சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

பாரம்பரிய தொழில் பாதிக்காதவாறு கடலட்டை பண்ணைகள் அமைப்பதற்கான துறைசார் ஆய்வுகளை வலியுறுத்தி பூநகரி பிரதேச சபையில் தீர்மானம்

பாரம்பரிய தொழில் பாதிக்காதவாறு கடலட்டை பண்ணைகள் அமைப்பதற்கான துறைசார் ஆய்வுகளை மேற்கொண்டு சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூநகரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!பூநகரி பிரதேச சபையின் அமர்வு இன்று(21-11-2021) காலை .சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமாகியது. கடலட்டை பண்ணைகள் தொடர்பான தீர்மானத்தை சபையின் தவிசாளர் தனது தனிப்பிரேரணையாகக்கொண்டு ஏக மனதாக நிறைவேற்றுமாறு பிரேரணையை வாசித்து சபையைக்கேட்டுக்கொண்டார்.பூநகரியின் மேற்கு கடலின் பெரும்பாலான பகுதிகளில் கடலட்டை பண்ணைகள் வழங்கப்படுகிறது. இங்குள்ளவர்களுக்கு, யார் என்று தெரியாதவர்களுக்கு ஏக்கர் கணக்கில் வழங்கப்படுகிறது. சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது இதனால் பாரம்பரிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அண்மையில் பத்திரிகை விளம்பரம் ஒன்று தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் அட்டைப்பண்ணை மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என இதனால் எமது கடல் நிலத்தையும் கைவிடவேண்டிய நிலை வரும் எனவே பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டிருந்தார்.பிரேரணையை தொடர்ந்து வாசித்தார் .வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களாகிய நாம் எங்களுக்கான காணி உரிமைக்காக பேராடிக்கொண்டிருக்கும் வேளையில் சத்தமில்லாது எங்களின் கடலில் மேற்கொள்ளப்படும் பாரிய சவாலை காணமுடிகிறது. சந்ததிகளாக வாழ்வாதாரத்திற்கு கடலை மட்டும் நம்பியிருக்கும் மக்களை கடலில் இருந்து அந்நியப்படுத்தி எங்கள் கடலை கடலட்டை பண்ணை என்ற போர்வையில் சீனாவிற்கு நேரடியாகவும் மறை முகமாகவும் தாரை வார்க்கும் சதியினை பூநகரி பிரதேச சபை வன்மையாக கண்டிக்கிறது. வடக்கில் எந்தவித ஒழுங்கும் இல்லாத கடலட்டை பண்ணைக்கு எதிராக அனைவரும் போராடிவரும் வேளையில் ஆயிரக்கக்கான ஏக்கரில் அட்டைப்பண்ணை அமைப்பதற்கு விலைமனு கோரல் விடுக்கப்பட்டிருக்கிறது கடலட்டை பண்ணைகளின் தீமை பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு முடிவு வரும் வரையும் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை அகற்றுமாறு அரசாங்கத்தை கோருகின்றோம் என்றார்.தொடர்ந்து சபையில் குறித்த பிரேரணை தொடர்பாக உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.ஈழ மக்கள் ஐனநாயக்கட்சி உறுப்பினர் அமைச்சர் எங்களுடைய மக்களை தான் செய்யுமாறு கோரியுள்ளார்.ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் சட்டரீதியாக பிரதேச செயலக அனுமதியோடு தான் மேற்கொள்ளப்படுகிறது. கடலட்டை நாட்டின் அந்நிய செலவானியை ஈட்டுகிறது.தொடர்ந்து இரண்டு உறுப்பினர்கள் குறித்த தீர்மானத்திற்கு எதிராக காணப்பட்ட நிலையில் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவாக காணப்பட்ட நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 20 உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில் 11பேர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் 04பேர் சுயேட்டை குழு, 02பேர் சுகந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியைச்சேர்ந்தவர்கள் .ஒருவர் ஈழ மக்கள் ஐனநாயக்கட்சியைச்சேர்ந்தவர்.இன்றைய சபை அமர்வுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைச்சார்ந்த ஒருவர் சமூகம் அளிக்க வில்லைவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

  • 337
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads