·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 898
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
  • 12
  • 12
  • 12
  • 11
  • 11
  • 12
  • 11
  • 12

இவர்கள் செய்வதுதான் சேவை.

  • 12
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். புதியவர்களின் அறிமுகம் கிட்டும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரரீதியாக சில முடிவுகளை எடுப்பீர்.

ரிஷபம்: செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பீர். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். சொந்த ஊர் விசேஷங்களுக்கு தலைமை தாங்குவீர். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

மிதுனம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பீர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பயணங்கள் அலைச்சல் தரும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

கடகம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.

சிம்மம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலக பணிகளை முடிப்பீர்கள். வியாபாரரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

கன்னி: குடும்பத்தில் நிலவிய காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்புயரும். நல்லவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.

துலாம்: உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். பழைய சொத்து சிக்கலில் ஒன்று தீரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலக மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்.

விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். பிள்ளைகளால் செலவு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். எதிலும் கவனம் தேவை. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் அதிகம் உழைக்க வேண்டி வரும். அலைச்சல் இருக்கும். லாபம் கூடும்.

மகரம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். மூத்த சகோதரிகள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கும்பம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபா ரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.

மீனம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகளுடன் சென்ற பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரம் லாபம் தரும்.

  • 78
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 16.6.2026

இன்று காலை 06.58 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று இரவு 07.31 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று காலை 07.17 வரை கண்டம். பின்னர் விருத்தி.

இன்று காலை 06.58 வரை பவம். பின்னர் மாலை 05.14 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று அதிகாலை 05.53 வரை சித்தயோகம். பின்னர் இரவு 07.31 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=546&dpx=2&t=1781579756

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 123

Good Morning....

  • 119
·
Added article

பேட் கேர்ள் படத்தில் நடித்த அஞ்சலி சிவராமனுக்கு 31 வயது ஆகிறது. ஜூன் மாதம் பாதியை கடந்தும் சம்மர் வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில், சன் டே ஸ்பெஷலாக நீச்சல் குளத்தில் தோழியுடன் குளித்து விளையாடிய வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஜில்லாக்க முயற்சித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் சம்மர் தொடங்கியதில் இருந்தே ஏகப்பட்ட நடிகைகள் பிகினி உடைகளை வாங்கி வைத்துக் கொண்டு நீச்சல் குளங்களிலும், பீச்களிலும் சும்மா போஸ் கொடுத்து போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஃபாலோயர்களை அதிகரித்து கல்லா கட்ட ஆரம்பித்தனர். மேலும், சில நடிகைகள் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நிலையில், சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் இறங்கி மாதம் லட்சக் கணக்கில் நடிக்காமலே சம்பாதிப்பது எப்படி என பாடம் நடத்தி வருகின்றனர்.

பேட் கேர்ள் ஹீரோயின்: கேரளாவை சேர்ந்த அஞ்சலி சிவராமன் கடந்த 2022ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான கோபால்ட் ப்ளூ என்கிற வெப்சீரிஸில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட் கேர்ள் படம் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார். பல சர்ச்சைகளை கிளப்பிய பேட் கேர்ள் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக போகவில்லை. ஆனால், ஆம்ரி எனும் ஆங்கில படத்தில் தற்போது அஞ்சலி சிவராமன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவரது போல்டான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

நீச்சல் குளத்தில் தோழிகளுடன்: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏகப்பட்ட ஜாலியான ரீல்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் வருவது வாடிக்கை. நடிகை அஞ்சலி சிவராமன் தனது தோழிகளுடன் சொகுசு ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் குடித்து கும்மாளம் போட்ட வீடியோவை தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

  • 199
·
Added article

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெரிய நடிகர்கள் தங்கள் சொந்த தயாரிப்பில் தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திப் படம் எடுப்பார்கள். ஆனால், உலக நாயகன் கமல்ஹாசன் அந்தப் பிம்பத்தை உடைத்து, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் வளர்ந்து வரும் இளம் திறமைகளுக்கு ஒரு மிகப்பெரிய மேடையை அமைத்துக் கொடுத்து வருகிறார். சிவகார்த்திகேயன் முதல் சிலம்பரசன் வரை இப்போது கமலின் தயாரிப்பில் வலம் வருவது, தமிழ் சினிமாவின் வணிக முறையையே மாற்றி எழுதியுள்ளது.

கமல்ஹாசன் போன்ற ஒரு ஜாம்பவான் தயாரிப்பாளராக இருக்கும்போது, அந்தப் படத்திற்கு ஒரு தனி மரியாதை கிடைக்கிறது. ‘விக்ரம்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அவர் சிவகார்த்திகேயனை வைத்துத் தயாரித்த ‘அமரன்’ மற்றும் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் ‘சேயோன்’ (Seyon) போன்ற படங்கள் அதற்குச் சான்று.

ஒரு இளம் ஹீரோவுக்குக் கமலின் தயாரிப்பு என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல, அது ஒரு பெரிய ‘அங்கீகாரம்’. இது அந்த நடிகரின் மார்க்கெட்டை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், கதைத் தேர்வில் ஒரு முதிர்ச்சியையும் கொண்டு வருகிறது.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து சிலம்பரசன் (STR), அசோக் செல்வன் போன்ற இளம் நட்சத்திரங்கள் நடித்திருப்பது ஒரு ஆரோக்கியமான மல்டி-ஸ்டாரர் கலாச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படத்தை (தலைவர் 173) சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் கமல் தயாரிப்பது, கோலிவுட்டின் இரண்டு துருவங்கள் கைகோர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. இது போன்ற பெரிய கூட்டணியால் படத்தின் தரமும் வசூலும் சர்வதேச அளவிற்கு உயர்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தில் பணிபுரியும் இயக்குநர்களுக்குக் கமல் கொடுக்கும் ‘கிரியேட்டிவ் ஃப்ரீடம்’ தான் அதன் மிகப்பெரிய வெற்றி ரகசியம். லோகேஷ் கனகராஜ் முதல் ராஜ்குமார் பெரியசாமி வரை எல்லா இயக்குநர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.

2026-ல் மட்டும் RKFI நிறுவனம் சுமார் 4 முதல் 5 பெரிய படங்களைத் திட்டமிட்டுள்ளது. இதில் இளம் இயக்குநர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவது, கோலிவுட்டின் அடுத்த தலைமுறை படைப்பாளிகளை உருவாக்குவதில் கமலின் பங்களிப்பைத் தெளிவாகக் காட்டுகிறது.

பெரிய பட்ஜெட்டில் இளம் ஹீரோக்களை வைத்துப் படம் எடுக்கும்போது, ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மிக எளிதாக விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. ‘கமல் தயாரிப்பு’ என்கிற பிராண்ட் நேம் விநியோகஸ்தர்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. இதனால் நடுத்தர பட்ஜெட் படங்கள் கூட 100 கோடி வசூலை மிக எளிதாகத் தொடுகின்றன.

கமல் தனது அனுபவத்தை மூலதனமாகவும், இளைய தலைமுறையை உழைப்பாகவும் கொண்டு நடத்தும் இந்தச் சினிமா பயணம் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய பொற்காலத்தைத் தந்து கொண்டிருக்கிறது. இது மற்ற பெரிய நடிகர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெரிய நடிகர்கள் தங்கள் சொந்த தயாரிப்பில் தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திப் படம் எடுப்பார்கள். ஆனால், உலக நாயகன் கமல்ஹாசன் அந்தப் பிம்பத்தை உடைத்து, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் வளர்ந்து வரும் இளம் திறமைகளுக்கு ஒரு மிகப்பெரிய மேடையை அமைத்துக் கொடுத்து வருகிறார். சிவகார்த்திகேயன் முதல் சிலம்பரசன் வரை இப்போது கமலின் தயாரிப்பில் வலம் வருவது, தமிழ் சினிமாவின் வணிக முறையையே மாற்றி எழுதியுள்ளது.

கமல்ஹாசன் போன்ற ஒரு ஜாம்பவான் தயாரிப்பாளராக இருக்கும்போது, அந்தப் படத்திற்கு ஒரு தனி மரியாதை கிடைக்கிறது. ‘விக்ரம்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அவர் சிவகார்த்திகேயனை வைத்துத் தயாரித்த ‘அமரன்’ மற்றும் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் ‘சேயோன்’ (Seyon) போன்ற படங்கள் அதற்குச் சான்று.

ஒரு இளம் ஹீரோவுக்குக் கமலின் தயாரிப்பு என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல, அது ஒரு பெரிய ‘அங்கீகாரம்’. இது அந்த நடிகரின் மார்க்கெட்டை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், கதைத் தேர்வில் ஒரு முதிர்ச்சியையும் கொண்டு வருகிறது.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து சிலம்பரசன் (STR), அசோக் செல்வன் போன்ற இளம் நட்சத்திரங்கள் நடித்திருப்பது ஒரு ஆரோக்கியமான மல்டி-ஸ்டாரர் கலாச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படத்தை (தலைவர் 173) சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் கமல் தயாரிப்பது, கோலிவுட்டின் இரண்டு துருவங்கள் கைகோர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. இது போன்ற பெரிய கூட்டணியால் படத்தின் தரமும் வசூலும் சர்வதேச அளவிற்கு உயர்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தில் பணிபுரியும் இயக்குநர்களுக்குக் கமல் கொடுக்கும் ‘கிரியேட்டிவ் ஃப்ரீடம்’ தான் அதன் மிகப்பெரிய வெற்றி ரகசியம். லோகேஷ் கனகராஜ் முதல் ராஜ்குமார் பெரியசாமி வரை எல்லா இயக்குநர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.

2026-ல் மட்டும் RKFI நிறுவனம் சுமார் 4 முதல் 5 பெரிய படங்களைத் திட்டமிட்டுள்ளது. இதில் இளம் இயக்குநர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவது, கோலிவுட்டின் அடுத்த தலைமுறை படைப்பாளிகளை உருவாக்குவதில் கமலின் பங்களிப்பைத் தெளிவாகக் காட்டுகிறது.

பெரிய பட்ஜெட்டில் இளம் ஹீரோக்களை வைத்துப் படம் எடுக்கும்போது, ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மிக எளிதாக விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. ‘கமல் தயாரிப்பு’ என்கிற பிராண்ட் நேம் விநியோகஸ்தர்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. இதனால் நடுத்தர பட்ஜெட் படங்கள் கூட 100 கோடி வசூலை மிக எளிதாகத் தொடுகின்றன.

கமல் தனது அனுபவத்தை மூலதனமாகவும், இளைய தலைமுறையை உழைப்பாகவும் கொண்டு நடத்தும் இந்த சினிமா பயணம் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய பொற்காலத்தைத் தந்து கொண்டிருக்கிறது. இது மற்ற பெரிய நடிகர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!

  • 202
·
Added a news

இனி ஒரு நாடோ அல்லது ஒரு சர்வதேச அமைப்போ மட்டும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கும் காலம் முடிவடைந்து வருவதாகவும் கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி, உருவாகி வரும் புதிய உலக ஒழுங்கில் அமெரிக்கா முக்கிய பங்காற்றும் என குறிப்பிட்டுள்ளார்.

அயர்லாந்து பயணத்தின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், திங்கட்கிழமை பிரான்சின் எவியான்-லே-பேன் நகரில் ஆரம்பமாகவுள்ள ஜி7 உச்சி மாநாடு புதிய உலக ஒழுங்கிற்கான அடித்தளத்தை அமைக்கக்கூடும் என்றார்.

செயற்கை நுண்ணறிவு (AI) ஒழுங்குமுறை, குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் சில நாடுகள் ஒரே நிலைப்பாட்டில் செயல்படும் என்றும், மற்ற சில நாடுகள் தலையீடு குறைந்த சுதந்திரமான அணுகுமுறையை பின்பற்றக்கூடும் என்றும் கார்னி குறிப்பிட்டார்.

மேலும், ஜி7 மாநாட்டில் கனடாவின் அணுகுமுறை ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஏற்ப மாறுபடும் தற்காலிக கூட்டணிகளை உருவாக்குவதாக இருக்கும் என்றும், பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட புதிய கூட்டாளிகளை கனடா எதிர்பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்த ஆண்டு ஜி7 மாநாட்டில் புவிசார் அரசியல் விவகாரங்கள் முக்கிய இடம் பெறும் என தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்தி உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே சரியான நெறிமுறைத் தீர்வாக இருக்கும் என்றும் மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார்.

  • 203
  • 196
·
Added a post

தனது தலையில் வாழைப்பழங்களை சுமந்து நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனிடம், தளர்ந்த உடலுடனும் சோர்வான முகத்துடனும் இருந்த பெரியவர் ஒருவர் எனக்கு பசியாக இருக்கிறது உன்னிடம் இருக்கும் வாழைப்பழங்களை தருவாயா என்று கேட்கிறார்.

உடனடியாக அந்தப் பையனும் மூன்று வாழைப்பழங்களை எடுத்து அந்த பெரியவரிடம் கொடுக்கிறான். அதை கையில் வாங்கிப் பார்த்த அந்த முதியவர் இந்தப் பழங்கள் இன்னும் பழுக்கவில்லை இதை எப்படி சாப்பிட்டு நான் பசியாறுவது என்று கேட்கிறார்.

எப்படியாவது முதியவரின் பசியை போக்க வேண்டும் என்று நினைத்த அந்த சிறுவன் கொஞ்ச நேரம் காத்திருங்கள். வீட்டில் என்னிடம் பழுத்த வாழைப் பழங்கள் இருக்கின்றன. அவற்றை எடுத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு வேக வேகமாகப் போய் மூன்று பெரிய பழுத்த வாழைப்பழங்களை கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தான்.

அதை வாங்கி பார்த்த பெரியவர் இந்த பழங்கள் அதிகமாக கனிந்து போய் இருக்கின்றன இதை நான் எப்படி சாப்பிடுவது என்று மீண்டும் அந்தப் பையனிடம் கோபித்துக் கொண்டார்.

இப்போதும் தான் நினைத்த மாதிரி பழங்களை கொடுத்து அந்த முதியவரின் பசியை ஆற்ற முடியவில்லை என்று பரிதவித்த அந்த சிறுவனிடம் மீண்டும் போய் அந்த பழுக்காத பழங்களையாவது எடுத்து வா நாளைக்கு வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன் எனக்கு கால் வலிக்கிறது, சீக்கிரமாக வா என்று சொல்கிறார்.

மீண்டும் வீட்டிற்கு ஓடி முன்பு கொடுத்த பழங்களையே எடுத்துக் கொண்டு சிறுவன் திரும்பி வருகிறான்.. நீ ரொம்ப மெதுவாக எல்லா வேலைகளையும் செய்கிறாய்.. இவ்வளவு நேரம் ஆக்கிவிட்டாய்.. எனக்கு வாழைப்பழம் சாப்பிடும் ஆசையே போய்விட்டது உன் பழங்களை எடுத்துக் கொண்டு போ என்று சொல்கிறார்.

இதைக் கேட்டதும் அந்த சிறுவனின் முகம் வாடி விடுகிறது அப்போது அந்த பெரியவர் தனது தோள்களை குலுக்கி சிறுவனைப் பார்த்து லேசாக சிரித்தார். அந்த சிரிப்பின் அர்த்தம் புரியாமல் சிறுவன் முழித்தான்.

அமைதியான புன்னகையுடன் அந்த பெரியவர் சிறுவனைப் பார்த்து வாழ்வின் மதிப்பு மிக்க பாடங்களை எல்லாம் படித்து தெரிந்து கொள்ள முடியாது. அனுபவித்து தான் தெரிந்து கொள்ள முடியும்..

உனக்கு ஒன்று தெரியுமா நீ கொடுத்த பழங்கள் எல்லாமே நல்ல பழங்கள் தான். ஆனால் நான் தான் நன்றி கெட்டத்தனமாக உன்னை வேண்டுமென்றே அலைய வைத்து அதன் மூலம் உனக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்க நினைத்தேன்.

என் வாழ்க்கையில் நான் மிகவும் தாமதமாக உணர்ந்து கொண்ட ஒரு விஷயத்தை உனக்கு இந்த சிறு வயதிலேயே சொல்ல வேண்டும் என்பதற்காக தான் இந்த நாடகத்தை நடத்தினேன்.

வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைக்காதே.. உன்னைச் சுற்றி இருப்பவர்கள் நீ என்ன செய்தாலும் முழுமையாக திருப்தி அடைய மாட்டார்கள் உன் செயல்களில் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

நீ எவ்வளவுதான் கடினமாக முயற்சி செய்தாலும் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் திருப்தி படுத்த முடியாது என்பதை உணராமல் இருந்தால் உன் மன அமைதியை இழப்பாய், உன் கனவுகளையும் லட்சியத்தையும் இழந்து உன் வாழ்வு தான் பாதிக்கப்படும். நீ தரையில் படுத்துக்கொண்டு என் மேலே நடந்து செல்லுங்கள் என்று சொன்னால் கூட உன் மீது நடப்பதற்கு எங்களுக்கு வசதியாக இல்லை என்று தான் கூறுவார்கள். எனவே அடுத்தவர்களை திருப்தி படுத்துவதற்காகவே உன்னுடைய வாழ்க்கையை நீ வாழாதே.! நீ நீயாக இரு.! உன் கடமைகளை சரியாகவும் நியாயமாகவும் செய் அதன்பிறகும் உன்னை பிறர் குறை கூறினால் அதற்காக வருந்தாதே என்று சொன்னார்..!

  • 207
  • 224
  • 226
  • 226

நாமும் தெரிந்துக் கொள்வோமா?

  • 226
  • 223
  • 225
  • 224