சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  13 news
  • 3 members
  • 3 friends

அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை! - சத்குரு பேச்சு

அஜர்பைஜானில் பாகு நகரத்தில் சுற்றுச்சூழல் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டுள்ள சத்குரு அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மண் வளம் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். 

சத்குரு பேசுகையில், நாம் சூழலியல், காலநிலை ஆகியவற்றை பற்றி பேசும்போது இது மனித உயிர், வாழ்வாதாரம் மற்றும் மனிதர்களின் வாழ்க்கை முறை பற்றியது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பூமியின் ஆரோக்கியம் என்பது மனிதர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் உயிர்போடு இருப்பதில் இருக்கிறது. நுண்ணுயிர், பூச்சி புழு மற்றும் மற்ற அனைத்து சிறிய உயிர்களும் வலிமையாக வாழவில்லை என்றால் நாம் வலிமையாக வாழ முடியாது. 

நீண்ட காலமாக நிலம் பசுமை போர்வையின்றி தரிசாக விடப்படுவதால் அதிகமான உயிரினங்கள், குறிப்பாக நுண்ணுயிர்கள் அழிந்து போகின்றன. இந்த போக்கு பூமியை அழித்துவிடும். உயிரினங்கள் என்று சொன்னால் நாம் பாண்டா, புலி மற்றும் டைனோசர்கள் பற்றி நினைக்கிறோம்.

ஆனால் அப்படி இல்லை நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை எனத் தெரிவித்தார். 

அழிந்து வரும் மண் வலம் குறித்து சத்குரு பேசுகையில் "மண் அழிவு என்பது மிக தீவிரமான பிரச்சனை. ஆனால் இதை பற்றி யாரும் பேசுவதில்லை, கடந்த இரண்டு COP மாநாடுகளில் இதனை நாம் வலியுறுத்தி வருகிறோம். பூமியில் உள்ள உயிரினங்களில் 60% மேலாக மண்ணுக்கு அடியில் உள்ளன.  

நாம் தொடர்ந்து படிம எரிபொருள் பற்றி பேசுகிறோம். அது நடந்தாக வேண்டும். அந்த மாற்றம் தேவை தான். ஆனால் குறிப்பிடத்தகுந்த தொழில்நுட்ப புதுமை இல்லாமல் இது நிகழப் போவதில்லை. நானும் நீங்களும் கச்சா எண்ணெய் நல்லதல்ல என்று சொல்வதால் மட்டுமே இந்த உலகம் எண்ணெய்  பயன்பாட்டை கை விட்டுவிடாது. சரியான மாற்று வழிகள் உருவாக வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற COP-28 மாநாட்டில் மண் வளம் காப்பதன் அவசியம் குறித்து சத்குரு அவர்கள் பேசினார். அதன் பிறகே முதல்முறையாக காலநிலை தொடர்பான சர்வதேச மாநாட்டில் ‘காலநிலை மாற்ற பிரச்சனைகளுக்கு மண் வளம் மேம்படுத்துவதன் மூலம் தீர்வினை கொண்டு வர முடியும்’ என்ற உரையாடல்கள் துவங்கியது குறிப்பிடத்தக்கது. 

மண் வளத்தினை மேம்படுத்துவதற்காக மண் காப்போம் என்ற உலகளாவிய இயக்கத்தை சத்குரு அவர்கள் 2022-ஆம் ஆண்டு துவக்கினார். உலகளவில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல்வேறு நாட்டு அரசாங்கங்களை செயல்பட வலியுறுத்தியும் 30,000 கி.மீ பயணம் மேற்கொண்டார். இவ்வியக்கத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு அந்தந்த நாடுகளின் மண் வளத்தை மேம்படுத்துவதற்கான பிரத்யேக பரிந்துரைகள் வழங்கப்பட்டன. 

விவசாய மண்ணை மீட்டுருவாக்குவதற்காக UNFCCC-யிடம் இவ்யியக்கம் வழங்கியிருக்கும் சமீபத்திய பரிந்துரையை 69 முக்கிய உலகளாவிய அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளது. இது இவ்வியக்கத்தின் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.

  • 924
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads