- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான விமானம் 'டர்போ கமாண்டர் 690' ரகத்தைச் சேர்ந்ததாகும். இது காட்டுத்தீயை அணைக்கும் பணிகளை வான்வழியாகக் கண்காணித்து, வழிநடத்தும் ஒரு கட்டுப்பாட்டு மையமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
புதன்கிழமை இரவு, யெல்லோநைஃப் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபோர்ட் சிம்ப்சன் என்ற இடத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விமானம் குறித்த நேரத்தில் வந்து சேராததைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை என்றும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயரமான விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், சமூகத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் பிராந்திய மரண பரிசோதனைத் துறையும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
விபத்துக்குள்ளான விமானத்தை 'பஃபலோ ஏர்வேஸ்' என்ற நிறுவனம் இயக்கி வந்தது. மார்டன் ஹில்ஸ் பகுதியில் பரவி வந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இந்த விமானம் ஈடுபட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை இயற்கையான காரணங்களால் உருவான இந்த காட்டுத்தீ, சுமார் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு கட்டுப்பாடின்றி எரிந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா நிலநடுக்கத்தில் 40 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் வியாழக்கிழமை (25) ஒரு நிமிட இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிட்டர் அளவிற்கு அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 30 முறை தொடர்ந்து அந்த நில அதிர்வு மக்களால் உணரப்பட்டது.
100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வெனிசுலாவை நிலைகுலைய வைத்துள்ளது. வெனிசுலாவின் தலைநகரான மற்றும் காராகஸ், லா குவைரா அகிய பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாக கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து கீழே விழுந்தன. அதில் ஏராளமான மக்களும் சிக்கிக் கொண்டனர். காணும் இடமெல்லாம் கான்கிரீட் குவியலாக காணப்படுகிறது. பலரும் வீடு மற்றும் உடைமைகளை இழந்து சாலைகளில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்சாரம் மற்றும் மொபைல் சிக்னல் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
மீட்பு குழுவினரும், தன்னார்வலர்களும் இடுபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் தங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களையும் கண்ணீர் மல்க தேடும் காட்சிகள் பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கிறது.
இந்த பேரழிவில் இதுவரை 188 பேரின் உடல் மீட்கப்பட்டிருக்கிறதுடன் சுமார் 40 ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் பிரகாசித்த ஒரு திறமையான நடிகை. 1990களில் தென்னந்தியத் திரையுலகில் தனது நடிப்புத் திறமையாலும், நடனத திறமையாலும் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
சிறு வயதலேயே நடனக் கலையில் ஆர்வம் கொண்டிருந்த நடிகை பரத நாட்டியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர். இதன் தாக்கம் அவரது திரைப்பட நடிப்பிலும் நடனக் காட்சிகளிலும் தெளிவாகத் தெரிந்தது. “ஆபத்து”, “லைலா”, போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனிததுவமான இடத்தைப் பெற்றர்.
பொன்னுமணி, அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம் போன்ற பல திரைப்படங்கள் மூலம் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார். காதல், சண்டை, குடும்பக் கதைகள் என பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் தன்னை வளர்த்துக் கொண்டாவர்
நடிப்பு மட்டுமல்லாமல் ஒரு திறமையான இயக்குனராகவும் மாறினார். “ஸ்திரீ” எனும் கன்னடப் படத்தை இயக்கி, பெண் இயக்குனர் என்ற முறையில் கவனத்தைப் பெற்றார். இது அவரது படைப்பாற்றலையும், திரையுலகின் பல்வேறு பரிமாணங்களில் தன்னை நிலைநிறுத்தும் ஆற்றலையும் வெளிப்படுத்தியது.
அவரது மறைவு தென்னிந்தியத் திரையுலகிற்கு பேரிழப்பாக இருந்தது. இன்றும் அவரது நடிப்புத் திறமையும், நடனக் கலையும் பல திரைப்பட ரசிகர்களின் நினைவில் நிலைத்து நிற்கின்றன.
ஒரு குறுகிய காலத்தில் வாழ்ந்தாலும், தனது நடிப்பாற்றலாலும் பன்முக ஆளுமையாலும் தமிழ் சினிமா வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளார் சௌந்தர்யா.
பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையில் பல அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.
அவற்றில் மிக முக்கியமானதும், அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்ததும் —
👉 கோவர்த்தன மலை உயர்த்திய அதிசயம்!
இந்த நிகழ்வு, கிருஷ்ணரை ஒரு சாதாரண மனிதனாகக் காண்ந்தவர்களுக்கு
👉 அவர் பரம்பொருள் என்பதை உணர்த்தியது.
அதே சமயம், கிருஷ்ணருக்கே தனது வாழ்க்கையின் நோக்கம் தெளிவான தருணமாக அமைந்தது.
🌸 கோகுலத்தின் இனிய வாழ்க்கை
கோகுலம் —
அன்பும் எளிமையும் நிரம்பிய ஒரு கிராமம்.
கோபிகளும், கோபர்களும், மாடுகளும்,
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த அந்த மக்கள்,
👉 கிருஷ்ணனை தங்கள் உயிராக நேசித்தனர்.
கிருஷ்ணரும் அதேபோல்:
கோபிகளின் அன்பில் உருகியவர்
நண்பர்களுடன் விளையாடியவர்
யமுனை கரையில் புல்லாங்குழல் ஊதியவர்
👉 அந்த வாழ்க்கையே அவருக்கு உலகமாக இருந்தது.
ஆனால்…
அவரின் பிறப்பின் ரகசியமும்,
அவருக்கான தெய்வீக கடமையும் அவருக்குத் தெரிய வந்தது.
⚖️ மனதின் குழப்பம்
“நான் நேசிக்கும் இந்த வாழ்க்கையை விட்டு விலக வேண்டுமா?”
“அல்லது என் வாழ்க்கையின் பெரிய நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமா?”
👉 இந்த கேள்வி கிருஷ்ணரின் உள்ளத்தில் ஓர் அமைதியான போராட்டமாக இருந்தது.
அவர் உள்ளுக்குள் ஒரு அடையாளத்தைக் காத்திருந்தார் —
👉 “நான் செல்லும் பாதை சரியானதா?” என்ற உறுதி.
🌧️ இந்திரனின் கோபம்
அந்தக் காலத்தில், கோகுல மக்கள்
👉 மழைக்கு இந்திரனை வழிபட்டனர்.
ஆனால் கிருஷ்ணர் அவர்களிடம் கூறினார்:
“நம்மை வாழவைக்கும் இந்த மலை, இந்த இயற்கை —
👉 கோவர்த்தன மலைதான் நம்மை பாதுகாக்கிறது.”
அதனால், இந்திர வழிபாட்டை நிறுத்தி,
👉 கோவர்த்தன பூஜை (கோபோத்ஸவம்) தொடங்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த இந்திரன்:
🌩️ கடும் மழையை பொழிந்தான்
🌊 யமுனை ஆறு கரைபுரண்டு ஓடியது
⚡ கோகுலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது
மக்கள் பயந்தனர்:
👉 “நாம் இந்திரனை வழிபடாததால் அவர் கோபித்திருக்கிறார்!”
🏔️ பாதுகாப்பை தேடும் கிருஷ்ணர்
இந்த சூழ்நிலையில்,
கிருஷ்ணர், பலராமர் மற்றும் நண்பர்கள்
👉 மக்களை பாதுகாக்க ஒரு இடம் தேடினர்.
கோவர்த்தன மலையில் சுற்றித்திரிந்த அனுபவம் இருந்ததால்,
அதன் உள்ளமைப்பை கிருஷ்ணர் நன்றாக அறிந்திருந்தார்.
அவர் அனைவரையும் அந்த மலைக்குச் சென்றார்.
அங்கு சில பெரிய கற்களை அசைத்து பார்த்தபோது,
👉 ஒரு பெரிய குகை இருப்பது தெரியவந்தது!
💪 குகை திறந்த அதிசயம்
பலராமரின் வலிமையாலும்,
மற்ற இளைஞர்களின் உதவியாலும்,
அந்த குகை விரிவாக்கப்பட்டது.
மக்கள் அனைவரும் —
மாடுகளுடன் சேர்ந்து — அந்த குகைக்குள் சென்றனர்.
ஆனால்…
👉 அந்த இடம் எல்லோருக்கும் போதவில்லை!
✨ மலை உயர்ந்த அதிசயம்
அந்த நேரத்தில் —
அற்புதம் ஒன்று நடந்தது!
👉 கோவர்த்தன மலை தானாகவே
சுமார் ஆறு அடிகள் உயரத்தில் மிதந்தது!
குகை பெரிதாகி,
அனைவருக்கும் பாதுகாப்பான இடமாக மாறியது.
கிருஷ்ணருக்கே அந்த தருணத்தில்,
👉 “இது என்ன நிகழ்வு?” என்று ஆச்சரியம் ஏற்பட்டது.
மக்கள் அனைவரும்
சில நாட்கள் அங்கு பாதுகாப்பாக இருந்தனர்.
மழை அடங்கியபின்,
அவர்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கைக்கு திரும்பினர்.
🌟 உறுதியான உண்மை
இந்த நிகழ்வு:
👉 கோகுல மக்களுக்கு —
கிருஷ்ணர் இறைவன் என்பதற்கான உறுதி!
👉 கிருஷ்ணருக்கே —
தன் வாழ்க்கையின் நோக்கம் தெளிவான தருணம்!
அதன்பிறகு,
அவருக்கு திரும்பிப் பார்க்கும் எண்ணமே இல்லை.
💔 ராதையுடன் கடைசி ராசம்
கோகுலத்தை விட்டு செல்ல முடிவு செய்த கிருஷ்ணர்,
ஒரு கடைசி நினைவாக —
👉 ஒரு ராசலீலை ஏற்பாடு செய்தார்.
அன்று பௌர்ணமி இல்லை…
ஆனால் அது ஒரு பரிபூரண இரவு.
அனைவரும் மகிழ்ச்சியில் ஆடினர்.
👉 ராதை —
அந்த ஆனந்தத்தில் தன்னை மறந்தாள்.
அவள் ஆனந்தத்தின் உச்சிக்குச் சென்றாள்.
🎶 புல்லாங்குழலின் பரிசு
அந்த தருணத்தில்,
கிருஷ்ணர் தன் இடுப்பில் இருந்த புல்லாங்குழலை எடுத்தார்.
👉 அதை ராதைக்கு கொடுத்து கூறினார்:
“இது இனி உன்னுடையது…
நான் இனி புல்லாங்குழல் ஊதமாட்டேன்.”
அது ஒரு சாதாரண பொருள் அல்ல —
👉 கிருஷ்ணரின் உயிரின் ஒரு பகுதி!
அவர் சிறு வயதிலிருந்தே:
புல்லாங்குழலில் வல்லவர்
அதை ஊதினால் மனிதர்களும், மாடுகளும் கூட வந்து சேரும்
👉 அந்த புல்லாங்குழலை விட்டுக்கொடுத்தார்.
அதன்பிறகு —
கிருஷ்ணர் ஒருபோதும் புல்லாங்குழல் ஊதவில்லை!
🌿 கதை சொல்லும் உண்மை:
வாழ்க்கையில் சில தருணங்கள் —
நம்மை முழுமையாக மாற்றிவிடும்!
அந்த தருணம் வந்தால்:
👉 நாம் நேசித்ததை விட்டுவிட வேண்டியிருந்தாலும்,
👉 நம் கடமையை நிறைவேற்ற வேண்டும்!
அதுவே —
கிருஷ்ணர் நமக்கு கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடம்!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எளிதில் முடிய வேண்டிய சில காரியங்கள் தாமதமாகி நிறைவுபெறும். புதுமையான சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகளில் சிந்தித்து செயல்படவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
ரிஷபம்
நண்பர்களின் சந்திப்பு புதிய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தும். ஆரோக்கியம் தொடர்பான சில இன்னல்கள் குறையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். சாதுர்யமான பேச்சுக்கள் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய கல்விகளை கற்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதளவில் சில பக்குவம் பிறக்கும். நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். உத்தியோக பணிகளில் சில சலுகைகள் கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கலை பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்வியில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
பணம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆலோசனைகளால் தெளிவுகள் ஏற்படும். விவசாய பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி
மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தைரியமான செயல்பாடுகள் மூலம் மதிப்புகள் மேம்படும். கலை பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த விமர்சனங்கள் குறையும். சகோதர உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
துலாம்
வாகன வசதிகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மகிழ்ச்சியான பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கால்நடைகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். தலைவலி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை தவிர்க்கவும். உடன் இருப்பவர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். ரகசியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கொடுக்கல் வாங்கலில் லாபம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் சார்ந்த பயணம் மூலம் மேன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
உழைத்துக்கொண்டான மதிப்புகள் கிடைக்கும். நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பிரபலமானவர்களால் ஆதாயம் ஏற்படும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். பேச்சுக்களில் விவேகமும் பொறுமையும் வேண்டும். பெரியோர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 26.6.2026.
இன்று இரவு 09.41 வரை விசாகம். பின்னர் அனுஷம்.
இன்று பிற்பகல் 02.24 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.
இன்று காலை 11.45 வரை பவம். பின்னர் பாலவம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
1000 ஆண்டுகளாக விஞ்ஞானத்திற்கே சவால் விடும் ஜெகந்நாதரின் அதிசயம்!
"இன்னும் ஏழு நாட்களில் மழை பெய்யப் போகிறது..."
வானத்தில் மேகமில்லை.
காற்றில் ஈரப்பதமில்லை.
வானிலை அறிக்கைகளும் எதையும் கூறவில்லை.
ஆனால் ஒரு சிறிய கிராமத்தில் வாழும் மக்கள், இந்த வார்த்தையை உறுதியாகச் சொன்னார்கள்.
அவர்களிடம் எந்த நவீன கருவியும் இல்லை.
எந்த வானிலை மையத்தின் தகவலும் இல்லை.
அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு நம்பிக்கை...
அது ஆயிரம் ஆண்டுகளாக அவர்களை ஏமாற்றாத ஒரு புனிதக் கோயில்!
உத்திரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பென்தா என்ற சிறிய கிராமம். விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் அதிகம் வாழும் அந்தப் பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை வருவது உயிர் வாழ்வின் அடிப்படை நம்பிக்கையாக இருந்தது.
அந்தக் கிராமத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது ஜெகந்நாதர் ஆலயம்.
பழமையான அந்தக் கோயிலை முதன்முறையாகப் பார்க்கும் யாருக்கும் அது சாதாரண ஆலயமாகத் தோன்றாது.
காலத்தின் சோதனைகளைக் கடந்து நிற்கும் கருங்கல் சுவர்கள்...
பதினான்கு அடி தடிமன் கொண்ட பிரம்மாண்ட சுற்றுச்சுவர்...
முழுவதும் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட வித்தியாசமான அமைப்பு...
மற்றும் அதன் உச்சியில் அமைந்திருந்த மர்மமான வட்ட வடிவ அமைப்பு...
அனைத்தும் ஏதோ ஒரு ரகசியத்தை மறைத்துக் கொண்டிருப்பது போல இருந்தது.
ஒரு கோடை காலம்.
வெயில் கொடூரமாகக் கொளுத்தியது.
வயல்களில் விரிசல்கள் தோன்றியிருந்தன.
கிணறுகளில் நீர் குறைந்து கொண்டே இருந்தது.
விவசாயிகளின் முகங்களில் கவலை தெரிந்தது.
அப்போது ஒரு அதிகாலையில், கிராமத்து மூதாட்டி ஒருவர் பரபரப்பாக ஓடிவந்து கூறினார்.
"கோயிலில் தண்ணீர் சொட்ட ஆரம்பிச்சிருக்கு!"
அந்த ஒரு செய்தி போதும்.
கிராமம் முழுவதும் உயிர் பெற்றது.
"உண்மையா?"
"இந்த வருடமும் வந்துடுச்சா?"
"அப்படின்னா மழை நிச்சயம் வரும்!"
என்று மக்கள் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டனர்.
அன்று மதியம் பலர் கோயிலுக்குச் சென்றனர்.
அவர்களுள் இளம் விவசாயியான மோகனும் இருந்தான்.
அவன் வியப்புடன் கோயிலின் மேற்கூரையைப் பார்த்தான்.
அங்கு யாரும் தண்ணீர் ஊற்றவில்லை.
மேலே எந்தத் தொட்டியும் இல்லை.
சுற்றிலும் மரங்களும் இல்லை.
மலைகளும் இல்லை.
ஆனால்...
கோயிலின் மேற்கூரையிலிருந்து சிறு சிறு நீர்த்துளிகள் கீழே விழுந்துக் கொண்டிருந்தன.
ஒரு துளி...
இரண்டு துளி...
மூன்று துளி...
மெல்ல மெல்ல அவை அதிகரித்தன.
மோகன் ஆச்சரியத்தில் மூழ்கினான்.
"இது எப்படி சாத்தியம்?"
அவன் அருகில் நின்றிருந்த முதியவரிடம் கேட்டான்.
முதியவர் புன்னகைத்தார்.
"இந்தக் கேள்வியை உனக்கு முன்னாடி ஆயிரக்கணக்கான பேர் கேட்டிருக்காங்க மகனே..."
"ஆனா இன்னைக்கு வரைக்கும் யாராலும் பதில் சொல்ல முடியல."
இந்த அதிசயம் சாதாரண நிகழ்வு அல்ல.
அப்பகுதி மக்களின் நம்பிக்கையின்படி, கோயிலில் இருந்து சொட்டும் நீரின் அளவைப் பார்த்தே அந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்யும் என்பதை கணிக்க முடியும்.
நீர் அதிகமாகச் சொட்டினால் அதிக மழை.
குறைவாகச் சொட்டினால் குறைவான மழை.
அதிலும் ஆச்சரியம் என்னவென்றால்...
நீர் சொட்டத் தொடங்கிய ஏழு நாட்களுக்குள் பருவமழை தவறாமல் பெய்துவிடும்.
அது பல தலைமுறைகளாக நடந்துகொண்டே இருக்கிறது.
"ஏழாவது நாளை கவனமா பாரு," என்று கிராமத்து மூதாட்டிகள் குழந்தைகளிடம் கூறுவார்கள்.
அந்த ஏழு நாட்களும் கிராமத்தில் ஒரு திருவிழா சூழல் நிலவும்.
மக்கள் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்வார்கள்.
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடி விளையாடுவார்கள்.
விவசாயிகள் விதைகளைத் தயார் செய்வார்கள்.
மழையை வரவேற்கும் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும்.
ஏழாவது நாள் வந்தது.
காலை முதலே வானம் மாறத் தொடங்கியது.
கருமேகங்கள் திரண்டு வந்தன.
மாலை நேரத்தில் முதல் மழைத்துளி விழுந்தது.
அதன்பிறகு பெரும் மழை பெய்யத் தொடங்கியது.
விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஆனால் அதைவிட பெரிய அதிசயம் அடுத்த நாள் நிகழ்ந்தது.
மழை தொடங்கியவுடன்...
கோயிலுக்குள் சொட்டிக் கொண்டிருந்த நீர் திடீரென நின்றுவிட்டது.
ஒரு துளி கூட இல்லை.
அதைப் பார்த்த மக்கள் மீண்டும் மெய்சிலிர்த்தனர்.
இந்த மர்மத்தை அறிய பல அறிஞர்களும், ஆய்வாளர்களும் பலமுறை வந்துள்ளனர்.
அவர்கள் சுவர்களை ஆய்வு செய்தனர்.
மேற்கூரையை ஆய்வு செய்தனர்.
நிலத்தடி அமைப்புகளை ஆராய்ந்தனர்.
ஆனால் எந்த விளக்கமும் கிடைக்கவில்லை.
"நீர் எங்கிருந்து வருகிறது?"
"ஏன் மழைக்கு ஏழு நாட்களுக்கு முன்பே சொட்டுகிறது?"
"மழை தொடங்கியதும் ஏன் நின்றுவிடுகிறது?"
இந்தக் கேள்விகளுக்கு இதுவரை உறுதியான பதில் இல்லை.
கோயிலின் மற்றொரு மர்மம் அதன் உச்சியில் அமைந்துள்ள வட்ட வடிவ அமைப்பு.
பலர் அதை ஆய்வு செய்தனர்.
அது எந்த உலோகக் கலவையால் உருவாக்கப்பட்டது என்பதை கண்டறிய முயன்றனர்.
ஆனால் அதற்கும் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.
காலம் கடந்தும் அதன் ரகசியம் அப்படியே உள்ளது.
இந்தக் கோயில் எப்போது கட்டப்பட்டது?
யார் கட்டினார்கள்?
இதற்கும் முழுமையான பதில் இல்லை.
ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை கொண்டதாகக் கருதப்படுகிறது.
11-ஆம் நூற்றாண்டில் இது புனரமைக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கருவறைக்குள் நுழைந்தால் பக்தர்களின் மனம் அமைதியடைகிறது.
ஆறு முதல் ஏழு அடி உயரம் கொண்ட கருங்கல் ஜெகந்நாதர் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
அவரது இருபுறங்களிலும் சுபத்ரா தேவி மற்றும் பாலபத்ரர் அருள்பாலிக்கின்றனர்.
சுவர்களில் தசாவதாரச் சிற்பங்கள் உயிர்ப்புடன் செதுக்கப்பட்டுள்ளன.
அரிதாகக் காணப்படும் பஞ்சமுக விநாயகர் சிலை பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
மகாவிஷ்ணுவின் இருபத்து நான்கு அவதாரங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
நூறு அடி ஆழமுள்ள கிணறும் கோயிலின் பெருமையைப் பேசுகிறது.
ஒரு மாலை நேரத்தில் மோகன் கோயில் வாசலில் அமர்ந்திருந்தான்.
மழை மெதுவாகப் பொழிந்து கொண்டிருந்தது.
வயல்களில் நீர் நிரம்பியிருந்தது.
அவன் மனதில் ஒரு சிந்தனை எழுந்தது.
"நாம் அறிவியல் எல்லாவற்றையும் விளக்கிவிட்டது என்று நினைக்கிறோம். ஆனால் இன்னும் புரியாத எத்தனையோ ரகசியங்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன."
அந்த நேரத்தில் கோயில் மணியொலி ஒலித்தது.
அவன் கைகளை கூப்பினான்.
மனதில் ஒரு வியப்பு...
ஒரு பக்தி...
ஒரு பணிவு...
அனைத்தும் ஒன்றாக கலந்திருந்தன.
இந்த ஜெகந்நாதர் ஆலயம் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது.
மனிதன் எவ்வளவு உயர்ந்த அறிவைப் பெற்றிருந்தாலும், இயற்கையின் அனைத்து ரகசியங்களையும் இன்னும் முழுமையாக அறிந்துவிடவில்லை.
சில மர்மங்கள் நமக்கு வியப்பைக் கற்பிக்கின்றன.
சில மர்மங்கள் பணிவைக் கற்பிக்கின்றன.
சில மர்மங்கள் இறைவனின் படைப்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றன.
வாழ்க்கைப் பாடம்:
அறிவு வளர வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பணிவும் வளர வேண்டும். ஏனெனில் மனிதனுக்குத் தெரிந்ததைவிட தெரியாதவை இந்த உலகத்தில் இன்னும் அதிகம் உள்ளன.
மதுரை என்றாலே அன்னை மீனாட்சியின் ஆட்சிதான் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு காலத்தில் மதுரையை ஆட்சி செய்த ஆங்கிலேய ஆட்சியர் ஒருவரையே, அன்னை மீனாட்சி தனது பக்தராக மாற்றிய நெகிழ்ச்சியான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
பீட்டர் பாண்டியன்' - அன்னை மீனாட்சியின் பக்தர்:
கி.பி. 1812 முதல் 1828 வரை மதுரையின் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஐசக் ரவுஸ் பீட்டர். இவர் மக்களின் மீது மிகுந்த அன்பும், அன்னை மீனாட்சியின் மீது அளவற்ற பற்றும் கொண்டிருந்தார். இதனால் மதுரை மக்கள் இவரை அன்போடு 'பீட்டர் பாண்டியன்' என்றே அழைத்தனர்.
அவர் தினமும் காலையில் தனது குதிரையில் அமர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி வந்து, கோபுரத்தை நோக்கி மனதார வணங்கிய பிறகே தனது அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.
அந்த மாயச் சிறுமி - உயிர்காத்த அற்புதம்!
ஒரு முறை மதுரையில் கடும் மழை பெய்து, வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கலெக்டர் பீட்டர் தங்கியிருந்த இல்லத்தைச் சுற்றி நீர் சூழ்ந்தது. நள்ளிரவு நேரம்... திடீரென ஒரு சிறுமி அவர் அறைக்குள் தோன்றி, கையைப் பிடித்து வெளியே வருமாறு அழைத்தாள்.
பீட்டர் அந்தச் சிறுமியைப் பின்தொடர்ந்து வீட்டிற்கு வெளியே ஓடி வந்தார். அவர் வெளியே வந்த அடுத்த நிமிடம், அந்தப் பெரிய மாளிகை இடிந்து தரைமட்டமானது! தன்னை அழைத்த அந்தச் சிறுமியை அவர் தேடிப் பார்த்தபோது, அவள் மர்மமான முறையில் மறைந்துவிட்டாள். அவள் சென்ற திசை அன்னை மீனாட்சியின் கோவிலை நோக்கியே இருந்தது.
காணிக்கையாக வந்த 'தங்கக் காலணிகள்':
தன்னைச் சிறுமி வடிவில் வந்து காப்பாற்றியது அன்னை மீனாட்சியே என்று நம்பிய பீட்டர், அதற்கு நன்றிக்கடனாக அம்மனுக்கு வைரங்கள் மற்றும் நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்கப் பாதுகைகளை காணிக்கையாக அளித்தார்.
இதில் 412 சிவப்புக் கற்கள், 72 மரகதங்கள், 80 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இன்றும் இவை 'பீட்டர் பாதுகைகள்' என்றே அழைக்கப்படுகின்றன.
மதுரை சித்திரைத் திருவிழாவின் 5-ஆம் நாளில், அன்னை மீனாட்சி குதிரை வாகனத்தில் வரும்போது இந்தப் பாதுகைகளை அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
அன்னையின் அருளுக்கு ஜாதி, மதம், மொழி என எந்தப் பேதமும் இல்லை என்பதற்கு இந்த வரலாறே ஒரு சாட்சி!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
ரிஷபம்
கலை பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெரிவுகள் பிறக்கும். வெளியூர் பயணத்தில் இருந்து வந்த தாமதங்கள் மறையும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மிதுனம்
புத்தி கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனை தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாக நிறைவு பெறும். விளையாட்டு சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் காணப்படும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
சில அனுபவம் மூலம் சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். கல்வி சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் எண்ணங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் புதுமைகள் மூலம் லாபத்தை அடைவீர்கள். உடன் இருப்பவர்களால் நிம்மதி ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். கலைதுறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வரவுகளை மேம்படுத்துவது குறித்த எண்ணங்கள் கைகூடும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி
வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பயனற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும். வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். குடும்ப விவகாரங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சமூகப் பணிகளில் அறிமுகங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுத்து செல்லவும். கண்களில் எரிச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விருச்சிகம்
குழந்தைகள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மறைமுகமான சில விஷயங்களை அறிவீர்கள். கால்நடைகளிடம் கவனத்துடன் இருக்கவும். சிந்தனை போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
தனுசு
வெளியூர் பயணங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். வர்த்தக தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மறதிகள் விலகும். மனதில் எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். புதிய முயற்சியால் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபிட்சம் ஏற்படும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உலகியல் நடவடிக்கைகளால் மனதில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஆடம்பர பேச்சுகளை நம்பி முதலீடுகளை செய்வதை தவிர்க்கவும். விளையாட்டான பேச்சுகளை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 11 ஆம் தேதி வியாழக்கிழமை 25.6.2026.
இன்று இரவு 10.59 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று இரவு 07.33 வரை சுவாதி. பின்னர் விசாகம்.
இன்று பிற்பகல் 02.12 வரை சிவம். பின்னர் சித்தம்.
இன்று காலை 10.22 வரை வணிசை. பின்னர் இரவு 10.59 வரை பத்திரை. பிறகு பவம்.
இன்று அதிகாலை 05.54 வரை சித்தயோகம். பின்னர் இரவு வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை









