Category:
Created:
Updated:
22 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படும் என்பது பல்வேறு குழுக்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களால் வெளியிடப்படும் கருத்து என அவைத்தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் நிகழ்ச்சி நிரலில் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணை உள்ளடக்கப்படவில்லை.
22 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படும் என்பது பல்வேறு குழுக்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களால் வெளியிடப்படும் கருத்து.
இதேநேரம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தற்போதைக்கு வராது என நினைக்கிறேன். இந்த திருத்தம் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் அதனால் தேர்தல் பாதிக்கப்படாது. என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000