·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 1070
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திருமால் கருடனை பார்த்து கேட்டார் "இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர் கருடா...?" என்று.

அதற்கு சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார் "மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகா பிரபு" என்றார்.

மகாவிஷ்ணு "என்ன மூன்று விதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான மக்கள் தானா உள்ளார்கள்" என்று கேட்டார்.

"மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்...? என்னை வைத்து என்ன நாடகமோ தெரியவில்லை...? ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்று விதமான மக்கள் தான் உள்ளனர்" என்று கூறினார் கருடன்.

"அப்படியானால் அவர்களைக் கூறு பார்க்கலாம்" என்றார் மகாவிஷ்ணு.

கருடன் சொன்னார்

"பிரபு முதல் வகையினர்: பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.

இரண்டாம் வகையினர்: பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர்.

மூன்றாம் வகையினர்: கணவனும் மனைவியும் போல் உள்ளனர் அவ்வளவு தான் மகா பிரபு" என்றான்.

மகாவிஷ்ணு சும்மா விடுவாரா !!! "சற்று விளக்கமாக புரியும்படி சொல்" என்றார்.

சொல்ல துவங்கினார் கருடன்

"முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும் எப்படியென்றால் ...

பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலையெல்லாம் படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும். அதுபோல் குஞ்சுகளுக்கும் தன் வாயில் ஊட்டப்படும் உணவு தான் தெரியும், தன் தாய் யார், தகப்பன் யார் போனது வருமா வராதா எதுவும் தெரியாது, நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும், மீந்து போன பறவை வாழும் வரை வாழும், அவ்வளவு தான்...

இந்த வகை மனிதர்கள் இது போலத்தான் ஏழ்மையுடன் போராட்டம், கூலி வேலை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையா பட்டினி கிடப்பார்கள், அவர்களுக்கு உன்னைப் பற்றியே கூட தெரியாது. வாழ்வார்கள், வாழும் வரை அவ்வளவு தான்.

இரண்டாவது பசுவும் கன்றும் எப்படியென்றால்...

பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும், அதன் கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும், கன்றுவுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று. ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது, கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும்.

அது போல ஒரு சாராருக்கு உன்னைத் தெரியும், உன் வழி தெரியும், உன்னால் தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும், ஆனாலும் உன்னிடம் வர முடியாமல் பாசம் என்ற ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கொண்டு உன்னை பார்த்து பார்த்து ஏங்கி தவிக்கும்.

மூன்றாவது கணவனும் மனைவியும் எப்படியென்றால்...

முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி போவான், ஆனால் அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்கு பிடித்த வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு சமைத்து, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு அவனைக் கவர்ந்து தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள், முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான், அவளை பிரிய மறுக்கிறான், பிரசவத்திற்கு அனுப்பி விட்டு இவனும் பின்னாலேயே செல்கிறான்.

அது போல ஒரு சாரார் உன்னை கண்டதில்லை, ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக உணர்த்தப்பட்டு உன்னை காண முற்படும் வேளையில், உனக்கு பிடித்த உடை, உணவு, அலங்காரம் என்று தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். முதலில் சோதிக்கும் நீ எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகிறாய், எங்களோடு உறவாடுகிறாய், முடிவில் உன்னோடு எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறாய் நாங்களும் ஆனந்தமாக உன்னோடு கலந்து விடுகிறோம் ஆக மூன்று விதமான மனிதர்கள் தான் உலகில் உள்ளனர் என்றார் கருடன்.

மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு கருடனை வாழ்த்தி தன்னுள் ஏற்றுக் கொண்டார்.

  • 11
·
Added article

🌹ஓவர் ஆக்டிங் என கிண்டலடித்த சோ!.. ரூமுக்கு கூட்டிச்சென்று சிவாஜி என்ன செய்தார் தெரியுமா?..

🌹சிவாஜி கணேசன் மிகையாக நடிக்கிறார் அதாவது ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது பலரும் வைப்பதுண்டு. அவருடன் நடித்த சில நடிகர்களும் அதை கூறியதுண்டு. ஆனால், சிவாஜி தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. ஒருமுறை நடிகர் சோ ராமசாமியுடன் ஒரு படத்தில் சிவாஜி நடித்துக்கொண்டிருந்தார். ஒரு காட்சியில் சிவாஜி நடிப்பை பார்த்து படப்பிடிப்பு தளத்தில் இருந்த பலரும் கைதட்டி பாராட்டியுள்ளனர்.,

🌹ஆனால், சோ மட்டும் அமைதியாக இருந்தாராம். அதை பார்த்துவிட்ட சிவாஜி சோ-வை அங்கிருந்த ஒரு அறைக்க அழைத்து சென்று பேசினாராம்.

‘🌹நான் அடித்த அந்த காட்சி உனக்கு பிடிக்க வில்லை.இல்லையா?’ என சிவாஜி கேட்க ‘ஆமாம் சார். ஓவர் ஆக்டிங் போல இருந்தது’ என்றாராம் சோ. அதற்கு சிவாஜி ‘வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் நான் பேசுவது பிடித்திருந்ததா?’ என கேட்டாராம். அதற்கும் சோ ‘பிடித்திருந்தது. ஆனால், அதிலும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருந்தது’ என சொன்னாராம்.

🌹அப்போது பேசிய சிவாஜி ‘நான் சோவுக்கு பிடிப்பது போல் நடித்தால் மக்களிடம் செல்ல முடியாது. பொதுவான ரசிகருக்கு என ஒரு அளவு இருக்கிறது. அதை கொடுத்தால்தான் நான் மக்களிடம் சென்றடைய முடியும்’ எனக்கூறிவிட்டு அந்த கட்டபொம்மன் காட்சியை நான்கு விதமாக நடித்து காட்டினாராம். ஹாலிவுட் நடிகர் போல் ஒன்றையும், சோ நடித்தால் அந்த காட்சி எப்படி இருக்கும் என்பதையும் சிவாஜி நடித்துக்காட்ட பிரமித்துப்போன சோவுக்கு கண்ணில் கண்ணீரே வந்துவிட்டதாம். அதன்பின் சிவாஜியை எங்கேயும் ஓவர் ஆக்டிங் என சோ சொல்வது இல்லையாம்.

  • 17
·
Added a post

அப்போது காமராஜர் தமிழக முதல்வர்.

மண்ணாங்கட்டிக்கு கோபம். "என்னங்கய்யா நீங்க... இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு

100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா," என்று பதிலுக்கு சத்தம் போட்டார்.மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி.அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துக் காட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். 'அரசாங்க உத்தியோகத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்," என்று முதல்வர் காமராஜர் போட்ட உத்தரவுதான்

அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். மூக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்டார் தேவர். "இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா..." என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார்.

ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று "முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்," என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசி வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்.

மண்ணாங்கட்டி புக் செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். "யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்?" என்கிறார்.அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா...", என்றபடியே அருகில் இருந்த மூக்கையா தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. "எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா" என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல், "ஐயா, எழுதப் படிக்கத் தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ, நான் பியூனா இருக்ககூடாதான்னு தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க," என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை...

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்து விட்டார்கள். "முதல்வருக்கு போன் செய்தது யார்?" என்றார்கள்.

"நான்தான் ஐயா" என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி.

"முதல்வர் உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள்," என்று சொல்லி விட்டு நின்றார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வருடன் புரிகிறது. மூக்கையா தேவருக்கும் பதட்டம்.

மண்ணாங்கட்டி, "ஐயா நீங்களும் வாங்க," என்று அழுகிறார்.

"பின்னாடியே வருகிறேன். நீ போப்பா," என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜரை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதல்வரின் அறையில் உள்ள சோபாவில், கன்னத்தில் கை வைத்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர்.

கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.

"நீங்கதான் மண்ணாங்கட்டியா...", என்கிறார்.

"ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா," என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்குப் பிடிக்காது. அதிகாரிகளைப் பார்க்க, உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள்.

அவரைப் பார்த்து, "வா...வான்னேன். வந்து பக்கதில உட்காரு," என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கித் தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்

பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்துக் கும்பிட்டு, "நான் தப்பு பண்ணிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரிய வைச்சே... ரெண்டு நாளா உங்கவீட்ல சோறு தண்ணியில்லியாமே. சமைக்கலயாமே.... உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க... எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.. எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கக் கூடாது.

இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்'னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல, மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை.

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளைப் பார்த்து 'இவரை அழைத்துக்

கொண்டு போங்க. 'வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க'ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார்.

பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி, "போகிற

போது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்," என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பி வைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, ஏழை மக்களுக்காகவே கடைசி மூச்சுவரை வாழ்ந்தார்.

இனி இப்படி ஒரு முதல்வர் கிடைப்பாரா? என்பது தமிழகத்தில் நின்று நிலைத்துவிட்ட கேள்வி

  • 26
·
Added a post

மூணு பவுன்லே ஒரு செயின் வாங்கி தாங்கன்னு போனவருஷமே கேட்டேன்…. நீங்க ஏதேதோ சொல்லி மழுப்பினீங்க……இப்ப கேட்டா இதோ.. அதோன்னு சொல்லி ஏமாத்துறீங்க……

இனிமே…..நீ எப்படி சொன்னா புரிஞ்சிப்பேன்னு பார்த்து அப்படி சொல்றேன் செல்லம்…….

இனிமே இந்த அலம்பலும் வேணாம்…. புலம்பலும் வேணாம்…..உனக்கும் எனக்கும் ஒண்ணு இருக்கு இல்லே..,

ஆமா….. சொந்தம்…பந்தமுன்னு சொல்லிக்கஒரு பிள்ளை…. அதற்கென்ன….

போய்யா வெண்ணை….. நான் ஜாயிண்ட்அக்கௌண்ட்டை….சொன்னேன்

என்னடி செஞ்சே.. பாவி….

அதிலே மூணு லட்சம் எடுத்து செயின் வாங்கிட்டேன்….

அய்யயோ……அய்யகோ…

பெரிய புலவரு இவரு…. போய்யா டுபுக்கு…..

  • 28
·
Added a post

எம்ஜிஆர் அமைதியாக தன் அலுவலக அறைக்குள் அமர்ந்திருந்தார். ஆனால் அவரது அறைக்கு வெளியே ஏகப்பட்ட பரபரப்பு.

எம்ஜிஆருக்கு நெருக்கமான சில அதிகாரிகள் ஒன்றாக அமர்ந்து தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

'சீக்கிரமாக சில பெயர்களைத் தயார் செய்து, அதை சி.எம். மிடம் கொடுக்க வேண்டும்.' அதுதான் அவர்களது பரபரப்புக்கான காரணம்.

1984.

கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

என்ன பெயர் வைப்பது அந்தப் பல்கலைக்கழகத்துக்கு ?

எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர். எதுவும் அவருக்குத் திருப்தி தரவில்லை.

உடனடியாக அதிகாரிகளை அழைத்தார். பல்கலைக்கழக விஷயத்தைச் சொல்லி, நல்லதொரு பெயரைத் தேர்வு செய்து சொல்லும்படி கேட்டிருந்தார்.

ஒரு வழியாக அதிகாரிகளின் ஆலோசனை முடிந்தது. முதல்வரின் அறைக்குள் மெல்ல நுழைந்தார்கள். அடுக்கடுக்காக தாங்கள் எழுதி வைத்திருந்த பெயர்கள் அடங்கிய காகிதத்தை, எம்ஜிஆர் கைகளில் பணிவுடன் கொடுத்தார்கள்.

ஔவையார் பெயர் வைக்கலாம் என ஒரு சிலர் சொல்லியிருந்தார்கள்.

சுதந்திரத்திற்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் பரிந்துரைக்க,

இன்னும் சிலரோ எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

எல்லாவற்றையும் அமைதியாகப் படித்துப் பார்த்த எம்.ஜி.ஆர்., தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்து சொன்ன பெயர்...

அன்னை தெரசா !

எம்ஜிஆரைச் சுற்றியிருந்த

அதிகாரிகள் அனைவரும்

எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏனெனில் அதிகாரிகள் எழுதிக் கொடுத்த பட்டியலில் அந்தப் பெயர் இல்லை.

ஆம். எம்ஜிஆரின் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த பெயர்தான் அன்னை தெரசா !

இப்படித்தான் உருவானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.

Mother Teresa Women's University !

விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள் !

பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.

இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்.,

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஃபரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை அன்போடு தழுவி நிற்க ...

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.

இந்த வேளையில் எம்.ஜி.ஆரின் அரசியல் வழிகாட்டியான அண்ணா அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது :

“நான் கைலி கட்டாத முஸ்லிம்,

சிலுவை அணியாத கிறிஸ்துவன்,

திருநீறு அணியாத இந்து.”

அண்ணா சொன்ன இந்த வார்த்தைகளை, தன் வாழ்க்கைப் பாடமாக ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

இதை அறிந்த அன்னை தெரசா,

அந்த விழா மேடையிலேயே எம்ஜிஆரை மகிழ்ச்சியோடு வாழ்த்தி, மன நிறைவோடு ஆசி வழங்கினார்.

மத வெறியை தவிர்ப்போம்.

மனித நேயம் காப்போம்.

  • 33
·
Added a post

விதியை வெல்ல தினமும் காலையில் இந்த மூன்று பாடலையும் பாடினால் மிகச் சிறப்பு ஏற்படும் என்று பல பிரபல ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

மனம் உருகிப் பாடுகள் அபிராமி மனதில் இடம் பெறுங்கள். நல்லதே நடக்கும்

ிராமி_அந்தாதியில் குறிப்பிட்டுள்ள 40, 59 மற்றும் 75-வது பாடல்களின் வரிகள் மற்றும் அவற்றின் சுருக்கமான பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பாடல் 40 (#பூர்வ_புண்ணியம்_பலதர)

பாடல்:

வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்

பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்

காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு

பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.

பொருள்:

ஒளிதிகழும் நெற்றியில் கண்ணைக் கொண்டவளே, தேவர்கள் அனைவரும் வந்து வணங்க விரும்பும் எம்பெருமாட்டியே, அறியாமை கொண்ட நெஞ்சினருக்கு எளிதில் கிடைக்காதவளே, என்றும் கன்னித் தன்மையவளான உன்னை நினைக்கின்ற இந்த அன்பைப் பெறுவதே நாம் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனாகும்.

2. பாடல் 59 (#பிள்ளைகள்_நலம்_பெற)

பாடல்:

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே

நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்

அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்

பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.

பொருள்:

அபிராமித் தாயே! உன்னைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்று அறிந்தும் உன் தவநெறிகளை என் நெஞ்சில் முழுமையாக நினைக்கவில்லை. கரும்பு வில்லையும் மலர் அம்புகளையும் ஏந்தியவளே, பஞ்சு போன்ற மெல்லிய அடிகளை உடைய தாய்மார்கள், தம் குழந்தைகள் அறியாமை செய்தாலும் அவர்களை மன்னித்துக் காப்பது போல நீயும் என்னைக் காப்பாயாக. [1, 2]

3. பாடல் 75 (#விதியை_வெல்ல / #தீவினைகள்_நீங்க)

பாடல்:

தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி

மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை, மால் வரையும்

பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்

கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

பொருள்:

பெரிய மலைகளையும், உப்பு நிறைந்த கடல்களையும், பதினான்கு உலகங்களையும் தன் திருவுந்தியில் படைத்தவள் அபிராமி. மணம் வீழும் மலர்களை அணிந்த குழல் கொண்டவளான அந்த அன்னையின் திருமேனியைத் தங்கள் சிந்தையில் எப்போதும் நினைப்பவர்கள், தாயின் அரவணைப்பு இல்லாமலேயே கற்பக விருட்ச நிழலில் தங்கும் பேறு பெறுவார்கள்; மண்ணில் மீண்டும் பிறக்கும் பிறவித் துயரமும் நீங்கி அழிவற்ற நிலை அடைவார்கள்.

  • 36
·
Added a post

“என் ஹோட்டல் முழுமையாக இடிந்து போனாலும் பரவாயில்லை; ஒரு பயங்கரவாதி கூட உயிருடன் வெளியேறக் கூடாது…!” – ரத்தன் டாடாவின் உயர்ந்த உள்ளம்!

“என் ஹோட்டல் முழுமையாக இடிந்து போனாலும் பரவாயில்லை; ஒரு பயங்கரவாதி கூட உயிருடன் வெளியேறக் கூடாது…!” – ரத்தன் டாடாவின் உயர்ந்த உள்ளம்!

2008 நவம்பர் 26 அன்று மும்பை நகரத்தையும் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றபோது, இந்தியாவின் பெருமையாக விளங்கும் தாஜ் ஹோட்டலுக்கு நேரடியாகச் சென்ற ஒருவர் இருந்தார் — ஸ்ரீ ரத்தன் டாடா.

தனது உயிருக்கும் கடுமையான அச்சுறுத்தல் இருந்த அந்த நேரத்தில், பயங்கரவாதிகள் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தபோதும், நிலைமையை நேரில் மதிப்பிடுவதற்காக அவர் அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், தனது சொத்துக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் உறுதியுடன் கூறியதாகப் பரவலாகக் கூறப்படும் வார்த்தைகள்:

“என் ஹோட்டல் முழுவதுமாக அழிந்தாலும் பரவாயில்லை; நாட்டைத் தாக்க வந்த ஒரு பயங்கரவாதி கூட உயிருடன் வெளியேறக் கூடாது…!”

தனது தொழில், சொத்து, பொருளாதார இழப்பு ஆகியவற்றைக் காட்டிலும் நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் உயிருக்கும் அதிக முக்கியத்துவம் அளித்த உண்மையான தேசப்பற்றாளராக அவர் போற்றப்பட்டார்.

பின்னர் அந்தத் தாக்குதலில் உயிரிழந்த தாஜ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் குடும்பங்களைத் தனது குடும்பத்தைப் போல அரவணைத்து, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அவரது மனிதநேயமும் இன்றளவும் இந்திய மக்களால் நன்றியுடன் நினைவுகூரப்படுகிறது.

இந்தியாவின் உண்மையான ரத்தினம் — ஸ்ரீ ரத்தன் டாடாவுக்கு இதயம் நிறைந்த மரியாதைகள்!

2008 நவம்பர் 26 அன்று மும்பை நகரத்தையும் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றபோது, இந்தியாவின் பெருமையாக விளங்கும் தாஜ் ஹோட்டலுக்கு நேரடியாகச் சென்ற ஒருவர் இருந்தார் — ஸ்ரீ ரத்தன் டாடா.

தனது உயிருக்கும் கடுமையான அச்சுறுத்தல் இருந்த அந்த நேரத்தில், பயங்கரவாதிகள் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தபோதும், நிலைமையை நேரில் மதிப்பிடுவதற்காக அவர் அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், தனது சொத்துக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் உறுதியுடன் கூறியதாகப் பரவலாகக் கூறப்படும் வார்த்தைகள்:

“என் ஹோட்டல் முழுவதுமாக அழிந்தாலும் பரவாயில்லை; நாட்டைத் தாக்க வந்த ஒரு பயங்கரவாதி கூட உயிருடன் வெளியேறக் கூடாது…!”

தனது தொழில், சொத்து, பொருளாதார இழப்பு ஆகியவற்றைக் காட்டிலும் நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் உயிருக்கும் அதிக முக்கியத்துவம் அளித்த உண்மையான தேசப்பற்றாளராக அவர் போற்றப்பட்டார்.

பின்னர் அந்தத் தாக்குதலில் உயிரிழந்த தாஜ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் குடும்பங்களைத் தனது குடும்பத்தைப் போல அரவணைத்து, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அவரது மனிதநேயமும் இன்றளவும் இந்திய மக்களால் நன்றியுடன் நினைவுகூரப்படுகிறது.

இந்தியாவின் உண்மையான ரத்தினம் — ஸ்ரீ ரத்தன் டாடாவுக்கு இதயம் நிறைந்த மரியாதைகள்!

  • 38
·
Added a post

உங்க அப்பாவுக்கும்…உங்க அம்மாவுக்கும் வடிச்சி கொட்ட நான் என்ன அவங்கவைச்ச ஆளா…. இனிமே வீட்டு வேலைக்கு ஒரு ஆள்…சமையல் செய்ய ஒரு சமையல் காரின்னு வைச்சிக்கிட்டுபோங்க.., என்னாலே மாரடைக்கமுடியாது….

இப்ப வேலைக்கு ஆள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்டி….. பத்தாயிரம்….. இருபதாயிரம்ன்னு சம்பளம் கேக்கறாங்க..,

உங்கப்பா பென்ஷன்.., உங்கம்மா பென்ஷன்…. உங்க சம்பளமு'ன்னுஎல்லாம் சேர்த்தா லட்சம் ரூபாய்க்குமேல வருதில்லே…. அதுலேஎடுத்து கொடுங்க..,…

அப்ப சரிடி…. அதேபோல் செய்யறேன்…. இன்னைக்கு காலையில் தான் யோசனை செய்தேன்…..மாசா மாசம் குடும்ப பட்ஜெட்ல இழுத்து பிடிச்சி…. மீதம் பண்ணி……உனக்குஒவ்வொரு தீபாவளிக்கும் ரெண்டு மூணு பவுனில் நகை வாங்கி கொடுத்து சர்பிரைஸ்கொடுக்கலாமு 'ன்னு…ரூட்டு போட்டேன்..,.

இது என்னங்கபெரிய வேலை…ஜூஜூபி …. எங்கம்மா வீட்லே எல்லாவேலையும் நானே இழுத்துபோட்டுக்கினு செய்வேன்..தெரியுமா…..

இப்ப என்ன சொல்ல வரே….

நான் போன ரூட்டு ஒன் வே ன்னு தெரியுது……திரும்பி வந்துட்டேங்க…

வேலைக்கு ஆள் கேட்டியே…..

அதெல்லாம்எதுக்குங்க வீண் செலவு….

கடைசியா என்ன சொல்றே…

வாயை கொடுத்து நானே புண்ணாக்கி கிட்டேனே… நான் விட்டாலும்…. இவரு நோண்டுராரே…..

என்ன டார்லிங் முணுமுனணுக்குறே….

ஆங்.,…காலை டிபனுக்கு இட்லி வடை…நெய் சாம்பார் செஞ்சுரு க்கேன்….. வந்து சாப்பிட சொன்னேன்…

  • 198
·
Added a post

ன்சொல்பேச்சுநீங்ககேக்கறதில்லே……உங்ககிட்டே பேச மாட்டேன் போங்க….

நீ மட்டும் கேக்கிறியா…..உன் கிட்டே வாழவே மாட்டேண்டி…போடி….

ஏண்டா….பேசுவதற்கும்….. வாழுறதுக்கும் நிறைய வேறுபாடு இருக்குதடா……

அதெல்லாம் எனக்கு தெரியாது..,.உன் மூஞ்சை பார்த்தாலேஎனக்கு பிடிக்கிலே….. கீதா சொன்னா…நீ ஒரு சுடு மூஞ்சியாம்..,.

எந்த கீதா………என்னடா சொன்னா…..

அதான் உன் கல்லூரி தோழியாமே….

ஓ……. அவளா….கருவாட்டு மூஞ்சி…,.

அவளை பத்தி அசிங்கமாபேசாதே.,. எனக்கு கெட்ட கோவம் வரும்…,

அவளை பேசுனா….உனக்கு ஏண்டா கோபம் வருது….

உன்னை,டைவெர்ஸ்பண்ணிட்டுஅவளைகட்டிக்க போறேன் …..அவளும் என்னை விரும்புறா……

அடி பாவி……. இது அவளுக்கு மூணாவது கல்யாணம்….அவ கெட்ட கேட்டுக்கு இது வேணுமா….. நல்லா பிராக்கெட் போடறாடா உன்னை..,..

என்ன மூணாவது கல்யாணமா.,.,..

ஆமா அவளை பத்தி எனக்கு தான் தெரியும் ……ஏற்கனவே ரெண்டுபேரு சப்பி போட்ட பனங்கொட்டைஅவ…. அதை நீ……….

என்னடி அசிங்கமா பேசறே…….

நான் எங்கே பேசினேன்……அதை நீ…. விலை கொடுத்துவாங்கி…. நாசமா போக போறே…..

ஆமாண்டி அவளை கட்டிக்கனமுன்னா…ரெண்டு லட்சம் பணம் தரணுமாம்….. என்னை கேட்டாள்….

அதான் சொன்னேனே…. என்னை போலஅவளும் கந்து வட்டிக்கு கடன் வாங்கி தவிக்கிறா…..அதுக்கு எதைவேணாலும் செய்வா. ….

அடி நாசமா போறவளே….. நீ ஏன் கந்து வட்டிக்கு கடன் வாங்கினே…. எவ்வளவு வாங்கி தொலைச்சே…..

நானும் ரெண்டு லட்சங்க…..தெரியாம.வாங்கிட்ட்டேங்க

வாங்கி என்னடி செஞ்சே…..

எங்கம்மா வீட்டுலே ரொம்பகஷ்டபடறாங்கன்னுஅவங்களுக்குவாங்கி கொடுத்தேன்….

உங்கம்மாவுக்கு தானே…சரி விடு …. ஆபிசில் லோன் போட்டு உனக்கு கொடுக்கிறேன்….. கடனை அடைசிச்சிட்டு மறுவேலை பாரு…..

நல்லதுங்க……. உங்கள போல ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்……அப்ப.. கீதா…..

அவ கிடைக்குறா சோதா ……. உனக்குமுன்னாடி அவஎல்லாம் சாதா….

சரி வாங்க… தூங்க போகலாம்…..

  • 200
·
Added a post

அவர் ஒரு பெரிய துறவி. இளம் வயதிலேயே ஐம்புலன்களை அடக்கி தவநெறி தவறாமல் ஞான ஜோதியாய் வாழ்ந்தார். ஊருக்கு வெளியே அவருடைய ஆஸ்ரமம் இருந்தது. ஏராளமான சீடர்கள் இருந்தார்கள்.

ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று, தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அதைத் துரத்த துறவியின் சீடர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள். அது அசைந்து கொடுக்கவில்லை. பரவாயில்லை இருந்துவிட்டுப் போகட்டும். பன்றியும் இறைவன் படைப்புத்தானே! அது தன் வாழ்க்கையை வாழட்டும்!

நாம் நம் வாழ்க்கையை வாழ்வோம்,'' என்று சொல்லிவிட்டார் துறவி.

ஆனாலும், பன்றியோ அதன் குட்டிகளோ ஆஸ்ரமத்திற்குள் நுழைந்துவிட முடியாதபடி ஆஸ்ரமத்தின் வெளிப்புறக் கதவைப் பலப்படுத்தினார்கள்.

காலம் நகர்ந்தது. துறவி தினமும் காலையிலும் மாலையிலும் சீடர்கள் புடைசூழ சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார். அப்படிப் போகும்போதும் வரும்போதும் அந்தப் பன்றியின் குடும்பத்தைய பார்த்துக் கொண்டிருப்பார்.

அசிங்கத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பன்றிக் குட்டிகளைப் பார்த்துத் துறவியின் சீடர்கள் முகம் சுளிப்பார்கள். இறைவன் ஏன்தான் இந்த ஈனப் பிறவியைப் படைத்தானோ குருதேவா! பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டுகிறதே! பாருங்கள்! பன்றிக்குக் கொஞ்சமாவது சுத்த உணர்வு இருக்கிறதா என்று !'' என்றான் பிரதான சீடன்.

""தவறு செய்கிறாய் மகனே! மனிதனின் கண்களைக் கொண்டு பன்றியின் வாழ்க்கையைப் பார்க்கிறாய். அதனால்தான் உனக்கு அருவருப்பாக தெரிகிறது. பன்றிக்கு அதன் வாழ்க்கை சொர்க்கம்தான். ஒருவேளை அந்தப் பன்றிகள் நம்மைப் பார்த்து, ""இறைவன் ஏன்தான் இந்த ஈனமான மனிதப் பிறவியைப் படைத்தானோ?'' என்று பேசிக்கொண்டிருக்கிறதோ என்னவோ! யாருக்குத் தெரியும்?''

துறவியை பன்றிகளின் வாழ்க்கை அதிகமாக ஈர்த்தது. அவை தினமும் உணவு தேடும் அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தார். பன்றியின் குடும்பம் பெருகியது. அவ்வப்போது அந்தப் பன்றிகளுக்கு ஆஸ்ரமத்திலிருந்து உணவும் அளிக்கச் சொல்வார் துறவி.

காலம் ஓடியது. துறவி நோய்வாய்ப்பட்டடார். இன்னும் சில நாட்களில் தனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார்.

அவருக்கு இருந்த அபரிமிதமான யோக சக்தியால், தான் அடுத்த பிறவியில் ஒரு பன்றியாகப் பிறக்கப் போகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டார். அதுவும் ஆஸ்ரமத்திற்கு அருகில் வசித்து வந்த பன்றிக்கூட்டத்திலேயே பிறக்கப் போகிறோம் என்பதைத் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டார்.

திடுக்கிட்டார்... இறைவனை வேண்டினார். "வாழ்நாள் முழுவதும் தவநெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' என்று புலம்பினார்.

""நாளெல்லாம் நீ பன்றிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் ஒரு பிறவி மட்டும் நீ பன்றியாகப் பிறந்து பன்றி வாழ்க்கை வாழ வேண்டும். அந்த வாழ்க்கையை உடனே முடித்துக் கொண்டால், அதன்பின் உனக்குப் பிறவி கிடையாது. நேராக என்னிடம் வந்து விடலாம். ஆனால், பன்றி வாழ்க்கையில் திளைத்து உன் உண்மை நிலையை மறந்தால் உனக்கு விமோசனமே இல்லை.'' என்று இறைவன் மனமொழியாகப் பேசியருளினார்.

தான் இறக்கப் போகும் நேரம் நெருங்கியவுடன் மற்ற சீடர்களை வெளியே அனுப்பிவிட்டுப் பிரதான சீடனிடம் ரகசியக் குரலில் பேசினார்.

""அப்பனே! இது தேவ ரகசியம். வேறு யாரிடமும் சொல்லிவிடாதே. நான் இன்று இரவு சாகப் போகிறேன். உடனே எதிரே வசிக்கும் ஒரு பெண் பன்றியின் கருவில் நுழைவேன். குறித்த காலத்தில் ஒரு பன்றிக் குட்டியாகப் பிறப்பேன். நீ பன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

நமது சாஸ்திரங்களின்படி ஒரு பன்றியின் கர்ப்பகாலம் 120 நாட்கள். இன்றிலிருந்து 120 நாட்களில் பிறக்கப் போகும் குட்டியை அடுத்த இரண்டு மூன்று தினங்களில் கொன்றுவிடு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பன்றியின் வாழ்க்கையை இரண்டு நாளாவது வாழ்ந்து பார்த்துவிடுகிறேன்.''

அன்று இரவே துறவி மாண்டார். பன்றியின் கருவினுள் புகுந்தார். துறவியின் பிரதான சீடன் கையில் கத்தியுடன் காத்திருந்தான். குறித்த

காலத்தில் பன்றி குட்டி போட்டது. தன் குருவின் மேல் உள்ள கருணையினால் அந்தப் பன்றிக்குட்டி ஒரு வாரம் நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் சீடன்.

பிறகு ஒரு நாள், அந்தக் குட்டியைக் கொல்லக் கத்தியை ஓங்கியபோது பன்றியாக இருந்தும் யோக சக்தி நிறைந்த அந்தத் துறவி அழாத

குறையாகக் கெஞ்சினார்."பெரிய பிழை செய்துவிட்டேன். நான் சொன்னது எல்லாம் தப்பு. இந்தப் பன்றி வாழ்க்கைதான் எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா? இதை முழுமையாக வாழ விரும்புகிறேன்.''

""ஆனால் குருவே! நீங்கள் உடனே உயிரை விட்டால்தானே இறைவன் திருவடியை அடைய முடியும்?''

""இறைவன் திருவடி யாருக்கு வேண்டும்? இந்தப் பன்றிக்குட்டியின் வாழ்க்கையைப் போல் இறைவன் திருவடி சுகமாக இருக்குமா என்ன? இது சொர்க்கமாக இனிக்கிறதடா! இனி நான் எடுக்கப் போகும் எல்லாப் பிறவிகளிலும் ஒரு பன்றியாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன். என் கூற்றில் சந்தேகமிருந்தால் நீயும் வேண்டுமானால் ஒரு முறை பன்றியாகப் பிறந்துதான் பாரேன்.''

தப்பித்தோம் பிழைத்தோம் என்று சீடன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான். அந்தத் துறவி செய்த ஒரே தவறு. தான் பிறந்த

உடனேயே தன்னைக் கொன்றுபோட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். இரண்டு நாட்கள் பன்றியாக வாழ்ந்து பார்க்கிறேன் என்று சொன்னார். அதில் பற்று வந்துவிட்டது.

இந்தக் கதையில் ஒரு பெரிய வாழ்வியல் உண்மை ஒளிந்திருக்கிறது. இன்று பலரும் மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள் தெரியுமா? அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்ற ஆர்வத்தில் ஆரம்பித்துத் பின்

அதைவிட்டு விலக முடியாத அளவிற்குத் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.

இன்றைய இளைஞர் கூட்டம் மது, புகைப்பிடித்தல், தவறான உறவு என்று அனைத்தையும் ஒரு முறையாவது சுவைத்துப் பார்க்க விரும்புகிறது. அது இரண்டு நாட்கள் பன்றியாக வாழும் கதைதான். பன்றியாக இல்லாத வரைக்கும் தான், பன்றியைக் கண்டால் அருவருப்பாக இருக்கும். பன்றியாகிவிட்டால் அதுவே சுவர்க்க லோகமாக தான் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

விளையாட்டிற்குக் குடித்தாலும் விஷம், தன் வேலையைக் காட்டிவிடும். விஷம் என்று தெரிந்தபின் விலகி இருப்பது நல்லது. எல்லா தீய குணங்களும் ஒன்றுதான்.

  • 200
·
Added article

🌹பல வருடங்கள் நாடக அனுபத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை தனது நகைச்சுவை மூலம் சொன்னவர் இவர். இவரை மக்கள் கலைவாணர் என அழைத்தனர். யார் மனதையும் நோகடிக்காமல் எல்லோரும் ரசிக்கும்படி காமெடி செய்வது இவரின் பாணி.

🌹மற்றவர்களுக்கு கஷ்டம் எனில் உடனே உதவ வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் எண்ணத்திற்கு வழிகாட்டி இவர்தான். ஏனெனில், தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பங்கு மற்றவர்களுக்கே கொடுத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தபோதே அவருக்கு எம்.ஜி.ஆரை தெரியும் என்பதால் அவர்தான் எம்.ஜி.ஆரை வழிநடத்தினார்.

🌹கஷ்டம் என வருபவர்களுக்கு உதவ வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆரிடம் சொல்லி சொல்லி அவரை வளர்த்தவர்தான் என்.எஸ்.கிருஷ்ணன். எனவேதான், அவர்மீது மிகுந்த அன்பும் மரியாதையையும் எப்போதும் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார்.

🌹நிறைய தானங்கள் செய்ததாலும், ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறை சென்றதாலும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியதாலும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு கடன் சுமை ஏற்பட்டது. ஒருசமயம், சென்னை ராயப்பேட்டை சண்முகமுதலி தெருவில் இருந்த தனது வீட்டை விற்பது என என்.எஸ்.கிருஷ்ணன் முடிவெடுத்தார்.

🌹இந்த வீட்டை சிவாஜியிடம் விற்பதாக முடிவு செய்யப்பட்டு வாயளவில் ஒரு தொகையும் பேசப்பட்டது. பணம் இன்னும் கைமாறவில்லை. பத்திரமும் பதியப்படவில்லை. அப்போது மார்வாடி ஒருவர் சிவாஜி பேசிய தொகையை விட அதிகவிலைக்கு அந்த வீட்டை வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். கிருஷ்ணனுக்கு பணத்தேவை அதிகமாக இருந்ததால் ‘மார்வாடியிடமே வீட்டை விற்றுவிடுங்கள்’ என அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

🌹ஆனால், என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அதில் விருப்பமில்லை. ‘நான் பல வருடங்களாக வசிக்கும் வீடு இது. இந்த பக்கம் வரும்போது நாம வாழ்ந்த வீட்டை ஒரு மார்வாடிக்கு கொடுத்துட்டோமே என நினைத்தால் மனசு கஷ்டப்படும். ஆனா சிவாஜிக்கு விற்றால் ‘நம்ம வீட்டில் நம்ம தம்பி கணேசன்’ இருக்கார்னு மனசு சந்தோஷப்படும். வீட்டுகுள்ள போகவும் மனசு கூசாது’ என சொல்லி அந்த வீட்டை சிவாஜிக்கே விற்றாராம் என்.எஸ் கிருஷ்ணன் அவர்கள்.

  • 200
·
Added article

தேவர் கோயம்புத்தூரில் இருந்த காலத்தில் கடையில் இரண்டு இட்லிகள் வாங்கினால், பத்துமுறை சாம்பார் வாங்குவார். அவரிடம் இட்லி வாங்க அதற்கு மேல் பணம் இல்லாததால், சாம்பாரைக் குடித்தே வயிற்றை நிரப்புவார். தேவரே இதுக்குமேல சாம்பார் ஊத்த முடியாது... நிறுத்திக்கோரும் என ஓட்டல்காரர்கள் சொல்லியதெல்லாம்கூட நடந்திருக்கிறது. அப்படி ஒருநாள் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த தேவர் கழுத்தில், வேட்டியைப் போட்டு ஒருவர் இழுத்துவிடுகிறார். தேவர் அவரிடம் வாங்கிய 10 ரூபாய் கடனை இன்னும் திரும்பிக்கொடுக்காததால், அவர் வேட்டியை கழுத்தில் போட்டார். கழுத்தில் வேட்டி போடுவதை அசிங்கமான செயலாக நினைப்பார்கள். அந்த இடத்தில் ஜனமெல்லாம் கூடிவிட்டது. இரண்டு நாட்களில் திருப்பிக்கொடுத்துவிடுவதாக தேவர் சொன்னதும் கழுத்தில் போட்ட வேட்டியை அவர் எடுத்தார்

வாக்கு கொடுத்தபடி இரண்டு நாட்களில் பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த தேவர், கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு மருதமலைக்குக் கிளம்பினார். ‘ஒருத்தன் சாம்பார் ஊத்தமாட்டேங்கிறான்; இன்னொருத்தன் கழுத்தில் வேட்டியைப் போடுகிறான். உன்னையே நம்பியிருக்க எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை தேவையாடா... நீயெல்லாம் கடவுளாடா’ என முரட்டுத்தனமாக வேட்டியைக் கட்டிக்கொண்டு முருகன் சிலையை உடைக்க மருதமலை படிக்கட்டில் ஏறுகிறார். அந்தக் காலத்தில் மருதமலை மிகவும் சிறிய கோவிலாகத்தான் இருந்தது. கெட்டக் கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டே படியேறுகையில், சிகரெட் பிடித்துவிட்டு யாரோ தூக்கி எறிந்த ஒரு சிகரெட் பெட்டி ஓர் ஓரத்தில் கிடக்கிறது. அதில் ஏதோ இருப்பதுபோல தெரிந்ததும், தேவர் கையில் எடுத்துப் பார்க்கிறார். அதில் பத்து ரூபாய் நோட்டு இருந்துள்ளது. அந்தப் பத்து ரூபாய் கிடைத்ததும் கோவிலிலேயே தேவர் கதறி அழுதிருக்கிறார். அதன் பிறகு, கோயம்புத்தூர் திரும்பிவந்து அந்தக் கடனை தேவர் அடைத்தார்.

சினிமாவில் நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்து பின்னாட்களில் பெரிய கோடீஸ்வரனாகிவிட்டார். தேவருக்கு சர்க்கரை வியாதி வந்தவுடன் உணவுப் பழக்கத்தில் கண்டிப்போடு இருக்கும்படி டாக்டர்கள் தேவரை அறிவுறுத்தினர். இதையும், 'சாப்பிடணும்னு நினைக்கையில் கையில் பணம் கொடுக்கல... பணம் கொடுத்திருக்கையில் சாப்பிடவிட மாட்டேங்கிற' என முருகனிடம் கோபத்தோடு முறையிடுவார். தினமும் இதுபோல பூஜையை முடித்துவிட்டு, அதன்பின்னரே காலை உணவு சாப்பிடுவார். சாப்பிட்டுவிட்டு எல்லா பத்திரிகை, நாளிதழ்களையும் எடுத்து வாசிப்பார்.

அன்று ஒருநாள் அவரிடம், ‘அண்ணே குமுதம் படிச்சீங்களா’ எனக் கேட்டேன். ‘படித்தேன்’ என்றார். அதில், ஒரு பையனுக்கு மருத்துவ உதவி கேட்டு விளம்பரம் வந்திருந்தது. ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் அந்தப் பையன் சிகிச்சைக்கு அது பெரிய அளவில் கைகொடுக்கும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘அந்த விளம்பரத்தைக் கவனித்தீர்களா’ என்றேன். ‘கவனித்தேன்... அதற்கு என்ன’ என்றார். ‘அந்தப் பையனுக்கு உண்மையிலேயே நகமெல்லாம் நீல வண்ணத்தில்தான் இருக்கிறது. வெளியே படிக்கட்டிற்கு அருகில்தான் நிற்கிறான்’ என்றேன். ‘அவனை உள்ளே கூப்பிடு’ என்றார். நான் அவனை உள்ளே அழைத்து வந்ததும் தேவரிடம் வந்து நீல வண்ணத்தில் இருக்கும் தன் நகங்களைக் காட்டினான். தேவர் அதிர்ந்துவிட்டார். ‘ஒரு ரூபாய் ஒரு ரூபாய்யா வசூலித்து நீ சிகிச்சைக்குப் போக முடியுமா’ என அவனிடம் தேவர் கேட்க, அருகில் இருந்த நான் ‘நீங்கள் நூறு ரூபாய் கொடுத்து உதவுங்கள் அண்ணே’ என்றேன்.

கொஞ்ச நேரம் யோசித்த தேவர், ‘சரி சிகிச்சைக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்’ எனக் கேட்டார். அந்தப் பையன் பத்தாயிரம்வரை பணம் செலவாகும் என்றான். மேலே இருந்த அறைக்கு ஃபோன் செய்த தேவர், பத்தாயிரம் பணம் கொண்டுவரச் சொன்னார். ‘ஒவ்வொரு ரூபாயா வாங்கி நீ என்னைக்கு சிகிச்சை எடுக்க? இந்தப் பத்தாயிரத்தை வச்சு வைத்தியம் பாரு’ எனக் கூறி, பணத்தை அந்தப் பையன் கையில் கொடுத்தார். அன்றைய காலத்தில் பத்தாயிரம் என்பது மிகப்பெரிய தொகை. பின்பு அந்தப் பையன் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமடைந்தான். ஒரு ரூபாய் கொடுத்தால் போதும் என குமுதத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அந்தப் பையனை நான் அவரிடம் கொண்டுவந்து நிறுத்த, ஒத்த ரூபாயென்ன... மொத்த ரூபாயும் நானே தாரேன் என்று கொடுத்த மனசு எத்தனை பேருக்கு வரும். தேவரின் வள்ளல் குணத்திற்கு இதுவும் ஒரு மிகப்பெரிய சான்று

  • 200
·
Added a post
  • 305
·
Added a post
இன்று ஆங்கில மாதம் பிறப்பு
  • 313

Good Morning...

  • 313
  • 399
  • 401
  • 398
  • 399
  • 399
·
Added a post

இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் இருவருமே மருத்துவர்கள்—சாதாரண மருத்துவர்கள்

அல்ல; அவர் MBBS மற்றும் MD பட்டங்களைப் பெற்றவர், இவரோ MBBS பட்டம் பெற்றவர். இந்தக் கட்டுரையை வாசித்து முடிக்கும்போது, ​​அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகத் தலைவணங்க வேண்டும் என்ற உணர்வு உங்களுக்குள் எழும்.

அவர்களின் ஊக்கமளிக்கும் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

1985-ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவின் நாசிக் ரயில்வே பிரிவில் பணிபுரிந்த திரு. பாபுராவ் கோலே மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். அவரது மகன் ரவீந்திரா, தனது MBBS படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்; குடும்பத்திலேயே முதல் மருத்துவராக அவர் உருவெடுக்கவிருந்தார்.

ஆனால், ரவீந்திரா முற்றிலும் மாறுபட்ட ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தார் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. மருத்துவப் படிப்பின் இறுதிக்கட்ட நாட்களில், ஒரு கட்டுரையும் ஒரு புத்தகமும் அவரை மாற்றியமைத்தன. மகாத்மா காந்தி எழுதிய அந்தக் கட்டுரையில் சுவாமி விவேகானந்தரின் வரிகள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன: "கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் இதயங்களிலிருந்து வடியும்

ரத்தத்தால் ஊட்டம்பெற்ற கல்வியையும் அறிவையும் பெற்றுக்கொண்டு, அவர்களின் நலனைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காத எவரும் தேசத்துரோகிதானே?" விவேகானந்தர், காந்தி மற்றும் வினோபா பாவே ஆகியோரின் வாழ்க்கை, கொள்கைகள் மற்றும் தொலைநோக்குப் பார்வைகள் ரவீந்திராவை ஆழமாகக் கவர்ந்து ஊக்கப்படுத்தின.

வீடு திரும்பிய அவர் தன் பெற்றோரிடம், "நான் தொலைதூரக் கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவராகச் சேவை செய்யப் போகிறேன்," என்று கூறினார். அவரது தந்தையின் மகிழ்ச்சி உடனடியாக மறைந்தது; தாயோ அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார்.

மகாராஷ்டிராவின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான மெல்காட் (Melghat) பகுதியில் உள்ள பைராகர் (Bairaghar) என்ற கிராமத்தை ரவீந்திரா தேர்ந்தெடுத்தார். ஏன் அந்த இடம்? அதற்கான காரணம், அவர் MBBS படிக்கும்போது படித்த *Where There Is No Doctor* (மருத்துவர் இல்லாத இடத்தில்) என்ற புத்தகத்தில் இருந்தது. டேவிட் வர்னர் எழுதிய அந்தப் புத்தகத்தின் அட்டையில், நான்கு பேர் ஒரு நோயாளியைப் பாரம்பரியமான கயிறு கட்டிலில் சுமந்து செல்லும் புகைப்படம் இருந்தது; அதன் அருகே "மருத்துவமனை 30 கி.மீ. தொலைவில் உள்ளது" என்ற சிறிய வாசகம் இடம்பெற்றிருந்தது. அந்தப் படம் ரவீந்திராவின் மனதை ஆழமாகப் பாதித்தது. மருத்துவ வசதிகள் இல்லாத ஒரு ஏழ்மையான கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் அப்போதே உறுதியெடுத்தார்.

அத்தகைய சூழலில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்துப் பின்னர் அவர் தனது பேராசிரியரிடம் ஆலோசனை கேட்டார். பேராசிரியர் பூஜு (Booju) அவரிடம், அத்தகைய இடத்தில் பணியாற்ற மூன்று குறிப்பிட்ட துறைகளில் திறமை தேவை என்று கூறினார்: 1. சோனோகிராபி அல்லது ரத்தம் ஏற்றும் வசதிகள் இல்லாமலே கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவம் பார்த்தல்; 2. எக்ஸ்-ரே (X-ray) கருவிகள் இல்லாமலே நிமோனியாவுக்குச் சிகிச்சை அளித்தல்; மற்றும் 3. வயிற்றுப்போக்குக்குச் சிகிச்சை அளித்தல். இந்தத் திறன்களைக் கற்றுத் தேர்ச்சி பெறுவதற்காக ரவீந்திரா மும்பையில் ஆறு மாதங்கள் செலவிட்டார். அதன்பிறகு அவர் உடனடியாக பைராகருக்குப் (Bairaghar) புறப்பட்டார்.

அந்த கிராமத்திற்குப் பேருந்து வசதி ஏதுமில்லை; மகாராஷ்டிராவின் அமராவதியிலிருந்து 40 கிலோமீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்—அவரும் அப்படித்தான் அங்கு சென்றடைந்தார். அங்கு ஒரு சிறிய குடிசையை அமைத்து, உள்ளூர் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். வறுமை, கல்வியறிவின்மை மற்றும் நோய்களால் அந்த கிராமம் பாதிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு மக்களுக்குத் தனியொருவராகச் சேவை செய்வது அவருக்குக் கடினமாக இருந்தது. ஒரு துணை தேவை என்பதை உணர்ந்த அவர், ஒரு நாளிதழில் திருமணத்திற்கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். மருத்துவராக இருக்கும் ஒரு இளம் பெண்ணைத் தேடிய அவர், நான்கு நிபந்தனைகளை விதித்தார்; அவற்றை ஏற்றுக்கொள்பவரை மட்டுமே திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார்: 1. அவர் 40 கிலோமீட்டர் தூரம் நடக்கக்கூடியவராக இருக்க வேண்டும்; 2. வெறும் ஐந்து ரூபாய் செலவில் நடக்கும் திருமணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1989-ல் பதிவுத் திருமணத்திற்கான கட்டணம் அதுதான். அவர்கள் தங்கள் மாதச் செலவுகள் அனைத்தையும் வெறும் 400 ரூபாயைக் கொண்டே சமாளிக்க வேண்டியிருந்தது. ஏனெனில், டாக்டர் ரவீந்திரா ஒரு நோயாளிக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்றுக்கொண்டு, மாதத்திற்கு 400 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தார். மக்களின் நலனுக்காகத் தேவைப்பட்டால் பிச்சை எடுக்கவும் கூடத் தயாராக இருக்க வேண்டிய சூழல் அது.

நூற்றுக்கணக்கான திருமண வரன்கள் வந்தபோதிலும், இந்த நிபந்தனைகளைப் பார்த்த பிறகு தொண்ணூற்றொன்பது பேர் பின்வாங்கினர். ஒரு இளம் பெண் மட்டும் ஒப்புக்கொண்டார்; அவர்தான் டாக்டர் ஸ்மிதா—புகைப்படத்தில் காணப்படுபவர் அவரே.

1991-ல் டாக்டர் ஸ்மிதாவுக்குப் பிரசவ வலி ஏற்பட்டபோது, ​​அவருக்குக் கடுமையான சிக்கல்கள் இருந்தபோதிலும், டாக்டர் ரவீந்திராவே அவருக்குச் சிகிச்சை அளிக்க முன்வந்தார். சிறந்த மருத்துவக் கவனிப்பிற்காக அவரை நகரத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கிராம மக்கள் அவரை வற்புறுத்தினர். அவரிடம் கேட்டபோது, ​​அவர் எளிமையாக, "அது உங்கள் விருப்பம்" என்று கூறினார். அவர் கிராம மக்களிடம், "நான் அவரை நகரத்திற்கு அழைத்துச் சென்றால், நான் திரும்பி வரமாட்டேன்.

உங்களுக்குக் கிடைக்காத வசதிகளை நாங்களும் அனுபவிக்க விரும்பவில்லை" என்று கூறினார். டாக்டர் ஸ்மிதா, "நீங்களே எனக்குச் சிகிச்சை அளியுங்கள்; நான் நகரத்திற்குச் செல்ல விரும்பவில்லை" என்று கூறினார். அவரே பிரசவம் பார்த்தார், ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தத் தம்பதியினரின் தியாகம் உள்ளூர் மக்களின் மனதை ஆழமாக நெகிழ்வித்தது; அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்கு ஒரு தெய்வீகமான, ஆதித் தம்பதியைப் போலத் தோன்றினர். மெல்ல மெல்ல மக்கள் அவர்களை நம்பத் தொடங்கினர்.

ஆண்டின் நான்கு மாதங்கள் மட்டுமே விவசாய வேலை இருந்தது; மற்ற நேரங்களில் வேலைவாய்ப்பு ஏதுமில்லை. இதன் விளைவாக, உணவு மற்றும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு, பல்வேறு நோய்கள் உண்டாயின. கிராம மக்களிடம் போதுமான ஆடைகள் கூட இல்லாததால், அவர்கள் நிமோனியா போன்ற நோய்களுக்கு எளிதில் ஆளாகும் நிலையில் இருந்தனர். இந்த நிலையை மாற்ற, கிராம மக்கள் தங்கள் சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும்—குறிப்பாக, தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை அவர்களே பயிரிட வேண்டும்—என்பதை அந்தத் தம்பதியினர் உணர்ந்தனர். இதற்காக, டாக்டர் ரவீந்திரா நகரத்தில் வசிக்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி நண்பருடன் கலந்தாலோசித்து விதைகளைப் பற்றி ஆய்வு செய்தார்; இறுதியில், பூச்சிகள் மற்றும் கிருமிகளைத் தாங்களே எதிர்க்கும் திறன் கொண்ட ஒரு புதிய, ஆரோக்கியமான விதை வகையை அவர் உருவாக்கினார்.

இருப்பினும், கிராம மக்கள் அதைச் சாகுபடி செய்வதில் தயக்கம் காட்டினர். அதனால்தான், அவர் தனது மகனிடம், "நகரத்தில் நீ மேற்கொள்ளும் உயர்கல்வியைக் கைவிட்டுவிட்டு விவசாயியாக மாறுவாயா?" என்று கேட்டபோது, ​​அவரது மகன் ரோஹித், "நீங்கள் சொல்வதைச் செய்கிறேன்" என்று பதிலளித்தார். அவர்கள் மூவரும் இணைந்து ஒரு நிலத்தை உழுது, தாங்களே உருவாக்கிய விதைகளை விதைத்து, அமோக விளைச்சலைப் பெற்று, அதை கிராம மக்களுக்குக் காண்பித்தனர். இது உள்ளூர் மக்களை வெகுவாகக் கவர்ந்தது, மேலும் அனைவரும் அந்த விதைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

டாக்டர் ரவீந்திரா வானிலை மாற்றங்களைக் கண்காணித்து, பயிர் இழப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார்; பின்னர், அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்கள் பொது விநியோக முறை மூலம் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதை உறுதிசெய்து, உணவு தானியங்களின் தடையற்ற விநியோகத்திற்கு வழிவகுத்தார். இப்போது அங்கு உணவுப் பற்றாக்குறை இல்லை; தினமும் இருவேளை முழுமையான உணவு கிடைப்பதால் பெண்களின் உடல்நலமும் மேம்பட்டுள்ளது. முன்பு 1,000 குழந்தைகளில் 200 பேர் உயிரிழந்த நிலையில், அந்த எண்ணிக்கை இப்போது 60-ஆகக் குறைந்துள்ளது. கிராமத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வியக்கத்தக்கது; அங்குள்ள தனிப்பட்ட விவசாயிகள் இப்போது, ​​ஐஐடி (IIT)-களில் படித்து பெருநிறுவனங்களில் பணிபுரியும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு இணையான வருமானத்தை ஆண்டுதோறும் ஈட்டுகின்றனர்.

300 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமம், இப்போது சுற்றியுள்ள கிராமங்களுக்கும் ஒரு உத்வேகமாகத் திகழ்கிறது.

அது தானாகவே இயங்கும் நிலையை எட்டியது. ஒரு காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்த கிராமத்தை நவீன உலகின் வெளிச்சம் சென்றடைந்ததைக் கண்ட மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஒருவர்—சமீபத்திலல்ல, சில காலத்திற்கு முன்பு—அங்கு வருகை தந்தார். டாக்டர் ரவீந்திரா, டாக்டர் ஸ்மிதா மற்றும் அவர்களது மகன் ரோஹித் ஆகியோர் செய்து வந்த பணிகளால் ஈர்க்கப்பட்ட அவர், "இந்தச் சிறிய குடிசை உங்களுக்கு ஏற்ற இடமல்ல" என்று கூறி, அவர்களுக்கு ஒரு பெரிய கான்கிரீட் வீட்டை கட்டித் தருவதாக முன்வந்தார்.

அதற்கு அவர்கள், "இதுவே எங்களுக்குப் போதுமானது; அதற்குப் பதிலாக, இந்தக் கிராமத்தை மற்ற இடங்களுடனும், கிராமத்திற்குள்ளேயும் இணைக்கும் வகையில் சாலைகளை அமைத்துத் தாருங்கள்" என்று கேட்டுக்கொண்டனர். அமைச்சரும் அதற்கு ஒப்புக்கொண்டார். இன்று அக்கிராமத்தில் சிறந்த சாலைகள், ஆறு பள்ளிகள் மற்றும் பன்னிரண்டு மருத்துவ மையங்கள் உள்ளன.

இருப்பினும், ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் தேவை ஏற்பட்டது. அப்போது டாக்டர் ரவீந்திரா தனது இரண்டாவது மகனான ராமை அறுவை சிகிச்சை நிபுணராகுமாறு ஊக்குவித்தார். ராம் தனது பயிற்சியை முடித்துவிட்டு, தற்போது அப்பகுதியில் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறார்.

சில தெய்வங்களுக்குக் கோயில்கள் தேவையில்லை; ஏழைகளின் இதயங்களே அவற்றின் கருவறைகளாகத் திகழ்கின்றன.

நமது வீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், அத்தகைய மனிதர்களைப் பற்றி நாம் குழந்தைகளிடம் பேசுவதில்லை. ஆனால் நாம் பேச வேண்டும்.

அதுவும் ஏதோ சாதாரணமாக அல்லாமல், இதயத்தைத் தொடும் விதத்தில் பேச வேண்டும். அப்போதுதான், வருங்காலத் தலைமுறையினரை வழிநடத்தும் தலைவர்கள் நமது வகுப்பறைகளிலேயே உருவாக்கப்படுவார்கள்.

  • 413
·
Added a post

நேபாளத்தில் ஏற்பட்ட அந்த பயங்கரமான வெள்ளக் காட்சியை பார்த்தபோது, ஒரு காட்சி மட்டும் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது.

சேறும், பாறைகளும், மரங்களும் கலந்த காட்டாற்று வெள்ளம் தனது பாதையில் இருந்த வீடுகளையும் கட்டிடங்களையும் அடித்துச் சென்றுகொண்டிருந்தது.

ஆனால்…

அந்த பேரழிவுக்கு நடுவில் ஒரு பச்சை நிற வீடு மட்டும் அசையாமல் நின்றது.

அதன் மேலே ஒரு குடும்பம் உயிரைக் கையில் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தது.

வெள்ளம் முழுவதுமாக வடிந்த பிறகு எடுக்கப்பட்ட காட்சியிலும், சுற்றிலும் இருந்த கட்டிடங்கள் அழிந்து கிடக்க… அந்த வீடு மட்டும் பெரிதாக எந்த சேதமும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தது.

அந்தக் காட்சியைப் பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில்,

“இந்த வீட்டைக் கட்டிய பொறியாளருக்கு ஒரு பாராட்டு!”

என்று பதிவிட்டார்கள்.

அது வெறும் பாராட்டாக மட்டும் இருக்கவில்லை.

தற்போது NDTV வெளியிட்டுள்ள செய்தி, அந்த வீடு ஏன் தாக்குப்பிடித்தது என்பதற்கான முக்கியமான கட்டுமான காரணங்களை விளக்கியுள்ளது.

அந்த வீடு Reinforced Concrete Frame Structure முறையில் கட்டப்பட்டிருந்தது.

அதாவது,

Column + Beam + Foundation

ஆகியவை steel reinforcement மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஒரு வலுவான structural skeleton போல செயல்பட்டிருக்கிறது.

பொதுவாக கல் masonry-யை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கட்டிடங்கள் செங்குத்தான எடையைத் தாங்கக்கூடியதாக இருந்தாலும், இப்படிப்பட்ட வெள்ளத்தில் ஏற்படும் lateral force (பக்கவாட்டு அழுத்தம்) மற்றும் debris impact-ஐ எதிர்கொள்ளும் திறன் குறைவாக இருக்கலாம்.

ஆனால் இந்த வீட்டின் reinforced concrete frame, வெள்ளத்தின் பக்கவாட்டு அழுத்தத்தை கட்டிடத்தின் முழு structural system வழியாக foundation-க்கு மாற்றும் வகையில் செயல்பட்டிருக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. அந்த வீடு வெள்ளத்தின் மிகக் கடுமையான debris flow-ன் நேரடி பாதையில் முழுமையாக அமையவில்லை என்பதும் அதன் உயிர் பிழைப்புக்கு ஒரு காரணமாக NDTV குறிப்பிடுகிறது.

இதனால் இந்தக் காட்சியைப் பார்த்து,

“வீடு கட்டினால் போதும்”

என்று நினைக்கக் கூடாது.

“எப்படி கட்டுகிறோம்?” என்பதுதான் முக்கியம்.

ஒரு கட்டிடத்தின் அழகு அதன் வெளிப்புறத்தில் இல்லை.

அதன் உண்மையான அழகு, அது தாங்க வேண்டிய நேரத்தில் தாங்கி நிற்பதில்தான் இருக்கிறது.

பல வீடுகள் இருந்த இடமே தெரியாமல் போனபோது, ஒரு சிறிய பச்சை வீடு மட்டும் நின்று கொண்டிருந்தது.

அது ஒரு குடும்பத்தின் உயிரைக் காப்பாற்றிய வீடு மட்டுமல்ல…

நல்ல Structural Engineering-ன் மதிப்பை உலகத்துக்கே காட்டிய ஒரு பாடம்.

ஒரு பொறியாளரின் திறமை பல நேரங்களில் கட்டிடம் இடிந்து விழாதபோதுதான் தெரியும்.

அந்தப் பச்சை வீட்டைப் பார்த்து நாம் பாராட்ட வேண்டியது அந்தக் கட்டிடத்தை மட்டும் அல்ல… அதன் பின்னால் இருந்த பொறியியல் சிந்தனையையும் தான்.

  • 412
·
Added a post

1. அமைதி, ஒரு வாதத்தை நிரூபிப்பதைக் காட்டிலும் சிறந்தது.

2. ஆரோக்கியமே உண்மையான செல்வம்.

3. பணத்தை விட நேரம் அதிக மதிப்புடையது.

4. எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

5. உண்மையான நண்பர்கள் சிலரே — அவர்களை நெருக்கமாக வைத்திருங்கள்.

6. மௌனம் பல நேரங்களில் வார்த்தைகளை விட அதிகம் பேசுகிறது.

7. மகிழ்ச்சி பொருள்களில் இல்லை — அது உள்ளிருந்து வருகிறது.

8. "இது போகட்டும்" என்று சில விஷயங்களை விட்டுவிடுவது ஒரு சூப்பர் பவர்.

9. உங்களுடைய "உள் குரல்" தான் உங்கள் வாழ்க்கை கதையாக மாறுகிறது.

10. குறைவாக பயன்படுத்துவது அதிக தெளிவை தரும்.

11. உங்கள் வளர்ச்சியை எல்லோருக்கும் விளக்க வேண்டிய அவசியமில்லை.

12. உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள் — அது முன்பே அறிவது.

13. தோல்வி என்பது கற்றலின் ஒரு பகுதி.

14. உண்மையான சந்தோஷம் எளிய விஷயங்களில் உள்ளது.

15. மெதுவாக செல்லுங்கள் — வலிமையாக முன்னேற முடியும்.

16. நீங்கள் திருமணம் செய்யும் நபர் உங்கள் வாழ்க்கையின் அனைத்தையும் பாதிக்கிறார்.

17. கவலைப்படுவது முடிவுகளை மாற்றாது.

18. பொருட்களை விட அனுபவங்கள் முக்கியம்.

19. ஒழுக்கம் தான் நீங்கள் விரும்பும் வாழ்க்கையை கட்டுகிறது.

20. தயவு ஒருபோதும் வீணாகாது.

21. உங்கள் பழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.

22. எல்லா வாதங்களிலும் கலந்துகொள்ள வேண்டியதில்லை.

23. “இல்லை” என்று சொல்வது சுய பராமரிப்பு.

24. தனியாக இருப்பதை அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

25. உடைந்த மனநிலையை பணம் சரி செய்ய முடியாது.

26. பெரிய இலக்குகளை விட தினசரி பழக்கங்கள் முக்கியம்.

27. தேர்வு செய்யாததும் ஒரு தேர்வே.

28. உங்கள் அமைதியை பொன்னாக காப்பாற்றுங்கள்.

29. மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள் பணிவுடன் இருப்பார்கள்.

30. நீங்கள் எதை உட்கொள்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

31. குணமடைதல் நேரான பாதை அல்ல — பொறுமையாக இருங்கள்.

32. உங்கள் ஒளியை மங்கச் செய்யும்வற்றிலிருந்து விலகுங்கள்.

33. வெற்றிக்கு வேகம் அல்ல — பொறுமை தேவை.

34. பெரும்பாலான பயங்கள் நிஜமாகவே நடக்காது.

35. சரியானவர்கள் உங்களை நம்ப வைக்க வேண்டியதில்லை.

36. உங்கள் மனநிலை தான் உங்கள் மிகப்பெரிய சொத்து.

37. முதுமை ஒரு சாபம் அல்ல — அது ஒரு வரம்.

38. மன்னிப்பு அவர்களை அல்ல — உங்களை விடுவிக்கிறது.

39. கைதட்டலுக்கு பதிலாக நோக்கத்தைத் தேர்ந்தெடுக்குங்கள்.

40. நீங்கள் ஏற்றுக்கொள்வது, மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்பிக்கிறது.

41. குறைவாக பேசுங்கள் — அதிகமாக கேளுங்கள்; தெளிவு கிடைக்கும்.

42. சுய மரியாதை, பிறரை மகிழ்விப்பதை விட உயர்ந்தது.

43. ஓய்வு என்பது முன்னேற்றத்தின் ஒரு பகுதி.

44. அனைத்திலும் அளவை விட தரம் முக்கியம்.

45. சிலரை நீங்கள் மீறி வளர்வீர்கள் — அது சரி.

46. உணர்ச்சிகள் உண்மையானவை — ஆனால் அவை எப்போதும் உண்மை அல்ல.

47. வார்த்தைகளை விட செயல்களை நம்புங்கள்.

48. ஒப்பிடுவதை நிறுத்தும்போது வாழ்க்கை மேம்படும்.

49. தூக்கம் சுய மரியாதையின் ஒரு வடிவம்.

50. உங்கள் ஆற்றல் தான் உங்கள் நாணயம் — அதை புத்திசாலித்தனமாக செலவிடுங்கள்.

51. எளிமை எப்போதும் சிக்கலை விட மேலானது.

52. ஊக்கத்தை விட தொடர்ந்து செயல் வலிமையானது.

53. எல்லோருக்கும் உங்களை அணுகும் உரிமை இல்லை.

54. எல்லைகள் உங்கள் அமைதியை காக்கின்றன.

55. நன்றியுணர்வு அனைத்தையும் மாற்றும்.

56. முன்கூட்டியே சேமிப்பது பல ஆண்டுகளை காப்பாற்றும்.

நீங்கள் இப்போது வாழ்க்கையின் எந்த stage-ல இருந்தாலும் — இந்த உண்மைகள் உங்களுக்கு தேவை.

  • 417
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: இழுபறி​யாக இருந்த வேலைகள் முடி​யும். பெற்றோர் உடல்​ நலம் சீராகும். அரசு, வங்கி சம்​பந்​தப்​பட்ட காரி​யங்​கள் சாதக​மாக முடி​யும். தொழில், வியா​பாரத்​தில் புதிய வாடிக்​கை​யாளர்​கள் தேடி வருவார்​கள். சரக்​கு​கள் விற்​றுத் தீரும்.

ரிஷபம்: உங்​கள் மனம் விரும்​பிய புதிய பாதை​யில் பயணிக்​கத் தொடங்​கு​வீர்​கள். பண வரவு உண்​டு. கணவன் - மனை​விக்​குள் மனம்​விட்​டுப் பேசுவீர்​கள். உங்​கள் ரசனைக்​கேற்ப வீடு, வாக​னம் அமை​யும். வியா​பாரம் லாபம் தரும். பேச்​சில் நிதானம் தேவை.

மிதுனம்: உங்​களது எதார்த்​த​மான, சாதுர்​ய​மான பேச்​சால், தடை பட்ட காரி​யங்​களை முடிப்​பீர்​கள். குடும்​பத்​தினரின் ஆதரவு பெரு​கும். பிள்​ளை​கள் உடல்​நலம் சீராகும். வியா​பாரத்​தில் பணி​யாளர்​கள் அனுசரணை​யாக நடந்து கொள்​வார்​கள்.

கடகம்: புதி​ய​வர்​களு​டன் நட்பு மலரும். பண வரவு திருப்​தி​கர​மாக இருக்​கும். வியா​பாரத்​தில் பழைய பாக்​கி​கள் வசூலாகும். கொடுக்​கல் - வாங்​கலில் சுமுக​மான நிலை காணப்​படும். வாக​னப் பழுது நீங்​கும். கேட்ட இடத்​தில் உதவி கிடைக்​கும்.

சிம்​மம்: மனதில் இருந்த அச்​சம், கவலைகள் நீங்​கி, நம்​பிக்​கை​யும், உற்​சாக​மும் பிறக்​கும். கணவன் - மனை​விக்​குள் மனஸ்​தாபம் நீங்​கி, அன்​யோன்​யம் அதி​கரிக்​கும். வியா​பாரத்​தில் பழைய சரக்​கு​களை விற்று காசாக்​கு​வீர்​கள். அலு​வல​கத்​தில் நிம்​மதி உண்​டு.

கன்னி: யாருக்​கும் ஜாமீன் தரு​வது, சாட்​சிக் கையெழுத்​திடு​வது, வேலைக்கு சிபாரிசு செய்​வது வேண்​டாம். பழைய பிரச்​சினை​களுக்கு சுமுக தீர்வு காண்​பீர்​கள். வாக​னம் அடிக்​கடி தொந்​தரவு தரும். ஆன்​மிகம், தியானத்​தில் ஈடு​பாடு அதி​கரிக்​கும்.

துலாம்: புதி​ய​வர்​களின் நட்பு கிடைக்​கும். தள்​ளிப்​போன வழக்​கில் சாதக​மான திருப்​பம் வரும். அரசு, வங்கி காரி​யங்​கள் விரைந்து முடி​யும். புதி​ய​வர்​களின் அறி​முக​மும், அதனால் அனுகூல​மும் கிடைக்​கும். பல வகை​யிலும் பொருட்​கள் சேரும்.

விருச்​சிகம்: குடும்​பத்​தில் உங்​கள் வார்த்​தைக்கு மதிப்பு கூடும். புதிய பதவி​கள், பொறுப்​பு​கள் தேடிவரும். உறவினர்​கள், நண்​பர்​கள் வரு​கை​யால் வீட்​டில் மகிழ்ச்சி நில​வும். உத்​தி​யோகத்​தில் சக ஊழியர்​கள் ஆதர​வாக இருப்​பார்​கள்.

தனுசு: முக்​கிய பிர​முகர்​களின் அறி​முகம் கிடைக்​கும். எதிர்​பார்த்த பணம் கைக்கு வரும். பிள்​ளை​கள் உங்​கள் பேச்​சைக் கேட்டு நடப்​பார்​கள். தொழில், வியா​பாரத்தை விரிவுபடுத்​து​வீர்​கள். அலு​வல​கத்​தில் வேலைச் சுமை குறை​யும்.

மகரம்: எதிர்​மறை எண்​ணங்​கள் மறை​யும். முகத்​தில் தெளிவு பிறக்கும். கையில் காசு பணம் புரளும். நண்​பர்​கள் வரு​கை​யால் வீடு களை​கட்​டும். உத்​தி​யோகத்​தில் சக ஊழியர்​கள் ஆதர​வாக இருப்​பார்​கள். குலதெய்​வப் பிரார்த்​தனை​கள் நிறைவேறும்.

கும்​பம்: பண வரவால் பழைய கடனை அடைப்​பீர்​கள். குடும்​பத்​தில் உங்​கள் பேச்​சுக்கு மதிப்பு கூடும். பிள்​ளை​கள் உடல்​நலம் சீராகும். வாக​னச் செலவு குறை​யும். வியா​பாரத்​தில் போட்​டிகள் குறை​யும். நாடி வந்​தவர்​களுக்கு உதவுவீர்​கள்.

மீனம்: வீண் பிரச்​சினை​களில் சிக்​காமல் இருங்​கள். பழைய கசப்​பான சம்​பவங்​கள் பற்றி யாரிட​மும்​ பேச வேண்​​டாம்​. வி​யா​பாரத்​தில்​ லாபம்​ உண்​டு. ஆன்​மிகம்​, யோ​கா​வில்​ ​நாட்​டம்​ ஏற்​படும்​. வீட்​டு உபயோகப்​ பொருட்​கள்​, மின்​னணு ​சாதனங்​கள்​ ​வாங்​குவீர்​கள்​.

  • 529