·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 457
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added article

மும்பையில் பிறந்த நடிகை மீரா வாசுதேவன் சமுத்திரக்கனி இயக்கிய உன்னைச் சரணடைந்தேன் படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில், வெங்கட் பிரபு மற்றும் எஸ். பி. பி. சரண் ஆகியோருடன் நடித்தார். அப்படத்தில் பாபி என்னும் ஒரு பிடிவாதமாக கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்ற மீராவிற்கு, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருதை பெற்றார்.

அதன் பின் அஅறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், குமரி பெண்ணின் உள்ளத்திலேயே உள்ளிட்ட தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவர் 2005ஆம் ஆண்டு விஷால் அகர்வாலை திருமணம் செய்தார். பின் கருத்து வேறுபாடு காரணமாக அவரை 2008ஆம் ஆண்டு விவாகரத்து செய்து இருவரும் பிரிந்தனர். அதன் பின், 2012 ஆம் ஆண்டு நடிகர் ஜான் கொக்கேனை இரண்டாவது முறையாக திருமணம் செய்தார். இந்த திருமண வாழ்க்கையும் சரியில்லாததால், அவரை 2016ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரான விபினை மூன்றாவது முறையாக கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இருவருக்கும் திருமணமாகி ஓராண்டுக்குள் தற்போது விபினை விட்டு பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாகவும் மீரா தற்போது அறிவித்துள்ளார். இந்த தகவல் வெளியானவுடன் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மீரா வாசுதேவனின் இந்த முடிவு தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது

  • 52
·
Added article

இயக்குநர் ஷங்கர் தனது மகள் அதிதி ஷங்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய நிலையில், அவர் அவுட்டேட்டட் இயக்குநர் என ஓரங்கட்டப்பட்டு விட்டார். இந்தியன் 2 மற்றும் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களின் தோல்வி அவரது அடுத்த கனவுப் படமான வேள்பாரி படத்திற்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்காத அளவுக்கு அவரை பாடாய்படுத்தி வருகிறது என்கின்றனர்.

அடுத்ததாக ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கரும் ஹீரோவாகவும் சீக்கிரமே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிதி ஷங்கர் ஹீரோயினாக கார்த்தி, சிவகார்த்திகேயன் என கேரியரை தொடங்கினாலும், அதன் பிறகு அவருக்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து விட்டன.

அடுத்ததாக ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கரும் ஹீரோவாகவும் சீக்கிரமே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிதி ஷங்கர் ஹீரோயினாக கார்த்தி, சிவகார்த்திகேயன் என கேரியரை தொடங்கினாலும், அதன் பிறகு அவருக்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து விட்டன.

  • 53
·
Added a news

கனடாவின் கல்கரியைச் சேர்ந்த யூஜி ஹு (Yuji Hu, வயது 39) என்பவர், தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 1.00 மணியளவில், யூஜி குடும்பம் கலிபோர்னியாவிலுள்ள கடற்கரை ஒன்றிற்குச் சென்றுள்ளது. திடீரென, தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த யூஜியின் 5 வயது மகளை அலை இழுத்துச் செல்ல, மகளைக் காப்பாற்ற கடலில் இறங்கியுள்ளார் யூஜி. ஆனால், அலை அவரையும் இழுத்துச் சென்றுவிட்டது. கணவனும் மகளும் கண் முன்னே அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட யூஜியின் மனைவி கடலுக்குள் இறங்கி அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரால் எதுவும் செய்ய இயலாமல் அவர் கரைக்கே திரும்பிவிட்டிருக்கிறார்.

அந்த நேரத்தில், கடலில் 15 முதல் 20 அடி உயரத்துக்கு அலை எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு வந்த lifeguard ஒருவரும், மற்றொரு நபரும் கடலுக்குள் இறங்கி யூஜீயை மீட்டு கரைக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.

யூஜியும் அவரது மனைவியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், யூஜி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோருடன் சென்ற 2 வயதுக் குழந்தை கடலில் இறங்கவில்லை. அந்த குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரவு 9.00 மணி வரை தேடியும் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட தம்பதியின் 5 வயது மகள் கிடைக்கவேயில்லை. சுற்றுலா சென்ற இடத்தில் தந்தையும் மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் உருவாக்கியுள்ளது.

  • 77
·
Added a news

வங்காளதேச முன்னாள் பிரதமர் 78 வயதான ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து இன்று(17) அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது.

வங்க தேசத்தில் 2024ஆம் ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற மாணவர்கள் கிளர்ச்சியின் போது, 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அப்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது.

இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி, ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்ததுஇந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் இன்று (17) தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது. மேலும் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஷேக் ஹசீனா கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள் குறிப்பிடத்தக்கது. 

  • 86
  • 134
  • 132
  • 133
·
Added a post

இந்த படத்தில் உள்ள பெண்ணின் புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால் அவளது கழுத்தில் அணிந்திருக்கும் பெரிய வைரம் தெரியும்.

இது 254 கேரட் ஜூப்ளி வைரம் ஆகும் , இது உலகப் புகழ்பெற்ற" கோஹ் - இ - நூர் " வைரத்தின் அளவு மற்றும் எடையிலும் இரட்டிப்பாக்கும்.

இந்தப் பெண் மெஹர்பாய் டாடா , அவர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் சர் டோராப்ஜி டாடாவின் மனைவி.

1924 இல் உலகில் மந்த நிலை ஏற்பட்டு டாடா நிறுவனம் ( டிஸ்கோ ) ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லாத போது , மெஹர்பாய் இந்த விலைமதிப்பற்ற ஜூப்ளி வைரத்தை இம்பீரியல் வங்கியில் ரூ 1 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.

இதனால் ஊழியர்கள் தொடர்ந்து சம்பளம் பெறுவதற்காகவும், மேலும் நிறுவனம் தொடர்ந்து இயங்குவற்காகவும், அடமானம் வைக்கப்பட்டது. மெஹர்பாய் டாடா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சரியான சிகிச்சையின்றி மரணமடைந்தார். அவரது அகால மரணத்திற்கு பிறகு , சர் டோராப்ஜி டாடா இந்தியாவில் புற்றுநோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க எண்ணி இந்த வைரத்தை விற்று டாடா மெமோரியல் புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கினானார்.

அன்பிற்காகவும், மக்களின் நலன் கருதியும் உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளை மனித இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.

முரண்பாட்டைப் பாருங்கள்.. தாஜ்மஹாலை காதல் நினைவுச் சின்னமாக பெருமை படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கு நமது மக்களுக்கு உயிர் கொடுக்கும் வரலாறு உருவாகிய அடிப்படை செய்தி கூட தெரியவில்லை..?

- இணையத்தில் வெளியான தகவல்

  • 135
  • 140
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பேச்சுக்களுக்கு மதிப்புகள் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சுப காரிய முயற்சிகள் கைகூடும். வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

ரிஷபம்

கனிவான பேச்சுகளால் காரிய அனுகூலம் ஏற்படும். நெருக்கமானவர்கள் மத்தியில் மதிப்புகள் உயரும். அரசு காரியங்களில் இருந்த இழுபறிகள் குறையும். வழக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். வியாபார பணிகளில் சில மாற்றம் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மிதுனம்

எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பிறமொழி மக்களின் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழல்கள் குறையும். சில நுட்பமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். கலைப் பொருள்களில் ஆர்வம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கடகம்

எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பங்குதாரர்கள் இணைப்பு பற்றிய சிந்தனைகள் மேம்படும். விமர்சன கருத்துக்களை தாண்டி முன்னேற்றத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

சிம்மம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை சூழ்நிலை அறிந்து செயல்படுத்தவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

கன்னி

பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நவீன சாதனங்கள் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபார வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். உழைப்பிற்கான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

துலாம்

செயல்பாடுகளில் ஒருவிதமான சேர்வுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். மறைமுகமான சில பிரச்சனைகள் தோன்றி மறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடத்தில் விவாதம் இன்றி செயல்படவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

விருச்சிகம்

நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் சிலருக்கு ஏற்படும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல்கள் அமையும். எதிர்ப்புகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

 

தனுசு

சுப காரிய முயற்சிகள் கைகூடும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். நிலுவையில் இருந்த வரவுகள் கிடைக்கும். தவறிய சில ஆவணங்கள் கிடைக்கும். பிரபலமானவர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகளும் உயர்வும் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

கும்பம்

வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீக பணிகளில் தெளிவுகள் பிறக்கும். நிர்வாகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் முதலிடு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மீனம்

புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். பொருட்களை இரவில் தருவதை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நயமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

  • 199
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 1ஆம் தேதி திங்கட்கிழமை 17.11.2025

இன்று காலை 06.53 வரை துவாதசி. பின்னர் திரியோதசி .

இன்று அதிகாலை 04.49 வரை அஸ்தம் . பின்னர் சித்திரை.

இன்று காலை 09.31 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.

இன்று காலை 06.53 வரை தைத்தூலம். பின்னர் இரவு 07.42 வரை கரசை. பின்பு வனிசை.

இன்று அதிகாலை 04.49 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=330&dpx=2&t=1763350551

நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 198
  • 205
  • 212
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். விருந்தினர்களின் வருகைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

ரிஷபம்

நினைத்த பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். புதிய அதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மிதுனம்

நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். கடன் சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். தாய் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

 

கடகம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஒப்பந்தங்களில் இருந்த தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புது விதமான அனுபவம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

சிம்மம்

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். உடல் தோற்றப்பொழிவு அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கன்னி

மனதளவில் ஒரு விதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சிறுசிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

துலாம்

பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் ஏற்படும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சாதகமற்ற சூழல்கள் அமையும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் மதிப்பை மேம்படுத்தும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

விருச்சிகம்

நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சொந்த பந்தங்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வித்தியாசமான அணுகுமுறைகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

தனுசு

செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபார நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் விலகும். இழுபறியான சில வரவுகள் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கும்பம்

வியாபார பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். மறைமுகமான சில தடைகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களால் சங்கடங்கள் நேரிடலாம். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மீனம்

சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். சக ஊழியர்களால் ஆதரவு உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

  • 365
·
Added a post

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 16.11.2025.

இன்று அதிகாலை 05.39 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி .

இன்று அதிகாலை 03.07 வரை உத்திரம் . பின்னர் அஸ்தம்.

இன்று காலை 09.45 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி.

இன்று அதிகாலை 05.39 வரை பாலவம். பின்னர் மாலை 06.16 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று காலை 06.14 வரை மரண யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=329&dpx=2&t=1763288055

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 370
  • 367
·
Added a news

கௌரவ் சாப்ரா என்னும் இந்தியர் கனடாவில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, பொலிசார் ஒருவர் அவரை நிறுத்தியுள்ளார். அப்போது அவரது காருக்குள் windscreenஇல் பொருத்தப்பட்டிருந்த மொபைலில் வீடியோ ஒன்று ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. அவருக்கு 615 டொலர்கள் அபராதம் விதித்துள்ளார் அந்த பொலிசார். ஆனால், இனவெறுப்பு காரணமாக அவர் தனக்கு அபராதம் விதித்ததாகத் தெரிவிக்கும் கௌரவ், அந்த பொலிசார் தனது பர்ஸிலிருந்த பணத்தைப் பார்த்து எதற்கு இவ்வளவு பணம் என்று கேட்டதாகவும் கூறுகிறார்.

அவர் இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகம் ஒன்றில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களைப் பார்த்தவர்கள், கார் ஓட்டும்போது வீடியோ பார்ப்பது சட்டப்படி தவறுதான் என்கிறார்கள்.

கௌரவ் அந்த பொலிசாரிடம் வீடியோ ஓடுவது உண்மைதான். ஆனால், தான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை, சாலையில்தான் கவனம் வைத்திருந்தேன் என்கிறார். அந்த விடயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லலாம், அங்கு அவர் வீடியோ பார்த்தாரா இல்லையா என்பதை முடிவு செய்யலாம் என்கிறார் அந்த பொலிசார்.

இணையவாசிகளும், இது இனவெறுப்பு இல்லை. அவர் தன் கடமையைத்தான் செய்தார் என்கிறார்கள். அது மட்டுமல்ல, புலம்பெயர்ந்தோர் எப்போதுமே தாங்கள் வாழும் நாட்டுக்கு உண்மையாக இருப்பதையே நிரூபிக்க முயல்வார்கள். அந்த பொலிசாரும் ஒரு புலம்பெயர்ந்தோர்தான். ஆக, இது இனவெறுப்பு இல்லை. கனடாவில் கார் ஓட்டும்போது வீடியோ பார்ப்பது தவறுதான் என்கிறார்கள் இணையவாசிகள்!

  • 566
·
Added article

இந்தோ- சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு புது டெல்லியில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஐரோப்பிய திரைப்பட விழாவை சென்னையில் நடத்துகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் ஃபிரான்சைஸ் வளாகத்தில் நவ.17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கும் இப்பட விழாவில் 6 படங்கள் திரையிடப்படுகின்றன.

நவ.17-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரெஞ்சு காமெடி டிராமா திரைப்படமான ‘ஜிம்’ஸ் ஸ்டோரி’யும், அன்று இரவு 7 மணிக்கு பின்லாந்து படமான ‘ஜேவிடா’வும் திரையிடப்படுகின்றன.. ஒரு பெண்ணின் 3 வெவ்வேறு காலகட்டங்களை விவரிக்கும் படம் இது.

நவ.18-ம் தேதி மாலை 5 மணிக்கு பல்கேரிய த்ரில்லர் படமான ‘த டிராப்’, அன்றிரவு 7 மணிக்கு ருமேனியா நாட்டுத் திரைப்படமான, ‘த்ரி கிலோமீட்டர்ஸ் டு த எண்ட் ஆஃப் த வேர்ல்டு’, நவ.19-ம் தேதி மாலை 5 மணிக்கு ஹங்கேரி படமான ‘ஃபோர் சோல்ஸ் ஆஃப் கொயோட்’, இரவு 7 மணிக்கு ‘டேஞ்சரஸ் ஜென்டில்மேன்’ என்ற போலந்து திரைப்படம் ஆகியவைத் திரையிடப்படுகின்றன. இத்தகவலை இந்தோ-சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் பொதுச் செயலாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

  • 572
·
Added a post

👌👌'#பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!

👎நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!

👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!

👌👌 தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி!

👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!

👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!

👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 சுகப் பிரசவம் என்பது இயற்கையின் விதி!

👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!

👌👌யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!

👌👊 பசித்து உண்டால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!

👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!

👌👌ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!

👎அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!

👌👌நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி!

👎நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!

👌👌 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!

👎எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி!

👌👌ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின் விதி.

👎ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.

👌👌தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.

👎தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.

👌👌 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.

👎மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.

👌👌மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!

👎அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி!

👌👌 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும், இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !

👎 படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது யார் சதி!

  • 587
  • 605
·
Added a post

1. உடல் - உணவை கேட்கும் மொழி : பசி

2. உடல் - தண்ணீரை கேட்கும் மொழி : தாகம்

3. உடல் - ஓய்வை கேட்கும் மொழி : சோர்வு, தலைவலி

4. உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி : தும்மல் சளி இருமல்.

5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி : காய்ச்சல்

6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி : வாய் கசப்பு மற்றும் பசியின்மை

7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி உடல் : அசதி

8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி : வாந்தி

9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி : பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி : வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி : உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி : சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி : மலம் கழித்தல்

உடல் மொழி அறிவோம். ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்யவதை தவிர்ப்போம்.

உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால், நோயை இயற்கையாய் தவிர்த்து, ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சிஆகவும் வாழலாம்.

நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம். நாம் நம்மை நேசிப்போம்.

நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளுக்கும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  • 612
·
Added article

தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வித்தவர் எம்.ஜி.ஆர்.

அவருக்கு, ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த விருப்பம். ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி"சொல்றேன்' என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார்.

ஒரு முறை சிவாஜி, எம்.ஜி.ஆர் பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு முதல்வர் காமராஜர் வந்திருந்தார்.

காமராஜரை வழியனுப்பும் போது மீண்டும் அழைப்பு விடுத்தார் எம்.ஜிஆர். அப்போதும் அதே புன்னகை மாறாமல் "ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக்கூடாது என்றில்லை. உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அறுசுவை உணவும் இனிப்பு பதார்த்தங்களும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள். நான் மக்கள் ஊழியக்காரன் ரெண்டு இட்லி, தயிர் சோறு தான் எனக்கு சரிப்படும் உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால் திரும்பவும் அந்த ருசியை நாக்கு தேடும்..அதுக்கு நான் எங்கே போறது' என்று கூற ஆடிப்போனார் எம்.ஜி.ஆர்.

தன்னையும் அறியாமல் காமராஜரை கைகூப்பி வணங்கினார் எம்.ஜி.ஆர்.

 

  • 773
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பொறுப்புடன் செயல்படவும். நண்பர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

ரிஷபம்

பணியாட்களில் சில மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். மனை சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அச்சம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மிதுனம்

நினைத்து சில பணிகள் தாமதமாக நிறைவு பெறும். உடன் இருப்பவர்களால் ஆதரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் மத்தியமான லாபங்கள் கிடைக்கும். கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

சிம்மம்

தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். தடைப்பட்ட சில விஷயங்கள் நிறைவு பெறும். ஆன்மீகப் பணியில் ஆர்வம் உண்டாகும். வீடு மனை விற்பதில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். உழைப்புக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். சில அனுபவங்கள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கன்னி

குடும்பத்தின் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்களில் சிறு சிறு வழிகள் ஏற்பட்டு நீங்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் அளவுடன் செயல்படுவது நல்லது. சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

துலாம்

கணவன் மனைவிக்கு அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும். சக ஊழியர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தடைகளால் தாமதமும் அலைச்சலும் ஏற்படும். முயற்சி ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 

விருச்சிகம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நினைத்த காரியம் கைக்கூடி வரும். சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மன திருப்தியை ஏற்படுத்தும். துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். உறவினர்கள் மத்தியில் முக்கியத்துவம் ஏற்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். விலகி இருந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். சில மாற்றங்கள் மூலம் மேன்மைகளை உருவாக்குவீர்கள். வியாபாரம் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

மகரம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தடைப்பட்ட சில வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கான மதிப்புகள் கிடைக்கும். ஆன்மீக சிந்தனைகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

 

கும்பம்

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். வீண் செலவுகளால் மனம் சஞ்சலமாகும். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த வரவுகள் தாமதமாக கிடைக்கும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

மீனம்

சகோதரர்களின் அரவணைப்பு மேம்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் கணிசமாக உயரும். அலுவலகத்தில் மேன்மையான சூழல்கள் அமையும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். கோபம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

  • 789
·
Added a post

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை 15.11.2025.

இன்று அதிகாலை 04.55 வரை தசமி. பின்னர் ஏகாதசி.

இன்று அதிகாலை 01.51 வரை பூரம் . பின்னர் உத்திரம்.

இன்று காலை 10.19 வரை வைதிருதி. பின்னர் விஷ் கம்பம்.

இன்று அதிகாலை 04.55 வரை பத்தரை. பின்னர் மாலை 05.17 வரை பவம். பின்பு பாலவம்.

இன்று காலை 06.13 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=328&dpx=2&t=1763179067

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 904