சினிமா செய்திகள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
Ads
 ·   ·  1390 news
  •  ·  0 friends
  • 1 followers

கடற்படை வீரரின் மரணம் - இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் - இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் இடையில் விசேட சந்திப்பு

இந்திய மீனவர்களைக் கைது செய்ய முற்பட்ட போது இலங்கைக் கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தை இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு இலங்கை அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் ஆகியோருக்கு இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்கள் அனுபவித்து வரும் பல பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் இலங்கை உயர்ஸ்தானிகர் இந்தியாவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இரு நாட்டு கடற்றொழில் அமைச்சுக்களை தொடர்பு கொண்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தாம் வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 214 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 28 என்றும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய - இலங்கை கடல் எல்லைகள் 1974 இல் பிரிக்கப்பட்ட நிலையில், 1979 ஆம் ஆண்டில், வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2018 ஆம் ஆண்டு மீண்டும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு அர்த்தமுள்ள வகையில் இதுவரை செயல்படுத்தப்படுகிறது.

ஆனால் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் பல வருடங்களாக பாரிய பிரச்சினையாக காணப்படுகின்ற போதும் இதுவரை உரிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என்பதும், இவர்களின் அத்துமீறல் காரணமாக வருடத்திற்கு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

00

  • 346
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads