·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 941
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
  • 13
  • 13
  • 12

உண்மைதானே?

  • 20
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர். உடன் பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து நிம்மதியுண்டு. வியாபார ரீதியான வெளியூர் பயணம் திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும். குழப்பம் நீங்கி மனநிம்மதி பிறக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர். வியாபார ரீதியாக உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

சிம்மம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்த சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் வரும். வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வெளிவட்டாரத்தில் மறைமுக அவமானம் ஏற்படக் கூடும். பழைய கடன் சுமையால் நிம்மதி இழப்பீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் சிறக்கும்.

துலாம்: குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி கனிவான பேச்சுவார்த்தைகள் இருக்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

விருச்சிகம்: நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் இருந்த கசப்புகள் விலகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள்.

தனுசு: மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரரீதியாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம்.

மகரம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினருடன் இருந்த பகை நீங்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

கும்பம்: செலவைக் தவிர்த்து, சேமிக்கத் தொடங்குவீர். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரரீதியாக புதியவர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். பிள்ளை களை பொறுப்பாக வளர்ப்பீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

  • 29
  • 24
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 25 ஆம் தேதி வியாழக்கிழமை 9.7.2026.

இன்று காலை 06.13 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று காலை 11.24 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

இன்று காலை 07.16 வரை சுகர்மம். பின்னர் திருதி.

இன்று காலை 06.13 வரை கரசை. பின்னர் மாலை 05.48 வரை வனிசை. பிறகு பத்திரை .

இன்று அதிகாலை 5.57 வரை மரணயோகம். பின்னர் காலை 11.24 வரை அமிர்த யோகம். பிறகு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=578&dpx=2&t=1783567545

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 28

Good Morning...

  • 24
  • 91
  • 93
நடிகை சுகன்யாவிற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  • 93

" பறித்த மலரை

ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன?

கல்லறையில் வைத்தாலென்ன?

மலருக்கென்னவோ

பறித்ததுமே வந்துவிட்டது

மரணம் !

  • 92
  • 92
  • 92
  • 97
  • 103
  • 102
·
Added article

''நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன். ஒருநாள் திபுதிபுவென பலர் அந்த தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, 'சின்னவர் வருகிறார்... சின்னவர் வருகிறார்... ' என்று பயங்கர பரபரப்பு. அப்போது அலுவலக வளாகத்தில் படகுபோல ப்ளைமவுத் கார் வந்து நின்றது. காரிலிருந்து ஆயிரம் சூரியன் ஜொலிப்போடு குல்லா, கறுப்புக் கண்ணாடியுடன் மல்லிகைச் சிரிப்போடு எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எம்ஜி.ஆர் வந்திறங்கினார். ‘இவருக்கு யார் சந்திரன் என்று பேர் வைத்தது, சூரியன் என்றல்லவா பெயர் வைத்திருக்கவேண்டும்’ என்று நினைத்தபடி ஆச்சர்யம் அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். அருகில் வந்ததும் என் கைகள் தன்னிச்சையாக அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டது.

ரோஜா மலரின் வாசத்தோடு ராஜா மாதிரி எங்கள் அலுவலகத்துக்குள் வந்தார். பிற்காலத்தில் நான் அந்த ராஜகுமாரனின் பாசத்துக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. அன்று அவரது அன்பில் வீழ்ந்த என்னையும் அவரையும் பின் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதிவரையிலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க இயலவில்லை. தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் இருந்த ப்ரிவ்யூ தியேட்டரில் என் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தை எம்.ஜி.ஆருக்குத் திரையிட்டுக் காட்டினேன். அப்போது எம்.ஜி.ஆர் முதல்வர். எனது படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு என்ன விமர்சனம் சொல்லப்போகிறாரோ என்கிற பதைபதைப்போடு தியேட்டர் வாசலில் காத்திருந்தேன்.

படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவர், நேராக என் அருகில் வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார். "அஞ்சு பத்து 'அண்ணா'க்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவுப் பிரசாரத்தை ஒரே படத்தில் சாதித்துக் காட்டிட்ட. என் படத்துல நான் சொல்லத் தயங்குற பல விஷயங்களை தைரியமாப் படமாக்கியிருக்க. பாராட்டுக்கள்" என்று சொல்லியபடி என்னை கட்டியணைத்துக் கொண்டார்.

ஒருமுறை எம்.ஜி.ஆர் தலைமையில் சென்னை விஜயசேஷ மஹாலில் நடந்த கல்யாணத்துக்கு என்னையும் அழைத்து இருந்தனர். எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துவிட்டு உதவியாளர் மூலம் மேடைக்கு அழைத்தார். திடீரெனப் பேசவும் சொல்லிவிட்டார். 'எங்கள் கிராமத்தில் இருக்கும் சினிமா கொட்டகையில் 'நாடோடி மன்னன்' திரைப்படத்தைப் பலமுறை பார்த்துப் பிரமித்தவன் நான். ஒருமுறை எம்.ஜி.ஆர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். எப்படியாவது அவரது சில்க் ஜிப்பாவைத் தொட்டுவிடவேண்டும் என்பது எங்களுக்குள் போட்டி, கடைசியாக நான் தொட்டுவிட்டேன்' என்று நான் பேசியபோது பச்சைக்குழந்தை மாதிரி எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே இருந்தார்.

அதன்பிறகு அவருடைய கண்கள் கடைசியாகப் பார்த்த படம் 'வேதம் புதிது'. 'வேதம் புதிது' திரைப்படம் வெளிவந்துவிடக்கூடாது என்று சிலர் கச்சை கட்டிக்கொண்டு வேலை பார்த்தனர், என்னென்ன உள்ளடி வேலைகள் செய்யவேண்டுமோ, அனைத்தையும் செய்தனர். அப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமனிடம் போனில் பேசி, எனக்காக உரிமையுடன் சண்டை போட்டு அந்தப் படத்துக்கு சென்சார் சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்தவர், எம்.ஜி.ஆர்.

அடுத்து 'வேதம் புதிது' படத்தை அவருக்குத் திரையிட்டு காட்டியபோது தனது பக்கத்து இருக்கையில் என்னை அமரச்சொன்னார். ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும், என் கைகளை இறுகப்பற்றித் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார். 'வேதம் புதிது' ரிலீஸாகும்போது எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை. அந்தப்படம் திரையிட்டபோது டைட்டிலில் ' புரட்சித் தலைவர் கண்கள் கடைசியாகப் பார்த்த திரைப்படம்' என்று எழுதியிருந்தேன்.

அவர் டாக்டர் பட்டம் பெற்றபோது தமிழ்சினிமா உலகத்தையே ஒன்றுகூட்டி அவருக்காகப் பாராட்டுவிழா நடத்தியவன், அவரது இறுதி ஊர்வலத்தைப் படம்பிடித்து 'வேதம் புதிது' படத்தில் திரையிட்டுக்காட்டினேன். அப்போது இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் பேச்சுவார்த்தை இல்லை. நானே முன்னின்று வைரமுத்துவை தனியாக பேசவைத்தும் இளையராஜாவைப் பின்னணி இசைக்கவைத்தும் அவரையே பாடல் ஒன்றை எழுதிப் பாடவைத்தும் அந்தப் பாரத ரத்னாவுக்கு அஞ்சலி செலுத்தினேன்.

முன்னதாக 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை முதன்முதலாக ராமவரத்திலிருந்து, 'சின்னவர் இறந்துட்டார்' என்று எனக்கு போன் வருகிறது. என் மனம் நொறுங்கிப் போகிறது. கண்களின் கண்ணீர் வழிந்தோட காரை எடுத்துக்கொண்டு ராமவரம் நோக்கிப் பறந்தேன். ஜானகி அம்மையார், அவரது உறவினர்கள் தவிர வேறு யாருமே இல்லை. எப்போதும் என்னைப் பார்த்தவுடன் சிரிக்கும் உதடுகள் மூடியிருந்தன. என்னைப் பாசமாகத் தழுவிய கைகள் ஜில்லிட்டு இருந்தன.

குல்லா போடாத, கண்ணாடி அணியாத எம்.ஜி.ஆர் கண்ணுறங்கிக் கொண்டு இருந்தார். அதன்பின் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். எம்.ஜி.ஆர் உடலை மாடியில் இருந்து இறக்க வேண்டும். அவருக்கு ஜிப்பா அணிய முடியவில்லை, ஜிப்பாவின் பின்பக்கம் கிழித்து அணிவித்து தையல் போட்டேன். எத்தனையோ திரைப்படங்களில் அவருக்கு விதம்விதமான மேக்கப் போட்டு இருப்பார். கடைசி ஊர்வலத்துக்கான மேக்கப்பை எம்.ஜி.ஆர் முகத்துக்கு நான்தான் போட்டேன். குல்லா போட்டு, கண்ணாடி அணிவித்து கட்டிலில் படுக்க வைத்து கீழே இறக்கினேன். அடக்க முடியாத கண்ணீரோடு ராஜாஜி ஹாலுக்கு மக்கள் திலகத்தின் உயிரற்ற உடலை கொண்டு சென்றோம்'' என்றார் இயக்குனர் பாரதிராஜா

  • 199
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் காணப்படும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். பேச்சுகளில் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

ரிஷபம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கல்வியில் ஆர்வமின்மை ஏற்படும். ஆன்மீக குருக்களின் ஆலோசனைகள் தெளிவினை உருவாக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எழுத்து துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மிதுனம்

எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் நற்பெயர்கள் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கைகூடும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

 

கடகம்

வரவுகளில் இருந்த நெருக்கடிகள் விலகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு செயல்பாடுகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். பணிகளில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். வியாபார செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

தந்தை வழி உறவுகள் மூலம் ஒத்துழைப்பு உண்டாகும். நீண்ட தூர பயண சிந்தனைகள் உண்டாகும். குருமார்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான சில விரயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

கன்னி

ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். எதிராக இருந்தவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

துலாம்

நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை செய்வீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் காணப்படும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

விருச்சிகம்

உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நெருக்கடியாக இருந்த சிக்கல்கள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். சிந்தனைபோக்கில் சில மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதமும் வேகமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சகோதரர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். புதிய தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

மகரம்

ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சூழ்நிலைக்கேற்ப பேசி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

சாமர்த்தியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். உடன்பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனை விருத்தி சார்ந்த முயற்சிகள் கைகூடி வரும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

மீனம்

மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். விவசாய தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும் ஆதரவும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பார்வை தொடர்பான பிரச்சினைகள் குறையும். வர்த்தக சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

  • 201
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 24 ஆம் தேதி புதன்கிழமை 8.7.2026.

இன்று காலை 08.06 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று பிற்பகல் 12.25 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

இன்று காலை 09.42 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.

இன்று காலை 08.06 வரை கௌலவம். பின்னர் இரவு 07.09 வரை தைத்தூலம். பிறகு கரசை .

இன்று அதிகாலை 5.57 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=577&dpx=2&t=1783468109

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 215

Good Morning...

  • 202
  • 248
·
Added a news

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நிகழ்ந்த ஒரு விபத்தில் இளம்பெண்ணொருவர் பலியான நிலையில், அந்த விபத்து நூற்றுக்கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Sea-to-Sky Highway என்னும் நெடுஞ்சாலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில், சிலர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்கள்.

அதைக் கண்ட பொலிசார் அவர்களை பின்தொடர, பொலிசிடமிருந்து தப்புவதற்காக வேகமாகச் சென்றுள்ளார் ஒரு இளம்பெண்.

அப்போது கேரவன் ஒன்றின் மீது அவரது மோட்டார் சைக்கிள் மோத, சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார் அவர்.

இந்த துயர விபத்து ஒரு உயிரை பலிவாங்கிவிட்டதுடன் நிற்கவில்லை. விபத்து காரணமாக Sea-to-Sky Highway நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட, மக்கள் இரவை நெடுஞ்சாலையிலேயே செலவிட நேர்ந்துள்ளது.

முதியவர்கள், குழந்தைகள், தங்கள் விமானத்தைப் பிடிப்பதற்காக புறப்பட்டவர்கள் என பலதரப்பினரும் சாலை ஓரமாக அமர்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், சிறுபிள்ளைகளுடன் வந்தவர்கள், இந்த திடீர் விபத்தால் பிள்ளைகளுக்கு உணவில்லாமல் தவிக்க, பொழுதைக் கழிப்பதற்காக கேம்பிங் சென்றவர்கள் சிலர் அவர்களுடன் தங்கள் உணவைப் பகிர்ந்துகொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

சிலர், சாலையோரமாக தங்கள் கூடாரங்களை விரித்து அமர்ந்துகொள்ள, சிலர் நடை பயில, இளம் ஜோடிகள் தங்கள் துணைகளை மடியில் கிடத்திக்கொள்ள, அதிகாலை 3.00 மணி வாக்கில் நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

  • 256
  • 260