- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
கனடாவின் புதிய ஜனநாயகக் (NDP) கட்சியின் புதிய தலைவராக அவி லிவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கூட்டாட்சித் தரத்தில் தனது செல்வாக்கை இழந்துள்ள கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமைத் தேர்தலில் 56% ஆதரவு பெற்று, 39,734 உறுப்பினர்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற லிவிஸ், “எங்கள் கட்சி மீண்டும் எழுகிறது” என உறுதியளித்தார்.
புதிய தலைவர் தனது உரையில், அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்களையும், டிரம்ப் தலைமையிலான உலக அரசியல் சூழ்நிலையையும் கடுமையாக விமர்சித்தார்.
சாதாரண மக்களுக்கு வாழ்க்கை நடத்துவதும் கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், கனடாவின் முக்கிய அரசியல் கட்சிகள் செல்வந்தர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், பணக்காரர்களுக்காக அல்ல, பொதுமக்களுக்காக செயல்படும் அரசை உருவாக்குவோம்” என தெரிவித்துள்ளார்.
அவி லிவிஸ் ஒரு அனுபவமிக்க பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குநர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல
வீட்டு வாசலில் பெண் பிள்ளையின் கொலுசு ஒலி *ஐஸ்வர்யம்*
வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி *ஐஸ்வர்யம்*
எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு *ஐஸ்வர்யம்*
அம்மா கையால் உணவு *ஐஸ்வர்யம்*
மனைவி பார்க்கும் ஓரக் கண் பார்வை *ஐஸ்வர்யம்*
பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் *ஐஸ்வர்யம்*
இளஞ்சூடு சூரியன் *ஐஸ்வர்யம்*
பவுர்ணமி தினத்தில் நிலவு *ஐஸ்வர்யம்*
உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும் இந்த பஞ்ச பூதங்கள் *ஐஸ்வர்யம்*
பால் வடியும் குழந்தையின் சிரிப்பு *ஐஸ்வர்யம்*
இயற்கை அழகு *ஐஸ்வர்யம்*
உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு *ஐஸ்வர்யம்*
அவசரத்தில் உதவும் நண்பன் *ஐஸ்வர்யம்*
புத்தியுள்ள குழந்தைகள் *ஐஸ்வர்யம்*
குழந்தைகள் படிக்கும் படிப்பு *ஐஸ்வர்யம்*
கடவுள் கொடுத்த உடல் ஆரோக்கியம் *ஐஸ்வர்யம்*
ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு *ஐஸ்வர்யம்*
ஐஸ்வர்யம் என்றால் கையால் எண்ணும் பணக்கட்டு அல்ல
கண்ணால் பார்க்கும் உலகம் *ஐஸ்வர்யம்*
மனசு அடையும் சந்தோஷம் *ஐஸ்வர்யம்*
*நம்மை சுற்றி நல்ல உண்மையான நண்பர்கள் இருந்தால் *ஐஸ்வர்யம்...*
My list of *Aishwaryams* :-
எத்தனை வயது ஆனாலும் உரிமையுடன் போடா வாடா எனப்பேசும் பால்ய நண்பர்கள் *ஐஸ்வர்யம்*
கணவன் மனதில் ஒரு பொருளை நினைக்கும் போதே (கேட்காமல்) கொண்டு வரும் அன்பான மனைவி *ஐஸ்வர்யம்*
ஆயுள் இறுதி வரையிலும் சின்ன வயதில் உடன் பிறப்புகளுக்கு செய்த நல்லவைகளை அவர்கள் மறக்காமல் மதிப்பது *ஐஸ்வர்யம்*
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்து இருந்தாலும், வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் சொந்தமாக ஒரு பாதுகாப்பு இருப்பது *ஐஸ்வர்யம்*
பெற்ற பிள்ளைகளை பாசமுடன் வளர்ப்பதும், நல்ல கல்வி அளிப்பதும், பின் பணியில் அமர்வதும், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் *ஐஸ்வர்யம்*
பேரப்பிள்ளைகள் பெறுவதும், அவர்கள் தாத்தா-பாட்டியுடன் விளையாடி வளர்வதும் *ஐஸ்வர்யம்*
நோயற்ற வாழ்வும், இறுதிவரை யாருக்கும் சிரமம் கொடுக்காமல், வாழ்க்கைப் பயணம் முடிவதும் *ஐஸ்வர்யம்*
ஒருமுறை கிருஷ்ண தேவராயர் சபையில் ஒரு வாதம் மனிதனின் குணம் நாய் குணத்தை போன்றது ஏப்படி நாய் வாலை நிமித்த முடியாதோ அது மாதிரி என்று கூற, மன்னர் இதை ஆதாரத்தோடு நிரூபணம் செய்ய ஒரு போட்டி வைத்தார் அதாவது நான்கு நாய் குட்டிகள் நால்வர் வளர்க்க வேண்டும் நிர்ணயம் செய்யப்பட்ட காலத்தில் கொண்டு வர வேண்டும் அப்பொழுது யார் நாயின் வாலை நிமிர்த்தி காட்டுகிறார்கள் என்று பார்க்கலாம் .
முதல் நாய் குட்டி கொட்டாயா என்பவருக்கும் இரண்டாவது நாய் குட்டி ராஜாவின் புரோகிதருக்கும் மற்றும் மூன்றாவது நாய் குட்டி தெனாலி இராமனிடமும் மூன்றாவது நாய் மன்னரிடம் வளர பணிக்கப்பட்டது.
முதலில் கொட்டாய நாயை தன் வீட்டிற்க்கு எடுத்து சென்று நாயின் வாலில் ஒரு குச்சியை வைத்து வாலை நிமிர்த்தி நூல் கொண்டு கட்டி விட்டார் , ஆறு மாதம் கழித்து கட்டாயம் தனக்கு நிறய பொண்ணும் பொருள் கிடைக்கும் என்று எண்ணினர்.
அடுத்து ராஜாவின் புரோகிதர் நாயின் வாலை ஒரு பெரிய குண்டை கட்டி தொங்க விட்டார் அவருக்கும் அதே எண்ணம் .
அடுத்து மன்னர் அவரும் தான் பங்கிற்கு ஒரு பெரிய உருளைமற்றும் கம்பியை வால் உடன் இணைத்து விட்டார்.
கடைசியாக நம்ம தெனாலி ராமன் நாயை ஒரு தூணில் கட்டி வாலை அந்த தூணில் இழுத்து கட்டி விட்டார்.ஆனால் அதற்கு மிகுந்த குறைவான உணவை மட்டும் வழங்கினார்.
இப்படியே ஆறு மாதம் ஓடி விட்டது.
சபையில் சந்திக்க வேண்டிய நாள்.
முதலில் கொட்டயா தான் நாயின் வாலில் இருந்த நூலை அவிழ்த்து அந்த குச்சியை நீக்கினார் , வால் சட்டென்று சுருண்டது. தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
அடுத்து ராஜாவின் பிரோகிதர், நாயின் வாலில் இருந்த குண்டை அகற்றினார் அதுவும் சுருண்டது .
மன்னரும் அது மாதிரி தான் அந்த இரும்பு கம்பியை அகற்றினார் அதுவும் சுருண்டு கொண்டது.
தெனாலி ராமன் நாயோ உணவு சரி வர உண்ணாதலால் மிகவும் சோர்ந்து நிற்க கூட சக்தி இல்லாமல் இருந்தது தெனாலி அதன் வாலை அவிழ்க்க அது தன் வாலை சுருட்ட கூட சக்தி இல்லாமல் அப்படியே நீண்டு இருந்தது.
தெனாலி மன்னனிடம் விளக்கினான் மனிதனும் அப்படித்தான் எல்லாம் தேவைக்கு மேல் இருந்தால் அவனுக்கு ஆணவம் அதிகமாகி விடும் என்று விளக்கம் கொடுத்தான்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உறவினர்கள் வழியில் புரிதல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் மாற்றமான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். பிரமை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். சில விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தாய் வழியில் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தடங்கல் நீங்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் காணப்படும். பழக்கவழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்திருந்த தனவரவுகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். மகிழ்ச்சி பெருகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். விரும்பிய விஷயங்களை அடைவதற்கான சூழல் அமையும். தோற்றப்பொழிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும். கம்பீரமான பேச்சுகளால் காரிய அனுகூலம் உண்டாகும். பயம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
வியாபார சிந்தனைகள் மேம்படும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். அதிகாரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆன்மீகத்தில் தெளிவுகள் பிறக்கும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். கவலை தீரும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்குவீர்கள். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். வெற்றி கிட்டும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எண்ணம் ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
வெளியூர் தொடர்பான புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். களிப்பு கூடும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
தனுசு
குழப்பமான சிந்தனைகளால் சோர்வுகள் உண்டாகும். வெளியூர் பயணம் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற உழைப்பை மேம்படுத்த வேண்டும். கல்வி பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். ஆதாயம் அடையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுப காரிய தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பூர்வீகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நண்பர்களுடனான சந்திப்பு மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
கும்பம்
பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் கைக்கூடி வரும். அரசாங்க காரியங்கள் நிறைவு பெறும். எதிர்ப்பு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செலவு குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 29.3.2026.
இன்று காலை 09.32 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று மாலை 04.04 வரை ஆயில்யம். பின்னர் மகம்.
இன்று இரவு 07.32 வரை திருதி பின்னர் சூலம்.
இன்று காலை 09.32 வரை பத்தரை. பின்னர் இரவு 08.59 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று காலை 06.13 வரை மரண யோகம். பின்னர் மாலை 04.04 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.00 முதல் 07.00 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் கனடியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்ட நிலையிலும், கனடியர்களை அமெரிக்க எல்லை அதிகாரிகள் மோசமாக நடத்தும் சம்பவங்கள் தொடர்கின்றன.
அமெரிக்கா செல்ல முயன்ற கனடியர் ஒருவர், அமெரிக்க எல்லையில் மோசமான அனுபவம் ஒன்றை சந்தித்துள்ளார். கெவின் லார்சன் (68) என்னும் கனடியர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் திகதி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்ல முயன்றுள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் கனடியர்களை நடத்தும் விதம் குறித்து தான் நன்கு அறிந்திருப்பதாக தெரிவிக்கும் கெவின், தன்னை அமெரிக்க எல்லை அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிடக்கூடும் என்பதைக் கூட தான் அறிந்துவைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
என்றாலும், இப்படி ஒரு மோசமான அனுபவம் தனக்குக் கிடைக்கும் என தான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார் அவர்.
ஆம், எல்லையில் கெவினை நிறுத்தி கேள்விகள் கேட்ட அமெரிக்க எல்லை அதிகாரிகள், அவரிடம், தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதில்லை என கூறும் ஒரு ஆவணத்தில் கையெழுத்திடும்படி கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து, கெவினிடம் அவரது DNAவை கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்கள் அமெரிக்க அதிகாரிகள்.
தான் ஒன்றும் குற்றவாளி அல்ல என்று கூறி DNAவை சேகரிக்க கெவின் அனுமதி மறுக்க, அவரை ஓராண்டு சிறையில் அடைக்கமுடியும் என மிரட்டியுள்ளார்கள் அவர்கள். ஆகவே, வேறு வழியில்லாமல் தனது DNAவை சேகரிக்க அவர்களுக்கு அனுமதியளித்துள்ளார் அவர்.
இந்த விடயத்தை அவர் ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜேமி ராஸ்கின் (Jamie Raskin) மற்றும் டெபி டிங்கல் (Debbie Dingell) ஆகிய இருவரும் கெவின் நடத்தப்பட்ட விதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு ட்ரம்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் கெவினை நடத்திய விதம் குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் விளக்கம் கோரியுள்ளார்கள்.
அத்துடன், மிச்சிகனைச் சேர்ந்த டெபி டிங்கல், கனடா தங்கள் குடும்பம் என்றும், கனடாவுக்கும் மிச்சிகனுக்குமான உறவு விலையேறப்பெற்றது என்றும், நாங்கள் கனேடியர்களை நேசிக்கிறோம் என்றும் கூறியுள்ளதுடன், கெவின் விவகாரம் குறித்து தாங்கள் விளக்கம் கேட்டுள்ளதாகவும், பதில் கிடைக்கும் வரை விடமாட்டோம் என்றும் கூறியுள்ளார்கள்.
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சனிக்கிழமை (மார்ச் 28) அதிகாலை அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய பிரதமராக பதவியேற்ற பாலன் ஷா (Balen Shah) தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளத்தில் இடம்பெற்ற ‘Gen Z’ இளைஞர் போராட்டங்களை ஒடுக்கியதில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
அந்த போராட்டங்களின் போது சுமார் 77 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களாக முன்னாள் பிரதமர் ஒலி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதே வழக்கில் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் லேக்காக் (Ramesh Lekhak ) காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் தேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளின் பக்தாபூர் மாவட்டத்தின் குண்டு பகுதியில் உள்ள தனது இல்லத்தில் இருந்த சர்மா ஒலி அதிகாலை 5 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார் திடீரென இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பாலன் ஷா பிரதமராக பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் இந்த கைது இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது நேபாள அரசியலில் பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
நேபாள தேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கைது நடவடிக்கை நேபாள அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது
என்னடா நீ!! வேலைக்கு வரும்போதே! உனக்கு இந்த அஜீரண கோளாறும்! இந்த ' பாம் ' போடுற பிரச்சினை இருக்குன்னு தெரிந்து ! நீ எதுக்குய்யா ! நீர்மூழ்கி கப்பல் வேலைக்கு வந்து சேர்ந்த!!
இப்ப பார்!! எல்லாம் மயங்கி கிடக்காங்க!! உனக்காக இப்ப ஜன்னலை திறந்து வைக்க முடியுமா! சண்டாளன்!
ஒரு பார்க்கில் மூன்று முதியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்
முதல் முதியவர்: நான் குடித்த அளவிற்கு யாரும் குடித்தது இல்லை. என் வயது அறுபத்து ஐந்து
இரண்டாமவர் : என்னைப்போல் புகை பிடித்தவர் யாரும் இல்லை . என் வயது அறுபது
மூன்றாவன்: உங்களை விட நான் பயங்கரமவன். மது மாது புகை என எதையும் விட்டதில்லை. எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விட்டேன்
மற்றவர்கள்: ஆமாம் உங்கள் வயது என்ன? ஒரு எழுபது இருக்குமா?
மூன்றாமவன்: I am just twenty five
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நினைத்த பணிகள் தடையின்றி முடியும். உறவுகள் வழியில் ஒற்றுமை உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் திருப்தியான சூழல் அமையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
ரிஷபம்
மனதில் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
பூர்வீக பிரச்சனைகள் குறையும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் பிறக்கும். பணியாட்களிடம் அனுசரித்து செல்லவும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
சில பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். எதிலும் தாழ்ந்த மனப்பான்மை இன்றி செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கனிவு வேண்டும். இறை வழிபாடுகள் புதிய தெளிவை ஏற்படுத்தும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி
கல்வி பணிகளில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறைமுக எதிர்ப்புகளையும், திறமைகளையும் அறிந்து கொள்வீர்கள். பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
துலாம்
கல்வியில் மேன்மை ஏற்படும். குழந்தைகளிடம் கனிவு வேண்டும். அறப்பணிகளில் ஒருவிதமான ஈடுபாடு ஏற்படும். சுபகாரிய தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் புது உற்சாகத்தைக் கொடுக்கும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
கல்வி சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். உறவினர்கள் வழியில் பொறுமை வேண்டும். வியாபாரம் மந்தமாக இருக்கும். அரசு செயல்களில் அலைச்சல் ஏற்படும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் புது விதமான அனுபவங்கள் உருவாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
தனுசு
காதில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு மறையும். மறதி தொடர்பான பிரச்சனைகளை தோன்றி மறையும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை தரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். மறைமுகமான சில விமர்சனங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். இனிமையான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். பிறமொழி மக்களிடம் அனுசரித்து செல்லவும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் மாற்றமான அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசவும். அரசு காரியங்களில் விவேகத்துடன் செயல்படவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மீனம்
வழக்குகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்தீர்கள். வியாபார பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை 28.3.2026.
இன்று காலை 11.13 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று மாலை 04.46 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.
இன்று அதிகாலை 12.13 வரை அதிகண்டம். பின்னர் இரவு 09.45 வரை சுகர்மம். பிறகு திருதி.
இன்று அதிகாலை 12.02 வரை தைத்தூலம். பின்னர் காலை 11.13 வரை கரசை. பிறகு இரவு 10.22 வரை வரிசை பின்பு பத்தரை.
இன்று காலை 06.14 வரை மரண யோகம். பின்னர் மாலை 04.46 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை


