சினிமா செய்திகள்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
Ads
 ·   ·  8230 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சாணக்கியனுக்கு கிடைக்க கூடாது என தங்களது முதிர்ச்சி அற்ற தன்மையினை காட்டியிருந்தனர் சிலர்: சாணக்கியன்

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் குகதாசன் அவர்களே கட்சியின் மாநாடு மட்டுமே பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகமே சட்ட ரீதியாக இயங்கும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நேற்று (27) திருகோணமலையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலளார் சந்திப்பு இன்று (28) களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது கட்சி காரியாலயத்தில் நடைபெற்றது.


இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழரசுக்கட்சியின் மாநாட்டுக்கான ஆலோசனைக்கூட்டமாக தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.


இதன்போது சுமந்திரன் அவர்களை உபதலைவராக நியமிக்குமாறு சிறிதரன் கோரியிருந்தார். எனினும் அதனை ஏற்றுக் கொள்ளாது தம்மை பொதுச்செயலாளராக நியமிக்குமாறு இங்கு சுமந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார்.


கட்சி பிளவுபடாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


ஆனால் இதன்போது செயலாளராக மட்டக்களப்பினை சேர்ந்த சிறிநேசன் அவர்களும் திருகோணமலையை சேர்ந்த குகதாசன் அவர்களும் அம்பாறையை சேர்ந்த கலையரசன் அவர்களும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குலநாயகம் அவர்களும் செயலாளர் பதவிக்காக கோரிய நிலையில் அங்கு குழப்ப நிலைமை ஏற்பட்டபோது புதிய தலைவர் சிறிதரன் அவர்கள் அனைவரும் கலந்துரையாடி குகதாசன் அவர்களை முன்மொழிந்த நிலையில் அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.


ஆனால் அதனை மீண்டும் சிலர் எதிர்த்ததன் காரணமாக குழப்ப நிலைமை ஏற்பட்டது. இதன்போது பதில் செயலாளராக கடமையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் பொதுச்சபையின் தீர்மானங்களை வாக்கெடுப்புக்கு விடுத்தபோது அதனை பொதுச்சபை ஏற்றுக் கொண்டு வாக்களிப்பு ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


ஆனால் அதனை சிலர் மீண்டும் எதிர்த்தன் காரணமாக கூட்டம் முடிவுறுத்தப்பட்டதுடன் மகாநாடும் பிற்போடப்பட்டது. எனினும் புதிய நிர்வாகவே சட்ட ரீதியான நிர்வாகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதனால் அதுவே நிர்வாகமாக ஏற்றுக் கொள்ளப்படும்.


தெரிவு செய்யப்பட்ட நிர்வாகமானது சட்ட ரீதியாக இயங்கும். நாம் எவ்வித குழப்பமும் விளைவிக்கவில்லை சிலர் எம்மை தங்களது சுய இலாபத்துக்காக குழப்பவாதிகள் போல் காட்ட முனைகின்றர்கள். மட்டக்களப்புக்கு செயலாளர் பதவி கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை சாணக்கியனுக்கு கிடைக்க கூடாது என்று தங்களது முதிர்ச்சி அற்ற தன்மையினை காட்டியிருந்தனர் சிலர் என தெரிவித்தார். 

  • 248
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads