Category:
Created:
Updated:
ஜீ 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியை சென்றடைந்துள்ளார்.
இத்தாலி பிரதமரின் அழைப்பிற்கு அமைய அவர் அங்கு சென்றுள்ள நிலையில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
நேற்று (13) ஆரம்பமான ஜீ 7 உச்சி மாநாடு நாளை (15) வரை இத்தாலியில் இடம்பெறவுள்ளது.
ஜீ 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளார்.
இத்தாலி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் பிரதமர்களையும் அவர் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000