சினிமா செய்திகள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
Ads
 ·   ·  1390 news
  •  ·  0 friends
  • 1 followers

போரினால் கால்களை இழந்து தவிக்கும் காஸா குழந்தைகள் - வெளியானது அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம்

இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரையில் நீடித்து வருகிறது. இந்த போரில் 37,658 பேர் பலியாகியுள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதலினால் காஸா நகரம் உருக்குலைந்து போய்விட்ட நிலையில், தற்சமயம் ரஃபா நகரத்தின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது இஸ்ரேல்.

போர் தாக்குதல்களுக்கு பயந்து அகதி முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால், அந்த இடங்களையும் விட்டு வைக்காத இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது.

காஸாவின் எல்லைகளை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதால் ரஃபா நகர தாக்குதல்களில் இலக்கானவர்களுக்கு உரிய சிகிச்சையோ அல்லது நிவாரணப் பொருட்களோ கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்துக்குள் இஸ்ரேலின் தாக்குதலினால் 101 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறிருக்க, ஐ.நாவின் பலஸ்தீன நிவாரணப் பிரிவான UNRWA தலைவர், பிலிப் லசாரினி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின் அடிப்படையில், காஸாவில் தினமும் 10 குழந்தைகள் அவர்களது ஒன்று அல்லது இரண்டு கால்களை இழக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இதுவரையில் சுமார் 2000 குழந்தைகள் அவர்களின் கால்களை இழந்துள்ளனர். இவ்வாறு போரில் படுகாயமடைந்த குழந்தைகளின் கால்களை அகற்றும்போது அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்துவதற்கு கூட போதுமான வசதிகள் இல்லை என பிலிப் லசாரினி தெரிவித்துள்ளார்.

மேலும் 21,000 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

  • 360
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads