சினிமா செய்திகள்
ரசிகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார்.அந்த நிலையில்
மக்கள் திலகத்தைப் பற்றி கே.ஆர்.விஜயா
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓ
எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பன
தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பள உயர்த்தி கொடுத்த என்.எஸ்.கே
நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.தமிழ் சினிமாவில் த
சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்
ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தைக்கு சூர்யா ஜோதிகா தான் உதாரணம். இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ள
நடிகை சில்க் ஸ்மிதா
ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டிஎத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ,
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைக
உருவகேலி செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடி
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நாட்டிய பேரொளி பத்மினி  நடிகர் திலகம்சிவாஜிகணேசனை பற்றி ஒரு பேட்டியில்....
நான் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.தண்ணீர் கூட அ
லட்சுமிக்கு எம்.ஜி.ஆர். கூறிய அட்வைஸ்
ஒரு முறை நடிகை லட்சுமி எம்.ஜி.ஆரை நேரில்சந்தித்தார்.அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமை
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

பாரம்பரிய தொழில் பாதிக்காதவாறு கடலட்டை பண்ணைகள் அமைப்பதற்கான துறைசார் ஆய்வுகளை வலியுறுத்தி பூநகரி பிரதேச சபையில் தீர்மானம்

பாரம்பரிய தொழில் பாதிக்காதவாறு கடலட்டை பண்ணைகள் அமைப்பதற்கான துறைசார் ஆய்வுகளை மேற்கொண்டு சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூநகரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!பூநகரி பிரதேச சபையின் அமர்வு இன்று(21-11-2021) காலை .சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமாகியது. கடலட்டை பண்ணைகள் தொடர்பான தீர்மானத்தை சபையின் தவிசாளர் தனது தனிப்பிரேரணையாகக்கொண்டு ஏக மனதாக நிறைவேற்றுமாறு பிரேரணையை வாசித்து சபையைக்கேட்டுக்கொண்டார்.பூநகரியின் மேற்கு கடலின் பெரும்பாலான பகுதிகளில் கடலட்டை பண்ணைகள் வழங்கப்படுகிறது. இங்குள்ளவர்களுக்கு, யார் என்று தெரியாதவர்களுக்கு ஏக்கர் கணக்கில் வழங்கப்படுகிறது. சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது இதனால் பாரம்பரிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அண்மையில் பத்திரிகை விளம்பரம் ஒன்று தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் அட்டைப்பண்ணை மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என இதனால் எமது கடல் நிலத்தையும் கைவிடவேண்டிய நிலை வரும் எனவே பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டிருந்தார்.பிரேரணையை தொடர்ந்து வாசித்தார் .வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களாகிய நாம் எங்களுக்கான காணி உரிமைக்காக பேராடிக்கொண்டிருக்கும் வேளையில் சத்தமில்லாது எங்களின் கடலில் மேற்கொள்ளப்படும் பாரிய சவாலை காணமுடிகிறது. சந்ததிகளாக வாழ்வாதாரத்திற்கு கடலை மட்டும் நம்பியிருக்கும் மக்களை கடலில் இருந்து அந்நியப்படுத்தி எங்கள் கடலை கடலட்டை பண்ணை என்ற போர்வையில் சீனாவிற்கு நேரடியாகவும் மறை முகமாகவும் தாரை வார்க்கும் சதியினை பூநகரி பிரதேச சபை வன்மையாக கண்டிக்கிறது. வடக்கில் எந்தவித ஒழுங்கும் இல்லாத கடலட்டை பண்ணைக்கு எதிராக அனைவரும் போராடிவரும் வேளையில் ஆயிரக்கக்கான ஏக்கரில் அட்டைப்பண்ணை அமைப்பதற்கு விலைமனு கோரல் விடுக்கப்பட்டிருக்கிறது கடலட்டை பண்ணைகளின் தீமை பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு முடிவு வரும் வரையும் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை அகற்றுமாறு அரசாங்கத்தை கோருகின்றோம் என்றார்.தொடர்ந்து சபையில் குறித்த பிரேரணை தொடர்பாக உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.ஈழ மக்கள் ஐனநாயக்கட்சி உறுப்பினர் அமைச்சர் எங்களுடைய மக்களை தான் செய்யுமாறு கோரியுள்ளார்.ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் சட்டரீதியாக பிரதேச செயலக அனுமதியோடு தான் மேற்கொள்ளப்படுகிறது. கடலட்டை நாட்டின் அந்நிய செலவானியை ஈட்டுகிறது.தொடர்ந்து இரண்டு உறுப்பினர்கள் குறித்த தீர்மானத்திற்கு எதிராக காணப்பட்ட நிலையில் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவாக காணப்பட்ட நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 20 உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில் 11பேர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் 04பேர் சுயேட்டை குழு, 02பேர் சுகந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியைச்சேர்ந்தவர்கள் .ஒருவர் ஈழ மக்கள் ஐனநாயக்கட்சியைச்சேர்ந்தவர்.இன்றைய சபை அமர்வுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைச்சார்ந்த ஒருவர் சமூகம் அளிக்க வில்லைவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

  • 365
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads