என்ன ஒரு அழகான நடை
நேர்த்தியான நடைபயிற்சி
மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆழி’. இதில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்.
பிப்.27-ல் வெளியாகும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ரவி கொட்டாரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ. ஜெ, ஹரி உத்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் சரத்குமார் பேசும்போது, “இந்தப் படத்தின் கதை மீன்பிடி படகு ஒன்றில் நடைபெறுகிறது. பெரும்பாலும் கடல்தான் திரைக்கதையில் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் திரையில் காட்சிப்படுத்து வீர்கள் என இயக்குநரிடம் கேட்டேன்.
அது குறித்து முழுமையாக திட்டமிட்டிருக்கிறோம் என சொன்னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரிந்தது. ஒரு மீன்பிடி கப்பல் ஒன்றை அரங்கத்துக்குள் உருவாக்கி, அதனை இயக்குவதற்காக ஹைட்ராலிக் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தினார்.
இந்தப் படத்தின் கிளிம்ப்ஸை பார்க்கும் போது நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பது தெரியும். நெகட்டிவ் கேரக்டருக்கு தான் இன்று வரவேற்பு இருக்கிறது. இன்று கதாநாயகன் என்று சொன்னால் நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகன் ஆக முடியாது. இப்போதெல்லாம் தப்பு செய்பவர்தான் கதாநாய கன். புஷ்பா படத்தில் ஹீரோ செம்மரம் கடத்துகிறார். ஆனால் அவர் தானே ஹீரோ. அதனால் காலங்கள் மாறிவிட்டன. இன்றைக்கு வித்தியாசம் தேவைப்படுகிறது” என்றார்.
கனடாவில் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், தாக்குதல்தாரி ஒரு பெண் என தற்போது தகவல்கள் வெளியாகிவருகின்றன.
நேற்று மதியம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு நபர் நடத்திய தாக்குதலில், தாக்குதல்தாரி உட்பட குறைந்தது 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல்தாரியும் தன்னைத்தான் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்த நிலையில், தாக்குதல்தாரி குறித்த விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை. ஆனால், அவர் குறித்து அருகிலுள்ள வீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது, எச்சரிக்கை செய்தியில், சந்தேக நபர் பழுப்பு நிற தலைமுடி கொண்ட பெண் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதே நபர்தான் பள்ளிக்குள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்பதை பொலிசார் தற்போது உறுதி செய்துள்ளனர்.
ஸ்ரீவாரி பக்தர்கள் இனி வாட்ஸ்அப் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யலாம். திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட முக்கிய கோவில்களுக்கான தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தபடியே பெறலாம்.
திருமலை ஸ்ரீவாரி பக்தர்களுக்கு இது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி ஆகும். இனி தரிசன டிக்கெட் கிடைக்குமா என கவலைப்பட வேண்டியதில்லை. நீண்ட வரிசை, இணையதள போராட்டம், கவுண்டர் காத்திருப்பு என எதற்கும் இனி கவலைப்பட தேவையில்லை. கலியுக தெய்வமாக போற்றப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளை தரிசிக்க திருமலைக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
இதனால் தரிசன டிக்கெட்டுகளுக்கு எப்போதும் கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை ஆன்லைன், ஆஃப்லைன் முறைகளில் மட்டுமே டிக்கெட் கிடைத்த நிலையில், தற்போது எங்கிருந்தாலும் மொபைல் மூலமாகவே டிக்கெட் பெறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான சேவை மூலம், வீட்டில் இருந்தபடியே சில நிமிடங்களில் தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இந்த புதிய வசதிக்காக அரசு WhatsApp Governance முறையை பயன்படுத்தியுள்ளது. பக்தர்கள் முதலில் 95523 00009 என்ற எண்ணை தங்கள் மொபைலில் சேமித்து, "ஹாய்" என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன்பிறகு கிடைக்கும் மெனுவில் சேவைகள் பட்டியல் தோன்றும். இதில் "கோவில் முன்பதிவு சேவைகள்" என்ற விருப்பத்தை தேர்வு செய்தால், கோவில் சார்ந்த முன்பதிவு வசதிகளை எளிதாக அணுகலாம்.
இந்த சேவையில் திருமலை மட்டுமல்லாமல், ஸ்ரீசைலம், கனிபாகம், அன்னவரம், விஜயவாடா, ஸ்ரீகாளஹஸ்தி போன்ற ஆந்திராவின் முக்கிய கோவில்களும் இடம்பெற்றுள்ளன. நீங்கள் செல்ல விரும்பும் கோவிலைத் தேர்வு செய்து, தரிசனம் அல்லது சேவை வகையைத் தேர்ந்தெடுத்து, பக்தரின் முழு விவரங்களையும் பதிவு செய்தால் போதும்.
மொத்தத்தில், இந்த வாட்ஸ்அப் டிக்கெட் முறை பக்தர்களின் நேரத்தையும், சிரமத்தையும் பெரிதும் குறைக்கிறது. தொழில்நுட்பம் இப்போது பக்தியாகவும் உதவ தொடங்கியுள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் தொலைதூர பக்தர்களுக்கு இந்த வசதி ஒரு பெரிய வரமாக இருக்கும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வாழ்க்கை துணைவருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாகன பயணங்களால் ஆதாயம் ஏற்படும். மனதளவில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
ரிஷபம்
உத்தியோகத்தில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மிதுனம்
புதிய முயற்சிகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் மாற்றமான தருணங்கள் அமையும். கலைத்துறையில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
வியாபார பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். கட்டிட துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இறை வழிபாடு தெளிவை ஏற்படுத்தும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பணிகளில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உருவாகும். எதிலும் விடாப்படியாக செயல்படுவீர்கள். இசை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். பலம் மற்றும் பலவினங்களை புரிந்து கொள்வீர்கள். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கன்னி
வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வர்த்தக செயல்களில் சிந்தித்து செயல்படவும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பத்திர விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். பலம் மற்றும் பலவினங்களை புரிந்து கொள்வீர்கள். பயண வாய்ப்புகள் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். எதிர்பாராத விரய செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விருச்சிகம்
விளம்பரம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இரவு நேர பணிகளில் கவனத்துடன் இருக்கவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். இனம் புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். உறுதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
தனுசு
உடல் தோற்றத்தில் மாற்றங்கள் உண்டாகும். கல்வி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். துரிதமான செயல்பாடுகள் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவுகள் சிலருக்கு உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். தொல்லை குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மகரம்
அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தொழில் புதிய வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் பிறக்கும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். விவசாய பணிகளில் ஆதாயம் ஏற்படும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தனிமை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உறவுகள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மீனம்
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
விசுவாவசு வருடம் தை மாதம் 28 ஆம் தேதி புதன்கிழமை 11.2.2026.
இன்று காலை 11.16 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று பிற்பகல் 12.09 வரை அனுஷம். பின்னர் கேட்டை.
இன்று அதிகாலை 03.06 வரை துருவம். பின்னர் வியாகாதம்.
இன்று காலை 11.16 வரை கரசை. பின்னர் வனிசை
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
'நாடோடிகள்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமானவர் நடிகை அபிநயா. அந்த படத்தில் அவரது இயல்பான நடிப்பு பெரும் கவனத்தை பெற்றதுடன், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள உதவியது. தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அவரது புதிய போட்டோவை பார்த்த ரசிகர்கள், "அடடே... இது அபிநயாவா?" என்று ஆச்சரியமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாடல் உலகில் தனது பயணத்தை தொடங்கிய அபிநயா, 2008ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமானார். பின்னர் தமிழில் 'நாடோடிகள்' படத்தின் மூலம் நல்ல பெயரை பெற்றார். அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7ஆம் அறிவு, வீரம், பூஜை, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். கதாபாத்திரம் சிறியது பெரியது என்று பாராமல், தன்னுடைய நடிப்பால் ஒவ்வொரு படத்திலும் கவனம் ஈர்த்தவர் அபிநயா.
கடந்த ஆண்டு வெளியான 'பனி' திரைப்படத்தில், நடிகர் ஜோஜு ஜார்ஜின் மனைவியாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரமும் நல்ல வரவேற்பைப் பெற்று, படம் வசூலிலும் வெற்றி கண்டது. கேட்கவும் பேசவும் முடியாத உடல்நல சவால்கள் இருந்தபோதிலும், அவற்றை தாண்டி தன்னம்பிக்கையுடன் சினிமாவில் வெற்றி பெற்று வருவது அபிநயாவின் வாழ்க்கைப் பயணத்தின் சிறப்பு. இவர், கடந்த ஆண்டு தன்னைப் போலவே மாற்றுத் திறனாளியான தனது பள்ளி பருவ நண்பரை காதல் திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டுகளாக நீண்ட காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார்
தற்போது, அபிநயா சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை அபிநயா சமீபத்தில் பகிர்ந்துள்ள குட்டை உடையில் இருக்கும் அழகான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டைலான தோற்றத்தில், தன்னம்பிக்கை நிறைந்த முகபாவனையுடன் இருக்கும் அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் நாடோடிகள் அபிநயாவா இது? என்றும் "அழகே அழகு" என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி திரைப்பட விழா வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. அதில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கடல்கன்னி படங்களுக்கு சிறந்த திரைப்பட விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்படும் ஒரு திரைப்படத்தின் இயக்குநருக்கு ‘நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது’ வழங்கி வருகிறது.
புதுச்சேரி ஒரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஏற்ற சிறந்த இடமாக இருப்பதால், இந்த நிகழ்வு, இந்த ஆண்டிலிருந்து சர்வதேச திரைப்பட விழாவாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக முகப்பருக்கள் வந்து போவதைவிட முகப்பருவால் ஏற்பட்ட தடங்களும் தழும்புகளும் மறையாமமல் இருப்பது கொடுமையானது.
இதற்கு மிக முக்கியக் காரணமே நம்முடைய சமச்சீரற்ற உணவு முறை, மாசுக்கள், சருமத்தி்ற்கு பயன்படுத்தும் பொருள்கள் வை தான். அது நம்முடைய முக அழகையே கெடுத்துவிடுகின்றது.
இதனை எளிய முறையில் கூட போக்கலாம். அந்தவகையில் முகப்பருக்களால் ஏற்படும் தடங்கள் மற்றும் தழும்புகளை நீக்க என்ன செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்து பருக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் போதும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை தவறாமல் செய்து வந்தால் சில நாட்களிலேயே பருக்கள் வந்த இடத்திலுள்ள தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
கடலை மாவுடன் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்கு திக்கான பேஸ்ட்டாகக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை வாரத்தில் மூன்று நாட்கள் இதை செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
இரவில் தூங்கச் செல்லும்முன் முகத்தை நன்கு கழுவி விட்டு, தேங்காய் எண்ணெயை முகத்தில் நன்கு அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு, அப்படியே இரவு முழுக்க முகத்திலேயே விட்டுவிடுங்கள். காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். இதை தினமும் செய்து வர மிக விரைவாக பலன்கள் கிடைக்கும்.
ஆப்பிள் சிடார் வினிகருடன் 2 ஸ்பூன் சேர்த்து, அதனுடன் சில துளிகள் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து அதை சருமத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் 2 சொட்டு ஆப்பிள் சிடார் வினிகருடன் 10 சொட்டு தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அப்ளை செய்யுங்கள்.
கற்றாழை ஜெல்லை, சருமத்தை சுத்தம் செய்துவிட்டு முகத்தில் அப்ளை செய்து நன்கு 10 நிமிடங்கள் மசாஜ் செய்து விட வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.
அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து, அதை நேரடியாக முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்து 15 - 20 நிமிடங்கள் வரை உலரவிட்டு பின் முகத்தைக் கழுவ வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் சருமப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
சில துளிகள விளக்கெண்ணையை கையில் எடுத்து, முகத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எண்ணெயை அப்ளை செய்து, இரவு முழுக்க அப்படியே விட்டுவிட வேண்டும். பின்பு காலையில் வெதுவெதுதுப்பான நீர் கொண்ட முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.
ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.
அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.
அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு.கனவில் அவர் படாத
துன்பப்பட்டார்.
அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை.நிஜம் போலவே இருந்தது.
திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார். கண் விழித்தார்.
கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.
அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சம்போகங்களுடன் இருப்பார்.
ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது.
"நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?
அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.
மந்திரி,ராஜகுரு எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும் பதில் தெரியவில்லை.அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.
"நான் பிச்சைக்காரனா,
மன்னனா" என்று அவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.
பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.தமது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாகச் சொன்னார்.
நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர்.தூர தேசத்திலிருந்து பண்டிதர்கள், முனிவர்கள்,வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர்.யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார்
.அவர் பெயர் அஷ்டாவக்கிர மகரிஷி.அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும்.அது ஏனென்றால் அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்த போது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்புத் தப்பாக படிப்பாராம்.
அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை அதைக் கேட்கச் சகிக்காமல் உடம்பை திருப்புமாம்.அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது.
ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டாவக்கிர மகரிஷி ஜனகரின் அவைக்குச் சென்றார். பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது.யாருக்கும் பதில் தெரியவில்லை
." என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?" என ஜனகர் வேதனையுடன் கேட்டார்.
"நான் சொல்கிறேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.
அரசவை முழுக்க அவரைத் திரும்பிப் பார்த்தது.
அவரைப் பார்த்த மறுவினாடியே பண்டிதர்கள் சிரிக்கத் துவங்கி விட்டனர்.
குள்ளமாக,கறுப்பாக,
எண் கோணலாக வளைந்த உடலை வைத்துக் கொண்டு ஒருவர் சபைக்கு வந்தால் எப்படி இருக்கும்?அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டாவக்கிரர் மவுனமாக நின்றார்.
"என் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்" என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார்.
"சொல்கிறேன்.அதற்கு முன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும்,
கசாப்புக் கடைகாரர்களையும் வெளியே அனுப்புங்கள்" என்றார் அஷ்டா வக்கிரர்.
"என்ன சொல்கிறீர்கள்?இது பண்டிதர்களின் சபை.இங்கு எந்த கசாப்பு கடைக்காரனும் தோல் வியாபாரியும் இல்லை" என்றார் ஜனகர்.
"இங்கு பண்டிதன் என யாரும் இல்லை.
இங்கிருப்போர் அனைவரும் கசாப்புக் கடைக்காரர்களும் தோல் வியபாரிகளும் தான்" என்றார் அஷ்டாவக்கிரர்.
சபை முழுக்க கொதித்தெழுந்தது.
"என்ன திமிர் இந்த குரங்கனுக்கு?" என்று சப்தமிட்டார் ராஜகுரு.
"வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்" என்று அனைவரும் கூச்சலிட்டனர்.
"ஏன் அப்படி சொன்னீர்கள்?" என்று பரிவுடன் கேட்டார் ஜனகர்.
"கற்றறிந்த பண்டிதர்களை கசாப்புக் கடைக்காரன் என்று சொல்லலாமா?" என்று கேட்டார்.
உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார்.
"ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன்.சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது.
ஏன் சிரித்தார்கள்?என் குறைவான ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா?நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு சிரித்தார்களா?இல்லை.
இது எதைக் கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை.என் உருவத்தைப் பார்த்து சிரித்தார்கள்.என் தோலின் நிறத்தை வைத்து,என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள்.
என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே?
தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டுத் தோலுக்கு விலை போடுவான்.கசாப்புக் கடைக்காரன் தான் ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான்.
இவர்களும் என்னை அப்படித் தான் மதிப்பிட்டார்கள். அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன்.
பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை?அதனால் தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.
அவமானமடைந்த பண்டிதர்கள் தலை குனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.
வந்தவர் மகா ஞானி என ஜனகரும் அறிந்தார்.மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.
ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.
அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் என்ன?
தூங்கினப்போ கண்டதும் கனவு தான்.இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான்.
உன்னோட ராஜ வாழ்வும்,பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை.
ராஜாவா இருக்கறப்ப சந்தோஷப்படாதே.
தூங்கறப்ப அந்த சந்தோஷம் போயிடும்.
பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே.
முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும்.
ரெண்டு நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கற்றுக்கொள் என்றார்...
ஆவாரைச் செடியில் எல்லாவிதப்பாகங்களுமே மருத்துவத்தில் பயன் அளிப்பதாகும். ஆவாரம் பூ ஆண்குறி எரிச்சல் ஆகிய குறைபாடுகள் இருந்தால் ஆவாரம் பூவை மணப்பாகு செய்து சாப்பிட்டால் நிவர்த்தியாகும்.
உடலில் நமைச்சல் இருந்தால் ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் குணமாகும். நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் அருமருந்தாக ஆவாரம் விதை விளங்குகிறது.
எலும்புருக்கி நோயினால் அவதிப்படுபவர்களுக்கு ஆவாரம் இலைச் சாறு மாமருந்தாக விளங்குகிறது. ஆவாரம் இலைகளைத் தேவையான அளவுக்குக் கொண்டுவந்து குளிர்ச்சியான தண்ணீரைத் தெளித்து, இடித்து சாறாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இந்த சாறை அரைலிட்டர்
அளவுக்கு எடுத்துக் கொண்டு தினசரி காலை, மாலை என இருவேளை குடித்துவரவும். இதனால் எலும்புருக்கி எனும் நோய் நீங்கும்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தால் இதன் பிசின் 5 கிராம் முதல் 8 கிராம் வரை நீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் பொதுவாக
நீரிழிவுக்கு ஆவாரம் பூ நல்ல பலனைக் கொடுக்கிறது. நீரிழிவுக்கு ஆவாரம் பூ சாறுடன் ஆவாரம் பட்டை, கொன்றைப் பட்டை நாவல்பட்டை, கடல்நுரை, கோஷ்டம் ஆகியவற்றை இடித்துப் பிழிந்து ஆவாரம் பூ சேர்த்துக் காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதனை வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் நன்கு குணமாவதை உணரலாம்.
ஆவாரம் பூ பானம் சிறுநீர் கடுப்பு இருக்கும் போது அதை குறைக்க செய்கிறது. இதனுடைய வேரிலிருந்து தயாரிக்கப்படும் சாறு இயற்கை டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. நீரிழிவு நோய் கொண்டிருப்பவர்களுக்கு சிறுநீரகம் சேதமாகாமல் பாதுகாக்கிறது.
அகத்தி கீரை (Agathi keerai) வகைகள்
அகத்தியில் வெள்ளை அகத்தி, செவ்வகத்தி, சாழை அகத்தி, பேரகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என 5 வகைகள் உள்ளன. இதில், சாழை, பேரகத்தி மற்றும் சிற்றகத்தி ஆகிய மூன்றும் உணவுக்காகப் பயன்படுத்தப் படுவதில்லை. உணவாக உட்கொள்ளும் அகத்தியில் இரண்டு மட்டுமே, ஒன்று வெள்ளை நிறப் பூக்களை கொண்டது.இது பொதுவாக அகத்தி என்ற பெயரில் குறிப்பிடுவார்கள். மற்றொன்று செந்நிறப் பூக்களை உடையது இதனைச் செவ்வகத்தியென குறிப்பிடுவர். அகத்தியும், செவ்வகத்தி இந்த இரண்டும் பொதுவாக உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.
அகத்தியின் சத்துகள்
அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நவீன காலத்தில், அகத்தி கீரையில், 8.4 சதவீதம் புரதமும், 1.4 சதவீதம் கொழுப்பும், 3.1 சதவீதம் தாது உப்புகளும் இருப்பதாக வேளாண் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் மாவுச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் A, கால்சியம் ஆகியவையும் அடங்கியுள்ளன.
அகத்தி மரத்தின் வேர், பூ, இலை மற்றும் பட்டை என அனைத்து பகுதிகளும் மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன. இது உடலின் உட்புற மற்றும் வெளிப்புறத்திற்கும் (Internal and External use) மருந்தாக பயன்படுகிறது
வயதானவர்களுக்கு
இதில் வைட்டமின்- சி (Vitamin-C) உள்ளதால் , நோய் எதிர்ப்பு (Immunity) சக்தி அதிக அளவில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அனைவருக்கும் தேவை என்றாலும் முதியர்வர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும் .எனவே அவர்கள் இக்கீரையை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்திக் கொள்ள முடியும் . இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரொனோ போன்ற நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை . அதற்கு எங்கும் எளிதில கிடைக்ககூடிய அகத்தியை எடுத்துக் கொண்டால் போதுமானது.
பெண்களுக்கு
அகத்தி கீரையில், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் இரத்த ஒட்டத்தை சீராக வைக்க உதவும். கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் இரும்பு சத்து தேவைப்படுவதால் இந்த கீரையை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பால் ஊட்டும் தாய்மார்களும் இதனை எடுத்துக் கொள்வதனால் பால் சுரப்பி தூண்டப்பட்டு அதிக அளவில் பால் சுரக்கும்.
சிறுவர்களுக்கு
உடல் வள்ர்ச்சிக்கு தேவையான புரதம் (Protein) இதனுள் அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைங்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்றாகும் .மேலும் இதில் சுண்ணாம்பு (Calcium ) சத்தும் இருப்பதால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். எலும்புகளுக்கு பலம் சேர்ப்பதால் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் முதுமையில் வரமால் தடுக்கலாம்.
செரிமானத்தை சீராக்கும் அகத்தி
இதில் நார்சத்து உள்ள காரணத்தினால் செரிமானத்தை சீராக்கும் ஆற்றலை பெற்றது. உடலில் செரிமானம் சரியாக இருப்பின் கழிவுகள் முறையாக வெளியற்றப்டுவதுடன் பசியையும் முறையாக தூண்டும். முன்னோர்கள் சொல்வழக்குப் படி , பசித்தால் மட்டும் சாப்பிடு என்பர். .பசி எடுத்து சாப்பிட்டாலே நாம் மற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
கண்களை குளிர்ச்சியாக்கும் அகத்தி
இன்றைய இயந்திர வாழ்க்கையில் சிறுவர்கள் முதல் பெரியர்வகள் வரை அனைவரும் கணினி , கைப்பேசி போன்றவற்றை ஒரே இடத்தில அமர்ந்து பயன்படுத்துவதால் கண்களில் வறட்சி ஏற்படும் .இதனை சரி செய்ய அகத்தியை பயன்படுத்தி வர கண்கள் குளிர்ச்சி அடையும் பார்வை தெளிவாகும்.
உடல் உஷ்ணத்தை போக்கும் அகத்தி
இன்று பலருக்கு வெளியில் சென்று வேலை செய்யும் காரணத்தினால் உடல் உஷ்ணமாக இருக்கும். அகத்தியானது உடல் உஷ்ணத்தை குறைப்பதோடு , உடல் உஷ்ணத்தினால் ஏற்படக் கூடிய குடல்புண் , வாய்ப்புண் போன்ற வற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.
இரத்த அழுத்தத்திற்கு
இளம் பருவத்தினர் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இரத்த அழுத்த நோய் பரவலாக காணப்படுகிறது. அகத்தியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு, சிறுநீரும் தடை இல்லாமல் செல்லவழி வகுக்கும் .
தோல் நோய்களுக்கு
அகத்தியுடன் தேங்காய் மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகளான சொறி, சிரங்கு, தேமல் போன்றவை முற்றிலும் குணமாகும். அகத்தி கீரையுடன் சிறிது மஞ்சள் , அகத்தி இலை மற்றும் மருதாணி இலை இவை அனைத்தும் ஒரு சேர அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில தடவி வந்தால் பித்த வெடிப்பு இருந்த இடம் காணாமல் போகும்
அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியத்தோடு வாழுங்கள்
அதிக சத்துக்களை அகத்தி பெற்று இருந்தாலும் , அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றபடி இதனை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது. அதிகமாக எடுத்து கொண்டால் இரத்தம் கெட்டு போக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கீரையை மற்ற மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பொழுது சாப்பிடக் கூடாது. ஏனெனில் பிற மருந்தின் வீரியத்தை இது குறைத்து விடும். வாயு கோளாறுகள் உள்ளவர்கள் அகத்தி கீரையை தவிர்ப்பது நல்லது. ஆகவே, அளவோடு சாப்பிட்டு வளமுடன் வாழ அகத்தியை பயன்படுத்துவோம்.
நம் தெனாலி ராமன் போல, கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில், துருக்கி தேசத்தில் முல்லா நஸ்ருதீன் என்ற சுஃபி ஒருவர் இருந்தார்.
நல்ல புத்திசாலி. தத்துவ ஞானி. அவரைப்பற்றிய நகைச்சுவை கதைகள் பல உண்டு.
ஒருமுறை முல்லா தன் சீடர்களுக்குக் வெளியூர் சென்றார். அவ்வூர் மக்களில் சிலர் அவர்களுக்கு சில்லரையாக நன்கொடை அளித்தனர். மாலையில் ஓய்வு எடுக்க ஒரு காலி சத்திரத்தை சென்று தங்கினர். மக்கள் அளித்த நனகொடை அதிகம் இல்லாததால், அவர்களுக்குள் பிரித்து தருவது கடினம் என்பதால் முல்லா அதை பிரிக்கவில்லை. சீடர்கள் சண்டை பொறுக்காத முல்லா, அவர்களுக்கு ஒரு பாடமளிக்க ஒரு யோசனை கூறினார்.
முல்லா ஒரு சீடனை அனுப்பி, அப்பணத்தில் அல்வா வாங்கி வந்து பிரித்துக் கொள்ள சொன்னார். அந்த அல்வா எல்லோருக்கும் பிரிக்கும் அளவு அதிகமாக இல்லை. எனவே ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இன்று இரவு தூக்கத்தில் யார் சிறந்த கனவு காண்கிறாரோ அவருக்கே எல்லா அல்வாவும் என்று முடிவு. அல்வா முல்லா கைக்கு வந்தது.
காலையில் எல்லா சீடர்களும் மிக்க ஆவலுடன் தம் கனவுகளை பற்றி சொல்ல துடித்தார்கள். முல்லா எல்லோரையும் முந்திக் கொண்டு சொன்னார், நேற்று இரவு என் கனவில் ஆண்டவர் தோன்றனார். அவருக்கு அந்த அல்வாவை சமர்ப்பித்தேன். என்னை மிகவும் மெச்சி பாராட்டி நீயே எல்லா அல்வாவையும் உண்டு காண்பி என்றார். ஆண்டவர் கட்டளையை மீற முடியுமா, சாப்பிட்டு விட்டேன் என்றார்.
பிறகு என்ன,............... முல்லா தான் சீடர்களுக்கு அல்வா கொடுத்து விட்டாரே!
இணையத்தில் பார்த்த புகைப்படம்... மனதிற்கு இதமாக இருந்தது என்பதால் பகிர்கிறேன்...
இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் உடல்நலக்குறைவாக இருந்ததால் CT ஸ்கேன் அவசியமாக இருந்தது.
ஆனால் அந்தப் பெரிய இயந்திரம் இருக்கும் அறைக்குள் தனியாகச் செல்ல அவன் தயங்கியிருக்கிறான்.
2–3 மணி நேரமாக பெற்றோர், மருத்துவர்கள்—எல்லோரும் முயன்றும் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை.
அப்போது அவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அழைக்கப்பட்டான்.
நண்பன் வந்தவுடனே மாயம் செய்தது போல அவனின் பயம் பாதியாக குறைந்தது.
இருவரும் சேர்ந்து CT ஸ்கேன் போக வேண்டும் என்று முடிவு செய்து இருவரும் கண்களை மூடி படுத்துக்கொண்ட புகைப்படம் தான் நாம் பார்ப்பது.
இருவருமே சிறுவர்கள் தான்.. இருவருக்குமே பயம் தான் ஆனாலும் அசாத்தியம் சாத்தியமானது...
இயந்திரப் பயத்தை எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் தைரியமாக மாறியவர்கள் தான் இந்த நண்பர்கள்..
இந்தக் காட்சி நமக்கு ஒன்றை மட்டும் நினைவூட்டுகிறது — வெளிச்சத்தில் சேர்ந்து ஓடுவதற்கு மட்டுமல்ல இருளான நேரங்களில் ஒருவருக்கொருவர் விளக்காக இருப்பதே உண்மையான நட்பு.
உலகில் உள்ள அனைத்து நட்புகளும் இவ்வளவு தூய்மையானதும் உடைக்க முடியாததுமானவையாக இருக்கட்டும்...
-முகநூல் பகிர்வு
ஏலக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது அதன் நறுமணமே.
கருப்பு ஏலக்காய் என்றால் என்ன? அதன் பயன்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
💢 கருப்பு ஏலக்காய் என்பது வீரியமிக்க வாசனையுடன் விளங்கும் ஒரு சிறிய செடியாகும். இதில் இரண்டு வகைகள் உள்ளது - 'கருப்பு ஏலக்காய்' மற்றும் 'பச்சை ஏலக்காய்'. இவை இரண்டில் கருப்பு அல்லது மலை ஏலக்காய் தான் புகழ் பெற்ற வாசனை பொருளாகும். அதனுடைய தனித்துவம் வாய்ந்த சுவை மற்றும் வாசனையால் இதனை சமையலுக்கு அனேக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த செடியின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதிமுக்கிய எண்ணெய்களில் ஒன்றாகும். முக்கியமாக இதனை வாசனை தெரப்பிக்கு பயன்படுத்துகின்றனர். உடல் நலத்தை பேணுவதிலிருந்து, பளபளப்பான முடியை பெறுவது வரைக்கும், இது பயன்படுகிறது. இது அத்தனை பயன்களை அளிக்கிறது. இப்போது நம் உடலுக்கு, சருமத்திற்கு மற்றும் தலை முடிக்கு ஏலக்காயால் கிடைக்கும் பலன்களை தெரிந்துக் கொள்வோம்.
👉இரையக குடல்பாதை ஆரோக்கியம்
கருப்பு ஏலக்காய் இரையக குடல்பாதை ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை புரிகிறது. இறையகம் மற்றும் குடல் பாதைகளில் தேவையான நீர்கள் சுரக்க கருப்பு ஏலக்காய் தூண்டிவிடும். மேலும் நீர் வெளியேறுதலுக்கும் இது தூண்டுகோலாக அமைவதால். வயிற்றில் உள்ள அமிலங்களை கட்டுப்பாட்டில் வைக்கும். அதனால் இரையாக அல்சர் மற்றும் செரிமான கோளாறுகள் எல்லாம் மெதுவாக சீராகும்.
❤ இதயக் குருதிக்குழாய்களின் ஆரோக்கியம்
இதய ஆரோக்கியத்திற்கும் பெரிய அளவில் உதவி புரிகிறது கருப்பு ஏலக்காய். இதயத் துடிப்பை கட்டுப்பாட்டில் வைப்பது இதன் முக்கிய குணமாகும். அதனால் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும். கருப்பு ஏலக்காயை சீரான முறையில் உட்கொண்டால். இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இது இரத்தம் உறைந்து போவதையும் தடுக்கும்.
👉சுவாச ஆரோக்கியம்
சுவாச பிரச்சனைகள் உள்ளதா? அப்படியானால் கருப்பு ஏலக்காய் அதற்கு பெரிய நச்சு முறிவாக விளங்கும். ஆஸ்துமா, கக்குவான் இருமல், நுரையீரல் இறுக்கம், மூச்சுக் குழாய் அழற்சி, நுரையீரல் சிரை காசநோய் போன்ற சுவாச கோளாறுகளை, சிறிய அளவில் ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம். இது சுவாச குழாய்களை ஆசுவாசப்படுத்தி, நுரையீரல் வழியாக காற்று சுற்றோட்டத்தை சுலபப்படுத்தும்.
👉வாயின் ஆரோக்கியம்
பற்களில் அழற்சி, ஈறுகளில் அழற்சி போன்ற பலவிதமான பல் பிரச்சனைகளை கருப்பு ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம். மேலும் இதில் பலமான வாசனை வருவதால், துர்நாற்றத்துடன் வெளிவரும் மூச்சையும் இது சரிசெய்யும்.
👉சிறுநீர் சம்பந்தப்பட்ட ஆரோக்கியம்
கருப்பு ஏலக்காய் சிறந்த சிறுநீர்ப் பெருக்கியாக இருப்பதால், சிறுநீர் கழிப்பதிலும் ஆரோக்கியமாக விளங்கும்.
👉கார்சினோஜெனிக்கிற்கு எதிரான குணமுடையவை
கருப்பு ஏலக்காயில் உள்ள இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மார்பகம், குடல், முன்னிற்குஞ்சுரப்பி மற்றும் கருப்பை புற்றுநோயை தடுக்கும். இதிலுள்ள கார்சினோஜெனிக்கிற்கு எதிரான குணம் க்ளுடாதியோன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உற்பத்தியாவதை அதிகரிக்கும். இதனால் புற்றுநோய் சம்பந்தப்பட்ட அணுக்கள் வளருவது தடைபடும்.
👉நச்சு நீக்கம்
உடலில் உள்ள நஞ்சை நீக்குவதில் கருப்பு ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள காப்ஃபைனை நீக்கும். அதனால் அல்கலாய்டு பாதிப்பில் இருந்து உங்களை காக்கும்.
👉உணர்வகற்றி குணம்
கருப்பு ஏலக்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் வீரியமிக்க உணர்வகற்றி குணம் அடங்கியுள்ளது. இது கடுமையான தலைவலியை நீக்கி, உடனடி நிவாரணம் அளிக்கும். இதிலிருந்து எடுக்கப்படும் அதிமுக்கிய எண்ணெய் மன அழுத்தம் மற்றும் சோர்வை போக்கவும் உதவும்.
👉ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் குணங்கள்
கருப்பு ஏலக்காய் 14 வகை நுண்கிருமிகளை அளிக்கும் ஆற்றல் கொண்டவை. அதனால் அதை உட்கொண்டால், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிடம் இருந்து, உங்களை காத்து உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.
👉இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
கருப்பு ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதனால் இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், உடம்பில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கி, சரும பரப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதனால் ஆரோக்கியம் மேம்படும். சரி உங்களுக்கு இளமையான அழகிய தோற்றம் வேண்டுமா? அப்படியெனில் கருப்பு ஏலக்காயை உட்கொள்ள ஆரம்பியுங்கள்.
👉வெண்மையான சருமம்
வயதான தோற்றம் சீக்கிரம் வருவதை தடுப்பதையும் சேர்த்து, சருமம் வெண்மையாக மாறுவதற்கும் கருப்பு ஏலக்காய் உதவி புரிகிறது.
👉சரும அலர்ஜிக்கு நிவாரணி
கருப்பு ஏலக்காயில் ஆன்டி-பாக்டீரியா குணம் நிறைந்துள்ளதால், சரும அலர்ஜிக்கு இயற்கை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
👉திடமான தலை முடி
கருப்பு ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணம், தலை சருமத்திற்கு உணவாக அமையும். அதன் விளைவாக தலை முடி ஆரோக்கியமாகவும், திடமாகவும், பளபளப்பாகவும் மாறும்.
👉தலை சரும தொற்றுக்கு நிவாரணி
இதன் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியா குணங்களால், இதனை உட்கொண்டால் தலை சருமத்தில் எரிச்சலும் தொற்றுகளும் ஏற்படாது.
👉வெப்பத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு.
இந்த ஏலக்காய் வெப்பத் தாக்கு மற்றும் சூரியவதையிலிருந்து காக்கும் வல்லமையை கொண்டுள்ளது.
⭕ தொப்பையை 2 வாரத்திலே குறைக்க கருப்பு ஏலக்காய் டீ குடிங்க..
⭐எடை குறைய...
ஒரு ஏலக்காயின் விதைகளை பொடி செய்து கொள்ளுங்கள். பின் அத்துடன் 1/2 டீஸ்பூன் இஞ்சி பொடி மற்றும் 1/2 டீஸ்பூன் சோம்பு பொடி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, இந்த பொடியை சேர்த்து அடுப்பை அணைத்து, மூடி வைத்து 5 நிமிடம் கழித்து வடிகட்டி தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.
⭐மூட்டு வலி மற்றும் தலை வலி
மூட்டு வலி, தலைவலி அதிகம் இருந்தால், 5 துளிகள் கருப்பு ஏலக்காய் எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அந்த எண்ணெயால் மூட்டு மற்றும் வலியுள்ள தலைப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
⭐இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு கருப்பு ஏலக்காய் மிகச்சிறப்பான பொருள். அதுவும் ஒரு டம்ளர் சுடுநீரில் கருப்பு ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து தினமும் குடித்து வருவதன் மூலம், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட முடியும்.
⭐உடல் முழுக்க
கருப்பு ஏலக்காயை டீ போன்று தயாரித்து குடித்தால் உடல் முழுக்க உள்ள அழுக்குகள் சுத்தம் பெற்று விடும். சிறுநீரக தொற்றுகள், வயிற்றில் சேர்ந்துள்ள நுண் கிருமிகள் போன்றவற்றையும் சேர்த்து அகற்று விடுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள நச்சு தன்மை உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த கருப்பு ஏலக்காய் உதவுகிறது.
⭐தொப்பை பிரச்சினையா..!
இன்று பத்தில் 6 பேருக்கு தொப்பையே மிக பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எதை செய்தலும் அங்கு தொப்பை தான் பெரும் தடையாகவும் உள்ளது. இதை மிக எளிமையாக சரி செய்ய கருப்பு ஏலக்காய் போதும். அடிவயிற்றில் இருக்க கூடிய கொழுப்புகளை கரைத்து தொப்பையை விரட்டி அடித்து விடும்.
⭐ஆரோக்கியமற்ற இதயமா..?
கருப்பு ஏலக்காயின் பயனில் மிக முக்கியமானது இந்த இதயம் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பது தான். இரத்தம் உறைதல், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சினைகளுக்கு இந்த வகை ஏலக்காய் அருமையான பலனை தருகிறது.
⭐குடல் நோய்களுக்கு
ஒருவருக்கு குடலில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அது உடலின் முழு இயக்கத்தையும் சேர்த்தே பாதிக்க கூடும். அந்த வகையில் குடல் பாதையில் ஏதேனும் பாதிப்பு அல்லது குடல் நோய் உங்களுக்கு இருந்தால் அதனையும் இந்த கருப்பு ஏலக்காய் குணப்படுத்த வல்லது.













