·   ·  1 videos
  •  ·  3 friends
  • B

    S

    3 followers
  • 1372
  • More

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலே

மலருகின்ற இதழோ

மாதுளையின் பூப்போலே

மலருகின்ற இதழோ

மானினமும் மீனினமும்

மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ

நீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாக

பார்வையொருக் கணையாக

புருவமொரு வில்லாக

பார்வையொருக் கணையாக

பருவமொரு களமாகப்

போர் தொடுக்கப் பிறந்தவளோ

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

தேன் சுவையைத் தான் குழைத்து

கொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்

பசுந்தளிர் போல் வளை கரமும்

தேன் கனிகள் இருபுறமும்

தாங்கி வரும் பூங்கொடியோஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ

ஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ

யாழிசையின் ஒலியாக

வாய்மொழி தான் மலர்ந்தவளோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோசெந்தழலின் ஒளி எடுத்து

சந்தனத்தின் குளிர் கொடுத்து

பொன் தகட்டில் வார்த்து வைத்த

பெண்ணுடலை என்னவென்பேன்

மடல் வாழைத் துடையிருக்க

மச்சம் ஒன்று அதிலிருக்க

மடல் வாழைத் துடையிருக்க

மச்சம் ஒன்று அதிலிருக்க

படைத்தவனின் திறமை எல்லாம்

முழுமை பெற்ற அழகியென்பேன்நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோ

Comments (0)
Login or Join to comment.

Canada Saravanapavan dosa

  • 8

Good Morning

  • 7
·
Added joke

சார்...என்னோட bank cheque எப்போ clear ஆகும்...?

3 நாள் ஆவும்

ஏங்க...உங்க பேங்குக்கு எதிர்த்தாப்பல தான் என் பேங்க் இருக்கு...இதுக்கு 3 நாள் ஆகுமா...?

எல்லா பேங்க்குக்கும் சில ரூல்ஸ் இருக்கு ..உங்க பேங்க் பக்கத்து ரூம்ல இருந்தாலும் கூட சில ரூல்ஸ் பாலோ பண்ணனும்...

அப்படி என்னங்க பெரிய ரூல்ஸ்?

இப்ப நீங்க வெளியே போறீங்க...வழில ஒரு சுடுகாடு வருது...அதுக்கு பக்கத்துல நீங்க போகும்போது திடீர்னு உயிர் போயிருச்சுன்னா, சுடுகாடு பக்கத்திலேயே இருக்குங்றதுக்காக அப்படியே தூக்கிட்டு போய் எரிக்க முடியுமா? அதுக்குன்னு சில சம்பிரதாயங்கள் இருக்குல்ல.அதே மாதிரி தான் இதுவும்...

எதே...

  • 123
·
Added joke

இரண்டு பெண்மணிகள் அமர்ந்து ஒரு உணவகத்தில் காபி அருந்திக்கொண்டிருந்தார்கள் .

அம்மணி 1: என் முதல் குழந்தை பிறந்த போது என் கணவர் எனக்கு ஒரு வைர அட்டிகை வாங்கித் தந்தார் ....

அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...

அம்மணி 1: இரண்டாவது குழந்தை பிறந்த போது World டூர் கூட்டிண்டு போனார் ...

அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...

அம்மணி 1: மூன்றாவது குழந்தை பிறந்ததும் இப்போ நாங்க இருக்கற பங்களாவை வாங்கி குடுத்துட்டார் ....

அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...

அம்மணி 1: உனக்கு குழந்தைகள் பிறக்கும் போது உன் கணவர் என்ன பண்ணினார் ?

அம்மணி 2: என்னை காந்தி மாதர் தமிழ் பயிற்சி மையத்துக்கு அனுப்பினார் ...

அம்மணி 1: அங்கே என்ன கத்துகிட்டே ?

அம்மணி 2: உன்னைய மாதிரி திமிரு பிடிச்ச பொம்பளைங்க பேசும்போது

" போடி " அப்படின்னு சொல்றதுக்கு பதிலா " அவருக்கு ரொம்ப நல்ல மனசு" ன்னு சொல்ல கத்துக்குடுத்தாங்க ....

  • 123
·
Added article

‘ஜனநாயகன்’ படத்தை திட்​ட​மிட்​டபடி வெளி​யிட அனைத்து முயற்​சிகளை​யும் மேற்​கொண்ட போதி​லும், கட்​டுப்​பாட்​டுக்கு அப்​பாற்​பட்ட சில காரணங்​களால் சொன்ன தேதி​யில் ரிலீஸ் செய்​ய​ முடிய​வில்​லை.

கடந்த 33 ஆண்​டுகளாக நடிகர் விஜய் தனது ரசிகர்​களிட​மிருந்து பெற்ற அன்​பு, திரைத்​துறைக்கு ஆற்றிய பங்​களிப்புக்காக அவருக்கு ஓர் அற்​புத​மான பிரி​யா​ விடை அளிக்​கப்பட வேண்​டும். அதற்கு அவர் அனைத்து வகை​யிலும் தகு​தி​யானவர். நீதித்​துறை நடை​முறை​கள் மீது நம்​பிக்கை இருக்​கிறது. விரை​வில் படம் வெளி​யாகும்” என்று வெங்கட் நாராயணா கூறியுள்​ளார்.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக் காலத் தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை திங்களன்று அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 264
·
Added article

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினால் இப்படம் வெளியாகாமல் இருந்தது. ரூ.21 கோடி செலுத்திவிட்டு படத்தினை வெளியிடலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இப்பணத்தினை தயார் செய்துவிட்டார் என்கிறார்கள். இதனாலேயே தைரியமாக ஜனவரி 14-ம் தேதி வெளியீடு என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஜனவரி 12 உயர் நீதிமன்றத்தில் பணத்தினை செலுத்தி தடையினை நீக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் ஜனவரி 14-ம் தேதி வெளியீட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என படக்குழு சார்பில் விநியோகஸ்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 282
·
Added a post

மனித வாழ்வில் நட்பு, காதல் இரண்டும் முக்கியமான விஷயங்கள். சில நட்புகள் நன்மை தரும், சில நட்புகள் தீமை பயக்கும். எது எப்படி இருந்தாலும் இளம் வயதில் ஏற்படும் நட்பு, அவர்களின் வயதான காலத்தில் உடல், உள்ள ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உதவுவதாக அமெரிக்காவில் உள்ள ராச்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவில், நண்பர்களுடன் குதூகலமாக நேரத்தைச் செலவிடுபவர்கள் தமது பிந்தைய காலத்தில் உடல், உள ஆரோக்கியத்தில் நல்லவிதமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்பு பாராட்டுவது உங்கள் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் என்று 12 வகையான ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கும்போது உங்கள் ரத்த அழுத்தம் குறைந்து சீரான ஓட்டத்திற்கு மாறுகிறது. உடலில் வீக்கங்கள் குறையும், வலிகளை குறைக்கும் ஆக்டிவ் புரோட்டீன் உடலில் சேர்கிறது. இதுவே இதயநோய் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்க உதவுகிறது என்கிறார்கள் சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

  • 267
  • 288

வாழ்க்கையின் அழகு என்பது

நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீா்கள் என்பதில் இல்லை..!.

உங்களால்

அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி

அடைகிறார்கள் என்பதிலேயே இருக்கிறது..!

  • 332
·
Added a post

மேஷம்

பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பயணங்களில் இருந்த தடைகள் குறையும். தவறிய சில பொருள்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கும். அதிகார மமதையில் செயல்படுவதை தவிர்க்கவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

ரிஷபம்

ஆரோக்கிய இன்னல்கள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். வெளி உணவுகளை தவிர்க்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். போட்டி விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்

 

மிதுனம்

உற்சாகமான சிந்தனைகள் மனதளவில் உண்டாகும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பிரபலமானவர்களின் தொடர்புகள் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

 

கடகம்

உறவினர் மற்றும் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நீண்ட நாள் எண்ணிய சில பயணங்கள் சிறப்பாக அமையும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கும் மதிப்பும் உயரும். புதிய பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். அறக்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். சிரமம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

சிம்மம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் கைகூடிவரும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கன்னி

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். தோற்ற பொழிவுகள் மேம்படும். நவீன கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

துலாம்

தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிக்கலான செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வாகன வழியில் சில விரயம் ஏற்படும். வரவுகளில் சில இழுபறியான சூழல் ஏற்படும். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபாவமும் நிலவும். சுபகாரிய பேச்சுக்களில் பொறுமை வேண்டும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

விருச்சிகம்

புது விதமான பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் தொடர்புகளால் மேன்மை உண்டாகும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தொழில் சார்ந்த செயல்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். குடியுரிமை சார்ந்த பிரச்சனைகள் குறையும். உபரி வருமான முயற்சிகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

தனுசு

வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். அதிகாரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆன்மீகத்தில் தெளிவுகள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

இல்லத்தில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடி வரும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

கும்பம்

எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும். ஆன்மிக பணிகளால் மனதில் தெளிவுகள் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். சோர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் அனுசரித்து செல்லவும். சிறு வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் வழியில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்ட நீங்கும். நெருக்கமானவர்களை புரிதல்கள் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 529
  • 586
  • 586

காலை வணக்கம்

  • 596
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11.1.2026.

இன்று பிற்பகல் 01.42 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று இரவு 09.33 வரை சித்திரை. பின்னர் சுவாதி.

இன்று இரவு 08.50 வரை சுகர்மம். பின்னர் திருதி.

இன்று அதிகாலை 01.08 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 01.42 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று காலை 6.32 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=386&dpx=2&t=1768100178

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 677

Good Morning....

  • 631
·
Added article

‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் தான் நம்பர் ஒன்” என்று அவரது தோழி கெனிஷா கருத்து தெரிவித்துள்ளார்.

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பராசக்தி’. இப்படத்தில் ரவி மோகன் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். இன்று காலை படக்குழுவினர் வெவ்வேறு திரையரங்குகளில் ‘பராசக்தி’ படத்தை கண்டுகளித்தனர்.

சென்னை - காசி திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தை கண்டு களித்தார் ரவி மோகன். அவருடன் அவரது தோழியான கெனிஷாவும் வந்திருந்தார். படம் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் கெனிஷா பேசும்போது, “அவர் வில்லனாக நடித்தால் என்ன, ஹீரோவாக நடித்தால் என்ன... அவரால் படம் ஓடும். இந்த கதாபாத்திரத்துக்காக 6 மாதங்கள் கடுமையாக உழைத்தார். என் கண்ணுக்கு அவரை தவிர வேறு யாரும் தெரியவில்லை.

இந்தப் படத்தை பார்க்கும்போது அவருக்காகவே பண்ணியிருக்கிறார்கள் என்று தோன்றியது. ‘பராசக்தி’ படத்தில் அவர்தான் நம்பர் ஒன். முதல் பாதியில் அவரை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். 2-ம் பாதியில் அவரைத் தாண்டி எதுவுமே இல்லை என தெரிந்துவிடும்” என்று கெனிஷா தெரிவித்துள்ளார்.

  • 918
  • 863
  • 862
·
Added a news

கனடாவின் டொராண்டோ நகரத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மணிக்கு 90 கிலோமீட்டர் வரை வேகம்கொண்ட காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலை நேரத்தில் மழையுடனும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயமும் உள்ளதாக வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிற்பகலில் ஒரு குளிர் காற்றழுத்த முனை பிரதேசத்தை கடந்து செல்லும் எனவும், இதன் காரணமாக மீண்டும் பலத்த காற்று வீசும் சூழ்நிலை உருவாகி, மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரை காற்று வேகம் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாலை ஆரம்பத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொராண்டோவில் இன்று வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என , கனடா சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த வானிலை அமைப்பின் காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளில் திடீர் நீர்மட்ட மாற்றங்கள், வேகமான மற்றும் வலிமையான நீரோட்டம், நிலையற்ற கரைகள் மற்றும் ஆபத்தான பனிநிலை உருவாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

  • 922
·
Added a post

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். (This is the reason, when we travel in train, whatever food we have during the journey, is completely digested without any health troubles. Hope many could have experienced this in their life journey)

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

  • 933
  • 873
  • 872
·
Added a post

அந்த ரிடையரான மனிதர் அன்று மகானின் முன் நின்றபோது, அவரது முகத்தில் கவலை ரேகைகள். இதைக் கவனித்த அந்த மகான்....

"ஏன் என்ன விஷயம்?" என்று அன்பொழுகக் கேட்கிறார்.

"ரிடையர் ஆன பிறகு நான் மிகவும் .கஷ்டப்படுகிறேன்.." என்கிறார் அவர்.

"ஏன்?" கேட்கிறார்.

"யாரும் வீட்டில் என்னை மதிப்பதே இல்லை... கவனிப்பும் சரி இல்லை. காப்பி கூட சமயத்தில் கிடைப்பதில்லை" என்று சொல்லிக் கொண்டே போனார்.

அவரது மனக்குமுறல்களை புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டு இருந்தார் அந்த மகான்.

"உத்தியோகத்தில் இருக்கும்போதே இறந்திருக்கலாம் போல் எண்ணத் தோன்றுகிறது. பையன்கள் கூட என்னை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்" என்று முடித்தார் அம்முதியவர்.

மகான் அமைதியாகச் சொன்னார்....

"இது எனக்குப் பெரிய விஷயமாகவே தெரியவில்லை. நீ இப்போது ஆபீசுக்குப் போவதில்லை இல்லையா? காலையில் எல்லாருக்கும் முன் எழுந்து,குளித்துவிட்டு ஜெபம் செய்...அதைப் பார்க்கும் குடும்பத்தினர் உனக்கு பயபக்தியோடு காப்பி கொண்டு வந்து கொடுப்பார்கள். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்.... பேரன்களுக்கு படிப்பு சொல்லிக் கொடு...அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக் கொண்டு போ.... அதோடு அவர்கள் இதைச் செய்ய வேண்டும்...... அதைச் செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்காதே....

எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தைக் கொடுக்கும்.... இல்லையென்றால் எல்லாமே தானாகவே நடக்கும்"

வேதனையோடு வந்தவர்க்கு தன்னிடம் உள்ள குறையும் தெரிந்தது... அடுத்தபடியாக தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.

" நீ மனதைத் தெளிவாக வைத்துக் கொள்... பகவானை நினைத்துக் கொண்டே இரு... இது வேண்டும்...அது வேண்டும் என்று ஆசைப்படாதே.. நீ வளர்த்த குழந்தைகள் உன்னை நிச்சயமாகக் கவனிப்பார்கள்" என்றார்.

வயோதிகத்தில் எல்லாருக்கும் வரும் மன வியாதி இது.. ஒருவன் எல்லாவற்றையும், எப்போதும் அனுபவிக்கவும் முடியாது..... அதிகாரம் செய்து கொண்டும் இருக்கவும் முடியாது... காலப்போக்கில் நம்மை நாமே சரி செய்து கொள்ள வேண்டும் என்பது தான் வாழ்க்கை முறை."

மகான் உபதேசம் செய்து முடித்தவுடன் அப்பெரியவரின் மகன், அவரை தேடிக் கொண்டு அங்கே வந்து விட்டான், வீட்டிற்கு அழைத்துப் போக. பொருள் பொதிந்த புன்னகையோடு மகான், அவரை மகனுடன் அனுப்பி வைத்தார்.

  • 932
·
Added article

"ஹரிவராசனம்" “நீயும் பொம்மை.. நானும் பொம்மை.. நெனச்சுப் பார்த்தா எல்லாம் உண்மை", "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா" என இசை பிரியர்களின் காதில் தேனை கடந்த பல ஆண்டுகளாக பாய்ச்சிக் கொண்டிருக்கும் தேவக்குரலோன் கே.ஜே. யேசுதாஸ் இன்று தனது 85வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

கண்ணே கலைமானே என தமிழ் ரசிகர்களை தாலாட்டிய கே.ஜே. யேசுதாஸ் கேரள மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐயப்ப பக்தர்களுக்கும் ஹரிவராசனம் பாடல் மூலம் ஆன்மிகத்தை அள்ளித் தெளித்துள்ளார். 1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கொச்சியில் பிறந்த கே.ஜே. யேசுதாஸ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஏகப்பட்ட இந்திய மொழிகளில் தனது காந்தக் குரலை பதிவு செய்துள்ளார்.

கே.ஜே. யேசுதாஸ் இசைத்துறைக்கும் இசை ரசிகர்களுக்கும் செய்த விஷயங்கள் எல்லாம் அளப்பரியது. இறைவனே இவரது குரலை கேட்டுத் தான் தினமும் மயங்கி நிற்கிறார் என்றால் மனிதர்கள் எல்லாம் எம்மாத்திரம் என இவருக்கு கான கந்தர்வன் என ஏகப்பட்ட பட்டங்களை ரசிகர்களும் அறிஞர்களும் சூட்டி பல விருதுகளையும் வழங்கி உள்ளனர்.

சிறந்த பின்னணி இசை பாடகர் என இந்திய அரசு 8 முறை இவருக்கு தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது. கேரள மாநில அரசு 25 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான விருதினை இவருக்கு வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு 5 முறை சிறந்த பின்னணி இசை பாடகருக்கான விருதுகளை கே.ஜே. யேசுதாசுக்கு வழங்கி உள்ளது. பத்ம பூஷன், பத்மஸ்ரீ, கலைமாமணி, பத்ம விபூஷன் என அனைத்து அங்கீகாரங்களும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர கேரள அரசின் இசைக்கான உயரிய விருதான ஹரிவராசனம் விருதையும் பெற்றவர். இன்று 84வது பிறந்தநாளை கொண்டாடி வரும் யேசுதாஸை நாமும் வாழ்த்துவோம்.

இரவில் தூக்கம் வரவில்லையா இவரின் குரலில் ஹரிவராசனத்தை காதினில் ஒலிக்கவிட்டு கண்ணை மூடுங்கள் பாடல் முடியும் முன்னே கண்ணயரும் அதிசயம் காண்பீர்கள்

  • 949