என்ன ஒரு அழகான நடை
நேர்த்தியான நடைபயிற்சி
கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் நடிப்பில் இந்த ஆண்டும் அரை டஜன் படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒரு படம் தான் டி55. இப்படத்தை அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். அமரனை போல் இதுவும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
டி 55 திரைப்படத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனம்தான் தயாரிக்கிறது. அப்படம் குறித்த அறிவிப்புகள் கடந்த சில தினங்களாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி டி 55 திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக முதலில் அறிவித்திருந்தனர். அதன் பின்னர் நடிகை ஸ்ரீலிலா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
டி 55 திரைப்படத்தில் நடிக்க உள்ள மற்றொரு நாயகி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை சாய் பல்லவியும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அமரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் சாய் பல்லவி. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
அதேபோல் தனுஷ் உடன் சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் கூட்டணி அமைக்க இருக்கிறார் சாய் பல்லவி. இவர்கள் இருவரும் கடைசியாக மாரி 2 திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்படத்தில் தனுஷும் சாய் பல்லவியும் போட்டி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல் இன்றளவும் யூடியூபில் அதிக வியூஸ் அள்ளிய தமிழ் பாடல் என்கிற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருஞ்சீரகத்தை நன்கு இடித்து தூளாக்கி, தேனை சோ்த்து அதனுடன் வெந்நீர் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் குறைந்து சிறுநீர் அடைப்பு குறையும்.
காரட், பாகற்காய், இளநீர் போன்றவற்றில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
வாழைப்பழம், எலுமிச்சை இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரக கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.
கேரட்டை சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை தினமும் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகள் குறையும். ஓரிதழ் தாமரை இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்து மோரில் கரைத்து காலையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்..
- தகவல்கள் இணையத்தில் இருந்து......
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.
இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.
6. தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது
ஒரு நாள் இரண்டு துறவிகள் ஒரு ஆற்றின் கரையில் நடந்து சென்றனர்.
அப்போது அவர்கள், ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு ஊனமான பெண்ணை பார்த்தனர்.
“தயவு செய்து எனக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்ய முடியுமா?” என்றாள்
அதில் ஒருவர் உடனே முன்வந்து, அவளை தோளில் ஏந்தி ஆற்றைக் கடக்கச் செய்தார்.
பின்னர் இருவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
சிறிது நேரம் கழித்து மற்றொரு துறவியின் மனதில் குழப்பம் தோன்றியது.
அவர் கூறினார், “நீ செய்தது தவறு. எப்படி இருந்தாலும், அவள் ஒரு பெண். துறவியான நீ அவளைத் தொட்டு தூக்கி இருக்க கூடாது.”
அதற்கு அந்த துறவி அமைதியாகச் சிரித்து, “நான் அந்த பெண்ணை ஆற்றின் கரையிலேயே இறக்கி விட்டேன்.ஆனால் நீ இன்னும் அவளை உன் மனதில் சுமந்து கொண்டு செல்கிறாய். நீயும் கீழே இறக்கி விடு,” என்றார்.
நித்ய கல்யாணியின் மருத்துவ குணங்கள்: (சுடுகாட்டுமல்லி,நயன்தாரா,சதபுஷ்பி)
நித்ய கல்யாணி செடியின் 10 வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு வகை பூக்களை காம்பு நீக்கி இதனுடன் ஒரு டம்ளர் நீரில் பனங்கற்கண்டு ,மஞ்சள், (கருஞ்) சீரகம் ,மிளகு சேர்த்து கசாயமாக்கி காலை, மாலை 50-100 மி.லி. அளவு குடித்து வரும்போது கீமோதெரபி,ரேடியேசன் தெரபி எடுத்துக் கொள்கின்ற புற்று நோயாளிகளுக்கு நல்ல துணை மருந்தாக செயல்படுகிறது.புற்று செல்கள் மற்ற செல்களுக்கும் பரவாமல் தடுக்கிறது.
நித்ய கல்யாணி பூ 5,இலை 5,வேர் 5கிராம், மிளகு 5 ,சீரகம் இவற்றை ஒரு டம்ளர் நீர் விட்டு கசாயமாக்கி குடித்து வரும்போது சர்க்கரை நோய் தணியும்.சர்க்கரை நோயினால் உள்ளுறுப்புகள் பாதிப்பாகாமல் பார்த்துக்கொள்ளும்.உயர் இரத்த அழுத்த நோயாளிகளும் தினசரி இந்த தீநீர்(கஷாயம்) குடிக்கலாம்.இரத்த அழுத்தம் குறையும்.
ஆசனவாயை சுற்றி கொப்புளங்கள் தோன்றி துளையிட்டு அதன் வழியாக மலம் வெளியேறுவது (பிஸ்ட்டுலா)போன்ற பிரச்சினை உள்ளவர்களும் இந்த தீநீர் குடிக்கலாம்.உள்புண் ஆறும்.மேலும் இந்த தீநீரை ஆர வைத்து ஆசனவாயை கழுவவும் பயன்படுத்தலாம்.வெளிப்புண்கள்ஆறும்.
நித்ய கல்யாணி வேரை சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்து கசாயமாக்கி காலை,மாலை 50-100 மி.லி. குடித்துவர பல்வலி சரியாகும்.இந்த கசாயத்தை வாய் கொப்பளித்துவர பல் ஆட்டம்,ஈறுவீக்கம்,இரத்த கசிவு ,பல்வலி சரியாகும்.
எந்தவித புண்ணாக இருந்தாலும் ஆற்றக்கூடியது நித்ய கல்யாணி பூ கஷாயம்.இதன் இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தைலமாக காய்ச்சி புண்களின் மீது தடவிவர ஆறாத புண்ணும் ஆறும்.(இலையை அரைத்து பற்றாகவும் போடலாம். ) நித்ய கல்யாணி செடியின் கஷாயம் மன உளைச்சல் ,தூக்கமின்மையை போக்கும்.தேனீ கடி ,வண்டுகடி,பூச்சிக்கடிக்கு முதலுதவியாக கடித்த இடத்தை கழுவிவிட்டு இதன் இலையை அரைத்து கடிவாயில் பூசவேண்டும்.
முக்கிய குறிப்பு :-
மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பு பயன்படுத்தவும். மிக சிலருக்கு இந்த கஷாயம் தலை சுற்றல் ,வாந்தி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். முதலில் சிறிதளவு சாப்பிட்டு பரிசோதித்துவிட்டு பின் பயன்படுத்தலாம். இரண்டுவித நிற பூக்களையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். படித்து அறிந்தது
தமிழ்நாட்டில் - மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தினந்தோறும் அழகருக்கு ஐம்பொன்னாலான கல்லில் சுடப்படும் தோசை படைக்கப்படுகிறது. திருப்பதி திருவேங்கடப் பெருமாள், திருவரங்கம் அரங்கநாத பெருமாள், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள், இவர்களுக்கு தென்திசையில் கள்ளழகர் என்று போற்றப்படும் சுந்தரராஜபெருமாள் தலைமை தெய்வமாக விளங்குகிறார். பண்டிகை நாட்களில் மட்டுமே நாம் பலவித பலகாரங்களை உண்டு மகிழ்வோம். ஆனால் பெருமாள் கோயில்களில் கடவுளுக்கு படைக்க அன்னம், அபூபம் என்ற இருவித உணவுகளை மடப்பள்ளியில் சமைப்பது வழக்கம்.வெண் பொங்கல், சக்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் போன்றவை அன்ன உணவு. அபூபம் என்பது எண்ணெயில் தயாராகும் முறுக்கு, அதிரசம், அப்பம், வடை, தோசை போன்றவை.
மற்ற எந்த கோயில்களிலும் இல்லாத சிறப்பு கள்ளழகர் கோயிலுக்கு உண்டு எனக்கூறிய துணை கமிஷனர் ராமசாமி மேலும் கூறியதாவது: இங்கு மூலவருக்கு பாயாச அன்னம் எனப்படும் அக்கார அடிசிலும், அபூபங்களில் புஷ்டா பூபம் என்ற அளவு, சுவையில் உயர்ந்த தோசையும் நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. தினசரி மாலை 6:00 மணிக்கு மேல் நித்ய அனு சந்தானம் என்ற சேவா கால பூஜை நடக்கும். இதில் நாலாயிர திவ்யபிரபந்தங்கள் பாடப்படும். இந்த பூஜை முடிந்தபின் பச்சரிசி ஒரு படி, உளுந்து அரைப்படி, மிளகு, சீரகம், பெருங்காயம், சுக்கு முதலியவற்றை அரைத்து மாவாக்கி ஒரு லிட்டர் சுத்தமான பசு நெய்யில் ஒரே தோசையாக சுடப்படும். இத்தோசை அழகருக்கு படைக்கும் சிறப்பு மிக்க நைவேத்திய பிரசாதம். இது தங்கம், வெள்ளி, துத்தநாகம், இரும்பு, செம்பு ஆகிய ஐம்பொன்னால் ஆன, 2.5 அடி விட்டம், 10 கிலோ எடையுள்ள தோசைக் கல்லில் சுடுவது இதன் சிறப்பு. நுாபுர கங்கை நீரில் அரிசி, உளுந்து, நெய்கலந்து, ஒரு படி மாவு, ஒரு லிட்டர் நெய் ஊற்றி 5 கிலோ எடையுள்ள ஒரே தோசையாக வார்க்கப்படும். இவ்வளவு பெரிய தோசை வேறு எந்த கோயிலிலும் படைக்கப்படுவதில்லை. அழகருக்கு படைக்கப்பட்டு, வேதம் ஓதுவார், அர்ச்சகர், பக்தர்களுக்கு நாழியாக (பாகம்) வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை பல நுாறு ஆண்டுகளாக இன்று வரை உள்ளது. இத்தோசையை பெற பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுவர், என்றார்.
தேவையான பொருட்கள் :
துளசி - 4 தளிர்
புதினா - 4 தளிர்
தண்ணீர் - 200 மில்லி
தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி - தேவையான அளவு
செய்முறை :
முதலில் துளசி, புதினா இரண்டையும் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
பின்பு இரண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.
நன்கு சாறு இறங்கியதும் வடிகட்டி தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி கலந்து பருகலாம்.
குறிப்பு :
துளசி மற்றும் புதினாவை சம அளவு எடுத்து நிழலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் தேவையான போது ஒரு டம்ளருக்கு 1/2 டீஸ்பூன் வீதம் போட்டு பருகலாம்.
இன்றும் ஒலிக்கும் அதிசயம்… இந்த ஆலயத்தில்!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் – முழையூர் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பரசுநாத சுவாமி திருக்கோவில் ஒரு தேவார வைப்புத்தலம் ஆகும்.
இந்த ஆலயத்தின் சிறப்பு “முழவு” எனும் அபூர்வ வாத்தியத்துடன் இணைந்த ஆன்மிக மரபே!
🥁 “முழவு” – சிவகணங்களின் வாத்தியம்
பழங்காலத்தில் “முழவு” என்பது வேத ஒலிகளை ஒழுங்காக வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒருவகை மேள வாத்தியம்.
ஆன்மிக நம்பிக்கை:
சிவலோகத்தில் பூதகணங்கள் முழவு வாத்தியத்தை வாசித்து சிவபெருமானை துதிப்பதாக புராண மரபுகள் கூறுகின்றன.
குறிப்பாக அக்ஷயதிரிதியை நாளில் பூதகணங்கள் ஆனந்த தாண்டவமாக “முழவு” வாத்தியத்தை வாசிப்பதாக நம்பப்படுகிறது.
ஏன் “முழையூர்” என்ற பெயர்?
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்ஷயதிரிதியை அன்று பாரம்பரிய முறையில் “முழவு” வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
இந்த மரபின் காரணமாகவே இந்த ஊருக்கு “முழையூர்” என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பரசுராமர் – பரசுநாதர் ஆன கதை
புராண மரபின்படி, தந்தை ஜமதக்னியின் கட்டளையின்படி பரசுராமர் தன் தாயை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
அந்த தோஷம் நீங்க முழையூரில் வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து கடும் தவம் மேற்கொண்டார். சிவபெருமானின் அருளால் அவரது தோஷம் நீங்கியது.
அதனால் தான் இங்கு எழுந்தருளிய சிவன் “பரசுநாத சுவாமி” என்று அழைக்கப்படுகிறார்.
லிங்கத்தின் அபூர்வ அமைப்பு
இங்குள்ள லிங்கம் பீஜாட்சர லிங்க வகையை சேர்ந்தது. “நீண்ட கொம்பு – நெடுந்திடை லிங்கம்” என்பது அதன் தத்துவ விளக்கம்.
லிங்கம் வட்ட வடிவில், எட்டு பட்டைகளுடன் அரிய வடிவில் காட்சியளிக்கிறது.
அர்த்தநாரீஸ்வரர் தரிசனம்
பொதுவாக கருவறை சுற்றுச்சுவரில் லிங்கோத்பவர் இருப்பார். ஆனால் இக்கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் அரிய வடிவில் காட்சியளிக்கிறார்.
இது சிவ – சக்தி ஐக்கியத்தை உணர்த்தும் தத்துவ வடிவம்.
பிரார்த்தனை பலன்கள் (நம்பிக்கையின்படி)
✨ திருமணத் தடைகள் நீங்க
✨ குழந்தைப் பாக்கியம் பெற
✨ கல்வியில் சிறந்து விளங்க
✨ மன அமைதி & தைரியம் பெற
பரசுநாத சுவாமியை பிரார்த்திக்கலாம்.
அக்ஷயதிரிதியை சிறப்பு
அக்ஷயதிரிதியை அன்று பக்தர்கள் மல்லிகைப்பூக்களை தாங்களே தொடுத்து இறைவனுக்கு சமர்ப்பிப்பது ஒரு சிறப்பு நேர்த்திக்கடன்.
மார்கழி திருவாதிரை மகாசிவராத்திரி அக்ஷயதிரிதியை இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
கோவில் காலம்
இந்த ஆலயம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
அது ஒரு சாப்பாடு போட்டி!
பத்து மாடி! ஒவ்வோரு மாடியிலும் இலை போட்டு சாப்பாடு பரிமாறி தயாராக வைத்திருப்பார்கள்!
ஒரு மாடியில் சாப்பிட்டு முடித்த பின் அங்கு ஒரு பணியாளன் இருப்பான் சாப்பிட்டதற்கு அடையாளமாக ஒரு கல்லை மேலே இருந்து கீழே போடுவான் அப்படி என்றால் அவன் முழு சாப்பட்டையும் சாப்பிட்டு விட்டான் என்று அர்த்தம்.
போட்டி ஆரம்பித்தது!
முதலில் ஆப்ரிக்கா நாட்டுக்காரன் சென்றான் முதல் மாடி சாப்பாட்டை முடித்து, இரண்டாவது மாடி சாப்பாட்டை சாப்பிட்டான் பணியாள் கல்லை வெளியே போட்டான்! மூன்றாவது மாடி சாப்பாட்டை அவனால் சாப்பிட முடிய வில்லை! தோற்று வெளியே சென்றான்!
அடுத்து இங்கிலாந்து நாட்டுக்காரன் சென்றான் நான்கு மாடி சாப்பாட்டை முடித்து, பணியாள் கல்லை வெளியே போட்டான்! ஐந்தாவது மாடி சாப்பாட்டை அவனால் சாப்பிட முடிய வில்லை! தோற்று வெளியே சென்றான்!
அடுத்து நம்ம ஆளு சென்றான் ஒன்பது மாடி சாப்பாட்டை சாப்பிட்டான்! இன்னும் ஒரு மாடி சாப்பாடு தான் பாக்கி! பத்தாவது மாடியில் இருக்கும் பணியாளுக்கு நம்ம ஆளு ஜெயிக்க போகிறான் என்று தகவல் வந்தது ஆவல் மிகுதியில் நம்ம ஆளு வருவதற்குள் தன்னிடம் உள்ள அந்த கல்லை தூக்கி போட்டான்.
இப்ப நம்ம ஆளு பத்தாவது மாடியில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டான். சாப்பிட்ட பிறகு கல் எங்கே என்று கேட்க!
அவனோ நீ எப்படியும் ஜெயித்து விடுவாய் என்று தெரியும் அதனால் நீ வருவதற்கு முன்பே கீழே போட்டு விட்டேன் என்று சொல்ல !
நம்ம ஆளுக்கு கோபம் வந்தது. இது கள்ளாட்டம் இதை நான் ஏற்று கொள்ள முடியாது ! நான் மறுபடியும் முதல் மாடியில் இருந்து சாபிடுறேன் என்றான்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். சூழ்நிலைக்கேற்ப பேசி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பலதரப்பட்ட விஷயங்களால் மனதில் அமைதியின்மை உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
ரிஷபம்
நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சொத்துக்கள் விற்பது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மிதுனம்
சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கோப உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. நினைவாற்றலில் இருந்த மந்ததன்மை விலகும். பயண விஷயங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
மனதில் புதுவிதமான இலக்குகளும் அதை சார்ந்த அலைச்சலும் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான செயல்களில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான துறைகளில் மதிப்புகள் அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செஞ்சிவப்பு
சிம்மம்
சுபகாரிய தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
உறவினர்கள் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் புதிய அனுபவமும் உத்வேகமும் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் தோன்றும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான எண்ணங்களும் சிந்தனைகளும் பிறக்கும். உத்தியோக தொடர்பான பணிகளில் விவேகம் அவசியமாகும். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். காப்பீடு பணிகளில் நிதானத்துடன் செயல்பட்டால் சாதகம் உண்டாகும். வியாபார நிமித்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
கருத்துக்களில் கவனம் வேண்டும். தம்பதிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணி பொறுப்புகளால் கோபம் தோன்றி மறையும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருள்களை விவேகத்துடன் கையாளவும். செய்யும் முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி
தனுசு
கூடுதல் பொறுப்புகளால் மதிப்புகள் உயரும். மறதி பிரச்சனைகள் ஓரளவு குறையும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். எதிர்கால சிந்தனைகள் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கும்பம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உத்தியோக பணிகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். அசையா சொத்துக்களில் ஈர்ப்பு உண்டாகும். வருமானம் குறித்த எண்ணம் மேம்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான மந்த தன்மை ஏற்படும். வர்த்தக பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பயணம் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். நம்பிக்கை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
விசுவாவசு வருடம் தை மாதம் 19 ஆம் தேதி திங்கட்கிழமை 2.2.2026
இன்று அதிகாலை 04.43 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.
இன்று அதிகாலை 01.01 வரை பூசம். பின்னர் ஆயில்யம் .
இன்று காலை 08.52 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.
இன்று அதிகாலை 04.43 வரை பவம். பின்னர் மாலை 04.41வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30 முதல் 07.30 மணி வரை
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் மத்திய அரசின் படைகளால், இரண்டு குடிமக்கள் கொல்லப்பட்டது குறித்து கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“கனடா மினசோட்டா அல்ல" அமெரிக்காவில் நடக்கும் விடயங்களுக்கு தான் தீர்ப்பு வழங்க விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் "கனடா மினசோட்டா அல்ல" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கனடாவில் குடியேற்ற விதிகளை அமுல்படுத்தும் போது சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கனடா சுமார் 22,000 பேரை முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, மனிதாபிமானத்துடன் வெளியேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் தற்போதைய செயற்பாடுகளால் உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் உள்ளதா என்ற கேள்விக்கு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கடினமான காலம் நிலவினாலும், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு தொடர்ந்து வலுவாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கனடாவின் ஹாமில்டன் நகரில் 2026 ஆம் ஆண்டின் முதல் துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக பொதுமக்களின் உதவியை காவல்துறை கோரியுள்ளது.
ஜனவரி 31 ஆம் தேதி மாலை சுமார் 7.13 மணியளவில், ஈஸ்ட் 28வது தெரு மற்றும் பென்னெல் அவென்யூ ஈஸ்ட் சந்திக்கும் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில், ஒரு வயது வந்த ஆண் காயமடைந்ததாகவும், அவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுள்ளதாகவும், பென்னெல் அவென்யூ ஈஸ்டிலிருந்து ஈஸ்ட் 27வது தெரு வழியாக வடக்கு திசையில் சென்றிருக்கலாம் எனவும் விசாரணையாளர்கள் நம்புகின்றனர். தற்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், சந்தேக நபரின் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். கமிஷன் வியாபாரத்தில் லாபங்கள் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை மேம்படும். கொடுத்த வாக்குறுதிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இழுபறியான வரவுகளை பற்றிய எண்ணம் மேம்படும். பேச்சுகளில் கவனம் வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை தரும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிதுனம்
விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவரிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். வேள்வி பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். நம்பிக்கை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கடகம்
சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகமும் தொடர்பும் கிடைக்கும். பணிகளில் சில சூட்சுமங்களை உணர்ந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களில் புதிய அனுபவங்கள் உருவாகும். நெருக்கமானவர்களுடன் தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
சிம்மம்
உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரமான செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். அரசு பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். முயற்சிக்கு ஏற்ப சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கல்வியில் இருந்து வந்த குழப்பம் அகலும். வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகள் மேம்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி
வெளி வட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். உற்பத்தி தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
உடன் இருப்பவர்கள் மூலம் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். எளிமையான பணிகளில் தாமதம் ஏற்படும். கலை பொருள்களில் கவனம் வேண்டும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். குழந்தைகளிடம் சூழநிலை அறிந்து செயல்படவும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
கடினமான காரியங்களையும் எளிமையான முறையில் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் சிலருக்கு சாதகமாக அமையும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
தனுசு
பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மகரம்
குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். எந்த ஒரு பணியை திட்டமிட்டு செயல்படுவீர்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்த இழுபறிகள் குறையும். வழக்கு விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
கும்பம்
குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
செயல்பாடுகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் உருவாகும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் சிலருக்கு ஏற்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டுப் பேசுவதன் தெளிவுகள் ஏற்படும். வியாபாரம் பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் தை மாதம் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 1.2.2026
இன்று அதிகாலை 04.40 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.
இன்று அதிகாலை 01.53 வரை புனர்பூசம். பின்னர் பூசம் .
இன்று காலை 11.04 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.
இன்று அதிகாலை 04.40 வரை வணிசை. பின்னர் மாலை 04.41 வரை பத்தரை. பின்பு பாலவம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
தேவிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
“முட்டாளா நீங்க? தனக்காகவும் தெரியவில்லை. சொன்னாலும் புரியவில்லை. நீங்களெல்லாம் ஏன் வேலைக்கு வரீங்க வந்து எங்க உயிரை எடுக்கறீங்க” இன்றைக்கும் கண்டபடி திட்டினார் மேனேஜர் சிவா.
என் சர்வீஸ் என்ன? படிப்பென்ன? இந்த ஆபீஸில் நான் தான் மேனேஜராகி இருககனும். திடீரென சிவாவை வேறு ப்ராஞ்சிலிருந்து இங்கே மாற்றி மேனஐராக்கி ஆபீஸையே கலக்கி விட்டார்கள்
சிவாவை மேனேஜராகவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஆனால் தன் மிரட்டலாலும், அதிகாரத்தாலும், வசைச்சொற்களாலும் எல்லோரையும் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் ஆட்டிவைத்துக்கொண்டிருந்தான்.
அதவும் தேவியை வேலை தெரியாதவள் என்று காட்ட, தினமும் ஏதாவது தப்பை கண்டு பிடித்து வெளிப்படையாக திட்டுகிறார். றார் என்ன றான். அவன் மூஞ்சியும், முகரையும்.
“உங்களை என் போஸ்ட்டுக்கு கன்சிடர் பண்ணிணாங்களாமே! குட் ஜோக் நல்லவேளை. ஆபீஸ் பிழைச்சது” என்பான் தினம் ஒருமுறையாவது.
ஆபீஸில் அனுதாபப்பட்டார்களே தவிர, வெளிப்படையாக ஒருவர் கூட சப்போர்ட் செய்யவில்லை
தேவிக்கு எப்படியாவது சிவாவுக்கு பதிலடி கொடுக்கனும்னு வெறி!
கணவன் மாதுவைக்கேட்டதும் அடி பிச்சிடுவோமா என்று திருப்பிக்கேட்டான்
ஐயோ என் வேலை போயிடும் என்று அலறி நானே பாத்துக்கறேன் என்றாள்.
பலத்தை வைச்சு ஜெயிக்க முடியலைனா பலவீனத்தை வைத்து ஜெயிக்கலாமே!
சிவாவின் பலவீனமென்ன? பணம்.
சிவா ஒரு கேம்ப்ளர், குடிகாரன். பணம் அதிகம் தேவைப்படும் ஆள் கம்பெனிகளுக்கு விலை கம்மியாகவும், அட்வான்ஸ் டெலிவரி தருவதாகவும் ஒரு கிசுகிசு.
தன் தோழி கல்பனா கம்பெனியில் முதலில் விசாரித்தாள் தேவி.
கல்பனா வகையாய் ஆதாரத்தோடு சீக்கிரமா சப்ளை செய்ததற்கு சிவாவுக்கு லஞ்சம் கொடுத்தோம் என்றாள்.
இருக்கிற கஸ்டமர்ஸ் மொத்தம் 420. சிவா வந்ததிலிருந்து சப்ளை நடந்த கம்பெனிகள் இருநூற்றுக்கும் மேல்.
தேவி தன்னுடைய தொடர்புகளை வைத்து விசாரித்ததில் சிவா மார்க்கெட்டில் எக்கச்சக்கமாய் விளையாடியிருந்தான்.
கிட்டத்தட்ட 50 கம்பெனிகளில் சிவா பணமாகவும் பைக், மற்றும் காராகவும் லஞ்சமாக வாங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.
பிரமித்துப்போனாள் தேவி.
எல்லா ஆதாரங்களையும் திரட்ட 20 நாட்களாயின.
அவைகளை ஒரு ஃபைலாக்கி, மூன்றுநாள் லீவு போட்டு ஹெட் ஆபீஸூக்கு சென்று அட்மின் ஹெட்டிடம் கொடுக்க, மெளனமாய் வாங்கிக்கொண்டு முதலாளியிடம் பேசுவதாயும் அடுத்த நாள் காலைவரை வெய்ட் பண்ணுமாறும் கூறினார்.
சரி என்று தலையாட்டினாள் தேவி
அடுத்த நாள் வெகு சீக்கிரமே ஆபீஸூக்கு வந்துவிட்டாள் தேவி.
ரிஷப்ஷனில் முதலாளி கூப்பிடுவதாய் சொல்ல, இதுவரை முதலாளியை பார்த்ததில்லை. சரியான வெகுமானம் கிடைக்கப்போகிறது என அகமகிழ்ந்தாள்.
கனிவான பார்வையில் “சொல்லுங்கம்மா” என்று கனிவாய் பேசினார்.
தேவி, சிவாவை பற்றியும், ஆபீஸில் அவர் மற்றவர்களை நடத்தும் விதம் பற்றியும் விபரமாய் சொல்லி, சிவா வாங்கிய லஞசம் பற்றிய முழு டிடெயிலை அட்மின் ஹெட்டிடம் தந்ததாகவும் சொல்ல...
“பார்த்தேன் படித்தேன்” என்றார்.
“இவராலே நம்ம கம்பெனி பணமும் பேரும் போகுது” என்றாள்.
“என்ன செய்யலாம் சொல்லுங்க”?
“டிஸ்மிஸ் பண்ணனும் ஸார்”
“நான் சொல்வதை கேளுங்க. இந்த ஃபைலை தயார் பண்ண எத்தனை நாளாச்சு?” கனிவாய் கேட்டார்.
“கிட்டத்தட்ட ஒரு மாசமா கடுமையா உழைச்சு இதே வேலையாயிருந்தேன்” பெருமையாய் சொன்னாள்.
“அப்ப நீங்க உங்க வேலையை பாக்கலை.”
“ஸார்”
”இதெல்லாம் யாருக்காக செஞ்சீங்க?”
“கம்பெனிக்காக. அதன் நல்ல பேருக்காக”
“கிடைச்சுதா? இல்லை. நீங்க செஞ்ச வேலையில் கம்பெனி பெயர் கெட்டதுதான் மிச்சம். உங்க வேலையை பாக்காத ஒழுங்கீனம். மேலதிகாரிக்கு பணியாத திமிர் இது. மற்றவர்களுக்கும் பரவும் உங்களை தண்டிக்காம விட்டா:”
தடுமாறிப்போனாள் தேவி.
“ஸார் சிவா கெட்டவர் குரலில்” பயம்.
“தெரியும். அவர் லஞ்ச ஊழல் பேர்வழி. இங்கேயும் இப்படித்தானிருந்தார். ஒரு தண்டனையாகத்தான் அவரை டிரான்ஸ்ஃபர் செஞ்சோம். அப்படியும் அவர் திருந்தலை. அவர் மேல் ஆக் ஷன் உறுதி. அதற்காக உங்களது ஒழுங்கீனத்தை ஒத்துக்க முடியாது” கண்டிப்பாக பேசினார்.
“”ஸார்”
“உங்களுக்கு ஒரு மெமோ கொடுக்க சொல்லியிருக்கேன். ஒரு இன்கிரிமென்ட் கட் பண்ணியிருக்கேன்” என்று சொல்ல...
“ஸார் தெரியாம...”
முடிக்கு முன் “நீங்க போகலாம்” என்று எழுந்தார்.
-மாதவி
சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 25வது திரைப்படமாக வெளிவந்த ‘பராசக்தி’, வெளியான நாளிலிருந்து தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்து வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிவகார்த்திகேயன் கெரியரில் ஒரு மைல்கல் படமாக கருதப்பட்ட பராசக்தியில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 25வது திரைப்படமாக வெளிவந்த ‘பராசக்தி’, வெளியான நாளிலிருந்து தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்து வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிவகார்த்திகேயன் கெரியரில் ஒரு மைல்கல் படமாக கருதப்பட்ட பராசக்தியில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார்.
“சுதா கொங்கராவின் முந்தைய படங்களில் இருந்த தாக்கம் இதில் முழுமையாக இல்லை” என்று சில விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், தயாரிப்பு தரப்பு இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் டிராக்கர்களின் தரவுகள் படி பராசக்தி ஒட்டுமொத்தமாகவே வெறும் 85 கோடி தான் வசூலித்துள்ளதாம். பொங்கல் விடுமுறைகள் முடிவடைந்ததும், புதிய படங்கள் திரைக்கு வந்ததால் பராசக்தியின் வசூல் வேகம் குறைய தொடங்கியது. ஆரம்பத்தில் கோடிகளில் வந்த வசூல், தற்போது லட்சங்களாக சரிந்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், இப்படத்தின் தியேட்டர் ஓட்டம் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பராசக்தியின் ஓடிடி ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கமாக தமிழ் திரைப்படங்கள் 28 நாட்களுக்குள் டிஜிட்டல் தளங்களில் வெளியாகினாலும், பராசக்தியை 48 நாட்கள் கழித்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் பார்த்தால், படம் பிப்ரவரி மாத இறுதியில் தான் ஓடிடிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அப்படம் முன்கூட்டியே ஓடிடிக்கு வருவது உறுதியாகி உள்ளது. அதன்படி பராசக்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரபல ஹொலிவுட் நடிகை கேத்தரின் ஓஹாரா தனது 71ஆவது வயதில் காலமானார்.
"ஹோம் அலோன்" (Home Alone) மற்றும் "ஷிட்ஸ் கிரீக்" (Schitt’s Creek) போன்ற உலகப் புகழ்பெற்ற படைப்புகளில் நடித்து முத்திரை பதித்த அமெரிக்க நடிகை சுகயீனம் காரணமாக நேற்று (30) அவரது வீட்டில் வைத்து உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1990களில் வெளியான 'Home Alone' திரைப்படத்தில் சிறுவன் கெவினின் தாயாராக நடித்ததன் மூலம் இவர் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்தார்.
அண்மைக் காலத்தில் 'Schitt’s Creek' தொடரில் மோய்ரா ரோஸ் (Moira Rose) என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக எம்மி விருது (Emmy Award) மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளார்.
கனடாவின் டொரன்டோவில் வசிக்கும்இலங்கை தமிழர் ஒருவர் தனது நான்கு கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை விற்பனை செய்வதற்காக அங்குள்ள நகைக்கடைக்கு சென்றபோது ஒரே நகை வெவ்வேறு கடைகளில் எடைகள் காட்டப்பட்ட சம்பவம் தங்க நகையை கொண்டு சென்றவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் மொத்தம் ஐந்து நகைக்கடைகளுக்கு சென்று தனது நகையை எடைபோட்டு பார்த்துள்ளார். அதில் நான்கு கடைகளில் உள்ள மின்னணு எடை இயந்திரங்கள் அவரது நகையின் சரியான எடையை காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக அந்த நான்கு கடைகளில் நகையை அளவிடும் போது 3.9 கிராம், 3.8 கிராம் மற்றும் 3.85 கிராம் என நகையின் உண்மையான எடையை விட குறைவான அளவுகளே காட்டப்பட்டுள்ளன.
அதேசமயம் ஐந்து நகைக்கடைகளில் ஒரே ஒரு கடையில் மாத்திரம் நகையின் சரியான எடையான நான்கு கிராம் துல்லியமாக காட்டப்பட்டுள்ளது. தற்போது சந்தை நிலவரப்படி 0.1 கிராம் தங்கத்தின் மதிப்பு சுமார் 13.68 அமெரிக்க டாலர் அதாவது சுமார் 20 கனேடியன் டாலர்கள் ஆகும்.
ஒரு கடையில் 0.2 கிராம் எடை குறைவாக காட்டப்பட்டால் வாடிக்கையாளருக்கு தெரியாமலேயே சுமார் 40 கனேடியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
நகைக்கடைகளில் உள்ள எடை இயந்திரங்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்டு காலிப்ரேஷன் (Calibration) செய்யப்பட வேண்டியது அவசியம்.
சிறிய அளவிலான எடை குறைப்பு கூட அதிகப்படியான தங்கத்தை விற்கும் போது அல்லது வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தும். எனவே தங்க நகைகளை வாங்கும்போது மிகவும் அவதானமாக அவதானித்து வாங்குங்கள்.
நடிகை ஸ்ருதிஹாசன், துல்கர் சல்மான் ஜோடியாக ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்திலிருந்து அவருடைய தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாடுவது, இசையமைப்பது, எழுதுவது, நடிப்பு ஆகிய துறைகளில் நான் சென்று கொண்டிருக்கிறேன். இதற்கு கலைகளில் பல்வேறு திறமை கொண்ட பெற்றோருடன் வளர்ந்தது காரணம். நான் வளர்ந்த சூழல் எனக்கு அதைத் தந்திருக்கிறது. நான் விரும்பிய விஷயங்களைச் செய்ய அனுமதி வழங்கியது.
2018-ல் நடிப்பிலிருந்து சில காலம் இடைவெளி எடுத்துக் கொண்டது பற்றி கேட்கிறார்கள். அந்த இடைவெளி, நான் யார் என்பதை மறுமதிப்பீடு செய்து, என்னை நானே ஆராய்வதற்கான நேரமாக இருந்தது. சில மனநலப் பிரச்சினைகளுக்காகவும் நேரம் எடுத்துக்கொண்டேன்.
நான் பல ஆண்டுகளாகக் கடுமையான பதற்றத்தால் அவதிப்பட்டேன். அந்த பதற்றத்துடன் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர முடியவில்லை. நான் எதைத் தேடுகிறேன், நான் யார் என்பதில் எனக்குத் தெளிவில்லை. அந்த இடைவெளியில், லண்டனில் இருந்தேன். அங்கு இசையின் மூலம் என்னை நான் மீண்டும் கண்டறிந்தேன்.
தினமும் என் உடைகளை நானே துவைப்பது, எனக்கான உணவை நானே சமைப்பது, மெட்ரோ ரயிலில் பயணிப்பது, திரும்பி வந்து புதிதாக எழுதப் பயிற்சி செய்வது, பின்னர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த இசையைச் சோதித்துப் பார்ப்பது என என் வாழ்க்கையை அமைத்திருந்தேன்.
இப்போது ஒரு கலைஞராக இருப்பதை மிகவும் விரும்புகிறேன். அது மகிழ்ச்சியைத் தருகிறது. வழக்கமான கதாபாத்திரங்களை விடுத்து சவாலான வேடங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.











