·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1352
  • More

என்ன ஒரு அழகான நடை

நேர்த்தியான நடைபயிற்சி

Comments (0)
Login or Join to comment.
  • 3
·
Added article

சசி – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வந்த படம் ‘நூறு சாமி’. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது.

  • 3
·
Added article

’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் உடன் கவுரவ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை முடித்துவிட்டு ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கவுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரியவுள்ளார்.

தற்போது இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த படத்தில் முருகன் மற்றும் விருமாண்டி ஆகிய இரண்டு கடவுள்களை மையப்படுத்தி கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சிவகுமார் முருகேசன். இதில் முருகக் கடவுளை மையப்படுத்தி சிவகார்த்திகேயனும், விருமாண்டி கடவுளை மையப்படுத்தி கமலும் இருப்பார்கள் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கமல் - சிவகார்த்திகேயன் இணைந்து நடித்தால் இப்படத்தில் வியாபாரம் உள்ளிட்டவை இரட்டிப்பாக இருக்கும். மேலும், இப்போதே இதன் உரிமைகளை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் ப்ரோமோ வீடியோவில், அக்டோபரில் வெளியீடு என படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • 3
·
Added a post

முருங்கை மரம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு தருகிறது. முருங்கை மரத்தின் எல்லா பாகங்களும் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடியது. அதிலும் முருங்கை இலைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு கொடுக்கிறது. முருங்கை இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கூடிய முருங்கை இலை சூப் எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது. முருங்கை இலைகளில் வைட்டமின் பி, வைட்டமின் சி, புரோவிட்டமின் ஏ, வைட்டமின் கே, மாங்கனீசு, புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

தொடர்ந்து நீங்கள் முருங்கை இலைச் சாற்றை குடித்து வருவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். முருங்கை இலைச்சாற்றை தினமும் அதிகாலையில் காலை உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது அரை மணி நேரத்திற்கு பிறகோ நீங்கள் குடிப்பது உங்களுடைய மலச்சிக்கல் பிரச்சனையை விரைவில் போக்கும். முருங்கை இலைகள் உடலில் இருந்து வெளிவரக்கூடிய கழிவை இளக்கி வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும் இது குடலை ஆரோக்கியப்படுத்தி குடலின் இயக்கத்தை அதிகரிக்கிறது.

முருங்கை இலைச்சாறு உங்கள் உடலில் உள்ள வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. முருங்கை இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இது உடலில் ஏற்படக்கூடிய காயங்கள், வலிகள், வீக்கத்தை போக்க உதவுகிறது. மேலும் உடலில் ஏற்படக்கூடிய புண்களை விரைவில் குணமாக்கும் தன்மையும் கொண்டது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் முருங்கை இலைச்சாற்றை குடித்து வரும் பொழுது இந்த ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது முருங்கை இலை. முருங்கை இலை சாறை மூன்று மாதங்கள் தொடர்ந்து தவறாமல் தினமும் மூன்று வேளை நீங்கள் குடித்து வந்தால் உங்கள் இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிக அளவு சர்க்கரையை கட்டுப்படுத்தும். மேலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதால் எந்தவித பக்கவிளைவுகளும் உங்களுக்கு இருக்காது.

தொடர்ந்து முருங்கை இலை சாற்றை குடித்து வரும் பொழுது அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் இதய நோய்கள், பக்கவாதம், மார்புவலி, கால்களில் வலி மற்றும் கணுக்காலில் அதிக வலியை ஏற்படுத்துகிறது.

முருங்கை இலைச்சாற்றை தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. முருங்கை இலைச் சாற்றில் வைட்டமின் சி காணப்படுகிறது. இது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது. மேலும் இது பாக்டீரிசைடு, பாக்டீரியோஸ்டேடிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே இந்த முருங்கை இலை ஜூஸை தொடர்ந்து நீங்கள் தினமும் குடித்து வரும் பொழுது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. இதனால் நோய்கள் வராமல் இருக்கும். மேலும் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும்.

முருங்கை இலைச்சாறு வேகமாக முதுமை அடைவதை தடுக்கிறது. முருங்கை இலையில் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை அதிகம் உள்ளது. தினமும் முருங்கை இலைச்சாற்றை நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய சருமத்தின் செல் சேதத்தை தாமதப்படுத்தும். மேலும் செல் சேதத்தை தடுக்கவும் செய்யும். சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை குறைத்து சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் உங்களுடைய சருமம் பொலிவாகும். இளமையாகவும் இருக்கும்.

முருங்கை இலைச்சாற்றை தொடர்ந்து கொடுத்து வரும் பொழுது அது இரைப்பை பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. முருங்கை இலையில் வைட்டமின் பி நிறைந்து காணப்படுகிறது. இது இரைப்பை அழற்சி மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியை குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் செரிமானத்தை சீராக்கும் குணமும் கொண்டது. முருங்கை இலைச்சாற்றை தினமும் நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய இரைப்பை பிரச்சனைகள் நீங்கும்.

முருங்கை இலைச் சாற்றை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய முடி ஆரோக்கியமாக வளர உதவிசெய்கிறது. முருங்கை இலைச்சாறு உங்களுடைய தலை முடி மற்றும் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஏனென்றால் முருங்கை இலைகளில் முடிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த முருங்கை இலைச்சாறு முடிக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுத்து முடியை வலுவூட்டுகிறது. மேலும் முடி உதிர்தல் மற்றும் முடி சேதத்தை தடுக்கிறது.

முருங்கை இலைச்சாற்றை தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது மன அழுத்தத்தை குறைத்து சோர்வை போக்குகிறது. இந்த ஜூஸை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய உடல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கிறது. இது உங்கள் உடலில் கார்டிசோல் அளவை சமநிலைப்படுத்தும். அதன் மூலமாக மன அழுத்தத்திற்கு தேவையான சக்தியை உடலில் மேம்படுத்துகிறது.

முருங்கை இலைச் சாற்றை தயாரித்துக் குடிப்பது மிகவும் எளிது. சிறிதளவு தண்ணீரை அடுப்பில் வைத்து தண்ணீர் கொதித்தவுடன் அதில் முருங்கை இலைகளை போட்டு 15 நிமிடங்கள் நன்றாக வேக வைத்து, ஆற வைத்து வெதுவெதுப்பான சூட்டில் இதை குடிக்க வேண்டும். தினமும் இதை வெறும் வயிற்றில் நீங்கள் குடித்து வரும் பொழுது பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உங்களுடைய உடலுக்கு கிடைக்கும்.

  • 9
·
Added a post

பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர் களைக் கொண்டது.

  • செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது.
  • காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.
  • இது வெங்காய இனப் பூண்டுகளின் மணத்தை நினைவூட்டுகின்றது.பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம். ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.
  • பெருங்காயம், சூட்டைத் தரக்கூடியது. உணவை செரிக்கிறது, சுவையை அதிகப்படுத்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும், குடற் புழுவகற்றியாகவும் பயன்படுகிறது.
  • பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.
  • நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.
  • பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும்.
  • ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் தீரும்.
  • வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.
  • பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் - சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது.
  • மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது, மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது
  • சளிக்காய்ச்சல் எதிர்ப்பு - 1918 ஆம் ஆண்டில் பெருங்காயம் பானிசு இன்புளுயன்சா தொற்று நோயை எதிர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. தைவான் நாட்டிலுள்ள கயோஹ்சியூங் மருத்துவப் பல்கலைக்கழகத்திலுள்ள விஞ்ஞானிகள், பெருங்காயத்தின் வேர்கள் சுவைன் புளு வைரசுH1N1 ஐ கொல்லும் இயற்கையான வைரஸ் எதிர்ப்பு மருந்து சேர்க்கைகளை உற்பத்தி செய்வதாக அறிக்கை வெளியிட்டனர். அமெரிக்க கெமிக்கல் சொசைட்டியின் நேச்சுரல் புராடக்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள் இந்த சேர்மங்கள் இந்த வகையான ப்ளூ காய்ச்சலுக்கு எதிரான "புதிய மருந்து உருவாக்கத்திற்காக உறுதியளிக்கும் முன்னணி சேர்மங்களாகப் பயன்படுத்தப்படலாம்" என்று கூறினர்.
  • செரிமானம் - தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகியவற்றில் இது செரிமான ஊக்கியாகப் பயன்படுகின்றது மற்றும் இது "மஹாஹிங்" என்று அறியப்பட்ட ஆல்கஹால் அல்லது நீர் டிஞ்சரில் வயிற்றின் மீது பூசப்படுகின்றது
  • நுண்ணுயிர்க் கொல்லி - பெருங்காயம் நாள்பட்ட மூச்சுக் குழாய் அழற்சி மற்றும் கக்குவானிருமல் ஆகியவற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்துவதற்காக நன்கு ஆவணமாக்கப்பட்டதுடன் பாரம்பரிய மருந்துகளில் நுண்ணுயிர்கொல்லியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதே போன்று வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது.
  • 11
·
Added a post

அது ஒரு பிரபலமான ஓவியப் பயிற்சி நிறுவனம். அங்கு சிறந்த ஓவிய ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக போட்டி ஒன்று அறிவிக்கப்படுகிறது.

போட்டியின் விதிமுறைப்படி இரண்டு ஓவியங்கள் வரைய வேண்டும்.

முதல் ஓவியம் அவர்கள் கொடுத்த தலைப்புக்கு ஏற்ற முறையில் வரைய வேண்டும்.

இரண்டாவது ஓவியம் அவரவர்‌ விருப்பம் தான். தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு என்ன வேண்டுமானாலும் வரையலாம்‌. இதனையெல்லாம் வரைந்து அந்த பயிற்சி நிறுவனத்தின் முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

தபாலின் மூலம் நிறைய ஓவியங்கள் குவிந்திருந்தன. போட்டியின் நடுவர் குழு ஒவ்வொரு ஓவியமாய் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஓவியமும் தனித்துவம் நிறைந்ததாய் இருந்தது.

ஒரு கடிதத்தில் அனுப்பப்பட்ட ஒரு ஓவியரின் ஓவியம் மிகவும் தத்ரூபமாய் இருந்தது. அவர்கள் கொடுத்த தலைப்புக்கு மிகப் பொருத்தமாய் அற்புதமாய் வரையப்பட்டிருந்தது.

அதே ஆவலில் இரண்டாவது ஓவியத்தைத் தேடினர். ஆனால் இன்னொரு ஓவியம் கடித உறையில் இல்லை. ஒரு ஓவியம் மட்டுமே அனுப்பப்பட்டிருந்தது. அதாவது குறிப்பிட்ட தலைப்பின் கீழ் வரையப்பட்ட‌ ஓவியம் மட்டும் இருந்தது. ஆனால் அவர்கள் விருப்பத்திற்கேற்றாற் போல வரையச்சொன்ன இரண்டாவது ஓவியம் இல்லை. குழு உறுப்பினர்கள் நன்றாகத் தேடி பார்த்தனர்.‌ ஓவியம் இல்லை.

எனவே விதிமுறை மீறப்பட்ட ஓவியம் தானே!!!ஆதலால் அரைமனதுடன் அந்த ஓவியத்தை நிராகரிக்க முற்படும்போது தான் அந்த ஓவியத்தின் பின்புறத்தில் சிறுகுறிப்பு ஒன்று எழுதப்பட்டிருப்பதைக் கவனித்தனர். அதனை வாசித்தவுடன்‌ அனைவருக்கும் ஆச்சரியம். அந்தக் குறிப்பில்,

*** இரண்டாவது ஓவியத்தைத் தேட வேண்டாம். கடிதத்தின் மேல் ஒட்டி அனுப்பிய ஸ்டாம்ப்-ஐ நன்றாக கவனிக்கவும். அது நான் வரைந்தது தான். ***

  • 14
·
Added a post

* சோளமாவும், அரிசி மாவும் சம அளவில் கலந்து பஜ்ஜி சுட்டால் கடலை மாவில் செய்ததை விட சுவையாகஇருக்கும்.

* பித்தளைப் பாத்திரங்களை முட்டை வேகவைத்த நீரில் கழுவினால் பாத்திரங்கள் பளிச்சிடும்.

* பகோடா செய்யும்போது வேர்க்கடலையை பொடி செய்து கலந்தால் பகோடா மொறு, மொறுவென இருக்கும்.

* காய்ந்த மிளகாய்களை வறுக்கும் போது கொஞ்சம் உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

* கட்லெட் செய்ய ரொட்டித் துண்டு இல்லை என்றால் அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.

* வாழைஇலையை அனலில் காட்டி பின் பார்சலுக்கு பயன்படுத்தினால் உடையாது. கிழியாது.

* தோசைக்கல்லில் மோர் மிளகாய் வறுத்தால் அதிக எண்ணெய் செலவு ஆகாது.

* மணத்தக்காளி இலை மிகச் சிறந்த கிருமி நாசினி. காயம் பட்ட இடத்தில் இதன் சாறை பிழிந்து விட்டால் புண் விரைவில் ஆறும்.

* மழை நாட்களில் சீக்கிரமாக பொரிந்த அப்பளம் நமத்து போய்விடும். எனவே ஒரு ஸ்டீல் டப்பாவில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் இரண்டு நாட்கள் தாக்குப்பிடிக்கும்.

* கறியை வேகவிடும்போது ஒரு துண்டு இஞ்சியை போட்டால் கறி நன்றாக வெந்து மிருதுவாக இருக்கும்.

* வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் அதன் வாசனை ஊரையே கூட்டும்.

* தேங்காய்ச்சட்னி அரைக்கும்போது பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை எண்ணெயில் வதக்கி பின் அரைத்தால் சுவையாக இருக்கும்.

  • 17
·
Added a news

கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த சனிக்கிழமை அரங்கேறிய தொடர் வாகனத் திருட்டுகள் மற்றும் வீடுபுகுந்து கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெறும் சில மணிநேர இடைவெளியில் நகரம் முழுவதும் நிகழ்ந்த இந்த வன்முறை சம்பவங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வெஸ்ட் ஹண்ட் கிளப் வீதி பகுதியில், வாகன சாரதி ஒருவரைக் கத்தியைக் காட்டி மிரட்டிய சந்தேகநபர்கள் இருவர், அவரிடமிருந்து காரைப் பறித்துச் சென்றனர்.

சிறிது நேரத்தில் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், உரிமையாளரின் கார் சாவியைத் திருடி, அங்கிருந்த மற்றொரு காரையும் கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்ட காருடன் நகரின் கிழக்குப் பகுதியில் அவர்கள் விபத்துக்குள்ளாகினர். அப்போது விபத்தைப் பார்த்து உதவ முன்வந்த ஒருவரின் காரையும் அவர்கள் பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

மீண்டும் நகரின் மேற்குப் பகுதிக்குத் திரும்பிய அந்த ஜோடி, மற்றுமொரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது.

அங்கு உரிமையாளருடன் ஏற்பட்ட மோதலில், உரிமையாளர் சிறு காயங்களுக்கு உள்ளானார். இறுதியாகச் சென்ற வீட்டில் அந்தப் பெண் பிடிபட்ட நிலையில், அங்கிருந்து தப்பியோடிய ஆணையும் பொலிஸார் சிறிது நேரத்தில் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டாவா பொலிஸ் கொள்ளை தடுப்புப் பிரிவு (Robbery Unit) முன்னெடுத்து வருகிறது. இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

  • 20
·
Added a news

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் துணை அமைப்பான 'பாசிஜ்' தன்னார்வப் படைத் தளபதி குலாம்ரேசா சுலைமானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின் போதே அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி சுலைமானியின் மரணம் ஈரானின் 'கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு' கட்டமைப்பிற்கு விழுந்த பாரிய பலத்த அடி என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

ஈரானிய இராணுவத் தளபதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து இராணுவ ரீதியான கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

இந்தச் செய்தி குறித்து ஈரான் இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ கருத்துக்களையும் அல்லது உறுதிப்படுத்தல்களையும் வெளியிடவில்லை என அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

  • 20
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சமயோசிதமான செயல்பாடுகள் மூலம் வளர்ச்சி அடைவீர்கள். உயர்கல்வியில் மேன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்து வந்த ஏற்ற இறக்கங்கள் குறையும். பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

ரிஷபம்

பயணங்கள் மூலம் எண்ணங்கள் ஈடேறும். அரசு வழியில் உதவிகள் சாதகமாகும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈர்ப்புகள் அதிகரிக்கும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிதுனம்

உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளால் அலைச்சல்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் ஆலோசனை வேண்டும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

கடகம்

இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். புதிய உணவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். எதிர்பார்த்த சில வரவுகளில் தாமதம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொன் பொருள்களில் கவனம் வேண்டும். குடும்ப விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

சிம்மம்

நண்பர்களின் வருகை மனதிற்கு மன நிறைவை கொடுக்கும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி லாபம் பெறுவீர்கள். வங்கி கடன் உதவிகள் சிலருக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் குறையும். மனை விற்றல், வாங்கலில் மேன்மையான சூழல் உண்டாகும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கன்னி

பணிபுரியும் இடத்தில் மாற்றங்கள் பிறக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரம் சார்ந்த கடன் உதவிகள் சாதகமாகும். அசதிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

துலாம்

வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கவிதை மற்றும் இலக்கிய பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் விவேகத்துடன் செயல்பட்டு முடிவு எடுப்பது நன்மையளிக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

விருச்சிகம்

மனதில் பழைய நினைவுகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். வாகனம் பயணங்களில் நிதானம் வேண்டும். சுபகாரிய தொடர்பான பேச்சு வார்த்தைகளை பொறுமையுடன் செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். விவசாயம் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

தனுசு

திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். விவசாய பணிகளில் கவனம் வேண்டும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசியல் துறையில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மகரம்

உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். போட்டி சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

கும்பம்

தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்மறை சிந்தனைகள் வெளிப்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் செய்திகளால் செலவுகள் மேம்படும். மனதளவில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மீனம்

எண்ணிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன் பிறத்தவர்களுடைய சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட அனுபவங்கள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 162
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 17.3.2026.

இன்று காலை 08.57 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று அதிகாலை 05.55 வரை அவிட்டம். பின்னர் சதயம்

இன்று காலை 07.46 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.

இன்று காலை 08.57 வரை வனிசை. பின்னர் இரவு 08.42 வரை பத்தரை. பின்பு சகுனி.

இன்று காலை 06.49 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=455&dpx=2&t=1773716988

நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 164

Good Morning...

மகிழ்ச்சி நிறைந்த நாள். நல்வாழ்த்துகள்.

  • 164
·
Added article

நடிகை ராய் லட்சுமி, 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அழகும், திரை முன்னிலையில் கொண்டுவரும் நம்பிக்கையும் காரணமாக கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த 'தாம் தூம்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ராவி மோகன் நடித்த இந்த படத்தின் மூலம் ராய் லட்சுமிக்கு தமிழ் ரசிகர்களிடையே தனி அடையாளம் கிடைத்தது.

தமிழ் சினிமாவைத் தொடர்ந்து ராய் லட்சுமி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, காஞ்சனா திரைப்படத்தில் கருப்பு பேரழகா பாடல் மற்றும் கவர்ச்சியான ஆட்டத்தின் மூலம் இளம் ரசிகர்களை வளைத்தப்போட்டார். பின் ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்பு பெற்ற ராய் லட்சுமி, Julie 2 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்த நடிகைகளில் ஒருவராக ராய் லட்சுமி இருந்தார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை.

பட வாய்ப்புகள் குறைந்ததால், சமூக வலைதளங்களில் ராய் லட்சுமி தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் இவர், தனது ஃபோட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது, பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள ராய் லட்சுமி, அங்கு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் சட்டை பட்டனை கழட்டிவிட்டு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கமெண்ட்களை குவித்து வருகிறது.

  • 277
·
Added a post

1.இல்லங்களில் பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.

அதன் இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பதாகும்.

அதாவது ஐவகை பத்திரங்களை(இலைகள்) நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.

துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள்.

இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'.

இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.

இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை.

இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம்,

திருமாலுக்கு உகந்தது துளசி,

அம்மனுக்கு வேப்பிலை,

விநாயகருக்கு அருகம் புல்,

பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.

2. பூசையில் அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில்

விளக்கம்

•பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம்

பயன்பாடு

பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் இருக்கும் நீரில் ஒன்றைத்தான் நமக்குத் தருகிறார்கள்.

அதென்ன பஞ்ச பாத்திரங்கள்?

அர்க்கயம் - கைகளுக்கு, பாத்யம் - பாதங்களுக்கு, ஆசமனீயம் - இது ஆசமனம், ஸ்நானீயம் - திருமேனிக்கு, சர்வார்த்த தோயம் - மற்ற அனைத்துக்கும். இவை தான் பஞ்ச பாத்திரங்கள்!

இவை இல்லாமல் தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரம், தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்து தான் இந்த பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்!

நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம், சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து. அது தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்!

மற்ற அனைத்தின் நீரும் இந்த ஐந்தாவதில் இருந்து தான் போயும், வரவும் செய்யும்!

தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:

பச்சைக் கர்ப்பூரம்

ஏலக்காய், இலவங்கம்

ஜாதிக்காய், வெட்டிவேர் இவற்றுடன் சிறிது மஞ்சள்.

3.பஞ்சமுகம்...... இங்கு பஞ்சமுகம் என்பதற்கு அர்த்தமே வேறு.

வியாகரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள்.

முகம் மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்று பெயர்.

அதேபோல் பூஜைக்கு உபயோகிக்கும் பஞ்ச பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும் உடல் சிறுத்தும் இருப்பதனால் அதனை பஞ்சபாத்திரம் என்று குறிப்பிடுகிறார்.

  • 279
·
Added article

நடிகர் மாதவன் பெயரில் போலி​யான இன்​ஸ்​டாகி​ராம் கணக்கு குறித்து ரசிகர்​களுக்கு எச்​சரிக்கை விடுத்துள்ளார்.

முன்​னணி நடிகர், நடிகை​களின் பெயரில் சமூக வலை​தளங்​களில் போலி​யான கணக்​குத் தொடங்கி மோசடி​யில் ஈடு​பட்டு வருவது அதி​கரித்து வரு​கிறது. இப்​போது நடிகர் மாதவன் பெயரில் மோசடி கணக்​குத் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், ‘ரோஹன்​மைரா 2 (rohanmyra2)’ என்ற இன்​ஸ்​டாகி​ராம் கணக்கு தனது பெயரை​யும், தனது குழு​வின் பெயரை​யும் பயன்​படுத்தி பொது​மக்​களிடம் பேசி வரு​வ​தாகக் குறிப்​பிட்​டுள்​ளார்.

“இந்த நபருக்​கும் எனக்​கும் அல்​லது எனது குழு​வுக்​கும் எந்​தத் தொடர்​பும் இல்​லை. இது முற்​றி​லும் ஒரு மோசடி கணக்கு. எனது சார்​பாகப் பேச வேறு எந்​தக் கணக்​குக்​கும் அனு​மதி இல்​லை” என்று அவர் தெளிவுபடுத்​தி​யுள்​ளார். மேலும், அந்த நபர் மீது சட்​டப்​பூர்​வ​மான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக​வும் அவர் கூறி​யுள்​ளார்.

  • 279
·
Added a news

கனடாவின் நயாகரா பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நயாகரா காவல்துறை புதன்கிழமை அறிவித்துள்ளது.

2026 பெப்ரவரி மாதம், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் பிராந்தியம் முழுவதும் பயணித்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதை அவதானித்த நயாகரா குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.

மார்ச் 10 அன்று மதியம் 3 மணியளவில், வாகனத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரைத் அதிகாரிகள் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், சுமார் $78,000 (கனடிய டாலர்) மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

160 கிராம் ஃபெண்டானில், 280 கிராம் மெத்தாம்பேட்டமைன், 137 கிராம் கொக்கைன், ஆக்ஸிகோடோன் மாத்திரைகள் மற்றும் 8,000 டொலர் ரொக்கப் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

தோரோல்டைச் சேர்ந்த பெலாலுதீன் ஷஹாபுதீன் (27), ஜனெல்லே மெக்லியோட் (27), நயாகரா ஃபால்ஸைச் சேர்ந்த கை செஷயர் (25), செயின்ட் கேத்தரின்ஸைச் சேர்ந்த ட்ரெவர் அவேரி (58) மற்றும் டெர்ரி கிரே (54) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஷஹாபுதீன் மற்றும் செஷயர் ஆகியோர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற மூவரும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

  • 277
·
Added a post

ஒரு பணக்கார தந்தை தன் மகனுக்கு ஏழ்மையை விளக்க அருகில் உள்ள கிராமத்திற்கு அழைத்து சென்றார் !!

ஒரு வாரம் அங்கே தங்கி இருந்த பின் வீடு திரும்பினார்கள் !!

வீடு வந்ததும் தந்தை !! மகனை பார்த்து !!

மகனே ! அந்த கிராமத்தில் நீ !! என்ன பார்த்து தெரிந்து கொண்டாய் !! என்று கேட்க !!

அதற்க்கு அவன் !!

அப்பா !! நாம் கோட்டை போன்று வீடு கட்டி நான்கு மதில் சுவற்றுக்குள் அடை பட்டு சிறை வாழ்க்கை வாழ்கிறோம் !!

நாலுக்கு நாள் கூரை வீட்டில் வாழ்ந்தாலும் சுதந்திரமாக அவர்கள் வாழ்கிறார்கள் !

மின் விசிறி , ஏசி என்று இருந்தாலும் உஷ்ணத்தில் நாம் வாழ்கிறோம் !!

இயற்கையான காற்றில் அவர்கள் வாழுகிறார்கள் !

சூப்பர் மார்க்கெட் சென்று என்றோ பறித்த காயை விலை கொடுத்து நாம் வாங்கு கிறோம் !!

அவர்களோ அவர்களுக்கு தேவையானவற்றை ! விளைவித்து சாப்பிடுகிறார்கள் !!

மூன்று வேலை வயிறார உண்டு !! உடல் இளைக்க காலாற நடந்தும் நோயுடன் நாம் வாழ்க்கை நடத்துகிறோம் !!

கால் தேய தினம் உழைத்து அரைவயிறு கஞ்சி குடித்து ஆரோக்கியமாக அவர்கள் வாழ்கிறார்கள் !!

இதுமாதிரி அவர்கள் நிறைய விஷயங்களில் மிகவும் செல்வந்தர்களாக இருக்க்கிறார்கள் !

இப்பொழுது தான் புரிந்தது புரிந்தது நாம் ஏன் இவ்வளவு ஏழையாக இருக்கிறோம் என்று !

இதை கேட்ட அப்பா வாயடைத்து போனார் !

  • 275
·
Added a news

ஈரான் குழந்தைகளைக் கொல்​லும் இந்த குற்​ற​வாளி (நெதன்​யாகு) உயிரோடு இருந்​தால், எங்​களது முழு பலத்​தை​யும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்​வோம் என ஈரானின் புரட்​சிகர பாது​காப்​புப் படை அறிக்​கை​யொன்றினை வெளியிட்டுள்ளது.

மார்ச் 12ஆம் திகதி வெளி​யான வீடியோ ஒன்​றில், நெதன்​யாகு​வின் ஒரு கையில் ஆறு விரல்​கள் இருப்​பது போலத் தெரிவதைச் சுட்டிக்காட்​டி​யுள்ள பல இணை​யதளப் பயனர்​கள், அது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் எடிட் செய்​யப்​பட்ட வீடியோ என சந்​தேகத்தை எழுப்​பி​யுள்​ளனர்.

அந்த வீடியோ​வில் ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் வான்​வழித் தாக்குதல்​களைத் தொடங்​கிய பிறகு தனது முதல் செய்​தி​யாளர் சந்​திப்​பில் உரையாற்​றி​னார்.

அதில் ஈரானின் புதிய உயர் தலை​வர் மோஜ்தாபா கொமெய்னியை கொல்​லப்​போவ​தாக மறை​முக​மாக அச்​சுறுத்​தி​யதுடன், இஸ்​ரேலிய இராணுவத்​தின் நடவடிக்கைகளையும் நியாயப்​படுத்​தி​னார்.

இதனிடையே அமெரிக்க அரசி​யல் வர்​ணனை​யாளர் கேண்​டஸ் ஓவன்ஸ் உட்பட பலரும், ‘பிபி எங்​கே?’ (நெதன்​யாகு​வின் செல்​லப்​பெயர்) எனக் கேள்வி எழுப்​பி​யுள்​ளனர்.

இதனிடையே, பெஞ்​சமின் நெதன்​யாகு இறந்​து​விட்​ட​தாக சமூக வலை​தளங்​களில் பரவும் செய்​தி​களை அவரது அலு​வல​கம் மறுப்பு தெரிவித்துள்​ளதுடன், அவர் நலமாக உள்​ளார் என்​றும் தெரி​வித்​துள்​ள அதேவேளை நேதன்யாகு காப்பி அருந்தும் புகைபடமும் வெளியாகி உள்ளது.

  • 281
·
Added a news

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்த அல்லது காயமடைந்தார் என்ற பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஈரானிய அரச ஊடகம் வெளியிட்ட நிலையில் அவர் கையில் ஒரு கோப்பை கோப்பியுடன் தனது உதவியாளர் ஒருவருடன் உரையாடும் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

மூன்றாவது வாரமாகவும் தொடரும் இஸ்ரேல் - ஈரான் போரால் உலக நாடுகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் போரில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காயமடைந்த்தாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் தனது உதவியாளரொருவருடன் உரையாடும் காணொளியை ஈரான் வெளியிட்டுள்ளது.

  • 277
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். வர்த்தக சிந்தனைகள் புதுவிதமான உத்திகள் மூலம் லாபங்களைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். பொன் பொருள் சேர்க்கைக்கான சூழல் ஏற்படும். தானியம் மற்றும் ஆபரண தொடர்பான பணிகளில் லாபங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

ரிஷபம்

சிந்தனையில் போக்கில் புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிக செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் லாபங்கள் மேம்படும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் பணிகளிலிருந்து வந்த பொறுப்புகள் குறையும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மிதுனம்

பணிகளில் பொறுப்புகளும் அலைச்சலும் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மற்றவர்கள் பற்றி கருத்துக்களை கூறும்போது சிந்தித்து செயல்படவும். நண்பர்களிடத்தில் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். வியாபார செயல்களில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். வாகனப் பயணங்களின்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கடகம்

கணவன் மனைவியிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு மறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலை காணப்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துகளால் நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பாசி

சிம்மம்

மற்றவர்களிடம் எதிர்பார்த்து இருந்த உதவிகள் சாதகமாக கிடைக்கும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சாதகமாகும். பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் அமையும். நெருக்கமானவர்கள் இடத்தில் கோபம் இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

கன்னி

உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். எதிலும் தனித்து செயல்படுவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

துலாம்

குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனை போக்கில் சில மாற்றங்கள் காணப்படும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு கல்வியில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

விருச்சிகம்

பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கடினமான செயல்களை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

தனுசு

புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் நன்மைகள் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். குடும்ப நபர்களிடம் மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

மகரம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தடைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வர்த்தக செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். கருத்துக்களை கூறும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

பிள்ளைகளால் மன வருத்தம் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். குலதெய்வ தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் புனித யாத்திரை பயணங்கள் கைகூடும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன வரவுகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

மீனம்

குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். இலக்கிய துறைகளில் தனிப்பட்ட கவனம் ஏற்படும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 337

ஸ்ரீராமஜயம் என்று வாய் விட்டு எண்ணிக்கை இன்றி முடிந்தளவு சொல்லிக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

  • 331

பிறர் வாழ்க்கை முறையில்

குறை கூறி ...

குற்றம் சொல்லி..

பெருமை தேடும்

எவருமே

தன் சொந்த வாழ்வில்...

மனநிறைவோ,மனநிம்மதியோ

பெறுவதில்லை...!

  • 328
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை 16.3.2026.

இன்று காலை 08.56 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று அதிகாலை 05.13 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.

இன்று காலை 08.53 வரை சிவம். பின்னர் சித்தம்.

இன்று காலை 08.56 வரை தைத்தூலம். பின்னர் இரவு 08.56 வரை கரசை. பின்பு வனிசை.

இன்று அதிகாலை 5.13 வரை அமிர்த யோகம். பின்னர் காலை 6.20 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.

நல்ல நேரம்:

காலை : 06.30.30 முதல் 07.30 மணி வரை

பகல் : 01.30.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=454&dpx=2&t=1773628322

  • 332

Good Morning...

  • 352