- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
ராமாயணத்தில் அனுமன் தன் பலத்தையே மறந்து நின்றபோது, ஜாம்பவான் அவனுக்கு அவனது ஆற்றலை நினைவுபடுத்துகிறார். அதன் பிறகு அனுமன் எப்போதுமே "ராம நாமம்" என்ற ஒலியை உச்சரித்துக் கொண்டேதான் கடலைத் தாண்டுவது முதல் போர்க்களம் வரை அசாத்தியமான சாதனைகளைச் செய்தார்.
இதை வெறும் பக்தி என்று மட்டும் பார்க்காமல், நவீன ஒலியியல் மற்றும் நரம்பியல் கோணத்தில் பார்த்தால் வியக்கத்தக்க உண்மைகள் விளங்கும்!
ஒலியின் அதிர்வுகள்:
நாம் ஒரு குறிப்பிட்ட வார்த்தையைத் திரும்பத் திரும்ப உச்சரிக்கும்போது, அது நம் உடலுக்குள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையை உருவாக்குகிறது. 'ரா' மற்றும் 'ம' என்ற ஒலிகள் இணையும்போது, அவை மனித உடலின் மிக முக்கிய ஆற்றல் மையங்களான மணிபூரக மற்றும் அனாகத சக்கரங்களைத் தூண்டுகின்றன. இதை நவீன அறிவியல் 'Vibrational Medicine' அல்லது ஒலி சிகிச்சை என்கிறது.
எண்டோர்பின் மற்றும் மன அமைதி:
"ராம" என்ற மந்திர ஒலியைத் தொடர்ந்து உச்சரிக்கும்போது, நம் மூளையில் ஆல்ஃபா அலைகள் உருவாகின்றன. இது உடலுக்குள் இருக்கும் அழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோனான 'கார்டிசோல்' அளவைக் குறைத்து, மகிழ்ச்சியையும் மனவலிமையையும் தரும் 'எண்டோர்பின்' சுரப்பைத் தூண்டுகிறது. அனுமனுக்குள் இருந்த எல்லையற்ற ஆற்றலும், பயமின்மையும் இந்த அசாத்தியமான மன ஒருமுகப்படுத்தலால் உருவானதுதான்.
"நாதத்தின் உள்ளே நலிந்தெழுஞ் சோதியை" என்று சித்தர்கள் ஒலியின் ஆற்றலைப் பற்றிப் பாடியுள்ளனர். ஓங்காரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த ஒலிகளை முறைப்படி உச்சரிக்கும்போது, அது உடலின் ஒவ்வொரு செல்லையும் புத்துயிர் பெறச் செய்கிறது. சுயமரியாதையும், தெளிந்த புத்தியும் கொண்ட ஒரு மனிதனுக்கு அவனது சொந்த மனதின் ஒலியே மிகப்பெரிய ஆயுதமாக மாறும்.
புராணங்கள் காட்டும் மந்திரங்கள் என்பவை வெறும் வார்த்தைகள் அல்ல; அவை மனித உடலையும் மனதையும் உச்சக்கட்ட ஆற்றலுக்குக் கொண்டு செல்லும் மிகத் துல்லியமான ஒலியியல் சூத்திரங்கள்.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் மருந்து நிறுவன அதிபர் வீரேன் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் கடந்த 12 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
அந்த வகையில் நீடா அம்பானி திருமணத்தின் முந்தைய கொண்டாட்டத்தின் போது அவர் அணிந்திருந்த ஆரம் பெரிய மரகத பச்சை கல் பதிக்கப்பட்ட நெக்லஸ் விருந்தினர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த ஆரத்தின் விலை சுமார் ரூ 600 கோடி என்கிறார்கள். அது போல் நீடா அம்பானி ஒரு வைர மோதிரத்தையும் அணிந்திருந்தார்.
இந்த மோதிரம் முகலாயர் காலத்தைச் சேர்ந்தது. இதன் விலையும் ரூ 55 கோடி இருக்கும். நீடா அம்பானி அணிந்திருந்த ஆரம் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களை மட்டும் கவராமல் அதை பார்த்தவர்களையும் கவர்ந்துள்ளது. இதனால் இந்த நகையின் கவரிங்கை ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கல்யாணி கவரிங் நகை கடை தயாரித்துள்ள நகை விற்பனைக்கு வந்துள்ளது.
அந்த நகையின் விலை ரூ 178 மட்டுமே. நீடா அணிந்திருந்ததை போல் இருந்தது. என்ன வித்தியாசம் என்றால் அவர் அணிந்திருந்தது வைரம், இவர்கள் தயாரித்திருப்பது சாதாரண கல். அதிலும் கலர் கலராக நிறைய உள்ளன. 1980களில் நதியா கம்மல், நதியா வளையல், நதியா கொண்டை என பேமஸ் ஆனதை போல் நீடாவின் ஆரமும் தற்போது பிரபலமடைந்துள்ளது.
அது சரி 600 கோடியில் நெக்லஸ் அணிய நாம் எல்லாம் அம்பானி குடும்பமா? என்ன? ஆமா 600 கோடிக்கு எத்தனை பூஜ்யம்?
ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியில், தொலைதூர இடத்திற்கு வியாபாரம் செய்வதற்காக ஒரு வணிகர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் நம்பிக்கைக்குரிய ஆண்கள் குழுவும் பயணம் செய்து கொண்டிருந்தது. ஒருமுறை, அந்த நம்பிக்கைக்குரியவர்களில் சிலர், வணிகர் சாலையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அவரிடமிருந்து எல்லாப் பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிடுவோம் என்று முடிவு செய்தனர். அவர்கள் வாய்ப்புக்காகக் காத்திருந்தனர். வாய்ப்பு வந்தது.
வணிகர் வியாபார விஷயமாக வெளியே சென்றார். அந்த வேலைக்காரர்கள் குழுவும் அவருடன் சென்றனர். அந்த நேரத்தில், விஷயம் ஒரு பயணமாகிவிட்டது. மதியம் மிகவும் சூடாக இருந்தது, அவர்கள் ஒரு இடத்தில் தஞ்சம் புகுந்தனர். வணிகர் ஒரு மரத்தின் நிழலில் தூங்கிவிட்டார். இந்த நேரத்தில், யாரோ "பாம்பு பாம்பு!" என்று கத்தினார். வணிகரின் தூக்கம் கலைந்தது. தூரத்தில் அது ஒரு நாகப்பாம்பு என்பதைக் கண்டார். பாம்பை காயப்படுத்த வேண்டாம் என்று மக்களிடம் கூறினார், சிறிது நேரம் கழித்து பாம்பு ஏற்கனவே அதன் வழியில் எழுந்திருப்பது தெரிந்தது. அவரது ஊழியர்கள் வணிகரிடம் - நீங்கள் பாம்புகளுக்கு எப்படி பயப்படவில்லை? வணிகர் எதுவும் சொல்லவில்லை.
வணிகரின் பயணம் மீண்டும் தொடங்கியது. இரவில், அவர் ஒரு தர்மசாலையில் (சத்திரத்தில்) தூங்கினார். கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்த ஊழியர்கள், வணிகரின் அலறல் சத்தத்தால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அந்த நேரத்தில், வணிகரின் ஆட்கள் சிலர் அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர்.
வியாபாரி அவர்களிடம், - நான் ஏன் பாம்புகளுக்கு பயப்படவில்லை என்று கேட்டீர்கள்! இப்போது கேளுங்கள். பாம்புகள் விஷம் கொண்டவை என்பது அனைவருக்கும் தெரியும். எனவே அவற்றிலிருந்து தப்பிப்பது எளிது. எனவே அவற்றுக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் மனிதர்கள் தங்களுக்குள் விஷத்தை வைத்துக்கொண்டு அதை இனிமையாக வைத்திருப்பதால், அவர்கள் பயப்பட வேண்டும். இப்போது அதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
தர்மர் ராஜசூய யாகம் செய்யத் திட்டமிட்டபோது, யாகத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வரவும், மற்ற நாட்டு மன்னர்களுக்கு அழைப்பு விடுக்கவும் தனது தம்பிகளை அனுப்பினார். அப்போது அங்கிருந்த ரிஷிகள், "புருஷாமிருகம்" என்று அழைக்கப்படும் அபூர்வ விலங்கு ராஜசூய யாகத்திற்கு வர வேண்டியது அவசியம் என்றும், அது அவ்விடம் உலவினால் மட்டுமே யாகம் முழுமையடையும் என்றும் அறிவுரை கூறினார்கள். தர்மர் இதற்கு முன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.
கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே எழுந்து புருஷாமிருகம் பற்றி விவரித்தார். புருஷாமிருகம் என்பது புலியின் உடலும் மனித தலையும் கொண்ட ஒரு விசித்திரமான மிருகம். அது மிக வேகமாக ஓடக்கூடியது, (சில கதைகளில் சிங்க உடலும் மனித முகமும் என்று உள்ளது) அதே சமயத்தில் சிவபக்தியில் சிறந்தது. குபேர வனத்தைப் பாதுகாத்து வரும் அந்த மிருகத்தைப் பிடித்து வருவது மிகவும் கடினமான காரியம் என்று எச்சரித்த கிருஷ்ணர், "பீமா! நீதான் இந்தப் பணிக்குச் சரியான ஆள்" என்று கூறி சில கற்களை பீமனிடம் கொடுத்தார். நேரம் வரும்போது அவற்றை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற ரகசிய அறிவுரையையும் அவனிடம் கூறினார். ரிஷிகளும் கிருஷ்ணரும் பீமனுக்கு ஆசி வழங்கி அவனை வனத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பீமன் காட்டிற்குச் சென்று புருஷாமிருகத்தைத் தேடி பல இடங்களில் அலைந்து, கடைசியாக அதைக் கண்டுகொண்டான். அந்த மிருகத்தை யாகத்திற்கு வருமாறு அவன் அழைத்தான். ஆனால் அந்த மிருகமோ, இந்த காடு தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இங்கு உள்ள அனைத்தும் தனக்கே சொந்தம் என்றும் கர்ஜித்தது. "இப்போது நீ இங்கே நுழைந்துவிட்டபடியால் நீயும் எனக்குச் சொந்தம், உன்னை நான் சாப்பிடப்போகிறேன்" என்று பீமனை மிரட்டியது. பீமன் தான் வந்த நோக்கத்தைக் கூறி, அதனை மீண்டும் பணிவுடன் அழைத்தான்.
புருஷாமிருகம் பீமனுடன் ஒரு ஒப்பந்தம் செய்தது. இருவரும் ஓட்டப்பந்தயம் செய்திடத் தீர்மானித்தனர். "பீமா! நம் இருவரில் யார் காட்டின் எல்லையை அடைந்து நாட்டிற்குள் முதலில் பிரவேசிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர் ஆவார். நீ முதலில் சென்றால் நீ அழைத்தபடி நான் யாகத்திற்கு வருவேன். ஒருவேளை நான் வெற்றி பெற்றால் உன்னை உயிரோடு விழுங்கிவிடுவேன்" என்றது. பீமனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.
பீமன் ஓடத்தொடங்கிச் சில நாழிகைகள் கழித்தே புருஷாமிருகம் ஓடத் தொடங்கியது. பீமன் நான்கு காத தூரம் கடந்த நிலையில் தான் புருஷாமிருகம் தன்னுடைய முதல் அடியையே எடுத்து வைத்தது. தன் வேகத்தில் அபார நம்பிக்கை கொண்டிருந்த அந்த மிருகம், மிக எளிதாக அசுர வேகத்தில் ஓடி பீமனை நெருங்கியது.
அந்தச் சமயத்தில் கண்ணனின் அறிவுரைப்படி தான் வைத்திருந்த கற்களில் ஒன்றை பீமன் தரையில் போட்டான். அங்கே ஒரு சிவலிங்கம் தோன்றியது. சிவபக்தியில் சிறந்த புருஷாமிருகம் அங்கேயே நின்று அந்த லிங்கத்தை வணங்கியது. (அனுமன் காட்டில் தோன்றி தனது வாலில் இருந்து முடிகளை பீமனிடம் அளித்ததாகவும், ஒவ்வொருமுறை மிருகம் தன்னை நெருங்கும் போதும் அந்த முடிகளை பீமன் தறியில் போட்டதும் அங்கே சிவலிங்கம் தோன்றியதாகவும் சில பதிப்புகளில் உள்ளது)
பிறகு மீண்டும் அது ஓடத் தொடங்கியது. பீமனைப் பிடிக்கும் நேரத்தில் மீண்டும் அவன் ஒரு கல்லைப் போட்டான். இவ்வாறாக அந்த மிருகம் தன்னை நெருங்கும் போதெல்லாம் ஒவ்வொரு கல்லாகப் போட்டு, இறுதியாகக் காட்டின் எல்லையை அடையப் போகும் நேரத்தில் மிருகம் அவனின் காலைப் பிடித்துக்கொண்டது. அப்போது பீமனின் ஒரு கால் காட்டின் எல்லையிலும், மறு கால் நகரத்தின் எல்லையிலும் இருந்தது.
"நீ காட்டைப் கடப்பதற்குள்ளாகவே நான் உன்னைப் பிடித்துவிட்டேன், அதனால் நீ எனக்குத்தான் சொந்தம்" என்று மிருகம் சொல்ல, "இல்லை, என்னுடைய ஒரு கால் நகர எல்லையில் உள்ளது, நான் வெற்றி பெற்றேன்" என்று பீமன் சொல்ல, இருவரும் நீதி வேண்டி தர்மரிடம் சென்றனர்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட தர்மர் சற்று யோசித்தார். பீமன் தன் தம்பியாக இருந்தாலும் அவர் நீதிநெறிப்படி தீர்ப்பு வழங்கினார். "புருஷாமிருகமே! பீமனின் ஒரு கால் எல்லைக்கு வெளியில்தான் பிடிபட்டது. உடல் ரீதியாகப் பார்த்தால் அவனது உடலின் சரிபாதி பாகம் உனக்கே சொந்தம். எனவே நீ காட்டின் எல்லையில் பீமனின் கால் இருந்த அந்தப் பாதியை மட்டும் உண்ணலாம், மற்றப் பாதியை நீ தொடக்கூடாது" என்றார்.
புருஷாமிருகம் சிரித்துக்கொண்டே பீமனை உண்ண நெருங்கிய போது சகாதேவன் குறுக்கிட்டான். "அண்ணா! நீதிப்படி ஒரு பாதி மட்டுமே மிருகத்திற்குச் சொந்தமானது. அதன்படி பார்த்தால், பீமன் அண்ணாவை மிருகம் உண்ணும்போது அவரின் ஒரு பாகத்தில் மட்டுமே வலி இருக்கும் வகையில் மிருகம் அவரை உண்ண வேண்டும். மற்றொரு பகுதியில் வலி ஏற்படக்கூடாது" என்றான். ஆனால் அப்படி ஒரு பாதியில் மட்டும் வலி ஏற்படாமல் உண்ண முடியாது என்பதால், அந்த மிருகம் பீமனை விடுவித்து உரக்கச் சிரித்தது.
"அற்புதம்! தம்பியாக இருந்தாலும் நீதிநெறி தவறாமல் தீர்ப்பு வழங்கி உன் தகுதியை நிரூபித்தாய் யுதிஷ்டிரா! அதே சமயத்தில் சமயோசிதமாக யோசித்து உன் சகோதரனின் உயிரைக் காப்பாற்றிவிட்டாய் சகாதேவா! உங்களது தர்ம குணத்தைக் கண்டு மகிழ்ந்தேன்" என்று கூறி புருஷாமிருகம் யாகத்திற்கு வர சம்மதித்தது. தர்மரும் பல்வேறு தடைகளைத் தாண்டி ராஜசூய யாகத்தை வெற்றிகரமாக நடத்திப் பேரரசராக முடிசூடிக்கொண்டார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
இனம் புரியாத சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத் தன்மை உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் கைக்கூடும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதமாகி நிறைவுபெறும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
பெற்றோர்களின் அரவணைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளின் மேன்மை ஏற்படும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். நெருக்கமானவர்கள் வழியில் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
மிதுனம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். உறவினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வி சார்ந்த செயல்களில் ஆதாயம் ஏற்படும். மனை தொடர்பான செயல்பாடுகளில் லாபம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உயர்கல்வி சார்ந்த குழப்பங்கள் குறையும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். இறைச் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
சிம்மம்
எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். தேவையில்லாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய விஷயங்களில் கவனத்துடன் இருக்கவேண்டும். எண்ணங்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கன்னி
சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் இருந்து வந்து வேறுபாடுகள் குறையும். ஜவுளி வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
துலாம்
பணி நிமித்தமான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுப காரியங்களில் இருந்த இழுபறிகள் விலகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
நுணுக்கமான சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்லூரி கால நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
தனுசு
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் அமைதியின்மை உண்டாகும். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மகரம்
எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்தை வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிக தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபார பணிகள் மத்தியமாக நடைபெறும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். மனத்தளவில் புதிய தேடல் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
கும்பம்
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். செயல்பாடுகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மூலமாக மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். இனம் புரியாத சில கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிறு விமர்சனங்கள் அவ்வபோது தோன்றி மறையும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 27 ஆம் தேதி புதன்கிழமை 10.6.2026.
இன்று இரவு 08.15 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று அதிகாலை 05.02 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.
இன்று அதிகாலை 02.37 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.
இன்று காலை 09.57 வரை வனிசை. பின்னர் இரவு 08.15 வரை பத்திரை. பிறகு பவம்.
இன்று அதிகாலை 05.02 வரை அமிர்த யோகம். பின்னர் அதிகாலை 05.51 வரை சித்தயோகம். பிறகு மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
தாய் கண்ணீர் விட்ட தருணம்... குடியரசுத் தலைவரே மேடையை விட்டு இறங்கிய தருணம்!
ஒரு தாய்...
தன் மகன் பெற்ற விருதை வாங்க மேடைக்கு வந்திருந்தார். ஆனால் அந்த விருதை பெற வேண்டிய மகன் இன்று உயிருடன் இல்லை...
இந்திய ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஷஷாங்க் திவாரி நாட்டுக்காக வாழ்ந்தார். இறுதியில், தனது சக வீரரின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் தனது உயிரையே தியாகம் செய்தார்.
வட சிக்கிமின் உறையவைக்கும் பனிப்பகுதியில், வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட சக வீரரை காப்பாற்ற ஒரு நொடியும் யோசிக்காமல் ஆற்றில் குதித்தார். தனது வீரரை உயிருடன் மீட்டார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை...
வெறும் 23 வயதில் ஒரு இளம் ராணுவ அதிகாரி நாட்டுக்காகவும், தனது தோழனுக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
அவரது அபார தியாகத்தை கௌரவிக்கும் விதமாக இந்தியாவின் உயரிய வீர விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது மரணாந்தரமாக வழங்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவில், தனது மகனை நினைத்து அவரது தாய் கண்ணீரை அடக்க முடியாமல் கலங்கினார். அந்த காட்சியை பார்த்த குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி, அவர்களிடம் நேரில் சென்று விருதை வழங்கி ஆறுதல் கூறிய தருணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் நெகிழ வைத்தது.
அது ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சி மட்டுமல்ல...
ஒரு வீர மகனுக்காக அழுத தாயின் வலி... அந்த வலியை உணர்ந்த ஒரு குடியரசுத் தலைவரின் மனிதநேயம்... ஒரு ராணுவ வீரனின் அளவிட முடியாத தியாகம்...
மேஷம்: திட்டமிட்ட வேலையை முடிக்க, வேகத்தை கூட்டுவீர். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவார்கள். புதிய பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.
கடகம்: அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளி வட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
சிம்மம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக்கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் கோப்புகளை கவனமாகக் கையாளவும்.
கன்னி: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
துலாம்: பணவரவு உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் தொய்வின்றி விறுவிறுப்பாக அமையும். புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியருடன் இணக்கமாக செயல்படுவது நன்மை தரும்.
தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக வீடு, நிலத்தை விற்பனை செய்வீர். வியாபாரத்தில் வராக் கடன் வந்து சேரும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். புது வேலை அமையும். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று அலைச்சல் இருக்கும். டென்ஷன் கூடும். எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 9.6.2026.
இன்று இரவு 09.40 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று அதிகாலை 05.25 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.
இன்று அதிகாலை 04.21 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.
இன்று காலை 10.10 வரை தைத்தூலம். பின்னர் இரவு 09.40 வரை கரசை. பிறகு வனிசை.
இன்று அதிகாலை 05.25 வரை மரணயோகம். பின்னர் அதிகாலை 05.51 வரை சித்தயோகம். பின்பு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
செயல்பாட்டில் இல்லாத ஒரு மத்திய அரசு மானியத் திட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி, வீடு வீடாகச் சென்று மோசடியில் ஈடுபட முயன்ற டொராண்டோவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்து, அவர் மீது மோசடி முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கனடாவின் நார்த் பே பிராந்தியத்திலுள்ள 'பிர்ச் ஹேவன்' குதியில் கடந்த பிப்ரவரி 20-ஆம் திகதி காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிடிபட்ட நபர், அங்குள்ள ஒரு குடியிருப்புக்குச் சென்று தான் ஒரு முன்னணி எரிசக்தி நிறுவனத்தின் பிரதிநிதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அங்கு வசிப்பவர்களிடம், கனடா அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் அதிகாரப்பூர்வ 'வீட்டு எரிசக்தி பாதுகாப்பு திட்டத்தின்' கீழ் தமக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், தங்களின் வீட்டு உபயோகப் பொருட்களை மாற்றினால் 5,000 டொலர் முதல் 10,000 டாலர் வரை அரசு மானியம் பெற்றுத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
குறித்த நபர் குறிப்பிட்ட மத்திய அரசின் 'வீட்டு எரிசக்தி பாதுகாப்பு திட்டம்' பல ஆண்டுகளுக்கு முன்பே முழுமையாக நிறைவடைந்து, தற்போது செயல்பாட்டில் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற வீடு தேடி வரும் மோசடி நபர்களிடம் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நார்த் பே பொலிஸார் சில முக்கிய வழிமுறைகளை வழங்கியுள்ளனர்.
ஏதேனும் ஒரு நிறுவனம் அல்லது அரசு அமைப்பின் பெயரில் யாராவது வந்தால், அந்த நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யுங்கள்.
எந்தவொரு திட்டத்திலும் உடனடி முடிவு எடுக்குமாறு அவர்கள் உங்களை வற்புறுத்தினால் எச்சரிக்கையாக இருங்கள். முறையான நிறுவனங்கள் உங்களுக்கு யோசித்து முடிவெடுக்க அவகாசம் தரும்.
உங்களுக்குத் தெரியாத அல்லது நம்பகத்தன்மை இல்லாத நபர்களிடம் உங்களது வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு எண்கள் அல்லது தனிப்பட்ட அடையாள ஆவணங்களை ஒருபோதும் வழங்க வேண்டாம்.
பெரிய அளவிலான கொள்முதல் அல்லது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு, நம்பகமான குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். உங்கள் பகுதிக்கு வரும் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து உடனடியாக உள்ளூர் போலீசாருக்கும், 'கனடிய மோசடி தடுப்பு மையத்திற்கும்' தகவல் தெரிவியுங்கள் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


