·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 1037
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் (திருநள்ளாறிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில்) அமைந்துள்ள அம்பகரத்தூர் ஸ்ரீ அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் திருக்கோயில் தென்னிந்தியாவின் மிக சக்திவாய்ந்த காளி திருத்தலங்களில் ஒன்றாகும்.

தல வரலாறு

புராணங்களின்படி, அம்பன் மற்றும் அம்பரன் (அம்பராசுரன்) என்ற இரு கொடுங்கோல் அசுர சகோதரர்கள் முனிவர்களையும் மக்களையும் கடுமையாகத் துன்புறுத்தி வந்தனர். அவர்களின் கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் சிவபெருமானிடம் மக்கள் முறையிட்டபோது, பத்ரகாளியாக அவதரித்த அன்னை அசுரர்களை அழிக்க முற்பட்டாள்.

காளிதேவி முதலில் 'அம்பன்' என்பவனைத் தனது ஆங்காரக் கூச்சலாலேயே வதம் செய்தாள். தப்பியோட முயன்ற 'அம்பரன்' எருமை வடிவமெடுத்து மாயங்கள் செய்ய, காளிதேவி அவனைத் துரத்திச் சென்று தன் திருவடியால் மிதித்து, திரிசூலத்தால் மார்பைப் பிளந்து வதம் செய்தாள். அசுரனான அம்பரனைச் சம்ஹாரம் செய்த இடம் என்பதால் இவ்வூர் 'அம்பரகரம்' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் 'அம்பகரத்தூர்' என உருப்பெற்றது.

கோவிலின் தனித்துவமான சிறப்புகள்

வடதிசை நோக்கிய அஷ்டபுஜ திருக்கோலம்: அன்னை எட்டுத் திருக்கரங்களுடன் (அஷ்டபுஜம்) வடதிசை நோக்கி, உக்ர ரூபிணியாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

அசுர சம்கார தோற்றம்: அன்னையின் வலது பாதம் மடிக்கப்பட்டு, இடது பாதம் அசுரன் அம்பரன் மீது ஊன்றப்பட்ட நிலையில், அவனது மார்பில் திரிசூலம் பாய்வது போன்ற பிரம்மாண்டமான கோலத்தில் காட்சி தருகிறாள்.

18 மீட்டர் வெள்ளை ஆடை அணிவிப்பு: இத்தலத்தில் காளியம்மனுக்கு எப்போதும் 18 மீட்டர் நீளமுள்ள வெள்ளைப் புடவை (வெள்ளைத் துணி) சாற்றப்படுவது மிகவும் அபூர்வமான சிறப்பம்சமாகும். பக்தர்கள் நேர்த்திக்கடனாக இந்த வெள்ளை ஆடைகளை வழங்கி வழிபாடு செய்கின்றனர்.

மகிஷாசுர வதப் பெருவிழா: வைகாசி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை அன்று இங்கு நடைபெறும் 'மகிஷாசுர வதம்' பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

உபசன்னதிகள்: இக்கோவிலில் காளீஸ்வரர், பெத்தண்ணர் மற்றும் பேச்சியம்மன் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

தரிசன பலன்கள் & வழிபாட்டு பயன்கள்

செய்வினை, பில்லி-சூனியம் அகலுதல்: காளிதேவியின் உக்ர அம்சம் காரணமாக, பக்தர்களைப் பிடித்துள்ள செய்வினை கோளாறுகள், ஏவல், பில்லி-சூனியம் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகும்.

ராகு-கேது மற்றும் செவ்வாய் தோஷ நிவர்த்தி: வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு செய்வதும், எலுமிச்சை தீபம் ஏற்றுவதும் ஜாதக ரீதியிலான ராகு-கேது மற்றும் செவ்வாய் தோஷங்களைக் குணப்படுத்தும்.

பய உணர்வு நீங்கி தைரியம் பெறுதல்: மன பயம், மன அழுத்தம், எதிரிகள் தொல்லை ஆகியவற்றால் அவதிப்படுபவர்கள் இத்தல காளியை தரிசித்தால் மனதிடமும் எதிரிகளை வெல்லும் தைரியமும் கூடும்.

திருமணத் தடை மற்றும் தொழில் வளர்ச்சி: ஆடி மற்றும் தை மாதங்களின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் விளக்கு பூஜையிலும், செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகளிலும் பங்கேற்றால் திருமணத் தடைகள் நீங்கி, தொழிலில் பெரும் விருத்தி உண்டாகும்.

  • 21
  • 23

அழகு என்பது முகத்தில் இல்லை…

மனதில் மலரும் மனிதநேயத்தில் இருக்கிறது,

இனிமையாகப் பேசுவது எளிது;

உண்மையாக அன்பு காட்டுவது அரிது,

பிறர் கண்ணீரின் காரணத்தை கேட்கும் இதயமே அழகானது,

துன்பத்தில் தவிக்கும் ஒருவருக்கு துணையாக நிற்பதே உயர்ந்தது,

எதையும் எதிர்பாராமல் உதவும் கரங்கள் தான் அழகின் அடையாளம்,

பிறர் வலியைத் தன் வலியாக உணர்பவர்களே உலகின் அழகான மனிதர்கள்!

  • 24
·
Added article

கன்னடத் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கி, தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் சைத்ரா ஜே ஆச்சர். இணையத்தில் எப்போதும் ஆக்வாக இருக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவர்ச்சிகரமான லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போலப் பரவி வருகின்றன.

2019-ஆம் ஆண்டு வெளியான 'மஹிரா' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார் சைத்ரா ஜே ஆச்சர். அதைத் தொடர்ந்து, அகில இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற '777 சார்லி' திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவரின் சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் இவர் முதன்மை வேடத்தில் நடித்து வெளியான 'டோபி' திரைப்படம், இவருக்கு விமர்சன ரீதியாக நல்ல பெயரையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.

கன்னட திரைப்படங்களில் அடுத்து அடுத்து நடித்து வந்த இவர், தமிழில் தேவயானி நடித்த '3 BHK' படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்திற்கு பின், நடிகர் சசிகுமார் நடிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான 'மை லார்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக சசிக்குமாருக்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் எதுவுமே தெரியாத ஒரு கிராமத்து பெண் ரோலில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சைத்ரா ஜே ஆச்சர். இந்த படம் இவருக்கு ஒரு அடையாளத்தை பெற்றுத்தந்தது.

மூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாகவும் துடிப்புடனும் இயங்கி வரும் சைத்ரா ஜே ஆச்சர், அவ்வப்போது தனது விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட்டில், அடர் சிவப்பு நிறப் பாவாடை மற்றும் அதற்குப் பொருத்தமான மேலாடையில் போஸ் கொடுத்துள்ளார். தலையில் துப்பட்டாவை முக்காடிட்டும், குத்தவைத்து அமர்ந்தபடியும் மாடர்ன் மற்றும் பாரம்பரியம் கலந்த பாணியில் போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த வசீகரமான தோற்றமும், கம்பீரமான பார்வையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இந்தப் புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் லைக்குகளையும், இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.

  • 34
·
Added article

பிரபல நடிகை விஜயலட்சுமி சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். தற்போது இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள மாடர்ன் கிளாசிக் ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் தடம் பதித்த விஜயலட்சுமி, வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான 'சென்னை 28' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'சுல்தான் தி வாரியர்' என்ற அனிமேஷன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதற்காக சில நாட்கள் ரஜினியுடன் இணைந்து நடித்த நிலையில், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது.

தொடர்ந்து மிஷ்கினின் அஞ்சாதே, வெண்ணிலா வீடு, அதே நேரம் அதே இடம் மற்றும் சமீபத்தில் வெளியான மிடில் கிளாஸ் போன்ற படங்களில் நடித்துத் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். இவர் தமிழ் பிக்பாஸ் சீசன் 2ல் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலந்து கொண்டு, ரசிகர்களின் ஆதரவை பெற்று இறுதிப் போட்டி வரை முன்னேறி, இரண்டாம் இடத்தை பிடித்தார்.

43 வயதாகும் விஜயலட்சுமி, இயக்குநர் பெரோஸ் முகமதுவை நீண்ட காலம் காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நிலன் என்ற 9 வயது மகன் உள்ளான். திருமணம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்தபோதிலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்து வருகிறார்.

  • 36
·
Added article

நடிகர் கவின் தான் நடிகை நயன்தாராவுடன் நடிப்பேன் என கனவிலும் நினைத்ததில்லை என்று பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தினை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

தொலைக்காட்சி தொடர்களில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்திருக்கும் நடிகர் கவின் நயன்தாரா உடன் முதல்முறையாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில், முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர் பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ் போன்றவர்கள் நடித்துள்ளனர்.

நேற்று டிரைலர் வெளியான நிலையில், இந்தப் படம் வரும் ஆக. 28 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கவின் பேசியிருப்பதாவது:

பொதுவாகவே நான் கமெண்ட்ஸ்களை படிப்பதில்லை. ஆனால், இந்தப் படத்தின் அறிவிப்பின்போது ஒருவர் ’சீரியலில் நடித்திருந்த கவின் நயன்தாரா நடிப்பான் என ஒருநாளும் நினைத்திருக்க மாட்டான்’ எனக் கமெண்ட் செய்திருந்தார்.

இதே தியேட்டரில் யாரடி நீ மோகினி படத்தினை நானும் எனது நண்பர்கள் 23 பேரும் பார்த்தோம். நிச்சயமாக அந்த கவின் நயன்தாரா உடன் நடிப்பாரென நினைத்திருக்கமாட்டான். நயன்தாரா உடன் நடிப்பது என்பது எனது பக்கெட் லிஸ்ட்டில் கூட இல்லை. பக்கெட்டுக்கு வெளியே இருக்கிறது. நாமும் நன்றாகத்தான் உழைத்திருக்கிறோம் போல் என நினைத்துக்கொண்டேன் என்றார். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • 40
·
Added article

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி (வயது 94) வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு. 21) காலமானார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இதய நோய் பாதிப்புக்காக நடிகை செளகார் ஜானகி வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் இதயத் துறை நிபுணர்களின் கண்காணிப்பில் செளகார் ஜானகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1950ஆம் ஆண்டு, ’ஷாவுகாரு’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான செளகார் ஜானகி, 70 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

என்.டி. ராமா ராவ், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், ராஜ்குமார், நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட தென்னிந்திய ஜாம்பவான்களுக்கு ஜோடியாக செளகார் ஜானகி நடித்துள்ளார்.

புதிய பறவை (1964), நீர்க்குமிழி (1965), மகாகவி காளிதாஸ் (1966), எதிர் நீச்சல் (1968), இரு கொடுகள் (1969), உயர்ந்த மனிதன் (1968), காவிய ராவணம் (1970), தில்லு முல்லு (1981), வெற்றி விழா (1989), தேவி (1999), ஹே ராம் (2000) உள்ளிட்ட படங்கள் செளகார் ஜானகிக்கு புகழ் சேர்த்தன.

தமிழில் கடைசியாக, 2020ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் செளகார் ஜானகிக்கு 400-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளை செளகார் ஜானகி பெற்றுள்ளார்.

  • 38
  • 40
  • 40
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவுகள் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்வீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தொழிலில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

மிதுனம்: புதியவர்கள் நண்பர்களாவர். பணவரவு திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கடகம்: குடும்பத்தில் நிலவி வந்த காரசார விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்புயரும். நல்லவர்களின் நட்பு கிட்டும். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர். பங்குதாரரின் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர். அலுவலகத்தில் உயரதிகாரி ஆதரிப்பார்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர் நட்பு கிட்டும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

கன்னி: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர். புதிய பங்குதாரர் ஆதரவுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

துலாம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பணிகளை பகிர்ந்து கொள்வர். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவி கிட்டும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.

விருச்சிகம்: மனக்குழப்பம், அலைச்சல் வந்து போகும். மனைவி, பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

தனுசு: தாழ்வு மனப்பான்மை நீங்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்ற முயற்சிப்பீர்கள். பழைய நண்பர்கள் உதவி நாடி வருவர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மகரம்: மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். புதுவழி பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம்.

கும்பம்: இழுபறியாக இருந்து வந்த கட்டுமானப் பணிகள் முடிவடையும். தொட்டது துலங்கும். தடைகள் விலகும். அரசு தொடர்பான காரியங்கள் உடனடியாக நிறைவேறும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்.

மீனம்: பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து கவலைப்பட வேண்டாம். உடல்நலத்தை கவனித்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

  • 148
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 21.8.2026.

இன்று முழுவதும் நவமி.

இன்று பிற்பகல் 02.45 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

இன்று காலை 07.56 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.

இன்று பிற்பகல் 12.43 வரை பாலவம். பின்னர் கௌலவம்.

இன்று பிற்பகல் 02.45 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=624&dpx=2&t=1787284053

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 153

அம்பாளின் பாதம் பணிந்து இன்றைய நாள் நமது அனைத்து வேலைகளும் இனிதாக நடைபெற வேண்டுவோம்.

  • 149

Good Morning...

  • 148
·
Added a news

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள வால்போல் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் பகுதியில் பல மாதங்களாக நடைபெற்ற தீவிர போதைப்பொருள் கடத்தல் தடுப்பு விசாரணையை அடுத்து, லண்டன் நகரைச் சேர்ந்த 3 பேரை ஒண்டாரியோ மாகாண காவல்துறை கைது செய்துள்ளது.

'புராஜெக்ட் பிரேக்' எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் முடிவுகளை, வால்போல் ஐலண்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறையினர் முறைப்படி அறிவித்தனர்.

பல்வேறு தென்மேற்கு ஒன்ராறியோ சமூகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில், சுமார் 1.2 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஃபெண்டானில், கொக்கைன், மெத்தாம்பெட்டமைன் ஆகிய ஆபத்தான போதைப்பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 5 திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் சுமார் 20,000 கனடிய டாலர் ரொக்கம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 2026 ஏப்ரல் மாதம் வால்போல் ஐலண்டில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியது.

லேம்ப்டன் மற்றும் சாதம்-கென்ட் பகுதிகளில் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த குழுவைக் குறிவைத்து ஜூலை 17 அன்று சோதனைகள் நடத்தப்பட்டு 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த போதைப்பொருட்கள் கனடாவிற்குள்ளேயே விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சமூகத்தின் பாதுகாப்பைப் பேணவும், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என வால்போல் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் தலைவர் லீலா தாமஸ் தெரிவித்துள்ளார்.

  • 249
  • 247
  • 246
  • 246
·
Added article

மலையாள நடிகையான அன்னா ராஜன், சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது இவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பாவாடை ஜாக்கெட்டுடன் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள நடிகையான அன்னா ராஜன், நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

அப்போதும் சர்ச்சைக்குரிய நடிகையாக இருக்கும் இவர், சில தினங்களுக்கு முன்பு, தன்னுடைய புகைப்படங்களை சிலர் தவறான நோக்கத்தில் மார்ஃபிங் செய்து, நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இணையத்தில் பரப்பியதாக அன்னா ராஜன் வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்தச் செயல் எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தவறான நோக்கில் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பரப்புபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, கேரளக் காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகளைத் டேக் செய்து புகாரளித்திருந்தார்.

மார்ஃபிங் சர்ச்சை ஓய்வதற்குள், கேரளாவில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் அன்னா ராஜன் கலந்துகொண்டபோது அவர் அணிந்து வந்த உடை புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பச்சை பாவாடை ஜாக்கெட் மட்டுமே அணிந்து அந்த விழாவிற்கு வந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ஒரு பொது நிகழ்ச்சிக்கு இப்படிப்பட்ட ஆடையை அணிந்து வருவது முறையா? எனப் பலரும் முகம் சுளிக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதேவேளையில், அன்னா ராஜனுக்கு ஆதரவாக, ஒருவர் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை மற்றும் விருப்பம். அதைப் பற்றித் தேவையில்லாமல் விமர்சிப்பதும், தேவையில்லாத விவாதங்களை உருவாக்குவதும் முற்றிலும் தவறானது. என்று அன்னா ராஜனின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சிலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். பொது நிகழ்ச்சிக்கு நடிகை அன்னா ராஜன் அணிந்து வந்த ஆடை விவகாரத்தாலும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவிலான டிரெண்டாகி வருகிறது.

  • 253
·
Added article

பாலிவுட் நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத், தன்னைச் சுற்றி எழும் விமர்சனங்களுக்கு அதிரடியாக பதிலளிப்பதில் பெயர் பெற்றவர். அரசியல், சினிமா என எந்த விவகாரமாக இருந்தாலும் தனது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்து வரும் கங்கனா, இந்த முறை யோகா குரு பாபா ராம்தேவை கடுமையாக விமர்சித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தைப் போர் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது சில மாணவர்கள் பயன்படுத்திய அவதூறான வார்த்தைகள் குறித்து கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, அந்த மாணவர்களை "சாக்கடைத் தலைமுறை" என்று அவர் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பாபா ராம்தேவ் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கங்கனாவின் தகுதி, குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து பாபா ராம்தேவின் கருத்து கங்கனாவின் கவனத்திற்கு சென்ற நிலையில், அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமாக பதிலளித்துள்ளார்.

என் இளமை, படுக்கையறை பற்றி கனவு காணாதீங்க: கங்கனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாபா ராம்தேவை குறிப்பிட்டு, "பாபாஜி, எனது இளமைப் பருவம் அல்லது படுக்கையறை குறித்து கனவு காணாதீர்கள். வெறும் வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களை வைத்து மட்டுமே ஒருவரால் இப்படி யூகிக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தொடர்பாக எழுந்த சர்ச்சையையும் சுட்டிக்காட்டிய கங்கனா, தனக்கு ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்க வேண்டாம் என்றும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

"போலி மருத்துவ உரிமைகோரல்களுக்காக உச்ச நீதிமன்றத்தால் நான் ஒருபோதும் கண்டிக்கப்படவில்லை. இது உறுதியான ஆதாரங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையிலானது, வதந்திகளின் அடிப்படையில் அல்ல. எனவே எனக்கு ஒழுக்கத்தைப் பற்றி பாடம் நடத்த வேண்டாம். உங்களை விட எனது குணம் எவ்வளவோ மேலானது. இங்கு எந்த ஏமாற்று வேலையும் இல்லை" என்றும் கங்கனா தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனியார் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கங்கனாவின் "சாக்கடைத் தலைமுறை" என்ற கருத்து குறித்து பாபா ராம்தேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அவருடைய தகுதி என்ன? அவரது குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் எப்படி இருந்தது? அவரது முந்தைய செயல்கள் எப்படி இருந்தன? இதுபோன்ற நபர்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை" என்று கூறியிருந்தார்.

நாட்டின் இளைஞர்களையும் ஜென்-இசட் தலைமுறையினரையும் சாக்கடை என்று அழைப்பது தவறானது என்றும் பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார். "நாட்டின் இளைஞர்களையும், ஜென்-இசட் சமூகத்தினரையும் சாக்கடை என்று சொல்வது சீரழிந்த மனநிலையின் அடையாளம். இது தவறான விஷயம். கங்கனாவின் இந்த அறிக்கை குறித்து அவரது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.

  • 253
·
Added article

நடிகை ரெஜினா தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்தவர். இப்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது. கடைசியாக தமிழில் அவர் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதேசமயம் ரெஜினாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் அவரது சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் ஆண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் பிறந்தவர் ரெஜினா. நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்த அவர் கண்ட நாள் முதல் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, கன்னடத்தில் வெளியான சூரியகாந்தி, தெலுங்கில் வெளியான சிவா மனசுலோ ஸ்ருதி உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

அந்த படத்தின் மூலம் அடையாளம் கிடைத்ததை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படிதான் அமைந்தது. அதன்படி அவர் ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, தலைவியில் கெஸ்ட் ரோல் என பல படங்களில் நடித்தார். ஆனால் அவற்றில் ராஜதந்திரம், மாநகரம் தவிர்த்து மற்ற படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை.

தொடர்ந்து கருங்காப்பியம், கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு; பம்பர் பரிசாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அர்ஜுனுக்கு ஜோடியாக வில்லத்தனமான நடிப்பில் மிரட்டியிருந்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அது கொஞ்சம் அவருக்கு ஏமாற்றம்தான். அதேசமயம் அவரது லுக்குக்கும், நடிப்புக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது மட்டும் கொஞ்சம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.

அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் கேசரி பார்ட் 2, ஜாத் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவையும் பெரியளவு அவருக்கு கைகொடுக்கவில்லை. கடைசியாக தமிழ், மலையாளத்தில் வெளியான ஆனந்தன் காடு படத்தில் நடித்தார். அடுத்ததாக தமிழில் பிளாஷ்பேக், மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படங்கள் வரவிருக்கின்றன.

இந்நிலையில் ரெஜினாவின் பேட்டி ஒன்று ஆண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரெஜினா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "நான் சொல்லபோவது ஏ விஷயம்தான். மேகியும், ஆண்களும் ஒன்றுதான். இரண்டுமே இரண்டு நிமிடங்கள் மட்டும்தான்" என்று டபுள் மீனிங்கில் பேசினார். இதைப் பார்த்த நெட்டிசன்களோ ...... ரெஜினா என்ன இப்படி சொல்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறர்கள்.

  • 255
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வரலாம். வியாபாரத்தில் குழப்பங்களை தீர்க்க வழி கிட்டும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் அலைச்சல் உண்டு.

ரிஷபம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். முன்கோபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

மிதுனம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கையில் பணம் புரளும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். அலுவலகரீதியாக இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். லாபமுண்டு.

கடகம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும்.

சிம்மம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அலுவலகத்தில் விவாதங்களைத் தவித்துவிடவும்.

கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

துலாம்: முன்கோபம் விலகும். தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களுடன் விவாதங்கள் வேண்டாம். பயணங்கள் அலைச்சல் தரும். திட்டமிட்ட பணிகளை முடிக்க போராடுவீர். வியாபாரத்தில் முடிவு எடுப்பதில் அவசரம் கூடாது. அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

தனுசு: பணவரவு உண்டு. பெற்றோரின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மனவலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மகரம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். முன்கோபத்தை குறைப்பீர். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பம் நீங்கும். அதிக லாபம் ஈட்டும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: பூர்வீக வீடு, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்பீர். நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து முக்கிய முடிவு எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்.

  • 349
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை 20.8.2026.

இன்று இரவு 11.49 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று பிற்பகல் 12.26 வரை விசாகம். பின்னர் அனுஷம்.

இன்று காலை 07.35 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்.

இன்று காலை 10.00 வரை பத்திரை. பின்னர் இரவு 11.49 வரை வணிசை. பிறகு பாலவம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=623&dpx=2&t=1787196448

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 354
·
Added a post

பொதுவாக பிடிவாத குணமுடைய பெண் மனைவியாக அமைந்தால் வாழ்க்கை மிகவும் மோசமாக ஆகிவிடும் என்று சில ஆண்கள் கருதுகிறார்கள்.

கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். அது போல பிடிவாத குணம் உடைய பெண்களிடம் தான் சிறந்த மனைவியாக திகழும் தன்மை இருக்கிறது. அவர்கள் பிடிவாதம் பொருட்களை வாங்குவதில் மட்டும் இருக்காது, வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கும்.

இல்லத்தரசிக்கு தேவையான அனைத்து குணாதிசயங்களும் பிடிவாத பெண்களிடம் இருக்கும்.

தனக்கு என்ன வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் பெண்கள், வேண்டாதவை மீது ஆசைப்படமாட்டார்கள். அதே போன்று வேண்டுவதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

ஒரு விஷயத்தின் மீது வைக்கும் அவர்கள் காதல் மிகவும் அழகாகவும், நேர்மையாகவும் இருக்கும்.

பிடிவாத குணமுடைய பெண்கள் அழுதாலும், கோபப்பட்டாலும், அன்பு காட்டினாலும் முழு மனதுடன் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்கள்.

நீங்களே சோர்வுற்று நின்றாலும், உங்களை பிடிவாதமாக அச்செயலில் ஈடுபட்டு உங்களை வெற்றி பெற வைப்பார்கள்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதை முகத்திற்கு நேராக பேசிவிடுவார்கள், இதன் காரணமாக சண்டை எழலாம், ஆனால் அது சுமூகமாக முடிந்துவிடும். தொடர்ந்து கொண்டே இருக்காது.

சுவாரஸ்யமானவர்கள் பிடிவாத குணம் இருப்பினும் கூட, சின்னச்சின்ன சண்டைகள், சச்சரவுகள், கடுமையான நேரத்தில் கவலைகள் மறக்க செய்யும். இவர்களது லூட்டிகள் சற்றே சுவாரஸ்யமானதாகவே இருக்கும்.

பிடிவாதம் இருக்கும் அதே அளவிற்கு இவர்களிடம் அனுதாபமும் இருக்கும். சூழ்நிலை புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்பை அதிகரித்து கொள்வார்கள்.

பிடிவாத குணமுடையவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அதன் காரணமாக உங்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் நடந்து கொள்வார்கள்.

இவர்களது பேரார்வம் வேலை, மற்றும் இல்வாழ்க்கை விஷயங்களிலும் கூட தொடரும். இதனால், எந்த திட்டத்தை நிறைவேற்றுவதில், வீடு, பொருட்கள் , சேமிப்பு போன்றவற்றிலும் கூட இவர்கள் சீராக நடந்து கொள்வார்கள்.....

  • 361

Good Morning...

  • 356