·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1548
  • More

என்ன ஒரு அழகான நடை

நேர்த்தியான நடைபயிற்சி

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

இவரது பெயர் டெஸ்ஸி தாமஸ்.

இவர் 1963-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆலப்புழாவில் பிறந்தார். அவரது தந்தை ஒரு சிறு தொழிலதிபர். இவர் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, ​​பக்கவாதத்தால் அவரது தந்தை படுக்கையில் வீழ்ந்தார். அந்தச் சூழலிலும் தனது குடும்பம் ஒற்றுமையாக இருந்ததை அவர் பார்த்தார்.

தும்பா பூமத்திய ரேகை ராக்கெட் ஏவுதளத்திற்கு அருகில் வளர்ந்ததால், அவர் ஏவுகணைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விரும்பினார், அதற்காக யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாரானார். அவரது டி.ஆர்.டி.ஓ நேர்காணல் முதலில் வெற்றிகரமாக முடிந்தது.

அவர் 1988-ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) விஞ்ஞானி 'பி' ஆக சேர்ந்தார். அக்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சியில் இருந்த மிகச் சில பெண்களில் அவரும் ஒருவர்.

அவரது வழிகாட்டி ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ஆவார்.

அடுத்த இரண்டு தசாப்தங்களை அவர் அக்னி ஏவுகணைத் திட்டத்தில் கழித்தார். அங்கு அவர் வழிகாட்டு அமைப்புகள், வழிசெலுத்தல் திட்டங்கள் மற்றும் பாதை உருவகப்படுத்துதல்களில் பணியாற்றினார். அக்னியின் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படும் வழிகாட்டுத் திட்டத்தை அவர் வடிவமைத்தார்.

2009-ஆம் ஆண்டு, அவர் அக்னி-IV திட்டத்தின் இயக்குநரானார். இந்தியாவில் ஒரு ஏவுகணைத் திட்டத்தை வழிநடத்திய முதல் பெண்மணி இவரே.

அக்னி-IV சுமார் 4000 கிலோமீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டது. அதன் 2011 ஆம் ஆண்டு சோதனை முழு வெற்றி பெற்றது.

பின்னர் அவர், 5000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும் திறன் கொண்ட அக்னி-V திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டு சோதனை, இத்தகைய திறன் கொண்ட ஒரு சில நாடுகளின் குழுவில் இந்தியாவையும் சேர்த்தது.

ஊடகங்கள் அவரை இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி என்று அழைத்தன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) அவரை அக்னிபுத்ரி என்று அழைத்தது.

அவரது மகனின் பெயர் தேஜஸ், இது HAL தேஜஸின் நினைவாக சூட்டப்பட்டது.

ஒருமுறை, உடல்நிலை சரியில்லாத தன் மகனை வீட்டில் குடும்பத்துடன் விட்டுவிட்டு, ஒரு ஏவுகணை ஏவுதலை மேற்பார்வையிடச் சென்றார். தனக்கு வேறு வழியில்லை என்றும், ஏவுதலைத் தள்ளிப்போட முடியாது என்றும் அவர் கூறினார்.

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் ஏவுகணை மனிதராக நினைவுகூரப்படுகிறார்.

டெஸ்ஸி தாமஸ் இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி ஆவார்.

இன்றும் பெரும்பாலான மக்களுக்கு அவரது பெயர் தெரியாது.

  • 10
·
Added a post

சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர்.

சுந்தரி மாமிக்கு வயது 51.

அவர்களின் ஒரே மகன் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான்.

லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான்.

சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவன் பரத்வாஜ். குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது தெரிந்து, தான் நன்றாக படித்தால்தான் குடும்பம் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து, எப்போதும் பாடப் புத்தகமும் கையுமாக அலைவான். வகுப்பில் எப்போதும், அவன்தான் முதல் மாணவன்.

பிளஸ் 2-வில் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண்ணும், மாவட்ட அளவில் மூன்றாவது இடத்திலும் வந்தான்.

இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து விட்டாலும், அந்த நான்கு ஆண்டுகள் படிப்பு முடிவதற்குள், சுந்தரம் குருக்கள் மிகவும் திண்டாடித்தான் போய்விட்டார்.

பேங்க் லோன் கிடைத்திருந்தாலும், கல்லூரி கட்டணம் போக மீதி செலவுகளான புத்தகம், உணவு, விடுதி கட்டணம் என மற்றவற்றுக்கெல்லாம் ...

பல இடங்களில் கடன் வாங்கியும், இருந்த ஒரே ஒரு ஓட்டு வீட்டையும் விற்றும் சமாளித்தார்.

எப்படியோ ஒரு வழியாக நல்ல மதிப்பெண்ணுடன் பரத்வாஜ் இன்ஜினியரிங் முடித்தான்.

அதற்குப் பின், சென்னையில் உள்ள, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், "அப்ரென்டிஸ்' ஆகச் சேர்ந்தான்.

இரண்டு வருட பயிற்சிக்குப்பின், பணி நிரந்தரம் செய்யப்பட்டு, நிறுவனத்தின் டெக்ஸாஸ் கிளைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டான்.

படிக்கும் காலத்தில், பரத்வாஜுக்கு பெரும்பாலும் ரசம் சாதம், தயிர்சாதம் தான். பல நேரங்களில குருக்களும், அவர் மனைவியும், தாங்கள் சாப்பிடாமல் கூட இருந்து விடுவர் ஆனால், மகனுக்கு எப்படியாவது, எதையாவது மூன்று வேளையும் சாப்பிடக் கொடுத்து விடுவர்.

கண்காணாத இடத்திற்கு போய், மகன் சாப்பாட்டிற்கு கஷ்டப்படக் கூடாது ...

சுந்தரம் குருக்களுக்கும், சுந்தரி மாமிக்கும் ஒரே எண்ணம்தான் ...

ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று.

மருமகள் பவித்ரா ஏழை குடும்பத்தை சேர்ந்தவள்.

அவள் அப்பா ஒரு ஓட்டலில் சமையல்காரர், பிளஸ் 2 முடித்து இருந்தாள் ...

வரதட்சணை, நகை, சீர் எதுவும் கேட்காமல், இவர்களே திருமண செலவுகளை செய்து, திருமணத்தை முடித்தனர்.

திருமணமான ஒரே வாரத்தில், பரத்வாஜ், மனைவி பவித்ராவுடன் டெக்ஸாஸ் சென்று விட்டான்.

போன புதிதில், அவ்வப்போது போன் செய்து பேசிக் கொண்டிருந்த மகனும், மருமகளும் ...

அதன் பின், மாதம் ஒரு முறை ... இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்று பேசலாயினர்.

திருமணத்திற்குப் பின் டெக்ஸாஸ் சென்ற பரத்வாஜ் ஒரு முறை கூட பணம் அனுப்பவில்லை.

அதற்குப் பின், பரத்வாஜிடமிருந்து பணம் பற்றி எந்தப் பேச்சும் கூட வந்தது கிடையாது.

சுந்தரம் குருக்களுக்கும், சுந்தரி மாமிக்கும், மகன் பணம் அனுப்பவில்லையே என்ற கவலையெல்லாம் இல்லை. அவன் நன்றாக இருந்தால், அதுவே போதும்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மகன் இதோ இப்போதுதான் சொந்த ஊர் வருவதாக போன் செய்திருந்தான்.

அதற்குதான் சுந்தரி மாமி தடபுடலாக பட்சணங்கள் எல்லாம் செய்து அமர்க்களப்படுத்தி கொண்டிருக்கிறாள்.

சுந்தரி மாமியிடம் மகன் போனில் பேசும் போதெல்லாம், "அம்மா இங்க சொர்க்கம் மாதிரி இருக்கும்மா.

பெரிய வீடு, தோட்டம் எல்லாம் இருக்கு.

வீடு பெருக்க, பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க எல்லாவற்றிருக்கும் மிஷின் இருக்கு.

நீங்க ரெண்டு பேரும் இங்கேயே வந்து, எங்க கூடவே தங்கிடுங்கம்மா...

அங்கே என்ன இருக்கு?' என்று அடிக்கடி கூப்பிடுவான்.

"அப்பா கோவிலை விட்டுட்டு வருவார்ன்னு தோணலைப்பா, நீ இங்கு வரும்போது, அது பற்றி பார்க்கலாம்...' என்று கூறி வந்தாள் சுந்தரி மாமி.

மகன் சொல்லிச் சொல்லியே சுந்தரி மாமிக்கு, அந்த ஆசை அடி மனதில் தங்கி விட்டது.

எப்போதும் சுந்தரம் குருக்களிடம் வாய் ஓயாமல் கூறத் தொடங்கி விட்டாள் ...

ஒரு மாதமாவது டெக்ஸாஸ் போய் மகனுடன் அக்கடாவென்று இருந்து விட்டு வர வேண்டுமென்று.

இப்போது மகன் வரும் தகவல் கிடைத்ததிலிருந்து அவளுக்கு கை, கால் ஓடவில்லை. எப்போது மகன் வந்து, தங்களை அவர்களுடன் கூட்டிப் போவான் என்றே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

பரத்வாஜ் வரும் அன்று, மீனம்பாக்கம் விமானநிலையம் சென்று, அவர்களை கூட்டி வர வேண்டும் என்றுதான் சுந்தரி மாமிக்கு ஆசை.

ஆனால் பரத்வாஜ், " அம்மா நீங்க சிரமப்பட வேண்டாம். கஸ்டம்ஸ் கிளியரன்ஸ், மற்ற பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிய நேரமாகும். அதனாலே, நாங்களே வந்துடறோம்..." என்று கூறி விட்டதால், வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்து கொண்டிருந்தாள்.

காலையிலிருந்து சாப்பிடாமல் இருவரும் காத்திருக்க, ஒருவாறு மாலை மூன்று மணிக்கு வந்து சேர்ந்தனர் பரத்வாஜும், பவித்ராவும்.

ரெடியாக வைத்திருந்த ஆரத்தியை சுற்றி, வீட்டுக்குள் அழைத்தாள் சுந்தரி மாமி ...

சுந்தரம் குருக்கள், ""காலையில் இருந்து அம்மா சாப்பிடாம உங்களுக்காக தான் காத்திருக்காள். வாப்பா, ஒரு வாய் சாப்பிடலாம்.'' "இல்லைப்பா, நாங்க பவித்ரா வீட்டுலியே சாப்பிட்டுட்டோம். அம்மா, உன் கையாலே, ஒரு வாய் காபி குடும்மா. அது போதும்.''

அப்போதுதான், அவர்களுக்கு உறைத்தது, அவர்கள் இருவர் கையிலும் லக்கேஜ் எதுவும் இல்லாதது. மகனையும், மருமகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த ஆனந்தத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டனர். பெத்த மனமல்லவா !

பவித்ரா தன் கையில் வைத்திருந்த துணி பையை மாமியாரிடம் கொடுத்தாள். அதில் சில சாக்லேட் வகைகளும், ஒரு புடவை ஜாக்கெட், வேட்டி துண்டும் இருந்தது.

சுந்தரி மாமிக்கு பசியில் மயக்கமே வரும் போலிருந்தது.

பார்த்து பார்த்து சமைத்து வைத்திருந்த அத்தனை உணவு வகைகளும் சீண்டுவாரற்று, அங்கே கிடந்தது.

காபி சாப்பிட்ட சிறிது நேரத்தில், ""சரிப்பா நாங்க கிளம்பறோம். அங்கே பவித்ரா வீட்டுல தங்கிக்கிறோம். நான் அடிக்கடி வந்து பார்த்துக்கறேன். ஒரு மாசம் லீவு இருக்கு இல்ல,'' கூறியவாறே கிளம்பி விட்டான் பரத்வாஜ்.

மறக்காமல், மாமியார் செய்து வைத்திருந்த பட்சணங்களை ஒன்று விடாமல் உரிமையுடன், "பேக்" செய்து கொண்டு கூடவே கிளம்பி விட்டாள் பவித்ரா. சாமர்த்தியகாரியாக மாறிவிட்டவள் அல்லவா !

இவர்கள் இருவரும், அதை ருசி கூட பார்த்திருக்கவில்லை.

இருவருக்கும் மிகவும் வருத்தமாக இருந்தாலும், சுந்தரம் குருக்கள் வெளியில் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை.

சுந்தரி மாமி, அவர்கள் கிளம்பியவுடன் மனம் தாளாமல் புலம்பி தள்ளி விட்டாள்.

"ஒரே பையன்னு ஆசையா வளர்த்தோம். இப்ப அவன் யாரோ மாதிரி வந்து அரைமணி நேரத்துல ஓடறான். எனக்கு மனசு சங்கடமா இருக்குங்க.'' சுந்தரம் குருக்கள்தான் அவளை பலவாறு தேற்றி சாப்பிட வைத்தார்.

இரண்டு நாட்கள் கழித்து, மறுபடியும் வந்த பரத்வாஜ், அப்பாவிடம் மட்டும் பேசினான்.

"அப்பா, பவித்ராவுக்கு, அவ அம்மாவை டெக்ஸாசுக்கு கூட்டிக்கிட்டு போய், ஒரு மாசம், கூட தங்க வைச்சுக்க ஆசைப்பா.

அவ அம்மாவும் பாவம், சின்ன வயசிலிருந்து குடும்பம், குழந்தைகள்னு உழைச்சு ஓடாயிட்டா.

அதனால, அவங்களை நாங்க இப்ப கூட்டிக்கிட்டு போகப் போறோம்.

நீங்க எல்லாத்தையும் சரியா புரிஞ்சிப்பீங்க. அதனாலதான், உங்ககிட்ட சொல்றேன்.

அம்மாவுக்கு எப்படியாவது சொல்லி புரிய வைக்கறது உங்க பொறுப்புப்பா.

"அப்புறம்... பவித்ராவுக்கு தனியா இருக்கிறதுதான் பிடிச்சிருக்குப்பா.

அம்மாவுக்கும், பவித்ராவுக்கும் ஒத்துப் போகாதுப்பா.

அதனால, நீங்க போன் கூட செய்யாதீங்க. நானே, அப்பப்ப சமயம் கிடைக்கும் போது, உங்களுக்கு போன் செய்றேன்.''

அத்தோடு டெக்ஸாசுக்கு கிளம்பும் அன்றுதான் இருவரும் வந்து ஐந்து நிமிடம் இருந்து, விடை பெற்றுக் கிளம்பினர்.

அன்று இரவு, "என்னங்க நான் உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு வந்ததிலிருந்து, எதுக்கும் ஆசைப்பட்டதில்லை.

ஆனால், நம்ம பையன் வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம், ஒரு மாசமாவது அங்கே போய் இருக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்.

அது நிராசையாயிடுச்சு சரி, வாங்க தூங்கலாம். நீங்க நாலு மணிக்கு எழுந்து குளிச்சு கோவிலுக்கு போகணும்.''

ஆறு மாதங்கள் உருண்டோடிய பின், டெக்ஸாசில் ஒரு நாள்...

என்னங்க, நான் கர்ப்பமாக உள்ளேன் என்று டாக்டர் சொல்லி விட்டார் ...

பேசாம உங்க அம்மாவை வரவழைச்சா என்னங்க ? பிரசவம் முடியற வரை, இங்கேயே இருந்து, எனக்கு வேண்டியதை சமைச்சு போடட்டுமே.'' என்று பவித்ரா தன் கணவன் பரத்வாஜிடம் கூறுகிறாள்.

"நீ தானே நமக்கு பிரைவசி தேவை, அவங்க... இங்கே வந்தா சரிப்படாதுன்னு சொன்னே. இப்பக் கூப்பிட்டா எப்படி வருவாங்க?'' என்று பரத்வாஜ் கூறுகிறான்.

சரி, எனக்கு மனசு சரியில்லை ...

இங்கு புதுசா கட்டப்பட்ட அம்மன் கோவிலுக்கு போன வாரம் கும்பாபிஷேகம் நடந்தது இல்ல ...

அங்கு சென்று வரலாம்

இவர்கள் போன போது அந்த கோவிலில் சற்றுக் கூட்டமாக இருந்தது. அப்போதுதான் அம்மனுக்கு அலங்காரம் முடித்து, திரை விலகி தீபாராதனை காட்டப்பட்டது.

கண்களை மூடி கை குவித்து இறைவனை வணங்கி, கண்களை திறந்தால், தீபாராதனை தட்டுடன் அருகில் வந்த குருக்களைப் பார்த்து அதிர்ந்தான் பரத்வாஜ்.

அங்கே நிற்பது யார் ? அப்பாவா ?

கண்களை கசக்கி விட்டுக் கொண்டு மீண்டும் பார்த்தான்.

"அப்பா..." அவனை அறியாமல் வாய் முணுமுணுத்தது.

"கொஞ்சம் இருப்பா. இதோ வரேன்.''

அங்கிருந்த வேறொரு குருக்களிடம் ஏதோ சொல்லி விட்டு வந்த அப்பா, "அதோ, அது தான் நம்ம குவார்ட்டர்ஸ் வாங்க, போகலாம்,'' சுந்தரம் குருக்கள் முன்னே வந்து நடக்க, பேச்சற்று பின் தொடர்ந்தனர் பரத்வாஜும், பவித்ராவும்.

போனவுடன் வீட்டை பார்த்து அசந்து போய் விட்டான்.

2 பெட் ரூம் ஹால் பிளாட்.

வீட்டில் இவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற சுந்தரி மாமி, "சென்னையில் அப்பா வேலை பார்த்த கோவில் தர்மகர்த்தாவின் பொண்ணும், மாப்பிள்ளையும் இங்கேதான் இருக்காங்க.

அவர்கள் கட்டிய கோவிலுக்கு, பூஜை விதிமுறைகள் தெரிஞ்ச தலைமை குருக்கள் வேணும்ன்னு, அப்பா கிட்ட கேட்டுகிட்டாங்க.

தர்மகர்த்தாவும், நீங்க டெக்ஸாசுக்கு கிளம்புங்க.

நான், இங்கே வேறு ஆளை பார்த்துக்கறேன்"னு சொல்லிட்டார்.

"அப்பாவும் சென்னையில நமக்கு யாரிருக்கா ... தெய்வ கைங்கரியத்தை எங்கேயிருந்து செய்தா என்னன்னு புறப்பட சொல்லிட்டார்.

இங்கே அப்பாவுக்கு மாத சம்பளம், ஐந்து லட்சம் ரூபாய்,'' கட கடவென கூறி முடித்தாள் சுந்தரி மாமி.

"அம்மா, இப்ப உங்க மருமகள் தாய்மை அடைஞ்சிருக்கா ... அவளுக்கு வாய்க்கு ருசியா சாப்பிடணும்ன்னு தோணுதாம்; அவ அம்மா, இப்ப வர முடியாத சூழ்நிலை. நீங்க ரெண்டு பேரும் எங்க கூட பிரசவம் வரை இருந்தா நல்லாயிருக்கும்மா" பரத்வாஜ் கூறுகிறான்.

"அது சாத்தியப்படாதுப்பா, அப்பா பூஜை முடிச்ச மீதி நேரத்துல, இங்கே இருக்கிற வேத பாடசாலையில் வேதம் சொல்லிக் கொடுக்கிறார். அதுக்கு இங்கே இருக்கிறதுதான் சவுகரியம்.''

"அம்மா ... அப்பா வரமுடியலைன்னா பரவாயில்லை. நீ மட்டுமாவது வாம்மா.''

இல்லைப்பா அப்பாவுக்கும் வயசாகிறது. அவரை பார்த்துக்கறதுதான் என் முதல் கடமை.

அது மட்டுமில்லாம, தினமும் கோவில் பிரசாதங்களை செய்கிற வேலையும் எனக்கு கொடுத்திருக்காங்க ...

வேதம் கத்துக்கறவங்களுக்கும், கடவுளை தரிசிக்க வர்றவங்களுக்கும், மதிய உணவு செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கு.

இதுக்காக எனக்கு இரண்டு லட்சம் ரூபாய கிடைக்கிறது.

பரத்வாஜ், இவ்வளவு நாள் உனக்காகவே நாங்க ரெண்டு பேரும் வாழ்ந்தோம் ...

பசியும் பட்டினியுமா இருந்து உன்னை ஆளாக்கி, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தோம் ...

இது உனக்கு நன்கு தெரியும். ஆனால், கல்யாணம் ஆனவுடன் உனக்கு நாங்க தேவையற்று போயிட்டோம் ...

கலங்கி நின்ன எங்களுக்கு தொப்புள் கொடி உறவு போனா என்ன, வேற புதிய உறவுகளை ஏற்படுத்தி தர்ரேன்னு, கடவுள் புதிய பந்தங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

இனிமேல், அந்த பந்தங்களை எங்களால விட முடியாது. மேலும் பூஜை பண்டிகை என்று நாங்கள் இருவரும் அடிக்கடி நியூஜெர்சி, கலிஃபோர்னியா செல்வோம்.

அங்கு உள்ளவர்கள் இவரை அழைப்பார்கள்.

இதில் எங்களுக்கு நல்ல வருமானம்.

எங்கள் சேமிப்பு போக மீதம் உள்ளதை சென்னையில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு அனுப்புகிறோம். பணத்திற்கு இப்போது எங்களுக்கு பஞ்சம் இல்லை. சென்னையில் வளசரவாக்கத்தில் ஒரு வீடு வாங்கி உள்ளோம்.

ஒரு காலத்தில் உன் அன்புக்காக ஏங்கி கொண்டு இருந்தோம்.

மூன்று வேளை உனக்கு சாப்பாடு போட்டு விட்டு நாங்கள் பட்டினி கிடப்போம். ஆனால் இப்போது உன்னை பற்றி நினைக்க எங்களுக்கு நேரம் இல்லை.

உனக்கு உதவ முடியாது.

இப்ப மதிய உணவு நேரம் நெருங்கிடுச்சு ...

நான் போய் பரிமாறணும் என்று கூறி அரக்க பறக்க கிளம்பினாள் சுந்தரி மாமி ...

போகும்போது பவித்ராவிடம், "எங்களுக்கு பல பணக்கார பெண்களின் ஜாதகம் வந்தது. ஆனால் நீ எழை குடும்பத்தில் பிறந்தவள் , எங்களை எல்லாம் கை விட மாட்டாய் என்று நினைத்து ஏமாந்து போய் விட்டோம். என் மகனை இப்படி மாற்றி விட்டாய். அவனை உனக்கு அடிமையாக்கி விட்டாய். நாளைக்கு உனக்கும் ஒரு மகன் பிறப்பான், பிற்காலத்தில் உங்களையும் இப்படி நடத்துவான்.

கடவுள் உனக்கு தக்க தண்டனை கொடுப்பார்" ... மாமியாரின் அனல் பறக்கும் பேச்சு அவளை ஈட்டியால் குத்துவது போன்று இருந்தது.

மகனிடம் "போகும் போது அப்பாவிடம் எதுவும் பேசாதே, அவர் எரிமலை போல் வெடித்து விடுவார். எதுவும் பேசாமல் கிளம்பு ...

அப்புறம் நீ அடிக்கடி இங்கு வருவது அவருக்கு பிடிக்கவில்லை.

என்னை பார்ப்பது என்றால் மதிய உணவு வேளையில் கோவிலில் பார்.

சாப்பாடு போட்டு அனுப்புகிறேன்" ...

மாமி பொரிந்து தள்ளி விட்டு கிளம்பி விட்டாள்.

மாமியிடம் குருக்கள் ...

"ராம்ஜியை 5 மணிக்கு கார் எடுத்து கொண்டு வர சொல் ... புரொஃபசர் பாலுவை ஒரு பூஜை விஷயமாக பார்க்க வேண்டும் " ...

பெற்றவர்களின் அன்பை உணர முடியாமல், மனைவியின் சுயநல போக்கிற்கு அடிமையாகி, அவர்களை உதாசீனப்படுத்தி இப்போது, அதே அன்பிற்கு ஏங்கிய பரத்வாஜ், சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அப்பாவின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கக் கூசி, அங்கிருந்து தன் மனைவியுடன், தளர்ந்த நடையுடன் வெளியேறினான் ...

பரத்வாஜுக்கும், பவித்ராவுக்கும் தலை சுற்றுகிறது.

பவித்ராவுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது.

அம்மாவின் பேச்சு அவர்கள் இருவருக்கும் சாட்டையால் அடிப்பது போல் இருந்தது ...

வைராக்கியம் உள்ள அப்பா அவர்களை பார்க்காமல், கண்டு கொள்ளாமல் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார் ... !

  • 20
  • 20
  • 21
·
Added a news

திங்கள் முதல் வெள்ளி வரை 8 மணி நேர வேலை சனி மற்றும் ஞாயிறு 12 மணி நேர விடுமுறை, பெட்ரோல் டீசல் சேமிப்பு..

பிரதமர், உள்துறை அமைச்சர் தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு கிடைக்காது,

உயிர் பயம் இருப்பவர்கள் சொந்த ஊதியத்தில் மெய்க்காவலரை வைத்து கொள்ளலாம்..

20 வயது வரை எந்த மாணவனும் எந்த அரசியல் கட்சியை ஆதரிக்கவோ ஊக்குவிக்கவோ கூடாது மாணவன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்..

கற்பழித்தவனுக்கு கோர்ட்டுக்கு போக முடியாது விசாரணை கிடையாது நேரடியாக தூக்கில் போடப்படுவான்..

லஞ்சம் வாங்கும் போலீஸ் பிடிபட்டால் ஆயுள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்...

அரசு ஊழியர்கள் ஆன்லைன் மூலம் 12 மணி நேரத்தில் பணிகளை முடித்து தர வேண்டும்..

அனைத்து கோவில்களிலும் விஐபி கலாச்சாரம் ஒழிக்கபடும் விதிப்படி ஏழையோ பணக்காரனோ எல்லோருக்கும் ஒரே தரிசனம் தான்..

அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 20% ஏழைகளுக்கு படுக்கைகள் கிடைக்கும்..

எந்த தலைவர்கள் கூட்டத்திற்கும் சாலை மூடப்படாது

அரசு அலுவலகத்தில் தலைவர் புகைப்படம் வைக்கப் படாது நேபாள கொடி மட்டுமே வைக்கப்படும்.

நேபாள பிரதமர் பாலே அறிவிப்பு.

  • 23
·
Added a post

ஒரு இளம் பெண் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு துணையாக அவளுடன் நாய் ஒன்றை வளர்த்து வந்தாள். அந்த நாய் எப்பொழுதும் அவளுடைய படுக்கைக்கு அடியிலேயே படுத்து கொள்ளும்.

அந்த பெண்ணும் அங்கே நாய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய கீழே கையை நீட்டினால், அந்த நாய் அவள் கையை நக்கிவிடும். அதை வைத்து நாய் அங்கு தான் இருக்கிறது என்பதை உறுதி செய்தி கொள்வாள்.

ஒரு நாள் இரவு டீ.வியில் ஒரு செய்தி வருகிறது. மிகவும் ஆபத்தான சீரியல் கில்லர் ஒருவன் தப்பித்து விட்டான். அதனால் பொது மக்கள் அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும் என்பது தான். அதை பார்த்ததும் அந்த பெண் உடனேயே போய் கதவு, ஜன்னல் என்று எல்லாவற்றையும் நன்றாக பூட்டி விட்டு வந்து படுக்கிறாள்.

இப்போது பழக்க தோஷத்தில் நாய் இருக்கிறதா இல்லையா என்று உறுதி செய்ய கையை கீழே நீட்டுகிறார். நாயும் அவள் கையை நக்குகிறது. நிம்மதியாக படுத்து கொள்கிறாள்.

ஆனால் எங்கோ தண்ணீர் சொட்டும் சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கிறது. இவளும் எழுந்து போய் குழாயில் இருந்து வருகிறதா என்று பார்த்தால் இல்லை. சரி என்று படுக்க செல்கிறார்.

மறுபடியும் கையை படுக்கைக்கு கீழே காட்டுகிறாள். நாய் அவள் கையை நக்குகிறது.

சிறிது நேரம் தூங்க முயற்சி செய்து பார்க்கிறாள். ஆனால் அந்த தண்ணீர் சொட்டும் சத்தம் அவளை தொந்தரவு செய்கிறது. சரி அது எங்கேயிருந்து தான் வருகிறது என்று பார்ப்போமே என்று தேடுகிறாள். அவளுடைய பாத்ரூமில் இருந்து தான் அந்த சத்தம் கேட்கிறது.

கதவை திறந்து பார்த்தவளுக்கு பயங்கர அதிர்ச்சி. அந்த பெண்ணுடைய நாய் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஷவரில் தொங்கவிடப்பட்டுள்ளது. அதன் மீதிருந்து வழியும் ரத்தமே இவ்வளவு நேரம் சொட்டி கொண்டிருந்திருக்கிறது.

பாத்ரூம் கண்ணாடியில் அந்த நாயின் ரத்தத்தால் எழுதியிருந்தது, மனிதர்களாலும் நக்க முடியும்.

  • 44
·
Added a post

அப்ப வீடு வீடாக வெண்ணெய் விற்றவர்...

இப்ப ரூ.1400 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் ஓனர்; இவர் யார் தெரியுமா?

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகிலுள்ள விருப்பாச்சி என்ற குக்கிராமத்தில் பிறந்த ஜி.ஆர். பாலசுப்பிரமணியம், 1984-ல் பெங்களூருவில் தொடங்கிய 'ஜி ஆர் பி' என்ற ப்ராண்டை இன்று பால் பொருட்கள், ஸ்னாக்ஸ், இனிப்புகள் என பல்வேறு துறைகளில் விரிவுபடுத்தி, உலகளாவிய அளவில் ரூ.1,400 கோடி வருவாய் கொண்ட நிறுவனமாக உயர்த்தியுள்ளார்.

கல்வியை 8ஆம் வகுப்பில் நிறுத்தி, 13 வயதில் பெங்களூரு சென்ற இவர், தனது அக்கா குடும்பத்துடன் இணைந்து வெண்ணெய் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டதிலிருந்து தொழில் பயணத்தைத் தொடங்கினார்.

பின்னர், 28 வயதில் வெறும் ரூ.6,000 முதலீட்டுடன் தனியாக தொழில் தொடங்கி, ஆரம்ப சவால்களை எதிர்கொண்டார். வெண்ணெயை நெய்யாக மாற்றி ஹோட்டல்கள் மற்றும் கடைகளுக்கு விற்பனை செய்வது போன்ற புதுமையான யோசனைகள் அவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. 1986-ல் 'ஜி ஆர் பி' என்ற பெயரில் ப்ராண்டை அறிமுகப்படுத்தி, பெங்களூரு முழுவதும் நேரடி விற்பனை முறையில் தனது நெய் தரத்தை மக்களிடம் கொண்டு சென்றார்.

1993-இல் இந்தியாவில் முதன்முறையாக நெய்யை FMCG முறையில் விநியோகிக்கும் முன்னோடியானார். தொடர்ந்து, 1999-ல் ஓசூரில் நவீன உற்பத்தி ஆலையை அமைத்து, சென்னை உள்ளிட்ட சந்தைகளில் கடும் போட்டியையும் தாண்டி தனது இடத்தை உறுதிப்படுத்தினார். பின்னர் 'Udhayam' என்ற உள்ளூர் ப்ராண்டையும் உருவாக்கி சந்தையை விரிவுபடுத்தினார். தற்போது ஜி ஆர் பி இந்தியாவைத் தாண்டி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. 2000-களுக்குப் பிறகு இனிப்புகள், ஸ்னாக்ஸ், மசாலா, instant mix போன்ற துறைகளிலும் நுழைந்து, தனது தயாரிப்பு வரிசையை விரிவாக்கியது.

திண்டுக்கல் நிலக்கோட்டையில் ரூ.200 கோடி மதிப்பிலான புதிய ஆலையையும் அமைத்து, மொத்தம் 6 உற்பத்தி நிலையங்களுடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முழுமையாக ஸெல்ப் மேட் (bootstrapped) முறையில் வளர்ந்த இந்த நிறுவனம், இன்று சுமார் 2,500 ஊழியர்களுடன் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது.

பாலசுப்பிரமணியத்தின் வணிக தத்துவம் தரத்தில் எந்த சமரசமும் இல்லாத அணுகுமுறை, தொழிலை ஒரு ஆர்வமாகக் கருதுதல், ஊழியர்களை திறமையின் அடிப்படையில் தேர்வு செய்தல், மற்றும் போட்டியை நேர்மறையாக கருதுதல் ஆகியவையாகும். தன்னடக்கமும், தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் இணைந்த அவரது வாழ்க்கைப் பயணம், ஒரு சாதாரண கிராமத்திலிருந்து உலகளாவிய பிராண்டை உருவாக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

  • 45
  • 75
  • 77
  • 74

Good Morning

  • 75
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பொழுது போக்கு செயல்களால் தாமதம் உண்டாகும். பணி நிமித்தமான நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். இலக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

ரிஷபம்

பயணங்களால் அனுபவம் உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்குகள் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். பராபரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உருவாகும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

மிதுனம்

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உருவாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கடகம்

குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் காணப்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் அமையும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

சிம்மம்

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். குறுகிய தூர பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். அரசு காரியத்தில் கவனம் வேண்டும். புதுமையான சிந்தனைகள் பிறக்கும். செயல்களை திட்டமிட்டு செயல்படவும். உறவினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி

எதிலும் பதற்றமின்றி செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். விடாப்படியான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

துலாம்

வழக்கு பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். புதிய வேலை நிமித்தமான எண்ணங்கள் கைக்கூடும். வெளியூர் பயணங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சகோதர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

உத்தியோக பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் நல்லுறவு உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்களில் நிதானம் வேண்டும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். மூத்த உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

தனுசு

உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தவறிய சில பொருட்கள் விவரங்கள் அறிவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். தந்தையுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மகரம்

குழந்தைகள் செயல்களில் கவனத்துடன் இருக்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதளவில் குழப்பம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சமூக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். கலை பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சுபகாரிய தொடர்பான அலைச்சல்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

திறமைக்குண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். தனம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மீனம்

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்து கொள்ளவும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

  • 90

நன்னாள்.

எண்ணங்கள் யாவும் எளிதே ஈடேறும்

பொன்னாள்..

வளமிகு வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்.

  • 91
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 26.4.2026

இன்று இரவு 09.33 வரை தசமி. பின்னர் ஏகாதசி.

இன்று இரவு 11.27 வரை மகம். பின்னர் பூரம்.

இன்று அதிகாலை 03.03 வரை கண்டம் . பின்னர் விருத்தி.

இன்று காலை 10.06 வரை தைத்தூலம். பின்னர் இரவு 09.33 வரை கரசை. பிறகு வணிசை.

இன்று அதிகாலை 05.58 வரை அமர்ந்த யோகம். பின்னர் இரவு 11.27 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=492&dpx=2&t=1777173234

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 94

Good Morning...

  • 90
·
Added article

தமிழ், தெலுங்​கில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டியும் கீர்த்தி சுரேஷும் தெலுங்​கில் இணைந்து நடிக்​கின்​றனர்.

தெலுங்​கில் பால​கிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி, வெங்கடேஷ் நடித்த சங்​க​ராந்​திக்கு வஸ்​துனம், சிரஞ்​சீவி நடித்த மன சங்​கரவர பிர​சாத் காரு உள்பட சில படங்களை இயக்​கிய​வர் அனில் ரவிபுடி. இவர் அடுத்து இயக்​கும் படத்​தில் வெங்​கடேஷ், கல்​யாண் ராம் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

இப்​படத்​தில் கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி நாயகி​களாக நடிக்​கின்​றனர். சீனியர் நடிக​ரான வெங்​கடேஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்​கிறார். கமர்​ஷி​யல் மசாலா படமான இதன் படப்​பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்​கிறது.

  • 174
·
Added a post

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்.

குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது.

தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர்.

சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது.

“கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது.

“நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர்.

“எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்” என்றது குருவி!

"காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது”

இது ஒன்றே ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன பதில்!

குருவிக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை.

போருக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.

அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்! போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி, தனக்கு சாரதியாக மாறிய ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரிய வில்லை.

ஆனாலும் அவற்றை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டான்.

ஸ்ரீகிருஷ்ணர், ஒரு யானை மீது அம்பைத் தொடுத்து, அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார்.

யானையைக் குறி வைத்து, அதன் மீது அம்பை எய்து, அதனைக் கொல்ல முடியாமல், அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த ஸ்ரீ கிருஷ்ணரைக் கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன்.

ஸ்ரீகிருஷ்ணரை விட தான் வில் வித்தையில் சாமர்த்தியசாலி என்னும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது!

மனிதன் தானே!

“நான் வேண்டுமானால் அம்பு எய்து, யானையை வீழ்த்தட்டுமா?” எனக் கேட்டான் அர்ஜுனன்.

ஒரு புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும், அர்ஜுனனிடம் கொடுத்து, பத்திரமாகத் தேருக்குள் வைக்கச் சொல்லி விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்!

“பிறகு ஏன் யானை மீது அம்பை எய்தீர்கள்?” எனக்கேட்ட அர்ஜுனனிடம்,

“அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்துப் போட்டதற்கு யானைக்கான தண்டனை இது” என்று மட்டும் சொன்னார் பகவான்!

அர்ஜுனனுக்கு பகவான் சொன்னது எதுவும் விளங்க வில்லை!

போர் நடந்து, பாண்டவர்கள், 18-ம் நாள் யுத்தத்தில் வென்றும் விட்டனர்.

அர்ஜுனனுடன் பரமாத்மா க்ருஷ்ணன் போர்க்களத்தை சுற்றி வருகிறார்!

தான் முன்பு அறுத்து எறிந்த யானையின் மணிக்கருகில் வந்து நின்ற பகவான்.

ஹே அர்ஜுனா! "இந்த மணியைத் தூக்கி ஓரமாகப் போடுகிறாயா?” என்று கேட்கிறார்!

“எத்தனையோ முக்கியக் காரியங்கள் இருக்கும் போது, இப்போது அறுந்து போய்க் கிடக்கும் இந்த மணி தான் பகவானுக்கு முக்கியமாகப் போய் விட்டதோ?” என்று எண்ணினாலும், அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னபடி, மணியைக் கையில் எடுத்தான்.

அந்த மணிக்குள் இருந்து ஒரு தாய் சிட்டுக் குருவியும், 4 குஞ்சுகளும் சந்தோஷமாகப் பறந்து சென்றன.

தாய்க்குருவி, ஸ்ரீபகவானை வலம் வந்து, 18 நாட்களுக்கு முன் தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அபயம் வேண்டியதையும், யானையின் மணிக்குள் தன் குடும்பத்தை வைத்து பகவான் 18 நாட்கள் தங்களுக்கு அபயம் அளித்ததையும் நன்றியோடு எண்ணி சிறகைக் கூப்பியது!

“பகவானே! என்னை மன்னித்து விடு!

உன்னை மானுட உருவில் பார்த்துப் பழகியதால் , நீ உண்மையில் யார் என என் சிற்றறிவுக்குக் கொஞ்ச காலம் புலப்படாமல் போய் விட்டது! என்று கைகூப்பித் தொழுதான் அர்ஜுனன்.

அண்டசராசரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி இரட்சிக்க வேண்டும் என்பது பகவானுக்கு நன்குத் தெரியும்!

அவனிடம் சரணாகதி அடையுங்கள்! மற்றதை அவனிடம் விட்டு விடுங்கள்.

"சரணாகதி நீயே கதி"

என்று சரணடைவோம்.

நம் வாழ்வில் நடக்கின்ற கஷ்டங்களுக்கு கூட காரணம் உண்டு என்று சொல்வார்கள்.காலம் கடந்த பிறகே‌ அந்த காரணம் தெரியும்..இறைவனின் மகத்துவம் புரியும்..!!

  • 180
·
Added a post
  1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)
  2. தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்.
  3. அமரும்போது வளையாதீர்கள்.
  4. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.
  5. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.
  6. சுருண்டு படுக்காதீர்கள்.
  7. கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும்.
  8. டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள்.
  9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பாரத்தை உங்கள் உடல் முழுதும் தாங்கட்டும்.
  10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டி மடக்குங்கள்.
  • 183
·
Added article

இது 1987 ல் நடந்த சம்பவம்.

அதிகாலை 6 மணி.

நடிகர் இயக்குனர் பாண்டியராஜன் வீட்டு டெலிபோன் ஒலித்தது. பக்கத்திலேயே அமர்ந்திருந்த பாண்டியராஜன் ரிசீவரை கையில் எடுத்தார்.

(அது லேண்ட்லைன் ஃபோன் காலம்)

மறுமுனையில், "நான் எம் ஜி ராமச்சந்திரன் பேசுகிறேன்."

உட்கார்ந்திருந்த பாண்டியராஜன் தன்னை அறியாமல் எழுந்து நின்று விட்டார். பதட்டத்தில் வார்த்தைகள் வரவில்லை பாண்டியராஜனுக்கு.

"தலைவரே... வணக்கம்...

சொல்லுங்க தலைவரே..."

இதை நடிகர் பாண்டியராஜன் அவர்கள் சொல்ல, நான் அவருக்கு அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். "எதற்காக சார் எம்ஜிஆர் அந்த நேரத்தில் கூப்பிட்டார் ?"

"அது வந்து ஜான் சார், அப்போதான் எனக்கு முதல் பையன் பிறந்திருந்தான்."

"சரி."

"முந்தின நாள் இரவு பிரசவம்.

நான் அதிகாலையில்தான் வீட்டுக்கு வந்து, லேண்ட் லைன் ஃபோன் மூலமாக உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குழந்தை பிறந்த தகவலை சொல்ல ஆரம்பித்தேன். எனக்குப் பக்கத்தில் டைரியை வைத்துக் கொண்டு அதில் இருந்த பெயர்களையும் நம்பர்களையும் பார்த்து ஒவ்வொருவராக அழைத்து ஃபோனில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஒரு கையில் போன் ரிசீவர்.

மறு கையில் டைரி.

இப்போது மாதிரி மொபைல் போன் இல்லையே. பெயரை save செய்து வைத்துக் கொள்வதற்கு.

உற்று உற்றுப் பார்த்து, ஒரு பெயர் கூட விடாமல் ஃபோன் செய்தேன்.

ஒரு கட்டத்தில் களைப்பாக இருந்தது.

கையில் இருந்த ரிசீவரை கீழே வைத்தேன். அப்போதுதான் டெலிபோன் மணி அடித்தது.

எனக்கு திகைப்பாக இருந்தது.

நான்தானே ஒவ்வொருவராக அழைத்து அழைத்து, குழந்தை பிறந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது போன் வருகிறதே. இந்த நேரத்தில் அழைப்பது யாராக இருக்கும் ?

குழப்பத்துடனே ஃபோனை கையில் எடுத்து ஹலோ என்றேன்.

மறுமனையில் எம்ஜிஆர்.

எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. "தலைவரே தலைவரே.." என்று அடுத்த வார்த்தை வராமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

"என்ன தலைவரே இவ்வளவு அதிகாலையில் கூப்பிட்டு இருக்கீங்க?"

"உனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறதாமே ?"

"ஆமாங்க தலைவரே..."

"அம்மாவும் பிள்ளையும் நல்லா இருக்காங்களா ?"

"நல்லா இருக்காங்க,

இந்த நேரத்தில் கூப்பிட்டு விசாரித்ததற்கு ரொம்ப நன்றி தலைவரே !"

"சரி பத்திரமா பாத்துக்கோ"

"தலைவரே இந்த விஷயம் உங்களுக்கு எப்படி...?"

"தினத்தந்தி பேப்பரில் பார்த்து தெரிந்து கொண்டேன். ஏதாவது உதவி வேணும்னா எப்ப வேணும்னாலும் என்னை கூப்பிடு

இப்போ ஃபோனை வைக்கிறேன்"

எம்ஜிஆர் போனை வைத்து விட்டார்.

உடனடியாக பாண்டியராஜன்

அதிகாலையில் வெளிவந்த செய்தித்தாளை கையில் எடுத்து

ஒவ்வொரு பக்கமாகப் புரட்ட ஆரம்பித்தார்.

அதை பாண்டியராஜனே விவரித்தார்.

"ஒவ்வொரு பக்கமா புரட்டி புரட்டி பார்க்கிறேன் ஜான் சார். எந்தப் பக்கத்திலும் அந்தச் செய்தி என் கண்ணில் படவில்லை.

அப்புறமாக உற்றுப் பார்த்தால் ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு மூலையில் சின்னதாக ஒரு செய்தி

போட்டிருந்தார்கள்.

'நடிகர் பாண்டியராஜனுக்கு ஆண் குழந்தை பிறந்தது' அப்படின்னு...

பத்திரிகை அச்சுக்குப் போன கடைசி நேரத்தில் சேர்த்து இருக்க வேண்டும்.

ரொம்ப ரொம்ப சின்னதாக அந்த செய்தி வந்திருந்தது."

பாண்டியராஜன் தொடர்ந்து சொல்லச் சொல்ல நான் அசையாமல் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தேன்.

"ஒரு முதலமைச்சர் ஆக இருந்தபோதிலும், அதிகாலையில் செய்தித்தாளில் அந்த சின்னஞ்சிறிய செய்தியைப் பார்த்துவிட்டு, ஒரு சாதாரண நடிகனான என்னை அழைத்து வாழ்த்திய அந்த மனிதரின் அன்பையும் பாசத்தையும் எப்படி என்னால் மறக்க முடியும் ?"

பாண்டியராஜனுக்கு ஏற்பட்ட அதே ஆச்சரியம்தான் எனக்கும் ஏற்பட்டது.

அதோடு வெற்றிகரமான முதலமைச்சராக எம்ஜிஆர் விளங்கிய காரணமும் புரிந்தது.

எம்ஜிஆர் போல ஆட்சியைக் கொடுப்போம் என்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் எம்ஜிஆரை போல வாழ்வதும் ஆள்வதும் அத்தனை எளிதான காரியம் அல்ல.

அரசியலையும் தாண்டி அவருக்கு

அனைவர் மீதும் அக்கறை இருந்தது.

எந்த நேரத்திலும் விழிப்புணர்வு.

எல்லோரிடத்திலும் அக்கறை.

அதுதான் எம்ஜிஆர்.

அதனால்தான் பாண்டியராஜன் அவர்களின் மனதில் மட்டுமல்ல,

பல லட்சக்கணக்கான மக்களின் மனதில் இன்றும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர்.

  • 219
·
Added a post

தமிழ்நாட்டில் - கரூர் அருகே அமைந்துள்ள ரத்தினகிரீஸ்வரர் கோயில்ஒரு சிறப்புமிக்க சிவாலயமாகும்.

  • குலதெய்வம் அறியாதவர்கள் இங்கு வந்து வழிபாடு நடத்தினால், தோஷங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
  • கல்யாண வரம் வேண்டுவோருக்கும், தொழில் விருத்தி அடைய விரும்புவோருக்கும் இது மிகவும் உகந்த தலமாக கருதப்படுகிறது.
  • 1000 படிக்கட்டுகள் கொண்ட மலையின் மீது அமைந்த, இயற்கை எழில் சூழ்ந்த தலம் இது.
  • கரூர் மாவட்டத்தில், குளித்தலைக்கு அருகில் உள்ள அய்யர்மலையில் இக்கோயில் அமைந்துள்ளது.
  • 220
  • 271

காலை வணக்கம்

  • 273
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பாகபிரிவினை விஷயங்களில் நிதானம் வேண்டும். மற்றவர்கள் கூறும் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் நன்மைகள் ஏற்படும். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

ரிஷபம்

மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நிர்வாக பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். குறுகிய தூர பயணங்கள் மூலம் மாற்றம் உண்டாகும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைக்கூடும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். செய்கின்ற செயல்களில் கவனம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கடகம்

இனம் புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். மறைமுக தடைகளை அறிவீர்கள். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். தொழில் நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும். பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சிம்மம்

உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். வியாபாரம் பணிகளில் செய்யும் சிறு மாற்றங்கள் மூலம் லாபங்கள் மேம்படும். செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத் தன்மை உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சினைகளுக்கு மாற்றமான தீர்வுகள் கிடைக்கும். உலக அனுபவங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். வெளியூர் பயணங்களில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காண முயற்சிகள் கைகூடும். இழுபறியாக இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சூழ்நிலை அறிந்து பேசுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

துலாம்

மருத்துவத் துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் மேம்படும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். உயர்கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புது விதமான கண்ணோட்டம் பிறக்கும். தன வருவாய் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்

விருச்சிகம்

சமூகப் பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். தர்ம சிந்தனை தொடர்பான முயற்சிகள் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் இனிதே நிறைவு பெறும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவது மன அமைதியை கொடுக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

தனுசு

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். செய்தொழிலில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வழக்கு செயல்களில் விவேகத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

மகரம்

நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தன வருவாய் மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கும்பம்

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்து கொள்ளவும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் உத்தியோக தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சில்வர்

மீனம்

எண்ணங்களில் புதிய தெளிவு பிறக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செலவுகளை குறைப்பதற்கான சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல்கள் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

  • 325
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 12 ஆம் தேதி சனிக்கிழமை 25.4.2026

இன்று அதிகாலை 12.11 வரை அஷ்டமி. பின்னர் இரவு 10.39 வரை நவமி. பிறகு தசமி.

இன்று அதிகாலை 12.37 வரை பூசம். பின்னர் இரவு 11.50 வரை ஆயில்யம். பின்பு மகம்.

இன்று அதிகாலை 03.26 வரை சூலம் . பின்னர் கண்டம்.

இன்று அதிகாலை 11.11 வரை பவம். பின்னர் காலை 11.55 வரை பாலவம். பிறகு இரவு 10.39 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று இரவு 11.50 வரை மரணயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=491&dpx=2&t=1777087974

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 332