என்ன ஒரு அழகான நடை
நேர்த்தியான நடைபயிற்சி
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உறவுகள் வழியில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
ரிஷபம்
கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். திடீர் பணவரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் ஏற்படும். அணுகு முறையில் சில மாற்றம் ஏற்படும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். நன்மை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். நட்பு வட்டம் விரிவடையும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆடை ஆபரணங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
சிம்மம்
அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களில் விவேகம் வேண்டும். கொடுக்கல் வாங்கலால் வேறுபாடுகள் உண்டாகும். வியாபார ரகசியங்களை பகிராமல் இருக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பணிகளில் முன் கோபமின்றி செயல்படவும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கன்னி
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவினங்களை அறிவீர்கள். தோற்ற பொழிவில் சில மாற்றம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். சினம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் ரீதியான சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். மனத்தில் இருந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். பண வரவு மத்தியமாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மறதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
தனுசு
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவு ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அசதியும், சோர்வும் அவ்வப்போது தோன்றி மறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
நண்பர்களுக்கு இடையே விவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
தேக ஆரோக்கியம் பொலிவு கூடும். அலைபாயும் மனதினால் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
நீதியரசர் சூரியமூர்த்தி அவர்கள் கூறுகிறார்,
"எனக்கு அப்போது ஒரு பதினைந்து பதினாறு வயது இருக்கும், தீவிர கடவுள் மறுப்பாளராக இருந்தேன். அந்த சமயத்தில், எங்கள் கிராமத்தில், எங்களுக்கு சொந்தமாக ஒரு தென்னந் தோப்பு இருந்தது. அதில், ஒரு இஸ்லாமிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்தில், ஒரு நபரிடம், மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட விஷக்கடி கண்ட மக்கள் வருவார்கள். அப்படி வரும் அவர்களிடம், அந்த நபர் அவர்கள் தலையின் மீது ஒரு வேப்பிலை கொத்து வைத்து, ஏதோ உச்சரிப்பார் , பிறகு அந்த நோயாளி நலமுடன் வீடு திரும்புவார்.. இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. அந்த இஸ்லாமிய நபரிடம், "நீங்கள் முனுமுனுக்கும் விஷயம்தான் என்ன?" என்று நான் கேட்டபொழுது, "உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, உன்னிடம் இதை கூற முடியாது. ஒருவேளை உனக்கு நம்பிக்கை வந்தால் பிறகு வா பார்க்கலாம்" என்று கூறி அனுப்பிவிட்டார்.
காலங்கள் உருண்டோடின. நான் சட்டம் பயின்று, வேலை கிடைத்து, படிப்படியாக பாண்டிச்சேரியின் நீதிபதியாக உயர்ந்துவிடடேன். இந்த காலங்களில் நான் தீவிர சைவசமய நம்பிக்கையாளனாகவும் மாறி இருந்தேன். ஒரு நாள் எனக்கு அந்த இஸ்லாமிய நபரின் நினைவு வந்தது.. உடனடியாக நேரில் எங்கள் தென்னந்தோப்புக்கு சென்று, அவரிடம், "இப்பொழுதாவது கற்றுத் தருவீர்களா?" என்று கேட்க, ஆச்சரியத்துடன் என்னை நோக்கிய அவர், "போய் குளித்துவிட்டு வா.. உனக்கு உபதேசிக்கிறேன்" என்றார்.
நான் குளித்து முடித்து வந்ததும், என்னைக் கீழே அமரச் செய்து என் காதில் அவர் அந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சரியம் தாளவில்லை.. ஏனெனில் அவர் ஓதியது திருநாவுக்கரசர், விஷம் கண்டு இறந்து விட்ட அப்பூதியடிகளின் மகனை காப்பாற்ற பாடிய தேவாரப் பாடல்..
அவர் அந்த முழு பதிகத்தையும் என் காதில் ஓதி முடித்தவுடன், "இது எங்கள் தேவாரப்பாடல் ஆயிற்றே" எனக்கேட்க.. "அவர் எனக்கு இதெல்லாம் தெரியாது. என் குருநாதர் எனக்கு சொல்லி கொடுத்தார் அதைக் கொண்டு நான் வைத்தியம் செய்கிறேன்" என்று கூறி எனக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இன்னதென்று தெரியவில்லை, அதன் அர்த்தமும் தெரியவில்லை.. அதன் மூலமும் உணரவில்லை.. ஆனாலும் நம்பிக்கையுடன் ஓதுபவர்களுக்கு அதன் பலன்கள் கிடைக்கிறது.
தேவாரப் பாடல்கள் அனைத்தும் மந்திரச் சொற்களால் நிரம்பியவை. அவைகள் தமிழ் வேதத்தின் ஒரு அங்கம். நம் தமிழ் மக்கள் குறைதீர்க்க இறைவன் நமக்கு அளித்த பொக்கிஷம்.. இது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்?
திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பாக, 'விதியை வெல்வது எப்படி?' என்று ஒரு புத்தகம் சில காலங்களுக்கு முன் வெளியானது. சகாய விலையில் கிடைக்கும் அந்த புத்தகம் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும். அதில் எந்த பதிகம் எந்த பலனை அளிக்கும்? என்று விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 28.12.2025.
இன்று காலை 07.46 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று அதிகாலை 05.18 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.
இன்று காலை 07.20 வரை வரீயான். பிறகு பரிகம்.
இன்று காலை 07.46 வரை பவம். பின்னர் மாலை 06.14 வரை பாலவம் . பிறகு கௌலவம்.
இன்று அதிகாலை 05.18 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.25 வரை மரண யோகம். பிறகு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 03.00 முதல் 04.00 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மேஷம்
குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் அமைதி இன்மை ஏற்படும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
மனதில் நினைத்த காரியம் கைகூடும். பெற்றோர் இடத்தில் ஆதரவுகள் மேம்படும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும். வீடு விற்பனையில் கவனம் வேண்டும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் உருவாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். ஆக்கபூரவமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
மிதுனம்
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான சிந்தனைகள் ஏற்படும். பொருளாதார ரீதியில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கடகம்
உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு வகைளில் ஆதாயம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயணம் மூலம் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மற்றவர்கள் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிலும் பொறுமை வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கன்னி
சவாலான செயல்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஒற்றுமை ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
துலாம்
குடும்பத்தில் மதிப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். மனதளவில் இருந்த சஞ்சலங்கள் விலகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து சேமிப்பை பயன்படுத்துவீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். சினம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
தனுசு
நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். சில விஷயங்களை போராடி மேற்கொள்வீர்கள். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். எதிலும் உழைப்புகள் அதிகரிக்கும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிகப்பு
மகரம்
மனதளவில் புதிய தைரியம் உருவாகும். சுபகாரியங்களுக்கான எண்ணங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் மேம்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியங்கள் ஆதரவாக இருப்பார்கள். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம்
கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். தள்ளிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் மேம்படும். தனம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம்
எந்த செயலிலும் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பழைய நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலக ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 12 ஆம் தேதி சனிக்கிழமை 27.12.2025.
இன்று காலை 09.21 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று காலை 06.06 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.
இன்று காலை 09.30 வரை வியதீபாதம். பிறகு வரீயான்.
இன்று காலை 09.21 வரை வனிசை. பின்னர் இரவு 08.34 வரை பத்தரை. பிறகு பவம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
ஒரு நாள் ஒரு படித்த இளைஞன் ஒருவன் பகவான் தரிசனத்திற்கு வந்தான்.
வந்தவன் சோபாவின் அருகே சென்று பகவானைப் பணிந்து விட்டு எதிரே உட்கார்ந்தான். அவன் முகத்தைப் பார்த்தால் பகவானிடம் ஏதோ கேள்விகள் கேட்க வந்தவன் போல் தோன்றியது.
ஹாலில் அனைவரும் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். அந்த மௌனத்தைக் கலைத்து எழுந்தது இளைஞனின் கேள்வி.
"சுவாமி, ராமகிருஷ்ண பரஹம்சர் விவேகானந்தரைத் தொட்ட மாத்திரத்தில் நிர்விகற்ப சமாதியில் நிலைப்பெறச் செய்தாரே! அதுபோல் பகவானும் என்னை நிர்விகற்ப சமாதியில் நிலைபெறச் செய்ய முடியுமா? என்று கேட்டான்.
பகவான் பதிலேதும் கூறவில்லை.
இளைஞனோ தன் கேள்விக்கு விடையை ஆவலுடன் எதிர்நோக்கினான்.
சிறிது நேரத்திற்குப் பின் பகவான் அந்த இளைஞனைப் பார்த்து,
கேட்பது விவேகானந்தர் தானோ!" என்றார்.
அவ்வளவு தான் அவன் பதிலேதும் கூற முடியாமல் மௌனியானான்.
தன் கேள்வியே தனக்குத் தோல்வியாக முடிந்ததை உணர்ந்து சிறிது நேரத்தில் எழுந்து போய்விட்டான்.
அந்த இளைஞன் எழுந்து வெளியே சென்ற பிறகு பகவான் அதைப்பற்றித் தொடர்ந்தார்.
"யாருக்கும் தன் நிலையைப் பற்றிக் கவலையேயில்லை.
தான் எல்லம் உணர்ந்த பூரணன் என்பதுதான் அவர்களின் முடிவு.
காரணம், தன்னைப்பற்றிய விசாரத்தில் மனம் சொல்லாததேயாகும்.
மேலும், தன்னைப்பற்றி விசாரிப்பதற்குப் பதிலாக மனம் பிறரை ஆராயத் தொடங்குகிறது.
இந்த ஆராய்ச்சி தான் சகல அனர்த்தங்களுக்கும் விபரீதங்களுக்கும் இடம் அளிக்கிறது.
இந்தச் சாமியார் சோபாவில் உட்கார்ந்திருக்கிறாரே!
இவரைச் சுற்றியும் நிறைய பேர் உட்கார்ந்து இருக்கிறார்களே!
இவர் பெருமை தான் என்ன?
நான் கேட்பதைச் செய்து காட்டுவாரா பார்க்கலாம்!" என்பதே அந்த இளைஞனின் நோக்கம்.
ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் போன்ற சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறதா என்பதை அறிய முற்பட்டானேயன்றி,
கேட்கும் தான் விவேகானந்தரைப் போன்றவன்தானா என்பதைப் பற்றி சிந்திக்கவில்லை. ஏனென்றால், தன்னிடம் எல்லாத் தகுதியும் இருப்பதாக நினைப்பு.
அதில் சந்தேகமிருந்தால் தானே அதைப்பற்றி விசாரணை எழும். தான் விவேகானந்தரைப் போன்றவன்தானா என்னும் விசாரமிருந்தால் இந்தக் கேள்விக்கே இடமில்லை.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தர் ஒருவருக்குத்தான் அப்படிச் செய்தாரென்பதும் அவனுக்குத் தோன்றவில்லை.
மனம் பிறரை ஆராய்வதை விட்டுத் தன்னை ஆராய முற்பட்டால் எந்தக் கேள்வியும் எழாது.
எல்லாக் கேள்விகளுக்கும் சமாதானம் தனக்குள்ளேயே இருப்பதை அப்போது உணர்வான்" என்று கூறி முடித்தார்.
பகவான் அருளிய இந்த உபதேசம் அந்த இளைஞனுக்கு மட்டுமே அல்ல.
அவன்தான் எழுந்து போய் விட்டானே!
நம் ஒவ்வொருவருக்கும் தான். இந்த அரிய உபதேசம் அருளப்பட்டது.
மனம் பிறரை ஆராயத் தலைப்படுவதைத் தடுக்க வேண்டுமானால்,தன்னை ஆராய்ந்து அடங்க வேண்டும்.
இதுதான் நமது ஸ்ரீ ரமண பகவானது தலையாய உபதேசமாகும்.
பொதுவாக காலை எழுந்ததும் ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பலரும் கூறுவர். அதில், சிலருக்கு குழப்பம் இருக்கும். அந்தக் குழப்பம் என்னவெனில், பல் துலக்கி விட்டு தண்ணீர் குடிக்க வேண்டுமா, இல்லை பல் துலக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டுமா என்பது தான்.
நீங்கள் காலை எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன்பே தண்ணீர் குடிக்கலாம். உண்மையில் இந்த நடைமுறை உங்களுக்கு நன்மையைத் தரும். நீங்கள் இரவில் உறங்கும் போது உடலில் உள்ள நீரை உங்களின் உடல் பயன்படுத்தி விடும்.
மேலும், நள்ளிரவில் எழுந்து நீங்கள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அதனால் தான் நீங்கள் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவது. அது உங்களை நீரேற்றம் செய்ய உதவும். இரவில் தூங்கும் போது வாயில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் பெருகும்.
பல் துலக்குவதற்கு முன் காலையில் தண்ணீர் குடிப்பதன் மூலம் அது உங்கள் வாயை சுத்தம் செய்ய பல் துலக்குதலை எளிதாக்கும். அதுமட்டுமின்றி, பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்வது, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடைய செய்யும்.
இதனால், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது குறையும். மேலும், பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடித்தால், உயர் இரத்த அழுத்தம் குறையும்.
மேலும், இதனால் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படும். இரைப்பை அழற்சி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடலாம்.
அதுமட்டுமின்றி, இந்தப் பழக்கத்தால் சருமம் மற்றும் தலைமுடி இரண்டும் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும். பல் துலக்கிய உடன் ஏதேனும் சாப்பிட வேண்டும் எனில், அதற்கு நீங்கள் 15-லிருந்து 20 நிமிடங்கள் காத்திருந்து பின்னர் சாப்பிடவும்.
காலையில் தண்ணீர் குடிப்பதால் நமக்கு பல நன்மைகள் உள்ளன. இந்தப் பழக்கத்தின் மூலம் நீங்கள் உங்களை நாள் முழுவதும் வலுவாக வைத்திருக்க முடியும். முடிந்தவரை பல் துலக்கிய உடன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம். வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும். இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்...
பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்...
இந்த வேப்பம்பூ , ஒரிஜினல் மலைத்தேன் , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான் இதன் விஷேஷமே...
வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் அனைத்தும் ஓடிப்போகும் தானே...?
பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்... பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..?
வேப்பம் பூ... சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளவாக பார்வையை கவர்வதில்லை... ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்... மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி மாதத்தில்...
கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி... என்பதெல்லாம் தாண்டி "சுகரு" க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி... நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..
இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்... பங்குனியில் ரொம்ப அதிகம்..
எப்படி சாப்பிட..? சுலபம்..... அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி ... வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவைன்னா ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு... தட்ஸ் ஆல்..
இல்லைன்னா பச்சடி, ரசம், துவையல், அவியல்னு ஆயிரம் மெனு செய்யலாம்... செய்து சாப்பிடுங்க...
நம்ம பெரியவங்க , இதை நாம சாப்பிட வேண்டும்.. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..
இந்த ஆண்டிலிருந்து அதிகளவில் மருத்துவமனை செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம் பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்கள்....
சின்னம்மை, பெரிய அம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிறு ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதே போன்று காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில்
பாசிப்பயிறு சிறந்த மருத்துவப் பொருளாக பயன்படுகிறது.
மனத்தக்காளி கீரையுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து சாப்பிட்டால் வெயில் கால உஷ்ணக்கோளாறுகள் குணமடையும். குறிப்பபாக ஆசனவாய் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு. இது சிறந்த பருந்தாகும்.
பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் வைத்து சாப்பிட்டால் பித்தமும் மலச்சிக்கலும் குணமாகும்.
பாசிபருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து
உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும்..
குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக பாசிப்பயிறு மாவு தேய்த்து குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சிகைக்காய்ப்போல தேய்த்து குளித்தால் பொடுகுத் தொல்லை போகும்.
உடலின் ஒவ்வொரு அங்கமும், ஒவ்வொரு உறுப்புக்களும் அவசியமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு உறுப்பை அகற்றினாலும் அதன் பின்விளைவுகள் இருந்தே தீரும். இதில் பற்களும் உள்ளடங்குகிறது.
பற்கள் என்பதும் கூட உடல் சமநிலையை பேணும் ஒரு அங்கம் ஆகும். அதனால் தான் இரண்டும் பக்கமும், மேல் கீழும் சம அளவில் பற்கள் காணப்படுகின்றன. பற்களை பிடுங்கும் பொழுது அந்த சமநிலை அற்று போகும். சிலருக்கு வெர்டிகோ என்ற பிரச்சினை உள்ளது. அதாவது தலை சுற்றுவது போன்ற ஒரு உணர்வு. பற்களின் பிரச்சினையால் கூட இது ஏற்பட வாய்ப்புண்டு.
ஆகவே பற்களை பேணுங்கள். அலட்சியம் வேண்டாம்.
பற்பசையை பாவிக்காது விட்டாலேயே பற்கள் மிக ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை மூலிகை பொடிகளை பாவியுங்கள்.
என்றும் பல் தூரிகை தெரிவு செய்யும் பொழுது மென்மையான (SOFT) தூரிகையை தெரிவு செய்யுங்கள். அழுத்தி பல்லை விளக்க வேண்டாம். நீண்ட நேரம் விளக்கவும் வேண்டாம்.
குளிரான, சூடான உணவுகளை உண்ணாதீர்கள்.
பழங்கள், பச்சைகாய்கறிகளை அடிக்கடி மெல்லுங்கள்.
கடையில் விற்கும் குளிர்பானங்கள் மற்றும் சகல தீங்கான உணவுகளை உண்ணாதீர்கள். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் முதலில் தாக்குவது பற்களையே.
இரவில் உறங்கப் போகும் பொழுது மஞ்சள் மற்றும் கல் உப்பு கலந்த நீரை சிறிது நேரம் நன்கு வாயில் வைத்தே கொப்பளித்து பின்னர் துப்பி விட்டு அப்படியே விட்டு விட்டால் சொத்தை பல் வலி குறையும்.
எண்ணெய்க்கு பதில் கற்றாழை சாறு கொண்டு "ஆயில் புல்லிங்" பண்ணலாம். இது கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.
கொய்யா (Guava) ஒரு ஆரோக்கியமான பழமாகும், இதில் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் உள்ளன. இதனை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதே நேரத்தில், சிலருக்கு இது தகுந்த முறையில் இருக்காவிட்டால் சில தீமைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
கொய்யா கனியின் நன்மைகள்:
உடல் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு:
கொய்யாவில் அதிக அளவிலான C வைட்டமின் உள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவும்.
கூழ்மிகுந்த ஆரோக்கியம்:
கொய்யாவில் நார்ச்சத்து (fiber) அதிகம் உள்ளது, இது செரிமானத்தை சீராக்க உதவுகிறது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தல்:
இது தமனி நோய் (diabetes) உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பயன்படும்.
இதயம் ஆரோக்கியமாக்கல்:
கொய்யா பிளவுகளும், விதைகளும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
தடிப்பு மற்றும் எடை குறைப்பு:
குறைந்த கலோரி கொண்ட இதை சாப்பிடுவதால் எடை குறைப்பு சுலபமாக்கும்.
மலச்சிக்கலுக்கு தீர்வு:
கொய்யாவின் நார்ச்சத்து மலச்சிக்கலை சரிசெய்ய உதவும்.
சரும சுறுசுறுப்பு:
கொய்யாவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.
கொய்யா கனியின் தீமைகள்:
கடுமையான சடசடியான வயிற்று பிரச்சனை:
அதிக அளவில் கொய்யாவை சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி அல்லது சத்தம் ஏற்படலாம்.
சீரிய உணவுக் கொள்கை பிரச்சனைகள்:
சிலருக்கு கொய்யா உணவில் மொத்தமாக செரிமானம் ஆகாமல், மலம் கடினமாகும் நிலை ஏற்படலாம்.
அதிக அளவில் பீஜங்களை சாப்பிடுவது:
கொய்யா விதைகள் அதிகமாகச் சாப்பிடுவது சிறுநீரக கற்களை உருவாக்கக்கூடும் என்ற ஆய்வுகள் சில கூறுகின்றன.
அலர்ஜி (Allergy):
சிலருக்கு கொய்யா சாப்பிடுவதால் தோல் அல்லது அலர்ஜி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
மிகப்பெரிய பரிந்துரை:
தினசரி அளவில் மிதமாக கொய்யா கனியை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானதாகும்.
எந்தவொரு காய்கறி அல்லது பழத்தையும் போலவே, உங்கள் உடல் கொய்யாவை எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதை கவனித்து சாப்பிடவும்.
ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரா்,ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்தபோது, அவரைக் கண்ட ஏழை விவசாயி ஒருவன். கல்லோடு ஆயினும் சொல்லி அழு..!! என்ற கேள்வியைக் கேட்டான்.
ஆதிசங்கரா் அவனிடம், "மகனே, இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உனக்கு பதில் அளிக்கிறேன்!" என்றாா்.
அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான். சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தாா். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தாா்.
அதற்கு அவன்,"எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றான்.
" ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?"
"மரப் பாலத்தை கடக்கிறபோது, திடீா்னு வழுக்கி விழுந்தால், பிடிச்சுக்கத்தான் சுவாமி!"
"உன் கேள்விக்கும் அதுதான்பா விடை!..
அவரவர் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை அடையமுடியும். ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால், அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, ஆண்டவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றாா் ஆதிசங்கரா்.
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவா்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை.
நாம் வழிபடவும்,வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள்; நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும் அவா் வேண்டும்.
எனவே தான்
"கல்லோடு ஆயினும் சொல்லி அழு"
என முன்னோா்கள் சொல்லியிருக்கிறாா்கள்.!
ஊடகங்களின் தவறான வதந்தியால் ஜனகராஜ்க்கு வாய்ப்புகள் பறி போனது...
தன்னைப்பற்றி தவறான வதந்திகள் பரவி வருவது தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாக பழம்பெரும் நடிகர் ஜனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடியில் கலக்கி கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு இணையாக காமெடியில் அசத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனகராஜ். 1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜனகராஜ், தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
ரஜினி கமல் முதல் புதுமுக நடிகர்கள் வரை பலருடன் இணைந்து காமெடியில் கலக்கிய ஜனகராஜ் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.
200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜனகராஜ், 80 ல் தொடங்கி 90-களின் இறுதிவரை பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாத ஜனகராஜ் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல் வெளியானது.
ஆனாலும், ஜனகராஜ் தற்போது சென்னையில் தான் இருக்கிறார், சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் நான் அமெரிக்காவிற்கே போனது இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு விசாவே கிடையாது. போகாத ஒரு நாட்டுக்கு நான் போனதாக சொல்கிறார்கள். இது பற்றி எத்தனை பேருக்கு விளக்கம் கொடுக்க முடியும்.
நான் அமெரிக்காவில் இருக்கிறேன் என்று சொல்வதால், எனக்கான சினிமா வாய்ப்பும் வராமல் போகிறது. அதேபோல் நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், ரஜினி சார் என்னை
வந்து பார்த்ததாகவும், சொல்கிறார்கள். இதெல்லாம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. இதையெல்லாம் கேட்கும்போது கஷ்டமாக இருக்கிறது. கொரோனா வந்ததிலிருந்து எனக்கு ஒரே அழுத்தம், மன உளைச்சலாகத்தான் இருந்தது. ஒரு வழியாக கோவிட் முடிந்தது. அதற்கு பிறகும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.
ஒரு அடியார் குடும்பம், காசிக்குச் சென்று ஈசன் திருவிளையாடலால் அங்கேயே தங்க நேரிடுகிறது. கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள்.
மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை. ”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே” என்று,
ஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா.. நான் இறைவன் ஈசன் சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம்” என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட “அம்மா.. நீ பெண்.
தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்” என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும்
"காசி விஸ்வநாதர் மீது ஆணை.. என்னை தொந்தரவு செய்யாதீர்கள்" என்று கூறி ஒதுங்கி விடுகிறாள். பிறகு, வேறு வழியில்லை என்பதால், தன்னிடம் இருக்கக்கூடிய நில, புலன்களை எல்லாம் விற்று, “அம்மா ஒரு வேளை நான் இறந்து போய்விட்டாலும், இந்த செல்வத்தைக் கொண்டு, பிறரை நாடாமல், கையேந்தாமல் வாழ்ந்து கொள்” என்று ஏற்பாடு செய்து, ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு, சில காலங்களில் இறந்தும் விடுகிறார்.
“தந்தை எனக்கு சில விஷயங்களை போதித்தார், அவற்றை செயல்படுத்தினால் என்ன?” என்று மகளுக்கு ஒரு ஆசை. எனவே, பல ஊர்களில் இருந்து காசிக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக, தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும், உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க, காலம் செல்லச் செல்ல இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார் என்று அறிந்து பலர், மருத்துவ உதவி, கல்வி உதவி வேண்டும் என்று கேட்க, இவளும் செய்து கொண்டே வருகிறாள்.
உலகிற்கே படியளக்கும் ஈசன் சும்மா இருப்பானா, அவன் திருவுள்ளம், இந்தப் பெண்ணை, சோதிக்க எண்ணியது. அந்தக் காசி மாநகரம் முழுவதும், இவள் புகழ் பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து, தந்து, ஒரு கட்டத்தில், வறுமை இவளை சூழ்ந்து கொண்டது.
இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க, வேறு வழியில்லாமல், அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள். ஒரு கட்டத்திலே, அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல், ”முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு” என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள்.
இரவில் படுத்தால், இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால், அச்சமும் ஆட்கொண்டுவிட்டது. இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி “எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமோ, இப்படிக் கடனாக என்னை இடர்படுத்துகிறது. இறைவா.... நான் செய்தது சரியோ? தவறோ? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால், என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன். ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும், கடனை, திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்றுதான் கேட்கிறேன்” என்று மனம் உருகி, இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.
ஒரு நாள், ஒரு பழுத்த மகான், இவளைத் தேடி வருகிறார். ”மகளே.. கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே, மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார் அவரைச் சென்று பார். உனக்கு உதவி கிடைக்கும்” என்று அந்த மகான் கூறுகிறார். “எனக்கு அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா?” என்ற அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது. என்றாலும், துறவி கூறியதால், அன்று மாலை அந்த செல்வந்தர் இல்லத்திற்குச் செல்கிறாள். அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை. இருந்தாலும் கூட, மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால், அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார்.
அவரைச் சுற்றி ஊர்ப்பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையிலே ”பெண்ணே! உனக்கு என்ன வேண்டும்? எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்?” என்று செல்வந்தன் கேட்க, இவள் தயங்கி, தயங்கி, தனக்கு ஏற்பட்டுள்ள கடன், மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கூறி, “ஐந்து லட்சம் கடன் ஆகிவிட்டது. பலரிடம் கடன் வாங்கியதால், எல்லோரும் இடர் படுத்துகிறார்கள். எனவே, நீங்கள், ஐந்து லட்சம் தந்தால், காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது சிறு, சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன். நீங்களோ, மிகப்பெரிய செல்வந்தர். ஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார்” என்று தயங்கி, தயங்கி கூறுகிறாள். அந்த செல்வந்தர் யோசிக்கிறார். இவள் மிகப் பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது. ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லட்சம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். தர முடியாது என்றால் இவள் மனம் வேதனைப்படும். நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும் என்று எண்ணி, அந்த செல்வந்தர் மிக சாமர்த்தியமாகப் பேசுகிறார்.
“பெண்ணே! நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது. உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும், நீர்த்தடங்களை அமைப்பதும், கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன். ஆனால், உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா? சரி.
உன் செல்வத்தை தர்மம் செய்தாய். ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி, தர்மம் செய்தாய்? கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா?சரி.. நீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும், இப்படி தர்மம் செய்த நீயே, நடு வீதிக்கு வந்து விட்டாய். எப்படி உன்னால், என்னிடம் வாங்கிய கடனை, திருப்பித் தர முடியும்? அடுத்ததாக, நான் கடன் கொடுத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய்.எதை நம்பி, நீ கேட்கின்ற அந்த பெரிய தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது?” என்று அந்த செல்வந்தர் கேட்கிறார். இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி,
”அய்யா! நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதோ ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன். அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை. உங்களிடம் கோடி, கோடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர்மக்கள் சொல்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக, சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள்” என்று கேட்கிறாள்.
“மன்னித்து விடு பெண்ணே.. அடமானம் இல்லாமல், நான் எதுவும் தருவதற்கு இல்லை” என்று செல்வந்தர் கூற, அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு, ”அய்யா.. உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளீர்கள். நானும், என் தந்தையும் ஆங்காங்கே, பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று.
தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம் கூட, அடியேன் கட்டியதுதான். இந்த நீரை, தினமும், ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள்.
ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன. இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா.. என்றாலும், இந்த பொதுக் குளத்தை, எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை.
இருப்பினும், எனக்கு உடன்பாடில்லை என்றாலும், நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்த திருக்குளத்திலே, நாளைக் காலை, சூரிய உதயத்தில் இருந்து, யாரெல்லாம் நீர் பருகிறார்களோ, அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன். ஐந்து லட்சத்திற்கு உண்டான அசல், வட்டிக்கு சமமான புண்ணியம், எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ, அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன்” என்று கேட்க, அந்த செல்வந்தர் சிரித்துக் கொண்டே, ”பெண்ணே! ஏதாவது ஒரு பொருளைத்தான் அடமானம் வைக்க முடியும். பாவ புண்ணியங்களை அல்ல. ஒரு பேச்சுக்கு, நீ கூறியபடி, நீரைப் பருகுவதால் ஏற்படும் புண்ணியம், என் கணக்குக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும், புண்ணியம் அரூபமானது. கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து, புண்ணியம், என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்று கேட்கிறார்.
“அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன்.
என்னுடன் வாருங்கள் என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி, ”எம்பிரானே! அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும், கடனிலிருந்து தப்பிக்க, இந்த அபவாதத்தை செய்கிறேன். ஈசனே, இந்த திருக்குளத்தின் அடியில் நீ இருக்க வேண்டும். எப்பொழுது, அடியேன் கணக்கில் இருந்து அசலும், வட்டியுமான புண்ணியம், இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ, அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும். "ஈஸ்வரா" என்று கூறி, பல முறை பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி, அடியாட்களின் துணை கொண்டு, அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி, திருக்குளத்தின் நடுவே இடுகிறாள். சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது. பிறகு, அந்த செல்வந்தரைப் பார்த்து, ”அய்யா.. நீரின் உள்ளே இருப்பது, வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாக்ஷாத் சவபெருமான் தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை, சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களோ, எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால், எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து, தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ, அப்பொழுதே, இந்த சிவலிங்கம் மேலே வந்து மிதக்கும்”என்று கூறுகிறாள்.
செல்வந்தரோ நகைத்து, ”அம்மா! சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே” என்றார் கிண்டலாக. இளம் பெண்ணோ.. “இல்லை. நம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும். இதைக் கல் என்று பார்க்காதீர்கள். பகவான் என்று பாருங்கள்” என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள். செல்வந்தர் யோசிக்கிறார்.
'இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து, பணம் தர மாட்டேன் என்றால், நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும். மேலும், இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது, இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால், இவள் புண்ணியவதி என்பதை நானும், ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும். மாறாக நடந்தால், இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும்' என்று எண்ணி, அவள் கேட்ட தொகையைத் தருகிறார்.
அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று யார், யாருக்கு தர வேண்டுமோ, அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு “இறைவா! உன்னை நம்பித்தான், இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே” என்று வேண்டிக் கொண்டு நிம்மதியாக சிவனை நினைத்து உறங்கச் செல்கிறாள்.
இங்கே செல்வந்தரோ, ”அவசரப்பட்டு விட்டோமோ? ஏமாந்து பெருந்தொகையை கொடுத்து விட்டோமோ?” என்று உறக்கம் வராமல், எப்பொழுது விடியும்?
என்று பார்த்து, விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து, ”நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு, கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு, ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன என்று குறித்துக் கொண்டே வாருங்கள். எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும்” என்று ஏற்பாடு செய்து விட்டு, அன்று விடிந்ததும் வீட்டின் மேல்விதானத்தில் அமர்ந்து கொண்டு, குளக்கரையை பார்வையிட துவங்குகிறார்.
விடிந்து, காலை மணி ஆறு ஆகிறது. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று, குளத்து நீரை அருந்தி விட்டு மறுபக்கம் செல்கிறது. அவ்வளவு தான். குபுகுபுவென தூப, தீப, சாம்பிராணி, குங்கும சந்தன மணத்தோடு மேளத்தாளத்தோடு, உடுக்கை ஒலிக்க எம்பெருமான் சிவலிங்கம் மேலே வந்து மிதக்கிறார்
அவ்வளவுதான்.....
அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கி நிலைகுழைந்து தரையில் அமர்ந்து விட்டார். “ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே, ஐந்து லட்சத்திற்கு சமம் என்றால், அந்த புண்ணியவதி செய்த அறப்பணிகளுக்கு முன்னால், என் செல்வம் அத்தனையும் வீண்”
என்பதை புரிந்து கொண்டு, என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே.. செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள்.” என்று கூற, ஊரே சென்று பார்த்தது.
அதன் பிறகு, தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து, அந்த பெண்ணை தன் பெண்ணாக தத்து எடுத்து கொண்டு, தானும் கடைசிவரை தர்மம் செய்து வாழ்ந்தார். இது 300-400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்
தர்மங்களை செய்கிறோம்? இருப்பினும் நம் வாழ்க்கை சிறக்கவில்லையே? ஒரு வேளை நாம் முட்டாள்தனமாக வாழ்கிறோமா? மற்றவர்கள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக வாழ்கிறார்களே? நாமும் அது போல வாழவில்லையே? தனத்தை சேர்த்து வைக்கவில்லையே? என்ற எண்ணம் வரும் போதெல்லாம், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தால், மனதிற்கு கட்டாயம் உற்சாகம் கிடைக்கும்.
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 26.12.2025
வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று காலை 06.34 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.
இன்று பிற்பகல் 11.41 வரை சித்தி. பிறகு வியதீபாதம்.
இன்று காலை 10.37 வரை தைத்தூலம். பின்னர் இரவு 09.59 வரை கரசை . பிறகு வனிசை.
இன்று காலை 06.25 வரை மரண யோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை


























