·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1508
  • More

என்ன ஒரு அழகான நடை

நேர்த்தியான நடைபயிற்சி

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து.

எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.

முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு?

முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது.

அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.

கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால்

 முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள

 நாக்கர் என்ற ஒருவித  திரவத்தை அதன்  மீது சுரந்து மூடிவிடும். அதைத் தெரிந்துகொண்ட சீனர்கள், சிப்பி வாய்  திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப்  புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.

ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம்.

கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.

  • 29
  • 31
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பூர்வீக வீடு, நிலம் நல்ல விலைக்கு விற்பனையாகும். வியாபாரத்தில் சரக்குகளை போராடி விற்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து, நெருக்கம் அதிகமாகும். பழைய ஃபேன், பிரிட்ஜை மாற்றுவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

மிதுனம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் படிப்பு, தாயாரின் மருத்துவம் என்று செலவுகளும் இருக்கும். வியாபாரத்தில் நிம்மதி தரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கடகம்: தாழ்வு மனப்பான்மை நீங்கும். செலவுகளை தவிர்க்கவும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குழந்தைகளிடம் முன்கோபத்தை காட்ட வேண்டாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும்.

சிம்மம்: உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். திட்டமிட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். மகளுக்கு நல்ல வரன்அமையும். மகனுக்கு பெரிய நிறுவனத்தில் பணி கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

துலாம்: சோர்வு நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். விவாதங்களை தவிர்க்கவும். ஆடை, ஆபரணம் சேரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி மதிப்பார். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.

விருச்சிகம்: பழைய நண்பர்கள் வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய இடத்துக்கு கடையைமாற்றுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பீர்.

தனுசு: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வயிற்றுவலி, மூக்கடைப்பு நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மகரம்: பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பணவரவால் மனநிம்மதியுண்டு. பூர்வீக வீடு, நிலம் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வரும். அலுவலகத்தில் தொல்லை தந்த அதிகாரி ஆதரவு தருவார். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முற்படுவீர்.

கும்பம்: இழுபறியாக இருந்த பணிகள் நிறைவுபெறும். தந்தை யாருடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரி பாராட்டுவார்.

மீனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளிடம் முன்கோபத்தை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

  • 37
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை 18.4.2026.

இன்று மாலை 03.45 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று காலை 10.52 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

இன்று அதிகாலை 03.26 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி.

இன்று அதிகாலை 04.46 வரை கிமிஸ்துக்கினம். பின்னர் மாலை 03.45 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று காலை 06.01 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=485&dpx=2&t=1776486721

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 35

Good Morning......

  • 39
  • 124

சிரிப்பின் சத்தம் உங்கள் வீட்டை நிரப்பட்டும்,

சிறப்பான வெற்றிகள் உங்கள் பாதையை அலங்கரிக்கட்டும்,

இனிய கனவுகள் எல்லாம் நனவாகி

இன்பமான வாழ்வு உங்களை சுற்றியிருக்கட்டும்

  • 125
·
Added a post

என்னா ஈசு, சோர்வா இருக்கே!! என்னா ஆச்சு?

"என்னா ஆவும்? நேத்து தண்ணிய போட்டு ஏதோ வண்டியில கால விட்டு இப்போ போய் பெரியாஸ்பத்திரில கிடக்கு இதுங்க அப்பென். நான் ஆசுபத்திரிக்கும் வூட்டுக்கும் லோல் பட்டுனுகுறேன். என்ன பொறப்போ போ!" என்றபடி வந்த அழுகையை குழந்தைகள் முகத்தைப் பார்த்து அடக்கிக்கொண்டே சொன்னாள் ஈஸ்வரி, கற்பகத்திடம்.

"நான் வேணா புள்ளைங்கள பார்த்துக்கறேன். வேலைக்கு போய் வா. வேலைக்கு போனியா இல்லையா?"

"எங்க போனேன்? மூணு நாளா அலையுறேன். அவங்க இப்டிலாம் லீவு போட்டா நீ வர வாணாம்னுட்டாங்க. வேற இடம்தான் பார்க்கணும். அதுவரைக்கும் சோத்துக்கு இன்னா செய்யுறதுன்னுதான் ரோசனை. உக்காந்தேன். ஏதோ வாசபக்கம் வந்து ஜனங்க போக வர பார்த்தா எதுனா மனசு சுளுவா ஆவுமேன்னு." என்று பெருமூச்சு விட்டாள் ஈஸ்வரி.

கற்பகம், "இதோ இரு வாரேன்." என்றபடி சட்டென்று நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் தன் குடிசைக்கு ஓடினாள். தன் சின்ன ட்ரங்க் பெட்டியைக் குடைந்து இரண்டு சேலைகளை எடுத்துக்கொண்டு ஈஸ்வரியிடம் ஓடிவந்தாள்.

"இந்தா புள்ள. இதப் புடி. நாகராஜ் அண்ணனாண்ட சொல்றேன். அது வந்து இடம், நேரம், கட்சி மூணும் சொல்லும். நீ ஒண்ணும் சொல்லாம சரின்னு சொல்லிடு. எந்தக் கட்சி சொல்லுதோ அந்த சேலைய கட்டு. அது குடுக்கற சீட்டை மறக்காம கைல கொண்டுபோ. அங்க போனதும் சீட்ட வாக்கிக்குனு காசும் சோறும் குடுப்பாங்க. வாங்கிட்டு கூட்டம் முடியுற வரைக்கும் உட்கார்ந்துட்டு ஒழுங்கா வூடு வந்து புள்ளைங்களுக்கு சோத்தப் போடு. இன்னும் மூணு மாசம் கழிச்சு வேலைக்கு பார்த்துக்கலாம். இது இப்பதைக்கு உனக்கு தோதா இருக்கும்" என்று சொல்லிவிட்டு விறு விறுவென்று நடந்தாள்.

- முகநூல் பகிர்வு

  • 135
  • 130

நீங்கள் கோபமாய் இருக்கும் பொழுது உங்களது பேச்சையோ, செயலையோ தாமதப்படுத்துவது நல்லது.

காரணம், அந்தத் தாமதம் நீங்கள் அமைதியாவதற்குத் துணைபுரிகிறது.

உங்கள் எதிரிகளைக் குழப்பத்தில் அச்சுறுத்தும் மிக வலுவான ஆயுதங்கள் , உங்கள் மௌனமும், உங்கள் பொறுமையும்தான்.

வாழ்க்கையில் வெந்து, நொந்தவருக்குத் தான் தெரியும் தனிமையும், அமைதியும் அமிர்தம் என்று.

கோபத்தில் மௌனத்தைக் கையாள்பவர்கள், பெரும்பாலும் தோல்வியைச் சந்திப்பதில்லை.

  • 130
  • 137
  • 136
·
Added a post

* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.

* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

* சித்தம் தெளிய வில்வம்

* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* வாத நோய் தடுக்க அரைக் கீரை

* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* பருமன் குறைய முட்டைக்கோஸ்

* பித்தம் தணிக்க நெல்லிக்காய்

” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.

  • 146
·
Added a news

கனடாவில் சமீபத்தில் Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேறியது நினைவிருக்கலாம்.

அதைத் தொடர்ந்து, அதிக அளவில் கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி வருகிறார்கள் அமெரிக்கர்கள்!

வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை கனடாவில் இருந்தது. இந்த விதியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ’Lost Canadians’ என்றே அழைக்கப்படுகிறார்கள்.

2009இல் அறிமுகமான இந்த விடயம், வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில் அவர்கள் கனேடிய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு தடையாக இருந்தது.

2023ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஒன்ராறியோ உச்சநீதிமன்றம், இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதை முடிவுக்குக் கொண்டுவந்தது.

கனடா அரசும், இந்த சட்டத்தின் விளைவுகள் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க இயலாதவைதான் என ஒப்புக்கொண்டு ஒன்ராறியோ உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை.

இந்நிலையில், Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு மன்னர் சார்லஸ் சமீபத்தில் ஒப்புதலளித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கர்கள், அதிக அளவில் கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி வருகிறார்கள்.

அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 15க்கும் ஜனவரிக்கும் இடையில் மட்டும் 12,000க்கும் அதிகமான குடியுரிமை கோரும் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

அதில், ஜனவரி மாதத்தில் மட்டும் குடியுரிமை கோரி விண்ணப்பித்தவர்களில் 2,500 பேர் அமெரிக்கர்கள் என்கிறது கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு.

2025ஆம் ஆண்டில், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமை என்னும் வகையில் கனடாவில் குடியுரிமை கோரியவர்கள் 82,500 பேர். அவர்களில், பெரும் எண்ணிக்கையிலானவர்கள், அதாவது, 24,500 பேர் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 147
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உடன்பிறந்தவர்கள் மூலம் சில செலவுகள் வரும். வதந்திகளை நம்பி முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். வழக்கமான சில பணிகளில் திடீர் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் மாறுபட்ட வாய்ப்புகள் உருவாகும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

ரிஷபம்

உடன் பிறந்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்

மிதுனம்

தாராளமான தனவரவுகள் உண்டாகும். பணியாளர்களுக்கு செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் உருவாகும். கல்வியில் இருந்து வந்த ஆர்வ இன்மை குறையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார பணிகளில் பொருளாதாரம் உயர்வு உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

கடகம்

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பொதுமக்கள் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நீண்ட கால முதலீடுகள் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். விவசாய பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

சிம்மம்

உயர் பொறுப்பில் இருப்போர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆராய்ச்சி துறைகளில் முன்னேற்றம் காணப்படும். இழுபறியான சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். கமிஷன் பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உறுதி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கன்னி

தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். தோற்றப்பொழிவில் சில மாற்றம் உண்டாகும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரம் ரீதியான முயற்சிகளில் விவேகம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

துலாம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். துணைவர் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய பயணம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

விருச்சிகம்

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தீரும். உத்தியோக பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

தனுசு

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் ஒரு விதமான மந்ததன்மை உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர் பாலின மக்கள் விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். புதுவிதமான செயல் திட்டங்கள் உருவாகும். பயம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகரம்

தொழில் நிமித்தமான பயணங்கள் ஏற்படும். கால்நடை தொடர்பான செயல்பாடுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். சில அனுபவங்கள் மூலம் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

கும்பம்

மனதளவில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மறைமுகமான சில விஷயங்களை அறிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பாகப்பிரிவினை செயல்களில் விவேகம் வேண்டும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மீனம்

நெருக்கமான உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பெருத்தன்மையான செயல்பாடுகள் மூலம் நம்பிக்கை மேம்படும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் வருமான வாய்ப்புகள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 216
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 17.4.2026

இன்று மாலை 05.47 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று பிற்பகல் 12.05 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

இன்று காலை 07.08 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.

இன்று காலை 06.39 வரை சதுஷ்பாதம். பின்னர் மாலை 05.47 வரை நாகவம். பிறகு கிமிஸ்துக்கினம்.

இன்று காலை 06.02 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=484&dpx=2&t=1776395566

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 224

Good Morning...

  • 218
·
Added a post

தவறாக எழுதியது ‘பேனாவாக'

இருந்தாலும் எல்லோரும்

காகிதத்தைக்

கிழித்துப் போடுவதைப் போல.

தவறு செய்தவவரை விட்டுவிட்டு

இன்னொருத்தரிடம்,

குற்றம் கண்டுபிடிப்பதே இங்கு பலரின்வேலை..

பெரும்பாலான மனிதர்கள்

தன்னலம் மிக்கவர்களாக வலம் வருகிறார்கள்.

நேசித்தால் பிழைகளைப் பார்ப்பதில்லை,

வெறுத்தால்

நல்லதைப் பார்ப்பதில்லை.

விருப்பத்திற்கும், நேசத்திற்கும் வேறுபாடு உண்டு.

பூக்களை விரும்பும் அன்பர்கள் பறித்துச்சூடுகிறார்கள்,

பூக்களை நேசிப்பவர்கள்

செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.

உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அவர்களுடன் மகிழ்ச்சியாகப் பழகுங்கள்.

உங்களை யாருக்குப் பிடிக்கவில்லையோ,

அவர்கள் மகிழ்ச்சிக்காக

அவரை விட்டு விலகுங்கள் அமைதியாக.

  • 322

ஒருவரிடம் பல மணி நேரம்

பேசுவது நட்பல்ல...

அவரைப் பற்றி மற்றவரிடம் ஒரு நிமிடம் கூட தவறாக பேசாமல் இருப்பதே நட்பு!!

  • 319

ஒரு அறிவாளி

தன்னைச் சுற்றி

அறிவாளிகளையே

வைத்திருப்பான்

தன் அறிவை வளர்க்க....

ஒரு முட்டாள்

தன்னைச் சார்ந்தவர்கள்

அனைவரையும்

முட்டாளாகவே வைத்திருப்பான்

தான் மட்டுமே புத்திசாலி

என்ற நினைவோடு....

  • 317
  • 319
·
Added a post

புரூஸ் லீ வெறும் தற்காப்புக் கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த தத்துவவாதியும் கூட. அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான பாடங்கள் இதோ:

  1. "நீராக இரு" (Be Water, My Friend):
  2. தண்ணீர் ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுக்கும். அது மென்மையாகவும் இருக்கும், அதே சமயம் பாறையை உடைக்கும் வலிமையும் கொண்டது. வாழ்க்கையில் பிடிவாதமாக இருக்காமல், சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு (Adaptability) முன்னேற வேண்டும் என்பதே இதன் பொருள்.
  3. தேவையற்றதை நீக்கு (Eliminate the Unessential):
  4. "தினமும் எதையாவது சேர்ப்பது அறிவல்ல, தினமும் தேவையற்றதை குறைப்பதே அறிவு" என்பார் லீ. ஒரு கலையிலோ அல்லது வேலையிலோ சிறந்து விளங்க, மிக முக்கியமானவற்றில் மட்டும் கவனம் செலுத்தி, மற்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்க வேண்டும்.
  5. தொடர் பயிற்சி (Consistency and Practice):
  6. "பத்தாயிரம் உத்திகளை ஒருமுறை பயிற்சி செய்தவனைப் பார்த்து நான் பயப்படமாட்டேன்; ஆனால், ஒரே ஒரு உத்தியை பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனைப் பார்த்து பயப்படுவேன்" என்பது அவரது புகழ்பெற்ற பொன்மொழி. ஒரு விஷயத்தில் நிபுணத்துவம் பெறத் தீவிரமான பயிற்சியும், ஒருமுகப்பட்ட கவனமும் அவசியம்.
  7. உன்னையே அறிந்துகொள் (Self-Knowledge):
  8. மற்றவர்களைப் போலப் போலியாக இருக்க முயலக்கூடாது. "எப்போதும் உன்னைப் போலவே இரு, உன்னையே வெளிப்படுத்து, உன்னையே நம்பு" என்று அவர் போதித்தார். ஒருவரின் தனித்துவமே அவருடைய மிகப்பெரிய பலம்.
  9. செயலில் இறங்கு (Taking Action):
  10. "தெரிந்து வைத்திருப்பது மட்டும் போதாது, அதைச் செயல்படுத்த வேண்டும். விரும்புவது மட்டும் போதாது, அதைச் செய்ய வேண்டும்." வெறும் கனவு காண்பது பயன்தராது; அந்தக் கனவை நனவாக்க உடனடியாகச் செயலில் இறங்குவதே வெற்றிக்கான வழி.
  • 324

உங்கள் அன்புக்குரிய குழந்தைகளை இக்காலங்களில் படிப்பு எனும் உயரிய பண்பொழுக்கத்திலிருந்து விலகியிருக்க வழியமைக்காதீர்கள்.

குழந்தைகளை இக்காலங்களில் ஒவ்வொருநாளிலும்

அவர்கள் அறிந்த மொழிகளைக் (தாய்மொழியும்பிறமொழியும்)

குறைந்தபட்சம்

ஒருபக்கம்_படிக்கவேண்டும்

என்று கட்டாயப்படுத்துங்கள். நாளிதழ்களாகக்கூட இருக்கலாம்.

கட்டாயப்படுத்துதல் என்பது குழந்தைகள் மீதான வன்முறைதான்.

ஆனால் இந்த அனுமதிக்கப்பட்ட வன்முறை அவர்கள்

வளரிளம்_பருவங்களை அடையும்போதும்,

அப்பருவங்களைக்கடக்கும்போதும்

கடந்தபிறகும் ,

வன்முறையின்பால் சேராது

நன்முறையில் வாழ உதவும்.

  • 317
·
Added a post

தந்தையும் ஆறுவயது மகனும் மலைச்சாரலில் நடந்து கொண்டு இருந்தனர்..

மகனை ஒரு கல் தடக்கியது. "ஒழிந்து போ..!" என்று கோபத்தில் எட்டி உதைத்தான்..

"ஒழிந்து போ..!" என்று எங்கிருந்தோ பதில் குரல் வந்தது.

அப்பா இருக்கும் தைரியத்தில்..

"எதிரில் வந்தால் உன் முகத்தை பெயர்த்துடுவேன்..!"

என்று கத்தினான்..

அதே மிரட்டலாக பதில் வந்தது.

பையன் இந்த முறை மிரண்டான்..

அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டான்.

"என்னைக் கவனி..!"

என்றார் அப்பா.

"உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்றுகத்தினார்..

"உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்று அதே வார்த்தைகள் திரும்பி வந்தன.

அவர் அடுத்தடுத்து அன்பாகப் பேசிய வார்த்தைகள் அதேபோல் திரும்பி வந்தன.

மகனிடம் சொன்னார்.

"இதை எதிரொலி என்பார்கள்..! ஆனால் உண்மையில் இதுதான் வாழ்க்கை..!

அன்போ..,

கோபமோ..,

துரோகமோ..,

நீ மற்றவர்களுக்கு என்ன வழங்குகிறாயோ..,

அதுதான் உனக்கு திரும்பி வரும்..! உனக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கும்

வழங்க கற்றுக்கொள்..!" என்றார்.

  • 326