- · 3 friends
-
B
S
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலே
மலருகின்ற இதழோ
மாதுளையின் பூப்போலே
மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும்
மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாக
பார்வையொருக் கணையாக
புருவமொரு வில்லாக
பார்வையொருக் கணையாக
பருவமொரு களமாகப்
போர் தொடுக்கப் பிறந்தவளோ
குறு நகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்
குறு நகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்
பசுந்தளிர் போல் வளை கரமும்
தேன் கனிகள் இருபுறமும்
தாங்கி வரும் பூங்கொடியோஆழ்கடலின் சங்காக
நீள் கழுத்து அமைந்தவளோ
ஆழ்கடலின் சங்காக
நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக
வாய்மொழி தான் மலர்ந்தவளோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோசெந்தழலின் ஒளி எடுத்து
சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல் வாழைத் துடையிருக்க
மச்சம் ஒன்று அதிலிருக்க
மடல் வாழைத் துடையிருக்க
மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகியென்பேன்நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோ
ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்.
பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.
பக்கத்து வீட்டு இளைஞனுக்குக்
குறு குறுப்பு.
அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது?
பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!
ஒரு வேளை மாயாஜாலக் கண்ணாடியோ?’
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை..,
பெரியவரை நெருங்கினான்.
“ஐயா…!”
“என்ன தம்பி?”
“உங்கள் கையில்
இருப்பது கண்ணாடி தானே?”
“ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”
“நான் பார்த்தால் என் முகம் தெரியும்,
நீ பார்த்தால்
உன் முகம் தெரியும்!”
“அப்படியானால் சாதாரணக் கண்ணாடி தானே அது?”
“ஆமாம்!”
“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
பெரியவர் புன்னகைத்தார்.
“ சாதாரணக் கண்ணாடிதான்,
ஆனால்
அது தரும் பாடங்கள் நிறைய!”
பாடமா… ???
கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?
அப்படிக் கேள்.
“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”
எத்துணை ஆழமான உவமை இது!
இந்த உவமையில் என்ன இருக்கிறது?
எனக்கு ஒன்றும் புரியவில்லை!
“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச்
சுட்டிக்காட்ட வேண்டும்,
எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்
என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது.”
“எப்படி?”
“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது.
அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை.
உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?
“ஆமாம்”
அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது.
துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
அடுத்து…?”
“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது.
நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா?”
“ஆமாம்!”
“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம்
நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும்.
அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது.
இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
அப்புறம்?
“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”
“இல்லையே…!
மாறாக அந்தக் கண்ணாடியை பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”
“சரியாகச் சொன்னாய்.
அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.
அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக் கொள்ள வேண்டும்.
இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”
“ஐயா…!
அருமையான விளக்கம்.
நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா…!
அப்பப்பா!”“
யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”என்று அந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு அவரை வணங்கி சென்றான்
“இனி கண்ணாடி முன்னால் நின்று உங்கள் முகத்தை பார்க்கும்போது எல்லாம் இந்த அறிவுரைகளை மறந்துவிடாதீர்கள்..
சிரிக்கும் கைமுறுக்கும்...
சீப்பு சீடையுடன்
சீரான தேன்குழலும்...
செட்டிநாட்டின் புகழ் சொல்லும்
சிறப்பாய் இவற்றுடன்.....
தட்டடையுடன் தித்திக்கும் அதிரசமும்
தட்டுதனில் நிரம்பும் பலகாரம்...
தீபத் திருநாளாம்
தீபாவளி கொண்டாட்டம்
தொடங்கியதை கூறும் ஆதாரம்!
கனடா கூட்டாட்சி அரசு இன்று எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளது. பிரதமர் மார்க் கார்னி நயாகரா பகுதியில் உள்ள ஒரு எல்லைச் சோதனை நிலையத்தை இன்று பார்வையிடுகிறார்.
அதனைத் தொடர்ந்து பொது பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
இம்மாதம், லிபரல் அரசு தமது எல்லைப் பாதுகாப்பு மசோதாவை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது — சில முக்கிய பிரிவுகளை விரைவாக நிறைவேற்றவும், விவாதத்திற்குரிய பகுதிகளுக்கு கூடுதல் பரிசீலனை நேரம் வழங்கி பின்னர் நிறைவேறற்வும் திட்டமிட்டுள்ளது.
புதிய மசோதாவில், கடலோர பாதுகாப்புப் படையின் (Coast Guard) பங்கு விரிவுபடுத்துதல், குடியேற்ற மற்றும் அகதி முறைமையை வலுப்படுத்துதல், பாலியல் குற்றவாளிகளின் தகவல் பகிர்வை மேம்படுத்துதல், சட்டவிரோத போதைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் இரசாயனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தல் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கியுள்ளன.
ஏஐ துறை இப்போது உலகில் மிகப் பெரிய புயலாக உருவெடுத்துள்ள நிலையில், இதன் எதிர்காலம் குறித்து உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பில் கேட்ஸ் கூறுகையில், "அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு வேற லெவலில் வளர போகிறது. அதேநேரம் இந்த தொழில்நுட்பத்தைப் பார்த்து நாம் அச்சப்படத் தேவையில்லை.. இதன் மூலம் நமக்குப் பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்" என்றார்.
வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தால் வளர்ந்த நாடுகளில் சுமார் 60% வேலைகள் காலியாகும் என்றும் சர்வதேச அளவில் 40% வேலைகள் காலியாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலாக பில்கேட்ஸ் இந்த கருத்துகளைக் கூறியுள்ளார்.
இது குறித்து பில்கேட்ஸ் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும் போதும் அச்சம் வரத் தான் செய்யும். இதனால் வேலைவாய்ப்புகள் காலியாகும் என்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்காது.
1900இல் விவசாய உற்பத்தியை தாண்டி எதுவும் இருக்காது என்று நினைத்தோம். ஆனால் இப்போது விவசாய வேலைகளைத் தாண்டி பல புதிய வேலைகள் உருவாக்கியுள்ளோம். இதனால் மக்கள் வாழ்க்கையும் மேம்பட்டே இருக்கிறது. இந்த ஏஐ அதுபோலத் தான் இருக்கும். இது மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.. பல்வேறு தரப்பினருக்கும் இது மிகப் பெரியளவில் உதவும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய துறை சார்ந்த வாய்ப்பு ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். அவசர முடிவுகளை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
செயல்பாடுகளில் இருந்த தடைகள் குறையும். உறவுகளிடம் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். எண்ணங்களில் இருந்த குழப்பங்கள் விலகும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மிதுனம்
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். செல்வ சேர்க்கை குறித்த எண்ணங்கள் உண்டாகும். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சிறு மற்றும் குறு தொழில் குறித்த எண்ணங்கள் மேம்படும். சோர்வு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
கடகம்
புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
சிம்மம்
உறவுகளுக்குள் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். தோற்றப்பொழிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான கனவுகளால் குழப்பங்கள் ஏற்படும். வேலையாட்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவேகமான செயல்பாடுகள் நல்ல மாற்றத்தை உருவாக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் உருவாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிற இன மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
உடன் இருப்பவர்களால் பொறுப்புக்கள் மேம்படும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபார இடமாற்றங்கள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மறதி பிரச்சனை குறையும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தை விரிவு செய்வதில் ஆலோசனை வேண்டும். பணி சார்ந்து சில பயணம் உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யவும். ஜாமின் செயல்களை தவிர்க்கவும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம்
கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் புதிய அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மீனம்
சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தன வருவாய் மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 17.10.2025
இன்று பிற்பகல் 02.16 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று மாலை 05.22 வரை மகம். பின்னர் பூரம் .
இன்று காலை 06.03 வரை சுபம். பின்னர் சுப்பிரம் .
இன்று அதிகாலை 02.27 வரை பவம். பின்னர் பிற்பகல் 02.16 வரை வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று காலை 06.01 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 05.22 வரை மரணயோகம். பின்பு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கனடாவின் மிகவும் தேடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பியெரி பிலோஜீனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிலோஜீன் 2021 டிசம்பர் 22 அன்று சார்ல்ஸ்-ஒலிவியர் புஷேர் சவார்ட் என்பவரை கொலை செய்த வழக்கில் முதல் நிலை கொலைக்கான குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தார் என மொன்றியல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே பகுதியில் செவ்வாய்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலோஜீனை பிடித்ததாகவும், குறுகிய துரத்தலுக்குப் பிறகு வான்கூவர் போலீசின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டதாகவும் மெட்ரோ வான்கூவர் போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று மோடி எனக்கு உறுதியளித்தார். உங்களுக்குத் தெரியும், இதை உடனடியாக செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும்.
ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த இது ஒரு பெரிய படி. இப்போது சீனாவையும் அதையே செய்ய வைக்கப் போகிறோம். மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் டிரம்பை நேசிக்கிறார். நான் அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை.
நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். அது ஒரு நம்பமுடியாத நாடு, ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு ஒரு புதிய தலைவர் அங்கு இருப்பார். ஆனால், என் நண்பர் மோடி நீண்ட காலமாக அங்கு தலைவராக இருக்கிறார்” என்றார். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இத்தகைய உறுதியை அளித்தாரா என்பது குறித்த மின்னஞ்சல் கேள்விகளுக்கு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
கனடாவின் கிரேட்டர் டொரண்டோ பகுதியில், மிசிசாகா நகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றில், இந்தியர்களை இனரீதியாக மோசமாக விமர்சிக்கும் வாசகம் ஒன்று எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த விடயம் தொடர்பில் Freda Looker-Rilloraza (29) என்னும் கனேடியப் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
கனடாவில் சமீப காலமாக, இந்தியர்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகரித்துவருகிறது. சமீபத்தில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இனவெறுப்பு தாக்குதலுக்கு உள்ளானார்.
நடிகர் அஜித் குமார் இப்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்துள்ளார். இந்த அணி, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது. துபாய், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற ரேஸ்களில் பங்கேற்ற அவர் அணி,பார்சிலோனாவில் நடந்த கார் பந்தயத்தில் கடந்த வாரம் பங்கேற்றது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித்குமாரை பார்க்க ரசிகர்கள் கூடினர். அதில் சிலர், அஜித்குமாரை பார்த்ததும் ஆரவாரம் செய்து விசிலடித்தனர்.
இதைக் கவனித்த அஜித் கோபமடைந்தார். விரலை அசைத்து, ‘அமைதியாக இருங்கள்’ என்ற சைகை செய்தார். உடனே ரசிகர்கள் ஆரவாரத்தை நிறுத்தி அமைதியானார்கள். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித், பார்சிலோனா பந்தயத்தை முடித்துவிட்டு துபாய் திரும்பி இருக்கிறார். அடுத்து மலேசியாவில் டிசம்பர் மாதம் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும். சுப காரியம் முயற்சிகள் கைகூடும். தாய் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்கள் உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்ப்பு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்புகள் மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிதுனம்
தடைப்பட்ட சில காரியங்கள் முடியும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் ஆதரவு ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். புதிய நட்புகள் மலரும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொலைதூர உறவினர்களின் சந்திப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அச்சம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
சிம்மம்
திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். துணை வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றம் ஏற்படும். மனம் தெளிவு பெரும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்கள் உண்டாகும். துணைவர் இடத்தில் அனுசரித்து செல்லவும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
உறவுகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சபை பணிகளில் ஆதரவு கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். வீம்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
விருச்சிகம்
நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடி வரும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் வந்துசேரும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களுடன் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
தனுசு
சந்தேக உணர்வுகளால் குழப்பங்கள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். அரசு காரியங்களில் நிதானம் வேண்டும். எதையும் இரு முறை சிந்தித்து செயல்படுத்தவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
சுப காரிய செலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டில் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வருமான வாய்ப்புகள் மேம்படும். நிலுவையில் இருந்த வரவுகள் கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கும்பம்
எதிர்பார்த்த சில வரவுகள் உண்டாகும். உறவினர்களிடம் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பழைய பிரச்சனைகளில் இருந்த சிக்கல்கள் குறையும். நினைத்த காரியம் நிறைவேறும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மீனம்
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளியூரில் இருந்து அனுகூலமான தகவல்கள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு தகுந்த விதத்தில் இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். பணியாளர்களால் லாபம் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 30 ஆம் தேதி வியாழக்கிழமை 16.10.2025.
இன்று பிற்பகல் 02.38 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று மாலை 05.08 வரை ஆயில்யம். பின்னர் மகம்.
இன்று காலை 07.41 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று அதிகாலை 03.01 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 02.38 வரை வரை பத்தரை. பின்பு பவம்.
இன்று மாலை 05.08 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூனம் பாஜ்வா. சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.
பூனம் பாஜ்வாக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை.இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அவரின் புகைப்படங்களுக்காகவே ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இப்போது கிளாமரான ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.
கனடாவின் ஒண்டாயோவில், கடந்த வாரம், அதாவது, அக்டோபர் மாதம் 6ஆம் திகதி, தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஹர்நூர் சிங் (27) மீது டிரக் ஒன்று மோதியது.
அந்த டிரக்கின் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்த நிலையில், சிங் அந்த துயர விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
ஹர்நூர் சிங்கின் உடலை இந்தியா கொண்டுவருவதில் பல சிக்கல்கள் இருப்பதை அறிந்த அவரது குடும்பத்தினர் பஞ்சாப் கேபினட் அமைச்சரான சஞ்சீவ் அரோரா என்பவரை அணுக, அவர் வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி அவரச உதவி கோரியுள்ளார்.
அதைத் தொடர்ந்து விரைவாக இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட ஹர்நூர் சிங்கின் உடல், நேற்று லூதியானாவில் சீக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவும் கனடாவும் சீர்குலைந்த தமது உறவைச் சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. சிறிது காலம் கசப்படைந்திருந்த இருதரப்பு உறவு கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நிர்வாகத்தின்கீழ் மேம்பட்டது.
கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் (Jaishankar) சந்தித்தார். அதோடு அனிதா ஆனந்த் (Anita Anand) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தார்.
இந்நிலையில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பானது இருதரப்பு உறவைச் சீரமைக்கும் முயற்சியாக அது பார்க்கப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு, நீரிழிவு நோய் உள்ள எலிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஹைப்பர் கிளைசீமியா, பாலியூரியா, பாலிஃபேஜியா, பாலிடிப்சியா, சிறுநீர் சர்க்கரை மற்றும் உடல் எடை போன்ற நீரிழிவு அறிகுறிகள் வாழைப்பூ மற்றும் சூடோஸ்டம் சிகிச்சையளிக்கப்பட்ட எலிகளில் மேம்படுத்தப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் வாழைப்பூ மற்றும் சூடோஸ்டம் ஆகியவை நீரிழிவு எதிர்ப்பு மற்றும் ஏஜிஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகவும், நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு சப்ளிமெண்ட்ஸாகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழைப்பூ மற்றும் சூடோஸ்டில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மற்றும் உணவு நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் அதிக உள்ளடக்கம் உள்ளது.
2013ம் ஆண்டு பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு இந்த கண்டுபிடிப்புகளை ஒப்புக்கொண்டது. மேலும், வாழைப்பூ மற்றும் சூடோஸ்டம் நீரிழிவு சிக்கல்களை மேம்படுத்தியது என்றும், மேம்பட்ட கிளைசேஷன் இறுதி தயாரிப்புகளின் (AGEs) உருவாக்கம் குறைக்கப்பட்டது என்றும் கண்டறியப்பட்டது.
நீரிழிவு நோய், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி, நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் அல்சைமர் நோய் போன்ற பல சிதைவு நோய்களின் வளர்ச்சி அல்லது மோசமடைவதில் அவை முதுமைக்கு ஒரு காரணியாக இருக்கலாம்.
வாழைப்பூ
வாழைப்பூ டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கவும், அவற்றை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. மேலும், உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சமன் செய்வதால் நன்மை பயக்கும் என்றும் கருதப்படுகிறது.
ஆக்ஸிஜனேற்றம் நிறைந்து காணப்படும் வாழைப்பூ, செல் ஆரோக்கியத்திற்கும் வயதான எதிர்ப்புக்கும் ஏற்றதாக அமைகிறது. இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. அதோடு வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.
இனப்பெருக்க உறுப்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவுவதற்கும், தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் சிறந்ததாகவும் வாழைப்பூ உள்ளது.
உண்மையில், அவற்றில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி அதிகமாகவும், சுமாரான அளவு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், அவை மாதவிடாய் பிடிப்பைத் தணிப்பதாகவும் அறியப்படுகிறது.
வாழைப்பூவை நாம் பச்சையாகவோ அல்லது சமைத்ததாகவோ உண்ணலாம். மேலும் இவற்றை நாம் தயார் செய்யும் சாலடுகள், கறிகள் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.