சினிமா செய்திகள்
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
Ads
 ·   ·  2853 news
  •  ·  1 friends
  • 2 followers

முதல் 25 நாள்களில் 129 வீதி விபத்தக்கள் பதிவு - பொலிஸ் ஊடகப்பிரிவு

2025 ஜனவரி 1 முதல் 25ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கை 129 என்றும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 24 நாட்களில் 26 வீதி விபத்துகள் குறைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் குறித்த காலகட்டத்தில் விபத்துக்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 155 என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வீதி ஒழுங்கைப் பேணுவதற்கும் விபத்துகளைக் குறைப்பதற்கும் பொலிஸார் கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி விசேட போக்குவரத்து நடவடிக்கையைத் தொடங்கியது.

இந்த நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு, நாளாந்தம் வீதி விபத்துக்களினால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு மற்றும் ஏனைய விபத்துக்கள் பற்றிய தகவல்கள் வந்ததாகவும், அதன்படி, ஒரே விபத்தில் நான்கு அல்லது ஐந்து பேர் இறந்த சம்பவங்களும் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, குற்றம் மற்றும் போதைப்பொருட்களை ஒடுக்குவதற்கான விடேச நடவடிக்கையும் கடந்த 12 ஆம் திகதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 13 நாட்களில், 277,572 தனிப்பட்ட சோதனைகளும் 104,844 வாகன சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.

குற்றங்களுக்கு நேரடியாக பங்களித்து சட்டத்திலிருந்து தப்பித்துவந்த 249 நபர்கள் மற்றும் 4,020 பிடியாணை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 3 மாதங்களில், துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தொடர்புடைய 84 சந்தேக நபர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட T56 துப்பாக்கிகள் மூன்றும், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தக் குற்றங்களுக்குப் பின்னால் உள்ள முக்கிய குற்றவாளிகள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருவதாகவும், அவர்களைக் கைது செய்து அவர்களுக்கு எதிராகச் சட்டத்தை அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 3 மாதங்களில், இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

000

  • 518
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads