·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1270
  • More

என்ன ஒரு அழகான நடை

நேர்த்தியான நடைபயிற்சி

Comments (0)
Login or Join to comment.
·
Added article

தருண் விஜய், சாயாதேவி நாயகன் நாயகி​யாக நடிக்​கும் படம், ‘மாஸ்டர் பிளான்’. உத்ரா புரொடக் ஷன்​ஸ், டிஜே இன்​டர்​நேஷனல் தயாரிப்​பில், செ.ஹரி உத்ரா எழுதி இயக்கு​கிறார்.

திவ்யா ஜெகத், அப்​பு​குட்​டி, கூல் சுரேஷ், சென்ட்​ராயன், வினோத் சாகர், அருண் மைக்​கேல் டேனியல், சம்​பத் ராம் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்கின்றனர். அபி அத்விக் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்படத்துக்கு ஏ.ஜே.அலி மிர்​சாக் இசை அமைக்​கிறார்.

“அரசி​யலைச் சேர்ந்​தவர்​களால் ஏற்​படும் பிரச்​சினை​யில் நாயகன் நாயகி​யின் குடும்​பம் சிக்​கிக் கொள்​வதும், அதிலிருந்து எவ்​வாறு மீண்டு வரு​கிறார்​கள் என்​ப​தை​யும் டார்க் ஹியூமர் வகை​யில் இப்​படம் பேசும்” என்​றது படக்​குழு.

ஏப்​ரல் இறு​தி​யில் தொடங்க இருக்​கும் இப்​படத்​தின் பூஜை சென்​னை​யில் நேற்று நடந்​தது. தயாரிப்​பாளர்​கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், பி.எல்​.தேனப்​பன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்டு படக்​குழு​வினரை வாழ்த்​தினர்.

  • 3
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வேலையாட்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் இருக்கவும். சிறுதொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஆதரவான சூழல் உண்டாகும். புதிய இலக்குகளை பற்றிய மாறுபட்ட அணுகுமுறைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். தெளிவுகள் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

ரிஷபம்

விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கலை பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். வங்கி சார்ந்த துறைகளில் பொறுப்புகள் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

மிதுனம்

எதிலும் மன மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் நிமித்தமான முயற்சிகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். விளையாட்டுகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனை போக்கில் மாற்றங்கள் உண்டாகும். சுப காரிய தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

சிம்மம்

சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்கள் வேண்டும். ஆரோக்கிய செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

கன்னி

பணிகளிலிருந்து வந்த நெருக்கடியான சூழல்கள் குறையும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உணவு துறைகளில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

துலாம்

எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும் முதலீடுகளும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் அமைதி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

விருச்சிகம்

கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் மேம்படும். தன வரவுகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய உறவினர்களின் சந்திப்புகள் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

தனுசு

குடும்பத்தில் சிறு வேறுபாடுகள் தோன்றி மறையும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாக குறைக்கவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபார பணிகளில் சிறு சிறு மந்தங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மகரம்

எதிலும் கோபம் இன்றி செயல்படவும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். புதிய கண்ணோட்டம் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். முக்கியமான வேலைகளை மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் நீங்களே செய்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கும்பம்

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கை துணை வழியில் அனுசரித்து செல்லவும். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். வரவுகளால் ஆபரண சேர்க்கை உண்டாகும். வர்த்தகப் பணிகளில் லாபம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகங்களால் உற்சாகம் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

மீனம்

கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

  • 52
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3.3.2026

இன்று மாலை 05.52 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.

இன்று காலை 08.07 வரை மகம். பின்னர் பூரம்.

இன்று காலை 11.00 வரை சுகர்மம். பின்னர் திருதி.

இன்று காலை 06.10 வரை பத்தரை. பின்னர் மாலை 05.52 வரை பவம். பின்பு பாலவம்.

இன்று காலை 06.27 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=441&dpx=2&t=1772501502

நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 61

Good Morning...

  • 55
·
Added a post

சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய போது, எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.

நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது. என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்….?

நெஞ்சம் பதறியது!!! என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் … நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி, வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி, பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.

ஈரமான முயலைப் பார்த்ததும் “அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக

இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்’

என மனதிற்குள் நினைத்து என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன்.

நேற்று எதேச்சையாக என்னைப் பார்த்துவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்,

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா” என்று கேட்டார்.

எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. எனினும் ஒன்றும் தெரியாதவன் போல்,

“தெரியாதே என்ன விஷயம்…?” என நான் சொல்ல, ப‌க்கத்து வீட்டுக்காரர்,

“கடந்த சில நாட்களுக்கு முன்னாடி எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல்

இறந்து விட்டது.”என்றார்

“அப்படியா…!!!??” “ஆமாம்.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, எவனோ ஒரு லூசுப்பய …

நாங்கள் புதைத்த முயலை தோண்டி யெடுத்து குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்குள்ளே போட்டிருக்கான்” ஹிஹிஹி என்று சிரித்தார்.

  • 117
காலை வணக்கம்
  • 233
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வஞ்சனையான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். அயல்நாட்டு பொருட்கள் மீது ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். குழப்பம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

ரிஷபம்

எதிர்பாராத பயணங்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு செயல்பாடுகளில் அலைச்சல்கள் காணப்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மதிப்புகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

மிதுனம்

இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர் வழியில் ஆதரவுகள் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகள் எண்ணியவை நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கடகம்

உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தோற்றப்பொழிவில் மாற்றங்கள் ஏற்படும். மனம் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். பேச்சுத் திறமையால் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்

சிம்மம்

பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் திருப்தி ஏற்படும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு நிலை மேம்படும். மனதளவில் புதிய பக்குவம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தேக தோற்றத்தில் மாற்றம் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கன்னி

வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பயணங்களால் அனுபவம் உண்டாகும். பணி நிமித்தமாக இடமாற்றம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்க்க முயல்வீர்கள். எண்ணியது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

துலாம்

சக ஊழியர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடன் நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் குறையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விருச்சிகம்

புதிய நபர்களால் மாற்றமான சூழல்கள் அமையும். உறவினர்கள் வழியில் சுபிட்சம் ஏற்படும். சொந்த ஊர் பயண வாய்ப்புகள் கைகூடும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். அரசு துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

தனுசு

தாய் வழி உறவுகளிடம் ஒற்றுமை ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு மாற்று வழிகளை யோசிப்பீர்கள். வீட்டின் தேவைகள் அறிந்து நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு குறித்த ஆலோசனை கிடைக்கும். கடன் முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். அரசு காரியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான பயணம் கைகூடும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

மகரம்

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

கும்பம்

குடும்ப உறுப்பினர்கள் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். இணைய துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகளில் இருந்த தாமதங்கள் குறையும். பொன் பொருள் மீதான ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மீனம்

எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் வழியில் எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். சேமிப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 258
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 18 ஆம் தேதி திங்கட்கிழமை 2.3.2026

இன்று மாலை 6.28 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று காலை 08.16 வரை ஆயில்யம். பின்னர் மகம்.

இன்று பிற்பகல் 12.46 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.

இன்று காலை 07.00 வரை கௌலவம். பின்னர் மாலை 06. 28 வரை வனிசை. பின்பு பத்தரை.

இன்று காலை 8.16 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=440&dpx=2&t=1772412237

நல்ல நேரம்:

காலை : 06.30.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 266
  • 263
·
Added a post

தஞ்சை மாவட்டத்தின் பெரிய கல்லணையின் பத்தொன்பதாவது மதகின் ஒரு புறம் மதில் சுவரால் ஏறக்குறைய மறைந்த நிலையில் காணப்படுவது ஓர் ஆஞ்சநேயரின் கற்சிற்பம்.

ஓர் ஆராய்ச்சியின் மூலம் இந்த இடத்திலுள்ள இச்சிறு கோயிலின் சரித்திரம் நமக்கு விளங்கும்.

சங்க காலச் சோழ மன்னர் கரிகால் பெருவளத்தான் காவேரி கொள்ளிடம் நீர் போக்கைச் சரி செய்து நீர் பாசனத்தைச் சீரமைக்க காவேரியின் மீது ஓர் அணை கட்டினார்.

இந்த அணை நவீன தொழில் நுட்பத்திற்குச் சவாலாக அமைந்துள்ளது.

இதன் கட்டுமானத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் இதை கிராண்ட் அனிக்கட் என்று பாராட்டினர்.

இக்கட்டுமானம் களிமண்ணில் புதைந்த மிகப் பெரிய பாறாங்கற்களால் ஆனது இதன் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி மற்றும் ஆழம் 15 லிருந்து 18 அடிவரை கொண்டது.

இது நதி நீர் வெளியேறும் பகுதியில் பாம்பு போல் வளைந்த நிலையில் கட்டப்பட்டது.

தற்போதுள்ள பெரிய கல்லணை 1806 இல் ஆங்கிலேய பொறியாளர்களால் நிர்மாணிக்கப்பட்டது.

பல வருடங்களாக நடந்த மிகப் பெரிய முயற்சியின் காரணமாக அடித்தளம் அமைத்து அணையின் பாதைகள் உயர்த்தப்பட்டு சாலைவசதி ஏற்படுத்தித் தந்தனர்.

இப்பணி முடிவுறும் தறுவாயில் ஏற்பட்ட சில விநோதமான நிகழ்வுகள் அங்கிருந்த பொறியாளர்களுக்கும் மற்றும் பெருமளவில் கூடியிருந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் வியப்பைத் தந்தன.

ஒரு நாள் காலையில் பணி ஆய்வுக்காக வந்த கீழ் நிலை அதிகாரி ஒருவர் அணையின் 19வது மதகு உடைந்திருந்ததைக் கண்டார்.

இந்த விபத்து கட்டுமானத்தில் பயன்படுத்திய பொருள்களின் தரக்குறைவு காரணமாக ஏற்பட்டது என யூகித்தனர்.

எனவே அதே கட்டுமானம் மீண்டும் ஒரு மாத காலத்தில் மிகுந்த கவனத்துடன் கட்டி முடிக்கப்பட்டது.

கட்டி முடிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே சோதனையாக அந்த வளைவான மதகுப் பகுதி மீண்டும் உடைந்து விழுந்து கல்லும் மண்ணுமாகக் காட்சியளித்தது.

இதனால் வாயடைத்து நின்ற பொறியாளர்களும் கட்டுமானப் பணியாளர்களும் மீண்டும் ஏற்பட்ட அழிவைக் குறித்து விளக்கம் எதுவும் அளிக்க முடியாமல் திணறினர்.

இரண்டாவது முறையும் உடைந்து விழுந்த நிகழ்வுக்குப் பிறகு அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்த கீழ்நிலை அதிகாரி முதன் முறையாக மதகு உடைந்து விழுந்த அன்று இரவு தனக்கு ஏற்பட்ட கனவு பற்றிய விபரத்தை வெளிப்படுத்தினார்.

அன்றிரவு என் கனவில் ஆஞ்சநேய ஸ்வாமி தோன்றி நான் நதியின் அடியில் மணற்படுகையில் உள்ளேன்.

என்னை வெளிக்கொணர்ந்து அங்கேயே எனக்குக் கோயில் அமைக்காவிடில் இடிந்து விழுவது தொடரும் இதை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

ஆங்கிலத் தலைமைப் பொறியாளர் இதை நம்பவில்லை. அன்றிரவே மிகவும் ஆச்சரியமான விதமாக அந்தத் தலைமைப் பொறியாளருக்குத் தொடர்ந்து பயமுறுத்தும் கனவுகளாகவே வந்தன.

அவரது கனவில் குரங்குகள் அவரை நெருங்கி நகங்களால் பிறாண்டி காது செவிடாகும் படிச் சத்தம் போட்டுத் துன்புறுத்தின.

இரவு முழுவதும் ஏற்பட்ட பயங்கரமான கனவுகளால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பொறியாளர் மறுநாள் காலையில் தன் நண்பர்கள் குழுவை அழைத்துத் தனது கனவுகளைப் பற்றி விளக்கினார்.

அந்த ஆங்கிலேய நண்பர்களும் இந்தக் கனவுகள் பற்றிய தம் அவ நம்பிக்கையைத் தெரிவித்ததோடு அவர் அந்தக் கீழ்நிலை அதிகாரி கூறிய நம்பமுடியாத கனவுகளை அடிமனத்தளவில் நம்பியதன் விளைவாகவே இது போன்று ஏற்பட்டுள்ளது என்றும் கூறினர்.

நண்பர்களின் வாக்கு அவருக்கு அப்போதைக்குத் தேவைப்பட்ட ஒரு சமாதானத்தைத் தந்தாலும் அந்த அமைதியும் அல்பாயுசாகவே அமைந்தது. அன்றிரவே ஆஞ்சநேயர் பொறியாளர் கனவில் தோன்றி எனக்குக் கோயில் எழுப்பாமல் நீ இந்த அணையைக் கட்டியுள்ளாய்.

நானே இந்த அணையைக் காப்பவன்.

அதனால் அந்தக் கட்டுமானத்தை இடித்துச் சுக்குநூறாக்கினேன்.

மீண்டும் நீ அணையைக் கட்டினாய் அதுவும் நான் இருக்குமிடத்திற்கு மேலாகவே அமைந்துள்ளது.

இதுவும் நிற்காது. நான் இருக்கும் இந்த இடத்தில் ஒரு வளைவை ஏற்படுத்தி என்னைக் காணும் இடத்தில் ஒரு கோவில் அமைத்தால் நீ வெற்றி பெறுவாய் என்றார்.

மறுநாள் பொறியாளர் அங்கிருந்த இடிபாடுகளை அகற்றி அதே இடத்தில் நதிப்படுக்கையைத் தோண்ட உத்தரவிட்டார்.

அங்கே அந்தப் பத்தொன்பதாவது மதகு அமைந்திருந்த இடத்தில் ஆஞ்சநேய ஸ்வாமியின் கற்சிற்பம் காணப்பட்டது.

அந்த ஆங்கிலேயப் பொறியாளர் தீர்மானமாக அங்கு ஒரு கோயிலைக் கட்ட உத்தரவிட்டார்.

பெரிய அளவில் கும்பாபிஷேகமும் நடந்தேறியது.

அணைக்கட்டும் கனவில் அவருக்குச் சொல்லப்பட்ட விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்தக் கோவில் இன்றும் சென்று தரிசிக்கும் வகையிலுள்ளது பாலத்திலிருந்து இரண்டு அடுக்குப் படிகளைக் கடந்து கீழிறங்கிச் சென்றால் அந்தக் கோயிலை அடையலாம்.

  • 331
·
Added article

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விஜய் தேவரகொண்டா குறித்தும் தெரிவித்திருந்தார். இந்தப் பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது.

ராஷ்மிகா மந்தனாவின் இந்த திருமண பதிவு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பதிவு (போஸ்ட்) சாதனையை முறியடித்துள்ளது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, விராட் கோலி வெளியிட்ட பதிவு 20 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை புரிந்தது.

தற்போது ராஷ்மிகாவின் திருமணப் பதிவு 25 மில்லியன் லைக்குகளை பெற்று பெரும் சாதனை புரிந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த கிஷோர் மோண்டல் வெளியிட்டு, வைரலான ரீல்ஸ் 51 மில்லியன் லைக்ஸ் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு ராஷ்மிகாவின் திருமண பதிவு லைக்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • 330
·
Added a news

 மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, நடைபெற்று வரும் போரில் கனடா இராணுவம் பங்கேற்காது என்று கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த மோதலில் கனடா இராணுவமாக ஈடுபடுவதற்கான திட்டம் எதுவும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

இந்த நடவடிக்கைகளுக்கான இராணுவ தயாரிப்பிலும் திட்டமிடலிலும் கனடா பங்கேற்கவில்லை எனவும், எதிர்காலத்திலும் இராணுவ ரீதியாக இணைவது எதிர்பார்க்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை கனடா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

  • 330
·
Added a news

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதீத பாதுகாப்புமிக்க 'பசுமை வலயத்திற்குள்' (Green Zone) நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம் மற்றும் முக்கிய அரச அலுவலகங்கள் அமைந்துள்ள பாக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள், அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது அந்தப் பகுதியில் மேலதிக பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்ட முக்கிய இடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  • 331
  • 334
  • 333
  • 334
·
Added a post

ஒரு ஊரில் ஒரு ஆள் இருந்தான். அவன் பேரில் ஒரு குற்றச்சாட்டு. அரண்மனையிலிருந்து, உன்னை விசாரிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, அரண்மனை விசாரணை மண்டபத்துக்கு வந்து போ என்றது, அரசனின் ஆணை.

நம்ம பேர்ல எந்த தப்பும் இல்லையே. நாம் எந்த தவறும் செய்யலையே.... என்று நினைத்தான், அந்த ஆள். ஆனாலும் அரசாங்க உத்தரவு அதை அலட்சியம் செய்ய முடியுமா? போய்த்தான் ஆக வேண்டும். தனியாக போக அவனுக்கு தயக்கமாக இருந்தது.

துணைக்கு யாராவது வந்து, எனக்காக கொஞ்சம் வாதாடினால் தேவலை. யாரை அழைத்துக் கொண்டு போவது, என்று யோசித்தான். அவனுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரை அழைத்து செல்லலாம் என்று முடிவு செய்தான்.

அந்த மூவரில் மிகவும் நெருக்கமான ஒரு நண்பரின் வீட்டுக்கு போய் கதவை தட்டினான். திறந்த நண்பனிடம் விஷயத்தை சொல்லி அரண்மனைக்கு அழைத்தான். என்னால் வரமுடியாது என்று சொல்லிவிட்டான், அவன். இவனுக்கு ஏமாற்றமாக போய் விட்டது. ரொம்பவும் நெருக்கமாக இருந்த இவனே இப்படி சொல்லிவிட்டானே என்று வருத்தப்பட்டான்.

சரி, பரவாயில்லை. இன்னொரு நன்பனிடம் போவோம்... என்று முடிவு செய்து இரண்டாவது நண்பனை தேடி சென்றான். இரண்டாம் நண்பனோ விஷயம் அனைத்தையும் கேட்டுவிட்டு அரண்மனை வாசல் வரைதான் நான் வருவேன். அங்கேயே நின்று கொள்வேன் அதற்கு மேல் வரமாட்டேன் என்று கூறினான். அப்படி அதுவரைக்கும் வந்து என்ன பிரயோஜனம்? கடைசி வரைக்கும் நம்ம கூட வந்து, நமக்காக வாதாடணுமே அதுதானே முக்கியம்... என்று நினைத்தான்.

அடுத்தபடியாக மூன்றாவது நண்பனிடம் போனான். அவன் அதிக நெருக்கம் இல்லை. இருந்தாலும் போனான். விபரத்தை சொன்னான். அவன் உடனே சட்டையை போட்டுக் கொண்டு "வா போகலாம்" என்று புறப்பட்டு விட்டான். விசாரணையின் போது, தன் நண்பனுக்காக வாதாடி, பரிந்து பேசி, விடுதலை வாங்கிக் கொடுத்தான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று நண்பர்கள் உண்டு. முதல் நபருக்கு பெயர், பணம். இரண்டாம் நபருக்கு பெயர், சொந்தம். மூன்றாம் நபர் அவன் செய்த "நற்செயல்கள்".

இறுதி பயணத்தின் போது, பணம் கூட வராது. சொந்தம், கல்லறை வரைக்கும் வரும். நற்செயல்கள் தான் கூடவே வரும். அதாவது, நமக்கு பின்னாலும் நம்மைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கும்.

மனிதன் நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.

  • 338

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான்

வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான

முதல் அறிகுறி....

  • 427
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலம் பிறக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் விலகும். குழந்தைகள் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கடன் தொடர்பான நெருக்கடிகள் சற்று குறையும். சிக்கல்கள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

ரிஷபம்

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சொத்து சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். கைப்பேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மிதுனம்

முயற்சிகளில் இருந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த புதிய பாதைகள் புலப்படும். வியாபார பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கடகம்

தொழில் நிமித்தமான திட்டங்கள் கைகூடும். குழந்தைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகப் பணிகளில் இருந்த பொறுப்புக்கள் குறையும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

சிம்மம்

பெரிய முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். பணிகளில் இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

சிகை அலங்கார பணிகளில் லாபம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். தேவையற்ற வாதங்களினால் விரயங்கள் நேரிடலாம். மனதில் அந்நிய தேச பயணம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கம் இன்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றம் உண்டாகும். துணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

துலாம்

செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனை ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்காலம் குறித்த கண்ணோட்டம் பிறக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணம் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

விருச்சிகம்

அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படும். கல்வியில் இருந்த மந்தத்தன்மை விலகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். விவசாய செயல்களில் பொறுமை வேண்டும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

தனுசு

வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். வரவுகளில் தாமதம் உண்டாகும். அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை அளிக்கும். வெளியூர் பயணத்தால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பயனற்ற பேச்சுகளை தவிர்க்கவும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் பிறக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். புதிய வேலை நிமித்தமான எண்ணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். கால்நடை பணிகளில் லாபங்கள் ஏற்படும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

கும்பம்

போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கை துணை வழியில் ஆதாயம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மறைமுகமாக இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

மீனம்

சகோதரர்கள் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மனதில் இருக்கும் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபார தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

  • 449
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 1.3.2026

இன்று இரவு 07.03 வரை திரியோதசி பின்னர் சதுர்த்தசி.

இன்று காலை 08.53 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.

இன்று மாலை 02.54 வரை சோபனம். பின்னர் அதிகண்டம்.

இன்று காலை 08.18 வரை கௌலவம். பின்னர் இரவு 07.33 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=439&dpx=2&t=1772338652

நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 வரை

  • 452

Good Morning

  • 444
  • 558

Good Morning

  • 558
·
Added a post

ஒரு வயதான பெண் பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள். அடுத்த நிறுத்தத்தில், ஒரு வலிமையான, எரிச்சலான இளம் பெண் மேலே ஏறி, வயதான பெண்ணின் அருகில் அமர்ந்து, அவளது ஏராளமான பைகளால் தாக்கினாள்.

வயதான பெண் அமைதியாக இருப்பதைக் கண்டதும், அந்தப் பெண் தன் பைகளால் அடித்தபோது ஏன் புகார் கொடுக்கவில்லை என்று கேட்டார்.

வயதான பெண் ஒரு புன்னகையுடன் பதிலளித்தார்: "உங்களுக்கு அடுத்ததாக எனது பயணம் மிகவும் குறுகியதாக இருப்பதால், முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவோ ​​அல்லது அற்பமான ஒன்றைப் பற்றி விவாதிக்கவோ தேவையில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போகிறேன்."

இந்த பதில் தங்க எழுத்துக்களில் எழுதப்பட வேண்டியது: "இவ்வளவு அற்பமான ஒன்றை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் எங்கள் ஒன்றாக பயணம் மிகவும் குறுகியதாகும்."

இந்த உலகில் நம் நேரம் மிகவும் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். பயனற்ற வாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவற்றால் அதை இருட்டடிப்பது நேரத்தையும் சக்தியையும் கேலிக்குரியதாகும்.

யாராவது உங்கள் இதயத்தை உடைத்தார்களா? அமைதியாய் இரு. பயணம் மிகக் குறைவு.

யாராவது உங்களை காட்டிக் கொடுத்தார்களா, மிரட்டினார்கள், ஏமாற்றினார்கள் அல்லது அவமானப்படுத்தினார்களா? ஓய்வெடுங்கள். மன அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம். பயணம் மிகக் குறைவு.

யாராவது உங்களை காரணமின்றி அவமதித்தீர்களா? அதை அசைக்கவும். அதை புறக்கணிக்கவும். பயணம் மிகக் குறைவு.

உங்களுக்குப் பிடிக்காத ஒரு பக்கத்து வீட்டுக்காரர் கருத்து தெரிவித்தாரா? ஆழ்ந்த மூச்சு விடுங்கள். அவரை / அவளை புறக்கணிக்கவும். மன்னித்து மறந்து விடுங்கள். பயணம் மிகக் குறைவு.

யாராவது எங்களை எந்த பிரச்சனையில் கொண்டு வந்தாலும், எங்கள் பயணம் மிகவும் குறுகியதாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எங்கள் பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. அதன் நிறுத்தத்தில் அது எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஒன்றாக எங்கள் பயணம் குறுகியது.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பாராட்டுவோம்.

மரியாதைக்குரியவர்களாகவும், கனிவானவர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்போம். பதிலுக்கு, நன்றியுணர்வும் மகிழ்ச்சியும் நிறைந்திருப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் பயணம் மிகவும் குறுகியதாகும்.

உங்கள் புன்னகையை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எங்கள் பயணம் மிகவும் குறுகியது ..

  • 545