சினிமா செய்திகள்
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
Ads
 ·   ·  1421 news
  •  ·  0 friends
  • 1 followers

மோடியின் பதவியேற்பு திகதியில் மாற்றம் - எதிர்வரும் 9 ஆம் திகதி மாலை பதவியேற்பு விழா

இந்திய மக்களவை தேர்தலில் 293 இடங்களை பெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைக்க அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதையடுத்து நரேந்திர மோடி தொடர்ந்து 3 ஆவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் எதிர்வரும் 9 ஆம் திகதி மாலை இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் திகதி வெளியிடப்பட்டன. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது.

பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் கூட்டணி ஆட்சியே அமைக்கிறது. பாஜகவின் 14 கூட்டணி கட்சிகளிடம் 53 எம்.பி.க்கள் உள்ளனர். தெலுங்கு தேசத்திடம் 16, ஐக்கிய ஜனதா தளத்திடம் 12 எம்.பி.க்கள் உள்ளனர்.

ஜூன் 9ஆம் திகதி மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் பிரசண்டா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், பூடான் பிரதமர் தாஷோஷெரிங் டோப்கே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 இல் பிரதமர் மோடி முதல்முறையாக பதவியேற்ற போது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விழாவில் பங்கேற்றார்.

புல்வாமா தாக்குதல் காரணமாக இரு நாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இதனால், கடந்த 2019 ஆம் ஆண்டு பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல, இம்முறையும் அழைப்பு விடுக்கவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் மோடிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நாளைமறுதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய தலைநகர் புதுடில்லிக்குச் செல்ல உள்ளார்.

பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் மோடி உட்பட பாஜக அரசின் உயர்மட்ட தலைவர்களுடன் முக்கிய கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த காலத்தில் இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகள் மற்றும் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம் முன்னெடுக்கவிருந்த திட்டங்களை விரைவுப்படுத்தும் கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க மோடியிடம் முன்வைக்க உள்ளார்.

குறிப்பாக இருநாடுகளுக்கு இடையில் நிலத் தொடர்பை உருவாக்கும் பாலத்தை அமைக்கும் திட்டத்தை விரைவுப்படுத்துவது குறித்து ரணில் விக்ரமசிங்க மோடியிடம் கலந்துரையாட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று மோடியை இலங்கைக்கு வருமாறு ரணில் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தெரிய வருகிறமை குறிப்பிடத்தக்கது

  • 488
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads