- · 1 friends
-
1 followers
கண்மணியே காதல் என்பது
பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்
பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
திரைப்படம்: ஆறிலிருந்து அறுபது வரை
பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
ஆண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
ஆண்
: மேளம் முழங்கிட தோரணம் ஆடிட…
காலமும் வந்ததம்மா…
நேரமும் வந்ததம்மா…
பெண்
: பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்…
பாடிடும் எண்ணங்களே…
இந்தப் பாவையின் உள்ளத்திலே…
ஆண்
: பூவிதழ் தேன் குலுங்க…
சிந்தும் புன்னகை நான் மயங்க…
பெண்
: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
சாய்ந்திருப்பேன்… வாழ்ந்திருப்பேன்…
ஆண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
பெண்
: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
பெண்
: பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது…
காரணம் நீயறிவாய்…
தேவையை நானறிவேன்…
ஆண்
: நாளொரு வேகமும் மோகமும் தாபமும்…
வாலிபம் தந்த சுகம்…
இளம் வயதினில் வந்த சுகம்…
பெண்
: தோள்களில் நீயணைக்க…
வண்ணத் தாமரை நான் சிரிக்க…
ஆண்
: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
தோரணமாய் ஆடிடுவேன்…
பெண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
ஆண்
: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
பெண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு, அந்த நிறுவனத்தை அவரது மகன் ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். "நானும் ஒரு பெண்", "சம்சாரம் அது மின்சாரம்", "சிவாஜி", "வேட்டைக்காரன்", "மின்சார கனவு", "அயன்" உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.
தமிழ்த் திரைப்பட உலகின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஏ.வி.எம். சரவணன். வயதுமூப்பு காரணமாக அவர் இன்று காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக, ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது. 1958 ஆம் ஆண்டு முதல் சினிமா தயாரிப்பில் சரவணன் ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்போதும் கைகளை கட்டிக் கொண்டே நிற்கும் அவர் பணிவின் சிகரம் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயவாடாவில் பிறந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பதினாறு மொழிகளில் 22000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கர்நாடக இசை பயின்றவர்.
இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய இசைக் குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 1985-ஆம் ஆண்டு கற்பூர தீபம் என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா வாய்ப்பு கொடுத்தார்.
1986-ஆம் ஆண்டு இளையராஜா, பூவிழி வாசலிலே என்றத் தமிழ்த் திரைப்படத்தில் “அண்ணே அண்ணே” என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். அன்றிலிருந்து இவரது பாடல் பயணம் ஆரம்பித்தது. வேலைக்காரன், சின்னத்தம்பி, காதலன், சொல்லத்துடிக்குது மனசு, உள்ளத்தை அள்ளித்தா, சின்னக்கண்ணம்மா, முத்து, எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, சிற்பி., எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், தேவா, சந்திரபோஸ் போன்றவர்களின் இசையமைப்பில் தொடர்ந்து பாடிவந்தார்.
ஒருவர் தனது வயிறு சரியில்லை என்று ஒரு மருத்துவமனைக்கு செல்கின்றார்..அங்கு ஒரு மருத்துவரை சந்திக்கின்றார்...
பேஷண்ட் :- டாக்டர் எனக்கு கொஞ்ச நாளாவே வயிறு சரியில்ல'''' ஒரே காத்தா போகுது டாக்டர் """"
டாக்டர் :- ""என்ன காத்தா போகுதா ?"""எந்த கலர்ல போகுது வெள்ளையாவா ?"""
பேஷண்ட்::- """கலர்லம் இல்லை டாக்டர் இல்லை டாக்டர் கொஞ்சம் சத்தமா போகுது """""".
டாக்டர் :-- அப்போ இது கொஞ்சம் சீரியஸான விஷயம்தான்....நீங்க அரைஞாண் கயிறு கட்டியிருக்கீங்களா?""
பேஷண்ட் :- ஹ்ம்ம் ஆமாம் டாக்டர் கட்டியிருக்கேன்..
டாக்டர் :- அப்போ நான் கொடுக்கிற இந்த மாத்திரையை நீங்க உங்க அரைஞாண் கயிறுல தாயத்து மாதிரி கட்டிக்கோங்க அப்புறம் மஞ்சள் அது கூட மஞ்சள் துணி குங்குமம் எல்லாம் வெச்சி சேர்த்துக் கட்டிக்கோங்க...காத்து கருப்பெல்லாம் உங்களை அண்டவே அண்டாது
பேஷண்ட்:- குழப்பத்துடன் """ஹ்ம்ம் என்ன இந்த டாக்டர் """ஒரு """மாதிரியா பதில் சொல்றார் ????""""மெதுவாக டாக்டரை பார்த்துவிட்டு சொல்கின்றார் சார் நான் கொஞ்சம் தண்ணீர் குடிச்சிட்டு வந்துடறேன்...
டாக்டர்:- சரி போங்க போங்க....
பேஷண்ட்: வெளியே வந்ததும் இருவரை விசாரிக்கின்றார்...அவர்கள் சொன்ன பதில் நீங்க வந்தது சரியான ஆஸ்ப்பிட்டல் தான் ஆனா நீங்க பார்த்தது ஒரு மனநோயாளிகள் பிரிவில இருந்து தப்பிச்சிட்டு வேற ஒரு பிரிவிற்கு ஓடி வந்துட்ட மன நிலை பாதிக்கப்பட்ட "சாமியாடி "..தான்...நல்ல வேளை நீங்க தப்பிச்சிட்டீங்க என்றதுமே பேஷண்ட் தலை தெறிக்க ஓடுகின்றார்....
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சவாலான சில சூழலை எதிர்கொள்ள வேண்டிவரும். வீடு மாற்றம் சிந்தனை கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்குகான அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகம் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
வீடு மாற்ற எண்ணங்கள் அதிகரிக்கும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பயணங்கள் மூலம் புது விதமான அனுபவம் உண்டாகும். கால்நடைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களால் மாற்றமான தருணங்கள் உருவாகும். சக ஊழியர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். மகிழ்ச்சி பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம்
திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகள் இடத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
குடும்பத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்களால் பொறுப்புக்கள் மேம்படும். நண்பர்களின் வருகை உண்டாகும். வியாபார முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையில் மேன்மை அடைவீர்கள். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
சிம்மம்
சமூக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். செயல்பாடுகளில் இருந்து மந்த தன்மை குறையும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். சமூக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். மேன்மை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
கன்னி
குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
துலாம்
சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இனம் புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் வழியில் மதிப்புகள் ஏற்படும். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
தனுசு
செயல்களில் இருந்த தடைகள் விலகும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மகரம்
குடும்பத்துடன் நேரங்களில் செலவழித்து மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மதிப்பளித்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
கும்பம்
எதிர்பாராத சில பணிகள் முடியும். தாய் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வரவுகளால் கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் மேன்மையை உருவாக்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிற்ப பணிகளில் திறமைகள் வெளிப்படும். துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பாராட்டு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மீனம்
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். செல்வ சேர்க்கை குறித்த எண்ணங்கள் உண்டாகும். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சிறு மற்றும் குறு தொழில் குறித்த எண்ணங்கள் மேம்படும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை 4.12.2025.
இன்று காலை 07.54 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.
இன்று மாலை 03.08 வரை கிருத்திகை . பின்னர் ரோகிணி.
இன்று பிற்பகல் 01.03 வரை சிவம். பின்னர் சித்தம்.
இன்று காலை 07.54 வரை வணிசை. பின்னர் மாலை 05.55 வரை பத்தரை. பிறகு பவம்.
இன்று காலை 06.15 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
•சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு
மிஞ்சிய தெய்வமில்லை.
•வயலூர் இருக்க அயலூர் தேவையா?
•காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
•அப்பனைப் பாடிய வாயால் – ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
•முருகனுக்கு மிஞ்சிய தெவமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம்
இல்லை.
•சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால்
அகப்பையில் வரும்)
•கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
•கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
•பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
•சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
•செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
•திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
•வேலனுக்கு ஆனை சாட்சி.
•வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
•செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
•வேலை வணங்குவதே வேலை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர்.
அனிருத் இசை அமைக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதில் இந்தி நடிகரான ஷாருக்கானும் நடிக்க இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. ‘கூலி’ படத்தில் நடிக்க ஷாருக்கானிடம் கேட்டதாகவும் பல்வேறு காரணங்களால் அவர் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதனால் ஆமிர்கான் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இப்போது ஜெயிலர்-2 படத்தில், ஷாருக்கான் நடிப்பார் என்றும் அவர் தொடர்பான காட்சிகள் மார்ச்சில் படமாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
தீவிர கார் பந்தய வீரரான அஜித், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியையும் சொந்தமாக வைத்திருக்கிறார். இந்த அணி, துபாய், பெல்ஜியம், இத்தாலி போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றது.
அடுத்து மலேசியாவில் நடக்கும் 24 ஹெச் கார் பந்தயத்தில் பங்கேற்கிறது. இதற்காக அவர் மலேசியா சென்றுள்ளார். இந்நிலையில் அங்குள்ள பத்து மலை முருகன் கோயிலில் அவர் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். இந்த கோயிலில்தான் அவர் நடித்த ‘பில்லா’ படத்தில் வரும், ‘சேவல் கொடி பறக்குதடா’ பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அஜித் பத்துமலை முருகன் கோயிலில் சுவாமி கும்பிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம் ஒன்றை மூட கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்ததைத் தொடர்ந்து அந்நிறுவன உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.
இந்நிலையில், அந்த உணவகத்தை கனேடிய நிறுவனம் ஒன்று வாங்கி விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
லண்டனிலுள்ள Regent Street என்னும் பிரபலமான தெருவில் அமைந்துள்ள Victory House என்னும் கட்டிடத்தில் வீராஸ்வாமி உணவகம் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது.
சுமார் 100 ஆண்டுகளாக லண்டனின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன வீராஸ்வாமி உணவகம் அமைந்துள்ள கட்டிடத்தை அலுவலகமாக மாற்ற அதன் உரிமையாளரான Crown Estate என்னும் அமைப்பு முடிவு செய்துள்ளது.
உணவகத்துக்கு Crown Estate மாற்று இடம் தருவதாக கூறியுள்ளது என்றாலும், பாரம்பரியத்தை எப்படி இடம் மாற்ற முடியும் என பிரபல பிரித்தானிய ஹொட்டல் துறை நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆக, இந்த விடயம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், Fairfax Financial Holdings Limited என்னும் கனேடிய நிறுவனம் அந்த உணவகத்தை வாங்கி விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
உண்மையில், வீராஸ்வாமி உணவகம், சட்னி மேரி, அமயா என்னும் மூன்று உணவகங்களும் MW Eat Ltd என்னும் நிறுவனத்துக்கு சொந்தமானவை. MW Eat Ltd நிறுவனத்தை நிறுவியவர்கள் நமிதா பஞ்சாபி மற்றும் ரஞ்சித் மத்ரானி என்னும் இந்திய வம்சாவளி தம்பதியர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தம்பதிகளுக்குள் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். ஜாமின் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். சஞ்சலமான பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
ரிஷபம்
ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
எதையும் சமாளிக்கும் மனவலிமை உருவாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். வியாபாரம் நிமித்தமான உதவிகள் சாதகமாகும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலை ஆட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சிம்மம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். செலவுகளை சமாளிப்பதற்கான சூழல்கள் அமையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். இழுபறியான சுப காரியம் பேச்சுகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வெளிநாட்டு பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி வழி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தடங்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
திட்டமிட்ட பணிகள் தள்ளி போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சமூகம் தொடர்பான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்கள் பணிகளையும் பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
துலாம்
மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் பெருகும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகள் ஓரளவு குறையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
விருச்சிகம்
சாமர்த்தியமான செயல்பாடுகளால் காரிய அனுகூலம் ஏற்படும். தன வரவுகளால் நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் முன்னுரிமை ஏற்படும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நேர்மை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
தனுசு
புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மகரம்
வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உறவினர்கள் வழியில் சில உதவிகள் சாதகமாகும். விளையாட்டு துறையில் மேன்மை ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்புகள் மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். புதிய வாகன செயற்கை உண்டாகும். வெளிவட்டத்தில் அனுபவம் மேம்படும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
டிட்வா புயல் பாதிப்பு காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை கடல் பகுதியில் கடந்த மாதம் 26ம் தேதி உருவான டிட்வா புயல் இலங்கையை தாக்கிய பின் வங்கங் கடல் பகுதியில் கடந்த 29-ம் தேதி நுழைந்தது. இந்த புயல் காரணமாக இலங்கையில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
இதையடுத்து இலங்கையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. பாதிக்கப்பட்ட 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1,500 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா சார்பில் நிவாரண பொருட்கள் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படை ஜம்போ விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. நெருக்கடி நிலையை சமாளிக்க சர்வதேச அமைப்புகளின் உதவியை இலங்கை நாடியது.
இதையடுத்து மேலும் 10 டன் நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இலங்கையில் மழை பாதிப்பு குறைந்தாலும், தாழ்வான பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இங்கு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 400 பேரை புயலுக்குப்பின் காணவில்லை. இவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
வெள்ள பாதிப்பு காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு 1,500 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. அதனால் மக்கள் அதிகளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிம்புவுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, டிசம்பர் 8-ம் திகதி ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குகிறது.
நவம்பர் மாதத்தில் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், வேல்ஸ் நிறுவனத்துக்கு சிம்புவின் தேதிகள் எப்போது என்பது தெரியாமல் படம் தொடங்க முடியாத சூழல் உருவானது. இதனால் சிம்பு – வேல்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் வேல்ஸ் நிறுவனத்துக்கு எப்போது தேதிகள் என்பதை சிம்பு தெரிவிக்க வேண்டும் அல்லது அஸ்வத் மாரிமுத்து படத்துக்கு முன்னதாக வேல்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய அட்வான்ஸ் தொகையினை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று சிம்புவிடம் கூறப்பட்டுள்ளது.
இதனால் வேல்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 8-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.
வெற்றிமாறன் இயக்கவுள்ள ‘அரசன்’ படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க வேண்டும் என்று தொடங்கப்படுகிறது.
* தேனை மட்டும் சேகரிக்கும் தேனீக்கள் போல எங்கு சென்றாலும் அங்கிருக்கும் நல்லதை மட்டுமே காணுங்கள்.
* வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்குரிய படிக்கட்டு என்பதை மறக்காதீர்கள்.
* கடவுளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் போதும். அவர் நம்மை நோக்கி நூறடி முன் வர காத்திருக்கிறார்.
* உயிர்கள் மீது அன்பு செலுத்துவதே கடவுள் விரும்பும் சிறந்த நைவேத்யமாகும்.
- அமிர்தானந்தமயி
‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை நகலெடுத்த ரன்வீர் சிங்கிற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘காந்தாரா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பூத கோலா வழிபாட்டு முறையை ரன்வீர் சிங் நடித்துக் காட்டினார். மேலும், அந்தத் தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த செயல் துளு நாடு மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘காந்தாரா’ படத்தில் வரும் காட்சிகள் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் துளு மக்களின் கலாச்சாரம் மற்றும் தெய்வ வழிபாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
அப்படிப்பட்ட புனிதமான தெய்வத்தை ரன்வீர் சிங் கேலி செய்யும் விதமாக பாவனை செய்ததாகவும், அதனை ‘பேய்’ என்று தவறாக அழைத்ததாகவும் துளு அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும், இந்தச் சம்பவம் நடந்தபோது மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த ரிஷப் ஷெட்டி அதைத் தடுக்காமல் சிரித்ததற்கும் கண்டனங்கள் எழுந்தன.
துளு சமுதாய தலைவர்கள், ரன்வீர் சிங் மற்றும் ரிஷப் ஷெட்டி இருவரும் கத்ரி மஞ்சுநாதா கோயிலுக்கு வந்து தெய்வ சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். சமூக வலைதளங்களிலும் ரன்வீருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்தன.
இதனையடுத்து, ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். அதில், “ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், சம்பிரதாயத்தையும் மதிப்பவன். எனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

















