சினிமா செய்திகள்
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
மடோனா செபாஸ்டியனின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
நடிகர் மயில்சாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு
நடிகர் அரவிந்த்சாமி பெற்ற புத்தக அனுபவம்
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology O
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
Ads
 ·   ·  1613 news
  •  ·  0 friends
  • 1 followers

உக்ரைன் போர் - ரஷ்யாவிற்கு ஆதரவாக 10,000 வீரர்களை அனுப்பியது வடகொரியா

உக்ரைனுக்கு எதிரான போரில் உதவுவதற்காக வடகொரியா 10,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு மேற்கத்திய தூதர் தெரிவித்துள்ளார்.

இது மொஸ்கோவிற்கும் பியோங்யாங்கிற்கும் இடையே ஆழமடைந்து வரும் இராணுவ உறவை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எந்த வகையான வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர், அவர்களின் பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று மேற்கத்திய இராஜதந்திரி Kyiv Independent இடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் தரப்பில் இருந்து இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

“ரஷ்யாவும், வட கொரியாவும் இராணுவ உறவுகளை ஆழப்படுத்துவது, உக்ரேனில் போரைத் தொடர்ந்து நடத்துவதற்கு மொஸ்கோவின் வளங்களின் தேவை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

"கடந்த 2.5 ஆண்டுகளில் ரஷ்யாவும் அதன் இராணுவமும் வட கொரியாவிடம் கடன் வாங்கவும், ஆதரவை வாங்கவும் வேண்டியுள்ளது என்பது தெளிவான குறிகாட்டியாகும்" என்று இங்கிலாந்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளரான ஜோன் ஃபோர்மேன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பியாங்யாங்கிற்குச் சென்றபோது இரு நாடுகளும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இவ்வாறான பின்னணியில் வடகொரியா 10,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உக்ரைன் மீதான படையெடுப்பை ஆதரிக்கும் ரஷ்யாவின் திட்டங்களில் வடகொரியாவின் ஈடுபாடு உள்ளடங்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அண்மையில் கூறியிருந்தார்.

ரஷ்யாவும் வட கொரியாவும் தங்கள் கூட்டணியை ஆழப்படுத்தி வருவதாகவும், வட கொரியா ஆயுதங்களுடன் உக்ரைனின் முன் வரிசைகளுக்கு பணியாளர்களை அனுப்பும் அளவிற்கு கூட்டாண்மை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலில் வடகொரிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் சமீபத்திய நாட்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 1113
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads