- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்தை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியிருந்தாலும், இறப்பிற்கான காரணம் குறித்து மௌனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பகவல்பூரில் இவரது இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில், இது திட்டமிடப்பட்ட தாக்குதலா அல்லது உடல்நலக் குறைவா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், புல்வாமா மற்றும் உரி தாக்குதல்களில் தொடர்புடைய இந்த அமைப்புக்கு தாஹிர் அன்வாரின் மறைவு பெரும் பின்னடைவாகும்.
இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் ஒவ்வொருவராக கொல்லப்பட்டு வருவது, அந்நாட்டிலுள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் சிதைந்து வருவதையே காட்டுகிறது. அசாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தளபதிகளின் தொடர் இழப்புகள், அந்த அமைப்பின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.
லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து கடந்த பல நாட்களாகவே இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் லெபனான் நாட்டுக்குள் நுழைந்தும் இந்த தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் தெற்கு லெபனானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
லெபனனில் குடியிருப்பு பகுதிகள், வணிக கட்டிடங்கள் மற்றும் எரிபொருள் நிலையம் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மேலும் லெபனான் எல்லையில் உள்ள தைய்பே, லிதானி ஆகிய நகரங்களில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பல தங்களின் மீது தாக்குதல் நடத்தி சிலரை கொன்றதாக இஸ்ரேல் கூறி இருக்கிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலால் தெற்கு லெமனானின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள லெபனான் அதிபர் ஜோசப், ‘அமைதியை குலைப்பவர்களின் கை வெட்டப்படும்’ என என எச்சரித்திருக்கிறார்.
முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தின் வியாபாரம் என்பது குறுகிய வட்டத்தில்தான் இருந்தது. அதாவது தமிழ் படங்கள் தமிழ்நாட்டிலும், தெலுங்கு படங்கள் ஆந்திராவிலும், கன்னட திரைப்படங்கள் கர்நாடகாவிலும், ஹிந்தி படங்கள் வட இந்தியாவில் மட்டுமே வசூலை பெற்றுவந்தது. ஒரு கட்டத்தில் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட படங்கள் மற்றும் அளவில் டப் செய்யப்பட்டு வெளியாவது அதிகரித்துக் கொண்டே வந்தது.
தற்போது ஒரு மொழியில் உருவாகி மற்ற மொழிகளிலும் வெளியாகும் படங்களை ஏர் இந்தியா படங்கள் என்ன சொல்கிறார்கள் ஒவ்வொரு மொழியிலும் உள்ள அதிக சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் அதில் ஹீரோவாக நடிக்கிறார்கள் அதிகபட்சத்தில் உருவாக்கும் அந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகி வருகிறது. அதை பேன் இண்டியா திரைப்படம் என சொல்கிறார்கள்.
அதுவும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் பேன் இண்டியா படமாக வெளியாகி வசூலை அள்ளியது. அதன்பின் KGF, KGF2 , காந்தாரா, காந்தாரா 2, புஷ்பா, புஷ்பா 2 போன்ற பல திரைப்படங்கள் பேன் இண்டியா படங்களாக வெளிவந்து வசூலை அள்ளியது.
முதலிடத்தில் அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படம் இருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் 2070 கோடி வசூல் செய்தது. அடுத்து வரிசையாக பாகுபலி 2 - 1810 கோடியும், புஷ்பா 2 - 1742 கோடியும், துரந்தர் 1354 கோடியும், RRR 1230 கோடியும், துரந்தர் 2 - 1226 கோடியும் (ஒரு வாரத்தில்), KGF 2- 1215 கோடியும், ஜவான் 1160 கோடியும், பதான் 1055 கோடியும், கல்கி 2898 கிபி 1042 கோடியும் வசூல் செய்திருக்கிறது.
லெஜென்ட் சரவணா நிறுவனர் சரவணன் நடித்துள்ள திரைப்படம் லீடர். இந்த திரைப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அறந்தாங்கி நிஷா ‘நான் படத்தில் லெஜென்ட் சரவணாவை திட்டியிருக்கிறேன். எனவே நான் சில நாட்களுக்கு சரவணா துணிக்கடை பக்கம் போக முடியாது. இந்த படத்தில் என் கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அப்படியே படத்திலும் இருந்தார். நான் வாயை திறந்து விடுவாரா என்னை எட்டிப் பார்த்தேன். உங்கள் கணவரிடம் ரியாக்சன் குறைவாக இருக்கிறது என இயக்குனர் சொன்னர். 10 வருடங்களாக அவரிடம் எந்த ரியாக்சனும் இல்லை. இந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும்.. இந்த படத்தில் நிஷாவையே ஹீரோயினாக போட்டிருக்கலா என லெஜண்ட் சரவணா யோசித்திருப்பார்’ என்று பேசினார்.
அவருக்கு பின் பேச வந்த நடிகர் விடிவி கணேஷ், ‘இங்க நிறைய பேர் பேசினாங்க.. எல்லாரும் படத்த பத்தி பேசினாங்க.. ஆனா அறந்தாங்கி நிஷா தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பேசினாங்க. அவங்க படத்தை பற்றி எதுவும் சொல்லல.. அவங்க ஹீரோயின் ஆக வேண்டுமா?.. விவஸ்தையே இல்லையா?. இதெல்லாம் கேட்டா நமக்கு சிரிப்புதான் வருது’ என்று பேசினார்.. அவர் பேச பேச லெஜண்ட் சரவணன் முகமே மாறிவிட்டது.. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரால்கி வருகிறது. பலமுறை சினிமா மேடைகளில் விடிவி கணேஷ் இப்படி சர்ச்சையாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வது குறித்து பொதுமக்களின் கருத்தை கேட்க திட்டமிட்டுள்ளதாக மாகாண முதல்வர் ஸ்கொட் மோ தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா அண்மையில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு முழுமையான சமூக ஊடகத் தடை அமல்படுத்தியதை குறிப்பிட்டு, கனடாவும் இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என அவர் சமூக ஊடகமொன்றில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 4,000-க்கும் மேற்பட்டவர்களில் சுமார் 75% பேர், ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டதுபோன்ற தடை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த தடை, டிக்டாக், முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியுப் மற்றும் ஸ்னெப்சாட், போன்ற தளங்களில் 16 வயதிற்குட்பட்டவர்கள் கணக்குகள் உருவாக்குவதைத் தடுக்கிறது.
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இந்த விவகாரம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என தெரிவித்தார். எனினும், இது குறித்து விரிவான விவாதம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஆன்லைன் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சட்டங்கள் அவசியம் என்றும், சமூக ஊடகங்களுக்கான “வயது வரம்பு” குறித்த விவாதமும் அதில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரெஞ்சு-பலஸ்தீனிய உறுப்பினரான ரிமா ஹஸன் மான்ட்ரியல் மாநாடுகளில் பங்கேற்க இருந்த நிலையில் கனடாவிற்குள் பிரவேசிகக் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தாம் கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதை “கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சி” என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்ட மின்அனுமதி (electronic travel authorization) பின்னர் வெள்ளிக்கிழமை திரும்பப் பெறப்பட்டதாக அவரது கட்சியான லா பிரான்ஸ் இன்ஸோமிஸ் தெரிவித்துள்ளது.
கனடிய அதிகாரிகள், முன்னதாக விசா மறுப்பு அல்லது நுழைவு மறுப்பு, மேலும் குற்றச்சாட்டு அல்லது கைது தொடர்பான தகவல்களை அவர் வெளியிடவில்லை என குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மறுப்புக்கான உண்மையான காரணம், இஸ்ரேல் நுழைவு மறுப்பு மற்றும் பலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு குறித்து அவர் எடுத்துள்ள வலுவான கருத்துகளே என அவரது கட்சி கூறுகிறது.
இந்த வாரம் மான்ட்ரியலில் நடைபெறவிருந்த “பலஸ்தீன ஆதரவு குரல்கள் அடக்கப்படுவது” மற்றும் “வலதுசாரி அரசியல் எழுச்சி” தொடர்பான இரண்டு மாநாடுகளில், ரிமா ஹசன் ஆன்லைன் வழியாக பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.
கனடாவின் ஹால்டன் பகுதியில், தபால் மூலம் கோக்கெயின் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெப்ரவரி மாதத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புர்லிங்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது, 42 வயதான ட்ரவர் ஹேர்ட்மேன் கைது செய்யப்பட்டார்.
13 கிராம் கோக்கெயின், அஞ்சல் அனுப்புதல் தொடர்பான ஆதாரங்கள், குறுக்கு வில் (crossbow), போலி வாகன எண் பலகைகள், சுமார் 70,000 சட்டவிரோத சிகரெட்டுகள், திருடப்பட்ட பிக்கப் வாகனம் என்பன சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
4 போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், 2 குறுக்கு வில் வைத்திருத்தல் குற்றங்கள், 2 தடை செய்யப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டிய குற்றங்கள் மற்றும் வாகன அடையாள எண் (VIN) மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். புகழ் ஓங்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
ரிஷபம்
வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பார்ப்புகளில் இருந்த தடைகள் விலகும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பிரச்சனைகள் குறையும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான காரிய அனுகூலம் ஏற்படும். வெற்றி கிட்டும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
உடன் பிறந்தவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வருவாய் மேம்பாடு சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். நெருக்கடியான சூழல்கள் படிப்படியாக மறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
தடைபட்ட வரவுகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வியாபாரப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். மனதில் இருக்கும் தனிப்பட்ட ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். முக்கியமான சில முடிவுகளை எடுப்பீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
திடீர் சுபசெய்திகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்களின் பணிகளை சேர்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். சமூகப் பணிகளில் கோபம் இன்றி பொறுமையுடன் இருக்கவும். வர்த்தக பணிகளில் நிதானம் வேண்டும். அமைதி நிலவும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
கன்னி
வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். மூத்த உடன்பிறப்புகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சமூகப் பணியில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். செலவு கூடும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
துலாம்
வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகளும் ஒத்துழைப்பும் உருவாகும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். தாமதம் ஏற்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
விருச்சிகம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாகன வசதிகள் மேம்படும். புதிய வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்த குழப்பங்கள் மறையும். இயந்திர பழுதுகளை சரி செய்வீர்கள். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். சேவை துறைகளில் இருப்போர்க்கு மேன்மை ஏற்படும். ஆதரவு பெருகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
தனுசு
ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபார நிலுவை பாக்கிகள் வசூலாகும். சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உயர்வு காணும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மகரம்
நினைத்த சில பணிகளில் போராட்டங்கள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். கடன் செயல்களில் பொறுமை வேண்டும். வருமானப் பற்றாக்குறை பற்றிய எண்ணங்கள் மேம்படும். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டாகும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். அலைச்சல் மிகுந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கும்பம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உருவாகும். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உயர் கல்வியில் இருந்த இன்னல்கள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மீனம்
இழுபறியான வரவுகள் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். உணர்வுபூர்வமாக பேசுவதை குறைத்துக் கொண்டு சூழ்நிலை அறிந்து செயல்படவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 31.3.2026.
இன்று காலை 07.46 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.
இன்று மாலை 03.57 வரை பூரம். பின்னர் உத்திரம்.
இன்று மாலை 04.12 வரை கண்டம். பின்னர் விருத்தி.
இன்று காலை 07.46 வரை தைத்தூலம். பின்னர் இரவு 07.41 வரை கரசை. பிறகு வனிசை.
இன்று மாலை 03.57 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் தேதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்திருக்கிறது. நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து, இந்த வசூல் நிலையை அடைந்திருக்கிறது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
‘யூத்’ படத்தின் முதல் நாள் வசூலைவிட, 11-வது நாள் வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சுராஜ் வெஞ்சுரமுடு, தேவதர்ஷினி, அனிஷ்மா உள்ளிட்ட பலர் கென் கருணாஸுடன் நடித்திருந்தனர். முழுக்க புதுமுகங்கள் நடித்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
‘யூத்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்கள் கென் கருணாஸை நாயகனாக நடிக்கவைக்க தொடர்பு கொண்டு வருகிறார்கள். ஆனால், ‘யூத்’ படத்தினை விளம்பரப்படுத்த பல்வேறு ஊர்களுக்கு படக்குழுவினருடன் பயணப்பட்டு வந்தார் கென் கருணாஸ்.
இப்படத்தினை பார்த்துவிட்டு சூர்யா, கார்த்தி, சிம்பு உல்ளிட்ட பலர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 10-ம் தேதி ’எல்.ஐ.கே’ திரைப்படம் வெளியாகும் என்று ப்ரோமோ வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் திட்டமிட்டப்படி முடிவடையவில்லை. இதனால் பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இறுதியாக ஏப்ரல் 3-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த தேதியிலும் வெளியாகாது என தகவல்கள் பரவின. இறுதியாக விக்னேஷ் சிவன், அனிருத் மற்றும் பிரதீப் ரங்கநாதன் மூவரும் இணைந்து ப்ரோமோ வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அதில் ஏப்ரல் 10-ம் தேதி கண்டிப்பாக வெளியீடு என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் இந்த தேதியில் இப்படம் வெளியாகும் என்று விநியோகஸ்தர்களும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
சீமான், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்துள்ள படம் ‘எல்.ஐ.கே’. இதனை லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் வீட்டில் சோகம் நிகழ்ந்துள்ளது. அவரது தாயார் சுவர்ணலதா (86) காலமானார். வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திங்கள்கிழமை காலை பிரகாஷ் ராஜின் இல்லத்தில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் தாயாரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கனடாவின் மிட்லாந்து பகுதியில் சனிக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகத்திற்கிடமான ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால், அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற அச்சத்தில் போலீசார் அவசர நடவடிக்கை எடுத்தனர்.
இரவு சுமார் 11 மணியளவில் டொனால்டா வீதி – ஜான்சன் வீதி அருகே சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு இளைஞர்கள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பழைய இராணுவ ஆயுதத்தைப் போன்ற ஒரு பொருளை கண்டுபிடித்துள்ளனர். அதை அருகிலுள்ள வீட்டுக்குள் கொண்டு சென்ற பின்னரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த வீட்டிலிருந்தவர்களையும் அருகிலுள்ள குடியிருப்பாளர்களையும் பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.
மேலும், அந்த பகுதி முழுவதும் மூடப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, OPP வெடிகுண்டு அகற்றும் பிரிவும் (Explosives Disposal Unit) அழைக்கப்பட்டது.
நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகு, அந்த பொருள் உண்மையில் வெடிகுண்டு அல்ல; இராணுவ பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட சாதனம் என்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், அந்த பொருள் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, போலீஸ் காவலில் எடுக்கப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், எரிபொருள் விலை இந்த வாரம் லிட்டருக்கு 2 டொலர் வரை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் கார் பயணங்களுடன் விமான பயணங்களும் கடுமையாக பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ் பகுதியில் நடைபெறும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், உலகளவில் எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலைகள் உயர்ந்து வருகின்றன.
ட்ரூடோ விமான நிலையம் பகுதியில் பயணிகள் செலவுகளை சமாளிக்க சிரமப்படுகின்றனர்.
“விமான டிக்கெட் விலை அதிகமாக உள்ளது, ஆனால் அதை ஏற்க வேண்டியதே” என சிலர் தெரிவித்தனர்.
ஜான் கிரடெக் கூறுகையில், “கார் எரிபொருள் லிட்டருக்கு 40–50 சென்ட் வரை உயர்ந்துள்ளது; விமான எரிபொருள் விலை இரட்டிப்பாகியுள்ளது” என்றார்.
இதன் தாக்கமாக போர்டர் ஏர்லைன்ஸ் சில விமான டிக்கெட்டுகளுக்கு 40 டொலர் வரை எரிபொருள் கட்டணத்தை அறவிடத் தொடங்கியுள்ளது.
இது தற்காலிக நடவடிக்கை என நிறுவனம் தெரிவித்தாலும், இதுபோன்ற கட்டணங்கள் நிரந்தரமாகிவிடும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கனடாவில் எமிலி கோசாக் என்ற 95 வயதான மூதாட்டி, தனது அர்ப்பணிப்பு மற்றும் அயராத சேவையால் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
ஹோலி ஃபாமிலி நர்சிங் ஹோம் எனும் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் கடந்த 34 ஆண்டுகளாக தன்னார்வ தொண்டராக செயல்பட்டு வருகிறார். 1992ஆம் ஆண்டு தனது தாயார் அங்கு வசித்தபோது தொடங்கிய இந்த சேவை, இன்று வரை இடையறாது தொடர்ந்து செய்து வருகிறார்.
நோயாளிகளுக்கு உணவு வழங்குதல், பிங்கோ விளையாட்டுகளை நடத்துதல், தேவையான உதவிகளை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
95 வயதிலும் தினமும் சுமார் 3 கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டு, அனைவரின் வாழ்விலும் ஒளி சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
“ஒவ்வொரு நாளும் எனக்கு செய்ய ஏதோ ஒன்று இருக்க வேண்டும்” என்ற அவரது வாழ்க்கை நோக்கம் பலருக்கும் ஊக்கமாக உள்ளது.
முன்னதாக இடுப்பு எலும்பு முறிவு, புற்றுநோய், இதய நோய் தாக்கங்கள் போன்ற சவால்களை சந்தித்திருந்தாலும், அவை எதுவும் அவரது சேவையை தடுக்கவில்லை.
தற்போது நடை உதவிக்கருவி பயன்படுத்தினாலும், தனது தொண்டை தொடர்ந்து செய்கிறார்.
இந்த நர்சிங் ஹோமின் பராமரிப்பு இயக்குநரான ஸ்டேசி மோர்கன், “எமிலி போன்ற தன்னார்வலர்கள் எங்கள் அமைப்பின் இதயம். அவர் தினமும் வந்து நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துகிறார்” என்று பாராட்டினார்.
மேலும், 60-70 பெண்கள் கொண்ட தன்னார்வ குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் எமிலி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். “95 வயதிலும் இவ்வாறு சேவை செய்வது மிக அபூர்வம்” எனவும் அவர் குறித்து கூறப்படுகிறது. “மற்றவர்களும் அதிகமாக தன்னார்வ பணிகளில் ஈடுபட வேண்டும்” என எமிலி கோசாக் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சிறிய உதவிகள்கூட பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதையே அவரது வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சகோதரர்களிடம் ஒற்றுமை ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல்கள் உருவாகும். பூர்விக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். ஓய்வு தேவைப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
ரிஷபம்
கடன் சார்ந்த சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்கள் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவு பெறும். விருப்பமானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். தாயுடன் அனுசரித்து செல்லவும். குழந்தைகளை பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். அமைதி காக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
பணிகளில் இடமாற்றங்கள் சாதகமாக அமையும். திறமைக்கான மதிப்புகள் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். ஆரோக்கியம் பற்றிய கவலைகளைத் தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் மேம்படும். தனலாபம் பெருகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பேச்சுத் திறமையால் லாபங்கள் அதிகரிக்கும். பொன் பொருட்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். விளையாட்டுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகள் பலப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சிம்மம்
ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் ஏற்படும். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். ஆரோக்கியம் கூடும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வெளி வட்டங்களில் அலைச்சல்கள் மேம்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களால் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்புக்கு உண்டான லாபங்கள் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய முதலீடுகளில் விவேகம் வேண்டும். இன்பமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வருங்கால சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பிள்ளைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
கால்நடை துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பேச்சுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபார இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். அரசு பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சல் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நினைத்த சில பணிகள் நிறைவேறுவதில் விவேகம் வேண்டும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் உயர்கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பாசம் பொழியும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் வருத்தம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமற்ற சூழல் ஏற்படும். மனதில் தோன்றும் கருத்தை நிதானமாக சொல்வது நன்மை தரும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மீனம்
ஆரோக்கிய இன்னல்கள் குறையும். எதிர்ப்புக்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள்.மனதில் பணி மாற்ற சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத தன வரவும் அதற்கேற்ப செலவும் உண்டாகும். வெளி வட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். நிம்மதி நிலைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்








