என்ன ஒரு அழகான நடை
நேர்த்தியான நடைபயிற்சி
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11.1.2026.
இன்று பிற்பகல் 01.42 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று இரவு 09.33 வரை சித்திரை. பின்னர் சுவாதி.
இன்று இரவு 08.50 வரை சுகர்மம். பின்னர் திருதி.
இன்று அதிகாலை 01.08 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 01.42 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று காலை 6.32 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் தான் நம்பர் ஒன்” என்று அவரது தோழி கெனிஷா கருத்து தெரிவித்துள்ளார்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பராசக்தி’. இப்படத்தில் ரவி மோகன் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். இன்று காலை படக்குழுவினர் வெவ்வேறு திரையரங்குகளில் ‘பராசக்தி’ படத்தை கண்டுகளித்தனர்.
சென்னை - காசி திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தை கண்டு களித்தார் ரவி மோகன். அவருடன் அவரது தோழியான கெனிஷாவும் வந்திருந்தார். படம் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் கெனிஷா பேசும்போது, “அவர் வில்லனாக நடித்தால் என்ன, ஹீரோவாக நடித்தால் என்ன... அவரால் படம் ஓடும். இந்த கதாபாத்திரத்துக்காக 6 மாதங்கள் கடுமையாக உழைத்தார். என் கண்ணுக்கு அவரை தவிர வேறு யாரும் தெரியவில்லை.
இந்தப் படத்தை பார்க்கும்போது அவருக்காகவே பண்ணியிருக்கிறார்கள் என்று தோன்றியது. ‘பராசக்தி’ படத்தில் அவர்தான் நம்பர் ஒன். முதல் பாதியில் அவரை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். 2-ம் பாதியில் அவரைத் தாண்டி எதுவுமே இல்லை என தெரிந்துவிடும்” என்று கெனிஷா தெரிவித்துள்ளார்.
கனடாவின் டொராண்டோ நகரத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மணிக்கு 90 கிலோமீட்டர் வரை வேகம்கொண்ட காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காலை நேரத்தில் மழையுடனும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயமும் உள்ளதாக வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிற்பகலில் ஒரு குளிர் காற்றழுத்த முனை பிரதேசத்தை கடந்து செல்லும் எனவும், இதன் காரணமாக மீண்டும் பலத்த காற்று வீசும் சூழ்நிலை உருவாகி, மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரை காற்று வேகம் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாலை ஆரம்பத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொராண்டோவில் இன்று வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என , கனடா சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த வானிலை அமைப்பின் காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளில் திடீர் நீர்மட்ட மாற்றங்கள், வேகமான மற்றும் வலிமையான நீரோட்டம், நிலையற்ற கரைகள் மற்றும் ஆபத்தான பனிநிலை உருவாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.
2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.
3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது
4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். (This is the reason, when we travel in train, whatever food we have during the journey, is completely digested without any health troubles. Hope many could have experienced this in their life journey)
9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
அந்த ரிடையரான மனிதர் அன்று மகானின் முன் நின்றபோது, அவரது முகத்தில் கவலை ரேகைகள். இதைக் கவனித்த அந்த மகான்....
"ஏன் என்ன விஷயம்?" என்று அன்பொழுகக் கேட்கிறார்.
"ரிடையர் ஆன பிறகு நான் மிகவும் .கஷ்டப்படுகிறேன்.." என்கிறார் அவர்.
"ஏன்?" கேட்கிறார்.
"யாரும் வீட்டில் என்னை மதிப்பதே இல்லை... கவனிப்பும் சரி இல்லை. காப்பி கூட சமயத்தில் கிடைப்பதில்லை" என்று சொல்லிக் கொண்டே போனார்.
அவரது மனக்குமுறல்களை புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டு இருந்தார் அந்த மகான்.
"உத்தியோகத்தில் இருக்கும்போதே இறந்திருக்கலாம் போல் எண்ணத் தோன்றுகிறது. பையன்கள் கூட என்னை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்" என்று முடித்தார் அம்முதியவர்.
மகான் அமைதியாகச் சொன்னார்....
"இது எனக்குப் பெரிய விஷயமாகவே தெரியவில்லை. நீ இப்போது ஆபீசுக்குப் போவதில்லை இல்லையா? காலையில் எல்லாருக்கும் முன் எழுந்து,குளித்துவிட்டு ஜெபம் செய்...அதைப் பார்க்கும் குடும்பத்தினர் உனக்கு பயபக்தியோடு காப்பி கொண்டு வந்து கொடுப்பார்கள். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்.... பேரன்களுக்கு படிப்பு சொல்லிக் கொடு...அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக் கொண்டு போ.... அதோடு அவர்கள் இதைச் செய்ய வேண்டும்...... அதைச் செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்காதே....
எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தைக் கொடுக்கும்.... இல்லையென்றால் எல்லாமே தானாகவே நடக்கும்"
வேதனையோடு வந்தவர்க்கு தன்னிடம் உள்ள குறையும் தெரிந்தது... அடுத்தபடியாக தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.
" நீ மனதைத் தெளிவாக வைத்துக் கொள்... பகவானை நினைத்துக் கொண்டே இரு... இது வேண்டும்...அது வேண்டும் என்று ஆசைப்படாதே.. நீ வளர்த்த குழந்தைகள் உன்னை நிச்சயமாகக் கவனிப்பார்கள்" என்றார்.
வயோதிகத்தில் எல்லாருக்கும் வரும் மன வியாதி இது.. ஒருவன் எல்லாவற்றையும், எப்போதும் அனுபவிக்கவும் முடியாது..... அதிகாரம் செய்து கொண்டும் இருக்கவும் முடியாது... காலப்போக்கில் நம்மை நாமே சரி செய்து கொள்ள வேண்டும் என்பது தான் வாழ்க்கை முறை."
மகான் உபதேசம் செய்து முடித்தவுடன் அப்பெரியவரின் மகன், அவரை தேடிக் கொண்டு அங்கே வந்து விட்டான், வீட்டிற்கு அழைத்துப் போக. பொருள் பொதிந்த புன்னகையோடு மகான், அவரை மகனுடன் அனுப்பி வைத்தார்.
"ஹரிவராசனம்" “நீயும் பொம்மை.. நானும் பொம்மை.. நெனச்சுப் பார்த்தா எல்லாம் உண்மை", "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா" என இசை பிரியர்களின் காதில் தேனை கடந்த பல ஆண்டுகளாக பாய்ச்சிக் கொண்டிருக்கும் தேவக்குரலோன் கே.ஜே. யேசுதாஸ் இன்று தனது 85வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
கண்ணே கலைமானே என தமிழ் ரசிகர்களை தாலாட்டிய கே.ஜே. யேசுதாஸ் கேரள மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐயப்ப பக்தர்களுக்கும் ஹரிவராசனம் பாடல் மூலம் ஆன்மிகத்தை அள்ளித் தெளித்துள்ளார். 1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கொச்சியில் பிறந்த கே.ஜே. யேசுதாஸ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஏகப்பட்ட இந்திய மொழிகளில் தனது காந்தக் குரலை பதிவு செய்துள்ளார்.
கே.ஜே. யேசுதாஸ் இசைத்துறைக்கும் இசை ரசிகர்களுக்கும் செய்த விஷயங்கள் எல்லாம் அளப்பரியது. இறைவனே இவரது குரலை கேட்டுத் தான் தினமும் மயங்கி நிற்கிறார் என்றால் மனிதர்கள் எல்லாம் எம்மாத்திரம் என இவருக்கு கான கந்தர்வன் என ஏகப்பட்ட பட்டங்களை ரசிகர்களும் அறிஞர்களும் சூட்டி பல விருதுகளையும் வழங்கி உள்ளனர்.
சிறந்த பின்னணி இசை பாடகர் என இந்திய அரசு 8 முறை இவருக்கு தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது. கேரள மாநில அரசு 25 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான விருதினை இவருக்கு வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு 5 முறை சிறந்த பின்னணி இசை பாடகருக்கான விருதுகளை கே.ஜே. யேசுதாசுக்கு வழங்கி உள்ளது. பத்ம பூஷன், பத்மஸ்ரீ, கலைமாமணி, பத்ம விபூஷன் என அனைத்து அங்கீகாரங்களும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர கேரள அரசின் இசைக்கான உயரிய விருதான ஹரிவராசனம் விருதையும் பெற்றவர். இன்று 84வது பிறந்தநாளை கொண்டாடி வரும் யேசுதாஸை நாமும் வாழ்த்துவோம்.
இரவில் தூக்கம் வரவில்லையா இவரின் குரலில் ஹரிவராசனத்தை காதினில் ஒலிக்கவிட்டு கண்ணை மூடுங்கள் பாடல் முடியும் முன்னே கண்ணயரும் அதிசயம் காண்பீர்கள்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பங்கு வர்த்தக விஷயங்களில் பொறுமை வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
ரிஷபம்
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் கல்வியில் இருந்த இன்னல்கள் குறையும். தொழில் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல்கள் ஏற்படும். மனதில் நினைத்த கனவுகள் கைகூடிவரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
நினைத்து சில காரியம் தாமதமாகி முடிவு பெறும். பழைய பிரச்சனைகளைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தாயுடன் அனுசரித்து செல்லவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
மனதளவில் இருந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம்
பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். விலை உயர்ந்த பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
உலக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகளால் சில தெளிவுகள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில பயணங்களில் தாமதம் உண்டாகும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இறை சார்ந்த பயணங்கள் கைகூடும். போட்டி மனப்பான்மை இன்றி செயல்படவும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். புதியவர்களை நம்பி முதலீடு செய்வது தவிர்க்கவும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
எதிர்பாராத சில உதவிகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் சாதகமான சூழல் அமையும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். திடீர் உதவிகள் மூலம் சில பிரசனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆராய்ச்சி கல்வியில் அலைச்சல் ஏற்படும். விவசாய பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் இருந்த மந்தத்தன்மைகள் விலகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம்
குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வேள்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் பயனற்ற விவாதங்கள் தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கும்பம்
செய்யும் முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிராக இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணம் மூலம் திடீர் திருப்பம் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மீனம்
வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். உறவுகள் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பதற்கான சூழல் உண்டாகும். ஆரோக்கிய பிரசனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை 10.1.2026.
இன்று பிற்பகல் 12.33 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி
இன்று இரவு 07.37 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.
இன்று இரவு 09.13 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.
இன்று அதிகாலை 12.08 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 12.33 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று காலை 6.32 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
'பெல்லி சண்டடி' மூலம் டோலிவுட்டில் அறிமுகமான ஸ்ரீலீலா, தனது அழகாலும் நடிப்பாலும் பிரபலமானார். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக 'பராசக்தி' படத்தில் நடிக்கிறார். சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தில் ரவி மோகன், அதர்வா முரளி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் பங்கேற்ற நடிகை ஸ்ரீலீலா, படம் குறித்தும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். சமீபத்திய பேட்டியில், தனது திருமணம் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தனது திருமணம் பற்றி பேசிய ஸ்ரீலீலா, சில சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார். தனக்கு இப்போது 24 வயது என்றும், 30 வயதுக்கு மேல் தான் திருமணம் என்றும், அதுவரை பசங்க பேச்சே இல்லை என்றும் கூறியுள்ளார். தான் காதலிப்பதாக வரும் செய்திகள் வெறும் வதந்திகளே என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நான் யாருடனும் காதலில் இல்லை. படப்பிடிப்புக்கு சென்றாலும், எங்கு சென்றாலும் என் அம்மாவுடன் தான் செல்கிறேன். அப்படி இருக்கும்போது நான் எப்படி காதலில் விழ முடியும்? அமெரிக்கா சென்றபோது கூட அம்மாவுடன் தான் சென்றேன். ஆனாலும் வதந்திகள் வருகின்றன என ஸ்ரீலீலா கூறினார்.
ஸ்ரீலீலாவின் திரைப்பயணத்தில் வெற்றிப் படங்கள் குறைவு. ஆனாலும், அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன. தற்போது 'மாஸ் ஜாதரா', 'பராசக்தி', 'உஸ்தாத் பகத் சிங்' மற்றும் கார்த்திக் ஆர்யனுடன் ஒரு படம் என நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், நாளை திரைக்கு வரவுள்ள ‘பராசக்தி’ திரைபடத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடைவிதிக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பட தயாரிப்பு நிறுவனம் சார்பில், முன்னணி நடிகர்களை கொண்டு பெரும் பொருட் செலவில் திரைப்படம் எடுக்கபட்டுள்ளதால், சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியானால் ஈடு செய்யமுடியாத இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி ‘பராசக்தி’ படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.
அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் புளி. சுவைக்காக பயன்படுத்தப்படும் புளியில் சத்துக்களும் மருத்துவப்பயன்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளியமரம் இந்தியா முழுவதிலும் வெட்ட வெளிப்பிரதேசங்களிலும், தென்னிந்தியாவிலும், இமயமலைப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்க்கப்படுகிறது. விதையின் பருப்பு, கனிகள், தண்டுப் பட்டை மற்றும் இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
விதையின் பருப்பில் பாலசாக்கரைடுகள் உள்ளன. பாலசமைன், கட்டிக்கின், நாஸ்டர்ஷியம் டமரின், ஃபாஸ்ஃபாட்டிக் அமிலம், எத்தனாலமைன், செரீன் ஐனோசிட்டால், மற்றும் ஹார்டனைன் என்னும் இரசாயனப் பொருட்கள் உள்ளன.
வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின்,நியாசின், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
அஜீரணம் போக்கும்
புளியானது குளுமைஅகற்றி, வாய்வு அகற்றி, மலமிளக்கி, துவர்ப்பி, ஊக்கமூட்டி. விதையின் பருப்பு பாலுடன் கலந்து பேதி மருந்தாக பயன்படும். ஊக்கமூட்டும். கனிந்த கனிகள் பூச்சிகளை அகற்றும், அஜீரணத்தைப் போக்கும் மிதமான பேதி மருந்தாகும். உடலைக்குளிரச்செய்யும். ஈரலுக்கு நன்மருந்து. இலைகளின் சாறு இரத்த மூலத்திற்கும் சிறுநீர் கழித்தலின் போது வலியையும் குணப்படுத்தும். தண்டுப்பட்டை துவர்ப்புள்ளது காய்ச்சலைப் போக்கும்.
புளியம்பழம் உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும்,வாதம் தொடர்பான வியாதிகளைத் தணித்துக் குணப்படுத்தும்.புளியம்பழத்தின் உஷ்ண சக்தி 82 காலோரியாகும். புளியம்பழத்தில் பழைய புளி, புதிய புளி என்ற இரண்டு வகை உண்டு. இருவகைப்புளியின் குணமும் ஒன்றே என்றாலும் புதுப்புளியை விட பழைய புளிக்கே வேகம் அதிகம். சூலை தொடர்பான வியாதிகளைக் குணமாக்கும். அதிக அளவு புளியை சாப்பிட்டால் ரத்தம் சுண்டும்
தேள்விஷம் இறங்கும்
தேள் கடித்தவருக்கு புளியம் பழம் மருந்தாக செயல்படுகிறது. களாக்காய் அளவு நார் இல்லாத புளியம்பழத்தை எடுத்துக்கொண்டு அதே அளவு காரம் உள்ள சுண்ணாம்புடன் சேர்த்து இரண்டையும் நன்றாக அழுத்திப் பிசைந்தால் உடனே அது சூடேறும். சூடு ஆறும் முன் அதை அடையாக எடுத்து தேள் விஷம் உள்ள இடத்தில் வைத்து அழுத்த வேண்டும். இந்த மருந்து அப்படியே ஒட்டிக்கொள்ளும். விஷம் புளியம்பழத்தில் ஏறியவுடன் கடுப்பு நின்றுவிடும். படிப்படியாக குணமடையும்.
ரத்த கட்டு அகற்றும்
உடலில் எங்காவது அடிபட்டு ரத்தம் கட்டி வீக்கம் ஏற்பட்டால் புளியை ஒரு அளவு எடுத்து அதே அளவிற்கு உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து அதை சுண்டக்குழம்பு போல கரைத்து எடுத்து வடிகட்டி ஒரு இரும்புக் கரண்டியில் விட்டு, அதை அடுப்பில் வைத்து,நன்றாக கொதிக்க வைத்து அதை தாளக்கூடிய சூட்டுடன் வீக்கத்தின் மேல் கனமாகப் பற்றுப் போட்டுவிட வேண்டும். தினசரி காலை, மாலை பழைய மருந்தைக் கழுவி விட்டு புதிதாகப் பற்றுப் போட வேண்டும். இந்த விதமான மூன்று நாள் பற்றுப் போட்டால் வீக்கம் வாடிவிடும். வலி தீரும்.
பல்வலி குணமாகும்
பல்வலி ஏற்பட்டால் தேவையான அளவு கொஞ்சம் புளியை எடுத்து அதே அளவு உப்புத்தூளையும் எடுத்து இரண்டையும் நன்றாகப் பிசைந்து பல்லில் வலியுள்ள இடத்தில் அடையாக வைத்து அழுத்திவிட வேண்டும், பின் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வாயில் உமிழ்நீர் ஊறினால் அதை துப்பிவிட வேண்டும். கால் மணி நேரம் கழித்து புளியையும் துப்பிவிட்டு வெது வெதுப்பான வெந்நீர் கொண்டு வாயை பலமுறை கொப்பளிக்க பல்வலி குணமாகும். தினசரி காலை, மாலை இந்த முறையை கையாளலாம்.
கீழாநெல்லி வேரை இடித்துப் பிழிந்து கறந்த பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
கீழாநெல்லி இலையைச் சாறு பிழிந்து கற்கண்டு சேர்த்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.
கீழாநெல்லிக் கீரையைச் சமைத்து சாப்பிட்டால் கண்களில் மஞ்சள் நிறம் மாறும் .
கீழாநெல்லி இலையுடன் உளுந்து மஞ்சள் ஆகியனவர்றை சேர்த்து அரைத்து நகக் கண்களில் பூசினால் நகங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
கீழாநெல்லி இலை கோவை இலை, அசோக மரப்பட்டை நாவல் மரபட்டை அனைத்தையும் சம அளவு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
கீழாநெல்லி, மருதாணி, மஞ்சள் ஆகியவற்ரை சேர்த்து அரைத்து கால்களில் பூசினால் பித்த வெடிப்பு சேற்று புண் போன்றவை குணமாகும்.
கீழாநெல்லியை எடுத்துக்கொள்ளும் முறை:
மஞ்சள் காமாலை :
கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.
சர்க்கரை நோய் :
உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.
உடற்சூடு மற்றும் தொற்று நோய்கள் :
கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.
வயிற்றுப்புண் :
1 டம்ளர் மோரில், கைப்பிடி அளவு அரைத்த கீழாநெல்லி இலையைக் கலந்து காலையில் குடித்துவர, வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்னைகளும் தீரும்.
தலைவலி :
நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.
சொறி, சிரங்கு :
கீழாநெல்லி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்து, குளித்து வந்தால் சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் சரியாகும்.
வெள்ளைப்படுதல் :
கையளவு கீழாநெல்லி இலையை நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், அதை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்குச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்துவர வெள்ளைப்படுதல் நோய் குணமடையும்.
கீழாநெல்லி , கரிசாலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.
ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன்.
அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.
அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்து கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது.
உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துக் கொண்டது. உடனே மனம் உடைந்துப் போனான்.
அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.
மன்னர் சிரித்து விட்டு "எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.
அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது.
மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார்.
அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.
அதற்கு அரசர் நடந்ததைக் கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன.
எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.
ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது.
எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்துக் கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான்.
மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. "என்ன அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார்.
உடனே இளவரசர் மறித்து "சரி... எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன்.
அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!
ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்த சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளைக் கேட்க தொடங்கினார்.
அதற்குக் காவலாளி "பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே.
என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவு தான்" என்றான்.
உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்றுக் கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்ப்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.
ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும்.
அப்போது தான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.




























