·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 906
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
  • 19
  • 20
·
Added article

இந்தி நடிகை மிருணாள் தாக்​குர், ‘சீ​தா​ராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய பான் இந்​தியா படங்​களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். அவரும் நடிகர் தனுஷும் காதலித்து வரு​வ​தாகக் கடந்த சில மாதங்​களாகச் செய்​தி​கள் வெளி​யாகி வந்​தன.

சில விழாக்​களில் இரு​வரும் ஒன்​றாகக் கலந்​து​ கொண்​டதை அடுத்து இச்​செய்தி வேக​மாகப் பரவியது. இரு​வரும் திரு​மணம் செய்​து​கொள்ள இருப்​ப​தாக​வும் கூறப்​பட்​டது. அதை மிருணாள் தாக்​குர் மறுத்​திருந்​தார். ‘எனக்கே தெரி​யாமல் என் திரு​மணம் பற்​றிய செய்​தி​கள் வரு​கின்​றன’ என்று கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் தற்​போது இரு​வரும் பிரிந்​து​விட்​ட​தாக புதிய தகவல் பாலிவுட்​டில் வெளி​யாகி இருக்​கிறது. எனினும், இதை யாரும் அதி​காரப்​பூர்​வ​மாக உறு​திப்​படுத்​த​வில்​லை.

  • 24
·
Added article

ஆர்யா, இந்​திரன்​ஸ், சுனில், நிகிலா விமல், ரெஜி​னா, போஸ் வெங்கட், அஞ்​சலி நாயர் உள்பட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘அனந்தன் காடு’.

ஜியேன் கிருஷ்ணகு​மார் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு அஜனீஸ் லோக்​நாத் இசை அமைத்​துள்​ளார். யுவா ஒளிப்​ப​திவு செய்துள்ளார். மினி ஸ்டூடியோஸ் சார்​பில் வினோத் தயாரித்துள்ள இந்த ஆக்‌ஷன் த்ரில்​லர் படம் தமிழ், மலை​யாள மொழிகளில் உருவாகியுள்​ளது. இதன் டீஸர் வரவேற்​பைப் பெற்றுள்​ளது. ஜூன் 25-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் செய்தியாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடைபெற்றது.

நடிகர் ஆர்யா ​போது, “இது 2 வருட​மாக நடை​பெற்ற திரைப்படம். ‘எனிமி’ படப்​பிடிப்பு நடந்து கொண்​டிருந்​த​போது, முரளி கோபி ஒரு ஒன்​லைன் சொன்​ன​தாக தயாரிப்​பாளர் வினோத் என்​னிடம் சொன்​னார். அந்​த கதை​யில் பல அடுக்குகள் இருந்​தன. ‘லூசிபர்’ போன்ற படங்​களில் நாம் அதைப் பார்த்திருக்கிறோம்.

அத்​தகைய திரைக்​கதையை திரை​யில் அதே தரத்​தில் கொண்டு வரு​வது சவாலான விஷ​யம். இயக்​குநர் ஜியேன் கிருஷ்ணகு​மார் மற்​றும் தயாரிப்​பாளர் வினோத் எந்த சமரச​மும் செய்​யாமல், அந்த திரைக்கதை​யின் ஆழத்​தை​யும் வலிமை​யை​யும் திரை​யில் கொண்டு வந்​திருக்​கிறார்கள். எனது கதா​பாத்​திரம் எமோஷனலாக​வும், வலு​வான​தாக​வும் இருந்​த​தால் ஒப்​புக் கொண்​டேன். அரசி​யல் பின்​னணி​யில் உள்ள ஆக்ஷன் கதை இது. ஆனால், அரசி​யல் கதை இல்​லை.

திரு​வனந்​த​புரத்தை மைய​மாகக் கொண்​டு, கேரளா – தமிழ்​நாடு எல்லைப் பகு​தி​களில் நடை​பெறும் கதை இது. எனவே படத்​தில் தமிழ், மலை​யாள மொழிகள் இயல்​பாக இடம்​பெறும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞ​னாக நடித்​திருக்​கிறேன். டெக்னிக்​கலாக​வும் இந்​த படம் சிறப்​பாக உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

  • 28
·
Added a news

திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விலகுவதாக அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார். இதன்மூலமாக இரு கட்சிகளுக்கும் இடையிலான 60 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் ஐயுஎம்எல் வெற்றி பெற்றது. பிறகு தவெக ஆட்சியமைக்க அக்கட்சி தனது ஆதரவை வழங்கியது. இதையடுத்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான் நியமிக்கப்பட்டார். மேலும், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுவில் வாணியம்பாடி எம்எல்ஏவும், சட்டப்பேரவைக் கட்சித் தலைவரான எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷாவும் இடம்பெற்றார்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்: இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வரவேற்புரையாற்றினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், ‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து தவெக ஆட்சி அமைய ஐயுஎம்எல் ஆதரவு அளித்ததோடு, முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வருகின்றது. இன்றுள்ள அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் நாம் தொடர்ந்து பயணிக்க இயலாது. இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்’ என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து செய்தியாளர்களிடம் காதர் மொய்தீன் பேசுகையில், கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி வந்துவிடும், மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகி விடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் கடவுளின் எண்ணம் வேறாக இருந்துள்ளது. வெற்றிக்கு உழைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி. தவெகவுக்கு ஏன் ஆதரவு கொடுத்தோம் என ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளோம். 60 ஆண்டுகள் திமுகவுடன் பயணித்தோம்.

ஆளுநர் ஆட்சி வந்தால், மத்திய பாஜக ஆட்சிதான் தமிழகத்தில் திணிக்கப்படும் என்ற நிலைமை வந்துவிடும். அதற்கு நாங்கள் காரணமாகி விடக்கூடாது என தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். தவெகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவை அளித்தும், நாங்கள் கேட்காத ஒன்றை அதாவது அமைச்சரவை பதவியை கொடுத்தார்கள். இந்த ஆட்சி தொடர நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்போம். ஆட்சி நன்றாக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் இனி தொடர முடியாது. அதனால் திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்.என்று அவர் தெரிவித்தார்.

  • 34
·
Added a news

நீட் தேர்வை தேசிய அளவில் ரத்து செய்யவோ அல்லது  தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கவோ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மாதம் 3-ஆம் தேதி நடத்தப்பட்டு ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு இன்று மதியம் நடைபெறும் நிலையில், நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அடுத்தடுத்து ஒரு மாணவியும், ஒரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ரோஷ்னி 12-ஆம் வகுப்பை இரு ஆண்டுகளுக்கு முன் நிறைவு செய்து விட்டு, நீட் தேர்வில் வென்று மருத்துவப் படிப்பில் சேருவதற்காக கடந்த இரு ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார். இந்த முறையும் அதே நிலை தான் ஏற்படுமோ என்ற அச்சம் தான் அவரை இந்த முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வெற்றியானந்தம் என்ற மாணவர் 12-ஆம் வகுப்புத் தேர்வை முடித்து விட்டு, கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்தார்.

ஆனால், அதில் அவரால் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாத நிலையில் நடப்பாண்டிலும் அதே நிலை தான் ஏற்படுமோ என்ற அச்சத்தால் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களைக் கொல்லும் தேர்வு என்பதற்கு இவை தான் மோசமான எடுத்துக்காட்டு.

ஏற்கனவே, கடந்த 17-ஆம் தேதி கோவையை சேர்ந்த மாணவி அனுகீர்த்தனா, 19-ஆம் தேதி சேலம் எடப்பாடியைச் சேர்ந்த கோபிகா என இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த இரு நிகழவுகளையும் சேர்த்து 4 நாள்களில் 4 மாணவ, மாணவிகளை நீட் தேர்வுக்கு பலி கொடுத்திருக்கிறோம். இந்தக் கொடுமை தொடரக்கூடாது. அதற்காக நீட் தேர்வை தேசிய அளவில் ரத்து செய்யவோ அல்லது தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கவோ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • 34
·
Added a news

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்்புக்கு, கட்டார் அரச குடும்பம் சார்பில் சொகுசு விமானம் ஒன்று பரிசளிக்கப்பட்டுள்ளது.

எயார் போர்ஸ் ஒன் என்ற இந்த புதுப்பிக்கப்பட்ட போயிங் 747-8 விமானத்தின் ஆரம்ப நிகழ்ச்சி மேரிலேண்டில் உள்ள கூட்டு இராணுவ தளத்தில் ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்டு விமான சேவையை ஆரம்பித்து வைத்த டிரம்ப் வெறும் 10 மாதங்களில் புதுப்பிக்கப்பட்ட இந்த விமானத்தை பறக்கும் வெள்ளை மாளிகை" மற்றும் "பறக்கும் அரண்மனை" என்று பாராட்டியுள்ளார்.

அத்துடன்,இதில் படுக்கையறை, பளிங்குக்கற்கள் பதிக்கப்பட்ட குளியலறை போன்ற பல சொகுசு வசதிகள் உள்ளன. ேலும்,எதிர்க்கட்சிகள் இதனை 'இலஞ்சம்' என்று விமர்சித்தாலும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு இது விதிமீறல் அல்ல என்றும், அமெரிக்க விமானப் படைக்கான பரிசு என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு பதிலளித்த டிரம்ப், சவூதி அரேபியா, யு.ஏ.இ, கட்டார் போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,அணு ஆயுத தாக்குதலை எதிர்கொள்ளும் திறன், ஏவுகணை தடுப்பு மற்றும் வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி போன்ற எயார் போர்ஸ் ஒன் விமானத்திற்கு இணையான பாதுகாப்பு அம்சங்களை இதிலும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானமானது,ஜோர்ஜ் புஷ் காலம் முதல் 40 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய விமானத்திற்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

  • 36
·
Added a news

கனடாவின் வான்கூவாரில் இந்த வார இறுதியில் கடலில் நீராடத் திட்டமிட்டுள்ளவர்கள், முதலில் சம்பந்தப்பட்ட கடற்கரை பாதுகாப்பு அறிவிப்புகளை கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வான்கூவர் கடலோர சுகாதாரத் துறையின் அண்மைய நீர் பரிசோதனைகளின்படி, பல கடற்கரைகளில் ஈ.கோலை (E.coli) பாக்டீரியாவின் அளவு அதிகரித்துள்ளதால் அங்கு நீராடுவது பாதுகாப்பானதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கிட்ஸ் பொயின்ட், தேர்ட் பீச், இங்கிலிஷ் பே, ட்ரவுட் லேக் மற்றும் சன்செட் பீச் ஆகிய இடங்களில் "நீராட வேண்டாம்" என்ற எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

நீர் மாதிரிகளில் 100 மில்லிலிட்டருக்கு 200-ஐ விட அதிகமான சராசரி E.coli அளவு அல்லது ஒரே மாதிரியில் 400-ஐ விட அதிகமான அளவு பதிவானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் லயன் பே மற்றும் லொகார்னோ பீச் ஆகிய கடற்கரைகளில் பெறப்பட்ட நீர் மாதிரிகளில் எதிர்பார்த்ததை விட அதிக E.coli அளவு கண்டறியப்பட்டுள்ளதால் அவை தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

  • 33
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பலதரப்பட்ட சிந்தனைகளால் சோர்வு ஏற்படும். பணியிடத்தில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களுடன் வெளியூர் சென்று வருவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கால்நடைகளால் ஆதாயம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

ரிஷபம்

வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் காணப்படும். தாயாருடன் அனுசரித்து செல்லவும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். வங்கி பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். கால்நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். அரசு தொடர்பான புரிதல்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மிதுனம்

திட்டமிட்ட பணிகளில் இருந்த தடைகள் மறையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புது விதமான மாற்றங்கள் ஏற்படும். கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவமும் உருவாகும். கணவன் மனைவி இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் புரிதலும் தெளிவும் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கடகம்

கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். நிதானமான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களால் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். உறவினர்களின் வருகைகள் ஏற்படும். திடீர் மாற்றங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

சிம்மம்

தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

கன்னி

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வியாபார பணிகளில் கனிவான பேச்சுகள் நன்மையை தரும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். இறை சார்ந்த பணிகளில் மதிப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

துலாம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உங்கள் மீதான சிறு சிறு வதந்திகள் மறையும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறையால் லாபம் மேம்படும். புதிய வாகனம் முயற்சிகள் கைகூடிவரும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

விருச்சிகம்

குடும்பத்தில் சுப காரியங்கள் எண்ணம் ஈடேறும். வியாபார பணிகளில் இருந்த போட்டிகள் குறையும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பிற மொழி சார்ந்த மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

தனுசு

புதிய முயற்சிகளுக்கு அதிகாரிகளின் மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். மனதளவில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படவும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் சில விரயங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வாடிக்கையாளர்களிடம் நயமான பேச்சுக்கள் உங்களின் நன்மதிப்பை உருவாக்கும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். பேச்சுத் திறமையால் வரவுகள் அதிகரிக்கும். பயணங்களில் இருந்த இழுபறிகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மீனம்

நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த சஞ்சலம் விலகும். கொடுக்கல் வாங்கலில் திடீர் திருப்பம் ஏற்படும். எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். செயல்களில் இருந்த தடைகள் மறையும். உடல் அளவில் இருந்த கவலைகள் குறையும். தந்தை வழி தொழில் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 88
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 21.6.2026.

சப்தமி (up to 3:21 pm) அஷ்டமி (up to June 22, 3:40 pm)

பூரம் (up to 9:31 am) உத்திரம்

சித்த-அமிர்த யோகம்

image_transcoder.php?o=sys_images_editor&h=551&dpx=2&t=1782016607

நல்ல நேரம்:

7:30 - 8:30 am / 3:30 - 4:30 pm

  • 91

Good Morning...

  • 92
  • 149
  • 149
  • 148
·
Added a post

கடந்த முப்பது ஆண்டுகளில் நான் பார்த்திராத அளவுக்கு, இந்த ஆண்டு சந்தையில் அதிக நாவல் பழங்களைப் பார்த்திருக்கிறேன்.

நாவல் பழங்கள் உண்மையில் குவியல் குவியலாக விழுகின்றன. கடந்த ஆண்டு மிகக் குறைவாகப் பழங்கள் காய்த்த மரங்கள் கூட, இப்போது அதிக அளவில் நாவல் பழங்களை உதிர்க்கின்றன. ஏற்கனவே பழங்கள் காய்த்த மரங்கள் இப்போது அவற்றை ஏராளமாக உதிர்க்கின்றன.

சரியாக என்னதான் நடக்கிறது?

எங்கள் பாட்டி ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொல்வார்: “எந்தக் கோடை காலத்தில் நாவல் பழங்கள் இவ்வளவு அதிகமாக விழுகின்றனவோ, அந்த ஆண்டு வறட்சியைக் கொண்டுவரும்.”

தாவர அறிவியலின்படி, பாட்டியின் பாரம்பரிய அறிவு வியக்கத்தக்க வகையில் துல்லியமானது மற்றும் அறிவியல் பூர்வமானது. அறிவியலில், இந்த வியப்பூட்டும் மற்றும் அதே சமயம் திகைப்பூட்டும் செயல்முறை “மாஸ்டிங்” அல்லது “ஸ்ட்ரெஸ் ஃப்ரூட்டிங்” என்று அழைக்கப்படுகிறது.

தங்கள் சொந்தச் செலவில் கூட, முடிந்தவரை அதிகபட்ச பழங்களை உற்பத்தி செய்வதற்கான மரங்களின் இந்த இறுதி முயற்சி, சில சமயங்களில் “தற்கொலைப் பழம்” அல்லது “அதிகப்படியான விளைச்சல்” என்றும் குறிப்பிடப்படுகிறது.

இது என்னவென்றும், இதைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்றும் எளிய மொழியில் புரிந்துகொள்வோம்:

### 1. ‘தப்பிப்பிழைக்கும் உள்ளுணர்வு’ (வாழ்வதற்கான போராட்டம்)

பேராசிரியர் விளக்கியது போல, இது "இனங்களின் உயிர்வாழ்வுக்கான" இயற்கையின் விதியாகும். ஒரு மரம் நிலத்தடியில் நீர் பற்றாக்குறையை உணரத் தொடங்கும்போதோ அல்லது பெரிய காலநிலை மாற்றங்கள் வரப்போகின்றன என்பதற்கான சமிக்ஞைகளைப் பெறும்போதோ, அது ஒரு "தற்காப்பு நிலைக்கு" மாறுகிறது.

எதிர்காலத்தில் தன்னால் உயிர்வாழ முடியாமல் போகலாம் என்பதை அந்த மரம் உணர்கிறது. அத்தகைய நேரத்தில், தன்னைத்தான் தகவமைத்துக்கொள்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் நான் பார்த்திராத அளவுக்கு, இந்த ஆண்டு சந்தையில் அதிக நாவல் பழங்களைப் பார்த்திருக்கிறேன்.

நாவல் பழங்கள் உண்மையில் குவியல் குவியலாக விழுகின்றன. கடந்த ஆண்டு மிகக் குறைவாகப் பழங்கள் காய்த்த மரங்கள் கூட, இப்போது அதிக அளவில் நாவல் பழங்களை உதிர்க்கின்றன. ஏற்கனவே பழங்கள் காய்த்த மரங்கள் இப்போது அவற்றை ஏராளமாக உதிர்க்கின்றன.

சரியாக என்னதான் நடக்கிறது?

எங்கள் பாட்டி ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொல்வார்: “எந்தக் கோடை காலத்தில் நாவல் பழங்கள் இவ்வளவு அதிகமாக விழுகின்றனவோ, அந்த ஆண்டு வறட்சியைக் கொண்டுவரும்.”

தாவர அறிவியலின்படி, பாட்டியின் பாரம்பரிய அறிவு வியக்கத்தக்க வகையில் துல்லியமானது மற்றும் அறிவியல் பூர்வமானது. அறிவியலில், இந்த வியப்பூட்டும் மற்றும் அதே சமயம் திகைப்பூட்டும் செயல்முறை “மாஸ்டிங்” அல்லது “ஸ்ட்ரெஸ் ஃப்ரூட்டிங்” என்று அழைக்கப்படுகிறது.

தங்கள் சொந்தச் செலவில் கூட, முடிந்தவரை அதிகபட்ச பழங்களை உற்பத்தி செய்வதற்கான மரங்களின் இந்த இறுதி முயற்சி, சில சமயங்களில் “தற்கொலைப் பழம்” அல்லது “அதிகப்படியான விளைச்சல்” என்றும் குறிப்பிடப்படுகிறது.

இது என்னவென்றும், இதைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்றும் எளிய மொழியில் புரிந்துகொள்வோம்:

### 1. ‘தப்பிப்பிழைக்கும் உள்ளுணர்வு’ (வாழ்வதற்கான போராட்டம்)

பேராசிரியர் விளக்கியது போல, இது "இனங்களின் உயிர்வாழ்வுக்கான" இயற்கையின் விதியாகும். ஒரு மரம் நிலத்தடியில் நீர் பற்றாக்குறையை உணரத் தொடங்கும்போதோ அல்லது பெரிய காலநிலை மாற்றங்கள் வரப்போகின்றன என்பதற்கான சமிக்ஞைகளைப் பெறும்போதோ, அது ஒரு "தற்காப்பு நிலைக்கு" மாறுகிறது.

எதிர்காலத்தில் தன்னால் உயிர்வாழ முடியாமல் போகலாம் என்பதை அந்த மரம் உணர்கிறது. அத்தகைய நேரத்தில், தன்னைத்தான் தகவமைத்துக்கொள்கிறது.

  • 154
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உயர் அதிகாரிகளின் சந்திப்புகள் ஏற்படும். மனம் விட்டு பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வாகனங்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

ரிஷபம்

உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டில் தேவைகளை அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் உருவாகும். பெரியோர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளுக்கு தெளிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

 

மிதுனம்

உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். சொத்து பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். வாகனத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் இருந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கடகம்

அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பதட்டமில்லாத செயல்பாடுகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். ஆடம்பரமான பொருள்களின் மீது விருப்பம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

சிம்மம்

விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களின் வருகை மூலம் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

கன்னி

ஆடம்பர பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபார பணிகளில் மந்தமான சூழல் காணப்படும். குழந்தைகளின் உயர் கல்வி குறித்த தெளிவுகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

துலாம்

கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். செல்லப்பிராணிகளிடம் கவனத்துடன் இருக்கவும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் உண்டாகும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

விருச்சிகம்

குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். அரசு குறித்த நிலைபாடுகளை புரிந்து கொள்வீர்கள். கால்நடை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கும். தடைபட்ட பணிகள் முடியும். கல்வி குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சில பயணங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நிபுணர்களின் ஆலோசனைகள் புரிதலை ஏற்படுத்தும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மகரம்

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சகோதர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில்நுட்ப கருவிகளால் சில விரயங்கள் உண்டாகும். பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

கும்பம்

சகோதரர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் ஏற்படும். நண்பர்களின் உதவி மூலம் இழுபறியான சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். போட்டிகளில் பங்கு பெற்று பாராட்டுக்களை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மீனம்

நெருக்கமானவர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். இழுபறியான காரியங்கள் நிறைவு பெறும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். போட்டி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 227
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை 20.6.2026.

இன்று இரவு 09.51வரை சஷ்டி பின்னர் சப்தமி.

இன்று மாலை 03.23 வரை மகம். பின்னர் பூரம்.

இன்று மாலை 06.38 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.

இன்று காலை 10.27 வரை கௌலவம். பின்னர் இரவு 09.51 வரை தைத்துூலம். பிறகு கரசை.

இன்று அதிகாலை 05.53 வரை மரணயோகம் பின்னர் மாலை 03.23 வரை அமிர்த யோகம். பிறகு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=550&dpx=2&t=1781927664

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 235

Good Morning....

  • 232
·
Added a news

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் மின்சார வாகனங்களின் (EV) விற்பனை வேகமாக அதிகரித்து வரும் போதிலும், போதிய சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை அதிகளவிலான ஓட்டுநர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதைத் தடுப்பதாகத் துறைசார் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சஸ்காட்செவன் வாகன விநியோகஸ்தர்கள் சங்கத்தின் (SADA) சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் EV பதிவுகள் 3,408 ஆக உயர்ந்துள்ளன.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (3,059 வாகனங்கள்) ஒப்பிடுகையில் சுமார் 11 சதவீத வளர்ச்சியாகும். தொழில்நுட்பம் வளர வளர, மக்கள் மத்தியில் இதற்கான வரவேற்பு இன்னும் அதிகரிக்கும் என சஸ்காட்செவன் வாகன விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் லாரி ஹெக்ஸ் தெரிவித்துள்ளார்.

கனடா முழுவதும் மின்சார வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 21,500 க்கும் மேற்பட்ட பூஜ்ஜிய-உமிழ்வு (Zero-emission) வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 75 சதவீத வளர்ச்சியாகும் என கனடா புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வழங்கும் 5,000 டாலர் வரையிலான தள்ளுபடி சலுகைகள், சந்தைக்கு வரும் புதிய ரக வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரிப்பு ஆகியவையே இந்த விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

  • 309
·
Added a news

வெளிநாடு சுற்றுலா சென்ற கனேடியர் ஒருவர், எதிர்பாராத வகையில் துயர முடிவை சந்தித்துள்ளார். 69 வயதுடைய கனேடியர் ஒருவர் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், புதன்கிழமை மாலை, Kruger தேசிய பூங்கா என்னும் சுற்றுலா தலத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கு, வழிகாட்டி ஒருவர் கையில் துப்பாக்கி வைத்திருக்க, இந்த கனேடியர் அவரிடம் சென்று, அந்த துப்பாக்கி உண்மையான துப்பாக்கியா என்று கேட்டுள்ளார்.

அந்த வழிகாட்டி அந்த துப்பாக்கி உண்மையானதுதான் என்பதை நிரூபிப்பதற்காக, அதை எப்படி இயக்குவது என்று அந்த கனேடியருக்கு செய்துகாட்ட, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்துள்ளது.

துப்பாக்கி குண்டு பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் அந்த கனேடியர். பொலிசார் இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள நிலையில், கனேடிய அதிகாரிகளுக்கு அந்த துயர சம்பவம் தொடர்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 311
·
Added a post

ஒரு சிலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை என்பது நிற்கவே நிற்காது.

அப்படிப்பட்டவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு முடி உதிர்தல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் முக்கியமான காரணமாக திகழ்வது உடலில் இருக்கக்கூடிய சத்துக் குறைபாடு தான்.

முடி உதிர்தல் ஆக இருந்தாலும் முதலில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததால் தான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்புற பராமரிப்பை செய்தாலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பொருட்களையும் உண்ண வேண்டும்.

இன்றைய தலைமுறையில் இருப்பவர்கள் இந்த மாதிரி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பொருட்களை சாப்பிட கொடுத்தால் கண்டிப்பாக முறையில் சாப்பிட மறுப்பார்கள்.

அப்படிப்பட்டவர்கள் எந்த வித தயக்கமும் இன்றி மோரை சாப்பிட வேண்டும். பொதுவாக பால், தயிர் இவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக மோராக நாம் சாப்பிட்டோம் என்றால் நம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும்.

  • 311
·
Added a post

ஒரு காலத்தில் ஒரு பெரிய பேரரசரின் கீழ் பல ராஜ்ஜியங்கள் இருந்தன. அவரது ஒரே கடமை தனது குடிமக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான். ஆனால் சூரிய ஒளி மற்றும் நிழலைப் போல, வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. பல ஆண்டுகளாக தங்கள் மதத்தைப் பின்பற்றி வந்த மக்கள், இப்போது அதே மக்கள் கலகக்காரர்களாக மாறிவிட்டனர். மக்களிடையே கொள்ளை, இழிவான நடத்தை மற்றும் வெறுப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக, பேரரசில் அமைதியின்மை பரவத் தொடங்கியது.

பேரரசர் இரவும் பகலும் கவலைப்படத் தொடங்கினார். தனது மக்களுக்கு என்ன மாதிரியான அறிவுரை வழங்க வேண்டும், கடின உழைப்பு முக்கியம் என்பதை அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று அவருக்குப் புரியவில்லை. திருடுவது, கொள்ளையடிப்பது, மற்றவர்களிடமிருந்து லஞ்சம் வாங்குவது அல்லது மற்றவர்களின் உரிமைகளை மீறுவது ஆகியவை கெட்ட செயல்கள். அவற்றின் விளைவுகளும் மோசமானவை.

பேரரசர் இதைப் புரிந்துகொண்டார், ஆனால் இதை அவர் தனது குடிமக்களுக்கு விளக்க முயற்சிக்கும் போதெல்லாம், அவரது குடிமக்களால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பேரரசர் தனது அரசவையில் உள்ள அனைத்து அறிஞர்கள் மற்றும் அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி, அனைவரின் முன் கேள்விகளை வைத்து, அனைவரையும் பதிலளிக்க அழைத்தார். தீய செயல்களைச் செய்பவர் ஏன் தீய பலன்களைப் பெறுவதில்லை என்பதுதான் கேள்வி என்று பேரரசர் அறிவித்தார்? கொள்ளை, திருட்டு, லஞ்சம் அல்லது மற்றவர்களின் உரிமைகளை மீறுவது தீய செயல்கள் என்றால், அத்தகைய மக்கள் ஏன் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள் & எந்தத் தவறும் செய்யாதவர்கள் ஏன் வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்?

திடீரென்று, ஒரு பிச்சைக்காரன் பழைய, கிழிந்த ஆடைகளை அணிந்துகொண்டு அரசவைக்கு வந்தான். அவன் கைகளைக் கூப்பி பேரரசரின் முன் நின்றான். பேரரசர் தனது அரசவை உறுப்பினர்களை அழைத்து, அந்த பிச்சைக்காரனை ஏன் அரசவைக்குள் நுழைய அனுமதித்தார்கள் என்று கேட்டார். ஒரு அரசவை உறுப்பினர், “உங்கள் கருணையே! இந்த மனிதனைத் தடுக்க நாங்கள் நிறைய முயற்சித்தோம், ஆனால் அவர் எம்பெனானின் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்கள் தன்னிடம் இருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் பலமுறை கேட்டுக் கொண்ட பிறகு, நாங்கள் அவரை எண்ண அனுமதித்தோம். அனைத்து அறிஞர்களும் அமைச்சர்களும் சிரிக்க ஆரம்பித்தனர்.

பிச்சைக்காரனுக்கு யார் மீதும் பொறாமை இல்லை. அந்த முதியவர், "ஐயா, இந்த கிழிந்த பழைய துணிகளைப் பார்த்து, உங்கள் கவுன்ட்டர்கள் என்னை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை, ஆனால் நான் நகரத்திலிருந்து விலகி ஒரு குடிசையில் வசிக்கிறேன்" என்றார்.

பிச்சைக்காரன் தொடர்ந்தான், “உங்கள் சாம்ராஜ்யத்தில், கெட்ட செயல்களைச் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெறுகிறார்கள். நல்ல செயல்களைச் செய்பவர்கள் மகிழ்ச்சியற்றவர்கள். கெட்ட செயல்களைச் செய்பவர்களால் அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த விபத்துக்கு உங்கள் அமைப்புதான் காரணம். கெட்ட செயல்களைச் செய்ததற்காக உங்கள் அதிகாரிகளுக்கு நீங்கள் தகுந்த தண்டனை வழங்கியிருந்தால், இந்த சூழல் ஒருபோதும் எழுந்திருக்காது. உங்கள் அமைச்சரவையில் லஞ்சம், மோசடி போன்றவற்றை ஊக்குவிக்கும் அதிகாரிகள் மறைந்திருக்கிறார்கள். இந்தச் சதித்திட்டங்கள் அனைத்தும் உங்கள் மூக்கின் கீழ் நடந்து கொண்டிருக்கின்றன. சூழலை மாற்றுவது உங்கள் கைகளில் உள்ளது. நல்ல செயல்களின் முக்கியத்துவத்தை அறிந்த நேர்மையானவர்களை உங்கள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சுற்றுச்சூழலை மாற்றவில்லை என்றால், இயற்கை தன்னைத்தானே மாற்றிக் கொள்ளும். அநீதி அதன் உச்சத்திற்குச் செல்லும்போது, ​​நீதி நிலைநாட்டப்படுகிறது. ஆற்றில் நீர் மட்டம் அதிகமாக உயரும்போது, ​​அது பெருக்கெடுக்கத் தொடங்குகிறது. நதி வெள்ளத்தில் மூழ்கி புதிய பாதையை எடுக்கிறது. அதேபோல், உங்கள் குடிமக்கள் உங்களுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியைத் தொடங்கி உங்களை அரியணையில் இருந்து இறக்கலாம். மாற்றம் என்பது இயற்கையின் கொள்கை.”

பேரரசர் தனது கேள்விக்கான பதிலைப் பெற்றார். அவர் தனது அமைச்சரவையில் பிச்சைக்காரரை நியமித்து, தனது பேரரசில் சரியான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.

  • 323
·
Added a post

காலை உணவு

உண்ண சரியான நேரம் - 7 - 8 a.m.

உண்ண கூடாத நேரம் - காலை 11 மணிக்கு பிறகு.

காலையில் உண்ணும் முதல் ஆகாரம் உடலுக்கு மிகவும் அவசியம். காலை உணவு நம் மூளைக்கும் உடலுக்கும் சக்தியை கொடுக்கிறது. நம் அன்றய வேலைக்கான அனைத்து சக்திகளுக்கும் ஆதாரம் காலை உணவு அதனால் அதை என்றும் தவிர்க்காதீர்கள்.

மதிய உணவு

உண்ண சரியான நேரம் - மதியம் 12 - 2 மணி வரை!

உண்ண கூடாத நேரம் - 3 மணிக்கு பிறகு.

மத்திய உணவு காலை உணவு உண்ட 4 மணி நேரத்திற்கு பிறகு உண்பது உகந்தது.

அது நம் உடலின் உள்ள சர்க்கரை அளவை சமவிகிதத்தில் வைக்க உள்ளது. மேலும் நம் பசியை அதிகப்படுத்தாமல் வைக்க உள்ளது.

இரவு உணவு

உண்ண உகந்த நேரம் - 6 - 8 இரவு மணி

உண்ண கூடாத நேரம் - இரவு 9 மணிக்கு பிறகு !!!

இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு சாப்பிடுவது மிகவும் நன்று. கலோரி சரியாக எரியூட்டுவதற்க்கும் உறக்கம் நன்றாக வருவதற்கும் இது நன்கு உதவும்.

  • 322
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

ரிஷபம்

இளைய சகோதரர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கமிஷன் பணிகளில் லாபங்கள் உருவாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கற்பனை கலந்த உணர்வுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

மிதுனம்

மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. அரசு பணிகளில் மாற்றங்கள் காணப்படும். சக ஊழியர்களால் அலைச்சல்கள் ஏற்படும். வியாபார பணிகளில் போட்டிகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்

மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். கேளிக்கை விஷயங்களால் சேமிப்புகள் குறையும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். சமூக சிந்தனைகளால் மனதில் மாற்றம் பிறக்கும். குடும்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் குறையும். ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

சிம்மம்

பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்து தாமதங்கள் குறையும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பயணம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

கன்னி

திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஒப்பந்த பணிகள் சாதகமாக நிறைவு பெறும். திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மாறுபட்ட சிந்தனைகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

துலாம்

தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சிறு தூர பயணம் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

விருச்சிகம்

ஆன்மீகத் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

தனுசு

மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நேரிடும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் அனுசரித்து செல்லவும். சூழ்நிலைக்கு ஏற்ப கருத்துக்களை பகிர்வது நல்லது.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மகரம்

மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைக்கேற்ப உயர்வு உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தவறி போன சில வாய்ப்புகள் மீண்டும் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபார பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கும்பம்

சிறு மற்றும் குறுந்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆடம்பரப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அரசு பணிகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

மீனம்

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவரிடத்தில் அனுசரித்து செல்லவும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். முக்கியமான ஆவணங்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

  • 379