Category:
Created:
Updated:
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
போராட்டத்தின் இறுதியில் புதிதாக பதவியேற்ற மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. போராட்டகாரர்கள் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடிய வேளை மாவட்ட திணைக்கள அதிகாரி ஒருவர் சாணக்கியனுடன் முரண்படும் வகையில் செயற்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.