- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்படும். இயந்திரம் தொடர்பான பணிகளில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். எந்த ஒரு சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
ரிஷபம்
உத்தியோக ரீதியான வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். துரிதமான செயல்பாடுகள் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சுகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மிதுனம்
பெற்றோர் வழியில் அனுசரித்து செல்லவும். விதண்டாவாத பேச்சுகளை தவிர்க்கவும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி
கடகம்
சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் தோன்றும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். தவறிய சில பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். உயர்கல்வி ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபார அபிவிருத்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் நிமித்தமான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. இனம் புரியாத சிந்தனைகளால் மனப்போராட்டம் மேம்படும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
திட்டமிட்ட காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாலின மக்களால் நன்மை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். புதிய துறை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
சமூகப் பணிகளில் விவேகம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அழுத்தங்கள் அதிகரிக்கும். புதிய கொள்முதல்களில் கவனம் வேண்டும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். அரசு சார்ந்த செயல்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
தனுசு
சில முடிவுகளை தன்னம்பிக்கையுடன் எடுப்பீர்கள். தேவைக்கு உகந்த வரவுகள் கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் உயரும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். தொழில் ரீதியான இழுபறியான வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதரிகள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரம் ரீதியான பிரச்சனைகளில் தெளிவுகள் பிறக்கும். வழக்குகளில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில வேலைகள் சாதகமாகும். தன வரவுகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அரசால் ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம்
சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் கூடுதல் லாபங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
பெரியோர்களின் கருத்துக்களால் மனதில் மாற்றம் பிறக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவீர்கள். மக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் ஆதாயமும் கிடைக்கும். தாய் வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 19.5.2026.
இன்று மாலை 06.55 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று பிற்பகல் 12.55 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.
இன்று அதிகாலை 01.05 வரை சுகர்மம் . பின்னர் இரவு 10.05 வரை திருதி. பின்பு சூலம்.
இன்று காலை 08.07 வரை தைத்தூலம். பின்னர் மாலை 06.55 வரை கரசை. பின்பு வனிசை.
இன்று அதிகாலை 05.52 வரை அமிர்த யோகம். பின்னர் பிற்பகல் 12.55 வரை சித்தயோகம். பின்பு மரணயோகம்..
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’. இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் ஜூலை 3-ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க, விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு மே 18 அன்று இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காணாமல் போயினர்.
இந்த நாளை துக்க நாளாகவும், உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாகவும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கடைப்பிடிக்கின்றனர்.
பிரபல மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla), மென்பொருள் கோளாறு (Software issue) காரணமாகக் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள தங்களின் ஆயிரக்கணக்கான கார்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
காரை பின்னோக்கிச் செலுத்தும்போது, அதன் பின்புற கேமரா சரியாக வேலை செய்யாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
கனடா போக்குவரத்துத் துறையின் (Transport Canada) சமீபத்திய அறிவிப்பின்படி, கார்களை ஸ்டார்ட் செய்த உடனே ரிவர்ஸ் கியர் போடும்போது, பின்புறக் கேமராவின் காட்சி திரையில் தோன்றுவதில் தாமதம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
கனடாவின் விதிமுறைகளின்படி, ரிவர்ஸ் கியர் போட்ட இரண்டு வினாடிகளுக்குள் பின்புற கேமரா காட்சி திரையில் தோன்ற வேண்டும். ஆனால், இந்த மென்பொருள் கோளாறினால் கேமரா காட்சி தெரியாமல் போவதால், காரை பின்னோக்கி எடுக்கும்போது பின்னால் இருக்கும் தடைகளை ஓட்டுநரால் பார்க்க முடியாது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வாகனங்களின் விவரங்கள்: இந்த தொழில்நுட்பக் கோளாறால் பின்வரும் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட மாடல் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளன:
• Tesla Model 3: 2021 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை
• Tesla Model S: 2021 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை
• Tesla Model X: 2022 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை
• Tesla Model Y: 2020 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை
கனடாவில் மட்டும் மொத்தம் 13,846 வாகனங்கள் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதே போன்ற கோளாறுக்காக அமெரிக்காவில் 2,18,000-க்கும் அதிகமான டெஸ்லா கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு இதுகுறித்த அறிவிப்பு மின்னஞ்சல் (Email) மூலம் அனுப்பப்படும் என டெஸ்லா தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மென்பொருள் சிக்கலைச் சரிசெய்ய கார்களை நேரடியாக தயாரிப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லத் தேவையில்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது. வழக்கம்போல இணையம் வழியாகவே இதற்கான மென்பொருள் அப்டேட்டை டெஸ்லா வெளியிட்டுள்ளது.
புளித்த ஏப்பம் வயிற்று பிரச்னையின் அறிகுறி
நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது உணவு. ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை நிதானமாக, ஆற அமர உக்கார்ந்து சாப்பிட்டால் தான் அது சரியான முறையில் உடம்பில் சேர்ந்து சக்தியாக மாறும்.
பரபரப்பான வாழ்க்கை, அழுத்தமான வேலை என்று நாம் வாழும் சூழலே மாறிப்போன பிறகு ஆர அமர உக்கார்ந்தெல்லாம் சாப்பிட யாருக்கும் நேரமில்லை. பத்தோடு பதினோறாவது வேலையாகச் சாப்பிட்டுக் கையை கழுவிட்டு ஓடுகிறோம். ஆனால் அது நல்லதல்ல.
*ஏப்பம் ஏன்?*
வயிறு நிறையச் சாப்பிட்டபிறகு இயல்பாக ஏப்பம் வருவதுண்டு. சிலர், சாப்பிட்ட பிறகு சத்தமாக ஏப்பம் விட்டால்தான் நிம்மதியாக உணர்வார்கள்.
ஏப்பம் வருவது இயல்பான உடலியல் நிகழ்வுகளில் ஒன்றுதான். ஒரு நாளில் ஓரிரு முறை ஏப்பம் வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சாப்பிட்டு முடித்ததும் அடிக்கடி, அதிக சத்தத்துடனும் வாடையுடனும் தொடர்ச்சியாக ஏப்பம் வந்துகொண்டே இருந்தால், வயிற்றில் ஏதோ பிரச்னை என்று பொருள்.
அதுவும், ஏப்பம் வரும்போது சாப்பிட்ட உணவுகள் எதுக்களித்து புளிப்புச் சுவையையும், நெஞ்சு எரிச்சலையும் ஏற்படுத்தும். இப்படி வரும் புளித்த ஏப்பம் இரைப்பையில் ஏற்பட்டிருக்கும் நோயின் அறிகுறியாக இருக்கலாம்
*புளித்த ஏப்பம் அடிக்கடி வருவதற்கான காரணங்கள்*
*1. பொதுவான காரணங்கள்*
√ அவசரக் கோலத்தில் சாப்பிடுவது, அடிக்கடி கார்பனேட்டட் டிரிங்ஸ் அருந்துவது, பீன்ஸ், வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வாழைப்பழம், பழைய கோதுமை பிரெட் ஆகியவற்றை அதிகளவு சாப்பிடுவதாலும் அவஸ்தையான ஏப்பம் வரலாம்.
√ சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் மாத்திரைகள், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் அருந்தும் டானிக், வலிநிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றின் பக்க விளைவுகளாகவும் ஏப்பம் வரும்.
இவற்றையெல்லாம் தவிர்த்தபிறகும் தொடர்ந்து ஏப்பம் வந்தால் வயிற்றில் ஏற்பட்டிருக்கும் அமிலப் பின்னூட்ட நோயின் (GERD - Gastro Esophageal Reflux Disease) அறிகுறி என்று புரிந்துகொள்ள வேண்டும்.
*அமிலப் பின்னூட்ட நோய் என்றால் என்ன?*
நாம் சாப்பிடும் உணவானது உணவுக் குழல் வழியாக இரைப்பைக்குள் செல்கிறது. இரைப்பைக்குள் சென்ற உணவு எதுக்களித்து, அமிலங்களோடு இணைந்து மீண்டும் உணவுக் குழலுக்கு வருவதையே `அமிலப் பின்னூட்ட நோய்' என்கிறோம்.
இரைப்பையிலிருந்து மேலெழும் அமிலத்தால் உதரவிதான ஜவ்வு, உணவுக்குழல்கள் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு எரிச்சல் ஏற்படும்.
*2. பிற காரணங்கள்*
√ இரைப்பையையும் உணவுக் குழலையும் பிரிக்கும் உதரவிதானத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள், இரைப்பை திசுக்களின் இயக்கம் குறைந்து போவது, இரைப்பை அழற்சி நோய், இரைப்பை மற்றும் சிறு குடல்களில் ஏற்பட்டிருக்கும் புண், இரைப்பையில் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter Pylori - H. pylori) பாக்டீரியாக்களின் அதிகப்படியான வளர்ச்சி ஆகியவற்றால்கூட நெஞ்செரிச்சல் ஏற்பட்டு புளித்த ஏப்பம் வெளிப்படும். இது தொடர்ந்தால் அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.
√ செரிமான மண்டலத்தில் என்சைம் கோளாறுகள், செரிமான பிரச்னைகள் இருந்தால் நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானமடையாது. குறிப்பாக, நம் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் சரியாக செரிமானமாகவில்லை என்றாலும் தொடர்ந்து ஏப்பம் வரும்.
√ மனஅழுத்தம் இருந்தாலும் அடிக்கடி ஏப்பம் வரும்.
தொடர்ந்து நெஞ்செரிச்சலோடு புளித்த ஏப்பம் வந்தால் இரைப்பைப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
*புளித்த ஏப்பம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியது*
X புளித்த ஏப்பம் பிரச்னை உள்ளவர்கள் அதிகக் காரமுள்ள உணவுப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.
X சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ சாப்பிடக் கூடாது.
X புகையிலை, மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
X இரவு நேரத்தில் அரை வயிறு மட்டுமே சாப்பிட்டு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் கழித்து உறங்க வேண்டும்.
X நேரத்துக்குச் சாப்பிடுவதோடு, ஏப்பம் வருவதற்குக் காரணமான உணவுகள், மருந்து மாத்திரைகளைத் தவிர்க்கவும் வேண்டும்.
*ஏப்பம் தானே என்ற அலட்சியம் வேண்டாம்*
வயிறு என்பது மிகவும் மென்மையான பகுதி. ஆனால் மிகக்கடுமையான வேலைகளைச் செய்கிறது. அதனால் அதைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. வயிற்றில் எந்தப் பிரச்னை வந்தாலும் அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும்.
தொடர்ந்து புளித்த ஏப்பம் வந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். எண்டோஸ்கோப்பி செய்வதன் மூலம் உணவுக் குழலிலோ அல்லது இரைப்பையிலோ ஏதாவது பிரச்னைகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
நம் உடலில் வழக்கத்துக்கு மாறாக நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துமே உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை வெளிப்படுத்தும் காரணிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால் `ஏப்பம் தானே' என்று அலட்சியம் செய்யாமல் உடனடியாகப் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வது நமது ஆரோக்கியத்துக்கு நல்லது.
*தீர்வுக்கு என்ன மருத்துவம்?*
புளித்த ஏப்பம் மற்றும் அதையொட்டி வரும் நெஞ்செரிச்சல், செரிமானக்கோளாறு போன்றவற்றை அன்றாடச் சமையலில் சேர்க்கும் இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சில எளிய மூலிகைகள் மூலம் எளிதாகக் குணப்படுத்தலாம்.
√ இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி அது மூழ்குமளவு எலுமிச்சைச்சாறு விட்டு தேவைக்கேற்ப இந்துப்பு சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். நன்கு உலர்ந்த நிலையில் அந்த இஞ்சித்துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்து வந்தால் புளித்த ஏப்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
√ உணவில் அடிக்கடி பிரண்டைத் துவையல், வேப்பம்பூ ரசம், இஞ்சித் துவையல், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலைத் துவையல் செய்து சாப்பிட்டு வருவது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புளித்த ஏப்பம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் தரும்.
√ அதிமதுரத்தைப் பொடியாக்கிச் சுவைப்பது, சாப்பிட்டவுடன் வெற்றிலை போடுவது, புதினா ஜூஸ் போன்றவையும் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று லண்டன் பயணமானார்,லண்டனில் இடம்பெறும் அரச தலைவர்கள் மநாட்டில் கலந்து கொள்வதற்காகவே பயணமாகியுள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.
கனடா - டொரண்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கத்திகுத்து சம்பவத்தில், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கிப்ளிங் அவென்யூ மற்றும் ஆல்பியன் சாலை சந்திப்புப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலில் பலத்த கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரைக் மீட்டனர். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் மற்றும் சந்தேக நபர் இருவருமே 30 வயது மதிக்கத்தக்கவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் சம்பவ இடத்திற்கு அருகிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபரும், சந்தேக நபரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள், அநேகமாக அவர்கள் நண்பர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், முதற்கட்ட விசாரணையின்படி, அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே ஏற்பட்ட ஒரு தகராறு காரணமாகவே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மனம் பக்குவப்பட்டால், பாதை தெளிவாகும். பாதை தெளிவானால், பயணம் எளிதாகும், பயணம் எளிதானால் வாழ்க்கை இனிதாகும்.
*நம் மனம் எப்போதும் நம்மைவிட அடுத்தவர்களுக்காகதான் அதிக நேரம் செலவிடுகிறது.*
மனம் தன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளாதவரை, அது மேலும் மேலும் துன்பத்தை உருவாக்கும். மனதைப் புரிந்துகொள்வதுதான் அமைதியின் தொடக்கம்.
*வயது என்பது உடலுக்கு தான். மனதுக்கு அல்ல. மனதை இளமையாக வைத்து கொண்டால் மரணம் வரை மகிழ்ச்சியாக வாழலாம்.*
மேஷம்: உங்கள் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பல வகையிலும் பண வரவு அதிகரிக்கும். வாசனைத் திரவியங்கள், கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். அரசு, வங்கி அதிகாரிகளின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.
ரிஷபம்: நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். தொழில், வியாபாரத்தில் கவனம் தேவை. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
மிதுனம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். வியாபாரத்தின் வளர்ச்சிக்காக புதிய வழிமுறைகளைக் கையாளுவீர்கள். அலுவலகத்தில் வேலைகளை விரைந்து முடித்து, அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து கூடும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். பேச்சில் பொறுமை தேவை.
சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். அரசு அதிகாரிகளின் உதவியால், இழுபறியாக இருந்த சில காரியங்களை முடிப்பீர்கள்.
கன்னி: நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் பேச்சுக்கு செவிசாய்ப்பீர்கள். அக்கம் பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு உண்டாகும். பண வரவு உண்டு.
துலாம்: தொழில், வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். கடந்தகால சுகமான அனுபவங்கள், சாதனைகளை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எதிலும் உங்கள் கை ஓங்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்: திடீர் வெளியூர் பயணத்தால் அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படும். நல்ல வாய்ப்புகளை தவறவிட்டோமே என ஆதங்கப்படுவீர்கள். வாகனத்தில் கவனமாக செல்லுங்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. மகான்கள், பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.
தனுசு: உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். எதிலும் நிதானம் அவசியம்.
மகரம்: குடும்பத்தினரால் மன நிம்மதி கிடைக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்கள், சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
கும்பம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். தேவையற்ற மனக் குழப்பம் நீங்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். வெளி வட்டாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும்.
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 4 ஆம் தேதி திங்கட்கிழமை 18.5.2026
இன்று இரவு 09.19 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று பிற்பகல் 02.23 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.
இன்று அதிகாலை 02.51 வரை அதிகண்டம் . பின்னர் சுகர்மம்.
இன்று காலை 10.32 வரை பாலவம். பின்னர் இரவு 09.19 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று முழுவதும் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
திருச்சி. ஸ்ரீரங்கம். காவிரி ஆத்தங்கரை.
ரெண்டு பேரு.
ரங்கநாதன். வயசு 80.
அலமேலு. வயசு 75.
கல்யாணம் ஆகி 60 வருஷம்.
ஒரே பையன்.
ஒரு ஆக்சிடென்ட்ல 25 வருஷம் முன்னாடி போய்ட்டான்.
மருமகள் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கொண்டு போய்விட்டாள்
பிள்ளை வயிற்று பேரன் கூட பேச்சு வார்த்தை இல்ல.
வீட்ல அவர்கள் ரெண்டு பேர் மட்டும்.
ஏக்கம் இல்லை.
விரக்தி இல்லை.
ஏன்னா ரெண்டு பேருக்கும் ஒரு வேலை.
தினமும் காலைல 5 மணிக்கு ரங்கநாதன் எழுந்திருப்பாரு.
காவிரிக்கு போவாரு. குளிப்பாரு.
அப்புறம் கோயில் வாசல்.
அங்க ஒரு பெரிய அண்டாவுல தண்ணி.
வர்ற பக்தர்களுக்கு மோர். தண்ணி.
தன் கையால இலவசமா கொடுப்பாரு.
"ரங்கநாதா"ன்னு சொல்லி கொடுப்பாரு.
அலமேலு வீட்ல.
10 மணிக்கு சமையல்.
சாம்பார் சாதம்.
தயிர் சாதம்.
மதியம் 12 மணிக்கு வாசல்ல உட்காருவா.
போறவங்க, வர்றவங்க.
சாமியார். பிச்சைக்காரன்.
யாரு வந்தாலும் "சாப்பிட்டு போப்பா"னு கூப்பிடுவா.
ரெண்டு பேருக்கும் பென்ஷன்.
மாசம் 8000.
அதுல 6000 இதுக்கே செலவு.
மிச்சம் 2000. மருந்து. சாப்பாடு.
ஊர்க்காரங்க கேட்பாங்க.
"தாத்தா. ஏன் இப்படி. கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு. புள்ள இல்ல. யாருக்கு சேர்க்கிறீங்க."
ரங்கநாதன் சிரிப்பாரு.
"தம்பி. 60 வருஷம் முன்னாடி நானும் அலமேலும் ஒரு வாக்குறுதி கொடுத்தோம்.
புள்ள இல்லனாலும் பாரம் இல்லனாலும், சாகுற வரைக்கும் யாருக்காவது சோறு போடணும். தண்ணி கொடுக்கணும். அதான்."
---
*ஒரு நாள். வைகாசி மாசம். உச்சி வெயில்.*
ரங்கநாதன் கோயில் வாசல்ல, மோர் கொடுத்துட்டு இருந்தாரு.
திடீர்னு நெஞ்சு வலி. கீழ விழுந்தாரு.
ஜனங்க தூக்கினாங்க.
ஆஸ்பத்திரி.
டாக்டர் சொன்னாரு.
"ஹார்ட் அட்டாக். 80 வயசு. ஆபரேஷன் பண்ண முடியாது.
2 நாள். இல்ல 2 வாரம். அவ்வளவுதான்."
அலமேலு உடைஞ்சுட்டா.
75 வயசு.
கதறினா.
"என்ன விட்டுட்டு போகாதீங்க. நான் தனியா என்ன பண்ணுவேன்."
ரங்கநாதன் கண்ணு திறந்தாரு.
கைய பிடிச்சாரு.
"அலமேலு. அழாத. ஒரு விஷயம் கேட்குறேன். செய்வியா."
"சொல்லுங்க."
"நான் போய்ட்டா நீ இந்த மோர் கொடுக்குற வேலைய நிறுத்திடாத. நான் சாகுற வரைக்கும்தான் வாக்குறுதி இல்ல.
நீ இருக்குற வரைக்கும் வாக்குறுதி.
செய்வியா."
அலமேலு அழுதுண்டே தலையை ஆட்டினா.
*"செய்வேன்....... சத்தியமா செய்வேன்."*
அடுத்த 3 - வது நாள்.
ரங்கநாதன் போய்ட்டாரு.
கோயில் வாசல்ல மோர் கொடுத்துட்டே போகணும்னு ஆசை.
வீட்லயே போய்ட்டாரு.
---
*மறுநாள் காலைல 5 மணி.*
அலமேலு எழுந்தா. குளிச்சா.
ரங்கநாதன் வச்சிருந்த பெரிய அண்டாவை எடுத்தா.
காவிரி தண்ணி. மோர் கலந்தா.
தூக்க முடியல.
75 வயசு.
இழுத்துண்டே போனா.
கோயில் வாசல்.
அதே இடம்.
அதே நேரம்.
"மோர்... மோர் வேணுமா..." ![]()
ஜனங்க பார்த்தாங்க.
75 வயசு கிழவி.
நேத்து புருஷன் செத்தான்.
இன்னைக்கு மோர் கொடுக்குறா.
ஒருத்தர் கேட்டாரு.
"அம்மா. ஏம்மா. துக்கம் அனுசரிக்காம..."
அலமேலு கண்ணை துடைச்சா. சிரிச்சா.
"தம்பி. துக்கம் என் வீட்ல.
வாக்குறுதி கோயில் வாசல்ல.
அவரு இல்லேனாலும் வாக்குறுதி இருக்கு.
மோர் குடி தம்பி.
ரங்கநாதா."
அன்னைல இருந்து தினமும்.
காலைல 5 மணி.
அலமேலு கோயில் வாசல்.
மோர் அண்டா.
மதியம் 12 மணி.
வீட்டு வாசல். சாம்பார் சாதம்.
ரெண்டு வேலை.
75 வயசு. தனி ஆள்.
---
*2 வருஷம் கழிச்சு.*
நியூஸ் பேப்பர்ல செய்தி.
"ஸ்ரீரங்கம் மோர் பாட்டி. 77 வயசு.
2 வருஷமா தினமும் 200 பேருக்கு இலவச மோர். சாதம்.
கணவன் வாக்குறுதிய காப்பாத்துறா."
கலெக்டர் வந்தாரு.
"அம்மா. உங்களுக்கு விருது."
அலமேலு கையெடுத்து கும்பிட்டா.
"வேண்டாம் அய்யா. விருது வேண்டாம். அண்டா மட்டும் புதுசு வாங்கி கொடுங்க. ஓட்டை விழுந்துடுச்சு. நிறைய பேரு வர்றாங்க. பத்தல."
கலெக்டர் கண்ணு கலங்கிடுச்சு.
அன்னைக்கு மாலை
வீடு.
அலமேலு திண்ணைல உட்கார்ந்திருக்கா.
கையில ரங்கநாதன் போட்டோ.
அவரிடம் மானசீகமாக பேசுறா.
"ஏங்க. கேட்குதா. இன்னைக்கும் 200 பேருக்கு மோர் கொடுத்தேன்.
சாதம் போட்டேன்.
நீங்க இல்லாம 2 வருஷம் ஓடிடுச்சு.
ஆனா, கஷ்டம் இல்ல.
ஏன்னா வேலை இருக்கு.
வாக்குறுதி இருக்கு."
"நீங்க எங்க இருக்கீங்க.
கோயில் வாசல்லதானே.
தினமும் பார்க்குறேன்.
யாராவது 'ரங்கநாதா'னு சொல்லி மோர் குடிக்கும்போது, நீங்க குடிக்கிற மாதிரி இருக்கு."
"நிம்மதியா இருக்கேன்.
ஏன்னா தனியா இல்ல.
வாக்குறுதி கூட இருக்கு.
நீங்க கூட இருக்கீங்க."
---
*கடைசி.*
அலமேலு பாட்டி 85 வயசுல போய்ட்டாங்க.
கோயில் வாசல்ல. மோர் கொடுத்துட்டே.
கைல சொம்பு. உதட்டுல "ரங்கநாதா".
இன்னைக்கும் ஸ்ரீரங்கம் கோயில் வாசல்ல ஒரு அண்டா இருக்கு.
ஊர் பசங்க சேர்ந்து வைச்சிருக்காங்க.
மேல எழுதியிருக்கு.
*"ரங்கநாதன் - அலமேலு மோர் பந்தல்.*
வாக்குறுதி சாகாது.
மோர் இலவசம்.
ரங்கநாதா."__ ![]()
நண்பர்களே!!
இது கதை இல்லை. நிஜம்.
2018ல திருச்சி பேப்பர்ல வந்துச்சு.
ஏக்கம் வரும்.
புள்ளைங்க இல்லைன்னா.
சொந்தம் இல்லைன்னா.
விரக்தி வரும்.
80 வயசுல தனியா நின்னா.
*ஆனா, நிம்மதி.....*
*ஒரு வாக்குறுதில இருக்கு.*
*ஒரு சொம்பு மோர்ல இருக்கு.*
*ஒரு பிடி சாதத்துல இருக்கு.*
உலகம் தோன்றிய காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மதேவரால் உருக்கப்பட்டவர் பிருகு முனிவர். பிருகு என்னும் சொல்லுக்கு, கடுமையான தவசக்தியால் பாவங்களைப் பொசுக்குபவர் என்று பொருள்.
பஞ்சபூதங்களில் அக்கினியுடன் பிருகு மகரிஷி பிறந்ததாக வேதங்கள் கூறுகின்றன. பிருகு மகரிஷி கியாதி என்ற பெண்மணியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள். இவள் விஷ்ணுவை மணந்து கொண்டாள். இதனால் உலகத்தைக் காக்கும் ஸ்ரீவிஷ்ணுவுக்கு மாமனார் என்ற பெருமை பெற்றவர் இவர்.
பிருகுவின் பெயரால் தான் லட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் ஏற்பட்டது. மகாபாரதத்தில் பிருகு மகரிஷிக்கும் பரத்வாஜ முனிவருக்கும் நடந்த வாக்குவாதம் மிகவும் சிறப்பானது. இதற்கு பிருகு பரத்வாஜ சம்வாதம் என்று பெயர். இப்பகுதி தத்துவக் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் பகுதியாக அமைந்துள்ளது. கடவுளைப் பற்றி சொல்வதில் இவர் தனிப்பெயர் பெற்றவராக இருக்கிறார்.
சூதபவுராணிகர் என்ற முனிவர் புராணக் கதைகளை உலகிற்கு வழங்கினார். இந்தக் கதைகளைக் கேட்டு உலகிற்கு தந்தவர் பிருகு வம்சத்தில் பிறந்த சவுனகர் என்பவர் ஆவார். இவர் இல்லாவிட்டால் புராணக்கதைகளே நமக்குக் கிடைத்திருக்காது. என்றும் பதினாறு வயது என்ற பெருமைக்கு உரிய மார்க்கண்டேய மகரிஷியும் பிருகு வம்சத்தவர் தான். விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் பரசுராமரும் இவரது வம்சத்தில் தான் அவதரித்தார்.
பிருகு எனப்படும் பார்கவ வம்சத்தில் அவதரித்ததால் பரசுராமருக்கு பார்கவ ராமன் என்ற பெயரும் உண்டு. விருத்திராசுரனைக் கொல்ல தன் முதுகெலும்பினையே இந்திரனிடம் கொடுத்து, தன்னையே மாய்த்துக் கொண்ட ததீசி முனிவரும் பிருகுவம்சத்தில் தோன்றியவரே. ஜனமேஜயர் செய்த சர்ப்பயாகத்தை நடத்தி வைத்த உதங்கமுனிவர் இவ்வம்சத்தவர் தான். இப்படி புராணங்களில் இடம்பெற்ற எத்தனையோ மகரிஷிகள் பிருகுவம்சத்தில் அவதரித்துள்ளனர்.
பிருகு மகரிஷி புலோமா என்ற பெண்ணையும் மணந்தார் . இவள் குழந்தையாக இருந்தபோது மிகவும் சுட்டியாக இருந்தாள். அவளைக் கட்டுப்படுத்த எண்ணிய பெற்றோர், அதோ பார்! அந்த மரத்தில் இருக்கும் பிரம்மராட்சதனிடம் உன்னைக் கொடுத்துவிடுவோம் என்று சொல்லி பயமுறுத்தினர். விளையாட்டாக சொன்ன சொல்லை அவர்கள் மறந்து விட்டனர். ஆனால், மரத்தில் இருந்த பிரம்மராட்சதன் இந்நிகழ்வை மறக்காமல் தக்க தருணத்திற்காகக் காத்திருந்தான்.
புலோமாவிற்கு திருமணவயது வந்தது. பிருகு மகரிஷிக்கும் புலோமாவுக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. இதை அறிந்த ராட்சதனுக்கு கடும் கோபம் உண்டானது. புலோமா இருந்த பிருகுவின் ஆஸ்ரமத்திற்கு அருகில் வந்து ஒரு மரத்தில் தங்கிக் கொண்டான். இவ்விஷயத்தை அறிந்த பிருகு தன் மனைவிக்கு பாதுகாப்பு தேடினார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புலோமாவை, தான் இல்லாத நேரத்தில் பாதுகாக்கும்படி தன்னோடு பிறந்த தன் சகோதரன் அக்னிதேவனுக்கு உத்தரவிட்டார். அதனால் அவன் ஆஸ்ரமத்திலேயே தங்கவேண்டியிருந்தது.
ஒருநாள் பிருகு மகரிஷி ஆசார அனுஷ்டானங்களுக்காக நதிக்கரைக்கு கிளம்பினார். அக்னிதேவன் ஆஸ்ரமத்தில் காவல் காத்துக் கொண்டிருந்தான் . இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய ராட்சதன், ஆஸ்ரமத்தின் உள்ளே நுழைந்தான். எதிர்ப்பட்ட அக்னியிடம் பவ்யமாக பணிந்து, சுவாமி! நீங்களே எனக்கு நியாயத்தைச் சொல்லுங்கள். புலோமாவின் பெற்றோர் தன் பெண்ணை எனக்கு தருவதாக வாக்களித்துவிட்டு உமது சகோதரருக்கு திருமணம் செய்துவைத்தது சரியா? இவள் குழந்தையாக இருந்த போதே என்னுடையவளாகி விட்டாள் ! என்று நியாயம் பேசினான். அவனது விதண்டாவாதத்தைக் கேட்ட அக்னி, தன் அண்ணியார் பிருகு மகரிஷிக்குத் மட்டுமே உரியவள், திருமணமான பெண்ணை அவனுடன் அனுப்ப இயலாது, என்று மறுத்து விட்டார்.
பிரம்ம ராட்சதன் கோபாவேசமாக எழுந்தான். இவள் என் மனைவி! நான் இவளைத் தூக்கிச் செல்வேன்! என்று புலோமாவைப் பலவந்தப்படுத்தினான். அந்த சமயத்தில் பயத்தில் புலோமா அலறித் துடித்தாள். அவள் ராட்சதனின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓரிடத்தில் போய் விழுந்தாள். அப்போது பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் முகம் மின்னலைப் போல இருந்தது. அந்த ஒளியை தாங்க முடியாத பிரம்மராட்சதன் அந்த கணமே சாம்பலானான். பிருகு தன் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ஆஸ்ரமம் திரும்பினார். நடந்த விஷயங்கள் அவருடைய ஞானதிருஷ்டியில் தெரிந்தன.
தன் மனைவி புலோமாவையும், தேஜஸ் நிறைந்த குழந்தையையும் வந்து பார்த்தார். தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறிய அக்கினிதேவன் மீது கோபம் உண்டானது. ஏ! அக்னி! நீ யாகத்தீயாகவும், அடுப்புத் தீயாகவும் இருந்து நற்பெயர் பெற்றாய். இனி ஆங்காங்கே திடீர் திடீரெனப் பிடித்து அகப்பட்டவர்களை எல்லாம் பஸ்பமாக்கி தன் இரையாக்கிக் கொள்ளும் இழிந்த நிலையை அடைவாய். மக்கள் உன்னைத் திட்டித் தீர்ப்பார்கள், என்று சாபமளித்தார். மனம் வருந்திய அக்னிக்கு ஆறுதல் சொல்ல ஓடோடிவந்தார் பிரம்மா.
அக்னியே! உனக்கு கிடைத்த சாபம் பற்றி கவலைப்படாதே. இவ்வுலகில் நீ பற்றி அழிக்கப்போகும் பொருட்களும், மனிதர்களும் உலகத்திற்கு தேவை இல்லாதவர்களாகவே இருப்பர்.
அவரவர் முன்வினை மற்றும் செய்த பாவத்தின் அடிப்படையில் உன்னால் பொருட்களையும், உயிரையும் இழப்பர். எனவே உலகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை விருப்பத்தோடு செய். உன்னால் உலகம் நன்மை பெறுவதாக, என்று ஆறுதல் சொல்லி தேற்றினார். புலோமாவிற்குப் பிறந்த குழந்தைக்கு சியவனர் என்று பெயரிட்டு வளர்த்தனர். சிசுவாக இருந்தபோதே தேஜஸால் பிரம்ம ராட்சதனைக் கொன்ற இவருக்கு தனிச் சிறப்பிடம் உண்டு.
ஒருமுறை பிருகு மகரிஷி, மும்மூர்த்திகளில் சாந்த குணம் கொண்ட மூர்த்தி யார் என்பதை அறிய பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் காணச் சென்றார். பிரம்மாவும், சிவனும் பிருகு மகரிஷி வைத்த சோதனையில் தோற்றதால் சாபம் பெற்றனர். பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போனது. சிவன் லிங்கவடிவம் பெற்றார்.
ஆனால், விஷ்ணு பிருகு மகரிஷி காலால் உதைத்த போதும் கோபப்படாமல் புன்சிரிப்புடன் பிருகுவின் பாதங்களைப் பணிந்து நின்றார். அதனால், மும்மூர்த்திகளில் விஷ்ணுவே சாந்தமூர்த்தி என்ற முடிவுக்கு வந்தார் பிருகு. ஜோதிடம், ஆயுர்வேதம் போன்ற சாஸ்திரங்களில் பிருகு மகரிஷியின் அரிய நூல்கள் பல காணப்படுகின்றன. பிராமண சமுதாயத்தில் ஸ்ரீவத்ஸ கோத்ரம் என்ற கோத்திரத்திற்கு மூலபுருஷராக இருப்பவர் இவர்.
*நான் ஒரு டெலிவரி பையன்.* பெரும்பாலும் மாலை ஷிப்ட் தான் வேலை செய்வேன்.
அன்று, இரவு 9 மணி இருக்கும், கடைசி ஆர்டரை எடுத்தேன்.
உணவகத்தில் இருந்து பார்சலை வாங்கும்போது கவனித்தேன்—சின்ன ஆர்டர் தான், வெறும் கிச்சடி, தயிர், இரண்டு வாழைப்பழம்.
முகவரி நகரத்தின் பழைய பகுதியில்.
ஒரு பழைய கட்டிடம். மூன்றாவது மாடி.
கதவு மணியை அழுத்தினேன்.
ஒரு வயதான பெண்மணி கதவைத் திறந்தார்.
வெள்ளை முடி, நடுங்கும் கைகள், கண்களில் தடிமனான கண்ணாடி.
முகத்தில் களைப்பு, ஆனால் குரலில் ஒரு இனிமை—
"மகனே, உள்ளே வச்சிட்டு போப்பா… கை நடுங்குது."
நான் சாப்பாட்டை மேஜையில் வைத்துவிட்டு கிளம்ப எத்தனித்தபோது அவர் கேட்டார்—
"ரெண்டு நிமிஷம் உட்காருவியா?
தனியா சாப்பிட பிடிக்கல."
நான் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்.
என் ஷிப்ட் முடிந்துவிட்டது.
கொஞ்சம் களைப்பாகவும் இருந்தது.
ஆனால் ஏனோ உட்கார்ந்தேன்.
அறை அமைதியாக இருந்தது.
சுவரில் ஒரு பழைய கடிகாரம் டிக் டிக் என்று ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு மூலையில் சின்ன சாமி படம்.
எதிர் சுவரில் டஜன் கணக்கில் புகைப்படங்கள்.
அவர் தட்டைத் திறந்தார்.
மெதுவாக கிச்சடியை சாப்பிட ஆரம்பித்தார்.
ஒவ்வொரு இரண்டு வாய்க்கும் என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
பிறகு சொன்னார்—
"தெரியுமா மகனே, நான் தினமும் வெளியே சாப்பாடு வாங்க மாட்டேன்.
இன்னிக்கு தான் தோணுச்சு… ஒரு மனுஷ குரல் கேட்கணும்னு."
நான் அமைதியாக இருந்தேன்.
அவர் சுவரில் இருந்த ஒரு படத்தைக் காட்டினார்.
"இது என் கணவர். ரயில்வேல வேலை பார்த்தார்.
ஐந்து வருஷத்துக்கு முன்னாடி போய்ச் சேர்ந்துட்டார்."
பிறகு இன்னொரு படம்—
"இது என் மகன். கனடால இருக்கான்.
ரொம்ப நல்லா இருக்கான்… மாசாமாசம் பணம் அனுப்புவான்."
பிறகு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்.
புன்னகைத்தார், ஆனால் இந்த முறை கண்கள் கலங்கியிருந்தன—
"ஆனா… அனுப்புறதுக்கு நேரம் இல்ல அவனுக்கு."
திடீரென அறையில் கடிகாரத்தின் டிக் டிக் சத்தம் ரொம்ப பெரிதாக கேட்டது.
அவர் இன்னொரு வாய் சாப்பிட்டார்.
"இது என் மகள். பெங்களூர்ல இருக்கா.
அவ உலகத்துல அவ சந்தோஷமா இருக்கா.
இருக்கணும்.
பிள்ளைங்க பறக்கலனா, வளர்த்ததுக்கு என்ன அர்த்தம்?"
பேசும்போது குரல் உடைந்தது.
ஆனால் முகத்தில் எந்த குறையும் இல்லை.
வெறும் வெறுமை தான்.
என்னைக் கேட்டார்—
"உனக்கு அம்மா இருக்காங்களா?"
நான் சொன்னேன்—
"இருக்காங்க."
"தினமும் பேசுவியா?"
நான் அமைதியாகிவிட்டேன்.
உண்மை என்னன்னா, நானும் வீட்டுக்கு போன் பண்ணாம நாட்கணக்கா இருந்திருக்கேன்.
களைப்பு, வேலை, அவசரம்…
ஒவ்வொரு முறையும் நாளைக்கு பண்ணிக்கலாம்னு தள்ளிப்போட்டுடுவேன்.
அவர் என் மௌனத்தைப் புரிந்துகொண்டார்.
மெதுவாக சொன்னார்—
"பெத்தவங்க பணத்தை எண்ண மாட்டாங்க மகனே…
குரலை தான் எண்ணுவாங்க."
எனக்குள் ஏதோ உடைந்தது.
சாப்பாடு முடிந்தது.
தண்ணீர் குடித்தார்.
பிறகு பர்ஸில் இருந்து 500 ரூபாய் எடுத்து என்னிடம் நீட்டினார்.
"இது டிப்ஸ் இல்ல.
அந்த அரை மணி நேரத்துக்கான விலை, நீ என்னை தனியா சாப்பிட விடல."
நான் உடனே மறுத்தேன்—
"வேண்டாம் அம்மா, என்னால வாங்க முடியாது."
அவர் புன்னகைத்தார்—
"வாங்கிக்கோ.
இன்னிக்கு நீ சாப்பாடு கொண்டு வரல…
துணையை கொண்டு வந்திருக்க."
நான் பணத்தை வாங்கினேன்.
ஆனால் பாக்கெட்டில் வைக்கவில்லை.
கையிலேயே வைத்திருந்தேன்.
கிளம்பும்போது அவர் சொன்னார்—
"ஆமா—
இன்னிக்கு வீட்டுக்கு போய் அம்மாவுக்கு கண்டிப்பா போன் பண்ணு."
அன்று இரவு, கட்டிடத்தின் கீழே பைக்கை ஸ்டார்ட் பண்ணவில்லை.
முதலில் அம்மாவுக்கு போன் செய்தேன்.
மறுமுனையில் அம்மாவின் குரல்—
"திடீர்னு போன் பண்ற? எல்லாம் சரி தானே?"
அதைக் கேட்டதுமே எனக்கு தொண்டை அடைத்தது.
நான் சொன்னேன்—
"ஆமா மா…
உன் குரல் கேக்கணும்னு தோணுச்சு."
மறுமுனையில் சில நொடிகள் அமைதி.
பிறகு அம்மா சொன்னார்—
"சாப்பிட்டியா?"
நான் சாலையோரம் நின்று அழுதுவிட்டேன்.
அந்த இரவுக்குப் பிறகு, நான் தினமும் அம்மாவுக்கு போன் பண்ண ஆரம்பித்தேன்.
அம்மா மட்டுமல்ல—
ஒவ்வொரு டெலிவரியும் எனக்கு வெறும் ஆர்டராக இல்லை.
சில வீடுகளுக்கு மருந்து தேவை.
சில வீடுகளுக்கு தனிமையில் இருந்து விடுதலை தேவை.
சில வீடுகளுக்கு காத்திருப்பு முடிய வேண்டும்.
சில வீடுகளுக்கு வெறும் ஒரு குரல் தான் தேவை.
இப்போது, கதவு திறக்கும்போது நான் அவசரப்படுவதில்லை.
முகத்தைப் பார்க்கிறேன்.
குரலைக் கேட்கிறேன்.
சில சமயம் கேட்கிறேன்—
"வேற எல்லாம் நல்லா இருக்கா?"
பெரும்பாலானவர்கள் "ஆமா" என்பார்கள்.
சிலர் புன்னகைப்பார்கள்.
சில முகங்கள் சொல்லும், அன்று முழுக்க யாரிடமும் பேசவில்லை என்று.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதே முகவரியில் இருந்து ஆர்டர் வந்தது.
நான் வேகமாக சென்றேன்.
வேறு ஒருவர் கதவைத் திறந்தார்.
பக்கத்து வீட்டு ஆன்ட்டி.
அவர் மெதுவாக சொன்னார்—
"அம்மா போன வாரம் போய்ச் சேர்ந்துட்டாங்க."
நான் சில நொடிகள் வாசலில் நின்றேன்.
கைகள் காலியாக இருந்தன, ஆனால் உள்ளே ஏதோ கனமாக விழுந்தது.
அவர் உள்ளே இருந்து ஒரு சிறிய கவரைக் கொண்டு வந்தார்.
"இது உனக்காக விட்டுட்டு போயிருக்காங்க."
நடுங்கும் கைகளுடன் திறந்தேன்.
உள்ளே 500 ரூபாய்.
ஒரு சிறிய குறிப்பு.
அதில் எழுதியிருந்தது—
"மகனே,
இதை நீ படிச்சா, நான் போயிருப்பேன்.
அன்று இரவு என்னுடன் சாப்பிட்டதற்கு நன்றி.
நீ எனக்கு சாப்பாடு கொடுக்கல—மரியாதை கொடுத்த.
ஆமா—அம்மாவுக்கு போன் பண்ணுவதை நிறுத்தாதே.
அம்மா"
இன்றும் அந்த 500 ரூபாய் என் பையின் உள் பாக்கெட்டில் இருக்கிறது.
நான் செலவு செய்யவில்லை.
ஏனென்றால் அன்று இரவு, நான் முதல் முறையாக புரிந்துகொண்டேன்—
ஒவ்வொரு கதவுக்குப் பின்னாலும் வெறும் வாடிக்கையாளர் இல்லை.
சில சமயம் அது ஒரு அம்மா.
சில சமயம் அது ஒரு காத்திருப்பு.
சில சமயம் அது ஒரு கடைசி உரையாடல்.
நாம் எல்லோரும் நம் சொந்த பசியுடன் வாழ்கிறோம்—
சிலருக்கு ரொட்டி தேவை,
சிலருக்கு மருந்து தேவை,
சிலருக்கு வெறும் இரண்டு நிமிட துணை தான் தேவை.
மனிதர்களுக்கு எப்போதும் பண டெலிவரி தேவையில்லை—
சில சமயம், இருப்பின் டெலிவரி தான் தேவை.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: குடும்பத்தில் திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
ரிஷபம்: பணப் பற்றாக்குறை நீங்கும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.
மிதுனம்: தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அலுவலகரீதியான வெளியூர் பயணம் சாதகமாகும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.
கடகம்: எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது.
சிம்மம்: குழப்பங்கள் விலகி வீட்டில் நிம்மதி பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. சகோதர வகையில் சுபச் செலவு இருக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி கிட்டும். தாயார், மனைவியின் உடல்நலம் சீராகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கன்னி: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்துக் காட்டுவீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.
துலாம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் விருப்பங்களை, உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: பிள்ளைகளுக்காக சேமிக்கத் தொடங்குவீர். வீடு, மனைவாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர். பிரபலமானவர்களின் சந்திப்புநிகழும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது.
தனுசு: சவாலான விஷயங்களை கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். செல்வம், செல்வாக்கு கூடும். போட்டிகளில், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். விஐபிகளால் பயனடைவீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
மகரம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். முன்கோபம் குறையும். விஐபிகள் அறிமுகமாவர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். முகப்பொலிவு கூடும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரம் சிறக்கும்.
மீனம்: குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி கனிவான பேச்சுவார்த்தைகள் இருக்கும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 17.5.2026.
இன்று அதிகாலை 02.09 வரை அமாவாசை. பின்னர் இரவு 11.45 வரை பிரதமை. பின்பு துவிதியை.
இன்று மாலை 04.01 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.
இன்று காலை 07.10 வரை சோபனம் . பின்னர் அதிகண்டம்.
இன்று அதிகாலை 02.09 வரை நாகவம். பின்னர் பிற்பகல் 12.57 வரை கிமிஸ்துக்கினம். பிறகு இரவு 11.45 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று அதிகாலை 05.52 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 04.01 வரை சித்தயோகம். பிறகு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 08.15 முதல் 09.00 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை




















