- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
ஒருவரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு கோடிக்கணக்கான பணம் தேவையில்லை. ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு வேளை உணவு, சொந்த ஊருக்குச் செல்ல ஒரு விமான டிக்கெட் இருந்தாலே போதும் என்பதை நினைவூட்டும் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அங்கித் பாண்டே என்ற இளைஞர், தனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது வீட்டிற்கு அடிக்கடி உணவு கொண்டு வரும் டெலிவரி ஊழியர், அன்றும் உணவை வழங்கிவிட்டு தயக்கத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் கேட்டுள்ளார். உடனே அவரை வீட்டுக்குள் அழைத்து தண்ணீர் கொடுத்த அங்கித், பேசிக்கொண்டிருக்கும்போது அந்த இளைஞரின் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்து என்ன ஆனது என்று கேட்டுள்ளார்.
அப்போது, “எதுவும் சரியாக இல்லை” என்று கூறிய அந்த டெலிவரி ஊழியர், தனது தாய் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சொந்த ஊருக்குச் செல்ல 30 மணி நேரம் ஆகும் ரயில் பயணம் மட்டுமே இருப்பதால், தாயை சரியான நேரத்தில் பார்க்க முடியுமோ என்ற கவலையில் இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அந்த இளைஞர் அன்று முழுவதும் எதுவும் சாப்பிடவில்லை என்பதை அறிந்த அங்கித், தனக்காக வந்திருந்த உணவையே அவருக்குச் சாப்பிடக் கொடுத்தார். அதன்பிறகு, 4,000 ரூபாய் செலவில் அவருக்காக விமான டிக்கெட்டையும் முன்பதிவு செய்து கொடுத்தார்.
முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததால், விமான நிலைய நடைமுறைகள் குறித்து டெலிவரி ஊழியர் பதற்றமடைந்தார். அதற்கு, விமான நிலையத்தில் இருக்கும் தனது நண்பர் அனைத்து உதவிகளையும் செய்வார் என்று கூறி அங்கித் அவருக்கு தைரியம் அளித்தார்.
சில மணி நேரங்களிலேயே சொந்த ஊருக்குச் சென்ற அந்த டெலிவரி ஊழியர், தனது தாயை சந்தித்தார். பின்னர் அங்கித்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்ததுடன், தாயின் உடல்நிலையும் தற்போது முன்னேறி வருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
விமான டிக்கெட்டிற்காக செலவிட்ட 4,000 ரூபாயை பின்னர் டெலிவரி ஊழியர் திருப்பி அனுப்பியிருந்தாலும், அந்தப் பணத்தை தாயின் சிகிச்சைக்காகவே பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி, அங்கித் மீண்டும் அதே தொகையை அவரிடமே அனுப்பி வைத்தார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அங்கித்தின் மனிதநேய செயலை ஆயிரக்கணக்கானோர் பாராட்டி வருகின்றனர். “மனிதநேயம் இன்னும் உயிருடன் இருக்கிறது”, “கஷ்டமான நேரத்தில் செய்யப்படும் சிறிய உதவியும் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஆண்கள் சட்டையில் பட்டன் வலது பக்கமும், பெண்கள் உடையில் பட்டன் இடது பக்கமும் இருக்கும். இது வெறும் டிசைன் இல்லை... பல ஆண்டுகளாக வந்த ஒரு மரபு.
ஏன் இப்படின்னு கேட்டா, அதுக்கு ஒரே ஒரு உறுதியான பதில் இல்லை. ஆனா சில சுவாரஸ்யமான காரணங்கள் சொல்லப்படுது.
அந்தக் காலத்துல பெரும்பாலான ஆண்கள் தாங்களே உடை அணிந்ததால், வலது கைப் பழக்கத்துக்கு ஏற்ற மாதிரி பட்டன் வலது பக்கம் வைக்கப்பட்டதாம்.
வசதியான குடும்ப பெண்களுக்கு வேலைக்காரிகள் உடை அணிவித்து விடுவாங்க. எதிரே நின்னு பட்டன் போட அவர்களுக்கு எளிதாக இருக்கணும்னு பெண்கள் உடையில் பட்டன் இடது பக்கம் வைக்கப்பட்டதாம்.
இன்னொரு கருத்து...பெரும்பாலான ஆண்கள் வலது கைப் பழக்கம் உள்ளவர்கள்... வாளை இடது இடுப்பில்தான் அணிவார்கள். அப்போதுதான் வலது கையால் வாளை உருவி எடுக்க முடியும்.
அப்படிப்பட்ட சூழலில், மேலாடை இடது பக்கம் மேலாகவும், வலது பக்கம் உள்ளேயும் மூடப்பட்டிருந்தால் (அதாவது ஆண்கள் உடையில் இருக்கும் வழக்கம்), வாளை உருவும்போது ஆடையின் விளிம்பு எளிதில் திறந்து காற்றில் பறப்பது அல்லது வாளில் சிக்கிக்கொள்வது குறையும் என்பதே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
இவை எல்லாமே வரலாற்றில் சொல்லப்படும் விளக்கங்கள்தான். ஆனால் இதுதான் உண்மையான காரணம் என்று நிரூபிக்கப்பட்ட ஆதாரம் இல்லை.
இப்போ காலம் மாறிடுச்சு. யூனிசெக்ஸ் டிசைன்கள், நவீன ஃபேஷன் காரணமாக இந்த வேறுபாடு பல உடைகளில் இல்லவே இல்லை.
நான் இந்த பதிவு போடும் முன் சில ஆன்லைன் aap களில் பார்த்த போது ஆச்சரியம்... பெண்களின் ஷர்ட் களில் பட்டன் இடது புறம்தான் இருந்தது.
இனிமேல் சட்டையில பட்டன் எந்தப் பக்கத்துல இருக்குன்னு பார்த்தா, அதுக்குப் பின்னாடி இருக்கும் இந்த சுவாரஸ்யமான வரலாறும் ஞாபகம் வரும்.
டிவி என் வீட்டிற்கு வந்தபோது. ... புத்தகங்களை எப்படி படிக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.
கார் என் வீட்டிற்கு வந்தபோது.....
நான் எப்படி நடக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.
என் கையில் மொபைல் கிடைத்தவுடன்..... கடிதங்களை எப்படி எழுதுவது என்பதை மறந்துவிட்டேன்.
என் வீட்டிற்கு கணினி வந்தபோது.......
எழுதவதை மறந்துவிட்டேன்.
ஏசி வந்ததும்......
இயற்கைக் காற்றை மறந்து விட்டேன்.
நகரத்திற்கு வந்தவுடன்...
அழகு நிறைந்த கிராமத்தை மறந்துவிட்டேன்.
வங்கிகள் மற்றும் கார்டுகளை கையாளுவதால்...
பணத்தின் மதிப்பை மறந்துவிட்டேன்.
வாசனை திரவியத்தை பயன்படுத்தியதால்...
பூக்களின் மனத்தை மறந்துவிட்டேன்.
துரித உணவு வருவதால்...
பாரம்பரிய உணவு வகைகளை சமைக்க மறந்துவிட்டேன்.
சம்பாதிக்க சுற்றி, சுற்றி ஓடுவதால்.....
ஓடுவதை எப்படி நிறுத்துவது என்பதை மறந்துவிட்டேன்.
கடைசியாக வாட்ஸ்அப் கிடைத்ததும்....
எப்படி பேசுவது
என்பதையே.....
மறந்துவிட்டேன்.
எழுதியவர் பேர் தெரியல.... சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துட்டுது...
செம்ம செம்ம.... இவ்ளோ நகைச்சுவையா ஒரு விஷயத்தை விவரிக்க முடியும்னு தெரியும்போது....
எந்நேரமும் விறைப்பாவே திரியுற நமக்கு வெக்கமாத்தான் இருக்கு...
வாழ்தல் இனிது.... ரசித்து வாழ்தல் வரம்....
கொலைப் பசியோடு ஒரு திருமண வரவேற்பு பந்தியில் அமர்ந்திருந்தேன்.
முதலில் பேப்பர் ரோலை உருட்டினார்கள் .
பின்பு இலைகளை முன்னே வைத்து சென்றார்கள்.
கால் மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் மட்டும் வைத்தார்கள்.
முதல் பந்தியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் தி.நகர் போன்று கூட்டம் நெறிய ஆரம்பித்தது.
நான் ஓர வரிசையில் அமர்ந்திருந்தேன்.
காத்திருப்பவர்கள் எனக்கு பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள் .
" வெறும் எலைய எம்மா நேரம்டா உத்து பாக்கறது .. சோத்த போடுங்கடா.."
சரக்கிலிருந்த பெருசு ஒன்று ஆரம்பித்து வைத்தது .
குலாப் ஜாமூன் , வெங்காய பச்சடி , உருளை சிப்ஸ் , வைத்த அடுத்த நொடியில் கபளீகரம் செய்தேன்.
என்னுடைய வரிசையில் கடைசி ஆள் வரை வைத்துவிட்டு திரும்பிய வெங்காய பச்சடிக்காரன் என்னைப் பார்த்து " பச்சடியைக் கூடவடா ..?" என்று மனதில் நினைத்தது அவன் முகத்தில் தெரிந்தது.
அடுத்தது சென்னாவும் , தேங்காய் சட்னியும் , வைத்தார்கள் .
" எப்பதாண்டா சோறு போடுவீங்க ..? "
மறுபடி பெருசு உருமியது.
" சார் தோசையும் சப்பாத்தியும் வந்துட்டே இருக்கு ..அது வரைக்கும் அப்பளம் சாப்ட்ரீங்களா ..?"
அப்பளம் வைத்திருந்தவன் நக்கல் செய்கிறானா , இல்லை மனதில் இருந்துதான் கேட்கிறானா போன்ற ஆராய்ச்சிகளில் இறங்க என் பசி அனுமதிக்கவில்லை.
இதோ வருகிறது அதோ வருகிறது என்று அவர்கள் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த சப்பாத்தியும் தோசையும் வந்தே விட்டது .
படுபாவிகள், எதிர் வரிசையில் வைக்க ஆரம்பித்தனர்.
எனது இடத்திற்கு வரும்பொழுது தோசை தீர்ந்துவிட்டது.
ஒரே ஒரு சப்பாத்தி வைத்தான்.
" தம்பி தோசை வரல .."
" நான் சப்பாத்தி வைக்கிற ஆளு சார் .."
" தெரியுதுப்பா ..
அவர்கிட்ட சொல்ல முடியாதா ..?"
" உள்ள இருப்பான் சார் ..
போனதும் சொல்றேன் .." அவர் மீட்டிங்கில் இருக்கார் இப்போ பார்க்க முடியாது என்று என் காதில் விழுந்தது .
அதற்குள் சாப்பாடு வைக்க ஆரம்பித்தார்கள்.
" பாஸ் ஒரு கரண்டி வைங்க சாப்டுட்டு பொறவு வாங்கிக்கிறேன் " எனக்கு இலையில் டிராபிக் ஜாம் ஆனால் பிடிக்காது என்பதால் அப்படி சொன்னேன்.
" தம்பி அதெல்லாம் வேலைக்கு ஆகாது ,
இப்பவே மொத்தமா வாங்கிக்கங்க ..
அப்புறம் இவங்கள பிடிக்க முடியாது .."
பக்கத்தில் இருந்த அனுபவஸ்தர் கூறினார்.
அவர் கூறியபடியே மொத்தமாக வாங்கி , சாம்பார் , வத்தக்குழம்பு , ரசம் , மோருக்கு என நான்கு பாகங்களாக பிரித்து வைத்தேன்.
எனக்கு பின்னால் வெயிட்டிங்கில் இருந்தவர் அருகில் இருந்தவரிடம் எதோ சொல்லி சிரித்தார்.
அநேகமாக , டாப் ஆங்கிளில் எனது இலையில் நான்கு மலைச் சிகரங்கள் தெரிந்திருக்க வேண்டும் அவருக்கு.
சாம்பார் வாளிக்கு பின்னாலயே ரசம் வாளியும் வந்தது.
" இப்படி வந்தா ஒன்னு சேர வந்துட்றீங்க இல்லனா ஆளே காணாம போயிடுறீங்க ..
சாம்பார் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள எப்படிப்பா ரசம் சாப்பிடறது ..?"
" சாப்பிடலாம் .. சாப்பிடலாம் .."
எவனோ பின்னாடி இருந்து குரல் கொடுத்தான்.
திரும்பிப் பார்த்தேன், யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை.
" தம்பி, புரியாத ஆளா இருக்கீங்களே ..
ரசத்த இப்பவே வாங்கி வச்சுக்கோங்க .." அனுபவஸ்தர் வலியுறுத்தினார்.
ரசத்துக்கு என குவித்து வைத்திருந்த குன்றில் ஒரு குழி வெட்டி ரசத்தை அதில் ஊற்றச் சொன்னேன்.
" வத்தக் குழம்பு இல்லையா ..?"
" வரும் சார் .. " 'ஏன் பறக்குறீங்க' என்று கழுத்து வரை வந்து விட்ட வார்த்தையை நல்லவேளை முழுங்கிவிட்டான்.
" தம்பி உங்க ரசம் நம்ம இலைக்கு வருது பாருங்க " அருகில் இருந்தவர் சிரித்தபடி கூறினாலும் அது சிரிப்பதற்காகக் கூறியது அல்ல.
இதற்கு உடனடியாக ஆக்ஷனில் இறங்கியாக வேண்டும்.
மோர் குன்றில் இருந்து கொத்தாக சோற்றை அள்ளி, ரசம் லீக் ஆகும் இடத்தை சுற்றி ஒரு டேம் கட்டினேன் .
அவருக்கு பரம திருப்தி.
அடுத்து திடீரென்று காபி வைத்தார்கள் .
" இன்னும் ரசத்த கூட தாண்டலயேப்பா .. அதுக்குள்ள காபி வச்சா என்ன அர்த்தம் ?"
" சீக்கிரம் முடிச்சுட்டு எந்திரிக்கனும்னு அர்த்தம் .."
மீண்டும் அதே குரல் பின்னாலிருந்து.
காபியை ஆறிப் போய் குடிப்பதும் , குப்பையில் வீசுவதும் ஒன்று.
காபியை இழக்க எனக்கு மனமில்லை.
ரசம் சாப்பிட்டுகொண்டே , நடு நடுவே காபியையும்
ஒரு சிப் இழுத்துகொண்டேன்.
புது காம்பினேஷன். நீங்களும் டிரை பண்ணுங்க மக்கா.
" இவன் இப்பத்தைக்கு முடிக்க மாட்டான் மாப்ள ..
வா அந்த லைனுக்கு போவோம் .."
அந்த இரண்டு பேர் இறுதியாக என்னிடம் தோற்று வெளியேறினார்கள்.
அடுத்து மோர் வந்தது. வாங்கி பிசைய ஆரம்பித்தேன்.
என் வரிசையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக இலையை மூடி எழ ஆரம்பித்தனர்.
இறுதியாக எனக்கு மிகவும் பிடித்த வத்தக் குழம்பும் வந்தது.
இப்போது அநேகமாக அனைவரும் எழுந்து விட்டனர் , என் அருகில் அனைவரும் புது முகங்கள்.
ஆயம்மா பேப்பர் ரோலை சுருட்டிக் கொண்டே வந்தார். பாதி குன்றுதான் நான் முடித்திருந்தேன்.
என் அருகில் வந்ததும் , " பரவாயில்லை முடிங்க சார் " என்று கருணை கூர்ந்தார் .
பரீட்சை ஹாலில் கறாராக பேப்பரைப் பிடுங்கும் ஆசிரியப் பெருமக்களே , ஆயம்மாவைப் பார்த்து படியுங்கள்.
வரிசையில் அமர்ந்திருந்த புது முகங்கள் அனைவரும் என்னைக் குரூரமாக பார்க்க ஆரம்பித்தனர்.
எனக்கு வெட்கமாய்ப் போய் விட்டது .
மீதமிருக்கும் வத்தக் குழம்புக் குன்றை பிரிய மனமில்லாமல் ,வாழைப் பழத்தை மேல் ஜோப்பில் போட்டுக்கொண்டு , இலையை மூடிவிட்டு
ஒரு கையில் ஐஸ் கிரீம்
மறு கையில் ஜாங்கிரியுடன் நான் எழ முற்பட்டபோது
" சார் .. இங்க யாருக்கோ தோச வரலயாமே ..
உங்களுக்கா ? " என்ற குரல் உசுப்பேத்தியது.
திரும்பி அமர்ந்தால் அடி விழும் என்று தெரிந்ததால்,
" நான் இல்லப்பா .." என்று கூறிவிட்டு கை கழுவ சென்றேன்.
நிம்மதியா திங்கவிட மாட்றானுவ.....
உண்மையில் பெரும்பாலான கல்யாண ரிசப்சனில் இதான் நடக்கிறது.
உணவு வீணடிக்கப்படுகிறது
தனது குழந்தைப் பராமரிப்பிற்காக வழங்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான டொலர்கள் தொகையை வழங்கத் தவறிய தந்தை ஒருவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரசுரத் தடையின் கீழ் "திரு. M" (Mr. M) எனக் குறிப்பிடப்படும் அந்த நபர், நீதிமன்ற விசாரணையின் போது மொத்தமாக 37,312.54 டொலர்களை நிலுவையாக வைத்திருக்க வேண்டியிருந்தது.
குழந்தையின் தாயாரான "திருமதி. C" (Ms. C) மற்றும் பிரதிவாதியான திரு. M ஆகிய இருவரும் சட்டப்பூர்வமாக திருமண பந்தத்தில் இணையவில்லை. குழந்தை பிறந்த நாள் முதல் வளர்ப்புச் செலவுகள் முழுவதையும் தாயாரே கவனித்து வந்துள்ளார்.
ஆண்டிற்கு 297,700 டொலர்கள் வருமானம் ஈட்டும் திரு. M, குழந்தைப் பராமரிப்பிற்காக மாதம் 2,500 டொலர்களையும், நிலுவைத் தொகையாக 16,429 டொலர்களையும் வழங்குவதாகச் சட்டப்பூர்வ ஒப்பந்தம் செய்தார்.
நிலுவைத் தொகை 50,000 டொலர்களை நெருங்கியதையடுத்து, மாதம் 7,500 டொலர்கள் செலுத்த வேண்டும் எனவும், தவறினால் ஒவ்வொரு தவறும் தவறும்போதும் 3 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அவர் இருமுறை மட்டுமே பணத்தை வழங்கிவிட்டு, அதன் பின்னர் பணத்தைச் செலுத்த தவறியுள்ளார்.
இதனால் தனக்குக் கடும் கடன்பாடும், வாழ்க்கைத் தரத்தில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக தாயார் நீதிமன்றத்தில் விவரித்தார். தனக்கு போதிய வருமானம் இல்லை எனவும், நிதி நெருக்கடி நிலவுவதாகவும் தந்தை சார்பில் வாதிடப்பட்டது. மேலும், தனது நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 52,000 டொலர்களை தன்னால் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.
ஆனால், அந்த வங்கிக் கணக்கிலிருந்து 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏராளமான ஆடம்பரச் செலவுகள் செய்யப்பட்டுள்ளதை நீதிபதி மைக்கா ரான்கின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது கிரேஃப்ரையர்ஸ் பாபி (Greyfriars Bobby) என்ற ஸ்கை டெரியர் (Skye Terrier) இன நாயின் உண்மைச் சம்பவம். தனது எஜமானின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத விசுவாசத்தால், ஸ்காட்லாந்தின் மிகவும் புகழ்பெற்ற நாய்களில் ஒன்றாக பாபி இன்று வரை நினைவுகூரப்படுகிறார்.
1858-ஆம் ஆண்டு, பாபியின் எஜமானான ஜான் கிரே (John Gray) காசநோயால் உயிரிழந்தார். அவரை எடின்பரோவில் உள்ள Greyfriars Kirkyard கல்லறையில் அடக்கம் செய்தனர்.
அதன்பிறகு, அடுத்த 14 ஆண்டுகள் முழுவதும், பாபி தனது எஜமானின் கல்லறையை விட்டு நகராமல் அங்கேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விசுவாசம் அப்பகுதி மக்களை மிகவும் நெகிழச்செய்தது. அவர்கள் தினமும் பாபிக்கு உணவு வழங்கினர். கல்லறையின் பராமரிப்பாளரும் பாபி அங்கேயே தங்க அனுமதி அளித்தார். அருகிலிருந்த ஒரு காபி ஹவுஸ் உரிமையாளரும் தனது வாழ்நாள் முழுவதும் பாபியை அன்புடன் பராமரித்தார்.
1860-களின் இறுதியில், பாபி மிகவும் பிரபலமானதால், தெரு நாய்களுக்கு எதிரான புதிய உரிமச் சட்டம் அமலுக்கு வந்தபோது, எடின்பரோ நகரின் லார்ட் ப்ரோவோஸ்ட் அவருக்கான நாய் உரிமம் மற்றும் கழுத்துப்பட்டைக்கான செலவை ஏற்றுக்கொண்டார்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கழுத்துப்பட்டை இன்றும் பாதுகாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.
1872-ஆம் ஆண்டு பாபி இறந்தபோது, தனது எஜமானின் கல்லறைக்கு அருகிலேயே, Greyfriars Kirkyard நுழைவாயிலின் உள்ளே அவரும் அடக்கம் செய்யப்பட்டார்.
அடுத்த ஆண்டே, பாபியின் நினைவாக வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. இன்று அந்தச் சிலை, எடின்பரோ நகரில் அதிகம் பார்வையிடப்படும் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்தக் கதை நமக்குச் சொல்லும் பாடம்:
உண்மையான அன்பும் விசுவாசமும் வார்த்தைகளால் அல்ல, செயல்களால் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வேலை பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
ரிஷபம்
மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் மேம்படும். வெளியூர் பயணங்களால் சாதகமான சூழல் அமையும். பணி நிமித்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம்
இழுபறியாக இருந்து வந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தாய் மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அலுவல் பணிகள் சற்று குறையும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். கற்பனை சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனை வாங்குவது குறித்த வாய்ப்புகள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் அமையும். அரசு பணிகளால் ஆதாயம் உண்டாகும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கன்னி
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். காலில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனங்களால் சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அடிப்படை கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்காலத் தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். செல்வச் சேர்க்கை தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். குழந்தைகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் திருப்பங்கள் ஏற்படும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபார முதலீடுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மகரம்
சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவு கைக்கொடுக்கும். அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவுகள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். பணியாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வழக்கு தொடர்பான நுணுக்கங்களை அறிவீர்கள். வேளாண்மை தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவங்கள் உருவாகும். உறவினர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர் மட்ட அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம்
வெளிவட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் அனுபவமும் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 24.7.2026
இன்று பகல் 12.05 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று அதிகாலை 05.05 வரை விசாகம். பின்னர் அனுஷம்.
இன்று இரவு 11.35 வரை சுப்பிரம். பின்னர் பிராமியம்.
இன்று பகல் 12.05 வரை கரசை. பின்னர் வணிசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 12.15 முதல் 01.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கங்கனா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில், தனது முதுகுப் பகுதியில் மட்டும் ஒரு பர்ஃப்யூம் பாட்டிலை வைத்து போஸ் கொடுத்துள்ளார். அந்த பாட்டிலின் பெயரான "Crave Me" என்பதையே கேப்ஷனாகவும் பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் இது முழுக்க முழுக்க ஒரு பிராண்ட் புரோமோஷன் என்பது தெளிவாகியுள்ளது.
பொதுவாக பிராண்ட் புரோமோஷன் என்றாலே, தயாரிப்பை கையில் வைத்தோ அல்லது பயன்படுத்துவதுபோலவோ பிரபலங்கள் புகைப்படம் வெளியிடுவது வழக்கம். ஆனால், கங்கனா சர்மா தேர்வு செய்திருக்கும் இந்த கான்செப்ட் இதுவரை இந்திய அளவில் பெரிதாக யாரும் முயற்சிக்காத ஒன்றாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சமீப காலமாக பிராண்ட் புரோமோஷன், கிளாமர் புகைப்படங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர்களில் நடிகை தர்ஷா குப்தாவும் ஒருவர். இன்ஸ்டாகிராமில் தனக்கென ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் அவர், சமீபத்தில் தனியாக ஒரு செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தர்ஷா குப்தா: அந்த செயலியில் வீடியோ கால் வசதிக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம், பிரத்யேக வீடியோக்களுக்கு தனி சந்தா, அதேபோல் பிராண்ட் கொலாபரேஷன்களுக்கும் தனி கட்டணம் என பல்வேறு வகையான சர்வீஸ்களுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலித்து வருகிறார். அதனால், அவர் ஒரு பிராண்டை விளம்பரப்படுத்தினால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
ஆனால், கங்கனா சர்மா வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட், பிராண்ட் புரோமோஷனுக்கும் ஒரு புதிய முகத்தை கொடுத்துள்ளது என்று சொல்லலாம். தயாரிப்பை மட்டும் மையப்படுத்தாமல், புகைப்படத்தின் முழு கான்செப்ட்டையும் அந்த பிராண்டுடன் இணைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
இதன் காரணமாக, "பிராண்ட் புரோமோஷன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்", "இந்த அளவுக்கு கான்செப்ட் யோசித்து விளம்பரம் செய்வது வேறு லெவல்" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளங்களில் தற்போது "பிராண்ட் புரோமோஷனில் கங்கனா சர்மாவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை" என்ற பேச்சையே இந்த ஒரு பதிவு உருவாக்கியுள்ளது.
காமெடி நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கி, இன்று கதையின் நாயகனாக வெற்றிகரமாக வலம் வரும் சூரி, அடுத்ததாக 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். கடலோர மக்களின் வாழ்க்கையையும், படகு பந்தயத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ரசிகர்களின் செயல்பாடு குறித்து சூரி பேசியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது, தனது முந்தைய படமான மாமன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட சம்பவத்தை குறிப்பிட்ட சூரி, "அது எனக்கு சந்தோஷம் கொடுக்கவில்லை. உண்மையை சொல்லணும்னா, வெட்கமாகத்தான் இருந்தது" என்று வெளிப்படையாக கூறினார்.
மேலும், "சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வளர்ந்தவன் நான். அந்த பசியோட வலி என்னன்னு எனக்கு தெரியும். நீங்க சாப்பாட்டை மதிக்காமல், வீணாக்கி இப்படிச் செய்வது சரியில்லை. ஒரு படம் நல்லா இருந்தா மக்கள் பார்த்து வெற்றி பெற வைப்பாங்க. மண்சோறு தின்றா படம் ஓடாது. இது முழுக்க முழுக்க முட்டாள்தனம் தம்பி" என்று எந்தவித தயக்கமும் இல்லாமல் தனது ரசிகர்களுக்கே அறிவுரை கூறியுள்ளார்.
நடிகர் விமலுக்கு எதிராக தொடரப்பட்ட ரூ.4.5 கோடி செக் மோசடி வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், மேல்முறையீடு செய்ய சட்டப்படி அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், தண்டனையை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அவரின் கடைசி படம் ஜனநாயகன். இதனாலேயே, அறிவிப்பு வர்றதுக்கு முன்னாடியே படத்துக்கு பயங்கர ஹைப்ப்பு ஏறிடுச்சு. அப்போதிலிருந்து படம் ரிலீஸ் ஆகும் இந்த நாள் வரை, ஒரு பெரிய ஸ்டார் படத்துக்குரிய எல்லா பரபரப்பும் இந்த புராஜெக்ட்டை சுத்தி இருந்துட்டே இருந்துச்சு. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம், சென்சார் பிரச்சினைகளால் ஆறு மாசத்துக்கும் மேல தள்ளிப்போச்சு. இப்போ எல்லா தடைகளையும் தாண்டி, படம் நாளைக்கு தியேட்டர்களுக்கு வருது. இவ்வளவு தாமதம் ரசிகர்களின் ஆர்வத்தை குறைச்சிருக்கா? இல்லவே இல்லைன்னு அட்வான்ஸ் புக்கிங் ரிப்போர்ட் சொல்லுது.
சினிமா டிராக்கர்கள் சொல்ற கணக்குப்படி, தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளுக்காக படம் 12 கோடி ரூபாய் அட்வான்ஸ் புக்கிங் ஆகியிருக்கு. இதன்படி, சுமார் ஏழு லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. 70 சதவீதத்துக்கும் அதிகமான தியேட்டர் ஆக்குபென்சியும் பதிவாகியுள்ளது. பல தியேட்டர்களில் புதிய ஷோக்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. பிரபல டிராக்கர் நிறுவனமான சாக்னில்க் (Sacnilk) கணக்குப்படி, இந்தியா முழுவதும் படம் இதுவரை 15.48 கோடி ரூபாய் கிராஸ் வசூல் செய்துள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்புகளின் முதல் நாள் புக்கிங் மட்டும். இந்தியா முழுவதும் இதுவரை 7.46 லட்சம் டிக்கெட்டுகளை படம் விற்றுள்ளதாக சாக்னில்க் அறிக்கை சொல்லுது.
அதே சமயம், சாக்னில்க் நேற்று வெளியிட்ட உலகளாவிய கணக்கின்படி, படம் 30 கோடி ரூபாய் கிராஸ் வசூலித்திருந்தது. ஒரு கட்டத்தில், புக் மை ஷோவில் (BookMyShow) ஒரு மணி நேரத்திற்கு 15,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்தது. பெங்களூருவில் 'ஜனநாயகன்' முதல் ஷோ டிக்கெட்டுகள் 100 ரூபாயில் இருந்து 2500 ரூபாய் வரை விற்கப்படுது. பல மல்டிபிளெக்ஸ்களில் உள்ள ரெக்லைனர் சீட்களுக்கு 2500 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்சார் பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளிப்போன இடைவெளியில், படம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் லீக் ஆகி பரவலா பரவியது. இதன் தாக்கம் அட்வான்ஸ் புக்கிங்கில் தெரிவதாக டிராக்கர்கள் கருதுகிறார்கள். ஆனாலும், இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் தியேட்டரில் வந்து பார்ப்பார்கள் என தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள். படம் முதல் நாளில் 100 கோடி வசூல் செய்யுமா என்ற கேள்விக்கு விடை தேடி ஒட்டுமொத்த திரையுலகமும் காத்திருக்கிறது. எச். வினோத் இயக்கி உள்ள இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) தயாரித்துள்ளது.
தமிழ் சினிமாவுல இப்போ வேற லெவல் கூட்டணி ஒன்னு செட் ஆகியிருக்கு! உலக நாயகன்கள்ல ஒருவரான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்துல, நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் கியூட்டான நடிப்பால எல்லாரையும் கவர்ந்த சாய் பல்லவி இணையப் போறாங்க.
இந்த தரமான சம்பவத்துக்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்துல படுஜோரா தொடங்க இருக்கு. அதுமட்டுமில்லாம, மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்குற இந்த படத்துக்கு நம்ம இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் மியூசிக்.
ஏற்கனவே ‘செக்கச்சிவந்த வானம்’ படத்துல மணிரத்னம், விஜய் சேதுபதி காம்போ எப்படி பட்ட ஹிட்னு நமக்கு தெரியும், இப்போ அது கூட சாய் பல்லவி வேற சேர்ந்துருக்கதால எதிர்பார்ப்பு இப்போவே ஹைய் ஆப்ல இருக்கு.
அதுவும் மணிரத்னம் மேஜிக், ரஹ்மானோட மியூசிக்னு வந்தா தியேட்டர்களில் தெறிக்கவிடுறது உறுதி. படப்பிடிப்பு தொடங்குறதுக்கு முன்னாடியே கோலிவுட்ல இந்த நியூஸ் தான் ஹாட் டாபிக்கா ஓடிட்டிருக்கு!
மனித மனதிற்குள் புதைந்து கிடக்கும் ஆழமான ஏக்கங்களையும், வெளிப்படுத்தாத ஆசைகளையும் மையமாக வைத்து ஒரு அழகான ஃபீல்-குட் திரைப்படத்தை இயக்கியுள்ளார் வர்ஷா வாசுதேவ். பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் அபிஜித் பாபுஜி தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் ஜூன் 19 ஆம் தேதி ஏஜிஎஸ் சினிமாஸ் விநியோகத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரைக்கு வருகிறது.
புனித நகரமான காசியின் பின்னணியில், எதிர்பாராத சூழலில் இணையும் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உணர்வுப்பூர்வமான பயணமே இப்படத்தின் முக்கியக் கதைக்களமாகும். இதில் முதன்முறையாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் மற்றும் மூத்த நடிகை மதுபாலா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
கனடாவில், வாடகை மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ப்ராம்டனில் வாழும் சவ்ரீத் கௌர் (27) என்னும் பெண், வீடு வாடகைக்கு இருப்பதாக விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தை நம்பி, பலர் கௌரை அணுகி வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன், டெபாசிட் தொகையும் செலுத்தியுள்ளனர்.
ஆனால், அவர்கள் சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் செல்லும்போதுதான் தெரிந்துள்ளது, அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு குடும்பம் வாடகைக்கு இருப்பதும், அந்த வீட்டை வாடகைக்கு விடும் திட்டமே அந்த வீட்டுக்காரருக்கு இல்லை என்பதும்!
இதில் சிலர் தாங்கள் ஏற்கனவே வசித்த வீட்டை காலி செய்துவிட்டு தங்கள் உடைமைகளுடன் வந்துள்ளார்கள். அவர்கள் வாடகை ஒப்பந்தம் செய்து, குடியிருப்பதற்காக வந்த வீட்டில் ஏற்கனவே வேறொரு குடும்பம் வசித்துவருவது தெரிய வந்ததால், என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போன சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில், அப்படி சுமார் 17 பேரை ஏமாற்றிய சவ்ரீத் கௌர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சுமார் 60,000 டொலர்களுக்கும் அதிகமான தொகையை இந்த வகையில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் மீது 38 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடயம் என்னவென்றால், வீடு வாடகைக்கு இருப்பதாக அவருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 17 பேரில் ஒருவருக்குக் கூட அவர் உறுதியளித்தபடி வீடும் கிடைக்கவில்லையாம், அவர் வாங்கிய டெபாசிட்டும் திருப்பிக் கொடுக்கப்படவில்லையாம்,
கனடாவின் ஒண்டாரியோ மாகாணம் முழுவதும் சிறுவர்களுக்கு எதிரான இணையவழி பாலியல் சுரண்டலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விரிவான நடவடிக்கையைத் தொடர்ந்து, 63 சந்தேக நபர்கள் மீது 200-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
'புராஜெக்ட் டைம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிறப்புத் திட்டத்தின் மூலம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை தயாரித்தல், கைவசம் வைத்திருத்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களால் இலக்கு வைக்கப்பட்ட 51 பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உரிய உதவிகளும் வழங்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 264 குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் "தங்கள் சமூகத்தில் பொறுப்பான மற்றும் நம்பிக்கை தரும் பதவிகளில் இருந்தவர்கள்" ஆவர். 8 பேர் ஏற்கனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள். மொத்தம் 814 மின்னணு சாதனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 154 விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒண்டாரியோ மாகாணக் காவல் துறை தெரிவித்துள்ளது.
சிறுவர் பாலியல் சுரண்டல் தொடர்பான ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உள்ளூர் காவல்துறையையோ அல்லது cybertip.ca என்ற இணையதளத்தையோ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆதரவு கிட்டும். லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.
மிதுனம்: நெடுநாளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். வியாபாரம் லாபம் தரும்.
\கடகம்: உற்றார் உறவினர் வீடு தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
சிம்மம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு நட்பை புதுப்பிப்பீர்கள். பூர்வீக சொத்து வழக்கில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
கன்னி: புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை முடிப்பீர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: தடைகள் உடைபடும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்: எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவீர். திட்டமிட்ட பணியை அலைந்து திரிந்து முடிப்பீர். மனைவி வழியில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரப் போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரிப்பர்.
தனுசு: நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். ஓரளவு லாபம் பார்ப்பீர்.
மகரம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பணவரவு உண்டு. அலுவலகத்தில் நிம்மதியுண்டு. அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர். பிரபலங்களை சந்திப்பீர்கள்.
கும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு இருக்கும். கூட்டுத்தொழிலில் பாக்கிகள் வசூலாகும். அலுவலக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் ஆதரிப்பர். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்.
மீனம்: நீண்டநாள் கனவுகள் நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை 23.7.2026.
இன்று காலை 10.33 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று அதிகாலை 03.00 வரை சுவாதி. பின்னர் விசாகம்.
இன்று இரவு 11.11 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.
இன்று காலை 10.33 வரை கௌலவம். பின்னர் இரவு 11.19 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 11.00 முதல் 12.00 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை







