சினிமா செய்திகள்
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
மடோனா செபாஸ்டியனின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
நடிகர் மயில்சாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு
நடிகர் அரவிந்த்சாமி பெற்ற புத்தக அனுபவம்
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology O
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
Ads
 ·   ·  1613 news
  •  ·  0 friends
  • 1 followers

இணைய நிதி மோசடி - 15 நாட்களுக்குள 218 வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது

இணையவழி நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 15 நாட்களுக்குள் மாத்திரம் 218 வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இணையவழி நிதி மோசடி தொடர்பான கைதுகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், சிலாபம் இரணவில பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிசாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சீன பிரஜைகள் தவிர்ந்து, மலேசியர்கள், எத்தியோப்பியர்கள், கென்ய நாட்டவர்களும் அடங்குவதாகக் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தங்கியிருந்த விடுதிக்குக் கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் மாதாந்தம் 19 இலட்சம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் 2 இலங்கையர்களும் தொடர்புபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் மேலதிக சோதனைக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் சந்தேக நபர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வரும் நிலையில், இணையவழி நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பான சட்ட அமுலாக்கத்திற்கு தமது ஆதரவை வழங்குவதாகச் சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, மியான்மார் மற்றும் தாய்லாந்தில் இயங்கும் சைபர் குற்ற முகாம்கள் போன்று, இலங்கையிலும் நிதி மோசடிகள் இடம்பெறுவதாகக் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாகச் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

000

  • 932
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads