையுடன், மூட்டுகளில் க்ருமம் குறைவதால் மூட்டு வலி ஏற்படும்.
2. **அர்திரிடிஸ் (Arthritis)**: இந்நோய் மூட்டுகளில் அழற்சியை ஏற்படுத்துகிறது, இது மூட்டு வலியின் முக்கியமான காரணியாகும். இது ருமாடாய்டு அர்திரிடிஸ் (Rheumatoid Arthritis) அல்லது ஓஸ்டியோஅர்திரிடிஸ் (Osteoarthritis) ஆக இருக்கலாம்.
3. **மூட்டில் காயம்**: மூட்டு பகுதியில் ஏற்பட்ட அடிபடுதல், முறிவு அல்லது காயம் காரணமாக வலி ஏற்படலாம்.
4. **சதைப்பிடிப்பு (Gout)**: இது ஒருவகை அர்திரிடிஸ், உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும்.
5. **சவாசியல் பிரச்சினைகள்**: முதுகுத்தண்டு அல்லது மூட்டுகளின் சவாசியல் பிரச்சினைகள் மூட்டுகளின் செயல்பாட்டை பாதிக்கின்றன, இது வலிக்கு வழிவகுக்கும்.
6. **உடல் பருமன்**: உடல் பருமன் அதிகமாயிருப்பது மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும், அதனால் வலி அதிகரிக்கும்.
7. **நீரிழிவு**: நீரிழிவு நோயாளிகளில், நரம்புகள் மற்றும் மூட்டுகளில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
8. **அதிக உடற்பயிற்சி அல்லது உடல் சிரமம்**: அதிகமான உடற்பயிற்சி அல்லது உடல் சிரமம் மூட்டுகளை மேலிடுமாறு அவற்றைச் சிரமப்படுத்துகிறது.
மூட்டு வலி நீடித்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
முட்டைகோஸில் கால்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின், சல்பர் போன்ற அனைத்துவிதமான தாதுக்களும் உள்ளன. இச்சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கவேண்டுமானால் பெரும்பாலும் பச்சையாகவே சாறெடுத்துச் சாப்பிடுவதுதான் நல்லது.
வேகவைத்த கோஸைவிட வேகவைக்காத கோஸ் எளிதில் செரிமானமாகும். இதில் வைட்டமின் ஏ. பி. சி. மற்றும் யு ஆகியவை உள்ளன.
முட்டைகோஸின் மருத்துவ குணம் என்று எடுத்துக் கொண்டால் சிறுகுடலைத் தூண்டி அதைச் சரியாக செயல்பட வைக்கும் ஆற்றல் கொண்டது.
பச்சை முட்டைகோஸின் சாறு மலச்சிக்கலைப் போக்கும். முட்டைகோஸ் சாறு இரைப்பை, முன் சிறுகுடல் புண்ணை ஆற்றும். செரிமானப் பகுதியில் பெப்சின் என்ற அமிலம் சுரந்து இரைப்பை அரிக்கப்படுவதை கோஸ் தடுத்து விடுகிறது. சமைக்கும்போது அழிந்துவிடும் கோஸின் சத்துக்கள்
பச்சையாக சாப்பிடும்போது முழுமையாகக் கிடைக்கிறது.
உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நாம் பல்வேறு செயல்களை அன்றாடம் மேற்கொண்டு வருகிறோம். அதுவும் இயற்கை வழிகளின் மூலமே நாம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புகிறோம். அப்படி இயற்கையாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஓர் வழி தான் ஜூஸ் குடிப்பது.
அதிலும் வீட்டிலேயே காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்தால், நாம் தினமும் அடிக்கடி அவஸ்தைப்படும் நோய்களில் இருந்து விடுபட முடியும். இங்கு அப்படி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பானங்களில் ஒன்று கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடிப்பது.
இப்போது இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் இருக்கும் எந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும் என்று காண்போம்.
பார்வை மேம்படும் கண் பிரச்சனை இருந்தால், கேரட் ஜூஸில் இஞ்சி சாறு கலந்து குடியுங்கள். இதனால் அந்த பானம் கண்களில் உள்ள நரம்புகளுக்கு ஊட்டமளித்து, வலிமைப்படுத்தி, பார்வையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
புற்றுநோய் தடுக்கப்படும் கேரட் இஞ்சி ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அபாயகரமான புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் கேரட் மற்றும் இஞ்சியில், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து, நோய்களிடமிருந்து பாதுகாத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
குமட்டல் குறையும் இந்த இயற்கை பானம், வயிற்றில் உள்ள அமிலத்தை நிலைப்படுத்தி, குமட்டல் மற்றும் வாந்தி உணர்வைக் குறைக்கும்.
தசை புண்கள் கேரட் மற்றும் இஞ்சியில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் ஏராளமாக உள்ளது. இவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், தசைகளில் இருக்கும் உட்காயங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வலிகள் குறையும்.
இதய நோய்கள் கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ் இதயத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
வாய் ஆரோக்கியம் கேரட் இஞ்சி ஜூஸ், ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இது வாயில் எச்சிலின் உற்பத்தியைத் தூண்டி, வாய் வறட்சியடைவதைத் தடுத்து, வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.
ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:
கேரட் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி - சிறிது (துருவியது)
தண்ணீர் - தேவையான அளவு
ஆரஞ்சு ஜூஸ் - சிறிது (விருப்பமிருந்தால்)
செய்முறை: மிக்ஸியில் துண்டுகளாக்கப்பட்ட கேரட், துருவிய இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டினால், ஜூஸ் ரெடி!
- ஜீரண சக்தியை மேம்படுத்தும்.
- ஜீரண வழித்தட ஆரோக்கியத்தை பேணும்.
- மலச்சிக்கலைத் தடுக்கும்
- வாந்தி பேதி, வயிற்றுக் கடுப்பு, கிறுகிறுப்பு, தலைச்சுற்றலை குணப்படுத்தும்.
- சீத்தாக்காயை உலர்த்தி, பொடியாக்கி தலையில் தேய்த்தால், பேன் தொல்லை நீங்கும்.
- சீத்தாப்பழ விதைப்பொடியோடு கடலைமாவு கலந்து, எலுமிச்சை சாற்றில் குழைத்து, தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்தால், முடி உதிர்வது குறையும்.
சத்துக்கள்:
- இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், தாமிரச் சத்துக்இளை உள்ளடக்கியது.
- ஆரோக்கியமான தோலுக்குத் தேவைப்படும் , வைட்டமின் ஏ சத்து நிரம்பவே உள்ளது.
- பார்வைத் திறன் மேம்படவும் சீத்தாப்பழம் உதவுகிறது.
- இதிலுள்ள மெக்னீசியம் சத்து, இதய அடைப்பு நோய் வராமல் பாதுகாக்கும்.
- குறைவான கொழுப்புச்சத்தைக் கொண்டது.
- இதன் சதையை விழித்தெழுந்து, பாலுக்கு பதில் , பானமாக பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர்.
- இதன் மரப்பட்டையில் துவர்ப்பு சுவை அதிகம்; இதில் டானின் அமிலம் உள்ளது. எனவே, மருந்துகள் செய்யப் பயன்படுகிறது.
சேனைக்கிழங்கு அல்லது யாம் (Elephant Foot Yam) மருத்துவ குணங்கள் நிறைந்த கிழங்கு வகைகளில் ஒன்றாகும்.
இது ஆயுர்வேதம், சித்தா, மற்றும் யுனானி போன்ற பல மருத்துவ பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இது அறிவியல் ரீதியாக அமோர்போபாலஸ் பியோனிஃபோலியஸ் (Amorphophallus paeoniifolius) என்று அழைக்கப்படுகிறது.
சேனைக்கிழங்கு வழக்கமான சமையல் உட்பட பல மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு ஆகும்.
ஊட்டச்சத்து உண்மைகள்:
சேனைக்கிழங்கில் புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் ஆகியவை வளமாக நிறைந்துள்ளன.
100 கிராம் சேனைக்கிழங்கு பின்வரும் ஊட்டச்சத்தை வழங்குகிறது (2).
- கலோரிகள்: 118 கலோரிகள்
- நீர்ச்சத்து: 66 கிராம்
- கார்போஹைட்ரேட்டுகள்: 25 கிராம்
- கொழுப்பு: 1.5 கிராம்
- புரதம்: 9.81 கிராம்
- நார்ச்சத்து: 5.7 கிராம்
- பொட்டாசியம்: 1208 மிகி
- கால்சியம்: 20 மிகி
- இரும்பு: 1.8 மிகி
- மெக்னீசியம்: 82 மிகி
- சோடியம்: 14.2 மிகி
- துத்தநாகம்: 2 மிகி
- தாமிரம்: 0.3 மிகி
சேனைக்கிழங்கு உண்பதால் கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள் இதோ.
சேனைக்கிழங்கு உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
1. எடை இழப்பிற்கு உதவுகிறது
சேனைக்கிழங்கானது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை மிக அதிகமாகவும் மற்றும் குறைவான கலோரிகளையும் கொண்டுள்ளது.
மேலும் எலிகளின் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பாசிப்பயறு மற்றும் சேனைக்கிழங்கு ஆகியவை கொலஸ்ட்ரால் அளவைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது என தெரியவந்துள்ளது.
எனவே, சேனைக்கிழங்கு சாப்பிடுவது உங்களுக்குஉடல் எடையைகுறைக்கஉதவும்.
2. அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது
சேனைக்கிழங்கு சாறில் அழற்சி எதிர்ப்பு (Anti-Inflammatory) பண்புகள் உள்ளன என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன
எனவே, இது பல அழற்சி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, மூட்டுவலி, பெருங்குடல் அழற்சி போன்ற அழற்சி நோய்களின் போது வலியை தணிக்க உதவும்.
3. கல்லீரல் செயல்பாட்டை பாதுகாக்கிறது
சேனைக்கிழங்கில் குர்செடின் (Quercetin) எனப்படும் வேதிப்பொருள் உள்ளது.
கல்லீரல் செயல்பாடுகளை பாதுகாப்பதில் இந்த சேர்மம் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன
4. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்தது
சேனைக்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மிக அதிகளவில் உள்ளன
எனவே, இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை (Oxidative Stress) தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
மேலும், இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நமது முதுமைத் தோற்றத்தைத் தாமதப்படுத்தவும் (Prevents Ageing) உதவுகின்றன.
5. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது
சேனைக்கிழங்கு குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால் உங்கள் ரத்த சர்க்கரை அளவை விரைவில் உயர்த்தாது
மேலும், இதில் மாவுச்சத்து குறைவாகவும் மற்றும் கணிசமான அளவு நார்ச்சத்தும் உள்ளது.
இதுமட்டுமின்றி, சேனைக்கிழங்கில் நீரிழிவு நோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ன .
எனவே, இதனை உங்கள் வழக்கமான உணவுகளில் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.
6. ஹார்மோன் சமநிலை
சேனைக்கிழங்கானது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை உகந்த அளவில் பராமரிக்கிறது.
சேனைக்கிழங்கின் இந்த குணம் மாதவிடாய் முன் ஏற்படும் வலிகளை தடுக்கவும், அதிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
இதற்கு அதில் உள்ள வைட்டமின் B6 கூட காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது
7. மன அழுத்தத்தை தணிக்க உதவுகிறது
ஜிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், செலினியம் போன்ற அத்தியாவசிய கனிமங்கள் சேனைக்கிழங்கில் வளமாக நிறைந்துள்ளன.
இந்த கனிமங்கள் மன அழுத்தத்தை தணிக்கவும், இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகின்றன.
8. மலச்சிக்கலை போக்கும்
சேனைக்கிழங்கு செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் மலச்சிக்கலை தணிக்க உதவுகிறது.
மேலும், இது தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு மற்றும் மூல நோய் போன்ற செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மற்றவர்களுக்கு கருத்துசொல்வதை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார நிமித்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மையான சூல்நிலைகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான செயல்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்த மந்த தன்மை குறையும். மறைமுக திறமைகளை வெளிப்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
மிதுனம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். மனதிற்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பயணங்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனை விற்பது வாங்குவது தொடர்பான பணிகளில் லாபங்கள் உண்டாகும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில மாற்றம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். கற்றல் பணிகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
சிம்மம்
அரசால் அனுகூலம் உண்டாகும். கல்வி பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீகத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கி சாதகமான முடிவுகள் ஏற்படும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதன் மூலம் ஆர்வம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி
துலாம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். அரசு பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
விருச்சிகம்
போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர் பாலின மக்கள் மூலமாக பிறக்கும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். குறுந்தொழில் கடன் கொடுப்பதில் சிந்தித்து செயல்படவும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். பழைய நினைவுகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த சில நெருக்கடிகள் தோன்றி மறையும். பொன் பொருள்களை கையாள்வதில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி செயல்படவும். அரசு பணிகளில் தாமதங்கள் உண்டாகும். பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மகரம்
உடன் இருப்பவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனை சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். சிரமம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சிந்தனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்துகொள்வீர்கள். கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் மேம்படும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். கோபத்தை குறைத்து செயல்படுவதன் மூலம் உறவுகள் மேம்படும். புதுவிதமான கலைகளில் ஆர்வம் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விசுவாவசு வருடம் தை மாதம் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6.2.2026.
இன்று அதிகாலை 01.41 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.
இன்று அதிகாலை 02.44 வரை சுகர்மம். பின்னர் திருதி.
இன்று அதிகாலை 03.11 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 02.54 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று அதிகாலை 04.41 வரை மரண யோகம். பின்னர் காலை 06.35 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.00 முதல் 10.00 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
தமிழ் திரையுலகில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக வழங்கவிருக்கும் திரைப்படம் 'தாய் கிழவி'. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், மூத்த நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ராதிகாவின் 'பவுன் தாய்' என்ற வட்டிக்கு விடும் அதிரடி கதாபாத்திரத்திற்காகப் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இப்படத்தின் முதல் பாடலான 'தாய் கிழவி வாரா' தற்போது வெளியாகியுள்ளது.
இப்பாடலின் மிக முக்கியமான ஈர்ப்பு என்னவென்றால், இதனை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியிருப்பதுதான். துள்ளலான இசையில் அவரது குரல் பாடலுக்கு ஒரு தனி ஆற்றலை வழங்கியுள்ளது. இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, கிராமத்து மணமும் நவீன இசையும் கலந்த ஒரு தரமான பாடலை வழங்கியுள்ளார். கருமாத்தூர் மணிமாறன் எழுதியுள்ள வரிகள், 'பவுன் தாய்' கதாபாத்திரத்தின் கம்பீரத்தையும் அந்த ஊரில் அவருக்கு இருக்கும் செல்வாக்கையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன.
கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் (Canadian Immigration Minister Lena Diab)தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் வெளியேறுவதைக் கண்காணிக்க டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறும் போது அவரது விபரங்களை எல்லைப் பாதுகாப்பு முகவரகம் பதிவு செய்கிறது.
எனினும் விசா காலம் முடிந்ததால் குறிப்பிட்ட நபர் வெளியேறுகிறாரா என்பதைத் தானாகக் கண்டறியும் வசதி இல்லை என கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் (Canadian Immigration Minister Lena Diab) சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை சாதாரண நடைமுறையின் மூலம் சரிபார்க்க அதிக நேரம் எடுப்பதால், அதனை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2026ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் தற்காலிக விசாக்கள் காலாவதியாகவுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பலா விதையில் நிறைய சத்துக்கள் உள்ளன ! வயோதிகம் காரணமாக , இரும்புச்சத்து உடலை பாதிக்கும் அனீமியா உள்ளிட்ட ரத்த குறைபாடுகளை தடுக்கும் . இதில் , வைட்டமின் - ஏ சத்து அதிகம் . இது பார்வை திறனைக் கூர்மையாக்கும் . மாலைக்கண் நோய் வராமல் தடுக்கும் ; மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் .
தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவாகி , முடி அடர்த்தியாக வளர உதவும் . இதை சமைத்து உண்பதால் சுருக்கத்தை குறைக்கும் ; சருமத்தை பொலிவாக்கும் ! பலா விதைகளை அரைத்து , தேன் மற்றும் பாலுடன் கலந்து , ' பேஸ் பேக் ' போல் பயன்படுத்தலாம் .
பலா விதையை பொடி செய்து , நீருடன் கலந்து குடித்தால் , செரிமானக் கோளாறுகள் தீரும்













