சினிமா செய்திகள்
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
மூத்த நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் காலமானார்
பழம்பெரும் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித
நடிகர் மாதவனும் இயக்குநர்  கே எஸ் ரவிக்குமாரும்
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் எந்த கேள்வி கேட்டாலும் வித்தியாசமாக சுவாரசியமாக பதில் சொல்பவர், சமீபத்தில் மாதவன் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி
அரிய ஆவணம்
"7-9-1949"இடையபட்டி நேத்தாஜி பாடசாலை கட்டிட நிதிக்காககலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின்கிந்தனார்காலட்சேபம் 7-9-49 அன்று நடைபெற்றது
மனித வணக்கம்  -  கமல்ஹாசன் கவிதை
தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ உதறிய மைபடர்ந்தது கவி
நடிகை மலைகா அரோரா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா?
நடிகை மலைகா அரோரா கவ்ஹாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்ததிலிருந்து ஒரு பெரிய கிசுகிசு தொடங்கியது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்
விஜய் சேதுபதியை இயக்குகிறார் புரி ஜெகன்நாத்
பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘ல
Ads
 ·   ·  2814 news
  •  ·  1 friends
  • 2 followers

தென் கொரியாவில் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்த இராணுவச் சட்டம்

தென்கொரியாவில் (South Korea) நேற்று (03) இரவு தொலைக்காட்சியில் தோன்றி, அவசர இராணுவ சட்டத்தை அறிவித்த அந்த நாட்டு ஜனாதிபதி யூன் சாக் யோல், சில மணி நேரத்தில், அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார்.

முன்னதாக, இந்த அவசர நிலை அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.

அத்துடன் . எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த சில மணி நேரங்களில், அவசர நிலை அறிவிப்பை திரும்பப் பெறுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

கொரியாவில் அடுத்த ஆண்டுக்கான பாதீட்டை தாக்கல் செய்வதில் அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இதன் காரணமாக அங்குத் தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. இந்த நிலையிலேயே, கம்யூனிச சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க அவசர நிலையை நடைமுறைபடுத்துவதாக ஜனாதிபதி யூன் சுக் அதிரடியாக அறிவித்திருந்தார்.

வட கொரியாவின் கொம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் தாம் அவசரக்கால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துவதாக, தொலைக்காட்சி உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் வாழ்வாதாரம் மீது அக்கறை இல்லை.. சிறப்பு விசாரணைகள் மற்றும் நீதி விசாரணையில் இருந்து தங்கள் தலைவரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே இப்போது நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

தென் கொரியாவில் (South Korea) தற்போது அவசரகாலநிலை சட்டத்தை பிரகடனப்படுத்தும் வகையில் இராணுவ சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி யூன் சுக் யோல் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தென் கொரியாவில் தற்போது இடம்பெற்று வரும் கம்யூனிச அமைப்புக்களின் கிளர்ச்சிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடகொரிய (North Korea) ஜனாதிபதி, கிம் ஜோங் உன்னால் தூண்டி விடப்பட்டதாக கூறப்படும் கிளர்ச்சியை முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் யூன் சுக் யோல் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, தென் கொரியாவின் தலைநகர் சியோல் உட்பட பல நகரங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சியோலில் உள்ள தேசிய நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே மனிதக் கேடயம் அமைக்க முயற்சிக்கும் மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் பிறப்பித்துள்ள இந்த அறிவிப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றில் பெரும்பான்மையுடனான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அவர் இவ்வறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அந்நாட்டு மக்கள் நாடாளுமன்றத்திற்கு முன் குவிந்துள்ளதுடன் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 442
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads