Goose on lakeside
டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் (GTA) வீடுகளின் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சில குறிப்பிட்ட பகுதிகளில் 500,000 டாலர்களுக்கும் குறைவான விலையில் வீடுகள் விற்பனையாகியுள்ளதாக 'Wahi' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாத விற்பனை தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிராம்ப்டன் (Queen Street Corridor): இங்கு வீடுகளின் சராசரி விற்பனை விலை 407,000 டொலராகும்.
இதுவே டொராண்டோ பெரும்பாக பகுதியிலேயே மிக மலிவான இடமாக காணப்படுகின்றது.
இங்கு அதிகப்படியான அடுக்குமாடி குடியிருப்புகள் (Condos) இருப்பதே விலை குறைவாக இருக்க முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
பிளெமிங்டன் பார்க் (Flemingdon Park): டொராண்டோ நகரின் எல்லைக்குள் மலிவான இடமாக இது கருதப்படுகிறது. இங்கு சராசரி விலை 452,000 டொலராக உள்ளது.
தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இதில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு கரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இதன் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 40 வயதிலும் தனது கனவுகளைத் துரத்தும் சர்வதேசத் துப்பாக்கிச் சுடும் வீரராக, சூர்யா நடித்துள்ளார். அவரை காதலிக்கும் 20 வயது பெண்ணாக மமிதா பைஜு நடித்துள்ளார். இருவருக்குமான வயது வித்தியாசம் கொண்ட வழக்கத்துக்கு மாறான காதல் கதை இதன் டீஸரில் தெரிகிறது. “பல லேயர்கள் உள்ள வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.
அவருடைய ஸ்டைலான தோற்றம், கதைக்குப் புத்துணர்ச்சியை அதிகரிக்கும். மமிதா பைஜுவின் நடிப்பு, வெங்கி அட்லூரியின் வசனங்கள் என இப்படம் எமோஷனல் டிராமாவாக ரசிகர்களை ஈர்க்கும்” என்கிறது படக்குழு.
துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘கேடி: தி டெவில்’. இதில் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா, நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரேம் இயக்கி உள்ள இப்படத்தை கே. வி. என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ளார். அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இப்படம், ஏப் 30-ல் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தில் இருந்து சமீபத்தில் குத்துப்பாடல் ஒன்று பல்வேறு மொழிகளில் வெளியானது. அப்பாடலில் நோரா ஃபதேஹி, சஞ்சய் தத் இணைந்து ஆடியிருந்தனர். இப்பாடலை இந்தியில் ரகிப் ஆலம் என்பவர் எழுதியுள்ளார். அப்பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது.
இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நடன அசைவுகளும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்தி பாடகர் அர்மான் மாலிக், இயக்குநர் ஓனிர் உள்பட பல பிரபலங்களும் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கீழ்த்தரமான பாடல் என்று தங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர். இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆபாசமான வரிகள் மற்றும் காட்சிகள் தொடர்பாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி, பாடலை உடனடியாக நீக்க உத்தரவிட்டது. இதனால், இப் பாடல் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சமூக ஆர்வலரும் வழக்கறிஞரான வினீத் ஜிண்டால் என்பவர், இந்தப் பாடலுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் மூத்த தளபதி கோலம்ரெசா சுலைமானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது ஈரான்.
செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட இந்த கொத்து குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஈரான், கொத்து குண்டுகளை அடிக்கடி பிரயோகப் படுத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. “ஈரான் ராணுவம் க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வீசுகிறது அவை நடுவானில் பல்வேறு சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து பரந்துபட்ட பகுதியை குறிவைத்து விழுவதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமாக இருக்கிறது” என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
போர் பதற்றச் சூழல் சற்றும் குறையாத சூழலில், ஈரானின் கடற்கரை பகுதிகளை அமெரிக்க ராணுவம் குறிவைத்துள்ளது. கடற்கரை பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஈரான் ஏவுகணைக் கப்பல்களை அழித்து ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை 3% உயர்ந்தது. பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதிலிருந்தே எண்ணெய் விலை 45% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போர் ஜூன் மாதம் வரை நீடிக்கும் பட்சத்தில் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்துக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஈரான் கடற்கரை பகுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். திடீர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் கைகூடும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
ரிஷபம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். திடீர் வாய்ப்புகள் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைத் துறையில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். சுப காரிய முயற்சிகள் கைகூடும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை ஏற்படும். மருத்துவத் துறையில் முயற்சிக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் நிதானம் வேண்டும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். சமூகமும் பற்றிய சில நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் உண்டாகும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
சிம்மம்
மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். கடினமான விஷயங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். கற்பனைத் துறைகளில் சாதகமான சூழல்கள் அமையும். வர்த்தக விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். திடீர் வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை விற்பனையில் இருந்த தாமதங்கள் விலகும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். கூட்டாளிகளிடம் சில நெருக்கடியான சூழல்கள் உருவாகும். அரசுப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். போட்டி தேர்வுகளில் இருந்த மந்த நிலை மறையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
துலாம்
மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வேலை ஆட்களால் ஆதரவான சூழல் உருவாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். விவேகமான செயல்பாடுகளால் மதிப்புகளை உருவாக்குவீர்கள். வர்த்தக விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். இழந்த பொருளை மீட்பதற்கான எண்ணங்கள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி விஷயங்களில் இருந்த தடுமாற்றம் குறையும். நண்பர்களின் அறிமுகங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
தனுசு
சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். வாகனங்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். தோற்றப்பொலிவுகளில் மாற்றங்கள் உருவாகும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். மற்றவரிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். அன்பு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகரம்
தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மதிப்புகள் உயரும். பார்வை தொடர்பான சிக்கல்கள் குறையும். கல்வியில் ஆர்வம் ஏற்படும். வாக்கு சாமர்த்தியத்தின் மூலம் சாதாரணமான சூழல்களை உருவாக்குவீர்கள். கொள்கை பிடிப்பு குணம் மேம்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கும்பம்
நீண்ட நாள் எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த சில வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சிலரின் அறிமுகங்கள் மூலம் மாற்றம் ஏற்பட முடியும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு
மீனம்
உயர்கல்வியில் சில தடுமாற்றங்கள் உண்டாகும். வீடு மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். உறவுகளுடன் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பொருட்கள் விற்பனையில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட தூர பயணம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். வாசனை பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 4 ஆம் தேதி புதன்கிழமை 18.3.2026.
இன்று காலை 08.28 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.
இன்று காலை 06.08 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.
இன்று அதிகாலை 04.53 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று காலை 08.28 வரை சகுனி. பின்னர் இரவு 07.58 வரை சதுஸ்பாதம். பின்பு நாகவம்.
இன்று காலை 06.19 வரை மரண யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சசி – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வந்த படம் ‘நூறு சாமி’. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது.
’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் உடன் கவுரவ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை முடித்துவிட்டு ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கவுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரியவுள்ளார்.
தற்போது இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த படத்தில் முருகன் மற்றும் விருமாண்டி ஆகிய இரண்டு கடவுள்களை மையப்படுத்தி கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சிவகுமார் முருகேசன். இதில் முருகக் கடவுளை மையப்படுத்தி சிவகார்த்திகேயனும், விருமாண்டி கடவுளை மையப்படுத்தி கமலும் இருப்பார்கள் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கமல் - சிவகார்த்திகேயன் இணைந்து நடித்தால் இப்படத்தில் வியாபாரம் உள்ளிட்டவை இரட்டிப்பாக இருக்கும். மேலும், இப்போதே இதன் உரிமைகளை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் ப்ரோமோ வீடியோவில், அக்டோபரில் வெளியீடு என படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முருங்கை மரம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு தருகிறது. முருங்கை மரத்தின் எல்லா பாகங்களும் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடியது. அதிலும் முருங்கை இலைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு கொடுக்கிறது. முருங்கை இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கூடிய முருங்கை இலை சூப் எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது. முருங்கை இலைகளில் வைட்டமின் பி, வைட்டமின் சி, புரோவிட்டமின் ஏ, வைட்டமின் கே, மாங்கனீசு, புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
தொடர்ந்து நீங்கள் முருங்கை இலைச் சாற்றை குடித்து வருவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். முருங்கை இலைச்சாற்றை தினமும் அதிகாலையில் காலை உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது அரை மணி நேரத்திற்கு பிறகோ நீங்கள் குடிப்பது உங்களுடைய மலச்சிக்கல் பிரச்சனையை விரைவில் போக்கும். முருங்கை இலைகள் உடலில் இருந்து வெளிவரக்கூடிய கழிவை இளக்கி வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும் இது குடலை ஆரோக்கியப்படுத்தி குடலின் இயக்கத்தை அதிகரிக்கிறது.
முருங்கை இலைச்சாறு உங்கள் உடலில் உள்ள வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. முருங்கை இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இது உடலில் ஏற்படக்கூடிய காயங்கள், வலிகள், வீக்கத்தை போக்க உதவுகிறது. மேலும் உடலில் ஏற்படக்கூடிய புண்களை விரைவில் குணமாக்கும் தன்மையும் கொண்டது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் முருங்கை இலைச்சாற்றை குடித்து வரும் பொழுது இந்த ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது முருங்கை இலை. முருங்கை இலை சாறை மூன்று மாதங்கள் தொடர்ந்து தவறாமல் தினமும் மூன்று வேளை நீங்கள் குடித்து வந்தால் உங்கள் இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிக அளவு சர்க்கரையை கட்டுப்படுத்தும். மேலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதால் எந்தவித பக்கவிளைவுகளும் உங்களுக்கு இருக்காது.
தொடர்ந்து முருங்கை இலை சாற்றை குடித்து வரும் பொழுது அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் இதய நோய்கள், பக்கவாதம், மார்புவலி, கால்களில் வலி மற்றும் கணுக்காலில் அதிக வலியை ஏற்படுத்துகிறது.
முருங்கை இலைச்சாற்றை தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. முருங்கை இலைச் சாற்றில் வைட்டமின் சி காணப்படுகிறது. இது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது. மேலும் இது பாக்டீரிசைடு, பாக்டீரியோஸ்டேடிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே இந்த முருங்கை இலை ஜூஸை தொடர்ந்து நீங்கள் தினமும் குடித்து வரும் பொழுது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. இதனால் நோய்கள் வராமல் இருக்கும். மேலும் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும்.
முருங்கை இலைச்சாறு வேகமாக முதுமை அடைவதை தடுக்கிறது. முருங்கை இலையில் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை அதிகம் உள்ளது. தினமும் முருங்கை இலைச்சாற்றை நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய சருமத்தின் செல் சேதத்தை தாமதப்படுத்தும். மேலும் செல் சேதத்தை தடுக்கவும் செய்யும். சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை குறைத்து சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் உங்களுடைய சருமம் பொலிவாகும். இளமையாகவும் இருக்கும்.
முருங்கை இலைச்சாற்றை தொடர்ந்து கொடுத்து வரும் பொழுது அது இரைப்பை பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. முருங்கை இலையில் வைட்டமின் பி நிறைந்து காணப்படுகிறது. இது இரைப்பை அழற்சி மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியை குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் செரிமானத்தை சீராக்கும் குணமும் கொண்டது. முருங்கை இலைச்சாற்றை தினமும் நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய இரைப்பை பிரச்சனைகள் நீங்கும்.
முருங்கை இலைச் சாற்றை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய முடி ஆரோக்கியமாக வளர உதவிசெய்கிறது. முருங்கை இலைச்சாறு உங்களுடைய தலை முடி மற்றும் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஏனென்றால் முருங்கை இலைகளில் முடிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த முருங்கை இலைச்சாறு முடிக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுத்து முடியை வலுவூட்டுகிறது. மேலும் முடி உதிர்தல் மற்றும் முடி சேதத்தை தடுக்கிறது.
முருங்கை இலைச்சாற்றை தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது மன அழுத்தத்தை குறைத்து சோர்வை போக்குகிறது. இந்த ஜூஸை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய உடல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கிறது. இது உங்கள் உடலில் கார்டிசோல் அளவை சமநிலைப்படுத்தும். அதன் மூலமாக மன அழுத்தத்திற்கு தேவையான சக்தியை உடலில் மேம்படுத்துகிறது.
முருங்கை இலைச் சாற்றை தயாரித்துக் குடிப்பது மிகவும் எளிது. சிறிதளவு தண்ணீரை அடுப்பில் வைத்து தண்ணீர் கொதித்தவுடன் அதில் முருங்கை இலைகளை போட்டு 15 நிமிடங்கள் நன்றாக வேக வைத்து, ஆற வைத்து வெதுவெதுப்பான சூட்டில் இதை குடிக்க வேண்டும். தினமும் இதை வெறும் வயிற்றில் நீங்கள் குடித்து வரும் பொழுது பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உங்களுடைய உடலுக்கு கிடைக்கும்.
பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர் களைக் கொண்டது.
- செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது.
- காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.
- இது வெங்காய இனப் பூண்டுகளின் மணத்தை நினைவூட்டுகின்றது.பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம். ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.
- பெருங்காயம், சூட்டைத் தரக்கூடியது. உணவை செரிக்கிறது, சுவையை அதிகப்படுத்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும், குடற் புழுவகற்றியாகவும் பயன்படுகிறது.
- பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.
- நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.
- பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும்.
- ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் தீரும்.
- வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.
- பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் - சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது.
- மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது, மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது
- சளிக்காய்ச்சல் எதிர்ப்பு - 1918 ஆம் ஆண்டில் பெருங்காயம் பானிசு இன்புளுயன்சா தொற்று நோயை எதிர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. தைவான் நாட்டிலுள்ள கயோஹ்சியூங் மருத்துவப் பல்கலைக்கழகத்திலுள்ள விஞ்ஞானிகள், பெருங்காயத்தின் வேர்கள் சுவைன் புளு வைரசுH1N1 ஐ கொல்லும் இயற்கையான வைரஸ் எதிர்ப்பு மருந்து சேர்க்கைகளை உற்பத்தி செய்வதாக அறிக்கை வெளியிட்டனர். அமெரிக்க கெமிக்கல் சொசைட்டியின் நேச்சுரல் புராடக்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள் இந்த சேர்மங்கள் இந்த வகையான ப்ளூ காய்ச்சலுக்கு எதிரான "புதிய மருந்து உருவாக்கத்திற்காக உறுதியளிக்கும் முன்னணி சேர்மங்களாகப் பயன்படுத்தப்படலாம்" என்று கூறினர்.
- செரிமானம் - தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகியவற்றில் இது செரிமான ஊக்கியாகப் பயன்படுகின்றது மற்றும் இது "மஹாஹிங்" என்று அறியப்பட்ட ஆல்கஹால் அல்லது நீர் டிஞ்சரில் வயிற்றின் மீது பூசப்படுகின்றது
- நுண்ணுயிர்க் கொல்லி - பெருங்காயம் நாள்பட்ட மூச்சுக் குழாய் அழற்சி மற்றும் கக்குவானிருமல் ஆகியவற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்துவதற்காக நன்கு ஆவணமாக்கப்பட்டதுடன் பாரம்பரிய மருந்துகளில் நுண்ணுயிர்கொல்லியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதே போன்று வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது.
அது ஒரு பிரபலமான ஓவியப் பயிற்சி நிறுவனம். அங்கு சிறந்த ஓவிய ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக போட்டி ஒன்று அறிவிக்கப்படுகிறது.
போட்டியின் விதிமுறைப்படி இரண்டு ஓவியங்கள் வரைய வேண்டும்.
முதல் ஓவியம் அவர்கள் கொடுத்த தலைப்புக்கு ஏற்ற முறையில் வரைய வேண்டும்.
இரண்டாவது ஓவியம் அவரவர் விருப்பம் தான். தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு என்ன வேண்டுமானாலும் வரையலாம். இதனையெல்லாம் வரைந்து அந்த பயிற்சி நிறுவனத்தின் முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.
தபாலின் மூலம் நிறைய ஓவியங்கள் குவிந்திருந்தன. போட்டியின் நடுவர் குழு ஒவ்வொரு ஓவியமாய் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஓவியமும் தனித்துவம் நிறைந்ததாய் இருந்தது.
ஒரு கடிதத்தில் அனுப்பப்பட்ட ஒரு ஓவியரின் ஓவியம் மிகவும் தத்ரூபமாய் இருந்தது. அவர்கள் கொடுத்த தலைப்புக்கு மிகப் பொருத்தமாய் அற்புதமாய் வரையப்பட்டிருந்தது.
அதே ஆவலில் இரண்டாவது ஓவியத்தைத் தேடினர். ஆனால் இன்னொரு ஓவியம் கடித உறையில் இல்லை. ஒரு ஓவியம் மட்டுமே அனுப்பப்பட்டிருந்தது. அதாவது குறிப்பிட்ட தலைப்பின் கீழ் வரையப்பட்ட ஓவியம் மட்டும் இருந்தது. ஆனால் அவர்கள் விருப்பத்திற்கேற்றாற் போல வரையச்சொன்ன இரண்டாவது ஓவியம் இல்லை. குழு உறுப்பினர்கள் நன்றாகத் தேடி பார்த்தனர். ஓவியம் இல்லை.
எனவே விதிமுறை மீறப்பட்ட ஓவியம் தானே!!!ஆதலால் அரைமனதுடன் அந்த ஓவியத்தை நிராகரிக்க முற்படும்போது தான் அந்த ஓவியத்தின் பின்புறத்தில் சிறுகுறிப்பு ஒன்று எழுதப்பட்டிருப்பதைக் கவனித்தனர். அதனை வாசித்தவுடன் அனைவருக்கும் ஆச்சரியம். அந்தக் குறிப்பில்,
*** இரண்டாவது ஓவியத்தைத் தேட வேண்டாம். கடிதத்தின் மேல் ஒட்டி அனுப்பிய ஸ்டாம்ப்-ஐ நன்றாக கவனிக்கவும். அது நான் வரைந்தது தான். ***
* சோளமாவும், அரிசி மாவும் சம அளவில் கலந்து பஜ்ஜி சுட்டால் கடலை மாவில் செய்ததை விட சுவையாகஇருக்கும்.
* பித்தளைப் பாத்திரங்களை முட்டை வேகவைத்த நீரில் கழுவினால் பாத்திரங்கள் பளிச்சிடும்.
* பகோடா செய்யும்போது வேர்க்கடலையை பொடி செய்து கலந்தால் பகோடா மொறு, மொறுவென இருக்கும்.
* காய்ந்த மிளகாய்களை வறுக்கும் போது கொஞ்சம் உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
* கட்லெட் செய்ய ரொட்டித் துண்டு இல்லை என்றால் அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.
* வாழைஇலையை அனலில் காட்டி பின் பார்சலுக்கு பயன்படுத்தினால் உடையாது. கிழியாது.
* தோசைக்கல்லில் மோர் மிளகாய் வறுத்தால் அதிக எண்ணெய் செலவு ஆகாது.
* மணத்தக்காளி இலை மிகச் சிறந்த கிருமி நாசினி. காயம் பட்ட இடத்தில் இதன் சாறை பிழிந்து விட்டால் புண் விரைவில் ஆறும்.
* மழை நாட்களில் சீக்கிரமாக பொரிந்த அப்பளம் நமத்து போய்விடும். எனவே ஒரு ஸ்டீல் டப்பாவில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் இரண்டு நாட்கள் தாக்குப்பிடிக்கும்.
* கறியை வேகவிடும்போது ஒரு துண்டு இஞ்சியை போட்டால் கறி நன்றாக வெந்து மிருதுவாக இருக்கும்.
* வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் அதன் வாசனை ஊரையே கூட்டும்.
* தேங்காய்ச்சட்னி அரைக்கும்போது பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை எண்ணெயில் வதக்கி பின் அரைத்தால் சுவையாக இருக்கும்.
கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த சனிக்கிழமை அரங்கேறிய தொடர் வாகனத் திருட்டுகள் மற்றும் வீடுபுகுந்து கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெறும் சில மணிநேர இடைவெளியில் நகரம் முழுவதும் நிகழ்ந்த இந்த வன்முறை சம்பவங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வெஸ்ட் ஹண்ட் கிளப் வீதி பகுதியில், வாகன சாரதி ஒருவரைக் கத்தியைக் காட்டி மிரட்டிய சந்தேகநபர்கள் இருவர், அவரிடமிருந்து காரைப் பறித்துச் சென்றனர்.
சிறிது நேரத்தில் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், உரிமையாளரின் கார் சாவியைத் திருடி, அங்கிருந்த மற்றொரு காரையும் கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்ட காருடன் நகரின் கிழக்குப் பகுதியில் அவர்கள் விபத்துக்குள்ளாகினர். அப்போது விபத்தைப் பார்த்து உதவ முன்வந்த ஒருவரின் காரையும் அவர்கள் பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
மீண்டும் நகரின் மேற்குப் பகுதிக்குத் திரும்பிய அந்த ஜோடி, மற்றுமொரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது.
அங்கு உரிமையாளருடன் ஏற்பட்ட மோதலில், உரிமையாளர் சிறு காயங்களுக்கு உள்ளானார். இறுதியாகச் சென்ற வீட்டில் அந்தப் பெண் பிடிபட்ட நிலையில், அங்கிருந்து தப்பியோடிய ஆணையும் பொலிஸார் சிறிது நேரத்தில் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டாவா பொலிஸ் கொள்ளை தடுப்புப் பிரிவு (Robbery Unit) முன்னெடுத்து வருகிறது. இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் துணை அமைப்பான 'பாசிஜ்' தன்னார்வப் படைத் தளபதி குலாம்ரேசா சுலைமானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின் போதே அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி சுலைமானியின் மரணம் ஈரானின் 'கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு' கட்டமைப்பிற்கு விழுந்த பாரிய பலத்த அடி என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
ஈரானிய இராணுவத் தளபதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து இராணுவ ரீதியான கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.
இந்தச் செய்தி குறித்து ஈரான் இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ கருத்துக்களையும் அல்லது உறுதிப்படுத்தல்களையும் வெளியிடவில்லை என அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சமயோசிதமான செயல்பாடுகள் மூலம் வளர்ச்சி அடைவீர்கள். உயர்கல்வியில் மேன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்து வந்த ஏற்ற இறக்கங்கள் குறையும். பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
ரிஷபம்
பயணங்கள் மூலம் எண்ணங்கள் ஈடேறும். அரசு வழியில் உதவிகள் சாதகமாகும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈர்ப்புகள் அதிகரிக்கும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளால் அலைச்சல்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் ஆலோசனை வேண்டும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கடகம்
இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். புதிய உணவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். எதிர்பார்த்த சில வரவுகளில் தாமதம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொன் பொருள்களில் கவனம் வேண்டும். குடும்ப விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
சிம்மம்
நண்பர்களின் வருகை மனதிற்கு மன நிறைவை கொடுக்கும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி லாபம் பெறுவீர்கள். வங்கி கடன் உதவிகள் சிலருக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் குறையும். மனை விற்றல், வாங்கலில் மேன்மையான சூழல் உண்டாகும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி
பணிபுரியும் இடத்தில் மாற்றங்கள் பிறக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரம் சார்ந்த கடன் உதவிகள் சாதகமாகும். அசதிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
துலாம்
வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கவிதை மற்றும் இலக்கிய பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் விவேகத்துடன் செயல்பட்டு முடிவு எடுப்பது நன்மையளிக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
விருச்சிகம்
மனதில் பழைய நினைவுகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். வாகனம் பயணங்களில் நிதானம் வேண்டும். சுபகாரிய தொடர்பான பேச்சு வார்த்தைகளை பொறுமையுடன் செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். விவசாயம் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
தனுசு
திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். விவசாய பணிகளில் கவனம் வேண்டும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசியல் துறையில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். போட்டி சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கும்பம்
தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்மறை சிந்தனைகள் வெளிப்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் செய்திகளால் செலவுகள் மேம்படும். மனதளவில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மீனம்
எண்ணிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன் பிறத்தவர்களுடைய சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட அனுபவங்கள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 17.3.2026.
இன்று காலை 08.57 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.
இன்று அதிகாலை 05.55 வரை அவிட்டம். பின்னர் சதயம்
இன்று காலை 07.46 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.
இன்று காலை 08.57 வரை வனிசை. பின்னர் இரவு 08.42 வரை பத்தரை. பின்பு சகுனி.
இன்று காலை 06.49 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
நடிகை ராய் லட்சுமி, 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அழகும், திரை முன்னிலையில் கொண்டுவரும் நம்பிக்கையும் காரணமாக கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த 'தாம் தூம்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ராவி மோகன் நடித்த இந்த படத்தின் மூலம் ராய் லட்சுமிக்கு தமிழ் ரசிகர்களிடையே தனி அடையாளம் கிடைத்தது.
தமிழ் சினிமாவைத் தொடர்ந்து ராய் லட்சுமி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, காஞ்சனா திரைப்படத்தில் கருப்பு பேரழகா பாடல் மற்றும் கவர்ச்சியான ஆட்டத்தின் மூலம் இளம் ரசிகர்களை வளைத்தப்போட்டார். பின் ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்பு பெற்ற ராய் லட்சுமி, Julie 2 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்த நடிகைகளில் ஒருவராக ராய் லட்சுமி இருந்தார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை.
பட வாய்ப்புகள் குறைந்ததால், சமூக வலைதளங்களில் ராய் லட்சுமி தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் இவர், தனது ஃபோட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது, பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள ராய் லட்சுமி, அங்கு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் சட்டை பட்டனை கழட்டிவிட்டு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கமெண்ட்களை குவித்து வருகிறது.
1.இல்லங்களில் பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.
அதன் இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பதாகும்.
அதாவது ஐவகை பத்திரங்களை(இலைகள்) நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.
துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள்.
இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'.
இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.
இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை.
இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம்,
திருமாலுக்கு உகந்தது துளசி,
அம்மனுக்கு வேப்பிலை,
விநாயகருக்கு அருகம் புல்,
பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.
2. பூசையில் அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில்
விளக்கம்
•பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம்
பயன்பாடு
பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் இருக்கும் நீரில் ஒன்றைத்தான் நமக்குத் தருகிறார்கள்.
அதென்ன பஞ்ச பாத்திரங்கள்?
அர்க்கயம் - கைகளுக்கு, பாத்யம் - பாதங்களுக்கு, ஆசமனீயம் - இது ஆசமனம், ஸ்நானீயம் - திருமேனிக்கு, சர்வார்த்த தோயம் - மற்ற அனைத்துக்கும். இவை தான் பஞ்ச பாத்திரங்கள்!
இவை இல்லாமல் தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரம், தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்து தான் இந்த பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்!
நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம், சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து. அது தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்!
மற்ற அனைத்தின் நீரும் இந்த ஐந்தாவதில் இருந்து தான் போயும், வரவும் செய்யும்!
தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:
பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர் இவற்றுடன் சிறிது மஞ்சள்.
3.பஞ்சமுகம்...... இங்கு பஞ்சமுகம் என்பதற்கு அர்த்தமே வேறு.
வியாகரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள்.
முகம் மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்று பெயர்.
அதேபோல் பூஜைக்கு உபயோகிக்கும் பஞ்ச பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும் உடல் சிறுத்தும் இருப்பதனால் அதனை பஞ்சபாத்திரம் என்று குறிப்பிடுகிறார்.
நடிகர் மாதவன் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு குறித்து ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னணி நடிகர், நடிகைகளின் பெயரில் சமூக வலைதளங்களில் போலியான கணக்குத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. இப்போது நடிகர் மாதவன் பெயரில் மோசடி கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரோஹன்மைரா 2 (rohanmyra2)’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு தனது பெயரையும், தனது குழுவின் பெயரையும் பயன்படுத்தி பொதுமக்களிடம் பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த நபருக்கும் எனக்கும் அல்லது எனது குழுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது முற்றிலும் ஒரு மோசடி கணக்கு. எனது சார்பாகப் பேச வேறு எந்தக் கணக்குக்கும் அனுமதி இல்லை” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அந்த நபர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவின் நயாகரா பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நயாகரா காவல்துறை புதன்கிழமை அறிவித்துள்ளது.
2026 பெப்ரவரி மாதம், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் பிராந்தியம் முழுவதும் பயணித்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதை அவதானித்த நயாகரா குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.
மார்ச் 10 அன்று மதியம் 3 மணியளவில், வாகனத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரைத் அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், சுமார் $78,000 (கனடிய டாலர்) மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
160 கிராம் ஃபெண்டானில், 280 கிராம் மெத்தாம்பேட்டமைன், 137 கிராம் கொக்கைன், ஆக்ஸிகோடோன் மாத்திரைகள் மற்றும் 8,000 டொலர் ரொக்கப் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
தோரோல்டைச் சேர்ந்த பெலாலுதீன் ஷஹாபுதீன் (27), ஜனெல்லே மெக்லியோட் (27), நயாகரா ஃபால்ஸைச் சேர்ந்த கை செஷயர் (25), செயின்ட் கேத்தரின்ஸைச் சேர்ந்த ட்ரெவர் அவேரி (58) மற்றும் டெர்ரி கிரே (54) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஷஹாபுதீன் மற்றும் செஷயர் ஆகியோர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற மூவரும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




























