சினிமா செய்திகள்
மடோனா செபாஸ்டியனின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
நடிகர் மயில்சாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு
நடிகர் அரவிந்த்சாமி பெற்ற புத்தக அனுபவம்
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology O
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
என்.எஸ்.கிருஷ்ணனின் சமயோசித யோசனை
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட்டில் வெளிக்கதவு சாத்தியிருந்தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும்.வெளி
Ads
 ·   ·  1598 news
  •  ·  0 friends
  • 1 followers

ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்த உத்தரவ

ஏப்ரல் 21 தாக்குதல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி ஏலம் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான காவல்துறை விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் காவல்துறைமா அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.

நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஏனைய தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல விசேட விசாரணைகள் போதுமானதல்ல என அவதானிக்கப்பட்டுள்ளன.

விசேடமாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அண்மையில் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

பிணைமுறி ஊழல் மற்றும் ஏப்ரல் 21 தாக்குதல்கள் உட்பட அடையாளம் காணப்பட்ட பல வழக்குகள் தொடர்பில் மேலதிக அதிகாரிகளை நியமித்து விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சந்தேகத்திற்கிடமான மரணம் மற்றும் 2006 ஆம் ஆண்டில் முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத் காணாமல் போனமை தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வெலிகமவில் உள்ள 'டபிள்யூ 15' விருந்தகத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையும் துரிதப்படுத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி தமிழ் ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் என அழைக்கப்படும் தராகி சிவராம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் அறிவித்தப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி சமூக செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

000

  • 1268
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads