·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1356
  • More

Goose on lakeside

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உருவாகும். பழகும் தன்மையில் மாற்றங்கள் காணப்படும். புதிய முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். செயல்பாடுகளில் இருந்த எதிர்ப்புகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

ரிஷபம்

பயணம் தொடர்பான செயல்களில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மனை வாங்குதல் மற்றும் விற்றல் பணிகளில் மேன்மை ஏற்படும். பணி புரியும் இடத்தில் நன்மைகள் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மதிப்புகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தனவரவு தாராளமாக இருக்கும். வாகனங்களால் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நிர்வாக துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த தயக்கங்கள் குறையும். லாபம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்

வியாபாரத்தில் சாதகமான சூழல்கள் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கால்நடை செயல்களில் சிந்தித்து செயல்படவும். வீடு மாற்ற சிந்தனைகள் மேம்படும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் குறையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

சிம்மம்

குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

குடும்பத்தில் புதிய நபர்களினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். அரசு சார்ந்த நிலைபாடுகளை புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். வியாபார பணிகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

துலாம்

மனதில் ஒரு விதமான குழப்பமும் அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உருவாகும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

விருச்சிகம்

காது தொடர்பான இன்னல்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ரகசியமான சில முதலீடுகள் மேம்படும். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் நயமான பேச்சுக்களால் நன்மைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

தனுசு

வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மகரம்

நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரம் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கும்பம்

செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய துறை சார்ந்த தேடல்கள் ஏற்படும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். மாமியார் உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். சமூகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மீனம்

எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். திட்டமிட்ட சில காரியங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

  • 9
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3.4.2026.

இன்று காலை 08.51 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று இரவு 07.25 வரை சித்திரை. பின்னர் சுவாதி.

இன்று பிற்பகல் 02.06 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.

இன்று காலை 08.51 வரை கௌலவம். பின்னர் இரவு 09.30 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=472&dpx=2&t=1775187744

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 28
·
Added article
  • நடிகை நதியா அக்டோபர் 24, 1966-இல் பிறந்தார்.
  • நடிகை நதியாவின் இயற்பெயர் ஜெரினா மொய்டு.
  • இவர் முதல் முதலாக 1984 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான நோக்கேத தூரத்து கண்ணும் நாடு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதையும் வென்றிருக்கிறார்.
  • 1985-ல் தமிழில் பூவே பூச்சூடவா திரைப்படம் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானார்.
  • 80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
  • பிரபு, சத்யராஜ், ரஜினி, விஜயகாந்த், சுரேஷ், மோகன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
  • இவரது ஸ்டைலான தோற்றமும், தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களும் இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
  • திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறியா நடிகை நதியா, பல வருடம் கழித்து 2004-ம் ஆண்டு ஜெயம் ரவியின் கியூட் அம்மாவாக எம்.குமரன் சன் ஆஃப் மஹாலக்ஷ்மி படத்தின் மூலம் ஸ்ட்ராங் ரீ என்ட்ரி கம்பேக் கொடுத்தார்.
  • 80ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது 2கே கிட்ஸ்களும் ரசிக்கும் நடிகையாக இருந்து வருகிறார்.
  • நடிகை நதியா 1988 இல் ஷிரிஷ் காட்போல் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
  • நடிகை நதியாவிற்கு சனம் மற்றும் ஜனா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
  • திருமணத்திற்கு பிறகு தனது கணவர் மற்றும் மகள்களுடன் அமெரிக்காவில் வசித்து வந்த நடிகை நதியா 2008 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி வந்தார். தற்போது இவர் மும்பையில் வசித்து வருகிறார்.
  • 29

Good Morning...

  • 22
·
Added a post

ஒரு காட்டில் சிங்கமும், காக்கையும் நண்பர்களாயிருந்தனர். ஒருநாள், அவை இரண்டிற்கும் உணவு கிடைக்காததால் மிகுந்த பசியால் வாடின. அதனால், அவை கடவுளிடம், 'தங்கள் பசியைப் போக்கியருள வேண்டும்...' என்று வேண்டிக் கொண்டன.

அவைகளின் வேண்டுகோளுக்கு கடவுளும் செவி சாய்த்தார். சிறிது நேரத்திற்கு பின், சிங்கத்தின் கண்ணில் ஒரு யானை தென்பட்டது. உடனே பாய்ந்து அதைக் கொன்று தின்றது,சிங்கம்.

அதேநேரம் காக்கைக்கு ஒரு எலி கிடைத்தது.

பின்னர், காக்கையிடம், 'உன்னைவிட நானே அதிர்ஷ்டசாலி. எப்படியென்றால் எனக்கு மிகப்பெரிய உணவைக் கொடுத்த கடவுள், உனக்கோ அற்பமான ஒரு சிறு உணவை கொடுத்து விட்டார்...' என்று ஏளனம் செய்தது, சிங்கம்.

அதற்கு, 'சிங்கமே, உண்மை புரியாமல் உளறாதே. கடவுளிடம் பாரபட்சத்தைப் பார்க்கக் கூடாது. அவர், உன் பசி தீர ஒரு யானையைக் கொடுத்தார். என் பசி தீர ஒரு எலியைக் கொடுத்தார். நம்மில் யாருக்கு பெரிய உணவை கொடுத்தார் என்பது முக்கியமல்ல. நம் இருவரின் பசி தீர்ந்ததா என்பதே முக்கியம்...'.

'ஒருவேளை கடவுள் உனக்கு கொடுத்ததுபோல், எனக்கும் யானையை கொடுத்திருந்தால் அதை என்னால் கொல்ல முடியுமா? கொன்றாலும் அதை முழுவதுமாக என்னால் உண்ண முடியுமா?

அல்லது என்னைப்போல் உனக்கு எலியைக் கொடுத்திருந்தால், அதை என்னைப்போல் பிடிக்க முடியுமா? பிடித்து தின்றாலும் உன்னுடைய பசி அடங்கியிருக்குமா?' என்று அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டது, காக்கை.

பதில் ஏதும் பேச முடியாமல், மவுனமாய் நின்றுக் கொண்டிருந்தது, சிங்கம்.

கடவுள் எல்லா உயிரினங்களுக்கும் ஒரே மாதிரியான உணவை அளிப்பதில்லை. ஒவ்வொரு உயிரினத்தின் உடலுக்கும், தகுதிக்கும் ஏற்றவாறே உணவை அளிக்கிறார்.

அதேபோல வசதி படைத்தவர்கள் கடவுளுக்காக ஆடம்பரமான வகையில் தான, தர்மங்களும் பூஜைகளும் செய்வர். அதைப் பார்த்து தங்களால் இந்த மாதிரி செய்ய முடியவில்லையே என்று ஏழைகள் வருத்தப்படக் கூடாது. அவரவர் தகுதிக்கேற்ற அளவுக்கு, கடவுளுக்கு அர்ப்பணம் செய்து வழிபடலாம்.

துாய பக்தியுடன் பயனை எதிர்பார்க்காமல் செய்யப்படும் அர்ப்பணங்களை கடவுள் பாகுபாடின்றி நிச்சயமாக ஏற்றுக் கொண்டு அருள் புரிகிறார்.

  • 132
·
Added a post

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார்.

என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள்.

அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.

ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசித்தார்.

பீர்பாலை பார்த்தார்.

பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்.

மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.

கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன்.

அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.

பயம் ஒரு பெரிய நோய் என்றார்.

நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

  • 143
·
Added a post

ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். தினமும் யாராவது ஒருவருக்கு ஏதாவது கொடுக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. அப்படி ஒரு பழக்கம். அதுமட்டுமல்ல அவர் கொடுப்பது அடுத்தவர்களுக்கு தெரியாது. அவ்வளவு ரகசியமாக கொடுப்பார்.

ஒரு நாள் இரவு அவர் ஏற்கனவே தயாராக கட்டி வைத்திருந்த பண முடிப்பை கையில் எடுத்துக் கொண்டார். வீட்டை விட்டு வெளியில் வந்தார். தெருவில் இறங்கி நடந்தார். இன்றைக்கு யாருக்கு தர்மம் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருட்டில் நடந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஒருவர் வருவது போல் இருந்தது. உடனே அவரிடம் போனார் . தன்னிடமிருந்த பண முடிப்பை அவசரம் அவசரமாக அவர் கையில் திணித்து விட்டு திரும்பி வந்துவிட்டார்.

அப்பாடா ஒரு வழியாக தருமம் செய்தாகி விட்டது என்கின்ற மகிழ்ச்சி.. மனநிறைவு அவர் முகத்தில்.. நிம்மதியாக தூங்கி எழும்பினார்.

மறுநாள் காலையில் ஊர் பூராவும் ஒரே பேச்சு . நேத்து ராத்திரி ஒரு திருடன் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் விட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இதை கேள்விப்பட்டதும் பெரியவருக்கு வருத்தமாகிவிட்டது. போயும் போயும் ஒரு திருடனுக்கு உதவி செய்தோம் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்தார்.

சரி இன்றைக்கு யாருக்காவது உதவி செய்வோம் என்று முடிவு பண்ணினார். எதிரில் ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. உடனே அந்தப் பெண்ணிடம் பணத்தை கொடுத்துவிட்டு போனார். மறுநாள் காலையில் ஊர் பூராவும் நேத்து ராத்திரி விபச்சார பெண்ணின் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் என்று பேச்சு. அடடா இன்றைக்கும் தவறு நடந்து விட்டது என்று வருத்தப்பட்டார். இருக்கட்டும் இன்றைக்கும் ஏதாவது தர்மம் செய்வோம் என்று நினைத்தார்.

மூன்றாம் நாள் இரவும் புறப்பட்டார். அப்போதும் எதிரில் ஒருவர் வந்தார். இவர் பணத்தை கொடுத்தார். மறுநாள் மக்கள் இரவு ஒரு செல்வந்தர் கையில் யாரோ பணத்தை கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

தினம் தினம் இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டு படுத்து தூங்கினார். அன்று இரவு ஒரு கனவு. அந்த கனவில் இறைவன் வந்தார். நீ கொடுத்த தர்மம் வீணாகப் போய்விடவில்லை. உன்னிடம் பணம் வாங்கிய அந்த திருடன் தவறை உணர்ந்து திருந்தி விட்டான். அந்தப் பெண்ணும் தெளிந்து திருந்திவிட்டாள். அந்த செல்வந்தனும் கொடையாளி ஆகிவிட்டான் என்று கடவுள் சொன்னார். அதாவது நல்ல மனதுடன் தர்மம் செய்தால் அது ஒருபோதும் வீணாகப் போய் விடாது. அது மட்டுமல்லாமல் தருமம் தன்னை மட்டுமல்ல அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்று சக்தி வாய்ந்தது.

  • 143
·
Added a post
  • எளிமையான உணவுகளில்கூட நல்ல ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்தலாம். அப்படிப்பட்ட எளிய உணவுகளில் ஒன்றுதான் அவித்த வேர்க்கடலை.
  • நிலக்கடலையில் உள்ள குறைந்த கிளைஸ்மிக் இன்டெக்ஸ் உடலின் இரத்த சர்க்கரை அளவை சரியாக வைக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது தவிர்க்கப்படுகிறது.
  • வறுத்த நிலக்கடலையை விட வேகவைத்த நிலக்கடலையில் சத்துக்கள் அதிகம் என கூறப்படுகிறது.
  • வேகவைத்த நிலக்கடலையில் புரதம், வைட்டமின்கள், மினரல்கள் அதிகம் உள்ளன. இது உண்பதற்கு மிகுந்த சுவையாக இருப்பதோடு, சத்துக்களையும் அள்ளித் தருகிறது.
  • நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • வேகவைத்த நிலக்கடலையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. மகாத்மா காந்தி தினமும் அவித்த வேர்க்கடலை ஒரு கைப்பிடியும் ஆட்டுப்பாலும்தான் முக்கிய உணவாக எடுத்துக்கொண்டார்.
  • தினமும் 40 கிலோ மீட்டர் தொலைவு நடக்கும் வலிமையை அது அவருக்குத் தந்தது என்று சத்திய சோதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 142
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.

ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதியுண்டு. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

மிதுனம்: முன்கோபத்தை குறைப்பது நன்மை தரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். ஓரளவு லாபம் பார்ப்பீர்.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகரீதியாக இருந்த பிரச்சினைகள் தீரும். சக ஊழியர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

சிம்மம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். முன் கோபம் விலகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்கள் கிடைப்பர்.

கன்னி: பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சொந்த ஊர் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். திட்டமிட்ட பணியை முடிக்க போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

துலாம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழல், தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள். தெய்வீக ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் அதிக லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். கையில் பணம் புரளும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

தனுசு: அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். முன்கோபத்தை குறைப்பீர். அரசால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் செல்வீர். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும்.

மகரம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மனவலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மதிப்பு உயரும்.

மீனம்: திட்டமிட்ட பணிகளை முடிக்க போராடுவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகரீதியான பயணம் அலைச்சல் தரும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை தாமதப்படுத்துவது நல்லது.

  • 229
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 19 ஆம் தேதி வியாழக்கிழமை 2.4.2026.

இன்று காலை 07.57 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.

இன்று மாலை 05.46 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.

இன்று பிற்பகல் 02.24 வரை துருவம். பின்னர் வியாகாதம்.

இன்று காலை 07.57 வரை பவம். பின்னர் இரவு 08.24 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று காலை 06.10 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=471&dpx=2&t=1775101655

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 230
  • 222
  • 221
  • 224

Good Morning...

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 224
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். அலுவலகரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

ரிஷபம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பார்கள். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும்.

கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக டென்ஷன் இருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டிவரும்.

துலாம்: முரண்டு பிடித்த பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பர். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். பேச்சில் தெளிவு பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு. அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடாதீர்கள்.

விருச்சிகம்: எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது.

தனுசு: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிம்மதி தரும். பூர்வீக நிலம், வீடு தொடர்பான வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

மகரம்: அணுகுமுறையை மாற்றி தடைபட்ட பணியை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். புதிய பங்குதாரர் அறிவுரை வழங்குவார். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.

கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வாகனத்தில் நிதானம் தேவை. அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிட்டும். தந்தைவழி உறவினர்களை சந்தித்து மகிழ்வீர். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கிக் கடனை பைசல் செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கிட்டும்.

  • 391

மகிழ்ச்சி என்பது மனதோடு

தொடர்புடையது மட்டும் அல்ல...

நம்மைச் சுற்றி இருக்கும்

மனிதர்களோடும் தொடர்புடையது...!!

வாழ்த்துகள்..!!

  • 404
  • 405
  • 407
·
Added a post

1-4-2026

ஏப்ரல் முட்டாள்கள் நாள் ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வரலாறு இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார்.

இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. எனினும் இந்தப் “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்த புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

  • 417
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 18 ஆம் தேதி புதன்கிழமை 1.4.2026.

இன்று காலை 07.37 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று மாலை 04.37 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

இன்று மாலை 03.06 வரை விருத்தி. பின்னர் துருவம்.

இன்று காலை 07.37 வரை வனிசை. பின்னர் இரவு 07.47 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று மாலை 04.37 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=470&dpx=2&t=1775013778

நல்ல நேரம்:

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 416
  • 411
  • 409

Good Morning....

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற இறைவனை வேண்டுவோம்.

  • 410
  • 486