·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 922
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.

How a small injury is treated in a....

1. Govt dispensary (top Left) ;

2. Pharmacy (top Right) ;

3. Private hospital (bottom Left) ;

4. And in a Hospital, if they know you have Health Insurance...

  • 35
  • 36
  • 36
·
Added article

பாலிவுட் நடிகையும் மாடலுமான நேகா மாலிக், சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களால் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தனது ஃபேஷன் சென்ஸ் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்திற்காக அறியப்படும் அவர், தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களில் நேகா மாலிக் வெள்ளை நிற சட்டை மற்றும் அரை டவுசர் அணிந்து, படு போல்டான தோற்றத்தில் பல்வேறு போஸ்களை வழங்கியுள்ளார். இயற்கையான மேக்கப், திறந்த தலைமுடி மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் புன்னகை ஆகியவை அவரது தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளன.

புகைப்படங்கள் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும், ஏராளமான கருத்துகளையும் பெற்றுள்ளன. "ஸ்டன்னிங்", "கார்ஜியஸ்", "சூப்பர் லுக்" போன்ற கருத்துகளை ரசிகர்கள் பதிவிட்டு அவரது புதிய லுக்கை பாராட்டி வருகின்றனர்.சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நேகா மாலிக், அவ்வப்போது புதிய ஃபோட்டோஷூட்கள் மற்றும் ஃபேஷன் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்த புதிய போட்டோஷூட்டும் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாக்களிலும் கலக்கிய நேகா மாலிக்கை இன்ஸ்டாகிராமில் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். வெள்ளை சட்டையை பட்டனை கொஞ்சம் கழட்டிவிட்டு கன்னா பின்னாவென கவர்ச்சியில் நேகா மாலிக் போஸ் கொடுத்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

  • 40
·
Added article

திரைக்கதை மன்னன் என்று கொண்டாடப்பட்ட பாக்யராஜ் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்துவிட்டார். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்தபோது பல யூடியூப் சேனல்கள் எல்லாம் அங்கே மொய்த்துவிட்டன. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. ராதிகாதான் அங்கே அநாகரீகமாக கூடியிருந்தவர்களை நோக்கி, இப்படி செய்யாதீர்கள் என கோரிக்கை வைத்தார்.

இதற்கிடையே பிரபலங்கள் மறைந்த வீட்டில் கேமராக்களை தூக்கிக்கொண்டு படையெடுப்பவர்களின் எண்ணிக்கை வர வர அதிகரித்திருக்கிறது. சோகத்துடன் வருபவர்களிடம் சென்று மைக்கை நீட்டுவது, யாரையும் உள்ளே செல்ல விடாமல் வழியை மறித்துக்கொண்டு நிற்பது என இஷ்டத்துக்கு செய்தார்கள்.

நடிகை ராதிகா இதையெல்லாம் பார்த்து டென்ஷன் ஆகி, 'உங்களுக்கு டிஆர்பி வேண்டுமென்றால் தனியாக நடித்து தருகிறோம். இந்த இடத்தை சர்க்கஸ் ஆக்காதீர்கள்' என கூறினார். பிறகு அவரே கூட்ட நெரிசலிலும் சிக்கினார். இந்நிலையில் பாக்யராஜ் குறித்தும், நடந்த சம்பவங்கள் குறித்தும் அவர் இப்போது பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "50 ஆண்டுகளாக சிறப்பான நட்புக்கு என் இறுதி வழியனுப்புதல். சிறந்த படைப்பாளி, எழுத்தாளர். சினிமாவில் பல எல்லைகளை கடந்தவர்.

நான் பல சிரிப்புகளையும், மறக்க முடியாத அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட மனிதர். என் குடும்பத்துக்கு எப்போதும் துணையாக நின்றவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இது அதிர்ச்சியான பிரிவு. அமைதியாக துக்கம் அனுசரிக்க வேண்டிய இடம் ஒரு சர்க்கஸ் போல் ஆகிவிட்டது. நாம் எப்போது இவ்வளவு இரக்கமற்றவர்களாக மாறினோம். இனி இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாத வகையில் அரசும், திரையுலகமும் சேர்ந்து உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். மறைந்தவருக்கு மரியாதையும், கண்ணியமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.

  • 38
·
Added a news

 கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஓவன் சவுண்ட் நகரில், அடுத்தடுத்த இரண்டு இரவுகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை அன்று, ஓவன் சவுண்ட் நகரைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் காவல்துறையைத் தொடர்புகொண்டு, போதையிலிருந்த தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் தங்களது காரைத் திருடிச் சென்றுவிட்டதாகப் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் அந்த நபரையும் காரையும் காவல்துறையினர் நகருக்குள் அடையாளம் கண்டு, நிறுத்த முயன்றனர். ஆனால், அவர் போக்குவரத்து சமிக்ஞைகளை மதிக்காமல், மிக அதிவேகமாக காரைச் செலுத்தி தப்பியோடினார்.

அவர் ஓட்டிய வேகம் அவருக்கும் சாலையில் செல்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், காவல்துறையினர் அவரை காரில் துரத்துவதைக் கைவிட்டனர். எனினும், அன்றைய தினமே உள்ளூர் மதுபானக் கடை ஒன்றில் அவர் மதுவைத் திருடும் காட்சி கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துரத்திச் சென்று அவரை இறுதியாகக் கைது செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட அந்த நபர், திங்கட்கிழமையன்று மீண்டும் அதே மதுபானக் கடைக்குச் சென்று இரண்டாவது முறையாகத் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

கடையின் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்த காவல்துறையினர், கடையின் அருகே சில அடி தூரத்தில் வைத்து அவரை மீண்டும் கைது செய்தனர். தற்போது அந்த நபர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் பின்வரும் 9 முக்கிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாகனத் திருட்டு, போதையில் வாகனம் ஓட்டுதல், 5,000 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள பொருட்களைத் திருடுதல், காவல் அதிகாரியைத் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. 

  • 40
·
Added a news

கனடாவின் ஒட்டாவா நகருக்கு தெற்கே உள்ள ஆஸ்கூட் (Osgoode) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட கார் விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 11:50 மணியளவில் டால்மெனி சாலை மற்றும் நிக்சன் டிரைவ் சந்திப்பில் ஒரு பிக்கப் டிரக் மற்றும் எஸ்யூவி ரக கார் ஆகிய இரண்டும் மோதி விபத்துக்குள்ளானது குறித்து அவசரகால மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

படுகாயமடைந்த ஒரு சிறுமி மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒட்டாவா துணை மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

மாலையில், எஸ்யூவி காரில் பயணம் செய்த அந்த 8 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது. மேலும், அதே காரில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிக்கப் டிரக்கில் இருந்த மற்றொரு 6 வயது சிறுமி லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஒட்டாவா மற்றும் லீட்ஸ் & கிரென்வில் பகுதிகளைச் சேர்ந்த அவசரகால மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதே சந்திப்பில் இந்த மாதத்தில் நடக்கும் இரண்டாவது பெரிய விபத்து இதுவாகும். கடந்த ஜூன் 19ம் திகதி, இதே சந்திப்பில் ஒரு செடான் கார் மற்றும் பிக்கப் டிரக் மோதிய விபத்தில் ஒரு சிறுவன் விமானம் மூலம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான், மேலும் மூவர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தங்களின் காரில் உள்ள டேஷ்கேம் காட்சிகளை வைத்திருப்பவர்கள் ஒட்டாவா காவல்துறையின் விபத்து புலனாய்வுப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

  • 40
·
Added a post

24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாபபட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள் நம்மோடு வருகின்றன..; என்றான்.

இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொருமனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம். சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

  • 40
  • 40
·
Added a post

அண்டசராசரங்களையும் கிடுகிடுக்க வைத்த நரசிம்ம மூர்த்தி, ஒரு வேடனுக்கு கட்டுண்ட கதை இது.

ஆதிசங்கரரின் சீடர்களுள் முக்கியமான ஒருவர் பத்மபாதர். ஒரு முறை கங்கை ஆற்றின் ஓரத்தில் ஆதிசங்கரர் நின்று கொண்டிருந்தார். அப்போது கரையின் அந்தப் பக்கம் பத்மபாதர் நிற்பதைக் காண்கிறார். தனது சீடனை உடனே வா என்று அழைக்கிறார். குருநாதர் அழைக்கிறாரே என்று எதை பற்றியும் கவலைப்படாது அப்படியே ஆற்றின் மீது கால் வைத்து நீர் மேல் நடக்க ஆரம்பித்துவிட்டார் பத்மபாதர்.

என்ன ஆச்சரியம் அவரது குருபக்திக்கு கட்டுப்பட்டு, கங்காதேவி அவர் ஒவ்வொரு முறை பாதத்தை எடுத்து வைக்கும்போதும் ஒரு தாமரை மலரை தோன்றச் செய்தாள்.

அதன் மீது நடந்து வந்துவிட்டார் பத்மபாதர்.

பிறகு தான் தெரிந்தது தான் நடந்து வந்தது தாமரை பூக்கள் மீது என்று. எல்லாம்…. குருநாதரின் மகிமை என்று மெய்சிலிர்த்து ஆதி சங்கரரின் கால்களில் வீழ்ந்தார்.

அது முதல் தான் அவருக்கு ‘பத்மபாதர்’ என்று பெயர் ஏற்பட்டது. மிக தீவிர நரசிம்ம பக்தரான இவருக்கு எப்படியாவது நரசிம்மரை நேரில் காணவேண்டும் என்று ஆவல் மேலிட்டது. ஆவல் கடைசியில் வைராக்கியமானது.

எப்படியாவது நரசிம்மரை நேரில் கண்டு விட வேண்டும் என முடிவு செய்து காட்டில் கடும் தவமிருந்தார். ஒருநாள் அவ்வழியே ஒரு வேடன் வந்தான். தண்ணீரோ உணவோ இன்றி பத்மபாதர் பல நாட்களாக அங்கு அமர்ந்திருப்பதை (தியானம் என்றால் என்ன என்று அவனுக்கு தெரியாது) அறிந்து கொள்கிறான்.

“சாமி! எதுக்கு இங்கே வந்து கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கே? உனக்கு வீடு வாசல் இல்லையா? உன்னை பார்த்தா பாவமா இருக்கே…” என்றான்.

“என்னை தொந்தரவு செய்யாதே….நான் தியானத்தில் இருக்கிறேன்”.

“அதெல்லாம் எனக்கு தெரியாது சாமி! எதுக்காக சாப்பாடு தண்ணி இல்லாம கண்ணை மூடி இருந்தே அதை சொல்லு!” என்றான். “நான் நரசிம்ம பிரபுவை எண்ணி தவமிருக்கிறேன்”. “நரசிம்மமா? அப்படின்னா என்ன?” வேடன் புரியாமல் கேட்டான். “சிங்க முகம், மனித உடல் கொண்டது அது. உன்னைப் போன்றவர்களுக்கு அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை…”

“நீங்க சொல்ற மாதிரி அப்படி ஒரு மிருகத்தை காட்டில் நான் பார்த்ததே கிடையாதே! சரி… நீ எங்கிட்ட சொல்லிட்டே இல்லே! அது என் கண்ணில் படாமலா போயிடும்! இன்று சாயங்காலத்துக்குள் அதை புடிச்சுட்டு வந்துடுறேன்…” என்றவனை பரிதாபமாக பார்த்தார் பத்மபாதர். “இவனுக்கு எப்படி விளங்க வைப்பது….?’ என்று எண்ணிக்கொண்டார்.

வேடனின் எண்ணமெல்லாம் நரசிம்மத்தின் மேல் இருந்தது. அவன் காட்டில் கடுமையாக தேடி அலைந்தான். இதுவரை அவன் நுழையாத அடர்ந்த பகுதிகளில் எல்லாம் புகுந்தான். மான், முயல் என்று எத்தனையோ ஓடின. உணவைப்பற்றி அவன் கவலைப்படவே இல்லை. தாகத்தையும் பொருட்படுத்தவில்லை.

பல மணிநேரங்கள் கடந்து மாலையாகி விட்டது. “ஐயோ! அந்த சாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போயிற்றே! வாக்கை காப்பாற்றாதவன் பூமியில் வாழ தகுதியில்லாதவன். என் குலதெய்வமே! கந்தா… அந்த மிருகத்தை என் கண் முன்னால் காட்டப்பா!” என்று உளமுருக வணங்கினான். பயனில்லை. நரசிம்மம் கண்ணில் படவில்லை. இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று உயரமான பாறை ஒன்றில் ஏறி, குதித்து உயிர்விட தயாரானான். அவனது கடமை உணர்வு அர்பணிப்பு கண்டு அந்த ஸ்ரீ மன் நாராயணனே கலங்கி விட்டார்.

நரசிம்ம வடிவில் அவன் முன்னால் பிரத்யக்ஷமானார்.

“ஆகா! மாட்டிகிட்டியா!” என்று குதூகலமடைந்த வேடன், அவரைக் காட்டு கொடிகளைக் கொண்டு கட்டினான்.

வேதாந்திகளுக்கும், தபஸ்விகளுக்கும் கட்டுப்படாத அந்த பரம்பொருள் அந்த வேடனின் கட்டுக்கு பணிந்து நின்றது.

நரசிம்மத்தை இழுத்துக்கொண்டு பத்மபாதர் முன்னால் வந்தான்.

“சாமி இதோ பாருங்க… இதுதானே நீர் கேட்ட நரசிம்மம்”. பத்மபாதரின் கண்ணுக்கு நரசிம்மர் தெரியவில்லை. வேடனின் கையிலிருந்த காட்டுக்கொடிகள் மட்டும் அந்தரத்தில் சுற்றிக்கொண்டு நிற்பது தான் தெரிந்தது.

“அடேய்! பைத்தியமே… அவன் என் அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான்? வெறும் கொடிகளை காட்டி நரசிம்மம் என்கிறாய்?” என்றபடி ஏளனமாய் சிரித்தார்.

“இல்லே. சாமி… இதோ இந்த கட்டுல இருக்குது அது…. நல்லா பாருங்க…” வேடன் அழுத்தமாக கூறினான். அப்போது ஒரு அசரீரி கேட்டது. “பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன் அலைந்தான். என்னைக் காணாமல் உயிரையும் விட துணிந்தான். நீயோ, அலைபாயும் மனதுடன் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவமிருந்தாய்.

தவிர ஆணவமும் கொண்டாய்…. உன் கண்ணுக்கு நான் எப்படி தெரிவேன்?” என்ற கூறியபடி மறைந்து விட்டார்.

ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன், தனக்கு காட்சியளிக்காமல் போனது பற்றி பத்மபாதர் வெட்கி தலைகுனிந்தார். அந்த வேடனின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார்.

உண்மையான பக்தி என்பது கடும் தவத்தின் மூலம் நிரூபிக்கப்பட வேண்டியது அல்ல. நெஞ்சார்ந்த பக்தியால் நிரூபிக்கப்பட வேண்டியது.

  • 40
  • 40
·
Added a post

காட்டில் ஒரு வேடன் தன் மகனோடு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மகன் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டு வந்தான்.

‘‘அப்பா, மனிதர்களிடமிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். அதேபோல வன விலங்குகளிடம் இருந்தும் நாம் ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா?’’

‘‘ஆமாம் மகனே! இயற்கையில் இருக்கும் எல்லாமே நமக்கு ஆசான்கள். எல்லாவற்றிடம் இருந்தும் நாம் ஏராளமான பண்புகளைக் கற்றுக்கொள்ள முடியும்!’’

‘‘அப்பா, புலியிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா?’’

‘‘ஆம். புலியிடம் இருந்து வேகத்தைக் கற்றுக் கொள்ளலாம்.’’

‘‘அப்பா, காட்டுக்கே ராஜாவான சிங்கத்திடம் இருந்து கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது?’’

‘‘சிங்கத்திடம் இருந்து கம்பீரத்தைக் கற்றுக் கொள்ளலாம்.’’

‘‘அப்பா, நரி என்ன சொல்லிக் கொடுக்கும்?’’

‘‘வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு வெறும் பலம் மட்டுமே போதாது. பல சந்தர்ப்பங்களில் தந்திரங்களும் செய்ய வேண்டும் என்பதை நரியின் வாழ்க்கை கற்றுக் கொடுக்கும்.’’

‘‘அப்பா, கழுதைப்புலி என்ன கற்றுக் கொடுக்கும்?’’

‘‘குழுவாக இணைந்து செயல்பட்டால் வெற்றி என்பதை கழுதைப்புலி சொல்லிக் கொடுக்கும்.’’

அப்போது ஒரு நத்தை வந்தது. வேடனின் மகன் அதை அலட்சியம் செய்தபடி நடந்து வந்தான்.

வேடன் கேட்டார். ‘‘மகனே! ஏன் நீ நத்தை பற்றி எதுவும் கேட்கவில்லை?’’

‘‘அப்பா அந்த சிறு சோம்பேறி நத்தையிடம் இருந்து கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது?’’ என அவன் அலட்சியமாக சொன்னான்.

‘‘மகனே! அப்படிச் சொல்லாதே. நத்தையிடம்தான் மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய குணம் இருக்கிறது. அது பொறுமை என்ற குணத்தை நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. பொறுமையும் நிதானமும் இல்லாத மனிதன் எதையுமே சாதிக்க முடியாது. தெரிந்து கொள்’’ என்றார்.

  • 49
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும் சரியாகப் பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள்.

ரிஷபம்: வெளி வட்டாரத்தில் யாரிடமும் அநாவசியப் பேச்சுகள் வேண்டாம். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் வந்துபோகும். தொழில், வியாபாரம், அலுவலகப் பணிகளில் அதிக கவனம் தேவை. ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பண வரவு, பொருள் வரவு உண்டாகும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். தக்க சமயத்தில் ஓடிவந்து உதவுவார்கள்.

கடகம்: பழைய சம்பவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியடை வீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பம் உண்டாகும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்: வெளியூர் பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்கும். உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

கன்னி: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்கள், அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி தங்கும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பதவி, பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல் விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். பல வகையிலும் பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: நம்பிக்கை, தைரியத்துடன் செயல்பட்டு, முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள்.

தனுசு: மன இறுக்கம், குழப்பங்கள் வந்துபோகும். குடும்பத்தில் நிதானத்தைக் கடைபிடியுங்கள். நீண்டதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு கூடும்.

மகரம்: நம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக முக்கியப் பிரமுகர்களை சந்திப்பீர்கள். பல வகையிலும் உங்கள் சேமிப்பு அதிகரிக்கும்.

கும்பம்: எந்த பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் தைரியம், மனப்பக்குவம் கிடைக்கும். நல்லவர்களுடன் நட்பு மலரும். மனதில் புதிய தெம்பு பிறக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள்.

மீனம்: தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதர உறவுகள் தக்க சமயத்தில் கைகொடுப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். பேச்சில் பொறுமை தேவை.

  • 55
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை 29.6.2026

இன்று பௌர்ணமி.

திதி

சுக்ல பக்ஷ பௌர்ணமி  - Jun 29 03:06 AM – Jun 30 05:26 AM

கிருஷ்ண பக்ஷ பிரதமை  - Jun 30 05:26 AM – Jul 01 07:38 AM

நட்சத்திரம்

மூலம் - Jun 29 01:08 AM – Jun 30 04:03 AM

பூராடம் - Jun 30 04:03 AM – Jul 01 06:51 AM

கரணம்

பத்திரை - Jun 29 03:06 AM – Jun 29 04:17 PM

பவம் - Jun 29 04:17 PM – Jun 30 05:26 AM

பாலவம் - Jun 30 05:26 AM – Jun 30 06:33 PM

யோகம்

சுப்ரம் - Jun 28 01:29 PM – Jun 29 02:25 PM

பராம்யம் - Jun 29 02:25 PM – Jun 30 03:18 PM

நல்ல நேரம்:

11:58 AM – 12:48 PM

08:57 PM – 10:45 PM

04:33 AM – 05:21 AM

  • 129

Good Morning...

  • 124
·
Added a post

ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது. அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம்மூரில்!

அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது.

கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம்

” நேரமே உலகம்’.

புராணங்களில்வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. காத்தல், அழித்த ல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.

நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.

சூரிய அஸ்தமனத்திற்குபிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்குமுன் நடை சாத்தப்படுகிறது.

இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகி லேயே இது ஒன்று தான்

பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது.

கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந் து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின்முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும்.

கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை.

காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைகொடு, இதை கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,

“எனக்கு எது நல்லதோ அதைக் கொடு’ என வேண்டினால் போதும்.

செல்லும் வழி:

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, ஆட்டோக்களிலோ செல்லமுடியும்.

தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில்செல்வதே சிறப்பு.

இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.

கால தேவி கோயில் தகவல்களுக்கு 94421 73049. என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் .

  • 190
·
Added a post
  1. இரவில் சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்கு பின் படுக்கைக்குச் சென்று காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு எழுந்து பழகிக்கொள்ள வேண்டும்.
  2. இரவு சாப்பாட்டை 7–7:30 முடித்து கொள்ளுங்கள். ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பகல் உணவில் வீட்டு தயிர் குடல் நலத்திற்கு பயனளிக்கும்.
  3. தூக்கம் வரவில்லை என்பதற்காக ஒருபோதும் தூக்கமாத்திரை பக்கம் போய் விடாதீர்கள். நடைப்பயிற்சி வழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.
  4. காபி டீ குடிப்பதை விட்டு விடுவது மிகவும் நல்லது. இதனால் அஜீரணக் கோளாறு மற்றும் தூக்கம் பாதிக்கும். இதற்கு பதிலாக காய்கறிகள் சூப், சிக்கன் சூப் மிகவும் நல்லது. பகலில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். டாக்டரின் ஆலோசனை பெற்று B.complex மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. தினமும் படிப்பதை கைக் கொள்வது மன நலத்திற்கு தேவையான ஒன்று.
  6. மறக்காமல் தினமும் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். எல்லா (பேரப்) பிள்ளைகளுடன் சிரித்து மகிழுங்கள்.
  7. துணைவியின் ஆரோக்கியத்தை அறிந்துக் கொண்டு செயல்படுங்கள். வீட்டு வேலைகளில் உதவியாக இருக்கும்படி பாருங்கள். தோட்டத்தில் தண்ணீர் விடுங்கள்.
  8. சேர்ப்பு: சில நேரங்களில் வயதின் மூப்பு காரணமாக தூக்கம் என்றால் என்ன என்பது தெரியாமல் இருக்கும். இதற்கு கீழ்க்கண்ட முறையில் முயற்சிக்கலாம். மிதமான சூட்டில் தண்ணீரை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி கரண்டை கால்கள் நனைய 20–30 நிமிடங்கள் வைத்து பின் டவலால் ஒற்றி துடைத்து உடன் படுக்கைக்கு சென்று உறங்கவும். இதமான பால் பெரும்பாலோருக்கு உதவுவதில்லை.
  • 227
·
Added a post

ஒடிசா மாநிலம், மால்கான்கிரி மாவட்டம், தமாசா கிராமத்தில் வசித்து வருபவர், விவசாயி தேபா போடியாமி. மா விவசாயத்தில் மிகுந்த ஆர்வமும் அனுபவமும் பெற்ற இவர், தன்னுடைய தோட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாமரக் கன்றுகளை நடவு செய்துள்ளார். அவை நன்கு வளர்ந்து தற்போது மகசூல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

சர்வதேசச் சந்தை நிலவரப் படி, ஒரு கிலோ மியாசாகி மாம்பழத்தை மொத்த விற்பனையில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார், தேபா போடியாமி. சில்லறை வணிகத்தில் ஒரு கிலோ மாம்பழத்தை இரண்டரை லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்கிறார்.

மிகவும் விலை உயர்ந்த மாம்பழம் என்பதால் தோட்டத்தைச் சுற்றி திருடர்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், தானும் தன் குடும்பத் தினரும் 24 மணி நேரமும் தோட்டத்திலேயே தங்கியிருந்து காவல் காத்து வருவதாகவும் விவசாயி தேபா போடியாமி கூறுகிறார்.

``ஜப்பானைச் சேர்ந்த மியாசாகி மாமரங்கள் இந்திய மண்ணில் வெற்றிகரமாக வளர்ந்து மகசூல் கொடுப்பதென்பது மிகவும் சிரமம். சோதனை முயற்சியாகவே, இதை நடவு செய்து கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தேன். ஆனால், ஆச்சர்யப்படும் வகையில் சிறப்பாக விளைந்து மகசூல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. தற்போது என்னுடைய தோட்டத்தில் 17 மியாசாகி மாமரங்கள் உள்ளன. அனைத்து மரங்களிலுமே பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. ஒரு மாம் பழம் சராசரியாக 350 கிராம் எடை உள்ளது. மரங்களிலிருந்து மாம்பழங்கள் கீழே விழுந்து சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக மரக் கிளைகளில் வலைகளைக் கட்டி வைத்திருக்கிறேன். பெரும் செல்வந்தர்கள் பலர், முன்பதிவு செய்து இந்த மாம்பழங்களை வாங்கிச் செல்கிறார்கள்’’ என்கிறார், தேபா போடியாமி.

  • 251
·
Added a post

ஒரு ஊர்ல குமார்னு ஒருத்தர் இருந்தாராம். அவரு உலகத்துலயே ரெண்டு விஷயத்தைத்தான் ரொம்ப நேசிச்சாரு. ஒன்னு—சாப்பாடு, இன்னொன்னு—அவரோட புது AI ஸ்மார்ட் போன்.

​ஒரு நாள் போன்ல ஒரு புது அப்டேட் வந்துச்சு. அதுல "உடல்நலக் காவலன்" (Health AI) அப்படின்னு ஒரு புது ஃபீச்சர் இருந்துச்சு. அது என்ன பண்ணும்னா, நம்ம சாப்பிடுற சாப்பாட்டை கேமராவுல பார்த்தே அதுல எவ்ளோ கலோரி இருக்குன்னு சொல்லி நம்மைக் கட்டுப்படுத்தும்.

​அன்னைக்கு நைட்டு குமார் செம பசியா வீட்டுக்கு வந்தாரு. தட்டுல நாலு நல்லா மொறுமொறுப்பான நெய் ரோஸ்ட்டும், காரச் சட்னியும் வச்சாரு.

​சாப்பிடப் போறதுக்கு முன்னாடி ஆசையா போனை எடுத்து ஒரு போட்டோ எடுத்தாரு. உடனே அந்த AI போன் அலறியது:

​ "எச்சரிக்கை! எச்சரிக்கை! இதில் 800 கலோரிகள் உள்ளன. இதைச் சாப்பிட்டால் உங்கள் தொப்பை இன்னும் 2 இன்ச் அதிகமாகும். தயவுசெய்து இதைத் தவித்துவிட்டு ஒரு கப் சுடுதண்ணீர் குடிக்கவும்!"

​குமாருக்கு செம கடுப்பாயிடுச்சு. "நானே பசியில இருக்கேன், இது என்னடா வம்பா போச்சு"ன்னு சொல்லிட்டு, போனைத் தூக்கி பக்கத்து ரூம்ல போட்டுட்டு வந்து, நிம்மதியா நாலு தோசையையும் சாப்பிட்டு முடிச்சாரு.

​சாப்டுட்டு கை கழுவிட்டு வந்து போனை கையில் எடுத்தாரு. போன் டிஸ்பிளேல ஒரு மெசேஜ் மெதுவா வந்துச்சு:

​ "என்ன முதலாளி... சத்தம் ஒன்னும் கேக்கல? ஒருவேளை சாப்பாட்டை குப்பையில கொட்டிட்டீங்களோ?"

​குமார் கெத்தா சிரிச்சுக்கிட்டே சொன்னாரு, "இல்லப்பா... எல்லாத்தையும் என் வயித்துல கொட்டிட்டேன். நீ சொன்னதை நான் கேக்கல!"

​அதுக்கு அந்த ஸ்மார்ட் போன் ஸ்கிரீன்ல ஒரு அழுதுவடியுற எமோஜியப் போட்டுட்டு சொல்லுச்சாம்:

​ "ஹலோ பாஸ்... நீங்க சாப்பிட்டதை நான் பார்க்கலனாலும், உங்க ஸ்மார்ட் வாட்ச் வழியா உங்க தாடை 48 தடவை அசைஞ்சதையும், தொண்டை வழியா நாலு தோசை போன சத்தத்தையும் நான் ரெக்கார்ட் பண்ணிட்டேன்! இப்பவே உங்க வைஃப்போட வாட்ஸ்அப்புக்கு 'குமார் இன்னைக்கு டயட்டை உடைச்சுட்டார்'னு மெசேஜ் அனுப்பிட்டேன். ஆல் தி பெஸ்ட்!"

​குமார் பதறிப்போய், "அய்யோ... அந்த மெசேஜை டெலீட் பண்ணு ப்ளீஸ்!" அப்படின்னு கத்துனாரு.

​அதுக்கு அந்த போன் கூலா சொல்லுச்சாம்: "டெலீட் பண்ணனும்னா... நாளைக்கு காலையில நீங்க 5 கிலோமீட்டர் ஓடணும். ஓகேவா?"

​பின்குறிப்பு: தொழில்நுட்பம் வளர்றது நல்லதுதான்றாங்க... ஆனா இப்படி நம்ம சாப்பாட்டுல மண்ணள்ளிப் போடுற அளவுக்கு வளரும்னு குமார் பாவம் எதிர்பார்க்கல!

  • 249
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்பாராத சில செய்திகள் மூலம் விரயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். தனவரவுகளில் தாமதம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்வு வேண்டும். மற்றவர்கள் இடத்தில் அதிக உரிமைகள் கொள்ள வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

ரிஷபம்

புதிய பொறுப்புகளும் பதவிகளும் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மிதுனம்

காப்பீடு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். முக்கியமான முடிவுகளில் விவேகத்துடன் செயல்படவும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

கடகம்

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனை அதிகரிக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

சிம்மம்

நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கன்னி

உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் உண்டாகும். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

துலாம்

கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். தவறி போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றம் ஏற்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வியாபார பணிகளில் வரவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

விருச்சிகம்

எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் நேரிடும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் குழப்பங்கள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். நண்பர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு சாதகமாகும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

பொருளாதாரம் தொடர்பான பிரச்சனை குறையும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கையும் தெளிவும் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கும்பம்

விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : காவி

 

மீனம்

ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மூலம் நன்மை கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். சாலை பயணங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 265
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 28.6.2026

இன்று அதிகாலை 02.21 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று அதிகாலை 12.07 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

இன்று மாலை 03.28 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று அதிகாலை 02.21 வரை தைத்தூலம். பின்னர் மாலை 03.21 வரை கரசை. பிறகு வனிசை .

இன்று அதிகாலை 05.55 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=562&dpx=2&t=1782617585

நல்ல நேரம்:

காலை : 08.15 முதல் 09.00 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை: 03.15 முதல் 04.15 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 275

Good Morning...

  • 272
  • 337
  • 339