- · 1 friends
-
1 followers
கண்மணியே காதல் என்பது
பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்
பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
திரைப்படம்: ஆறிலிருந்து அறுபது வரை
பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
ஆண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
ஆண்
: மேளம் முழங்கிட தோரணம் ஆடிட…
காலமும் வந்ததம்மா…
நேரமும் வந்ததம்மா…
பெண்
: பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்…
பாடிடும் எண்ணங்களே…
இந்தப் பாவையின் உள்ளத்திலே…
ஆண்
: பூவிதழ் தேன் குலுங்க…
சிந்தும் புன்னகை நான் மயங்க…
பெண்
: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
சாய்ந்திருப்பேன்… வாழ்ந்திருப்பேன்…
ஆண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
பெண்
: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
பெண்
: பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது…
காரணம் நீயறிவாய்…
தேவையை நானறிவேன்…
ஆண்
: நாளொரு வேகமும் மோகமும் தாபமும்…
வாலிபம் தந்த சுகம்…
இளம் வயதினில் வந்த சுகம்…
பெண்
: தோள்களில் நீயணைக்க…
வண்ணத் தாமரை நான் சிரிக்க…
ஆண்
: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
தோரணமாய் ஆடிடுவேன்…
பெண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
ஆண்
: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
பெண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நினைத்த காரியங்களில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகள் அமையும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். வேலையாட்கள் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
ரிஷபம்
குழந்தைகளின் எண்ணங்களைப் பிரிந்து செயல்படுவீர்கள். மனைவி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ஒத்துழைப்பன சூழல் அமையும். உத்தியோகத்தில் தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உயர் அதிகாரிகள் பாராட்டும் விதத்தில் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் ஏற்படும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். புதுவிதமான கனவுகள் உருவாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
உறவினர்களின் சந்திப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு மேம்படும். தனிப்பட்ட கருத்துகளில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த சிக்கல்கள் குறையும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
கன்னி
இழுபறியான சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
துலாம்
வரவுக்கு ஏற்ப விரயங்கள் ஏற்படும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். பேச்சுத் திறமைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் இருந்த தாமதங்கள் விலகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
விருச்சிகம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும்.கணவன் - மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
வியாபாரத்தில் திடீர் விரயங்கள் உண்டாகும். பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வாகன பயணங்களில் மிதவேகம் நன்று. மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். பேச்சுகளில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். அரசு துறையில் சாதகமான சூழல் அமையும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செல்வ சேர்க்கைக்கான சிந்தனைகள் மேம்படும். சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கும்பம்
பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். பணி சார்ந்த முயற்சிகள் பலிதமாகும். அரசு சார்ந்த உதவிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்பு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
உழைப்புக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதயகரமான சூழல் உண்டாகும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் செல்வாக்கு அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். நன்மை
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி வியாழக்கிழமை 20.11.2025.
இன்று பிற்பகல் 12.31 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.
இன்று காலை 11.53 வரை விசாகம். பின்னர் அனுஷம்.
இன்று காலை 10.29 வரை ஷோபனம். பின்னர் அதிகண்டம்.
இன்று பிற்பகல் 12.31 வரை சகுனி. பின்னர் கிமிஸ்துக்கினம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்திருக்கும் திரைப்படம் தான் 'வாரணாசி'. இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கீரவாணி இசையமைத்து இருக்கும் திரைப்படம் 1200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிற்கு வழக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய மகேஷ் பாபு, இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன் என்றார். இந்த விழாவுக்கு மட்டும் ரூ.25 கோடி செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், மகேஷ் பாபு ருத்ரா எனும் கதாபாத்திரத்திலும், பிரியங்கா சோப்ரா மந்தாகினி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ராமாயணக் காலத்தில் தொடங்கி இன்றைய நவீன காலத்துடன் இணைத்து வகையில் 'வாரணாசி' கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது இந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் ஆகும். த்ரிஷா, நயன்தாரா, தீபிகா போன்ற முன்னணி நடிகைகள் ரூ.5-10 கோடி சம்பளம் பெறும் நிலையில் பிரியங்கா சோப்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நயன்தாரா நேற்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலர் நயன்தாராவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்த நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு சூப்பர் கிப்டை பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தொகுப்பாளனியாக தனது பயணத்தை தொடங்கிய நயன்தாரா, மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த பிறகு தமிழில் அய்யா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். இவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவரின் 41வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன், தனது காதல் மனைவிக்கு Black Badge spectre உயர்தர சொகுசு காரை பரிசாக அளித்து இருக்கிறார். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உயிர், நீ பிறந்தா தினம்.... வரம், உன்னை உண்மையாகவே, வெறித்தனமாக, ஆழமாக நேசிக்கிறேன். என் அழகியே உன்னை நேசிக்கிறேன். உன் உயிர், உலக், பெரிய உயிர், உன் அன்பான மக்களிடமிருந்து அதிக உள்ள அன்பு நிறைந்த வாழ்க்கையுடனும் நன்றி கூறுகிறேன். பிரபஞ்சம் மற்றும் எல்லாம் வல்ல கடவுள் எப்போதும் சிறந்த தருணங்களை நமக்கு ஆசீர்வதிக்கிறார் ஏராளமான அன்பு, அசைக்க முடியாத நேர்மறை மற்றும் தூய நல்லெண்ணத்தால் மட்டுமே நிரம்பி இருக்கிறது என பதிவிட்டுள்ளார். காதல் மனைவி நயன்தாராவிற்காக அவர் பரிசாக அளித்து இருக்கும் காரின் விலை, Rs. 9.97 கோடி ஆகும். இந்த காரின் விலையை கேள்விப்பட்டு ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.
சுனிதா கோகோய் முதலில் ஜூனியர் சுபாயா நடன ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர். அதைத் தொடர்ந்து 'த்ரீ' திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் பள்ளித் தோழியாக நடித்திருந்தார். அதன் பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கினார். அதன் பின், பிக் பாஸ் தமிழ் சீசனில் பங்கேற்று இன்னும் பரவலாக பேசப்பட்டார். அவரது இயல்பான பேச்சு, உற்சாகமான நடத்தை, டான்ஸ் திறன் ஆகியவற்றின் மூலம் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி சுனிதா, வெப் சீரிஸ்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில், ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும், சுனிதா தனது ஃபிட்னஸ் ஜர்னி, நடன ரீல்ஸ், பயண புகைப்படங்கள், ஃபேஷன் ஷூட்ஸ் போன்றவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார். அவரது ஒவ்வொரு பதிவும் ஆயிரக்கணக்கான லைக்குகளையும், நூற்றுக்கணக்கான கருத்துக்களையும் பெற்று வைரலாகிறது. அந்த வகையில் தற்போது இவர், நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதுநாள் வரை இதுபோன்ற கவர்ச்சியை காட்டாத சுனிதா திடீரென கவர்ச்சியில் எல்லை மீறியுள்ளது அவரது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் சுனிதாவை திட்டி வருகின்றனர்.
28இல் நுழைந்தாய்..
68இல் பிரிந்தாய்.
40வருட தாம்பத்யம்..
அதிக கொஞ்சல்கள்,
கம்மி சண்டைகள்..
அணுசரித்துப் போவதில் மன்னி நீ..
என்னையும் தான் இருக்கச் சொன்னாய்..
நீ இருந்தவரையில் அப்படி நான் இல்லை..
பஞ்சாயத்து பண்ண நீ இருந்தாய்.
நீ இல்லாத இப்போது
அனுசரித்து மட்டும் தான்
போக வேண்டி இருக்கிறது.
Kitchenஇல் நடக்கும் யுத்தம்..
பாத்திரம் தேய்க்க big boss போல shift..
காபி சூடாக இல்லை என்று எத்தனை தடவை கோபப்பட்டு இருப்பேன்
இப்போது பிரச்சினைகள் எப்போதும் சூடாக இருப்பதால் காணாமல் போய் விட்டது காஃபி
நம் ரூமில் நடுஇரவில் A/c ஆஃப் ஆகிவிடுகிறது.
Hallஇல் தூங்கினால் என்ன என்று ஜாடை மாடையாக உபதேசம்.
அனாயாசமாக 25 பேருக்கு சமைப்பாயே..
அதில் சுவையாய்
மணமும் இருக்கும்
உன் மனமும் இருக்கும்
இன்று எனக்கு google சமையல் பிடிக்கவே இல்லை.
ஒரே ஒரு நாள் எனக்காக இறங்கி வருவாயா நீ
இதமாக உன் கை விரல்களை
கோர்த்து கொண்டு காதலோடு சில மணி நேரம் காலாற நடக்க ஆசை
எனக்குப் பிடித்ததில் நீ செய்யாமல் போனது ஓன்று தான்.
கண்தானம்.
என்னையும் தடுத்தாய்..
நீ சொன்ன காரணம் மண்ணுலகில் கண்தானம் செய்துவிட்டால் விண்ணுலகிற்கு நீங்கள் வரும்போது எப்படி அடையாளம் கண்டுபிடிப்பேன் என்று கூறினாயே..
உண்மைதான்.
முன்போல் இல்லை உடல்நிலை.
எனக்கொரு இடம் முன்பதிவு செய்..
சந்திப்போம் விரைவில்.....
மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்
நமக்கே நமக்கான
வாழ்க்கையை
நமக்காக நாம் வாழ.
(மனதை கலங்க வைத்த கடிதம்)
ஒருமுறை ஆசிரமத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு செய்வதறியாது, தங்கியிருந்த பக்தர்களிடம்,'இன்று இரவு உணவோடு உக்கிராணம் காலி.
நாளை காலை உணவு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்' என்று நிர்வாகத்தால் பணிவோடு வேண்டுகோள் விடப்பட்டது.
சிலர் ஊருக்கு கிளம்ப விழைந்து பகவானிடம் உத்தரவுக்கு வந்த போது பகவான் காதுக்கு விஷயம் சென்றது.
பகவான் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
"காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?
இந்த மலை இருக்கு.
பேசாம எல்லாம் போய்த் தூங்குங்கோ" என்று கூறி மௌனமானார்.
வழக்கம் போல அதிகாலை பகவான் கிச்சனுக்குள் நுழைந்தார்.
"என்ன இருக்கு?"என்று கேட்டார்.
'கொஞ்சம் நொய் குருணை தான் இருக்கு'என்றனர்.
"சரி எடுத்துக்கொண்டு வா!"
என்று கூறிவிட்டு அடுப்பைப் பற்ற வைத்தார்.
காலை 5:30 மணி,கைப்பிடி குருணையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு பாத்திரத்தில் போட்டுக் கழுவினார்.
உலை கொதித்ததும் அரிசியைப் போட்டார்.
அருகில் இருந்த அண்ணாமலை சுவாமி,'என் ஒருவனுக்கே இது பத்தாது.
எப்படி இத்தனை பேர் சாப்பிடறது இதை!' என்று வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அரிசி பொங்கி வந்த போது ஒரு பக்தர் தரிசனத்துக்கு 2 லிட்டர் பாலுடன் வந்தார்.
பகவான் பெரிய பாத்திரத்தை வைத்து அதில் பாலையும், அரிசியையும் சேர்த்து வேகவைத்தார்.
சில நிமிடங்களில் ஒரு பக்தர் கற்கண்டு, உலர் திராட்சையுடன் தரிசிக்க வந்தார்.
பகவான் அதைச் சுத்தம் செய்து அதையும் பாத்திரத்தில் போட்டார்.
ஆறரை மணி அளவில் அது முடிவுக்கு வந்த போது கும்பகோணத்தில் இருந்து பக்தர்கள் சிலர் வந்தனர்.
அவர்கள் பெரிய பானையில் இட்லி, வடை,சட்னி,மலைவாழைப்பழம்,
தொன்னை முதலியன கொண்டு வந்திருந்தார்கள்.
வழக்கமாக காலை 7 மணிக்கு பகவான் குளித்துவிட்டு வந்து, அனைவரும் அமர்ந்து அருமையான உணவு உண்டனர்.
பகவான் தயாரித்த பாயாசம் அந்தத் தொன்னையில் எல்லோருக்கும் பரிமாறப்பட்டது.
நடிகர் திலகம் தன் துணைவியாரோடு தஞ்சைக்கு வருகிறார். காரில் போய்க் கொண்டு இருக்கும் போது ஒரு தெரு முனையில் வண்டியை நிறுத்தச் சொல்லி கட்டளையிடுகிறார்.. வண்டியிலிருந்து இறங்கி தெருவில் நடந்து செல்கிறார் தன் துணைவியாருடன்.. ஒரு சாதாரண குடிசை முன் நிற்கிறார். நடிகர் திலகம் வந்ததையறிந்து தெருவில் மக்களின் ஆரவாரங்கள்...
ஏதோ சத்தம் கேட்கிறதே என எண்ணி வீட்டிற்குள் இருந்து ஒருவர் எட்டி பார்க்கிறார்.. தன் வீட்டின் வாசலில் வந்து நிற்கும் நடிகர் திலகத்தையும் அவர் மனைவியையும் பார்த்து வார்த்தைகள் வராமல் தவிக்கிறார். கண்களில் ஆனந்தக் கண்ணீர்.. "அண்ணே வாங்கண்ணே" என்கிறார்.. அதற்குள் வீட்டிற்குள் இருந்து பத்து நாட்களுக்கு முன் மணமுடித்த தம்பதியினர் வருகிறார்கள்.. அவர்கள் இருவரும் காலில் விழுந்து வணங்குகிறார்கள். தம்பதி சகிதம் ஆசி வழங்குகிறார்கள். டிரைவர் இரண்டு பைகளை கொண்டு வந்து தருகிறார். அதனை மணமக்கள் கையிலே கொடுக்கிறார் கமலாம்மாள். இரண்டொரு வார்த்தை பேசி விட்டு நகர்கிறார்கள். அப்பொழுது குடிசை வீட்டின் உரிமையாளர் நடிகர் திலகத்திடம் "அண்ணே ஏதாவது சாப்பிட்டு விட்டு போங்க" என்று சொல்கிறார். உடனே தன் மனையாளை பார்க்கிறார்.
தண்ணீர் வாங்கி கைகளை அலம்பி விட்டு குனிந்து குடிசைக்குள் நுழைந்து தரையில் அமர்கிறார்கள். வீட்டில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் சாப்பிட அழைத்து விட்டோமே என்று பதட்டத்தில் அழைத்தவர் முழிக்க பரவாயில்லை இருப்பதை சாப்பிடுகிறேன் என்று சொல்லி அவர்களால் உள்ளன்போடு பரிமாறப்பட்ட பதார்த்தங்களை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்கள்.
தன் மகனின் திருமண விழாவிற்கு தனக்கு அழைப்பிதழ் அனுப்பிய ஒரு சாதாரண ரசிகனை ஞாபகத்தில் வைத்து தஞ்சை வந்த நேரத்தில் அவர்களின் இல்லம் சென்று ஆசி வழங்கியதோடு மட்டுமில்லாமல் தரையில் அமர்ந்து சாப்பிட்டு ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய பாசமிகு நடிகர் திலகமும் கமலாம்பாளும்..
அந்த ரசிகர் ஒரு சலவை தொழிலாளி என்பது கூடுதல் தகவல்.
அமாவாசை நாளில் கடைகளில் (கடைகள், வீடுகள், தொழிற்சாலைகள், புதிய வாகனங்கள் போன்ற இடங்களில்) பூசணிக்காய் உடைக்கும் பழக்கம் மிகவும் பழமையானதும், ஆழமான ஆன்மீகப் பொருளுடையதுமாகும்.
இது வெறும் சடங்காக அல்லாமல், நம் இடத்தையும், நம் செயல்பாடுகளையும் எதிர்மறை சக்திகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு சக்திவாய்ந்த தெய்வீக வழிபாடாக கருதப்படுகிறது.
அமாவாசை என்பது சந்திரன் முழுமையாக காணாத நாள். இந்த நாள் ஆற்றல்கள் மிகவும் நுண்மையானதாகவும், ஆன்மீகத்தை எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டதாகவும் கருதப்படுகிறது.
அதே சமயம், எதிர்மறை அலைகள் அதிகமாக செயல்படுவதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால், கடை அல்லது தொழில் நடைபெறும் இடத்தை நல்ல சக்திகள் நிரம்பச் செய்வதற்கும்,
கெட்ட சக்திகளை அகற்றுவதற்கும், வியாபாரம் சிறக்க பூசணிக்காய் உடைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
பூசணிக்காய் உடைப்பதின் ஆன்மீக அர்த்தம்
‘துஷ்ட சக்தி’ நிவாரணம் :
பூசணிக்காய் உள்ளே இருக்கும் நாரும், விதைகளும் எரிச்சல், தோஷம், பட்டினி சக்தி போன்றவற்றை உறிஞ்சும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.
பூசணிக்காய் உடைப்பதன் மூலம்:
சுற்றுப்புறத்தில் இருக்கும் எதிர்மறை அதிர்வுகள் விலகும், தீய சக்திகளின் தாக்கம் முறிவடையும் என்று நம்பப்படுகிறது.
பிள்ளையார் திருஷ்டி நீக்கம் :
அதிக மக்கள் வருகிற கடைகள் அல்லது புதியதாக துவங்கும் தொழில்களுக்கு "கண்திருஷ்டி" எனப்படும் எதிர்மறை ஆற்றல் படும் என்று நம்புவர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் ஆதரவுகள் மேம்படும். எதிர்பாராத சிலரின் அறிமுகங்கள் உண்டாகும். புதிய தொழில் நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகள் கைகூடும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
ரிஷபம்
உத்தியோகத்தில் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். வியாபாரத்தில் இருந்த மந்த தன்மை விலகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
அக்கம்பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் பெருகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும். புதிய கனவுகள் பிறக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
நினைத்த காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவுகள் வழியில் அனுபவம் மேம்படும். கலைப் பொருள்களில் கவனம் வேண்டும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
குடும்பத்தில் ஆதரவுகள் மேம்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் புரிதல் அதிகரிக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
கன்னி
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தன வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய சிக்கல்கள் விலகும். வியாபார ரகசியங்களை புரிந்து கொள்வீர்கள். உணவு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அலுவலக பணிகளில் துரிதம் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
துலாம்
நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். திருமண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் நிலவும்.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான சூழல் ஏற்படும். வர்த்தகத்தில் சிந்தித்து செய்லபடவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டார நட்புகளால் புதிய அனுபவம் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
தனுசு
தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். ஒப்பந்தங்களில் இருந்த தாமதங்கள் விலகும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். உத்தியோகத்தில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
பணியிடத்தில் மதிப்புகள் மேம்படும். துணைவரிடத்தில் ஒத்துழைப்புகள் ஏற்படும். விவாசாயம் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். பழைய அனுபவங்கள் பற்றிய சிந்தனைகள் உருவாகும். விவாத போக்குகளை தவிர்த்துக் கொள்ளவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூட்டாளிகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மீனம்
எண்ணிய சில பணிகள் தடைப்பட்டு முடியும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். விமர்சன பேச்சுகள் தோன்றி மறையும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உதவிகள் செய்வதில் கவனம் வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். பலவினங்களை புரிந்து கொள்வீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 3 ஆம் தேதி புதன்கிழமை 19.11.2025.
இன்று காலை 10.27 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.
இன்று காலை 09.21 வரை சுவாதி . பின்னர் விசாகம்.
இன்று காலை 10.00 வரை சௌபாக்கியம். பின்னர் ஷோபனம்.
இன்று காலை 10.27 வரை சகுனி. பின்னர் இரவு 11.29 வரை சதுஷ் பாதம். பின்பு நாகவம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை









