·   ·  1 videos
  •  ·  3 friends
  • B

    S

    3 followers
  • 1175
  • More

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலே

மலருகின்ற இதழோ

மாதுளையின் பூப்போலே

மலருகின்ற இதழோ

மானினமும் மீனினமும்

மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ

நீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாக

பார்வையொருக் கணையாக

புருவமொரு வில்லாக

பார்வையொருக் கணையாக

பருவமொரு களமாகப்

போர் தொடுக்கப் பிறந்தவளோ

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

தேன் சுவையைத் தான் குழைத்து

கொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்

பசுந்தளிர் போல் வளை கரமும்

தேன் கனிகள் இருபுறமும்

தாங்கி வரும் பூங்கொடியோஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ

ஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ

யாழிசையின் ஒலியாக

வாய்மொழி தான் மலர்ந்தவளோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோசெந்தழலின் ஒளி எடுத்து

சந்தனத்தின் குளிர் கொடுத்து

பொன் தகட்டில் வார்த்து வைத்த

பெண்ணுடலை என்னவென்பேன்

மடல் வாழைத் துடையிருக்க

மச்சம் ஒன்று அதிலிருக்க

மடல் வாழைத் துடையிருக்க

மச்சம் ஒன்று அதிலிருக்க

படைத்தவனின் திறமை எல்லாம்

முழுமை பெற்ற அழகியென்பேன்நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோ

Comments (0)
Login or Join to comment.
  • 2983
·
Added a post

ஒரு மகன் ஒரு முறை தன் தாயிடம் கேட்டான்.

எங்களை வளர்ப்பதற்காக அதிகமாக கஷ்டப்பட்டு தியாகம் செய்தது நீங்களா...? அல்லது அப்பாவா...?

அதற்குத் தாய் இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்டிருக்க கூடாது, குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் எவ்வித கஷ்டமும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். உங்க அப்பா என்னை திருமணம் செய்துகொண்டபோது சொந்த விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். நீ பிறந்த பின்னர் தன் விருப்பு வெறுப்புகளை மாற்றி உங்களுக்காக உங்கள் நலனுக்காக, உணவு, உடை, மருந்து மற்றும் உங்கள் கல்விக்கு என பல தேவைகளுக்காக சம்பாதித்தார். நீங்களும் நானும் இந்த குடும்பமும் உன் தந்தையின் வியர்வை உருவானவர்கள்.

மகன் இதே கேள்வியை தன் தந்தையிடம் கேட்டான்.

அவரின் பதில் வேறு மாதிரி இருந்தது. உங்கள் தாயார் எவ்வளவு தியாகம் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. உன்னை வளர்ப்பதற்காக அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. அவளுடைய பொறுமையும் விடாமுயற்சியும் தான் இந்த குடும்பத்தை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்தது. என்னுடைய வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்தாள். தனக்கு தேவையான எதையும் அவள் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. உங்களுக்காக தான் என்னுடன் சண்டையிட்டிருக்கிறாள். அவளது தியாகத்தை விட நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை என்றார்.

மகன் தனது சகோதரர்களிடம் சொன்னான். நம்மைவிட இந்த உலகில் அதிர்ஷ்டசாலிகள் யாரும் இருக்க முடியாது. தந்தையின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தாயும், தாயின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தந்தையும் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் சொர்க்கம்தான்.

பெற்றோர்கள் இருவர் அல்ல, ஒரு கிரீடத்தில் இருக்கும் இரண்டு வைரக்கற்கள். அவர்களை நம்முடனேயே வைத்து அவர்களது ஆயுட்காலம் முழுவதும் காப்போம்.

  • 2
·
Added a post

ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினை... நெட்ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விஷயத்தைச் சொன்னான்.

"டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். கீழே எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே. "

டாக்டரு சொன்னாரு.. "தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒருதரம் வீதம் அஞ்சு செஷன் என்கிட்டே வாங்க. சரி பண்ணிடலாம்" .

"ரொம்பத் தேங்ஸ் டாக்டர்.

எவ்வளவு பீஸ்?"

" ஓரு செஷனுக்கு 2000 ரூபாய் தான் தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுரை ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000 சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500 ரூபாய் . "

" ஓ அப்டீங்களா? சரிங்க

டாக்டர் ஐயா. வர்றேன். "

ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு ப்ளாட்பாரக் கடையில காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டர் அவனைப் பாக்கறாரு.

" அடடே என்னா தம்பி,

அப்புறம் வரவே இல்லே? "

"அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு."

" ஓ.. அப்டியா, எப்படி சரியாச்சி? "

" நம்ம அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம்."

டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு. " என்ன தம்பி சொல்றீங்க?

வெவரமா சொல்லுங்க "

" அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்கன்னாரு.. அப்புடியே கட்டிலை 2000க்கு வித்துட்டு 200ரூபாய்க்கு பாய் வாங்கிட்டேன். இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே.

டாக்டர்: 😳😳😳😳

  • 2
·
Added a post

ஒரு தத்துவவாதிக்கு மூன்று பையன்கள் இருந்தார்கள். அவர் அந்த மூன்று பையன்களுக்கும் அர்த்தம் உள்ள பெயர்களை வைத்திருந்தார்.

அதாவது ஒருவன் பெயர் மேனஸ் (Manners) நல்ல பழக்க வழக்கங்களை உடையவன்.

இரண்டாவது பையன் பெயர் ட்ரபுல்ஸ் (Troubles) தொந்தரவு என்று அர்த்தம்.

மூன்றாவது பையன் பெயர். மைண்ட் யுவர் ஓன் பிசினஸ் (Mind your own business) உன் வேலையை பார்த்துக் கொண்டு செல் என்று அர்த்தம்.

இப்பொழுது இந்த அர்த்தம் உள்ள பெயர்கள் எவ்வளவு ஆபத்தானது என்பதை கவனியுங்கள்.

ட்ரபுல்ஸ் என்ற பையனை காணவில்லை.

ஆகவே மேனஸும் மைண்ட் யுவர் ஓன் பிஸ்னஸ் என்ற பையனும் காவல் நிலையத்துக்குச் சென்றார்கள்.

அங்கு சென்றதும் மைன்ட் யுவர் ஓன் பிசினஸ் மேனஸிடம் நீ கொஞ்சம் வெளியே இரு என்று சொல்லிவிட்டு காவல் நிலையத்துக்குள் சென்றான்.

உள்ளே உட்கார்ந்து இருந்த போலீஸ்காரரிடம் என்னுடைய தம்பி காணாமல் போய்விட்டான் என்று புகார் கூறினான்.

அதற்கு போலீஸ்காரர் உன்னுடைய பெயர் என்ன? என்று கேட்டார்

மைன்ட் யுவர் ஓன் பிசினஸ் என்றான் இவன்.

அந்த போலீஸ்காரன் எரிச்சல் அடைந்து உன்னுடைய நல்ல பழக்கங்கள் எங்கே போயிற்று என்ற அர்த்தத்தில் வேர் இஸ் யுவர் மேனஸ்?

என்று கோபமாக கேட்டார்.

அவன் வாசலுக்கு வெளியே நிற்கிறான் என்றான்.

நீ ஏதாவது தொந்தரவு கொடுக்க வந்திருக்கிறாயா என்ற அர்த்தத்தில் ஆர் யூ லுக்கிங் பார் ட்ரபுல்ஸ்? என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

ஆமாம் அவனை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டான் இவன்.

பின்னர் போலீஸ்காரரின் நிலையை சொல்லவும் வேண்டுமோ???

  • 4
·
Added a post

மேஷம்

பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

 

ரிஷபம்

பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சொந்தத் தொழிலில் லாபங்கள் மேம்படும். அரசு வழியில் சில உதவிகள் சாதகமாகும். புதுவிதமான கருவிகள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். துணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மிதுனம்

கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் அடைவீர்கள். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பாகப்பிரிவினை பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்து செல்லவும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்

 

கடகம்

சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை ஆட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். வர்த்தக முதலீடுகளில் தவிர்ப்பது நல்லது. பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

சிம்மம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நவீன கருவிகள் மீது ஆர்வம் ஏற்படும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பலவித மக்களின் தொடர்புகள் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கன்னி

வரவுகளில் இருந்த இழுபறிகள் மறையும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். வீடு மனை விற்பனையில் லாபம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். எதிர்ப்பாலின மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோக பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

துலாம்

எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளால் அலைச்சல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

விருச்சிகம்

பெரியார்களின் ஆலோசனைகள் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான பலன்கள் சாதகமாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடிவரும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். சேமிப்பு விஷயங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் 

 

தனுசு

விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்புகள் உயரும். புதுவிதமான அணிகலன்கள் சேர்க்கை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

மனதளவில் இருந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உருவாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை

 

கும்பம்

அரசு வழியில் இருந்த நெருக்கடி நீங்கும். மனதில் புதிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் சில பிரச்னைகள் வந்து செல்லும். ஆதாயகரமான முயற்சிகள் நிறைவேறும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். ஆக்கபூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

மீனம்

அவசரமான முடிவுகளை தவிர்க்கவும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். எதிர்மறை சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் முதலீடுகளில் ஆலோசனை வேண்டும். சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

  • 31
·
Added a post

வாராஹி தேவியை ஆத்மார்த்தமாக வழிபட்டு வந்தால், இன்னல்களும் இருக்காது. எதிரிகளும் இருக்கமாட்டார்கள். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் பலமிழக்கச் செய்வாள் என்கின்றனர் சாக்த வழிபாடு செய்யும் பக்தர்கள்.

சப்தமாதர்களில் ஒருத்தியாகத் திகழ்பவள் வாராஹி. லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியாகப் போற்றப்படுபவள் வாராஹி தேவி.சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவள். கனிவுடன் கறார் குணமும் கொண்டு செயல்படுபவள்.

‘ஜகத் கல்யாண காரிண்ய’ என்பதற்கேற்ப உலக க்ஷேமத்துக்கான அருளை வழங்குகிற வாராஹி, சப்த மாதர்களில் தலையானவள் என்கின்றனர்.

மகாகாளி, தாருகாசுரனுடன் போர் புரிந்தபோது அவளுக்குத் துணை நின்றவள் வாராஹிதேவி. யக்ஞ வராஹ மூர்த்தியின் சக்தியாகப் போற்றப்படுகிறாள்.

சும்பாசுரனோடு சண்டிகா புரிந்த போரிலும் வாராஹியே உதவி செய்தாள். உறுதுணையாக இருந்தாள். அசுரனையும் அசுரத்தனத்தையும் அழிக்க பேருதவி புரிந்தாள்.

சிங்கத்தை வாகனமாகக் கொண்டு மூவுலகங்களையும் ஆளுபவள் லலிதா பரமேஸ்வரி. இவளின் சேனைக்குத் தலைவி வாராஹி. படைகளின் தலைவி இவள். லலிதையின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ இவள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஹிரண்யாட்சனைக் கொல்ல வராஹ ரூபம் தரித்தாள். சங்கு, சக்கரம், கதை முதலான ஆயுதங்களை ஏந்திப் போரிட்டாள். அவனை வதைத்து பூமாதேவியை கடலில் இருந்து மீட்டார் திருமால். உலகின் ஜீவாதாரமான பூமிதேவியை உலகிற்கு மீட்டுத் தந்த மூர்த்தியின் அம்சமான வாராஹியும் பராக்ரமங்களில் தன்னிகரில்லாதவளாக திகழ்கிறாள்.

திருமாலின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக் கொண்ட சக்தி எவளோ, அவளே அங்கு வாராஹி வடிவம் தாங்கி வந்து சேர்ந்தாள் என தேவி மஹாத்மியத்தின் எட்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

வராஹ மூர்த்தியின் அம்சமே வாராஹி. நிகரற்ற அருளும் இணையற்ற ஆற்றலும் கொண்ட வாராஹியைப் பற்றியும் அவளின் பல்வேறு வடிவங்களை பற்றியும் மந்திர சாஸ்திர நூல்கள் பலவாறுவிதமாகப் புகழ்கின்றன.

வாராஹியை பஞ்சமி திதியில் வழிபடுவது, எண்ணற்ற பலன்களையும் வலிமையையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.

  • 50
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 11 ஆம் தேதி வியாழக்கிழமை 27.11.2025

இன்று இரவு 08.03 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று இரவு 10.57 வரை அவிட்டம் . பின்னர் சதயம்.

இன்று காலை 09.22 வரை துருவம். பின்னர் வியாகாதம்.

இன்று காலை 08.12 வரை கரசை. பின்னர் இரவு 08.03 வரை வணிசை. பிறகு பத்தரை.

இன்று காலை 06.14 வரை மரணயோகம். பின்னர் இரவு 10.57 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=340&dpx=2&t=1764245454

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 63

இனிய வியாழக்கிழமை ...

  • 60

Good Morning...

  • 60
·
Added a news

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறித்து பேசும்போது, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார் கனடி பிரதமர்.

தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த G20 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, கனடா பிரதமரான மார்க் கார்னி ஊடகவியலாளர்களை சந்தித்தபோது, டிரம்பை சந்திப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார்கள் ஊடகவியலாளர்கள்.

பேச்சுவார்த்தைகள் நடத்தினோம், நானும் பிஸியாகிவிட்டேன், மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேசுவோம் என்று கூறினார் கார்னி.

அப்போது, கடைசியாக கார்னி எப்போது டிரம்புடன் பேசினார் என்பது குறித்து விளக்குமாறு மீண்டும் ஊடகவியலாளர்கள் கேட்க, சட்டென, எனக்கென்ன கவலை அல்லது யாருக்கு என்ன கவலை என்னும் ரீதியில், ’Who cares?’ என்று கூறிவிட்டார் கார்னி.

எதிர்க்கட்சியினர் அவரது பதில் குறித்து கடுமையாக விமர்சிக்கத் துவங்க, தற்போது தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார் கார்னி. முக்கியமான ஒரு விடயம் குறித்து பேசும்போது, நான் பயன்படுத்திய வார்த்தைகள் தவறானவை என்று கூறியுள்ள கார்னி, நான் கனடாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது கனடியர்களுக்கு ஒரு உறுதி அளித்தேன். நான் தவறு செய்தால், அதை நான் ஒப்புக்கொள்வேன் என்று நான் கூறியிருந்தேன். அதன்படி, நான் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கார்னி.

  • 303
·
Added a news

இந்தியா-கனடா இடையே விரைவில் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த் தெரிவித்தாா்.

தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின்போது பிரதமா் நரேந்திர மோடி, கனடா பிரதமா் மாா்க் காா்னி ஆகியோா் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது இந்தியாவுக்கு வருமாறு காா்னிக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா். இதை ஏற்றுக்கொண்ட காா்னி அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் தெரிவித்தது.

அதன் தொடா்ச்சியாக கனடாவுடன் மீண்டும் தடையற்ற வா்த்தக ஒப்பந்த (எஃப்டிஏ) பேச்சுவாா்த்தையை இந்தியா தொடங்கவுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதையடுத்து, அமெரிக்க வரி விதிப்பு, இந்தியாவுடனான வா்த்தக கொள்கை குறித்து ஊடகத்துக்கு அனிதா ஆனந்த் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், ‘அமெரிக்க வரி விதிப்பு மற்றும் இந்தியாவுடனான வா்த்தக உறவு என அனைத்திலும் புதிய வெளியுறவுக் கொள்கையை பிரதமா் மாா்க் காா்னி தலைமையிலான அரசு பின்பற்றுகிறது. உலக நாடுகள் மிகவும் பாதுகாப்பான வா்த்தக கொள்கைகளை வகுத்துள்ளன.

இந்த சூழலில் வா்த்தக நாடாக சிறப்பான செயல்பாட்டை கனடா வெளிப்படுத்துவது அவசியம். குறிப்பாக, இந்தியாவுடன் மீண்டும் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து பேச்சுவாா்த்தை தொடங்கப்படும்.

இதை விரைவாக இறுதிசெய்ய இருநாட்டுத் தலைவா்களும் ஆா்வமாக உள்ளனா். அதேசமயம் சீனாவுடன் நல்லுறவைத் தொடரவே கனடா விரும்புகிறது’ என்றாா்.

  • 304
  • 305
  • 322
  • 326
  • 328
  • 341
·
Added a post

பிஜு (பிஜயனந்தா) பட்நாயக் (1916 - 1997) ஒருவர் மட்டுமே இந்தியாவில் மூன்று நாடுகளின் தேசியக் கொடிகளால் உடல் போர்த்தப் பட்டவர். இந்தியா, ரஷ்யா மற்றும் இந்தோனேசியா.

பிஜு 2 முறை ஒடிசாவின் முதல்வராகவும் இருந்திருக்கின்றார்.

பிஜு பட்நாயக் ஒரு விமானி.

இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் சிக்கலில் இருந்தபோது, ​​டகோட்டா என்ற போர் விமானத்தில் பறந்து ஹிட்லரின் படைகளைக் குண்டுவீசித் தாக்கினார், இது ஹிட்லரை பின்வாங்கச் செய்தது. சோவியத் யூனியனால் அவருக்கு அவருக்கு மிக உயர்ந்த விருது மற்றும் குடியுரிமை வழங்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி பாகிஸ்தானியர்கள் காஷ்மீரைத் தாக்கியபோது, ​​டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு ஒரு நாளைக்கு பல முறை விமானத்தில் பறந்து வீரர்களை ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்றவர் பிஜு பட்நாயக்.

இந்தோனேசியா ஒரு காலத்தில் டச்சுக்காரர்களின் காலனியாக இருந்தது, அதாவது ஹாலந்து. டச்சுக்காரர்கள் இந்தோனேசியாவின் ஒரு பெரிய பகுதியை ஆக்கிரமித்தனர். டச்சு வீரர்கள் இந்தோனேசியாவைச் சுற்றியுள்ள கடல் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் மற்றும் அவர்கள் எந்த இந்தோனேசிய குடிமகனையும் வெளியே விடவில்லை.

1945 இல் டச்சுக்காரர்களிடமிருந்து இந்தோனேஷியா விடுவிக்கப்பட்டது, மீண்டும் ஜூலை 1947 இல் பி.எம். சுதன் ஸ்ஜஹ்ரிர் டச்சுக் காரர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர்கள் இந்தியாவின் உதவியை நாடினர். அப்போது இந்தோனேசிய பிரதமர் ஸ்ஜஹ்ரிரை இந்தியாவுக்கு மீட்டு வருமாறு பிஜு பட்நாயக்கிடம் நேரு கேட்டுக் கொண்டார்.

1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி, பிஜு பட்நாயக்கும் அவரது மனைவியும் உயிரைப் பொருட்படுத்தாமல் டகோட்டா விமானத்தை எடுத்துக்கொண்டு, டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பறந்து இந்தோனேசிய ​​ மண்ணில் தரையிறங்கி, இந்தோனேசியப் பிரதமரை பாதுகாப்பாக சிங்கப்பூர் வழியாக. இந்தியாவுக்கு அழைத்து வந்தனர். இந்தச் சம்பவம் இந்தோனேசியர்களுக்குள் அபாரமான ஆற்றலை வளர்த்து, டச்சு வீரர்களைத் தாக்கி, இந்தோனேஷியா முற்றிலும் சுதந்திர நாடாக மாறியது.

பின்னர், இந்தோனேசிய அதிபர் சுகர்னோவின் மகள் பிறந்ததும், பிஜு பட்நாயக்கையும் அவரது மனைவியையும் அழைத்து குழந்தைக்குப் பெயர் சூட்டும்படி வேண்டினார். அப்போது பிஜு பட்நாயக்கும் அவரது மனைவியும் இந்தோனேசியா அதிபரின் மகளுக்கு மேகவதி என்று பெயர் சூட்டினர். இந்தோனேசியா 1950 இல் பிஜு பட்நாயக்குக்கும் அவரது மனைவிக்கும் தங்கள் நாட்டின் கௌரவக் குடியுரிமை விருதான 'பூமி புத்ரா' வழங்கியது. பின்னர் அவருக்கு அவர்களின் 50 வது ஆண்டு சுதந்திரத்தின் போது இந்தோனேசியாவின் மிக உயர்ந்த கவுரவ விருதான 'பிண்டாங் ஜசா உத்மா' விருது வழங்கப்பட்டது.

பிஜு பட்நாயக்கின் மறைவுக்குப் பிறகு, இந்தோனேசியாவில் ஏழு நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டது, ரஷ்யாவில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டு அனைத்து கொடிகளும் இறக்கப்பட்டன.

நமது வரலாற்றுப் புத்தகங்கள் நமக்கு சொல்லாத நமது தேசத்தின் ஒரு சிறந்த மனிதரைப் பற்றித் தெரிந்துகொண்டபோது அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

  • 348
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் உண்டாகும். துணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

ரிஷபம்

பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். பிள்ளைகளால் மதிப்புகள் உயரும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். ஜாமின் விஷயங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மிதுனம்

பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். அரசு வழி காரியங்களை பொறுமை வேண்டும். ஒப்பந்த பணிகளில் தாமதம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

கடகம்

எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். மேல் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

சிம்மம்

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். அரசியல் விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கன்னி

நினைத்த பணிகளை முடிப்பீர்கள். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூக தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நவீன யுக்திகள் மூலம் வியாபாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். துன்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

துலாம்

திட்டமிட்ட காரியங்களை முடிப்பீர்கள். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார சிக்கல்களை சமாளிப்பீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபங்கள் ஏற்படும். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். உற்சாகம் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

சவாலான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் சிலருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். அரசு விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் நிதானத்தை கையாளவும். உத்தியோகத்தில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

தனுசு

குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் உதவிகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பது தவிர்க்கவும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். அலுவல் பணிகளில் விவேகம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். இறை வழிபாடு புரிதலை உருவாக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். கணுக்கால்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனப் பேச்சுக்கள் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தோற்றப்பொழிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கும்பம்

ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். இனம் புரியாத சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். குடும்ப பெரியவர்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் திடீர் விரயங்கள் உண்டாகும். பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

மீனம்

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். புதிய நபர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கமிஷன் வகைகளால் லாபம் ஏற்படும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

  • 548
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 10 ஆம் தேதி புதன்கிழமை 26.11.2025

இன்று இரவு 08.21 வரை சஷ்டி. பின்னர் சப்தமி .

இன்று இரவு 10.42 வரை திருவோணம் . பின்னர் அவிட்டம்.

இன்று காலை 10.32 வரை விருத்தி. பின்னர் துருவம்.

இன்று காலை 08.14 வரை கௌலவம். பின்னர் இரவு 08.21 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று இரவு 10.42 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=339&dpx=2&t=1764130354

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 569

Good Morning...

  • 572
·
Added a news

கனடா தனது குடியுரிமை விதிகளில் முக்கிய மாற்றங்கள் சிலவற்றைச் செய்ய உள்ளது.

வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை தற்போது உள்ளது.

இந்த விதியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ’Lost Canadians’ என்றே அழைக்கப்படுகிறார்கள். 2009இல் அறிமுகமான இந்த விடயம், வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில் அவர்கள் கனேடிய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு தடையாக இருந்தது.

2023ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஒன்ராறியோ உச்சநீதிமன்றம், இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதை முடிவுக்குக் கொண்டுவந்தது.

கனடா அரசும், இந்த சட்டத்தின் விளைவுகள் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க இயலாதவைதான் என ஒப்புக்கொண்டு ஒன்ராறியோ உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை.

தற்போது இந்த Bill C-3 என்னும் 2025ஆம் ஆண்டுக்கான கனேடிய குடியுரிமைச் சட்டத்தின் மசோதாவுக்கு மன்னர் தரப்பிலிருந்து ஒப்புதலும் கிடைத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது தற்போது கனடா நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இந்த விதிகள் அமுலுக்கு வரும்போது, வெளிநாட்டில் பிறந்த கனேடிய குடிமக்களுக்கு வெளிநாட்டில் பிறந்த அல்லது அவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது தத்தெடுத்த பிள்ளைகளுக்கும் கனேடிய குடியுரிமை கிடைக்கும் என்பதே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நல்ல செய்தியாகும்.

  • 719
·
Added a post

*அரச மரத்தின் பாலை பாதத்தில் காணும் பித்த வெடிப்புகளுக்குத் தடவிவர குணமாகும்.

*நகப்புண்களுக்கு மருதானி இலையை அரைத்து, புண் மீது வைத்துக்கட்ட விரைவில் குணமாகும்.

*மருதாணிப் பூவை இரவில் தலையணையின் கீழ் வைத்துப் படுக்க நல்ல தூக்கம் வரும்.

*அருகம்புல்லின் ஊறல் நீருடன் பால் சேர்த்து உட்கொள்ள, தலைநோய், கண் புகைதல் ஒழியும்.

*அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்தரைத்துத் தடவிவர, சொறி, சிரங்கு, படர் தாமரை சரியாகும்.

*அன்னாசி இலையைச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து 1 தேக்கரண்டி உட்கொள்ள, விக்கல் நிற்கும்.

*ஆலம் பட்டையை நீர்விட்டு ஊறவைத்து, அதில் வாய் கொப்பளித்துவர வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈறுப்புண் குணமாகும்.

*ஆவாரம் பூவுடன், பச்சைப்பயறைச் சேர்த்தரைத்து, குளிக்க உடலில் தோன்றும் நமைச்சல்கள் நீங்கும்.

*இஞ்சியை வாயிலிட்டு மென்று, உமிழ்நீரைத் துப்ப தொண்டைப்புண், குரல் கமறல் குணமாகும்.

*உணவு செரியாமல் கழிச்சல் ஏற்படும்போது, இஞ்சிச் சாற்றை, தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

*உளுந்தை வடையாகச் செய்தும், கஞ்சியாகக் காய்ச்சியும் உண்கின்றவர்களுக்கு இளைத்த உடல் பெருக்கும்.

  • 736
·
Added a post

ஒரு முறை நாரத மகரிஷி

கவலையுடன் காணப்பட்டார் .

அவரது கவலையை கண்ட

அன்னை மஹாலக்ஷ்மி

"மகனே ஏன் கவலையாக

இருக்கிறாய்" என்று கேட்டாள்.

நாரதர் - ''தாயே நான் செய்யும் செயல்கள் யாவும் இறுதியில் நன்மையில்

முடிந்தாலும், அந்த நேரம் ஏற்படும் கலகங்களுக்கு நான் தானே காரணமாக

விளங்குகிறேன்.

அதை எண்ணித்தான்

வருத்தமாக உள்ளது தாயே'' என்றார் .

மஹாலக்ஷ்மி -

"நாரதா அப்படி என்றால் ஒன்று செய். ரிஷிகேசம் சென்று

புனித கங்கையில் நீராடிவிட்டு வா

உன் கவலை யாவும் போய்விடும்

பாரேன்'' என்றாள்.

நாரதரும் ரிஷிகேசம் வந்தார்

கங்கையில் நீராடலாம் என்று நினைக்கும் போது பல வண்ணங்கள் கொண்ட

விசித்திரமான மீன் ஒன்று நீரில் நீந்திக்கொண்டே நாரதரிடம்

"என்ன நாரதரே சௌக்கியமா'' என்றது. பேசும் மீனை அதிசியமாக

பார்த்துக்கொண்டே நாரதர்,

ம்ம் எதோ சௌக்கியமாக இருக்கிறேன்

நீ நலமா மீனே''என்று நாரதர்

திருப்பி மீனிடம் கேட்டார்.

மீன் கொஞ்சம் சலித்து கொண்டே

'' நானும் எதோ நலமாக இருக்கிறேன் நாரதரே ''என்றது.

நாரதர் - ''ஏன் மீனே

உன் சலிப்புக்கு என்ன காரணம்

ஏதாவது தேவையா என்று சொல்

நான் வரவழைத்து தருகிறேன்'' என்றார்.

மீன் - "நாரதரே என் நலத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை ஆனால் ......

நாரதர் - ஆனால் ......

மீன் - "ஒரே தாகமாக இருக்கிறது

குடிக்க தண்ணீர் தான்

கிடைக்க மாட்டேங்கிறது,

அதுதான் என் சலிப்புக்கு

காரணம்'' என்றது மீன்.

மீன் கூறியதை கேட்டதும்

நாரதருக்கு கோபம் வந்தது

என்ன மீனே என்னிடமே விளையாடுகிறாயா?!!

நீருக்குள் நீந்தி கொண்டே

தாகத்துக்கு நீர் கிடைக்கவில்லை

என்று என்னிடம் சலித்து கொண்டு சொல்கிறாயே உன் முட்டாள் தனத்தை

என்னவென்று சொல்வது ?!!

மீன் சிரித்துக்கொண்டே

"நீர் மட்டும் என்னவாம்

பேரானந்தம் தரும் நாராயண மந்திரத்தை உம்முள் வைத்துக்கொண்டே

கவலையாக எதோ நலமாக இருக்கிறேன் என்று கூறுகிறீரே நீர் கூறுவது மட்டும்

நியாயமோ'' என்று கேட்க நாரதர் வியப்புடன் மீனை பார்க்க, மீன் உருவம்

மறைந்து திருமால் நாரதர் முன் காட்சியளித்து

"நாரதா என் பெயரை

கூறிக்கொண்டு நீ செய்யும் செயல்கள் யாவும் நன்மையில் தானே

முடிவடைகிறது.

கலகம் என்பது அவரவர்கள் மனநிலையை பொறுத்து உள்ளது. அதை நினைத்து

நீ வருந்தி என்ன பயன்.யாவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணி தானே நீ

உன் கலகத்தை துவக்குகிறாய்.

உன் நோக்கம் உயர்வாக இருக்கும் போது அதில் நடக்கும் செயல்களை கண்டு

நீ ஏன் வருந்தவேண்டும்" என்று கூறி நாரதரை திருமால் ஆசிர்வதித்து விட்டு

மறைந்து போனார் .

நாரதரும் உள்ளம் தெளிவடைந்து

புனித கங்கையில் நிம்மதியாக

ஆனந்தமாக நீராடினார்.

என்ன கவலையாக இருந்தாலும் சரி கூறுவோம் நாராயண மந்திரம்.

அதுவே நாளும் பேரின்பம்

யாவும் நலமாகவும் முடியும்.

ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

ஓம் நமோ நாராயணா

  • 735