சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1406 news
  •  ·  0 friends
  • 1 followers

புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் கவனம் செலுத்தினால் தேவையான வசதிகளை வழங்க முடியும் - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

 

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பப்படும் நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் கவனம் செலுத்தினால், அவர்களுக்குத் தேவையான வசதிகளை சுற்றுலா அமைச்சின் ஊடாக வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் எபிடோம் ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்ற "அபிமன் 2024" நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாண்டு நிறைவடையும் இச்சந்தர்ப்பத்தில் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அன்று நீங்கள் நாட்டுக்காக பணம் ஈட்டவில்லை என்றால், இன்று நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருந்தோம்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள முடியும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் மக்களுடன் இணைந்து இந்த நாட்டை மீட்க முடியும் என்று நான் நம்பினேன். ஏனைய நாடுகளைப் போன்று அன்றி, இரண்டு ஆண்டுகள் நிறைவடைய முன்பே நாட்டை மீட்டெடுத்தோம்.

நாங்கள் கடினமான பயணத்தை கடந்து வந்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நம் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்று பலர் நினைத்தனர். தொழிற்சாலைகளை நடத்த எரிபொருள் இல்லை. சுற்றுலா பயணிகள் யாரும் நாட்டுக்கு வரவில்லை. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் திட்டத்தை ஆரம்பித்தோம்.

எதிர்காலத்திற்கு முகங்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது எமக்கு உள்ளது. இதை எப்படி செய்தோம் என்று உலகின் பல நாடுகள் கேட்கின்றன. பங்களாதேசின் கடனை நாம் செலுத்திவிட்டோம். இன்று பங்களாதேசில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாம் நெருக்கடிக்கு உள்ளான காலங்களில் எங்களுக்கு ஆதரவாக இருந்த அந்த நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என நாம் பிரார்த்தனை செய்கிறோம்.

நாம் இப்போது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். எமது நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும், வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் திறன்களை வளர்த்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளிக்க முறையான திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். அப்போது அவர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகள் மூலம் அதிக வருமானம் பெறலாம்.

02 வருடங்கள் துன்பப்பட்டோம். இரண்டு வருடங்களாக உங்கள் ஆதரவுடன் இந்த நாட்டை முன்னெடுத்துச் சென்றேன். அதன் பலன்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே நாம் அனைவரும் இணைந்து புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். எமது பணியாளர்கள் அனுப்பப்படும் நாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை உங்களால் இலங்கைக்கு கொண்டு வர முடியும் என நான் நம்புகிறேன். இன்று, அந்த வாய்ப்பு பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்கின்றது.

இலங்கைத் தொழிலாளர்களை அந்த நாடுகளுக்கு அனுப்ப முடியுமானால், அந்த நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர முடியும். நீங்கள் சுற்றுலா அமைச்சுடன் இணைந்து இதுகுறித்து நீங்கள் பணியாற்றலாம். அப்போது உங்கள் தொழில்துறை மேலும் விரிவடையும். அந்த நடவடிக்கைகளுக்கு நாங்கள் உங்களுக்கு அரசாங்கமாக ஆதரவை வழங்க முடியும்.

மேலும், அந்த நாடுகளுக்கு அவசியமான உணவு விநியோகத்தை மேற்கொள்ள முடிந்தால், அதற்கு அரச ஆதரவை வழங்க முடியும். நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் தங்கி நிற்க முடியாது.

மேலும், நாட்டின் எதிர்கால நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது அரசியல்வாதிகள் அல்ல என்பதை நினைவுகூர்ந்து, உங்களின் எதிர்கால பணிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

000

  • 323
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads