சினிமா செய்திகள்
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
மூத்த நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் காலமானார்
பழம்பெரும் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித
நடிகர் மாதவனும் இயக்குநர்  கே எஸ் ரவிக்குமாரும்
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் எந்த கேள்வி கேட்டாலும் வித்தியாசமாக சுவாரசியமாக பதில் சொல்பவர், சமீபத்தில் மாதவன் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி
அரிய ஆவணம்
"7-9-1949"இடையபட்டி நேத்தாஜி பாடசாலை கட்டிட நிதிக்காககலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின்கிந்தனார்காலட்சேபம் 7-9-49 அன்று நடைபெற்றது
மனித வணக்கம்  -  கமல்ஹாசன் கவிதை
தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ உதறிய மைபடர்ந்தது கவி
நடிகை மலைகா அரோரா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா?
நடிகை மலைகா அரோரா கவ்ஹாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்ததிலிருந்து ஒரு பெரிய கிசுகிசு தொடங்கியது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்
விஜய் சேதுபதியை இயக்குகிறார் புரி ஜெகன்நாத்
பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘ல
Ads
 ·   ·  2814 news
  •  ·  1 friends
  • 2 followers

சீரற்ற காலநிலை - ஒத்திவைக்கப்பட்டிருந்த உயர்தரப் பரீட்சைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு கடந்த நவம்பர் 27 ஆம் திகதிமுதல் 6 நாட்களுக்குக் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் இன்றுமுதல் மீண்டும் பரீட்சைகள் இடம்பெறும் எனவும் ஏலவே விநியோகிக்கப்பட்ட பரீட்சை கால அட்டவணைக்கு ஏற்ப இன்றையதினம் பரீட்சை நடத்தப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்ட அவர், ஒத்திவைக்கப்பட்ட 6 நாட்களுக்கான பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமையும், நவம்பர் 28ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமையும் இடம்பெறும்.

அதேநேரம் கடந்த 29ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும், நவம்பர் 30 ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமையும் நடைபெறும்.

அத்துடன், டிசம்பர் 2 ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 30 ஆம் திகதி திங்கட்கிழமையும், நேற்றையதினம் இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 31 ஆம் திகதி செவ்வாய் கிழமையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தொடர்ந்து சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகள் தங்களுக்கு அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

000

  • 588
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads