·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 934
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
  • 8
·
Added a post

தஞ்சை பெரிய கோவில் (பிரகதீஸ்வரர் கோவில்) முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை என்ற கருத்து தவறானது. வரலாற்று ஆதாரங்களின்படி, இராஜராஜசோழன் கி.பி. 1003-ல் தொடங்கி கி.பி. 1010-ல் கோவிலை முழுமையாக நிறைவு செய்தார்.

கருவறையின் வடக்குப் புறச் சுவரில் கல்வெட்டு உள்ளது, இதில் இராஜராஜசோழன் கோவிலை முடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தொல்லியல் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

“முழுமையில்லை” என்ற தவறான புரிதல் 216 அடி உயரம் கொண்ட விமானம் உலகின் மிகப்பெரிய கல்லால் ஆன கோபுரங்களில் ஒன்று. சிலர் இதன் உச்சியில் கூடுதல் அலங்காரங்கள் திட்டமிடப்பட்டதாகக் கருதி “முழுமையில்லை” என்று காரணத்தினால் நினைக்கிறார்களோ?.

சில இடங்களில் சிற்பங்கள் முழுமையாக பொறிக்கப்படாதது போலத் தோன்றுகிறது. ஆனால் இது “அழகியல் தேர்வு” மட்டுமே; கட்டுமானம் நிறைவு பெறவில்லை என்பதற்கான சான்றல்ல.

பின்னர் நாயக்கர் மற்றும் மராட்டியர் காலத்தில் கூடுதல் மண்டபங்கள், சுவர் ஓவியங்கள் சேர்க்கப்பட்டதால், சிலர் “அசல் கோவில் முடியவில்லை” என்று தவறாக புரிந்து கொள்கிறார்களோ?

சில சிற்பங்கள், பின்னர் சேர்க்கப்பட்ட கட்டிடங்கள், மற்றும் அலங்காரக் குறைபாடுகள் காரணமாக “முடியவில்லை” என்ற தவறான கருத்து பரவியிருக்கலாம்.

ஆனால், இராஜராஜசோழன் கால கல்வெட்டுகள் கோவில் முடிவடைந்ததை உறுதிப்படுத்துகின்றன.

ஜெர்மன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஹால்ஸ் (1895) மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வுகள், கோவில் 1010-ல் நிறைவு பெற்றது என உறுதி செய்கின்றன.

“கட்டடமும் கதையும்” போன்ற தமிழ் வரலாற்று நூல்கள், இராஜராஜசோழன் கோவிலை முழுமையாக முடித்ததாக குறிப்பிடுகின்றன.

கல்வெட்டுகள், தொல்லியல் ஆய்வுகள், வரலாற்று நூல்கள் அனைத்தும் கோவில் 1010-ல் நிறைவு பெற்றதை உறுதிப்படுத்துகின்றன.

  • 8
·
Added article

விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன பூவே உனக்காக படத்தில் தினமும் இரவில் பாட்டுப் பாடி ஊரையே எழுப்பி விடும் காமெடி வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தான் மீசை முருகேசன். அதற்குமுன்பே பல படங்களில் நடித்திருந்தாலும் பூவே உனக்காக படம்தான் இவருக்கு அடையாளத்தைக் கொடுத்தது. தன்னுடைய முறுக்கு மீசையாலும், வளர்ந்து உயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றமும் கொண்டதால் இவருக்கு மீசை முருகேசன் என்ற அடைமொழி வந்தது.

மோகன், நதியா நடித்த உயிரே உனக்காக படத்தில் அறிமுகமான மீசை முருகேசன் அடிப்படையில் ஒரு இசைக் கலைஞர் ஆவார். வாய் மூலம் இசைக்கும் மோர்சிங் என்ற இசைக்கருவியை இயற்றுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். மேலும் தவில் வித்வானாகவும் இருந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன் குழுவில் பல்வேறு படங்களில் பணியாற்றி உள்ளார்.

இதுமட்டுமல்லாது கே.பி.சுந்தரம்மாள், தியாகராஜா பாகவதர், டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், இளையராஜா, குனனக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசை மேதைகளிடம் பணியாற்றியிருக்கிறார். ஏராளமான நாடுகளில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்.

கே.பாலசந்தருக்கு இம்மாதிரி ஆளுமைகளைக் கண்டால் குஷி பிறந்து தன்னுடைய படங்களில் ஏதாவதொன்றில் ஒரு கதாபாத்திரம் ஆக்கிவிடுவார். அது போலவே. உன்னால் முடியும் தம்பி படத்திலும் மீசை முருகேஷ் அவர்களின் தந்தை கொண்டிருந்த தொழிலான தவில் வாத்தியக்காரராக வந்து சிறப்பித்திருப்பார்.

மேலும் ஆண்பாவம், பூவே உனக்காக, பிரிவோம் சந்திப்போம், அமைதிப் படை, ஊமை விழிகள் திரைப்படங்களில் பல திரைப்படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.

கையிலும், வாயிலும் பல்வேறு பழங்கால இசைக் கருவிகளையும், புதிது புதிதான சப்தங்களை உருவாக்குவதிலும் மீசை முருகேசன் வல்லவராகத் திகழ்ந்தார். அதனால் தான் இவரை அந்தக்கால ரசூல் பூக்குட்டி என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்போது நாம் திரையில் கேட்கும் வித விதமான பின்னணி இசையை தனது கை மற்றும் வாய்களாலேயே செய்து பல இசையமைப்பாளர்களை பிரம்மிக்க வைத்தவர்.

தேங்காய் ஓட்டையும் கூட தனது அலாதி இசை திறமையால் வாத்தியக் கருவியாக மாற்றுவார். தன்னிடம் எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அதை இசைக் கருவியாக மாற்றி வித விதமான ஒலிகளை எழுப்பி அசர வைக்கும் அலாதி திறமை கொண்டவர் இந்த மீசை முருகேசன்.

  • 18
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வியாபாரம் இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில காரியங்களில் சாதகமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

ரிஷபம்

வியாபார பணிகளில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். உயர் அதிகாரிகள் இடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். முயற்சிகளில் இருந்த தாமதம் குறையும். பிரபலமானவர்களால் ஆதாயம் ஏற்படும். சுப காரிய விரயம் உண்டாகும். மல்யுத்த போட்டிகளில் ஒரு விதமான ஆர்வம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

 

மிதுனம்

குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். அலுவலகப் பணிகளில் நிர்வாகத் திறமை வெளிப்படும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் மாற்றமான சூழல்கள் அமையும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். கல்வி தொடர்பான செயல்களில் இருந்த அலைச்சல்கள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கடகம்

தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். மற்றவர்கள் செயலால் மனதில் மாற்றம் ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

சிம்மம்

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். இடை சார்ந்த பிரச்சினைகள் குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். மனதளவில் இருந்த தாழ்வு மனப்பான்மை குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கன்னி

பயணம் செயல்களில் புதிய அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நுட்பமான சில விஷயங்களை புரிந்துகொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் மறையும். மனதளவில் புதிய பக்குவங்கள் உருவாகும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

துலாம்

சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துறைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். இடப்பெயர்ச்சி சார்ந்த முயற்சிகள் கைகூடும். தைரியமான பேச்சுக்கள் மூலம் காரிய அணுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். கற்பித்தல் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தனிப்பட்ட கருத்துக்களை கூறுவதில் விவேகம் வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

 

விருச்சிகம்

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான தெளிவுகள் ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

தனுசு

உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறுதூர பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நிலம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் ஒத்துழைப்புகள் ஏற்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கும்பம்

பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் கல்வி சார்ந்த தெளிவுகள் பிறக்கும். ஆடம்பர பொருள்கள் மீதான ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் இடத்தில் பொறுமை காக்கவும். பணிகள் நிறைவு பெறுவதில் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

 

மீனம்

சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். பயணங்களில் முன்னேற்றம் காணப்படும். சமூகப் பணியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

  • 100
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.7.2026

இன்று காலை 10.56 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று பிற்பகல் 01.10 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.

இன்று மாலை 03.08 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.

இன்று காலை 10.56 வரை தைத்துூலம். பின்னர் இரவு 10.41 வரை கரசை. பிறகு வணிசை .

இன்று அதிகாலை 5.57 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=574&dpx=2&t=1783220728

நல்ல நேரம்:

காலை : 08.15 முதல் 09.00 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை: 03.15 முதல் 04.15 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 103

Good Morning...

  • 99
·
Added joke

மனைவி: (கண்ணாடியைப் பார்த்து கவலையோடு) ஏங்க, வயசாயிட்டே போகுது. முகத்துல சுருக்கம், தலைல நரைமுடி... என்னைப் பார்க்கவே எனக்கே பிடிக்கல. எனக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுங்களேன்?

​கணவன்: (யோசித்துவிட்டு) உன்னோட கண்ணாடியை நீ ஒரு நாளைக்கு அஞ்சு நிமிஷம் தான் பார்க்குற. ஆனா அதே முகத்தை நான் 24 மணி நேரமும் பார்க்குறேன். என் பொறுமையை விட உனக்கு என்ன பெரிய ஆறுதல் வேணும்?

  • 178
·
Added a post

சிவா ஒரு விவசாயி!. அந்தியூர் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய பண்ணை வீட்டில் இருந்த அவர், பல ஆண்டுகளாகத் தன் கையில் ஒரு கடிகாரம் கட்டியிருந்தார்

.*அவரைப் பொறுத்தவரை அது வெறும் கைக்கடிகாரம் அல்ல. உணர்வுகள். பல நல்ல தருணங்கள், வெற்றிகள் அவருக்கு நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம் தான் காரணம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது.*ஒருநாள் பண்ணை வேலை எல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகுதான் கவனித்தார். அவர் கையில் கட்டி இருந்த கடிகாரத்தை காணவில்லை.*

உடனே பரபரப்பாகி, தன் விவசாயக் கிடங்குக்குள் போய்த் தேட ஆரம்பித்தார். எவ்வளவு நேரம் தேடியும் கடிகாரம் கிடைக்கவில்லை. கவலையோடு வெளியே வந்தார்.*அவருடைய கிடங்குக்கு வெளியே சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அவருக்கு உடனே ஒரு ஆலோசனை கிடைத்தது..“சிறுவர்களே…!!” என்று அழைத்தார். சிறுவர்கள் ஓடிவந்தார்கள்

.*இந்தக் கிடங்குக்குள் என் கடிகாரம் காணாமல் போய்விட்டது. கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு அருமையான பரிசு ஒன்று தருவேன்” என்றார்.*மாணவர்கள் துள்ளிக் குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள்.

அத்தனைபேரும் உள்ளே இருந்த வைக்கோற்போர், புல், பூண்டு, இண்டு, இடுக்கு விடாமல் தேடியும் கிடைக்கவில்லை.*

சோர்ந்து போனவர்களாக வெளியே திரும்பி வந்தார்கள் விவசாயி வசம், “மன்னியுங்கள் அய்யா!, எங்களால கண்டு பிடிக்க இயலவில்லை’’ என்றார்கள்.*அந்த நேரத்தில், தயங்கித் தயங்கி ஒரு சிறுவன் அவரருகே வந்தான். அய்யா!, எனக்கு மட்டும் இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் அந்த கடிகாரம் கிடைக்கிறதா…? என்று முயற்சி செய்து பார்க்கிறேன்’’ என்றான்.

*சிறுவன் கிடங்குக்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக் கொண்டான். அவன் உள்ளே நுழைந்து பதினைந்து நிமிடங்கள்தாம் ஆகியிருக்கும். கதவு திறக்கப் பட்டது. வெளியே வந்தான்.அவன் கையில் காணாமல் போயிருந்த அவரின் கடிகாரம் இருந்தது.*அவருக்கு ஒரே வியப்பு. தம்பி!, நீ மட்டும் எப்படி சரியாக கடிகாரத்தை கண்டுபிடித்தாயா…?’’ என்று கேட்டார்.*

அய்யா!, நான் உள்ளே போய் ஒன்றுமே செய்யவில்லை. கிடங்கிற்கு நடுவில் கண்ணை மூடி அமர்ந்திருந்தேன். ஐந்து நிமிடங்கள் அப்படியே காத்திருந்தேன். அந்த அமைதியில் கடிகாரத்தின் `டிக்…டிக்… டிக்…’ ஒலியானது கேட்டது. ஒலித்த திசைக்கு சென்றேன், கடிகாரத்தை. கண்டு பிடித்தேன் என்றான்.

*நாளும் சற்று நேரத்தை, மனதை அமைதிப்படுத்த செலவழித்துப் பாருங்கள்.*உங்களால் எவ்வளவு தெளிவாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நீங்களே அறிவீர்கள்.* பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க ஸ்ரீ கிருஷ்ணன் நம் ஒவ்வொருவருக்கும் அருள் புரியட்டும்…!* மன அமைதி’ என்கிற இரண்டெழுத்து வசப்பட்டால் போதும். எதிலும், எங்கும் வெற்றியே, ஆனால்!, அனைவருக்கும் எளிதாக அது வாய்ப்பது இல்லை. பரபரப்பான மனம் கொண்ட ஒருவரை விட, மன அமைதி உள்ளவர் சிறப்பாகச் சிந்திப்பார்.*

  • 177
·
Added a post

மாமன்னன் ராஜராஜ சோழன் கி.பி. 1014-ஆம் ஆண்டில், தனது 67-வது வயதில் இயற்கை மரணம் அடைந்தார். [1, 2]இறப்பிற்கான காரணம்: அவர் எந்தவிதமான போரிலோ அல்லது சதித்திட்டங்களிலோ கொல்லப்படவில்லை என்றும், முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாகவே இயற்கை மரணம் எய்தினார் என்றும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

1,இறுதிக்காலம்: தன் மகன் ராஜேந்திர சோழனைச் சக்கரவர்த்தியாக முடிசூட்டி, சோழ நாட்டின் நிர்வாகப் பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்த பிறகு, தனது இறுதி நாட்களை பழையாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரண்மனைகளில் கழித்தார்.

[1,சமாதி (நினைவுத்தளம்): ராஜராஜ சோழனின் இறுதி ஓய்விடம் மற்றும் சமாதி எங்குள்ளது என்பது குறித்து வரலாற்றில் சில குழப்பங்களும், மர்மங்களும் நிலவுகின்றன. கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் பகுதியில் அவரது சமாதி (பள்ளிப்படை) இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  • 182
·
Added joke

ம னைவி: ஏங்க, நேத்து டிவில உலகத்துல இருக்குற ஏழு அதிசயங்களைப் பத்திப் போட்டாங்க. எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது!

​கணவன்: அதுல என்ன ஆச்சரியம்? உன்னைக் கல்யாணம் பண்ணின என்னைப் பத்தி அவங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, அதை எட்டாவது அதிசயமா சேர்த்திருப்பாங்க!

  • 184
·
Added a post

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.. அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்..

பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்.

உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....

நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும். நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல் ,அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்.. மன கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.

  • 226
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பர். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர். வாகனத்தைபழுதை சீர் செய்வீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் அனைவரையும் கவருவீர். பழைய கடனை பைசல் செல்வீர். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை குறித்து யோசிப்பீர். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கடகம்: மனதில் ஒருவித கவலை, படபடப்பு வரும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

சிம்மம்: திட்டமிட்டபடி பயணம் அமையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கன்னி: நீண்டநாள் முயற்சிக்கு இப்போது பலன் கிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் உங்கள் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.

துலாம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் லாபம் தரும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

விருச்சிகம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். புது வேலை கிடைக்கும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகம் சிறக்கும்.

தனுசு: சவாலில் வெற்றி பெறுவீர். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலக ரீதியாக பயணங்கள் செல்வீர். மேலதிகாரி பாராட்டுவார்.

மகரம்: முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அரசுக்காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக் கசப்புகள் விலகும். வீட்டை அலங்கரிப்பீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். பிள்ளைகளுக்கு காய்ச்சல், வயிற்றுவலி வரக்கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து கட்டுவீர். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மீனம்: உறவினர், பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவர். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்தெறிவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். விவாதங்களை தவிர்க்கவும்.

  • 228
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 20 ஆம் தேதி சனிக்கிழமை 4.7.2026.

இன்று காலை 10.57 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று பிற்பகல் 12.30 வரை அவிட்டம். பின்னர் சதயம்.

இன்று மாலை 04.11 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.

இன்று காலை 10.57 வரை பாலவம். பின்னர் இரவு 10.57 வரை கௌலவம். பிறகு தைத்துூலம் .

இன்று பிற்பகல் 12.30 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

.image_transcoder.php?o=sys_images_editor&h=573&dpx=2&t=1783145592

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 229

Good Morning...

  • 233
·
Added a post

ராஜஸ்தானின் கிராடு கோயிலைச் சுற்றி நிலவும் மர்மமான நம்பிக்கையும் அதன் உண்மையான வரலாறும்

இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கோயில்கள் உள்ளன. சில கோயில்கள் தங்களது கட்டடக் கலையால் உலகையே வியக்க வைக்கின்றன. சில கோயில்கள் அற்புதங்களுக்காக புகழ்பெற்றவை. இன்னும் சில கோயில்கள், அவற்றைச் சுற்றி நிலவும் மர்மக் கதைகளாலும், மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளாலும் பிரபலமாகின்றன.

அப்படிப்பட்ட மர்மமான திருத்தலங்களில் மிகவும் பிரபலமான ஒன்று ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் (Barmer) மாவட்டத்தில், தார் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள கிராடு (Kiradu) கோயில் வளாகம்.

இந்தக் கோயிலைப் பற்றி பல ஆண்டுகளாக மக்களிடையே ஒரு வித்தியாசமான நம்பிக்கை பரவி வருகிறது.

"சூரியன் மறைந்த பிறகு இந்தக் கோயிலில் யாராவது தங்கினால், அவர்கள் கல்லாக மாறிவிடுவார்கள்!"

இந்தக் கூற்றுக்கு வரலாற்று அல்லது அறிவியல் ஆதாரம் இல்லை. இருந்தாலும், அந்த நம்பிக்கை இன்றளவும் அப்பகுதி மக்களிடையே வாழ்ந்து வருகிறது.

அப்படியானால், இந்த மர்ம நம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் வரலாறு என்ன? விரிவாக அறிந்து கொள்வோம்.

தார் பாலைவனத்தின் மத்தியில் மறைந்திருக்கும் கலைப் பொக்கிஷம்

கிராடு கோயில் வளாகம், தார் பாலைவனத்தின் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

இங்கு ஒருகாலத்தில் ஐந்து பிரம்மாண்டமான கோயில்கள் இருந்ததாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவற்றில் தற்போது மிகவும் சிறப்பாக நிலைத்திருப்பது சோமேஸ்வரர் சிவன் கோயில் ஆகும்.

மற்ற கோயில்கள் காலத்தின் தாக்கத்தால் பெருமளவில் சிதிலமடைந்துள்ளன.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்தக் கோயில்கள் 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டுகளில் பரமார அரசர்களின் ஆதரவிலும், சாளுக்கியர் (சோலங்கி) கட்டடக்கலை தாக்கத்துடனும் உருவாக்கப்பட்டவை.

ராஜஸ்தானின் "கஜுராஹோ"

கிராடு கோயிலின் சுவர்கள்...

தூண்கள்...

வாயில்கள்...

அனைத்தும் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த சிற்பங்களின் அழகைக் கண்டு, பலர் இந்தத் திருத்தலத்தை "ராஜஸ்தானின் கஜுராஹோ" என்று அழைக்கின்றனர்.

மரு-குஜராத் கட்டடக்கலையின் தாக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில், இந்தியாவின் நடுக்காலக் கட்டடக் கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

மக்களின் நம்பிக்கையில் வாழும் சாபக் கதை

கிராடு கோயிலைப் பற்றிய மிகவும் பிரபலமான கதை, ஒரு துறவியையும் அவரது சீடரையும் சுற்றியே அமைந்துள்ளது.

பாரம்பரிய ஐதீகத்தின்படி...

பரமார மன்னர் சோமேஸ்வரர், தனது நாட்டில் மீண்டும் வளம் திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு பெரிய துறவியை அழைத்து வந்தார்.

துறவி சில நாட்கள் அங்கே தங்கி, தனது சீடரை அங்கு விட்டுவிட்டு யாத்திரைக்குச் சென்றார்.

சில காலத்திற்குப் பிறகு...

அந்தச் சீடர் உடல்நலக் குறைவால் மிகவும் பலவீனமடைந்தார்.

ஆனால், அப்பகுதி மக்கள் யாரும் அவரை கவனிக்கவில்லை.

ஒரே ஒரு பெண் மட்டும்...

அதுவும் ஒரு குயவரின் மனைவி...

மனிதநேயத்துடன் அவருக்கு உணவு அளித்து, மருந்து கொடுத்து, அன்புடன் கவனித்துக் கொண்டார்.

துறவியின் கோபம்

யாத்திரையை முடித்துத் திரும்பிய துறவி...

தனது சீடரின் நிலையைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தார்.

மக்களின் நன்றியின்மையும், அலட்சியமும் அவரை ஆழமாகப் புண்படுத்தியது.

கோபமடைந்த அவர்,

"இந்த ஊரில் மனிதநேயம் மறைந்துவிட்டது. இங்குள்ள மக்கள் அனைவரும் கல்லாக மாறட்டும்!"

என்று சபித்ததாக ஐதீகம் கூறுகிறது.

ஆனால்...

தன் சீடருக்கு உதவிய குயவரின் மனைவியை மட்டும் அழைத்து,

"இரவுக்குள் இந்த ஊரை விட்டு வெளியேறிவிடு. ஆனால் ஒரு விஷயம் மட்டும் நினைவில் கொள்... எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்க்காதே!"

என்று எச்சரித்தார்.

ஒரு பார்வை... ஒரு சாபம்...

அந்தப் பெண் ஊரை விட்டு வெளியேறத் தொடங்கினார்.

ஆனால்...

மனித இயல்பு...

ஆர்வம்...

பழகிய ஊரை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற எண்ணம்...

அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்த நொடியிலேயே...

அவளும் கல்லாக மாறிவிட்டதாக உள்ளூர் ஐதீகம் கூறுகிறது.

இன்றும், அந்தப் பெண்ணின் கல் உருவம் கோயில் வளாகத்திற்கு அருகே இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

இந்தக் கதை, உள்ளூர் மரபில் வழங்கப்படும் ஐதீகம் மட்டுமே; இதற்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை.

இரவில் யாரும் தங்காத கோயில்

இந்தக் கதையால், இன்று வரை ஒரு வித்தியாசமான நம்பிக்கை நிலவி வருகிறது.

சூரியன் மறைந்த பிறகு...

யாரும் இந்தக் கோயிலில் தங்கக் கூடாது.

தங்கினால்...

அடுத்த நாள் கல்லாக மாறிவிடுவார்கள் என்று மக்கள் நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கைக்கு எந்தவிதமான அறிவியல் அல்லது தொல்லியல் ஆதாரமும் இல்லை.

மேலும், இக்கோயில் இரவு நேரத்தில் பொதுமக்களுக்கு திறந்திருக்காது.

மாலை நேரத்தில் வெறிச்சோடும் மர்மம்

பகல் நேரங்களில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருக்கும் இந்தக் கோயில்...

மாலை நேரம் நெருங்கியவுடன்...

மெல்ல அமைதியாகிவிடுகிறது.

சூரியன் மறைந்த பிறகு...

தார் பாலைவனத்தின் நடுவே...

காற்றின் சத்தம் மட்டுமே கேட்கும் அளவிற்கு...

அந்த இடம் வெறிச்சோடி விடுகிறது.

இந்த அமைதியே, அந்த மர்ம நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்துகிறது.

இன்றைய நிலை

தற்போது, இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) இந்தக் கோயில் வளாகத்தை பாதுகாக்கிறது.

பொதுவாக, பார்வையாளர்கள் காலை முதல் மாலை வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

நுழைவுக் கட்டணம் மற்றும் நேரம் காலத்திற்கேற்ப மாறக்கூடும்.

கதை சொல்லும் உண்மை

கிராடு கோயிலைப் பற்றிய இந்தச் சாபக் கதை...

உண்மையா?

கற்பனையா?

என்பதை உறுதியாக யாராலும் நிரூபிக்க முடியவில்லை.

ஆனால்...

இந்தக் கதையின் உள்ளார்ந்த செய்தி மிகவும் அழகானது.

ஒரு நோயாளியை கவனிக்காமல் விட்ட சமுதாயம்...

ஒரு மனிதநேயமிக்க பெண்...

நன்றியின்மையின் விளைவு...

இவை அனைத்தும் மனிதர்களுக்கு ஒரு வாழ்க்கைப் பாடமாகவே இந்தக் கதையில் சொல்லப்படுகின்றன.

இறுதியாக ஒரு சிந்தனை...

மனிதர்களை கல்லாக்குவது...

ஒரு சாபம் அல்ல...

கருணையற்ற மனம்தான்.

அன்பு...

இரக்கம்...

உதவும் மனப்பான்மை...

இவை இருக்கும் வரை...

எந்த சாபமும் மனிதனை வெல்ல முடியாது.

கிராடு கோயிலின் மர்மக் கதையும்...

அதே உண்மையை அமைதியாக நினைவூட்டுகிறது.

  • 335
·
Added a post

ஆப்பிரிக்காவின் சிங்க முகம் – மாவீரர் பேட்ரிஸ் லுமும்பா.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள காங்கோ (DR Congo) திருநாடு, பல தசாப்தங்களாக பெல்ஜியம் நாட்டின் மிகக் கொடூரமான அடிமைத்தனத்தின் பிடியில் சிக்குண்டு தவித்தது. அந்த நாட்டு மக்களின் உழைப்பும், அங்கிருந்த விலைமதிப்பற்ற இயற்கைச் செல்வங்களும் பெல்ஜிய ஆதிக்கவாதிகளால் இரக்கமின்றிச் சுரண்டப்பட்டன. ஒடுக்கப்பட்ட தன் மக்களின் விடிவெள்ளியாக, அவர்களின் உரிமைக்குரலாக உருவெடுத்தவர்தான் மதிப்பிற்குரிய தலைவர் பேட்ரிஸ் லுமும்பா (Patrice Lumumba).

அவரது அயராத போராட்டத்தின் விளைவாக, 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் நாள் காங்கோ நாடு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரத்தைப் பெற்றது.

அந்த மாபெரும் விடுதலை விழா மேடையில், பெல்ஜியம் நாட்டின் அரசர் பாடுவின் (King Baudouin) கம்பீரமாக வீற்றிருந்தார். அன்று உரை நிகழ்த்திய பலரும் பெல்ஜிய அரசருக்கு நன்றி பாராட்டிப் பயபக்தியுடன் பேசினர். ஆனால், பிரதமர் பொறுப்பேற்ற மாவீரர் லுமும்பா அவர்கள் மைக் பிடித்துப் பேசத் தொடங்கியபோது ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது.

அரசர் பாடுவின் முகத்திற்கு நேராக நின்று, சற்றும் அஞ்சாமல் அவர் ஆற்றிய அந்த உரை உலக வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்தது. "இந்தச் சுதந்திரம் எங்களுக்கு நீங்கள் கொடுத்த பிச்சை அல்ல. எங்களோட ரத்தமும், வியர்வையும், கண்ணீரும் சிந்திப் பெற்ற மாபெரும் வெற்றி. இத்தனை காலம் எங்களை அடிமைகளாக நடத்தி, எங்களின் மனித மாண்பைச் சிதைத்த உங்களின் கொடூரங்களை நாங்களோ, எங்கள் சந்ததியினரோ என்றும் மறக்க மாட்டோம்" என்று சிங்கமெனக் கர்ஜித்தார். அவரது இந்த அளப்பரிய துணிச்சலைக் கண்டு வியந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற கருப்பினத் தலைவர் மல்கம் எக்ஸ் (Malcolm X), "ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த ஆகச்சிறந்த கருப்பின மனிதர் இவர்தான்" என்று நெஞ்சாரப் பாராட்டினார்.

வரலாற்றின் மிகக் கொடூரமான துரோகமும் தியாகமும்

சுதந்திர காங்கோவின் முதல் பிரதமரான லுமும்பா அவர்களின் மக்கள் செல்வாக்கும், அவரது அசாத்தியமான நேர்மையும் பெல்ஜிய ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் சுயநலப் போக்கிற்குத் துணை நின்ற பிற வல்லரசு நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. அவரை அரசியல் ரீதியாக வீழ்த்த முடியாத எதிரிகள், காங்கோ நாட்டு ராணுவத்தில் இருந்த சில துரோகிகளையும், அதிகாரிகளையும் பண பலத்தால் தங்களின் வசம் ஈர்த்துக் கொண்டனர்.

நாடு சுதந்திரம் அடைந்த ஆறே மாதங்களில், அதாவது 1961 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், அந்தத் துரோகக் கும்பலால் தலைவர் லுமும்பா அவர்கள் கடத்தப்பட்டார். பெல்ஜிய நாட்டு அதிகாரிகளும், ராணுவ வீரர்களும் அவரை ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று, மனிதநேயமற்ற முறையில் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்தனர். இறுதியில், தங்களின் சொந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடிய அந்த உன்னதத் தலைவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

அத்தோடு அவர்களின் காட்டுமிராண்டித்தனம் ஓயவில்லை. மாவீரர் லுமும்பா அவர்களின் உடல் மக்களுக்குக் கிடைத்தால், அது ஒரு மாபெரும் புரட்சி நெருப்பாக வெடிக்கும் என்று எதிரிகள் நடுங்கினர். இதனால், ஜெரார்ட் சோட்டே (Gerard Soete) என்ற பெல்ஜிய போலீஸ் அதிகாரியின் தலைமையில், லுமும்பா அவர்களின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, ஒரு பெரிய பேரலில் கந்தக அமிலத்தை (Acid) ஊற்றி, ஒட்டுமொத்த உடலையும் தடையமே இல்லாமல் முற்றிலுமாகக் கரைத்து அழித்தனர்.

இருப்பினும், அந்தப் பெல்ஜிய அதிகாரி பேராசையின் காரணமாக, லுமும்பா அவர்களின் வாயில் இருந்த ஒரு தங்கப் பல்லை மட்டும் ரகசியமாகத் தன் வசம் எடுத்து வைத்துக் கொண்டான். அந்தப் பல் 39 ஆண்டுகளுக்கும் மேலாக உலகிற்குத் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டு, அவனது மறைவிற்குப் பின்பே பெல்ஜிய அரசாங்கத்திடம் சிக்கியது. பல ஆண்டுகாலச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, சமீபத்தில் அந்த ஒரே ஒரு தங்கப் பல் மட்டும் காங்கோ நாட்டிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அதைத் தங்கள் தலைவனின் ஆன்மாவாகக் கருதி, காங்கோ மக்கள் கண்ணீர் மல்க அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அழியாத கொள்கையின் அடையாளம் – "லுமும்பா வீ"

ஒரு மனிதனின் உடலை அமிலத்தில் கரைத்து அழித்துவிட்டால், அவனது கொள்கையும் சித்தாந்தமும் அழிந்துவிடும் என்று நினைத்த எதிரிகளின் முகத்தில் கரியைப் பூசும் விதமாகத் தோன்றியவர்தான் மைக்கேல் குகா மபோலாடிங்கா (Michel Kuka Mboladinga). இவர் "லுமும்பா வீ" (Lumumba Vea) என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இதற்கு "லுமும்பா இன்றும் வாழ்கிறார்" என்று பொருள்.

காங்கோ நாட்டின் தீவிரமான கால்பந்து ரசிகரான இவர், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் நாட்டின் தேசிய அணி விளையாடும் அனைத்து சர்வதேசப் போட்டிகளிலும் மைதானத்திற்கு வந்துவிடுகிறார். மற்ற ரசிகர்கள் வண்ணமயமான ஆடைகளை அணிந்து வரும் வேளையில், இவர் மட்டும் தன் மதிப்பிற்குரிய தலைவர் லுமும்பா அவர்கள் அணிவது போன்றே பக்கா கோட், சூட் மற்றும் டை அணிந்து கம்பீரமாகத் தோன்றுவார்.

போட்டி நடைபெறும் அந்த 90 நிமிடങ്ങളും, சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆரவாரம் செய்து கொண்டிருக்கும் போது, இவர் மட்டும் ஒரு இஞ்ச் கூட அசையாமல், தன் வலது கையை நேராக உயர்த்தி, ஒரு சிலை போல மௌனமாக நின்று அஞ்சலி செலுத்துவார். உலகமே உற்று நோக்கும் ஒரு விளையாட்டு மேடையைத் தன் தலைவனின் கொள்கையைப் பறைசாற்றும் உன்னத இடமாக அவர் மாற்றிக் காட்டினார்.

சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டியொன்றில், சர்வதேச ஊடகங்களின் கேமராக்கள் இவரை நோக்கித் திரும்பிய போது, அவர் ஒரு அதிரடியான சைகையைச் செய்தார். தன் ஒரு கையால் வாயைப் பொத்திக் கொண்டு, மறு கையால் தனது தலைக்கு நேரே துப்பாக்கியை வைப்பது போலச் சைகை காட்டினார். "என் நாட்டின் உன்னதத் தலைவரை நீங்கள் வாயடைத்து, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றீர்கள். இன்றும் என் தாய்நாட்டில் அமைதியின்றி மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்" என்ற கசப்பான உண்மையை, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் உலக அரங்கில் நெஞ்சைத் தொடும் வகையில் உணர்த்தினார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சர்வதேசக் கால்பந்து சம்மேளனம் (FIFA), கேமராக்களை உடனடியாக வேறு பக்கம் திருப்பினாலும், அவர் சொல்ல வந்த செய்தி உலக மக்களின் இதயங்களைச் சென்றடைந்து விட்டது.

நாம் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய உன்னத பாடம்:

இந்த உலகத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மை வீழ்த்த நினைக்கலாம், நமக்குத் துரோகம் இழைக்கலாம், நம்முடைய அடையாளத்தையே அழிக்க முற்படலாம். ஆனால், நாம் தேர்ந்தெடுத்த பாதையும் நம்முடைய நோக்கமும் உண்மையாக இருந்தால், நாம் மறைந்த பின்பும்கூட நம்முடைய கொள்கைக்காகவும், நம்முடைய பெயருக்காகவும் உலகத்தில் யாராவது ஒருவன் நிச்சயம் எழுந்து நிற்பான்.

எதிரிகள் நம்மை அழிக்க நினைக்கும் அந்தப் புள்ளிதான் நாம் வரலாற்றில் அழியாப் புகழ்பெறுவதற்கான தொடக்கப் புள்ளி. எனவே, தடைகளைக் கண்டு சோர்வடையாமல், நேர்மையோடும் உழைப்போடும் இலக்கை நோக்கி கம்பீரமாக முன்னேறிச் செல்ல வேண்டும். வெற்றி நிச்சயம் நமதே

  • 340
·
Added a post

ஒருமுறை துளசிதாசர் ஆஞ்நேயரிடம் உங்களுக்கு ராம் - லட்சுமணரின் அனுக்கிரகம் கிட்டியது போல் எனக்கும் அவர்களின் தரிசனம் கிட்ட வேண்டும்..

அதற்கு நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனமுருகப் பிரார்த்தித்தார். ..!

துளசிதாசரின் வேண்டுகோளை ஏற்ற அஞ்சனை மைந்தன் அவரிடம், இதுதான் சித்ர கூடம்.. இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர்..!

ராமன் வனவாசம் செய்த இடம்..அங்கே பாரும் மந்தாகினி..இங்கே உட்கார்ந்து,ராமஜபம் செய்யும்..ராம தரிசனம்கிட்டும் என்று கூறினார்.!

அதற்கு துளசிதாசர் நீங்களும்கூட இருக்கவேண்டும் என்று வேண்டினார்..!

நீர் ராம நாமம் சொன்னால் உமது கூடவே நானும் இருப்பேன் எனக்கு வேறு என்ன வேலை? என்று கூறி மறைந்து விட்டார் ஆஞ்சநேயர்..!

துளசிதாசரும் ராமஜபம் செய்ய ஆரம்பித்தார்...

மனதில் ராமர் வருவாரா..எப்படி வருவார்? லட்சுமணனுடன் வருவாரா.. எப்படி இருப்பார்..

தலையில் ஜடாமுடியுடன் வருவாரா? (அ) வைரக்கிரீடம் அணிந்து வருவாரா.. மரவுரி தரித்து வருவாரா...

என்ற பல சிந்தனைகளோடு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண்களை இமைக்காமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்..!

மலைப்பாதை, ஒற்றையடிப்பாதை.. இருபுறமும் புதர் அங்கிருந்த பாறாங்கல்லில் நின்றுகொண்டு ராம, ராம என்று ஜபித்து நர்த்தனமாடினார் துளசி தாசர்..!

மலை உச்சியில் இருந்து வேகமாக இரண்டு குதிரைகள் வந்தன.!

அதன் மீது இரண்டு ராஜகுமாரர்கள்..துளசிதாசர் எத்தனையோ ராஜாக்களைப் பார்த்திருக்கிறார்..!

ஆனால் குதிரையில் வந்த ராஜகுமாரர்களோ தலையில் தலைப்பாகை.. அதைச் சுற்றி முத்துச் சரங்கள் ...

கொண்டை மீது வெண்புறா இறகுகள் என்று வித்தியாசமாக இருந்தனர்..!

குதிரையில் வந்தவர்கள் தாசரைப்பார்த்துச் சிரித்துக் கொண்டே போய்விட்டனர்..!!

தாசர் தன் மனதில், ஆமாம், பெரிய வீரர்கள் இவர்கள்! என் ராம, இலட்சுமணனுக்கு ஈடாவார்களா?

தலையில் ரத்ன கிரீடமும் மார்பில் தங்கக் கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புறாத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார் என் ராமர் என்று ...

ராமனை தியானித்தவாறே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார்..!

சிறிது நேரம் கழித்து அனுமன் வந்தார். தாசரைப் பார்த்து ராம லட்சுமணர்களைப் பார்த்தீர்களா? என்று கேட்டார்..!

இல்லையே...என்றார் தாசர். என்ன இது,உமது பக்கமாகத் தானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார் அனுமன்..!

ஐய்யோ! வந்தவர்கள் ராம லட்சுமணர்களா? ஏமாந்து போனேனே என்று புலம்பினார் துளசிதாசர்..!

அதற்கு அனுமன், ராமர் உமது இஷ்டப்படிதான் வரவேண்டுமா? அவர் இஷ்டப்படி வரக்கூடாதா?என்று கேட்டார்..!

உடனே தாசர், சுவாமி மன்னிக்க வேண்டும்.ஒன்றும் அறியாத பேதை நான்..!

ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தர்களை..அலட்சியம் செய்து விட்டேன் வாயுகுமாரா..

இன்னும் ஒருமுறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன் என்றார்..!

அதற்கு அனுமன், எல்லாம் சரி, நீர் போய் மந்தாகினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயணப் பாராயணம் செய்யும்..என்றார்...!

அன்றைய தினம் தாசர், ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்பு ராம, லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்று கட்டத்தைப் படித்துக் கொண்டிருந்தார்..!

எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர்..!

வந்தவர்களில் ஒருவன் நல்ல கருப்பு நிறம், மற்றவன் தங்க நிறம் முகத்தில் பத்துப் பதினைந்து நாள் வளர்ந்த தாடி..

சுவாமி, கோபி சந்தனம் உள்ளதா? என்று அவர்கள் கேட்டனர்.. இருக்கிறது...

தருகிறேன் என்றார் தாசர்..!

சந்தனம் கேட்ட இளைஞர்கள், சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை.நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள் என்றனர்..!

[வட இந்தியாவில் கங்கை முதலிய நதிக்கரைகளில் பண்டாக்கள் (சாதுக்கள் உட்கார்ந்து கொண்டு...

நதியில் நீராடி வருபவர்களுக்கு நெற்றியில் திலகம் இட்டு தட்சணை வாங்கிக்கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது ]

அதற்கென்ன, இட்டு விடுகிறேனே என்றார் தாசர். இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோடு சந்தனத்தைக் குழைக்கிறார்..!

அந்த கருப்பு இளைஞன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். தாசர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார்..!

அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் தன்னை மறந்துவிட்டார்..!

அந்த இளைஞன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தைத் தன் கட்டைவிரலில் எடுத்து..

தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான்..!

தன்னுடன் வந்தவனுக்கும் தீட்டினான். அவர்கள் உட்கார்ந்திருந்த படித்துறைக்கு அருகில் ஒரு மாமரம், மரத்தின் மீது இருந்த கிளி கூவியது..!

*சித்ர கூடகே காடபரே பகி*

*ஸந்தக கீ பீர..*

*துளசிதாஸமே சந்தந கிஸே..*

*திலக தேத ரகுபீர...!*

பொருள் : சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம்...

துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார்...

ராமன் திலகமிடுகிறார்..

இதைக் கேட்ட துளசிதாசர் திடுக்கிட்டு சுய நினைவிற்கு வந்தார்..!

சாது அவர்களே! என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டான் அந்தக் கருப்பு இளைஞன்..!

ராமா, உனக்கு இதைவிட பொருத்தமான நாமம் ஏது? என்று கதறிக்கொண்டே..

அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசிதாசர்..!

மறுகணம் ராம, இலட்சுமணரைக் காணவில்லை...!!

"கடவுள் தன்னை முழுவதுமாகச் சரணடைந்த உண்மையான பக்தர்களுக்குக் கலியுகத்திலும் ...

எந்த ரூபத்திலும் காட்சி தருவார்...

இது சத்தியம் என்பதை நிரூபிக்கிறது துளசிதாசரின் சரிதம்

  • 343
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பணி நிமித்தமான நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில் கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும். மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்ப்பீர்கள். பூர்வீக சொத்துக்களை சீரமைப்பீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

ரிஷபம்

எதிர்காலம் தொடர்பான முயற்சிகளில் பொறுமை வேண்டும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மிதுனம்

ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய இடத்திற்கு செல்வதற்கான சூழல்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கடகம்

திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

சிம்மம்

மனதில் தோன்றிய எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வாழ்க்கை துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கன்னி

வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு மேம்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

 

துலாம்

எதிர்பார்த்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அதிரடியான சில செயல்கள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். உறவினர்களிடம் ஒத்துழைப்புகள் மேம்படும். பணி புரியும் இடத்தில் அமைதி ஏற்படும். உழைப்பால் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். பயணம் சார்ந்த விஷயங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

உறவினர்களின் வருகைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

தனுசு

எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். சேவை பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிந்தனைப் போக்கில் சில தெளிவுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். வழக்கு விஷயங்களில் பொறுமையை கையாளவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கும்பம்

உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் சாதகமான சூழல்கள் ஏற்படும். சமுக பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்து செல்லவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மீனம்

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். எதிராக இருந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். காலதாமதமான பணிகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

  • 387
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3.7.2026.

இன்று காலை 10.25 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று காலை 11.19 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.

இன்று மாலை 04.50 வரை விஷ்கம்பம். பின்னர் பிரீதி.

ன்று காலை 10.25 வரை பத்திரை. பின்னர் இரவு 10.41 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று அதிகாலை 05.56 வரை சித்தயோகம். பின்னர் காலை 11.19 வரை மரணயோகம். பிறகு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=572&dpx=2&t=1783051416

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 05.15 முதல் 06.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 393

Good Morning...

  • 393
·
Added a post
  • 462
·
Added joke

இந்தபையன் கிட்னி ஆப்ரேஷன் வேணாம்முன்னு சொல்றான் டாக்டர்…..

இது அவனுக்கே தெரியுது…. நமக்கும் புரியுது…. செலவுக்கு சுத்தமா பணம் இல்லே……எப்படியாவதுஒரு கிட்னியை வித்து பணம் கொடுக்க சொல்லி அவங்க வீட்டுலே கெஞ்சறாங்களே…சிஸ்டர்…நாம என்னா செய்யுறது…

  • 470
  • 465

தெரிந்துக் கொள்வோமா?

  • 528