சினிமா செய்திகள்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
Ads
 ·   ·  2401 news
  •  ·  1 friends
  • 1 followers

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும்போது அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும் – ஐ. தே. கட்சியின் தவிசாளர் வஜிர

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும். வரலாறு பூராகவும் இருந்த அரச தலைவர்களில் அதிகமானவர்கள் அகால மரணமடைந்துள்ளனர்.

அதனாலே பிரபுக்கள் பாதுகாப்பை, பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியலமைப்பின் ஊடக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

காலி மாவட்டத்தில் கரந்தெனிய தொகுதியில் கடந்த வியாழக்கிழமை (30) இடம்பெற்ற அரசியல் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் -

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் பலரும் கதைத்து வருகின்றனர். அரசங்கம் அவர்களின் பாதுகாப்பை குறைத்து வருவது தொடர்பாகவும் பலரும் கதைத்து வருகின்றனர்.

இவ்வாறு இருந்தாலும் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

குறிப்பாக மஹிந்த ராபக்ஷ இந்த நாட்டில் 30 வருடமாக இருந்து வந்த பங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இறுதியாக தலைமைத்துவம் வங்கிய ஒருவர்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனிமையில் யாழ்ப்பாணத்துக்கு சென்றுவர முடியுமா? இந்தியாவின் புத்தகயாவுக்கு சென்றுவர முடியுமா?.

அவரை வெறுக்கக்கூடிய நபர்கள் இன்னும் இருக்கலாம். அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கலாம். அதனால் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் இதனைவிட புத்திசாதூரியமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

எமது நாட்டின் அரச தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என நூற்றுக்கும் அதிகமானவர்கள் அகால மரணமடைந்துள்ளனர்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜாபக்ஷ், கோத்தாபய ராஜபக்ஷ் போன்றவர்கள் மயிரிலையில் உயிர் தப்பி இருக்கி்ன்றனர். ஜே.ஆர். ஜயவர்த்தனவை நாடாளுமன்றத்தில் குண்டு வீசி கொல்ல முயற்சித்தனர்.

2001 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது வீடமைப்பு அமைச்சராக நானே இருந்தேன். அப்போது கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வீடுகளை மீள ஒப்படைக்குமாறு நான் அறிவித்திருந்தேன்.

அபோது லக்ஷ்மன் கதிர்காமரின் வீட்டையும் மீள ஒப்படைக்குமாறு தெரிவித்திருந்தேன். இதன்போது அன்று பிரதமராக இருந்த ரணில் விக்ரமசுங்க, கதிர்காமருக்கு வழங்கப்பட்டிருந்த வீட்டை தொடர்ந்து அவருக்கு வழங்குமாறும் தெரிவித்தார்.

அப்போது அவர் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்தார். அது மாத்திரமல்லாது, அவரின் பாதுகாப்புக்கு 140 பாதுகாவலர்கள் மற்றும் குண்டு துளைக்காத வாகனம் ஒன்றையும் ரணில் விக்ரமசிங்க வழங்கியிருந்தார்.

ஆனால் 2004 ஆம் ஆண்டு எமக்கு ஆட்சி அதிகாரம் இல்லாமல் போனது. அந்த காலப்பகுதியில் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டார். இதுதான் வரலாறு.

அதனால் அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டும்.

அதனால் அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ்வின் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ் நாட்டு மக்கள் அனைவரும் எங்கு வேண்டுமானாலும் பாதுகாப்பாக சென்றுவர வழி ஏற்படுத்திக்கொடுத்த ஒரு தலைவர்.

அதனால் ஒருசில விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். எமது தலைவர்கள் எமது நிலைப்பாட்டுக்கு இணங்கினாலும் இல்லாவிட்டாலும் அவர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது.

அதனாலே பிரபுக்களின் பாதுகாப்பை, பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியலமைப்பின் ஊடக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 327
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads