·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 1101
  • More

கண்மணியே காதல் என்பது

பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி

இசையமைப்பாளர்: இளையராஜா

திரைப்படம்: ஆறிலிருந்து அறுபது வரை

பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

ஆண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

ஆண்

: மேளம் முழங்கிட தோரணம் ஆடிட…

காலமும் வந்ததம்மா…

நேரமும் வந்ததம்மா…

பெண்

: பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்…

பாடிடும் எண்ணங்களே…

இந்தப் பாவையின் உள்ளத்திலே…

ஆண்

: பூவிதழ் தேன் குலுங்க…

சிந்தும் புன்னகை நான் மயங்க…

பெண்

: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…

சாய்ந்திருப்பேன்… வாழ்ந்திருப்பேன்…

ஆண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

பெண்

: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

பெண்

: பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது…

காரணம் நீயறிவாய்…

தேவையை நானறிவேன்…

ஆண்

: நாளொரு வேகமும் மோகமும் தாபமும்…

வாலிபம் தந்த சுகம்…

இளம் வயதினில் வந்த சுகம்…

பெண்

: தோள்களில் நீயணைக்க…

வண்ணத் தாமரை நான் சிரிக்க…

ஆண்

: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…

தோரணமாய் ஆடிடுவேன்…

பெண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

ஆண்

: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

பெண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

Comments (0)
Login or Join to comment.
  • 74
  • 86
  • 85
·
Added article

‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் பெற்ற 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், அர்ஜுன்லால் சொத்துகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட சொத்தாட்சியர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பணத்தை திரும்ப செலுத்தும் வரை ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிடகூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டுடியோ கிரீன் தரப்பில், 3 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கான டிடி-யை, பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் செலுத்தியது.

இதையடுத்து மீதி தொகையையும் செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், மூன்று கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பித் தராததால் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தனேஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, படத்துக்கு தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

  • 92
·
Added article

அழகான நடிகையான பூனம் பாஜ்வா, 'சேவல்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு 'துரோகி', 'தெனாவட்டு', 'ஜெயிக்கிற குதிர' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும், பின்னர் தமிழில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், நீண்ட காலமாக ஹீரோயின் வேடங்களிலேயே நடிக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் மலையாள சினிமாவை அதிகம் கவனம் செலுத்தி வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, வேறுவழியில்லாமல் 'ஆம்பள' திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததன் மூலம் தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் 'ரோமியோ ஜூலியட்', 'அரண்மனை 2', 'முத்தின கத்திரிக்கா', 'குப்பத்து ராஜா' போன்ற படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்தார். தற்போது தமிழிலும் சில படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சினிமாவைத் தாண்டி, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் காலையில் சொம்பல் முறிக்கும் ஸ்டைலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அடிக்கிற குளிருக்கு அட்டகாசமான போஸ், சுண்டி இழுக்கும் அழகு என கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

  • 95
·
Added a post
  • 295
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 12.1.2026.

இன்று மாலை 03.35 வரை நவமி. பின்னர் தசமி

இன்று இரவு 11.49 வரை சுவாதி. பின்னர் விசாகம்.

இன்று இரவு 09.04 வரை திருதி. பின்னர் சூலம்.

இன்று அதிகாலை 01.08 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 01.42 வரை கௌலவம். பின்பு வணிசை.

இன்று காலை 6.32 வரை சித்த யோகம். பின்னர் இரவு 11.49 வரை அமிர்த யோகம். பிறகு மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=387&dpx=2&t=1768211027

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 308

good morning...

  • 306

Canada Saravanapavan dosa

  • 369
  • 1

Good Morning

  • 369
·
Added joke

சார்...என்னோட bank cheque எப்போ clear ஆகும்...?

3 நாள் ஆவும்

ஏங்க...உங்க பேங்குக்கு எதிர்த்தாப்பல தான் என் பேங்க் இருக்கு...இதுக்கு 3 நாள் ஆகுமா...?

எல்லா பேங்க்குக்கும் சில ரூல்ஸ் இருக்கு ..உங்க பேங்க் பக்கத்து ரூம்ல இருந்தாலும் கூட சில ரூல்ஸ் பாலோ பண்ணனும்...

அப்படி என்னங்க பெரிய ரூல்ஸ்?

இப்ப நீங்க வெளியே போறீங்க...வழில ஒரு சுடுகாடு வருது...அதுக்கு பக்கத்துல நீங்க போகும்போது திடீர்னு உயிர் போயிருச்சுன்னா, சுடுகாடு பக்கத்திலேயே இருக்குங்றதுக்காக அப்படியே தூக்கிட்டு போய் எரிக்க முடியுமா? அதுக்குன்னு சில சம்பிரதாயங்கள் இருக்குல்ல.அதே மாதிரி தான் இதுவும்...

எதே...

  • 469
·
Added joke

இரண்டு பெண்மணிகள் அமர்ந்து ஒரு உணவகத்தில் காபி அருந்திக்கொண்டிருந்தார்கள் .

அம்மணி 1: என் முதல் குழந்தை பிறந்த போது என் கணவர் எனக்கு ஒரு வைர அட்டிகை வாங்கித் தந்தார் ....

அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...

அம்மணி 1: இரண்டாவது குழந்தை பிறந்த போது World டூர் கூட்டிண்டு போனார் ...

அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...

அம்மணி 1: மூன்றாவது குழந்தை பிறந்ததும் இப்போ நாங்க இருக்கற பங்களாவை வாங்கி குடுத்துட்டார் ....

அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...

அம்மணி 1: உனக்கு குழந்தைகள் பிறக்கும் போது உன் கணவர் என்ன பண்ணினார் ?

அம்மணி 2: என்னை காந்தி மாதர் தமிழ் பயிற்சி மையத்துக்கு அனுப்பினார் ...

அம்மணி 1: அங்கே என்ன கத்துகிட்டே ?

அம்மணி 2: உன்னைய மாதிரி திமிரு பிடிச்ச பொம்பளைங்க பேசும்போது

" போடி " அப்படின்னு சொல்றதுக்கு பதிலா " அவருக்கு ரொம்ப நல்ல மனசு" ன்னு சொல்ல கத்துக்குடுத்தாங்க ....

  • 469
·
Added article

‘ஜனநாயகன்’ படத்தை திட்​ட​மிட்​டபடி வெளி​யிட அனைத்து முயற்​சிகளை​யும் மேற்​கொண்ட போதி​லும், கட்​டுப்​பாட்​டுக்கு அப்​பாற்​பட்ட சில காரணங்​களால் சொன்ன தேதி​யில் ரிலீஸ் செய்​ய​ முடிய​வில்​லை.

கடந்த 33 ஆண்​டுகளாக நடிகர் விஜய் தனது ரசிகர்​களிட​மிருந்து பெற்ற அன்​பு, திரைத்​துறைக்கு ஆற்றிய பங்​களிப்புக்காக அவருக்கு ஓர் அற்​புத​மான பிரி​யா​ விடை அளிக்​கப்பட வேண்​டும். அதற்கு அவர் அனைத்து வகை​யிலும் தகு​தி​யானவர். நீதித்​துறை நடை​முறை​கள் மீது நம்​பிக்கை இருக்​கிறது. விரை​வில் படம் வெளி​யாகும்” என்று வெங்கட் நாராயணா கூறியுள்​ளார்.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக் காலத் தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை திங்களன்று அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 611
·
Added article

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினால் இப்படம் வெளியாகாமல் இருந்தது. ரூ.21 கோடி செலுத்திவிட்டு படத்தினை வெளியிடலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இப்பணத்தினை தயார் செய்துவிட்டார் என்கிறார்கள். இதனாலேயே தைரியமாக ஜனவரி 14-ம் தேதி வெளியீடு என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஜனவரி 12 உயர் நீதிமன்றத்தில் பணத்தினை செலுத்தி தடையினை நீக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் ஜனவரி 14-ம் தேதி வெளியீட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என படக்குழு சார்பில் விநியோகஸ்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 624
·
Added a post

மனித வாழ்வில் நட்பு, காதல் இரண்டும் முக்கியமான விஷயங்கள். சில நட்புகள் நன்மை தரும், சில நட்புகள் தீமை பயக்கும். எது எப்படி இருந்தாலும் இளம் வயதில் ஏற்படும் நட்பு, அவர்களின் வயதான காலத்தில் உடல், உள்ள ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உதவுவதாக அமெரிக்காவில் உள்ள ராச்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவில், நண்பர்களுடன் குதூகலமாக நேரத்தைச் செலவிடுபவர்கள் தமது பிந்தைய காலத்தில் உடல், உள ஆரோக்கியத்தில் நல்லவிதமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்பு பாராட்டுவது உங்கள் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் என்று 12 வகையான ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கும்போது உங்கள் ரத்த அழுத்தம் குறைந்து சீரான ஓட்டத்திற்கு மாறுகிறது. உடலில் வீக்கங்கள் குறையும், வலிகளை குறைக்கும் ஆக்டிவ் புரோட்டீன் உடலில் சேர்கிறது. இதுவே இதயநோய் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்க உதவுகிறது என்கிறார்கள் சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

  • 603
  • 623

வாழ்க்கையின் அழகு என்பது

நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீா்கள் என்பதில் இல்லை..!.

உங்களால்

அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி

அடைகிறார்கள் என்பதிலேயே இருக்கிறது..!

  • 669
·
Added a post

மேஷம்

பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பயணங்களில் இருந்த தடைகள் குறையும். தவறிய சில பொருள்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கும். அதிகார மமதையில் செயல்படுவதை தவிர்க்கவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

ரிஷபம்

ஆரோக்கிய இன்னல்கள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். வெளி உணவுகளை தவிர்க்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். போட்டி விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்

 

மிதுனம்

உற்சாகமான சிந்தனைகள் மனதளவில் உண்டாகும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பிரபலமானவர்களின் தொடர்புகள் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

 

கடகம்

உறவினர் மற்றும் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நீண்ட நாள் எண்ணிய சில பயணங்கள் சிறப்பாக அமையும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கும் மதிப்பும் உயரும். புதிய பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். அறக்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். சிரமம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

சிம்மம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் கைகூடிவரும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கன்னி

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். தோற்ற பொழிவுகள் மேம்படும். நவீன கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

துலாம்

தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிக்கலான செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வாகன வழியில் சில விரயம் ஏற்படும். வரவுகளில் சில இழுபறியான சூழல் ஏற்படும். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபாவமும் நிலவும். சுபகாரிய பேச்சுக்களில் பொறுமை வேண்டும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

விருச்சிகம்

புது விதமான பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் தொடர்புகளால் மேன்மை உண்டாகும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தொழில் சார்ந்த செயல்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். குடியுரிமை சார்ந்த பிரச்சனைகள் குறையும். உபரி வருமான முயற்சிகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

தனுசு

வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். அதிகாரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆன்மீகத்தில் தெளிவுகள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

இல்லத்தில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடி வரும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

கும்பம்

எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும். ஆன்மிக பணிகளால் மனதில் தெளிவுகள் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். சோர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் அனுசரித்து செல்லவும். சிறு வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் வழியில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்ட நீங்கும். நெருக்கமானவர்களை புரிதல்கள் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 870
  • 928
  • 928

காலை வணக்கம்

  • 938
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11.1.2026.

இன்று பிற்பகல் 01.42 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று இரவு 09.33 வரை சித்திரை. பின்னர் சுவாதி.

இன்று இரவு 08.50 வரை சுகர்மம். பின்னர் திருதி.

இன்று அதிகாலை 01.08 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 01.42 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று காலை 6.32 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=386&dpx=2&t=1768100178

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 1022

Good Morning....

  • 969
·
Added article

‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் தான் நம்பர் ஒன்” என்று அவரது தோழி கெனிஷா கருத்து தெரிவித்துள்ளார்.

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பராசக்தி’. இப்படத்தில் ரவி மோகன் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். இன்று காலை படக்குழுவினர் வெவ்வேறு திரையரங்குகளில் ‘பராசக்தி’ படத்தை கண்டுகளித்தனர்.

சென்னை - காசி திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தை கண்டு களித்தார் ரவி மோகன். அவருடன் அவரது தோழியான கெனிஷாவும் வந்திருந்தார். படம் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் கெனிஷா பேசும்போது, “அவர் வில்லனாக நடித்தால் என்ன, ஹீரோவாக நடித்தால் என்ன... அவரால் படம் ஓடும். இந்த கதாபாத்திரத்துக்காக 6 மாதங்கள் கடுமையாக உழைத்தார். என் கண்ணுக்கு அவரை தவிர வேறு யாரும் தெரியவில்லை.

இந்தப் படத்தை பார்க்கும்போது அவருக்காகவே பண்ணியிருக்கிறார்கள் என்று தோன்றியது. ‘பராசக்தி’ படத்தில் அவர்தான் நம்பர் ஒன். முதல் பாதியில் அவரை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். 2-ம் பாதியில் அவரைத் தாண்டி எதுவுமே இல்லை என தெரிந்துவிடும்” என்று கெனிஷா தெரிவித்துள்ளார்.

  • 1256