சினிமா செய்திகள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
Ads
 ·   ·  1390 news
  •  ·  0 friends
  • 1 followers

இலங்கையில் தரம் குறைந்த மின் வயர்கள் விற்பனை – பாவனையாளர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை

நாட்டில் தரம் குறைந்த மின் வயர்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த மின் வயர்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.எல்.எஸ் அல்லது இலங்கை தர நிர்ணயசபையின் சான்றிதழ் இல்லாத இந்த மின் வயர்களில் உற்பத்தி நிறுவனத்தின் பெயர் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பிரபல பண்டக்குறிகளுக்கு நிகரான பெயர்களைக் கொண்ட பெயர்களில் இவை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் கம்பிகள் செப்புக் கம்பிகளினால் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும், இந்த தரம் குறைந்த மின் வயர்களை உற்பத்தி செய்ய அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இந்த மின் வயர்களை பயன்படுத்துவதனால் மின்சார இயந்திரங்கள் பழுதடைவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெசாக், பொசோன் நிகழ்வுகளின் போது அலங்காரம் செய்வதற்கு இந்த மின் வயர்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புறக்கோட்டையிலிருந்து இந்த மின் வயர்கள் நாடு முழுவதிலும் விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தரம் குறைந்த இந்த மின் வயர்கள் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாவிற்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போலியான தரம் குறைந்த மின் வயர்கள் உற்பத்திகள் சந்தையில் விற்பனை செய்வது குறித்து இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை  விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 368
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads