சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  2855 news
  •  ·  1 friends
  • 2 followers

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் - ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியே 3 ஆவது முறையாகவும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்ப்பு

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று (04) வெளியிடப்படவுள்ளன.  இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் கடந்த 6 வாரங்களில், 7 கட்டங்களாக இடம்பெற்றன.

இதற்கமைய உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகின.

தற்போதைய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியே 3 ஆவது முறையாகவும் அரசாங்கத்தை அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மொத்தமாகவுள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மீதமாகவுள்ள 542 தொகுதிகளுக்கான முடிவுகள் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளன.

இதனடிப்படையில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 296 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 219 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 86,777 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதேபோல, வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2,48,992 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலியிலும் 1,87,508 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்  

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, சிதம்பரம், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

தருமபுரி தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலையில் உள்ளார். விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலையில் உள்ளார்.

மத்திய சென்னை தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலையில் உள்ளார். தருமபுரி தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலையில் நீடிக்கிறார், தி.மு.க வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

ஆந்திராவில் உள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 130 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 19 இடங்களிலும், பா.ஜ.க 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஒடிஷாவில் பா.ஜ.க 72 இடங்களிலும், பி.ஜே.டி 57 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இங்கு இரண்டு இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

ஏழு கட்டங்களாக நடந்த இந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதல் கட்டத்திலேயே தேர்தலைச் சந்தித்தது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஏப்ரல் திகதி வாக்குப் பதிவு நடந்தது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலத்திலேயே குறைவாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி என்ற பெயரில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டன.

அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை இணைந்து தேர்தலைச் சந்தித்தன. இவை தவிர, நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது

00

  • 456
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads