சினிமா செய்திகள்
எம். ஆர். ராதாவின் மனசு..
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999
ஷாலின் ஷோயா கட்டிய கனவு வீடு
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாள
தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்
மூன்றாவது திருமணம் செய்ய போகும் நடிகர்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா  தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும்
அமெரிக்காவில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலி
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகை அஞ்சலி. அவருக்கு ஏராளம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடைய
கங்குவா படம் பற்றிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள படங்களில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது கங்குவா.சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பட
கனிகாவிற்கு வளையல் அணியும் விழா
கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன்-கனிகா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள். இந்த நிலையில் கனிகாவின் 5வது மாத நிகழ்ச்சி அழகாக
9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மொத்த வசூல்
தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரி
நடிகை ரம்யா கிருஷ்ணன் விவகாரத்து செய்கிறாரா?
தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.ஐட்டம் டான்ஸ், அம்மன் வேடம், போல்டான கதாபாத
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
Ads
 ·   ·  7984 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் மேடையை விட்டு ஓடிய பிரபலங்கள்

யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய பிரபலங்கள் பங்குபற்றும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதால் கலாசார சீர்கேடுகள் ஏற்படும் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்த பின்புலத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் பாரிய தள்ளு முள்ளுகள் ஏற்பாட்டதால் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது.

நடிகர் ரம்பாவின் கணவர் இந்திரனின் நொதன் யூனியன் அறக்கட்டளையின் ஊடாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் பெருமெடுப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஸ், தமன்னா, பிரபல நடிகர் மிர்ச்சி சிவா உட்பட நடிகர்களும் நடிகைகளும் பங்கேற்றனர்.

பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதியளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் நட்சத்திரங்கள் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த பகுதியை நோக்கி ரசிகர்கள் படையெடுத்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

கூட்டம் கட்டுக்கடங்காது மேடையை சுற்றி சூழ்ந்ததால் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையை கட்டுப்படுத்த முடியாது போனது. பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளையும் ரசிகர்கள் உடைத்தெறிந்து மைதானம் முழுவதும் சூழ்ந்தனர்.

இதனால் குழுமியிருந்த பிரபலங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் பாதுகாப்பாக அவர்கள் முற்றவெளி மைதானத்தில் இருந்து அகற்றப்பட்டனர்.

தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்நுழையும் போது கதிரைகள் அங்குமிங்கும் எறியப்பட்டதால் பலர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்களும் நடந்தன. அத்துடன் பொலிஸார் ரகிசர்கள் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல்களையும் நடத்தினர். குழப்பகரமான சூழ்நிலைக்கு வழிவகுத்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் காயமடைந்த மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்பாட்டாளர்கள் முறையாக ஒழுங்குப்படுத்தாமை, பொலிஸாரின் பாதுகாப்பு பற்றாக்குறை காரணமாக கட்டுக்கடங்காத பார்வையாளர்கள் மேடைக்கு அருகில் கூடினர். இதனால் நிலைமை மோசமடைந்து நிகழ்ச்சி இடை நிறுத்தப்பட்டது.மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்ட போதும் கூட்டம் கட்டுங்கடங்காது சென்றது. கதிரை, தண்ணீர் தாங்கிகள் உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாக்கப்பட்டன.

முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.

  • 124
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads