Category:
Created:
Updated:
இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரப்பகிர்வை நோக்கிய செயற்பாட்டில் தொடர்ந்தும் பாடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது, புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு விடயங்களை ஒரு வருட கால அவகாசத்துக்குள் முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கருத்து வெளியிடும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.