·   ·  1 videos
  •  ·  3 friends
  • B

    S

    3 followers
  • 1118
  • More

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலே

மலருகின்ற இதழோ

மாதுளையின் பூப்போலே

மலருகின்ற இதழோ

மானினமும் மீனினமும்

மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ

நீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாக

பார்வையொருக் கணையாக

புருவமொரு வில்லாக

பார்வையொருக் கணையாக

பருவமொரு களமாகப்

போர் தொடுக்கப் பிறந்தவளோ

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

தேன் சுவையைத் தான் குழைத்து

கொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்

பசுந்தளிர் போல் வளை கரமும்

தேன் கனிகள் இருபுறமும்

தாங்கி வரும் பூங்கொடியோஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ

ஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ

யாழிசையின் ஒலியாக

வாய்மொழி தான் மலர்ந்தவளோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோசெந்தழலின் ஒளி எடுத்து

சந்தனத்தின் குளிர் கொடுத்து

பொன் தகட்டில் வார்த்து வைத்த

பெண்ணுடலை என்னவென்பேன்

மடல் வாழைத் துடையிருக்க

மச்சம் ஒன்று அதிலிருக்க

மடல் வாழைத் துடையிருக்க

மச்சம் ஒன்று அதிலிருக்க

படைத்தவனின் திறமை எல்லாம்

முழுமை பெற்ற அழகியென்பேன்நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோ

Comments (0)
Login or Join to comment.
·
Added a news

ஸ்வீடன் கிரிப்பென் (Gripen) போர் விமான உற்பத்தியாளர் சஹாப் SAAB, கனடா தமது ராணுவத்துக்காக இந்த விமானத்தை தேர்வு செய்தால், 10,000 உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி வேலை வாய்ப்புகள் கனடாவில் உருவாகலாம் என அறிவித்துள்ளது.

கனடிய அரசுடன் விமான உற்பத்தியை நேரடியாக கனடாவில் மேற்கொள்ளும் வாய்ப்பு குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாக SAAB நிறுவனத்தின் தலைவர் மைகேல் யோஹான்சன் உறுதிப்படுத்தினார்.

மொன்றியலில் தலைமையகத்தைக் கொண்ட பொம்பார்டியர் மற்றும் சீ.ஏ.ஈ Bombardier, CAE நிறுவனங்களும் மேலும் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஐ.எம்.பி எரோ ஸ்பேஸ் ஆகியவற்றும் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள கூடிய நிறுவனங்களாக உள்ளன.

“கனடா தன்னுடைய ராணுவ திறன்களை உள்ளூரில் உருவாக்க விரும்பினால்—மேம்படுத்தல், பாகங்கள் உற்பத்தி, இறுதி பொருத்துதல், பரிசோதனை—எல்லாவற்றிற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று யோஹான்சன் தெரிவித்தார். தேவைப்பட்டால் தொழில்நுட்பங்களை கனடாவுக்கு மாற்றி அளிக்கவும் தயாராக உள்ளோம் என குறிப்பிட்டார்.

  • 65
·
Added a post

ஒரு தொலைதூரக் கிராமத்தில், மாலா என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவளுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகம், ஆனால் அவளது கிராமத்தில் இருந்த ஒரே பள்ளி மழையால் சேதமடைந்து மூடப்பட்டிருந்தது. அவளது தந்தை ஒரு விவசாயி. அவளுக்குப் பாடம் சொல்லித்தரவோ, நகரத்திற்கு அனுப்பிப் படிக்க வைக்கவோ அவரிடம் வசதி இல்லை.

மாலா ஒவ்வொரு நாளும், தனது தந்தையின் பழைய, உடைந்த வானொலியை வைத்துக்கொண்டு மரத்தடியில் அமர்ந்திருப்பாள். "யாராவது எனக்குக் கணக்குப் பாடம் சொல்லித் தந்தால் நன்றாக இருக்குமே," என்று அவள் ஏங்குவாள்.

அதே நேரத்தில், நகரத்தில் உள்ள ஒரு இளம் மென்பொருள் பொறியாளரான (Software Engineer) ஆனந்த், "கல்வி ஒளி" (Kalvi Oli) என்ற ஒரு AI செயலியை (App) உருவாக்கிக் கொண்டிருந்தான். அவனது நோக்கம், இணைய வசதி குறைவாக உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு, அவர்கள் மொழியிலேயே கல்வி கற்பிப்பது.

இந்த AI, மாணவர்களின் கேள்விகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற வேகத்தில், எளிமையான உதாரணங்களுடன் பாடம் நடத்தும் திறன் கொண்டது.

ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் (NGO) மூலம், அந்த கிராமத்திற்குச் சில பழைய சூரிய சக்தியில் இயங்கும் (Solar-powered) டேப்லெட்டுகள் (Tablets) கிடைத்தன. அதில் ஆனந்தின் "கல்வி ஒளி" AI செயலியும் நிறுவப்பட்டிருந்தது.

மாலாவுக்கு ஒரு டேப்லெட் கிடைத்தது. முதலில் தயக்கத்துடன் அதைத் தொட்டாள்.

"வணக்கம், நான் 'ஒளி'. உங்கள் கல்வித் தோழன். இன்று என்ன படிக்க விரும்புகிறீர்கள்?" என்று அந்த AI குரல் தமிழில் கேட்டது.

மாலா ஆச்சரியத்துடன், "எனக்கு... எனக்குக் கணக்குப் பாடம் வேண்டும். பின்னல் கணக்குகள் (Fractions) புரியவில்லை," என்றாள்.

அடுத்த சில வாரங்கள், மாலாவின் வாழ்க்கை முற்றிலும் மாறியது. அந்த AI, அவளுக்கு ஒரு பொறுமையான ஆசிரியைப் போலானது. மாலா எப்போது சந்தேகம் கேட்டாலும், 'ஒளி' சோர்வடையாமல் பதில் சொன்னது. படங்களை வரைந்து காட்டியது, கதைகள் மூலம் கணக்குகளை விளக்கியது. அவளால் ஒரு கணக்கைப் போட முடியாதபோது, "பரவாயில்லை, மீண்டும் முயற்சி செய். நீ புத்திசாலிப் பெண்," என்று ஊக்கப்படுத்தியது.

ஆறு மாதங்கள் கழித்து, மாவட்ட அளவில் நடந்த கல்வித் திறன் போட்டியில் (Educational quiz competition) மாலா கலந்துகொண்டாள். நகரத்து மாணவர்கள் பலர் இருந்த அந்தப் போட்டியில், அவளால் சரளமாகப் பதிலளிக்க முடிந்தது.

இறுதிச் சுற்றில், நடுவர் ஒரு கடினமான கணக்கைக் கேட்டார். நகரத்து மாணவர்கள் யோசித்துக் கொண்டிருக்க, மாலா சில வினாடிகளில் சரியான விடையைச் சொன்னாள்.

அனைவரும் ஆச்சரியப்பட்டனர். "உனக்கு யார் இவ்வளவு அழகாகக் கணக்குச் சொல்லிக் கொடுத்தது?" என்று நடுவர் கேட்டார்.

மாலா புன்னகையுடன் சொன்னாள், "என் ஆசிரியை 'ஒளி'."

அவள் தன் டேப்லெட்டைக் காட்டினாள். அவளது வெற்றிக்குக் காரணமான அந்த AI, அவளை மட்டும் மாற்றவில்லை; அவளைப் போன்ற ஆயிரக்கணக்கான கிராமத்து மாணவர்களின் எதிர்காலத்தையே அது ஒளிரச் செய்திருந்தது.

கதையின் நீதி:

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது ஒரு இயந்திரம் மட்டுமல்ல. அது சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால், தடைகளைத் தகர்த்து, திறமைகளுக்கு வாய்ப்பளித்து, மனிதகுலத்தின் மிகப்பெரிய சவால்களுக்குத் தீர்வு காண உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.

  • 77
·
Added a post

ஒருவர் தினமும் கோவிலுக்கு ''திருவாசகம்" கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார் அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது.

அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி

அப்படி என்ன தான் திருவாசகத்துலே கொட்டிக் கிடக்கு ???

ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரீங்களே,

உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க என்று கேட்டாள்.

அதற்கு அந்த மனிதர்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை!

ஆனா,

போயிட்டு, கேட்டு வருவது நன்றாகவே இருக்கு என்றார் !!

கோபமடைந்த மனைவி,

முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாங்க என்றாள்.

அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்.

மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது,

மனைவி , தினமும் லேட்டா வரீங்க கேட்டா திருவாசகத்துக்குப் போனேன் எங்கறீங்க,

என்ன சொன்னாங்கன்னு கேட்டா ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க,

நீங்க ""திருவாசகம்"" கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீர் மாதிரித் தான்!

எதுக்கும் பிரயோஜனம் கிடையாது என்று கொட்டித் தீர்த்தாள்.

அதுக்கு அந்த மனிதர்

நீ சொல்லறது சரிதான்

சல்லடையில் தண்ணீ வேணா நிரப்ப முடியாம போகலாம் ....

ஆனா,

அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு நல்லா சுத்தமாயிடுச்சு அதுபோல ....

திருவாசக உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம் ....

ஆனா,

என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது'ன்னு சொன்னார்.

  • 84
·
Added a post

வாழைத்தண்டு தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறும். எலுமிச்சை, ஏலக்காய் கலந்து வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வர டாக்ஸின்கள் அதிகமாக வெளியேறி உடல் புத்துணர்வு பெறும்.

கிட்னி ஸ்டோன் : வாழைத்தண்டு சாறு குடித்து வர அது கிட்னி கற்களை கரைக்க உதவிடும். வாழைத்தண்டு சாறில் ஏலக்காயை தட்டிப்போடுங்கள். இதனால் கிட்னி கற்களினால் ஏற்படும் வலி குறைந்திடும்.வாழைத்தண்டு சாற்றில் லெமன் ஜூஸ் கலந்து குடித்து வந்தால் கற்கள் உருவாகமல் தடுக்க முடியும். வாழைத்தண்டில் இருக்கும் பொட்டாசியம், எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் இணைந்து பொட்டாசியம் சிட்ரேட் உருவாகிடும். இது கிட்னி கற்கள் வராமல் தடுக்கும்.

எடை குறை : சீக்கிரமாக உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஆரோக்கியமானதும் கூட சமைத்தோ அல்லது சாறாகவோ வாழைத்தண்டை எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால். நீண்ட நேரம் பசி எடுக்காது. இதனால் தேவையற்ற உணவுகள் எடுத்துக் கொள்வது குறைந்திடும்.

தொப்பை : வாழைத்தண்டில் இருக்கும் நார்ச்சத்து கொழுப்பை கரைத்திடும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவிடும். வாழைத்தண்டு சாற்றுடன் இஞ்சி சேர்த்து வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதில் கலோரியும் குறைவு என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.

அசிடிட்டி : எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாதவர்கள், அடிக்கடி ஜீரணக்கோளாறினால் அவதிப்படுகிறவர்கள் வாழைத்தண்டு சாப்பிட்டு வர விரைவில் பலன் உண்டு. இதைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உணவு ஜீரணமாவதற்கான ஆசிட்டும் அதிகரிப்பதால் உணவு சீக்கிரமாக செரிக்கப்படும். இதனால் ஜீரணக்கோளாறுகள் தவிர்க்கப்படும்.

சர்க்கரை நோய் : வாழைத்தண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது நம் உடலில் உள்ள இன்ஸுலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும். இதில் இருக்கும் துவர்ப்புச் சுவையினால் சர்க்கரை நோய்க்கு இயற்கை மருந்தாக அமைந்திடும். கிட்னி நன்றாக செயல்பட வேண்டுமானால் நீங்கள் உங்கள் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

ரத்த சோகை : வாழைத்தண்டில் அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் விட்டமின் பி6 இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் அது நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். இதனால் ரத்தசோகை ஏற்படுவது தவிர்க்கப்படும்.

  • 90
  • 87
·
Added a post

குரோஷியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில், யாரும் உரிமை கோராத 125 ஏக்கர் காட்டுப் பகுதியில் ’வெர்டிஸ் சுதந்திர குடியரசு’ என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளார். இந்த நாட்டிற்கு சொந்தக் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 பதிவு செய்யப்பட்ட குடிமக்கள் உள்ளனர்.

ஆஸ்திரேலிய வம்சாவளியைக் கொண்ட ஜாக்சன், 2019 மே 30 அன்று வெர்டிஸை அதிகாரப்பூர்வமாக சுதந்திர குடியரசாக அறிவித்தார்.

இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷிய மற்றும் செர்பியா ஆகிய மொழிகள் உள்ளன. யூரோ நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது. குரோஷியாவின் ஒசிஜெக் நகரிலிருந்து படகு மூலம் மட்டுமே வெர்டிஸை அடைய முடியும்.

நாடு உருவாக்கும் போது பலவிதமான சவால்கள் இருந்துள்ளன. 2023 அக்டோபர் மாதத்தில் , குரோஷிய காவல்துறை ஜாக்சனையும் சில குடியேறியவர்களையும் கைது செய்து, அவர்களை நாடு கடத்தியது.

குரோஷியாவிற்குள் நுழைய அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. “எங்களை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று கூறி மட்டுமே இப்படி நடவடிக்கை எடுத்தார்கள்” என கூறியிருக்கிறார் ஜாக்சன். தற்போது நாடு கடத்தப்பட்ட நிலையில், வெர்டிஸை தொலைவிலிருந்து நிர்வகித்து வருகிறார். குரோஷியாவுடன் அமைதியான உறவைப் பேண விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

வெர்டிஸ் குடிமகனாக யார் ஆகலாம்?

வெர்டிஸ் ஆரம்பத்தில் நான்கு பேருடன் தொடங்கியது, தற்போது 400 குடிமக்களைக் கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் குடியுரிமைக்கு ஆர்வம் காட்டியுள்ளனர். வெர்டிஸ் சொந்த கடவுச்சீட்டுகளை வழங்கினாலும், அவை சர்வதேச பயணத்திற்கு பயன்படுத்தப்படக் கூடாது என்று ஜாக்சன் எச்சரித்துள்ளார்.

வெர்டிஸ் நாடு மருத்துவம், காவல்துறை போன்ற திறன்களைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 91
·
Added a post

மலச்சிக்கல் தீர , தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் 2முதல்3 லிட்டர் வரை . உங்களுக்கு வேறு பிரச்சினை இல்லை என்றால் அதாவது நீர் குடிப்பதிற்கு கட்டுப்பாடு இல்லை.

நிறைய காய்கறிகள் சாப்பிட வேண்டும் . அதுவும் தினமும் ஒரு கீரை வாரத்தில் ஐந்து நாட்கள்.

வாழைத்தண்டு, வாழைப் பூ ஆகியவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் .

பழங்கள் சாப்பிடவேண்டும் . பப்பாளி , திராட்சை , பேரிச்சம்பழம் , கொய்யா, ஆப்பிள் ஆகிய ஏதாவது ஒன்றை .

ஆயூர் வேதத்தில் SPOLAX என்ற ஒரு பவுடர் உள்ளது . அதை தினம் 10 கிராம் இரவில் 100 மி.லி தண்ணீருடன் சாப்பிட மலச்சிக்கல் பிரச்சினை தீரும் . பக்கவிளைவுகள் இல்லை . J&J Chane Laboratories , Hyderabad .இந்த கம்பெனி இன்னும் தயாரிக்கிறது . மருந்து கடைகளில் கிடைக்கும்.

  • 93
  • 97
·
Added a post

“வெகு நாட்களாக அந்த பங்களா பூட்டப்பட்டு கிடந்தது. பங்களா நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது. கடந்த இருபது வருடங்களாக எவரும் அந்த பங்களாவிற்கு குடிபோகவில்லை. காரணம் எவருக்கும் தெரியவில்லை.

தனஞ்செயன் அந்த பங்களாவை வாங்க முடிவு செய்தான். நகரில் விசாரித்த போது, ஒருவர் கூட நல்ல தகவல் தரவில்லை. பங்களா மிகவும் குறைந்த விலைக்கு கிடைத்தாலும் வாங்கவேண்டாம் என்றே அவனுக்கு அறிவுறுத்தி வந்தார்கள். அந்த அறிவுறுத்தல்கள் தான் அவனுக்கு அந்த பங்களாவை வாங்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டியது. இரண்டு கோடி மதிப்புள்ள அந்த பங்களா வெறும் 20 லட்சத்திற்கு தருவதாக சொன்னார்கள். அதாவது பத்தில் ஒரு பங்கு மட்டுமே விலை.

அதை வாங்கி, செப்பனிட்டு, ஒரு வருடம் குடியிருந்து விட்டு மூன்று கோடிக்கு விற்று விடவேண்டும் என்று தீர்மானம் செய்தான் தனஞ்செயன்.

பங்களாவின் காவல்காரனிடம் இருந்து சாவியை வாங்கிக்கொண்டு கதவை திறக்க ஆரம்பித்தான் தனஞ்செயன். பழங்காலத்து கதவு. மெதுவாக மெதுவாக நகர்ந்தது. கிரீச் கிரீச் என்று சத்தம் செய்தது. ஆயிரம் எலிகள் ஓன்று சேர்ந்து சப்தம் செய்தது போல இருந்தது.

மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே பார்த்தவனுக்கு, சிலந்தி வலைகளும், நூலாம்படைகளும், தூசிகளும் தான் தெரிந்தன. இருபது அடி தூரத்தில் இருந்த கதவு கூட கனவில் வரும் மெல்லிய தகடு போல தெரிந்தது.

நடந்தவன், இரண்டாம் கட்டின் கதவை திறந்து உள்ளே இரண்டு நிமிடங்கள் உற்று பார்த்து விட்டு இரண்டு அடி நடந்திருப்பான்.

அப்போது தான் அது நடந்தது.

"பொத்" என்று அவன் முன்பாக பொருள் வந்து விழுந்தது. கண்களை நன்றாக துடைத்துவிட்டு சிலந்தி வலைகளுக்கிடையில் அவன் பார்க்கவும் தான் தெரிந்தது -

"அது ஒரு வெட்டப்பட்ட ஒரு மனிதனின் கை என்று"

------

குளிரூட்டப்பட்ட அறையில் இருந்த துப்பறியும் நிபுணர் ஜீவா கையில் ஒரு பேப்பர் வெயிட்டை உருட்டிக்கொண்டிருந்தான். அவன் இந்த மாதிரி செய்கிறான் என்றால் தீவிர சிந்தனை அவன் மூளையை ஆக்கிரமித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

பத்து நிமிடங்களுக்கு முன்பாக தனஞ்செயன் வந்து சொன்னது இன்னும் காதுகளில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. மனதில் அவன் வந்து போனது நிழலாடியது.

வியர்த்து விறு விறுத்து வந்து மேசையின் எதிர்புற நாற்காலியில் அமர்ந்த தனஞ்செயனை பார்த்ததுமே, தண்ணீர் பாட்டிலை நீட்டினான் ஜீவா. லபக் லபக் என்று குடித்து முடித்த தனஞ்செயன் சொல்ல ஆரம்பித்தான்.

"சார், நான் நம்பவே இல்லைங்க. நான் பல வெளிநாடுகள் தைரியமாக சென்று விட்டு வந்தவன். எனக்கு அந்த நிமிடம் வரை தைரியம் இருந்தது. வெட்டப்பட்ட கை என் முன்னால் வந்து விழும் என்று நான் நினைத்து பார்த்தது கூட கிடையாது. ஒரு நிமிடம் ஆடி போயிட்டேன். அங்கிருந்து உயிரோடு திரும்பினால் போதும் என்று தீர்மானித்து கொண்டு, என்னுடைய காரை கூட எடுக்காமல், ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு நேராக இங்கு வருகிறேன். எப்படியாவது கண்டு பிடித்து சொல்லுங்கள்."

"நீங்கள் எதாவது அங்கு விட்டு விட்டு வந்தீர்களா?"

"இல்லேங்க; நான் அந்த வீட்டில் இருந்தது 3 நிமிடங்கள் மட்டும் தான்."

"வெட்டப்பட்ட கை - எப்படி இருந்தது என்று சொல்ல முடியுமா?"

"சரியாக நினைவு இல்லேங்க"

"நல்லா நினைவுபடுத்தி சொல்லுங்க"

“சார், ஒரே நிமிஷம்; நான் அதுவரைக்கும் தைரியமாக தான் இருந்தேன். கை என்பதை தெரிந்து கொண்டேன். வெட்டப்பட்ட இடத்தில இரத்தம் உறைந்து இருந்தது. இப்பொழுது வெட்டப்பட்ட கை மாதிரி இல்லை. ஏற்கனவே வெட்டப்பட்டு இருந்தது போல இருந்தது. மணிக்கட்டு அருகில் பச்சை குத்தியிருந்தது போல தோன்றியது."

"நீங்கள் உங்கள் விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு செல்லுங்கள். நான் தேவைப்படும்போது தொடர்பு கொள்ளுகிறேன்"

ஜீவாவின் சிந்தனையில் எண்ணங்கள் வந்து போயின.

01. ஏற்கனவே இறந்து போனவர் ஒருவரின் பிணத்தில் இருந்து எடுக்கப்பட்ட கையாகத்தான் இருக்கவேண்டும். இரத்தம் உறைந்த நிலை என்று சொன்னால் அப்படியாக தான் இருக்கவேண்டும்.

02. தனஞ்செயனை பயமுறுத்தவேண்டும் என்பதாகத்தான் இருக்கவேண்டும்.

03. அதற்கான காரணம் என்னவாயிருக்கும்? வீட்டை வாங்கவிடக்கூடாது.

04. அப்படி நினைக்கக்கூடிய எதிரி யாராக இருக்க முடியும்?. இதுவரை தனஞ்செயன் சொன்ன விபரங்களில் இருந்து பார்க்கும்போது அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு சின்ன வதந்தி பெரிசாகி விஸ்வரூபம் எடுத்து வளர்ந்திருக்கிறது.

05. எவருக்கோ அந்த பங்களா தேவைப்படுகிறது? அப்படியானால் எதற்கு தேவைப்படும்?

06. எவரும் அந்த பங்களாவில் குடியிருக்கவில்லை. அப்படியானால் சமூக விரோத காரியங்களுக்கு வேண்டி பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு.

07. அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள, இப்படி பயமுறுத்தல் வேலைகளை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஜீவாவை பொறுத்தவரையில் அனுமாஷ்யத்தில் நம்பிக்கை என்பது துளி கூட கிடையாது.

உதவியாளர் கதவை திறந்து கொண்டு வந்து ஒரு கோப்பையில் சூடான தேநீர் வைக்கவும், அதை எடுத்து மெதுவாக குடிக்க ஆரம்பித்தான்.

"அப்படி மனித உறுப்புகள் கிடைக்கவேண்டும் என்றால் இரண்டு இடங்கள் தான் உண்டு. உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக அங்குள்ள மனிதர்களை சரிக்கட்டி செய்யலாம். அடையாளம் தெரியாத பிணங்களை அடையாளம் தெரியும் வரை மாரசுவரியில் வைத்திருப்பது வழக்கம். அங்கிருக்கும் வேலையாட்களை சரிக்கட்டி எடுத்து வருவதற்கும் வாய்ப்பு உண்டு."

"இந்த வீட்டை எத்தனை நபர்கள் வாங்குவதற்கு முயற்சி செய்தார்கள் என்று தெரியவேண்டும். அந்த தினங்களில் இது போன்று மனித உறுப்புகள் காணாமல் போனது பற்றிய செய்திகள் உண்டா என்பது தெரியவேண்டும்."

ஜீவாவிற்கு தேவையான தடயங்களை நெருங்கி விட்டது போல தோன்றியது. சட்டென்று, கமிஷனர் அலுவலகத்திற்கு போன் செய்து விஸ்வநாதனிடம் விபரங்கள் சொன்னான்.

இரண்டு மணி நேரத்தில் அவனுக்கு வேண்டிய தகவல்கள் கிடைத்தன.

"கடந்த பத்து வருடங்களில் ஐந்தே நபர்கள் தான் பங்களாவை வாங்குவதற்கு முயற்சி செய்து இருக்கிறார்கள். அவர்கள் முயற்சி செய்த தினங்களில் மார்சுவரியில் இருந்து உறுப்புகள் காணாமல் போயிருக்கின்றன. நாய் கடித்துக்கொண்டு சென்று இருக்கவேண்டும் என்று ரிப்போர்ட் எழுதி ரெகார்டை முடித்திருக்கிறார்கள்."

ஒரு நாள் கழிந்தது. அடுத்த நாள் விடிகாலை ஏழு மணி -

விருட்டெண்ட்று எழுந்த ஜீவா அன்றைய தினத்தின் தமிழ் பத்திரிகைகளை கொண்டு வரச்சொல்லி பத்தி பத்தியாக படிக்க ஆரம்பித்தான். எட்டாம் பத்தி மூலையில் இருந்த செய்தி அவனை உறுத்தியது

"தாம்பரம் பிணவறையில் இருந்த பிணத்தின் உறுப்பு ஒன்றை நாய் கடித்துச்சென்று விட்டதாக தகவல் கொடுத்த பிணவறை காப்பாளரை காவல் நிலைய ஆய்வாளர் உலுக்கி எடுத்ததை கண்டித்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்."

அடுத்த இரண்டு நிமிடங்களில், கமிஷனர் அலுவலகத்திற்கு போன் செய்து, தனது சந்தேகத்தை ஜீவா சொல்லவும், இரண்டு மணி நேரத்தில் அந்த ஊழியரை இழுத்துக்கொண்டு காவல் நிலையம் வந்து அங்கு அமர்ந்திருந்த ஜீவாவின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டான்.

ஏற்கனவே நன்கு கவனிக்கப்பட்டிருந்த உதவியாளன் எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாது சொல்ல ஆரம்பித்தான்.

"முந்தாநாள் என்னிடம் வந்து கத்தியை காட்டி மிரட்டி ஒரு பிணத்தின் கையை எடுத்து சென்றார்கள். இது போல நான்கு முறை நடந்திருக்கிறது. அதே ஆள் தான் வருவான்., எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு சென்று விடுவான். அவன் பெயர் ராமசாமி. மூன்றாம் நம்பர் வீடு, குறுக்கு தெரு, படப்பையில் இருக்கிறான்."

அடுத்த மூன்று மணி நேரத்தில் விறுவிறுப்பான காரியங்கள் நடக்க ஆரம்பித்தன. "வெட்டுப்பட்ட கை" வந்து விழுந்ததின் காரணம் தெரிந்து போனது.

பத்திரிகையாளர்கள் புடை சூழ, ஜீவா சொல்லிக்கொண்டு இருந்தான். "இது ஒரு சமூக விரோத கும்பல். அவர்கள் கொலை, கொள்ளை, திருடு, கஞ்சா கடத்தல் போன்ற காரியங்கள் செய்யும் ஒரு ஒட்டு மொத்த கூட்டம் தங்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தான் அந்த பங்களா. இதுவரை அவர்கள் அங்கு தங்கியிருந்தது காவல் அலுவலகத்திற்கும் தெரியாமல் போனது ஆச்சரியம் தான். அங்கு தான் குடிப்பார்கள், கூத்தடிப்பார்கள். ஆனால் எவருக்கும் தெரியாமல் மறைமுகமாக தான் செய்வார்கள். மக்களும் பாழடைந்த பங்களா என்று நினைத்து கவலைப்படவில்லை. பங்களாவை பார்ப்பதற்கு எவராவது வரும்போது தான் இது போன்ற மனித உறுப்புகளை கொண்டு வந்து போட்டு அவர்களை பயமுறுத்தி அனுப்பிவிடுவார்கள். மொத்தத்தில் அவர்கள் பயன்படுத்திய ஒரே ஆயுதம் - பயம் - பேய் பற்றிய ஒரு பயம். பங்களாவில் தங்கியிருந்த முப்பது சமூக விரோதிகளை இப்போது தான் கைது செய்து மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர் செயற்திருத்திருக்கிறார்கள் காவல் நிலை அதிகாரிகள்."

வெட்டுப்பட்ட கை விபரங்களை புட்டு புட்டு வைப்பதற்கு தன்னால் இயன்ற பங்கை செலுத்தி விட்டது.

  • 99
·
Added a post

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை சுத்தமாக இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர். என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்? கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.

உடனே தளபதி வீரர்களை அழைத்து, "சரி வீரர்களே நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம் வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும் சரியா?" "ஆ.. நல்ல யோசனை அப்படியே செய்வோம்" நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம். தலை! வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு. அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!

துணைத் தளபதி வந்தான். 'நாம் வென்றுவிட்டோம் கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா" என்றான் உற்சாகத்துடன். "ஆமாம் உண்மைதான்" என்றபடி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி. நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!

  • 148
  • 304
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்களின் சுய ரூபத்தை அறிவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிற மத மக்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

ரிஷபம்

புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட தூர பயண சிந்தனைகள் மேம்படும். தாய் வழியில் அலைச்சல்கள் வந்து போகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மிதுனம்

உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டாகும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். சிறு தூர பயணங்களால் தெளிவுகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்

 

கடகம்

மனதில் தெளிவுகள் ஏற்படும். தடைபட்ட சில வரவுகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். தந்திரமான சில செயல்களால் வியாபாரத்தில் லாபத்தை மேம்படுத்துவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

சிம்மம்

சாலை பயணங்களில் கவனம் வேண்டும். வியாபார செயல்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கன்னி

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

துலாம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

விருச்சிகம்

புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப பிரச்சனைகளை பகிர்வதை தவிர்க்கவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபார பயணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

தனுசு

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மகரம்

உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். சில முடிவுகளில் அனுபவம் கைக்கொடுக்கும். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கும்பம்

முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிலரின் சந்திப்புகளால் மாற்றங்கள் பிறக்கும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சுப செய்திகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

மீனம்

மனதளவில் தெளிவுகள் ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். சவாலான வேலைகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். செயல்களில் இருந்த தடைகள் விலகும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

  • 315
·
Added a post

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 14.11.2025

இன்று அதிகாலை 04.38 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று அதிகாலை 01.06 வரை மகம் . பின்னர் பூரம்.

இன்று காலை 11.18 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.

இன்று அதிகாலை 04.38 வரை கரசை. பின்னர் மாலை 04.47 வரை வணிசை. பின்பு பத்தரை.

image_transcoder.php?o=sys_images_editor&h=327&dpx=2&t=1763092111

நல்ல நேரம்:

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 323

Good Morning...

  • 341
·
Added a post

மார்க்கண்டேயர் என்ற ரிஷி ஒருவர் இருந்தார். அவர் இளம் வயதினர். பிரம்மச்சர்ய விரதத்தைக் கடைப்பிடித்து, மரவுரி தரித்து, புலன்களை அடக்கி மகாவிஷ்ணுவை மனதில் தியானித்து கடும் தவம் மேற்கொண்டார். ஆறு மன்வந்திர காலம் இவ்வாறு தவம் செய்துவந்தார். ஏழாவது மன்வந்திரத்திலும் தனது தவத்தைத் தொடர்ந்தார். அப்போது இந்திரன் கவலை அடைந்தான். மார்க்கண்டேயர் தொடர்ந்து தவம் செய்துவந்தால் தனது இந்திரப்பதவி பறிபோய்விடும் என்று நினைத்தான். அழகிய தேவலோகப் பெண்களை மார்க்கண்டேயர் இருக்குமிடம் அனுப்பி, அவரை மயக்கி, அவரது தவத்தை கலைக்க முற்பட்டான்.

அப்பெண்கள் தமது இனிய கானத்தாலும், மயக்கும் நடனத்தாலும், வசீகர தோற்றத்தாலும் மார்க்கண்டேயரை தமது வலையில் வீழ்த்த முயன்றனர். ஆனால் மார்க்கண்டேயர் தனது கவனம் சிதறாமல் தொடர்ந்து தவம் செய்தார். தனது உடல்ஒளியினால் அப்பெண்களை சுட்டெரிக்க முயன்றார். அப்பெண்கள் இதை உணர்ந்து பயம்கொண்டு தேவலோகத்திற்கு ஓடிவிட்டனர்.

தம்மை தியானித்து இத்தனை காலம் தவம் செய்த மார்க்கண்டேயருக்கு அருள் பாலிக்கும் பொருட்டு ஸ்ரீமன் நாராயணன் அவருக்கு காட்சியளித்தார். மார்க்கண்டேயர் மிக்க மகிழ்ந்து, அவருக்கு தக்க மரியாதை செய்து பூஜித்தார். ஸ்ரீமன் நாராயணன் மிக்க மகிழ்ச்சியடைந்து " மார்க்கண்டேயா ! உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் ! " என்று கூறினார்.மார்க்கண்டேயர் " பகவானே ! எனக்கு எந்தப் பொருளின்மீதும் ஆசையில்லை !எந்தப் பதவியும் எனக்கு வேண்டாம் !. நான் தங்களை தரிசித்துவிட்டேன் ! அதுவே போதும். ஆனால் தங்களுடைய மாயையை பார்க்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. அதை எனக்கு காட்டுங்கள் ! " என்று கூறினார்.( மாயை என்பது விஷ்ணுவின் ஒரு உருவம்). அதைக்கேட்ட பகவான் "அப்படியே ஆகட்டும் !" என்று கூறிவிட்டு பத்ரிகாசிரமம் சென்றுவிட்டார். மார்க்கண்டேயரும் தனது ஆசிரமம் சென்றடைந்து பகவானை தியானித்துவந்தார்.

ஒருநாள் திடீரென்று பெரும் காற்று வீசத்தொடங்கியது. மின்னல் இடியுடன் பலத்த மழை பெய்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளம். நான்கு கடல்களும் பொங்கியெழுந்து உலகை மூழ்கடிக்கத் தொடங்கின. நீர்வாழ் விலங்கினங்களும், நிலம்வாழ் உயிரினங்களும் தவித்தன.

இதைக்கண்ட மார்க்கண்டேயர் வருத்தமடைந்தார். தனது ஜடைமுடியை விரித்துக்கொண்டு மூடன்போன்று பற்பல இடங்களில் அலைந்து திரிந்தார்.இறுதியில் மேடான ஒரு இடத்தில் ஆலமரம் ஒன்று இருப்பதைக் கண்டார்.அம்மரத்தின் அருகில் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த ஓர் ஆலிலையில் குழந்தை ஒன்று படுத்திருப்பதைக் கண்டார். இருளைப் போக்கக்கூடிய ஒளி உடையதாய் அக்குழந்தை இருந்தது. அக்குழந்தை தாமரை மலர் போன்ற முகம் உடையது. சங்கு போன்ற கழுத்தினை உடையது. சுருண்ட தலைமுடி, மாதுளை பூக்களைப் போன்ற காதுகள், பவளம் போன்ற சிவந்த உதடுகளை உடையதாய் இருந்தது.

அந்த அழகிய குழந்தை தன் கைகளினால் கால் கட்டைவிரலை வாயில் வைத்து சப்பிக்கொண்டிருந்தது. பலவித அணிகலன்களை அணிந்து திவ்ய ரூபத்துடன் காட்சியளித்த அக்குழந்தையைக் கண்டு மார்க்கண்டேயர் ஆச்சரியம் அடைந்தார். "இதுபோன்ற குழந்தையை பார்த்ததில்லையே ! " என்று ஆனந்தமடைந்தார். மிகுந்த மகிழ்வுடன் அக்குழந்தையின் அருகில் சென்றார்.

அக்குழந்தையின் மூச்சுக்காற்றினால் இழுக்கப்பட்டு ஒரு கொசுவின் உருவில் மார்க்கண்டேயர் குழந்தையின் வாயில் நுழைந்தார். பின்னர் வயிற்றுப்பகுதிக்கு சென்றுவிட்டார். அக்குழந்தையின் வயிற்றில் பிரபஞ்சம் முழுவதும் இருப்பதைக் கண்டார். அங்கே ஆகாயம், பூமி, நட்சத்திரங்கள், மலைகள், ஆறுகள், கடல்கள், பலவித உயிரினங்கள் இருப்பதைக் கண்டார் தனது ஆசிரமும் அக்குழந்தையின் வயிற்றுள் இருப்பதைக்கண்டு மார்க்கண்டேயர் ஆச்சரியம் அடைந்தார். சிறிதுநேரத்தில் குழந்தையின் மூச்சுக்காற்றினால் வெளியே தள்ளப்பட்டு மார்க்கண்டேயர் பிரளய நீரில் வந்து விழுந்தார்.

நீரில் வந்து விழுந்தவுடன் ஆலிலையின்மேல் படுத்திருக்கும் வடபத்திரசாயியான அக்குழந்தைதையைப் பார்த்தார். அக்குழந்தையின்மேல் அன்பு பொங்கியது.அந்க் குழந்தையை தொட்டுத் தூக்கி அணைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பினார். அக்கணமே குழந்தையாகப் படுத்திருந்த பகவான் மறைந்தார். அந்த. ஆலமரமும் மறைந்தது. பிரளயநீரையும் காணவில்லை.மார்க்கண்டேயர் முன்புபோல் தனது ஆசிரமத்தில் அமர்ந்திருந்ந்தார்.

.அப்போது மார்க்கண்டேயர் பகவான் நாராயணின் யோகமாயையினால் இத்தகைய தோற்றம் தென்பட்டது என்பதை உணர்ந்தார். தனது வேண்டுகோளை ஏற்று நாராயணன் தனது மாயாவினோதங்களைக் காட்டி மகிழ்வித்ததை எண்ணி வியந்தார். "பெருமாளே ! உம்முடைய மாயையைக்காண மகரிஷிகள்கூட விரும்புகிறார்கள். நீர் உம்மை அண்டியவர்களின் பயத்தைப் போக்குபவர் ! அப்படிப்பட்ட உன் பாதகமலங்களை சரணடைகிறேன் ! " என்றுகூறித் துதித்தார்.

இதுதான் ஆலிலை கிருஷ்ணனின் (விஷ்ணுவின்) வரலாறு. இவர் மாயையை காட்டியதால் இவருக்கு மாயோன், மாயவன் என்ற பெயர்களும் உண்டு. (மார்க்கண்டேயர் சிவபெருமானை துதித்து தவம் புரிந்து " என்றும் பதினாறு வயதுடன் சிரஞ்சீவியாக இருப்பாய் ! " என்று வரம் பெற்றது புராணங்களில் கூறப்பட்டுள்ளது).

  • 473
·
Added a post

தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்திற்கு ஒரு இயந்திரம் வடிவு அமைத்துக் கொடுத்தார்.. அதற்கு என்ன விலை நிர்ணயம் செய்யலாம்? என்பது சற்றுக் குழப்பமாக இருந்தது.. எடிசனும்,அவரது மனைவியும் இது பற்றி விவாதித்தார்கள்.

எடிசன் மனைவி இருபதாயிரம் டாலர் கேளுங்கள் என்றார். எடிசனோ, "இந்தத் தொகை பெரிய தொகையாக இருந்தால் யாரும் வாங்காமல் போனால் என்ன செய்வது? என்று சிந்தித்துக் கொண்டு இருந்தார். பணம் தருவதற்காக நிறுவனத்தின் ஒரு மூத்த அதிகாரியை வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் அனுப்பி இருந்தது. இயந்த்திரத்துக்கான விலையை அதிகாரி கேட்டார். எடிசன் சில நிமிடம் மௌனமாக இருந்தார். எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டே இருந்தார்..

பொறுமை இழந்த அந்த நிறுவனத்தின் அதிகாரி''எடிசன் சார். "இதோ உங்கள் இய்ந்திரத்திற்க்கான விலை முதல் தவணையாக நூறு ஆயிரம் டாலர்கள்" என்று சொல்லி அதற்கான காசோலையைக் கொடுத்தார். மீதி எவ்வளவு என்று சொல்லி அனுப்புங்கள், காசோலையை அனுப்பி வைக்கின்றோம் என்று கூறி இயந்திரத்தை எடுத்துச் சென்றார். அவசரப்படாமல், பொறுமை காத்த எடிசனுக்கு நான்கு மடங்கு இலாபம் கிடைத்தது. அவசரப்பட்ட நிறுவனத்தின் அதிகாரியால் நான்கு மடங்கு நட்டம் நிறுவனத்திற்கு ஏற்பட்டது.

அவசரம் நமக்கு சிப்பிகளைத் தரலாம், ஆனால் பொறுமையே முத்துகளைத் தர முடியும். ஒருவனுடைய திறமைகளை வெற்றிகளாக உருமாற்றித் தருவது அவரின் பொறுமையே ! பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு ! அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும் துடுப்பாய் பயன் தரும்.

  • 482
  • 475
·
Added a post

மேஜிக் ரைஸ் (Boka Saul)

போக்கோசால் (Boka Saul) இது மேஜிக் ரைஸ் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இதனை சமைக்கவே தேவை இல்லை. வெறும் தண்ணிரை உற்றினாலே போதும் இந்த அரிசி சாதமாக மாறுகிறது. இப்படி ஒரு அரிசி ரகத்தை நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க கூட வாய்ப்பு இல்லை தான். ஆனால் உண்மையில், இந்த வகை பாரம்பரிய அரிசியும் நாம் நாட்டில் விளைவிக்கப்பட்டு வருகிறது.

பூர்விகம்:

அஸ்சாம்நிலத்தைபூர்வீகமாககொண்டுள்ளது இந்த பாரம்பரிய அரிசி.

இந்த அரிசி புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது.

இந்த அரிசியை அஸ்ஸாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆண்ட 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த அஹோம் வம்சத்தினர் பயன்படுத்தி வந்தனர்.

போக்கோசால் அரிசியின் சிறப்புகள்:

போக்கோசால்ரிசி நடவு செய்ததிலிருந்து 145 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுகிறது.

இந்த அரிசியில் ஆறிய தண்ணீரை உற்றினால் சாதாரண ஆறிய சாதமாகவும், வெந்நீரை ஊற்றினால் சூடான சாதமும் தயாராகி விடும்

இது நாம் சமைத்து உண்ணும் அரிசி போலவே இருக்கும்.

சமைக்கவே வேணாம்.. ஊறவச்சா போதும்

சத்துகள்:

இதில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருப்பதாகவும். மேலும் 10.73 சதவீதம் நார்ச்சத்து மற்றும் 6.8 சதவீதம் புரதம் இருப்பதாக இந்திய வேளாண் ஆரய்ச்சிக் கழகம் கூறி உள்ளது.

  • 477

சரிதானே சொல்லுங்க....

  • 485
  • 491
·
Added a post

தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி... அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன... சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது... அந்த நூறு நாய்களும் பதிலுக்கு.... "உர்ர்.. உர்ர்.." என்றது.

அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது. இருந்தும் கோபம் தாளாமல்.. "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.

எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது. அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன் மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திக் கொண்டது.....

அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,

" வெறி பிடித்ததை" போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன...

இந்த நாய் பயத்தின் உச்சத்தில்... வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கியது....

இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது....

இறந்து போன அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்கு புரிந்திருக்கும்.

1. தான் நுழைந்தது நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று...

2. தன்னை சுற்றி இருந்தது தனது பிம்பங்கள் தான் என்று....

3. குரைத்தது சுற்றி இருந்த நாய்கள் அல்ல... தன் குரலின் எதிரொலி தான் என்று....

கதையின் நீதி:

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது.... நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும்..

அன்பு செலுத்தினால்... அன்பு கிடைக்கும்... நீ எதை விதைக்கிறாயோ...., "அதுவே முளைக்கும்"...

  • 493
·
Added a post

* குழம்பு அல்லது கூட்டுக்கு தேங்காய்க்கு பதிலாக, கசகச மசாலாவை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து போட்டு இறக்கலாம்

* பொரியலுக்கு பொரி அரிசி அல்லது சிறிது வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கொள்ளலாம்

* போளி செய்யும் போது, பிசைந்த மைதா மாவை அப்பளம் போல் இட்டு, அதனுள் வெல்லம், தேங்காய் கலந்த பூரணத்தை நிரப்பி, மீண்டும் மூடும் போது, அதிகப்படியான மாவை நீக்கிவிட்டால், போளி மிருதுவாக இருக்கும்

* வற்றல் குழம்பில் ஒன்றிரண்டு மேஜைக்கரண்டி அளவு புளிக்காய்ச்சலை எடுத்து கலந்து விட்டால், சுவையும், மணமும் நிறைந்த வற்றல் குழம்பு தயார்

* சப்பாத்தி மாவோடு கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி, காரப்பொடி, பெருங்காயத்துாள், சீரகம் மற்றும் கறிவேப்பிலை கலந்து சுட்டால், சைடிஷ் இல்லாத சப்பாத்தி தயார்

* கொண்டைக்கடலையை ஊற வைத்து, அவித்தால், சில சமயம் ஒருவிதமான வாடை வரும். அதற்கு, கொண்டைக்கடலையை நன்றாக கழுவி ஊற வைத்த பின், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என்று இரண்டு மூன்று முறை மறுபடியும் கழுவி, தண்ணீரை மாற்ற வேண்டும்.

  • 507
·
Added a post
  • பல வீடுகளில் அரிசியை மாதக்கணக்காக சேமித்து வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
  • சேமித்து வைத்திருக்கும் அரிசி, பருப்பு மற்றும் மாவு போன்றவற்றில் சிறு சிறு பூச்சிகள் மற்றும் புழுக்கள் வரலாம்.
  • எந்த ஒரு கெமிக்கல்களையும் பயன்படுத்தாமல் அரிசியை பாதுகாப்பதற்கு சில பாரம்பரிய முறைகள் பின்பற்றலாம்.
  • உலர்ந்த வேப்பிலையை அரைத்து, சிறு உருண்டையாக கட்டி அரிசியின் நடுவில் வைக்கவும். இது பூச்சிகளைத் தடுக்கும்
  • ஒரு சுத்தமான துணி அல்லது பெரிய ஒரு டிரே எடுத்து அரிசியை நன்றாக பரப்பி நேரடி சூரிய வெளிச்சத்தில் 2 முதல் 3 மணி நேரம் வைக்கவும்.
  • பூச்சிகளால் ஈரமான சூழலில் மட்டுமே வாழ முடியும். எனவே இந்த செயல்முறை அரிசியை உலர்த்தி மீண்டும் பூச்சிகள் வராமல் பார்த்துக் கொள்ளும்.
  • அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தின் மேற்புறம் அல்லது அடிப்பகுதியில் கல் உப்பை போடவும். உப்பானது அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி தானியங்களை உலர்ந்த நிலையிலும், பூச்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.
  • 2 அல்லது 3 பிரியாணி இலைகளை அரிசி இருக்கும் பாத்திரத்தில் போடலாம். இதே முறையை நீங்கள் பருப்பு மற்றும் மாவிற்கும் பயன்படுத்தலாம்.
  • கிராம்பு வாசனைக்கும் பூச்சி வராது.
  • தோல் உரிக்காத 5 - 6 பூண்டு பற்களை அரிசி இருக்கும் பாத்திரத்தில் போடவும். இதிலிருந்து வரும் வாசனை பூச்சிகளை விரட்டும். அரிசி உலர்ந்த பிறகு புதிதாக வேறு பூண்டை மாற்றுவதன் மூலமாக தொடர்ந்து அரிசியை நீங்கள் பாதுகாத்து வரலாம்.
  • 517
·
Added a post

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள்.

"அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை."

கைதி பதில் எழுதினான்.

" குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்.."

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம். " அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?"

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

"அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!"

புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.

  • 529