·   ·  3 videos
  •  ·  0 friends
  • 189
  • More

Goose on lakeside

Comments (0)
Login or Join to comment.
·
Added a news

கனடாவில் ஒரு தம்பதியர் குப்பை கொட்டும் வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அவர்கள் மீது இனரீதியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

கனடாவில், சாலையோரமாக ஓரிடத்தில் தங்கள் காரை நிறுத்திய தம்பதி, தங்கள் கைகளிலிருந்த பைகளிலிருந்து எதையோ எடுத்து வீசுவதைக் காட்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக ஊடகமான எக்ஸில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த தம்பதியர் இந்தியர்கள் என்றும், அவர்கள் குப்பை கொட்டுவதாகவும் கூறி அவர்களை விமர்சித்துவருகிறார்கள் பலர்.

அவர்கள் இந்தியாவை கெடுத்துவிட்டார்கள். அவர்களை கனடாவையும் கெடுக்க விடக்கூடாது என்கிறார் ஒருவர்.

இவர்களால் எல்லா புலம்பெயர்ந்தோருக்கும் கெட்ட பெயர் என்கிறார் மற்றொருவர்.

ஒருவேளை அவர்கள் ஏதாவது பறவைகள் அல்லது விலங்குகளுக்கு உணவளிக்கிறார்களோ என்றும் ஒருவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

  • 132
·
Added article

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜமின்தாரின் மகன் என்பது பலரும் அறியாத தகவல்...

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு தான் எம்.எஸ்.பாஸ்கரின் சொந்த ஊர்

எம்.எஸ்.பாஸ்கரின் தந்தை RM.சோமுத்தேவர் அவர்கள் ஜமீன்தாராக இருந்தார்,

ஊர் மக்களால் RMS என்று அன்புடன் அழைக்கப்பட்டார்

அந்த பகுதியில் அவருடைய வார்த்தைக்கு யாரும் மறு பேச்சு பேச மாட்டார்கள் அந்த அளவுக்கு அவருக்கு செல்வாக்கும் மதிப்பும் இருந்தது...

எம்.எஸ் பாஸ்கர் அப்பா சோமுதேவர் வள்ளல் போல் இருந்தவர். யார் உதவி கேட்டாலும் உடன் கொடுத்து உதவுவார்.

அந்த காலகட்டத்திலேயே 1965களில் வெள்ள கார் வைத்திருந்தார்..

இடும்பவனத்தில் தென்னை தோப்பு நில்ம்..வைத்திருந்தார்

எம்ஜிஆர் இவர் கிட்ட பணம் கேட்டு வாங்குவார் இவருக்கு பணம் தேவை என்றால் எம்ஜிஆரிடம் கேட்டும் வாங்குவார் அந்தளவுக்கு எம்ஜிஆர் அவர்களிடம் நெருங்கிய நட்பு இருந்தது

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இருவரையும் சமாதானப்படுத்த கூடிய ஒரே நபர் சோமுத்தேவர் தான் என்று இரு தரப்பினர் விரும்பியதாகவும், இதனை அடுத்து இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த சென்னைக்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தி பிரச்சினையை முடித்து வைத்துள்ளார்

கலைஞர் வீட்டுக்கு போனால் கலைஞர் வீட்டு வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து செல்லும் அளவுக்கு நெருங்கிய நட்பு

மணலி கந்தசாமி அவர்களிடம் நெருங்கிய நண்பர்

மாரியப்ப வாண்டையார்

முத்தையா செட்டியர்

புதுவை முதல்வராக இருந்த பாரூக் மரைக்காயர்

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பட்டுகோட்டை நாடிமுத்து பிள்ளை...

அத்தி வெட்டி அய்யா உக்கடை தேவர்.

பூண்டிதுளசி அய்யா வாண்டையார் எல்லோரும் அவரது நட்பு வட்டம்....

இவர் பரம்பரை காங்கிரஸ் காரர் என்றாலும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடு பட்டவர்களுக்கு நிதி உதவி செய்து அதிகமாக செலவு செய்தவர்

தஞ்சாவூர் ஜில்லா போர்டு தேர்தலில் நின்றார்...பஞ்சாயத்து பேசுவதில் வல்லவர்...மக்கள் மனதில் நின்ற வள்ளல்..

தன் மகன் பாஸ்கரை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று சோமு தேவர், எம்.எஸ்.பாஸ்கரை நாகப்பட்டினத்தில் பள்ளியில் படிக்க வைத்தார், நாகையில் படிக்கும்போதே பாஸ்கர் நாடகத்தில் நடித்தார். அவருக்கு நடிப்பு என்பது சிறுவயது முதலே ரத்தத்திலேயே ஊறி இருந்தது.

இந்த நிலையில் தான் 1971-ல் சோமு தேவர் தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் மேற்ப்படிப்புக்காக சோமு தேவர் தனது குடும்பத்துடன் சென்னையிலேயே செட்டிலானார்.

சென்னை பச்சையப்பா கல்லூரியில்தான் எம்.எஸ்.பாஸ்கர் பட்டப்படிப்பு படித்தார். எம்.எஸ்.பாஸ்கரின் இரண்டு சகோதரிகளும் டப்பிங் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தனது சகோதரியுடன் டப்பிங் செய்யும் ஸ்டூடியோவுக்கு எம்.எஸ்.பாஸ்கர் சென்றபோதுதான் ஆண் குரலுக்கு டப்பிங் கொடுக்க வந்தவர் வரவில்லை என்பது தெரிய வந்தது. அப்போது எம்.எஸ்.பாஸ்கரை டப்பிங் குரல் கொடுக்க கூறிய போது அவர் ஒரே டேக்கில் அனைத்தையும் டப்பிங் செய்து முடித்ததை பார்த்து டப்பிங் கலைஞர்கள் ஆச்சரியமடைந்தனர். இதனை அடுத்து அவருக்கு முதல் சம்பளமாக ரூபாய் 25 கொடுக்கப்பட்டது.

அதன்பிறகு அவர் பல படங்களில் டப்பிங் பேசினார். ஹாலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் செய்யும் போது நகைச்சுவை கேரக்டர்களுக்கு பெரும்பாலும் எம்.எஸ்.பாஸ்கர்தான் குரல் கொடுத்திருப்பார்.

டப்பிங்கில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் அவர் எல்ஐசியில் வேலை பார்த்தார். ஒரு பக்கம் நாடகத்தில் இன்னும் நடித்துக் கொண்டிருந்தார்.

விசு இயக்கிய ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் பிறகு பல திரைப்படங்களில் அவர் காமெடி கேரக்டரில் நடித்தார்.

அப்போது அவருக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற தொடரில் பட்டாபி என்ற கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழைப் பெற்றுக் கொடுத்தது.

இயக்குனர் பாலசந்தர் இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாய்ப்பு வாங்கி கொடுத்தார்

காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் அவர் அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக ’சிவகாசி’ படத்தில் காமெடி வக்கீல் கேரக்டரில் நடித்திருப்பார்.

எம்.எஸ்.பாஸ்கர் ஒரு மிகச் சிறந்த குணசித்திர நடிகர் என்பதை நிரூபித்த படம் என்றால் ’உத்தம வில்லன்’ தான். கமல்ஹாசனுக்கு இணையாக அந்த படத்தில் அவர் சிறப்பாக நடித்திருப்பார். கமல்ஹாசன் மிகவும் அவரை பாராட்டி மகிழ்ந்தார்

எம்.எஸ்.பாஸ்கர் தற்போதும் பிசியாக நடித்து வருகிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மகளும் ஒரு டப்பிங் கலைஞராக இருந்து வருகிறார்.

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ’96’ திரைப்படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்தார். அவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக்காக முயற்சித்து வருகிறார்..

செப்டம்பர் 13 தேதி 1957ல் ஜமீன்தாரின் மகனாக பிறந்து செல்வாக்காக வளர்ந்து இருந்தாலும் எந்த விதமான ஆடம்பரமும் இன்றி சாதாரணமாக இருப்பதுதான் எம்.எஸ்.பாஸ்கரின் சிறப்பு. அதேபோல் அவருடைய குடும்பத்தினரும் மிக எளிமையாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அற்புதமான குணசித்திர நடிகர் மட்டுமின்றி இவரது புகழுக்கு மணிமகுடமாக பெருந்தலைவர் காமராஜர் திரைபடத்தில் காமராஜர் பேசியது போலவே காதுகளில் ஒலிக்க செய்தவர் மதிப்புகுறிய எம் எஸ் பாஸ்கர் அவர்கள்.

அது மட்டுமல்ல தென் மாவட்ட நாடார்களின் பேச்சுகளையும் சென்னை பூர்வகுடி பேச்சுக்களையும் கோவை கவுண்டர்களின் கொங்கு தமிழ் பேச்சுக்களையும் அச்சி அசலாக பேசக்கூடிய அற்புத கலைஞர்.

இவரின் தமிழ் உச்சரிப்பு மேலும் பல பாத்திரங்களில் சிறப்பாக நடிப்பதில் வல்லவர்.

இவ்வளவு புகழுக்கும் சொந்தக்காரரான எம்‌எஸ்.பாஸ்கர் அவர்கள் பாஜக மூத்த தலைவரான பேட்டை சிவா அவர்களின் மாமா என்பது தனி சிறப்பு ஆகும்.

இவரது உடன் பிறந்தவர் மகன் மகள் பேரன் பேத்திகள் தம்பிக்கோட்டை கீழக்காடுட்டிலும், சென்னையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

  • 136
·
Added a post

✨ உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால், உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.

✨ உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் ஒருவன். உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.

✨ உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

✨ நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

✨ நோயின்றி காலையில், புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே, உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி.

✨ பார்வையும், செவித் திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும், இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்.

✨ போர், பட்டினி, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்.

✨ கொடுமைகளுக்கு உள்ளாகாமல், நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால், உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்.

✨ உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால், நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்.

✨ தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.

✨ உலகம் முழுதும், சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

✨ கல்வி அறிவு பெற்று, இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால், உலக அளவில் எழுத படிக்க இயலாத 80 கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்.

✨ இணையத்தில் இந்த செய்தியை, உன்னால் படிக்க முடிந்தால், அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்.

✨ உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால், அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும், நம்பிக்கையும் இல்லாதவர்களை விட, நீ கொடுத்து வைத்தவன்.

✨ நீங்கள் அனுபவித்து வரும், வசதிகளையும், தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல், ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல், கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது, நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன !? நீங்கள் அதிர்ஷடசாலி தான்...

✨ வீண் கவலைகளை விட்டு, அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதை பொருட்கள் என்பவற்றை விட்டு விட்டு, நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்.

  • 136
·
Added a post

ஒரு பேச்சாளர் அன்று தான் பேச்சில் சிரிப்பின் அவசியத்தை பற்றி பேசினார்!

வந்திருந்த மக்களை பார்த்து நீங்கள் வீட்டில்

வாய் விட்டு சிரித்தால் கட்டாயம் நோய் உங்களை விட்டு ஓடி போய் விடும் என்று பேசினார் !

இந்த பேச்சை கேட்டு விட்டு ஒருவன் வீட்டுக்கு போய் விட்டு மறு நாள் ! வந்து பேச்சாளரை .சந்தித்து !

ஐயா தங்களுக்கு நன்றி சொல்லி விட்டு செல்ல வந்தேன் என்று சொன்னார்!

பேச்சாளர் புரியாமல் என்ன நடந்தது என்று கேட்க!

அதற்கு சொன்னார் நீங்கள் நேற்று நீங்கள் பேசும் போது சொன்னீர்கள்!

வாய் விட்டு சிரித்தால் கட்டாயம் நோய் உங்களை விட்டு ஓடி போய் விடும் என்று !

நீங்க சொன்ன மாதிரியே என் வீட்டுக்கு போனேன் வழக்கமான சண்டை நான் உடனே மனைவியை பார்த்து

வாய் விட்டு சிரித்தேன்!

அவ்வளவு தான் என் பெண்டாட்டி கோபித்து கொண்டு அவள் அம்மா வீட்டுக்கு போய் விட்டாள்!

மிக்க நன்றி ஐயா என்றாராம்!

  • 158
·
Added a post

வயது ஆக எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, கால்சியம் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும். எலும்பு தேய்மானம் அதிகமாக இருந்தால் எலும்பு நடக்கக்கூட மிகவும் கஷ்டப்படுவார்கள் முதியவர்கள்.

முதியவர்களுக்கு மட்டுமல்ல 40 வயதை தாண்டி விட்டாலே எழும்பு தேய்மானமும் சரி, கால்சியம் பிரச்சனையும் , மூட்டு வலியும் சேர்ந்து வந்து வருகின்றது.

இந்த பத்து விதைகளை இப்படி நீங்கள் பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக எலும்பு தேய்மானம், கால்சியம் பிரச்சனை ஆகியவை ஓடியே விடும்.

தேவையான பொருட்கள்:

1. முருங்கை விதை- 5 g

2. நெய் 1 ஸ்பூன்

3. பால்- 1 டம்ளர்

4. நாட்டு சர்க்கரை

செய்முறை:

1. முதலில் முருங்கை விதைகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள்.

2. அப்படி இல்லையெனில் மிகவும் முத்திய முருங்கைக்காய் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த விதைகளை மட்டும் தனியே எடுத்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

3. அந்த முருங்கை விதை உள்ளே பருப்பு இருக்கும் அந்த பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

4. 5 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

5. ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றி இந்த முருங்கை விதைகளை போட்டு நன்கு வறுக்கவும்.

6. நன்கு வறுத்த உடன் இதனை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

7. இதை ஒரு ஸ்பூன் அளவிற்கு பாலில் சேர்த்து கொதிக்க வைத்து சுவைக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

கண் பிரச்சனை கண் மங்குதல் கால்சியம் குறைபாடு எலும்பு பிரச்சனை எலும்பு தேய்மானம் கால் வீக்கம் கெட்ட கொழுப்பு ஆகிய அனைத்தும் நீங்கும்.

  • 157
·
Added a post

அனைவரையும் ஈர்க்கும் நறுமணம் கொண்டது, செண்பகப்பூ, மர வகையை சேர்ந்த மருத்துவ குணம் கொண்ட மலர், இது.

செண்பக மரப்பட்டையை ஒன்று இரண்டாக இடித்து, 20 பங்கு நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி தினமும் இருவேளை குடித்து வர, நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாகும்.

செண்பகப் பூவிலிருந்து, நறுமண எண்ணெய் மற்றும் அத்தர் போன்றவை எடுக்கப்படுகின்றன.

செண்பகப்பூ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால், முடி உதிர்தல் சரியாகும். தலைவலி, கண் நோய்கள் நீங்கும். மூட்டு வாதத்தை குணமாக்கும்.

பூச்சிக்கொல்லி மருந்தாகவும் செயல்படுகிறது.

உடல் வலுவடைய செண்பகப்பூ சிறந்த மருந்தாகும். பூவை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, அதில், தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும்.

செண்பகப்பூ பொடியை தினமும் இருவேளை, தேனுடன் கலந்து சாப்பிட்டு வர, பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும்.

செண்பகப் பூ பொடியில் கஷாயம் செய்து காலை, மாலை இருவேளை அருந்தி வந்தால், ஆண்மை குறைவு நீங்கும்.

செண்பகப் பூவை கஷாயம் செய்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நரம்பு தளர்ச்சி நீங்கும்.

செண்பகப்பூவுடன், 100 மில்லி நீர் விட்டு காய்ச்சி, 50 மில்லி காலை, மாலை என, இருவேளை குடித்து வர, மேக நோய்கள், நீர்சுருக்கு, வெள்ளை வெட்டை மற்றும் சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.

செண்பக இலையை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட, வயிற்று வலி குணமாகும். கஷாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால், கண் பார்வை தெளிவு பெறும்.

செண்பக மரப்பட்டை, வேப்ப மரப்பட்டை சம அளவு எடுத்து, இடித்து, நான்கு மடங்கு நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி, காலை, மாலை என, இரண்டு வேளை குடித்து வர, குளிர் காய்ச்சல் நீங்கும்.

  • 160
·
Added article

வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில், கண்ணும் கண்ணும் கலந்து என்கிற மிகவும் பிரபலமான ஒரு போட்டி நடனம் வரும்.

ஹீராலால் என்ற டான்ஸ் மாஸ்டர் இரு நாட்டிய தாரகைகளுக்கும் நடன அசைவுகள் சொல்லித்தந்தார்.

படத்தின் தயாரிப்பாளர் வாசனிடம் ஒரு கொள்கை இருந்தது. அவரிடம் வேலை செய்தவர்கள் எல்லாம் எழுபது வயதைத் தாண்டி இருக்கவேண்டும். மேக்கப், லைட்போய், காமிராக்காரர், வசனகர்த்தா இப்படி எல்லாரும் வாசனுடைய வயதுக்காரர்களாக இருந்தார்கள். ஒரு லைட்டை தள்ளி வைப்பது என்றால்கூட அரைமணி நேரம் எடுக்கும், அதனால் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நகர்ந்தது.

பத்மினிக்கு மற்றப் படப்பிடிப்புகள் இருந்தன. வைஜயந்தி மாலா வடக்கில் இருந்து இதற்காகவே வந்திருந்தார். பத்மினி இல்லாத சமயங்களில் வைஜயந்தி மாலா ஹீராலாலிடம் ரகஸ்யமாக சில நடன அசைவுகளை ஒத்திகை பார்த்து வைத்துக்கொள்வார்.

படப்பிடிப்பு சமயம் பத்மினியின் நடனம் அமோகமாக அமைந்தது. வைஜயந்தி மாலா புளகாங்கிதம் அடையவில்லை. அவர் ‘சாதுர்யம் பேசாதேடி, என் சலங்கைக்கு பதில் சொல்லடி’ என்று தோளிலே சடைதுவழ, காலிலே தீப்பொறி பறக்க, புயல்போல சுழன்றபடி மேடையிலே தோன்றுவார்.

ஒருமுறை இருவரும் ஆடும்போது பத்மினியின் நிழல் வைஜயந்தி மாலாவின்மேல் விழுந்தது. பத்மினி மன்னிப்பாக நடனத்தை நிறுத்தி ‘என்னுடைய நிழல் உங்கள் மேலே விழுகிறது’ என்றார். உடனேயே வைஜயந்தி மாலா ஆங்கிலத்தில் இரண்டு அர்த்தம் தொனிக்க ‘It’s only a passing shadow’ என்றார்.

தமிழ் நாட்டின் முதல் நடிகையை பார்த்து ‘நகரும் நிழல்’ என்று சொன்னது பத்மினியைப் புண்படுத்தி விட்டது. அந்த இரண்டு வார்த்தைகளுக்காக தான் இரண்டு இரவுகள் தொடர்ந்து அழுததாக பத்மினி கூறினார்.

படம் வெளிவந்த போது நாட்டிய தாரகை யார் என்பதில் ஒருவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

  • 166
  • 162
  • 334
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வியாபார இடமாற்றம் குறித்த முயற்சிகள் கைகூடும். பணி சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

ரிஷபம்

தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். சமூக பணிகளில் செல்வாக்கு உயரும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உருவாகும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மிதுனம்

அதிகார பதவியில் இருப்பவர்களால் நன்மைகள் ஏற்படும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். பயணம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கடகம்

பிள்ளைகள் மூலமும் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

சிம்மம்

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். தடைப்பட்ட பணிகள் முடியும். உடல் தோற்றப்பொழிவு மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். எதிர்பாராத சில திருப்பங்கள் பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

கன்னி

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். பயணங்களின் போது அலைபேசிகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்களுடன் அதிக நேரம் உரையாடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

துலாம்

சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விளையாட்டான பேச்சுக்களை தவிர்ப்பது பகைமையை குறைக்கும். மனதளவில் வித்தியாசமான கற்பனைகள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

விருச்சிகம்

உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் ஆதாயம் மேம்படும். பயணம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார ரீதியாக ஒத்துழைப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

தனுசு

கருத்துக்களுக்கு மதிப்புகள் உயரும். அரசு வழியில் உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். வித்தியாசமான அணுகுமுறைகளால் நினைத்ததை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

மகரம்

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைப்பட்ட பணிகள் முடியும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்கள் பிறக்கும். அலுவலகத்தில் உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

கும்பம்

எதிலும் அலட்சியம் இன்றி செயல்படவும். எடுத்துச் செல்லும் இடங்களில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால் மனவருத்தங்கள் நேரிடும். வியாபார போட்டிகள் அதிகரிக்கும். பணி சார்ந்த ரகசியங்களில் விவேகம் வேண்டும். எதிர்பார்க்க சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். துணிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மீனம்

சுப செலவுகளால் கையிருப்பு குறையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். சச்சரவான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். ஆடம்பரமான பொருள்கள் மீது ஈர்ப்புகள் உண்டாகும். எதிர்ப்புகள் மறையும் நாள். 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

 

  • 428
·
Added a post

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை 14.7.2025

இன்று அதிகாலை 01.50 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று காலை 07.58 வரை அவிட்டம். பின்னர் சதயம்.

இன்று மாலை 05.24 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.

இன்று அதிகாலை 01.50 வரை . பத்தரை. பின்னர் பிற்பகல் 01.10 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று அதிகாலை 05.59 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=49&dpx=1&t=1752458124

நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 432

good morning...

  • 433
  • 564
·
Added a post

திருப்பதி என்பது அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.

1. திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

2.திருமலை ஏழுமலையானுடைய பிரசாதம், உடைந்த மண்சட்டியில் வைத்துப் படைக்கப்படும் தயிர்ச்சோறு ஆகும். இப்படி ஒரு பிரசாதப்படையல், வேறு எந்த கடவுளுக்கும் படைக்கப்படுவதில்லை.

3.தற்போதுள்ள செயற்கையான பச்சைக்கற்பூரத்தை, தொடர்ந்து சிலவாரங்கள், கருங்கல்லில் தடவினாலே வெடிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இந்த பச்சைக்கற்பூரத்தை, எத்தனைநாட்கள் ஏழுமலையான் சிலையில் தடவினாலும், சிலையில் வெடிப்புகள் ஏற்படுவதில்லை.

4.திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் உண்மையான பெயர், "மனோஹரம்" என்பதாகும். 2−8−1715 அன்று தொடங்கி, லட்டு, ஏழுமலையானுக்குப் படைக்கப்பட்டது. 1803ஆம் ஆண்டு முதல்,பக்தர்களுக்கு, பூந்தி வடிவில் விநியோகிக்கப்பட்டது. காலப்போக்கில்தான் லட்டு வடிவிலான மனோஹரம் பிரசாதமாக, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

5.திருமலை ஏழுமலையானுக்குக், கண்களை மறைத்தபடி, நாமமிடுவது சமீபகாலமாகத்தான் உள்ளது. நெடுங்காலமாக, கண்களை மறைக்காமல்தான் நாமமிடப்பட்டு வந்துள்ளது.

6. திருமலை ஏழுமலையானுக்குரிய நித்யானுஷ்டான பூஜை கைங்கர்யங்களை வரையறுத்துக் கொடுத்தவர் ஸ்ரீராமானுஜர் ஆவார்.

7.திருமலை ஏழுமலையானுடைய சிலை, நவீன கால மெஷின் பாலீஷ்போட்ட சிலைகளைப் போலவே, ஆதிகாலந்தொட்டு அமைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். கருங்கல்சிலைகளில், இந்தஅளவு மினுமினுப்பான சிலை, இந்த சிலையாகத்தான் இருக்கக்கூடும்.

9.திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆனிமாதம்,தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி நாட்களில் தர்பார் நடத்தப்படுகிறது. ஆனிமாத தர்பாரின்போது, கோவில் வரவு−செலவுக்கணக்கு ஏழுமலையானிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. பிறகு, ஏழுமலையானின் ஒப்புதல் பெற்றதாகப் பாவித்து, கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் புதிதாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த சிறப்பு வைபவமும், இங்குமட்டும்தான் நடைபெறுகிறது.

10. திருமலை ஏழுமலையானுடைய சிலையிலுள்ள சிற்பசாஸ்திர நுட்பங்கள், சிற்பக்கலை வல்லுநர்களுக்கே, அதிசயமாகவும், ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருக்கின்றன.

11. சென்னை ஆளுநராக இருந்த சர்.தாமஸ் மன்ரோ, திருமலை ஏழுமலையானுக்கு, தினமும்,தயிர்ச்சோறு, சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு, தன் சொந்த பணத்தில், நைவேத்தியக்கட்டளை ஏற்பாடு செய்தார். இந்த அறக்கட்டளை இன்றும் தொடர்கிறது. இன்றைக்கும் காலை 11.30 மணிக்குக் கோவில் மணி அடிக்கப்பட்டு, மன்ரோ பெயர் படிக்கப்பட்டு, நைவேத்தியம் செய்யப்படுகிறது.

12. திருமலை ஏழுமலையானுக்குச் சாற்றப்படும் வஸ்திரம், 21 முழ நீளமும்,5 கிலோ எடையுமுள்ள பட்டு பீதாம்பரமாகும். இதை தயாரிப்பதற்கென்றே சென்னையில் தனிக்கடையே உள்ளது. இந்த வஸ்திரம், ஏழுமலையான் கோவில் அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும். இவ்வளவு பெரிய வஸ்திரம் சாற்றப்படும் கடவுள் ஏழுமலையானே ஆவார்.

12. ஏழுமலையான் கோவிலில், முன்பு, வெள்ளிக்கிழமை தோறும், அர்ச்சனைக்கு வில்வஇலை பயன்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, தற்போது, மார்கழிமுழுவதும், வில்வ அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. வில்வஇலை சிவஅர்ச்சனைக்குரியது. வில்வம் அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும், ஒரே வைணவஆலயம் ஏழுமலையான் கோவில் மட்டுமே.

13. சிவராத்திரியன்று, ஏழுமலையானுக்கு, "ஷேத்ரபாலிகா" உற்சவம் நடத்தப்படுகிறது. அன்று மூலவருக்கு, வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சார்த்தப்பட்டு, வீதியுலா நடைபெறுகிறது.

14.ஏழுமலையான் சிலைக்கு எண்ணெய்க்காப்பு சாற்றப்படுவதில்லை; புனுகுக்காப்பு சாற்றப்படுகிறது.

15.ஏழுமலையானுக்கு முன்பு, பன்னீர் அபிஷேகமும், மஞ்சள் அபிஷேகமும் நடத்தப்பட்டு வந்தன. சுமார் ஐநூறாண்டுகளுக்கு முன்பு பன்னீர் அபிஷேகமும், சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு மஞ்சள் அபிஷேகமும் நிறுத்தப்பட்டுவிட்டன.

16. ஏழுமலையான் கோவிலில் சாத்துமுறை தென்கலை; ஆனால், கோவில் நிர்வாகம் வடகலையினர் வசமுள்ளது.

17. தாள்ளபாக்கம் அன்னமய்யா என்பவர், ஏழுமலையான் மீது 32000 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இது ஒரு சாதனை நிகழ்வாகும்.

18. ஏழுமலையான் கோவிலில், மூவகை லட்டுகள் புழக்கத்திலுள்ளன. ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு என்ற இருவகை லட்டுகளும், 750கிராம் எடையில், அதிகளவில் முந்திரி, திராட்சை, உள்ளிட்ட பொருட்களுடன் உயர்தரமான முறையிலும், குறைவான அளவிலும் தயாரிக்கப்படுபவை. இவை, பெரும்பாலும், பிரமுகர்களுக்கே தரப்படுபவை. சராசரியான "புரோக்தம்" லட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதன்எடை 175 கிராம் ஆகும்.

19. திருமலை 3000அடி உயரத்திலுள்ள குளிர்ப் பிரதேசமாகும். ஆனால், ஏழுமலையான் சிலையின் வெப்பம் மட்டும், 110டிகிரி ஃபாரன்ஹீட்டிற்குக் குறைவதே கிடையாது. இது, இன்றளவும் அதிசயமான நிகழ்வாகவே உள்ளது.

20. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடையுடையது; இதை ஏழுமலையானுக்குச் சாற்ற 3 அர்ச்சகர்கள் தேவை. சூரியகடாரி என்ற ஆபரணம் 5 கிலோ எடையுடையது. இவை போல, அரிதான பல நகைகள், ஏழுமலையானுக்குக் குவிந்துள்ளன. அரியநகைகள் தவிர, சாதாரண நகைகளும் அமோகமாக உள்ளன. இவற்றைச் சேமிக்க இடமோ, ஏழுமலையானுக்கு உடுத்த நேரமோ இல்லாமல் இருப்பதால், சாதாரண நகைகளை மட்டும், ஆண்டிற்கு ஒருமுறை பத்திரிக்கைகளில் விளம்பரஞ்செய்து ஏலம் விடுகிறார்கள்.

21. உலகிலேயே அரிதான ஒற்றைக்கண் நீலம் என்ற அரிய ரத்தினக்கல், ஏழுமலையான் கோவிலில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயாகும்.

22. ஏழுமலையான் கோவிலின் தலமரம் புளியமரம்.

23. ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் கிடையாது; கொண்டாட்டம் மட்டும் உண்டு.

24. ஏழுமலையான் கோவிலினுள், கொங்கணச் சித்தர் சமாதியும் உள்ளது. ஆனால், எங்குள்ளது என்பதில் குழப்பம் நிலவுகிறது.

25. வெளிநாடுகளில் இருந்து, பூசனைப் பொருட்கள் வருவிக்கப்படும் ஒரே பெருமைக்குரிய கோவில் ஏழுமலையான் கோவிலே ஆகும். (எ.கா) சீனப் புனுகு, நேபாளக் கஸ்தூரி, நெதர்லாந்து ரோஜா.

26. ஏழுமலையானுக்குத் தினசரி , ஒருமுறை அபிஷேகத்திற்கான குறைந்தபட்ச செலவு, தற்போதைய நிலவரப்படி ஒருலட்சம் ரூபாய் ஆகும்.

  • 655
·
Added a post

வட தேசத்தில் சோம்நாத் அருகில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் எழுந்தருளியிருக்கும் ஒரு ஷேத்திரத்தில் ஒரு பூக்காரி வசித்து வந்தாள்.அவள் கிருஷ்ண பரமாத்மாவிடம் மிகுந்த பக்தி கொண்டவள். அவள் பிரதி தினம் வாசனை மிகுந்த பூக்களைப் பறித்து தன் கூடையை நிரப்பிக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரின் ஆலயத்திற்கு வந்து, அங்கு நுழை வாசலில் இருக்கும் படியில் கூடையை வைத்து விட்டு பகவானை வணங்கி பிரார்த்தனை செய்து விட்டு வியாபாரம் செய்யச் செல்வாள். அந்த ஆலயத்தின் சன்னதித் தெருவில் தன் கடையில் அமர்ந்து,தான் பறித்து வந்தபூக்களை மாலையாகக் கட்டி, கடை வாசலில் தொங்க விடுவாள். அவளுடைய மாலைகள் அழகுடனும், நறுமணத்துடனும் காணப்படும். அதனால் அவை வெகுவிரைவில் விற்பனையாகி விடும்.

அந்த பூக்காரி , அனுதினமும், ஆலயம் மூடப்படுவதற்கு முன், ஒரு பூமாலையைக் கட்டி எடுத்துக் கொண்டு பகவானின் முன்னால் போய் நின்று விடுவாள். அர்ச்சகர் அந்த மாலையை வாங்கி பகவானுக்கு அணிவித்து தீபாராதனை செய்து, துளசி தீர்த்தம் கொடுப்பார். அனேகமாக பகவான் தரிசனத்திற்கு கடைசியாக வருபவள் அவளாகத்தான் இருக்கும். அவள் சென்ற பிறகு தான் ஆலயம் மூடப்படும்.

அன்று விசேஷ தினம். வழக்கத்தை விட பூ வியாபாரம் அதிகமாக இருந்தது. மும்மரமாக வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தபடியால் அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. ஆலயத்திலிருந்து திடீரென்று வந்த மணி யோசையிலிருந்து விரைவில் ஆலயம் மூடப்படப் போகிறது என்பதை உணர்ந்தாள்.

"வியாபாரத்தில் கவனமாக இருந்து பகவானின் காணிக்கையை மறந்து விட்டோமே" என்று பரபரப்புடன், ஒரு மாலை கட்டினாள். அவள் சிறிதும் எதிர்பார்க்காதவாறு அந்த மாலை மிகவும் அழகாக அமைந்து விட்டது. அதை எடுத்துக் கொண்டு ஆலயத்திற்கு ஓடினாள் பூக்காரி. அர்ச்சகர்கள் இரவு பூஜையை முடித்துக் கொண்டு பகவானின் சன்னதியை மூடிவிட்டு வாசல் பக்கம் வந்து விட்டனர்.

ஸ்வாமி, இன்று எதிர்பாராத வகையில் தாமதமாகி விட்டது. வழக்கம் போல் இந்த மாலையை பகவானுக்கு அணிவித்து தீபாராதனை செய்யுங்கள்" என்று வேண்டினாள்.

" பூஜை முடிந்து யதாஸ் தானம் செய்து விட்டோம். இனிமேல் சன்னதியைத் திறக்க முடியாது. நாளை காலையில் கொண்டு வா, உன் விருப்பப்படியே பகவானுக்கு சாத்துகிறோம்" என்றார் அர்ச்சகர் .

"ஸ்வாமி, காலைக்குள் இந்த மாலை வாடிவிடும். தயவு செய்து இதை இன்றே பகவானுக்கு அணிவியுங்கள்" என்று மன்றாடினாள்.

" இதை யாருக்காவது விற்பனை செய்துவிடு. நாளை வேறு ஒரு மாலை கட்டிகொண்டு வா" என்றார் அர்ச்சகர் .

"பகவானுக்கு என்று படைக்கப்பட்ட " காணிக்கை" இது. அவருக்கே போய்ச் சேர வேண்டும். தயவு செய்து மறுக்காதீர்கள்" என்று வேண்டினாள் பூக்காரி. அர்ச்சகர்கள் மறுத்துவிட்டு ஆலயத்தின் முன் வாசலை மூடிக் கொண்டு சென்று விட்டனர். பூக்காரி வாசல்படியில் அமர்ந்து கண்ணீர் விட்டாள். தன் மாலையை அணிவித்து தரிசனம் செய்ய முடியாமல் போய் விட்டதே என்று வருந்தினாள். மூடப்பட்ட ஆலயத்தின் கதவுகளில் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் திருவுருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. பூக்காரி , பகவானைப் பிரார்த்தனை செய்து விட்டு தான் கொண்டு வந்த மாலையை கதவில் இருக்கும் பகவானின் மீது அணிவித்து விட்டுத் தன் இருப்பிடம் சேர்ந்தாள்.

மறுநாள் விடியற்காலையில் அர்ச்சகர்கள் ஆலயத்திற்கு வந்து வழக்கம் போல் தங்கள் பணிகளை செய்ய ஆரம்பித்தனர். ஒரு அர்ச்சகர் தீர்த்தம் கொண்டு வரச் சென்றார். மற்றொருவர் முன் தினம் திருமேனிச் சிலையில் அணிவித்த மாலைகளை எடுக்க ஆரம்பித்தார். அநேகமாக எல்லா மாலைகளையும் எடுத்து விட்டார். கடைசியாக ஒரே ஒரு மாலை மட்டும் பகவானின் திருக்கழுத்தில் இருந்தது. அர்ச்சகர் அதை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.இழுத்துப் பார்த்தார். அந்த மாலை அசைந்து கொடுக்கவில்லை.

" மாலையைக் கழற்றி, வஸ்திர, ஆபரணங்களை அகற்றிவிட்டு பிறகு தானே அபிஷேகம் செய்ய முடியும். ஆனால் ஒரு மாலையை மட்டும் கழற்ற முடியவில்லையே" என்று அர்ச்சகர் தவித்தார். தீர்த்தம் கொண்டு வரச் சென்ற அர்ச்சகரும் திரும்பி வந்து விவரம் அறிந்து செய்வதொன்றும் புரியாமால் நின்றார். அதற்குள் ஸ்வாமி தரிசனத்திற்குப் பக்தர்கள் பலர் ஆலயத்திற்கு வர ஆரம்பித்தனர்.

அபிஷேகம் தடைபட்டிருப்பதற்கான காரணத்தை அறிந்து அவர்கள் அதிசயத்தார்கள்."ஏதோ அபசாரம் நடந்து இருக்கிறது. அதனால் தான் பகவான் சோதனை செய்கிறார். என்று எண்ணினார்கள். அர்ச்சகர்களுக்கு முதல் நாள் இரவு, காலதாமதம் செய்து வந்த பூக்காரியின் நினைவு வந்தது.

"அவள் நேற்று கொண்டு வந்த மாலையல்லவா இது? நாம் கதவை மூடிக் கொண்டு சென்று விட்டோமே, எப்படி இது பகவானின் திருக்கழுத்தில் வந்தது? என்று புரியாமல் தவித்தனர்.

ஆலயத்திற்கு வந்த பக்தர்கள், "அந்தப் பூக்காரியை உடனே அழைத்து வாருங்கள்" என்றனர். அர்ச்சகர் பூக்காரியை தேடிக் கொண்டு சென்றார். வழக்கம் போல் அவள் பூந்தோட்டத்தில் பூக்களைப் பறித்து கொண்டிருந்தாள். அர்ச்சகர் அவளைச் சந்தித்து, நடந்தவற்றைக் கூறி, "நீ உடனே ஆலயத்திற்கு வர வேண்டும். இல்லாவிட்டால் பகவானின் பூஜை அப்படியே நின்று விடும். என்றார்.

பூக்காரி ஆலயத்திற்கு ஓடி வந்து சன்னதியில் நின்றாள். முதல் நாள் இரவு ஆலயத்தின் வாசல் கதவில் மாட்டிவிட்டுப் போன மாலை எப்படி உள்ளே இருக்கும் பகவானின் திருக்கழுத்திற்கு வந்தது என்று புரியவில்லை.

" உண்மையான பக்தியுடன் செலுத்தப்படும் காணிக்கையை பகவானே தானே ஏற்றுக் கொண்டு விடுவார். அதை யாரலும் தடுக்க முடியாது" என்று அங்கு குழுமியிருந்த பக்தர்கள் கூறினார்கள். அர்ச்சகர் பகவானுக்கு அர்ச்சனை செய்தார். கற்பூரம் ஏற்றினார். அதன் ஒளியில் பகவானின் மார்பில் இருந்த மாலை மேலும் அழகாக ஜ்வலித்தது.தீபாராதனை செய்து பூக்காரிக்கு துளசி தீர்த்தம் கொடுத்தார்.

"பகவனே, இனிமேலாவது தடையின்றி அபிஷேகம் செய்ய அனுக்கிரகம் செய்" என்று அர்ச்சகர் பிரார்த்தித்தவாறு பகவானின் திருக்கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றினார். அது சுலபமாக அவர் கைக்கு வந்து விட்டது. பூக்காரியின் உண்மை பக்தியைக் கண்டு அனைவரும் பாராட்டினார்கள்.

உண்மை பக்தி எங்கு, எவரிடத்தில் இருந்தாலும் பகவான் அதை ஏற்றுக் கொள்வார் என்பதற்கு இந் நிகழ்வு சான்றாகும்.

  • 654
·
Added a post

தினமும் காலையில் மற்ற எந்த உணவை சாப்பிடுவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் முளைவிட்ட கொள்ளு அல்லது கொள்ளை கொண்டு செய்யப்பட்ட சூப் அருந்துவதால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

தினமும் கொள்ளினை உணவில் சேர்த்து வருபவர்களின் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும். தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும் மேலும் உங்களுக்கு கட்டுடல் கிடைக்கும்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.

பிரசவ அழுக்கை வெளியேற்றும்...

கொள்ளு பருப்பை வறுத்து பொடி செய்துகொண்டு, ஒரு டம்பளர் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் ஒரு டீஸ்பூன் கொள்ளு பவுடர் மற்றும் சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்கவைத்து மறுநாள் காலை பருகி வர ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறைவதை உணரமுடியும்.

கொள்ளு சூப் அல்லது கொள்ளு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை தினமும் ஒரு முறை அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வருவதால் அவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைக்கப் பெற்று, அவர்களின் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. எனவே கொள்ளு தானிய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.

  • 661
·
Added a post

மிக பெரிய இண்டஸ்ரியலிஸ்ட் அவர்....

வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தி அவருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அவர் அதற்கு எந்தவித வாக்குவாதமோ ஆட்சேபனையோ தெரிவிக்காமல் சத்தமில்லாமல் செலுத்திவிட்டு சென்றார்.

வருமான வரி அலுவலர்களுக்கோ ஒரே ஆச்சரியமும் அதிர்ச்சியும்.

நாம் தான் சரியாக ரெய்டு பண்ணவில்லை போலும் என நினைத்து அவருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பினார்கள் கணக்கில் தவறுள்ளதால் அதற்கு அபராதமாக இரண்டு கோடி என தெரிவிக்கவும் அவரும் மௌனமாக வந்து இரண்டு கோடி அபராதத்தை செலுத்திவிட்டு நன்றி கூறி சென்றார்.

மீண்டும் வருமான வரி அலுவலர்களுக்கு ஆச்சரியம்.

சரி இப்போது ஐந்து கோடிக்கு ஏதோ ஒரு காரணம் கூறி நோட்டீஸ் அனுப்பினர்.

அடுத்த நாள் காலையில் ஒரு லாரியை அலுவலகம் முன் நிறுத்திய தொழிலதிபர்

அலுவலர்களிடம்,"அடிக்கடி என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.

இதோ லாரியில் எனது மிஷினை கொண்டு வந்துள்ளேன்.

உங்களுக்கு தேவையான அளவு அச்சடித்துக் கொண்டு மிஷினை உடனே திருப்பி தரவும் என்றார்..

  • 661
·
Added article

 உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு எம்.ஜி.ஆர். சென்றிருந்தார். அப்போது தனது நண்பர் ஒருவரை பார்க்க காரில் சென்று கொண்டிருந்த போது

 ‘நாயர் டீ ஸ்டால்’ என்கிற போர்ட்டை பார்த்ததும் ஆச்சர்யப்பட்டு காரை நிறுத்த சொல்லி, அந்த கடைக்கு சென்றார். அந்த கடையின் முதலாளியிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவருக்கு ஆச்சர்யம் கலந்த இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் யார் தெரியுமா?…

எம்.ஜி.ஆர் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு முன் சென்னையில் அம்மாவுடன் வறுமையில் வாடிய போது சென்ட்ரல் பகுதியில் தங்கியிருந்தார். ஒருநாள் வீட்டில் சமைக்க கூட அரிசி இல்லை. அப்போது, அவரின் வீட்டுக்கு அருகே குடியியிருந்த ராமன் குட்டி என்பவர் ஐந்து ரூபாயை கொடுத்து உதவினார். அந்த பணத்தில்தான் அன்று அவர்கள் உணவு அருந்தினர். இதை எம்.ஜி.ஆர் மறக்கவே இல்லை.

எம்.ஜி.ஆர் எப்படி பலருக்கும் உதவி செய்தாரோ அதுபோல அவர் கஷ்டப்படும் காலத்தில் அவருக்கு பலரும் உதவி செய்துள்ளனர். அந்த எண்ணம்தான் அவரை பின்னாளில் வள்ளலாக மாற்றியது.

 ஏழ்மையில் அவரின் குடும்பம் வாடிய போது அவருக்கு பலரும் உதவியுள்ளனர். நாடகத்தில் நடித்து வந்த போதும் அவர் சினிமாவில் நுழையவும் அவருக்கு பலரும் உதவினர்.

நாடகத்தில் நடித்து சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அதன்பின் ஹீரோவாக நடிக்க துவங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து நாட்டின் முதலமைச்சராகாவும் மாறியவர்.

அந்த ராமன் குட்டிதான் ஜப்பானை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து டோக்கியோவில் டீ கடை வைத்திருக்கிறார் என்பது தெரிந்ததும் எம்.ஜி.ஆர் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார். வறுமையில் வாடிய போது உதவிய ராமன் குட்டியின் கையில் அவர் போதும் போதும் என சொல்கிற அளவுக்கு பொருள் உதவி செய்துள்ளார் எம்.ஜி.ஆர்.

  • 664
·
Added a post

முருகனை பாலமுருகன் என்றும், கிருஷ்ணனை பாலகிருஷ்ணன் என்றும் குழந்தையாக பாவித்து வழிபடுவதைப் போலவே, அம்பிகையையும் பாலாம்பிகையாக வழிபடுவது மிகவும் விசேஷம்.

ஒன்பது வயது சிறுமியாகக் காட்சி அருளும் பாலாம்பிகை, சித்தர்கள் வழிபாட்டில் வாலையாக வழிபடப்படுகிறாள். மேலும் சித்தர்கள் வாலையை மனோன்மணி என்றும் அழைக்கின்றனர். திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் காலசம்ஹார மூர்த்தி சந்நிதியில் காட்சி அருளும் பாலாம்பிகையை, அபிராமிபட்டர் தம்முடைய அபிராமி அந்தாதி ஐந்தாவது பாடலில், ஞான நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் மனோன்மணி என்று போற்றிப் பாடியுள்ளார்.

அழகு ஆபரணத்தில் தோன்றியவள்

ஸ்ரீலலிதாம்பிகையின் ஆபரணத்திலிருந்து வித்யை மற்றும் ஞானத்தின் வடிவமாகக் குழந்தை வடிவில் அவதரித்தவள் பாலாம்பிகை. நிகரற்ற அழகுடன் குழந்தையாகக் காட்சி தந்தாலும், தைரியம் மற்றும் வீரத்தின் உருவமாகவும் போற்றப்படுகிறாள். போர் புரிவதில் அசாத்திய ஆற்றல் பெற்றவள் பாலாம்பிகை. பாலாம்பிகையின் அவதாரமே ஒரு போரின் நிமித்தமாக ஏற்பட்டதுதான்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கப்பட்ட மன்மதனின் சாம்பலிலிருந்து தோன்றியவன் பண்டாசுரன். தன் தவத்தின் பலனாக வரங்கள் பல பெற்றவன். மேலும், பெண்ணின் கருவில் இருந்து தோன்றாத ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு நேர வேண்டும் என்ற வரம் பெற்றிருந்த பண்டாசுரன், அதன் காரணமாக யாராலும் தன்னை அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் துன்புறுத்தி மகிழ்ந்தான்.

அவனுடைய கொடுமைகள் எல்லை மீறிப் போகவும், தேவர்கள் அனைவரும் ஸ்ரீலலிதாம்பிகையைச் சரணடைந்தனர்.

பண்டாசுரனின் கொடுமைகளிலிருந்து தேவர்களைக் காப்பாற்றத் திருவுள்ளம் கொண்ட அம்பிகை, தன்னுடைய ஆபரணத்திலிருந்து ஒன்பது வயதுடைய பெண்ணைத் தோற்றுவித்தாள். அவளே ஸ்ரீபாலாம்பிகை. அவள் ஸ்ரீலலிதாம்பிகையிடம் கவசமும் ஆயுதங் களும் பெற்றுக்கொண்டு, அன்னங்கள் பூட்டிய தேரில் சென்று பண்டாசுரனையும், அவனுடைய முப்பது பிள்ளைகளையும் சம்ஹாரம் செய்து, தேவர்களைக் காப்பாற்றினாள். சிறு பெண்ணான பாலாம்பிகையின் போர்த் திறன் கண்டு, தேவர்கள் பூமாரி பொழிந்து பலவாறாகப் போற்றித் துதித்தார்கள்.

அழகிய உருவினள் பாலா!

நான்கு திருக்கரங்களில் மேலிரு திருகரங்களில் சுவடியும் ஜபமாலையும் ஏந்தி, கீழிரு திருகரங்களில் வர, அபய முத்திரை காட்டி, தாமரை மலரில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் பாலாம் பிகை, பக்தர்கள் கேட்கும் வரங்கள் அனைத்தையும் உடனுக்குடன் அருள்பவள். பாலாம்பிகையின் ஒரு திருக்கரத்தில் இருக்கும் சுவடி, வித்யை மற்றும் ஞானத்தையும், மற்றொரு திருக்கரத்தில் இருக்கும் ஜபமாலை மந்திர ஜபத்தின் ஆற்றலையும் குறிப்பிடும் என்பர்.

அருள்மிகு பாலாம்பிகையின் இந்த திருவடிவை மனதில் இருத்தி தியானிப்பது மிகவும் விசேஷம் என்பார்கள் பெரியோர்கள். பாலாம்பிகையை மனதில் தியானித்து வழி பட்டால் நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் என்பது ஞானநூல்களின் வழிகாட்டல்.

ஸ்ரீ பாலாம்பிகை மந்திரம் :

ஓம் ஐம் க்லீம் செளம்:'

- இதுவே அருள்மிகு பாலாம்பிகையை தியானித்து வழிபடுவதற்கான விசேஷ மந்திரம். இதில், மூன்றாவதான செளம்' என்பதை செளஹூம்' என்று உச்சரிக்க வேண்டும்.

அதியற்புதமான இந்த மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று மந்திரம் ஜபிக்க, மன ஒருமுகப்பாட்டுடன் அன்னை பாலாம்பிகையை வழிபட்டால், தெய்வங்கள் அனைவரையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

  • 672
·
Added a post

சோழநாட்டில் அமைந்துள்ள மன்னார்குடியில்,ராஜ கோபாலசுவாமி கோயில் பல அதிசயங்களை கொண்டது.

சோழ நாடு சைவ சமயத்திற்கு பெயர் பெற்றது ஆனால் வைணவ தலமான ராஜகோபாலசுவாமி தலம் மிக பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது.

ராஜகோபாலர் மாடு மேய்க்கும்(இடையன்) சிறுவனாக ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாக சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து கட்சியளிக்கிறார்.

இந்த கோயிலில் 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங்கள், 7 மண்டபங்கள், 9 தீர்த்தங்கள் உள்ளன.

எல்லா நிலைகளிலும் சுதை சிற்பங்கள் இருக்கும். ஆனால், இங்குள்ள 11 நிலை ராஜகோபுரத்தில், கீழிருந்து மேலாக முதல் ஆறு நிலைகளில் சுதை, சிற்பங்கள் எதுவும் இல்லை.

வேதசத்சங்கம் ஏழாவது நிலையில் இருந்தே சுவாமி சிலைகள் வடிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வித்தியாசமான அமைப்பில் கோபுரத்தை காண்பது அரிது.

இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், "ஹரித்ரா நதி' என்றே அழைக்கிறார்கள்.

தனது லீலைகளை காண விரும்பிய கோபிலர், கோபிரளயர் என்ற முனிவர்களுக்கு முதலில் வாசுதேவராக காட்சி தந்தார். 32ம் லீலையாக கோகுலத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாக காட்சி தந்தார்.

பங்குனியில் 18 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

கிருஷ்ணருக்காக அமைந்த கோயில் என்பதால் 18க்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா நடத்தப்படுகிறது (குருக்ஷேத்ர யுத்தம் நடந்த நாட்கள் மற்றும் கீதையின் அத்தியாயம் 18). இவ்விழாவை, "பார் புகழும் பங்குனி பிரம்மோற்ஸவம்' என்று குறிப்பிடுகிறார்கள்.

திருவாரூர் தேரழகு என்பதுபோல, "மன்னார்குடி மதிலழகு' என்பது சொல் வழக்காக உள்ளது.

இந்த கோயில் உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயர் உண்டு. இப்பெயரே பிரசித்தி பெற்றதால், ஊருக்கும் "மன்னார்குடி' என்ற பெயர் ஏற்பட்டது.

  • 672
·
Added a news

நிதி நெருக்கடி காரணமாக, கல்வித் துறையில் பணியாற்றும் 10,000 பேரை, பணி நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளமையே, இதற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • 676

பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமலும்...

வேண்டாத விஷயங்களில் கவலை செலுத்தாமலும்..

தேவையற்ற

கேள்விகளுக்கு

பதில் சொல்லாமல் இருந்தாலே போதும்....

உடலும் மனமும் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும்.

  • 954
·
Added a post

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் அன்று நான் அரவிந்தனைச் சந்தித்தேன். நாகர்கோவில் ஜெயிலின் எதிரிலுள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறான். அவனை நான் அடையாளம் கண்டு கொண்டேன். ஏனோ என் முகம் அவனுக்குப் பிடிகிட்டவில்லை. அந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் என்னுடைய நண்பர். அவனிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று அனுமதி பெற்றுக் கொண்டு ஒரு டீக்கடைக்கு அழைத்து வந்தேன். ஒரு பெரும் தயக்கத்தோடு என் கூட வந்தான். குற்ற உணர்வாய்க் கூட இருக்கலாம்.

அப்போது நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படித்தோம். அரவிந்தன் மிக நன்றாகப் படிப்பவன். நானொரு தான்தோன்றி. பாடத்தை வகுப்பில் படிப்பதோடு சரி. வீட்டுக்கு வந்ததும் ஊர்மாடு மேய்ப்பதுதான் வழக்கம். வீட்டிலும் புத்தகத்தைத் திறந்ததேயில்லை. பார்டர் லைனிலாவது பாசாகி விடுவேன் என்று அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தெரியும். அவர்களும் நீ இந்த படிப்பைத்தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதெல்லாம் கிடையாது.

ஒருநாள் அப்பா என்னிடம், நீ ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்று கூறிய போது, நான் ஒரு பஸ் கண்டக்டராகவே ஆசை என்று கூறியதால் அவர் என்னை ஒரு சில்லறைப் பயல் என்று அடையாளம் கண்டு கொண்டு ஒதுங்கி விட்டார்.

அப்பாவின் ஒரே கண்டிஷன் என்னவென்றால், “நீ என்ன மார்க் எடுத்தாலும் உன்னுடைய பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்திட்டுத் தருவேன். என் கையெழுத்தை மட்டும் கேவலமாக வரைந்து அசிங்கப் படுத்தாதே!” என்பதுதான். அவரது கையெழுத்து ஒரு மிகப்பெரிய முட்டையில் துவங்கி குட்டி குட்டி முட்டைகளாக எதிர்த் திசையில் போய் சோகமாக முடிவடையும். கீழே ஒரு கோடு போட்டு அன்றைய தினத்தைக் குறித்து தனது கையெழுத்தைக் கல்வெட்டாய் உருவேற்றுவார்.

பிட் எழுதுகிற நேரத்தில் அந்தப் பாடத்தைப் படித்துவிடலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்ததால் நான் பிட் எழுதி பரீட்சை எழுதியதில்லை. தேர்வு வேளையில் நன்றாகப் படிக்கும் மாணவர்களைச் சீண்டி தங்களது விடைத்தாளை காட்டுமாறு பல்லிளிக்கும் சக மாணவர்களை நான் மதிப்பதேயில்லை. தங்களது விடைத்தாளை ஒளித்து வைத்து எழுதும் மாணவர்களை நான் கால் காசுக்கு பெறாதவர்கள் என்று முகத்தில் துப்ப எண்ணியதுண்டு.

அரவிந்தும் அப்படிப் பட்டவன்தான். யாரைப்பார்த்தும் பிட் அடிக்க மாட்டான். அவன் என்னுடைய நெருங்கிய நண்பன். எங்கு சென்றாலும் என்னோடே கூட வருவான். கிரவுண்டுக்கு விளையாடப் போனாலும் அவனோடுதான். நாகர்கோவிலில் மொத்தம் நான்கே சாலைகள்தான். அதில் எங்கள் கால்கள் படாத மூலை முடுக்கே கிடையாது. என்னிடம் அப்போது ஒரு ஹீரோ ஜெனரேஷன் எக்ஸ் சைக்கிள் இருந்தது. நாங்கள் பெரும்பாலும் டபுள்ஸ்தான் போவோம். அவன் என்னைவிடவும் கனத்த சரீரம் உடையவன். ஆனாலும் அவனை முன்பக்கம் பாரில் உட்கார வைத்து நான் மிதிப்பேன்.

அவன் வீட்டிலிருந்து இரண்டு பஸ் ஏறி பள்ளிக்கு வருவான். சாயங்காலம் நான்தான் அவனை பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் விடுவேன். அவனது வீடு பள்ளியிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. எனக்கு அவ்வளவு தூரம் வரைக்கும் பயணிக்க வீட்டில் தடை இருந்தது. ஆறு மணிக்கு முன்னால் வீட்டில் போய் உட்காரவில்லையென்றால் அடுத்த நாள் சைக்கிள் சீட்டில் உட்கார முடியாது. உட்கார்ந்தால் வலிக்கும்.

ஒரு தேர்வு நாளொன்றில் அரவிந்தன் தன்னுடைய மேதமைத் தனத்தைக் காட்ட எண்ணி சக பாவப்பட்ட மாணவன் பிட் அடிக்கவே அதை ஒரு குடிகார ஆசிரியரிடம் அரவிந்தன் காட்டிக் கொடுக்க அந்தக் குடிமகான் அவனை வெளுத்து விடைத் தாளோடு சேர்த்து வெளியில் வீசிவிட்டார். முதன் முறையாக அரவிந்தன் மீது எனக்குத் தீராத கோபம் வந்தது. எனக்குக் கோபம் வந்துவிட்டால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியாது என்பது அரவிந்தனுக்கு அன்றுதான் தெரிந்தது. அரவிந்தனின் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. மூக்கிலும் முட்டியிலும் சிராய்ப்பு. பள்ளியின் பின்பக்கம் நின்று கொண்டு அந்தக் குடிகார ஆசிரியரின் நெஞ்சில் சரளைக் கல்லை குறிபார்த்து எறிந்ததில் குறி தவறாமல் அவரது மண்டை கீறியது.

பெரும் பஞ்சாயத்து நடந்து முடிந்தபின்பு அரவிந்தனுக்கும் எனக்கும் மிகப்பெரிய இடைவெளி. ஒரே வகுப்பில் இருந்தாலும் வேறு வேறு கிரகத்தில் அமர்ந்திருந்தோம். அவனது பிரிவை என்னால் தாங்கவே முடியவில்லை. அந்த சம்பவத்துக்குப் பின்பு அந்த ஆசிரியரை எல்லாரும் “மண்டகீறி மாணிக்கம்” என்று அழைத்தது எனக்கு வேறு இன்னொரு தலைவலியை உருவாக்கியது.

அவர் தேவையில்லாமல் என்னைச் சீண்டி எப்படியாவது என்னை டீ சி கொடுத்து வெளியில் தள்ளிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார். ஒருமுறை அவர் என்னை அவதூறாகப் பேசியதால் நான் மதியம் வீட்டுக்குச் சென்று தாத்தாவின் கத்தியை எடுத்து வந்து மாணிக்கத்தின் ஸ்கூட்டர் சீட்டைக் கிழித்து விட்டு, நேராக அவரிடம் சென்று, “இன்னிக்கி உம்ம வண்டிக்க சீட்டு! இனிமேலால் வம்புக்கு வந்தீருன்னா ஒமக்க நெஞ்சி! பிண்டாளுத ஒமக்கு அவ்ளதாம் மரியாத பாத்துக்காரும்!” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதன் பின் தொல்லை இல்லை.

ஆனாலும் அரவிந்தன் என்னிடம் பேசவேயில்லை. என்றாவது ஒருநாள் பேசிவிட மாட்டானா என்று ஏங்கிப் போயிருந்தேன். அவனில்லாமல் என்னிடம் யார் யாரோ பேச முயன்று தோற்றுப் போனார்கள். நானும் யாரிடமும் நெருங்கவேயில்லை. இன்னுமொரு நட்பு எனக்குத் தேவையில்லாமல் போயிருந்தது. எப்போதும் தனிமைதான் துணைவன்.

அப்படியிருக்கும் போது ஒருநாள் அரவிந்தன் என்னை அவனது வீட்டிற்கு சனிக்கிழமை வருமாறு அழைத்ததாக தகவல் சொல்லி அனுப்பினான். அன்றுதான் எனக்கு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் எல்லாமே... அன்றிரவு முழுக்க எனக்குத் தூக்கமேயில்லை. சனிக்கிழமை வந்தது. எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட பன்னிரெண்டு கிலோமீட்டர்கள் சைக்கிள் மிதித்து அவனது வீட்டிற்குச் சென்றேன்.

மனம் முழுக்க படபடப்பு, ‘என்ன சொல்வானோ? நான் என்ன பேச?’

அவனது வீட்டுக் கதவைத் தட்டினேன். அவனது அம்மா கதவைத் திறந்தாள்.

“நீதானேடே அரவிந்தனுக்க வாய அடிச்சி ஒடச்ச? அப்பொரம் எதுக்குப்போ இங்க வந்த? அவனுக்கு ஒன்னய பாக்க இஷ்டமில்லியாம்! கிளம்பு!”

நான் கெஞ்சினேன், “அம்மா! ஒரே ஒரு தடவ அவன பாத்துட்டுப் போயிர்ரென்! அவன கூப்புடுங்கம்மா!”

அவள் செவி சாய்க்கவில்லை. என் கூக்குரலை பலர் நின்று பார்த்துவிட்டுப் போனார்கள். சத்தமாகக் கத்தினேன். “அரவிந்தா இதுக்கா என்னய இவ்ளோ தூரம் வார வச்ச?”

என்னுடைய கண்ணீர் நிற்கவில்லை.

என்னுடைய சைக்கிளுக்கு என்ன துக்கமோ? அதன் டயர் வேறு மூச்சை விட்டிருந்தது. சைக்கிளைக் கையில் பிடித்துக் கொண்டு அரை டவுசரோடு சாலையில் தனிமையாக அழுது கொண்டே நடந்து வந்த பரிதாபத்துக்குரிய அந்த நாள் இன்றைக்கு நினைத்தாலும் அழுகையைத் துவங்கும். பஞ்சர் ஒட்டக் கூட அப்போது காசு இல்லை. நான் இவ்வளவு தூரம் வரும் விஷயம் வீட்டிற்குத் தெரியாது. தெரிந்தால் அனுமதி கிடைக்காது ஆகையால் எதுவும் சொல்லவில்லை. வீடு வந்து சேர மூன்று மணிநேரங்கள் ஆகிப் போயிருந்தன.

‘அரவிந்தன் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? என்னைக் கேவலப் படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தால் என்னை அம்மணமாக ஓட விட்டிருக்கலாமே? ஏன் இப்படி காயப் படுத்தினான்? இப்படியெல்லாமா ஒருவனைப் பழி வாங்குவார்கள்? அவனது அன்பை நாடிப் போனது தவறே இல்லை! ஆனால் அதற்காக இப்படியா?’

என்னால் துக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. உடைந்து அழுதபடியே சாலையில் நடந்த அந்த மூன்று மணிநேரங்கள் என்னுடைய வாழ்வில் என்றுமே மறக்காது. அன்றைக்கு அப்பாவிடம் அழுது புலம்பி நான் இனிமேல் அந்தப் பள்ளிக்குப் போகவே மாட்டேன் என்று சொல்லி அடுத்தநாள் அப்பா போய் டீசி வாங்கி வந்து என்னை வேறொரு பள்ளியில் சேர்த்தார்.

அங்கு புது நண்பர்கள், புது தோழிகள் என்று எல்லாம் மாற ஆரம்பித்தன! அரவிந்தனின் அந்தப் பழிவாங்கல் மட்டும் மனதை விட்டு அகலவேயில்லை. அன்றைக்கு என்னை சந்திக்க விரும்பாத அரவிந்தன் இதோ பாரத் பெட்ரோலியம் சீருடையில் டீக்கடையில் என் முன்பாகத் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறான்.

நான் ஒரு பெரும்துக்கத்தில் அவனிடம் கேட்டேன், “அரவிந்தா! நீ மட்டும் அன்றைக்கு என்னை வெளியில் வந்து பார்த்திருந்தால்?”

என் வாயிலிருந்து வார்த்தைகள் துண்டு துண்டாக வந்து விழுந்தன. எனக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது. அவன் தலையைக் குனிந்து கொண்டான். நான் மீண்டும் கேட்டேன்.

“என்னை ஏன் உதாசீனப் படுத்தினாய் அரவிந்தா? என் கன்னத்தில் அறைந்திருக்கலாமே?”

இம்முறை நான் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். டீக்கடையில் எல்லாரும் எங்களைப் பார்த்தார்கள். அரவிந்தன் குனிந்து உட்கார்ந்து அழுததில் அவனது ஒருசொட்டுக் கண்ணீர்த்துளி டீ கிளாசில் விழுந்தது. கொஞ்ச நேரம் அமைதி.

எழுந்து காரை நோக்கி நடந்தோம். அந்தச் சூழல் சகஜமாக கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டது. அரவிந்தன் தன்னுடைய மவுனத்தைக் கலைத்து விட்டு அவனது அப்பாவின் மரணத்துக்குப் பிற்பாடு படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு வந்ததாகச் சொன்னான். பின்னர் என்னிடம்,

“லேய் ப்ரெவு! நீ அப்போலாம் அவ்ளோ புஸ்கு புஸ்குன்னு இருப்ப? இப்ப தாடியெல்லாம் வச்சி ஆளு சாமியார் மாறி ஆயிட்டியே மக்கா?”

“சும்மாதாம் மக்ளே... ஒரு பந்தாவுக்கு வச்சிருக்கேன்! வேற என்ன வித்தியாசம்லாம் என்கிட்ட தெரியிது அரவிந்தா?”

“அப்போ மாட்டுன டவுசர இப்பவும் கழத்தல பாத்தியா?”

அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. நான் அவனைக் கட்டியணைத்துக் கொண்டு மீண்டும் அழுதேன். நட்பு ஒன்று மட்டும்தான் எல்லார் முன்பாகவும் நம்மைக் கொண்டு போய் நிறுத்தும்! மண்டியிடச் செய்யும்! மானம் கெடுத்தும்! வாழ்வைக் காப்பாற்றும்! சாகும் வரைக்கும் வாழ்வதுதான் வாழ்வு.

  • 967
  • 971