Category:
Created:
Updated:
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5000 ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG நிஹால் தல்துவா தெரிவித்தார்.
மேலும், புத்தாண்டின் போது குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய 24 மணி நேரமும் விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விசேட மோட்டார் சைக்கிள் குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள், பாதை விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் போது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.