·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 995
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added article

முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் 'மைசா' கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான நடனப் படப்பிடிப்பு நடைபெற்றபோது, எதிர்பாராத விதமாக ராஷ்மிகா கீழே விழுந்தார். இதில் அவரது வலது பக்க இடுப்பு பகுதியில் உள்ள முக்கிய தசைநார் கிழிந்து 'காயமடைந்தார். இதனால் அவர் 6 வாரங்களுக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

என் வலது இடுப்பில் உள்ள ஒரு தசைநார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை தூக்க முடியவில்லை. அந்த தசைநார் மீண்டும் இணையும் வரை ஓய்வு தேவை. வலி இருக்கிறது, ஆனால் தாங்க முடியாத அளவுக்கு இல்லை. நீயாக ஒருபோதும் ஓய்வு எடுக்கமாட்டாய், அதனால் நானே உனக்கு ஓய்வு தருகிறேன் என்று கடவுள் கொடுத்த ஓய்வு. இப்போது கட்டாய ஓய்வில் இருக்கிறேன். உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால் நான் நிறைய சாப்பிட்டு 'டெசர்ட் மான்ஸ்டர்' ஆகிவிடுவேனோ என்ற பயத்தில் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்கிறேன். நிறைய புதிர்களைத் தீர்த்து நேரத்தை கழித்து வருகிறேன். கவலைப்படாதீர்கள், விரைவில் மீண்டு வருவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஷ்மிகாவின் இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் பாலர் வர் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

  • 46
·
Added article

ஜீவா நடிக்​கும் ‘தகப்​பன்’ படத்தை ‘கி​டா’ படத்தை இயக்​கிய ரா.வெங்​கட் இயக்​கு​கிறார். சுகு​மார் ஒளிப்​ப​திவு செய்​கிறார். நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்​கிறார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்​களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்​பில் குமார் தயாரிக்​கும் இப்​படத்​துக்​குச் சுயாதீன இசைக்​கலைஞர் மார்​ஷல் ராபின்​சன் இசையமைக்​கிறார்.

அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்​றும் மனித உணர்​வு​களை மைய​மாகக் கொண்ட ஆழமான குடும்​பக் கதை​யாக உரு​வாகி வரும் இப்​படத்​தின் முதல் தோற்​றம் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

“மதுரை பின்​னணி​யில் உரு​வாகும் இப்​படத்​தின் 50 சதவீத படப்​பிடிப்பு நிறைவடைந்​துள்​ளது. ‘தெ​னாவட்டு ’ திரைப்​படத்​துக்​குப் பிறகு, கிராமத்​துப் பின்​னணி​யில் ஜீவா நடிக்​கும் படம் இது. அவரது திரைப்​பயணத்​தில் முக்​கிய​மான மற்​றும் வித்​தி​யாச​மான படைப்​பாக இப்​படம் அமை​யும்​” என்​று படக்​குழு​வினர்​ தெரி​வித்​துள்​ளனர்​.

  • 56
·
Added a news

கல்கரியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள 'ஸ்டோனி டிரெயில்' சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த கோர முக்கோண வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் '90 அவென்யூ S.W.' பகுதிக்கு சற்று வடக்கே இந்த விபத்து நடந்துள்ளது.

வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில், தவறான திசையில் (தெற்கு நோக்கி) அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று, எதிரே சரியாக வந்த இரண்டு வாகனங்கள் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் தீவிரத்தில் சிறுவர் ஒருவர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் இருவர் சிறுவர்கள் ஆவர்.

இச்சம்பவம் குறித்து கல்கரி காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விபத்து காரணமாக பல மணி நேரம் மூடப்பட்டிருந்த அப்பாதை, திங்கள்கிழமை காலை 9:45 மணியளவில் மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.

  • 61
·
Added a news

கனடா உட்பட ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டம்

கனடாவிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் ஒன்றை மூட அமெரிக்கா திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டின் துவக்கத்தில் டிரம்ப் நிர்வாகம் பதவியேற்ற முதல் மாதங்களில், ட்ரம்பின், ‘அமெரிக்காவுக்கே முதலிடம்’ என்ற கொள்கைத் திட்டத்துடன், அமெரிக்க அதிகாரத்துவத்தை முழுமையாக ஒருங்கிணைக்கும் வகையில் மாற்றுவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை கிட்டத்தட்ட ஒரு டசின் வெளிநாட்டுத் தூதரகங்களை மூடுவதற்கான திட்டங்களை துவக்கியுள்ளதாக ராய்ச்சர்ஸ் முதலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகம், சுமார் 30 வெளிநாட்டுத் தூதரகங்களை மூடும் திட்டத்திற்குப் பரிந்துரைத்திருந்தது.

சில சிறிய வெளிநாட்டுத் தூதரகங்கள் அத்தியாவசியமற்றவை என்றும் நிதி ரீதியில் பயனற்றவை என்றும் சில நிர்வாக அலுவலர்கள் தனிப்பட்ட முறையில் வாதம் முன்வைத்திருந்தார்கள்.

இந்நிலையில், தற்போது, கிரேனாடா, ஜப்பான், இந்தோனேசியா, கேமரூன் மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகளில், நாட்டுக்கு ஒரு துணைத்தூதரகம் என ஐந்து துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாம்.

இவற்றில், கிரெனடாவின் செயின்ட் ஜார்ஜில் உள்ளது, ஒரு தூதரகம் (embassy) ஆகும். இந்தோனேசியாவின் மேடான், கனடாவின் வின்னிபெக் மற்றும் ஜப்பானின் நகோயாவில் உள்ள அலுவலகங்கள், துணைத் தூதரகங்கள் (consulates) ஆகும். அதே நேரத்தில், கேமரூனின் டூவாலாவில் உள்ள அலுவலகம், ஒரு தூதரகக் கிளை அலுவலகம் (embassy branch office) ஆகும்.

இந்த துணைத் தூதரகங்களும், கிளை அலுவலகங்களும், பொதுவாக, அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் ஒரு வெளிநாட்டின் தலைநகரத்திற்கு வெளியே உள்ள பிராந்தியங்களில், அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் அலுவலகங்கள் ஆகும்.

முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் போது, சீனாவுடன் செல்வாக்கிற்காகப் போட்டியிடும் பசிபிக் பிராந்தியத்தில், பல வெளிநாட்டுத் தூதரகங்களை அமெரிக்க அரசாங்கம் திறந்தது குறிப்பிடத்தக்கது.

  • 62
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பிரபலங்​கள்​ உதவுவர்​. பயணங்​கள்​ சிறப்​பாக அமை​யும்​. நேர்​கொண்​ட ​பார்​வை​யுடன்​ சில ​முடிவு​கள்​ எடு​ப்​பீர்​. அலு​வல​கத்​தில்​ ​தான்​ உண்​டு தன்​ வேலை என்​று இரு​க்​க பழகி​க்​ ​கொள்​வது நல்​லது. ​வி​யா​பாரத்​தில்​ பணி​யாட்​கள்​ கடமை​யுணர்​வுடன்​ செயல்​படு​வார்​கள்​.

ரிஷபம்​: தள்​ளிப்​ ​போய்​கொண்​டிருந்​த சுப​காரி​யங்​கள்​ கை கூடி வரு​ம்​. பணவர​வு உண்​டு. வீடு, ​வாக​னத்​தை ​மாற்​றுவீர்​. கூட்​டு​த்​தொழிலில்​ பங்​கு​தா​ரர்​ உதவி​கர​மாக நடந்​து ​கொள்​வார்​. ​வி​வாதங்​களை த​விர்​ப்​​பது நல்​லது. அலு​வல​கத்​தில்​ ​யாரை​யும்​ பகை​த்​துக்​ ​கொள்​ளாதீர்​கள்​.

மிதுனம்​: உங்​களைச்​ சுற்​றி​யிருப்​பவர்​களில்​ நல்​ல​வர்​கள்​ ​யார்​ என்​ப​தை கண்​டறிவீர்​கள்​. பணவர​வு ​திருப்​தி தரு​ம்​. பிள்​ளைகள்​ குடும்​ப சூழ்​நிலை அறிந்​து செயல்​படு​வர்​. அலு​வல​கத்​தில்​ மேல​தி​காரி ​பா​ராட்​டு​வார்​. ​வி​யா​பார ரீ​தி​யாக பிரபலங்​களை சந்​தி​க்​கும்​ ​வாய்​ப்​பு கிடைக்​கும்​.

கடகம்: வெளிவட்​டாரத்​ தொடர்​பு கூடும்​. பழைய கடனைத்​ தீர்​க்​க ​முயற்​சி செய்​வீர்​. தேவை பூர்​த்​தி​யாகும்​. பூர்​வீக வீட்​டை சீரமைத்​து ​விரிவுபடு​த்​தி கட்​டு​வீர்​கள்​ ​வி​யா​பாரத்​தில்​ டென்​ஷன்​ ​வில​கும்​. அலுவல​கத்​தில்​ தேடிய ​முக்​கிய ஆவணம்​ தென்​படும்​.

சிம்​மம்​: புது வீடு, மனை, ​வாக​னம்​ ​வாங்​கு​வது குறித்​து யோசிப்​பீர்​. வெளியூர்​ பயணங்​களால்​ ஆ​தா​யம்​ உண்​டு. ​வி​யா​பாரத்​தில்​ ​போட்​டி ​வில​கும்​. பு​தி​ய பங்​கு​தா​ரரின்​ கருத்​துகளுக்​கு ​முக்​கி​யத்​து​வ​ம்​ அளிப்​​பது நல்​லது. அலு​வல​கத்​தில்​ பணிச்​சுமை குறை​யும்​. ம​திப்​பு உயரு​ம்​.

க​ன்​னி: மக​னின்​ படிப்​பு, மகளின்​ ​திரு​மணம்​ தொடர்​பாக அலைச்​சல், டென்​ஷன்​ இரு​க்​கும்​. ​வாக​னம்​ பழு​தாகும்​. மனை​விவழி​யில்​ ​வி​வாதங்​கள்​ வந்​து ​போகும்​. எ​தி​லும்​ அவசரம்​ ​காட்​ட வேண்​டா​ம்​. உத்​தி​யோகம்​ சிறக்​கும்​. ​வி​யா​பாரத்​தில்​ பங்​கு​தா​ரரின்​ ஆலோ​சனையை ஏற்​க​​வும்​.

துலாம்​: சோர்​வு நீங்​கி சுறுசுறுப்​புடன்​ செயல்​பட்​டு பணி​களை ​முடிப்​பீர்​. குடும்​ப​த்​தில்​ கல​கலப்​பான சூழல்​ ஏற்​படும்​. சிந்​தனைத்​ ​திறன்​ கூடும். மனை​வி, ​தா​யாரின்​ ஆரோக்​கி​யம்​ சீ​ராகும்​. ​வி​யா​பாரம்​ சூடு பிடித்​து லாபம்​ ​பார்​ப்​பீர்​. அலு​வல​கத்​தில்​ ம​திப்​பு, மரி​யாதை உயரு​ம்​.

​விருச்​சிகம்: புத்​தி​சாலித்​தனம்​ வெளிப்​படும்​. பணவர​வு ​திருப்​தி தரும்​. பிரபலங்​கள்​ நண்​பர்​களா​வார்​கள்​. வீட்​டில்​ அமை​தி நில​​வும். ஆன்​மிகத்​தில்​ ஈடு​பாடு கூடும்​. ​வி​யா​பாரத்​தை பெரியள​வில்​ ​விரிவுபடு​த்​த ​முயற்​சிப்​பீர்​. அலு​வல​கத்​தில்​ ​யாரை​யும்​ பகை​த்​துக்​ ​கொள்​ளாதீர்​கள்​.

தனுசு: குடும்​ப​த்​தினரின்​ ​விருப்​ப​த்​தை கேட்​டறிந்​து நிறைவேற்​றுவீர்​கள்​. பிள்​ளைகளால்​ அந்​தஸ்​து உயரு​ம்​. நண்​பர்​கள்​ மூலம்​ உத​வி​யுண்​டு. ​வி​யா​பாரத்​தில்​ பு​தி​ய ​யுக்​தி​களைக்​ கை​யாண்​டு பழைய ​வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர்​. உத்​தி​யோகத்​தில்​ ​முன்​னேற்​றம்​ ​காண்​பீர்​கள்​.

மகரம்​: குடும்​ப​த்​தா​ரின்​ உணர்​வு​களைப்​ புரிந்​துக்​ ​கொள்​வீர்​. பிள்​ளைகளால்​ பெருமையடைவீர்​. பூர்​வீக வீடு, மனை, ​விவ​சாய நிலம்​ உள்​ளிட்​ட​வற்​றை ​விற்​க ​முயற்​சிப்​பீர்​கள்​. ​வியா​பாரத்​தில்​ பிரபலங்​களின்​ அறிமுகம்​ கிட்​டும்​. உத்​தி​யோகம்​ சிறக்​கும்​.

கும்​பம்​: ​வாழ்​க்​கை​யின்​ நெளிவு, சுளிவு​களைக்​ கற்​றுக்​ ​கொள்​வீர்​. மனை​விவழி உற​வினர்​ மத்​தி​யில்​ ம​திப்​பு உயரு​ம்​. நண்​பர்​ உத​வி​யுடன்​ புது வேலை கிடைக்​கும்​. அலு​வல​கத்​தில்​ பு​தி​ய ப​தவி​க்​கு பரிந்​துரைக்​கப்​படு​வீர்​. ​வி​யா​பாரம்​ லாபம்​ தரு​ம்​. பங்​கு​தா​ரரின்​ ஆதர​வு கிட்​டும்​

மீனம்​: சின்​னச்​ சின்​ன ​விஷ​யங்​களுக்​கு வருந்​தாதீர்​கள்​. நி​தான​மாகப்​ பேச​வும்​. நீங்​கள்​ ஒன்​று பேசப்​ ​போய்​ மற்​றவர்​கள்​ அதை வேறு​வித​மாகப்​ புரிந்​துக்​ ​கொள்​வர்​. அலு​வல​கத்​தில்​ அடு​த்​தவர்​ ​விஷயத்தில்​ தலை​யிடாதீர்​. ​வி​யா​பாரத்​தில்​ பங்​கு​தாரரின்​ கருத்​துகளை ஏற்​கவும்​.

  • 167
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 4.8.2026

இன்று இரவு 07.52 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று இரவு 08.29 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி. நாமயோகம் : இன்று மாலை 06.53 வரை திருதி. பின்னர் சூலம்.

இன்று காலை 08.32 வரை கரசை. பின்னர் இரவு 07.52 வரை வணிசை. பிறகு பத்திரை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=605&dpx=2&t=1785811882

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.00 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 173

Good Morning...

  • 168
  • 246
  • 244
·
Added a news

கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் டொரண்டோவைச் சேர்ந்த 32 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணியளவில், பேக்கன்ரிக் பே பகுதிக்கு அருகிலுள்ள ரொசோ ஏரியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக ஒண்டாரியோ மாகாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தபோது, பலத்த சேதமடைந்த நிலையிலிருந்த படகு ஒன்று பாறை விளிம்பில் ஆபத்தான முறையில் சமநிலை இழந்து நின்றதை அவதானித்துள்ளனர்.

விபத்து நடந்த இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர்.

சனிக்கிழமை பிற்பகலில் காணாமல் போன இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • 253
·
Added a post

சப்தகன்னியரில் ஒருவரான வராகி அம்மன், திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர்.

மாமன்னர் ராஜராஜ சோழனின் குலதெய்வம் வராகி அம்மன். தஞ்சை பெரிய கோவின் தெற்கு பிரகாரத்தில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. வராகி அம்மன்,வலது கையில் உலக்கையுடனும், இடது கையில் கலப்பையுடனும் காட்சி தருகிறார்.

ராஜராஜ சோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார். ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு பல இடங்களை தேர்வு செய்தார். ஆயினும் இறைவனிடமிருந்து உத்தரவு கிடைக்க தாமதமானது. அப்போது ஒரு நாள் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு இடத்தில் மன்னருக்கு முன்பு ஒரு பன்றி எதிர்த்து நின்றது. அதனை துரத்திச் சென்றபோது போக்கு காட்டி பல இடங்களுக்கு சென்று ஒரு பெரிய திடலில் சுற்றி சுற்றி வந்து படுத்துக்கொண்டது .

இது ராஜராஜ சோழனுக்கு வியப்பை அளித்தது. வராகமாக இருப்பதனால் அதனை கொல்லாமல் துரத்தினார். ஆனால் அது எழுந்து நின்று தன் காலால் தரையை உதைத்து பூமியை தோண்டியது. அரண்மனை திரும்பிய ராஜராஜ சோழன் ஜோதிடரை அழைத்து விவரம் கேட்டார். கோவில் கட்ட அந்த இடத்தினை வராகி தேவி தேர்ந்தெடுத்து கொடுத்து இருப்பதை தெரிவித்தார் ஜோதிடர் .அந்த இடத்தில் பெரிய கோவில் கட்டும் முன்பு வெற்றி தேவதை வராகிக்கு சிறிய தனித்த ஒரு சன்னதியை அக்னி மூலைக்கு அருகில் அமைத்து வழிபட்டு பின்னர் பணியை தொடங்கினார்.

அந்த வராஹி தேவியின் அருளால் உலகம் போற்றும் ஆலயமாக பெரிய கோவில் மாறி நிற்கிறது. ராஜ ராஜ சோழன் கடைபிடித்த முறையிலேயே தற்போதும் எந்த ஒரு நிகழ்ச்சியை தொடங்குவதானாலும் முதலில் வராகி அம்மனுக்கு பூஜை செய்த பின்னரே தொடங்கும் வழக்கம் பெரிய கோவிலில் உள்ளது.

பிரார்த்தனை

பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபட்டால் வறுமை, பிணி, பில்லி, செய்வினைகள் அகலும். எதிரிகள் விலகுவர் என்பது ஐதீகம். வழக்குகளிலிருந்து விடுபட வராகியின் அருள் கட்டாயம் தேவை. வராகி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது.

  • 255
·
Added article

🌹விருதுநகர் கந்தன் ராமசாமி, தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியா கலைஞன். நாடகத் துறையில் 15 ஆண்டுகள், சினிமாவில் சுமார் 35 ஆண்டுகள் என 50 ஆண்டுகள் கலையுலகில் பயணித்த மகா கலைஞன்.18 வயது தொடங்கி தனது இறுதிக் காலம் வரை தமிழ் சினிமாவில் `முதியவர்’ கேரக்டராகவே வாழ்ந்த வி.கே.ராமசாமியை தமிழ் சினிமா ஏன் மிஸ் பண்ணுகிறது… 5 காரணங்களைத்தான் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

🌹நாடகங்களில், தனது கணீர் குரலால் ரசிகர்களை மகிழ்வித்த வி.கே.ராமசாமி சினிமாவிலும் வசன உச்சரிப்பில் அசத்தினார். தனது 18 வயதில் இயக்குநர் ப.நீலகண்டனின் `தியாக உள்ளம்’ நாடகத்தில் 60 வயது பேங்கரானபிளாக் மார்க்கெட்’ சண்முகம் கேரக்டரில் அசத்தினார் வி.கே.ஆர். அது பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த நிலையில், படங்களிலும் முதியவர் கேரக்டர்களிலேயே அதிகம் நடித்திருக்கிறார். `

🌹அதுல பாருங்க தம்பி…’ என இவர் வசனத்தைத் தொடங்கும் முன்னரே, அந்த கேரக்டரின் அழுத்தம் ரசிகனின் மனதில் பிம்பத்தை ஏற்படுத்திவிடும்.

🌹விகேஆரின் வசன உச்சரிப்புக்கு முத்தாய்ப்பாக எத்தனையோ படங்கள் அமைந்திருந்தாலும், ஆண்பாவம் படத்தில் அவரின் குறும்புப் பேச்சுக்கு 80ஸ், 90ஸ் கிட்ஸ் மட்டுமல்ல, நிறைய 2கே கிட்ஸ் ரசிகர் வட்டமே இருக்கிறது. மூதேவி என்ற வார்த்தை கூட சிரிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் விகேஆரின் டயலாக் டெலிவரி செய்த மேஜிக். வேலைக்காரன், `ராஸ்கோலு’ தொடங்கி இதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். முதலாளி, வேலைக்காரன், நாட்டாமை தொடங்கி, தமிழ் சினிமாவில் இவர் ஏற்காத கேரக்டர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால், தனது டயலாக் டெலிவரியால் அந்த கேரக்டருக்கு எனர்ஜி ஏற்றுவார்.

🌹தமிழ் சினிமாவில் பாகவதர் காலம் தொடங்கி எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி கமல், அஜித் – விஜய் காலம் வரை தனது நடிப்பால் முத்திரை பதித்தவர் விகேஆர். இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், எம்.ஜி.ஆர் நடித்த உரிமைக்குரல் படத்தில் மனைவிக்கு அடங்கி நடக்கும் பணக்காரராக நடித்திருப்பார்…

🌹 கமலஹாசன் நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்திலும் அதே கேரக்டர்தான் விகேஆர் ஏற்றிருப்பார். ஆனால், இந்த இரண்டிலும் அவர் காட்டிய வெரைட்டி அவரைத் தனித்து அடையாளம் காட்டும்

🌹1960-கள் தொடங்கி 1990-களின் இறுதி வரை 60 வயது முதியவர் கேரக்ட்ரா… கூப்பிடுங்கப்பா விகேஆரை என்று தயாரிப்பாளர்களும் இயக்குநர்களுக்கும் தேடும் முதல் நபராக இருந்தார். தனது கரியரில் பெரும்பாலான படங்களில் முதியவர் கேரக்டர்தான் என்றாலும், எல்லாவற்றிலும் தனித்துவ முத்திரை பதித்திருப்பார். வில்லத்தனம் செய்யும் வயதான வேலைக்காரன், விசுவாசமான வேலைக்காரன், பணக்கார தாத்தா, `பிளேபாய்’ வயோதிகர் என வெரைட்டி விருந்து படைத்திருப்பார் விகேஆர்.

🌹விகேஆர் நடிப்பில் பெரும்பாலான படங்களில் முத்திரை பதித்திருப்பார். ஆனால், குறிப்பிட்ட சில படங்களில் அவரின் ஏற்றிருந்த கேரக்டர்கள் தமிழ் சினிமாவின் எவர்கிரீனாக நிலைத்துவிட்டன. பராசக்தி’ வில்லன் கேரக்டர், ருத்ரதாண்டவம்சிவன்’, திகம்பர சாமியார் வேலாயுத பிள்ளை’, குமரிக்கோட்டம்சோமு’, வீரபாண்டிய கட்டபொம்மன் எட்டப்பன்’, அரங்கேற்ற வேளைநம்பி ராஜன்’, வேலைக்காரன் வளையாபதி’, மௌனராகம்

🌹 சந்திரக்குமாரின் பாஸ் கேரக்டர், உயர்ந்த உள்ளம்சாமிக்கண்ணு’, ஆண்பாவம் `ராமசாமி’, கல்யாணராமன்கல்யாணம்’, அக்னி நட்சத்திரம் லட்சுமிபதியின் முதலாளி உள்ளிட்டவைகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

  • 257
·
Added a post

ஆடி மாதம் வந்துவிட்டாலே கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டி விடும். அதில் முக்கியமானது அம்மன் கோவிலில் ஊற்றப்படும் கூழ் மிகவும் மகத்துவம் வாய்ந்தது.

ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால், அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது நம்பிக்கை.

பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். அதனால்தான் சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்கியம் கைகூடும், நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்போருக்கு குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாட்டு மாதமாகிறது. ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி பௌர்ணமி, ஆடிப்பெருக்கு என்று பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. இத்தகைய விசேஷ நாட்களில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

🙏ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஏன்?

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை, பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்க முடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.

அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.

ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார்.

அப்போது சிவபெருமான் தோன்றி ரேணுகாதேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் பல நவீன தடுப்பூசிகளால் அம்மை நோய் பரவலாக குறைந்துள்ளது. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நோயின் தாக்கம் ஆடி மாதத்தில் அதிக அளவில் இருந்தது. இதற்கு காரணம் ஆடி மாதத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலையே காரணம் ஆகும். இந்த மாதத்தில் ஒரு விதமான அதீத வெப்பமும், வறட்சி காற்றும் அதிகம் இருக்கும். இதனால் பல்வேறு நோய்கள் மக்களை தாக்கியது. அதில் மிக கொடிய நோயாக கருதப்பட்டது அம்மை நோயே. இதனால் சிலர் இறந்தும் போனார்கள். இதை தவிர்க்கவே, ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றும் வழக்கத்தை கடைபிடித்து வந்தனர். இதை ஆடிக்கஞ்சி என்பர்.

  • 251
·
Added article

🌹ஒருமுறை மைசூரில் நீதி படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது . நாங்கள் மெட்ராஸிலிருந்து மைசூர் சென்றோம், விமான நிலையத்தில் எங்களுக்காக எனது கார் காத்திருந்தது. வழக்கம் போல் ஓட்டினேன். அங்கே சிவாஜியின் மனைவியும் இருந்தார்.

🌹அவர் என் படங்களுக்கு ஷூட்டிங் செல்லும் போது நான் தினமும் அவரை அழைத்துச் செல்வது வழக்கம் -- நான் கார் ஓட்டுவதைஅவர் மிகவும் ரசிப்பார்.

🌹அப்போது திடீரென டயர் ஒன்று பஞ்சர் ஆனது. நான் உண்மையிலேயே கவலைப்பட்டேன். அது இரவு 2மணி, எங்கும் ஒருவரும் தெரியவில்லை. எங்கும் இருட்டாக இருந்தது, ஆனால் சிவாஜி அமைதியாக இருந்தார்.

🌹பிறகு காரில் இருந்து இறங்கி வெளியே வந்து ஸ்டெப்னியை எடுத்து டயரை மாற்றினார். சிவாஜி கணேசன் கார் டயரை மாற்றுவதை கற்பனை செய்து பாருங்கள். பின்னர், நான் அவரைக் கிண்டல் செய்தேன்

🌹மழை நாட்களில், அவர் என்னை கார் ஓட்டுவதற்கு என்னை அழைப்பார், நாங்கள் கடற்கரையில் காரை ஓட்டுவோம்.

🌹அதன் பிறகு ஒருநாள் அவர் எனக்கு போன் செய்து, மழையை ஒன்றாக அனுபவித்து வெகு நாட்களாகிவிட்டது என்றார்.

🌹அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் அவரை மருத்துவமனையில் சந்தித்தேன். எழுந்திருக்கத் தயங்கினார். அப்போது அவருடைய மனைவி, உங்கள் நண்பர் வந்துள்ளார். நீங்கள் எழுந்திருக்க மாட்டீர்களா என்றார்.

🌹அவர் என்னைப் பார்த்து, "என்னால் முடியாது, நண்பரே" என்றார். நான் அவர் நிலமையை மிகவும் மோசமாக உணர்ந்தேன்.

🌹அவரை உற்சாகப்படுத்த, “ அண்ணே, நீங்க நல்லா இருக்கீங்க, நீங்க எழுந்து என்னோட பேசறீங்க” என்றேன் .அவர் செவிலியரிடம் படுக்கைக்கு முட்டுக்கட்டை போடச் சொன்னார்,

🌹அவர் என்னிடம் முதலில் கேட்டது, நீ கார் ஓட்டினாயா? நான் எப்போதும் எனது காரை ஓட்டுவது அவருக்குத் தெரியும், மேலும் எனது இரண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் ஓட்டுவதை அவர் விரும்பவில்லை

அன்று, பழைய நாட்களைப் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவரின் மறைவால் நான் என் சகோதரனை இழந்துவிட்டேன்.

  • 254
·
Added article

திருமணமான புதிதில் தான் மணிரத்னத்தை விட செல்வாக்காக இருந்ததாக அவரது மனைவி நடிகை சுஹாசினி நகைச்சுவையாக கூறியுள்ளார்.

🌹சினிமாவில் வெற்றிகரமான நட்சத்திர தம்பதியராக வலம் வரும் மணிரத்னம் - சுஹாசினி ஜோடி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் அவ்வப்போது வெளிவருவதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சுஹாசினி, தன் திருமணத்தின்போது மணிரத்னத்தை விட தான் அதிக வெற்றி பெற்ற நடிகையாக இருந்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

🌹நடிகை சுஹாசினி மற்றும் இயக்குநர் மணிரத்னம் இருவரும் 1988 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நந்தன் என்ற ஒரு மகன் உள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான தம்பதியராக இவர்கள் இருவரும் வலம் வருகின்றனர். இந்நிலையில் திருமணத்தின்போது மணிரத்னத்தை விட தான் அதிக வெற்றி பெற்ற நடிகையாக இருந்ததாக சுஹாசினி கூறியுள்ளார்.

🌹அவர் கூறும்போது, "எங்களுக்குத் திருமணம் ஆனபோது, நான் ஏறக்குறைய 90 படங்களில் நடித்து முடித்திருந்தேன். ஆனால், மணிரத்னம் அப்போது 5 அல்லது 6 படங்களை மட்டுமே இயக்கியிருந்தார். அவருடைய வங்கிக் கணக்கில் ₹15,000 மட்டுமே இருந்தது. ஆக, திருமண சமயத்தில் அவரை விட நான் தான் பெரிய வெற்றிகரமான நபராக இருந்தேன்" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

  • 255
·
Added a post

அஷ்ட திக் சக்திகளை வணங்கினால் எல்லா வளமும் பெறலாம் !!

ஒவ்வொரு திக்குகளை ஆளும் சக்திகள் !!

1. கிழக்கு - ப்ரஹ்மணி (பிராம்மி)

2. தென்கிழக்கு - கௌமாரி

3. தெற்கு - வராஹி

4. தென்மேற்கு - சியாமளா

5. மேற்கு - வைஷ்ணவி

6. வடமேற்கு - இந்திராணி

7. வடக்கு - சாமுண்டி

8. வடகிழக்கு - மகேஸ்வரி

பிராம்மி :

🌟 பிரம்ம தேவரின் அம்சமும் சக்தி வடிவமே பிராம்மி என்று அழைக்கப்படுகிறாள். கிழக்கு திசையின் சக்தி வடிவம். பிராமி சக்தியை வணங்குவதால் குழந்தைப் பேறும், கலை ஞானமும் உண்டாகும்.

கௌமாரி :

🌟 சரவணனின் அம்சமாக அவதரித்தவள் கௌமாரி என்று அழைக்கப்படுகிறாள். தென் கிழக்கு திசையின் சக்தி வடிவம். கௌமாரி தேவியை வழிபடுவதால் பதவி உயர்வும் மனதில் இருக்கும் பயமும் அகலும்.

வராஹி :

🌟 விஷ்ணுவின் அவதாரமான வராக மூர்த்தியின் அம்சமாக இருப்பவர் வராஹி. தெற்கு திசையின் சக்தி வடிவம். வராஹி தேவியை வணங்கி வருவதால் எதிரிகளை அழித்து வெற்றி கொள்ளலாம். மனதில் தைரியம் பிறக்கும்.

சியாமளா :

🌟 மீனாட்சி அம்மனின் அவதாரமாக திகழ்பவள் சியாமளா தேவி. தென் மேற்கு திசையின் சக்தி வடிவம். சியாமளா தேவியை வழிபடுவதால் சகல கலைகளிலும் தேர்ச்சி மற்றும் அறிவுக்கூர்மை உண்டாகும்.

வைஷ்ணவி :

🌟 விஷ்ணுவின் அம்சமாக தோன்றியவர். நாராயணி என்றும் அழைக்கப்படுபவள். மேற்கு திசையின் சக்தி வடிவம். வைஷ்ணவியை வழிபடுவதால் உடல் ஆரோக்கியமும் எண்ணங்களில் மேன்மையும் உண்டாகும்.

மஹேந்திரீ (இந்திராணி) :

🌟 தேவலோகத்தின் அதிபதியான இந்திரனின் அம்சமாக தோன்றியவர் இந்திராணி. வடமேற்கு திசையின் சக்தி வடிவம். இந்திராணியை வழிபடுவதால் நல்ல வாழ்க்கைத் துணை அமைத்து தருவார். பணத்தட்டுபாடு குறையும்.

சாமுண்டி :

🌟 ருத்தரனின் அம்சமாக தோன்றியவர். எந்த விதமான சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாதவர். வடக்கு திசையின் சக்தி வடிவம். சாமுண்டியை வணங்கி வருவதால் எடுத்த செயலில் எவ்விதமான இன்னலும் இன்றி வெற்றியும், பாதுகாப்பும் உண்டாகும்.

மகேஸ்வரி :

🌟 சிவபெருமானின் அம்சமாக திகழக்கூடியவர் மகேஸ்வரி. வடகிழக்கு திசையின் சக்தி வடிவம். மகேஸ்வரியை வழிபடுவதால் மனதில் இருந்து வந்த ஐயங்கள் மற்றும் கோபம் நீங்கும். சகல பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக் கூடியவர்.

🌟 இவ்விதம் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் அஷ்ட திக் சக்திகளை வாழ்நாளில் அனுதினமும் வழிபட்டு வாழ்க்கையில் உள்ள எல்லா வளமும், சிறப்பும் பெற்று முன்னேறுவோம்.

  • 263
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனை உண்டாகும். மனை சார்ந்த உதவிகள் சாதகமாகும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உறவினர்கள் வழியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். கல்வி பணிகளில் இருந்த ஆர்வமின்மை குறையும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

ரிஷபம்

ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். செல்வ சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் கைகூடும். இணையத் துறைகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மிதுனம்

வியாபார தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். சவாலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கடகம்

வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். வெளியூர் பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். இறை சார்ந்த பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா

 

சிம்மம்

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களிடத்தில் வாதங்களை தவிர்க்கவும். உயர்கல்வியில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பது தவிர்க்கவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

கன்னி

வியாபாரப் பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். போட்டி தேர்வுகளில் சாதகமான சூழல் உண்டாகும். காப்பீடு பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

துலாம்

கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உறவினர்கள் வருகை உண்டாகும். கனிவான பேச்சுக்களால் காரிய சித்தி ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

மாற்றமான சிந்தனைகள் மூலம் புதுவிதமான அனுபவங்களும் சூழ்நிலைகளும் உருவாகும். உங்கள் மீதான அவப்பெயர்கள் அகலும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பூர்விக சொத்துக்கள் குறித்த சிந்தனைகள் மேம்படும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

தனுசு

உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் மூலம் வியாபாரத்தில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உருவாகும். பயணங்களில் இருந்து வந்த காலதாமதம் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மகரம்

புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். விமர்சன பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. மாறுபட்ட அணுகு முறையில் செயல்படுவீர்கள். சொத்து விற்பது, வாங்குவதில் லாபமான சூழல் அமையும். புதிய மின்சார பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் மதிப்பு மரியாதை மேம்படும். பணி நிமித்தமான உதவிகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கும்பம்

குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் மூலம் மனதில் குழப்பமான சூழல் அமையும். பணி நிமித்தமான அலைச்சல் மேம்படும். வியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். எதிலும் திருப்தியற்ற சூழல் அமையும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. அதிகாரிகளால் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 332
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 18 ஆம் தேதி திங்கட்கிழமை 3.8.2026.

இன்று இரவு 09.13 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று இரவு 09.06 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று இரவு 9.00 வரை சுகர்மம். பின்னர் திருதி.

இன்று காலை 09.40 வரை கௌலவம். பின்னர் இரவு 09.13 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று காலை 06.03 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=604&dpx=2&t=1785735286

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 335
·
Added a post

திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் 10 நாள்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறும். இதிலும் பங்குனி மாத பூரம் நட்சத்திரத்தன்று திருத்தேரோட்டம் நடைபெற்று, சுவாமி ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சித்திரை மாத முதல் தேதியான தமிழ் வருடப் பிறப்பன்று பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு நடைபெறும். இதையொட்டி பிரம்மபுரீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். இதுபோல, ஆடிமாத பூரம் நட்சத்திரத்தன்று பிரம்ம சம்பத் கௌரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, ஐப்பசி மாத பௌர்ணமியன்று பிரம்மபுரீசுவரருக்கு அன்னாபிஷேகம், கார்த்திகை மாத சோமவார திங்கள்கிழமைகளில் சங்காபிஷேகம் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா, மாசி மாதத்தில் மகா சிவராத்திரி ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்படும்.

பூஜைகள்

இக்கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலசாந்தி பூஜை காலை 8.30 மணி முதல் 9.30, உச்சிக்கால பூஜை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12, சாயரட்சை பூஜை மாலை 6 மணி முதல் 6.30, அர்த்தசாம பூஜை இரவு 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

இக்கோயில் வார நாள்களில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், வியாழக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1, மாலை 4 மணி முதல் இரவு 8 வரை திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்கும், மற்ற நாள்களில் காலை 8 மணிக்கும் அபிஷேகம் நடைபெறும்.

அரங்கேற்றம்

சுந்தரருடன் சேரமான் கயிலாயம் சென்றபோது சிவனைப் பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை சாஸ்தா அய்யனார் என்றழைக்கப்படும் மாசாத்தய்யனாரைக் கொண்டு இத்திருக்கோயிலில் அரங்கேற்றம் செய்தார் சிவபெருமான்.

அரங்கேற்ற அய்யனார்

பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு திருப்பட்டூரில் அய்யனாருக்கு மிகப்பெரிய கற்கோயில் அமைந்துள்ளது. ஞான உலா அரங்கேற்றிய அய்யனார் என்ற பெயரில் கையில் ஓலைச்சுவடியுடன் காட்சியளிக்கிறார்.

பல்வேறு காலகட்டத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பலர் இங்கு வந்து போரில் வெற்றி பெற வேண்டி, பின்னர் மாபெரும் வெற்றிகளைப் பெற்று அவர்களின் குலதெய்வமாக அய்யனாரை வணங்கியிருக்கின்றனர். இக்கிராமத்தின் காவல் தெய்வமாக பூர்ணபுஷ்கலாம்பிகா சமேத அரங்கேற்ற அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

வியாக்ரபாதர் புலிக்கால் முனிவர் ஜீவ சமாதி

திருப்பட்டூரில் காசி விசுவநாதர் சமேத விசாலாட்சி கோயிலில் வியாக்ரபாதர் ஜீவ சமாதி உள்ளது. சிவபெருமான் அருளால் வியாக்ரபாதர் காலால் அடித்துக்கொண்டு வரப்பட்ட கங்கைக்குளம் இன்றும் புலிக்கால்களைப் போல காட்சியளிக்கிறது.

எப்படிச் செல்வது?

திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மசம்பத் கௌரி உடனுறை பிரம்மபுரீசுவரர் திருக்கோயில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியிலிருந்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. விமானம் மற்றும் ரயில் மூலமாக வருபவர்கள் திருச்சி வந்து சமயபுரம், சிறுகனூர் வழியாக இக்கோயிலைச் சென்றடையலாம்.

  • 334

Good Morning.....

  • 332
·
Added a post

உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூரில் உள்ள ராஸ் மண்டல் ஜெகந்நாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வித்தியாசமான வழக்கம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்தக் கோவிலில், வருடாந்திர தேரோட்டத் திருவிழாவிற்கு முன்பாக, சுமார் 10 மருத்துவர்கள் ஜெகந்நாதர் மற்றும் பிற தெய்வச் சிலைகளுக்கு ஸ்டெதஸ்கோப், ரத்த அழுத்தக் கருவி (BP), தெர்மாமீட்டர் போன்ற மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தி ‘உடல்நல பரிசோதனை’ செய்வது, பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் கோவில் மரபாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கத்தின்படி, தேரோட்டத்திற்கு முன் தெய்வங்களுக்கு 108 குடம் புனித நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வளவு நீரைத் தலையின் மீது ஊற்றுவதால், தெய்வத்திற்கு காய்ச்சல் ஏற்பட்டதாக ஐதீகம் கூறுகிறது.

அதன்பிறகு, தெய்வம் 15 நாட்கள் ‘தனிமைப்படுத்தப்பட்ட’ நிலையில் (Quarantine) இருப்பதாகக் கருதி, அந்த நாட்களில் கோவிலின் நடை மூடப்படும்.

இந்த 15 நாட்கள் முழுவதும் தெய்வத்திற்கு ஆயுர்வேத கஷாயம் மற்றும் பச்சை மூலிகை மருந்துகள் மட்டுமே சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

15 நாட்கள் முடிந்த பிறகு, மீண்டும் அப்பகுதியைச் சேர்ந்த MBBS மருத்துவர்கள் வந்து தெய்வத்தின் ‘உடல்நிலையை’ பரிசோதிப்பார்கள். தெய்வம் முழுமையாக நலமடைந்துவிட்டதாக அவர்கள் குறியீட்டு முறையில் அறிவித்த பிறகே கோவில் நடை திறக்கப்பட்டு, மிக விமரிசையாக தேரோட்டத் திருவிழா கொண்டாடப்படும் என்பது அந்தக் கோவிலின் ஐதீகம்.

ஒடிசா மாநிலம், பூரி ஜெகந்நாதர் கோவிலிலும் இதேபோன்ற மரபு பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 440
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். இடது கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் மேம்படும். தூர தேச பயண எண்ணங்கள் கைகூடிவரும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். அலங்கார விஷயங்களில் ஈர்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

ரிஷபம்

ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேம்படும். பணி சார்ந்த சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

மிதுனம்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பயணம் முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத சிலரின் உதவியால் மாற்றங்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை

 

கடகம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலை ஆட்களிடம் இருந்த வேறுபாடுகள் நீங்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஆதரவுகள் மேம்படும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் உருவாகும். சொத்துப் பிரச்சனைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

சிம்மம்

செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். தொழிலில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். விவசாய பணிகளில் அலைச்சல் உண்டாகும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தடுமாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கன்னி

எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வாழ்க்கை துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தடைப்பட்ட சுப காரியம் நடைபெறும். அலுவலகப் பணிகளில் நிர்வாகத் திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

துலாம்

விவசாய பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உருவாகும். தொழில் நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைக்கூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆடம்பரமான சிந்தனைகளை தவிர்த்து சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

விருச்சிகம்

வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். இலக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகளும் வாய்ப்புகளும் ஏற்படும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

தனுசு

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். உடல் ஆரோக்கிய தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபார எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன்களை அடைப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கும்பம்

கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். சுபகாரிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் மறைமுகமான தடைகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

மீனம்

இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 477
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 2.8.2026.

இன்று இரவு 10.08 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று இரவு 09.14 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.

இன்று அதிகாலை 12.10 வரை சோபனம். பின்னர் இரவு 10.46 வரை அதிகண்டம். பிறகு சுகர்மம்

இன்று காலை 10.22 வரை பவம். பின்னர் இரவு 10.08 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று காலை 06.02 வரை மரண யோகம். பின்னர் இரவு 09.14 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=603&dpx=2&t=1785669929

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை: 03.15 முதல் 04.15 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 482

Good Morning....

  • 472