- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் நாயகியாக மிர்ணா நடித்து வருகிறார்.
முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக மிர்ணா நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இவர் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் விஜய் – மிர்ணா இருவரையும் வைத்து பாடலொன்றை படமாக்கி வருகிறார் முத்தையா. இப்படம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு தயாராகி வருகிறது.
இப்படத்தினை முடித்துவிட்டு அருண் விஜய் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது முடிவாகவில்லை. ஆனால், பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
'ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன.
ஒருநாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்..
மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப் பார்த்து, “நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்கு சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டியது தான்” என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. விவசாயியும் அந்த குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர்,
குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார். அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான்,
அந்த விவசாயி.பின்பு சிறிது நேரம் கழித்து,அங்கு வந்த ஆடு, அந்த குதிரையிடம், "நண்பா, நீ எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.
மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார். அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கும் பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.
இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர் சென்றதும், குதிரையிடம் வந்து, “நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது. அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து போகும்படியாக குதிரை ஓடியது.
மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.
அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாக குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த மருந்துதான் காரணம். என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து கொண்டாடி விடுவோம்” என்றான்.
குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து நடந்தாலும் மருத்துவர் கொடுத்த மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாக விவசாயி நினைத்தான்....
இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்தது என்பதை உணராமல், பலரும் உண்மையைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பல வகையிலும் சேமிப்புகள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் திருப்தி தரும்.
ரிஷபம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். உங்கள் உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து கூடும்.
மிதுனம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
கடகம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.
சிம்மம்: சில வேலைகளை போராடி முடிக்கவேண்டி வரும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உடல் சோர்வு, வயிற்றுப் பிரச்சினைகள் வந்துபோகும். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.
கன்னி: உங்கள் பேச்சாற்றல், புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பு மலரும். வீட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, அமைதி, மகிழ்ச்சி நிலவும். பண வரவு திருப்தி தரும். ஆன்மிகத்தில் மனம் செல்லும்.
துலாம்: பழைய நண்பர்கள் தக்க சமயத்தில் ஓடிவந்து உதவுவார்கள். குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வராது என்று நினைத்த பழைய கடன் பாக்கிகள் கைக்கு வரும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
தனுசு: தடுமாற்றம் நீங்கி, தெளிவு உண்டாகும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.
மகரம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். நண்பர்கள், உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண வரவு உண்டு.
கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். வீண், ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்தி பணத்தை சேமிப்பீர்கள்.
மீனம்: சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாகப் புரிந்துகொள்வார்கள். யாரிடமும் பழைய சம்பவங்களைப் பேச வேண்டாம். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 22 ஆம் தேதி திங்கட்கிழமை 6.7.2026
இன்று காலை 10.27 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று பிற்பகல் 01.22 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.
இன்று பிற்பகல் 01.41 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்.
இன்று காலை 10.27 வரை வணிசை. பின்னர் இரவு 09.58 வரை பத்திரை. பிறகு பவம்.
இன்று அதிகாலை 5.57 வரை சித்தயோகம். பின்னர் பிற்பகல் 01.22 வரை மரணயோகம். பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.7.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
தனது நீண்ட நாள் தோழி கவுரியை திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மும்பையில் தனது நீண்ட நாள் தோழியான கவுரியை திருமணம் செய்து கொண்டார் ஆமிர்கான். இந்த திருமணத்தில் ஆமிர்கான் – கவுரி இருவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு தனது திருமணம் ஜூலை 5-ம் தேதி நடைபெற இருப்பதை பத்திரிகையாளர்கள் முன்பு ஆமிர்கான் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆமிர்கானுக்கு வயது 60 ஆகிறது. அவர் ரீனா மற்றும் கிரண் ராவ் ஆகியோரை திருமணம் செய்து கொண்டு, விவகாரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 3-வதாக கவுரியை திருமணம் செய்து கொண்டுள்ளார். கவுரிக்கும் இது இரண்டாவது திருமணமாகும். அவருக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருப்பது நினைவுக் கூரத்தக்கது.
முதல் இரண்டு மனைவிகளை ஆமிர்கான் விவகாரத்து செய்துவிட்டாலும், அவர்களுடனும் நட்பு பாராட்டி வருகிறார். சமீபத்தில் முன்னாள் மனைவிகள் இருவர் மற்றும் கவுரியுடன் ஆமிர்கான் ஒன்றாக காரில் பயணித்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகையான இஷா கோபிகர், தமிழில் காதல் கவிதை, என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே, ஜோடி, அயலான் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அவர் திரையுலகில் நிலவும் வயது அடிப்படையிலான பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: ஆண்களுக்கு வயதானால் அதை அனுபவம் என்கிறார்கள். பெண்களுக்கு வயதானால் அதைப் பிரச்சினை என்கிறார்கள். இது விசித்திரமாக இல்லையா ? முன்னணி நடிகர்கள், தங்களை விடப் பாதி வயதுடைய இளம் பெண்களுடன் ஜோடி சேர்ந்து ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கிறார்கள். அது மிகவும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், வயதான பிறகும் ஒரு பெண் ஸ்டைலாகவோ, தன் கருத்துகளை வெளிப்படையாகப் பேசினாலோ அல்லது தனது தனித்துவத்தைக் கொண்டாடினாலோ, ‘உன் வயதுக்கு ஏற்றபடி நடந்துகொள்’ என்று அறிவுரை கூறுகிறார்கள். காலம் செல்லச் செல்ல ஒரு பெண், இன்னும் ஆழமானவளாக, வலிமையான தன்னம்பிக்கை கொண்டவளாக மாறுகிறாள் என்பதே உண்மை.
வயதான தோற்றமும் உடல் சுருக்கங்களும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அனுபவங்களையும் பிரதிபலிக்கிறது. வயதாவது இயற்கையான ஒன்று. உங்கள் தாய், மனைவி, சகோதரி, மகள், ஏன் உங்களுக்கும் கூட ஒருநாள் வயதாகும். அதனால், வயதாவதை அவமானமாகவோ, பலவீனமாகவோ பார்க்காதீர்கள்.
எல்லா வயதிலும் பெண்களை மதியுங்கள். ஒரு பெண்ணின் வயதைப் பார்க்காமல், அவளது வாழ்நாள் பயணத்தையும் மன வலிமையையும் மதியுங்கள். கண்ணியத்துக்குக் காலாவதி தேதி எதுவும் இல்லை, தன்னம்பிக்கைக்கு வயது வரம்பு கிடையாது.
அழகை வயதின் அடிப்படையில் வரையறுத்துக் கொண்டே உலகம் வெகு நாட்களைக் கழித்துவிட்டது. உண்மையான அழகு என்பது ஒருபோதும் வயதைச் சார்ந்ததாக இருந்ததில்லை. இவ்வாறு இஷா கோபிகர் கூறியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்றுள்ளார் இந்திய இளைஞர் ஒருவர். படித்து முடித்தபின், துரதிர்ஷ்டவசமாக அவருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கவில்லை. ஏற்கனவே சொந்த நாட்டையும் குடும்பத்தையும் மிஸ் பண்ணிய அவர், இந்தியாவுக்கே திரும்பிவிடலாம் என முடிவு செய்துள்ளார். ஆனால், தான் கனடாவிலிருக்கும் வரை தான் தன் குடும்பத்தால் நடத்தப்பட்ட விதத்துக்கும், இப்போது இந்தியா வந்தபின் தான் நடத்தப்படும் விதத்துக்கும் பயங்கர வித்தியாசம் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.
நான் கனடாவில் படிக்கும்போது கல்விக்கடன் வாங்கித்தான் படித்தேன். என் கடனையும் நானே அடைத்துக்கொண்டு, வீட்டுக்கும் பணம் அனுப்பினேன். இப்போதும் என் செலவுகளை நான்தான் கவனித்துக்கொள்கிறேன் என்று கூறும் அவர், ஆனால், என் தாய் என்னை நடத்தும் விதம் கூட மாறிவிட்டது என்கிறார்.
நீ போதுமான அளவில் முயற்சி செய்யவில்லை, அதனால்தான் உனக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கவில்லை, நீ கனடா சென்றதே வீண், நீ கனடாவுக்குப் போயிருக்கவே கூடாது, தண்ட செலவு என்றெல்லாம் என் தாயே திட்டுகிறார்.
கடந்த ஒரு மாதமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன், என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறி, சமூக ஊடகம் ஒன்றில் தன் அனுபவத்தைப் பகிர்ந்து ஆலோசனை கோரியுள்ளார் அந்த இளைஞர். அவரது இடுகையைப் படித்த பலரும், அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை.
'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, 'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார் கண்டக்டர்..
ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார். தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு, தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் வந்திருந்த மற்றொரு நபர் அவரை இறுக்க பற்றிக்கொண்டிருந்தார். ஏதோவொரு துயரச் சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.
நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும். ஏன் இப்படி சோகமாக இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன். நான் இறங்கிய அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும் இறங்கினார்கள். மனம் சற்று நிம்மதி அடைந்தது. அவர்கள் பற்றி எதையேனும் தெரிந்து கொள்ளலாம் என்று மனது விரும்பியது.. அவர்களை பின்தொடர்ந்தேன்..
தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினர் இருவரும். சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள் சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்.
அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன் மகனை கீழே கிடத்தி , தலையிலையும் நெஞ்சிலையும் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.
எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன காரணம் என்று எனக்கு எதுவும் தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கை கூட திருவிழா போல் கொண்டாடும் இந்த காலத்தில், இறந்து போன தன் மகனை பாடை கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லை என்று.
உயிருக்குயிரான தன் மகனை தோளில் சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு தெரியாமல் இறந்து போன தன் மகனை மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்த அந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது.
உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில்..
தஞ்சை பெரிய கோவில் (பிரகதீஸ்வரர் கோவில்) முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை என்ற கருத்து தவறானது. வரலாற்று ஆதாரங்களின்படி, இராஜராஜசோழன் கி.பி. 1003-ல் தொடங்கி கி.பி. 1010-ல் கோவிலை முழுமையாக நிறைவு செய்தார்.
கருவறையின் வடக்குப் புறச் சுவரில் கல்வெட்டு உள்ளது, இதில் இராஜராஜசோழன் கோவிலை முடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தொல்லியல் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
“முழுமையில்லை” என்ற தவறான புரிதல் 216 அடி உயரம் கொண்ட விமானம் உலகின் மிகப்பெரிய கல்லால் ஆன கோபுரங்களில் ஒன்று. சிலர் இதன் உச்சியில் கூடுதல் அலங்காரங்கள் திட்டமிடப்பட்டதாகக் கருதி “முழுமையில்லை” என்று காரணத்தினால் நினைக்கிறார்களோ?.
சில இடங்களில் சிற்பங்கள் முழுமையாக பொறிக்கப்படாதது போலத் தோன்றுகிறது. ஆனால் இது “அழகியல் தேர்வு” மட்டுமே; கட்டுமானம் நிறைவு பெறவில்லை என்பதற்கான சான்றல்ல.
பின்னர் நாயக்கர் மற்றும் மராட்டியர் காலத்தில் கூடுதல் மண்டபங்கள், சுவர் ஓவியங்கள் சேர்க்கப்பட்டதால், சிலர் “அசல் கோவில் முடியவில்லை” என்று தவறாக புரிந்து கொள்கிறார்களோ?
சில சிற்பங்கள், பின்னர் சேர்க்கப்பட்ட கட்டிடங்கள், மற்றும் அலங்காரக் குறைபாடுகள் காரணமாக “முடியவில்லை” என்ற தவறான கருத்து பரவியிருக்கலாம்.
ஆனால், இராஜராஜசோழன் கால கல்வெட்டுகள் கோவில் முடிவடைந்ததை உறுதிப்படுத்துகின்றன.
ஜெர்மன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஹால்ஸ் (1895) மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வுகள், கோவில் 1010-ல் நிறைவு பெற்றது என உறுதி செய்கின்றன.
“கட்டடமும் கதையும்” போன்ற தமிழ் வரலாற்று நூல்கள், இராஜராஜசோழன் கோவிலை முழுமையாக முடித்ததாக குறிப்பிடுகின்றன.
கல்வெட்டுகள், தொல்லியல் ஆய்வுகள், வரலாற்று நூல்கள் அனைத்தும் கோவில் 1010-ல் நிறைவு பெற்றதை உறுதிப்படுத்துகின்றன.
விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன பூவே உனக்காக படத்தில் தினமும் இரவில் பாட்டுப் பாடி ஊரையே எழுப்பி விடும் காமெடி வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தான் மீசை முருகேசன். அதற்குமுன்பே பல படங்களில் நடித்திருந்தாலும் பூவே உனக்காக படம்தான் இவருக்கு அடையாளத்தைக் கொடுத்தது. தன்னுடைய முறுக்கு மீசையாலும், வளர்ந்து உயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றமும் கொண்டதால் இவருக்கு மீசை முருகேசன் என்ற அடைமொழி வந்தது.
மோகன், நதியா நடித்த உயிரே உனக்காக படத்தில் அறிமுகமான மீசை முருகேசன் அடிப்படையில் ஒரு இசைக் கலைஞர் ஆவார். வாய் மூலம் இசைக்கும் மோர்சிங் என்ற இசைக்கருவியை இயற்றுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். மேலும் தவில் வித்வானாகவும் இருந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன் குழுவில் பல்வேறு படங்களில் பணியாற்றி உள்ளார்.
இதுமட்டுமல்லாது கே.பி.சுந்தரம்மாள், தியாகராஜா பாகவதர், டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், இளையராஜா, குனனக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசை மேதைகளிடம் பணியாற்றியிருக்கிறார். ஏராளமான நாடுகளில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்.
கே.பாலசந்தருக்கு இம்மாதிரி ஆளுமைகளைக் கண்டால் குஷி பிறந்து தன்னுடைய படங்களில் ஏதாவதொன்றில் ஒரு கதாபாத்திரம் ஆக்கிவிடுவார். அது போலவே. உன்னால் முடியும் தம்பி படத்திலும் மீசை முருகேஷ் அவர்களின் தந்தை கொண்டிருந்த தொழிலான தவில் வாத்தியக்காரராக வந்து சிறப்பித்திருப்பார்.
மேலும் ஆண்பாவம், பூவே உனக்காக, பிரிவோம் சந்திப்போம், அமைதிப் படை, ஊமை விழிகள் திரைப்படங்களில் பல திரைப்படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.
கையிலும், வாயிலும் பல்வேறு பழங்கால இசைக் கருவிகளையும், புதிது புதிதான சப்தங்களை உருவாக்குவதிலும் மீசை முருகேசன் வல்லவராகத் திகழ்ந்தார். அதனால் தான் இவரை அந்தக்கால ரசூல் பூக்குட்டி என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்போது நாம் திரையில் கேட்கும் வித விதமான பின்னணி இசையை தனது கை மற்றும் வாய்களாலேயே செய்து பல இசையமைப்பாளர்களை பிரம்மிக்க வைத்தவர்.
தேங்காய் ஓட்டையும் கூட தனது அலாதி இசை திறமையால் வாத்தியக் கருவியாக மாற்றுவார். தன்னிடம் எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அதை இசைக் கருவியாக மாற்றி வித விதமான ஒலிகளை எழுப்பி அசர வைக்கும் அலாதி திறமை கொண்டவர் இந்த மீசை முருகேசன்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வியாபாரம் இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில காரியங்களில் சாதகமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
வியாபார பணிகளில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். உயர் அதிகாரிகள் இடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். முயற்சிகளில் இருந்த தாமதம் குறையும். பிரபலமானவர்களால் ஆதாயம் ஏற்படும். சுப காரிய விரயம் உண்டாகும். மல்யுத்த போட்டிகளில் ஒரு விதமான ஆர்வம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
மிதுனம்
குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். அலுவலகப் பணிகளில் நிர்வாகத் திறமை வெளிப்படும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் மாற்றமான சூழல்கள் அமையும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். கல்வி தொடர்பான செயல்களில் இருந்த அலைச்சல்கள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். மற்றவர்கள் செயலால் மனதில் மாற்றம் ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். இடை சார்ந்த பிரச்சினைகள் குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். மனதளவில் இருந்த தாழ்வு மனப்பான்மை குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி
பயணம் செயல்களில் புதிய அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நுட்பமான சில விஷயங்களை புரிந்துகொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் மறையும். மனதளவில் புதிய பக்குவங்கள் உருவாகும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துறைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். இடப்பெயர்ச்சி சார்ந்த முயற்சிகள் கைகூடும். தைரியமான பேச்சுக்கள் மூலம் காரிய அணுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். கற்பித்தல் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தனிப்பட்ட கருத்துக்களை கூறுவதில் விவேகம் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
விருச்சிகம்
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான தெளிவுகள் ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
தனுசு
உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறுதூர பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நிலம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் ஒத்துழைப்புகள் ஏற்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் கல்வி சார்ந்த தெளிவுகள் பிறக்கும். ஆடம்பர பொருள்கள் மீதான ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் இடத்தில் பொறுமை காக்கவும். பணிகள் நிறைவு பெறுவதில் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
மீனம்
சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். பயணங்களில் முன்னேற்றம் காணப்படும். சமூகப் பணியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.7.2026
இன்று காலை 10.56 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
இன்று பிற்பகல் 01.10 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.
இன்று மாலை 03.08 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.
இன்று காலை 10.56 வரை தைத்துூலம். பின்னர் இரவு 10.41 வரை கரசை. பிறகு வணிசை .
இன்று அதிகாலை 5.57 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 08.15 முதல் 09.00 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை: 03.15 முதல் 04.15 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மனைவி: (கண்ணாடியைப் பார்த்து கவலையோடு) ஏங்க, வயசாயிட்டே போகுது. முகத்துல சுருக்கம், தலைல நரைமுடி... என்னைப் பார்க்கவே எனக்கே பிடிக்கல. எனக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுங்களேன்?
கணவன்: (யோசித்துவிட்டு) உன்னோட கண்ணாடியை நீ ஒரு நாளைக்கு அஞ்சு நிமிஷம் தான் பார்க்குற. ஆனா அதே முகத்தை நான் 24 மணி நேரமும் பார்க்குறேன். என் பொறுமையை விட உனக்கு என்ன பெரிய ஆறுதல் வேணும்?
சிவா ஒரு விவசாயி!. அந்தியூர் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய பண்ணை வீட்டில் இருந்த அவர், பல ஆண்டுகளாகத் தன் கையில் ஒரு கடிகாரம் கட்டியிருந்தார்
.*அவரைப் பொறுத்தவரை அது வெறும் கைக்கடிகாரம் அல்ல. உணர்வுகள். பல நல்ல தருணங்கள், வெற்றிகள் அவருக்கு நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம் தான் காரணம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது.*ஒருநாள் பண்ணை வேலை எல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகுதான் கவனித்தார். அவர் கையில் கட்டி இருந்த கடிகாரத்தை காணவில்லை.*
உடனே பரபரப்பாகி, தன் விவசாயக் கிடங்குக்குள் போய்த் தேட ஆரம்பித்தார். எவ்வளவு நேரம் தேடியும் கடிகாரம் கிடைக்கவில்லை. கவலையோடு வெளியே வந்தார்.*அவருடைய கிடங்குக்கு வெளியே சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அவருக்கு உடனே ஒரு ஆலோசனை கிடைத்தது..“சிறுவர்களே…!!” என்று அழைத்தார். சிறுவர்கள் ஓடிவந்தார்கள்
.*இந்தக் கிடங்குக்குள் என் கடிகாரம் காணாமல் போய்விட்டது. கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு அருமையான பரிசு ஒன்று தருவேன்” என்றார்.*மாணவர்கள் துள்ளிக் குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள்.
அத்தனைபேரும் உள்ளே இருந்த வைக்கோற்போர், புல், பூண்டு, இண்டு, இடுக்கு விடாமல் தேடியும் கிடைக்கவில்லை.*
சோர்ந்து போனவர்களாக வெளியே திரும்பி வந்தார்கள் விவசாயி வசம், “மன்னியுங்கள் அய்யா!, எங்களால கண்டு பிடிக்க இயலவில்லை’’ என்றார்கள்.*அந்த நேரத்தில், தயங்கித் தயங்கி ஒரு சிறுவன் அவரருகே வந்தான். அய்யா!, எனக்கு மட்டும் இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் அந்த கடிகாரம் கிடைக்கிறதா…? என்று முயற்சி செய்து பார்க்கிறேன்’’ என்றான்.
*சிறுவன் கிடங்குக்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக் கொண்டான். அவன் உள்ளே நுழைந்து பதினைந்து நிமிடங்கள்தாம் ஆகியிருக்கும். கதவு திறக்கப் பட்டது. வெளியே வந்தான்.அவன் கையில் காணாமல் போயிருந்த அவரின் கடிகாரம் இருந்தது.*அவருக்கு ஒரே வியப்பு. தம்பி!, நீ மட்டும் எப்படி சரியாக கடிகாரத்தை கண்டுபிடித்தாயா…?’’ என்று கேட்டார்.*
அய்யா!, நான் உள்ளே போய் ஒன்றுமே செய்யவில்லை. கிடங்கிற்கு நடுவில் கண்ணை மூடி அமர்ந்திருந்தேன். ஐந்து நிமிடங்கள் அப்படியே காத்திருந்தேன். அந்த அமைதியில் கடிகாரத்தின் `டிக்…டிக்… டிக்…’ ஒலியானது கேட்டது. ஒலித்த திசைக்கு சென்றேன், கடிகாரத்தை. கண்டு பிடித்தேன் என்றான்.
*நாளும் சற்று நேரத்தை, மனதை அமைதிப்படுத்த செலவழித்துப் பாருங்கள்.*உங்களால் எவ்வளவு தெளிவாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நீங்களே அறிவீர்கள்.* பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க ஸ்ரீ கிருஷ்ணன் நம் ஒவ்வொருவருக்கும் அருள் புரியட்டும்…!* மன அமைதி’ என்கிற இரண்டெழுத்து வசப்பட்டால் போதும். எதிலும், எங்கும் வெற்றியே, ஆனால்!, அனைவருக்கும் எளிதாக அது வாய்ப்பது இல்லை. பரபரப்பான மனம் கொண்ட ஒருவரை விட, மன அமைதி உள்ளவர் சிறப்பாகச் சிந்திப்பார்.*
மாமன்னன் ராஜராஜ சோழன் கி.பி. 1014-ஆம் ஆண்டில், தனது 67-வது வயதில் இயற்கை மரணம் அடைந்தார். [1, 2]இறப்பிற்கான காரணம்: அவர் எந்தவிதமான போரிலோ அல்லது சதித்திட்டங்களிலோ கொல்லப்படவில்லை என்றும், முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாகவே இயற்கை மரணம் எய்தினார் என்றும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
1,இறுதிக்காலம்: தன் மகன் ராஜேந்திர சோழனைச் சக்கரவர்த்தியாக முடிசூட்டி, சோழ நாட்டின் நிர்வாகப் பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்த பிறகு, தனது இறுதி நாட்களை பழையாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரண்மனைகளில் கழித்தார்.
[1,சமாதி (நினைவுத்தளம்): ராஜராஜ சோழனின் இறுதி ஓய்விடம் மற்றும் சமாதி எங்குள்ளது என்பது குறித்து வரலாற்றில் சில குழப்பங்களும், மர்மங்களும் நிலவுகின்றன. கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் பகுதியில் அவரது சமாதி (பள்ளிப்படை) இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.. அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்..
பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்.
உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும். நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல் ,அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்.. மன கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பர். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர். வாகனத்தைபழுதை சீர் செய்வீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.
ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் அனைவரையும் கவருவீர். பழைய கடனை பைசல் செல்வீர். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை குறித்து யோசிப்பீர். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
கடகம்: மனதில் ஒருவித கவலை, படபடப்பு வரும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.
சிம்மம்: திட்டமிட்டபடி பயணம் அமையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
கன்னி: நீண்டநாள் முயற்சிக்கு இப்போது பலன் கிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் உங்கள் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.
துலாம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் லாபம் தரும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
விருச்சிகம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். புது வேலை கிடைக்கும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: சவாலில் வெற்றி பெறுவீர். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலக ரீதியாக பயணங்கள் செல்வீர். மேலதிகாரி பாராட்டுவார்.
மகரம்: முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அரசுக்காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக் கசப்புகள் விலகும். வீட்டை அலங்கரிப்பீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். பிள்ளைகளுக்கு காய்ச்சல், வயிற்றுவலி வரக்கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து கட்டுவீர். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மீனம்: உறவினர், பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவர். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்தெறிவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். விவாதங்களை தவிர்க்கவும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 20 ஆம் தேதி சனிக்கிழமை 4.7.2026.
இன்று காலை 10.57 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று பிற்பகல் 12.30 வரை அவிட்டம். பின்னர் சதயம்.
இன்று மாலை 04.11 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.
இன்று காலை 10.57 வரை பாலவம். பின்னர் இரவு 10.57 வரை கௌலவம். பிறகு தைத்துூலம் .
இன்று பிற்பகல் 12.30 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
ராஜஸ்தானின் கிராடு கோயிலைச் சுற்றி நிலவும் மர்மமான நம்பிக்கையும் அதன் உண்மையான வரலாறும்
இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கோயில்கள் உள்ளன. சில கோயில்கள் தங்களது கட்டடக் கலையால் உலகையே வியக்க வைக்கின்றன. சில கோயில்கள் அற்புதங்களுக்காக புகழ்பெற்றவை. இன்னும் சில கோயில்கள், அவற்றைச் சுற்றி நிலவும் மர்மக் கதைகளாலும், மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளாலும் பிரபலமாகின்றன.
அப்படிப்பட்ட மர்மமான திருத்தலங்களில் மிகவும் பிரபலமான ஒன்று ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் (Barmer) மாவட்டத்தில், தார் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள கிராடு (Kiradu) கோயில் வளாகம்.
இந்தக் கோயிலைப் பற்றி பல ஆண்டுகளாக மக்களிடையே ஒரு வித்தியாசமான நம்பிக்கை பரவி வருகிறது.
"சூரியன் மறைந்த பிறகு இந்தக் கோயிலில் யாராவது தங்கினால், அவர்கள் கல்லாக மாறிவிடுவார்கள்!"
இந்தக் கூற்றுக்கு வரலாற்று அல்லது அறிவியல் ஆதாரம் இல்லை. இருந்தாலும், அந்த நம்பிக்கை இன்றளவும் அப்பகுதி மக்களிடையே வாழ்ந்து வருகிறது.
அப்படியானால், இந்த மர்ம நம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் வரலாறு என்ன? விரிவாக அறிந்து கொள்வோம்.
தார் பாலைவனத்தின் மத்தியில் மறைந்திருக்கும் கலைப் பொக்கிஷம்
கிராடு கோயில் வளாகம், தார் பாலைவனத்தின் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.
இங்கு ஒருகாலத்தில் ஐந்து பிரம்மாண்டமான கோயில்கள் இருந்ததாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவற்றில் தற்போது மிகவும் சிறப்பாக நிலைத்திருப்பது சோமேஸ்வரர் சிவன் கோயில் ஆகும்.
மற்ற கோயில்கள் காலத்தின் தாக்கத்தால் பெருமளவில் சிதிலமடைந்துள்ளன.
வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்தக் கோயில்கள் 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டுகளில் பரமார அரசர்களின் ஆதரவிலும், சாளுக்கியர் (சோலங்கி) கட்டடக்கலை தாக்கத்துடனும் உருவாக்கப்பட்டவை.
ராஜஸ்தானின் "கஜுராஹோ"
கிராடு கோயிலின் சுவர்கள்...
தூண்கள்...
வாயில்கள்...
அனைத்தும் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்த சிற்பங்களின் அழகைக் கண்டு, பலர் இந்தத் திருத்தலத்தை "ராஜஸ்தானின் கஜுராஹோ" என்று அழைக்கின்றனர்.
மரு-குஜராத் கட்டடக்கலையின் தாக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில், இந்தியாவின் நடுக்காலக் கட்டடக் கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.
மக்களின் நம்பிக்கையில் வாழும் சாபக் கதை
கிராடு கோயிலைப் பற்றிய மிகவும் பிரபலமான கதை, ஒரு துறவியையும் அவரது சீடரையும் சுற்றியே அமைந்துள்ளது.
பாரம்பரிய ஐதீகத்தின்படி...
பரமார மன்னர் சோமேஸ்வரர், தனது நாட்டில் மீண்டும் வளம் திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு பெரிய துறவியை அழைத்து வந்தார்.
துறவி சில நாட்கள் அங்கே தங்கி, தனது சீடரை அங்கு விட்டுவிட்டு யாத்திரைக்குச் சென்றார்.
சில காலத்திற்குப் பிறகு...
அந்தச் சீடர் உடல்நலக் குறைவால் மிகவும் பலவீனமடைந்தார்.
ஆனால், அப்பகுதி மக்கள் யாரும் அவரை கவனிக்கவில்லை.
ஒரே ஒரு பெண் மட்டும்...
அதுவும் ஒரு குயவரின் மனைவி...
மனிதநேயத்துடன் அவருக்கு உணவு அளித்து, மருந்து கொடுத்து, அன்புடன் கவனித்துக் கொண்டார்.
துறவியின் கோபம்
யாத்திரையை முடித்துத் திரும்பிய துறவி...
தனது சீடரின் நிலையைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தார்.
மக்களின் நன்றியின்மையும், அலட்சியமும் அவரை ஆழமாகப் புண்படுத்தியது.
கோபமடைந்த அவர்,
"இந்த ஊரில் மனிதநேயம் மறைந்துவிட்டது. இங்குள்ள மக்கள் அனைவரும் கல்லாக மாறட்டும்!"
என்று சபித்ததாக ஐதீகம் கூறுகிறது.
ஆனால்...
தன் சீடருக்கு உதவிய குயவரின் மனைவியை மட்டும் அழைத்து,
"இரவுக்குள் இந்த ஊரை விட்டு வெளியேறிவிடு. ஆனால் ஒரு விஷயம் மட்டும் நினைவில் கொள்... எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்க்காதே!"
என்று எச்சரித்தார்.
ஒரு பார்வை... ஒரு சாபம்...
அந்தப் பெண் ஊரை விட்டு வெளியேறத் தொடங்கினார்.
ஆனால்...
மனித இயல்பு...
ஆர்வம்...
பழகிய ஊரை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற எண்ணம்...
அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
அந்த நொடியிலேயே...
அவளும் கல்லாக மாறிவிட்டதாக உள்ளூர் ஐதீகம் கூறுகிறது.
இன்றும், அந்தப் பெண்ணின் கல் உருவம் கோயில் வளாகத்திற்கு அருகே இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
இந்தக் கதை, உள்ளூர் மரபில் வழங்கப்படும் ஐதீகம் மட்டுமே; இதற்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை.
இரவில் யாரும் தங்காத கோயில்
இந்தக் கதையால், இன்று வரை ஒரு வித்தியாசமான நம்பிக்கை நிலவி வருகிறது.
சூரியன் மறைந்த பிறகு...
யாரும் இந்தக் கோயிலில் தங்கக் கூடாது.
தங்கினால்...
அடுத்த நாள் கல்லாக மாறிவிடுவார்கள் என்று மக்கள் நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கைக்கு எந்தவிதமான அறிவியல் அல்லது தொல்லியல் ஆதாரமும் இல்லை.
மேலும், இக்கோயில் இரவு நேரத்தில் பொதுமக்களுக்கு திறந்திருக்காது.
மாலை நேரத்தில் வெறிச்சோடும் மர்மம்
பகல் நேரங்களில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருக்கும் இந்தக் கோயில்...
மாலை நேரம் நெருங்கியவுடன்...
மெல்ல அமைதியாகிவிடுகிறது.
சூரியன் மறைந்த பிறகு...
தார் பாலைவனத்தின் நடுவே...
காற்றின் சத்தம் மட்டுமே கேட்கும் அளவிற்கு...
அந்த இடம் வெறிச்சோடி விடுகிறது.
இந்த அமைதியே, அந்த மர்ம நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்துகிறது.
இன்றைய நிலை
தற்போது, இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) இந்தக் கோயில் வளாகத்தை பாதுகாக்கிறது.
பொதுவாக, பார்வையாளர்கள் காலை முதல் மாலை வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
நுழைவுக் கட்டணம் மற்றும் நேரம் காலத்திற்கேற்ப மாறக்கூடும்.
கதை சொல்லும் உண்மை
கிராடு கோயிலைப் பற்றிய இந்தச் சாபக் கதை...
உண்மையா?
கற்பனையா?
என்பதை உறுதியாக யாராலும் நிரூபிக்க முடியவில்லை.
ஆனால்...
இந்தக் கதையின் உள்ளார்ந்த செய்தி மிகவும் அழகானது.
ஒரு நோயாளியை கவனிக்காமல் விட்ட சமுதாயம்...
ஒரு மனிதநேயமிக்க பெண்...
நன்றியின்மையின் விளைவு...
இவை அனைத்தும் மனிதர்களுக்கு ஒரு வாழ்க்கைப் பாடமாகவே இந்தக் கதையில் சொல்லப்படுகின்றன.
இறுதியாக ஒரு சிந்தனை...
மனிதர்களை கல்லாக்குவது...
ஒரு சாபம் அல்ல...
கருணையற்ற மனம்தான்.
அன்பு...
இரக்கம்...
உதவும் மனப்பான்மை...
இவை இருக்கும் வரை...
எந்த சாபமும் மனிதனை வெல்ல முடியாது.
கிராடு கோயிலின் மர்மக் கதையும்...
அதே உண்மையை அமைதியாக நினைவூட்டுகிறது.





