- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
கனடாவின் டொரண்டோ மேயர் தேர்தலுக்கான ரேஸில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
புதிதாகக் களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர் 10 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
லியாசன் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனம் ஆகஸ்ட் 4 மற்றும் 5-ஆம் திகதிகளுக்கு இடையில் 1,000 டொராண்டோவாசிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒலிவியா சௌ: 47% , பிராட் பிராட்போர்ட்: 40% , கிறிஸ் அலெக்ஸாண்டர்: 10% மற்றும் மற்ற வேட்பாளர்கள்: 3% வாக்குகள் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கிறிஸ் அலெக்ஸாண்டர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வில், 'மற்ற வேட்பாளர்களுக்கு' 10% ஆதரவு இருந்தது.
தற்போது அந்த ஆதரவு அலெக்ஸாண்டரை நோக்கி நகர்ந்துள்ளதாக லியாசன் ஸ்ட்ராடஜீஸ் தலைவர் டேவிட் வலன்டின் தெரிவித்துள்ளார்.
முடிவெடுக்காத வாக்காளர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் நடத்தப்பட்ட கணிப்பில், ஒலிவியா சௌ 38%, பிராட்போர்ட் 32%, அலெக்ஸாண்டர் 8% ஆதரவைப் பெற்றுள்ளனர்.
இன்னும் 20 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காமல் உள்ளனர். தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் இந்த 20% வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேஷம்: முகப்பொலிவு கூடும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் நன்மை ஏற்படும்.
ரிஷபம்: பிள்ளைகளின் உடல் நலனில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக செயல்படக் கூடும். அடுத்தவர் விவகாரத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.
மிதுனம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். விரோதியாக நினைத்தவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மேலதிகாரி களின் ஆதரவு கிடைக்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
கடகம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிள்ளைகளின் விருப்பங்களை உடனுக் குடன் பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் இருந்துவந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.
சிம்மம்: பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும்.
கன்னி: விஐபிகள் அறிமுகமாவார்கள். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கி கடன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
துலாம்: குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும். பழைய சொத்து பிரச்சினைகளை இப்போது பேச வேண்டாம். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள். யாருக்கும் ஜமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். வாகனம் செலவு வைக்கும்.
விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து நீண்டகால பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். தொழில்ரீதியாக விஐபிகளைச் சந்திப்பீர்கள். அலுவலகத்தில் வேலைப் பளு குறையும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப விரிவு படுத்துவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.
மகரம்: மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் உண்டு.
கும்பம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் மறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
மீனம்: வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவிவழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 7.8.2026.
இன்று பிற்பகல் 01.56 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று மாலை 04.51வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.
இன்று காலை 11.00 வரை விருத்தி. பின்னர் துருவம். கரணம் : இன்று அதிகாலை 03.04 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 01.56 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று காலை 06.03 வரை மரண யோகம். பின்னர் மாலை 04.41 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
மிகவும் முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்களை" திருடிய பிரமாண்ட சர்வதேச தரவுத் திருட்டு வழக்கில், கனடாவின் ஒன்ராறியோ, கிச்சனர் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அலெக்சாண்டர் மௌகா என்றும் அழைக்கப்படும் 26 வயதான கானர் மௌகா, 2024 அக்டோபரில் கிச்சனரில் கைது செய்யப்பட்டு, 2025 ஜூலை மாதம் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதி துறை ஆகஸ்ட் 5 அன்று அறிவித்தது.
கானர் மௌகா 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை ஹேக் செய்து, மிகவும் ரகசியமான தகவல்களைப் பெற்று, பாதிக்கப்பட்டவர்களிடம் மில்லியன் கணக்கான டொலர்களைப் பறித்துள்ளார் என்று நீதித் துறையின் குற்றவியல் பிரிவின் உதவி அட்டோர்னி ஜெனரல் ஏ. டைசன் டுவா தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற ஆவணங்களில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட 'ஸ்னோப்லேக்' என்ற மேகக்கணி தரவுச் சேமிப்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு இந்த ஹேக்கிங் நடந்துள்ளதாக நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சில பிரபல நிறுவனங்கள் இந்த ஊடுருவலால் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளன.
கணினி மோசடி, வயர் மோசடி, தீவிர அடையாளத் திருட்டு மற்றும் அது தொடர்பான சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளை மௌகா ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு வரும் அக்டோபர் 27 அன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 2 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஒரு மாலை நேரம்...
நகரத்தின் பரபரப்பான பேருந்து நிலையம் அருகே, சிறிய மர நிழலில் அமர்ந்து காலணிகள் தைத்துக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.
வயது அறுபதைக் கடந்திருந்தாலும், அவரது கைகளில் இன்னும் உறுதி இருந்தது.
கிழிந்த காலணிகளைத் தைத்து, மீண்டும் நடக்க வைப்பதுதான் அவரது தொழில்.
அன்று ஒரு இளைஞன் வேகமாக வந்து நின்றான்.
அவனுடைய காலணியின் அடிப்பகுதி கிழிந்திருந்தது.
"பெரியவரே!... இதைத் தைக்க முடியுமா?" என்றான்.
முதியவர் காலணியைப் பார்த்தார்.
பிறகு இளைஞனின் முகத்தைப் பார்த்தார்.
காலணியைவிட அவன் மனம்தான் அதிகமாகக் கிழிந்திருந்தது முகத்தை பார்த்ததுமே புரிந்தது.
"உட்கார் தம்பி ..." என்றார்.
அமைதியாக ஊசியையும் நூலையும் எடுத்தார்.
தைத்துக் கொண்டே கேட்டார்...
"ஏதோ விரக்தியா இருக்கிற மாதிரி தெரியுதே?"
அவ்வளவுதான்...
இளைஞன் உடைந்து போய் பேசினான்.
"வேலை போய்விட்டது...
நண்பர்கள் விலகிவிட்டார்கள்...
வீட்டில் கடன்... நான் தோற்றுவிட்டேன்...
இனி வாழ்வதில் அர்த்தமே இல்லை..."
முதியவர் எதுவும் பேசவில்லை.
தைத்துக் கொண்டே இருந்தார்.
சில நிமிடங்கள் கழித்து...
கிழிந்திருந்த காலணியை அவன் முன் வைத்தார்.
"இதோ... இன்னும் ஒரு வருஷம் இது உழைக்கும்."
"பெரியவரே... இவ்வளவு கிழிந்திருந்த செருப்பை தூக்கி போடுன்னு சொல்வீங்கன்னு நெனெச்சேன்...நல்லா சரி பண்ணிட்டீங்க... தேங்ஸ்"
முதியவர் மெதுவாகச் சிரித்தார்.
"அதைத்தான் நானும் உன்னிடம் கேட்கப் போகிறேன் தம்பி ...
கிழிந்த செருப்பைச் சரி செய்யலாம் என்று நம்பி வந்த நீ...
காயமடைந்த வாழ்க்கையை மட்டும் ஏன் சரிசெய்ய முடியாது என்று நினைக்கிறாய்?" என்று கேட்டார்.
அந்த வார்த்தைகள் இளைஞனை அமைதியாக்கின.
முதியவர் அருகில் இருந்த பழைய மரப்பெட்டியைத் திறந்தார்.
அதில் ஒரு பழைய ஊசியும்...
பல ஆண்டுகள் பயன்படுத்திய தோல் சுத்தியலும்...
மஞ்சள் நிறம் படிந்த ஒரு குறிப்பேடும் இருந்தது.
அதை இளைஞனிடம் கொடுத்தார்.
"இதில் என் வாழ்க்கை இருக்கிறது...
படி..."
ஒரு பதிவு...
"ஒரு விபத்தில் என் வலது கை விரல்கள் இரண்டு போய்விட்டன.
'இனி இந்தத் தொழில் உன்னால் முடியாது' என்று எல்லோரும் சொன்னார்கள்.
ஆனால் நான் விரலை இழந்தேன்... தொழிலை இழக்கவில்லை.
மீண்டும் ஊசியைப் பிடிக்க கற்றுக்கொண்டேன்."
இன்னொரு பதிவு...
"என் மனைவி உடல்நலக் குறைவால் இறந்தபோது... இரண்டு சிறு குழந்தைகள் என் முன்னால் நின்றார்கள்.
அவர்களைப் பார்த்து அழ வேண்டும் போல் இருந்தது... ஆனால் வாழ வேண்டிய பொறுப்பு அதைவிட பெரியதாக இருந்தது.
பகலில் காலணி தைத்தேன்... இரவில் குழந்தைகளுடன் அமர்ந்து பாடங்களைப் பார்த்தேன்.
இன்று அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நன்றாக நிற்கிறார்கள்."
மற்றொரு பதிவு...
"இந்த நாற்காலியில் அமர்ந்து ஆயிரக்கணக்கான காலணிகளைத் தைத்திருக்கிறேன்.
அப்போது ஒரு விஷயம் புரிந்தது.
கிழிவது தவறல்ல.... அதை தைக்க மறுப்பதுதான் தவறு.
"செருப்புக்கும் அது பொருந்தும்...
வாழ்க்கைக்கும் அது பொருந்தும்."
குறிப்பேட்டை மூடிய இளைஞன் அமைதியாக இருந்தான்.
முதியவர் அவன் தோளில் கை வைத்தார். "தம்பி... கிழிந்த காலணியைத் தூக்கி எறிவது எளிது.
ஆனால் அதைச் சரிசெய்து மீண்டும் நடப்பதுதான் புத்திசாலித்தனம்.
வாழ்க்கையும் அப்படித்தான்.
ஒரு வேலை போகலாம்.
ஒரு உறவு முடிந்து போகலாம்.
பணம் குறையலாம்.
ஆனால்...
உன் மனம் மட்டும் உடைந்து போகக் கூடாது.
ஏனெனில்...
உடைந்த மனதையும் தைக்க முடியும்.
அதற்கான நூல்... "நம்பிக்கை".
அதற்கான ஊசி..."முயற்சி".
அதற்கான கைகள்..."தைரியம்."
இளைஞன் காலணியை அணிந்தான்.
அது முன்பைவிட உறுதியாக இருந்தது.
அவன் நடக்கத் தொடங்கினான்.
அந்த நாள் அவன் புரிந்து கொண்டான்...
தோல்விகள் வாழ்க்கையின் முடிவு அல்ல...
சரிசெய்ய வேண்டிய இடங்களைக் காட்டும் அடையாளங்கள் மட்டுமே.
அந்த நாள்... கிழிந்த காலணியுடன் வந்த இளைஞன், தைக்கப்பட்ட காலணியுடன் மட்டுமல்ல...
தைக்கப்பட்ட மனதுடனும் அங்கிருந்து நடந்தான்.
காலம் கடந்தது...
வாழ்க்கை அவனுக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுத்தது.
புதிய வேலை கிடைத்தது.
முயற்சிகள் பலன் தந்தன.
பதவிகள் உயர்ந்தன.
ஒரு நாள்...
அவன் சொந்த காரில் அதே வழியாக வந்தான்.
மரத்தடியில் அதே முதியவர்...
அதே நாற்காலி...
அதே ஊசி...
அதே புன்னகை...
காரை ஓரமாக நிறுத்தினான்.
முதியவர் சிரித்தபடி,
"செருப்பு தைக்கணுமா?" என்று கேட்டார்.
அவன் சிரித்தான்.
"இல்லை பெரியவரே...இன்று தைக்க வரவில்லை... மனம் சோர்ந்து போகாமல் இருக்க...இரண்டு நிமிடம் உங்களோடு பேசிவிட்டுப் போக வந்தேன்."
அன்று முதல்...
அந்த வழியாகச் செல்லும் போதெல்லாம், அவன் இரண்டு நிமிடம் அந்த முதியவருடன் அமர்ந்து பேசிவிட்டு செல்வது வழக்கமாகிவிட்டது.
சில நேரங்களில் அருகிலிருந்த டீக்கடையில் இருந்து இரண்டு டீ வாங்கி வருவான்.
ஒன்று அவனுக்கு...
ஒன்று அந்த முதியவருக்கு...
வாழ்க்கையில் சில மனிதர்கள்...
நம் பாதையில் சந்திக்கும் சாதாரண மனிதர்களாக இருப்பார்கள்.
ஆனால்...
நம் வாழ்க்கைப் பயணத்தில் மறக்க முடியாத மைல்கற்களாக மாறிவிடுவார்கள்.
ப்ரியா ராமன் "சூர்யவம்சம்" படத்தில் முதலில் திமிராக வருவார். அவருக்கு சரத்குமார் வாழ்க்கையை பிச்சையாக போட்டிருப்பார். கணவனின் தொழில் வீழ்ந்தவுடன் சரத்குமாரை தேடிவந்து உதவி கேட்பார்.
அது திரையில். ஆனால் நிஜத்தில் அப்படியல்ல. கணவர் விட்டுச்சென்றாலும் தன் வாழ்க்கையை தன் குழந்தைகளுக்காக வடிவமைத்துக்கொண்டார்.
பாரதிராஜா டில்லியைச் சேர்ந்த ப்ரியாராமனை தன் படத்து நாயகியாக்க தீர்மானித்திருந்தார். அவரது புகைப்படம் ரஜினியின் கைக்குப்போக ரஜினியின் 'வள்ளி'யாக மாறினார்.
எந்த நடிகைக்கும் வாய்க்காத வாய்ப்பு. சூப்பர் ஸ்டார் எழுதிய கதைக்கு, சூப்பர் ஸ்டார் அறிமுகப்படுத்த, அவருடனே நடித்த பாக்யம். அதுவும் டைட்டில் ரோலில். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுடன் நடிக்க வாய்ப்பு. ஐ.வி.சசி அறிமுகப்படுத்தியது 'சைன்யம்' படத்தில். விமானியாக. சுரேஷ்கோபியுடன் காஷ்மீரம் படத்தில் ஆக்ரா கோட்டைகளில் அவர் ஆடும் ஆட்டம் 90 கால மலையாளிகள் மறக்காதது. ஃபாஸில் படத்தில் மம்முட்டியுடன். மோகன்லாலின் ஆறாம் தம்புரான் படத்தில் ப்ரியாராமனின் பெயர் 'நயன்தாரா'.
அதோடு அவரின் மற்றொரு பாக்யம் கே.விஸ்வநாத் இயக்க, எஸ்.பி.பாலசுப்ரமண்யம்-கமல் தயாரிக்க கமலுடனே நடித்தது. படம் சுபசங்கல்பம். தமிழில் 'பாசவலை'.
சித்ரா லக்ஷ்மணன் தயாரித்து, இயக்க, கார்த்திக்குடன் 'சின்னராஜா'. நல்ல நல்ல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது 'நேசம் புதுசு' படத்தில் ரஞ்சித்துடன் ஜோடி. ஷுட்டிங் இடைவேளையில் உண்டான பழக்கம் திருமணத்தில் முடிந்தது. இரண்டு ஆண் குழந்தைகள்.
பதினைந்து வருட திருமண பந்தம் முறிந்த போது ப்ரியா கவலைப்படவில்லை. இரண்டு மகன்களோடு தன் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொண்டார். சீரியல் அவருக்கு கை கொடுத்தது. சீரியல் தயாரிப்பிலும் இறங்கினார். கடந்த கால கசப்புகளை சீரியஸாகவே எடுக்க வில்லை. ரஞ்சித் நடிகை ராகசுதாவை மணந்த போதும் அவர் கவலைப்படவில்லை. அவர் வாழ்க்கையை பார்த்த விதமே வேறு என்பது பின்னொரு நாளில் தெரிந்தது.
ஆம்...ஆடி, ஓடி, ஓய்ந்து ரஞ்சித் அவரைத்தேடி வந்த போது ப்ரியா ராமன் ஒதுக்கவில்லை. விவாகரத்தான மனிதரெனவும் நினைக்கவில்லை.
வள்ளி படத்தில் திரும்பி, திருந்தி வரும் நாயகனை வள்ளி கொல்வாள்.
வாழ்க்கைப்பிச்சை வாங்கியது என்பதெல்லாம் சூர்யவம்சம் படத்தின் கௌரி தான்.
இப்போ இருப்பது வள்ளியுமல்ல. கௌரியுமல்ல. இப்போ நாங்களே போடுவோம் வாழ்க்கைப்பிச்சை...
அது தான் ப்ரியா ராமன்....இங்கே சாதியுமில்லை...சம்பிரதாயமுமில்லை...ஜெயித்தது அன்பு மட்டுமே....
நரேஷ் வங்கியில் வேலைக்குச் சேர்ந்து மூன்று வாரங்கள் மட்டுமே ஆகியிருந்தன. நரேஷின் குடும்பத்தினர் மற்றும் சில நெருங்கிய நண்பர்களைத் தவிர, கிராமத்தில் வேறு யாருக்கும் இதுபற்றித் தெரியாது. இதற்குக் காரணம், அவனது நியமனக் கடிதத்தில் இருந்த ஒரு நிபந்தனைதான்: அவன் ஆறு மாதங்களுக்குத் தற்காலிக (பயிற்சிக்கால) அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். இந்தக் காலகட்டத்தில், பதினான்கு நாட்கள் முன்னறிவிப்பு கொடுத்தோ அல்லது பதினான்கு நாட்கள் சம்பளம் கொடுத்தோ எந்த நேரத்திலும் அவன் வேலையிலிருந்து நீக்கப்படலாம். பயிற்சிக் காலத்தை வெற்றிகரமாக முடித்த பின்னரே வேலை நிரந்தரமாக்கப்படும். இதனால்தான் நரேஷ் தனது வேலையைப் பற்றி பலரிடம் சொல்லவில்லை. மாறாக, ஒரு தேர்வுக்குத் தயாராவதற்காக அங்கே தங்கியிருப்பதாக அவர்களிடம் கூறி வந்தான்.
ஆறு நாட்கள் வேலைக்குப் பிறகு, முந்தைய நாள் சனிக்கிழமையாக இருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை. அவனுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை இருந்ததால் அவன் வீட்டிற்கு வந்திருந்தான். 17ஆம் தேதி காலையில், அவன் தன் உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டான். அவன் 24ஆம் எண் பேருந்தில் ஏறி, காலை சரியாகப் பத்து மணிக்கு வங்கிக்கு வந்து சேர்ந்தான். அந்த நியமனக் கடிதத்தில் இருந்த நிபந்தனை நரேஷின் மனதில் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருந்தது. இன்றுதான் அவன் தன் வேலையை நிரந்தரமாக இழக்கும் நாள் என்று மேலாளர் சொல்கிறாரா?
தங்கள் வேலையை இழந்துவிடுவோமோ என்று அஞ்சிய மற்றவர்களும் இருந்தனர். அவர்கள் கால்கள் பின்னோக்கி இழுபட்டன. இறுதியாக, மணி பத்து அடித்தபோது அவர்கள் வங்கியை வந்தடைந்தனர். வங்கி மேலாளரின் பார்வையைத் தவிர்த்து, நரேஷ் அமைதியாகத் தன் இருக்கையில் அமர்ந்து வேலையைத் தொடங்கினான்.
இதற்கிடையில், பியூன் வந்து, "மேலாளர் உங்களை அழைக்கிறார்" என்றார். ஒருவேளை இன்றுதான் தனது வேலையின் கடைசி நாளாக இருக்குமோ என்று நரேஷ் நினைத்துக்கொண்டான். அவன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மேலாளரின் அறைக்குள் சென்றான். அவனை வாழ்த்திய மேலாளர், அமருமாறு சைகை காட்டினார். நரேஷ் அவருக்கு முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அப்போது, மேலாளர் பியூனை அழைத்து ஒரு குவளை தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். சிறிது நேரத்திற்குப் பிறகு, பியூன் நரேஷிடம் தண்ணீர்க் குவளையைக் கொடுத்துவிட்டுச் சென்றான். நரேஷ் குடித்து முடித்துவிட்டு, காலிக் குவளையை மேசையில் வைத்தபோது, மேலாளர் கண்களை உருட்டிவிட்டு, "இன்று ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய்?" என்று கேட்டார்.
நரேஷ் நடுங்கும் குரலில், "சார், நான் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். இன்று காலை நான் பேருந்தில் திரும்பி வரும்போது, அது வழியில் பழுதடைந்துவிட்டது. அதனால்தான் எனக்குத் தாமதமாக வந்தது," என்று பதிலளித்தான். ஆனால் மேலாளர், "அப்படியெல்லாம் இல்லை, நரேஷ் பாபு. வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது இது அடிக்கடி நடக்கும்," என்றார். நரேஷ் உடனடியாகத் தன் இருக்கையிலிருந்து எழுந்தான். மேலாளர் நரேஷின் தோளில் கை வைத்து, "இனிமேல் இப்படிச் செய்யாதே. உன் இருக்கைக்குச் சென்று வேலையைப் பார். பேருந்து பழுதடைந்திருந்தால், அது நடந்தது. அதைப் பற்றி ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாய்?" என்றார்.
பிறகு அவர் தேநீர் ஆர்டர் செய்து, "இதோ, அருந்துங்கள்" என்றார். நரேஷ் அந்தச் சூடான தேநீரை ஒரு மிடறு அருந்தினார். அவர் கோப்பையை மேசையில் வைத்தபோது, மேலாளர் புன்னகைத்து நரேஷின் கையைத் தட்டி, "உங்கள் வேலை இப்போது உறுதியாகிவிட்டது" என்றார்.
ஒரு சிறிய சம்பவம் நரேஷின் பயத்தைப் போக்கியது. சில சமயங்களில் பொய் சாக்குப்போக்குகள் சொல்வதன் மூலமே காரியத்தைச் சாதித்துவிடலாம் என்பதை அவன் உணர்ந்தான். இப்போது நரேஷ் பின்வாங்கவில்லை, மாறாக, அமர்ந்து முழு மனதுடன் வேலை செய்தான்.
வெறும் 18+ வயது, நாதன் தாமஸ் உலகின் மிக இளம் வயது ஆண் பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தைப் பெற்று, 306 ஆண்டுகளாக நிலைத்திருந்த ஒரு சாதனையை முறியடித்துள்ளார். அவர் மியாமி டேட் கல்லூரியில் பொறியியல் பயிற்றுவிப்பாளராகச் சேர்ந்து, 1717-ல் ஸ்காட்லாந்து கணிதவியலாளர் காலின் மக்லாரின் படைத்த சாதனையை முறியடித்துள்ளார்.
நாதனின் இந்த குறிப்பிடத்தக்க பயணம், அவர் தனது 10 வயதில், இரட்டைப் பதிவுத் திட்டத்தின் மூலம் மியாமி டேட் கல்லூரியில் சேர்ந்தபோது தொடங்கியது. 14 வயதிற்குள், அவர் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் தனது இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை முடித்திருந்தார். பொறியியல் கற்பிப்பதோடு, தற்போது அவர் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தில் நிபுணத்துவம் பெறும் நோக்குடன் சட்டப் பட்டப்படிப்பையும் படித்து வருகிறார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: குடும்பத்தாரிடம் விவாதங்கள் வேண்டாம். உடல் அசதி, மனச்சோர்வு வரக்கூடும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷபம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். மன இறுக்கம் நீங்கி முகப்பொலிவுடன் காணப்படுவீர். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம்: மனதுக்கு இதமான செய்தி வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாய்வழி உறவினரால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
கடகம்: திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
சிம்மம்: குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பீர். பழைய கடனில் ஒரு பகுதி பைசல் ஆகும். சகோதரர்களால் பயனடைவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கன்னி: குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வர். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். தாயார், மனைவியின் உடல்நலம் பாதிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகளை போராடி வசூலிப்பீர்.
துலாம்: இடம் பொருள் அறிந்து செயல்படுவீர். பூர்வீக வீடு விற்பனையாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிட்டும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
விருச்சிகம்: எதிர்பார்த்து காத்திருந்த தொகை வந்து சேரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வர். வியாபாரத்தில் கடையை மாற்றியமைப்பீர். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு.
தனுசு: தொலை நோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினைகளை முடிப்பீர். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சந்தேகம் விலகும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் கிட்டும். அலுவலகத்தில் விவாதங்கள் வேண்டாம்.
மகரம்: வீட்டுக்கு புதிய பொருட்களின் வரவு உண்டு. எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர். உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களால் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கும்பம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். பூர்வீக வீடு தொடர்பான வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். அலுவலகத்தில் உயரதிகாரி உங்களிடம் கனிவாக பேசுவார். வியாபாரம் திருப்திகரமான லாபம் தரும்.
மீனம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 6.8.2026
இன்று மாலை 04.09 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று மாலை 06.18;வரை பரணி. பின்னர் கிருத்திகை.
இன்று பிற்பகல் 01.50 வரை கண்டம். பின்னர் விருத்தி.
இன்று அதிகாலை 05.09 வரை பாலவம். பின்னர் மாலை 04.09 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
இன்று மாலை 06.18 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
27 வயதாகும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த ஆண்டு ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய லாபத்தை சிவகார்த்திகேயனுக்குப் பெற்றுத் தந்த படம் தாய் கிழவி. அந்த படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.
அமரன் படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தை சந்தோஷமாக கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். காந்தா படத்தில் நடிப்பில் மிரட்டிய பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாறிய நிலையில், அவரது இன்ஸ்டா ஃபாலோயர்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டனர். யாரு இந்த பாக்யஸ்ரீ போர்ஸ்?: சந்து சாம்பியன் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்து இந்தியில் அறிமுகமானவர் தான் பாக்யஸ்ரீ போர்ஸ். ரவிதேஜா நடிப்பில் தெலுங்கில் வெளியான மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா பக்கம் வந்தவர் இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். விஜய் தேவரகொண்டாவுடன் கிங்டம், துல்கர் சல்மான் உடன் காந்தா, ராம் பொத்தினேனியுடன் ஆந்திரா கிங் தாலுகா, இந்த ஆண்டு அகில் அக்கினேனி ஜோடியாக லெனின் என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.
கனடாவின் வடக்குப் பகுதியான ஒன்டாரியோவில் முகாம் அமைத்துத் தங்குவதற்காகச் சென்று வீடு திரும்பாத இருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்து உள்ளது.
கபுஸ்காசிங் கருக்குக் கிழக்கே அமைந்துள்ள குவெனெட் ஏரிக்கு அருகே இந்த இரண்டு திடீர் மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்த சம்பவத்தில் ஏதேனும் சதிச் செயல் அல்லது குற்றப் பின்னணி உள்ளதா என்பது குறித்து காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
சுற்றுலா சென்ற இருவர் வீடு திரும்பவில்லை என்று ஆகஸ்ட் 1-ஆம் திகதி காவல்துறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அவசரக்கால மீட்புக் குழு, மோப்பநாய் படை, காவல்துறை விமானப் பிரிவு மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகம் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
தேடுதலின் முடிவில், ஆகஸ்ட் 2-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இருவரின் உடல்களும் சடலமாககண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் அடையாளங்களை காவல்துறை இன்னும் வெளியிடவில்லை.
"இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தப் அச்சுறுத்தலும் இல்லை" என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் விசாரணக்குப் பின்னரே வெளியாகும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை குவெனெட் ஏரிப் பகுதிக்கு அருகில் இருந்தவர்கள் யாரேனும் சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகளைக் கண்டிருந்தாலோ, அல்லது அது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் கேமரா பதிவுகள் வைத்திருந்தாலோ உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து முதன்மை மரண விசாரணை அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
