சினிமா செய்திகள்
வருத்தம் தெரிவித்தார் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக அரசியல் பேசி ஆளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெ
உடலை தானம் செய்வதாக அறிவித்தார் ஷிகான் ஹூசைனி
தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்தான் ஷிகான் ஹுசைனி. பல படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் கூட விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்
இவர் யார் என்று தெரிகிறதா?
சின்னத்தம்பி படத்தில் குஷ்புவின் இரண்டாவது அண்ணனாக நடித்தவர் இந்த உதய பிரகாஷ் ...இவருடைய இயற்பெயர் மணிகண்டன். இவர் 1964 ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்தவர்.
கே.பாலாஜி
யாருக்கு என்ன சம்பளம் எவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் கனக்கச்சிதமாக முடிவு செய்து, யார் மனமும் நோகாமல் உடனுக்குடன் தருபவர் என்றெல்லாம் கே.பாலாஜியை இன்ற
நடிகர் சிவகுமாரின் பியட் கார்
நடிகர் திரு சிவகுமார் அவர்களின் ஆற்காடு தெரு இல்லத்தில், அவர் சுமார் 50 ஆண்டு காலம் பயன்படுத்திய பியட் காரை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.1960 ம் ஆண்
நடிகை மதுரத்தை சமாதானம் செய்த என்.எஸ். கிருஷ்ணன்
புனே ரயில் பயணம்.ஆம் படப்பிடிப்பிற்காக புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அவர்களின் வழிச்
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக லண்டனில் இருந்து சென்னை திரும்பியவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவி
முடி கொட்டி ஆளே மாறிப்போன டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டார்.தனது தந்தையை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார் சிம்பு, சிகிச்சைக்கு
நடிகர் மோகன் பற்றிய சுவாரசியமான தகவல்கள்
மோகன் உணவகம் ஒன்றில் சந்தித்த பி. வி. கராந்த் என்பவரால் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவரின் முதல் நாடகத்தை தில்லியிலிருந்தும் விமர்சகர்கள் ப
குருவுக்கே வசனம் சொன்ன பார்த்திபன்
4 நாட்கள் திணறிய பாக்யராஜ்: குருவுக்கே வசனம் சொன்ன பார்த்திபன்; சின்னவீடு ப்ளாஷ்பேக்இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் பாக்யராஜ்.
பிரகாஷ்ராஜ் செய்த உதவி
"இந்த தகவல் உண்மைதானா" என்று கேட்டார் பிரகாஷ்ராஜ்.அந்த செய்தி ஏதோ ஒரு இணைய தளத்தில் வெளி வந்திருந்தது. தந்தையை இழந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒ
கண்ணதாசன் பற்றி இளையராஜா கருத்து
சிச்சுவேஷன் என்ன என்று கேட்கவுடன், சிகரெட் பிடிப்பார். அதன்பிறகு துப்புவார். அவர் சிச்சுவேஷனை கேட்டு துப்புகிறாரா அல்லது எதற்காக துப்புகிறார் என்று தெ
Ads
 ·   ·  8138 news
  •  ·  5 friends
  • I

    9 followers

வயநாட்டை போலவே நீலகிரியில் நிலச்சரிவு? தீயாக பரவும் தகவல்

வயநாட்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையே வயநாட்டைப் போலவே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரியிலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதற்கிடையே இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாகத் தீவிர மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த 2 வாரங்களாகத் தீவிர மழை கொட்டி வந்த நிலையில், இப்போது தான் கொஞ்சம் மழை விட்டுள்ளது.

இந்த கனமழையால் அங்கே பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதைச் சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

நீலகிரியில் கனமழை தொடரும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், மேலும், தேசிய பேரிடர் பாதுகாப்புப் படையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரியில் முகாமிட்டுள்ளனர். தேசியப் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு உபகரணங்களை ஆட்சியர் லட்சுமி பவ்யா இன்று நேரில் பார்வையிட்டார்.

வதந்தி: 

வயநாட்டைப் போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது முழுக்க முழுக்க வதந்தி என்ற மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, சமூக வலைத்தளங்களில் இதுபோல பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

  • 803
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads