·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 953
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added article

அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் முதன்முறையாக சேர்ந்து நடித்தார்கள். அப்போதே அவர்களுக்குள் காதல் மலர்ந்துவிட்டது. இவர்களது காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். குடும்பத்துடன் இந்தத் தம்பதி நிம்மதியாகவும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்துவருகிறது.

அஜித் இப்போது நடிப்பில் மட்டுமின்றி கார் ரேஸிலும் கவனத்தை செலுத்திவருகிறார். அதற்கு ஷாலினி தன்னால் முடிந்த அத்தனை சப்போர்ட்டையும் கொடுத்துவருகிறார். பெரும்பாலும் அஜித் ரேஸுக்கு செல்வதற்கு முன்பு அருகே ஷாலினியும் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். தன் மனைவிக்கு நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்த பிறகுதான் ஏகே வண்டி ரேஸில் சீறிப்பாயும் என்பது குறிப்பிடத்தக்கது. அதை பார்த்து பலரும், ஜோடினா இப்படித்தான் இருக்கணும் என பூரிப்பார்கள்.

இதற்கிடையே அஜித்தின் அடுத்த படம் பற்றிதான் அனைவரது கவனமும் இருக்கிறது. டயர் 1 ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கும் அஜித்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கவே இல்லை என தொடர்ந்து பேசப்பட்டது. இதனையடுத்து அஜித்தே படத்தை தயாரிப்பார் என்று சொல்லப்பட்டாது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, திருமணத்துக்கு பிறகு சினிமாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கியிருந்தார். இப்போது அவர் ரீ என்ட்ரி தரவிருக்கிறாராம்.

அதாவது, தனது அடுத்த படத்தை தயாரிக்க முடிவெடுத்த அஜித்; நடிக்கவும் செய்வதால் முழு கவனத்தையும் தயாரிப்பு பணிகளில் செலுத்த முடியாது. அதன் காரணமாக தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்துமாறு ஷாலினியிடம் ஏகே சொன்னதாகவும்; அதற்கு ஷாலினியும் ஓகே சொல்லிவிட்டது என்றும் தகவல்கள் வட்டமடிக்கின்றன. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 53
·
Added article

மந்​திர​வா​தி​யாக ஃபஹத் ஃபாசில் நடித்​துள்ள திரைப்​படம், ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. ஃபேன்​டஸி, நகைச்​சுவை படமான இதை ஷஷாங்க் யெலெட்டி இயக்​கி​யுள்​ளார். கால பைரவா இசையமைத்​துள்​ளார்.

ஷோயிங் பிசினஸ் நிறு​வனத்​தின் சார்​பில் எஸ்​.எஸ்​.​கார்த்திகேயா, ‘பாகுபலி’ படத்தை தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து இப்​படத்தை தயாரித்துள்ளார். ​இதன் டீஸர் வெளியாகி வரவேற்​பைப் பெற்றுள்​ளது.

”இதில் சூரி என்ற மந்​திர​வா​தி​யாக ஃபஹத் ஃபாசில் நடித்​துள்ளார். அவர் ஒரு சிறுமிக்கு மேஜிக் செய்து காட்​டு​கிறார். பின்​னர் அந்த சிறுமியை மறையச் செய்​வதன் மூலம் மற்​றொரு பெரிய வித்​தையை காட்​டு​வ​தாக உறுதி அளிக்​கிறார். அப்​போது​தான் அவருக்கு சிக்​கல் தொடங்​கு​கிறது. அது என்ன நடை​பெறுகிறது என்​பதே படத்​தின் கதை. தெலுங்​கில்​ உரு​வாகி​யுள்​ள இப்​படம்​ மற்ற மொழிகளி​லும்​ செப்​. 11-ல்​ வெளி​யாக இருக்​கிறது“ என்றது படக்குழு.

  • 56
·
Added a news

கனடாவின் ல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள பாசானோ நகரில், நோயாளி மற்றும் ஊழியர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருந்தாளுநர் ஒருவரின் உரிமத்தை ல்பர்ட்டா கல்லூரி ஆஃப் பார்மசி நிரந்தரமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பாசானோ நகரில் மருந்தகம் நடத்தி வந்த அன்கித் பாரிக் என்பவர், அங்கு பணிபுரிந்த மற்றும் மருந்தகத்திற்கு வந்த நோயாளிகளான பெண்களிடம் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தவறான பாலியல் நடத்தைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுமட்டுமின்றி, மருந்தகம் திறந்திருந்த நேரத்திலும், தான் பணியில் இருந்த பொறுப்பான நேரங்களிலும் பாரிக் மருந்தக வளாகத்திலேயே தொடர்ந்து மது அருந்தியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பாரிக்கின் உரிமத்தை ரத்து செய்ய விசாரணை தீர்ப்பாயம் 2024-லேயே முடிவெடுத்தது. இந்த முடிவை எதிர்த்து பாரிக் மேல்முறையீடு செய்த நிலையில், மேல்முறையீட்டு குழு அதனை தள்ளுபடி செய்து, அவராலேயே ஏற்பட்ட மேல்முறையீட்டுச் செலவுகளையும் அவரே ஏற்குமாறு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, பாரிக் ல்பர்ட்டா மேல்முறையீட்டு நீதிமன்றத்தை (Alberta Court of Appeal) நாடினார்.

ஆனால், கடந்த ஜூன் 23 அன்று நீதிமன்றமும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, அவர் செலுத்த வேண்டிய நீதிமன்றச் செலவை மட்டும் சற்றே குறைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் மூலம் அன்கித் பாரிக் இனி மருந்தாளுநராகப் பணியாற்ற முடியாது. மேலும், அவர் தனது உரிமத்தை மீண்டும் கோரி விண்ணப்பிக்கவும் தகுதி அற்றவர் ஆக்கப்பட்டுள்ளார். 

  • 52
·
Added a news

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள நார்ஃபோக் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய பண்ணைத் தீ விபத்தில், சுமார் 20,000 பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிம்கோ நகருக்கு வெளியே உள்ள 'ஹைவே 3' பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பெரிய பண்ணையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவசரக் கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள நார்ஃபோக் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய பண்ணைத் தீ விபத்தில், சுமார் 20,000 பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிம்கோ நகருக்கு வெளியே உள்ள 'ஹைவே 3' பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பெரிய பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவசரக் கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

  • 58
·
Added a post

புதுச்சேரி கடற்கரை மற்றும் நேரு வீதி பகுதியில் மாலை நேரத்தில் கையில் சுண்டல் வாளியுடன் சுறுசுறுப்பாக சுண்டல் விற்பனை செய்யும் ஒரு இளைஞரை பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால், அவர் பிஏ, எம்ஏ, எம்பில் முடித்து தற்போது பிஎச்டி படிப்பவர் என்பது பலரும் அறியாத விஷயம்.

“எங்களுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அப்பா சுப்பிரமணியன், துணிக்கடையில் விற்பனையாளராக இருந்தார். அம்மா சரஸ்வதி, 2 அக்காள், 2 அண்ணன், 1 தங்கை என மொத்தம் 6 பேர். வறுமையான சூழலில் அக்காள்களுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடுமையான பண பிரச்சினை காரணமாக வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப எங்கள் குடும்பம் முடிவு செய்தது.

அப்போது, 1998-ம் ஆண்டு நான் 8-ம் வகுப்பு படித்தேன். என்னையும், மற்றொரு அண்ணன் சரவணக் குமாரையும் வேலைக்கு போகுமாறு வீட்டில் தெரிவித்தனர். எங்களுக்கு படிக்க ஆசை. அதனால் புதுச்சேரி கடற்கரையில் அமர்ந்து யோசித்தோம். அப்போதுதான், பீச்சில் சுண்டல் விற்பனை செய்ய முடிவு எடுத்தோம்.

முதலில் சுண்டல் விற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் மிகவும் அமைதியானவன். கூவி விற்கக்கூடத் தெரியாது. சில சமயம் சுண்டல் விற்காமலேயே போய்விடும். அதை என்ன செய்வது என்று தெரியாது. வீட்டிலோ வறுமை. சரியான ஆடை கூட இருக்காது.

அதனால், அண்ணனின் ஆடையை போட்டுக் கொள்வேன். இந்த நிலையில், சுண்டல் விற்றவாறே நான் படிப்பது பள்ளியில் பலருக்கும் தெரிய வந்தது. நான் அப்போது புதுச்சேரியில் உள்ள வீரமாமுனிவர் அரசு பள்ளியில் படித்து வந்தேன். எனது நிலையை உணர்ந்த என்னுடைய ஆசிரியர்கள் பத்மாவதி, பாலசுந்தரம், ராமதாஸ் ஆகியோர் உதவி செய்தார்கள்.

சுண்டல் விற்றவாறே படித்து, 10-ம் வகுப்பில் 442 மார்க் எடுத்தேன். அதையடுத்து வஉசி அரசு மேல்நிலைப ்பள்ளியில் சேர்ந்தேன். பின்னர் மேல்படிப்பு படிக்கும் ஆசையுடன் தாகூர் கல்லூரியில் பிஏ தமிழ் சேர்ந்தேன். அதன்பிறகு, எம்ஏ, எம்பில் முடித்தேன் .

படிப்புக்கு இடையே 2008-ல் நெட் தேர்விலும், 2013-ல் ஜேஆர்எப் (இளநிலை ஆராய்ச்சியாளர்) தேர்விலும் தேர்ச்சி பெற்றதால் பல்கலைக்கழகத்தில் இருந்து உதவித் தொகை கிடைக்க தொடங்கியுள்ளது. எனினும், இப்போதும் நான் சுண்டல் விற்கிறேன்.

எனது தந்தையால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால், காலையில் எழுந்து சுண்டல், வடை, பஜ்ஜிக்கு தேவையான பொருட்களை வாங்கி வீட்டில் தருவேன். எனது அம்மா அதை தயாரிப்பார். நான் பல்கலைக்கழகம் சென்று விட்டு வீடு திரும்பிய பிறகு மாலை 6 மணிக்கு மேல் சுண்டல், சமோசா, போளி, கட்லெட், பஜ்ஜி, வடை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பீச், நேரு வீதிக்கு விற்க வருவேன். விற்பனையை முடித்து விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்புவேன்.

பல்கலைக்கழக உதவித் தொகை கிடைத்தாலும் இந்த சுண்டல் வியாபாரம் மூலமாக எனது சகோதரிகள் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடிகிறது. என்னுடன் சுண்டல் விற்பனை செய்த எனது அண்ணன் சரவணக்குமார் தற்போது எம்ஏ, எம்பில், பிஎட் முடித்து அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். மற்றொரு அண்ணன் பாலமுருகன் பிளாட்பாரத்தில் துணி விற்கிறார்.

நமக்குள் ஆசையும், முயற்சியும் இருந்தால் நம்மை ஊக்கப்படுத்த சமுதாயத்தில் பலரும் உள்ளனர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சுண்டல் வாங்குவோர் தொடங்கி, பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நண்பர்கள் என பலரும் அளித்த ஊக்கம்தான் பிஎச்டி வரை என்னை கொண்டு வந்துள்ளது” என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் பழனிராஜ்.

' வறுமை நிலைக்கு பயந்து விடாதே ; திறமை இருக்கு மறந்து விடாதே ' என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலின் வடிவம்.....

  • 52
·
Added article

🌹இன்று பல கணவன்மார்கள் தன் மனைவிகள் ஊருக்கு போய்விட்டால் அடுத்த வினாடியே தன்னுடைய வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைப்பது

🌹 ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ என்ற நகைச்சுவையைத்தான். அப்படி பட்ட நகைச்சுவைக்கு சொந்தக்காரராக விளங்கியவர் ஜனகராஜ்.

🌹80களி ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் இணைந்து தன்னுடைய தனித்துவமான நகைச்சுவை காட்சிகளாலும் தனக்கே உரிய பாணியாலும் பேசி மக்களை கவர்ந்தவர்.

🌹அவருக்கு உண்டான தனிச்சிறப்பே அந்த சிரிப்புதான். அதை இன்றளவும் பல மிமிக்ரி கலைஞர்கள் பின்பற்றி வருகின்றனர். அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஜனகராஜ்.

🌹ஆனால் சில ஆண்டுகளாகவே ஜனகராஜை நாம் சினிமாவில் பார்க்க முடிவதில்லை. அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 96.

🌹அந்த படத்தில் பள்ளிக் கூடத்தின் பாதுகாவலராக நடித்திருப்பார் ஜனகராஜ்.

🌹அதன் பிறகு அவரை பார்க்கவே முடியவில்லை. இந்த நிலையில் நீண்ட வருடங்கள் கழித்து ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த போது வீட்டில் என் மனைவியுடன் இருக்கிறேன். அவ்வப்போது நண்பர்களாக இருக்கும் என் சக நடிகர்களிடம் தொலைபேசியில் பேசிக் கொள்வேன். ஆனால் யாரும் வருவதும் கிடையாது. நானும் போவதும் கிடையாது. அவரவர் வேலையில் பிஸியாக இருப்பார்கள். எனக்கு வயசு 72 ஆகிறது. நலமுடன் இருக்கிறேன் என்று கூறினார்.

  • 53
·
Added a post

நிம்மி என்னை கல்யாணம் பண்ணிக்க உங்க வீட்டுலே சம்மதம் கேட்டியா…..

அதெல்லாம் ஓகே……. உங்கம்மா ஜாதகத்தை வீட்டிலே கேட்டாங்க…

கட்டிக்க போறவன்நான்….. எங்கம்மா ஜாதகம் எதுக்கு……

முதியோர்இல்லம்போகிறயோகம்அந்த ஜாதகத்தில் இருக்குதான்னு பார்க்கணுமாம்……

  • 54
·
Added a post

ஹலோ…..மிஸ் மித்ரா தேவி' ங்களா..,. நான் பேங்க் மேனேஜர் பேசறேன்…நீங்க ரெண்டு லட்சம் டெபாசிட் பண்ணீங்களே…. இங்கே கணக்குஏறலே..OTPவந்திருந்தா….சொல்லுங்கமேடம்…….

அப்படியா சார்…இதோ சொல்றேன்…882963….ஸார்…..

என்னம்மா டாலி ஆகலே….

ஹலோ…..மிஸ் மித்ரா தேவி' ங்களா..,. நான் பேங்க் மேனேஜர் பேசறேன்…நீங்க ரெண்டு லட்சம் டெபாசிட் பண்ணீங்களே…. இங்கே கணக்குஏறலே..OTPவந்திருந்தா….சொல்லுங்கமேடம்…….

அப்படியா சார்…இதோ சொல்றேன்…882963….ஸார்…..

என்னம்மா டாலி ஆகலே….

  • 54
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 31 ஆம் தேதி புதன்கிழமை 15.7.2026

இன்று பிற்பகல் 02.24 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று அதிகாலை 02.20 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

இன்று காலை 10.18 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.

இன்று அதிகாலை 03.28 வரை கிமிஸ்துக்கினம். பின்னர் பிற்பகல் 02.24 வரை பவம். பின்பு பாலவம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=584&dpx=2&t=1784082279

நல்ல நேரம்:

காலை : 11.30 முதல் 12.00 மணி வரை

பகல் : 01.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 84

Good Morning...

  • 81
·
Added article

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் "மடிப்பு அம்சா"வாக வலம் வந்தவர் தான் நடிகை விசித்ரா. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கவர்ச்சிப் புயலாகப் பல படங்களில் முத்திரை பதித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு விலகி கணவர், குழந்தை என செட்டில் ஆனார்.

நீண்ட இடைவெளிக்குப் பின், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ளும் நுழைந்து சிறப்பாக விளையாடினார். அப்போது, சினிமா படப்பிடிப்பின் போது தனக்கு நேர்ந்த சில கசப்பான, வலிகள் நிறைந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அது இணையத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் மாறியது.

தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் விசித்ரா, சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா என்பது மிக வேகமாக, நிறையப் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு களம். அதில் புகழும், பணமும் கிடைக்கும். ஆனால், அங்கே உண்மையான அன்பும், கருணையும் கிடைக்குமா? என்று கேட்டால் கிடைக்காது.

அதுவும் புதுமுகமாக சினிமாவுக்குள் நுழையும்போது, அங்கே அன்பை எதிர்பார்க்கவே முடியாது. ஆரம்பத்தில் அவமானங்களையும், கேலி கிண்டல்களையும், அலட்சியங்களையும் மட்டும்தான் அதிகம் பார்க்க வேண்டி இருக்கும். ஆனால், ஒரேயொரு ஹிட் படம் கொடுத்துவிட்டால் போதும், உங்களுக்கென்று ஒரு 'மார்க்கெட்' வந்துவிட்டதால், உங்களை அவமதித்த அத்தனை பேரும் புகழ்வார்கள் அது தான் சினிமா.

சினிமாத்துறைடிய பொருத்தவரை இங்கு நிரந்தரமான நண்பனும் கிடையாது, நிரந்தரமான எதிரியும் கிடையாது. அதனால்தான் சினிமாவில் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருக்க வேண்டும். நம்மிடம் மிகவும் பாசமாக பழகுகிறார்களே என்று நெருங்கிவிடக் கூடாது. அதேபோல, எதிரியாக்கி ஒதுக்கவும் கொள்ளவும் கூடாது. ஏனென்றால் காலம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறும். நான் எப்போதுமே சினிமா நபர்களிடம் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடைப்பிடிப்பேன். யாரிடமும் அளவுக்கு அதிகமாக நெருங்கிப் பழக மாட்டேன். அந்த எல்லையை நான் சரியாக வைத்திருந்ததால் தான். இன்று என் வாழ்க்கையை நான் எந்தக் குழப்பமும் இல்லாமல், மிகுந்த சந்தோஷத்தோடு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நடிகை விசித்ரா பேசி இருக்கிறார்.

  • 156
·
Added article

மிஷ்கின் இயக்கி இசை அமைத்​துள்ள படம், ‘டிரெ​யின்’. விஜய் சேதுப​தி, ஸ்ரு​திஹாசன், நாசர், கே.எஸ்​.ரவி​கு​மார், நரேன் உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

கலைப்​புலி எஸ்.தாணு​வின் வி கிரியேஷன்ஸ் தயாரித்​துள்ள இந்தப் படத்​தின் டீஸர் மற்​றும் இசை வெளி​யீட்டு விழா சென்னையில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் வெற்​றி​மாறன், சசி, பாரத்​திபன், அமீர் உள்பட பலர் கலந்து கொண்​டனர்.

விழா​வில் மிஷ்கின் பேசும்​போது, “என்​னுடைய ‘நந்​தலாலா’ படக் கதையைச் சொல்​வதற்​காகத் தயாரிப்​பாளர் தாணு சாரை சந்தித்தேன். அவருக்கு அந்த கதை ஒன்​றுமே புரிய​வில்​லை. பிறகு எவ்வளவு பட்​ஜெட் என்று கேட்​டார். ரூ.4 கோடி என்​றேன். அவர் ஒரு ரூ.60 கோடி​யில் படம் பண்​ணலாம் என்​றார். ‘இந்​தப் படத்​துக்கு அவ்​வளவு தேவை இருக்​காது; இது சாதாரண கதை’ என்​றேன். அந்தக் கதை விக்​ர​முக்கு பிடித்​திருந்​தது. ஆனால் பண்ண முடியவில்லை.

ஆனாலும் தாணு சார் அப்​போது எனக்கு ஒரு அட்​வான்ஸ் கொடுத்தார். நீண்ட நாளுக்​குப் பிறகு தாணு சாரை சந்​தித்து படம் பண்​ணலாம் என்​றேன். விஜய் சேதுப​தியை வைத்​துப் பண்ணலாம் என்​றார். விஜய் சேதுபதி என்​னுடன் ஒரு படத்​தில் 2 நாட்​கள் நடித்​தார். பிறகு 10 வருடத்​துக்​குப் பிறகு இணைந்துள்ளோம். முன்பு அவர் வாய்ப்பு கேட்ட போது நான் சரியான பதிலளிக்​க​வில்​லை. பிறகு அவர் பெரிய நடிக​ராக வளர்ந்து விட்​டார். என்​னுடைய ‘சைக்​கோ’ படம் பாத்​து​விட்டு என்னைக் கட்​டிப் பிடித்து முத்​தம் கொடுத்​தார். அவரை மிகச் சிறந்த மனித​னாகப் பார்த்​தேன்.

இந்​த கதையை விஜய் சேதுப​திக்​காகப் பார்த்​துப் பார்த்து எழுதினேன். கதை​யில், வாழ்க்கை முடிந்​து​விட்​டது என நினைத்துக் கொண்​டிருக்​கிற கதா​பாத்​திரம் அவருக்​கு. இந்​தப் படத்தை விஜய் சேதுப​தி​யைத் தவிர வேறு யாருமே நடித்திருக்க முடி​யாது. கமல் சார் கூட பண்​ணியிருக்க முடி​யாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என் படம் பற்றி நான் பெருமையாகப் பேசவர​வில்​லை. படம் நன்​றாக இருந்​தால்​தான் ஓடும் என்​பது தெரி​யும். விஜய் சேதுப​தி​யின்​ நடிப்​பை என்​னால்​ மறக்​கவே முடி​யாது” என்​றார்​.

  • 156
·
Added a news

கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீட்டில் பொலிசார் நடத்திய சோதனையின்போது, நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் முதலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மனித்தோபாவில் பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, கடைசியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் இங்கி மார்க் (78). இம்மாதம், (அதாவது, ஜூலை மாதம்) 7ஆம் திகதி, மார்க் வீட்டில் பொலிசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் வீட்டில் நூற்றுக்கணக்கான துப்பாக்கி முதலான ஆயுதங்கள் இருப்பதும், அவை முறைப்படி பாதுகாப்பாக வைக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. அவற்றில் சில, கடத்தப்பட்டவை என பொலிசார் கருதுகிறார்கள். அத்துடன், மார்க் வீட்டிலிருந்து துப்பாக்கி குண்டுகளும், 300,000 டொலர்கள் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மார்க் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ஆயுதக் கடத்தல் முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், ஆகத்து மாதம் 11ஆம் திகதி, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

  • 159
·
Added a post

இந்த கோயிலை கட்டியவர் இரண்டாம் ராஜராஜ சோழன். இவர் இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகன் ஆவார்.

கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்தாலே இந்த பிரம்மாண்டமான அழகிய கோயில் வந்து விடும் .

ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை பொக்கிஷத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு "ச,ரி,க,ம,ப,த,நி " என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும்.

ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும். இதன் அருமைகளை அறியாத சிலர் இதன் மீது பெரிய பெரிய கற்களை போட்டு சோதித்ததால் இது சேதமடையத் தொடங்கியது.

அதனால், இப்போது இந்த படிகளை சுற்றி இரும்பு வேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது.

உள்ளே சென்று இதன் அருகில் புகைப்படம் எடுக்க மட்டும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இதன் இசையை கேட்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள்.

தவறாமல் காண வேண்டிய கலைநயம் மிக்க கோயில்களில் இதுவும் ஒன்று.

(படத்தை பாருங்கள்... மக்கள் இந்த கலை பொக்கிஷத்தின் அருமை புரியாமல் எப்படி சேதமாக்கி இருக்கிறார்கள் )

  • 166
  • 167
  • 169

அருள்மிகு தையல் நாயகி அம்மன்,

வைத்தீஸ்வரன் கோவில்

  • 173
  • 172

ஆயுள் முழுவதும் கொத்தினாலும்..

ஒரு மரத்தையும் சாய்த்ததில்லை மரங்கொத்தி!

சிந்திப்பவர்கள் சிறகடிக்கிறார்கள்,

சிகரத்தை தொடுகிறார்கள்.

  • 177
  • 178
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபார பணிகள் மிதமாக நடைபெறும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துறைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். அண்டை வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

ரிஷபம்

வியாபார பணிகளில் நெருக்கடிகள் குறையும். உங்கள் கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மாற்றங்கள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிதுனம்

உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். மற்றவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். துணைவருடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தூர தேச பயண சிந்தனைகள் மேம்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

கடகம்

அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். சில பணிகளை செய்து முடிப்பதில் வேகத்தைவிட நிதானம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு கற்பித்தல் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

சிம்மம்

கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்

கன்னி

மனதில் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிற்கல்வி சார்ந்த செயல்களில் உள்ள குழப்பங்கள் குறையும். அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

துலாம்

மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்களில் தகுந்த ஆலோசனைகளை பெறவும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விருச்சிகம்

வியாபாரம் நிமித்தமான சில வியூகங்களை அமைப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தனவரவு ஓரளவு இருக்கும். உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். நிதானமான பேச்சுகள் நன்மதிப்பை உருவாக்கும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

தனுசு

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வீடு வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உறவுகள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

மகரம்

அலுவலகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத திடீர் தன வரவுகள் சிலருக்கு ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

சகோதர வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வருமான வாய்ப்பு மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அறிவுத்திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையில் லாபம் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். நாவல் விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

மீனம்

அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மேல்நிலைக் கல்வியில் தெளிவுகள் பிறக்கும். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 215
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 14.7.2026

இன்று மாலை 04.33 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று அதிகாலை 03.47 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று பிற்பகல் 01.47 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.

இன்று அதிகாலை 05.42 வரை சதுஷ்பாதம். பின்னர் மாலை 04.33 வரை நாகவம். பின்பு கிமிஸ்துக்கினம்.

இன்று அதிகாலை 03.47 வரை சித்தயோகம். பின்னர் அதிகாலை 05.59 வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=583&dpx=2&t=1784005444

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 05.00 முதல் 06.00 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 215

Good Morning....

  • 226

புழுங்கல் அரிசி

நெல்லைப் புழுக்கி அரிசி ஆக்குதலே புழுங்கல் அரிசி என்ற பெயர் கொண்டது. இதன் ஆங்கிலப் பெயர் PARBOILED RICE.

புழுக்குதல் என்றால் அவிகை,அவித்ததல்

புழுங்குதல் - என்றால் சிறுக வேகுதல், ஆவியெழவேகுதல்.

நெல்லைப் புழுக்கி யெடுத்து உமி நீக்கப்பட்ட அரிசியே புழுங்கலரிசி.

  • 302