சினிமா செய்திகள்
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
Ads
 ·   ·  2853 news
  •  ·  1 friends
  • 2 followers

பெரும் இராஜதந்திர நெருக்கடி - இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கின்றதா கனடா?

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பில் இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையில் இராஜதந்திர நெருக்கடி அதிகரித்துள்ள பின்னணியில் இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் சாத்தியமானது என கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா மீதான சாத்தியமான தடைகள் பற்றி கேள்வியெழுப்பிய போது, "அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக" அமைச்சர் ஜோலி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கனேடிய குடிமக்களை குறிவைக்கும் குற்றச் செயல்களுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தியிருந்தார்.

பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளில் இந்தியாவின் முகவர்கள் ஈடுபட்டிருப்பதற்கான "தெளிவான ஆதாரங்கள்" குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கவலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது, கனடா காலில் தன்னைத்தானே சுட்டுக்கொள்வது போன்றது என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் இன்போமெரிக்ஸ் மதிப்பீடுகளின் பொருளாதார நிபுணர் சங்கநாத் பந்தோபாத்யாய் கருத்து வெளியிடுகையில்,

“கனேடிய வணிகங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன, அதன் வளர்ச்சி மற்றும் வருமானம் அதிகமாக உள்ளது. கனடிய ஓய்வூதிய நிதிகள் இந்தியாவில் 75 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன.

600 க்கும் மேற்பட்ட கனேடிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன, மேலும் 1,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்திய சந்தையில் தீவிரமாக வணிகத்தைத் தொடர்கின்றன” என்று பந்தோபாத்யாய் சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரத் தடைகள் விவசாயத் துறையில், குறிப்பாக இந்தியாவிற்கு கனடாவின் பருப்பு ஏற்றுமதியில் எவ்வாறு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.

“கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்புகளின் முக்கிய ஆதாரமாக இந்தியா உள்ளது. கனடா, அவுஸ்திரேலியா போன்ற போட்டியாளர்களிடம் பருப்புக்கான அதன் சந்தைப் பங்கை இழக்கும் அபாயம் உள்ளது.

அவுஸ்திரேலியாவின் பருப்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் சந்தையில் பெருகிய முறையில் போட்டித்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு முதல், அவுஸ்திரேலியா இந்தியாவுக்கான பருப்பு ஏற்றுமதியை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கனேடிய பருப்பு ஏற்றுமதியில் தாக்கம்குறிப்பிடத்தக்கதாக இல்லை என்றாலும், இராஜதந்திர நெருக்கடி இந்திய இறக்குமதியாளர்களின் நம்பிக்கையை சிதைக்கக்கூடும்” என்றார்.

எவ்வாறாயினும், இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI) அதன் பங்களிப்பு வெறும் 0.57 சதவீதமாக இருப்பதால், இந்தியாவுக்கு எதிராக கனடா சிறிய செல்வாக்கைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • 1517
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads