·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 1071
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
  • 18
  • 17
·
Added a post

ஒரு சிறிய நகைக்கடைக் கவுண்டருக்குப் பின்னால் நின்ற அந்தச் சிறுவன்…

ஒரு சிறிய நகைக்கடையின் கவுண்டருக்குப் பின்னால் நின்ற அந்தச் சிறுவன், ஒருநாள் உலகின் பல நாடுகளிலும் தனது பெயரில் நகைக்கடைகளைத் திறப்பார் என்று அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

1956-ஆம் ஆண்டு திருச்சூரில், அவரது தந்தை வர்கீஸ் ஆலுக்காஸ் தொடங்கிய சிறிய நகைக்கடைத் தொழிலில்தான் ஜாய் ஆலுக்காஸின் கதை தொடங்கியது.

அதே ஆண்டில் பிறந்த ஜாய், பெரிய குடும்பத்தில் வளர்ந்தாலும், சிறு வயது முதலே தந்தையின் தொழிலுடன் நெருக்கமாக இருந்தார்.

வெறும் 15 வயதிலேயே குடும்ப நகைக்கடையில் விற்பனையாளராக வேலை செய்யத் தொடங்கினார். கவுண்டருக்குப் பின்னால் நின்று வாடிக்கையாளர்களைச் சந்தித்து, அவர்களின் விருப்பங்களையும் தேவைகளையும் புரிந்துகொண்ட அந்தக் காலம்தான் அவரது முதல் வணிகப் பள்ளியாக அமைந்தது.

கேரளாவில் குடும்பத் தொழில் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில், ஜாயின் கவனம் வளைகுடா நாடுகளின் சந்தை மீது திரும்பியது.

1986-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்ற அவர், அங்குள்ள சந்தையை நேரடியாகப் புரிந்துகொண்டார். அதன் பின்னர் அபுதாபியில் குடும்பத்தின் முதல் வெளிநாட்டு ஷோரூம் தொடங்கப்பட்டது.

வளைகுடா சந்தையின் வாய்ப்பை சரியாகப் புரிந்துகொண்டதால், அங்கு தொழில் மிக வேகமாக வளரத் தொடங்கியது.

குடும்பத் தொழிலில் இருந்து தனியாகப் பிரிந்த பிறகு, குடும்பத்தின் பாரம்பரியத்துடன் தனது பெயரையும் இணைத்து “Joyalukkas” என்ற சொந்த பிராண்டை உருவாக்கினார்.

வளைகுடா நாடுகளில் வலுவான இடத்தைப் பிடித்த பிறகு, இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் தனது தொழிலை விரிவுபடுத்தத் தொடங்கினார்.

2002-ஆம் ஆண்டு கேரளாவின் கோட்டயத்தில் முதல் இந்திய ஷோரூம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2004-ஆம் ஆண்டு கோயம்புத்தூரிலும் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தினார்.

தொழில் வளர்ந்து கொண்டிருந்தாலும், குடும்பமும் இந்தப் பயணத்தின் முக்கியமான ஒரு பகுதியாகவே இருந்தது.

அவரது மனைவி ஜோலி ஜாய், Joyalukkas Foundation-ன் சமூகப் பணிகளுக்கு தலைமை வகித்து வருகிறார்.

அவர்களது குழந்தைகளான ஜான் பால், மேரி, எல்சா ஆகியோரும் குடும்பத்தின் அடுத்த தலைமுறையாக உள்ளனர்.

இன்று ஜான் பால் ஆலுக்காஸ், Joyalukkas Jewellery-யின் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் செயல்பட்டு வருகிறார்.

தொழில் வளர்ச்சியுடன் சமூகத்திற்கும் திருப்பிக் கொடுப்பதில் இந்தக் குடும்பம் கவனம் செலுத்தியது.

கல்வி, சுகாதாரம், ரத்ததானம், மருத்துவ உதவி, வீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் Joyalukkas Foundation சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

2018-ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, வீடுகளை இழந்தவர்களுக்காக ₹15 கோடி செலவில் 250 வீடுகளை கட்டித் தரும் ‘Joy Homes’ திட்டம் அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் இந்தத் திட்டமும் பல்வேறு சமூகப் பணிகளும் மேலும் விரிவுபடுத்தப்பட்டன.

தங்க வியாபாரத்திற்கு அப்பாற்பட்டும் ஜாய் ஆலுக்காஸுக்கு சினிமாவுடனும் ஒரு சிறிய தொடர்பு உள்ளது.

2003-ஆம் ஆண்டு வெளியான ‘கஸ்தூரிமான்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

பின்னர் 2012-ஆம் ஆண்டு லால் ஜோஸ் இயக்கத்தில் வெளியான ‘Diamond Necklace’ திரைப்படத்திலும் தனது சொந்த பெயரிலேயே தோன்றினார்.

இன்று திருச்சூரில் தொடங்கிய அந்தச் சிறிய முயற்சி, 12 நாடுகளில் நூற்றுக்கணக்கான ஷோரூம்களைக் கொண்ட உலகளாவிய நகை வணிகமாக வளர்ந்துள்ளது.

அவரது பொருளாதார வளர்ச்சியும் வியக்கத்தக்கது.

Forbes-ன் 2026 Billionaires Profile-ன் படி, ஜாய் ஆலுக்காஸின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ₹44,000–₹45,000 கோடி அளவுக்கு வருகிறது.

இது அவரது தனிப்பட்ட Net Worth மட்டுமே. Joyalukkas Group-ன் மொத்த வணிக மதிப்பு அல்ல.

திருச்சூரில் உள்ள ஒரு சிறிய குடும்ப நகைக்கடையில் தொடங்கி, வளைகுடா நாடுகள் வழியாக உலகம் முழுவதும் விரிவடைந்த இந்தப் பயணம், இறுதியில் ஒரு மனிதரின் பெயரையே ஒரு மிகப்பெரிய பிராண்டாக மாற்றியது.

அந்தப் பெயர் — ஜாய் ஆலுக்காஸ்.

அந்த பிராண்ட் — Joyalukkas.

ஒரு சிறிய நகைக்கடைக் கவுண்டருக்குப் பின்னால் நின்ற அந்தச் சிறுவன் கண்ட பெரிய கனவு, இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்க நகை ஷோரூம்களில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

ஜாய் ஆலுக்காஸின் வெற்றிப் பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

  • 20
  • 18
·
Added a post

சில நிமிடங்களில் 20 வருட உழைப்பு கண்முன்னே காணாமல் போன கதை.

உத்தரப்பிரதேசம் பல்லியாவை சேர்ந்த அசோக் சௌராசியா என்பவர், கடந்த இருபது வருடங்களாக நேபாளத்தில் உள்ள திரிசூலி பஜாரில் துணிக்கடை நடத்தி வந்திருக்கிறார். அங்கேயே சொந்தமாக மூன்று மாடி வீடு, கடை, குடோன் என தனது வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி எழுப்பியிருக்கிறார்.

அன்று திடீரென வந்த வெள்ளம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

தண்ணீர் பயங்கர சத்தத்துடன் ஊருக்குள் நுழைவதை பார்த்து, இருந்தவர்கள் எல்லாம் உயிரை காப்பாற்ற மேடான பகுதிக்கு ஓடியிருக்கிறார்கள். அசோக் அங்கிருந்த ஒரு மடாலயத்தின் சுவரை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, நூலிழையில் உயிர் தப்பியதாக சொல்லியிருக்கிறார்.

ஆனால் உயிர் மட்டும் தான் மிஞ்சியது.

அவர் கட்டிய வீடு, கடை, சேர்த்து வைத்த பொருட்கள், தொழில் என எல்லாமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. கடைசியில் அவர் போட்டிருந்த சட்டை கூட இரவல் வாங்கியது என்று சொல்லும் போது அந்த வலியின் ஆழம் புரிகிறது.

இதைவிட பெரிய சோகம், இந்த வெள்ளத்தில் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்ததாக வந்த செய்தி தான். ஒருவரின் உடல் மட்டுமே மீட்கப்பட்டதாக தகவல்கள் சொல்கின்றன.

அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் எல்லாவற்றையும் சொல்லும் - "வெள்ளம் என்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொண்டு போய்விட்டது"

யோசித்துப் பாருங்கள், ஒரு மனிதன் 20 வருடம் உழைத்து ஒரு வாழ்க்கையை உருவாக்குகிறான். ஆனால் இயற்கையின் சீற்றம் அதை சில நிமிடங்களில் இல்லாமல் செய்துவிடுகிறது.

பணத்தை திரும்ப சம்பாதித்து விடலாம், வீட்டை திரும்ப கட்டிவிடலாம், தொழிலை திரும்ப ஆரம்பித்து விடலாம். ஆனால் இழந்த உயிர்களை திரும்ப கொண்டு வரவே முடியாது.

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசோக் போன்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீண்டு வர பிரார்த்திப்போம்

  • 31
  • 27
·
Added article

🌹''ஜென்சின்னு ஒரு பொண்ணு இருக்காங்க. அற்புதமான குரல். நீங்க ஒரு தடவை கேளுங்க. பிடிச்சுருந்தா உங்க இசையில் பயன்படுத்திக்கங்க'''' இதுதான் இளையராஜாவிடம், பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சொன்னது.

🌹திறமையற்றவர்களை யேசுதாஸ் போன்றவர்கள் பரிந்துரை செய்யமாட்டார் அப்படின்னு சொல்லுற இளையராஜா, உடனே ஜென்சியை கேரளாவில் இருந்து வரச்சொல்லி குரல் சோதனை செய்கிறார்.

🌹அப்போது ஜென்சி '''அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே''' பாடல் பாடுகிறார். குரல் சோதனைக்காக வந்த ஜென்சிக்கு உடனடியா பாடும் வாய்ப்பு கிடைக்குது. திரிபுரசுந்தரி அப்படிங்கிற படத்தில் ஜானகியோட இணைந்து ஒரு பாடல் பாடுறாங்க. இரண்டாவது 'வட்டத்துக்குள் சதுரம்'' படத்தில் ஒரு பாடல் பாடுகிறார்.

🌹அடுத்த பாடல்தான் ஜென்சியின் குரலைத் தமிழர்களின் வாழ்க்கையில் நிரந்தரமாக்கியது.

🌹மழை முடிந்த பொன்மாலை ஒன்றில், மிச்சமிருக்கும் குளிரோடு இணைந்து வரும் இளம் சூரியனைப்போன்ற ''அடி பெண்ணே'' பாடல்தான் அந்த இரண்டாவது பாடல்.

🌹அவர் அறிமுகமான அந்த 1978 -ம் வருடத்திலேயே அடுத்தடுத்து ஐந்து பெரிய படங்களில் பாடினார். அதில் ஒரு பாடல் பிரியா படத்தில் வரும் என்னுயிர் நீதானே''' பாடல்.

🌹அவரை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய யேசுதாசுடன் இணைந்து பாடிய அந்தப்பாடல்தான் ஜென்சியின் மனதுக்கு நெருக்கமான பாடல் என்று கூறுகிறார்கள்.

🌹புதிய வார்ப்புகள் , நிறம் மாறாத பூக்கள் படங்களில் அவர் பாடியிருந்த பாடல்களைக் கேட்ட பின், ஜென்சியின் தீவிர ரசிகராக இயக்குனர் பாரதிராஜா மாறினார் . இதன் காரணமாகவே அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், என்று வரிசையாக பாரதிராஜா படங்களில் தொடர்ந்து பாடினார் ஜென்சி.

🌹புதிய வார்ப்புகள் படத்தில் ஜென்சி பாடிய 'தம்தனதம்தன தாளம் வரும்' பாடல் இப்போதும் ஆச்சரியமானது என்கிறார்கள். மலையாளம் மட்டுமே தெரிந்த ஜென்சி, தமிழை அத்தனை அழகாக மூச்சு விடாமல் பாடியது முக்கியமானது என்கிறார்கள்.

🌹தமிழ்த் திரையுலகிலிருந்து ஜென்சி காணாமல் போனதற்கு அவருடைய தந்தை அந்தோணி ஒரு காரணம் என்று பத்திரிக்கைகளில் இப்போதும் குற்றம்சாட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் தங்கவிடாமல் செய்து, ஜென்சியை இசையமைப்பாளர்கள் தொடர்பு கொள்ள விடாமல் செய்துவிட்டார் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

🌹பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி ஆகியோரும் ஜென்சி தமிழ்த் திரையுலகில் இருந்து காணாமல் போனதற்குக் காரணம் என்று பூடகமாகச் சொல்லப்பட்டாலும், தான் இப்போதும் எஸ்.ஜானகியுடன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதாக ஜென்சி சமீபத்திய பேட்டி ஒன்றில், கூறி இருக்கிறார்.

  • 69
·
Added article

திருவிளையாடலில் நடந்த அனுபவம்

க்ளாசிக் சினிமாவில் காமெடியில் கலக்கிய முக்கிய நடிகர்களில் ஒருவர் நாகேஷ். மனமுள்ள மறுதாரம் என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நாகேஷ், எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். காமெடி வசனங்கள் மட்டுமல்லாமல் தனது உடல்மொழியாலும் ரசிகர்களை சிரிக்க வைத்த நாகேஷ் ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

அதேபோல் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி கணேசன் தான். அவரை போல் யாரும் நடிக்க முடியாது, அவர் ஒரு நடிப்பு பல்கலைகழகம், அவரை தான் இன்றைய நடிகர்கள் பலரும் பின்பற்றி வருகிறார்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். சிவாஜி நாகேஷ் கூட்டணியில் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் திருவிளையாடல் படத்தில் அந்த தருமி கேரக்டரில் நாகேஷ் தான் நடிக்க வேண்டும் என்று சிவாஜி விரும்பியதாகவும் தகவல்கள் உள்ளது.

இதுகுறித்து ஓர் பேட்டியில் நாகேஷ் கூறுகையில்,அதேபோல் திருவிளையாடல் படம் எனக்கு தருமி வேஷம் என்ற உடனே நான் அதில் எதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

அப்போது மைலாப்பூர் கபாலீஸ்வர் கோவிலில் ஒல்லியான ஒருவர் செய்ததை தான் நான் திருவிளையாடல் படத்தில் செய்தேன். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையில் கிடைத்த 2 மணி நேர இடைவெளியில் தான் அந்த காட்சியில் நடித்தேன். அந்த வருடத்தில் தான் நான் நடித்த 46 படங்கள் வெளியானது. அப்படி என்றால் நான் எவ்வளவு பிஸி என்று நினைத்துப்பாருங்கள்.

இந்த படத்தின் ஷூட்டிங்கில் சிவாஜிக்கு சிவன் வேஷம் போட லேட் ஆனும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் நான் என் காட்சிகளை முதலில் வசனம் பேசிவிடுகிறேன் என்று கேமராமேனிடம் சொன்னேன் அவரோ நீங்கள் வசனம் பேசும்போது சிவாஜி வந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டார். ஆனாலும் அவரை சமாதானப்படுத்தி நான் நடித்துக்கொண்டிருந்தேன்.

ஆனால் நான் நடிக்க தொடங்கிய உடனே சிவன் வேடத்தில் சிவாஜி செட்டுக்குள் வந்துவிட்டார். இதை பார்த்து கடுப்பான சிவாஜி இயக்குனரிடம் என்ன நாகேஷ் நடிச்சிட்டு இருக்கான் என்று கேட்டார். அதன்பிறகு இயக்குனர் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். நடித்து முடித்து அந்த காட்சியை பார்த்த சிவாஜி நாகேஷ் நல்ல நடிச்சிருக்கான். ஒரு சில இடங்களில் மட்டும் சரியாக வரல அந்த இடங்களில் மீண்டும் நடிக்க சொல்லுங்கள் என்று சிவாஜி சொன்னார்.

தீபம் படத்தில் ஒரு காட்சியில் ரஹீம்பாய் என்று அவர் என்னை கூப்பிட வேண்டும். அவர் கனீர் குரலில் கூப்பிட்டார் ஆனால் நான் ஒன்றுமே பேசிவில்லை. கேமரா கட் ஆனதும் சிவாஜி என்னை அழைத்து என்னாச்சி உனக்கு என்று கேட்க, ஒரு வேலைக்காரன் துரோகம் செய்துவிட்டதால் இந்த வேலைக்காரனிடம் ஆதரங்கத்தை தீர்க்க பேசுகிறீர்கள். அப்படி இருக்கும்போது உங்கள் குரலில் கம்பீரம் இருக்க கூடாது கனிவு தான் இருக்க வேண்டும் என்று சொன்னேன்.

அதன்பிறகு நான் எப்படி நடிக்க வேண்டும் நீயே நடித்து காட்டு என்று சொன்னார். நான் தயங்கினேன். ஆனால் அவர் நடிக்க சொல்லி வற்புறுத்தியதால் நான் நடித்து காட்டினேன். அதை அவருக்கே உண்டான ஸ்டைலுடன் நடித்து முடித்தார். எனக்கே அழுகை வந்துவிட்டது. நடித்து முடித்தவுடன் எப்படி டா என்று என்னை பார்த்து கேட்டார் நான் கோடு தான் போட்டேன் நீங்கள் ரோடே போட்டுவிட்டீர்கள் என்று சொன்னேன் என நாகேஷ் கூறியுள்ளார்.

  • 75
·
Added article

🌹சாரதா ஸ்டுயோவில் திருவரூட் செல்வர் படப்பிட்டிப்பில் சிவாஜிகணேசன் திருநாவுக்கரசர் என்ற அப்பர் வேடத்தில் சிவனடியாராக நடித்துக்கொண்டருந்தார்

🌹படப்பிடிப்பு முடிந்த பிறகு வேடத்தை களைக்காமல் அன்னை இல்லம் நோக்கி காரில் செல்கிறார்

🌹 கார் போக்ரோட்டில் நுழைக்கிறது சிவாஜிகணேசன் டிரைவரிடம்(சிவா)

வீடு வரை ஹாரன் அடிக்காமல் போய் உள்ளே செல்லாமல் வெளியே காரை நிறுத்து என்று சொல்கிறார் டிரைவர் அவ்வாறே செய்கிறார்

🌹எஜமானின் கார் வருவதை கண்டு அன்னை இல்ல காவலாளி கேட்டை திறக்கிறார் காரில் இருந்து சிவாஜிகணேசன் கீழே இறங்கி வாயில் விரலை வைத்து உஷ் என்று காவலாளிக்கு சைகை செய்துவிட்டு ஒரு முதியவர் போல் உள்ளே நடந்து சென்றார் வாசலை அடைந்ததும் குரலை மாற்றி

🌹அம்மா தாயே என்று குரல் கொடுக்கிறார்

🌹குரலை கேட்டு வருகிறார் ராஜாமணி அம்மையார் அம்மாவை கண்டதும் தாயே நான் ஒரு சிவபக்தன் கைலாய மலை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் ஒருவாய் சோறு கிடைக்குமா என்று கேட்டார்

🌹பக்தி பரவசத்தில் வந்திருப்பது தன் மகன் என்று அறியாமல் மரியாதையுடன் அழைத்து சென்று உணவு பரிமாறி வணங்குகிறார்

🌹சாமியார் சாப்பிடுவதை பார்த்து நம்ம கணேசன் சாப்பிடுவதை போல இருக்கிறதே என்று கூர்ந்து கவனிக்கிறார் ராஜாமணி அம்மையார்

🌹எத்தனையோ முகபாவங்களை காட்டுபவர் தன் தாய் முக மாறுதலை கண்டு சத்தம் போட்டு சிரிக்கிறார் அந்த சிரிப்பு சத்தம் கேட்டு சாப்பிடுவது தன் மகன் கணேசன் என்று உணர்ந்து பிரமிக்கிறார் ராஜாமணி அம்மையார்

🌹தன் நடிப்பு திறமையலும் பொருத்தமான வேடத்தினாலும் பெற்ற தாயின் கண்களையே ஏமாற்றிவர் சிவாஜி கணேசன்.

  • 75
·
Added a post
  • 132
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 3.9.2026

இன்று அதிகாலை 04.12 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று அதிகாலை 02.20 வரை பரணி. பின்னர் கிருத்திகை.

இன்று இரவு 07.42 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.

இன்று அதிகாலை 04.12 வரை வணிசை. பின்னர் மாலை 03.10 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று அதிகாலை 02.20 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.03 வரை அமிர்த யோகம். பின்பு மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=637&dpx=2&t=1788403438

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 134

Good Morning...

  • 132
·
Added a post

ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திருமால் கருடனை பார்த்து கேட்டார் "இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர் கருடா...?" என்று.

அதற்கு சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார் "மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகா பிரபு" என்றார்.

மகாவிஷ்ணு "என்ன மூன்று விதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான மக்கள் தானா உள்ளார்கள்" என்று கேட்டார்.

"மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்...? என்னை வைத்து என்ன நாடகமோ தெரியவில்லை...? ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்று விதமான மக்கள் தான் உள்ளனர்" என்று கூறினார் கருடன்.

"அப்படியானால் அவர்களைக் கூறு பார்க்கலாம்" என்றார் மகாவிஷ்ணு.

கருடன் சொன்னார்

"பிரபு முதல் வகையினர்: பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.

இரண்டாம் வகையினர்: பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர்.

மூன்றாம் வகையினர்: கணவனும் மனைவியும் போல் உள்ளனர் அவ்வளவு தான் மகா பிரபு" என்றான்.

மகாவிஷ்ணு சும்மா விடுவாரா !!! "சற்று விளக்கமாக புரியும்படி சொல்" என்றார்.

சொல்ல துவங்கினார் கருடன்

"முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும் எப்படியென்றால் ...

பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலையெல்லாம் படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும். அதுபோல் குஞ்சுகளுக்கும் தன் வாயில் ஊட்டப்படும் உணவு தான் தெரியும், தன் தாய் யார், தகப்பன் யார் போனது வருமா வராதா எதுவும் தெரியாது, நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும், மீந்து போன பறவை வாழும் வரை வாழும், அவ்வளவு தான்...

இந்த வகை மனிதர்கள் இது போலத்தான் ஏழ்மையுடன் போராட்டம், கூலி வேலை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையா பட்டினி கிடப்பார்கள், அவர்களுக்கு உன்னைப் பற்றியே கூட தெரியாது. வாழ்வார்கள், வாழும் வரை அவ்வளவு தான்.

இரண்டாவது பசுவும் கன்றும் எப்படியென்றால்...

பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும், அதன் கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும், கன்றுவுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று. ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது, கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும்.

அது போல ஒரு சாராருக்கு உன்னைத் தெரியும், உன் வழி தெரியும், உன்னால் தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும், ஆனாலும் உன்னிடம் வர முடியாமல் பாசம் என்ற ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கொண்டு உன்னை பார்த்து பார்த்து ஏங்கி தவிக்கும்.

மூன்றாவது கணவனும் மனைவியும் எப்படியென்றால்...

முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி போவான், ஆனால் அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்கு பிடித்த வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு சமைத்து, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு அவனைக் கவர்ந்து தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள், முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான், அவளை பிரிய மறுக்கிறான், பிரசவத்திற்கு அனுப்பி விட்டு இவனும் பின்னாலேயே செல்கிறான்.

அது போல ஒரு சாரார் உன்னை கண்டதில்லை, ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக உணர்த்தப்பட்டு உன்னை காண முற்படும் வேளையில், உனக்கு பிடித்த உடை, உணவு, அலங்காரம் என்று தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். முதலில் சோதிக்கும் நீ எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகிறாய், எங்களோடு உறவாடுகிறாய், முடிவில் உன்னோடு எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறாய் நாங்களும் ஆனந்தமாக உன்னோடு கலந்து விடுகிறோம் ஆக மூன்று விதமான மனிதர்கள் தான் உலகில் உள்ளனர் என்றார் கருடன்.

மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு கருடனை வாழ்த்தி தன்னுள் ஏற்றுக் கொண்டார்.

  • 228
·
Added article

🌹ஓவர் ஆக்டிங் என கிண்டலடித்த சோ!.. ரூமுக்கு கூட்டிச்சென்று சிவாஜி என்ன செய்தார் தெரியுமா?..

🌹சிவாஜி கணேசன் மிகையாக நடிக்கிறார் அதாவது ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது பலரும் வைப்பதுண்டு. அவருடன் நடித்த சில நடிகர்களும் அதை கூறியதுண்டு. ஆனால், சிவாஜி தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. ஒருமுறை நடிகர் சோ ராமசாமியுடன் ஒரு படத்தில் சிவாஜி நடித்துக்கொண்டிருந்தார். ஒரு காட்சியில் சிவாஜி நடிப்பை பார்த்து படப்பிடிப்பு தளத்தில் இருந்த பலரும் கைதட்டி பாராட்டியுள்ளனர்.,

🌹ஆனால், சோ மட்டும் அமைதியாக இருந்தாராம். அதை பார்த்துவிட்ட சிவாஜி சோ-வை அங்கிருந்த ஒரு அறைக்க அழைத்து சென்று பேசினாராம்.

‘🌹நான் அடித்த அந்த காட்சி உனக்கு பிடிக்க வில்லை.இல்லையா?’ என சிவாஜி கேட்க ‘ஆமாம் சார். ஓவர் ஆக்டிங் போல இருந்தது’ என்றாராம் சோ. அதற்கு சிவாஜி ‘வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் நான் பேசுவது பிடித்திருந்ததா?’ என கேட்டாராம். அதற்கும் சோ ‘பிடித்திருந்தது. ஆனால், அதிலும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருந்தது’ என சொன்னாராம்.

🌹அப்போது பேசிய சிவாஜி ‘நான் சோவுக்கு பிடிப்பது போல் நடித்தால் மக்களிடம் செல்ல முடியாது. பொதுவான ரசிகருக்கு என ஒரு அளவு இருக்கிறது. அதை கொடுத்தால்தான் நான் மக்களிடம் சென்றடைய முடியும்’ எனக்கூறிவிட்டு அந்த கட்டபொம்மன் காட்சியை நான்கு விதமாக நடித்து காட்டினாராம். ஹாலிவுட் நடிகர் போல் ஒன்றையும், சோ நடித்தால் அந்த காட்சி எப்படி இருக்கும் என்பதையும் சிவாஜி நடித்துக்காட்ட பிரமித்துப்போன சோவுக்கு கண்ணில் கண்ணீரே வந்துவிட்டதாம். அதன்பின் சிவாஜியை எங்கேயும் ஓவர் ஆக்டிங் என சோ சொல்வது இல்லையாம்.

  • 232
·
Added a post

அப்போது காமராஜர் தமிழக முதல்வர்.

மண்ணாங்கட்டிக்கு கோபம். "என்னங்கய்யா நீங்க... இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு

100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா," என்று பதிலுக்கு சத்தம் போட்டார்.மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி.அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துக் காட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். 'அரசாங்க உத்தியோகத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்," என்று முதல்வர் காமராஜர் போட்ட உத்தரவுதான்

அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். மூக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்டார் தேவர். "இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா..." என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார்.

ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று "முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்," என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசி வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்.

மண்ணாங்கட்டி புக் செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். "யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்?" என்கிறார்.அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா...", என்றபடியே அருகில் இருந்த மூக்கையா தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. "எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா" என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல், "ஐயா, எழுதப் படிக்கத் தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ, நான் பியூனா இருக்ககூடாதான்னு தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க," என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை...

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்து விட்டார்கள். "முதல்வருக்கு போன் செய்தது யார்?" என்றார்கள்.

"நான்தான் ஐயா" என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி.

"முதல்வர் உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள்," என்று சொல்லி விட்டு நின்றார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வருடன் புரிகிறது. மூக்கையா தேவருக்கும் பதட்டம்.

மண்ணாங்கட்டி, "ஐயா நீங்களும் வாங்க," என்று அழுகிறார்.

"பின்னாடியே வருகிறேன். நீ போப்பா," என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜரை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதல்வரின் அறையில் உள்ள சோபாவில், கன்னத்தில் கை வைத்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர்.

கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.

"நீங்கதான் மண்ணாங்கட்டியா...", என்கிறார்.

"ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா," என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்குப் பிடிக்காது. அதிகாரிகளைப் பார்க்க, உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள்.

அவரைப் பார்த்து, "வா...வான்னேன். வந்து பக்கதில உட்காரு," என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கித் தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்

பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்துக் கும்பிட்டு, "நான் தப்பு பண்ணிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரிய வைச்சே... ரெண்டு நாளா உங்கவீட்ல சோறு தண்ணியில்லியாமே. சமைக்கலயாமே.... உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க... எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.. எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கக் கூடாது.

இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்'னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல, மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை.

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளைப் பார்த்து 'இவரை அழைத்துக்

கொண்டு போங்க. 'வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க'ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார்.

பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி, "போகிற

போது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்," என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பி வைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, ஏழை மக்களுக்காகவே கடைசி மூச்சுவரை வாழ்ந்தார்.

இனி இப்படி ஒரு முதல்வர் கிடைப்பாரா? என்பது தமிழகத்தில் நின்று நிலைத்துவிட்ட கேள்வி

  • 239
·
Added a post

மூணு பவுன்லே ஒரு செயின் வாங்கி தாங்கன்னு போனவருஷமே கேட்டேன்…. நீங்க ஏதேதோ சொல்லி மழுப்பினீங்க……இப்ப கேட்டா இதோ.. அதோன்னு சொல்லி ஏமாத்துறீங்க……

இனிமே…..நீ எப்படி சொன்னா புரிஞ்சிப்பேன்னு பார்த்து அப்படி சொல்றேன் செல்லம்…….

இனிமே இந்த அலம்பலும் வேணாம்…. புலம்பலும் வேணாம்…..உனக்கும் எனக்கும் ஒண்ணு இருக்கு இல்லே..,

ஆமா….. சொந்தம்…பந்தமுன்னு சொல்லிக்கஒரு பிள்ளை…. அதற்கென்ன….

போய்யா வெண்ணை….. நான் ஜாயிண்ட்அக்கௌண்ட்டை….சொன்னேன்

என்னடி செஞ்சே.. பாவி….

அதிலே மூணு லட்சம் எடுத்து செயின் வாங்கிட்டேன்….

அய்யயோ……அய்யகோ…

பெரிய புலவரு இவரு…. போய்யா டுபுக்கு…..

  • 237
·
Added a post

எம்ஜிஆர் அமைதியாக தன் அலுவலக அறைக்குள் அமர்ந்திருந்தார். ஆனால் அவரது அறைக்கு வெளியே ஏகப்பட்ட பரபரப்பு.

எம்ஜிஆருக்கு நெருக்கமான சில அதிகாரிகள் ஒன்றாக அமர்ந்து தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

'சீக்கிரமாக சில பெயர்களைத் தயார் செய்து, அதை சி.எம். மிடம் கொடுக்க வேண்டும்.' அதுதான் அவர்களது பரபரப்புக்கான காரணம்.

1984.

கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

என்ன பெயர் வைப்பது அந்தப் பல்கலைக்கழகத்துக்கு ?

எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர். எதுவும் அவருக்குத் திருப்தி தரவில்லை.

உடனடியாக அதிகாரிகளை அழைத்தார். பல்கலைக்கழக விஷயத்தைச் சொல்லி, நல்லதொரு பெயரைத் தேர்வு செய்து சொல்லும்படி கேட்டிருந்தார்.

ஒரு வழியாக அதிகாரிகளின் ஆலோசனை முடிந்தது. முதல்வரின் அறைக்குள் மெல்ல நுழைந்தார்கள். அடுக்கடுக்காக தாங்கள் எழுதி வைத்திருந்த பெயர்கள் அடங்கிய காகிதத்தை, எம்ஜிஆர் கைகளில் பணிவுடன் கொடுத்தார்கள்.

ஔவையார் பெயர் வைக்கலாம் என ஒரு சிலர் சொல்லியிருந்தார்கள்.

சுதந்திரத்திற்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் பரிந்துரைக்க,

இன்னும் சிலரோ எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

எல்லாவற்றையும் அமைதியாகப் படித்துப் பார்த்த எம்.ஜி.ஆர்., தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்து சொன்ன பெயர்...

அன்னை தெரசா !

எம்ஜிஆரைச் சுற்றியிருந்த

அதிகாரிகள் அனைவரும்

எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏனெனில் அதிகாரிகள் எழுதிக் கொடுத்த பட்டியலில் அந்தப் பெயர் இல்லை.

ஆம். எம்ஜிஆரின் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த பெயர்தான் அன்னை தெரசா !

இப்படித்தான் உருவானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.

Mother Teresa Women's University !

விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள் !

பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.

இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்.,

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஃபரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை அன்போடு தழுவி நிற்க ...

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.

இந்த வேளையில் எம்.ஜி.ஆரின் அரசியல் வழிகாட்டியான அண்ணா அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது :

“நான் கைலி கட்டாத முஸ்லிம்,

சிலுவை அணியாத கிறிஸ்துவன்,

திருநீறு அணியாத இந்து.”

அண்ணா சொன்ன இந்த வார்த்தைகளை, தன் வாழ்க்கைப் பாடமாக ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

இதை அறிந்த அன்னை தெரசா,

அந்த விழா மேடையிலேயே எம்ஜிஆரை மகிழ்ச்சியோடு வாழ்த்தி, மன நிறைவோடு ஆசி வழங்கினார்.

மத வெறியை தவிர்ப்போம்.

மனித நேயம் காப்போம்.

  • 241
·
Added a post

விதியை வெல்ல தினமும் காலையில் இந்த மூன்று பாடலையும் பாடினால் மிகச் சிறப்பு ஏற்படும் என்று பல பிரபல ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

மனம் உருகிப் பாடுகள் அபிராமி மனதில் இடம் பெறுங்கள். நல்லதே நடக்கும்

ிராமி_அந்தாதியில் குறிப்பிட்டுள்ள 40, 59 மற்றும் 75-வது பாடல்களின் வரிகள் மற்றும் அவற்றின் சுருக்கமான பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பாடல் 40 (#பூர்வ_புண்ணியம்_பலதர)

பாடல்:

வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்

பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்

காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு

பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.

பொருள்:

ஒளிதிகழும் நெற்றியில் கண்ணைக் கொண்டவளே, தேவர்கள் அனைவரும் வந்து வணங்க விரும்பும் எம்பெருமாட்டியே, அறியாமை கொண்ட நெஞ்சினருக்கு எளிதில் கிடைக்காதவளே, என்றும் கன்னித் தன்மையவளான உன்னை நினைக்கின்ற இந்த அன்பைப் பெறுவதே நாம் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனாகும்.

2. பாடல் 59 (#பிள்ளைகள்_நலம்_பெற)

பாடல்:

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே

நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்

அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்

பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.

பொருள்:

அபிராமித் தாயே! உன்னைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்று அறிந்தும் உன் தவநெறிகளை என் நெஞ்சில் முழுமையாக நினைக்கவில்லை. கரும்பு வில்லையும் மலர் அம்புகளையும் ஏந்தியவளே, பஞ்சு போன்ற மெல்லிய அடிகளை உடைய தாய்மார்கள், தம் குழந்தைகள் அறியாமை செய்தாலும் அவர்களை மன்னித்துக் காப்பது போல நீயும் என்னைக் காப்பாயாக. [1, 2]

3. பாடல் 75 (#விதியை_வெல்ல / #தீவினைகள்_நீங்க)

பாடல்:

தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி

மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை, மால் வரையும்

பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்

கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

பொருள்:

பெரிய மலைகளையும், உப்பு நிறைந்த கடல்களையும், பதினான்கு உலகங்களையும் தன் திருவுந்தியில் படைத்தவள் அபிராமி. மணம் வீழும் மலர்களை அணிந்த குழல் கொண்டவளான அந்த அன்னையின் திருமேனியைத் தங்கள் சிந்தையில் எப்போதும் நினைப்பவர்கள், தாயின் அரவணைப்பு இல்லாமலேயே கற்பக விருட்ச நிழலில் தங்கும் பேறு பெறுவார்கள்; மண்ணில் மீண்டும் பிறக்கும் பிறவித் துயரமும் நீங்கி அழிவற்ற நிலை அடைவார்கள்.

  • 244
·
Added a post

“என் ஹோட்டல் முழுமையாக இடிந்து போனாலும் பரவாயில்லை; ஒரு பயங்கரவாதி கூட உயிருடன் வெளியேறக் கூடாது…!” – ரத்தன் டாடாவின் உயர்ந்த உள்ளம்!

“என் ஹோட்டல் முழுமையாக இடிந்து போனாலும் பரவாயில்லை; ஒரு பயங்கரவாதி கூட உயிருடன் வெளியேறக் கூடாது…!” – ரத்தன் டாடாவின் உயர்ந்த உள்ளம்!

2008 நவம்பர் 26 அன்று மும்பை நகரத்தையும் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றபோது, இந்தியாவின் பெருமையாக விளங்கும் தாஜ் ஹோட்டலுக்கு நேரடியாகச் சென்ற ஒருவர் இருந்தார் — ஸ்ரீ ரத்தன் டாடா.

தனது உயிருக்கும் கடுமையான அச்சுறுத்தல் இருந்த அந்த நேரத்தில், பயங்கரவாதிகள் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தபோதும், நிலைமையை நேரில் மதிப்பிடுவதற்காக அவர் அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், தனது சொத்துக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் உறுதியுடன் கூறியதாகப் பரவலாகக் கூறப்படும் வார்த்தைகள்:

“என் ஹோட்டல் முழுவதுமாக அழிந்தாலும் பரவாயில்லை; நாட்டைத் தாக்க வந்த ஒரு பயங்கரவாதி கூட உயிருடன் வெளியேறக் கூடாது…!”

தனது தொழில், சொத்து, பொருளாதார இழப்பு ஆகியவற்றைக் காட்டிலும் நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் உயிருக்கும் அதிக முக்கியத்துவம் அளித்த உண்மையான தேசப்பற்றாளராக அவர் போற்றப்பட்டார்.

பின்னர் அந்தத் தாக்குதலில் உயிரிழந்த தாஜ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் குடும்பங்களைத் தனது குடும்பத்தைப் போல அரவணைத்து, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அவரது மனிதநேயமும் இன்றளவும் இந்திய மக்களால் நன்றியுடன் நினைவுகூரப்படுகிறது.

இந்தியாவின் உண்மையான ரத்தினம் — ஸ்ரீ ரத்தன் டாடாவுக்கு இதயம் நிறைந்த மரியாதைகள்!

2008 நவம்பர் 26 அன்று மும்பை நகரத்தையும் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றபோது, இந்தியாவின் பெருமையாக விளங்கும் தாஜ் ஹோட்டலுக்கு நேரடியாகச் சென்ற ஒருவர் இருந்தார் — ஸ்ரீ ரத்தன் டாடா.

தனது உயிருக்கும் கடுமையான அச்சுறுத்தல் இருந்த அந்த நேரத்தில், பயங்கரவாதிகள் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தபோதும், நிலைமையை நேரில் மதிப்பிடுவதற்காக அவர் அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், தனது சொத்துக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் உறுதியுடன் கூறியதாகப் பரவலாகக் கூறப்படும் வார்த்தைகள்:

“என் ஹோட்டல் முழுவதுமாக அழிந்தாலும் பரவாயில்லை; நாட்டைத் தாக்க வந்த ஒரு பயங்கரவாதி கூட உயிருடன் வெளியேறக் கூடாது…!”

தனது தொழில், சொத்து, பொருளாதார இழப்பு ஆகியவற்றைக் காட்டிலும் நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் உயிருக்கும் அதிக முக்கியத்துவம் அளித்த உண்மையான தேசப்பற்றாளராக அவர் போற்றப்பட்டார்.

பின்னர் அந்தத் தாக்குதலில் உயிரிழந்த தாஜ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் குடும்பங்களைத் தனது குடும்பத்தைப் போல அரவணைத்து, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அவரது மனிதநேயமும் இன்றளவும் இந்திய மக்களால் நன்றியுடன் நினைவுகூரப்படுகிறது.

இந்தியாவின் உண்மையான ரத்தினம் — ஸ்ரீ ரத்தன் டாடாவுக்கு இதயம் நிறைந்த மரியாதைகள்!

  • 246
·
Added a post

உங்க அப்பாவுக்கும்…உங்க அம்மாவுக்கும் வடிச்சி கொட்ட நான் என்ன அவங்கவைச்ச ஆளா…. இனிமே வீட்டு வேலைக்கு ஒரு ஆள்…சமையல் செய்ய ஒரு சமையல் காரின்னு வைச்சிக்கிட்டுபோங்க.., என்னாலே மாரடைக்கமுடியாது….

இப்ப வேலைக்கு ஆள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்டி….. பத்தாயிரம்….. இருபதாயிரம்ன்னு சம்பளம் கேக்கறாங்க..,

உங்கப்பா பென்ஷன்.., உங்கம்மா பென்ஷன்…. உங்க சம்பளமு'ன்னுஎல்லாம் சேர்த்தா லட்சம் ரூபாய்க்குமேல வருதில்லே…. அதுலேஎடுத்து கொடுங்க..,…

அப்ப சரிடி…. அதேபோல் செய்யறேன்…. இன்னைக்கு காலையில் தான் யோசனை செய்தேன்…..மாசா மாசம் குடும்ப பட்ஜெட்ல இழுத்து பிடிச்சி…. மீதம் பண்ணி……உனக்குஒவ்வொரு தீபாவளிக்கும் ரெண்டு மூணு பவுனில் நகை வாங்கி கொடுத்து சர்பிரைஸ்கொடுக்கலாமு 'ன்னு…ரூட்டு போட்டேன்..,.

இது என்னங்கபெரிய வேலை…ஜூஜூபி …. எங்கம்மா வீட்லே எல்லாவேலையும் நானே இழுத்துபோட்டுக்கினு செய்வேன்..தெரியுமா…..

இப்ப என்ன சொல்ல வரே….

நான் போன ரூட்டு ஒன் வே ன்னு தெரியுது……திரும்பி வந்துட்டேங்க…

வேலைக்கு ஆள் கேட்டியே…..

அதெல்லாம்எதுக்குங்க வீண் செலவு….

கடைசியா என்ன சொல்றே…

வாயை கொடுத்து நானே புண்ணாக்கி கிட்டேனே… நான் விட்டாலும்…. இவரு நோண்டுராரே…..

என்ன டார்லிங் முணுமுனணுக்குறே….

ஆங்.,…காலை டிபனுக்கு இட்லி வடை…நெய் சாம்பார் செஞ்சுரு க்கேன்….. வந்து சாப்பிட சொன்னேன்…

  • 399
·
Added a post

ன்சொல்பேச்சுநீங்ககேக்கறதில்லே……உங்ககிட்டே பேச மாட்டேன் போங்க….

நீ மட்டும் கேக்கிறியா…..உன் கிட்டே வாழவே மாட்டேண்டி…போடி….

ஏண்டா….பேசுவதற்கும்….. வாழுறதுக்கும் நிறைய வேறுபாடு இருக்குதடா……

அதெல்லாம் எனக்கு தெரியாது..,.உன் மூஞ்சை பார்த்தாலேஎனக்கு பிடிக்கிலே….. கீதா சொன்னா…நீ ஒரு சுடு மூஞ்சியாம்..,.

எந்த கீதா………என்னடா சொன்னா…..

அதான் உன் கல்லூரி தோழியாமே….

ஓ……. அவளா….கருவாட்டு மூஞ்சி…,.

அவளை பத்தி அசிங்கமாபேசாதே.,. எனக்கு கெட்ட கோவம் வரும்…,

அவளை பேசுனா….உனக்கு ஏண்டா கோபம் வருது….

உன்னை,டைவெர்ஸ்பண்ணிட்டுஅவளைகட்டிக்க போறேன் …..அவளும் என்னை விரும்புறா……

அடி பாவி……. இது அவளுக்கு மூணாவது கல்யாணம்….அவ கெட்ட கேட்டுக்கு இது வேணுமா….. நல்லா பிராக்கெட் போடறாடா உன்னை..,..

என்ன மூணாவது கல்யாணமா.,.,..

ஆமா அவளை பத்தி எனக்கு தான் தெரியும் ……ஏற்கனவே ரெண்டுபேரு சப்பி போட்ட பனங்கொட்டைஅவ…. அதை நீ……….

என்னடி அசிங்கமா பேசறே…….

நான் எங்கே பேசினேன்……அதை நீ…. விலை கொடுத்துவாங்கி…. நாசமா போக போறே…..

ஆமாண்டி அவளை கட்டிக்கனமுன்னா…ரெண்டு லட்சம் பணம் தரணுமாம்….. என்னை கேட்டாள்….

அதான் சொன்னேனே…. என்னை போலஅவளும் கந்து வட்டிக்கு கடன் வாங்கி தவிக்கிறா…..அதுக்கு எதைவேணாலும் செய்வா. ….

அடி நாசமா போறவளே….. நீ ஏன் கந்து வட்டிக்கு கடன் வாங்கினே…. எவ்வளவு வாங்கி தொலைச்சே…..

நானும் ரெண்டு லட்சங்க…..தெரியாம.வாங்கிட்ட்டேங்க

வாங்கி என்னடி செஞ்சே…..

எங்கம்மா வீட்டுலே ரொம்பகஷ்டபடறாங்கன்னுஅவங்களுக்குவாங்கி கொடுத்தேன்….

உங்கம்மாவுக்கு தானே…சரி விடு …. ஆபிசில் லோன் போட்டு உனக்கு கொடுக்கிறேன்….. கடனை அடைசிச்சிட்டு மறுவேலை பாரு…..

நல்லதுங்க……. உங்கள போல ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்……அப்ப.. கீதா…..

அவ கிடைக்குறா சோதா ……. உனக்குமுன்னாடி அவஎல்லாம் சாதா….

சரி வாங்க… தூங்க போகலாம்…..

  • 399
·
Added a post

அவர் ஒரு பெரிய துறவி. இளம் வயதிலேயே ஐம்புலன்களை அடக்கி தவநெறி தவறாமல் ஞான ஜோதியாய் வாழ்ந்தார். ஊருக்கு வெளியே அவருடைய ஆஸ்ரமம் இருந்தது. ஏராளமான சீடர்கள் இருந்தார்கள்.

ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று, தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அதைத் துரத்த துறவியின் சீடர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள். அது அசைந்து கொடுக்கவில்லை. பரவாயில்லை இருந்துவிட்டுப் போகட்டும். பன்றியும் இறைவன் படைப்புத்தானே! அது தன் வாழ்க்கையை வாழட்டும்!

நாம் நம் வாழ்க்கையை வாழ்வோம்,'' என்று சொல்லிவிட்டார் துறவி.

ஆனாலும், பன்றியோ அதன் குட்டிகளோ ஆஸ்ரமத்திற்குள் நுழைந்துவிட முடியாதபடி ஆஸ்ரமத்தின் வெளிப்புறக் கதவைப் பலப்படுத்தினார்கள்.

காலம் நகர்ந்தது. துறவி தினமும் காலையிலும் மாலையிலும் சீடர்கள் புடைசூழ சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார். அப்படிப் போகும்போதும் வரும்போதும் அந்தப் பன்றியின் குடும்பத்தைய பார்த்துக் கொண்டிருப்பார்.

அசிங்கத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பன்றிக் குட்டிகளைப் பார்த்துத் துறவியின் சீடர்கள் முகம் சுளிப்பார்கள். இறைவன் ஏன்தான் இந்த ஈனப் பிறவியைப் படைத்தானோ குருதேவா! பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டுகிறதே! பாருங்கள்! பன்றிக்குக் கொஞ்சமாவது சுத்த உணர்வு இருக்கிறதா என்று !'' என்றான் பிரதான சீடன்.

""தவறு செய்கிறாய் மகனே! மனிதனின் கண்களைக் கொண்டு பன்றியின் வாழ்க்கையைப் பார்க்கிறாய். அதனால்தான் உனக்கு அருவருப்பாக தெரிகிறது. பன்றிக்கு அதன் வாழ்க்கை சொர்க்கம்தான். ஒருவேளை அந்தப் பன்றிகள் நம்மைப் பார்த்து, ""இறைவன் ஏன்தான் இந்த ஈனமான மனிதப் பிறவியைப் படைத்தானோ?'' என்று பேசிக்கொண்டிருக்கிறதோ என்னவோ! யாருக்குத் தெரியும்?''

துறவியை பன்றிகளின் வாழ்க்கை அதிகமாக ஈர்த்தது. அவை தினமும் உணவு தேடும் அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தார். பன்றியின் குடும்பம் பெருகியது. அவ்வப்போது அந்தப் பன்றிகளுக்கு ஆஸ்ரமத்திலிருந்து உணவும் அளிக்கச் சொல்வார் துறவி.

காலம் ஓடியது. துறவி நோய்வாய்ப்பட்டடார். இன்னும் சில நாட்களில் தனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார்.

அவருக்கு இருந்த அபரிமிதமான யோக சக்தியால், தான் அடுத்த பிறவியில் ஒரு பன்றியாகப் பிறக்கப் போகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டார். அதுவும் ஆஸ்ரமத்திற்கு அருகில் வசித்து வந்த பன்றிக்கூட்டத்திலேயே பிறக்கப் போகிறோம் என்பதைத் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டார்.

திடுக்கிட்டார்... இறைவனை வேண்டினார். "வாழ்நாள் முழுவதும் தவநெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' என்று புலம்பினார்.

""நாளெல்லாம் நீ பன்றிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் ஒரு பிறவி மட்டும் நீ பன்றியாகப் பிறந்து பன்றி வாழ்க்கை வாழ வேண்டும். அந்த வாழ்க்கையை உடனே முடித்துக் கொண்டால், அதன்பின் உனக்குப் பிறவி கிடையாது. நேராக என்னிடம் வந்து விடலாம். ஆனால், பன்றி வாழ்க்கையில் திளைத்து உன் உண்மை நிலையை மறந்தால் உனக்கு விமோசனமே இல்லை.'' என்று இறைவன் மனமொழியாகப் பேசியருளினார்.

தான் இறக்கப் போகும் நேரம் நெருங்கியவுடன் மற்ற சீடர்களை வெளியே அனுப்பிவிட்டுப் பிரதான சீடனிடம் ரகசியக் குரலில் பேசினார்.

""அப்பனே! இது தேவ ரகசியம். வேறு யாரிடமும் சொல்லிவிடாதே. நான் இன்று இரவு சாகப் போகிறேன். உடனே எதிரே வசிக்கும் ஒரு பெண் பன்றியின் கருவில் நுழைவேன். குறித்த காலத்தில் ஒரு பன்றிக் குட்டியாகப் பிறப்பேன். நீ பன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

நமது சாஸ்திரங்களின்படி ஒரு பன்றியின் கர்ப்பகாலம் 120 நாட்கள். இன்றிலிருந்து 120 நாட்களில் பிறக்கப் போகும் குட்டியை அடுத்த இரண்டு மூன்று தினங்களில் கொன்றுவிடு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பன்றியின் வாழ்க்கையை இரண்டு நாளாவது வாழ்ந்து பார்த்துவிடுகிறேன்.''

அன்று இரவே துறவி மாண்டார். பன்றியின் கருவினுள் புகுந்தார். துறவியின் பிரதான சீடன் கையில் கத்தியுடன் காத்திருந்தான். குறித்த

காலத்தில் பன்றி குட்டி போட்டது. தன் குருவின் மேல் உள்ள கருணையினால் அந்தப் பன்றிக்குட்டி ஒரு வாரம் நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் சீடன்.

பிறகு ஒரு நாள், அந்தக் குட்டியைக் கொல்லக் கத்தியை ஓங்கியபோது பன்றியாக இருந்தும் யோக சக்தி நிறைந்த அந்தத் துறவி அழாத

குறையாகக் கெஞ்சினார்."பெரிய பிழை செய்துவிட்டேன். நான் சொன்னது எல்லாம் தப்பு. இந்தப் பன்றி வாழ்க்கைதான் எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா? இதை முழுமையாக வாழ விரும்புகிறேன்.''

""ஆனால் குருவே! நீங்கள் உடனே உயிரை விட்டால்தானே இறைவன் திருவடியை அடைய முடியும்?''

""இறைவன் திருவடி யாருக்கு வேண்டும்? இந்தப் பன்றிக்குட்டியின் வாழ்க்கையைப் போல் இறைவன் திருவடி சுகமாக இருக்குமா என்ன? இது சொர்க்கமாக இனிக்கிறதடா! இனி நான் எடுக்கப் போகும் எல்லாப் பிறவிகளிலும் ஒரு பன்றியாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன். என் கூற்றில் சந்தேகமிருந்தால் நீயும் வேண்டுமானால் ஒரு முறை பன்றியாகப் பிறந்துதான் பாரேன்.''

தப்பித்தோம் பிழைத்தோம் என்று சீடன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான். அந்தத் துறவி செய்த ஒரே தவறு. தான் பிறந்த

உடனேயே தன்னைக் கொன்றுபோட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். இரண்டு நாட்கள் பன்றியாக வாழ்ந்து பார்க்கிறேன் என்று சொன்னார். அதில் பற்று வந்துவிட்டது.

இந்தக் கதையில் ஒரு பெரிய வாழ்வியல் உண்மை ஒளிந்திருக்கிறது. இன்று பலரும் மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள் தெரியுமா? அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்ற ஆர்வத்தில் ஆரம்பித்துத் பின்

அதைவிட்டு விலக முடியாத அளவிற்குத் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.

இன்றைய இளைஞர் கூட்டம் மது, புகைப்பிடித்தல், தவறான உறவு என்று அனைத்தையும் ஒரு முறையாவது சுவைத்துப் பார்க்க விரும்புகிறது. அது இரண்டு நாட்கள் பன்றியாக வாழும் கதைதான். பன்றியாக இல்லாத வரைக்கும் தான், பன்றியைக் கண்டால் அருவருப்பாக இருக்கும். பன்றியாகிவிட்டால் அதுவே சுவர்க்க லோகமாக தான் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

விளையாட்டிற்குக் குடித்தாலும் விஷம், தன் வேலையைக் காட்டிவிடும். விஷம் என்று தெரிந்தபின் விலகி இருப்பது நல்லது. எல்லா தீய குணங்களும் ஒன்றுதான்.

  • 399
·
Added article

🌹பல வருடங்கள் நாடக அனுபத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை தனது நகைச்சுவை மூலம் சொன்னவர் இவர். இவரை மக்கள் கலைவாணர் என அழைத்தனர். யார் மனதையும் நோகடிக்காமல் எல்லோரும் ரசிக்கும்படி காமெடி செய்வது இவரின் பாணி.

🌹மற்றவர்களுக்கு கஷ்டம் எனில் உடனே உதவ வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் எண்ணத்திற்கு வழிகாட்டி இவர்தான். ஏனெனில், தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பங்கு மற்றவர்களுக்கே கொடுத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தபோதே அவருக்கு எம்.ஜி.ஆரை தெரியும் என்பதால் அவர்தான் எம்.ஜி.ஆரை வழிநடத்தினார்.

🌹கஷ்டம் என வருபவர்களுக்கு உதவ வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆரிடம் சொல்லி சொல்லி அவரை வளர்த்தவர்தான் என்.எஸ்.கிருஷ்ணன். எனவேதான், அவர்மீது மிகுந்த அன்பும் மரியாதையையும் எப்போதும் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார்.

🌹நிறைய தானங்கள் செய்ததாலும், ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறை சென்றதாலும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியதாலும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு கடன் சுமை ஏற்பட்டது. ஒருசமயம், சென்னை ராயப்பேட்டை சண்முகமுதலி தெருவில் இருந்த தனது வீட்டை விற்பது என என்.எஸ்.கிருஷ்ணன் முடிவெடுத்தார்.

🌹இந்த வீட்டை சிவாஜியிடம் விற்பதாக முடிவு செய்யப்பட்டு வாயளவில் ஒரு தொகையும் பேசப்பட்டது. பணம் இன்னும் கைமாறவில்லை. பத்திரமும் பதியப்படவில்லை. அப்போது மார்வாடி ஒருவர் சிவாஜி பேசிய தொகையை விட அதிகவிலைக்கு அந்த வீட்டை வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். கிருஷ்ணனுக்கு பணத்தேவை அதிகமாக இருந்ததால் ‘மார்வாடியிடமே வீட்டை விற்றுவிடுங்கள்’ என அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

🌹ஆனால், என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அதில் விருப்பமில்லை. ‘நான் பல வருடங்களாக வசிக்கும் வீடு இது. இந்த பக்கம் வரும்போது நாம வாழ்ந்த வீட்டை ஒரு மார்வாடிக்கு கொடுத்துட்டோமே என நினைத்தால் மனசு கஷ்டப்படும். ஆனா சிவாஜிக்கு விற்றால் ‘நம்ம வீட்டில் நம்ம தம்பி கணேசன்’ இருக்கார்னு மனசு சந்தோஷப்படும். வீட்டுகுள்ள போகவும் மனசு கூசாது’ என சொல்லி அந்த வீட்டை சிவாஜிக்கே விற்றாராம் என்.எஸ் கிருஷ்ணன் அவர்கள்.

  • 401
·
Added article

தேவர் கோயம்புத்தூரில் இருந்த காலத்தில் கடையில் இரண்டு இட்லிகள் வாங்கினால், பத்துமுறை சாம்பார் வாங்குவார். அவரிடம் இட்லி வாங்க அதற்கு மேல் பணம் இல்லாததால், சாம்பாரைக் குடித்தே வயிற்றை நிரப்புவார். தேவரே இதுக்குமேல சாம்பார் ஊத்த முடியாது... நிறுத்திக்கோரும் என ஓட்டல்காரர்கள் சொல்லியதெல்லாம்கூட நடந்திருக்கிறது. அப்படி ஒருநாள் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த தேவர் கழுத்தில், வேட்டியைப் போட்டு ஒருவர் இழுத்துவிடுகிறார். தேவர் அவரிடம் வாங்கிய 10 ரூபாய் கடனை இன்னும் திரும்பிக்கொடுக்காததால், அவர் வேட்டியை கழுத்தில் போட்டார். கழுத்தில் வேட்டி போடுவதை அசிங்கமான செயலாக நினைப்பார்கள். அந்த இடத்தில் ஜனமெல்லாம் கூடிவிட்டது. இரண்டு நாட்களில் திருப்பிக்கொடுத்துவிடுவதாக தேவர் சொன்னதும் கழுத்தில் போட்ட வேட்டியை அவர் எடுத்தார்

வாக்கு கொடுத்தபடி இரண்டு நாட்களில் பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த தேவர், கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு மருதமலைக்குக் கிளம்பினார். ‘ஒருத்தன் சாம்பார் ஊத்தமாட்டேங்கிறான்; இன்னொருத்தன் கழுத்தில் வேட்டியைப் போடுகிறான். உன்னையே நம்பியிருக்க எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை தேவையாடா... நீயெல்லாம் கடவுளாடா’ என முரட்டுத்தனமாக வேட்டியைக் கட்டிக்கொண்டு முருகன் சிலையை உடைக்க மருதமலை படிக்கட்டில் ஏறுகிறார். அந்தக் காலத்தில் மருதமலை மிகவும் சிறிய கோவிலாகத்தான் இருந்தது. கெட்டக் கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டே படியேறுகையில், சிகரெட் பிடித்துவிட்டு யாரோ தூக்கி எறிந்த ஒரு சிகரெட் பெட்டி ஓர் ஓரத்தில் கிடக்கிறது. அதில் ஏதோ இருப்பதுபோல தெரிந்ததும், தேவர் கையில் எடுத்துப் பார்க்கிறார். அதில் பத்து ரூபாய் நோட்டு இருந்துள்ளது. அந்தப் பத்து ரூபாய் கிடைத்ததும் கோவிலிலேயே தேவர் கதறி அழுதிருக்கிறார். அதன் பிறகு, கோயம்புத்தூர் திரும்பிவந்து அந்தக் கடனை தேவர் அடைத்தார்.

சினிமாவில் நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்து பின்னாட்களில் பெரிய கோடீஸ்வரனாகிவிட்டார். தேவருக்கு சர்க்கரை வியாதி வந்தவுடன் உணவுப் பழக்கத்தில் கண்டிப்போடு இருக்கும்படி டாக்டர்கள் தேவரை அறிவுறுத்தினர். இதையும், 'சாப்பிடணும்னு நினைக்கையில் கையில் பணம் கொடுக்கல... பணம் கொடுத்திருக்கையில் சாப்பிடவிட மாட்டேங்கிற' என முருகனிடம் கோபத்தோடு முறையிடுவார். தினமும் இதுபோல பூஜையை முடித்துவிட்டு, அதன்பின்னரே காலை உணவு சாப்பிடுவார். சாப்பிட்டுவிட்டு எல்லா பத்திரிகை, நாளிதழ்களையும் எடுத்து வாசிப்பார்.

அன்று ஒருநாள் அவரிடம், ‘அண்ணே குமுதம் படிச்சீங்களா’ எனக் கேட்டேன். ‘படித்தேன்’ என்றார். அதில், ஒரு பையனுக்கு மருத்துவ உதவி கேட்டு விளம்பரம் வந்திருந்தது. ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் அந்தப் பையன் சிகிச்சைக்கு அது பெரிய அளவில் கைகொடுக்கும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘அந்த விளம்பரத்தைக் கவனித்தீர்களா’ என்றேன். ‘கவனித்தேன்... அதற்கு என்ன’ என்றார். ‘அந்தப் பையனுக்கு உண்மையிலேயே நகமெல்லாம் நீல வண்ணத்தில்தான் இருக்கிறது. வெளியே படிக்கட்டிற்கு அருகில்தான் நிற்கிறான்’ என்றேன். ‘அவனை உள்ளே கூப்பிடு’ என்றார். நான் அவனை உள்ளே அழைத்து வந்ததும் தேவரிடம் வந்து நீல வண்ணத்தில் இருக்கும் தன் நகங்களைக் காட்டினான். தேவர் அதிர்ந்துவிட்டார். ‘ஒரு ரூபாய் ஒரு ரூபாய்யா வசூலித்து நீ சிகிச்சைக்குப் போக முடியுமா’ என அவனிடம் தேவர் கேட்க, அருகில் இருந்த நான் ‘நீங்கள் நூறு ரூபாய் கொடுத்து உதவுங்கள் அண்ணே’ என்றேன்.

கொஞ்ச நேரம் யோசித்த தேவர், ‘சரி சிகிச்சைக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்’ எனக் கேட்டார். அந்தப் பையன் பத்தாயிரம்வரை பணம் செலவாகும் என்றான். மேலே இருந்த அறைக்கு ஃபோன் செய்த தேவர், பத்தாயிரம் பணம் கொண்டுவரச் சொன்னார். ‘ஒவ்வொரு ரூபாயா வாங்கி நீ என்னைக்கு சிகிச்சை எடுக்க? இந்தப் பத்தாயிரத்தை வச்சு வைத்தியம் பாரு’ எனக் கூறி, பணத்தை அந்தப் பையன் கையில் கொடுத்தார். அன்றைய காலத்தில் பத்தாயிரம் என்பது மிகப்பெரிய தொகை. பின்பு அந்தப் பையன் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமடைந்தான். ஒரு ரூபாய் கொடுத்தால் போதும் என குமுதத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அந்தப் பையனை நான் அவரிடம் கொண்டுவந்து நிறுத்த, ஒத்த ரூபாயென்ன... மொத்த ரூபாயும் நானே தாரேன் என்று கொடுத்த மனசு எத்தனை பேருக்கு வரும். தேவரின் வள்ளல் குணத்திற்கு இதுவும் ஒரு மிகப்பெரிய சான்று

  • 403