சினிமா செய்திகள்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன்
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.சுற்றம் காத்த
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
Ads
 ·   ·  7526 news
  •  ·  5 friends
  • I

    9 followers

குற்றச்சம்பவங்களின் குறைவிற்கு யுக்தியவே காரணம்

2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் பொலிஸ் நிலையங்களில் பதிவாகும் குற்றங்கள் மற்றும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையில் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் 10 ஆம் திகதி 2024 முதல் 17 ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்தில் பதிவாகிய குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விபத்துக்கள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து இது தெரியவந்துள்ளது.அதன்படி, 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ஆம் ஆண்டின் ஏப்ரல் விடுமுறை காலத்தின் 08 நாட்களில்,

கொலை சம்பவங்கள் 26ல் இருந்து 20 ஆக குறைந்துள்ளது.

காயங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் 507 வழக்குகளில் இருந்து 389 வழக்குகளாக குறைந்துள்ளன.

தாக்குதல் வழக்குகள் 4,431 வழக்குகளில் இருந்து 4,018 வழக்குகளாக குறைந்துள்ளன.

சர்ச்சைகள்/மோதல் சம்பவங்கள் 4,425ல் இருந்து 3,936 சம்பவங்களாக குறைந்துள்ளன.

சொத்து/பணம் திருட்டு வழக்குகள் 339ல் இருந்து 244 ஆக குறைந்துள்ளது.

வீடுகளை உடைக்கும் சம்பவங்கள் 195ல் இருந்து 150 ஆக குறைந்துள்ளது

நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 29ல் இருந்து 23 ஆக குறைந்துள்ளது.

தீக்குளிப்புபதிவுகள் 48ல் இருந்து 46 ஆக குறைந்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவிக்கும் சம்பவங்கள் 9ல் இருந்து 7 ஆக குறைந்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் புத்தாண்டு காலத்தில் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையே இதற்குக் காரணம் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களுக்கு எதிரான 'யுக்திய' நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவும், நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்ற வகையில் குற்றத் தடுப்புத் திட்டங்களைத் தயாரித்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்

  • 849
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads