Goose on lakeside
யார் இந்த சரளாம்மா?
எந்த வி.ஐ.பி-யின் பிறந்தநாள் வந்தாலும், தொலைக்காட்சியில், ‘நூறாண்டு காலம் வாழ்க... நோய் நொடியில்லாமல் வளர்க... ஊராண்ட மன்னர் புகழ்போலே... உலகாண்ட புலவர் தமிழ்போலே...’ என்று பின்னணியில் ஒலிக்கிற மூவர் குரல்களில் ஒரு குரல் இவருடையது. ‘பேசும் தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பாடிய சரளா இப்போது எப்படியிருக்கிறார்?
‘`பக்கவாதம் வந்து ஒரு வரி பாடறதுக்கே இன்னிக்குப் படாதபாடு பட்டுக்கிட்டிருக்குற நான், 50 வருஷத்துக்கு முன்னாடி வாழ்வாங்கு வாழ்ந்தவம்மா. பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர், கண்ணதாசன், வாலின்னு என் குரலைப் பாராட்டாத வி.ஐ.பி-க்களே இல்லை. அந்த அளவுக்குக் குரலால் கொடிகட்டிப் பறந்தவ நான்’’ என்கிற சரளாம்மாவின் குரலில் இப்போதும் இருக்கிறது கம்பீரம்.
‘`மயிலாப்பூரில் பிறந்தேன். இன்னிக்கு ஊருக்கு வெளியே இந்தச் சின்ன கூண்டுக்குள்ள இருக்கேன். சின்ன வயசுல சினிமாப் பாட்டுன்னா உயிரு. அம்மா பாடகி, அப்பா பாடகர் போன்ற பின்னணியெல்லாம் எனக்குக் கிடையாது. பாட்டுச் சொல்லிக்கொடுக்கக் குருவும் கிடையாது. சினிமா பாடல்களைக் கேட்டு நானா பாடக் கத்துக்கிட்டேன். அம்மாவுக்கு நான் பாட்டுப் பாடறது ரொம்பப் பிடிக்கும். அவங்க சப்போர்ட் இருந்ததால, எம்.ஆர்.ராதா நாடகம், தங்கவேலு நாடகத்திலெல்லாம் பாட்டுப் பாட ஆரம்பிச்சேன்.
ஒரு தடவை மயிலாப்பூர் ஆர்.ஆர் சபாவில் நடந்த நாடகத்தில் ‘பஞ்சவர்ணக்கிளி’ படத்தில் வருகிற ‘சத்தியம் சிவம் சுந்தரம்' பாடலைப் பாடிக்கிட்டிருந்தேன். அப்போ என் பாட்டைக் கேட்ட இசையமைப்பாளர் ராமமூர்த்தி (விஸ்வநாதன்), ‘உச்ச ஸ்தாயியிலும் எவ்வளவு இனிமையா இருக்கு இந்தப் பொண்ணோட குரல்’னு சொல்லி ‘தேன்மழை’ படத்துல பின்னணிப் பாடகியா அறிமுகப்படுத்தினார். அதுக்கப்புறம் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் ‘வருவாயா வேல்முருகா’, சீர்காழி கோவிந்தராஜனுடன் ‘சிந்தனையில் மேடைகட்டி’, இளையராஜா வுடன் ‘உனக்கெனத்தானே இந்நேரமா’... இப்படி 20 பாடல்கள்தான் சினிமாவில் பாடியிருக்கேன். ஆனா, மேடைக் கச்சேரிகளில் நான் பாடின பாடல்களை எண்ணவே முடியாது.
85 வயசாயிடுச்சு. நான்கு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மேடைக் கச்சேரி பண்ணிக்கிட்டுதான் இருந்தேன். திடீர்னு வந்த பக்கவாதம் பாட முடியாதபடிக்கு என் குரலை எடுத்துட்டுப் போயிடுச்சு. எவ்வளவோ மேடு பள்ளங்கள் பார்த்துட்டேன். இஸ்லாமியப் பாடல்கள் பாடறதுல ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு பெயர் வாங்கினது ஒரு காலம். பாட முடியாம முடங்கிக் கிடக்குறது ஒரு காலம்’’ என்கிறவர் பழைய நினைவுகளில் சில நொடிகள் மூழ்குகிறார்.
தன்னுடைய 13-வது வயதில் பாட ஆரம்பித்தவர் தொடர்ந்து 60 வருடங்கள் பாடியிருக்கிறார்.
ரஜினிக்கு மனைவியாகவும் மன்னன் படத்தில் நடித்திருந்தார். இவர் அறிமுகம் ஆனது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் தான்.
விதி சில நேரங்களில் எவ்வளவு அழகாகத் தன் விளையாட்டைத் தொடங்குகிறது என்பதற்கு உதாரணமாக தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். எதிர்பாராமல் நடக்கும் ஒரு சிறு தற்செயல் நிகழ்வு, ஒருவரின் வாழ்க்கைப் பாதையையே எப்படி மாற்றியமைக்கிறது என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா, கார்த்திக், ராதா, ராதிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில் அவர் அறிமுகம் செய்த முன்னணி நடிகை ஒருவர் தான் விஜயசாந்தி. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், சோலோ ஹீரோயினாக பல வெற்றிப்படங்களையும் போலீஸ் கேரக்டரிலும் நடித்து அசத்தியுள்ளார்.
குறிப்பாக ரஜினிக்கு மனைவியாகவும் மன்னன் படத்தில் நடித்திருந்தார்.
இவர் அறிமுகம் ஆனது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் தான். இயக்குநர் பாரதிராஜா அவர்கள் ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் பஞ்சர் ஆனது. அதைச் சரிசெய்ய டிரைவர் குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும் எனக் கூறியுள்ளார். இதனால் "வெயிலில் நிற்பதை விட, அருகில் இருக்கும் இந்த ஸ்டூடியோவில் போய் அமருங்கள் சார்" என்று டிரைவர் சொல்ல, பாரதிராஜாவும் சம்மதித்து உள்ளே சென்றார்.
அந்த ஸ்டூடியோவில் சும்மா அமர்ந்திருக்கப் பிடிக்காமல், அங்கு இருந்த புகைப்படங்களை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே இருந்த ஒரு பெண்ணின் புகைப்படம் அவர் கண்களில் பட்டது. அந்தப் பெண் தான் பின்னாளில் புகழ்பெற்ற அந்த நடிகை. "யார் இந்தப் பெண்? இவரை உடனே பார்க்க வேண்டுமே!" என்று பாரதிராஜா ஆர்வம் காட்டினார். உடனடியாக அந்தப் பெண்ணின் தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இயக்குநர் பாரதிராஜா ஒரு புது முகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார், உங்கள் மகளின் புகைப்படம் அவருக்குப் பிடித்திருக்கிறது" என்ற செய்தி கேட்டு அந்தத் தந்தை தனது மகளை அழைத்துக் கொண்டு பாரதிராஜாவைச் சந்திக்கச் சென்றார். சந்திப்பு முடிந்த கையோடு, பாரதிராஜா அவருக்கு ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தச் சொன்னார். புகைப்படங்களில் அந்தப் பெண் மிக அழகாகவும், கேரக்டருக்கு பொருத்தமாகவும் இருந்தார். பாரதிராஜாவுக்குப் பிடித்துப் போனது. "ஓகே பண்ணிடலாம்!" என்று அவர் பச்சைக்கொடி காட்டிய அடுத்த சில நிமிடங்களிலேயே எல்லாம் மளமளவென நடந்தன.
மேக்கப், காஸ்டியூம் என அனைத்தும் மின்னல் வேகத்தில் முடிந்து, அந்தப் பெண் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். கார் பஞ்சர் ஆனது ஒரு தற்செயலான விஷயம் என்றாலும், அது ஒரு மாபெரும் கலைப்பயணத்தின் தொடக்கமாக அமைந்தது தான் விதியின் சுவாரஸ்யம். பின்னாளில் விஜயசாந்தி அரசியலிலும் அடியெடுத்து வைத்து அசத்திய நிலையில், தற்போது சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
புதுச்சேரியில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல் நிலை பள்ளி வாசலில் பெரிய கத்தரிக்கோல், தேங்காய் எண்ணெயுடன் தலைமை ஆசிரியர் நின்று கொண்டிருக்கின்றார்.
பள்ளி மாணவ-மாணவியர் மிகுந்த உற்சாகத்தோடு பள்ளிக்குள் செல்கையில், தலை கலைந்து இருக்கும் மாணவ மாணவியரை மட்டும் தனியே அழைத்து… தன்னுடைய கையில் இருக்கும் கத்திரிக்கோலால் முன்பகுதியில் வளர்ந்திருக்கும் முடிகளை கட் செய்து, தன் கையில் வைத்திருந்த தேங்காயெண்ணை பாட்டிலில் உள்ள தேங்காய் எண்ணெய் மாணவரின் கையில் ஊற்றி தலையில் தேய்க்கச்சொல்லி தன் கையாலேயே சீப்பால் தலையை வாரி விட்டு அனுப்புகின்ற இந்த நற்செயல் நமக்கும் நிச்சயம் பிரம்மிப்பூட்டும் விதத்தில் அமைகின்றது.
பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் அறிவுரை சொல்லியும், கேட்காததால் இந்த புதிய முயற்சியை கையாண்டு இருக்கும் இந்த ஆசிரியரின் முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியதே.
அன்பு* பண்பு *மாண்பு* எனும் வரம்பு மீறா பயிற்சிதனை பிள்ளைகளுக்கு நாம் அளிக்க .. சிந்தித்து செயல்பட்டு கரும்பு* இனிப்பு* பூரிப்பு* நிறைந்த வாழ்வுதனை அவர்கள் பெற்றுவிட்டால் இனிது இனிது வாழ்க்கை என்றும் இனிதன்றோ!
- 8 மணி நேரம் தூங்க வேண்டும் 10 மணி நேரம் தூங்க வேண்டும் என்று 8 மணிக்கே படுக்கைக்கு போய் விடாதீர்கள். தூக்கம் வரும் வரை ஏதேனும் வேலை செய்துகொண்டோ குறைந்த பட்சம் படித்துக்கொண்டோ இருங்கள். நோ டி.வி. நோ மொபைல்.
- கண்கள் கெஞ்சும் வரை காத்திருங்கள்.
- படுக்கைக்குப் போகும் முன் வெது வெதுப்பான நீரில் குளிக்கலாம்.
- அல்லது கால்களையாவது ஒரு 10 நிமிடம் வெது வெதுப்பான நீரில் வைத்திருங்கள்.
- அரை டம்ளர் சூடான பால் குடிக்கலாம். முடிந்தால் அதில் கொஞ்சம் தேன் சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தால் கொஞ்சம் மஞ்சள் தூளும் மிளகுத் தூளும் சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தால் கொஞ்சம் பூண்டு, பேரீச்சம் பழம் சேர்த்துக் கொள்ளலாம். சத்துக்கு சத்தும் ஆச்சு கபத்துக்கு மருந்தும் ஆச்சு.
- தலையணைக்கடியில் கொஞ்சம் மல்லிகைப் பூக்களை வைத்துக் கொள்ளலாம். மல்லிகை மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டது. மனச் சோர்வுக்கும் மருந்தாகும் ; தூக்கத்திற்கும் துணையாகும்.
- மெல்லிய (வார்தைகளற்ற) இசையை கேட்கலாம். Preferably Flute.
- இறுதியாக - முக்கியமாக - தூக்கம் வரவில்லையே என்று கவலைப் படுவதை உடனடியாக நிறுத்துங்கள். வராவிட்டால் போகட்டும். உடலுக்குத் தேவையான தூக்கத்தை அது எடுத்துக் கொள்ளும் - மூச்சு விடுவதைப் போல. என்றாவது சரியாக மூச்சு விட்டோமா என்று கவலைப்பட்டிருக்கிறீர்களா ? அது போலத்தான். நீங்கள் செய்த / செய்கிற வேலைக்கேற்பதான் தூக்கம் வரும். அது நீங்கள் சாப்பிடும் உணவைப் பொருத்தும் அமையும். So wait. வெறுமனே காத்திருங்கள்.
உலகத்திலே மிகவும் கொடுமையானது எது என்றால்..
மனவளர்ச்சி குன்றிய குழந்தையை கவனித்து கொள்ளுவது தான்..
மனவளர்ச்சி குன்றி நடக்க முடியாமல் பேச முடியாமல் குழந்தையை கவனித்து கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் கடவுளுக்கு சமம்..
ஆணாக இருந்தால் இயற்கை உபாதை கழிக்கும் போது பக்கத்தில் நின்று கழுவி விட்டு மகனை குளிப்பாட்டி துணி மாத்தி விடுவது எவ்வளவு கஷ்டம்.
அதே பெண் குழந்தையாக இருந்தால் அந்த பெண் குழந்தை வயதுக்கு வந்த பிறகு எவ்வளவு கஷ்டம் இருக்கும்.
ஒரு தாயின் அல்லது ஒரு பெண்ணின் அர்ப்பணிப்பு எந்த அளவிற்கு ஆழமானது
நிச்சயமாக, இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு சாதாரண மனிதராகத் தெரிவதில்லை
அவர்கள் பொறுமையின் சிகரமாகவும், அன்பின் ஊற்றாகவும் விளங்குகின்றனர்.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒரு குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வது என்பது மிகப்பெரிய தியாகம். அந்த குழந்தைகளின் பேசும் மொழி அந்த தாய் மட்டும் தான் தெரியும்.
நிபந்தனையற்ற அன்பு பதில் எதையும் எதிர்பார்க்காமல், தன் வாழ்நாளையே தன் பிள்ளைக்காக அர்ப்பணிக்கும் அந்த மனதிடம் போற்றுதலுக்குரியதாகும்
உடல் மற்றும் மன உளைச்சல் அன்றாட கடமைகளைச் செய்வதில் இருக்கும் சிரமம் ஒருபுறம் என்றால், அந்தப் பெண்ணின் மன பாரத்தை யாராலும் முழுமையாகப் பகிர்ந்து கொள்ள முடியாது.
முதிர்ச்சியடைந்த பிள்ளையின் பராமரிப்பு ஒரு ஆண் பிள்ளை வளர்ந்த பிறகு அவனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், ஒரு பெண் பிள்ளை பருவமடைந்த பிறகு அவளுக்கு நேரும் உடல் மாற்றங்களைக் கையாள்வதும் ஒரு தாய்க்குப் பெரும் சவாலாகும்...
தன்னையே மறந்து ராத்திரியில் தன் பிள்ளைகளை நினைத்து கண்ணீர் வடிக்கும் தாய்மார்கள் எத்தனை பேர்.
அப்படிப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் கடவுளுக்கு சமம் அல்ல…கடவுளுக்கு நிகரானவர்கள்.
மதுரை தத்தனேரியைச் சேர்ந்த 86 வயது முதியவர் திரு. ராஜேந்திரன் ஐயா.
இவர் ஒரு சாதாரண அப்பள வியாபாரி.
ஆனால், இவர் செய்துள்ள உதவிகள் பல கோடீஸ்வரர்களை வியக்க வைக்கும்...!
இவர் செய்த சேவைகளின் பட்டியல்:
மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டும் இதுவரை ரூ.1.81 கோடி செலவில் வகுப்பறைகள், உணவுக்கூடம் மற்றும் கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பின் போது நேரில் சென்று லட்சக்கணக்கில் உதவி செய்துள்ளார்.
அடுத்து மீனாட்சியம்மன் கோயில் அருங்காட்சியகத்திற்கு ரூ.2.5 கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார்.
மனம் நெகிழ வைக்கும் மனிதநேயம்:
தான் சம்பாதிப்பது தனக்கு மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தான் என்பதைச் செயலில் காட்டியுள்ளார்.
தன்னிடம் பணிபுரியும் 40 தொழிலாளர்களை விமானத்தில் ஹைதராபாத்திற்குச் சுற்றுலா அழைத்துச் சென்ற பெருந்தன்மை இவருக்கு உண்டு.
"மதுரைக்கு வரும்போது நான் எதையும் கொண்டு வரவில்லை, இங்கு வந்து சம்பாதித்ததை மதுரை மக்களுக்கே கொடுக்கிறேன்" என்று அவர் கூறுவது நம் கண்களைக் கசிய வைக்கிறது.
ஏன் இவர் உதாரணபுருஷர்.....
இன்றைய காலத்தில் அரசியலையும் அதிகாரத்தையும் எதிர்பார்க்காமல், தனது சொந்த உழைப்பில் கிடைத்த வருமானத்தை வாரி வழங்கும் ஒரு மாமனிதர் இவர். 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், மனிதாபிமானத்தில் இவர் ஒரு பல்கலைக்கழகம்....
விளம்பரமின்றிச் சேவை செய்த இவரை அடையாளம் கண்டு பாராட்டிய மாநகராட்சி ஆணையருக்கு நன்றிகள்.
ராஜேந்திரன் ஐயா போன்ற நல்ல உள்ளங்கள் நீடுழி வாழட்டும்...!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் உருவாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இணைய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
எதிலும் வேக இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். உத்தியோக முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும். பிற்கால வாழ்க்கை பற்றிய எண்ணம் மேம்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
உடலில் இருந்து வந்த சில வலிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். அனுபவம் மூலம் சில மாற்றமான முடிவுகள் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகள் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் விருத்தி உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் ஒற்றுமை ஏற்படும். சிந்தனை போக்கில் மாற்றங்கள் உருவாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். இணையம் சார்ந்த தொழில்களில் முன்னேற்றம் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். சமூக பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேளாண்மை சார்ந்த துறைகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் கிடைக்கும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
துலாம்
சமூகப் பணிகளில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் சிறு சிறு மன வருத்தங்கள் நேரிடும். மூத்த உடன்பிறப்புகளிடம் வீட்டுக்கொடுத்து செல்லவும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். பயணம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
நண்பர்கள் வட்டம் விரிவடையும். அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
தனுசு
உணவு சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் அளவில் இருந்த மந்தத்தன்மை குறையும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பிறக்கும். போட்டித் தேர்வுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். நினைவாற்றலில் இருந்த மந்தத்தன்மை குறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம்
மனதில் புதுமையான சிந்தனைகள் மேம்படும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
அரசு பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். கடன் பிரச்சனைகளில் பொறுமை வேண்டும். ஆரோக்கிய சிக்கல்கள் குறையும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நம்பிக்கை தரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மீனம்
அக்கம்பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். பயம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 20.4.2026.
இன்று காலை 11.12 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று காலை 07.52 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.
இன்று இரவு 07.38 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்.
இன்று அதிகாலை 12.22 வரை தைத்தூலம். பின்னர் காலை 11.12 வரை கரசை. பிறகு இரவு 10.59 வரை வனிசை. பின்பு பத்திரை.
இன்று காலை 06.01 வரை சித்தயோகம். பின்னர் காலை 07.52 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30 முதல் 07.30 மணி வரை
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
செரிமானம் சிறக்க... வாயுத் தொல்லை நீங்க... எளிய இயற்கை மருத்துவம்!
உடலில் ஏற்படும் **வாதக் கோளாறுகளைக் குறைத்து**, செரிமானத்தை சீராக்க நமது முன்னோர்கள் கையாண்ட மிகச்சிறந்த வழிமுறைகள் இதோ உங்களுக்காக:
### செரிமானம் மற்றும் வாயுத் தொல்லைக்கு: **சுக்கு நீர் (Dry Ginger Water)**
நமது அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சுக்கு, ஒரு அற்புதமான மருந்து.
** செய்முறை:**
* காய்ந்த இஞ்சியை (சுக்கு) லேசாகத் தட்டிக்கொள்ளுங்கள்.
* தண்ணீரில் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டுங்கள்.
* இந்தப் பருகுவதற்கு இதமான சூட்டில் அருந்தலாம்.
** பயன்கள்:**
* உடலில் தங்கியுள்ள தேவையற்ற **நச்சுகளை (Toxins)** வெளியேற்றும்.
* செரிமானத்தை விரைவுபடுத்தி **பசியைத் தூண்டும்**.
* வாயுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் குறிப்பு:** "சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை" என்பார்கள். வாரம் இருமுறை சுக்கு நீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது!
செரிமானம் சீராக, வாயுத் தொல்லை மறைய… எளிய இயற்கை வைத்தியம்!
உடலில் குடிகொண்டிருக்கும் வாத உபாதைகளைக் குறைத்து, சீரண மண்டலத்தை வலுப்படுத்த நம் முன்னோர் கையாண்ட மகத்தான வழிமுறைகள் இங்கே:
சீரண சக்திக்கும் வாயுத் தொல்லைக்கும்: சுக்கு நீர் (Dry Ginger Water)
நம் சமையலறையின் பொக்கிஷமான சுக்கு, ஓர் அபூர்வ மூலிகை.
தயாரிப்பு முறை:
• உலர்ந்த இஞ்சியை (சுக்கு) மென்மையாகத் தட்டிக்கொள்ளுங்கள்.
• தண்ணீரில் இட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து, பின் வடிகட்டவும்.
• இந்த இதமான சூட்டில் உள்ள நீரை அருந்தலாம்.
நன்மைகள்:
• உடலில் படிந்துள்ள அசுத்தமான நச்சுப் பொருட்களை (Toxins) நீக்கும்.
• செரிமானத்தைச் சுறுசுறுப்பாக்கி பசியைத் தூண்டும்.
• வாயுத் தொல்லையிலிருந்து உடனடியாக நிவாரணம் அளிக்கும்.
சிறப்பு குறிப்பு:
"சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை" என்பது ஆன்றோர் வாக்கு. வாரத்திற்கு இருமுறை சுக்கு நீர் பருகுவது உடல் நலனுக்கு மிகவும் உகந்தது!
இந்த அரிய தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!
திருநாவுக்கரசருக்கு வந்த கொடிய சூலை நோயை திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பதிகம் பாடி தீர்த்துக்கொண்டார்.
* சமணர்கள் இட்ட நீற்றறையில் ஏழு நாட்கள் இருந்து பதிகம் பாடி எவ்வித ஊறும் இன்றி சிவபெருமான் அருளால் வெளிவந்தார்.
* சமணர்கள் தந்த நஞ்சு கலந்த பால் சோறு உண்டும் பதிகம் பாடி உயிருடன் இருந்தார்.
* தன்னை கொல்லுமாறு சமணர்கள் ஏவிவிட்ட யானையை பதிகம் பாடி, தன்னை வலம் வந்து வணங்குமாறு செய்தார்.
* சமணர்கள் அவரை கல்லில் கட்டி கடலில் போட, பதிகம் பாடி அக்கல்லையே தெப்பமாக கொண்டு மிதந்து கரை சேர்ந்தார்.
* திங்களூரில் அப்பூதியடிகளின் மகனை பாம்பு தீண்டி அவன் இறக்க, பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார்.
* திருவீழிமிழலையில் அடியார்கள் பசியால் வருந்த, பதிகம் பாடி தினமும் சிவபெருமானிடம் ஒரு பொற்காசு பெற்று அடியார்கள் பசிதீர்த்து வந்தார்.
* திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் பூட்டப்பட்டு பல்லாண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த கோவில் கதவுகளை பதிகம் பாடி திறக்கச் செய்தார்.
நற்றுணையாவது அண்ணாமலையாரே
* திருப்பைஞ்ஞீலிக்கு செல்லும் வழியில் இவர் பசியால் வருந்துவதை சிவபெருமான் அறிந்து ஒரு அந்தணராக வந்து சிவபெருமான் இவருக்கு கட்டமுது தந்து பசியாற்றியும், நீர் அருந்த ஒரு குளமும், இளைப்பாற ஒரு சோலையும் தந்தருளினார்.
* இந்த பூத உடலோடு கையிலாய தரிசனம் செய்ய நடந்து நடந்து கால் தேய்ந்து தவழ்ந்து சென்று கை தேய்ந்து, உருண்டு சென்று உடலும் தேய்ந்தபோது சிவபெருமான் அந்தன உருக்கொண்டு வந்து ஒரு குளத்தை காட்டி அதில் மூழ்கச் செய்து எழும்போது திருவையாறு சமுத்திர தீர்த்தக் கரையில் வெளிப்பட்டு ஆடி அமாவாசை தினத்தன்று கையிலாய தரிசனம் காண உதவினார்.
* இவர் பாடிய பதிகங்களை கேட்டு இறைவனே இவருக்கு ‘திருநாவுக்கரசர்’ என்னும் பட்டத்தை சூட்டினார்.
நற்றுணையாவது அண்ணாமலையாரே
* அப்பர் ஸ்வாமிகள் எழுவதாவது வயதில் தல யாத்திரை துவங்கி, 81 வயது வரை 5 முறை தலப்பயனம் மேற்கொண்டு பாடியுள்ள தலங்கள் 126. பதிகங்கள் 312. மொத்த பாடல்கள் 3066 ஆகும்.
* திருப்புகலூரில் இறைவனுடைய திருவடிகளை அடைய விரும்பி
" புண்ணியா_உன்னடிக்கே போதுகின்றேன் "
என்று பாடி சித்திரை சதயத்தன்று சிவபெருமானோடு இரண்டறக் கலந்தார்.
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை
இயற்கையான குளிர்ச்சி:
மண்பானை, தன் நுண்துளைகள் வழியாக நீரை ஆவியாக்கி, இயற்கையாகவே குளிர்விக்கிறது. இது உடலுக்கு மிகவும் இதமானது. காரத்தன்மை (Alkaline):
மண் இயற்கையாகவே காரத்தன்மை கொண்டது. இது உடலில் உள்ள அமிலத்தன்மையைச் சமன்படுத்தி, செரிமானத்தைச் சீராக்குகிறது.
தாதுக்கள் நிறைந்தது:
மண்ணில் உள்ள இரும்பு, கால்சியம், மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசியத் தாதுக்கள் தண்ணீரில் கலந்து, ஊட்டச்சத்தை அதிகரிக்கிறது.
தொண்டைக்குப் பாதுகாப்பு:
பிரிட்ஜ் தண்ணீரைப் போலல்லாமல், இது தொண்டை அழற்சி அல்லது இருமலை ஏற்படுத்தாது. ஆஸ்துமா மற்றும் சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த தேர்வு.
நச்சு நீக்கம்:
மண்பானை, தண்ணீரில் உள்ள நச்சுகளை உறிஞ்சி, நீரைத் தூய்மைப்படுத்தும் இயற்கையான வடிகட்டியாகச் செயல்படுகிறது.
குளிர்சாதனப் பெட்டி நீரின் பாதிப்புகள்:
வாத அதிகரிப்பு:
அதிகக் குளிர்ந்த நீர் உடலில் 'வாதம்' மற்றும் 'கபம்' ஆகியவற்றை அதிகரித்து, மூட்டு வலிக்கு வழிவகுக்கும்.
செரிமானக் குறைபாடு:
குளிர்ந்த நீர் இரத்த நாளங்களைச் சுருக்கி, செரிமானத் திறனைக் குறைக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
வளர்சிதை மாற்றம் (Metabolism) பாதிப்பு:
உடலின் வெப்பநிலையை விடக் குறைவான நீரை அருந்தும்போது, அதைச் சமன் செய்ய உடல் அதிக ஆற்றலைச் செலவிடுகிறது. இது வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கிறது.
முக்கியக் குறிப்பு:
மண்பானையைத் தேர்வு செய்யும்போது, ரசாயன வர்ணம் பூசப்படாத இயற்கையான களிமண் பானைகளைப் பயன்படுத்துவது அவசியம். வாரத்திற்கு ஒருமுறை பானையை நன்கு தேய்த்துக் கழுவிப் பயன்படுத்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
தலைசுற்றல் என்பது பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினை. உடலில் நீர்ச்சத்து குறைவது முதல் பல காரணங்களால் இது ஏற்படலாம். இதிலிருந்து விடுபட உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் இதோ:
1. நீர்ச்சத்தை பராமரியுங்கள் (Hydration)
கிறுகிறுப்பு வந்ததும் உடனே ஒரு குவளை குளிர்ந்த நீரை மெதுவாகப் பருகுங்கள். நாள் முழுவதும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள்.
2. இஞ்சி (Ginger)
தலைசுற்றல் மற்றும் குமட்டலைப் போக்க இஞ்சி தேநீர் மிகச் சிறந்தது. விருப்பப்பட்டால் சிறு துண்டு பச்சை இஞ்சியைக் கூட வாயில் போட்டு மெல்லலாம்.
3. எலுமிச்சை சாறு (Lemon Juice)
வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, சிறிது சர்க்கரை அல்லது தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு கலந்து குடிப்பது உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும்.
4. நெல்லிக்காய் & கொத்தமல்லி (Amla & Coriander)
ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை மற்றும் ஒரு ஸ்பூன் காய்ந்த நெல்லிக்காய் பொடியை இரவில் நீரில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி குடிக்கலாம். இது நீடித்த தலைசுற்றலுக்கு நல்ல பாரம்பரியத் தீர்வாகும்.
5. ஆப்பிள் சீடர் வினிகர் & தேன்
ஒரு டம்ளர் நீரில் 2 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து குடிப்பது மூளைக்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
6. ஓய்வு மற்றும் அசைவுகள்
தலைசுற்றல் ஏற்பட்டால் தடுமாறி கீழே விழுவதைத் தவிர்க்க உடனே அமரவும் அல்லது படுத்துக்கொள்ளவும். படுக்கையில் இருந்து எழும்போது திடீரென எழாமல், மெதுவாக எழப் பழகவும்.
தவிர்க்க வேண்டியவை:
அதிக காபி, தேநீர், மதுபானம், புகையிலை மற்றும் அதிக உப்பு ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவை நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி பிரச்சினையை அதிகரிக்கலாம்.
முக்கிய குறிப்பு: இந்த வீட்டு வைத்தியங்கள் எளிய தலைசுற்றலுக்கு நிவாரணம் அளிக்கும். இருப்பினும், உங்கள் தலைசுற்றல் அடிக்கடி ஏற்பட்டால் என்ன காரணத்தால் பிரச்சினை ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து அதனை சரிசெய்ய வேண்டும்.
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் இந்த பதிவு பயன்படலாம், எனவே கட்டாயம் பகிரவும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் நட்புகள் உண்டாகும். நிதி மேலாண்மை குறித்த தெளிவுகள் பிறக்கும். உயர்கல்வி ஆலோசனைகள் கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வாக்கு சாதுரியம் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் ஆதாயகரமான சூழல்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
வியாபார பணிகளில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தள்ளிப்போன சில வாய்ப்புகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் விவேகத்துடன் செயல்படவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பயம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் சார்ந்த பயணம் மூலம் மேன்மை உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
சிம்மம்
வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். தாயாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கன்னி
அரசு பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். வாகன மாற்ற சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். குடும்ப பெரியோர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சொத்துக்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லவும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக செயல்படவும். வாழ்க்கை துணை வழியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
விருச்சிகம்
நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தன வருவாய் மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
போட்டி தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை வெற்றி கொள்வீர்கள். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்
மகரம்
குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உயர்கல்வி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சிக்கல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கும்பம்
பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். அறிமுகம் இல்லாத எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். எதிர்பாராத வகையில் தனவரவுகள் கிடைக்கும். மனை தொடர்பான வில்லங்கம் விலகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மீனம்
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். அனுபவம் மிக்க வேலை ஆட்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.4.2026
இன்று பிற்பகல் 01.32 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று காலை 09.26 வரை பரணி. பின்னர் கிருத்திகை.
இன்று அதிகாலை 12.27 வரை பிரீதி . பின்னர் இரவு 10.41 வரை ஆயுஷ்மான். பிறகு சௌபாக்கியம்.
இன்று அதிகாலை 02.38 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 01.32 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
ஒரு மனிதர் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றார். ₹1,40,000 பெற வேண்டி ஒரு படிவத்தை நிரப்பி காசாளரிடம் கொடுத்தார்.
காசாளர் பணத்தை கவனமாக எண்ணி, அவரது கைகளில் வைத்தார்.
அந்த மனிதர் பணத்தை எடுத்துக் கொண்டு, ஒரு முறை கூட எண்ணாமல் தனது பையில் வைத்துக் கொண்டார்.
ஆனால்...
அவர் உள்ளுக்குள் ஏற்கனவே ஒரு விஷயத்தை கவனித்திருந்தார்.
₹1,40,000 ஆக இருக்க வேண்டிய பணம்…
₹1,60,000 ஆக இருந்தது.
₹20,000 கூடுதலாக கிடைத்திருந்தது.
அவர் எதுவும் தெரியாதது போல அமைதியாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்.
ஆனால் கால்கள் முன்னே சென்றாலும்…
மனசு அங்கேயே நின்றுவிட்டது.
சில அடிகள் நடந்ததும்…
அவரது மனசு கேள்வி கேட்டது —
"இந்த ₹20,000-ஐ திருப்பிக் கொடுக்கலாமா?"
அடுத்த நொடியில்…
மற்றொரு சிந்தனை வந்தது —
"நான் தவறாக பணம் கொடுத்தால் யாராவது திருப்பிக் கொடுக்கிறாங்களா?"
மனசும்…
மனச்சாட்சியும்…
அவருக்குள் வாதம் செய்யத் தொடங்கின.
ஒரு நொடியில்…
"திருப்பிக் கொடு..." என்று மனச்சாட்சி சொன்னது.
அடுத்த நொடியில்…
"வைத்துக்கொள்..." என்று பேராசை சொன்னது.
அவர் நடந்து கொண்டே இருந்தார்…
ஆனால் உள்ளுக்குள் ஒரு அமைதியில்லாத போராட்டம் நடந்துகொண்டே இருந்தது.
"ஒருவரின் தவறை பயன்படுத்திக் கொள்வது சரியா?"
என்ற கேள்வி அவரை மேலும் வாட்டியது.
அவரது மனசு கனத்தது…
நெஞ்சு பதறியது…
அமைதி இல்லாமல் போனது…
இறுதியில்…
அவர் பையை திறந்து ₹20,000-ஐ எடுத்தார்.
அதை தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்து…
திரும்பி வங்கிக்கே நடக்கத் தொடங்கினார்.
அந்த திரும்பும் நடை…
அவருக்கு ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்தது.
ஒரு பெரிய சுமை இறங்கி விட்டது போல…
மனம் மெதுவாக லேசானது…
அவரது முகத்தில் அமைதியான சிரிப்பு மலர்ந்தது.
வங்கிக்குச் சென்ற அவர்…
அமைதியாக அந்த ₹20,000-ஐ காசாளரிடம் கொடுத்தார்.
காசாளர் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் முகத்தில் ஒரு பெரிய நிம்மதி தெரிந்தது.
அவர் உடனே ₹1,000 எடுத்துக் கொண்டு…
"ரொம்ப நன்றி… இதை எடுத்துக்கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கிக்கொடுக்குங்கள்…" என்றார்.
அந்த மனிதர் மெதுவாக சிரித்தார்.
"இல்லை... நன்றி வேண்டாம்... நன்றி சொல்ல வேண்டியது நான் தான்..." என்றார்.
காசாளர் ஆச்சரியப்பட்டார்.
"ஏன்?" என்று கேட்டார்.
அந்த மனிதர் அமைதியாக பதிலளித்தார்…
"உங்கள் தவறு…
என்னை நான் சோதிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தது.
இன்று…
என் பேராசையை நான் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டேன்.
அது தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.
நேர்மையை விட பெரிய பரிசு உலகத்தில் எதுவும் இல்லை."
அந்த நாளில்…
₹20,000-ஐ அவர் திருப்பிக் கொடுத்தார்.
ஆனால்…
அதற்கும் மேலான ஒன்றை அவர் பெற்றார்…
ஒரு அமைதியான மனசு…
ஒரு பெருமைமிகு உள்ளம்…
மற்றும்…
நேர்மையின் உண்மையான மதிப்பை உணர்ந்த ஒரு வாழ்க்கை.
















