Goose on lakeside
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயம் பணிகளில் மேன்மை உண்டாகும். திட்டமிட்ட செயல்களில் சாதகமான சூழல் அமையும். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகளும் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிதுனம்
மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். வெளியூர் பணிகளில் இருந்து வந்த தடைகள் குறையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களிடம் கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். பணி புரியும் இடத்தில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படவும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
சிம்மம்
திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கன்னி
கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் முதலீடுகளில் கவனம் வேண்டும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் அமையும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
தாய் வழி உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கிய சிந்தனைகள் மேம்படும். பங்குதாரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
விருச்சிகம்
உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
எதிர்காலம் தொடர்பான நிலையான சிந்தனைகள் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். பணிகளில் இருந்து வந்த சாதகமற்ற சூழல்கள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகரம்
குண நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தோற்றப்பொழிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும். பயம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கும்பம்
உலக நிகழ்வுகள் மூலம் மாற்றம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உறவினர்களுடன் சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். தவறிப் போன சில பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். மனதளவில் பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மீனம்
மனதளவில் புதிய தேடல்கள் பிறக்கும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். அரசு பணியில் இருந்த இழுபறிகள் விலகும். சக ஊழியர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை 11.4.2026
திதி
கிருஷ்ண பக்ஷ நவமி - Apr 10 11:15 PM – Apr 12 12:37 AM
கிருஷ்ண பக்ஷ தசமி - Apr 12 12:37 AM – Apr 13 01:17 AM
நட்சத்திரம்
உத்திராடம் - Apr 10 11:27 AM – Apr 11 01:39 PM
திருவோணம் - Apr 11 01:39 PM – Apr 12 03:14 PM
கரணம்
சைதுளை - Apr 10 11:16 PM – Apr 11 12:01 PM
கரசை - Apr 11 12:01 PM – Apr 12 12:38 AM
வனசை - Apr 12 12:38 AM – Apr 12 01:03 PM
யோகம்
ஸித்தம் - Apr 10 06:30 PM – Apr 11 06:38 PM
ஸாத்தியம் - Apr 11 06:38 PM – Apr 12 06:15 PM
நல்ல நேரம்:
அபிஜித் காலம் - 11:56 AM – 12:45 PM
அமிர்த காலம் - 06:38 AM – 08:23 AM, 04:08 AM – 05:51 AM
பிரம்மா முகூர்த்தம் - 04:39 AM – 05:27 AM
பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ‘துரந்தர் 2’. இத்திரைப்படம் கடந்த மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என
மதுரையைச் சேர்ந்த டி. ராகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில், இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
தேர்தலுக்கு பின் துரந்தர் 2 திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மதாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், தமிழகத்திலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு கொள்கைகளை இப்படம் பாராட்டும் வகையில் உள்ளதால் இத்திரைப்படத்தின் திரையிட்டிருப்பது, நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று வாதிட்டிப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், திரைப்படத்தின் எந்தப் பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன என்பதைக் குறிப்பிடவில்லை என தெரிவித்தனர்.
மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கிய சான்றிதழை மனுதாரர் எதிர்க்கவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
கனடாவின் மாண்ட்ரியலில் உள்ள பெண் நோயாளிகளிடம் மருத்துவ ஒழுக்கவிதிகளை மீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மகப்பேறு மருத்துவர் ராபர்டோ பெர்னாண்டஸ் என்பவருக்கு மூன்று மாத கால பணி இடைநீக்கம் விதித்து கியூபெக் மருத்துவர் சங்கம் (Quebec’s College of Physicians) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட 80 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அறிக்கையில், டாக்டர் பெர்னாண்டஸ் தனது நோயாளிகளைத் தொடர்ச்சியாக அவமதித்ததாகவும், அவர்களின் வலியைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் எட்டுப் பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த சாட்சியத்தில், கருப்பையக சாதனத்தை (IUD) மாற்றச் சென்றபோது, மருத்துவர் எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி மிகவும் கொடூரமான முறையில் நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
"வலி தாங்க முடியாமல் நான் அலறியபோதும், கத்துவதில் பயனில்லை என்று கூறி அவர் தனது பணியைத் தொடர்ந்தார்; சிகிச்சைக்குப் பின் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து சென்றார்" என்று அந்தப் பெண் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த சிகிச்சைக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்குக் கடுமையான கருப்பைத் தொற்று ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மற்றொரு நோயாளி, மருத்துவர் தன்னிடம் மிகவும் ஆக்ரோஷமான தொனியில் பேசியதாகவும், இது போன்ற சிறிய பிரச்சனைகளுக்கு தன்னிடம் வராமல் பொது மருத்துவரைப் பார்க்குமாறு கூறி அவமதித்ததாகவும் புகாரளித்துள்ளார்.
டாக்டர் பெர்னாண்டஸ் மீண்டும் இது போன்ற தவறுகளைச் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை வாரியம் கருதினாலும், அவர் இடைநீக்க காலத்திற்குப் பிறகு மீண்டும் பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. எனினும், அவர் நோயாளிகளிடம் மென்மையாக நடந்துகொள்ளவும், தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தவும் இந்த மாதம் முதல் ஆறு மாத கால சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்கு் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான்.
எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும் பழிக்குப் பழி வாங்க நினைக்காமலும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
அசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள்.
தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.
ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு, அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியாரிடம் விவரம் சொல்ல வந்த அனுமன், பிராட்டியை வணங்கி, ”தாயே, ஶ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்” என்று கூறினார்.
அனுமன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த சீதை, ”அனுமனே, நான் முன்பொரு முறை உயிர் துறக்க நினைத்த நேரத்தில், நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போதும் ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்குத் தெரிவித்தாய். ஏற்கெனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தைத் தந்துவிட்டேன். முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார்.
அதற்கு அனுமன், ”தாயே, எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்றேதான். கடந்த பல மாதங்களாக உங்களைப் பாடாகப் படுத்திய இந்த அரக்கிகளை, நான் தீயில் இட்டுக் கொளுத்தவேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்கவேண்டும்” என்று அனுமன் கேட்டுக்கொண்டார்.
ஆனால், அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனைப் பார்த்து, ”அனுமனே, நீ நினைப்பதுபோல் இந்த அரக்கியர் என்னைத் துன்புறுத்தி இருந்தாலும், அதற்காக இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்கு காரணம், நான் முன்பு செய்த செயலின் விளைவுதான்.
பொன்மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு, அதைப் பிடித்து வர என் கணவரை அனுப்பியதும், சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும், ‘லட்சுமணா, லட்சுமணா’ என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை அனுப்பிப் பார்க்கச் சொன்னேன்.
அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று மறுத்துக் கூறியும், நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்துப் பேசினேன்.
ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களைக் கண்ணிமைபோல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியதுதான், இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்குக் காரணம்.
எனவே, நீ அரக்கியர்களை ஒன்றும் செய்துவிடாதே. அவர்கள் அரக்கியர்கள் என்றாலும் பெண்கள். அவர்களுக்குத் தீங்கு செய்து நீ பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ளாதே” என்று கூறினார். அனுமன் உண்மையைப் புரிந்துகொண்டார்.
நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.
இதைத்தான் மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது. சிறுவயதில் அவர் தும்பியின் வாலில் கூரிய முனை கொண்ட தர்ப்பைப் புல்லைச் செருகியதால், பிற்காலத்தில் மன்னன் ஒருவனால் கழுவில் ஏற்றப்பட்டார்.
மகரிஷியான தனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டது என்று ஆணிமாண்டவ்யர் தர்மதேவதையிடம் கேட்டபோது, சிறுவயதில் அவர் தும்பியைத் துன்புறுத்தியதுதான் காரணம் என்று கூறியது.
இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை, ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கின்னா தாமே வரும்’ என்று நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
நாம் சிலரைச் சந்தித்த சில நிமிடங்களிலேயே அவர்களைப் பிடித்துவிடும். ஆனால், சிலரிடம் எவ்வளவு நேரம் பேசினாலும் ஒரு ஒட்டுதல் இருக்காது. ஏன் இப்படி நடக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா?
உளவியலின்படி, மக்கள் தங்களைப் போலவே இருக்கும் நபர்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். இந்த உளவியல் உண்மையை அடிப்படையாகக் வைத்து, எதிரில் இருப்பவரை நமக்குத் தெரியாமலேயே ஈர்க்கும் ஒரு அற்புதமான கலையைத்தான் 'மிரரிங்' (Mirroring) என்று உளவியலாளர்கள் சொல்கின்றனர்.
அது என்னது 'மிரரிங்'?
பெயரிலேயே இதற்கான அர்த்தம் இருக்கிறது. 'கண்ணாடி' (Mirror) எப்படி நம் பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்கிறதோ, அதேபோல் நாமும் எதிரில் இருப்பவரின் செய்கைகளை, பேச்சுவழக்கை, உடல்மொழியைப் பிரதிபலிப்பதுதான் மிரரிங். இரண்டு நெருங்கிய நண்பர்கள் அல்லது காதலர்களைக் கவனித்துப் பாருங்கள்.
அவர்கள் அறியாமலேயே ஒரே மாதிரியாக உட்கார்ந்திருப்பார்கள், ஒரே நேரத்தில் கையை அசைப்பார்கள், ஒரே மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். இதை நாம் செயற்கையாக, செய்வதன் மூலம் அறிமுகமில்லாத ஒருவரைக் கூட நம் நண்பராக்க முடியும்.
உடல்மொழியில் மிரரிங்!
ஒருவர் உங்களிடம் பேசும்போது காலின் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்களும் அதேபோல உட்காரும்போது, அவர் ஆழ்மனதில் "இவன் என்னைப் போலவே இருக்கிறான், இவன் பாதுகாப்பானவன்" என்ற எண்ணம் உருவாகிறது.
அதேபோல் அவர்கள் முன்னோக்கிச் சாய்ந்து பேசினால், நீங்களும் சாயலாம். அவர்கள் கைகளை அசைத்துப் பேசினால், நீங்களும் பேசும்போது அதே பாணியைக் கடைப்பிடிக்கலாம். இது ஒரு மிகச் சிறந்த பிணைப்பை உருவாக்கும்.
குரல் மற்றும் வார்த்தைகள்!
உடல்மொழி மட்டுமல்ல, குரலையும் மிரரிங் செய்யலாம். எதிரில் இருப்பவர் மெதுவாக, நிதானமாகப் பேசுகிறவர் என்றால், நீங்கள் மட்டும் படபடவெனப் பேசினால் அவருக்குப் பிடிக்காது. நீங்களும் உங்கள் வேகத்தைக் குறைத்துப் பேச வேண்டும்.
அவர்கள் உற்சாகமாகப் பேசினால், நீங்களும் அந்த உற்சாகத்தைக் காட்ட வேண்டும். மேலும், அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சில வார்த்தைகளைக் கவனித்து, அதே வார்த்தைகளை நீங்களும் உங்கள் பேச்சில் பயன்படுத்தும்போது, அவர்கள் உங்களை தங்களில் ஒருவராக உணர ஆரம்பிப்பார்கள்.
எச்சரிக்கை!
இந்த வித்தையில் மிக முக்கியமான விஷயம் 'நேர்த்தியாக' செய்வது. அவர் மூக்கைத்தொட்டால், உடனே நீங்களும் மூக்கைத்தொட்டால் அது அவரைக் கிண்டல் செய்வது போலாகிவிடும். அவர் ஒரு செயலைச் செய்த சில வினாடிகள் கழித்து அல்லது மெதுவாக நீங்களும் அதைச் செய்யவேண்டும்.
இது இயற்கையாக நடக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடித்துவிட்டால், அது மிகப்பெரிய எதிர்மறை விளைவை ஏற்படுத்திவிடும். எனவே, இதை ஒரு கலையாகப் பயிலவேண்டும்.
எதிரில் இருப்பவரின் உடல்மொழி மற்றும் பேச்சுக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளும்போது, உலகம் உங்களை ரசிக்கத் தொடங்கும். உங்களைப் போலவே இருக்கும் ஒருவரை உங்களுக்குப் பிடிக்காமல் போகாது என்பதுதான் இதன் அடிப்படை உளவியல்.
முடியவே முடியாது. இவனெல்லாம் நிச்சயமாக சினிமாவுக்கு வர வாய்ப்பே இல்லை."
ஒரு சிறுவனின் ஜாதகத்தை பார்த்து விட்டு, ஒரு ஜோதிடர் கணித்த கணிப்பு இது. "நான் சொல்வதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இவன் ஜாதகப்படி, திரை உலகத்துக்கும் இவனுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது."
இப்படி அந்த ஜோதிடர் சொன்னதைக் கேட்டு, அந்த சிறுவனின் தாய் கவலை அடைந்தார். ஏனென்றால் சினிமாவுக்கு போய் ஜெயித்துக் காட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்று அடம் பிடித்தான் அவருடைய மகன்.
ஜோதிடர் சொன்ன எதிர்மறையான கருத்தைக் கேட்டு அந்தப் பையன் வருத்தம் கொள்ளவில்லை; வைராக்கியம் கொண்டான்.
அந்த ஜோதிடரின் இடத்தில் வைத்தே அவரிடம் சவால் விட்டான்.
"ஜோதிடர் அய்யா, நல்லா கேட்டுக்கோங்க. உங்கள் ஜோதிடத்தை நான் பொய்யாக்கிக் காட்டுகிறேன். சினிமாவில் நிச்சயமாக ஜெயித்து காட்டுகிறேன். உங்கள் கணிப்பு தப்பு என்பதை கட்டாயம் நிரூபிப்பேன்."
புறப்பட்டுப் போனான். போராடினான்.
புதிய புதிய முயற்சிகள் செய்தான்.
ஜோதிடரிடம் சவால் விட்டுச் சொன்னதை வெகு சீக்கிரத்திலேயே நிறைவேற்றிக் காட்டினான்.
அந்தச் சிறுவன்தான் பின்னாளில் பின்னணி பாடல்களில் தனி முத்திரை பதித்த பி.பி. ஸ்ரீனிவாஸ். டிஎம்எஸ் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்த காலத்திலேயே, தனக்கென்று ஒரு தனிக்கொடியை பறக்க விட்ட தனித்துவமான பாடகர்.
எத்தனை எத்தனை இனிய பாடல்கள் !
காலங்களில் அவள் வசந்தம்...
மயக்கமா கலக்கமா...
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...
ரோஜா மலரே ராஜகுமாரி...
நிலவே என்னிடம் நெருங்காதே...
'இனிமைக்கு இன்னொரு பெயர் பிபி ஸ்ரீநிவாஸ்' என்று எல்லோரையும் சொல்ல வைத்தார் பி பி ஸ்ரீநிவாஸ்.
சின்ன வயது ஜோதிடர் சம்பவம் பற்றி, பிற்காலத்தில் அவரிடம் கேட்டபோது, "ஜோதிடம் உண்மையோ பொய்யோ, எனக்கு தெரியாது. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.
நாம் உண்ணும் ஒவ்வொரு தானியத்திலும் நம் பெயர் எழுதியிருந்தால்தான் நாம் சாப்பிட முடியும். அது போலத்தான் நான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் ஆண்டவன் என் பெயரை எழுதியிக்கிறான். அதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது" என்று சொன்னார் பிபி ஸ்ரீநிவாஸ்.
அதனால்தான் ஏ எம் ராஜா பாட வேண்டிய 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பி பி ஸ்ரீநிவாஸ் பாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தப் பாடலை பாடிய பிறகு, அவரது புகழ் நினைத்தே பார்க்க முடியாத உயரத்திற்கு சென்றது.
'நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை...'
வெயில் காலத்தில் வரும் தோல் அரிப்பு, படர்தாமரை, தோல் நோய்களுக்கு இயற்கை வைத்தியம்.
மிளகை நெய்யுடன் சேர்த்து நன்கு அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பாக படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வைத்திருந்து காலையில் சீயக்காய் பொடியை தேய்த்து கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் ஏற்படும் படர்தாமரை குறையும்.
🟠 பூவரசங் காய்
பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குறையும்.
🟠 சந்தனம்
சந்தனக்கட்டையை எலும்மிச்சம் பழ சாற்றில் உரைத்து பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்.
🟠 குப்பை மேனி
ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் விடவும். ஒரு பங்கு குப்பை மேனி மற்றும் கீழா நெல்லி சேர்ந்த இலை பசை சேர்க்கவும். சிறுதீயில் வைத்து தைலப்பதத்தில் காய்ச்சவும். ஆற வைத்து எடுத்து வைத்து பூசி வர படர்தாமரை சரியாகும்.
தோலை பற்றி தொல்லை தரும் படர்தாமரைக்கு குப்பை மேனி மருந்தாகிறது. இது பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது.
🟠 கீழாநெல்லி
கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மட்டும் இல்லை.. தோல் நோய்களை போக்கும் தன்மையும் கொண்டது. கீழாநெல்லியை அரைத்து பற்று போட்டால் படர்தாமரை நோய் விலகும்.
🟠 பூண்டு
பூண்டு இந்த படர்தாமரைக்கு மருந்தாக பயன்படுகிறது. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு நசுக்கி வைத்த பூண்டு பற்களை சேர்க்கவும். இதை தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். வடிக்கட்டி படர்தாமரை இருக்கும் இடத்தில் காலை, மாலை வேளையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால் படர்தாமரை சரியாகும்.
🟠 தும்பை இலைகள்
தும்பை இலைகளை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் தும்பை இலை பேஸ்டை எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்துவர படர்தாமரை விரைவில் குணமாக்கும்
பூனை குறுக்கே போனால் அந்த வழியாக ஏன் போகக் கூடாது என்று தெரியுமா?
பூனைகள் குடியிருப்பு பகுதிகளில் வாழும்.மன்னர் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால் இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்குச் சென்றிருப்பார்கள் சிறுவர்கள்,வயதானவர்கள், பெண்கள் மட்டுமே வீட்டில் இருப்பார்கள் ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, வந்த திசையை மாற்றி வேறு திசையில் குதிரைகளில் செல்வார்களாம்.
அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள். இது போன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.
இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..???பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர். தலைவலி, தூக்கமின்மை நீங்கும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
மிதுனம்: இழுபறியில் இருந்த சில பணிகள் முடியும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகரீதியான பயணங்களில் கவனம் தேவை.
கடகம்: பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டு. வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் காண்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். புது வேலை கிட்டும். தந்தையின் உடல் நலம் சீராகும். பால்ய நண்பர்கள் தேடி வருவர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர்.
கன்னி: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல்நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. வியாபாரத்தில் விவாதங்கள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். அலுவலகரீதியான பயணங்கள் திருப்தி தரும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.
துலாம்: முக்கிய பிரமுகர்கள் சிலரை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் மாற்றம் வரக்கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்கள் உதவிகரமாக இருப்பர். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும்.
விருச்சிகம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தால் பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருக்கவும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
தனுசு: உறவினர், நண்பர்களால் செலவு வரக்கூடும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி தங்கும். வாகனத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
மகரம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் பாசமழையில் நனைவீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். கடையை புதிய இடத்துக்கு மாற்றுவீர்.
கும்பம்: திடீரென்று அறிமுகமாகும் சிலரால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரம் சிறக்கும்.
மீனம்: தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் தீரும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்கு விற்றுத் தீரும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 10.4.2026
இன்று இரவு 08.59 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று காலை 09.27 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.
இன்று மாலை 04.26 வரை சிவம். பின்னர் சித்தம்.
இன்று காலை 08.15 வரை பாலவம். பின்னர் இரவு 08.59 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

























