Category:
Created:
Updated:
யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக, 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் டி.என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.
உடுவில் பிரதேசத்தில் 7 பேரும், கோப்பாய் பிரதேசத்தில் 5 பேரும், மருதங்கேணி பிரதேசத்தில் 4 பேரும், சாவகச்சேரியில் 3 பேரும் மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், நேற்று அட்டாம்பிட்டிய - நெலுவ, கிம்ப்ரோஸ் பகுதியில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த பகுதியில் உள்ள தேயிலை மடுவமொன்றில் வைத்து அவர்கள் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
000