- · 1 friends
-
1 followers
கண்மணியே காதல் என்பது
பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்
பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
திரைப்படம்: ஆறிலிருந்து அறுபது வரை
பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
ஆண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
ஆண்
: மேளம் முழங்கிட தோரணம் ஆடிட…
காலமும் வந்ததம்மா…
நேரமும் வந்ததம்மா…
பெண்
: பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்…
பாடிடும் எண்ணங்களே…
இந்தப் பாவையின் உள்ளத்திலே…
ஆண்
: பூவிதழ் தேன் குலுங்க…
சிந்தும் புன்னகை நான் மயங்க…
பெண்
: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
சாய்ந்திருப்பேன்… வாழ்ந்திருப்பேன்…
ஆண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
பெண்
: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
பெண்
: பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது…
காரணம் நீயறிவாய்…
தேவையை நானறிவேன்…
ஆண்
: நாளொரு வேகமும் மோகமும் தாபமும்…
வாலிபம் தந்த சுகம்…
இளம் வயதினில் வந்த சுகம்…
பெண்
: தோள்களில் நீயணைக்க…
வண்ணத் தாமரை நான் சிரிக்க…
ஆண்
: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
தோரணமாய் ஆடிடுவேன்…
பெண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
ஆண்
: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
பெண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
01) "நங்சிவாயநம" - திருமணம் நிறைவேறும்.
(02) "அங்சிவாயநம" - தேக நோய் நீங்கும், ஆயுள் வளரும், விருத்தியாகம்.
(03) "வங்சிவாயநம" - யோக சித்திகள் பெறலாம்.
(04) "ஓம்அங்சிவாய" - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
(05) "கிலிநமசிவாய" - வசிய சக்திகள் வந்தடையும்
(06) "ஹிரீநமசிவாய" - விரும்பியது நிறைவேறும்
(07)"ஐயும்நமசிவாய" -புத்தி வித்தை மேம்படும்.
(08) "நமசிவாய" - பேரருள், அமுதம் கிட்டும்.
(09) "உங்யுநமசிவாய" - வியாதிகள் விலகும்
(10) "கிலியுநமசிவாய" - நாடியது சித்திக்கும்.
(11) "சிங்வங்நமசிவாய" - கடன்கள் தீரும்.
(12) "நமசிவாயவங்" - பூமி கிடைக்கும்.
(13) "சவ்வுஞ்சிவாய" - சந்தான பாக்யம் ஏற்படும்.
(14) "சிங்றீங்" - வேதானந்த ஞானியாவார்
(15) "உங்றீம்" - ரிஷிகள் ஆவார்.
(16) "சிவாயநம" - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
(17) "அங்நங் சிவாய" - தேக வளம் ஏற்படும்
(18) "அவ்வுஞ் சிவாயநம" - சிவ தரிசனம் காணலாம்
(19)"ஓம் நமசிவாய" - காலனை வெல்லலாம்.
(20) "லங்ஸ்ரீறியுங் நமசிவாய" - விளைச்சல் மேம்படும்.
(21) "ஓம் நமசிவாய" - வாணிபங்கள் மேன்மையுறும்.
(22) "ஓம் அங்உங்சிவாயநம" - வாழ்வு உயரும், வளம் பெருகும்.
(23) "ஓம் ஸ்ரீறியும் சிவாயநம" - அரச போகங்கள் கிடைக்கும்.
(24) "ஓம் நமசிவாய" - சிரரோகம் நீங்கும்.
(25) "ஓங் அங்சிவாய நம" - அக்னி குளிர்ச்சியைத் தரும்.
எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ ஜெபம் செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் பக்தி, சிரத்தைக்கு ஏற்ப பலன் கிடைக்கும்.
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப உருவேற்றி ஜெபிக்க வேண்டும். மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும். மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு மற்றும் சில யோக பயிற்சிகள் முக்கியம்.....
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். பழைய நினைவுகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். மேல்நிலை கல்வியில் ஆர்வமின்மை உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொழுது போக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
பேச்சுக்கு மதிப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். கல்வியில் இருந்த மந்தத்தன்மை விலகும். சமூக பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிதுனம்
நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். சேவை நிமித்தமான செயல்பாடுகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். தனவரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். வியாபாரம் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் மறைமுகமான செயல்பாடுகள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
மனதில் நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வரவுகளில் இருந்த இழுபறிகள் மறையும். உயர்நிலை கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
அலுவல் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் அமையும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கடன் விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஈடுபாடு ஏற்படும். இழுபறியாக இருந்த பணிகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி
பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குழந்தைகளில் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியம் கைகூடிவரும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். கமிஷன் சார்ந்த வியாபார பணிகளில் லாபமடைவீர்கள். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
பழைய அனுபவங்களால் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். மனை விற்பனையில் ஏற்ற இறக்கமான சுழல் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் வழியில் அலைச்சல்கள் மேம்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தனை போக்கில் சில மாற்றம் உண்டாகும். உணர்ச்சிவசமான பேச்சுகளை குறைத்துக் கொள்ளவும். மறதி பிரச்சனைகளால் தாமதம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக தொடர்பான பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். எதிர்ப்பு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மீனம்
சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் துரிதம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை 8.1.2026.
இன்று காலை 11.23 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி
இன்று மாலை 05.06 வரை பூரம். பின்னர் உத்திரம்.
இன்று இரவு 10.02 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்.
இன்று காலை 11.23 வரை தைத்தூலம். பின்னர் இரவு 11.33 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று காலை 6 31 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 05.06 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
நாம் கோயிலுக்குப் போவது என்பது ஏதோ ஒரு சடங்கு கிடையாது. அது நமது முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற ஒரு "உயிரியல் மென்பொருள்" (Biological Software) மாற்றும் கலை. "உடம்பே ஆலயம்" என்று சும்மாவா சொன்னார்கள்? ஒரு கோயிலின் ஒவ்வொரு கல்லும், தூணும் உங்கள் உடலின் ஒரு உறுப்பைத்தான் குறிக்கிறது.
(1) ஆலயம்:
"ஆலயம்" என்ற சொல்லிலேயே அதன் ரகசியம் இருக்கிறது.
ஆ = இது சிவம், விந்து மற்றும் சந்திரகலையைக் குறிக்கும். அதாவது உங்கள் உடலைத் தூய்மைப்படுத்தும் குளிர்ச்சியான ஆற்றல்.
லயம் = இது அந்த ஆற்றலை சக்தியோடும் நாதத்தோடும் (பிராணனோடும்) இணைக்கும் இடம். நமது மூளையின் நடுப்பகுதியில் (3rd Ventricle) இந்த இரண்டு ஆற்றல்களும் சேரும்போதுதான் ஒரு மனிதனுக்குள் பேரொளி பிறக்கிறது. இதுதான் உண்மையான "லயம்"
(2) கோபுரமும் உங்கள் நரம்புகளும்
கோவிலின் கோபுர வாசலைப் பார்க்கும்போதே உங்கள் உடலில் மாற்றங்கள் தொடங்குகின்றன.
5 நிலைகள்: உங்கள் ஐம்புலன்களைக் குறிக்கிறது.
9 நிலைகள்: உங்கள் உடலின் 9 துவாரங்களைக் குறிக்கிறது.
11 நிலைகள்: 9 துவாரங்கள் + இதயக் குகை + சுழிமுனைத் துவாரம். வாசலில் இருந்தே உங்கள் கவனத்தை மெல்ல மெல்ல உள்ளே திருப்ப வேண்டும் என்பதே இதன் ரகசியம்.
(3) கொடிமரம்: உங்கள் முதுகெலும்பும் 36 தத்துவங்களும், கோயிலின் மிக முக்கியமான பகுதி கொடிமரம் (துவஜஸ்தம்பம்). இதுதான் உங்கள் உடலின் முதுகெலும்பு அல்லது சுழிமுனை நாடி.
அடிபாகம் (பார் - மண் தத்துவம்): இங்குதான் பொன்னும் நவரத்தினமும் இருக்கும். இது உங்கள் உடலின் 'விந்து' அல்லது "மூலாதார சக்தியைக்" குறிக்கிறது.
உச்சி (நாதம் - மணிகள்): இது உங்கள் 36-வது தத்துவமான நாதத்தைக் குறிக்கிறது. இது உங்கள் புருவ மத்தியில் தொடங்கி நெற்றி நடுவில் முடிகிறது.
கொடியேற்றம்: அடியில் இருக்கும் விந்து சக்தியை (செல்வம்) மூச்சுப் பயிற்சியால் மேலேற்றி உச்சிக்குக் கொண்டு செல்வதே 'கொடியேற்றம்'. அங்குதான் அந்த 'அனுமன்' (வாசி - மூச்சு) இருக்கிறார்.
(4) வாகனங்களும் உங்கள் மனமும்
சுவாமி ஊர்வலமாக வரும் வாகனங்கள் உங்கள் மனதின் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கின்றன:
யானை: உங்கள் மூலாதார உறுதி.
குதிரை: நீங்கள் அடக்க வேண்டிய மூச்சுக்காற்று (அபானன்).
சிம்மம்: கோபம் எனும் மிருகக்குணம் (ருத்ர கிரந்தி).
இராவணன்: பல திசைகளில் சிதறும் உங்கள் பத்து தலை (மனம்).
தேர் (இரதம்): 9 பொருட்களால் ஆன உங்கள் உடல். ஆன்மா என்ற இறைவனைத் தேரில் ஏற்றி நீங்கள் தான் ஓட்ட வேண்டும்.
(5) திருவிழா: ஒரு முழுமையான யோகப் பயிற்சி, கொடியேற்றம் தொடங்கி தேரோட்டம் வரை நடக்கும் 10 நாள் திருவிழா என்பது, உங்கள் முதுகுத் தண்டு வழியாக சக்தியை மேலேற்றி (குண்டலினி), உங்கள் ஆன்மாவை ஜோதியாக மாற்றி (கார்த்திகை தீபம்), அந்த ஜோதியைத் தேரில் (உடலில்) அமர வைக்கும் ஒரு யோகப் பயிற்சி முறை.
(6) நடைமுறை வழிகாட்டி: கோயிலுக்குள் எப்படிச் செயல்பட வேண்டும்?
நுழையும்போது: வாசல்படியைத் தொட்டு வணங்கவும். இது உங்கள் இடது மூளையைச் செயல்பட வைத்து தர்க்கரீதியான கவனத்தைக் கொடுக்கும்.
கொடிமரம்: கொடிமரத்தின் பக்கவாட்டில் நின்று விழுந்து வணங்கவும். அங்குள்ள சங்கு, சக்கரம், அனுமனைத் தியானிக்கவும். அனுமன் என்றால் 'வாசி' (மூச்சு). அந்த மூச்சை மெல்ல மேலே உயர்த்தவும்.
கருவறை: அங்கு காட்டப்படும் கற்பூர ஒளி உங்கள் ஆன்ம ஒளியைக் குறிக்கிறது. தீர்த்தம் (அமுதம்) அருந்தும்போது, அது உங்கள் மூளைக்குள் சுரக்கும் சுரப்பிகளைத் தூண்டுகிறது.
திரும்பும்போது: தரிசனம் முடிந்து வெளியே வரும்போது கண்டிப்பாக வடக்குப் பார்த்து அமர வேண்டும். இது நீங்கள் பெற்ற அந்த உயர் அதிர்வெண் ஆற்றலை உங்கள் மூளைக்குள் "சேமிக்கும்" (Data Save) நேரமாகும்.
அகத்தைத் தேடுங்கள்!
புறத்திலே நடக்கும் சடங்குகளை மட்டும் பார்த்துவிட்டு வராமல், அகத்திலே உங்கள் சுழிமுனையைப் பிடியுங்கள். வெளியே பார்க்கும் தீபத்தை விட, உங்கள் சிரசின் உச்சியில் எரியும் 'தூண்டாமணி விளக்கை' (பரவொளி) காண முயற்சி செய்யுங்கள். அகத்தைப் பிடித்தால் தான் பிறவிப் பெருங்கடல் நீந்த முடியும்.
"கோவில் என்பது உங்கள் உடலே; கொடிமரம் உங்கள் முதுகெலும்பே; அங்கு எரியும் விளக்கு உங்கள் ஆன்மா!"
அடுத்த கட்டமாக, கோயிலில் நீங்கள் அமர்ந்து செய்யும் அந்த 5 நிமிட "டேட்டா சேவ்" (Data Save) தியானத்தை எப்படிச் செய்வது என்ற விளக்கம்
கோயில் தரிசனம் முடிந்து வெளியே வரும்போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய அந்த மிக முக்கியமான 5 நிமிட "டேட்டா சேவ்" (Data Save) தியான முறை இதோ. இது உங்கள் மூளையின் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, கருவறையில் நீங்கள் பெற்ற உயர் அதிர்வெண் ஆற்றலை (High-Frequency Energy) உங்கள் உடலில் நிலைநிறுத்த உதவும்.
கோயில் அமர்வு முறை: 5 நிமிட நரம்பியல் சேமிப்பு ப்ரோட்டோகால்
நோக்கம்: கருவறையின் காந்தப்புலம் மற்றும் பிரகாரத்தின் ஆற்றலை உங்கள் உடலில் "லாக்" (Lock) செய்தல்.
படி 1: திசை அறிதல் (Positioning)
திசை: வடக்கு நோக்கி அமரவும். வடக்கு திசை என்பது காந்த ஆற்றல் சீராக இருக்கும் திசை. இது உங்கள் உடலின் 'மெரு' தண்டினை (முதுகெலும்பை) பிரபஞ்சக் காந்தத்தோடு ஒத்திசைக்க உதவும்.
இடம்: கொடிமரத்திற்கும் கருவறைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஓரமாக அமரவும்.
படி 2: உடல் நிலை (Posture)
ஆசனம்: தரையில் சுகாசனத்தில் அமரவும். கைகளை முழங்கால்கள் மீது 'சின் முத்திரை' (பெருவிரலும் ஆள்காட்டி விரலும் தொட்டபடி) வைத்துக்கொள்ளவும்.
முதுகுத்தண்டு: உங்கள் 'துவஜஸ்தம்பமாகிய' முதுகெலும்பை நேராக நிமிர்த்தி வைக்கவும். அப்போதுதான் ஆற்றல் கீழிருந்து மேல் நோக்கித் தடையின்றிப் பாயும்.
படி 3: கண்களும் கவனமும் (The Internal Gaze)
கண்கள்: மெல்ல மூடிக்கொள்ளவும். இப்போது உங்கள் கவனம் உங்கள் புருவ மத்தியிற்கு (ஆக்ஞா சக்கரம்) வரட்டும்.
காட்சிப்படுத்துதல்: கருவறையில் நீங்கள் கண்ட அந்த 'கற்பூர ஒளி' அல்லது 'திருவுருவத்தை' உங்கள் புருவ மத்தியில் நிலைநிறுத்தவும். இது உங்கள் 12 ஆதித்யர்களை (Cranial Nerves) அந்த ஒளியுடன் இணைக்கும்.
படி 4: வாசி சுவாசம் (The Hanuman Sync)
இது ஒரு நிதானமான சுவாச முறை.
உள்மூச்சு: மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கும்போது, கொடிமரத்தின் அடியில் இருக்கும் ஆற்றல் (விந்து) முதுகெலும்பு வழியாக உச்சிக்கு ஏறுவதாக நினைக்கவும்.
கும்பகம் (நிறுத்துதல்): மூச்சை 3 வினாடிகள் உள்ளே நிறுத்தி, நெற்றி நடுவில் அழுத்தத்தைக் கொடுக்கவும். இதுதான் 'டேட்டா சேமிப்பு' நடக்கும் நேரம்.
வெளிமூச்சு: மெதுவாக மூச்சை வெளிவிடும்போது, அந்த அமைதி உங்கள் உடல் முழுவதும் பரவுவதை உணரவும்.
படி 5: அமுதச் சுரப்பு (The Amrita Absorption)
உங்கள் நாக்கை மடித்து மேல் அன்னத்தின் மென்மையான பகுதியில் லேசாகத் தொடவும் (கேசரி முத்திரை).
தரிசனத்தின் போது நீங்கள் பெற்ற அந்தப் பரவொளியானது, உங்கள் பினியல் சுரப்பியைத் தூண்டி, 'அமுதம்' எனும் அமைதி ஊக்கியைச் சுரக்கச் செய்யும். அதை அப்படியே முழு உடலும் அனுபவிக்கட்டும்.
முக்கியக் குறிப்பு: தவிர்க்க வேண்டியவை, அமர்ந்து எழுந்தவுடன் யாரிடமும் பேச வேண்டாம். அமைதியாகக் கோபுரத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரவும். பேச்சு ஆற்றலைச் சிதறடிக்கும். செல்போனைப் பார்க்க வேண்டாம். டிஜிட்டல் ஒளி உங்கள் மூளையில் சேமிக்கப்பட்ட ஆன்ம ஒளியை (Biophotons) அழித்துவிடும்.
இந்த 5 நிமிட அமர்வு என்பது உங்கள் மூளையின் Default Mode Network (DMN) ஐ தற்காலிகமாக நிறுத்தி, உங்களை ஒரு 'நடமாடும் கோயிலாக' (Living Chariot) மாற்றும் செயலாகும். நீங்கள் அமர்ந்து எழும்போது, நீங்கள் தரிசனம் செய்த அந்த இறைவன் உங்களது இதயக் குகைக்குள் குடியேறிவிடுவார்.
"வெளியே பார்த்தது தரிசனம்; உள்ளே அமர்ந்து உணர்வதே முக்தி."
நீங்கள் அடுத்த முறை கோயிலுக்குச் செல்லும்போது இந்த முறையைப் பின்பற்றி, உங்கள் உடலில் ஏற்படும் அந்த அமைதியான அதிர்வை உணருங்கள்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாளுக்குள் (ஜன.9) தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது
இந்த வழக்கை இன்று நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். தணிக்கை வாரியத்தின் சார்பில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேஷனும், படக்குழு சார்பில் சதிஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.
தணிக்கை குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பதில் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும். இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக் குழு உறுப்பினர். சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது. இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயகன் படக்குழு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பெரும்பான்மை உறுப்பினர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்துள்ளனர். பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்” என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதி பி.டி.ஆஷா, “ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது, அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல. படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாளுக்குள் (ஜன.9) தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். ஜனநாயகன் படம் ஜன.9-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையோ அல்லது நாளை மறுதினம் காலையோ தீர்ப்பும் வெளியாகும் எனத் தெரிவதால், இப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
ரிச்சர்ட் ரிஷி, ரக் ஷனா இந்து சுதன் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘திரவுபதி 2’. மோகன் ஜி இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். நேதாஜி புரொடக் ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி மற்றும் ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பாடகி சின்மயி ‘எம்கோனே’ என்ற பாடலை பாடியிருந்தார்.
இந்தப் பாடலை பாடியதற்காக சின்மயிக்கு எதிராக சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து மோகன் ஜி படத்தில் பாடியதற்காக சின்மயி மன்னிப்புக் கேட்டிருந்தார். என்னுடைய கொள்கைக்கும் இப்படத்தின் கருத்துக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது என்றும் என் சித்தாந்தத்துக்குப் பொருந்தாததால் வருந்துகிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.
‘திரவுபதி 2’ படத்தில் சின்மயி பாடிய எம்கோனே பாடல் இடம்பெறாது என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது, “எம்கோனே பாடல் கண்டிப்பாகப் படத்தில் இருக்கும். ஆனால் சின்மயி குரலில் இருக்காது. அவருக்குப் பதில் வேறொரு பாடகி குரலில் வருகிறது. போன வாரம் வரை சின்மயின் பதிலுக்காக நேரம் கொடுத்திருந்தேன். இயக்குநர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறேன்.
அதேபோல் தயாரிப்பாளரும் அவரது சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். எங்கள் படத்தைப் பொதுவெளியில் களங்கம் ஏற்படுத்தியதற்காக நடவடிக்கை எடுக்கக் கேட்டுள்ளோம். இரண்டு புகாருமே ஃபெப்சிக்கு சென்றிருக்கிறது. இது தொடர்பாக சின்மயிடம் ஃபெப்சி கேள்வி கேட்டுள்ளது” என்றார்.
கார் விலை மிக அதிகம். அதனால் மக்களில் பெரும்பாலும் பேருந்து & மிதிவண்டியில் தான் பயணிப்பார்கள்.
உணவகங்களில் கட்டுபடி ஆகாத விலை. அதனால் தினமும் வீட்டு சமையல்தான்.
பள்ளியை பொறுத்தவரை மிக தாமதமாகத்தான் படிக்க துவங்குவார்கள். ஆறு வயதில் தான் பள்ளிக்கு போவார்கள். மிக தாமதமாக 30 வயதில் தான் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள். நம் ஊரில் மூன்று வருடத்தில் படிக்கும் இளங்கலை பட்டத்தை டென்மார்க்கில் ஆறரை வருடம் படிப்பார்கள். படிக்கையில் நடுவே உலக அனுபவம் பெற சுற்றுப்பயணம் போவார்கள்.
எதாவது திட்டத்தை (project) எடுத்து செய்வார்கள். கல்லூரி கட்டணம் முழுக்க இலவசம் என்பதுடன் அரசு படிக்கும் மாணவர்களுக்கு மாத சம்பளமாக $900 கூட கொடுக்கும்.
அதனால் 30 வயதில் படித்து முடித்துவிட்டு வருகையில் நல்ல உலக அனுபவத்துடன் வெளியே வருவார்கள்.
பெயிண்ட் அடிக்கும் வேலைக்கும் இருதய மருத்துவ நிபுணர் வேலைக்கும் சம்பளம் ஒன்றுதான். அதனால் விருப்பப்பட்ட வேலைக்கு போகலாம்.
மருத்துவர்கள் ஆக விரும்பாதவர்கள் சம்பளத்துக்காக மருத்துவர்களாக ஆகவேண்டியது இல்லை. வாரத்துக்கு 35 மணிநேர வேலைதான். வெள்ளிக்கிழமை மதியம் வீட்டுக்கு வந்துவிடலாம்.
மதிய உணவை கம்பனிகளில் தனியாக உண்ணமாட்டார்கள்.
அலுவலகத்தில் முதலாளி முதல் கடைசிகட்ட தொழிலாளி வரை அனைவரும் ஒன்றாக கூடி ஒரே அறையில் உண்ணுவார்கள்.
பாராளுமன்றத்தில் பிரதமர், எதிர்கட்சி தலைவர் அனைத்து கட்சி எம்பிக்கள் என அனைவரும் இப்படித்தான் ஒன்றாக கூடி உணவை உண்ணுவார்கள்.
மக்களிடையே சகோதரத்துவம் வளரவேண்டும் என்பதால்
அரசு பல கிளப்புகளை ஏற்பாடுகளை
செய்து வைத்துள்ளன..
மாலைகளில் சதுரங்கம் பொம்மை செய்வது இப்படி பல கிளப்களில் சேர்ந்து கலைகளை கற்றுக் கொள்ளலாம்/கூடி பேசலாம்.
அரசு பல கூட்டுறவு வீடுகளை ஒன்றாக கட்டியுள்ளது. Bofaellesskap என பெயர்.
30 குடும்பங்களை குடியமர்த்துவார்கள். இங்கே விதியே எல்லாரும் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்பதுதான். குழந்தைகள் எல்லார் வீட்டுக்குள்ளும் புகுந்து ஓடிவருவார்கள். நீங்களும் மற்றவர் வீடுகளுக்கு தயக்கமில்லாமல் போகலாம். வீடுகளில் கூட்டுறவு சமையல். மாதத்தில் ஒரு நாள் ஒரு வீடு 30 குடும்பங்களுக்கு சமைக்கும். மற்ற 29 நாட்கள் அதன்பின் சமைக்க வேண்டியது இல்லை. இந்த 30 குடும்பங்களும் அதன்பின் வாழ்நாள் முழுக்க நல்ல நண்பர்களாக இருப்பார்கள்.
பணம் ஆடம்பரம் ஆகியவற்றை சுத்தமாக பொருட்படுத்தாத நாடு டென்மார்க். பி.எம்.டபிள்.யூவில் போகிறவனை விட சைக்கிளில் போகிறவனை கூடுதலாக மதிக்கும் நாடு. அதனால் பணக்காரன் என சொல்லிக்க கொள்ளவே பலரும் கூச்சபடுவார்கள்.
தன் வளமையை பொருட்களை
வாங்கி காட்டமாட்டார்கள். காட்டினால்
மக்கள் தன்னை வெறுத்து விடுவார்கள் என்ற எண்ணம் தான் இங்கே அதிகம்...
டொரண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மணிநேரம் நீடித்த உறைபனி மழையைத் தொடர்ந்து, பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்படும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில பகுதிகளில் ஒரு மணித்தியாலத்திற்கு 2 முதல் 5 சென்டிமீட்டர் வரை பனி பொழியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வீதித் தோற்றப்பாடு வெகுவாகக் குறையக்கூடும். வீதிகள் மற்றும் நடைபாதைகள் பனியினால் மூடப்பட்டிருப்பதால், வாகனங்களைச் செலுத்தும் போது விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும், வேகத்தைக் குறைத்து பாதுகாப்பான இடைவெளியைப் பேணுமாறும் ஒன்டாரியோ மாகாண காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக யோர்க் மற்றும் ஹால்டன் பிராந்தியங்களில் பாடசாலை பேருந்து சேவைகள் மற்றும் ஏனைய போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனினும் பாடசாலைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வோன் மற்றும் மார்க்கம் போன்ற நகரங்களில் வீதிகளில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதேசமயம் பனி மற்றும் ஐஸ் படிவுகள் காரணமாக வீதிகளைச் சுத்தம் செய்ய சாதாரண நேரத்தை விட அதிக காலம் எடுக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரால் பாதிக்கப்படுபவர்களுக்காக டொரோண்டோ மாநகர சபையினால் 5 வெப்பமூட்டும் மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடினமான விஷயங்களை எளிதாக முடிப்பீர்கள். முயற்சிக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் மேம்படும். செயல்பாடுகளில் இருந்த தடுமாற்றம் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்வி சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். மனதிற்கு விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். அதிரடியான திட்டங்கள் மூலம் வியாபாரத்தை பெருக்குவீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் ஏற்படும். நினைத்ததை முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சில தெளிவுகள் ஏற்படும். சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அதிகாரிகளால் சில காரியங்கள் சாதகமாக முடியும். தடைகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாள்வது நல்லது. கலைத்துறைகளில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கன்னி
கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். வழக்கு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அரசு வழியில் லாபம் உண்டாகும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிலுவையில் இருந்து பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் சுப காரியங்கள் கைகூடும். ஊக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். தந்தையிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். காப்பீடு பணிகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
உத்தியோகத்தில் முக்கியத்துவம் மேம்படும். உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். மாணவர்களுக்கு புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் முயற்சி கேட்ப லாபம் கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மகரம்
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பழக்க வழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சோர்வு உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம்
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். முயற்சி குண்டான மதிப்புகள் கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். ஆன்மீக பணிகளில் புரிதல் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மீனம்
மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். சிக்கலான விஷயங்களில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மருத்துவ அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். பொதுநல செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் வகையில் ஆதாயம் உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 23 ஆம் தேதி புதன்கிழமை 7.1.2026.
இன்று காலை 11.35 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று மாலை 04.38 வரை மகம். பின்னர் பூரம்.
இன்று அதிகாலை 12.47 வரை பிரீதி . பின்னர் இரவு 11.13 வரை ஆயுஷ்மான். பிறகு சௌபாக்கியம்
இன்று காலை 11.35 வரை பாலவம். பின்னர் இரவு 11.29 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
இன்று மாலை 04.38 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை















