- · 3 friends
-
B
3 followersS
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலே
மலருகின்ற இதழோ
மாதுளையின் பூப்போலே
மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும்
மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாக
பார்வையொருக் கணையாக
புருவமொரு வில்லாக
பார்வையொருக் கணையாக
பருவமொரு களமாகப்
போர் தொடுக்கப் பிறந்தவளோ
குறு நகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்
குறு நகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்
பசுந்தளிர் போல் வளை கரமும்
தேன் கனிகள் இருபுறமும்
தாங்கி வரும் பூங்கொடியோஆழ்கடலின் சங்காக
நீள் கழுத்து அமைந்தவளோ
ஆழ்கடலின் சங்காக
நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக
வாய்மொழி தான் மலர்ந்தவளோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோசெந்தழலின் ஒளி எடுத்து
சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல் வாழைத் துடையிருக்க
மச்சம் ஒன்று அதிலிருக்க
மடல் வாழைத் துடையிருக்க
மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகியென்பேன்நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோ
சீனாவில், லீ ஆங் என்ற பெண்ணுக்குத் திருமணமாகி , தன் கணவன் வீட்டிற்குச்சென்று வாழத் துவங்குகிறாள். அங்கு லீ ஆங்கிற்கும் அவள் மாமியாருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை. எதற்கெடுத்தாலும் வாக்குவாதம், சண்டை, சச்சரவு. நாள்தோறும் இருவருக்கிடையே வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.
லீ ஆங்கின் கணவனோ இருதலைக் கொள்ளி எறும்பு போல திண்டாடினான். ஒரு நாள் லீ ஆங், அவள் தகப்பனாரின் நண்பரைப் பார்க்கச் சென்றாள். அவர்
பச்சிலை, மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர். அவரிடம் லீ ஆங், தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள சண்டை பற்றிக்கூறி மாமியாரைக் கொன்றுவிட வழி
கேட்டார்.
அந்த நாட்டு மருத்துவர் மூலிகைப்
பொடி ஒன்றைக் கொடுத்து, இது மெல்லக்கொல்லும் நஞ்சு, இதை தினம் உன் மாமியார் சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொடு, ஒரு சில மாதங்களில் இயற்கை மரணம் போல் இறந்து விடுவார் என்று கூறினார். மேலும், மிகவும் கவனமாக செயல்படவேண்டும்; முக்கியமாக உன் மாமியாரிடம் மிகுந்த அன்போடு நடந்து கொள் , அப்பொழுதுதான் உன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது. எல்லாம் ஒரு சில மாதங்கள் தானே என்று கூறி அனுப்பி
வைத்தார்.
மருந்தை உணவில் கலந்து,
அன்புடன் மாமியாருக்கு பரிமாறினாள் மருமகள். மருமகளின் அன்பைக் கண்டு மாமியாரும் அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். நாளடைவில் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.
மாதங்கள் சென்றன....
மாமியாரின் அன்பில் திக்குமுக்காடிய லீ ஆங் மருத்துவரிடம் ஓடினாள் . "ஐயா, இந்த மருந்துக்கு மாற்று மருந்து கொடுங்கள்" என கெஞ்ச "ஏன் இப்படி ?" என அவர் கேட்க, "என் மாமியாரை நான் இழக்க விரும்பவில்லை" என அழுதாள்.
அந்த மருத்தவர் சொன்னார், "நான் நஞ்சு, மருந்து எதுவும் கொடுக்கவில்லை; அது வெறும் சத்துப்பொடி தான். அப்போது நஞ்சு உன் மனதில் தான் இருந்தது. நீ அன்பாய் நடந்து கொண்டதால் உன் மனதில் இருந்த நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இப்பொழுது முழுவதும் நீக்கப்பட்டு விட்டது.
சந்தோஷமாய் போய் வா" என்று அனுப்பினார்.
கனடாவில் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்திய மாணவர்கள் சமர்ப்பித்த கல்வி அனுமதி (Study Permit) விண்ணப்பங்களில், 74 சதவீதம் ஓகஸ்ட் மாதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக 'ரொய்ட்டர்ஸ்' தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பதிவான 32% நிராகரிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
கல்வி அனுமதிக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் 2023 ஓகஸ்ட்டில் இருந்த 20,900 இலிருந்து, 2025 ஓகஸ்ட்டில் 4,515 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.
மோசடிமிக்க கல்வி அனுமதிகளை தடுப்பதற்காக கனடா அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளே அதிகப்படியான நிராகரிப்புகளுக்கு முக்கியக் காரணமாக என கூறப்படுகிறது.
கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு தங்க மோதிரம் ஒன்றை கண்டெடுத்ததாக சிமோன் ஹில்ட்பிராண்ட் த்தீசன் என்ற பெண் தெரிவித்துள்ளார்.
தனது மகளுக்கு கிடைக்கப்பெற்ற இனிப்பு பண்டங்களை வீட்டின் அறையில் பிரித்து வகைப்படுத்திய போது அதில் தங்க மோதிரம் ஒன்று இருப்பதை குறித்த பெண் அவதானித்துள்ளார். யாரோ ஒருவருடைய திருமண மோதிரம் என்பதையும் அவர் ஊகித்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் இந்த மோதிரத்தை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என தான் கருதியதாக பெண் குறிப்பிட்டுள்ளார்.
பெறுமதியான இந்த மோதிரம் வேறொருவரின் கைகளில் செல்லக்கூடாது என்பதற்காக மிகவும் குறைந்த விபரங்களை உள்ளடக்கி சமூக ஊடகத்தில் மோதிரம் பற்றிய ஒரு பதிவை இட்டுள்ளார். முகநூலில் இந்த மோதிரம் பற்றிய பதிவு ஒன்றை குறித்த பெண் இட்டுள்ளார்.
முகநூலில் இந்த பதிவு இடப்பட்டு சில மணித்தியாலங்களில் தங்களது சகோதரரின் மோதிரம் தொலைந்து விட்டதாக தகவல் அனுப்பி வைக்கப்பட்டதாகத குறித்த பெண் தெரிவித்துள்ளார். இந்த மோதிரம் பற்றிய தகவல்களை குறித்த நபர்கள் சரியான அடிப்படையில் வழங்கியதன் காரணமாக மோதிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
ஒரு தம்பதி 50வயதில் குழந்தை பெற்றுக் கொள்கின்றார்களா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
ஒரு பெண் பலகாலம் சென்று திருமணம் முடிக்கவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
அவன் 30வயது கடந்தும் ஒழுங்கான தொழில் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறானா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
அவள் பேரப்பிள்ளைகளை கண்டபிறகும், தன் கணவனோடு
கைகோர்த்து வீதியில் நடக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
அவள் கல்விக்காக வெகுதொலைவில் சென்று தனியே தங்கியிருந்து படிக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
அவரவர் அவர் விரும்பியவாறு வாழ்ந்து கொள்ளட்டும்... அவர்களுக்கு வெளியில் சொல்லமுடியாத... உங்களால் கற்பனை பண்ணமுடியாத அளவு சோகங்களும்,துயரங்களும் இருக்கும்.
அவர்களைக்கண்டால்,கொஞ்சம் புன்னகையுடன் உரையாடுங்கள்.
முடியாவிட்டால்,மௌனமாக கடந்துவிடுங்கள்.. அது போதும்..
உங்களது வாழ்க்கை உங்களுக்கானது...
அவர்களது வாழ்க்கை அவர்களுக்கானது...
புறம் பேசி அலைவதைவிட, இத்தகைய மன நிலை அமையப் பெற்றால் நாம் உயர்நதவர்கள் தானே..!
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையை வாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்... ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்.
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
முத்துவுக்கு பிறவியிலேயே கூன் முதுகு. அவன் சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்தவன். அவர்கள் விட்டுச் சென்ற சிறு வீட்டில் வசித்து, பஜ்ஜி, போண்டா, வடை போன்ற தின்பண்டங்களைத் தயாரித்து, தள்ளுவண்டியில் வைத்து ஊர்த் தெருக்களில் விற்று வாழ்ந்து வந்தான்.
அவனது பக்கத்து வீட்டை, வியாபாரத்தில் நொடித்துப் போன செழியன் என்பவன் வாங்கி, அதில் குடியேறினான். அவனுக்கு இந்திராணி, சந்திரவதி என்று இரு புதல்விகள். இந்திராணி, செழியனின் முதல் மனைவியின் மகள். முதல் மனைவி இறந்த பின், செழியன் பார்வதியை மணந்து கொண்டான். பார்வதியின் மகள் தான் சந்திரவதி.
இந்திராணி அழகியவள். அவளது குரல் இனிமையானது. முத்து தன் வீட்டின் பின்புறம் தின்பண்டங்களைத் தயாரிக்கும் போது, இந்திராணி தன் வீட்டுக் கொல்லையில் பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுவதையும், பாடுவதையும் கண்டு மகிழ்ந்து வந்தான். அவன் மனதில், "நான் இவளை மணக்க விரும்புகிறேன். ஆனால், நான் கூனன் என்பதால் யாரும் தங்கள் பெண்ணை எனக்குத் தர மாட்டார்களே. செழியன் மட்டும் இந்திராணியை எனக்கு மணம் செய்து தருவானா?" என்று எண்ணினான். இதைப் பற்றி செழியனிடம் எப்படிப் பேசுவது என்று யோசித்தான். ஆனால், அவனுக்கு வழி தெரியவில்லை.
ஒரு நாள், செழியனே முத்துவிடம், "முத்து! எனக்கு வயதாகிவிட்டது. என் இரு மகள்களுக்கும் எப்போது திருமணம் செய்வேன் என்று கவலைப்படுகிறேன். குறிப்பாக இந்திராணியைப் பற்றி எனக்கு அதிக கவலை. நான் இறந்தால், பார்வதி அவளைக் கவனிக்க மாட்டாள். எனவே, நான் உயிருடன் இருக்கும்போதே ஒரு நொண்டியையோ, முடவனையோ பார்த்து இந்திராணிக்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கிறேன். ஏன், உனக்கே இந்திராணியை மணம் செய்து தரலாமா? உனக்கு சம்மதமா?" என்று கேட்டான்.
முத்துவும், "எனக்கு முழு சம்மதம். ஆனால், முதலில் இந்திராணியின் சம்மதத்தையும், உங்கள் மனைவியின் அபிப்பிராயத்தையும் கேட்டு என்னிடம் கூறுங்கள்," என்றான். அன்று இரவு, செழியன் தன் மனைவி பார்வதியிடம், "இந்திராணியை முத்துவுக்கு மணம் செய்து தரலாம்," என்று கூறினான். பார்வதி, "இப்போது படுத்துக்கொள்ளுங்கள். நாளை காலை பேசலாம். திருமணம் போன்றவற்றை ஒரு நொடியில் முடிவு செய்ய முடியாது. எல்லாம் நன்கு யோசித்து செய்ய வேண்டும். உங்களுக்கு இந்திராணி மட்டுமல்ல, சந்திரவதியும் மகளாக இருக்கிறாள் என்பதை நினைவில் வைத்திருங்கள். இரு பெண்களின் திருமணத்தையும் பற்றி நாளை சாவகாசமாகப் பேசலாம்," என்றாள். ஆனால், மறுநாள் காலை செழியன் உயிருடன் இல்லை. ஆம், மாரடைப்பால் இறந்து விட்டான்.
செழியனின் மரணத்திற்கு இரு மாதங்களுக்குப் பிறகு, முத்து பார்வதியைச் சந்தித்து, "செழியன் இறப்பதற்கு முன், இந்திராணியை எனக்கு மணம் செய்து தருவதாகக் கூறினார். அதை உங்களிடம் கூறுவதாகவும் சொன்னார். அவர் உங்களிடம் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன். திருமணத்தை எப்போது நடத்தலாம்?" என்று கேட்டான்.
பார்வதிக்கோ, தன் மகள் சந்திரவதியின் திருமணம் பற்றிய கவலையே மேலோங்கியிருந்தது. சந்திரவதி அழகில்லாதவள். அவளது குரல் கரகரப்பாக இருந்தது. எனவே, இந்திராணியை ஒரு பணக்கார வயோதிகனுக்கு மணம் செய்து, பணம் பெற்று, அதைக் கொண்டு சந்திரவதியின் திருமணத்தை நடத்த எண்ணினாள். ஆகவே, முத்துவைத் தட்டிக்கழிக்க, "முத்து! என் கணவர், சந்திரவதியின் திருமணத்தையும் உன் திருமணத்துடன் சேர்த்து நடத்துவதாகக் கூறினார். இந்திராணி, தன் திருமணம் நடக்க வேண்டி, தினமும் அம்பாளை அரளிப்பூக்களால் பூசித்து வருகிறாள். அவளது பூசைக்கு செழியன் விடியற்காலையில் காட்டுக்குச் சென்று அரளிப்பூக்களைப் பறித்து வருவார். அந்த மலர்கள் விசேஷமானவை, பொன்னிறத்தில், நள்ளிரவில் மலர்பவை. இந்திராணியின் வேண்டுதல் முடிய இன்னும் பத்து நாட்கள் உள்ளன. நீ தினமும் காட்டிற்குச் சென்று அந்த மலர்களைப் பறித்து இந்திராணிக்கு கொடுக்கிறாயா?" என்று கேட்டாள்.
முத்துவுக்கு, பார்வதி ஏதோ சூழ்ச்சி செய்கிறாள் என்பது புரிந்தது. அவள் தன்னை இரவில் காட்டுக்கு அனுப்பி, ஏதேனும் கொடிய மிருகத்திற்கு இரையாக்க விரும்புகிறாள் என்று சந்தேகித்தான். ஆனாலும், இந்திராணியின் நலனுக்காக பார்வதி கூறியபடி நடக்க முடிவு செய்து, சம்மதித்தான். அன்று இரவே காட்டிற்குச் சென்றான். பார்வதி, அரளிச்செடி ஒரு பாழடைந்த கோவிலருகே இருப்பதாகக் கூறியிருந்ததால், அந்தக் கோவிலைத் தேடினான். இறுதியில், கோவிலையும், அதன் அருகேயுள்ள அரளிச்செடியையும் கண்டுபிடித்தான். அங்கு சென்று அரளிப்பூக்களைப் பறித்து, தன் மேல் துண்டில் மூட்டையாகக் கட்டினான். சற்றுத் தொலைவு சென்றபோது, ஒரு மரத்தின் பின்னால் இருந்து யாரோ பலமாகச் சிரிக்கும் சத்தம் கேட்டது.
முத்து ஆச்சரியப்பட்டு, மரத்தின் பின்னால் சென்று பார்த்தான். அங்கு ஒரு பாறையில், குட்டி பிசாசு ஒன்று தலைவிரி கோலமாக உட்கார்ந்திருந்தது. அவனைக் கண்டதும், அது பலமாகக் கத்தியது. முத்து பயப்படாமல், "நான் மந்திர சக்தியால் பிசாசுகளை அடக்கி, அவை வசிக்கும் இடத்திற்கு அனுப்புவேன். இதைத் தெரிந்து கொள்," என்றான். குட்டி பிசாசு, "நான் வழி தவறி இங்கு வந்துவிட்டேன். நான் உன் ஊர் மயானத்தில் வசிக்கும் பிசாசு. என்னைக் கொண்டு போய் அங்கு விட்டு விடு. எனக்கு கால் வலிக்கிறது, நீ என்னைச் சுமந்து செல்ல வேண்டும்," என்றது.
முத்து, "சரி, இந்த மலர் மூட்டையை வாங்கி, என் முதுகில் ஏறி உட்கார். உன்னைச் சுமந்து செல்கிறேன்," என்றான். பிசாசு மூட்டையை வாங்கி, முத்துவின் கூன் முதுகில் ஏறி உட்கார்ந்தது. முத்து அதைச் சுமந்து நடந்தான். அப்போது, ஒரு மரத்தடியில் சில திருடர்கள் தாங்கள் திருடிய பணத்தைப் பங்கு பிரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், முத்துவின் முதுகில் பிசாசு அமர்ந்து வருவதைக் கண்டு, பயந்து பணத்தையும் பைகளையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். முத்து அவர்கள் விட்டுச் சென்ற பணத்தை ஒரு பையில் எடுத்து, தன் ஊரின் எல்லையை அடைந்தான்.
அங்கு மயானத்தில் குட்டி பிசாசை இறக்கிவிட, பெரிய பிசாசுகள் ஓடி வந்து, "ஓ, வந்துவிட்டாயா? உன்னைக் காணாமல் கவலைப்பட்டோம். இவன்தான் உன்னைக் கொண்டு வந்தவனா? சபாஷ்!" என்று கூறி, முத்துவின் முதுகில் தட்டின. உடனே, அவனது கூன் முதுகு நேராகி விட்டது. பிசாசுகள், "இது நீ செய்த உதவிக்கு பரிசு," என்று கூறி, அவனை ஊருக்குள் செல்ல அனுமதித்தன.
முத்து பணப்பையுடன் தன் வீட்டை அடைந்தான். பணப்பையை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது, பிசாசிடம் கொடுத்த மலர் மூட்டை பற்றி நினைவு வந்தது. மயானத்திற்குச் சென்று பார்க்கலாம் என்று எண்ணியபோது, குட்டி பிசாசு அவன் வீட்டிற்கு வந்தது. அதன் கையில் மலர் மூட்டை இருந்தது. "நீ இதை என்னிடம் விட்டுவிட்டு வந்துவிட்டாய்," என்று அதைக் கொடுத்தது.
முத்து, "நல்லவேளை! அவசரத்தில் இதை உன்னிடம் விட்டுவிட்டேன். இப்போதுதான் இது பற்றி நினைவு வந்தது. உன் இடத்திற்கு வரலாம் என்று நினைத்தேன். நீயே இதை எடுத்து வந்துவிட்டாய். மிக்க நன்றி," என்றான்.
அப்போது, ஒரு தட்டில் பஜ்ஜியும் போண்டாவும் இருப்பதைக் கண்ட குட்டி பிசாசு, "இவை என்ன?" என்று கேட்டது. முத்து வேடிக்கையாக, பஜ்ஜியைக் காட்டி, "இது இந்திராணி," என்றும், போண்டாவைக் காட்டி, "இது சந்திரவதி," என்றும் கூறினான். அப்போது, பார்வதி முத்து வீட்டிற்கு வந்து, அவன் யாருடன் பேசுகிறான் என்று பார்க்க வந்தாள். அங்கு பிசாசைப் பார்த்து பயந்து நின்றாள்.
குட்டி பிசாசு, "ஓ, இந்திராணியும் சந்திரவதியுமா? எனக்கு சந்திரவதி பிடித்திருக்கிறது. விழுங்கட்டுமா?" என்று கேட்டது. முத்து, பார்வதியின் காதில் விழும்படி உரக்க, "தாராளமாக விழுங்கு! எனக்கு சந்திரவதி வேண்டாம், இந்திராணிதான் வேண்டும்," என்றான். இதைக் கேட்ட பார்வதி, "ஐயோ, பிசாசு என் சந்திரவதியை விழுங்கிவிடுமா? இப்போதே சந்திரவதியை அழைத்து இந்த ஊரை விட்டு ஓடிவிடுகிறேன். இந்திராணி எப்படிப் போனால் எனக்கென்ன? சந்திரவதி கிடைக்காவிட்டால், பிசாசு இந்திராணியை விழுங்கிவிடும்," என்று எண்ணி, உடனே சந்திரவதியை அழைத்து ஊரை விட்டு ஓடிவிட்டாள்.
தன் யுக்தி பலித்ததை உணர்ந்த முத்து, பிசாசுக்கு பல போண்டாக்களைக் கொடுத்தான். அதை மகிழ்ச்சியுடன் தின்றுவிட்டு பிசாசு சென்றுவிட்டது. பின்னர், முத்து தனியாக இருந்த இந்திராணியிடம் சென்று, பிசாசு செய்த உதவியைக் கூறி, "உன் சித்தி, சந்திரவதியுடன் எங்கோ ஓடிவிட்டாள். பிசாசு தன் மகளை விழுங்கிவிடும் என்று பயந்ததுதான் காரணம். இப்போது நான் கூனன் இல்லை. என்னிடம் பணம் நிறைய உள்ளது. உன் தந்தை விரும்பியபடி, உன்னை மணக்கிறேன். என்னை மணக்க விருப்பமா?" என்று கேட்டான். இந்திராணி வெட்கத்துடன், "ஆம்," என்றாள்.
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான். அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.
அவள் பெயர் "சிலம்பி" ஊரிலேயே புகழ்பெற்ற தாசி.
அவள் எதுக்கு வெறும்பயல் நம்மை சந்திக்க விரும்புகிறாள் என்ற யோசனையோடே போகிறார் புலவர்.
”உங்க இராமாயணம் படிச்சேன். ரொம்ப நல்லாயிருக்கு. அதுல நீங்க சீதைய புகழ்ந்தும் வர்ணித்தும் எழுதினீங்களே அது போல என்னையும் எழுத முடியுமான்னு கேட்டா”
”கண்டாரோ... கொடுமை... என்ன வார்த்தை சொல்லிட்டா... சீதைய பாடின வாயால இவளை பாடணுமாம்” என மனசில் நினைச்சுக்கிட்டு... “அதெல்லாம் சும்மா பாட முடியாது காசு வேணும்” என்றாராம்.
“யோவ்... புலவரே பயங்கரமான ஆளுய்யா நீர்.. தாசிகிட்டயே காசை புடுங்க பார்க்கறீரே... சரி நீர் வேறு வாயை திறந்து கேட்டுட்டீர்... ரெண்டு காசுதான் தருவேன் சம்மதமா” என்றாள்.
சரி வந்தவரை லாபம்னு நினைத்துக் கொண்டு“ கையில காசு வாயில பாட்டு, கொடு” என்றாராம்.
அவள் கொடுக்கவும். கரி கட்டைய எடுத்து அவள் வீட்டு சுவற்றில் வேகமா எழுதினார்.
”தண்ணீரும் காவிரியே
தார்வேந்தன் சோழனே”
ரெண்டு வரி எழுதிட்டு ரெண்டு காசுக்கு அம்புட்டுதானுட்டு வேகமா கிளம்பி போயிட்டார்.
சிலம்பியும் என்னடி இது இப்படி ஆயிடுச்சேனு நினைச்சுட்டு. ஊருல நாட்டுல இருக்கிற கவிஞர்களை எல்லாம் அழைச்சு மிச்ச வரிய எழுதக் கேட்டாள்.
கம்பனோட வரிக்கு மறுவரி எழுதற தைரியம் எவனுக்கு இருக்கு. ஒரு பயலும் முடியாதுனுட்டான். இப்படியே வருசங்கள் போச்சு. சிலம்பிக்கும் வயசாயிட்டிருக்கு.
ஒரு நாள் ஒரு கிழவி அவள் வீட்டு வாசலில் வந்து தண்ணி கேட்டாள். அவளைப் பார்த்ததுமே சிலம்பிக்கு யாருன்னு தெரிஞ்சுடுச்சு. அம்மா.. நீங்க ஒளவைதானேனு உள்ளே வாங்க..
இந்த கவிதையின் மிச்ச வரிகளை நீங்க எழுதிட்டா. தண்ணி என்ன கூழே ஊத்தறேன் என்றாள்.
ஒளவை அந்த சுவற்றைப் பார்த்தாள்.
"தண்ணீரும் காவிரியே
தார்வேந்தன் சோழனே
பெண்ணாவாள் பொன் சிலம்பி
அம்பொற் சிலம்பே சிலம்பு".
என மிச்ச வரிகளை எழுதி முடித்தாள்.
தண்ணீர் என்றால் காவிரிதான்... ராஜா என்றால் சோழந்தான்.. பெண் என்றால் சிலம்பிதான் (கம்பன் பாடிய சீதையும் பெண்ணில்லை.. இளங்கோ பாடிய கண்ணகியும் பெண்ணில்லை) அது போல அவள் காலில் உள்ளது தான் சிலம்பு (கண்ணகி போட்டதும் சிலம்பில்லை, பாண்டிமாதேவியதும் சிலம்பில்லை, இளங்கோ எழுதினதும் சிலம்பில்லை)
கம்பன் வந்து பார்த்தான்...
யப்பா என்ன ஒரு அர்த்தம்.. ஒரே அடியில கம்பனையும் இளங்கோவையும் காலை வாரி நிலத்துல அடிச்சு போட்டாளே இந்த பொம்பளை.
அதுவும் யாரு முன்னால் ஒரு "தாசி" முன்னால. பிரச்சனை சோழனிடம் போச்சு.. ”ஏம்மா நீ இப்படி எழுதலாமா அதுவும் கொஞ்சம் கூழுக்காக” என்று சோழன் கேட்டானாம்.
அதுக்கும் ஒரு பாட்டு சொன்னா கிழவி..
கூழைப்பலா தழைக்கப் பாட -- குலமகளும்
மூழ அழாக்குத் திணை தந்தாள். சோழா கேள்
கூழுக்கும் பாடி உப்புக்கும் பாடி
ஒப்பிக்கும் என் உள்ளம் என்றாள்..
நான் மன்னர் தரும் பரிசுக்காகக் கவிதைகளைத் தூக்கிக்கொண்டு அலைபவள் அல்லள் என்று சோழனுக்குச் சொல்லாமல் சொல்லி விட்டு, கம்பனுக்கும் ஓரு ஊமைக்குத்து சேர்த்தே குத்தும்படி சொன்னாள்.
"அன்னைக்கு ஒரு நாள் உன் வம்சம் தழைக்க கூழைப்பலா தழைக்கணும்னு பாடினேன்..
உன் பொண்டாட்டி முழா அழாக்கு திணை கொடுத்தா...
இன்னைக்கு கூழுக்கு பாடினேன்.
பாட சொன்னா பாடுறதுதான் என் குணம் கூழா உப்பா திணையானு பார்த்து பாட மாட்டேன்" என்றாளாம் ஓளவை கிழவி...
மேஷம்
ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். சில அனுபவம் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். புதிய முயற்சிகளில் பொறுமை செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபார பணிகள் சுமாராக நடைபெறும். அரசு சார்ந்த காரியத்தில் சிந்தித்து செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
ரிஷபம்
தடைபட்டிருந்த புதிய படைப்புகள் வெளிப்படும். சுப காரிய விஷயங்களில் பொறுமை வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையாட்களால் அனுகூலமான சூழல் அமையும். இடுப்பு மற்றும் காலில் சிறுசிறு வலிகள் தோன்றி மறையும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். சிக்கனமாக செயல்படுவது தொடர்பான எண்ணங்கள் பிறக்கும். பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்கள் மூலம் புரிதல் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
இணைய வர்த்தகங்களில் நிதானத்தோடு செயல்படவும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் பிறக்கும். சிறு வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
சிம்மம்
விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும். பிடிவாத போக்கினேன் மாற்றிக் கொள்வது நன்மை தரும். பூர்விக பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கன்னி
திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து முடிவு எடுக்கவும். கூட்டாளிகள் இடத்தில் சில சங்கடங்கள் தோன்றும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் பணிகளை முடிப்பது நல்லது. தம்பதிகளுக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். சஞ்சலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
துலாம்
புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆவணத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிர்ஷ்டகமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
வழக்குகளில் சாதகமான சூழல் உண்டாகும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணி புரியும் இடத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
தனுசு
குழந்தைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சமூக பணிகளில் ஆதரவுகள் மேம்படும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பகை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மகரம்
குழந்தைகள் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் ஏற்படும். கலைத்துறைகளில் மாற்றமான அனுபவங்கள் கிடைக்கும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். பெரியோர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கும்பம்
மனதில் இருந்த கவலைகள் விலகும். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தனித்தன்மைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். சில அனுபவங்கள் மூலம் புதிய அத்தியாயம் உருவாகும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 4.11.2025.
இன்று இரவு 09.42 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.
இன்று காலை 11.42 வரை ரேவதி . பின்னர் அஸ்வினி.
இன்று மாலை 03.44 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.
இன்று காலை 10.46 வரை கரசை. பின்னர் இரவு 09.42 வரை வணிசை. பிறகு பத்தரை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.44 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
ரஷ்யாவிலுள்ள சாமர்கண்ட் புக்காரா போன்ற பகுதிகளில் இருந்துதான் இந்தப் பழம் உலக நாடுகளுக்குப் பரவியது. இந்த பழத்தின் உண்மையான பெயர் "ஆல்புக்காரா' என்பதாகும்.
மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்தப் பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் விட்டமின் ‘ஏ’,‘பி’ உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தரும். குருதியை விருத்தி செய்யும்.
காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலைவலியைக் குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் சொறி, சிரங்கு உடனடியாகக் குணமடையும்.
பிரபல துருக்கியக் கவிஞர் ஒருமுறை தனது ஓவிய நண்பரான அபிதின் தினோ என்பவரிடம் 'மகிழ்ச்சி' என்ற ஓவியத்தை உருவாக்கச் சொன்னார். ஒரு குடும்பம் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை ஓவியமாக ஓவியர் சித்தரித்தார். கட்டிலின் ஒரு கால் உடைந்து, இரண்டு செங்கற்களால் தாங்கப்பட்டு, பாழடைந்த அவர்களது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகிக் கொண்டிருந்தது.
ஒரு குடை அந்த மழை நீரை தடுத்துக்கொண்டிருந்தது. அந்த குடும்பத்தின் நாய் கூட படுக்கையில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது. இந்த ஓவியம் அழியாததாக உலக புகழ் பெற்றதாக மாறியது.இந்த ஓவியத்தை ஆழமாகப் பார்த்து, உண்மையில் மகிழ்ச்சி என்றால் என்ன என்று சிந்தியுங்கள் நண்பர்களே...இந்த படத்தைப் பார்த்த பிறகு, மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் இல்லாதது அல்ல, கடினமான சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டு அமைதியைக் காண்பது என்று நான் நம்புகிறேன்.
சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், உங்களிடம் இருப்பவற்றில் நல்லதைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். இருப்பதை சரியாக பயன்படுத்தினால், நினைப்பது தானாக வரும்.நிம்மதி என்பது புற விஷயங்களில் அல்ல. அக விஷயங்களில் உள்ளது. உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி வருத்தப்படுவதை நிறுத்துங்கள். உங்கள் இதயம் கனமாக இருக்கும் போதெல்லாம், இந்த ஓவியத்தை நினைவில் கொள்ளுங்கள்.எப்பொழுதும் திருப்தியாகவும் நிம்மதியாகவும் தூங்குங்கள்....
ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, ''உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.
பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்குப் புண்ணியம் உண்டு!" என்றது எலி.
ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, "இப்போது என்ன பிரச்சனை?'' என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார்
ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. "இப்போது உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார்.
சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். "இப்போது உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, ""சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டுப் போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம் தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத் தான் லாயக்கு!" என்று கூறிவிட்டார் அந்த ஞானி.
ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப் பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித் தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்."
ஒரு மூதாட்டி மசூதியின் முன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
அவருடைய மகன்களில் யாராவது சம்பாதிக்க முடியவில்லையா என்று ஒருவர் அவரிடம் கேட்டார்.
அந்த மூதாட்டி ஆம் என்றார்.
பிறகு ஏன் இங்கே பிச்சை எடுக்கிறீர்கள்? அந்த மனிதன் கேட்டார்.
"என் கணவர் இறந்துவிட்டார்," என்று அவர் கூறினார். என் மகன் வேலைக்காக வெளிநாடு சென்றான். அவனது பயணத்திற்கு செலுத்த என்னிடம் இருந்த பணம் செலவாகிவிட்டது. அவன் போய் விட்டான். நான் கஷ்டப்படுகிறேன் என்றார்.
அந்த மனிதன் கேட்டான் - உன் மகன் உனக்கு எதுவும் அனுப்பவில்லையா?
மூதாட்டி சொன்னார் - என் மகன் ஒவ்வொரு மாதமும் எனக்கு வண்ணமயமான காகிதத்தை அனுப்புகிறான், அதை நான் வீட்டில் சுவரில் ஒட்டுகிறேன்.
அந்த மனிதன் அவளுடைய வீட்டிற்குச் சென்று சுவரில் 60 வங்கி வரைவுகளை ஒட்டியிருப்பதைப் பார்த்தான்.
ஒவ்வொரு வரைவும் ₹ 50,000 மதிப்புடையது.
படிக்காததால், அந்தப் பெண்ணிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்று தெரியவில்லை.
வரைவின் முக்கியத்துவத்தை அந்த மனிதன் அவளுக்கு விளக்கியபோது, அந்தப் பெண் தன் செல்வம் இருந்தபோதிலும் பிச்சை எடுத்ததால் மிகவும் ஆச்சரியமும் வருத்தமும் அடைந்தாள்.
நமது நிலைமை இந்த வயதான பெண்ணைப் போன்றது
நம்மிடம் குர்ஆன் உள்ளது, அதை நாம் வாயால் முத்தமிட்டு நெற்றியில் வைத்து நம் வீட்டில் வைத்துக்கொள்வோம்
ஆனால் நாம் அதைப் படித்தால் மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும், அதன் அர்த்தத்தையும் விளக்கத்தையும் புரிந்துகொண்டு அதை நம் நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வருவோம்.
அப்போதுதான், அல்லாஹ் தாலா விரும்பினால், நம் உலகமும் வரவிருக்கும் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
குரானின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவட்டும். ஆமீன்
நம்மிடம் ஒரு பெரிய பொக்கிஷம் இருக்கிறது ஆனால் நம் அறியாமையால் நாம் அனைவரும் இன்று அதில் மறைந்திருக்கும் வெகுமதிகளை இழந்துவிட்டோம்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். மற்றவர்களை சிபாரிசு செய்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் மறைமுக தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உறவினர்களின் வருகை உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். முயற்சிகள் மூலம் மாற்றமான சூழல்கள் அமையும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். பாடங்களில் இருந்த ஆர்வமின்மை குறையும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
கடகம்
இறை சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். வியாபார அபிவிருத்தி விஷயங்களில் பொறுமையை கையாளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான வெளியூர் தொடர்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். சோதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். அரசு விஷயங்களில் பொறுமையை கையாளவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். சமூகப் பணிகளில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் மூலம் விரயங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் உபரி வருமானம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிப்படுத்தும் கருத்துக்களில் கவனம் வேண்டும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். மற்றவர்களால் ஆதாயம் அடைவீர்கள். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். பயணத்தின் பாதுகாப்பை அறிந்து மேற்கொள்ளவும். எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
தாய்மாமன் வழியில் புரிதல்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளால் நிம்மதி இன்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு
அரசு வழியிலான செயல்களில் சில தாமதம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சஞ்சலம் உண்டாகும். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகரம்
கனிவான பேச்சுக்கள் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். காது தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். வீடு மாற்றம் சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். திடீர் பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். பேச்சுகளுக்கு மதிப்புகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். பயணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மீனம்
சுப நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக விட்டுக் கொடுத்து செல்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் மனசாட்சியுடன் செயல்பட தொடங்குவீர்கள். எதிர்பாராத சிலருடைய சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 17 ஆம் தேதி திங்கட்கிழமை 3.11.2025.
இன்று அதிகாலை 01.43 வரை துவாதசி. பின்னர் பின்னர் இரவு 11.49 வரை திரியோதசி. பிறகு சதுர்த்தசி.
இன்று பிற்பகல் 01.02 வரை உத்திரட்டாதி . பின்னர் ரேவதி.
இன்று மாலை 06.34 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.
இன்று அதிகாலை 01.43 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 12.46 வரை கௌலவம். பிறகு இரவு 11.49 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று காலை 6.03 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
தென்னாப்பிரிக்காவில் ஒரு தொழிலதிபர் ஒரு காலத்தில் ஒரு பெரிய வைரத்தை வாங்கினார் - ஒரு முட்டையின் மஞ்சள் கரு அளவு. ஆனால் கல்லில் ஒரு விரிசல் ஓடுவதைக் கண்டுபிடித்தபோது அவரது உற்சாகம் விரைவில் ஏமாற்றமாக மாறியது. ஒரு தீர்வை எதிர்பார்த்து, அவர் அதை ஆலோசனைக்காக ஒரு நகைக்கடைக்காரரிடம் சென்றார்.
நகைக்கடைக்காரர் அந்த வைரத்தை கவனமாகப் ஆராய்ந்து, "இதை இரண்டு சரியான வைரங்களாகப் பிரிக்கலாம், ஒவ்வொன்றும் அசல் கல்லை விட அதிக மதிப்புள்ளவை. ஆனால் ஒரு தவறான அடி அதை பல துண்டுகளாக உடைந்து குவியலாக மாறக்கூடும். நான் அந்த ஆபத்தான முயற்சியை எடுக்க மாட்டேன்" என்று கூறினார்.
வெவ்வேறு நாடுகளில் உள்ள மற்ற நகைக்கடைக்காரர்கள் அவருக்கு அதே பதிலைக் கொடுத்தனர். பின்னர் யாரோ ஒருவர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு பழைய மாஸ்டர் நகைக்கடைக்காரரைப் பற்றி அவரிடம் சொன்னார் - "தங்கக் கைகள்" கொண்ட ஒரு மனிதர். தொழிலதிபர் அதே நாளில் அங்கு பறந்தார்.
வயதான மாஸ்டர் தனது ஆராய்ச்சி கண்ணாடி மூலம் கல்லை ஆராய்ந்து ஆபத்தை விளக்கத் தொடங்கினார், ஆனால் தொழிலதிபர் குறுக்கிட்டார்: அவர் ஏற்கனவே இந்த உரையை பல முறை கேட்டிருந்தார். நகைக்கடைக்காரர் வேலையைச் செய்ய ஒப்புக்கொண்டார் மற்றும் அதற்கான விலையை குறிப்பிட்டார். தொழிலதிபர் ஏற்றுக்கொண்டதும், நகைக்கடைக்காரர் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளம் பயிற்சியாளரை அழைத்தார், அவர் அவர்களின் முதுகைத் திருப்பி, அமைதியாக வேறு ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தார்.
பயிற்சியாளர் வைரத்தை எடுத்து, அதை தனது உள்ளங்கையில் வைத்து, சுத்தியலைத் தூக்கி சுத்தமாகவும், துல்லியமாகவும் ஒரு முறை அடித்தார். அந்த வைரக்கல் இரண்டு அற்புதமான வைரங்களாக சரியாகப் பிளந்தது. திரும்பிப் பார்க்காமல், அவற்றை நகைக்கடைக்காரரிடம் கொடுத்தார்.
ஆச்சரியப்பட்ட தொழிலதிபர், “இந்த இளைஞர் உங்களுக்காக எவ்வளவு காலமாக வேலை செய்கிறார்?” என்று கேட்டார்.
“மூன்று நாட்கள்,” முதியவர் பதிலளித்தார். “இந்தக் கல் எவ்வளவு மதிப்புடையது என்று அவருக்குத் தெரியாது. அதனால்தான் அவரது கை நடுங்கவில்லை.”
நீதி: உங்கள் பயங்களை ஊதிப் பெருக்கி, ஒவ்வொரு ஆபத்தையும் அதிகமாக யோசிப்பதை நிறுத்தும்போது, சாத்தியமற்றது செயல்கூட சாத்தியமாகிவிடும். சில நேரங்களில், மிகப்பெரிய தடைகள் உங்கள் மனதில் மட்டுமே இருக்கும். தடைகளை உடைப்போம்… வெற்றியை வெல்வோம்.
‘காந்தாரா’, ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களை இயக்கி, நாயகனாக நடித்தவர் ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் உருவான இப்படங்கள் மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றதால், இந்தியா முழுவதும் பிரபலமானார்.
‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். அடுத்து ஜெய் ஹனுமான் என்ற படத்தில் ஹனுமானாக நடிக்க இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதற்கிடையே ‘காந்தாரா’ படத்தை வெறும் பணத்துக்காக மட்டும் உருவாக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இதுபோன்ற கதையை வெறும் பணத்துக்காக மட்டும் செய்துவிட முடியாது. நான் வேறு கதைகளைத் தேர்வு செய்திருந்தால் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்த்திருப்பேன். ‘காந்தாரா’வை மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து பார்வையாளர்கள் அதிகம் பேசியபோது, இந்தக் கதையை நியாயத்துடன் முடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
‘காந்தாரா’வின் முன் கதையைச் சொல்வதன் மூலம் அந்த படத்துக்கு நியாயம் செய்ய முடியும் என்று நம்பினேன். பின்னர் தெய்வீக தலையீட்டால் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தை இயக்கினேன். உண்மையைச் சொன்னால், ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தை முடிக்கும் வரை வேறு பணிகளில் கவனம் செலுத்த வேண்டாம் என்று நினைத்தேன். அப்போது ‘ஜெய் ஹனுமான்’ வாய்ப்பு வந்ததால் ஏற்றுக் கொண்டேன்.
அந்த கதை என்னை விரட்டிக் கொண்டு வந்தது. மறுக்க முடியவில்லை. புராணங்கள், வரலாற்றுப் பின்னணி கதைகள் மீது எனக்கு ஆர்வம் இருப்பதால் ஒப்புக் கொண்டேன். ஒரு நடிகராகவோ அல்லது இயக்குநராகவோ ஒரே பாணியில் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது. மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.
பிரபல ஹாலிவுட் மற்றும் பிரெஞ்சு நடிகர் டெக்கி காரியோ (72) புற்றுநோயால் காலமானார்.
ஹாலிவுட்டில் வெளியான பேட் பாய்ஸ், நோஸ்ட்ராடாமஸ், த பேட்ரியாட் என பல படங்களில் நடித்துள்ளார். ஜேம்ஸ்பாண்ட் படமான ‘கோல்டன் ஐ’ படத்தில் வில்லனாக நடித்துப் பிரபலமானார். பிரெஞ்சு படங்களான, த மெசஞ்சர், கிஸ் ஆஃப் டிராகன் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்
பிரான்ஸின் பிரித்தானியில் வசித்து வந்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.




















