·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 978
  • More

கண்மணியே காதல் என்பது

பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி

இசையமைப்பாளர்: இளையராஜா

திரைப்படம்: ஆறிலிருந்து அறுபது வரை

பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

ஆண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

ஆண்

: மேளம் முழங்கிட தோரணம் ஆடிட…

காலமும் வந்ததம்மா…

நேரமும் வந்ததம்மா…

பெண்

: பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்…

பாடிடும் எண்ணங்களே…

இந்தப் பாவையின் உள்ளத்திலே…

ஆண்

: பூவிதழ் தேன் குலுங்க…

சிந்தும் புன்னகை நான் மயங்க…

பெண்

: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…

சாய்ந்திருப்பேன்… வாழ்ந்திருப்பேன்…

ஆண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

பெண்

: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

பெண்

: பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது…

காரணம் நீயறிவாய்…

தேவையை நானறிவேன்…

ஆண்

: நாளொரு வேகமும் மோகமும் தாபமும்…

வாலிபம் தந்த சுகம்…

இளம் வயதினில் வந்த சுகம்…

பெண்

: தோள்களில் நீயணைக்க…

வண்ணத் தாமரை நான் சிரிக்க…

ஆண்

: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…

தோரணமாய் ஆடிடுவேன்…

பெண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

ஆண்

: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

பெண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சிந்தனை போக்கில் தெளிவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோக பணிகளில் ஆதரவுகள் கிடைக்கும். வியாபர பணிகளில் இருந்த நெருக்கடியான சூழல் மறையும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

ரிஷபம்

மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வாழ்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மிதுனம்

அநாவசிய செலவுகளை தவிர்க்கவும். பிள்ளைகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சில பணிகள் தடைபட்டு முடியும். அரசு காரியங்கள் இழுபறியாகும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் மேம்படும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் விவாதம் இன்றி செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். திட்டமிட்ட செயலை மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்தி சாதுர்யத்தால் சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். பெற்றோர்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

சிம்மம்

இல்லத்தில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடி வரும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.

 

கன்னி

எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் விலகும். வர்த்தகத்தில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

துலாம்

இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயணம் மூலம் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மற்றவர்கள் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிலும் பொறுமை வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

விருச்சிகம்

சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வாகனம் தொடர்பான முயற்சிகள் கை கூடும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் மாற்றம் உண்டாகும். வருமான வகையில் இருந்த இழுபறிகள் குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

தனுசு

நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை வேண்டும். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்தும் எண்ணம் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான பயணங்களில் அறிமுகங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

மகரம்

எதிர்காலம் சார்ந்த சில முயற்சிகள் கைகூடி வரும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்கள் இடத்தில் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளால் அலைச்சல்கள் உண்டாகும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

கும்பம்

நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். சில விஷயங்களை போராடி மேற்கொள்வீர்கள். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். எதிலும் உழைப்புகள் அதிகரிக்கும். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மீனம்

குடும்பத்தோடு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். விவசாய பணிகளில் அலைச்சல் ஏற்படும். மனை விருத்திக்கான சூழல் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் எண்ணியதை சாதிப்பீர்கள். திட்டமிட்ட கடன் உதவிகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

  • 34
·
Added a post

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை 8.11.2025.

இன்று பிற்பகல் 12.31 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று அதிகாலை 04.31 வரை ரோகிணி . பின்னர் மிருகசீரிடம்.

இன்று அதிகாலை 03.28 வரை பரிகம். பின்னர் சிவம்.

இன்று அதிகாலை 01.40 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 12.31 வரை பத்தரை. பிறகு இரவு 11. 28 வரை பவம். பின்பு பாலவம்.

இன்று அதிகாலை 04.31 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 64
  • 61
  • 63
·
Added a news

கனடாவில் குழந்தைகள் உட்பட 6 பேரை இரக்கமின்றி கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரை கொலை செய்த சம்பவத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையை சேர்ந்த இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், தண்டனையில் எவ்விதமான தளர்வையும் பெறுவதற்கோ அல்லது விடுதலை பெறுவதற்கோ அவர் 25 ஆண்டுகள் கட்டாயமாக சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் ஃபெப்ரியோ டி சொய்சா என்ற இளைஞர் ஆவார். கனடாவில் கல்வி கற்று வந்த அவர், இந்த குற்றத்தைச் செய்தபோது 19 வயதைக் கடந்து இருந்தார். அவர் மீது நான்கு முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும், இரண்டு இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன. அவர் அக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.

இந்த கொலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயான தர்ஷனி பண்டாரநாயக்க (35), இனூக்க விக்கிரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்கிரமசிங்க (2), கெலி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், அந்த வீட்டில் இருந்த காமினி அமரகோன் (40) என்ற நபரும் கொல்லப்பட்டதுடன், குழந்தைகளின் தந்தை படுகாயமடைந்தார்.

  • 198
·
Added a news

2025-ம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி வருகிற 21-ஆம் தேதி தாய்லாந்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் பல்வேறு நாட்டு அழகிகள் தலைநகர் பாங்காக்கில் குவிந்து உள்ளனர். அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் அதில் மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

போட்டியின் - மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைசில் பேசிய போது, போட்டியாளர்களில் சிலர் ஏன் விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் மெக்சிகோ அழகி பாத்திமா போஷை கூப் பிட்டு விளக்கம் அளிக்குமாறு கேட்டார். அப்போது பாத்திமா போஷ் விளக்கம் அளிக்க முயன்றபோது அவரை முட்டாள் என்று நவத் கூறினார். இதனால் பாத்திமா போஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே அவரை நவத் அமைதியாக இருக்கும்படி கூறினார்.

  • 217
·
Added article

ஜி.எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘தீயவர் குலை நடுங்க’. இதன் படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது. தற்போது நவம்பர் 21-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன.

தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிக் பாஸ் அபிராமி, பிரவீன் ராஜா, ராம்குமார், தங்கதுரை, பேபி அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது.

ஒளிப்பதிவாளராக சரவணன் அபிமன்யு, இசையமைப்பாளராக பரத் ஆசிவகன், எடிட்டராக லாரன்ஸ் கிஷோர் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

  • 242
·
Added article

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காந்தா’. நவம்பர் 14-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

இந்த விழாவில் துல்கர் சல்மான் பேசும் போது, “இக்கதையை 2019ல் தான் கேட்டேன். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இயக்குநர் செல்வா இருப்பார். சினிமாவை அவ்வளவு ரசிப்பார். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக காத்திருந்தேன். எங்கள் எல்லோருக்கும் தமிழில் மிக முக்கியமான படமாக ‘காந்தா’இருக்கும். ‘அய்யா’ கதாபாத்திரத்திற்கு மிகப்பொருத்தமான நபராக சமுத்திரக்கனி இருந்தார். எங்களை விட இன்னும் அதிக ஆர்வமாக சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருடன் இணைந்து இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும்.

குமாரி கதாபாத்திரத்திற்காக தமிழ் கற்றுக் கொண்டு முழு ஈடுபாட்டோடு பாக்யஸ்ரீ நடித்திருக்கிறார். ராணாவும் நானும் இணைந்து இந்தப் படம் செய்திருப்பது மகிழ்ச்சி. படம் நன்றாக வர வேண்டும் என்று ராணா முழு உழைப்பைக் கொடுப்பார். டைம் டிராவல் செய்வது போன்ற மகிழ்ச்சியை இந்த பீரியட் படங்கள் கொடுக்கும். அதை கலை இயக்குநர் ராமலிங்கம் சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு சிறப்பாக உழைத்துள்ளனர். படம் பார்க்கும் அனைவருக்கும் இது மறக்க முடியாத படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான்.

  • 271
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்ப நபர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வேலையாட்களிடம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்காலம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

ரிஷபம்

குடும்ப விஷயங்களில் அலட்சியமின்றி செயல்படவும். வாக்கு சாதுரியம் ஏற்படும். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வருவார்கள். தியானம் மூலம் மன அமைதி உண்டாகும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். உழைப்பு நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்கு வரும். விவசாய பணிகளில் அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும்.புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களால் வருத்தங்கள் நேரிடும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கடகம்

பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான உதவிகள் சாதகமாகும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு.

 

சிம்மம்

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கன்னி

எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களில் பொறுமையுடன் செயலபடவும். நேர்மை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

துலாம்

எதிலும் நேர்மையுடன் செயல்படவும். மனை விற்பனையில் மந்தமான சூழல் ஏற்படும். வர்த்தகத்தில் கவனம் வேண்டும். நட்பு வட்டங்களில் புதிய அனுபவங்கள் உண்டாகும். மற்றவர்களின் குறைகளை பெரிது படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். உயர் அதிகாரிகளால் பொறுப்புக்கள் மேம்படும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

விருச்சிகம்

விரும்பிய காரித்தை நினைத்த படியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். பண விஷயத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

உறவினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் வந்து போகும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். முயற்சி ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். பங்குதாரர்களிடம் அனுசரித்து செல்லவும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். வீடு மனை விற்பனையில் லாபம் உண்டாகும். நெருக்கமானவர்கள் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களால் செலவுகள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

கும்பம்

குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் செழிப்பான வாய்ப்புகள் கிடைக்கும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மீனம்

சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 325
·
Added a post

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 7.11.2025.

இன்று பிற்பகல் 02.48 வரை துவிதியை. பின்னர் திரிதியை .

இன்று காலை 06.58 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.

இன்று காலை 06.34 வரை வரீயான். பின்னர் பரிகம்.

இன்று அதிகாலை 03.58 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 02.48 வரை கரசை. பிறகு வணிசை.

இன்று காலை 06.07 வரை மரணயோகம். பின்னர் காலை 6.58 வரை சித்தயோகம். பிறகு மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=321&dpx=2&t=1762488095

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 427

Good Morning...

  • 428
·
Added a news

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் அண்மைய வாரங்களில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அண்மையில், நார்த் பே பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் இருந்து 250,000 டொலர் தொகை மோசடி செய்யப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களில் கிரிப்டோகரன்சி மோசடிகள், ஆன்லைன் சந்தை ஏமாற்றங்கள், காதல் மோசடிகள் மற்றும் பரிசு அட்டை மோசடிகள் தொடர்பான பல புகார்களுக்கு எங்கள் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நார்த் பே பகுதியில் ஒருவர் 2025 ஜூலை மாதம் முதல் போலியான இணையதளம் மற்றும் கணக்கில் பணம் செலுத்தி வந்ததாகவும், அது முதலீட்டு மோசடியாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிகவும் நூதனமான முறையில் மோசடிகள் இடம்பெறுவதாகவும் பல்வேறு வழிகளில் மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 556
·
Added a post

* ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து, சிறிது சோடா உப்பையும் கலந்து குடித்தால், வயிற்று வலி நீங்கும்.

* அகத்திக்கீரையில், 65 விதமான சக்திகள் அடங்கி இருக்கின்றன. மலச்சிக்கல், பித்தம் அதிகமாக உள்ளோர், அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும். வெயிலில் அலையும் வேலை உடையவர்களும், காபி, டீ சாப்பிடுபவர்களும் அகத்திக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* வேப்பிலை, மருதாணி, மஞ்சள் ஆகிய மூன்றையும் அரைத்து குதிகால் வெடிப்பில் பூசி வந்தால், பித்த வெடிப்பு குணமாகும். இரவு படுக்க போகும்போது, இந்த மருந்தை போடுவது நல்லது.

* உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவில்லை. மூட்டு வலிக்கிறது என்று சொல்பவர்கள், தேங்காய் எண்ணெயில் கற்பூர கட்டியை சிறிதளவு போட்டு கலக்கி, சூடுபடுத்திய பிறகு மூட்டுகளில் பூசி வந்தால், கீல் வாத வலி, மூட்டு வலி குணமாகும்.

* கறிவேப்பிலையை துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தை போக்கும். சுக்கும், பனை வெல்லமும் போட்டு காய்ச்சிய நீரை குடித்து வந்தால், பித்தம் ஏற்படாது.

* செம்மண்ணை தண்ணீரில் கரைத்து அடுப்பில் சுட வைத்தால், கெட்டியாக சூடாக இருக்கும். இந்த மண்ணை காலில் வீக்கம் உள்ள இடத்தில் கை பொறுக்குமளவு சூடாக எடுத்து, இரவு நேரத்தில் பூச வேண்டும். காலையில் வீக்கம் குறைந்து காணப்படும். இரண்டு மூன்று முறை போட்டால், பூரண குணமடையும். இது, யானைக்கால் உள்ளவர்களுக்கு பொருந்தாது. திடீர் வீக்கம், இடிபட்ட வீக்கம் இவைகளுக்கு மட்டும் பொருந்தும். கடையில் விற்கும் காவியில் போடக் கூடாது, செம்மண்ணில் தான் போட வேண்டும்.

* ஒரு தேக்கரண்டி மிளகு துாள், சிறிதளவு இஞ்சி, ஒரு பிடி துளசி இலை சேர்த்து கஷாயம் போல் செய்து சர்க்கரை, பால் சேர்த்து அருந்த, தொண்டை வலி, சாதாரண ஜுரம் ஆகியவை குணமாகும்.

  • 559
·
Added a post

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு மூட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தான்.

வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ளம் அவனை நிலை தடுமாற செய்தது.

இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிட்டான். உடனே "ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே யாராவது காப்பாற்றுங்கள்" என்று கதறினான்.

அந்த ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது.

உடனே அவன் ஆற்றில் குதித்து கடுமையாக போராடி அந்த பணமூட்டையை எப்படியோ மீட்டு எடுத்து கரையை அடைந்தான்.

இந்த பண மூட்டையை காப்பாற்ற சொல்லி யாரோ கதறினீர்களே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ? நான் உங்கள் பண மூட்டையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சத்தம் போட்டு அழைத்தான். ஆனால் வெகு நேரம் ஆகியும் யாரும் அதை பெற வரவில்லை.

பிறகுதான் அவனுக்கு புரிந்தது, அந்த பண மூட்டைக்கு சொந்தக்காரர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என்று. "ஐயோ பாவம், அந்த பணக்காரர் இந்த பண மூட்டைக்கு பதிலாக தன்னை காப்பாற்றும்படி குரல் கொடுத்திருந்தால் அவரை காப்பாற்றி இருப்பேனே" என்று அந்த மீனவன் வருந்தினான்.

இப்படிதான் நாமும் நம் தேவைகளை சில நேரங்களில் இறைவனிடம் சரியாக கேட்காமல் வெறும் பணத்தையும் வசதிகளையும் மட்டுமே கேட்கிறோம். அதனால் பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் நிம்மதியை தரும் ஆரோக்கியத்தையும் மனநிறைவையும் பொருட்படுத்துவதேயில்லை..!!

  • 563
·
Added a post

ரஷ்ய நாட்டு யூதர் ஒருவருக்கு இஸ்ரவேலில் சென்று குடியேற அனுமதி கிடைத்தது.

ரஷ்ய விமான நிலையத்தில் அவரது பொதிகளை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரி, லெனினின் உருவச்சிலை ஒன்று அவரிடம் இருப்பதைக் கண்டார்.

இது என்ன?" என்று அவரிடம் அந்த அதிகாரி வினவினார். "தப்பு...சேர்...! உங்கள் கேள்வியே தப்பு...! இவர் யார் என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்...! இவர்தான் கம்யூனிஸத்தின் தந்தை லெனின்! ரஷ்ய மக்களுக்கு நல்லது செய்தவர், நாட்டின் வளர்ச்சிக்கு தீபம் ஏற்றியவர். இந்த மாமனிதரின் ஞாபகர்த்தமாக இதை நான் என்னுடன் கொண்டுசெல்கிறேன்." என்று அந்த ரஷ்ய யூதர் பதிலளித்தார். "சரி, நீங்கள் போகலாம் " என்றார் அந்த அதிகாரி.

இஸ்ரவேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய போது அங்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

அங்குள்ள அதிகாரி "இது என்ன?" என்று வினவினார். "தப்பு...சார்...! இவன் யார்? என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்!

இவன்தான் பித்துப் பிடித்த மகா கொடியவன், லெனின்! இவனின் கொடுமையால்தான் நான் ரஷ்யாவை விட்டு வரவேண்டியதாயிற்று! நாளாந்தம் இவன் முகத்தைப் பார்த்து திட்டித் தீர்க்கவே இந்த உருவச்சிலையை என்னுடன் கொண்டுவந்தேன்." என்றார்.

இதைக் கேட்டு பெருமிதம் அடைந்த அதிகாரி "சரி, நீங்கள் போகலாம்." என்றார்.

தனது குடியிருப்புக்கு சென்ற ரஷ்ய யூதர், அந்த உருவச்சிலையை தன் வீட்டின் முன் மண்டபத்தில் தெரியும் படியாக மாட்டிவைத்தார். பின்னர் தான் இஸ்ரவேல் தேசத்தில் குடியேருவதை முன்னிட்டு தனது நண்பர்களை, உறவினர்களை அழைத்து விருந்து படைத்தார்.

அங்கே வந்த விருந்தினர்கள் அந்த உருவச்சிலையைக் கண்டு "இவர் யார்?" என்று வினவினார்கள். "தப்பு மக்களே...! இது என்ன?" என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்." இது 24 கரட் கொண்ட 10 கிலோ கிராம் தங்கம்! நான் இதை வரி ஏதும் கட்டாமல், சுங்கத்துறையிடம் சிக்காமல் சாதுரியமாக கொண்டு வந்தேன்." என பெருமையுடன் பதில் அளித்தார்.

பித்தலாட்டம் என்பது: மக்களிடம் ஒரே விடயத்தை பற்பல விதமாக, அதுவும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் புரிய வைக்கும் சூட்சுமமாகும்!

  • 570
·
Added a post
  1. சோற்றுக் கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் வழவழப்பான விழுதுடன் 1 குவளை
  2. (Cup) மருதாணி இலையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இதோடு 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள்.
  3. நான்கு நாட்களுக்கு ஒரு முறை இது போல் குளித்து வந்தால், கருப்பு, சிவப்பு, பழுப்பு என மூவண்ணங்களில் கூந்தல் மின்னும்
  4. வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொண்டு தலைமுடியைக் கழுவி வந்தால் முடி கொட்டுதல் நிற்கும்
  5. தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் இவற்றின் பொடிகளை ஒன்றாய்க் கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்துவிட்டு, காலையில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடிகொட்டுதல் குறையும்.
  6. நெல்லிக்காயை நன்கு சூரிய ஒளியில் உளர்த்தி, நன்கு அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து எடுத்துக்கொண்டு, எண்ணெய்யை கொதிக்க வைக்கவும். பின்னர் எண்ணெய் ஆறியதும் வடிகட்டி எடுத்துக்கொண்டு தலையில் தேய்த்துவந்தால் முடி கருமையாகும்!
  7. கறிவேப்பிலையை பச்சையாக அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி அதன் பின் தலையில் தேய்த்துவர தலைமுடி நன்கு வளரும்; கருமையாகவும் இருக்கும்
  8. கேரட், எலுமிச்சை சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி எடுத்துக்கொண்டு தலையில் தேய்த்துவர தலைமுடி நன்கு வளரும்
  • 568
·
Added a post

1. நீங்கள் பதட்டமாக இருந்தால், உங்கள் மூக்கை கிள்ளுங்கள்; நீங்கள் அமைதியாகிவிடுவீர்கள்.

2. பதட்டத்தைக் குறைக்க உங்கள் கையை மேலே தூக்கி வைக்கவும், மெதுவாகவும் ஆழமாகவும் சுவாசிக்கவும்.

3. ஆற்றல் அளவை அதிகரிக்க குளிர்ந்த நீரை .உங்கள் முகத்தில் தெளிக்கவும் அல்லது விறுவிறுப்பான நடை பயிற்சி செய்யவும்.

4. உங்களுக்கு மூக்கு அடைப்பு இருந்தால், உங்கள் வாயின் மேற்கூரையில் ஒரு ஐஸ் கட்டியை வைக்கவும்.

5. உங்களால் தூங்க முடியாவிட்டால், 1 நிமிடம் வேகமாக கண் சிமிட்டுங்கள்.

6. உங்களுக்கு மயக்கம் ஏற்பட்டால், சமநிலையை மீட்டெடுக்க உங்கள் புருவங்களுக்கு இடையில் சில நொடிகள் அழுத்தவும்.

7. விக்கல்களை நிறுத்த, ஆழ்ந்த மூச்சை எடுத்து, 10 வினாடிகள் பிடித்து, இரண்டு முறை விழுங்கி, மூச்சை வெளியே விடுங்கள்.

8. உங்களுக்கு தலைவலி இருந்தால், நிவாரணத்திற்காக உங்கள் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையிலான இடத்தை மசாஜ் செய்யவும்.

9. கவனத்தை மேம்படுத்த, சூயிங் கம் மெல்லுங்கள் - இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்களை விழிப்புடன் வைத்திருக்கும்.

10. உங்களுக்கு குமட்டல் ஏற்பட்டால், உங்கள் வயிற்றை அமைதிப்படுத்த எலுமிச்சை அல்லது இஞ்சியை முகர்ந்து பாருங்கள்.

  • 572
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். புதிய வாகன சேர்க்கை உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

 

ரிஷபம்

எதிலும் பொறுமையுடன் செயல்படவும். அரசு காரியத்தில் சிந்தித்து செயல்படவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு வந்து செல்லும். பெரியவர்களிடம் நன்மதிப்புகள் உண்டாகும். பொறுமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மிதுனம்

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் தெளிவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

கடகம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். செயல்களில் இருந்த எதிப்புகள் மறையும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

சிம்மம்

எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் ஆதரவான சூழல் அமையும். பயணம் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தடங்கல் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கன்னி

எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். துணைவர் வழி உறவினர்களால் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு ஏற்ற படி இருக்கும். நெருக்கடியான சில பிரசனைகள் குறையும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

துலாம்

பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பிறமொழி மக்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உதவி செய்யும் பொழுது கவனம் வேண்டும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் செயல்படுவது நல்லது. உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

விருச்சிகம்

ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியான அறிமுகத்தால் லாபம் மேம்படும். மனதிற்கு இதமான செய்திகள் கிடைக்கும். நவீன கருவிகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

 

தனுசு

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். சேமிப்பு குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

மகரம்

நினைத்த பணிகளை முடிப்பீர்கள். பழைய நினைவுகள் மூலம் சில தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். நவீன யுக்திகள் மூலம் வியாபாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். சமூக தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கும்பம்

வெளியூர் பயணங்களாலும் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். மாற்றமான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உறவினர்களால் மனவருத்தம் தோன்றி மறையும். வாகன விரயம் ஏற்பட்டு நீங்கும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

மீனம்

அரசு துறைகளில் அலைச்சல் உண்டாகும். சிறிய முதலீட்டில் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வங்கி சார்ந்த உதவிகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

  • 688
·
Added a post

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 20 ஆம் தேதி வியாழக்கிழமை 6.11.2025.

இன்று மாலை 05.08 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று காலை 08.39 வரை பரணி . பின்னர் கிருத்திகை.

இன்று காலை 09.41 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.

இன்று காலை 06.18 வரை பாலவம். பின்னர் மாலை 05.08 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று காலை 08.39 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=320&dpx=2&t=1762424276

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 697

Good Morning...

  • 737
·
Added a news

 கனடிய அரசாங்கம் , வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளது.

கனடாவின் ஃபெடரல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க கனoa அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2025ஆம் ஆண்டு, 673,650 பேருக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டில், அதாவது, 2026 இல் 385,000 பேருக்கு மட்டுமே தற்காலிகக் குடியிருப்பு அனுமதி வழங்கப்பட ள்ளது.

அத்துடன், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில், ஆண்டுக்கு 370,000 பேருக்கு மட்டுமே தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்பட உள்ளது. முன்னர், 2026இல் 516,000 பேருக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க இருப்பதாக புலம்பெயர்தல் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை 385,000ஆக அரசாங்கம் குறைத்துள்ளது. இந்த மாற்றம், தற்காலிக குடியிருப்பு அனுமதிகளை குறைப்பதன் மூலம் கனடாவுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதையே காட்டுகிறது.

  • 969
·
Added article

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்து வெளியான படம் ‘ஆர்யன்’. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் முதல் 3 நாட்கள் நன்றாக இருந்தது. மேலும், இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமமும் விற்கப்பட்டு விட்டதால் விஷ்ணு விஷாலுக்கு லாபகரமான படமாகவே ‘ஆர்யன்’ அமைந்தது.

இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். இதில் “ஒரு படத்தின் கதையில் நாயகனாக அல்லது தயாரிபபாளராக எதில் தலையிடுவீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஷ்ணு விஷால், “நான் தலையிடாத அனைத்து சினிமாவும் வெற்றியடைவது இல்லை. சினிமாவை பொறுப்புணர்வுடன் பார்க்கிறேன். எனது தயாரிப்பு மட்டுமல்ல, நடிகனாகவும் என்னுடைய பொறுப்பு இருப்பதாக நம்புகிறேன்.

ஏனென்றால் இயக்குநருக்காக மட்டும் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதில்லை. படம் பார்க்கும் போது நடிகரைத் தான் திட்டுகிறார்கள். அப்படியிருக்கும் போது அதை பொறுப்புடன் செய்ய வேண்டும். எந்த தயாரிப்பாளர், இயக்குநராக இருந்தாலும் போய் கதையில் உள்ள மாற்றங்களைச் சொல்வேன். அப்படியிருப்பதால் மட்டுமே இப்போது வரை எனது பெரும்பாலான படங்கள் வெற்றியடைந்து இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

”தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுப்பதால், புதிய தயாரிப்பாளர்களுக்கு உங்களது அட்வைஸ் என்ன” என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால், “யாருக்கும் அட்வைஸ் சொல்ல வேண்டாம். எனது பரிந்துரை வேண்டுமானால் நடிகர்களுக்கு சொல்கிறேன். கொஞ்சம் சம்பளம் குறைவாக வாங்கச் சொல்வேன். அப்படியிருந்தால் மட்டுமே படத்தின் உருவாக்கத்திற்கு செலவு செய்ய முடியும்” என்று பதிலளித்துள்ளார்.

  • 981
·
Added article

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என வலம் வந்தவர் கங்கை அமரன். இளையராஜாவின் சகோதரரான இவர், இப்போது முதன்மை பாத்திரத்தில் நடிகராகக் களமிறங்குகிறார்.

அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கும் படம், ‘லெனின் பாண்டியன்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன் சில படங்களில் சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டியுள்ள அவர், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஒரு நிமிட வீடியோவில் கங்கை அமரனின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் கிராமத்து முதியவராக துரைராசு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இதையடுத்து நடிகர் சரத்குமார் உள்பட பல திரைபிரபலங்களும் ரசிகர்களும் அவரை பாராட்டியுள்ளனர்.

  • 986
·
Added article

பிரபல ஹாலிவுட் நடிகை டயான் லாட் (வயது 89).1950-களில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டயான் லாட், ஹாலிவுட் திரைப்படங்களில் பல வலிமையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியான, `சைனா டவுன்', `கோஸ் ஆப் மிஸிஸிப்பி', `பிரைமரி கலர்ஸ்', `28 டேஸ்', உள்பட பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

‘ஆலிஸ் டஸ் நாட்ன்லிவ் ஹியர் எனிமோர்’, ‘வைல்ட் அட் ஹார்ட்’, ‘ராம்ப்ளிங் ரோஸ்’ ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இருந்தாலும் அவருக்கு கிடைக்கவில்லை. இவர் மகள் லாரா டெர்னும் பிரபல நடிகை ஆவார். `ஒயிட் லைட்னிங்’, ‘வைல்ட் அட் ஹார்ட்', ‘சிட்டிசன் ரூத்’, ‘டாடி அண்ட் தெம்’ போன்ற சில படங்களில் இருவரும் தாய்- மகளாக நடித்தனர்.

கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த டயான் லாட் திங்கட்கிழமை காலமானார். இதை அவர் மகள் லாரா டெர்ன் உறுதிப்படுத்தி, அஞ்சலியையும் வெளியிட்டுள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  • 991