சினிமா செய்திகள்
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
Ads
 ·   ·  8175 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தாய்மார்களுக்கு நல்லது செய்வதே எனக்கு முக்கியம் - சஜித் பிரேமதாச

”நாட்டில் கூட்டங்களை நடத்தி பெண்களின் உரிமைகளை காக்க வேண்டும் என்று தம்பட்டம் அடிக்காமல் பிரயோக ரீதியில் நடைமுறையில் அதனை செயற்படுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட மூச்சு வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு காசல் வீதி மகப்பேற்று வைத்தியசாலைக்கு 46 இலட்சம் ரூபா பெறுமதியான சுகாதார உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய  போதே  சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” நாட்டின் மிக உயர்ந்த சட்டமான அரசியலமைப்பில் மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கப்படுகிறது, ஆனால் அதில் சுகாதாரம், கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான உரிமைகள் குறிப்பிடப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் கீழ் சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் மற்றும் ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமை என்பன சேர்க்கப்படும். பெயருக்கு இலவச சுகாதார சேவை இருந்தால் மட்டும் போதாது. அது தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும். விமசர்னங்களை முன்வைக்கும் உயர் வர்க்கத்தினர் எந்தக் குறையும் இல்லாது, ஆடம்பரமான சுகாதார முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

எல்லா இடங்களிலும் கூட்டங்களை நடத்தி, பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என கூறுவதாக இருந்தால், முதலில் இலவச சுகாதார சேவை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் பெண்கள், தாய்மார்கள், குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இரண்டு இலட்சம் வாக்குகளை விடவும் இரண்டு இலட்சம் தாய்மார்களுக்கு நல்லது செய்வது எனக்கு முக்கியம். பேருந்துகளில் பெண்களை அழைத்து வந்து கூட்டம் நடத்தும் தேவை எமக்கு இல்லை வங்குரோத்தான நாட்டில், இந்தப் பணத்தைப் பயன்படுத்தி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, பெண்களை திரட்டி, பெண் உரிமைகள் தொடர்பான உரைகளை எம்மாலும் நடத்தமுடியும்.

சர்வதேச பெண்கள் தினத்தில் ஒரு நாளில் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களின் உயிரைக் காக்கும் இயந்திரங்களை நன்கொடையாக வழங்க முடிந்தமை எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார்.

  • 540
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads