சினிமா செய்திகள்
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
மடோனா செபாஸ்டியனின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
நடிகர் மயில்சாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு
நடிகர் அரவிந்த்சாமி பெற்ற புத்தக அனுபவம்
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology O
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
Ads
 ·   ·  7979 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மோடிக்கு கேஜ்ரிவால் சவால்

ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்பட அனைத்து தலைவர்களுடன் நாளை (மே 19) நண்பகல் 12 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்குச் செல்ல உள்ளதாகவும், யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ், அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் இன்று கைது செய்யப்பட்டார். இதை அடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள கேஜ்ரிவால், "ஆம் ஆத்மி கட்சியை பாஜக தொடர்ந்து குறிவைத்து வருகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஆம் ஆத்மி தலைவர்கள் பலரை கைது செய்துள்ளது. மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டார். சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டார். நான் கைது செய்யப்பட்டேன். இன்று எனது பிஏ பிபவ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா, அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கைது செய்யப்படுவதற்கான அடுத்தப் பட்டியலில் உள்ளனர். எங்களை ஏன் கைது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நாம் என்ன தவறு செய்தோம்? நாம் செய்த குற்றம் அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தியது. அவர்களால் இதைச் செய்ய முடியவில்லை. 24x7 மின்சாரம் கிடைக்கச் செய்தோம். அவர்களால் இதைச் செய்ய முடியாது. அதனால், ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியை நான் கேட்டுக்கொள்கிறேன், இந்த ஜெயில் விளையாட்டை நிறுத்துங்கள். நாளை மதியம் 12 மணிக்கு, நான் எனது தலைவர்கள் - எம்எல்ஏக்கள், எம்பிகள் அனைவருடனும் பாஜக தலைமையகத்துக்கு வருகிறேன். நீங்கள் யாரை வேண்டுமானாலும் கைது செய்யுங்கள். சிறைக்குள் தள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மதுபானக் கொள்கை ஊழல் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் மார்ச் 21 அன்று கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜூன் 1-ஆம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 382
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads