·   ·  3 videos
  •  ·  0 friends
  • 806
  • More

Goose on lakeside

Comments (0)
Login or Join to comment.
  • 59
·
Added article

உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘புஷ்பா 2’. ரூ.2000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. தற்போது இப்படத்தினை ஜப்பானில் மொழிமாற்றம் செய்து ஜனவரி 16-ம் தேதி வெளியிடவுள்ளது படக்குழு. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கவுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா 2’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகள், வசனங்கள் என அனைத்துமே கொண்டாடப்பட்டன. தற்போது ஜப்பானில் வரவேற்பு பிரம்மாண்டமாக இருப்பதால், அங்கும் மாபெரும் வசூல் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு தற்போது அட்லி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அல்லு அர்ஜுன்.

  • 80
·
Added a news

கனடா முழுவதும் மருத்துவமனைகள் குழந்தைகளில் காய்ச்சல் தொற்றுகளின் அதிகரிப்பை சந்தித்து வருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 17 குழந்தைகள் மட்டுமே காய்ச்சல் வைரஸிற்கு உள்ளாகியிருந்த இருந்த நிலையில், இந்த ஆண்டு அதே மாதத்தில் 145 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது எட்டு மடங்கு அதிகரிப்பு என கிழக்கு ஒண்டாரியோ குழந்தைகள் மருத்துவமனை (CHEO) வெளியிட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 12 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவர்கள் பாதுகாப்பு உருவாக இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் உடனடியாக காய்ச்சல் தடுப்பூசி எடுக்குமாறு மக்களிடம் வலியுறுத்துகின்றனர்.

பிற குழந்தைகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால் பள்ளி வயதுடைய குழந்தைகளே முதலில் பாதிக்கப்படுவார்கள் என்றாலும், இரண்டாண்டுகளுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் முன் நோய்கள் கொண்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூத்த வயதினர், குறிப்பாக 75 வயதுக்கு மேற்பட்டவர்களும் தீவிர நோய்க்கு உள்ளாகும் அபாயம் காரணமாக கூடுதல் கவனம் தேவைப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 127
·
Added a post

இளநீர் சாப்பிட்டால் சளி அகலும் என்பதே உண்மை.

நம் ரத்தத்தில் இருப்பது போல, சரியான அளவில் மின்பகுனி உப்புக்கள் இளநீரில் இருப்பதால், இளநீர், இயற்கை தந்த நல்லதொரு டானிக். சரியாகச் சொல்வதானால், இளநீர் ஒரு உயிர்த்திரவம். புது இளநீர், உடலுக்கு நல்லது. எப்போதும், வெட்டிய உடனேயே, இளநீரைப் பருகி விட வேண்டும். இதை உண்டால், சளி பிடிக்காது; மாறாக, சளி அகலும். இளநீரில் அதிக அளவில் சர்க்கரைப் பொருட்களும், தாது உப்புக்களும் மற்றும் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும், புரதச் சத்தும் உள்ளன.

சர்க்கரை சத்துக்கள்: குளுக்கோஸ் மற்றும் புரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள், இளநீரில் காணப்படுகின்றன. இளநீரிலுள்ள, குளூக்கோஸ் மற்றும் புரக்டோஸ், தேங்காய் முதிர்ச்சியடையும் போது, சுக்ரோசாக மாறி விடுகிறது. முற்றின தேங்காய் நீரில் காணப்படும் மொத்த சர்க்கரைச் சத்தில், 90 சதவீதம், சுக்ரோஸ் ஆகும்.

தாது உப்புகள்: இளநீரில், பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புகள், அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது, பொட்டாசியம். இளநீரில் காணப்படும் பொட்டாசியத்தின் அளவு, தென்னைக்கு இடப்படும் பொட்டாஷ் (சாம்பல் சத்து) உரங்களின் அளவைப் பொறுத்து, மாறுபடுகிறது. பொட்டாசியமும் மற்ற தாது உப்புகளும் நிறைந்த இளநீர் தான், நம் உடலிலிருந்து, சிறுநீரை அதிக அளவில் வெளியேற்ற உதவுகிறது.

புரதச் சத்துக்கள்: இளநீரில், புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச்சத்தின் தரம், பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது. இளநீரில், கூட்டுப் புரதங்கள் அதிக அளவில் இல்லாததால், நோயாளிகளுக்கும், அதிர்ச்சியினால் ஏற்படும் அபாயம் மிகக் குறைவு.

வைட்டமின்கள்:

இளநீரில், அஸ்கார்பிக் அமிலமும், வைட்டமின் பி பிரிவு அமிலங்களும் உள்ளன. அஸ்கார்பிக் அமிலத்தின் அளவு, 22 - 37 மி.கி./100 மி.லி., ஆகும். இளநீரைச் சுற்றியிருக்கும் பருப்பின் வளர்ச்சிக்கேற்ப, இதன் அளவு குறைந்து வரும். காபி, டீயை கைவிட்டு, எல்லாரும் இளநீர் பருகிட, எங்கும் அமைப்போம் இளநீர் பந்தல்!

மனித குலத்திற்கு, இயற்கை அளித்த மாபெரும் பரிசு, இளநீர். சுத்தமான, சுவையான சத்தான பானம். கோடையின் வெப்பத்தை தணிக்கும், குளிர்பானம். ஒரு லிட்டர் இளநீரின் கலோரி அளவு, 17.4/100 கிராம்.

'இளநீர் வழுவழுப்பானது, இனிப்பானது, விந்துவை அதிகரிக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், சிறு நீரகத்தைச் சுத்திகரிக்கும்' என்று ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன.

இளநீரின் மருத்துவக் குணங்கள்:

* ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு, இளநீர் ஒரு நல்ல மருந்து.

* வளர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள், இளநீரில் உள்ளன.

* இளநீர் உடல் சூட்டைத் தணிக்கிறது.

* வேர்க்குரு, வேனற்கட்டி, பெரியம்மை, சின்னம்மை மற்றும் தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த, இளநீரை உடம்பின் மீது பூசிக் கொள்ளலாம்.

* இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.

* இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக, காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானம்.

* ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்கிறது.

* முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும், இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

* சிறுநீர் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது.

* சிறுநீரக கற்களைக் கரைக்க உதவுகிறது.

* சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது.

* நெருக்கடி காலக்கட்டங்களில், நோயாளிகளுக்கு இளநீரை நரம்பு ஊசி மூலம் செலுத்தலாம்.

* இளநீர் மிகமிகச் சுத்தமானது. உடலில் சூட்டை உண்டாக்காது. சிவப்பு ரத்த அணுக்களை அழிக்காது. இதனால் தான், ரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக, இளநீர் பயன்படுத்தப்படுகிறது.

* இளநீரின், சிறந்த மின் பகுனித்தன்மை, மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது.

* ரத்தத்தில் கலந்துள்ள, நச்சுப்பொருளை அகற்ற இளநீர் உதவுகிறது.

  • 134
·
Added a post

தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன்.

அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான்

கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் ,கண்ணனை இறுக பற்றி கொண்டு கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம் தாள முடியாமல் அழுகிறாயோ ? என்று கேட்டான் .

கண்ணன் ,இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை.உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன்.

அர்ஜுனன் --கண்ணா நீ கடவுள் உனக்கு உறவு பற்று .பாசம்,பந்தம் ,,எதுவும் கிடையாது ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது.

கண்ணன் ---உறவு .பற்று ,பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா .

அர்ஜுனன் --அப்படி சொல்லாதே கண்ணா ---மானிடர்கள் மறைந்தாலும் பாச --பந்தம் அவர்களை விட்டு போகாது.

கண்ணன் --அப்படியா இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம் அங்கேதான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன்.

சொர்க்கலோகம் ---ஒளிப்பிழம்பு வடிவுடன் சொர்கலோகத்தில் இருந்தான் அபிமன்யு --அவனை அடையாளம் கண்டுகொண்ட அர்ஜுனன் ---என் மகனே அபிமன்யு என்று பாசத்தோடு கட்டி அணைக்க போனான் .

அணைக்க போன அர்ஜுனனை தடுத்த அபிமன்யுவின் ஆன்மா --அய்யா யார் நீங்கள் --என் போன்ற ஆன்மாவுக்கு உறவு ஏதும் கிடையாது.

தயவு கூர்ந்து என்னை விட்டு விலகி செல்லுங்கள் என்றது அபிமன்யுவின் ஆன்மா.

அதை கேட்டு அதிர்ச்சியாக நின்ற அர்ஜுனனிடம் ---பார்த்திபா பார்த்தாயா---உறவு பாசம் --பந்தம் --உணர்வு ---கோபம்---அன்பு---காமம் --யாவும் உடலில் உயிர் இருக்கும் வரைதான் ---உடலை விட்டு உயிர் போய் விட்டால்--ஏதும் அற்ற உடலுக்கும் --உணர்வு இல்லை ---அதை விட்டு போன ஆன்மாவுக்கும் உணர்வில்லை ---

நீ அழ வேண்டும் என்றால் அதோ பூவுலகில் போர்க்களத்தில் உன் மகன் அபிமன்யுவின் உடல் கட்டை இருக்கிறதே அதை கட்டி பிடித்து அழு---உன் உணர்ச்சியெல்லாம் அதில் கொட்டி அழு ----ஒரு உயிர் பிறப்பிற்கும் நீ காரணம் அல்ல பிறந்த உயிர் இறப்பிற்கும் நீ காரணம் அல்ல என்பதை நன்கு உணர்ந்து கொள் .

படைத்தவன் எவனோ அவனே தான் படைத்ததை ஒரு நாள் அழிக்கிறான்-நடக்கும் யாவிற்கும் நீ ஒரு கருவியே-செயல் யாவும் படைத்தவன் செயலே என்பதை உணர்ந்து செயல்படு---அதுவே வாழ்வின் அர்த்தமாகும் ----என்று கூறி கண்ணன் புன்னகைத்தான் .

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஆறடி நிலம் கூட சொந்தம் இல்லையடா

இதை புரிந்து கொண்டு வாழப் பழகடா.

பிறந்த பிறப்பில் நீ செய்ய வேண்டிய நியாயமான குடும்ப கடமையை உறுதியாக நின்று செய்.

ஆனால் தன் நலம் கருதாத உன் அர்ப்பணிப்பு மட்டுமே உன் பெயர் சொல்லி நிலையாக உலகில் வாழும் என்பதை உணர்பவனே மனிதன்.

  • 104
·
Added a post

‘மஞ்சணத்தி’ என அழைக்கப்படும் நுணா மரத்தின் வேர் முதல் இலை வரை அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவையாக உள்ளன. தணக்கு, மஞ்சள் பாவட்டை, நுணவு போன்ற பல பெயர்களும் இம்மரத்துக்கு உண்டு.

இதன் தண்டு பகுதியின் தோலை சீவினால் உட்புறத்தில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் கட்டையை வெட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரைக் கொண்டு ஆடைகளுக்கு சாயமேற்றியதாக வரலாறுகள் கூறுகின்றன.

குயில்கள் இம்மரத்தின் பழங்களை விரும்பி சாப்பிடும். இதன் முதிர்ந்த மஞ்சள் நிறக் கட்டைகள் விவசாயக் கருவிகள் செய்யவும், சிறு மரச் சாமான்கள், பொம்மைகள் செய்யவும் மிகவும் உகந்தவை.

மருத்துவப் பயன்கள்:

* மஞ்சணத்தி தாவரத்தை மருந்தாக எடுத்துக்கொண்டால், நோயினால் தளர்ந்த உடல் ஆரோக்கியமாக்கும்.

* உடல் வெப்பத்தை இது அதிகரிக்கும்.

* இதன் இலை, காய், பழங்கள் அனைத்துமே வீக்கம் மற்றும் கட்டிகளைக் கரைக்கும்.

* பெண்களுக்கு மாதவிலக்கைத் தூண்டும்.

* குழந்தைகளுக்கு வரும் கரப்பான், புண்கள், கழலை போன்றவற்றை குணமாக்கும்.

* ஐந்து மஞ்சணத்தி இலைகளை நீரில் கழுவி சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக நசுக்கி அரை லிட்டர் தண்ணிரீல் இட்டுக் காய்ச்சி குடிநீர் செய்து தினமும் காலை, மாலை வேளைகளில் 20 மி.லி. வீதம் குழந்தைகளுக்கு கொடுத்தால் மாந்தம், கழிச்சல் ஆகியன குணமாகும்.

* புண்கள், சிரங்குகள் உள்ள இடத்தில் மஞ்சணத்தி இலையை அரைத்துப் பூசினால் எளிதில் குணமாகும்.

* மஞ்சணத்தி காய்களை சேகரித்து உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து சுட்டு கரியாக்கி சலித்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் பல் துலக்கினால் சொத்தை பல் வராது.

* 10 கிராம் மஞ்சணத்தி வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடித்தால் பேதி நின்றுவிடும்.

* ஐந்து மஞ்சணத்தி இலையோடு ஒரு கொத்து வேப்பங்கொழுந்தை சேர்த்து வதக்கி, இதனுடன் 2 கிராம் சுக்கு, மிளகு, ஒரு தேக்கரண்டி ஓமத்தை நசுக்கி அரை லிட்டர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி மூன்று தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க அஜீரணத்தால் ஏற்படும் காய்ச்சல் குணமாகும்.

* ஐந்து மஞ்சணத்தி இலையை, ஒரு கொத்து வேப்பங்கொழுந்தோடு வதக்கி இதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி ஓமம், ஒரு சிட்டிகை பொரித்த பெருங்காயம் சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் இட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை, மாலை இரு வேளையும், வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசம் குணமாகும்.

* நொச்சி, உத்தாமணி, பொடுதலை இலை சாற்றுடன் ஒரு அளவு மஞ்சணத்தி இலை சாறு கலந்து தினமும் மூன்று அல்லது நான்கு முறை சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான இரைப்பை பிரச்னைகளும் முற்றிலும் தீரும்.

* சிறிது மிளகுத் தூள், கால் ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து, மஞ்சணத்தி இலை மற்றும் பழத்தின் விழுதுடன் சேர்த்து கொதிக்க வைத்து, 50மி.லி. மற்றும் 100 மி.லி. வீதம் 48 நாட்களுக்கு குடித்து வந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அதிக இரத்தப்போக்கு போன்ற பிரச்னைகள் தீரும்.

  • 110
·
Added article

சிவப்பு மல்லி படத்திற்கு பிறகு விஜயகாந்த்துக்கு சத்யஜோதி பிலிம்ஸ் அட்வான்ஸ் கொடுக்கிறது. பிறகு அவர் நடித்த சில படங்கள் வரிசையாக சரியாக போகவில்லை.

வாய்ப்புகள் வரவில்லை. பணவரவு குறைகிறது. காருக்கு பெட்ரோல் போட பணமில்லை. அந்த நேரத்தில் சத்யஜோதி தந்த பத்தாயிரம் ரூபாயும் காலியாகிறது. திடீரென சத்யஜோதி தந்த பணமும் காலியாக, படங்களும் இல்லாமல் போக வாய்ப்புகளை தேடுகிறார் விஜயகாந்த்.

சத்யஜோதி தயாரித்து விஜய்காந்த் நடிக்க இருந்த 'நெருப்புக்குள் ஈரம்', படத்தில் விஜய்காந்த்தை தூக்கிவிட்டு தியாகராஜனை நாயகனாக்கியது சத்யஜோதி. விஜய்காந்த்துக்கு இருந்த ஒரே படமும் போனது. இந்த நிலையில் தந்த பத்தாயிரம் திருப்பிக்கேட்டு ஆளனுப்பியது சத்யஜோதி பிலிம்ஸ். "இப்போது படங்கள் இல்லை. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்" என விஜய்காந்த் டைம் கேட்க நிறுவனம் சம்மதித்தது.

எஸ்.ஏ.சி விஜய்காந்த்தை வைத்து அவர் கன்னடத்தில் எடுத்த 'கெளுவு நன்னடே' படத்தை தமிழில் எடுக்க ஒப்பந்தம் செய்தார். 'வெற்றி நமதே' என்கிற அப்படத்தில் டைகர் பிரபாகர்-அம்பரீஷ் நடித்த அந்தப்படத்தில் விஜயகாந்த்துடன் மோகன் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சில நாட்களில் மோகன் நடிக்க மாட்டேன் என விலகினார். அந்தப்படம் கிடப்பில் போடப்பட்டது. அந்த மோகனின் முன்னால் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் விஜய்காந்த் நடிப்பதாக GOAT படத்தில் காட்சி வந்தது காலம் செய்த மாயம். (இந்த ஜோடியின் நூறாவது நாள் சூப்பர்ஹிட்).

இந்த நேரத்தில் இயக்குனர் விசுவால் 'டௌரி கல்யாணம்' வாய்ப்பு கிடைக்கிறது. அந்த தயாரிப்பாளர் நேரே விஜயகாந்திடம் வந்து "எங்களுக்கு ஃபைனான்ஸியர் சத்யஜோதி பிலிம்ஸ் தான். உங்கள் சம்பளம் பத்தாயிரத்தை கழித்து விட்டு தருவதாக சொல்கிறார்கள்" எனச்சொல்ல விஜய்காந்தோ "எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஐந்தாயிரத்தை எடுத்துக்கொள்ளச்சொல்லுங்கள்" என நெருக்கடிக்கு சம்மதிக்கிறார்.

எஸ்.ஏ.சி மோகன் விலகிவிட்டதால் தன் 'சாட்சி' படத்தை தொடங்குகிறார். பிரபு, கார்த்திக் சம்மதிக்காததால் விஜய்காந்திடம் வருகிறார் எஸ்.ஏ.சி. சாட்சி விஜய்காந்த்தை முன்னணி ஹீரோவாக்குகிறது.

பத்தாயிரம் ரூபாய்க்கு நெருக்கடி கொடுத்த சத்யஜோதிக்கு பின்னாளில் ஒரு வெற்றிப்படம் கொடுக்கிறார் விஜய்காந்த். அது ஹிட்டாகிறது. சத்யஜோதி அதற்கு முன் எடுத்த 'வேடன்', 'என்றும் அன்புடன்' ஓடவில்லை. பின் எடுத்த 'ஹரிச்சந்திரா'வும் ஓடவில்லை.

அந்தப்படம் தான் 'ஹானஸ்ட் ராஜ்'. விஜய்காந்தின் 'பத்துலட்ச ஹானஸ்ட்.'

  • 110
·
Added a post

இன்றைய ராசி பலன்கள் - 5.12.2025

மேஷம்

நண்பர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். வரவுகளில் ஏற்றமான சூழல் அமையும். சகோதர்கள் வழியில் அலைச்சல் மேம்படும். அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பழைய சிக்கலில் சில குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

ரிஷபம்

செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். மறைமுகமான நெருக்கடியால் மாற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மிதுனம்

பேச்சுக்களில் சற்று நிதானம் வேண்டும். பொழுது போக்கு, நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர வகையில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்கள் இருக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். தக்க நேரத்தில் சில உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கடகம்

உறவுகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சபை பணிகளில் ஆதரவு கிடைக்கும். அன்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

சிம்மம்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் மனம் விட்டு பேசுவது மாற்றத்தை உருவாக்கும். தவறிய சில முக்கியமான பொருள்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் உருவாகும். நிர்வாக துறையில் திறமைகள் வெளிப்படும். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கன்னி

கணவன் மனைவி இடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். தன வரவுகள் தேவைக்கு கிடைக்கும். இழுபறியான சில வேலைகள் முடியும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளின் வருகையால் சில மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறையும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சோர்வு குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

துலாம்

வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். பலம் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் முன் கோபம் இன்றி செயல்படவும். சமூகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். ஆடம்பர செலவுகளால் கையிருப்புகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

விருச்சிகம்

மன அளவில் இருந்த கவலைகள் மறையும். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தனித்திறமை வெளிப்படும். அமைதி பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

தனுசு

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் கூடும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். கால்நடைகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மகரம்

உடன் இருப்பவர்கள் பற்றிய கண்ணோட்டங்களில் மாறுபாடு ஏற்படும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். புதுமையான சில விஷயங்கள் மீது ஆர்வம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கும்பம்

நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்களில் ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். விவசாய பணிகளில் ஆலோசனை வேண்டும். வீடு மாற்ற சிந்தனைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். சாந்தம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மீனம்

சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நிலுவை சரக்குகளால் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

  • 185
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5.12.2025.

இன்று அதிகாலை 03.55 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.

இன்று பிற்பகல் 01.32 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.

இன்று காலை 09.55 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.

இன்று அதிகாலை 03.55 வரை பவம். பின்னர் மாலை 03.37 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று பிற்பகல் 01.32 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=347&dpx=2&t=1764931529

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 179

Good Morning...

  • 207
·
Added article

ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு, அந்த நிறுவனத்தை அவரது மகன் ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். "நானும் ஒரு பெண்", "சம்சாரம் அது மின்சாரம்", "சிவாஜி", "வேட்டைக்காரன்", "மின்சார கனவு", "அயன்" உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட உலகின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஏ.வி.எம். சரவணன். வயதுமூப்பு காரணமாக அவர் இன்று காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக, ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது. 1958 ஆம் ஆண்டு முதல் சினிமா தயாரிப்பில் சரவணன் ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்போதும் கைகளை கட்டிக் கொண்டே நிற்கும் அவர் பணிவின் சிகரம் என்றும் அழைக்கப்படுகிறார்.

  • 373
·
Added article

இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயவாடாவில் பிறந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பதினாறு மொழிகளில் 22000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கர்நாடக இசை பயின்றவர்.

இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய இசைக் குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 1985-ஆம் ஆண்டு கற்பூர தீபம் என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா வாய்ப்பு கொடுத்தார்.

1986-ஆம் ஆண்டு இளையராஜா, பூவிழி வாசலிலே என்றத் தமிழ்த் திரைப்படத்தில் “அண்ணே அண்ணே” என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். அன்றிலிருந்து இவரது பாடல் பயணம் ஆரம்பித்தது. வேலைக்காரன், சின்னத்தம்பி, காதலன், சொல்லத்துடிக்குது மனசு, உள்ளத்தை அள்ளித்தா, சின்னக்கண்ணம்மா, முத்து, எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, சிற்பி., எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், தேவா, சந்திரபோஸ் போன்றவர்களின் இசையமைப்பில் தொடர்ந்து பாடிவந்தார்.

  • 412
·
Added a post

ஒருவர் தனது வயிறு சரியில்லை என்று ஒரு மருத்துவமனைக்கு செல்கின்றார்..அங்கு ஒரு மருத்துவரை சந்திக்கின்றார்...

பேஷண்ட் :- டாக்டர் எனக்கு கொஞ்ச நாளாவே வயிறு சரியில்ல'''' ஒரே காத்தா போகுது டாக்டர் """"

டாக்டர் :- ""என்ன காத்தா போகுதா ?"""எந்த கலர்ல போகுது வெள்ளையாவா ?"""

பேஷண்ட்::- """கலர்லம் இல்லை டாக்டர் இல்லை டாக்டர் கொஞ்சம் சத்தமா போகுது """""".

டாக்டர் :-- அப்போ இது கொஞ்சம் சீரியஸான விஷயம்தான்....நீங்க அரைஞாண் கயிறு கட்டியிருக்கீங்களா?""

பேஷண்ட் :- ஹ்ம்ம் ஆமாம் டாக்டர் கட்டியிருக்கேன்..

டாக்டர் :- அப்போ நான் கொடுக்கிற இந்த மாத்திரையை நீங்க உங்க அரைஞாண் கயிறுல தாயத்து மாதிரி கட்டிக்கோங்க அப்புறம் மஞ்சள் அது கூட மஞ்சள் துணி குங்குமம் எல்லாம் வெச்சி சேர்த்துக் கட்டிக்கோங்க...காத்து கருப்பெல்லாம் உங்களை அண்டவே அண்டாது

பேஷண்ட்:- குழப்பத்துடன் """ஹ்ம்ம் என்ன இந்த டாக்டர் """ஒரு """மாதிரியா பதில் சொல்றார் ????""""மெதுவாக டாக்டரை பார்த்துவிட்டு சொல்கின்றார் சார் நான் கொஞ்சம் தண்ணீர் குடிச்சிட்டு வந்துடறேன்...

டாக்டர்:- சரி போங்க போங்க....

பேஷண்ட்: வெளியே வந்ததும் இருவரை விசாரிக்கின்றார்...அவர்கள் சொன்ன பதில் நீங்க வந்தது சரியான ஆஸ்ப்பிட்டல் தான் ஆனா நீங்க பார்த்தது ஒரு மனநோயாளிகள் பிரிவில இருந்து தப்பிச்சிட்டு வேற ஒரு பிரிவிற்கு ஓடி வந்துட்ட மன நிலை பாதிக்கப்பட்ட "சாமியாடி "..தான்...நல்ல வேளை நீங்க தப்பிச்சிட்டீங்க என்றதுமே பேஷண்ட் தலை தெறிக்க ஓடுகின்றார்....

  • 431
  • 425
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சவாலான சில சூழலை எதிர்கொள்ள வேண்டிவரும். வீடு மாற்றம் சிந்தனை கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்குகான அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகம் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

ரிஷபம்

வீடு மாற்ற எண்ணங்கள் அதிகரிக்கும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பயணங்கள் மூலம் புது விதமான அனுபவம் உண்டாகும். கால்நடைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களால் மாற்றமான தருணங்கள் உருவாகும். சக ஊழியர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். மகிழ்ச்சி பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மிதுனம்

திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகள் இடத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கடகம்

குடும்பத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்களால் பொறுப்புக்கள் மேம்படும். நண்பர்களின் வருகை உண்டாகும். வியாபார முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையில் மேன்மை அடைவீர்கள். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

 

சிம்மம்

சமூக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். செயல்பாடுகளில் இருந்து மந்த தன்மை குறையும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். சமூக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். மேன்மை பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

கன்னி

குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

 

துலாம்

சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இனம் புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் வழியில் மதிப்புகள் ஏற்படும். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

தனுசு

செயல்களில் இருந்த தடைகள் விலகும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மகரம்

குடும்பத்துடன் நேரங்களில் செலவழித்து மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மதிப்பளித்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

கும்பம்

எதிர்பாராத சில பணிகள் முடியும். தாய் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வரவுகளால் கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் மேன்மையை உருவாக்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிற்ப பணிகளில் திறமைகள் வெளிப்படும். துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பாராட்டு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

மீனம்

பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். செல்வ சேர்க்கை குறித்த எண்ணங்கள் உண்டாகும். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சிறு மற்றும் குறு தொழில் குறித்த எண்ணங்கள் மேம்படும். ஆர்வம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 436
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை 4.12.2025.

இன்று காலை 07.54 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று மாலை 03.08 வரை கிருத்திகை . பின்னர் ரோகிணி.

இன்று பிற்பகல் 01.03 வரை சிவம். பின்னர் சித்தம்.

இன்று காலை 07.54 வரை வணிசை. பின்னர் மாலை 05.55 வரை பத்தரை. பிறகு பவம்.

இன்று காலை 06.15 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=346&dpx=2&t=1764842800

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 442
  • 438
·
Added a post

•சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு

மிஞ்சிய தெய்வமில்லை.

•வயலூர் இருக்க அயலூர் தேவையா?

•காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.

•அப்பனைப் பாடிய வாயால் – ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?

•முருகனுக்கு மிஞ்சிய தெவமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம்

இல்லை.

•சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால்

அகப்பையில் வரும்)

•கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.

•கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்

•பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?

•சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.

•செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?

•திருத்தணி முருகன் வழித்துணை வருவான்

•வேலனுக்கு ஆனை சாட்சி.

•வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.

•செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.

•வேலை வணங்குவதே வேலை.

  • 448
·
Added article

சூப்பர் ஸ்டார் ரஜினி​காந்த் நடிக்​கும் ‘ஜெ​யிலர் 2’ படத்தை நெல்​சன் திலீப்​கு​மார் இயக்கி வரு​கிறார். இதில் எஸ்​.ஜே.சூர்​யா, சுராஜ் வெஞ்​சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி​பாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடிக்​கின்​றனர். மோகன்​லால், சிவ ராஜ்கு​மார் கவுரவ வேடத்​தில் நடிக்கின்​றனர்.

அனிருத் இசை அமைக்​கும் இந்​தப் படம் அடுத்த வருடம் வெளியாக இருக்​கிறது. இந்​நிலை​யில் இதில் இந்தி நடிக​ரான ஷாருக்​கானும் நடிக்க இருப்​ப​தாகத் தகவல் வந்துள்​ளது. ‘கூலி’ படத்​தில் நடிக்க ஷாருக்​கானிடம் கேட்​ட​தாக​வும் பல்​வேறு காரணங்​களால் அவர் நடிக்​க​வில்லை என்​றும் கூறப்​படு​கிறது.

அதனால் ஆமிர்​கான் கவுரவ வேடத்​தில் நடித்​திருந்​தார். இப்போது ஜெயிலர்-2 படத்தில், ஷாருக்​கான் நடிப்​பார் என்​றும் அவர் தொடர்பான காட்​சிகள் மார்ச்சில் படமாகும் என்​றும் தகவல்​கள் வெளி​யாகி​ உள்​ளன.

  • 636
·
Added article

நடிகர் அஜித்​கு​மார், ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் மீண்​டும் நடிக்​கிறார். இதற்​கான அதி​காரப்​பூர்வ அறி​விப்பு இம்​மாத இறுதி அல்​லது அடுத்த மாதம் வெளி​யாக இருக்​கிறது.

தீவிர கார் ​பந்தய வீர​ரான அஜித், ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணி​யை​யும் சொந்​த​மாக வைத்​திருக்​கிறார். இந்த அணி, துபாய், பெல்​ஜி​யம், இத்​தாலி போன்ற நாடு​களில் நடை​பெற்ற கார் பந்​த​யங்​களில் கலந்து கொண்டு பரிசுகளை​யும் வென்​றது.

அடுத்து மலேசி​யா​வில் நடக்​கும் 24 ஹெச் கார் பந்​த​யத்​தில் பங்கேற்​கிறது. இதற்​காக அவர் மலேசியா சென்​றுள்​ளார். இந்நிலையில் அங்​குள்ள பத்து மலை முரு​கன் கோயிலில் அவர் நேற்று சுவாமி தரிசனம் செய்​தார். இந்த கோயி​லில்​தான் அவர் நடித்த ‘பில்​லா’ படத்​தில் வரும், ‘சேவல் கொடி பறக்​குத​டா’ பாடல் காட்​சி படமாக்​கப்​பட்​டது. அஜித் பத்​து​மலை முரு​கன் கோயி​லில் சுவாமி கும்​பிடும் புகைப்படங்​கள் சமூக வலை​தளங்​களில் பரவி வரு​கின்​றன.

  • 640
·
Added a news

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம் ஒன்றை மூட கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்ததைத் தொடர்ந்து அந்நிறுவன உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.

இந்நிலையில், அந்த உணவகத்தை கனேடிய நிறுவனம் ஒன்று வாங்கி விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

லண்டனிலுள்ள Regent Street என்னும் பிரபலமான தெருவில் அமைந்துள்ள Victory House என்னும் கட்டிடத்தில் வீராஸ்வாமி உணவகம் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது.

சுமார் 100 ஆண்டுகளாக லண்டனின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன வீராஸ்வாமி உணவகம் அமைந்துள்ள கட்டிடத்தை அலுவலகமாக மாற்ற அதன் உரிமையாளரான Crown Estate என்னும் அமைப்பு முடிவு செய்துள்ளது.

உணவகத்துக்கு Crown Estate மாற்று இடம் தருவதாக கூறியுள்ளது என்றாலும், பாரம்பரியத்தை எப்படி இடம் மாற்ற முடியும் என பிரபல பிரித்தானிய ஹொட்டல் துறை நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆக, இந்த விடயம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், Fairfax Financial Holdings Limited என்னும் கனேடிய நிறுவனம் அந்த உணவகத்தை வாங்கி விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

உண்மையில், வீராஸ்வாமி உணவகம், சட்னி மேரி, அமயா என்னும் மூன்று உணவகங்களும் MW Eat Ltd என்னும் நிறுவனத்துக்கு சொந்தமானவை. MW Eat Ltd நிறுவனத்தை நிறுவியவர்கள் நமிதா பஞ்சாபி மற்றும் ரஞ்சித் மத்ரானி என்னும் இந்திய வம்சாவளி தம்பதியர்.

  • 655
  • 691
  • 693
  • 693