Goose on lakeside
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்:
குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களைக் கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சுணக்கம் காணப்படும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்:
எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவு திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக நீடித்த குழப்பநிலை நீங்கும்.
மிதுனம்:
குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலக பணிகளில் அலட்சியம் வேண்டாம். நிதானமுடன் செயல்படுவது நல்லது.
கடகம்:
மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடித்துக் காட்டுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும்.
சிம்மம்:
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி:
கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பால்ய நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.
துலாம்:
எடுத்த பணியை மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். அரசு அதிகாரிகளுடன் சந்திப்பு நிகழும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்:
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். யாருக்கும் எந்த உத்தரவாதமும் தரவேண்டாம்.
தனுசு:
சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். சகோதரர் வகையில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மகரம்:
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்துசேரும்.
கும்பம்:
சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும். சிலர் அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.
மீனம்:
மன குழப்பங்கள் விலகி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் பேசும்போது நிதானம் அவசியம். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் அலைச்சலை தரும்.
விசுவாவசு வருடம் தை மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 30.1.2026.
இன்று காலை 10.03 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.
இன்று அதிகாலை 04.28 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை
இன்று மாலை 04.26 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.
இன்று காலை 10.03 வரை பாலவம். பின்னர் இரவு 09.02 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று காலை 6:35 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- மஸ்கோத் அல்வா என்றாலே இலங்கைதான். எனினும் தமிழகத்தில் மஸ்கோத் என்றால் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூர்தான் ஞாபகத்துக்கு வரும்.
- திருநெல்வேலிதான் `அல்வா’விற்குப் பெயர்பெற்ற ஊர் எனச் சொன்னாலும், தூத்துக்குடியில் அதற்குப் போட்டியாகத் தயார் செய்யப்படும் ‘முதலூர் மஸ்கோத் அல்வா’வும் பிரபலமானது.
- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள முதலூரைச் சேர்ந்த ஜோசப் என்பவர், தேங்காய்ப்பாலில் தயார் செய்து அறிமுகப்படுத்திய அல்வாதான் `மஸ்கோத் அல்வா.’
- இந்த மஸ்கோத் அல்வா, தற்போது `S J மஸ்கோத் அல்வா’ என்ற பெயரில் விற்பனையாகிறது.
- முதலூர் கிராமத்தில் தயாரிக்கப்படும் 'மஸ்கோத் அல்வா' மிகவும் புகழ்பெற்றது.
- தேங்காய்ப்பால், முந்திரி, மைதா, சர்க்கரை மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படும் இந்த அல்வா, அதன் தனித்துவமான சுவையால் அனைவரையும் ஈர்க்கிறது.
- தேங்காய்ப்பால் கலக்கறதால மஸ்கோத் அல்வாவை ஒரு மாசத்துக்குள்ள சாப்பிட்டுடணும். பிரிட்ஜ்ல வெச்சிருக்கோம்னா நாலு மாசம் வரைக்கும் வெச்சு சாப்பிடலாம்.
- இவ்வூரைச் சேர்ந்தவர்கள் தொலை தூரங்களில் தொழில் புரிந்தாலும் சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் மஸ்கோத் அல்வாவை வாங்க மறப்பது இல்லை
- இங்கு தயாரிக்கப்படும் அல்வா நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை, மும்பை, தில்லி மற்றும் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
- கோதுமையில் தயாரிக்கப்படும் மஸ்கோத் அல்வாவைப் போன்று தற்போது பேரிச்சை அல்வா, முந்திரி அல்வா, நெல் அல்வா என பலதரங்களில் அல்வா தயாரித்து விற்பனையில் உள்ளது.
- பலரக அல்வா இருந்தாலும் மஸ்கோத்துக்குதான் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
துபாய் சென்றுள்ள நடிகர் பார்த்திபன் மருத்துவமனைக்கு தனது பர்ஸ் ஹோட்டலில் மறந்துவிட்டு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு பணம் கட்ட துபாயில் பல செல்வந்தர்களை தொடர்புக்கொண்டும் கைவிரித்துவிட்ட நிலையில் ஓட்டுனராக பணிபுரியும் லால்பேட்டை சார்ந்த A.R தாஜூத்தீன் அவர்கள் தனது பணத்தை கொடுக்க முன்வந்து உதவியுள்ளார்.
அதை நடிகர் பார்த்திபன் அவரது முகநூல் பக்கத்தில் நெகழ்ச்சியாக பதிந்த பதிவு:
Hospital செல்லும் வழியில் credit/debit card உள்ள என் purse-ஐ hotel-லில் வைத்து விட்டு மறதியோடு சென்று விட்டேன்.
Bill 7911.25 Dirhams! which is commonly abbreviated as AED
நம்மூர் Gandhi talks-ல் 1,97,781.25 (approxi)
Purse miss-Hotel
long dis
So,
நண்பர்களிடம் கைமாத்தாகக் கையேந்தும்
அவசர நிலை!
ஊதும் சிகிரெட்டை ஒதுக்கிவிட்டு உதடு பிதுக்கினர் சிலர்,signal கிடைக்கவில்லையென
-ஐ cross செய்தபடி stearing-ஐ திருப்பினர் சிலர்,
அந்தப் பணக்கார்ர்களின் மனதில் ….
கேட்பது ஒரு celebrity கொடுத்துவிட்டு திரும்ப கேட்க முடியாமல் போய் விட்டால்?நியாயம் தானே?
குறுகிய காலத்திற்குள் என் மனம் சற்றே கருகியது
அதை இறுகிய என் முகம் வெளியில் காட்டிக் கொடுத்து விட்டது.
பின்புறமிருந்து ஒரு தன்மையான குரல்” சார் நீங்க தப்பா நினைக்கலைன்னா..” என்றபடி கைநிறைய
அந்நாட்டு currency-ஐ நீட்டினார் ஆச்சர்யத்துடன் பார்த்தேன் “5000 தான் இருக்கு கொஞ்சம் time குடுத்தீங்கன்னா மீதியை புரட்டிகிட்டு வர்றேன்.
“நீங்க என்ன சார் பண்றீங்க”ன்னு கேட்க,
“டிரைவர்”-என்றார் டக்கென உட்புகுந்து மனதில் நின்றார்.பணக்கார்ர்கள் வரூம் ஆனா வராதூ என என்னத்தே கண்ணையாவாக சிந்திக்கும் வேளையில் மொத்த சேமிப்பையே வராவிட்டாலும் பரவாயில்லையென தரத் தயாரானவரின் தரமான இதயத்தை சற்றே உற்று நோக்கியப் பின் பணத்தை அவர் பாக்கெட்டில் வைத்துவிட்டு கரங்களை கண்களில் ஒற்றிக் கொண்டேன். இப்பதிவு அம்மாமனிதரின் மனிதாபிமானத்தை பறைசாற்றவேத் தவிர, மற்றோரை கோடியில் dirham பெற்றோரை குறை சொல்ல அல்ல. கோடிகளில் உள்ளோர் உள்ள நாடுகளில் , மனம் படைத்தோர் மட்டும் பல கோடியில் ஒருவர் இருவரே உளர். உணர்!
அதற்குள் என் மகள் கீர்த்தனாவிடம் கேட்டிருந்த online transaction done successfully !
இடையில் என் மீது சந்தேகப்பட்ட Philippines receptionist-யிடம் அவசரப்பட்டு அடகு வைத்திருந்த என் passport-ஐ மீட்டுக் கொண்டு வந்தேன்.
பணம் போயின் பிணமே அதுவும் மானம் போன பிணமே!
புகைப்படத்தில் அந்த Mr. A R Thajuddeen
Driver by profession but really a great human!
'சீதா ராமம்' படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிருணாள் தாகூர். அந்த படத்திற்குப் பிறகு சில தென்னிந்திய மொழி படங்களில் மட்டுமே நடித்தார்.
தற்போது பாலிவுட்டில் படு பிஸியாக நடித்து வருகிறார். மிருணாள் தாகூருக்கும் நடிகர் தனுசுக்கும் திருமணம் நடக்க போவதாக தகவல் பரவி வருகிறது.
நடிகை மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டு வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பார்வை பறிபோகும் அபாயத்தில் இம்ரான் கான் உடல்நிலை உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
சிகிச்சை அளிக்கப்படாத கண் நோய் அவரது கண்பார்வைக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் என்று அவரின் ஆதரவளார்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானிய நாட்டவர்கள் இனி 30 நாட்கள் வரையிலான குறுகிய காலச் சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்களுக்கு சீனா செல்லும்போது அவற்றுக்கு விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட அதே சலுகையை இப்போது பிரித்தானியாவும் பெற்றுள்ளது.
இதற்கிடையில் பிரித்தானியாவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி மருந்து நிறுவனமான எஸ்ட்ராசெனொகா சீனாவில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்கொட்லாந்து லெர்விக் பகுதியில் 140 ஆண்டுகளாக நடைபெறும் வைக்கிங் நெருப்பு திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் தீப்பந்த ஊர்வலத்துடன் கலந்துகொண்டனர்.
ஸ்கொட்லாந்து நாட்டில் நடைபெற்ற பிரமாண்ட நெருப்பு திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஐரோப்பாவில் வாழ்ந்த வைக்கிங்ஸ் மக்களின் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமைகளில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.
லெர்விக் பகுதியில் நடைபெற்ற வைக்கிங் திருவிழாவில் அந்த பகுதியை சேர்ந்த பூர்வகுடிகள் கையில் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். வைக்கிங் மக்கள் பயன்படுத்திய நீளமான கப்பல் போன்று கட்டைகளை வைத்து உருவாக்கப்பட்டு, அதனை தீப்பந்தம் ஏந்தியவர்கள் வட்டமிட்டு பின்னர் அந்த கப்பல் மீது தீப்பந்தங்கள் வீசப்பட்டன.
இதைத் தொடர்ந்து வைக்கிங் பாரம்பரிய பாடலை அவர்கள் பாடினர். 140 ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒண்டாரியோ மாகாணத்தில், டொராண்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சுமார் 50 வாகனங்கள் தொடர்புடைய தொடர் விபத்துகள் ஏற்பட்டதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்துகளில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான அல்லது கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய சிலர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்துகள் காரணமாக சாலையில் சிக்கி தவித்த ஓட்டுநர்கள் அவசர மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சகோதர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். வேகத்தை விட விவேகம் நன்மை தரும். வாகன மாற்ற எண்ணங்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சிறுசிறு ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் உடல் அசதிகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
வருங்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாட்கள் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். தம்பதிகளுக்குள் சிறு சிறு வேறுபாடுகள் உண்டாகலாம். முன் கோபத்தினை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார பணிகளில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மிதுனம்
பணிகளில் முயற்சிக்குண்டான பாராட்டுகள் கிடைக்கும். உங்களைப் பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும். விளையாட்டு செயல்களில் கவனம் வேண்டும். சகோதர உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கடகம்
வெளியூர் சார்ந்த பணிகள் சாதகமாகும். தர்க்க வாதங்களில் கவனம் வேண்டும். ரகசியமான செயல்களில் ஆர்வம் உண்டாகும். சில தடைகள் மூலம் எதிர்பார்ப்புகள் தாமதமாகி நிறைவேறும். எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உண்டாகும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் மீதான ஈர்ப்பு மேம்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
கன்னி
எதிர்பாராத சில அதிர்ஷ்டகாரமான வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த விரயம் ஏற்படும். தொழில் முயற்சிகளில் அலைச்சலுக்கு பின்பு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
எதிர்பாராத சிலருடைய சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை உருவாக்கும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். அரசு காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும். பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான தேடல்கள் அதிகரிக்கும். பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விருச்சிகம்
செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் உண்டாகும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி
தனுசு
மற்றவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். பயம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். வேகத்தை விட விவேகமான செயல்பாடுகள் நன்மையை ஏற்படுத்தும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கும். கூட்டாளிகளிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகரம்
நீண்ட நாள் உறவினர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க முயல்வீர்கள். தாய் மாமனிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். செயல்பாடுகளில் இருந்த குழப்பங்கள் விலகும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் அனுகூலங்கள் பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
கும்பம்
வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். சமூக பணிகளில் ஆதரவுகள் கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். சிலரின் சந்திப்புகளால் சந்தோஷம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் சாதகமான சூழல் அமையும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விசுவாவசு வருடம் தை மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை 29.1.2026.
இன்று பிற்பகல் 12.17 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று அதிகாலை 04.57 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.
இன்று இரவு 07.26 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.
இன்று அதிகாலை 01.26 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 12.17 வரை பத்தரை. பின்பு இரவு 10:32 வரை பவம் பின்னர் பாலவம்.
இன்று காலை 6:00 வரை அமிர்த யோகம். பின்னர் காலை 6. 35 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
தமிழக மலைப்பகுதிகளில் உருவாகி,கேரளா மலைப்பகுதியில் ஓடி, வீணாகக் கடலில் கலந்து கொண்டிருந்த ஒரு ஆறு தான் முல்லை ஆறு.
அப்படி வீணாக கடலில் கலந்த தண்ணீரை தமிழகத்தை நோக்கி திருப்பினால்,வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருந்த ஐந்து மாவட்டங்கள் வளம் பெறும் என்பதற்காக 300 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய சேதுபதி மன்னர்கள் காலத்திலும்,அதற்கு அடுத்து வந்த பிரிட்டிஷ் அரசாலும்,முல்லை ஆற்றின் போக்கை தடுத்து அதை தமிழ்நாட்டை நோக்கித் திருப்ப ஒரு திட்டம் போடப்பட்டது.
அருமையான அந்தத் திட்டம் செயல் வடிவம் பெறாமல்,காகிதத்திலேயே நின்றுவிட்டது.
காரணம்,அந்தத் திட்டத்தில் இருந்த மிகக் கடினமான சவால்கள்.
எந்த விதமான வசதிகளும் இல்லாத,முறையான பாதை கூட இல்லாத அடர்த்தியான வனப்பகுதி,வன விலங்குகள்,மலேரியா போன்ற கொள்ளை நோய்களைப் பரப்பும் கொசுக்கள்,அட்டைப் பூச்சிகள்.... என நீண்ட சவால்களுக்குப் பயந்து அந்த அணை கட்டும் திட்டத்தில் எந்தப் பொறியாளருமே ஆர்வம் காட்டவில்லை.
இப்படியான ஒரு சூழ்நிலையில் சவால்களை உடைத்து அணையை சாத்தியமாக்கும் ஒரு சாகசக்காரனை பிரிட்டீஷ் அரசு வலை வீசித் தேடிக் கொண்டிருந்தது.
1885 களில் சென்னை மாகாணத்தில் ஓரிடத்தில் கிரிக்கெட் போட்டி நடத்திக் கொண்டிருந்த "அவரின்" காலில் வந்து அந்த வலை வந்து விழுந்தது.
To,
Mr."கர்னல் ஜான் பென்னி குவிக்" என்று தொடங்கிய அந்த கடிதம்,
"மிஸ்ட்டர்,ஜான்,
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்,ஒரு அணையைக் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்துள்ளது.அதை நீங்கள் தான் செய்ய வேண்டும்.உடனடியாக மதுரைக்கு வரவும்.. "
--அவரது கைகளுக்குக் கிடைத்தது.
கிரிக்கெட் பேட்டை கீழே வைத்துவிட்டு இன்ஜீனியரிங் டிராப்ட்டரை கையில் எடுத்துக் கொண்டு மதுரைக்கு கிளம்பினார் பென்னி குவிக்.அவரிடம் அணை கட்டும் திட்டத்திற்கான வரைவு உட்பட பல விவரங்கள் தரப்பட்டது.
1887 ல் அணை கட்டும் பணி தொடங்கியது.
தொடங்கியது என்ற இந்த வார்த்தையை இந்தப் பதிவில் எளிதாக வாசிப்பதைப் போல இருக்கவில்லை அந்தப் பணி.எந்தவொரு பொருள் தேவைப்பட்டாலும்,அந்த சிறியதோ,பெரிதோ,அது மதுரையில் இருந்து தான் வர வேண்டும்.கடுமையான காட்டுப் பகுதியின் வழியாக,வர பல நாட்களாகும்.
இப்படியான சூழ்நிலையில் அணை கட்டும் பணி தொடங்கியது.
எக்காரணம் கொண்டும் அணை கட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைத் துன்புறுத்தக் கூடாது.அவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும்.நமக்கு இருக்கிறதோ இல்லையோ,தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்....என்பன போன்றவைகளில்,தான் கட்டப் போகும் அணையை விட உறுதியாக இருந்தார்,பென்னி குவிக்.
அணை கட்டும் பணியும் வேகமாக வளர்ந்தது.பாதி அணை கட்டி முடிவடைந்த நிலையில் காட்டில் கடுமையான மழை வெளுத்தெடுத்தது.அந்த மழையில் பாதி கட்டப்பட்ட அணை உடைந்து,வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
சர்வ நாசம்.
மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.
மனம் தளரவில்லை பென்னி குவிக்.மீண்டும் தொடங்கினார்.
ஓரளவு வளர்ந்த நிலையில் இருந்த அணைக்கான சவால்,இம்முறை வன விலங்குகள் வடிவத்தில் வந்தது.மிகப் பெரிய ஒரு யானைக் கூட்டம் வந்து அணையை முட்டி,மோதி,உடைத்துச் சிதைத்துப் போட்டது விட்டது.
இரண்டாவது முறையாக துவங்கிய இடத்திலேயே,பூஜ்ஜியத்தில்,வந்து நின்றார் பென்னிகுவிக்.
மூன்றாம் முறை பணியைத் தொடங்கலாம் என்று நினைத்த பென்னி குவிக்கின் படைகளை மலேரியா தாக்கியது.
இப்படி தொடர்ச்சியான துன்பங்களைப் பார்த்த பிரிட்டீஷ் அரசு,அணை கட்டும் பணியை நிறுத்தி விடலாம் என்று முடிவு செய்து பென்னி குவிக்கை திரும்ப அழைத்தது.
சென்னையில் வைத்து நடந்த பிரிட்டீஷ் அதிகாரிகள் கூட்டத்தில் பென்னி குவிக்கிடம் அணை கட்டும் பணியை அப்படியே நிறுத்திவிட்டு,நீங்கள் வடஇந்தியாவில் பணிக்குச் செல்லுங்கள் என்ற உத்திரவு தரப்பட்டது.
ஆனால் அந்த உத்திரவை பென்னி குவிக் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
"நான் இந்த பூமிக்கு வருவது ஒரு முறை மட்டுமே.ஆகையால் நான் வந்து சென்றதன் அடையாளமாக மக்களுக்கு ஏதேனும் செய்ய நினைக்கிறேன்.அந்த அணை கட்டப்பட்டால்,அதனால் பல லட்சக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறும்.லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும்.எனவே நான் என் சொந்தத் பணத்தில் அணையைக் கட்டப் போகிறேன்..."
--என்று கூறிவிட்டு வெளியேறினார்.
வெளியே வந்தவர்,உடனடியாக தன் சொந்த நாடான இங்கிலாந்துக்கு-அயர்லாந்துக்கு கப்பலேறினார்.அங்கு சென்று தனக்கு சொந்தமானது என்றிருந்த சகலத்தையும் விற்றார்.எதையும் விடவில்லை.தன் பாட்டனார் தனக்குத் தந்த வீட்டையும் விற்றார்.ஓரளவிற்குப் பணம் கிடைத்தது.எடுத்துக் கொண்டு மதுரைக்கு வந்தார்.
மீண்டும் அணையைக் கட்டும் பணியைத் தொடங்கினார்.இம்முறை இயற்கை ஒத்துழைத்தது.அணை வேகமாக வளர்ந்தது.
கடல் மட்டத்தில் இருந்து 2980 அடிகள் உயரத்தில்,
அடர்ந்த காட்டின் நடுவே,
முல்லை என்ற ஒரு காட்டாற்றின் போக்கை மாற்றியவாறு,
146 அடிகள் கொள்ளளவுடன்,
1895 ல் முல்லைப் பெரியாறு அணை கம்பீரமாக எழுந்து நின்றது.
இயற்கையின் விசித்திரம் குறித்த முழு பார்வை
உலகில் பெரும்பாலான நாடுகளில், பகல் முடிந்து இரவு தொடங்கும் போது சூரியன் மறைந்து நிலா தோன்றுவது வழக்கம். ஆனால், சில நாடுகளில் இரவு என்பதே இல்லாமல் எப்போதும் சூரியன் உதயமான நிலையிலேயே இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பொதுவாக, ஒரு நாட்டில் பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம் இருப்பது இயல்பு.
நார்வே
நார்வேயின் ஸ்வால்பார்டில், ஏப்ரல் 10 முதல் ஆகஸ்ட் 23 வரை சூரியன் இரவும் பகலும் பிரகாசிக்கிறது.
கனடா - நுனாவுட்
ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே சுமார் இரண்டு டிகிரி, நுனாவுட் கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் அமைந்துள்ளது.
இங்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு 24 மணி நேரமும் சூரிய ஒளி இருக்கிறது.
மறுபுறம், குளிர்காலத்தில், இந்த இடம் தொடர்ந்து 30 நாட்களுக்கு முற்றிலும் இருட்டாக இருக்கும்.
ஐஸ்லாந்து
கோடையில் ஐஸ்லாந்து இருட்டாக இருக்காது. ஜூன் மாதத்தில் சூரியன் மறையாததால் வெளிச்சமாகவே இருக்கும்.
பாரோ, அலாஸ்கா
மே மாத இறுதியில் இருந்து ஜூலை இறுதி வரை சூரியன் இங்கு மறைவதில்லை.
இங்கு நவம்பர் தொடக்கத்தில் இருந்து அடுத்த 30 நாட்களுக்கு இங்கு மீண்டும் சூரியன் உதிக்காது. இது "போலார் நைட்" என்று அழைக்கப்படுகிறது.
குளிர்காலம் முழுவதும் நாடு முழுவதும் இருளில் மூழ்கி விடும்.
ஸ்வீடன்
ஸ்வீடனில் மே மாத தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை சூரியன் நள்ளிரவில் மறைந்து அதிகாலை 4 மணியளவில் உதயமாகும்.
குறிப்பாக “அர்கெடல்” போன்ற இடங்களில் கோடை காலத்தில் 24 மணி நேரமும் சூரிய ஓளி இருக்கும்.
இங்கு தொடர்ந்து 6 மாதங்கள் சூரியன் மறைவதில்லை. பகல் மட்டுமே இருக்கும்.
இந்த நாடுகள் அனைத்தும் பூமியின் வட துருவத்திற்கு அருகில் அமைந்திருப்பதால், இங்கு சூரியன் மறைவதில்லை. இது ஒரு விசித்திரமான இயற்கை நிகழ்வாகும், இது உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
இங்கு மே மாத இறுதியில் இருந்து ஜூலை வரை 76 நாட்களுக்கு சூரியன் மறைவதில்லை.
அதனால் தான் ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ள நார்வே "நள்ளிரவு சூரியனின் நாடு" என்று அழைக்கப்படுகிறது.
பகல் முடிந்ததும் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகும். மறுபடியும் அடுத்த நாள் காலை சூரியன் உதயமாகும். இப்படித்தான் பூமி சுழன்று கொண்டிருக்கிறது.
ஆனால், சில நாடுகளில் பகல், இரவு என்பது தனித்தனியாக இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்.
ஒருநாள் காட்டுவழியாக வந்து கொண்டிருக்கிறார் ஔவை.....
மழை மேகம் திரண்டு வர மழை வந்துவிடுமோ என்று ஒதுங்குவதற்காக அங்குமிங்கும் பார்க்கிறார்.
அங்கே ஓர் அழகிய காட்சி,
மயில் ஒன்று மழை மேகம் கண்டு தன்
தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.
கண்கள் விரிய அந்த காட்சியைக் கண்டு மகிழ்கிறார்.
திடீரென்று மறுபக்கத்திலிருந்து
ஒரு சலசலப்பு.
அங்கே இன்னொரு காட்சி அவரது கவனத்தை ஈர்க்கிறது.
வான்கோழி ஒன்று தனது உடலைச் சிலுப்பிக்
கொண்டிருக்கிறது.
உனக்கு மட்டும் தான்
தோகை இருக்கிறதா? இதோ பார். எனக்கும்தான் தோகை இருக்கிறது
நானும் தோகையை விரித்து ஆடுகிறேன் பார் என்று மயிலுக்குச் சவால் விடுவதுபோல் தோகையை விரிப்பதற்காக
உடம்பு முழுவதையும் அசைத்து அசைத்து
ஆட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. முடியவில்லை.
எத்தனை முயற்சி
செய்தும் வான்கோழியால் மயிலைப்
போன்று தோகையை விரித்து ஆட முடியவில்லை.
மயிலைப் பார்த்துதான் இப்படி ஆட்டிக்கொண்டு நிற்கிறாயா? என்று நினைத்ததும் ஔவைக்கு உள்ளுக்குள் சிரிப்பு.
கூடவே மற்றொரு சிந்தனை......
இந்த வான்கோழியின் செயல்
ஏதோ ஒன்றை நினைவுபடுத்துகிறதே.
இது எப்படி இருக்கிறது தெரியுமா?
கல்வியை முறையாக கற்காத அரைகுறை ஒருவன் கவிபாட ஆசைப்படுகிறான்.
அதனால் அடுத்தவன் எழுதிய கவிதையை தான் எழுதியதாக
நினைத்துக்கொண்டு மற்றவர்கள்
முன்னால் கொண்டுபோய் படிக்க முயன்று கொண்டிருக்கிறான்.
அவனால் சரியாகப் படிக்க முடியவில்லை.
திக்குகிறான்....
திணறுகிறான்....
திண்டாடுகிறான்....
அதே திணறலும் திண்டாட்டமும்
இந்த வான்கோழியிடமும் இருக்கிறது
என்று நினைக்கிறார்.
நினைத்ததை நினைத்த இடத்தில் நினைத்தபடியே பாடுவது ஔவையின் இயல்பாயிற்றே ...
சும்மா இருப்பாரா?
ஔவையின் இந்த நினைப்புத்தான் இங்கே
பாடலாக வெளிவருகிறது.....
"கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் -
தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து
ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி"
வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.
வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிந்து, அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்துவர கல்லடைப்பு நீங்கும். நீர் எரிச்சல், நீரில் ரத்தம் கலந்து போவதைக் குணப்படுத்தும்.
வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும். கோடைக் காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பம் குறையும்.
வாழைத்தண்டு சூப் (வாழைத்தண்டு சிறு துண்டுகள், இஞ்சி, எலுமிச்சைச் சாறு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம்) 200 மி.லி. வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து குறையும்.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உணவாகவும் உள்ளது. வாழைத்தண்டுடன் வாழைப்பூ சேர்த்து உட்கொண்டால் மாதவிடாய் கோளாறுகளால் உண்டாகும் அதிகப்படியான ரத்தப் போக்கு, வயிற்று வலி நீங்கும்.
இரண்டு அவுன்ஸ் வாழைத்தண்டு சாற்றை நாள்தோறும் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும். வாழைத்தண்டை உலர்த்தி, பொடி செய்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
வாழைத்தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண்கள் ஆறும். வாழை சாற்றுடன் திரிபலா சூரணம் சேர்த்து அருந்த மலச்சிக்கல் நீங்கி அதனால் ஏற்பட்ட மூல நோய் மற்றும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
வீட்டில் உள்ள பிரச்சனைகளில் இருந்து விடுபட தினமும் வீட்டின் நுழைவு வாயிலில் விளக்கு வைக்குமாறு கூறப்படுகிறது.
மாலையில் தீபம் ஏற்றுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், அந்தி வேளையில் வீட்டு வாசலில் தீபம் ஏற்றினால் அன்னை இலட்சுமி தேவி வந்து சேருகிறாள். இது தவிர, வீட்டிற்குள் ஏதாவது எதிர்மறை ஆற்றல் இருந்தால் அதன் சக்தி முழுமையாக குறையும் என நம்பப்படுகிறது.
வீட்டின் பிரதான வாசலில் தீபம் ஏற்றி வைப்பதன் மூலம் இராகுவின் தோஷங்களும் தீரும். கிரக தோஷத்தை போக்க, ஏதேனும் கோவில் அல்லது துளசிக்கு அருகில் தீபம் ஏற்றி வைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மற்ற பலன்களும் கிடைக்கும்.
நீங்கள் வெளியே வரும் போது விளக்கு வாசலின் வலது பக்கம் இருக்கும் வகையில் விளக்கை ஏற்றவும். திசையைப் பற்றி பேசினால், தீபத்தின் ஒளி வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். மேற்கு திசையில் தீபம் ஏற்ற வேண்டாம்.
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நேரம் தீபம் வைக்க சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதன் போது தீபம் ஏற்றி வைப்பதன் மூலம் ஒருவருக்கு வாழ்வில் நன்மைகள் மட்டுமே கிடைக்கும்.
தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.
சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும்.
போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும்போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர்,அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில். அதைக் கவனித்த ஸ்ரீராமன் கூறினார் " யாரும் கவலைப்பட வேண்டாம்.என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு" என்று.
போர் ஆரம்பமாயிற்று.கடும்போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள்.வேறு வழியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச்சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் "இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதாதேவியைக் கடத்தியதற்காக ஸ்ரீராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை.வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன்.
கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கேற்றாற்போல் அவனது தேரும் மிகப்பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன.
போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது.
திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப்போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன.ஒரே இருட்டு.நல்லவேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது.சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.
ஒரு வானரம் சொன்னது " இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப்போய்விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி" என்றது
" சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப்போவதில்லை நம்மைக் காப்பாற்ற .நம் தலைவிதி இப்படியே கிடந்து சாகவேண்டியதுதான்" சொன்னது இன்னொரு வானரம்
" ஸ்ரீராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களையெல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே,அவர் மட்டும் என்ன செய்தார்" இன்னொரு வானரம் சொன்னது. இதைக்கேட்ட மற்ற வானரங்களும் " ஆமாம் ஆமாம் " என்றன.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது.
" முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள்.நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்.எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ஸ்ரீ ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ' ராம் ராம் ராம்' என்று ஜெபம் செய்யுங்கள். ஸ்ரீ ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார்" என்று சொன்னது.எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.
கடைசியில் ராமபாணத்தால் ராவணனும் கொல்லப்பட்டான். போர் முடிந்தது. சீதாப்பிராட்டியை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள்.
அப்போது ஸ்ரீராமன் சொன்னார் " சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா"
" பிரபு! எண்ணிவிட்டேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை" என்றான் சுக்ரீவன்.
" இல்லை.மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா " என்றார் ஸ்ரீராமன்.
ஸ்ரீராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான்.
" தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை"
" அனுமா நீ யும் என்னுடன் வா.நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம். "என்றார் ஸ்ரீராமன்
அனுமனும் ஸ்ரீராமனும் வானர்களைத்தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள்,உடைந்து கிடந்த தேரின் பாகங்கள், அம்புகள், கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப்பார்த்தான் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை.
திடீரென்று ஸ்ரீராமன் ஒரு இடத்தில் நின்றார்.
" அனுமா! அங்கேபார்.ஒரு பெரிய மணி தெரிகிறது."
ஸ்ரீராமன் என்ன சொல்லப்போகிறார் என்று புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் விரைந்தார்கள் அந்த இடத்திற்கு .
அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமனுக்கு இது ஒரு பொருட்டா என்ன!
அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக்கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப்பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள்.
எதிரே ஸ்ரீராமனும் அனுமனும்.
வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்களின் கண்களில் கண்ணீர்.
"பிரபு ! என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம்.எங்களை மன்னித்து அருள வேண்டும்" என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின.
அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ஸ்ரீராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் வானரங்களுக்கு.
அருகில் நின்றிருந்த அனுமன் பக்கம் திரும்பிய ஸ்ரீராமன் அனுமனைப் பார்த்து சொன்னார்
" அனுமா! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா?
இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் கிட்டும் " என்று வாழ்த்தினார்.
பின் குறிப்பு: கர்நாடகா,ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கிக்கொண்டிருப்பதாக இருக்கும்.
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயிலின் முன் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சிநேயர் உள்ளார்.
"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"
ஸ்ரீராம் ஹரே ராம் ஜெய் ராம்!
ராம் ராம் ராம் ஜெய் ராம்.
ஜெய் ஆஞ்சநேயா போற்றி.
ராம தூத ஆஞ்சநேயரே சரணம்
ராம பக்த ஆஞ்சநேயா சரணம்!
கீழா நெல்லியை கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. நீர்நிலைகள், வயல் வரப்புகளில் வளரக்கூடியது.
மருத்துவக் குணங்கள்
மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.
இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு.
கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.
இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.
சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்
உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக் கரைக்கும்.
ரத்தசோகையைச் சரிசெய்யும் .
கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும்.
மலட்டுத் தன்மையைப் போக்கும்.
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.
கீழாநெல்லியை எடுத்துக்கொள்ளும் முறை:
மஞ்சள் காமாலை -
கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.
சர்க்கரை நோய் -
உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.
உடற்சூடு மற்றும் தொற்றுநோய்கள் -
கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.
வயிற்றுப்புண் -
ஒரு குவளை மோரில், கைப்பிடி அளவு அரைத்த கீழாநெல்லி இலையைக் கலந்து காலையில் குடித்துவர, வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்னைகளும் தீரும்.
தலைவலி
நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.
சொறி, சிரங்கு
கீழாநெல்லி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்து, குளித்து வந்தால் சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் சரியாகும்.
வெள்ளைப்படுதல்
கையளவு கீழாநெல்லி இலையை நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், அதை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்குச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்துவர வெள்ளைப்படுதல் நோய் குணமடையும்.




















