·   ·  10 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 1156
  • More

கண்மணியே காதல் என்பது

பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி

இசையமைப்பாளர்: இளையராஜா

திரைப்படம்: ஆறிலிருந்து அறுபது வரை

பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

ஆண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

ஆண்

: மேளம் முழங்கிட தோரணம் ஆடிட…

காலமும் வந்ததம்மா…

நேரமும் வந்ததம்மா…

பெண்

: பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்…

பாடிடும் எண்ணங்களே…

இந்தப் பாவையின் உள்ளத்திலே…

ஆண்

: பூவிதழ் தேன் குலுங்க…

சிந்தும் புன்னகை நான் மயங்க…

பெண்

: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…

சாய்ந்திருப்பேன்… வாழ்ந்திருப்பேன்…

ஆண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

பெண்

: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

பெண்

: பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது…

காரணம் நீயறிவாய்…

தேவையை நானறிவேன்…

ஆண்

: நாளொரு வேகமும் மோகமும் தாபமும்…

வாலிபம் தந்த சுகம்…

இளம் வயதினில் வந்த சுகம்…

பெண்

: தோள்களில் நீயணைக்க…

வண்ணத் தாமரை நான் சிரிக்க…

ஆண்

: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…

தோரணமாய் ஆடிடுவேன்…

பெண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

ஆண்

: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

பெண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

Comments (0)
Login or Join to comment.

ரமலானின் முக்கியத்துவம்

https://youtu.be/_CwlHpMyxno

  • 14
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். அரசு தொடர்பான செயல்களில் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகள் வழியில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

ரிஷபம்

பணிகளில் மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். இறைவழிபாட்டு ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சினம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

குடும்பத்தில் வரவிற்கேற்ப செலவுகள் இருக்கும். சமூக பணிகளில் விவேகத்துடன் இருக்கவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். சுபகாரிய பணிகளில் அலைச்சல் ஏற்படும். பயணம் மூலம் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். மேலதிகாரிகளுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கடகம்

உடன் பிறந்தவர்கள் மூலம் ஒத்துழைப்பான சூழல் அமையும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பிரபலமானவர்களின் தொடர்புகளால் மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்பும் மதிப்பும் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

சிம்மம்

தேர்வு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த எண்ணங்கள் நிறைவேறும். தாய்மாமன் வழியில் இருந்து வந்த மனவருத்தம் குறையும். தொழிலில் இருந்த சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூக தொடர்பான பணிகளில் அனுபவங்கள் அதிகரிக்கும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர்

கன்னி

உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வரவுகளை மேம்படுத்த ஆலோசனைகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

துலாம்

பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கைகள் மேம்படும். மனதில் நிலையான சிந்தனையுடன் எதிர்கால பணிகளை மேற்கொள்வீர்கள். துணைவருடன் அனுசரித்து செல்லவும். பயணம் மூலம் சோர்வுகள் உண்டாகும். திடீர் செலவுகள் மூலம் கையறுப்புகள் குறையும். கட்டிட பணிகளில் லாபங்கள் அடைவீர்கள். மருத்துவ தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

விருச்சிகம்

சகோதரர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் மேன்மைக்கான முயற்சிகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். புத்தக பணிகளில் ஆர்வம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

தனுசு

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். இன்சூரன்ஸ் காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும். வரவேண்டிய தனவரவுகள் கிடைக்கும். எதிர்கால முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலிலும் பொறுமை கடைபிடிக்கவும். எதிலும் விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றுவீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் மனதில் உருவாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

கும்பம்

முன் கோபம் இன்றி செயல்படுவது நல்லது. வெளி உணவுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். கல்வி செயல்களில் சிந்தித்து செயல்படவும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

மீனம்

சபை நிமித்தமான பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு புகழ் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மருமகன் வழியில் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். செலவுகளின் தன்மை அறிந்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 41
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.2.2026.

இன்று மாலை 03.53 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று இரவு 09.19 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று இரவு 07.33 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று அதிகாலை 04.32 வரை தைத்தூலம். பின்னர் மாலை 03.53 வரை கரசை. பிறகு வனிசை .

இன்று இரவு 09.19 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=428&dpx=2&t=1771565684

நல்ல நேரம்:

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 12.30.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 63
·
Added a post

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...

கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோஷத்தில் ராஜா, ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவில் இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.

'ராஜா ராஜா!' என்றழைக்க...

ராஜா ராஜா சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்...

தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக.

இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார்.

ராஜா ராஜனின் கனவும் கலைந்தது.

விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான்.

யாருக்கும் பதில் தெரியவில்லை.

பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான்.

கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான்.

சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்... நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார்.

எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.

இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை... நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.

எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்...

அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விஷயத்தை சொன்னோம்.

அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்...

என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது.

அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்... என்றான் சிற்பி.

இதை கேட்டதும் ராஜா ராஜனுக்கு எல்லாம் புரிந்தது...

எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான்.

ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே..."

என்று கண்ணீர் மல்கி...

பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்...

இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான்... நான் அல்ல...

இதற்கு இறைவனே சாட்சி என்றான்..."

  • 65

முழுமுதற் கடவுளாம் விநாயகரின் அருள் இன்று நம் அனைவருக்கும் கிடைக்கட்டும். வாழ்த்துகள்.

  • 65

Good Morning...

  • 66

காலை வணக்கம்

  • 74
  • 135
  • 135
  • 135
·
Added a post

எட்டு வயது சிறுவன் ,கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி, உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா ?என்று கேட்டான் .

சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர், சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார். சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான்.

பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன், அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று ,கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான்.

அதற்கு அந்த கடைக்காரர் மிகுந்த கோபமுற்று இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி விட்டார். அவன் வந்து கொண்டிருந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு காரின் முன்னே சென்று விழுந்தான்.

அந்த கார் நிறுத்தப்பட்டது. நல்ல வேளை அடியேதும் படவில்லை. அந்த காரில் இருந்து இறங்கிய அந்த பெரியவர் அந்த சிறுவனை பார்த்து என்ன ஆயிற்று? என்று கேட்டார்..

அந்த சிறுவன் நடந்ததை, கூறி பின்னர் அவரிடமே, தன்னுடைய ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி,, உங்களிடம் இறைவன் இருந்தால் இந்த ஒரு ரூபாயை வைத்து கொண்டு எனக்கு கொடுக்க முடியுமா? என்று கேட்டான்.

. அதற்கு அந்த பெரியவர், ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு ,அந்த இறைவனை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய் ?என்று கேட்டுள்ளார்.

அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான். சாப்பாடு ஊட்டுவது முதல் ,தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை! என் தாய் தான். தற்போது என் தாய் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார்! என்று கூறி விட்டனர். அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் !என்று கூறினான்..

அதற்கு அந்த பெரியவர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவனைத் தானே வேண்டும்,? நான் தருகிறேன்! என்று கூறி, ஒரு கடிதம் எழுதி, அதை ஒரு உறையுள் போட்டு கொடுத்து, இதனை கொண்டு போய் உன் தாய் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் குறிப்பிட்ட ஒரு மருத்துவரின் பெயரைச் சொல்லி ,அவரிடம் கொண்டு போய் கொடு! என்று கூறி அனுப்பி வைத்தார்.

சிறுவனும் அவ்வாறே நேராக மருத்துவமனைக்கு சென்று அந்த மருத்துவரை கண்டு அந்த உறையை கொடுத்தான். அந்த உறையை பிரித்து பார்த்த மருத்துவர், மருத்துவமனையின் நிறுவனர் தன் கைப்பட எழுதிய அந்த கடிதத்தை கண்டு அதிர்ந்து போய் உடனே அந்த தாய்க்கு தீவிர உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அந்த சிறுவனின் தாயை காப்பாற்றினார்.

முக்கிய மருத்துவர்கள் புடை சூழ மருத்துவமனையின் நிறுவனர் (அதாவது அந்த பெரியவர்) உயிர் பிழைத்த தாயை காண வந்தார். அவர்களை பார்த்த தாய், மருத்தவ செலவை பற்றி நினைத்து, என்ன ஆகுமோ என அச்சத்தில் உறைந்து இருந்தாள்.

அந்த பெரியவர், அந்த ஏழை தாயிடம் கவலை படாதீர்கள், உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் உங்கள் மகன் செலுத்தி விட்டான். இதை கேட்டதும் தாய், அதிர்ந்துபோய் தன் அருகே தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்தாள்.

மேலும் தொடர்ந்த பெரியவர், செலவு போக மீதித் தொகையை உங்கள் மகனை படிக்க வைப்பதின் மூலம் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றார்.

தாய் மிகவும் பயந்து போய் அந்த பெரியவரிடம் காரணத்தை கேட்டபோது, அவர் " உங்கள் மகனின் அந்த கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் கடவுளை பெற்றே தீருவேன் என்ற விடா முயற்சி ஆகியவைதான் இந்த சேவையை செய்ய காரணம் என்று கூறினார்.

மனதில் நம்பிக்கை மற்றும் விடா முயற்சி இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்...

  • 139
·
Added a post

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது.....

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு

வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்...

அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்....

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

சாப்பிடும் முறை

(1) நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

(2) எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

(3) பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டோ சாப்பிட கூடாது...

(4) சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.

போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

(5) அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...

(6) பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

(7) பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...

(8) ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

(9) இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

(10) சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

(11) சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

(12) சாப்பிட வேண்டிய நேரம்...

காலை - 7 to 9 மணிக்குள்

மதியம் - 1 to 3 மணிக்குள்

இரவு - 7 to 9 மணிக்குள்

(13) சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

(14) சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

  • 143
·
Added a post

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!!

குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும்,

விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.

கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்...

நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சமைப்பது,

அவரை ரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மலைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார்.

அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா இப்போது சொல் என்றார் கிருஷ்ணன்..

அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார்.

ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே!

சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான்.அதனால் அவன் செய்த தவறு சிறியது.

ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய்.

அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.

ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.

ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார்.

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.

  • 148
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் மத்தியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்களும் அறிமுகங்களும் உருவாகும். புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் மாற்றமான சூழல் அமையும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

ரிஷபம்

தந்தை வழி தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். கூட்டாளிகள் சேர்ப்பது தொடர்பான எண்ணம் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். துணிவு வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மிதுனம்

நண்பர்கள் மூலம் அலைச்சலும் அனுபவம் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் அனுபவமும் ஏற்படும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். ஆர்வம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தன வரவுகள் சாதகமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் நன்மைகள் ஏற்படும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். அயல்நாட்டு தொடர்பான பணிகளில் முக்கியத்துவம் உண்டாகும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். சிக்கல் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்

சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

கன்னி

ஒப்பந்தம் சார்ந்த பணிகள் மூலம் லாபங்கள் மேம்படும். மனதில் புதுமையான இலக்குகள் பிறக்கும். குழந்தைகள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சாமர்த்தியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். நிர்வாகப் பணிகளில் மேன்மை ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பொழுது போக்கு செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். குழப்பம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

விருச்சிகம்

செய்தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். சினம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

முதலீடுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பேச்சுத் திறமைகள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். பார்வை பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகளில் சிந்தித்து செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மகரம்

திடீர் பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணிகளில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களிடம் பொறுமையை கையாளவும். செலவுகளின் தன்மை அறிந்து செயல்படவும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கும்பம்

மனதளவில் சிறுசிறு குழப்பம் தோன்றி மறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். முயற்சிகளில் மாற்றமான சூழல்கள் உருவாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். உழைப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மீனம்

புதுவிதமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் மேம்படும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் அதிகரிக்கும். நுண்கலை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

  • 282
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை 19.2.2026

இன்று மாலை 05.12 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று இரவு 10.03 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.

இன்று இரவு 09.53 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.

இன்று அதிகாலை 05.39 வரை பாலவம். பின்னர் மாலை 05.12 வரை கௌலவம். பிறகு தைத்தூலம் .

இன்று காலை 06.32 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=427&dpx=2&t=1771471709

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 282

Good Morning...

இன்றைய நாள் உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றிக்கு வழி காட்டட்டும்.

  • 280
  • 355
·
Added a post

கேரளாவின் புராதான சின்னம் பற்றிய கண்ணோட்டம்

கேரளாவின்அதிகாரபூர்வமான புராதான சின்னம் திருவிதாங்கூர் அரச சின்னத்தின் அடிப்படையில் உள்ள இருபுறமும் யானைகள் காத்து நிற்கும் ஸ்ரீ பத்மநாபசுவாமியின் சங்கு ஆகும்

இந்தச் சின்னத்தின் மேல் பகுதியில் இந்தியா தேசிய சின்னமான அசோக சக்கரத்தின் சிங்கம் இடம் பெற்றுள்ளது

இது திருவிதாங்கூர் மற்றும் கொச்சி அரசுகளின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது

இந்த சின்னம் கேரளாவின் கலாச்சாரம் இயற்கை மற்றும் திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்றன

  • 383
  • 377
  • 377
  • 378
  • 377

காலை வணக்கம்

  • 442
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவார்கள். நண்பர்களின் உதவியுடன் புது வேலை கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பணவரவு உண்டு. பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். அலைச்சல் குறையும்.

மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபார விஷயமாக இருந்த டென்ஷன் விலகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கடகம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தினருடன் மனஸ்தாபம் வரக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆதரவைப் பெறுவீர்.

சிம்மம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் குழப்பங்கள் தீரும். வியாபாரத்துக்காக புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். லாபம் உண்டு.

துலாம்: எதிர்பார்த்த வகையில் பணவரவு இருக்கும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். கூடுதல் பொறுப்பு சேரும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.

விருச்சிகம்: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியம் கை கூடி வரும். வீடு, வாகனத்தை மாற்றுவீர். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். லாபம் பார்க்கலாம்.

தனுசு: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர். தோற்றப் பொலிவு கூடும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். தொழில் போட்டி குறையும். ஓரளவு லாபம் கிட்டும்.

மகரம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும்.

கும்பம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். மூத்தோரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.

மீனம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். வீடு, வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

  • 454