- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் திருடர்கள் இருவர் மதுபான விடுதி ஒன்றிலிருந்த ஏடிஎம் ஒன்றைத் தூக்கிச் சென்றார்கள்.
நேற்று மதியம் 3.30 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops என்னுமிடத்தில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றிற்குச் சென்ற திருடர்கள் இருவர், அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை திருட்டு ட்ரக் ஒன்றில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்கள். பின்னர் ட்ரக்கும் ஏடிஎம் இயந்திரமும் ஓரிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஏடிஎம் இயந்திரத்துக்குள் பணம் எதுவும் இல்லை. அதாவது, அதிலிருந்த பணத்துடன் திருடர்கள் தப்பிவிட்டார்கள்.
மோப்ப நாய் உதவியுடன் அவர்கள் இருவரையும் பொலிசார் தேடிக் கண்டுபிடிக்க, அவர்கள் இருவரும் தாம்ஸன் நதிக்குள் குதித்துள்ளார்கள்.
தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் பொலிசார் திருடர்களைத் துரத்த, ஒருவர் சிக்க, மற்றவர் எப்படியோ தப்பிவிட்டார். அவரைத் தேடும் பணி தொடரும் நிலையில், அவரைக் குறித்த அடையாளங்களை வெளியிட்டுள்ள பொலிசார் அவரைக் கண்டால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்றைய தினம் (27) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சவதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமும் அந்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டே ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த புதன்கிழமை வெனிசுலா ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு முகங்கொடுத்திருந்தது.
அந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரையில் 920 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளதுடன், நிலநடுக்க இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் 243 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்களினால் 3,360க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைநகரான கராகஸ் உள்ளிட்ட வடக்குப் பகுதியில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் தற்காலிக மருத்துவ வசதிகளின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் பின்னர் மேலும் பலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களைத் தேடும் நோக்கில் தற்போது தேடுதல் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதேவேளை, நிலநடுக்க மீட்புப் பணிகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளுக்காகப் பல சர்வதேச மீட்புப் பணியாளர்களும் வெனிசுலாவிற்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், முதலாவது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 214 அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் தலைநகருக்கு வடக்கே அமைந்துள்ள 'லா குவைரா' (La Guaira) பகுதியே அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவராலேயே நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டு, இயக்குநரானவர் கே.பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுகிறவர். இதற்கு காரணம், அவரது தனித்துவமான கதை சொல்லும் முறையும், சாதாரண விஷயத்தையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறமையும்தான். அவரது கதைகள் பெரும்பாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே இருக்கும்.
மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளோ, பிரம்மாண்டமோ இல்லாமல், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு நடக்கும் கதையைப் பார்ப்பது போன்ற உணர்வை அவர் தருவார். ஒரு கதையை எப்படி ஆரம்பித்து, எங்கே ட்விஸ்ட் வைக்க வேண்டும் அதை எப்படிச் சாமர்த்தியமாக அவிழ்க்க வேண்டும் என்பதில் அவர் கில்லாடி. இன்றுவரை பல இளம் இயக்குநர்களுக்கு திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு பாக்யராஜின் படங்களே பாடப்புத்தகமாக விளங்குகின்றன.
தீவிர சினிமாவில் இருந்து ஒதுங்கவில்லை என்றாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். அண்மையில் பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் முடிந்தது கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது கே.பாக்கியராஜ் உடல்நிலை கவலைக்கிடம் என இன்று காலை தகவல் வெளிவந்துள்ளது. சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது.
திருப்பதியிலும் இல்லை... ஸ்ரீரங்கத்திலும் இல்லை... மன்னார்கோவில் #வேதநாராயணரின் ரகசியம் தெரிந்தால் மெய்சிலிர்த்து போவீர்கள்!
🍁ஒரு கோவில்...
அங்கு ஒலியெழுப்பும்சடாரி_இருக்கிறது...
🍁ஒரு கோவில்...
அங்கு ஒரேவிமானத்தில்
நின்ற அமர்ந்த சயனித்த மூன்று #கோலங்களில் பெருமாள் அருள்பாலிக்கிறார்...
🍁ஒரு கோவில்...
அங்கு குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் ஒரு சிறிய பாதையில் நுழைந்து பிரார்த்திக்கிறார்கள்...
🍁இன்னும் வியப்பூட்டும் விஷயம் என்ன தெரியுமா?
திருப்பதியிலும் காண முடியாத ஒரு அதிசயம்...
ஸ்ரீரங்கத்திலும் காண முடியாத ஒரு அரிய ரகசியம்...
அது அனைத்தும் மறைந்து கிடக்கும் தலம் திருநெல்வேலி மாவட்டத்தின் பசுமை சூழ்ந்த மன்னார்கோவில்!
அதிகாலை நேரம்...
தாமிரபரணி நதியின் தென்றல் காற்று மெதுவாக வீசியது.
பசுமையான வயல்வெளிகள், தென்னை மரங்கள், பறவைகளின் இனிய குரல்கள்...
இயற்கையே இறைவனை வழிபடுவது போல தோன்றியது.
அம்பாசமுத்திரத்திலிருந்து மன்னார்கோவிலை நோக்கி பயணிக்கும் பக்தர்களின் மனதில் ஒரு விவரிக்க முடியாத அமைதி பிறக்கிறது.
ஏனெனில் அவர்கள் செல்லும் இடம் சாதாரண ஆலயம் அல்ல.
சேரர், சோழர், பாண்டியர் மூவரின் திருப்பணிகளால் உருவான ஒரு தெய்வீகப் பொக்கிஷம்.
அதுதான் #ஸ்ரீவேதநாராயணபெருமாள் திருக்கோவில்.
காவிரி மற்றும் கொள்ளிட நதிகளுக்கு நடுவே திருவரங்கம் இருப்பதைப் போல, தாமிரபரணி மற்றும் கடனா நதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்தத் தலம் பக்தர்களால் "தென் திருவரங்கம்" என்றும் போற்றப்படுகிறது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு...
இந்த புனித பூமியில் பிருகு முனிவரும் மார்க்கண்டேய மகரிஷியும் தவம் மேற்கொண்டனர்.
கடுமையான தவத்தில் இருந்த அவர்கள் ஒரே வேண்டுதலை மனதில் வைத்திருந்தனர்.
"பெருமாளே... எங்களுக்கு தங்கள் திருக்காட்சியை அருள வேண்டும்."
நாட்கள் கடந்தன...
மாதங்கள் கடந்தன...
ஆண்டுகள் கடந்தன...
ஆனால் அவர்களின் மன உறுதி குறையவில்லை.
இறுதியில் ஒருநாள்...
விண்ணுலக ஒளியைப் போல ஒரு பிரகாசம் அந்தப் பகுதியில் பரவியது.
அந்த ஒளியின் நடுவே ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேதநாராயண பெருமாள் காட்சி தந்தார்.
அந்த தரிசனத்தில் முனிவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
"பெருமாளே! இந்த இடத்திலேயே என்றென்றும் அருள்பாலிக்க வேண்டும்!" என்று வேண்டினர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம்.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு...
சோழ நாட்டில் பராந்தக சோழன் ஆட்சி செய்து வந்தான்.
அரசாட்சி வளமாக இருந்தது.
மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
ஆனால் மன்னனின் மனதில் மட்டும் ஒரு பெரிய வேதனை.
வாரிசு இல்லை.
ஒரு இரவு அரண்மனையில் தனியாக அமர்ந்திருந்த மன்னன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான்.
அப்போது ஒரு மகான் அவன் முன் தோன்றினார்.
"மன்னா... உன் மனக்குறை எனக்குத் தெரியும்."
மன்னன் அதிர்ச்சியடைந்தான்.
"ஸ்வாமி! எனக்கு ஒரு குழந்தை வேண்டும். அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?"
மகான் புன்னகைத்தார்.
"தெற்கே பாயும் பொருநை நதிக்கரையில் திருமாலுக்கு ஒரு ஆலயம் எழுப்பு. தினமும் பக்தியுடன் சேவை செய். உன் குறை தீரும்."
அடுத்த நாளே மன்னன் தெற்கே பயணம் மேற்கொண்டான்.
பொருநை நதியின் அழகைக் கண்டதும் அவன் மனம் மயங்கிப் போனது.
பசுமை...
நதி...
இயற்கை...
அனைத்தும் தெய்வீகமாக தோன்றின.
அங்கேயே பெருமாளுக்கு ஆலயம் கட்டி வழிபடத் தொடங்கினான்.
ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை.
இறைவனின் அருளால் மன்னனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அந்த நாளில் மன்னன் ஆனந்தக் கண்ணீருடன் பெருமாளின் திருவடிகளில் விழுந்து நன்றி செலுத்தினான்.
இந்த ஆலயத்தின் மற்றொரு பெருமை குலசேகர ஆழ்வாருடன் தொடர்புடையது.
பெருமாளின் அழகில் மனதைப் பறிகொடுத்த குலசேகர ஆழ்வார் இத்தலத்திற்கு வந்தார்.
வேதநாராயணரை தரிசித்த கணமே அவரது மனம் உருகியது.
"இத்தகைய அழகை நான் எங்கேயும் காணவில்லை!" என்று கண்ணீர் மல்க கூறியதாக வரலாறு சொல்கிறது.
அவர் இங்கேயே தங்கி ஆலய சேவைகளில் ஈடுபட்டார்.
பெருமாளுக்காக வாழ்ந்தார்.
பெருமாளுக்காக சுவாசித்தார்.
இறுதியில் பெருமாளின் திருவடி நிழலிலேயே பரமபதம் அடைந்தார்.
அதனால்தான் இன்று அவருக்கென கொடிமரத்துடன் கூடிய தனிச்சந்நிதி இத்தலத்தில் அமைந்துள்ளது.
ஆனால்...
இந்தக் கோவிலின் மிகப் பெரிய அதிசயம் இன்னும் உள்ளே காத்திருக்கிறது.
அதுதான் #அஷ்டாங்கவிமானம்.
இந்தியாவில் மிக அரிதாகக் காணப்படும் கட்டிடக்கலை அதிசயம்.
🍁முதலில் தரைத்தளத்திற்கு செல்லும் பக்தர்கள் பெருமாளை #நின்றதிருக்கோலத்தில் தரிசிக்கிறார்கள்.
🍁பிறகு மேல்தளத்திற்கு செல்கிறார்கள்.
அங்கே பெருமாள் #அமர்ந்ததிருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அதற்கும் மேலே...
🍁இரண்டாம் தளத்தில்...
#பெருமாள்சயனக்கோலத்தில் காட்சி தருகிறார்.
🍁ஒரே விமானத்தில் மூன்று நிலைகளில் பெருமாள்!
இதை முதன்முறையாகப் பார்க்கும் பக்தர்கள் வியப்பில் உறைந்து போகிறார்கள்.
மேல்தளத்தில் இருக்கும் மரச் சிற்பங்கள் வேறொரு உலகத்திற்கே அழைத்துச் செல்கின்றன.
சேர மன்னர்களின் கலை நுணுக்கம் ஒவ்வொரு சிற்பத்திலும் வெளிப்படுகிறது.
காலத்தை வென்ற அந்தக் கலை இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறது.
பின்னர் பக்தர்கள் மற்றொரு அதிசயத்தை காண்கிறார்கள்.
🍁அது #ஒலிஎழுப்பும்சடாரி.
🌹சடாரி தலைமேல் வைக்கும்போது அதன் உள்ளே இருக்கும் சிறிய பரல்கள் அசைந்து இனிய ஒலி எழுப்புகின்றன.
அந்த ஒலி வெறும் சத்தமல்ல.
"இறைவன் வருகிறார்..."
என்று அறிவிக்கும் தெய்வீக அழைப்பு.
முன்னொரு காலத்தில் பக்தர்கள் பேசிக் கொண்டிருந்தாலும் இந்த ஒலியைக் கேட்டவுடன் அமைதியாக நின்று விடுவார்களாம்.
இப்படிப்பட்ட சடாரி திருப்பதியிலும் இல்லை.
ஸ்ரீரங்கத்திலும் இல்லை.
#மன்னார்கோவிலின்தனிச்சிறப்பு_இதுவே.
🍁இன்னும் ஒரு அதிசயம்...
பெருமாள் கோவில்களில் அரிதாகக் காணப்படும் #தெட்சிணாமூர்த்தி.
இங்கே அவர் தனி சந்நிதியில் இல்லை.
கோயில் விமானத்தின் உச்சியில் அருள்பாலிக்கிறார்.
சிவனும் விஷ்ணுவும் வேறல்ல என்பதை அமைதியாக எடுத்துரைக்கும் ஆன்மீகச் சின்னம் அது.
மூலவர் சந்நிதிக்கு எதிரே இருக்கும் #பிள்ளைத்தொண்டுப்பாதை பலரின் நம்பிக்கையின் அடையாளம்.
குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் பக்தியுடன் அந்தச் சிறிய பாதையில் நுழைந்து பெருமாளை வேண்டுகின்றனர்.
பலர் தங்களது வேண்டுதல் நிறைவேறியதாக நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
அதனால் இந்தப் பாதை இன்று ஆயிரக்கணக்கான நம்பிக்கைகளின் வழித்தடமாக மாறியுள்ளது.
🍁மண்டப விதானத்தில் அமைந்துள்ள #பன்னிரண்டுராசிக்கட்டங்களும் பக்தர்களை ஆச்சரியப்படுத்துகின்றன.
🍁"இங்கே பிரார்த்தித்தால் கிரக தோஷங்கள் நீங்கும்" என்ற நம்பிக்கை தலைமுறைகள் கடந்தும் தொடர்கிறது.
புரட்டாசி மாதத்தில் இங்கு வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம், திருமணத் தடை நீக்கம், தொழில் வளர்ச்சி கிடைக்கும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
🍁மாலையின் கடைசி சூரியக்கதிர்கள் கோவிலின் விமானத்தைத் தொட்டபோது, வேதநாராயணர் சந்நிதியில் தீபாராதனை தொடங்குகிறது.
மணியோசை...
வேத மந்திரங்கள்...
தூப நறுமணம்...
பக்தர்களின் கண்ணீர்...
அனைத்தும் ஒன்றாக கலக்கின்றன.
அந்த நொடியில் பலரின் மனதில் ஒரே உணர்வு பிறக்கிறது.
"இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டான்."
வாழ்க்கைப் பாடம்:
நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை அல்ல. அது மனிதனை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு செல்லும் சக்தி. பராந்தக சோழனின் வாழ்க்கை போல, இறைவன் மீது கொண்ட உண்மையான பக்தியும் பொறுமையும் இருந்தால், முடியாதது கூட ஒருநாள் சாத்தியமாகும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். கல்வி சார்ந்த பணிகளில் இழுபறியான சூழல் ஏற்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீது சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். வியாபார பணிகளில் விடாப்படியான செயல்களை குறைத்துக் கொள்ளவும். சிறு தூர பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
ரிஷபம்
நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிதுனம்
விவாதங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்டு முடிவெடுப்பது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வமும் அதனால் விரயமும் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
கடகம்
வருமானம் பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சிம்மம்
குழந்தைகள் மூலம் அலைச்சல்களும் விரயங்களும் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். சுயவேலை தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உருவாகும். சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி
வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நுட்பமான விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் இருந்த சங்கடங்கள் மறையும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நெருக்கடிகளை குறைக்க இயலும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
விருச்சிகம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உத்தியோகப் பணிகளில் மேன்மை உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்த தன்மையை ஏற்படுத்தும். விளையாட்டு விஷயங்களில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
தனுசு
வியாபார பணிகளில் போட்டிகள் மேம்படும். தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மையால் ஒரு விதமான குழப்பங்கள் ஏற்படும். புதுவிதமான பயணங்கள் மூலம் அனுபவங்கள் அதிகரிக்கும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மகரம்
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். விவசாய பணிகளில் லாபம் ஏற்படும். உற்பத்தி பணிகளில் மேன்மை அடைவீர்கள். கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கும்பம்
அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் சிறு அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். கௌரவப் பொறுப்புகள் மூலம் ஆதரவுகள் மேம்படும். பாகப்பிரிவினை முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கமும் அன்யோன்யமும் மேம்படும். உத்தியோக ரீதியான செயல்பாடுகளில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை 27.6.2026
இன்று அதிகாலை 12.32 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.
இன்று முழுவதும் அனுஷம்.
இன்று மாலை 03.51 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று அதிகாலை 12.32 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 01.27 வரை கௌலவம் பிறகு தைத்தூலம் .
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான விமானம் 'டர்போ கமாண்டர் 690' ரகத்தைச் சேர்ந்ததாகும். இது காட்டுத்தீயை அணைக்கும் பணிகளை வான்வழியாகக் கண்காணித்து, வழிநடத்தும் ஒரு கட்டுப்பாட்டு மையமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
புதன்கிழமை இரவு, யெல்லோநைஃப் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபோர்ட் சிம்ப்சன் என்ற இடத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விமானம் குறித்த நேரத்தில் வந்து சேராததைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை என்றும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயரமான விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், சமூகத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் பிராந்திய மரண பரிசோதனைத் துறையும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
விபத்துக்குள்ளான விமானத்தை 'பஃபலோ ஏர்வேஸ்' என்ற நிறுவனம் இயக்கி வந்தது. மார்டன் ஹில்ஸ் பகுதியில் பரவி வந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இந்த விமானம் ஈடுபட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை இயற்கையான காரணங்களால் உருவான இந்த காட்டுத்தீ, சுமார் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு கட்டுப்பாடின்றி எரிந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா நிலநடுக்கத்தில் 40 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் வியாழக்கிழமை (25) ஒரு நிமிட இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிட்டர் அளவிற்கு அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 30 முறை தொடர்ந்து அந்த நில அதிர்வு மக்களால் உணரப்பட்டது.
100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வெனிசுலாவை நிலைகுலைய வைத்துள்ளது. வெனிசுலாவின் தலைநகரான மற்றும் காராகஸ், லா குவைரா அகிய பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாக கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து கீழே விழுந்தன. அதில் ஏராளமான மக்களும் சிக்கிக் கொண்டனர். காணும் இடமெல்லாம் கான்கிரீட் குவியலாக காணப்படுகிறது. பலரும் வீடு மற்றும் உடைமைகளை இழந்து சாலைகளில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்சாரம் மற்றும் மொபைல் சிக்னல் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
மீட்பு குழுவினரும், தன்னார்வலர்களும் இடுபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் தங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களையும் கண்ணீர் மல்க தேடும் காட்சிகள் பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கிறது.
இந்த பேரழிவில் இதுவரை 188 பேரின் உடல் மீட்கப்பட்டிருக்கிறதுடன் சுமார் 40 ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் பிரகாசித்த ஒரு திறமையான நடிகை. 1990களில் தென்னந்தியத் திரையுலகில் தனது நடிப்புத் திறமையாலும், நடனத திறமையாலும் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
சிறு வயதலேயே நடனக் கலையில் ஆர்வம் கொண்டிருந்த நடிகை பரத நாட்டியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர். இதன் தாக்கம் அவரது திரைப்பட நடிப்பிலும் நடனக் காட்சிகளிலும் தெளிவாகத் தெரிந்தது. “ஆபத்து”, “லைலா”, போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனிததுவமான இடத்தைப் பெற்றர்.
பொன்னுமணி, அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம் போன்ற பல திரைப்படங்கள் மூலம் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார். காதல், சண்டை, குடும்பக் கதைகள் என பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் தன்னை வளர்த்துக் கொண்டாவர்
நடிப்பு மட்டுமல்லாமல் ஒரு திறமையான இயக்குனராகவும் மாறினார். “ஸ்திரீ” எனும் கன்னடப் படத்தை இயக்கி, பெண் இயக்குனர் என்ற முறையில் கவனத்தைப் பெற்றார். இது அவரது படைப்பாற்றலையும், திரையுலகின் பல்வேறு பரிமாணங்களில் தன்னை நிலைநிறுத்தும் ஆற்றலையும் வெளிப்படுத்தியது.
அவரது மறைவு தென்னிந்தியத் திரையுலகிற்கு பேரிழப்பாக இருந்தது. இன்றும் அவரது நடிப்புத் திறமையும், நடனக் கலையும் பல திரைப்பட ரசிகர்களின் நினைவில் நிலைத்து நிற்கின்றன.
ஒரு குறுகிய காலத்தில் வாழ்ந்தாலும், தனது நடிப்பாற்றலாலும் பன்முக ஆளுமையாலும் தமிழ் சினிமா வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளார் சௌந்தர்யா.
பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையில் பல அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.
அவற்றில் மிக முக்கியமானதும், அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்ததும் —
👉 கோவர்த்தன மலை உயர்த்திய அதிசயம்!
இந்த நிகழ்வு, கிருஷ்ணரை ஒரு சாதாரண மனிதனாகக் காண்ந்தவர்களுக்கு
👉 அவர் பரம்பொருள் என்பதை உணர்த்தியது.
அதே சமயம், கிருஷ்ணருக்கே தனது வாழ்க்கையின் நோக்கம் தெளிவான தருணமாக அமைந்தது.
🌸 கோகுலத்தின் இனிய வாழ்க்கை
கோகுலம் —
அன்பும் எளிமையும் நிரம்பிய ஒரு கிராமம்.
கோபிகளும், கோபர்களும், மாடுகளும்,
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த அந்த மக்கள்,
👉 கிருஷ்ணனை தங்கள் உயிராக நேசித்தனர்.
கிருஷ்ணரும் அதேபோல்:
கோபிகளின் அன்பில் உருகியவர்
நண்பர்களுடன் விளையாடியவர்
யமுனை கரையில் புல்லாங்குழல் ஊதியவர்
👉 அந்த வாழ்க்கையே அவருக்கு உலகமாக இருந்தது.
ஆனால்…
அவரின் பிறப்பின் ரகசியமும்,
அவருக்கான தெய்வீக கடமையும் அவருக்குத் தெரிய வந்தது.
⚖️ மனதின் குழப்பம்
“நான் நேசிக்கும் இந்த வாழ்க்கையை விட்டு விலக வேண்டுமா?”
“அல்லது என் வாழ்க்கையின் பெரிய நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமா?”
👉 இந்த கேள்வி கிருஷ்ணரின் உள்ளத்தில் ஓர் அமைதியான போராட்டமாக இருந்தது.
அவர் உள்ளுக்குள் ஒரு அடையாளத்தைக் காத்திருந்தார் —
👉 “நான் செல்லும் பாதை சரியானதா?” என்ற உறுதி.
🌧️ இந்திரனின் கோபம்
அந்தக் காலத்தில், கோகுல மக்கள்
👉 மழைக்கு இந்திரனை வழிபட்டனர்.
ஆனால் கிருஷ்ணர் அவர்களிடம் கூறினார்:
“நம்மை வாழவைக்கும் இந்த மலை, இந்த இயற்கை —
👉 கோவர்த்தன மலைதான் நம்மை பாதுகாக்கிறது.”
அதனால், இந்திர வழிபாட்டை நிறுத்தி,
👉 கோவர்த்தன பூஜை (கோபோத்ஸவம்) தொடங்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த இந்திரன்:
🌩️ கடும் மழையை பொழிந்தான்
🌊 யமுனை ஆறு கரைபுரண்டு ஓடியது
⚡ கோகுலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது
மக்கள் பயந்தனர்:
👉 “நாம் இந்திரனை வழிபடாததால் அவர் கோபித்திருக்கிறார்!”
🏔️ பாதுகாப்பை தேடும் கிருஷ்ணர்
இந்த சூழ்நிலையில்,
கிருஷ்ணர், பலராமர் மற்றும் நண்பர்கள்
👉 மக்களை பாதுகாக்க ஒரு இடம் தேடினர்.
கோவர்த்தன மலையில் சுற்றித்திரிந்த அனுபவம் இருந்ததால்,
அதன் உள்ளமைப்பை கிருஷ்ணர் நன்றாக அறிந்திருந்தார்.
அவர் அனைவரையும் அந்த மலைக்குச் சென்றார்.
அங்கு சில பெரிய கற்களை அசைத்து பார்த்தபோது,
👉 ஒரு பெரிய குகை இருப்பது தெரியவந்தது!
💪 குகை திறந்த அதிசயம்
பலராமரின் வலிமையாலும்,
மற்ற இளைஞர்களின் உதவியாலும்,
அந்த குகை விரிவாக்கப்பட்டது.
மக்கள் அனைவரும் —
மாடுகளுடன் சேர்ந்து — அந்த குகைக்குள் சென்றனர்.
ஆனால்…
👉 அந்த இடம் எல்லோருக்கும் போதவில்லை!
✨ மலை உயர்ந்த அதிசயம்
அந்த நேரத்தில் —
அற்புதம் ஒன்று நடந்தது!
👉 கோவர்த்தன மலை தானாகவே
சுமார் ஆறு அடிகள் உயரத்தில் மிதந்தது!
குகை பெரிதாகி,
அனைவருக்கும் பாதுகாப்பான இடமாக மாறியது.
கிருஷ்ணருக்கே அந்த தருணத்தில்,
👉 “இது என்ன நிகழ்வு?” என்று ஆச்சரியம் ஏற்பட்டது.
மக்கள் அனைவரும்
சில நாட்கள் அங்கு பாதுகாப்பாக இருந்தனர்.
மழை அடங்கியபின்,
அவர்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கைக்கு திரும்பினர்.
🌟 உறுதியான உண்மை
இந்த நிகழ்வு:
👉 கோகுல மக்களுக்கு —
கிருஷ்ணர் இறைவன் என்பதற்கான உறுதி!
👉 கிருஷ்ணருக்கே —
தன் வாழ்க்கையின் நோக்கம் தெளிவான தருணம்!
அதன்பிறகு,
அவருக்கு திரும்பிப் பார்க்கும் எண்ணமே இல்லை.
💔 ராதையுடன் கடைசி ராசம்
கோகுலத்தை விட்டு செல்ல முடிவு செய்த கிருஷ்ணர்,
ஒரு கடைசி நினைவாக —
👉 ஒரு ராசலீலை ஏற்பாடு செய்தார்.
அன்று பௌர்ணமி இல்லை…
ஆனால் அது ஒரு பரிபூரண இரவு.
அனைவரும் மகிழ்ச்சியில் ஆடினர்.
👉 ராதை —
அந்த ஆனந்தத்தில் தன்னை மறந்தாள்.
அவள் ஆனந்தத்தின் உச்சிக்குச் சென்றாள்.
🎶 புல்லாங்குழலின் பரிசு
அந்த தருணத்தில்,
கிருஷ்ணர் தன் இடுப்பில் இருந்த புல்லாங்குழலை எடுத்தார்.
👉 அதை ராதைக்கு கொடுத்து கூறினார்:
“இது இனி உன்னுடையது…
நான் இனி புல்லாங்குழல் ஊதமாட்டேன்.”
அது ஒரு சாதாரண பொருள் அல்ல —
👉 கிருஷ்ணரின் உயிரின் ஒரு பகுதி!
அவர் சிறு வயதிலிருந்தே:
புல்லாங்குழலில் வல்லவர்
அதை ஊதினால் மனிதர்களும், மாடுகளும் கூட வந்து சேரும்
👉 அந்த புல்லாங்குழலை விட்டுக்கொடுத்தார்.
அதன்பிறகு —
கிருஷ்ணர் ஒருபோதும் புல்லாங்குழல் ஊதவில்லை!
🌿 கதை சொல்லும் உண்மை:
வாழ்க்கையில் சில தருணங்கள் —
நம்மை முழுமையாக மாற்றிவிடும்!
அந்த தருணம் வந்தால்:
👉 நாம் நேசித்ததை விட்டுவிட வேண்டியிருந்தாலும்,
👉 நம் கடமையை நிறைவேற்ற வேண்டும்!
அதுவே —
கிருஷ்ணர் நமக்கு கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடம்!

