- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
குழந்தையாக அறிமுகமான குட்டி பத்மினி, விசு இயக்கிய பெண்மணி அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர்கள், சகலகலா சம்மந்தி போன்ற படங்களில் துணை நடிகையாகவும் நடித்தார். இதோடு மட்டுமில்லாமல், இவரது வைஷ்ணவி ஃபிலிம்ஸ் எண்டெர்பிரசஸ் லிமிடெட் என்ற தொலைக்காட்சி நிறுவனம் மூலம், கிருஷ்ணதாசி மற்றும் இராமானுஜர் போன்ற பிரம்மாண்ட சீரியல்களையும் தயாரித்துள்ளார். இவர் நடிகரும் தயாரிப்பாளருமான பிரபு நேபாலை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனியாக குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியுள்ளார்.
இவருக்கு கீர்த்தனா, ஃபான்னிங், ரிதினேகா என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய மகள் ரிதினேகாவிற்கு தற்போது திருமணம் நடக்கவுள்ளது. இந்த இனிப்பான 'செய்திளை குட்டி பத்மினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், என் மகளுக்கு ஒருவரை பிடித்து இருக்கிறது. அவர் பெயர் அஷ்வின். அவரின் குடும்பத்தை நான் போய் சந்தித்தேன். அவர்களும் எங்க வீட்டுக்கு வந்து அனைவரையும் சந்தித்து பேசினார்கள். ரொம்ப நல்ல குடும்பம், அனைவரையும் எனக்கு பிடித்து இருக்கிறது. எனக்கு மகன் இல்லாத குறையை என் மருமகன் அஷ்வின் நிரப்பிவிட்டார். அம்மா... அம்மா... என அவர் கூப்பிடும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
நவம்பர் மாதம் திருமணத்தை நடித்த திட்டமிட்டு இருக்கிறோம் எனது சந்தோஷத்தை குட்டி பத்மினி பகிர்ந்துள்ளார். தனி ஆளாக நின்று மகள்களை வளர்த்த குட்டி பத்மினியின் இந்த அறிவிப்பிற்கு நெட்டிசன்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை பூனம் பஜ்வா இன்ஸ்டாகிராமில் சில நிமிடங்களுக்கு முன்னதாக வெளியிட்ட ஸ்லீவ்லெஸ் உடை போட்டோக்கள் வேறலெவலில் லைக்குகளை குவித்து வருகிறது.
குமுதா போல இவரும் சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்தால் இஷ்டத்துக்கு சம்பாதிக்கலாமே ஏன் இன்னும் அந்த பக்கம் போக மறுக்கிறார் என ரசிகர்களே கேள்வி எழுப்ப கிளம்பி விட்டனர்.
பட வாய்ப்புகள் குறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், சிரித்த முகத்துடன் எப்போதுமே மினி டிரெஸ்ஸில் தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை தவறாமல் கவர்ச்சி தீனிப் போட்டு வருகிறார்
ஹரி இயக்கத்தில் ஐயா படத்தில் நயன்தாரா அறிமுகம் ஆனது போல ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் 2008ம் ஆண்டு அறிமுகமானவர் தான் பூனம் பஜ்வா. 2005ம் ஆண்டு மொடட்டி சினிமா படத்தில் நவ்தீப் ஜோடியாக நடிக்கத் தொடங்கினார். ஜீவாவுடன் இவரது ஜோடி பொருத்தம் சூப்பராகவே அமைந்தது. தெனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களுக்கு இன்னமும் ரசிகர்கள் உள்ளனர்.
கடைசியாக 2022ம் ஆண்டு குருமூர்த்தி எனும் தமிழ் படத்தில் நடித்தார். அதன் பின்னர் வேறு எந்தவொரு படத்திலும் அவருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. காதலருடன் திருமணம் செய்துக் கொள்வாரா என்று பார்த்தால் தொடர்ந்து லிவிங் டுகெதர் வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார் என்கின்றனர். முத்தின கத்தரிக்காய் பட நடிகைக்கு இப்போ 41 வயதாகிறது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஆகஸ்ட் எனர்ஜி" என்ற கேப்ஷனுடன் நண்பர்களுடன் இருப்பது, செல்ஃபி எடுப்பது என போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதோடு காருக்குள் அமர்ந்து தனது கைகளால் முகத்தை மூடியபடி கதறி அழுவது போன்ற ஒரு வீடியோவை அதில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சமந்தா ஆனந்த கண்ணீரில் அழுகிறாரா... அல்லது சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறாரா... அல்லது உண்மையிலேயே சோகத்தில் அழுகிறாரா என்று எதுவுமே புரியாமல் அவரது ரசிகர்கள் பெரும் குழம்பி போனார்கள். கர்ப்பமாக இருக்கும் இந்தச் சூழலில் சமந்தா இப்படி அழுவது போன்ற வீடியோவைப் பகிர்ந்திருப்பது சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு சமந்தா?" உங்களுக்கு என்ன பிரச்சனை?, மன அழுத்தம் கூடாது, என பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை சமந்தா, கடந்த 2025ஆம் ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமணம் கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் பைரவி தேவி சிலை முன்பு மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் தனது கணவரான ராஜ் நிடிமோரு எழுதிய கதையில், இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கிய 'மா இண்டி பங்காரம்' என்ற படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியானது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இப்படத்தில் அதிரடியாக ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா மிரட்டி இருந்தார். இப்படம் நல்ல வசூலை அள்ளியது. இந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா, தான் தாயாகப்போகும் மகிழ்ச்சியான விஷயத்தை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சோசியல் மீடியாவின் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளது. இதற்கு முன்னாடி பேஸ்புக் மட்டுமே கோலோச்சிய நிலையில், இப்போ இன்ஸ்டாகிராம், எக்ஸ் என பல சமூக வலைதளங்கள் படையெடுத்து வந்துவிட்டன. இவற்றின் மூலம் விதவிதமான ரீல்ஸ்கள், கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு சிலர் பயன் அடைந்து, ஓவர் நைட்டில் பெரிய விஐபியாகவே பிரபலமாகி வருகிறார்கள்.
அந்த வகையில், இப்போது நடிகைகளுக்கெல்லாம் மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக அமைந்திருப்பதுதான் இந்த இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரைப். இந்த சப்ஸ்கிரைப் மூலம் மாதம் ரூ. 199 முதல் ரூ. 16,000 வரை சந்தாவை செலுத்தி, தங்களுக்கு பிடித்தமான நடிகைகளின் பிரத்தியேகமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் முறை, இது இணையத்தில் ஒரு செம மாஸ் புது பிசினஸாகவே பார்க்கப்பட்டு வருகிறது,
சினிமாவில் வாய்ப்பிழந்த ஒருசில நடிகைகள், இந்த சப்ஸ்கிரைப் ஆப்ஷன் மூலமாகவே மாதா மாதம் லட்சக்கணக்கில் பணத்தைச சம்பாதித்து வருகின்றனர். அந்த வரிசையில், ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, அப்புறம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாச்சலம், இப்போ இந்த சப்ஸ்கிரைப் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருகிறார்.
கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நகர மேயர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில், கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
எட்மண்டனில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவரும் சுக்ஜீத் சிங் ரந்தாவா (48) என்பவர், புதன்கிழமை இரவு தனது விடுதியை மூடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிங் கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரை சிங் தடுக்க, அந்த நபர் சிங்கை தாக்கியுள்ளார்.
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, சிங் படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.
முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிங்கை அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், நிக்கோலஸ் (Nicholas Butler-Chowace, 22) என்னும் கனேடியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சுக்ஜீத் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள எட்மண்டன் நகர மேயரான ஆண்ட்ரூ நாக், இதுபோன்ற அர்த்தமற்ற வன்முறைச் செயல்கள் நம் சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே பாதிக்கின்றன என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு எட்மண்டன்வாசிக்கும் நம் நகரில் பாதுகாப்பாக உணர உரிமை உண்டு என்று கூறியுள்ள அவர், தன் சமூகத்துக்கு சேவை செய்யும் போதும், தம் கடமையை ஆற்றும்போதும், யாரும் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
வரும் புதன்கிழமை சுக்ஜீத் சிங்குக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
கனடாவின் வேலைவாய்ப்புச் சந்தை கடந்த ஜூலை மாதத்தில் கணிசமான மீட்சியைக் கண்டுள்ளது.
இம்மாதத்தில் புதிதாக 75,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பொருளாதாரம் முழுமையான நிலையை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் வேலையின்மை விகிதம் 6.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.
முன்னதாக ராய்ட்டர்ஸ் நடத்திய கணிப்பில் 15,000 வேலைவாய்ப்புகளே உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய வளர்ச்சி அதனை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.
ஜூலையில் உருவான வேலைவாய்ப்புகள் முழுநேர மற்றும் பகுதிநேரப் பணிகளுக்கிடையே சமமாகப் பிரிந்துள்ளன.
இதில் ஒண்டாரியோ மாகாணத்தில் மட்டும் 52,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கனடாவில் மொத்தம் 1,81,000 வேலைவாய்ப்புகளும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1,96,000 வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மொத்த மற்றும் சில்லறை வணிகத் துறையில் 21,000 வேலைகளும், நிதி, காப்பீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் 18,000 வேலைகளும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சேவைத் துறையில் 17,000 வேலைகளும் உருவாகியுள்ளன.
பொது நிர்வாகத் துறையில் 15,000 வேலைகளும், விவசாயத் துறையில் 9,600 வேலைகளும் குறைந்துள்ளன.
சராசரி மணிநேர ஊதிய வளர்ச்சி கடந்த ஜூலையில் 2.8 சதவீதமாக இருந்தது; இது ஜூன் மாதத்தில் பதிவான 3.3 சதவீத வளர்ச்சியை விட சற்றே குறைவு ஆகும். கனடா வங்கி (Bank of Canada) தனது முக்கிய வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாகத் தொடர்ந்து ஆறாவது முறையாக மாற்றமின்றி தக்கவைத்துள்ளது.
பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படி, 2027-ஆம் ஆண்டு வரை வங்கி தனது வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.
இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் பெரிய மாற்றமின்றி 12.6 சதவீதமாக உள்ளது. எனினும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.9 சதவீதம் குறைவு என்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த கோடைக்காலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற சாதகமாக அமைந்துள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: மனநிம்மதியுடன் காணப்படுவீர். குடும்பத்தில் நல்லது ஏற்பாடாகும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பர். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: குடும்பத்தினரிடம் அனுசரித்துப் போகவும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் விற்பனையாகும். அலுவலகத்தில் பணிச்சுமை, டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.
மிதுனம்: கடந்த கால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். வாகனத்தை சீர் செய்வீர். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலக பணிகளை திறம்பட முடிப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
கடகம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரம் சிறக்கும்.
சிம்மம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் சாதகமான தீர்வு கிட்டும். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கன்னி: பணவரவு திருப்தி தரும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய சரக்கு விற்றுத் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரத்தில் பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது.
விருச்சிகம்: குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படவும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும்.
தனுசு: எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிட்டும். மனைவிவழியில் மதிப்பு உயரும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மகரம்: வெளிவட்டாரத்தில் பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். மனைவி, தாயாரின் உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்.
கும்பம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்துமோதல் நீங்கும். ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மீனம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் பணம் புரளும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 23 ஆம் தேதி சனிக்கிழமை 8.8.2026.
இன்று காலை 11.34 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று மாலை 03.16;வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.
இன்று காலை 08.02 வரை துருவம். பின்னர் வியாகாதம்.
இன்று அதிகாலை 12.15 வரை வணிசை. பின்னர் காலை 11.34 வரை பத்திரை. பின்பு இரவு 10.21வரை பவம். பிறகு பாலவம் .
இன்று காலை 06.03 வரை மரண யோகம். பின்னர் மாலை 03.16 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
கனடாவின் டொரண்டோ மேயர் தேர்தலுக்கான ரேஸில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
புதிதாகக் களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர் 10 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
லியாசன் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனம் ஆகஸ்ட் 4 மற்றும் 5-ஆம் திகதிகளுக்கு இடையில் 1,000 டொராண்டோவாசிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒலிவியா சௌ: 47% , பிராட் பிராட்போர்ட்: 40% , கிறிஸ் அலெக்ஸாண்டர்: 10% மற்றும் மற்ற வேட்பாளர்கள்: 3% வாக்குகள் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கிறிஸ் அலெக்ஸாண்டர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வில், 'மற்ற வேட்பாளர்களுக்கு' 10% ஆதரவு இருந்தது.
தற்போது அந்த ஆதரவு அலெக்ஸாண்டரை நோக்கி நகர்ந்துள்ளதாக லியாசன் ஸ்ட்ராடஜீஸ் தலைவர் டேவிட் வலன்டின் தெரிவித்துள்ளார்.
முடிவெடுக்காத வாக்காளர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் நடத்தப்பட்ட கணிப்பில், ஒலிவியா சௌ 38%, பிராட்போர்ட் 32%, அலெக்ஸாண்டர் 8% ஆதரவைப் பெற்றுள்ளனர்.
இன்னும் 20 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காமல் உள்ளனர். தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் இந்த 20% வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேஷம்: முகப்பொலிவு கூடும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் நன்மை ஏற்படும்.
ரிஷபம்: பிள்ளைகளின் உடல் நலனில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக செயல்படக் கூடும். அடுத்தவர் விவகாரத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.
மிதுனம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். விரோதியாக நினைத்தவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மேலதிகாரி களின் ஆதரவு கிடைக்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
கடகம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிள்ளைகளின் விருப்பங்களை உடனுக் குடன் பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் இருந்துவந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.
சிம்மம்: பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும்.
கன்னி: விஐபிகள் அறிமுகமாவார்கள். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கி கடன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
துலாம்: குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும். பழைய சொத்து பிரச்சினைகளை இப்போது பேச வேண்டாம். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள். யாருக்கும் ஜமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். வாகனம் செலவு வைக்கும்.
விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து நீண்டகால பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். தொழில்ரீதியாக விஐபிகளைச் சந்திப்பீர்கள். அலுவலகத்தில் வேலைப் பளு குறையும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப விரிவு படுத்துவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.
மகரம்: மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் உண்டு.
கும்பம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் மறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
மீனம்: வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவிவழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 7.8.2026.
இன்று பிற்பகல் 01.56 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று மாலை 04.51வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.
இன்று காலை 11.00 வரை விருத்தி. பின்னர் துருவம். கரணம் : இன்று அதிகாலை 03.04 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 01.56 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று காலை 06.03 வரை மரண யோகம். பின்னர் மாலை 04.41 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
மிகவும் முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்களை" திருடிய பிரமாண்ட சர்வதேச தரவுத் திருட்டு வழக்கில், கனடாவின் ஒன்ராறியோ, கிச்சனர் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அலெக்சாண்டர் மௌகா என்றும் அழைக்கப்படும் 26 வயதான கானர் மௌகா, 2024 அக்டோபரில் கிச்சனரில் கைது செய்யப்பட்டு, 2025 ஜூலை மாதம் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதி துறை ஆகஸ்ட் 5 அன்று அறிவித்தது.
கானர் மௌகா 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை ஹேக் செய்து, மிகவும் ரகசியமான தகவல்களைப் பெற்று, பாதிக்கப்பட்டவர்களிடம் மில்லியன் கணக்கான டொலர்களைப் பறித்துள்ளார் என்று நீதித் துறையின் குற்றவியல் பிரிவின் உதவி அட்டோர்னி ஜெனரல் ஏ. டைசன் டுவா தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற ஆவணங்களில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட 'ஸ்னோப்லேக்' என்ற மேகக்கணி தரவுச் சேமிப்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு இந்த ஹேக்கிங் நடந்துள்ளதாக நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சில பிரபல நிறுவனங்கள் இந்த ஊடுருவலால் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளன.
கணினி மோசடி, வயர் மோசடி, தீவிர அடையாளத் திருட்டு மற்றும் அது தொடர்பான சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளை மௌகா ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு வரும் அக்டோபர் 27 அன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 2 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஒரு மாலை நேரம்...
நகரத்தின் பரபரப்பான பேருந்து நிலையம் அருகே, சிறிய மர நிழலில் அமர்ந்து காலணிகள் தைத்துக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.
வயது அறுபதைக் கடந்திருந்தாலும், அவரது கைகளில் இன்னும் உறுதி இருந்தது.
கிழிந்த காலணிகளைத் தைத்து, மீண்டும் நடக்க வைப்பதுதான் அவரது தொழில்.
அன்று ஒரு இளைஞன் வேகமாக வந்து நின்றான்.
அவனுடைய காலணியின் அடிப்பகுதி கிழிந்திருந்தது.
"பெரியவரே!... இதைத் தைக்க முடியுமா?" என்றான்.
முதியவர் காலணியைப் பார்த்தார்.
பிறகு இளைஞனின் முகத்தைப் பார்த்தார்.
காலணியைவிட அவன் மனம்தான் அதிகமாகக் கிழிந்திருந்தது முகத்தை பார்த்ததுமே புரிந்தது.
"உட்கார் தம்பி ..." என்றார்.
அமைதியாக ஊசியையும் நூலையும் எடுத்தார்.
தைத்துக் கொண்டே கேட்டார்...
"ஏதோ விரக்தியா இருக்கிற மாதிரி தெரியுதே?"
அவ்வளவுதான்...
இளைஞன் உடைந்து போய் பேசினான்.
"வேலை போய்விட்டது...
நண்பர்கள் விலகிவிட்டார்கள்...
வீட்டில் கடன்... நான் தோற்றுவிட்டேன்...
இனி வாழ்வதில் அர்த்தமே இல்லை..."
முதியவர் எதுவும் பேசவில்லை.
தைத்துக் கொண்டே இருந்தார்.
சில நிமிடங்கள் கழித்து...
கிழிந்திருந்த காலணியை அவன் முன் வைத்தார்.
"இதோ... இன்னும் ஒரு வருஷம் இது உழைக்கும்."
"பெரியவரே... இவ்வளவு கிழிந்திருந்த செருப்பை தூக்கி போடுன்னு சொல்வீங்கன்னு நெனெச்சேன்...நல்லா சரி பண்ணிட்டீங்க... தேங்ஸ்"
முதியவர் மெதுவாகச் சிரித்தார்.
"அதைத்தான் நானும் உன்னிடம் கேட்கப் போகிறேன் தம்பி ...
கிழிந்த செருப்பைச் சரி செய்யலாம் என்று நம்பி வந்த நீ...
காயமடைந்த வாழ்க்கையை மட்டும் ஏன் சரிசெய்ய முடியாது என்று நினைக்கிறாய்?" என்று கேட்டார்.
அந்த வார்த்தைகள் இளைஞனை அமைதியாக்கின.
முதியவர் அருகில் இருந்த பழைய மரப்பெட்டியைத் திறந்தார்.
அதில் ஒரு பழைய ஊசியும்...
பல ஆண்டுகள் பயன்படுத்திய தோல் சுத்தியலும்...
மஞ்சள் நிறம் படிந்த ஒரு குறிப்பேடும் இருந்தது.
அதை இளைஞனிடம் கொடுத்தார்.
"இதில் என் வாழ்க்கை இருக்கிறது...
படி..."
ஒரு பதிவு...
"ஒரு விபத்தில் என் வலது கை விரல்கள் இரண்டு போய்விட்டன.
'இனி இந்தத் தொழில் உன்னால் முடியாது' என்று எல்லோரும் சொன்னார்கள்.
ஆனால் நான் விரலை இழந்தேன்... தொழிலை இழக்கவில்லை.
மீண்டும் ஊசியைப் பிடிக்க கற்றுக்கொண்டேன்."
இன்னொரு பதிவு...
"என் மனைவி உடல்நலக் குறைவால் இறந்தபோது... இரண்டு சிறு குழந்தைகள் என் முன்னால் நின்றார்கள்.
அவர்களைப் பார்த்து அழ வேண்டும் போல் இருந்தது... ஆனால் வாழ வேண்டிய பொறுப்பு அதைவிட பெரியதாக இருந்தது.
பகலில் காலணி தைத்தேன்... இரவில் குழந்தைகளுடன் அமர்ந்து பாடங்களைப் பார்த்தேன்.
இன்று அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நன்றாக நிற்கிறார்கள்."
மற்றொரு பதிவு...
"இந்த நாற்காலியில் அமர்ந்து ஆயிரக்கணக்கான காலணிகளைத் தைத்திருக்கிறேன்.
அப்போது ஒரு விஷயம் புரிந்தது.
கிழிவது தவறல்ல.... அதை தைக்க மறுப்பதுதான் தவறு.
"செருப்புக்கும் அது பொருந்தும்...
வாழ்க்கைக்கும் அது பொருந்தும்."
குறிப்பேட்டை மூடிய இளைஞன் அமைதியாக இருந்தான்.
முதியவர் அவன் தோளில் கை வைத்தார். "தம்பி... கிழிந்த காலணியைத் தூக்கி எறிவது எளிது.
ஆனால் அதைச் சரிசெய்து மீண்டும் நடப்பதுதான் புத்திசாலித்தனம்.
வாழ்க்கையும் அப்படித்தான்.
ஒரு வேலை போகலாம்.
ஒரு உறவு முடிந்து போகலாம்.
பணம் குறையலாம்.
ஆனால்...
உன் மனம் மட்டும் உடைந்து போகக் கூடாது.
ஏனெனில்...
உடைந்த மனதையும் தைக்க முடியும்.
அதற்கான நூல்... "நம்பிக்கை".
அதற்கான ஊசி..."முயற்சி".
அதற்கான கைகள்..."தைரியம்."
இளைஞன் காலணியை அணிந்தான்.
அது முன்பைவிட உறுதியாக இருந்தது.
அவன் நடக்கத் தொடங்கினான்.
அந்த நாள் அவன் புரிந்து கொண்டான்...
தோல்விகள் வாழ்க்கையின் முடிவு அல்ல...
சரிசெய்ய வேண்டிய இடங்களைக் காட்டும் அடையாளங்கள் மட்டுமே.
அந்த நாள்... கிழிந்த காலணியுடன் வந்த இளைஞன், தைக்கப்பட்ட காலணியுடன் மட்டுமல்ல...
தைக்கப்பட்ட மனதுடனும் அங்கிருந்து நடந்தான்.
காலம் கடந்தது...
வாழ்க்கை அவனுக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுத்தது.
புதிய வேலை கிடைத்தது.
முயற்சிகள் பலன் தந்தன.
பதவிகள் உயர்ந்தன.
ஒரு நாள்...
அவன் சொந்த காரில் அதே வழியாக வந்தான்.
மரத்தடியில் அதே முதியவர்...
அதே நாற்காலி...
அதே ஊசி...
அதே புன்னகை...
காரை ஓரமாக நிறுத்தினான்.
முதியவர் சிரித்தபடி,
"செருப்பு தைக்கணுமா?" என்று கேட்டார்.
அவன் சிரித்தான்.
"இல்லை பெரியவரே...இன்று தைக்க வரவில்லை... மனம் சோர்ந்து போகாமல் இருக்க...இரண்டு நிமிடம் உங்களோடு பேசிவிட்டுப் போக வந்தேன்."
அன்று முதல்...
அந்த வழியாகச் செல்லும் போதெல்லாம், அவன் இரண்டு நிமிடம் அந்த முதியவருடன் அமர்ந்து பேசிவிட்டு செல்வது வழக்கமாகிவிட்டது.
சில நேரங்களில் அருகிலிருந்த டீக்கடையில் இருந்து இரண்டு டீ வாங்கி வருவான்.
ஒன்று அவனுக்கு...
ஒன்று அந்த முதியவருக்கு...
வாழ்க்கையில் சில மனிதர்கள்...
நம் பாதையில் சந்திக்கும் சாதாரண மனிதர்களாக இருப்பார்கள்.
ஆனால்...
நம் வாழ்க்கைப் பயணத்தில் மறக்க முடியாத மைல்கற்களாக மாறிவிடுவார்கள்.



