·   ·  2 videos
  •  ·  3 friends
  • B

    S

    3 followers
  • 1532
  • More

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலே

மலருகின்ற இதழோ

மாதுளையின் பூப்போலே

மலருகின்ற இதழோ

மானினமும் மீனினமும்

மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ

நீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாக

பார்வையொருக் கணையாக

புருவமொரு வில்லாக

பார்வையொருக் கணையாக

பருவமொரு களமாகப்

போர் தொடுக்கப் பிறந்தவளோ

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

தேன் சுவையைத் தான் குழைத்து

கொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்

பசுந்தளிர் போல் வளை கரமும்

தேன் கனிகள் இருபுறமும்

தாங்கி வரும் பூங்கொடியோஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ

ஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ

யாழிசையின் ஒலியாக

வாய்மொழி தான் மலர்ந்தவளோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோசெந்தழலின் ஒளி எடுத்து

சந்தனத்தின் குளிர் கொடுத்து

பொன் தகட்டில் வார்த்து வைத்த

பெண்ணுடலை என்னவென்பேன்

மடல் வாழைத் துடையிருக்க

மச்சம் ஒன்று அதிலிருக்க

மடல் வாழைத் துடையிருக்க

மச்சம் ஒன்று அதிலிருக்க

படைத்தவனின் திறமை எல்லாம்

முழுமை பெற்ற அழகியென்பேன்நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோ

Comments (0)
Login or Join to comment.
  • 7
  • 11

ஓர் ஆண்மகனின் புலம்பல் இதோ....

  • 46
  • 55
  • 54
  • 55
  • 56
  • 68
  • 95
  • 101
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். வியாபாரரீதியான பயணங்கள் ஆதாயம் தரும். பங்குதாரரின் அறிவுரையை ஏற்கவும்.

ரிஷபம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். சேமிக்கும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கடகம்: அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதியுண்டு.

சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.

கன்னி: குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து போகவும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வரும். வியாபாரத்தில் பங்குதாரரை அனுசரித்து நடந்து கொள்ளவும். போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்.

துலாம்: பணவரவு உண்டு. அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் அடுத்தவர் பிரச்சினையில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரம் விறுவிறுப்பாக அமைந்து லாபம் தரும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகள் அனைத்தையும் முடிப்பீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும். வியாபாரத்தில் வராக்கடன் வந்துசேரும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவ பதவி தேடி வரும். மனைவிவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். புதிய வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை தாமதப்படுத்தவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் இருக்கும். பங்குதாரர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கவும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் இணக்கமான போக்கை கடைபிடிப்பது நன்மை தரும்.

மீனம்: திட்டமிட்ட வேலையை முடிக்க, வேகத்தை கூட்டுவீர். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறாதீர்கள்.

  • 178
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 28.4.2026

இன்று இரவு 08.41 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று முழுவதும் உத்திரம்.

இன்று இரவு 10.28 வரை வியாகாதம் . பின்னர் ஹர்ஷனம்.

இன்று காலை 08.47 வரை பவம். பின்னர் இரவு 08.41 வரை பாலவம். பிறகு கௌலவம் .

இன்று அதிகாலை 05.57 வரை சித்தயோகம் பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=494&dpx=2&t=1777342962

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 182

Good Morning...

  • 176
·
Added a news

கனடாவின் ஒண்டாரியோவின் கிளாரிங்டன் (Clarington) அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற நேருக்கு நேர் மோதிய வாகன விபத்தில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாலை 35/115 இன் (Highway 35/115) வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில், கன்செஷன் வீதி 3 இற்கு (Concession Road 3) தெற்கே இரண்டு SUV ரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ஒரு SUV வாகனத்தின் ஓட்டுநரான கிளாரிங்டன் குடியிருப்பாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய வாகனத்தின் ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்துக்கான உடனடி காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சமப்வம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 277
·
Added a post

என் பேரு பாண்டி. வயசு 52. மதுரை. தொழில் ஆட்டோ டிரைவர். 30 வருஷமா இதே மீனாட்சி அம்மன் கோயில் வாசல் தான் ஸ்டாண்ட்.

வாழ்க்கைல ஒரே ஒரு விதி வச்சிருந்தேன். ராத்திரி 10 மணிக்கு மேல ஆட்டோ எடுக்க மாட்டேன். குடும்பம். பொண்டாட்டி காமாட்சி. ஒரே பொண்ணு தேவி. +2 படிக்கிறா. அவளுக்கு சோறு ஊட்டி, கதை சொல்லி தூங்க வைக்கணும். அதான் சத்தியம்.

2024 டிசம்பர் 31. நைட் 11:45. கடைய சாத்திட்டு கிளம்புறேன். மழை.

"அண்ணா. ஆட்டோ."

திரும்பினா ஒரு கிழவி. 80 வயசு இருக்கும். கையில ஒரு மஞ்ச பை. நடுங்கிட்டே நிக்கிறா. சேலை முழுக்க ஈரம்.

"இல்லமா. நேரமாச்சு. வீட்டுக்கு போறேன்."

கிழவி கையெடுத்து கும்பிட்டா. "ராசா. கோரிப்பாளையம். என் மகன் வீடு. போன் பண்ணினான். 'அம்மா உடனே வா. மருமகளுக்கு பிரசவ வலி'னு. 3 மணி நேரமா ஆட்டோ கிடைக்கல. பஸ் இல்ல. தயவு செஞ்சு கொண்டு போய் விடு ராசா."

மனசு கேக்கல. "ஏறுமா."

வண்டி எடுத்தேன். கிழவி பின்னாடி உட்கார்ந்து ஏதோ முணுமுணுத்துட்டே வந்தா. "மாரியாத்தா. என் மருமகள காப்பாத்து. பேரன் பொறக்கணும்."

கோரிப்பாளையம் வீடு. இறங்கினா. பை திறந்து 50 ரூபா எடுத்தா. கை நடுங்குது.

"வேணாம்மா. பேரன் பொறந்துட்டு கொடு. போய் பாருமா."

கிழவி அழுதுட்டா. "ராசா. நீ நல்லா இருப்ப. உன் பொண்ணு ராசாத்தி மாதிரி வாழ்வா."

வீட்டுக்கு வந்தேன். மணி 12:30. தேவி தூங்கிட்டா. காமாட்சி சோறு வச்சா. "ஏங்க. இவ்ளோ லேட்."

"ஒரு கிழவி. பேரன் பொறக்க போகுதாம். விட்டுட்டு வந்தேன்."

தேவி தூக்கத்துல சிரிச்சா. "அப்பா தான் ஹீரோ."

அடுத்த நாள் காலைல 6 மணி. போன். ஒரு புது நம்பர். "பாண்டி அண்ணனா. நான் முத்து. நேத்து ராத்திரி என் அம்மாவ கொண்டு வந்து விட்டீங்களே."

"ஆமா தம்பி. என்ன ஆச்சு. குழந்தை பொறந்துடுச்சா."

அந்த பக்கம் மௌனம். அப்புறம் அழுகை சத்தம். "அண்ணே. அம்மா... அம்மா காலைல 5 மணிக்கு... போய்ட்டாங்க அண்ணே. ஹார்ட் அட்டாக். பேரன பார்துட்டு. 'என் ராசா'னு சொல்லிட்டு. அப்படியே சிரிச்சுட்டே போய்ட்டாங்க."

என் கையில இருந்த போன் நழுவுச்சு.

"அண்ணே. நீங்க மட்டும் நேத்து கூட்டிட்டு வரலனா, என் அம்மா பஸ் ஸ்டாண்ட்லயே செத்து போயிருப்பாங்க. பேரன பார்க்காமயே போயிருப்பாங்க. நீங்க கடவுள் அண்ணே. அம்மா கடைசியா சொன்ன வார்த்தை 'அந்த ஆட்டோக்கார ராசாவ பார்த்தா கும்பிட்டு சொல்லுப்பா. அவன் பொண்ணு நல்லா இருக்கணும்'னு."

போன் கட் ஆயிடுச்சு. நான் அப்படியே உட்கார்ந்துட்டேன். காமாட்சி ஓடி வந்தா. "என்னங்க."

"காமாட்சி. நேத்து நான் 10 நிமிஷம் லேட் பண்ணிருந்தா, ஒரு அம்மா தன் பேரன பார்க்காம செத்து போயிருப்பா."

தேவி எழுந்து வந்தா. "அப்பா. ஏன் அழுகுறீங்க."

அவள கட்டிப்பிடிச்சேன். "இல்லடா தங்கம். அப்பா ஜெயிச்சுட்டேன்."

அன்னைல இருந்து என் விதிய மாத்திட்டேன். ராத்திரி 10 மணிக்கு மேல தான் வண்டி எடுப்பேன். ஏன்னா ராத்திரில தான் ஆபத்து. ராத்திரில தான் அழுகை. ராத்திரில தான் ஒரு உயிருக்கு ஆட்டோ தேவைப்படும்.

என் ஆட்டோ பின்னாடி இப்ப ஒரு வாசகம் எழுதி இருக்கேன்:

*_"அவசரத்துக்கு கூப்பிடுங்க. காசு முக்கியம் இல்ல. உயிர் முக்கியம்.

இது கடைசி சவாரியா இருந்தாலும் பரவாயில்ல."_*

அந்த கிழவி போட்டோ என் ஆட்டோல ஒட்டி இருக்கு. சவாரி போறதுக்கு முன்னாடி அந்த போட்டோவ பார்த்து கும்பிடுவேன். "அம்மா. இன்னைக்கு யாருக்காவது உதவணும். ஆசீர்வாதம் பண்ணுமா."

3 மாசம் முன்னாடி தேவி +2 ரிசல்ட். 590/600. டாக்டருக்கு படிக்க போறா. முதல் பீஸ் கட்ட காசு இல்ல. அன்னைக்கு ராத்திரி அதே முத்து தம்பி வீடு தேடி வந்தாரு. கையில 2 லட்சம். "அண்ணே. இது கடன் இல்ல. அம்மா கொடுக்க சொன்னா. 'அந்த ராசா பொண்ணு டாக்டர் ஆகணும்'னு. வாங்கிக்கோங்க."

நான் வேணாம்னு சொன்னேன். அவர் அழுதாரு. "அண்ணே. அம்மா ஆசை. மறுக்காதீங்க. நீங்க என் அம்மாவுக்கு பேரன காட்டினீங்க. நான் உங்க பொண்ணுக்கு வாழ்க்கைய காட்டுறேன்."

இன்னைக்கு தேவி மெடிக்கல் காலேஜ். விடுதில. வாரத்துக்கு ஒரு தடவ போன் பண்ணுவா. "அப்பா. நான் படிச்சு முடிச்சு ஊருக்கு வர்றேன். இலவசமா வைத்தியம் பார்க்க போறேன். உங்கள மாதிரி. காசு வாங்காம."

நான் ஆட்டோ ஓட்டிட்டே அழுவேன். காமாட்சி கேப்பா. "ஏங்க. இப்ப ஏன் அழுகுறீங்க."

"இல்ல காமாட்சி. நான் அன்னைக்கு 50 ரூபா வேணாம்னு சொன்னேன். ஆனா அந்த கிழவி எனக்கு 50 வருஷ புண்ணியத்த கொடுத்துட்டு போய்ட்டா."

நண்பர்களே. வாழ்க்கைல காசு சம்பாதிக்க ஆயிரம் சவாரி கிடைக்கும். ஆனா புண்ணியம் சம்பாதிக்க ஒரு சவாரி தான் கிடைக்கும். அத மிஸ் பண்ணிடாதீங்க.

ஏன்னா சில சவாரி கடைசி சவாரியா இருக்கலாம். உங்களுக்கு இல்ல. அவங்களுக்கு.

-- இது முகநூலில் வந்த கதை

  • 280
  • 278
·
Added a post

மதுரை. மீனாட்சி கோவில் வாசல்.

பெரியசாமி. வயசு 60. காலைல 6 மணிக்கு கோவில் வாசல்ல உட்கார்ந்துடுவாரு. முன்னாடி ஒரு துணி விரிப்பு. அதுல பேனா, பென்சில், அழிப்பான், காம்பஸ். பிளாட்பாரம் கடை. ஆனா வியாபாரம் இல்ல.

பெரியசாமிக்கு ஒரு விதி. யார் பேனா கேட்டாலும் முதல்ல ஒரு கேள்வி கேப்பாரு. "தம்பி. பரீட்சையா."

"ஆமா தாத்தா. இன்னைக்கு கணக்கு பரீட்சை. பேனா மறந்துட்டேன்."

உடனே பெரியசாமி நல்ல பேனாவா எடுத்து கொடுப்பாரு. "இந்தா. இது ராசியான பேனா. நூறு மார்க் வாங்கிட்டு வா."

"காசு எவ்ளோ தாத்தா."

"காசு அப்புறம். முதல்ல பரீட்சை எழுது. மார்க் வந்து சொல்லு. அப்புறம் காசு தா."

பிள்ளைங்க சிரிச்சுட்டே ஓடிடும். திரும்பி வராது. பெரியசாமி கேக்கவும் மாட்டாரு.

மனைவி தங்கம் திட்டுவா. "யோவ். பைத்தியமா உனக்கு. பேனா ஒன்னு பத்து ரூபா. இப்படி சும்மா கொடுத்தா நாம என்ன திங்க. வாடகை யார் கட்டுவா."

பெரியசாமி பழைய டயரிய எடுப்பாரு. அதுல தேதி வாரியா எழுதியிருப்பாரு.

"12.03.2010 - ரமேஷ் - கணக்கு பரீட்சை - பேனா - பாக்கி"

"05.06.2011 - சுமதி - ஹிந்தி பரீட்சை - பேனா - பாக்கி"

"18.09.2013 - முருகன் - பத்தாவது பப்ளிக் - பேனா - பாக்கி"

டயரி முழுக்க பாக்கி. கூட்டி பார்த்தா மூவாயிரத்து சொச்சம் பேனா. முப்பதாயிரம் ரூபா.

"இத பாரு தங்கம். இது பாக்கி இல்ல. முதலீடு. ஒரு நாள் வரும்."

தங்கம் தலைல அடிச்சுக்குவா. "உன் முதலீடு மண்ணா போகுது. வயசாயிடுச்சு. இனிமே யாரு வர போறா."

இருபது வருஷம் ஓடிடுச்சு. பெரியசாமிக்கு இப்ப வயசு 80. கண்ணு மங்கிடுச்சு. காது கேக்கல. ஆனாலும் தினமும் கோவில் வாசல். அதே துணி. அதே பேனா. ஆனா இப்ப வியாபாரமே இல்ல. பிள்ளைங்க எல்லாம் ஜெல் பேனா. ஸ்கெட்ச். ஆன்லைன்.

ஒரு நாள் காலைல. கோவில் வாசல்ல ஒரு கார் வந்து நின்னுச்சு. உள்ள இருந்து ஒருத்தர் இறங்கினாரு. வயசு 35 இருக்கும். கோட் சூட். கையில ஒரு பூங்கொத்து.

நேரா பெரியசாமி கிட்ட வந்தாரு. கால்ல விழுந்தாரு. "தாத்தா. என்ன தெரியுதா."

பெரியசாமி கண்ண கசக்கினாரு. "தம்பி. வயசாயிடுச்சு. சரியா தெரியல."

"தாத்தா. பதினெட்டு வருஷம் முன்னாடி. பத்தாவது பப்ளிக் எக்ஸாம். கணக்கு பரீட்சை அன்னைக்கு காலைல. நான் அழுதுட்டே வந்தேன். பேனா உடைஞ்சு போச்சு. வீட்ல காசு இல்ல. நீங்க தான் தாத்தா ஒரு பேனா கொடுத்தீங்க. 'ராசியான பேனா. நூறு மார்க் வாங்கிட்டு வா'னு சொன்னீங்க. காசு கேக்கல."

பெரியசாமிக்கு லேசா ஞாபகம் வந்துச்சு. "தம்பி. நீ..."

"நான் தாத்தா. முருகன். அந்த பேனால தான் கணக்கு எழுதினேன். 98 மார்க். பாஸ் ஆனேன். காலேஜ் போனேன். இன்னைக்கு நான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி வச்சிருக்கேன். பேரு 'பேனா டெக்னாலஜிஸ்' தாத்தா. உங்க பேனால தான் என் வாழ்க்கை ஆரம்பிச்சது."

தங்கம் பாட்டி வாசல்ல நின்னு கேட்டுட்டு இருந்தா. வாய பொத்திக்கிட்டு அழுதா.

முருகன் பர்ஸ் எடுத்தான். ஒரு கவர். "தாத்தா. அன்னைக்கு பத்து ரூபா பாக்கி. இன்னைக்கு வட்டியோட தரேன்." உள்ள ஒரு செக். பத்து லட்சம்.

பெரியசாமி கை நடுங்குச்சு. "தம்பி. எனக்கு காசு வேண்டாம். நீ பெரிய ஆளா வந்துட்டியே. அதுவே போதும்."

"இல்ல தாத்தா. இது காசு இல்ல. நீங்க போட்ட முதலீடு. இன்னைக்கு லாபத்தோட திரும்ப வந்திருக்கு. இனிமே இந்த பிளாட்பாரம் வேண்டாம். உங்களுக்கும் பாட்டிக்கும் நான் இருக்கேன்."

அடுத்த நாள் பேப்பர்ல நியூஸ். "பிளாட்பாரம் தாத்தாவுக்கு சாஃப்ட்வேர் முதலாளி குருதட்சணை. பத்து லட்சம் பரிசு."

நியூஸ் பார்த்துட்டு அடுத்த நாள் இன்னொரு கார். "தாத்தா. நான் சுமதி. ஹிந்தி பரீட்சைக்கு பேனா வாங்கினேன். இப்ப ஹிந்தி டீச்சர்."

அடுத்து ரமேஷ். "தாத்தா. நான் இப்ப ஆடிட்டர். உங்க பேனா தான் என் முதல் பேலன்ஸ் ஷீட் எழுதுச்சு."

ஒரு வாரம். கோவில் வாசல் கல்யாண வீடு மாதிரி ஆயிடுச்சு. டாக்டர், இன்ஜினியர், கலெக்டர், போலீஸ். எல்லாரும் வரிசைல வந்து பெரியசாமி கால்ல விழுந்தாங்க. கையில பூ, பழம், கவர்.

தங்கம் பாட்டி பழைய டயரிய எடுத்தா. மூவாயிரம் பேரு. பாக்கி முப்பதாயிரம். ஆனா இப்ப வந்திருக்கு மூணு கோடி.

பெரியசாமி அழுதுட்டே சொன்னாரு. "தங்கம். நான் சொன்னேன்ல. இது பாக்கி இல்லனு. இது விதை. நான் விதைச்சேன். இன்னைக்கு காடா வளர்ந்து நிக்குது."

இன்னைக்கு மீனாட்சி கோவில் வாசல்ல ஒரு பெரிய கடை இருக்கு. பேரு "பெரியசாமி பேனா அங்காடி". வாடகை இல்ல. முருகன் வாங்கி கொடுத்துட்டான்.

கடைல போர்டு. "இங்க பரீட்சை எழுத போற பிள்ளைகளுக்கு பேனா இலவசம். மார்க் வந்து சொன்னா போதும். காசு அப்புறம்."

கீழ சின்னதா ஒரு வரி. "ஒரு பத்து ரூபா பேனா ஒரு உயிரோட வாழ்க்கைய மாத்தும். நம்புங்க."

இப்ப அந்த கடைய நடத்துறது யாரு தெரியுமா. முருகன். சாஃப்ட்வேர் கம்பெனி முதலாளி. வாரத்துல ரெண்டு நாள் கோட் சூட்ட கழட்டி வச்சுட்டு கடைல உட்கார்ந்து பிள்ளைகளுக்கு பேனா கொடுக்குறான்.

"தம்பி. இது ராசியான பேனா. நூறு மார்க் வாங்கிட்டு வா."

நீ கொடுக்குறது பேனா இல்ல. நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஒரு நாள் உன் கால்ல வந்து விழும். அன்னைக்கு தெரியும். நீ ஏழை இல்லனு. நீ தான் பெரிய பணக்காரன்னு.

  • 285
  • 284
·
Added article

திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடிய நடிகர்!

நடிகர் நெல்லை சிவா கோலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்தவர். நடிகர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.

ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமானார். நகைச்சுவை நடிகர் மற்றும் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

மகாபிரபு, வெற்றிக் கொடி கட்டு, கண்ணும் கண்ணும் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்

சின்ன வேடத்தில், சில நிமிடங்கள் வந்து சென்றாலும், தன்னுடைய நெல்லை ஸ்லாங்கில் அழகாக பேசி, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சிவா. ஆண்பாவம் படத்தில் இவர் அறிமுகம் ஆனார்.

வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அந்த காமெடியில் இவர் நெல்லை தமிழில் பேசியது இப்போது வைரல் மீம் மெட்டீரியல். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார்.

கற்றது களவு, சகுனி என்று பல படங்களில் நெல்லை சிவா நடித்துள்ளார். காமெடி வேடங்கள் மட்டுமின்றி, குணச்சித்திர தோற்றங்களிலும் கூட இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சரியாக வாய்ப்பு கிடைக்காமல் இவர் கஷ்டப்பட்டு வந்தார்.

அதிலும் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் இவர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்த இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் முன் இவரின் உயிர் பிரிந்தது.வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அந்த காமெடியில் இவர் நெல்லை தமிழில் பேசியது இப்போது வைரல் மீம் மெட்டீரியல். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார்.

கற்றது களவு, சகுனி என்று பல படங்களில் நெல்லை சிவா நடித்துள்ளார். காமெடி வேடங்கள் மட்டுமின்றி, குணச்சித்திர தோற்றங்களிலும் கூட இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சரியாக வாய்ப்பு கிடைக்காமல் இவர் கஷ்டப்பட்டு வந்தார்.

அதிலும் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் இவர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்த இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் முன் இவரின் உயிர் பிரிந்தது.வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அந்த காமெடியில் இவர் நெல்லை தமிழில் பேசியது இப்போது வைரல் மீம் மெட்டீரியல். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார்.

கற்றது களவு, சகுனி என்று பல படங்களில் நெல்லை சிவா நடித்துள்ளார். காமெடி வேடங்கள் மட்டுமின்றி, குணச்சித்திர தோற்றங்களிலும் கூட இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சரியாக வாய்ப்பு கிடைக்காமல் இவர் கஷ்டப்பட்டு வந்தார்.

அதிலும் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் இவர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்த இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் முன் இவரின் உயிர் பிரிந்தது.வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அந்த காமெடியில் இவர் நெல்லை தமிழில் பேசியது இப்போது வைரல் மீம் மெட்டீரியல். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார்.

கற்றது களவு, சகுனி என்று பல படங்களில் நெல்லை சிவா நடித்துள்ளார். காமெடி வேடங்கள் மட்டுமின்றி, குணச்சித்திர தோற்றங்களிலும் கூட இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சரியாக வாய்ப்பு கிடைக்காமல் இவர் கஷ்டப்பட்டு வந்தார்.

அதிலும் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் இவர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்த இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் முன் இவரின் உயிர் பிரிந்தது.வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அந்த காமெடியில் இவர் நெல்லை தமிழில் பேசியது இப்போது வைரல் மீம் மெட்டீரியல். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார்.

கற்றது களவு, சகுனி என்று பல படங்களில் நெல்லை சிவா நடித்துள்ளார். காமெடி வேடங்கள் மட்டுமின்றி, குணச்சித்திர தோற்றங்களிலும் கூட இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சரியாக வாய்ப்பு கிடைக்காமல் இவர் கஷ்டப்பட்டு வந்தார்.

அதிலும் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் இவர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்த இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் முன் இவரின் உயிர் பிரிந்தது.

  • 288
·
Added a post

பேரன்: பாட்டி தூக்கம் வரல..

TV பாக்கட்டுமா?

பாட்டி: எங்கிட்ட பேசிட்டிருடா பேராண்டி..

பேரன்: பாட்டி.. நம்ம வீட்ல எப்போதுமே 6 பேர் தான் இருப்போமா..?

நீங்க,

அம்மா,

அப்பா,

அக்கா,

நான்

என் பூனைக்குட்டி

பாட்டி: அப்டி இல்லியே..

உனக்காக நாளைக்கி ஒரு நாய்குட்டி வருது..

அப்போ 7 ஆகிடுவோம்..

பேரன்: ஆனா, நாய்குட்டி என் பூனைக்குட்டிய கடிச்சி கொன்னுடுமே...

மறுபடியும்

6 பேர் ஆகிடுவோம்.

பாட்டி: இல்லப்பா..

உனக்கு கல்யாணம் ஆகும்ல..

அப்ப7 பேர் ஆகிடுவோம்.

பேரன்: அப்படினா அக்காவுக்கும் கல்யாணமாகி போயிடுமே..

அப்ப 6 பேர் தான இருப்போம்.

பாட்டி: ஓஹ்..

செல்ல ராசா...

உனக்கு பிள்ளை பிறக்குமே..

அப்ப 7 பேர் ஆகிடுவோம்ல.

பேரன்: ஆனா, அதுக்கு முன்னாடி நீங்க செத்து போயிடுவீங்களே..

மறுபடியும் 6 பேர் தான் இருப்போமா..?

பாட்டி: அடி செருப்பால ..

டிவி பார்க்க கூடதுன்னு சொன்னதுக்கு, என்னையே செத்துருவேன்னு சொல்ற..

போய் TV யே பாத்து தொலை...

பேரன்: ???????

  • 294
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். மனதில் புது விதமான எண்ணங்களும் ஆசைகளும் உருவாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழல்கள் ஏற்படும். பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். வாழ்க்கை துணைவர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

ரிஷபம்

உயர் அதிகாரிகள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பணியாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

மிதுனம்

வியாபாரத்தில் இருந்த மந்ததன்மை குறையும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

வெளியூர் வர்த்தகப் பணிகளில் கவனம் வேண்டும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு

சிம்மம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பு ஆறுதலும் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. காரசாரமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கன்னி

நினைத்த சில பணிகள் தாமதமாக நிறைவேறும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிராக செயல்பட்டவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். சந்தேக எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. உலகத்தைப் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். திடீர் பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

துலாம்

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் வருகையால் அலைச்சலும் விரயங்களும் உண்டாகும். புதிய துறை சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

விருச்சிகம்

நிதானமான அணுகுமுறைகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் துரிதமாக செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பயணம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் விவேகத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் விலகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு

நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் மூலம் மேன்மை ஏற்படும். ஆன்மிக பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சதுர்த்தியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக்கொள்வீர்கள். உங்கள் மீதான நம்பிக்கைகள் வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மகரம்

குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய முயற்சிகளில் அலைச்சல் ஏற்படும். உங்கள் கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். எதிர்பார்த்த வரவுகள் இழுபறியாகி கிடைக்கும். பணிகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். மற்றவர்களின் செயல்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் அறிமுகம் ஏற்படும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆன்மிக பணிகளில் சில புரிதல்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சலும் அனுபவமும் கிடைக்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

  • 421

யாரைத்தான் நம்புவதோ இந்த காலத்தில்.....

  • 411

கல்லிலும் கனிவு உண்டு.

கடும் சொல்லிலும் கருத்து உண்டு

பகையிலும் பாசம் உண்டு

துரோகத்திலும் நேசம் உண்டு

என்று நம்புவோம்

சரி தவறு எல்லாரிடமும் உண்டு

தவறுகள் சரியாகி விடும் என நம்புவதிலும் ஒரு பலம் உண்டு

அந்த நம்பிக்கைதான்,

இன்னா செய்தாரையும்

நமக்கு நன்மை செய்ய வைக்கும்

  • 411
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.4.2026

இன்று இரவு 08.53 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று இரவு 11.33 வரை பூரம். பின்னர் உத்திரம்.

இன்று அதிகாலை 01.10 வரை விருத்தி . பின்னர் இரவு 11.38 வரை துருவம். பிறகு வியாகாதம்.

இன்று காலை 09.13 வரை வணிசை. பின்னர் இரவு 08.53 வரை பத்திரை. பிறகு பவம் .

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=493&dpx=2&t=1777258442

நல்ல நேரம்:

காலை : 06.00 முதல் 07.00 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 418