·   ·  10 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 1138
  • More

கண்மணியே காதல் என்பது

பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி

இசையமைப்பாளர்: இளையராஜா

திரைப்படம்: ஆறிலிருந்து அறுபது வரை

பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

ஆண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

ஆண்

: மேளம் முழங்கிட தோரணம் ஆடிட…

காலமும் வந்ததம்மா…

நேரமும் வந்ததம்மா…

பெண்

: பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்…

பாடிடும் எண்ணங்களே…

இந்தப் பாவையின் உள்ளத்திலே…

ஆண்

: பூவிதழ் தேன் குலுங்க…

சிந்தும் புன்னகை நான் மயங்க…

பெண்

: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…

சாய்ந்திருப்பேன்… வாழ்ந்திருப்பேன்…

ஆண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

பெண்

: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

பெண்

: பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது…

காரணம் நீயறிவாய்…

தேவையை நானறிவேன்…

ஆண்

: நாளொரு வேகமும் மோகமும் தாபமும்…

வாலிபம் தந்த சுகம்…

இளம் வயதினில் வந்த சுகம்…

பெண்

: தோள்களில் நீயணைக்க…

வண்ணத் தாமரை நான் சிரிக்க…

ஆண்

: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…

தோரணமாய் ஆடிடுவேன்…

பெண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

ஆண்

: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

பெண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

ஆவாரைச் செடியில் எல்லாவிதப்பாகங்களுமே மருத்துவத்தில் பயன் அளிப்பதாகும். ஆவாரம் பூ ஆண்குறி எரிச்சல் ஆகிய குறைபாடுகள் இருந்தால் ஆவாரம் பூவை மணப்பாகு செய்து சாப்பிட்டால் நிவர்த்தியாகும்.

உடலில் நமைச்சல் இருந்தால் ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் குணமாகும். நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் அருமருந்தாக ஆவாரம் விதை விளங்குகிறது.

எலும்புருக்கி நோயினால் அவதிப்படுபவர்களுக்கு ஆவாரம் இலைச் சாறு மாமருந்தாக விளங்குகிறது. ஆவாரம் இலைகளைத் தேவையான அளவுக்குக் கொண்டுவந்து குளிர்ச்சியான தண்ணீரைத் தெளித்து, இடித்து சாறாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இந்த சாறை அரைலிட்டர்

அளவுக்கு எடுத்துக் கொண்டு தினசரி காலை, மாலை என இருவேளை குடித்துவரவும். இதனால் எலும்புருக்கி எனும் நோய் நீங்கும்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தால் இதன் பிசின் 5 கிராம் முதல் 8 கிராம் வரை நீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் பொதுவாக

நீரிழிவுக்கு ஆவாரம் பூ நல்ல பலனைக் கொடுக்கிறது. நீரிழிவுக்கு ஆவாரம் பூ சாறுடன் ஆவாரம் பட்டை, கொன்றைப் பட்டை நாவல்பட்டை, கடல்நுரை, கோஷ்டம் ஆகியவற்றை இடித்துப் பிழிந்து ஆவாரம் பூ சேர்த்துக் காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதனை வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் நன்கு குணமாவதை உணரலாம்.

ஆவாரம் பூ பானம் சிறுநீர் கடுப்பு இருக்கும் போது அதை குறைக்க செய்கிறது. இதனுடைய வேரிலிருந்து தயாரிக்கப்படும் சாறு இயற்கை டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. நீரிழிவு நோய் கொண்டிருப்பவர்களுக்கு சிறுநீரகம் சேதமாகாமல் பாதுகாக்கிறது.

  • 2
·
Added a post

அகத்தி கீரை (Agathi keerai) வகைகள்

அகத்தியில் வெள்ளை அகத்தி, செவ்வகத்தி, சாழை அகத்தி, பேரகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என 5 வகைகள் உள்ளன. இதில், சாழை, பேரகத்தி மற்றும் சிற்றகத்தி ஆகிய மூன்றும் உணவுக்காகப் பயன்படுத்தப் படுவதில்லை. உணவாக உட்கொள்ளும் அகத்தியில் இரண்டு மட்டுமே, ஒன்று வெள்ளை நிறப் பூக்களை கொண்டது.இது பொதுவாக அகத்தி என்ற பெயரில் குறிப்பிடுவார்கள். மற்றொன்று செந்நிறப் பூக்களை உடையது இதனைச் செவ்வகத்தியென குறிப்பிடுவர். அகத்தியும், செவ்வகத்தி இந்த இரண்டும் பொதுவாக உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

அகத்தியின் சத்துகள்

அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நவீன காலத்தில், அகத்தி கீரையில், 8.4 சதவீதம் புரதமும், 1.4 சதவீதம் கொழுப்பும், 3.1 சதவீதம் தாது உப்புகளும் இருப்பதாக வேளாண் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் மாவுச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் A, கால்சியம் ஆகியவையும் அடங்கியுள்ளன.

அகத்தி மரத்தின் வேர், பூ, இலை மற்றும் பட்டை என அனைத்து பகுதிகளும் மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன. இது உடலின் உட்புற மற்றும் வெளிப்புறத்திற்கும் (Internal and External use) மருந்தாக பயன்படுகிறது

வயதானவர்களுக்கு

இதில் வைட்டமின்- சி (Vitamin-C) உள்ளதால் , நோய் எதிர்ப்பு (Immunity) சக்தி அதிக அளவில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அனைவருக்கும் தேவை என்றாலும் முதியர்வர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும் .எனவே அவர்கள் இக்கீரையை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்திக் கொள்ள முடியும் . இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரொனோ போன்ற நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை . அதற்கு எங்கும் எளிதில கிடைக்ககூடிய அகத்தியை எடுத்துக் கொண்டால் போதுமானது.

பெண்களுக்கு

அகத்தி கீரையில், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் இரத்த ஒட்டத்தை சீராக வைக்க உதவும். கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் இரும்பு சத்து தேவைப்படுவதால் இந்த கீரையை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பால் ஊட்டும் தாய்மார்களும் இதனை எடுத்துக் கொள்வதனால் பால் சுரப்பி தூண்டப்பட்டு அதிக அளவில் பால் சுரக்கும்.

சிறுவர்களுக்கு

உடல் வள்ர்ச்சிக்கு தேவையான புரதம் (Protein) இதனுள் அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைங்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்றாகும் .மேலும் இதில் சுண்ணாம்பு (Calcium ) சத்தும் இருப்பதால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். எலும்புகளுக்கு பலம் சேர்ப்பதால் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் முதுமையில் வரமால் தடுக்கலாம்.

செரிமானத்தை சீராக்கும் அகத்தி

இதில் நார்சத்து உள்ள காரணத்தினால் செரிமானத்தை சீராக்கும் ஆற்றலை பெற்றது. உடலில் செரிமானம் சரியாக இருப்பின் கழிவுகள் முறையாக வெளியற்றப்டுவதுடன் பசியையும் முறையாக தூண்டும். முன்னோர்கள் சொல்வழக்குப் படி , பசித்தால் மட்டும் சாப்பிடு என்பர். .பசி எடுத்து சாப்பிட்டாலே நாம் மற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

கண்களை குளிர்ச்சியாக்கும் அகத்தி

இன்றைய இயந்திர வாழ்க்கையில் சிறுவர்கள் முதல் பெரியர்வகள் வரை அனைவரும் கணினி , கைப்பேசி போன்றவற்றை ஒரே இடத்தில அமர்ந்து பயன்படுத்துவதால் கண்களில் வறட்சி ஏற்படும் .இதனை சரி செய்ய அகத்தியை பயன்படுத்தி வர கண்கள் குளிர்ச்சி அடையும் பார்வை தெளிவாகும்.

உடல் உஷ்ணத்தை போக்கும் அகத்தி

இன்று பலருக்கு வெளியில் சென்று வேலை செய்யும் காரணத்தினால் உடல் உஷ்ணமாக இருக்கும். அகத்தியானது உடல் உஷ்ணத்தை குறைப்பதோடு , உடல் உஷ்ணத்தினால் ஏற்படக் கூடிய குடல்புண் , வாய்ப்புண் போன்ற வற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.

இரத்த அழுத்தத்திற்கு

இளம் பருவத்தினர் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இரத்த அழுத்த நோய் பரவலாக காணப்படுகிறது. அகத்தியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு, சிறுநீரும் தடை இல்லாமல் செல்லவழி வகுக்கும் .

தோல் நோய்களுக்கு

அகத்தியுடன் தேங்காய் மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகளான சொறி, சிரங்கு, தேமல் போன்றவை முற்றிலும் குணமாகும். அகத்தி கீரையுடன் சிறிது மஞ்சள் , அகத்தி இலை மற்றும் மருதாணி இலை இவை அனைத்தும் ஒரு சேர அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில தடவி வந்தால் பித்த வெடிப்பு இருந்த இடம் காணாமல் போகும்

அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியத்தோடு வாழுங்கள்

அதிக சத்துக்களை அகத்தி பெற்று இருந்தாலும் , அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றபடி இதனை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது. அதிகமாக எடுத்து கொண்டால் இரத்தம் கெட்டு போக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கீரையை மற்ற மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பொழுது சாப்பிடக் கூடாது. ஏனெனில் பிற மருந்தின் வீரியத்தை இது குறைத்து விடும். வாயு கோளாறுகள் உள்ளவர்கள் அகத்தி கீரையை தவிர்ப்பது நல்லது. ஆகவே, அளவோடு சாப்பிட்டு வளமுடன் வாழ அகத்தியை பயன்படுத்துவோம்.

  • 11
·
Added a post

நம் தெனாலி ராமன் போல, கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில், துருக்கி தேசத்தில் முல்லா நஸ்ருதீன் என்ற சுஃபி ஒருவர் இருந்தார்.

நல்ல புத்திசாலி. தத்துவ ஞானி. அவரைப்பற்றிய நகைச்சுவை கதைகள் பல உண்டு.

ஒருமுறை முல்லா தன் சீடர்களுக்குக் வெளியூர் சென்றார். அவ்வூர் மக்களில் சிலர் அவர்களுக்கு சில்லரையாக நன்கொடை அளித்தனர். மாலையில் ஓய்வு எடுக்க ஒரு காலி சத்திரத்தை சென்று தங்கினர். மக்கள் அளித்த நனகொடை அதிகம் இல்லாததால், அவர்களுக்குள் பிரித்து தருவது கடினம் என்பதால் முல்லா அதை பிரிக்கவில்லை. சீடர்கள் சண்டை பொறுக்காத முல்லா, அவர்களுக்கு ஒரு பாடமளிக்க ஒரு யோசனை கூறினார்.

முல்லா ஒரு சீடனை அனுப்பி, அப்பணத்தில் அல்வா வாங்கி வந்து பிரித்துக் கொள்ள சொன்னார். அந்த அல்வா எல்லோருக்கும் பிரிக்கும் அளவு அதிகமாக இல்லை. எனவே ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இன்று இரவு தூக்கத்தில் யார் சிறந்த கனவு காண்கிறாரோ அவருக்கே எல்லா அல்வாவும் என்று முடிவு. அல்வா முல்லா கைக்கு வந்தது.

காலையில் எல்லா சீடர்களும் மிக்க ஆவலுடன் தம் கனவுகளை பற்றி சொல்ல துடித்தார்கள். முல்லா எல்லோரையும் முந்திக் கொண்டு சொன்னார், நேற்று இரவு என் கனவில் ஆண்டவர் தோன்றனார். அவருக்கு அந்த அல்வாவை சமர்ப்பித்தேன். என்னை மிகவும் மெச்சி பாராட்டி நீயே எல்லா அல்வாவையும் உண்டு காண்பி என்றார். ஆண்டவர் கட்டளையை மீற முடியுமா, சாப்பிட்டு விட்டேன் என்றார்.

பிறகு என்ன,............... முல்லா தான் சீடர்களுக்கு அல்வா கொடுத்து விட்டாரே!

  • 15
·
Added a post

இணையத்தில் பார்த்த புகைப்படம்... மனதிற்கு இதமாக இருந்தது என்பதால் பகிர்கிறேன்...

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் உடல்நலக்குறைவாக இருந்ததால் CT ஸ்கேன் அவசியமாக இருந்தது.

ஆனால் அந்தப் பெரிய இயந்திரம் இருக்கும் அறைக்குள் தனியாகச் செல்ல அவன் தயங்கியிருக்கிறான்.

2–3 மணி நேரமாக பெற்றோர், மருத்துவர்கள்—எல்லோரும் முயன்றும் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை.

அப்போது அவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அழைக்கப்பட்டான்.

நண்பன் வந்தவுடனே மாயம் செய்தது போல அவனின் பயம் பாதியாக குறைந்தது.

இருவரும் சேர்ந்து CT ஸ்கேன் போக வேண்டும் என்று முடிவு செய்து இருவரும் கண்களை மூடி படுத்துக்கொண்ட புகைப்படம் தான் நாம் பார்ப்பது.

இருவருமே சிறுவர்கள் தான்.. இருவருக்குமே பயம் தான் ஆனாலும் அசாத்தியம் சாத்தியமானது...

இயந்திரப் பயத்தை எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் தைரியமாக மாறியவர்கள் தான் இந்த நண்பர்கள்..

இந்தக் காட்சி நமக்கு ஒன்றை மட்டும் நினைவூட்டுகிறது — வெளிச்சத்தில் சேர்ந்து ஓடுவதற்கு மட்டுமல்ல இருளான நேரங்களில் ஒருவருக்கொருவர் விளக்காக இருப்பதே உண்மையான நட்பு.

உலகில் உள்ள அனைத்து நட்புகளும் இவ்வளவு தூய்மையானதும் உடைக்க முடியாததுமானவையாக இருக்கட்டும்...

-முகநூல் பகிர்வு

  • 15
·
Added a post

ஏலக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது அதன் நறுமணமே.

கருப்பு ஏலக்காய் என்றால் என்ன? அதன் பயன்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

💢 கருப்பு ஏலக்காய் என்பது வீரியமிக்க வாசனையுடன் விளங்கும் ஒரு சிறிய செடியாகும். இதில் இரண்டு வகைகள் உள்ளது - 'கருப்பு ஏலக்காய்' மற்றும் 'பச்சை ஏலக்காய்'. இவை இரண்டில் கருப்பு அல்லது மலை ஏலக்காய் தான் புகழ் பெற்ற வாசனை பொருளாகும். அதனுடைய தனித்துவம் வாய்ந்த சுவை மற்றும் வாசனையால் இதனை சமையலுக்கு அனேக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த செடியின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதிமுக்கிய எண்ணெய்களில் ஒன்றாகும். முக்கியமாக இதனை வாசனை தெரப்பிக்கு பயன்படுத்துகின்றனர். உடல் நலத்தை பேணுவதிலிருந்து, பளபளப்பான முடியை பெறுவது வரைக்கும், இது பயன்படுகிறது. இது அத்தனை பயன்களை அளிக்கிறது. இப்போது நம் உடலுக்கு, சருமத்திற்கு மற்றும் தலை முடிக்கு ஏலக்காயால் கிடைக்கும் பலன்களை தெரிந்துக் கொள்வோம்.

👉இரையக குடல்பாதை ஆரோக்கியம்

கருப்பு ஏலக்காய் இரையக குடல்பாதை ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை புரிகிறது. இறையகம் மற்றும் குடல் பாதைகளில் தேவையான நீர்கள் சுரக்க கருப்பு ஏலக்காய் தூண்டிவிடும். மேலும் நீர் வெளியேறுதலுக்கும் இது தூண்டுகோலாக அமைவதால். வயிற்றில் உள்ள அமிலங்களை கட்டுப்பாட்டில் வைக்கும். அதனால் இரையாக அல்சர் மற்றும் செரிமான கோளாறுகள் எல்லாம் மெதுவாக சீராகும்.

❤ இதயக் குருதிக்குழாய்களின் ஆரோக்கியம்

இதய ஆரோக்கியத்திற்கும் பெரிய அளவில் உதவி புரிகிறது கருப்பு ஏலக்காய். இதயத் துடிப்பை கட்டுப்பாட்டில் வைப்பது இதன் முக்கிய குணமாகும். அதனால் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும். கருப்பு ஏலக்காயை சீரான முறையில் உட்கொண்டால். இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இது இரத்தம் உறைந்து போவதையும் தடுக்கும்.

👉சுவாச ஆரோக்கியம்

சுவாச பிரச்சனைகள் உள்ளதா? அப்படியானால் கருப்பு ஏலக்காய் அதற்கு பெரிய நச்சு முறிவாக விளங்கும். ஆஸ்துமா, கக்குவான் இருமல், நுரையீரல் இறுக்கம், மூச்சுக் குழாய் அழற்சி, நுரையீரல் சிரை காசநோய் போன்ற சுவாச கோளாறுகளை, சிறிய அளவில் ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம். இது சுவாச குழாய்களை ஆசுவாசப்படுத்தி, நுரையீரல் வழியாக காற்று சுற்றோட்டத்தை சுலபப்படுத்தும்.

👉வாயின் ஆரோக்கியம்

பற்களில் அழற்சி, ஈறுகளில் அழற்சி போன்ற பலவிதமான பல் பிரச்சனைகளை கருப்பு ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம். மேலும் இதில் பலமான வாசனை வருவதால், துர்நாற்றத்துடன் வெளிவரும் மூச்சையும் இது சரிசெய்யும்.

👉சிறுநீர் சம்பந்தப்பட்ட ஆரோக்கியம்

கருப்பு ஏலக்காய் சிறந்த சிறுநீர்ப் பெருக்கியாக இருப்பதால், சிறுநீர் கழிப்பதிலும் ஆரோக்கியமாக விளங்கும்.

👉கார்சினோஜெனிக்கிற்கு எதிரான குணமுடையவை

கருப்பு ஏலக்காயில் உள்ள இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மார்பகம், குடல், முன்னிற்குஞ்சுரப்பி மற்றும் கருப்பை புற்றுநோயை தடுக்கும். இதிலுள்ள கார்சினோஜெனிக்கிற்கு எதிரான குணம் க்ளுடாதியோன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உற்பத்தியாவதை அதிகரிக்கும். இதனால் புற்றுநோய் சம்பந்தப்பட்ட அணுக்கள் வளருவது தடைபடும்.

👉நச்சு நீக்கம்

உடலில் உள்ள நஞ்சை நீக்குவதில் கருப்பு ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள காப்ஃபைனை நீக்கும். அதனால் அல்கலாய்டு பாதிப்பில் இருந்து உங்களை காக்கும்.

👉உணர்வகற்றி குணம்

கருப்பு ஏலக்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் வீரியமிக்க உணர்வகற்றி குணம் அடங்கியுள்ளது. இது கடுமையான தலைவலியை நீக்கி, உடனடி நிவாரணம் அளிக்கும். இதிலிருந்து எடுக்கப்படும் அதிமுக்கிய எண்ணெய் மன அழுத்தம் மற்றும் சோர்வை போக்கவும் உதவும்.

👉ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் குணங்கள்

கருப்பு ஏலக்காய் 14 வகை நுண்கிருமிகளை அளிக்கும் ஆற்றல் கொண்டவை. அதனால் அதை உட்கொண்டால், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிடம் இருந்து, உங்களை காத்து உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.

👉இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

கருப்பு ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதனால் இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், உடம்பில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கி, சரும பரப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதனால் ஆரோக்கியம் மேம்படும். சரி உங்களுக்கு இளமையான அழகிய தோற்றம் வேண்டுமா? அப்படியெனில் கருப்பு ஏலக்காயை உட்கொள்ள ஆரம்பியுங்கள்.

👉வெண்மையான சருமம்

வயதான தோற்றம் சீக்கிரம் வருவதை தடுப்பதையும் சேர்த்து, சருமம் வெண்மையாக மாறுவதற்கும் கருப்பு ஏலக்காய் உதவி புரிகிறது.

👉சரும அலர்ஜிக்கு நிவாரணி

கருப்பு ஏலக்காயில் ஆன்டி-பாக்டீரியா குணம் நிறைந்துள்ளதால், சரும அலர்ஜிக்கு இயற்கை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

👉திடமான தலை முடி

கருப்பு ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணம், தலை சருமத்திற்கு உணவாக அமையும். அதன் விளைவாக தலை முடி ஆரோக்கியமாகவும், திடமாகவும், பளபளப்பாகவும் மாறும்.

👉தலை சரும தொற்றுக்கு நிவாரணி

இதன் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியா குணங்களால், இதனை உட்கொண்டால் தலை சருமத்தில் எரிச்சலும் தொற்றுகளும் ஏற்படாது.

👉வெப்பத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு.

இந்த ஏலக்காய் வெப்பத் தாக்கு மற்றும் சூரியவதையிலிருந்து காக்கும் வல்லமையை கொண்டுள்ளது.

⭕ தொப்பையை 2 வாரத்திலே குறைக்க கருப்பு ஏலக்காய் டீ குடிங்க..

⭐எடை குறைய...

ஒரு ஏலக்காயின் விதைகளை பொடி செய்து கொள்ளுங்கள். பின் அத்துடன் 1/2 டீஸ்பூன் இஞ்சி பொடி மற்றும் 1/2 டீஸ்பூன் சோம்பு பொடி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, இந்த பொடியை சேர்த்து அடுப்பை அணைத்து, மூடி வைத்து 5 நிமிடம் கழித்து வடிகட்டி தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.

⭐மூட்டு வலி மற்றும் தலை வலி

மூட்டு வலி, தலைவலி அதிகம் இருந்தால், 5 துளிகள் கருப்பு ஏலக்காய் எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அந்த எண்ணெயால் மூட்டு மற்றும் வலியுள்ள தலைப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

⭐இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு கருப்பு ஏலக்காய் மிகச்சிறப்பான பொருள். அதுவும் ஒரு டம்ளர் சுடுநீரில் கருப்பு ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து தினமும் குடித்து வருவதன் மூலம், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட முடியும்.

⭐உடல் முழுக்க

கருப்பு ஏலக்காயை டீ போன்று தயாரித்து குடித்தால் உடல் முழுக்க உள்ள அழுக்குகள் சுத்தம் பெற்று விடும். சிறுநீரக தொற்றுகள், வயிற்றில் சேர்ந்துள்ள நுண் கிருமிகள் போன்றவற்றையும் சேர்த்து அகற்று விடுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள நச்சு தன்மை உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த கருப்பு ஏலக்காய் உதவுகிறது.

⭐தொப்பை பிரச்சினையா..!

இன்று பத்தில் 6 பேருக்கு தொப்பையே மிக பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எதை செய்தலும் அங்கு தொப்பை தான் பெரும் தடையாகவும் உள்ளது. இதை மிக எளிமையாக சரி செய்ய கருப்பு ஏலக்காய் போதும். அடிவயிற்றில் இருக்க கூடிய கொழுப்புகளை கரைத்து தொப்பையை விரட்டி அடித்து விடும்.

⭐ஆரோக்கியமற்ற இதயமா..?

கருப்பு ஏலக்காயின் பயனில் மிக முக்கியமானது இந்த இதயம் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பது தான். இரத்தம் உறைதல், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சினைகளுக்கு இந்த வகை ஏலக்காய் அருமையான பலனை தருகிறது.

⭐குடல் நோய்களுக்கு

ஒருவருக்கு குடலில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அது உடலின் முழு இயக்கத்தையும் சேர்த்தே பாதிக்க கூடும். அந்த வகையில் குடல் பாதையில் ஏதேனும் பாதிப்பு அல்லது குடல் நோய் உங்களுக்கு இருந்தால் அதனையும் இந்த கருப்பு ஏலக்காய் குணப்படுத்த வல்லது.

  • 15
  • 99
  • 99

காலை வணக்கம்

  • 99
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வரவுக்கேற்ப செலவுகள் அமையும். தந்தை வழி சொத்துகளால் ஆதாயம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பணி நிமிர்த்தமான பயணத்தால் ஆதாயம் ஏற்படும். கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். இன்ப சுற்றுலா செல்வது தொடர்பான வாய்ப்புகள் அமையும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

ரிஷபம்

இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சிறு தொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். விளையாட்டு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கற்பனை துறைகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மிதுனம்

மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சிறு மாற்றங்களைச் செய்வீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். சில பயணங்கள் மூலம் புது விதமான அனுபவங்கள் ஏற்படும். தொழில் முயற்சிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பயனற்ற சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கடகம்

சுரங்க தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வீடு மாற்ற சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். தொழில் நிமித்தமான பயணங்கள் கை கூடும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

சிம்மம்

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். முக்கிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய மனை தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். கனிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கன்னி

இனம் புரியாத சில கனவுகள் மூலம் அமைதியின்மை உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் கால தாமதங்கள் உண்டாகும். புதுவிதமான பயணங்கள் மூலம் மாற்றங்கள் காணப்படும். குண நலன்களின் சில மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும்.தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

துலாம்

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் உருவாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுகள் வரும். தொழில் நிமிர்த்தமான பயணம் கைக்கூடும். மறைமுகமான சில விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். பணி புரியும் இடத்தில் சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எண்ணம் மற்றும் தோற்றங்களில் சிறுசிறு மாற்றங்கள் காணப்படும். வாழ்க்கை துணை வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

இணையம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படவும். ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்கான சூழல் சிலருக்கு அமையும். செய்கின்ற முயற்சிகளில் புதுவிதமான சூழ்நிலைகள் காணப்படும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

மகரம்

எதிர்கால முதலீடுகள் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகள் மூலம் அலைச்சலும் அனுகூலமும் ஏற்படும். குழந்தைகள் வழியில் ஆதாயம் உண்டாகும். இணையம் துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

கும்பம்

செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் நல்ல மாற்றம் ஏற்படும். வாகன பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது. தேவையற்ற விவாதங்களை குறைத்துக்கொள்ளவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. ஆடம்பரமான பொருள்களின் மீது ஆர்வம் உண்டாகும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும். புதிய நபர்களின் ஆதரவுகள் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். தொழில் சார்ந்த முயற்சிகளில் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

  • 134
·
Added a post

விசுவாவசு வருடம் தை மாதம் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.2.2026.

இன்று காலை 08.46 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று காலை 09.35 வரை விசாகம். பின்னர் அனுஷம்.

இன்று அதிகாலை 02.37 வரை விருத்தி. பின்னர் துருவம்.

இன்று காலை 08.46 வரை கௌலவம். பின்னர் இரவு 10.01 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று அதிகாலை 09.35 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=416&dpx=2&t=1770691939

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 136

Good Morning...

Have a Nice day!

  • 131
  • 224
·
Added a post

மாசிடோனியாவின் விளையாட்டு மைதானம் சுட்டெரிக்கும் வெயிலிலும் ஜனத்திரளால் வழிந்து கொண்டிருந்தது..

யாருக்கும் அடங்காத , தெஸ்ஸாஸி நாட்டைச் சேர்ந்த அந்த குதிரை ,மைதானத்தில் யாரையும் நெருங்கவிடாமல் அருகில் வரும் அனைவரையும் துவம்சம் செய்து கொண்டிருந்தது.. மன்னர் பிலிப் இதை அடக்கப் போகும் வீரன் யார் ? என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்..

" இந்த குதிரையை அடக்கி ஆளும் வீரன் இந்த நாட்டில் இல்லையா?" .. கூவிக் கூவி மாசிடோனியாவின் மானத்தை வாங்கிக் கொண்டிருந்தான்..குதிரையின் சொந்தக்காரன். . மன்னர் அருகில் அமர்ந்திருந்த சிறுவன் அலெக்சாண்டர் தனது தந்தையிடம் திரும்பத் திரும்ப தான் அந்த குதிரையைத் தான் அடக்கப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தான். விளையாட்டாக எடுத்துக் கொண்டிருந்த மன்னர் பிலிப்.. தனது மகன் சொல்வது விளையாட்டல்ல என்பதைப் புரிந்து கொண்டார்.. "இந்தக் குதிரையை மட்டும் நீ அடக்கி விட்டால் அதை உனக்கே தருகிறேன்".. அரை மனதுடன் மைதானத்துக்கு அனுப்பி விட்டு , வீரர்களிடம் எச்சரிக்கையாக இருந்து , தேவைப்பட்டால் அலெக்சாண்டரை பாதுகாக்கும் படியும்..சைகை காட்டினார்.

மைதானத்தில் குதிரையை அருகில் நோட்டமிட்டான். குதிரையின் பளபளக்கும் சருமத்தில் விரல்களை மெதுவாக ஓடவிட்டான்.. வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.மிகவும் அமைதியாக சுற்றி வந்து , பின் மெதுவாக தொட்டுத் தொட்டு மெல்ல எதிர் திசையில் திருப்பினான்.

" என்னடா இவன்! எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் எல்லாம் மண்ணைக் கவ்வி விட்டார்கள் . இவன் பொடியன், அரசனுடைய மகன் என்பதால் சிரிக்கக் கூட பயமாக இருக்கிறது" என்று கிசுகிசுத்தனர்..

மைதானத்தில் சில நிமிடங்களில் குதிரையை மெதுவாக எதிர் திசையில் திருப்பிய அலெக்சாண்டர் , ஒரே தாவாக தாவி குதிரையின் மீது பாய்ந்து ஏறினான்.மைதானம் முழுவதையும் குதிரையுடன் வலம் வர, கரகோஷம் வானைப் பிளந்தது " இளவரசர் அலெக்சாண்டர்!! வாழ்க!" மன்னரால் தன் கண்களை நம்ப முடியவில்லை..வருங்காலம் ஒரு மிகப்பெரிய வீரனைக் காணத் தயாராகிவிட்டதை உணர்ந்தார். சொன்னது போலவே அக்குதிரையைப் பரிசளித்தார்.. அதன் பெயர் பியூசிபேலஸ்.

மன்னர் கேட்டார் " என் மகனே! நீ எவ்வாறு அக்குதிரையை அடக்கினாய்?"

" அப்பா! அந்தக் குதிரையின் கண்களில் பட்ட சூரியக் கதிர்கள் அதனை மிரள வைத்திருக்கிறது. இதைப் புரிந்து கொண்ட நான் ,அதனை அதன் எதிர் திசையில் திரும்பியதும் அமைதியாகி விட்டது." ..

மகனின் அறிவுக் கூர்மையை வியந்த மன்னர் ..மகனை ஆரத் தழுவிக் கொண்டார்.

இதன் பிறகு பியூசிபேலஸ் அலெக்சாண்டருடனேயே இறுதிவரை.. அவருக்கு தோள்கொடுத்தது.

கி.மு.326 ஜூலை மாதம் இந்தியாவின் ஜீலம் சீனாப் நதிகளுக்கிடையிலான பகுதியை ( தற்போதைய பஞ்சாப் ) ஆண்ட புருஷோத்தமன் என்ற மன்னர் போரசுடன் நடந்த போரில் அலெக்சாண்டர் வெற்றி அடைந்தாலும் அவரது குதிரை கடுமையான காயங்களால் மரணம் அடைந்தது. இதன் பின்னர் ஜீலம் நதியின் இருகரைகளிலும் இரு நகரங்களை உருவாக்கி, அதில் ஒரு நகருக்கு தனது பாசத்திற்குரிய குதிரையின் நினைவாக பியூசிபேலா என்று பெயரிட்டார்.

  • 229
·
Added a post

1. ஒருமுறை அனைத்து கிராம மக்களும் மழை வேண்டி பிரார்த்தனை செய்ய முடிவு செய்தனர். பிரார்த்தனை நாளில், மக்கள் அனைவரும் கூடினர்; ஆனால் ஒரு சிறுவன் மட்டும் குடையுடன் வந்தான். அதுதான் நம்பிக்கை. (FAITH)

2. நீங்கள் குழந்தைகளை காற்றில் வீசும்போது, ​​அவர்கள் சிரிக்கிறார்கள், ஏனென்றால் நீங்கள் அவர்களைப் பிடிப்பீர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அதுதான் நம்பிக்கை.(TRUST)

3. ஒவ்வொரு இரவும் மறுநாள் காலையில் உயிருடன் இருப்பதற்கான எந்த உறுதியும் இல்லாமல் தூங்கச் செல்கிறோம், ஆனால் இன்னும் விழிப்பதற்காக அலாரங்களை அமைக்கிறோம். அதுதான் நம்பிக்கை. (HOPE)

4. எதிர்காலத்தைப் பற்றிய பூஜ்ஜிய அறிவு இருந்தபோதிலும் நாளை பெரிய விஷயங்களைத் திட்டமிடுகிறோம். அதுதான் நம்பிக்கை. (CONFIDENCE)

5.ஒரு முதியவரின் சட்டையில் “எனக்கு 80 வயது ஆகவில்லை; 64 வருட அனுபவத்துடன் எனக்கு 16 வயது இனிமை”. அதுதான் அணுகுமுறை. (ATTITUDE)

  • 234
·
Added a post
  • தமிழ்நாட்டில் - திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவில், பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் செம்பு உலோகத்திலான முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஒரு தனித்துவமான திருத்தலமாகும்.
  • சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இக்கோவில், 18 புனிதப் படிகள் கொண்ட நிலத்தடி குகை அமைப்பில் உள்ளது,
  • இது இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது.
  • இந்தக் கோயிலின் முன்புறத்தில் 15 அடியில் பெரிய சங்கிலி கருப்பன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் கோயிலில் சங்கிலி கருப்பன் சிலை அமைந்திருப்பது உலகத்திலேயே இங்கு மட்டுமாகத்தான் இருக்கும்.
  • மூலவர்: செம்பு உலோகத்தினால் ஆன முருகன், பாதாளத்தில் வீற்றிருப்பதால் "பாதாள செம்பு முருகன்" என்று அழைக்கப்படுகிறார்.
  • அமைவிடம்: திண்டுக்கல் - பழனி சாலையில், ரெட்டியார்சத்திரம், ராமலிங்கம்பட்டி போக்கர்நகரில் உள்ளது.
  • போகரின் சீடரான திருக்கோவிலார், முருகப்பெருமானுக்கு ஒன்றரை அடி உயரத்தில் ஐந்து உலகக் கலவையான தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு சிலையைச் செய்து இங்கு நிறுவியிருக்கிறார்.
  • இந்த முருகர் சிலைக்கு தினமும் அபிஷேகம் செய்து வருவது உடல் நலத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
  • 18 சித்தர்களின் மூலிகை பிரசாதமான திருநீறு, 7 மாத கால தயாரிப்புக்குப் பின் வழங்கப்படுகிறது.
  • கருங்காலி மாலை மற்றும் வேல் ஆகியவை இங்கு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
  • தைப்பூசம் மற்றும் கிருத்திகை தினங்களில் அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர்.
  • பெரும்பாலான முருகன் கோயில்கள் மலையிலேயே அமைந்திருக்கும். ஆனால், இக்கோயிலுக்கு வரும்போது இறக்கமாகவும், போகும்போது ஏற்றமாகவும் இருக்கும். இதனால் இந்தக் கோயிலுக்கு சென்று வழிபடுவதால் வாழ்க்கையில் எப்போதும் ஏற்றமே கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
  • இந்தக் கோயிலுக்குத் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் சென்று வந்தால் நினைத்தது கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
  • பாதாள முருகன் கோயிலில் கருங்காலி மாலையை முருகனின் திருப்பாதங்களில் வைத்து பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள்.
  • கருங்காலி மாலை அணிவதால் செல்வ வளம் கிடைக்கும், ராகு-கேது தோஷம் நீங்கும், குழந்தைப் பேறு வாய்க்கும், மன அழுத்தம் குறையும், இரத்த அழுத்தம் சீராகும்.
  • பதவி உயர்வு மற்றும் மன அமைதிக்காக பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.
  • 237
·
Added a post

1 இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்சினைகள் உட்பட.

2 சிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.

3 சிரிப்புதான் வலிக்கு மருந்து! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம், சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும்.

4 கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு.

5 உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…!

6 இதயம் வலித்தாலும் சிரி. அது உடைந்தாலும் சிரி.

7 என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம். ஆனால், நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது.

8 எனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு, ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது. அது சிரித்துக்கொண்டுதான் இருக்கும்.

9 பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது.

10 கண்ணாடி என் நண்பன் ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை.

11 ஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்து விடாதே.

12 உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.

13 போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.

14 எப்போதும் மழையில் நனைந்தபடியே நடக்கப் பிடிக்கிறது. என் கண்களில் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது என்பதால்.

15 நீ எப்போதும் வானவில்லைக் காண முடியாது… உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்!

16 நண்பர்களின் சிரிப்பைப் பார்க்கும் போது கண்ணீரை மறக்கிறேன், நண்பர்களின் கண்ணீரைப் பார்க்கும்போது சிரிப்பை மறக்கிறேன்.

17 வாழ்க்கை அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல, அனுபவிப்பதற்கு.

18 நீ மகிழ்ச்சியாய் இல்லாத போது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது. நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்து புன்னகை செய்கிறது. ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது.

19 உங்களை தனியாக விட்டாலே போதும்… வாழ்க்கை அழகானதாகத்தான் இருக்கும்.

20 புன்னகைத்துப் பாருங்கள்… வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்!

21 விவாதங்கள், மோதல்கள் அல்லது பிரச்சினைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும். வாழ்க்கை இப்படித்தான்.

22 ஒரு முறையாவது உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையைத் தவறவிட்டுவிடுவீர்கள்.

23 நண்பனுக்கு உதவுவது சுலபமானதுதான். ஆனால், உங்கள் நேரத்தை அவனுக்காக கொடுக்கும் வாய்ப்பு மிகவும் அரிதானது.

24அதிகமா சிந்திக்கிறோம். மிகக் குறைவாகவே உணர்கிறோம்.

25 கெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம்.

  • 237
·
Added a post

இராவணனை வீழ்த்துவது என்பது சாதாரண காரியமல்ல. அவரது பத்து தலைகளையும் ராமர் அறுக்க அறுக்க, அவை மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே இருந்தன. இதற்குப் பின்னால் ஒரு விசித்திரமான ரகசியம் இருந்தது.

ராவணனின் உடலில், அவரது நாபி (தொப்புள்) பகுதியில் ஒரு 'அமிர்த கலசம்' இருந்தது. பிரம்மன் கொடுத்த வரத்தினால் இது அவருக்குக் கிடைத்தது.

அந்த அமிர்தம் இருக்கும் வரை அவரது தலைகளை வெட்டினாலும் அவர் சாகமாட்டார். இந்த இரகசியம் இராமருக்கு முதலில் தெரியாது.

இராவணனின் தம்பி விபீஷணன் தான், "ராமனே! அவரது தலைகளைப் பாராதே, அவரது நாபியில் அம்பு எய்" என்று இந்த இரகசியத்தைச் சொன்னார்.

அதன் பின்னரே ராமர் தனது அம்பால் ராவணனின் நாபியில் இருந்த அமிர்தத்தை உலரச் செய்து, அவரை வீழ்த்தினார்.

வெற்றிக்காக எவ்வளவு போராடினாலும், சில நேரங்களில் சரியான 'யுக்தி' (Strategy) இல்லையென்றால் வெற்றி கிடைக்காது. இராவணனின் பலம் அவரது தலைகளில் இல்லை, அவரது நாபியில் மறைந்திருந்தது.

எதிரி எவ்வளவு பெரியவனாக இருந்தாலும், அவனது பலவீனம் எங்கே இருக்கிறது என்று அறிவதே உண்மையான வெற்றி. விபீஷணன் காட்டிய அந்த இரகசியம், தர்மம் வெல்வதற்குப் பேருதவியாக இருந்தது.

நமது வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் வருவதற்குப் பின்னால் ஒரு வேர் (Root Cause) இருக்கும். கிளைகளை வெட்டாமல், அந்த வேரை அழித்தால் மட்டுமே வெற்றி நிரந்தரமாகும்.

  • 235
·
Added a post

விஷக்கடிக்கு அடர்நிற வெற்றிலையை மென்று விழுங்கலாம் .

வெற்றிலையை நீரில் ஊற வைத்து , அந்த நீரைக் குடிப்பது , மலச்சிக்கலை குறைக்கும் . இனிப்போடு சேர்த்து பீடாவாக போடும்போது , மன அமைதி கிட்டும் .

ஒரு வெற்றிலை , ஒரு கல் உப்பு சேர்த்து மென்று முழுங்கினால் , வயிற்று உப்புசம் உடனடியாய் தீரும் .

காரம் - வெற்றிலை , - துவர்ப்பு - பாக்கு , கால்சியம் - சுண்ணாம்பு . இந்த மூன்று சுவைகளும் சேரும் போது , பல் உறுதியிலிருந்து , மூக்கு ,வயிறு , தலை என .

முழு உடல் சம்பந்தப்பட்ட பல சங்கடங்களுக்கு தீர்வாய் அமைகிறது . ஒரு சின்ன வெற்றிலையில் நீர்சத்து , புரோட்டீன் , கொழுப்பு , மினரல் , நார்சத்து , கால்சியம் , கார்போஹைட்ரேட் , வைட்டமின்கள் , பொட்டாசியம் என , இன்னும் நிறைய இருக்கிறது .

வெற்றிலை கஷாயம் : வெற்றிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி , நீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க விட்டு மிளகு , கிராம்பு , சுக்கு பொடி சேர்க்கவும் .

தண்ணீர் பாதியாக சுண்டும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும் . இந்த கஷாயத்தை குளிரவைத்த பிறகு வடிகட்டி குடிக்கவும் . இதனால் , பல நோய்கள் குணமாவதாக , ஆயுர்வேதம் கூறுகிறது .

  • 236
·
Added a post

சியா விதைகள் சுவைக்காக இல்லாமல் ஆரோக்கியம் கருதியே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சியா விதை உடல் குளுர்ச்சிக்கு மட்டுமன்றி பல நன்மைகளை தருகிறது.

உடல் குளுமைக்கு சியா விதைகள் உதவுவதால் குடிக்கும் நீரில் கூட ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கின்றனர். அதேபோல் பழச்சாறு மற்றும் ஃபலூடா போன்ற ஜூஸ் வகைகளிலும் சியா விதை சேர்க்கப்படுகிறது. இது சுவைக்காக இல்லாமல் ஆரோக்கியம் கருதியே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சியா விதை உடல் குளுர்ச்சிக்கு மட்டுமன்றி பல நன்மைகளை தருகிறது. அவை என்னென்ன பார்க்கலாம்.

நார்ச்சத்து நிரம்பியது :

சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், மாவுச்சத்து குறைவாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது. நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது. இதனால், குடல் நலன் மேம்படும்.

இதய நோய் ஆபத்துகள் குறைகின்றன : தினசரி உங்கள் உணவுப் பட்டியலில் சியா விதைகள் இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம். குறிப்பாக, ரத்தத்தில் உள்ள டிரிகிளைசைரைடு கொழுப்பை இது கரைக்கிறது. உடல் உள்ளுறுப்புகளின் வீக்கம் குறைவதுடன், இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. உடலுக்கு நன்மை பயக்கும் ஹெச்டிஎல் கொழுப்பு அதிகரிக்கும்.

எலும்புகள் பலப்படும் :

நமது எலும்புகளுக்கு வலுவூட்டக் கூடிய கால்சியம், புரதம், மேக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் சியா விதைகளில் இருக்கிறது. பால் பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு கால்சியம் சத்து கிடைக்க உதவியாக இருக்கும்.

ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் :

உடலின் செல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடிய கிருமிகளை அழிப்பதில், சியா விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்துகளின் பங்கு அதிகமாகும். வயது முதிர்வை தடுக்கிறது.

உயர் தர புரதச்சத்து :

சியா விதைகளில் உயர் தரத்திலான புரதம் நிரம்பியிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆகவே, இதை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது நமக்கு பசி உணர்வு கட்டுப்படுகிறது. இதனால், இரவு நேர பசி அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிடும் ஆசை கட்டுப்படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்துகள் நிரம்பியது :

ஒரு அவுன்ஸ் சியா விதைகளில் 11 கிராம் நார்ச்சத்து, 4 கிராம் புரதம், 5 கிராம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை நிரம்பியுள்ளது. இது தவிர 18 சதவீதம் கால்சியம், 30 சதவீதம் மேக்னீசியம், 27 சதவீதம் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. வெறும் 137 கலோரிகள் மட்டுமே உண்டு.

உடல் எடையை குறைக்கலாம் :

நிரம்பிய புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவிகரமாக இருக்கும். இதை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும்.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் :

சப்ஜா விதைகளைப் போன்றே சியா விதைகளிலும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. விலங்குகளில் இருந்து கிடைக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அளவுக்கு வராது என்றாலும், இதுவும் உடலுக்கு நன்மை தரக் கூடியதுதான்.

  • 236
·
Added a post

“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”

புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..

இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் .

இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .

அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.

ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .

அப்படி பரிமாறிய அந்த பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .

வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் , சாப்பிடும் முன் ...

ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.

“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”

சிம்பிள் ...

இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.

ஏன்..?

நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!

சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?

உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !

சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.

சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?

இல்லை..!

இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .

நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.

அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ... எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?

  • 240
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும் ஆதரவுகளும் மேம்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலை காணப்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

ரிஷபம்

கல்வி பணிகளில் ஆலோசனைகள் மூலம் தெளிவுகள் பிறக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வேலையாட்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உருவாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

மிதுனம்

மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். வாகன தொடர்பான பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கல்வியில் இருந்த குழப்பம் மறையும். உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கடகம்

உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செயல்படவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கிய சிக்கல்கள் குறையும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இணைய விளையாட்டுகளில் கவனம் வேண்டும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

சிம்மம்

தன தான்ய விருத்தி உண்டாகும். கமிஷன் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். பேச்சுத் திறமைகள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் எதிர்பாராத புதிய மாற்றம் பிறக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

கன்னி

எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தொழில் ரீதியான புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

துலாம்

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவான முடிவுகள் உண்டாகும். சக ஊழியர்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் நிதானம் அவசியம். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 

விருச்சிகம்

சமூக பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்நிலை கல்வியில் மேன்மை உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

தனுசு

கற்கும் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் மூலம் அலைச்சலும் அனுபவம் கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். போட்டி சார்ந்த விஷயங்களை ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

புதிய நபர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். வழக்கு பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கும்பம்

மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் குழப்பம் தோன்றும். கூட்டு வியாபாரத்தில் அலைச்சல் மேம்படும். இலக்கு பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். வர்த்தகத் துறைகளில் பொறுமை காக்கவும். எளிய பணிகள் தாமதமாகி முடிவு பெரும். யூக விளையாட்டுகளை தவிர்க்கவும். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி

 

மீனம்

எதையும் சமாளிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் தொடர்பும் ஏற்படும். சாகோதரர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். புதுவிதமான பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். பணிகளில் இருந்து வந்த சோர்வு நீங்கி துரிதம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 305
·
Added a post

விசுவாவசு வருடம் தை மாதம் 26 ஆம் தேதி திங்கட்கிழமை 9.2.2026.

இன்று காலை 07.05 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று காலை 07.07 வரை சுவாதி. பின்னர் விசாகம்.

இன்று அதிகாலை 02.14 வரை கண்டம். பின்னர் விருத்தி.

இன்று காலை 07.05 வரை பவம். பின்னர் இரவு 07.55 வரை பாலவம். பின்பு கௌலவம்.

இன்று அதிகாலை 04.53 வரை சித்த யோகம். பின்னர் காலை 07.07 வரை அமிர்த யோகம். பிறகு மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=415&dpx=2&t=1770611240

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 311
  • 304

Good Morning..

Have a Nice day!

  • 305