ஜோதிடம் (Astrology)

Followers
Membership
Standard
Info
Who can post to my profile:
Array
Organization Name:
ஜோதிடம் (Astrology)
Category:
Friends count:
Followers count:
Administrators
Achievements

Basic

Total points: 166

4836 point(s) to reach
Comments (0)

    உங்களின் தினப்பலன்கள் தெரிந்துக் கொள்ளலாம். 

    Members
    ஜோதிடம் (Astrology)
    Empty
    typing a message...
    Connecting
    Connection failed
    Added a post 
    சிலருக்கு அவசரத்திற்கு கடன் கொடுத்திருப்போம். ஆனால், அவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று இழுத்தடித்து விடுவார்கள்.  நாமும் அலைந்து, அலைந்து சலித்துப் போய் இது வராக்கடன் என்ற எண்ணத்தில் ஒதுக்கி வைத்து விடுவோம்.வராக்கடனும் வசூலாக வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்.... செவ்வாய் கிழமையும் பிரதோசமும் இணைந்த நாளில் சிவனுக்கு கரும்புச் சாறு அபிசேகம் செய்யவும். செவ்வாய் கிழமையும் பிரதோசமும் இணைந்த நாளில் சிவனுக்கு நல்லெண்ணையில் சிவப்பு திரி இட்டு 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட மாற்றம் உண்டாகும். இந்தியா - தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை ஊரில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் மற்றும் அமிர்தேஸ்வரி அம்மனை வழிபட வராக்கடன்கள் வசூலாகும். வெளிநாட்டில் உள்ளவர்கள் அந்நாட்டில் உள்ள அம்மன் கோவிலில் மனமுருகி வேண்டுதல் செய்யலாம். 
    • 33
    Added a post 
    ராகு கேதுக்கள் 1, 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தால் திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது. 1,7-2,8 மிட சர்ப்ப தோஷத்தின் வீரியம் அதிகம். எனவே இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். 5-ல் சர்ப்ப கிரகம் உள்ள ஜாதகத்திற்கு 5, 11-ல் சர்ப்பங்கள் இல்லாத ஜாதகத்தை இணைப்பது சிறப்பு.திருமணத் தடையை சந்திப்பவர்கள் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது.கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் தினந்தோறும் படித்து வர தோஷங்கள் படிப்படியாக நீங்கும்.தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம். 
    • 33
    Added a post 
     இன்றைய ராசி பலன் – மார்ச் 23, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 9ஆம் திகதி.மேஷம்அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும்.ரிஷபம்பெரியவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும். வீடு வாங்க மற்றும் விற்பதற்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.மிதுனம்உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணமொன்றால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தினர்களின் குறைகளை தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்படுவீர்கள்.கடகம்ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். வீட்டை அழகாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.சிம்மம்சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.கன்னிஇன்று மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.துலாம்எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.விருச்சிகம்கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தன்னம்பிக்கை யோடும், தைரியத்தோடும் செயல்படுவீர்கள். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு கிடைக்கலாம். மகிழ்ச்சியான நாள்.தனுசுமுன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றலாமா என்பது குறித்து சிந்திப்பீர்கள்.மகரம்தேக நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து சேரும் வாய்ப்பு உண்டு. கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச்சமாளிப்பீர்கள்.கும்பம்பிரச்சினைகள் அகலும் நாள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கலஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.மீனம்விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். பழைய வாகனத்தை கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் கொடுப்பார்கள்.. இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
    • 34
    Added a post 
    விஷ கன்னிகா தோஷம் என்பது முறையாக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்து அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது. இது ஒரு முறையல்ல மூன்று நான்கு முறை கூட தொடரும். இறுதியாக வாழ்க்கைத் துணை இல்லாமல் தனியாகத்தான் வாழ வேண்டியது வரும். திருமணத்தையும் தந்து அதில் பலவித பிரச்சினைகளையும் உண்டு பண்ணி, அடுத்தடுத்து திருமணங்களிலும் மன ஒற்றுமை ஏற்படவிடாமல் தடுத்து, மண வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறது விஷ கன்னிகா தோஷம். ஒரே ஆறுதல்...ஒரு குழந்தை பாக்கியமாவது கிடைத்துவிடும். அது மட்டுமே ஆறுதலை தரக்கூடியதாக இருக்கும்.திருமணத்திற்கு தடைகளைச் செய்வதும் கிரக அமைப்பு தான், திருமணத்தை தந்து அதில் மன ஒற்றுமையை உண்டாக்குவதும் கிரக அமைப்பு தான். திருமணமாகி பிரியாமல் காலம் முழுவதும் வருத்தத்துடன் வாழ வைப்பதும் இந்த கிரகங்களே!இந்த இருதார தோஷத்திற்கு என்னதான் பரிகாரம்? என்றால் மிக எளிமையான பரிகாரம் உள்ளது. இரு தார தோஷம் இருப்பவர்கள் திருமணம் முடிந்தவுடன், மூன்றாவது மாதத்தில், கட்டிய தாலியை ஏதாவது ஒரு ஆலயத்தின் உண்டியலில் செலுத்தி விட்டு, அந்த ஆலயத்தின் இறைவன் முன்னிலையில் மீண்டும் தாலி கட்டிக்கொள்வதே எளிமையான பரிகாரம். இரு தாரம் எனும் தோஷம் இப்படித்தான் விலகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
    • 78
    Added a post 
    ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்வது, புதுமணத் தம்பதிக்கு ஆடைகள் வாங்கித் தருவது, கட்டில் மெத்தை போன்றவற்றை பரிசாகக் கொடுப்பது போன்றவையும் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாகும்.இதை முழுமனதுடன் செய்து பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். 
    • 78
    My Posts
    ஜோதிடம் (Astrology) Polls
    அன்பு நண்பர்களே,ஜோதிடத்தை நீங்கள் எந்த அளவு நம்புகிறீர்கள்?

    அன்பு நண்பர்களே,ஜோதிடத்தை நீங்கள் எந்த அளவு நம்புகிறீர்கள்?