சினிமா செய்திகள்
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
மடோனா செபாஸ்டியனின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
நடிகர் மயில்சாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு
நடிகர் அரவிந்த்சாமி பெற்ற புத்தக அனுபவம்
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology O
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
Ads
 ·   ·  7979 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பாராளுமன்றம் செயல்படாத நாட்டில் ஜனநாயகம் இருக்காது - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

ஜனநாயகத்தின் இதயம் பாராளுமன்றம் எனவும் பாராளுமன்றம் செயற்படாத நாடு கட்டுப்பாட்டின்றி வழிதவறிச் செல்லும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.சட்டவாக்கம் இன்றி நீதித்துறை அல்லது நிறைவேற்று அதிகாரம் இயங்க முடியாது எனவும், இந்த மூன்று தூண்களும் இணைந்தால் நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க முடியும் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.கடவத்த மஹாமாயா மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டார்.கடவட மஹாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பண கூட்டம் திங்கட்கிழமை (19) பழைய பாராளுமன்றமான தற்போதைய ஜனாதிபதி அலுவலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைந்து இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர் பாராளுமன்ற மாணவர்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வாழ்த்து தெரிவித்ததோடு பாராளுமன்ற வரலாறு குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர் பாராளுமன்ற நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்னாயக்க சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவிக்கையில்,இந்த மாணவிகள் இன்று பழைய பாராளுமன்றத்தில் கூடியுள்ளனர். இந்த பாராளுமன்றத்தில் இருந்தே நாட்டுக்கு தேவையான சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தயாரிக்க அன்றைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர். பேச்சு சுதந்திரத்தை புரிந்து கொள்ளும் இடம் பாராளுமன்றம் மட்டுமே. அங்கிருக்கும் சிறப்புரிமைகளின் நல்ல விடயங்களைப் போலவே தவறான விடயங்களைப் பற்றியும் பேசுகிறார்கள்.பாராளுமன்றத்தில் ஜனநாயகம் சிறப்பாகவே இருக்கிறது. பாராளுமன்ற செயற்பாட்டைப் பார்க்கும் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் எம்.பி.க்கள் என்னைக் குற்றம் சாட்டுவதை நீங்கள் காணலாம். அந்த வகையில் பாராளுமன்றம் ஜனநாயகத்தின் இதயம். பாராளுமன்றம் செயல்படவில்லை என்றால் நாட்டில் ஆட்சி இல்லை. எனவே, அனைத்தும் பாராளுமன்றத்தின் செயல்பாட்டின் மூலம் செயல்படுகின்றன.சட்டவாக்கம் இல்லாமல் நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் என்பவற்றுக்கு தனித்து இயங்க முடியாது. எனவே, ஒரு நாட்டின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதில் நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் ஆகியன சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் மூன்று சுயாதீன நிறுவனங்களாக உள்ளன. மக்களின் வாக்குகளின் மூலம் தான் சட்டவாக்கத்திற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த தெரிவுகள் அனைத்தும் ஜனநாயக ரீதியில் நடைபெறுகின்றன. உலகத்தைப் பார்க்கும் போது, ஜனநாயகம் இல்லாத ஒரு நாட்டின் கொடூரமான போக்கைக் காணலாம். ஜனநாயகம் இல்லையென்றால், நாளாந்தம் கொலைகள் நடக்கும் எந்தத் துறையினதும் கட்டுப்பாட்டின்றி இயங்காத நாடும் உருவாகும்.அப்போது மக்கள் அந்த நாட்டில் இருக்க விரும்ப மாட்டார்கள். அந்த மக்கள் வேறு நாட்டிற்குச் சென்று அகதிகளாக வாழ முடிவு செய்வர். எனவே, மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக பாடுபடுவது தொடர்பான சட்டங்களை இயற்றும் திறன் பாராளுமன்றத்திற்கு உள்ளது. இன்று இங்குள்ள பிள்ளைகளில் ஒருவர் எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராகி நாட்டின் சட்டங்களை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வாழ்த்துகிறேன்.தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலக உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக்க தங்கொல்ல, இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் பாராளுமன்ற பணிக்குழாம் பிரதானி சமிந்த குலரத்ன மற்றும் கடவத்த மஹாமாயா மகளிர் கல்லூரி ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

  • 180
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads