·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1304
  • More

என்ன ஒரு அழகான நடை

நேர்த்தியான நடைபயிற்சி

Comments (0)
Login or Join to comment.
·
Added article

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை பூனம் பாஜ்வா, தற்போது பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குட்டி டவுசர் மற்றும் முண்டா பனியனுடன் ஓவர் கவர்ச்சியான உடையில் எடுத்துள்ள போட்டோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அவர் நடித்த முக்கியமான படங்களில் Seval, Thenavattu, Romeo Juliet மற்றும் Jayikkira Kudhira ஆகியவை குறிப்பிடத்தக்க படங்களாகும். இந்த படங்கள் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து, கவர்ச்சியான கதாபாத்திரங்களில் அதிகம் தோன்றத் தொடங்கிய அவர், முத்தினகத்திரிக்காய், அரண்மனை 2 மற்றும் குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்தார். நடிப்பைத் தவிர சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, தொடர்ந்து கவர்ச்சியில் தூக்கலாக இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் சுமார் 40 லட்சம் ரசிகர்களை வைத்து இருக்கும் இவர், தற்போது கடற்கரை மணலில் குட்டி டவுசர், முண்டா பனியனுடன் ஓவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் "கிளாமர் குயின்" என வர்ணித்து வருகின்றனர். இந்த போட்டோவை அவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

தற்போது பூனம் பாஜ்வாக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லாததால், தொடர்ந்து இதுபோன்ற போட்டோக்களை பகிர்ந்து படவாய்ப்பை பெற முயற்சி செய்து வருகிறார். அழகான திறமையான நடிகையான இவர், சரியான கதைகளை தேர்வு செய்ய தவறியதால், இவருக்கு படவாய்ப்பு குறைந்துவிட்டது.

  • 44
·
Added article

‘கருப்பு’ படம் எப்போது வெளியாகும் எனத் தெரியவில்லை என ஆர்.ஜே.பாலாஜி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தினை இயக்கியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்படம் எப்போது வெளியீடு என்பதே தெரியாமல் உள்ளது. ‘கருப்பு’ படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருப்பது தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

டி20 உலகப் கோப்பை போட்டிகளில் தமிழ் வர்ணனையாளராக பணிபுரிந்து வந்தார் ஆர்.ஜே.பாலாஜி. நேற்று நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி வர்ணனையின் போது ஆர்.ஜே.பாலாஜி, “ரச்சின் ரவீந்திராவையே ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி ரிலீஸ் செய்துவிட்டது. ஆனால், நான் எடுத்த படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.

இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அனைத்தும் விரைவில் சரியாகும் என ஆர்.ஜே.பாலாஜிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, த்ரிஷா, அனகா மாயா ரவி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ள படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.ஜே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

  • 47
·
Added article

வைகை புயல் வடிவேலு தற்போது தமிழ் திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கியுள்ளார். முன்பு போல காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், தற்போது குணசித்திர மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த மாற்றம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீப காலத்தில் வடிவேலு நடித்த படங்கள் அவரது நடிப்பு திறனை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக கடைசியாக வெளியான மாரீசன் திரைப்படத்தில் அவர் நடித்த விதம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த படத்தில் அவர் நடித்த நடிப்பு தனித்துவமான பாராட்டுகளை பெற்றது.

ஒருகாலத்தில் கோலிவுட்டில் வடிவேலு மிகவும் பிஸியான நகைச்சுவை நடிகராக இருந்தார். அந்த நேரத்தில் நடிகர் விஜயகாந்துடன் ஏற்பட்ட மனஸ்தாபம் பெரிய விவாதமாக மாறியது. அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக கூட்டங்களில் கலந்து கொண்டு அரசியல் மேடைகளிலும் பேசினார்.

அந்த தேர்தல் பிரச்சாரத்தில் அவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் விஜயகாந்த் அதற்கு நேரடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. பின்னர் அந்த சம்பவங்களை நினைத்து வடிவேலு வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த காலக்கட்டத்திற்கு பிறகு வடிவேலுவின் திரைப்பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. சில ஆண்டுகள் அவர் திரையுலகில் இருந்து விலகியிருந்தார். பின்னர் மீண்டும் திரும்பி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்தார், ஆனால் அவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதன்பின் அவர் குணசித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார். அந்த வகையில் மாமன்னன் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து மாரீசன் படத்திலும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட மனிதராக அவர் நடித்தது பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த இரண்டு படங்களும் அவரது புதிய பயணத்தில் முக்கியமான மைல்கற்களாக அமைந்துள்ளன.

  • 48
·
Added a news

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஸ்குகோக் (Scugog) நகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஒண்டாரியோ மாகாண காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்ச் 8 ஆம் திகதி காலை சுமார் 5.55 மணியளவில், போர்ட் பேரி (Port Perry) பகுதியில் உள்ள Highway 7/12 மற்றும் 4th Line அருகே இரண்டு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையாளர்கள் தெரிவித்த தகவலின்படி, எதிர்திசைகளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதே இந்த விபத்திற்கு காரணமாகியுள்ளது.

இந்த விபத்தில் சண்டர்லேண்ட் (Sunderland) பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்னிஸ்ஃபில் (Innisfil) பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் உயிருக்கு ஆபத்தில்லாத அளவிலான கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை நார்த் யோர்க் (North York) பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் கடுமையான காயங்களுடன் ஹெலிகாப்டரின் மூலம் பிராந்திய அவசர சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • 48
·
Added a news

வடக்கு லண்டனில் உள்ள இஸ்லிங்டன் (Islington) பகுதியில் உள்ள ஒரு துருக்கிய நகைக்கடைக்குள் புகுந்த மர்ம கும்பல், கத்திகளைக் காட்டி மிரட்டி நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றபோது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் துணிச்சலாக செயல்பட்டு, துடைப்பம் மற்றும் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கொள்ளையர்களை எதிர்கொண்டனர்.

இருப்பினும், கொள்ளையர்கள் தங்கம் மற்றும் நகைகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதேபோல் ஹார்ட்போர்ட்ஷையர் (Hertfordshire) பகுதியில் உள்ள ஒரு கடையில், கண்ணாடித் தடுப்புகளை உடைக்க செயின்சா பயன்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகைக்கடைகள் மட்டுமின்றி, வீதிகளில் நடந்து செல்லும் செல்வாக்கு மிக்க நபர்களும் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிள்களில் வருவதால், அவர்களை அடையாளம் காண்பது காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

இந்த் தொடர் குற்ற சம்பவங்களைத் தொடர்ந்து, லண்டன் மாநகர காவல்துறை (Met Police) ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும், நகரின் பல முக்கிய வீதிகளில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும், வணிகர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

  • 49
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில் நிதானம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கடகம்: மனதில் இருந்துவந்த பயம் நீங்கி தைரியம் பிறக்கும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள். வெளியூர் பயணம் உண்டு.

சிம்மம்: சாதுர்யமாகச் செயல்பட்டு சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

கன்னி: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: நீண்டநாட்களாக மனதை சஞ்சலப்படுத்திய பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். புது ஆபரணங்கள், ஆடைகள் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஆதரவு தருவார்கள். வெளியூர் பயணத்தால் நன்மை உண்டு.

விருச்சிகம்: எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இழுபறிக்குப் பிறகே முடியும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.

தனுசு: சாதுர்யமாகப் பேசி தடைபட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். திருமண காரியங்கள் கைகூடி வரும். வராது என்றிருந்த தொகை கைக்கு வரும்.

மகரம்: பால்ய நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி அன்பு காட்டுவார். கலைப்பொருட்கள் சேரும். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அடிக்கடி செலவுவைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும்.

மீனம்: எதிர்மறை எண்ணங்கள் மறையும். முகத்தில் தெளிவு பிறக்கும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

  • 131
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி திங்கட்கிழமை 9.3.2026.

இன்று இரவு 11.58 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று மாலை 4. 44 வரை விசாகம். பின்னர் அனுஷம்.

இன்று காலை 08.09 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷனம்.

இன்று காலை 10.59 வரை கரசை. பின்னர் இரவு 11.58 வரை வனிசை. பின்பு பத்திரை.

இன்று மாலை 04.44 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்:

காலை : 06.30.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=447&dpx=2&t=1773028666

  • 144

Good Morning...

Have a Nice day!

  • 138
·
Added article

தமிழில் கவின் ஜோடி​யாக ‘ஸ்​டார்’ படத்​தில் நடித்​தவர் ப்ரீத்தி முகுந்​தன். மலை​யாளத்​தில் ‘மைனே பியார் கியா’, ‘சர்​வம் மாயா’ படங்​களில் நடித்​துள்ள அவர், ‘இத​யம் முரளி’, ஹரீஷ் கல்​யாணின் ‘தாஷமக்​கான்’ உள்பட சில படங்​களில் நடித்து வரு​கிறார்.

தெலுங்கு திரைப்​படங்​களி​லும் நடித்து வரும் அவர், இப்​போது இந்திக்​குச் செல்​கிறார். இவர் கார்த்​திக் ஆர்​யன் நடிப்​பில் உருவாகும் ‘நாகஸில்லா’ என்ற படத்​தில் அவருக்கு ஜோடி​யாக நடிக்க இருக்​கிறார். முதலில் இதில் நடிகை லீலா நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​பட்​டது. இப்​போது ப்ரீத்தி முகுந்​தன் தேர்வு செய்யப்பட்​டுள்​ளார்.

இப்​படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக் ஷன்ஸ் தயாரிக்கிறது. நகைச்​சுவை​யுடன் கூடிய ஃபேன்​டஸி படமாக உருவாகும் இதில் கார்த்​திக் ஆர்​யன் இச்​சா​தாரி நாகமாக நடிக்கிறார்.

  • 209
·
Added article

பிறந்ததிலிருந்தே ஒரு கண் தெரியாது பாகுபலி படத்தால் இரண்டு முக்கிய organ Failure,

Raana Daggubati - நடிகர் ராணா சமீபத்தில் ஒரு இன்டர்வியூவில் மனம் திறந்து பேசி இருந்தார்.. அதில் அவருக்கு சிறுவயதிலிருந்தே ஒரு கண் பார்வை கிடையாதாம் இதற்காக மாற்று அறுவை சிகிச்சை செய்தும் பலன் அளிக்கவில்லையாம்.

மேலும் அவருக்கு சிறுவயதில் இருந்து ரத்த அழுத்தம் இருந்ததாம்... அதனால் ஏற்கனவே அவர் சிறுநீரகம் பாதிப்படைந்து இருந்ததாம்.

பாகுபலி படத்திற்கு அதிக உடல் எடை.. ஏற்ற வேண்டியிருந்ததால் மற்றும் நீண்ட காலம் இதே எடையைப் பராமரிப்பதும், கடுமையான உழைப்பும் அவரது உடல்நிலையை இன்னும் மோசமாக்கியது.

​சிறுநீரக செயலிழப்பு: அவரது தீராத ரத்த அழுத்தம் காரணமாகச் சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதயத்தைச் சுற்றித் தாதுக்கள் படிதல் (Calcification around the heart) போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன.

நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் சில வருடத்துக்கு முன் அவர் மிகவும் ஒல்லியாகி காணப்பட்டார் காரணம் அவர் அமெரிக்காவுக்கு சென்று.. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தார்.

பாகுபலி படத்திற்குப் பிறகு அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து இருந்தன.ஆனால் அவர் உடல் மிகவும் மோசமான நிலைக்கு சென்றதால் அனைத்து அட்வான்ஸயும் திருப்பிக் கொடுத்தார்.

அதன் பிறகு தான் அமெரிக்காவுக்கு சென்று.. அறுவை சிகிச்சை செய்தார் அதன் பிறகு பல மாதங்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார்.

பல மாதங்கள் உப்பே இல்லாத சாப்பாட்டை தான் சாப்பிட வேண்டும். ஒரு மனிதன் சினிமாவுக்காக பாடுபட்டு பாகுபலி என்ற பெரிய வெற்றிக்கு பிறகு வாழ்க்கையில் ஏற்றம் காண வேண்டிய நேரத்தில் சரிவை சந்தித்து ஹாஸ்பிடல் பெட்டில் படுக்கும் சந்தர்ப்பம் எல்லாம் யாருக்கும் வரக்கூடாது.

ஆனால் Raana never giveup என்றே சொல்லலாம் அவரின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி காரணமாக அந்த நோயிலிருந்து முழுவதுமாக குணமானார். இப்பொழுது ஒரு புது மனிதனாக மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்,

கிட்டத்தட்ட மறுபிறவி தான்.....

  • 209
·
Added article

“ஜனகராஜ்” தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத நடிகன். 70களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து, ஆரம்பத்தில் இளையராஜா, கங்கை அமரன் நட்பு கிடைக்க இளையராஜாவின் இசைக்குழுவில் சேர வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டவர் ஜனகராஜ்.

இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகமும் அங்கே கிடைத்தது. உண்மையில் அவரிடம் உதவி இயக்குநராக ஆகவேண்டும் என்னும் ஆசையில் தான் அவரிடம் சேர்ந்தார். ஆனால் நீ நடிகனாகிடு அதுதான் உனக்கு சரியா வரும் என்று சொல்லி ஜனகராஜை நடிக்க வைத்தவர் பாரதிராஜா தான்.

இவரை அரவணைத்த பாரதிராஜா அதே கால கட்டத்தில் கவுண்டமணியையும் அரவணைத்தார். முதல் சில படங்களில் பெரிய அளவிற்கு இவருக்கு காரக்டர்கள் தராவிட்டாலும் பிற்பாடு முக்கிய காரக்டர் தந்திருப்பார். காதல் ஓவியம் படத்தில் கதாநாயகி ராதாவின் கணவர் வேடம் தந்தார்.

ஒரு கைதியின் டைரியில் கமலின் நண்பர் & வளர்ப்பு அப்பா காரெக்டர், முதல்மரியாதை போன்ற க்ளாசிக் படத்திலும் கதையை கெடுக்காத காமெடியாக "நானும் கருப்பு என் பொஞ்சாதியும் கருப்பு புள்ள மட்டும் எப்படி சிவப்பா பொறந்திச்சு" எனக் கதறும் ஜனகராஜை மறக்க முடியுமா.

கடலோரக் கவிதைகளில் ரேகாவின் அப்பா, இப்படி பாரதிராஜா படங்களில் மட்டுமல்ல 80களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார் ஜனகராஜ். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன் இந்த ஏழு பேரையும் அந்த காலகட்டத்தில் செவன் ஸ்டார்ஸ் என்பார்கள்.

இவர்களின் எல்லா படங்களிலும் ஜனகராஜ் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார். பாரதிராஜா, கே.பாலச்சந்தர், பாக்யராஜ், மணிவண்ணன், ஏன் மணிரத்னம் படங்கள் வரை ஜனகராஜிற்கென்றே சிறப்பானதொரு வேடம் அவர்கள் கதையில் இருக்கும்படியே ஸ்கிரிப்ட் அமைந்திருக்கும்.

ரஜினியுடன் படிக்காதவன் முதல் பாட்ஷா வரை ஜனகராஜின் பயணம் இருந்தது “தங்காச்சிய நாய் கச்சிட்ச்சுப்பா என படிக்காதவனிலும் ரிக்‌ஷா காரனாக இருந்து பணக்கார வேடத்தில் சைனா டீயும் மசால்வடையும் வோணும்பா என ராஜாதி ராஜாவிலும், நாசமா நீ போனியா தெரு என..

அண்ணாமலையிலும், மும்பை பாட்ஷாவிற்கு சிறப்பான நண்பனாகவும், மாணிக்கத்திற்கு சிரிப்பான நண்பனாகவும் வந்து நக்மா அவர் ஆட்டோவில் ஏற ரஜினியிடம் நமட்டுச் சிரிப்பில் bye சொல்வது என பாட்ஷாவிலும் இப்படி எத்தனை எத்தனை மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.

அதேபோல் கமலுடன் விக்ரம் படத்தில் அந்த மொழி பெயர்ப்பாளன், அபூர்வ சகோதரர்களில் அந்த ‘தெய்வமே’ இன்ஸ்பெக்டர் காரெக்டர், நாயகனில் கமலின் உயிர் நண்பரான செல்வம், கேரக்டர் மிக மிக முக்கியமாக குணா படத்தில் வரும் குரூர சித்தப்பா கேரக்டர் என ஜனகராஜ்..

திரையுலக கிரவுண்டில் அடித்ததெல்லாம் தோனி அடித்ததை விட பிரும்மாண்ட சிக்ஸர்கள் சத்ய ராஜுடன் கவுண்டமணிக்கு முன்பே சூப்பர் ஹிட் இணை ஜனகராஜ் தான். பிக்பாக்கெட், பாலைவன ரோஜாக்கள், அதிலும் அண்ணாநகர் முதல் தெருவில் ‘அது என்னமோ போடா மாதவா’ என

அவரையே பாராட்டிக் கொள்வது, கனம் கோர்ட்டார் அவர்களே படத்தில் ‘மை டியர் பிரில்லியண்ட் ஸ்டூடண்ட் ஜெயபாஸ்கர்’ என அலும்பும் அலம்பல். இதெல்லாம் அவரது திறமையின் ஒரு துளி தான். மோகன் படங்களில் நுறாவதுநாள் படத்தில் அவரது செக்ரட்டரி இளமை காலங்கள் படத்தில்..

ஊட்டிக்கு போகாதிங்க என கத்தும் பைத்தியமாக, இயக்குநர் மணிவண்ணன் தந்த மறக்க முடியாத பாத்திரங்களில் நடித்தவர். கார்த்திக் உடன் வருஷம் 16 படத்தில் இவர் ராஜாமணியாக அடித்த லூட்டி, பிரபுவுடன் பாட்டு வாத்தியாராக கன்னிராசி இப்படி பின்னி பெடல் எடுத்து இருப்பார்.

இத்தனைக்கும் அப்போது தமிழ் சினிமாவில் செந்தில் கவுண்டமணியின் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்தது, அதற்குள் எல்லாம் சிக்காமல் சுனாமியிலும் ஸ்விம்மிங் போட்டவர் ஜனகராஜ் மட்டுமே. இவர் காமெடி நடிகர் மட்டும் இல்லை அற்புதமான குணசித்திர நடிகர்.

ஆரம்ப காலத்தில் பாலைவனச் சோலை படத்தில் வேலை இல்லாத பட்டதாரியாக இவர் வரும் காட்சிகளை பார்த்தாலே தெரியும். ஆனால் இவர் பிரமாதமான குணசித்திரம் கலந்த நகைச்சுவை நடிகர் என்பார் இயக்குநர்/நடிகர் பாண்டியராஜன். அவரது படங்களில் பார்த்தால்..

செந்தில் கவுண்டமணி இருக்க மாட்டார்கள் ஆனால் ஜனகராஜ் இருப்பார். அதிலும் அவரது காரக்டர் மிக அற்புதமாக திரைக் கதையில் எழுதப் பட்டு ஜனகராஜ் நடிப்பில் அது இன்னும் மெருகேறி இருக்கும். கன்னி ராசியில் பாட்டு வாத்தியார், ஆண் பாவத்தில் ஓட்டல் கடை நடத்தும் சித்தப்பா..

நெத்தியடியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம் வாய்ஸ் இன்ஸ்பிரேஷனில் “வேண்ணு எட்த்த்தத கொட்த்துடு ராஜா”என வித்யாசமான குரல் மாடுலேஷனில் சமையல் கார அப்பா என தூள் கிளப்பியிருப்பார். மணிரத்னம் படங்களில் குறிப்பாக நாயகன், அக்னிநட்சத்திரம், அஞ்சலி..

இதில் நாயகன் படத்தில் கிட்டத்தட்ட 2வது நாயகன் ஜனகராஜ் தான். அந்தப் படம் முழுவதும் ஜனகராஜை கவனியுங்கள் ஒரு காட்பாதரின் நண்பன் பிறகு அவன் செகரட்டரி, வயதான பின்பு அக்குடும்பத்தில் ஒருவன் என ஜனகராஜின் நடிப்பு ஆழ்கடலின் அமைதி போல அற்புதமாக இருக்கும்.

கே.பாலச்சந்தர் படங்களிலும் தன் முத்திரையை பதிக்காமல் இல்லை.சிந்துபைரவி, புதுப்புது அர்த்தங்கள் என சில படங்களை சொல்லலாம் அதிலும் புதுப்புது அர்த்தங்களில் அந்த திக்குவாய் காரக்டர், அதுவும் அவரது கனவான இளையராஜா குழுவில் வயலின் வாசிப்பவராக நடித்திருப்பார்.

இன்னொரு விஷயம் கவனித்தால் தெரியும் ஜனகராஜிற்கு இளையராஜா பாடும் எல்லா பாடல்களும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும் இருக்கலாம். காமெடி நடிகர்களில் அன்று அதிக தனிப் பாடல்கள் வந்தது ஜனகராஜிற்கு தான்.

ஒரு தொட்டில் சபதம் என்ற படத்தில் வரும் ‘பூஞ்சிட்டு குருவிகளா’ன்னு ஒரு பாட்டு அதைப் பாடியது இசையமைப்பாளர் சந்திரபோஸ். அந்தப் படம் வந்த காலங்களில் இந்தப் பாடலை பாடியது ஜனகராஜே தான் என்பார்கள். அப்படி சிறப்பாக பாடியிருப்பார் சந்திரபோஸ். அதன் பின்பு..

ஜனகராஜிற்கு இளையராஜா அளவிற்கு எவரும் பாடவில்லை. இன்றைய கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றிய காரெக்டரில் வெற்றிவிழா படத்தில் நடித்ததை தனிப்பதிவாகவே போடலாம். இன்றைக்கும் அது பொருந்தும் அந்த அளவிற்கு கார்ப்பரேட் சாமியார்களை பகடி செய்திருப்பார்.

இதயத்தாமரையில் வரும் அந்த ஞாபமறதி கேரக்டர் ஒரு பிளாக் ஹ்யூமர் வகை நகைச்சுவை என்றால், கிழக்குவாசல் படத்தில் வரும் தேவர் கேரக்டரும், நான் புடிச்ச மாப்பிள்ளை படத்தில் வரும் மாமனார் கேரக்டரும் அவரது குணச்சித்திர நடிப்பிற்கு ஒரு சோறு பதமாகும்.

கவுண்டமணி & செந்தில் ஜோடி கோலோச்சிய அதே காலத்தில் எல்லா முன்னணி ஹீரோக்கள் உடனும் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகனாக இருந்தது, ஜனகராஜின் அசாத்திய நடிப்புத் திறமையால் தான். சில காலம் நடிப்பிற்கு ஒரு இடைவெளி தந்துவிட்டார்.

தன் மகனுடன் அமெரிக்காவில் வசித்தார், நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய்சேதுபதி நடித்த 96 படத்தில் ஸ்கூல் வாட்ச்மேனாக் நடித்திருந்தார். சிங்கம் சிங்கிளாத் தான் வரும் என்பது ஜனக ராஜிற்கு மட்டுமே பொருந்தும். தமிழ் சினிமாவின் தனியொருவன் என்பது ஜனகராஜே தான்!

இவரை இன்றைய பல டிஜிட்டல் ஊடகங்கள் பெரிதாக அங்கீகரிக்கவில்லை என்பது மிகப் பெரிய வருத்தம். இன்று சோஷியல் மீடியாக்களில் வடிவேலு கவுண்டமணி மீம்சுகள் கலக்கி எடுத்துக் கொண்டிருந்தாலும் "என் பொண்டாட்டி ஊருக்கு போயிடுச்சே" என்னும் ஒற்றை மீம்ஸே போதும்.

அதை அடித்துக் கொள்ள எவரும் இல்லை! ஆம் இந்த டிஜிட்டல் யுகத்திலும் தனியொருவன் நமது ஜனகராஜ் ஒருவர் மட்டுமே

  • 215
·
Added a post
  • கம்பு
  • வெள்ளை பூசணிக்காய்.
  • எண்ணெய் தேய்த்து குளித்தல்.
  • விளக்கெண்ணெயை உள்ளங்கால்களிலும் உள்ளங்கைகளிலும் தேய்த்துக் கொண்டால் உடல் சூட்டை தணிக்கும்.
  • தினம் இருவேளை குளிர்ந்த நீரில் குளித்தல்.
  • மாதுளம் பழம்.
  • வெள்ளரிக்காய்.
  • நெல்லிக்காய்.
  • இளநீர்.
  • பதநீர்.
  • நுங்கு.
  • கசகசா
  • வெந்தயம். [ ஒரு மேசைகரண்டி அளவு வெந்தயத்தை ஒரு குடுவை ( தம்ளர் ) அளவு தண்ணீரில் முந்தின நாள் இரவு ஊற வைத்து அடுத்த நாள் காலையில் சாப்பிட வேண்டும்.]
  • 211
  • 206
  • 206
·
Added article

அஜித், பிரபுதேவாவிற்கு குரல் கொடுத்த விக்ரம் - திரைக்குப் பின்னால் இருந்த 10 ஆண்டு போராட்டம்!

நடிகர் விக்ரம் திரையுலகில் ஒரு முன்னணி இடத்தைப் பிடிக்க 1990 முதல் 1999 வரை சுமார் 10 ஆண்டுகள் கடும் போராட்டங்களைச் சந்தித்தார். சிறிய வேடங்கள், தோல்விப் படங்கள் மற்றும் கடுமையான பண நெருக்கடிக்கு இடையே, திரைப்பட வாழ்க்கையிலும் வெற்றி இல்லாமல் ஏதோ சோகமாகவே அவரது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.தமிழ் திரை உலகில் மிக நீண்ட போராட்டத்திற்கு பின் சினிமாவில் கால் பதித்தார் நடிகர் விக்ரம் அவரது போராட்டம் மற்றவருக்கு விக்ரம் ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.காலத்துக்கேற்ற ட்ரெண்டை பிடித்து விக்ரம் கதாபாத்திரங்களை தேர்வு செய்யவேண்டும் என உறுதியாக இருந்தார்.

சீயான் விக்ரம் வெற்றிப் பயணம்

ஆரம்ப காலம: 1990-ல் என் காதல் கண்மணி திரைப்படத்தில் அறிமுகமானார், ஆனால் துரதிஷ்டமாக அந்த படம் தோல்வியில் அடைந்தது அதற்கு அடுத்து பல படங்கள் தோல்வியடைந்தன. தமிழ்த் திரையுலகில் வாய்ப்புகள் குறைந்ததால், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.

விபத்து மீண்டு வருதல்:

1994-ல் ஒரு விபத்தில் விக்ரம் ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டார் அதனால் அவர் காலில் அடிபட்டது.காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சுமார் 3 ஆண்டுகள் படுக்கையிலேயே இருந்தார். மருத்துவர்கள் காலை எடுக்க வேண்டும் என்று கூறிய நிலையிலும், மன உறுதியுடன் மீண்டு வந்தார். அவரது வலது காலில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது அவரால் காலைய மடக்க முடியாது ஆனால் சினிமாவில் அனைத்து ஆக்சன் சீன்களிலும் அவர் மிகவும் அருமையாக நடித்து இருப்பார். டான்ஸ்,வாக் ,ரன்னிங் என்று அனைத்திலும் அவர் மிகவும் அருமையாக நடித்திருப்பார்.

விக்ரமிற்கு தேடி வந்த வாய்ப்பு:

வாய்பிற்காக தேடிக் கொண்டிருக்கும் பொழுது இதற்கிடையில் முன்னாடி நடிகர்களான பிரபுதேவா, அஜித் போன்றவர்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வந்தார் விக்ரம். அந்த சமயத்தில் தான் பாலா விக்ரமை தேடி வந்தார். அதன் பிறகு தான் விக்ரமின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இன்று முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் நடிகர் விக்ரம்‌.

இந்த படத்தில் கதாபாத்திரத்தின் பெயர் சீயான் அந்த பெயர் மிகவும் தமிழ் சினிமாவில் பிரபலமானது. அந்தப் படத்தில் சீயானுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டிருப்பார். அதனால் இந்த பெயர் மிகவும் பிரபலமானதால் முதல் படத்தில் முதல் பெயர் என்பதாலும் இவருக்கு அடைமொழியாக சியான் விக்ரம் என்று பெயர் வந்தது அதன் பிறகு தமிழ்நாட்டில் சியான் விக்ரம் என்று மிகுந்த வரவேற்பு பெற்றார்.

  • 210

எதிர்த்து சொல்லுக்குச்சொல்

சண்டை போடுவதற்கு அதிக புத்திசாலித்தனம் தேவையில்லை. புரிந்துகொண்டு விட்டுக் கொடுப்பதற்கு தான் அதிக புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது ...

மகளிர் நாள் நல்வாழ்த்துகள்

  • 238
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சுப காரியங்களுக்கான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உயர் அதிகாரிகளால் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

ரிஷபம்

எந்த ஒரு செயலிலும் பொறுமை கடைபிடிக்கவும். நினைவாற்றலில் இருந்த மந்த தன்மைகள் விலகும். கொடுக்கல் வாங்கலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். இனம் புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் மனதில் உருவாகும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மிதுனம்

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வரவுகள் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவான முடிவுகள் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் உருவாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கடகம்

புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். தாய் வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செயல்படவும். நேர்மை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

சிம்மம்

பிள்ளைகள் தொழிலில் உதவிகரமாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தன வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கன்னி

வாத திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சேமிப்புக்கான வரவுகள் மேம்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கணிதம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

துலாம்

பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் நன்மதிப்புகள் ஏற்படும். புதுவிதமான ஆடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செலவுகளை குறைப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

விருச்சிகம்

எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வெளியுலக அனுபவம் மூலம் மாற்றங்கள் உருவாகும். சேவை பணிகளில் புதிய ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். வர்த்தக பணிகளில் பொறுமை காக்கவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

தனுசு

வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த தாமதம் குறையும். கால்நடை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இணையம் துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

மகரம்

பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உறவினர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். அரசு பணிகளில் உள்ள இழுபறியான சூழல் மறையும். பயணங்களால் புத்துணர்ச்சியான சூழல் உருவாகும். கால்நடை பணிகளில் லாபங்கள் மேம்படும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

கும்பம்

நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலையாட்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பிற மொழி மக்களிடம் கவனம் வேண்டும். புதிய முடிவுகளில் விவேகத்துடன் செயல்படவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். ஆதரவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மீனம்

உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சேவை துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். கல்வி பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். விவசாய பணிகளில் கவனம் வேண்டும். பயணங்களால் புத்துணர்ச்சியான சூழல் அமையும். அன்பு வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 307
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 8.3.2026.

இன்று இரவு 10.01 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று பிற்பகல் 02.19 வரை சுவாதி. பின்னர் விசாகம்.

இன்று காலை 07.49 வரை துருவம். பின்னர் வியாகாதம்.

இன்று காலை 09.09 வரை கௌலவம். பின்னர் இரவு 10.01 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று காலை 06.25 வரை அமிர்தா யோகம். பின்னர் பிற்பகல் 02.19 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.

‍‍image_transcoder.php?o=sys_images_editor&h=446&dpx=2&t=1772936279நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 வரை

  • 312

Good Morning....

  • 304
·
Added a post

உடல் சொல்லும் எச்சரிக்கை சமிக்ஞைகள் — இப்போதே தெரிந்துகொள்ளுங்கள்!

நம் உடல் ஒரு அற்புதமான இயந்திரம்.

எதாவது தவறாக இருந்தால் —

அது நமக்கு சமிக்ஞை கொடுக்கும்.

ஆனால் நாம் அதை கவனிக்கிறோமா? இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? கவனமாக படியுங்கள்!

 

அடிக்கடி கொட்டாவி வருகிறதா?

இது சோம்பல் அல்ல!

உடலுக்கு ஆக்சிஜன் குறைவாக கிடைக்கிறது என்று அர்த்தம்.

ஆழமாக சுவாசியுங்கள், புதிய காற்றில் நடையாடுங்கள்.

  

வாயில் துர்நாற்றம் வருகிறதா?

இது வெறும் பல் சுகாதார பிரச்சனை மட்டுமல்ல —

குடல் பிரச்சனையின் அறிகுறி இருக்கலாம்.

உணவு பழக்கத்தை சரிசெய்யுங்கள்.

  

காதில் சீ சீ சத்தம் கேட்கிறதா?

இதை சாதாரணமாக எடுக்காதீர்கள்!

இது உயர் இரத்த அழுத்தத்தின் (High BP) எச்சரிக்கை.

உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

  

நாக்கில் எரிச்சல் உணர்கிறீர்களா?

உடலில் வைட்டமின் B குறைபாடு இருக்கிறது.

பச்சை காய்கறிகள், முட்டை சாப்பிடுங்கள்.

  

திடீரென தலை சுற்றுகிறதா?

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருக்கிறது.

சாப்பிடாமல் நீண்ட நேரம் இருக்காதீர்கள்.

 

 இனிப்பு சாப்பிட மிகவும் ஆசையாக இருக்கிறதா?

இது உங்கள் பலவீனம் அல்ல —

உடலில் மெக்னீசியம் குறைபாடு இருக்கிறது.

நட்ஸ், விதைகள் சாப்பிடுங்கள்.

  

கால்கள் வீங்குகிறதா?

இதை கவனமாக எடுங்கள்!

இது இதயம் அல்லது சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.

  

வாசனை தெரியவில்லையா?

ஜிங்க் (Zinc) குறைபாடு இருக்கிறது.

பூசணி விதை, கடல் உணவுகள் சாப்பிடுங்கள்.

  

எப்போதும் சோர்வாக இருக்கிறீர்களா?

தூக்கம் போதுமான அளவு தூங்கினாலும் சோர்வு போகவில்லையா?

வைட்டமின் D குறைபாடு இருக்கிறது.

காலை வெயிலில் 20 நிமிடம் நில்லுங்கள்.

  

அடிக்கடி தலைவலி வருகிறதா?

மாத்திரை போடுவதற்கு முன் யோசியுங்கள்!

காரணம் வெறும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) மட்டுமே இருக்கலாம்.

தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.

  

முடி அதிகமாக உதிர்கிறதா?

இரும்புச்சத்து (Iron) குறைபாடு இருக்கிறது.

கீரை, பேரீச்சம்பழம், மாதுளை சாப்பிடுங்கள்.

  

இரவில் கால் பிடிப்பு வருகிறதா?

தூக்கத்தில் திடீரென கால் வலிக்கிறதா?

மெக்னீசியம் குறைபாடு இதற்கு காரணம்.

வாழைப்பழம், இலை காய்கறிகள் சாப்பிடுங்கள்.

 

 கண்கள் மஞ்சளாக இருக்கிறதா?

இதை எக்காரணத்திற்காகவும் புறக்கணிக்காதீர்கள்!

இது கல்லீரல் பிரச்சனையின் தெளிவான அறிகுறி.

உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்.

 

 கைகள் மரத்துப் போகிறதா?

வைட்டமின் B12 குறைபாடு இருக்கிறது.

பால், முட்டை, மீன் சாப்பிடுங்கள்.

சைவர்கள் — B12 supplement எடுங்கள்.

  

கை கால்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறதா?

இரத்த ஓட்டம் சரியாக இல்லை என்று அர்த்தம்.

உடற்பயிற்சி செய்யுங்கள், இரும்புச்சத்து சாப்பிடுங்கள்.

 

ஈறுகளில் இரத்தம் வருகிறதா?

பல் துலக்கும் போது இரத்தம் வருகிறதா?

வைட்டமின் C குறைபாடு இருக்கிறது.

எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் சாப்பிடுங்கள்.

 

மிக முக்கியமான எச்சரிக்கை:

இந்த அறிகுறிகள் எல்லாம் உடலின் SOS சமிக்ஞைகள்.

புறக்கணிக்காதீர்கள்

சுய மருத்துவம் செய்யாதீர்கள்

மருத்துவரை சந்தியுங்கள்

சரியான உணவு சாப்பிடுங்கள்

தண்ணீர் குடியுங்கள்

உறக்கம் சரியாக தூங்குங்கள்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கான எளிய பழக்கங்கள்:

காலை வெயிலில் நடையாடுங்கள்

சத்தான உணவு சாப்பிடுங்கள்

தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்

7-8 மணி நேரம் தூங்குங்கள்

மன அழுத்தத்தை குறையுங்கள்

  

நினைவில் வையுங்கள்:

"உடல் நலம் இருந்தால் — எல்லாமே இருக்கும். உடல் நலம் இல்லாவிட்டால் — எதுவுமே இல்லை!" உங்கள் உடலை நேசியுங்கள். அதை கவனியுங்கள்.

 

  • 385
  • 418
  • 419
·
Added a post

நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு கொதிக்கிறது சாமி!

எத்தனை பேர் என்னை கேலி செய்து வசை பாடி இருக்கிறார்கள்!

எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்!

அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றாக பாடம் புகட்ட வேண்டும்." என்று சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.

சாமியார் யோசித்தார். நீ ஒன்று செய், என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி.

நீ யாரையெல்லாம் பழி வாங்க வேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக் கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக் கொண்டே வா, நீ எங்கு எல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்." என்றார்.

இவ்வளவுதானா?' என்று சீடன், அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ பழிவாங்க வேண்டும் என்ற நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஓர் உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான்.

ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது பெரிய சிரமமாக தெரியவில்லை.

நாளாக நாளாக அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.

சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக் கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது.

நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது.

பக்தவசலம் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள்.

சீடன் மறுபடியும் சாமியாரிடம் வந்தான்.

என்ன புரிந்தது?" எனறு கேட்டார், சாமியார்.

பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக் கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும்.

துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள்" என்றான் சீடன்.

சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை". என்றார் சாமியார்.

உன் பிரச்னை சுமை கூடி போச்சே' என்பதும் 'நாற்றம் அடிக்கிறதே' என்பதும் தான்!

அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா?' என்று கேட்டார்.

ஆமாம்" என்றான் சீடன்.

மகனே, பிரச்சனை உருளைக் கிழங்கில் இல்லை.

கோணி இருப்பதால் தானே அதில் உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்?

எனவே உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க

வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி.

அவரவர்கள் செய்த கர்மாக்களை அவரவர்கள் அனுபவித்தே தீருவார்கள்.

இதில் நாம் தனியாக தூக்கிக் கொண்டு திரிய ஒன்றுமில்லை.

நீ உன் வேலையில் கவனம் செலுத்தி, உன் கடமையை சரியாக செய்து வா".என்றார் சாமியார்.

உண்மை அது தான்!

நாம் கைவிட வேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனத்தையும் கூடத்தான்.

இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம் மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான்.

நம் மனதில் என்றும் நினைக்க வேண்டியது புத்தியில் எப்போதும் இறை சிந்தனையும், மனதில் எப்போதும் இறை உணர்வும், நாவில் எப்போதும் இறை நாமமுமே.

  • 422
  • 415