Goose on lakeside
ஒரு பெரிய அரங்கம் - 25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.
நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள்.
அதில் ஒரு மனைவி
'அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்!
கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது, கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள்
அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும் விட்டுகொடுத்தலும் எல்லாமே நிறைந்திருந்தது.
அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100! எல்லோருக்குமே தெரிந்துவிட்டது அவர்கள் தான் ஜெயிக்கப்போகிறார்கள் என்று,
எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்தபின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும்
மிகக்குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்!
பூஜ்ஜியம் வாங்கியது வேறுயாரும் இல்லை, வரும்போதே சண்டைபோட்டுக்கொண்டு வந்தார்களே அவர்கள் தான்.
இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள்,
ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க, இல்லை arranged marriage என்றார்கள்.
எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள், திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு
35 வருடங்கள் என்று சொல்ல, எல்லோரும் சிரித்துவிட்டார்கள்!
35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள், அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்கள்
ஆனால் போட்டியின் நடுவர்,
இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள்தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்!
காரணம்...
எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரியவிஷயம் கிடையாது,
எந்த ஒரு மனஒற்றுமையும் புரிதலும் இல்லாவிட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இதுதான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்!
இருவரும் ஆனந்தக்கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக்கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்!
மருதாணி உடலுக்கு குளிர்ச்சி தரும், பெண்கள் கைகளில் அழகுக்காக வைத்துக் கொள்ளும் மருதாணியில் , மருத்துவ பல குணங்கள் நிறைந்துள்ளன .
* மருதாணி இலையுடன் சிறிது வசம்பு , மஞ்சள் , கற்பூரம் சேர்த்து அரைத்து , உள்ளங்காலில் ஆணி உள்ள இடத்தில் இடத்தில் பூசினால் , ஒரு வாரத்தில் கட்டி குணமாகும்
* மருதாணி இலையை அரைத்து , கைகளுக்கு வைத்தால் , உடல் வெப்பம் தணியும் * மருதாணி இலை மிகச்சிறந்த கிருமி நாசினி . இது , நம்மிடயே கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது .
நகசுத்தி வராமல் தடுக்கும் இருக்குமருதாணி இலை , பித்தத்தை அதிகமாக்கும் .
கை , கால்களில் தோன்றும் சேற்றுப் புண்கள் , அழுக்குப்படை , கட்டி . பித்தவெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும் மருந்து !
* மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் , தலைவலி குணமாகும் . அரிப்பு , படை போன்ற தோல் நோய்களுக்கு மிகவும் சிறந்தது , மருதாணி
* மருதாணி இலையை அரைத்து , அம்மைப் புண்களுக்கு பூசினால் , நான்கைந்து நாளில் குணமாகும் .
கட்டிகளுக்கும் அரைத்துப் பூசலாம் இள நரையை அகற்றுவதற்கு பயன்படுகிறது .
இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் , அரை லிட்டர் விட்டு , மருதாணி இலை , 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும் . இலையின் சாறு எண்ணெயில் சேர்ந்து சிவப்பாக மாறிவிடும் . இந்த தைலத்தை தினமும் தலைக்கு தேய்க்க , முடி வளரும் , நரை மறையும் மருதாணி இலையை நன்கு நீர் விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை , கால்களிலும் , உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் , கை , கால் எரிச்சல் உடனே நீங்கும் .
கங்கைக்கரையோரம் ராமகிருஷ்ணர் சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்து கொண்டு இருந்தார்.
அவரது சீடர் விவேகானந்தர், குருநாதரின் வாய் அசைவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தார்.
திடீரென அவர்களின் கவனம் திருப்பும் விதத்தில், நாய்கள் வேகமாகக் குரைத்தன.
குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்பைக் கவ்விக்கொண்டு ஒரு முரட்டு நாய் வெளியில் குதித்து ஓடியது.
அந்த நாயைச் சுற்றிக்கொண்ட மற்ற நாய்கள் வேகமாகக் குரைத்தன.
முன்பற்கள் தெரிய ஆக்ரோஷமாக நாய்கள் குரைப்பதை முரட்டு நாய் சட்டை செய்யவே இல்லை.
வாயிலிருக்கும் எலும்பைச் சுவைக்க வேண்டும் என்பதிலேயே அதன் கவனம் இருந்தது.
இதைக்கண்ட ராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம், இந்த நாயிடமிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள்?, என்றார்.
ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள்.
ஒரு சீடர், நாய்களின் இயல்பு இதுதானே.
மற்ற நாய்கள் பார்த்திருக்க ஒரு நாய் தின்றுகொண்டிருக்கும், என்றார்.
வலிமை தான் எப்போதும் ஜெயிக்கும்.
வலிய நாய் ஜெயித்து விட்டது அவ்வளவே, என்றார் மற்றொருவர்.
**விவேகானந்தரோ தத்துவரீதியாக இந்த காட்சியை விவரித்தார்.
நாய் அமைதியாக உணவைச் சுவைப்பது போல, கடவுளை அறிந்த ஞானிகளும் அமைதியில் ஒன்றி விடுவார்கள்.
உணவு கிடைக்காத மற்ற நாய்கள் குரைப்பதைப் போல, கடவுளை அறியாதவர்கள் மட்டுமே, அவரைப் பற்றி எதையாவது பிதற்றிக் கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல் ஆரவாரம் செய்வார்கள், என்றார்.
ஆம்...கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை.
பக்திவழியில் செல்பவர்களுக்கு பிதற்றல்காரர்களைப் பற்றி என்ன கவலை !!
பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம் .
1.பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.
2.தரைப்பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ்சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.
3.இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.
4.ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
5.அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது.
6.இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.
7.இந்த கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் உள்ளது . சுண்ணாம்பு சத்து நார் சத்து இரும்பு சத்து அடங்கியது . இது தாதுவை கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும்.
8.உடல் வரட்ச்சியை அகற்றும். உள சூட்டை போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன . பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.
9.ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.
10.இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.
11.ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 40, கொழுப்பு 0,
சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 ஐயு (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.
12.இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும்.
13.இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும். பசலை கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்.
2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமூக வலைதளங்களில் தற்போது 'பெர்பெக்ட் பிப்ரவரி' என்ற பெயரில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம், காலண்டரில் அமைந்துள்ள ஒரு அபூர்வமான மற்றும் கச்சிதமான ஒழுங்குமுறையாகும். 2026 ஒரு லீப் ஆண்டு அல்ல. அதனால், அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வழக்கம்போல 28 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த 28 என்ற எண் 7-ஆல் சரியாக வகுபடக்கூடியது என்பதால், பிப்ரவரி மாதம் முழுமையாக நான்கு வாரங்களாக பிரிந்து அமைகிறது.
முக்கியமாக, 2026 பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதனால் மாதத்தின் கடைசி நாள் பிப்ரவரி 28-ம் தேதி சனிக்கிழமை முடிகிறது. காலண்டரை நேரில் பார்த்தால், இந்த பிப்ரவரி மாதம் எந்த இடையூறும் இல்லாமல் செவ்வக வடிவில் மிக அழகாக அமையும். எந்த ஒரு நாளும் அடுத்த வாரத்திற்கு தள்ளப்படாமல், நான்கு வரிசைகளில் சரியாகப் பொருந்தி இருப்பதே இதன் சிறப்பாகும்.
கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்களாகும்.
இந்த ஐந்து மரங்களும் பாற்கடலைக் கடையும் பொழுது வந்ததை இந்திரன் தன் தேவலோகத்திற்காக எடுத்துக் கொண்டார்.
நிலத்தில் விழுந்த பின்னும் கடவுளுக்குச் சூட்டப்படும் ஒரே ஒரு மலர் பாரிஜாதமே.
இப் பூக்களை மரத்திலிருந்து கொய்து இறைவனுக்குச் சூட்டக் கூடாது என்றும் சொல்கிறார்கள்.
இந்த மரத்தில் இருந்து பூக்கும் மலர்கள் இனிய மணம் வீசும் தன்மை கொண்டவை.
பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம். இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது.
புட்ப விதி என்னும் நூலில் பவள மல்லிகை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவளமல்லியும் ஒன்று.
இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும்.
பவளமல்லிமரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.
பாரிஜாதம் என்ற இந்த பவளமல்லி, திருமாலுக்கு உகந்தது.
பவளமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருக்கிறார்..
பவளமல்லிகை இந்திரனின் மனைவி சாச்சிக்கு மிகவும் பிடித்தமானது ஆகும்.
ஒரு முறை நாரதர், தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மலர்களால் ஆன மாலையைக் கொண்டு வந்து கிருஷ்ணரிடம் கொடுத்தார்.
அந்த மாலையை கிருஷ்ணர், ருக்மணியிடம் கொடுத்தார். இதையறிந்த சத்யபாமா, தேவலோக மலர் மாலையை தனக்கு தராதது பற்றி கேட்டு கோபித்துக் கொண்டாள்.
உடனே கிருஷ்ணர், “தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மரத்தையே கொண்டு வந்து உன்னுடைய அந்தபுரத்தில் வைக்கிறேன்” என்று கூறினார். ஆனால் இந்திரன், தேவலோக மரத்தை பூமிக்கு கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்தார்.
கிருஷ்ணருக்கும் இந்திரனுக்கும் சண்டை மூளும் நிலை வந்ததை அறிந்து ரிஷிகள் பலர் பேசி இந்திரனை சமாதானம் செய்தனர்.
அதன்பிறகு கிருஷ்ணர், பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்து, சத்யபாமாவின் அந்தபுரத்தில் வைத்தார்.
அதே நேரத்தில் அதில் இருக்கும் மலர்கள் ருக்மணியின் அந்தபுரத்தில் விழும்படியாகவும் செய்து, இருவருக்குமான பிணக்கை தீர்த்து வைத்தார்.
வாயு புராணம் கூறும் வேறு ஒரு கதைப்படி பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால், சூரியன் இளவரசியை ஏற்கவில்லை. இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள்.
இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்துதான் பாரிஜாதம் என்ற செடி உருவானது.
சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது. இதனால்தான் இதனை வருந்தும் மரம் என்றும் அழைப்பார்கள்.
தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதை தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் .
பவளமல்லிமரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. பவளமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத்தன்மை உடையதாக இருக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து. கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது.
பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது.
பவளமல்லி மரத்தின் வேரை மென்று தின்றால் பல்லீறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும்.
விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும்.
இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது.
பவள மல்லிவிதையை பொடி செய்து அதை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடி வளரும்.
தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருவைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.
நடிகை கனகாவுடனான சந்திப்பு ஏன் என்பது குறித்து நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார். கரகாட்டக்காரன் 2 படம் குறித்தும் இருவரும் பேசியதாக சொல்லப்படுகிறது. இவர்களின் சந்திப்பு குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் பொற்காலம் என அழைக்கப்படும் 1980-90களில், சில படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அவற்றில் ஒன்று, 1989 ஜூன் 16 அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'கரகாட்டக்காரன்' திரைப்படம். ராமராஜன் மற்றும் கனகா நடித்திருந்த இந்தத் திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு புதிய மைல்கல்லைப் பதித்தது.
முத்தையா கேரக்டரில் ராமராஜனும், காமாட்சி என்ற கதாபாத்திரத்தில் கனகாவும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி சுமார் 37 ஆண்டுகள் ஆன போதும் இந்த நட்சத்திர ஜோடி, இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
கிராமியக் கலைஞர்களின் வாழ்வியலைச் சித்தரித்த இத்திரைப்படம், அது வெளியான காலத்திலேயே மாபெரும் வெற்றியடைந்தது. கதையின் எளிமையான இயல்பு, கிராமியக் கலாச்சாரத்துடன் ஒன்றிப்போன கதாபாத்திரங்கள், மற்றும் இசைஞானி இளையராஜாவின் காலத்தால் அழியாத பாடல்கள் என அனைத்தும் இணைந்து 'கரகாட்டக்காரன்' படத்தை ஒரு மெகா ஹிட்டாக மாற்றின.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம், ரசிகர்களிடையேயும் தமிழ் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, நடிகர் ராமராஜன், தன்னுடன் நடித்த கனகாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர்களுக்கிடையே நடந்த இந்த உரையாடல், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ராமராஜன், "நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள் என அண்மையில் கேள்விப்பட்டேன். உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது? நான் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்" எனக் கேட்டார். அதற்கு கனகா, "உங்களுக்கு ஏன் அலைச்சல்? நானே உங்களைச் சந்திக்க வருகிறேன்" என்று பதிலளித்தார். இவர்களின் உரையாடல், பல ஆண்டுகள் கடந்தும் தொடரும் அவர்களது நட்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தியது.
இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, அந்தச் சந்திப்பு நேற்று முன் தினம் நடைபெற்றது. கனகா, சென்னை நெற்குன்றத்தில் உள்ள ராமராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று, அவருடன் நீண்ட நேரம் உரையாடினார். இந்த சந்திப்பு மற்றும் அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டது.
பிரபலங்கள் என்றாலும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை, உடல்நலம் குறித்த தகவல்கள் மக்களுக்குத் தெரியாமல் இருப்பது சாதாரணமே. இதனால், கனகாவின் இந்த நேரடிச் சந்திப்பு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ஷ்டத்தைப் போலத் தோன்றியது.
சந்திப்பின்போது, இருவரும் தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ந்தனர். ராமராஜன் பேசுகையில், "பழைய விஷயங்கள் பலவற்றைப் பரிமாறிக் கொண்டோம். ரசிகர்கள் 'கரகாட்டக்காரன் 2' குறித்துக் கேட்ட கேள்விகளும் இந்த உரையாடலில் இடம்பெற்றன" என்றார்.
மேலும், "அவரது உடல்நிலையும் மனநிலையும் இதற்கு ஒத்துழைக்குமா என்பது தெரியவில்லை, ஆனால் அவரை நேரில் பார்க்க வேண்டுமென்ற என் ஆசை நிறைவேறியது. தாய், தந்தையை இழந்து வெறுமையில் வாழ்ந்து வந்த கனகாவை சந்தித்து மகிழ்ந்தேன். இந்தச் சந்திப்பு என் நினைவுகளில் பசுமையாய் என்றும் இருக்கும் ஒரு நிகழ்வாகும்" என்றும் ராமராஜன் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.
'கரகாட்டக்காரன்' போன்ற படங்களும், அதில் நடித்த நட்சத்திர ஜோடிகளும் 36 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் மனதில் உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதை இந்தச் சந்திப்பு காட்டுகிறது. கால மாற்றங்களை மீறி, இப்படம் உருவாக்கிய நினைவுகளும், நடிகர்களிடையே உள்ள அன்பும் நட்புறவும், ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் காதலை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
இந்த நிகழ்வு, தமிழ் திரையுலகின் பழைய கதாநாயகர்களும் கதாநாயகிகளும் எக்காலத்திலும் ரசிகர்களின் நினைவுகளில் உயிருடன் இருப்பதை உணர்த்தும் ஒரு அரிய தருணம். ராமராஜன் - கனகா சந்திப்பு, 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தின் நினைவுகளைத் தாண்டி, நீண்டகால நட்பு மற்றும் மனித உறவுகளின் மதிப்பையும் அழுத்தமாக வலியுறுத்துகிறது.
இச்சந்திப்புப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவ, ரசிகர்களின் விமர்சனங்களும் பாராட்டுகளும் குவியத் தொடங்கின. தமிழ் சினிமாவில் பழைய ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் என்றும் நேசிக்கப்படுபவர்கள் என்ற நிதர்சன உண்மையை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நெருங்கியவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய மாற்றம் ஏற்படும். சமுக பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் உருவாகும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். பூர்விக சொத்துக்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மிதுனம்
எதிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். அணுகுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
கடகம்
அரசு பணிகளில் சாதகமான சூழல்கள் அமையும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகம் சார்ந்த புதிய சிந்தனைகள் உண்டாகும். கல்வி பணிகளில் ஆர்வம் உண்டாகும். கமிஷன் துறைகளில் லாபம் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
சிம்மம்
திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் மூலம் அலைச்சல் உண்டாகும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வீடு மாற்றம் குறித்த எண்ணம் பிறக்கும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கன்னி
மாறுபட்ட அணுகுமுறையில் செயல்படுவீர்கள். சொத்து விற்பது வாங்குவதில் லாபகரமான சூழல் அமையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்புகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்து வந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். எழுத்து சார்ந்த துறையில் முன்னேற்றம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பழகும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் விவேகம் வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விருச்சிகம்
எண்ணிய சில பணிகள் நிறைவு பெறுவதில் தாமதம் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வரவில் இருந்த நெருக்கடிகள் ஓரளவு குறையும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் தெளிவுகள் பிறக்கும். குண இயல்புகளில் மாற்றங்கள் காணப்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். அரசு தொடர்பான செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். உறுதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தடைபட்ட பணிகள் முடிவு பெறும். உறவினர்களால் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
அரசு செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வருவாய் நெருக்கடியால் மன அமைதியற்ற நிலை ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இலக்குகளை முடிப்பதில் அலைச்சல் ஏற்படும். குறுகிய பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். வியாபார பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். இணையம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்து செல்லவும். கூட்டு வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்
விசுவாவசு வருடம் தை மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை 15.1.2026
இன்று இரவு 09.45 வரை துவாதசி. பின்னர் திரியோதசி
இன்று அதிகாலை 04.55 வரை அனுஷம். பின்னர் கேட்டை.
இன்று இரவு 10.26 வரை விருத்தி. பின்னர் துருவம்.
இன்று காலை 08.44 வரை கௌலவம். பின்னர் இரவு 09.45 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.00 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
1) அமைதியாக இருங்கள் - உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றால்.
2) அமைதியாக இருங்கள் - நீங்கள் ஒரு அப்பட்டமான பொய் சொல்ல ஆசைப்படும் போது.
3) அமைதியாக இருங்கள் - உங்கள் வார்த்தைகள் வேறு ஒருவரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் என்றால்.
4) அமைதியாக இருங்கள் - உங்கள் வார்த்தைகள் நட்பை சேதப்படுத்தினால்.
5) அமைதியாக இருங்கள் - நீங்கள் மோசமாக உணரும்போது.
6) அமைதியாக இருங்கள் - கத்தாமல் சொல்ல முடியாவிட்டால்.
7) அமைதியாக இருங்கள் - உங்கள் வார்த்தைகள் இறைவன் அல்லது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் மோசமான பிரதிபலிப்பாக இருந்தால்.
8) அமைதியாக இருங்கள் - உங்கள் வார்த்தைகளை நீங்கள் திரும்பி பெற வேண்டியிருந்தால்.
9) அமைதியாக இருங்கள் - நீங்கள் ஏற்கனவே ஒரு முறைக்கு மேல் கூறியிருந்தால்.
10) அமைதியாக இருங்கள் - நீங்கள் ஒரு பொல்லாத நபரைப் புகழ்ந்து பேச ஆசைப்படும் போது.
11) அமைதியாக இருங்கள் - நீங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும் போது.
"யாரொருவர் வாயையும் நாவையும் பாதுகாப்பாரோ அவர் தனது ஆன்மாவை பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றுகிறார்".
என் அம்மாவைத் தன் அம்மா மாதிரி நினைச்சவன் சந்திரபாபு.
நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் என் வீட்லயே கிடப்பான். திடீர்னு நடுராத்திரியில வந்து நின்னுட்டு, 'எனக்கு உப்புமா வேணும், ரவா தோசை வேணும்’னு உரிமையாக் கேட்பான். எனக்கும் அவனுக்கும் அவ்வளவு நட்பு.
டேய் விசு... நீ எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ரொம்ப அருமையா டியூன் போடுறே. எனக்குத்தான் சுமாரா போடுறே’னு சண்டை போடுவான். அவனுக்கு நான் போட்ட பாட்டுல எனக்கு ரொம்பப் பிடிச்சது, 'பிறக்கும்போதும் அழுகின்றான்... இறக்கும்போதும் அழுகின்றான்’ பாட்டு. இந்தப் பாட்டைப் பத்திச் சொல்றப்ப ஒரு சம்பவத்தைச் சொல்லணும்.
இந்தியா - பாகிஸ்தான் யுத்த நிதி கொடுக்குறதுக்காக, தமிழ் சினிமா உலகத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் சிவாஜி தலைமையில் டெல்லிக்குப் போயிருந்தோம். சந்திரபாபுவும் வந்திருந்தான். அப்போ ஜனாதிபதியா இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கோம்னு கேள்விப்பட்டதும் எங்களைச் சந்திச்சார் அவர்.
அப்போ அவர் முன்னால 'பிறக்கும்போதும் அழுகின்றான்... இறக்கும்போதும் அழுகின்றான்’ பாட்டை சந்திரபாபு பாடிக் காட்டினான். டாக்டர் ராதாகிருஷ்ணன் பாட்டை ரொம்ப ரசிச்சுக் கேட்டுட்டு இருந்தப்ப, இந்தப் படுவா ராஸ்கல் என்ன பண்ணான் தெரியுமா? பாடிக்கிட்டே சர்ருனு தாவிப்போய் அவர் மடில உட்கார்ந்துட்டு, அவர் தாவாங்கட்டையைப் பிடிச்சுக்கிட்டு, 'நீ பெரிய ஞானஸ்தன்’னு சொல்லிட்டான். நாங்க பதறிப்போயிட்டோம். ஆனா, டாக்டர் ராதாகிருஷ்ணன் சிரிச்சுட்டே, அவனை அணைச்சுக்கிட்டார்.




















