- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
அது பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு கூட்டமான ரயில். இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணச்சீட்டு ஆய்வாளர் (TC) பயணச்சீட்டுகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்துகொண்டிருந்த பதின்மூன்று வயது சிறுமி ஒருத்தியைக் கண்டார். அவர் அவளைக் கடுமையாகக் கண்டித்து, அடுத்த நிலையத்திலேயே இறங்கிவிடுமாறு உத்தரவிட்டார்.
அவரது வார்த்தைகளைக் கேட்டு அந்தச் சிறுமி மிகுந்த சோகத்துடன் காணப்பட்டாள்.
அதே பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்த சுதா மூர்த்தி (இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி), இந்தச் சம்பவத்தைக் கவனித்தார். அவர் அந்த ஆய்வாளரிடம், “நான் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். பயணத்தின் பாதியில் இப்படிச் சட்டென்று அந்தச் சிறுமியை இறங்கச் சொல்வது எப்படிச் சரியாகும்? தயவுசெய்து அவளுக்கு ரயிலின் இறுதி நிலையம் வரை பயணச்சீட்டு வழங்குங்கள். அதற்கான கட்டணத்தையும் அபராதத்தையும் நானே செலுத்துகிறேன்,” என்று கூறினார்.
“தயவுசெய்து அப்படிச் செய்யாதீர்கள். இது போன்றவர்களுக்கு உதவாதீர்கள். நீங்கள் அவளுக்கு உதவியது தெரிந்தால், மற்றவர்களும் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யத் தொடங்கக்கூடும். இது போன்றவர்களிடம் இரக்கமோ கருணையோ காட்டக்கூடாது,” என்று அந்த ஆய்வாளர் உறுதியாகக் கூறினார்.
அவரது ஆட்சேபனைகளைப் புறக்கணித்துவிட்டு, அவர் அந்தச் சிறுமிக்காகப் பயணச்சீட்டை வாங்கினார்.
அதன்பிறகு, சுதா மூர்த்தி அந்தச் சிறுமியை அணுகி, அவள் எங்கிருந்து வருகிறாள் என்றும், அவளது பின்னணி மற்றும் குடும்பம் பற்றியும் விசாரித்தார்.
அந்தச் சிறுமி தனது கதையைச் சொல்லத் தொடங்கினாள்...
அவள் வீட்டை விட்டு ஓடி வந்திருந்தாள். அவளது தாயின் மறைவுக்குப் பிறகு அவளது தந்தை மறுமணம் செய்துகொண்டிருந்தார், ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவரும் இறந்துவிட்டார். தந்தை உயிருடன் இருந்தவரை, அவளது மாற்றாந்தாய் அவளை நன்றாகவே நடத்தினார்; ஆனால், தந்தையின் மறைவுக்குப் பிறகு, அந்த மாற்றாந்தாய் அவளைக் கடுமையான சொற்களால் திட்டுவதும் அடிப்பதுமாக இருந்தார். அந்த நரக வேதனையைத் தாங்க முடியாமல், அந்தச் சிறுமி வீட்டை விட்டு ஓடி ரயிலில் ஏறியிருந்தாள். இலக்கோ தெளிவான பாதையோ இல்லாத ஒரு வாழ்க்கைப் பயணத்தை அவள் மேற்கொண்டிருந்தாள்.
சுதா மூர்த்தி அவள் சொன்ன அனைத்தையும் பொறுமையுடன் கேட்டார்.
ரயில் பெங்களூரு நிலையத்தை வந்தடைந்தது.
பயணிகள் இறங்கிக்கொண்டிருந்தனர்; சுதா மூர்த்தியும் கீழே இறங்கினார். அவருக்காக ஒரு கார் காத்திருந்தது. அவர் அதில் ஏற முற்பட்டபோது, அந்தச் சிறுமியைத் தேடினார். அந்தச் சிறுமி அருகில் ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்தாள்; அவளிடம் எதுவும் இல்லை—உடலில் அணிந்திருந்த ஆடைகளைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் அவள் வந்திருந்தாள்.
சுதா மூர்த்தி அவளருகே சென்று, அவளது கையைப் பிடித்து, அவளைத் தன்னுடன் காரில் அழைத்துச் சென்றார். வழியில், அவர் தனது நண்பர் ஒருவர் நடத்தி வந்த அனாதை இல்லத்திற்கு காரைத் திருப்பினார். அங்கு, அந்தச் சிறுமியின் நிலைமை குறித்துத் தனது நண்பரிடம் பேசினார்.
அதன்பிறகு, நண்பருக்கு நன்றி தெரிவித்துவிட்டு வீடு திரும்பினார்.
அவரது நண்பர் அந்தச் சிறுமியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவளுக்குக் கல்வி கிடைப்பதை உறுதி செய்தார். காலப்போக்கில் அவள் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பெற்றாள்; அந்த நிறுவனம் அவளை அமெரிக்காவிற்கும் அனுப்பியது. காலம் வேகமாக ஓடியது.
அமெரிக்காவில் உள்ள கன்னடச் சமூகம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அதில் சிறப்பு விருந்தினராக சுதா மூர்த்தியை அழைத்தது.
அந்நிகழ்ச்சிக்காக அவர் அமெரிக்கா சென்றார். ஒரு இளம் பெண் அவருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நேரில் கவனித்துக்கொண்டார். கடைசி நாளில், சுதா மூர்த்தி தனது தங்குமிடத்திற்கான கட்டணத்தைச் செலுத்த கவுண்டருக்குச் சென்றார்; ஆனால் அங்கிருந்த ஊழியர்கள், “அதற்குத் தேவையில்லை; ஒரு இளம் பெண் ஏற்கனவே முழு கட்டணத்தையும் செலுத்திவிட்டார்” என்று கூறினர். “யார் அந்தப் பெண்? என்னிடம் சொல்ல முடியுமா?” என்று சுதா மூர்த்தி கேட்டபோது, அவர்கள் சற்று பின்னால் நின்றுகொண்டிருந்த அந்த இளம் பெண்ணைச் சுட்டிக்காட்டினர்.
“எனக்கான செலவுகளை ஏன் நீ செலுத்தினாய்?” என்று கேட்டபோது, அந்த இளம் பெண் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை விவரித்தாள்—டிக்கெட் பரிசோதகரிடம் (TC) டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தபோது பிடிபட்டது முதல், இப்போது கட்டணம் செலுத்திய தருணம் வரை அனைத்தையும் கூறி, அவள்தான் அந்தச் சிறுமி என்பதை வெளிப்படுத்தினாள்.
“என் வாழ்நாள் முழுவதும் நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருப்பேன். குறைந்தபட்சம் எனக்கு இந்தச் சிறிய வாய்ப்பாவது கிடைத்தது. உங்கள் கட்டணத்தைச் செலுத்துவது மிகச் சிறிய செயல்; என்னால் முடிந்ததைச் செய்தேன்,” என்று கூறியவாறே, கண்களில் கண்ணீருடன் சுதா மூர்த்தியின் கால்களில் விழுந்து வணங்கினாள்.
அவளைப் பார்த்ததும் சுதா மூர்த்தி வியப்படைந்தார்; அவரை இறுக்கமாக அணைத்துக்கொண்டார். இருவரின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது..
நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்! அவர்கள் நம்மை ஏமாற்றினால், இறுதியில் அவர்கள் தங்கள் கர்மாவிற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
ஆனால் அவர்களின் தேவை உண்மையானதாக இருந்தால், நம் உதவியால் ஒரு வாழ்க்கை மகிழ்ச்சியடைகிறது.
ஒரு சிறிய ஆலவிதை எப்படிப் பிரம்மாண்டமான மரமாக வளர்கிறதோ, அதேபோல நாம் குழந்தைகளுக்கு ஊக்கமளித்தால், அவர்கள் எதிர்கால இந்தியாவின் முதுகெலும்பாகவும் வழிகாட்டும் ஒளியாகவும் திகழ்வார்கள்; நாட்டின் பொன்னான எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆற்றலைப் பெறுவார்கள்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு வார்த்தை ஊக்கத்தையும் ஆதரவையும் அளிப்பது மட்டுமே. ஏறிப் படர்வதற்கு ஒரு தாங்கி கிடைக்கும்போது மல்லிகைக் கொடி செழித்து மலர்வதைப் போலவே, குழந்தைகளும் உலகளாவிய உயரங்களை எட்டி, நமக்கு அற்புதமான வெற்றிகளைப் பெற்றுத் தர முடியும்.
1. நடைபயிற்சி (Brisk Walking)
நாங்கள் தினமும் வீடு அலுவலகங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பது தவறான கருத்து. நடப்பதற்கென்றே நேரம் ஒதுக்கி தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். நடக்கும்போது முன்னோக்கி நடப்பது பின்னோக்கி நடப்பது பக்கவாட்டில் நடப்பது போன்றவைகளையும் கடைபிடிக்கலாம்
இதனால் இதய ஆரோக்கியம் மேம்பாடு, அதீத கொழுப்பு கரைதல், அத்துடன் சீரான மன அமைதி ஆகியவற்றை பெறலாம். குறிப்பாக மூட்டு வலியுள்ளவர்களுக்கும் ஏற்றது நடைபயிற்சி என்பது சிறப்பு.
2. யோகா (Yoga)
நடைப்பயிற்சி தவறாமல் செய்கிறோம். இதில் யோகா தனியே தேவையா என்று நினைப்பவர்கள் நிறையபேர். அதன் நன்மைகளை உணர்ந்தால் கட்டாயம் யோகா அவசியம் என்பீர்கள். வாரத்திற்கு குறைந்தது 3-4 முறையாவது தேர்ந்த யோகா பயிற்றுனர் மூலம் யோகாவை செய்தல் நலம். சூர்ய நமஸ்காரம், பிராணாயாமா மற்றும் ஆசன வகைகள் தரும் நன்மைகள் நிறைய. நெகிழ்ச்சியான மனநிலை , சீரான சுவாசம், மன அமைதி, ஹார்மோன் சமநிலை ஆகியவைகள் அதில் சில.
3. லேசான எடைப் பயிற்சி (Light Strength Training)
சிலர் வீடுகளில் எங்களுக்கான உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொல்பவர்கள் ஜிம்மிற்கு சென்று பயிற்சிகளை செய்வதும் உண்டு அதில் முக்கியமானது இந்த பயிற்சி இதில்
Dumbbell curls, squats, lunges, resistance band workouts போன்றவை அடங்கும் இதனால் தசை வலிமை, எலும்பு அடர்த்தி, மெட்டபாலிசம் மேம்பாடு ஆகிய நன்மைகளுடன் உடலின் தசை ஏற்றத்தாழ்வுகளை சீராக்கும். தசைகளை வலிமையாக்குவதால் அன்றாட பயன்பாட்டிற்கு திறமையாக செயல்பட உதவும்.உங்கள் உடல்நிலை பொறுத்து பயிற்சியாளர் கண்காணிப்பு டன் இவைகளை மேற்கொள்ளலாம்.
4. சைக்கிள் ஓட்டுதல் (Cycling)
என்னது சைக்கிள் ஓட்டுவதா? அதையெல்லாம் மறந்து வருசக்கணக்காச்சு? என்பவர்களுக்காகவே வந்துள்ளது வீட்டினுள் ஓட்டும் சைக்கிள் பயிற்சி சாதனங்கள். வெளியே ஓட்டினால் இயற்கை மேலும் நன்மை தரும். இயலாத போது வீட்டில் செய்யலாம். தினமும் 20-30 நிமிடங்கள் மெதுவாக அல்லது மிதமான வேகத்தில் இந்தப் பயிற்சி செய்யும் போது இதயம் , நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும். அத்துடன் அதிகப்படியான கலோரிகள் குறைந்து எடை சீராகவும், அதிக எடை தரும் கால்வலி நீங்கவும் உதவுகிறது.
5. நீட்சி & சமநிலை பயிற்சிகள் (Stretching & Balance Exercises)
தற்போதைய பயிற்சிகளில் Toe touch, side stretch, standing leg balance, tai chi உள்ளிட்ட இந்த பயிற்சி நிச்சயம் அவசியமாகிறது. திடீரென தோன்றும் வலி போன்றவைகளுக்கு உடனடி நிவாரணமாகவும், உடல் சமநிலை பெறவும், நெகிழ்வான மூட்டுகளுக்கும் ஏதுவாகிறது இந்தப் பயிற்சிகள். சிலர் அடிக்கடி எதிர்பாராத விதமாக கீழே விடுவதுண்டு. அதிலிருந்து பாதுகாப்பு பெற தினமும் காலை அல்லது மாலை 10-15 நிமிடங்கள் செய்யும் இந்தப் பயிற்சி உதவுகிறது.
சரி சரி. இதோ உடனே இந்தப் பயிற்சி எல்லாம் செய்யப் போகிறோம் என கிளம்பி விடாதீர்கள். அதற்கு முன் ஏதேனும் உடல்நிலை பிரச்சினைகள் (உதா: இதய நோய், மூட்டு வலி, ரத்த அழுத்தம்) இருந்தால் மருத்துவர் ஆலோசனையுடன் பயிற்சிகளைத் துவங்குவது நல்லது. இவற்றுடன் தேவையான தண்ணீர் பருகுதல், சத்தான உணவு பழக்கம் மற்றும் போதிய உறக்கம் மிக அவசியம் என்பதையும் கவனத்தில் வைப்பது நலம்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலாய்க்கா சித்ரே (24), அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியிலுள்ள டேடன் நகரில் வசித்து வந்தார். இவரும், நேபாளத்தைச் சேர்ந்த இவரது நண்பர் நவம்கவுலும் இங்குள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துவிட்டு அமெரிக்காவிலேயே தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் லோயர் மன்ஹாட்டன் சப்வே ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளனர். ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இருவரும் அந்த வழியே வந்த ரயில் மோதி அதே இடத்திலேயே இறந்தனர். பின்னர் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளத்தில் நவம் கவுல் தவறி விழுந்ததாகவும், இதைப் பார்த்த மலாய்க்கா சித்ரே அவரைக் காப்பாற்றச் சென்று விபத்தில் சிக்கியதாகவும் நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ரட்கர்ஸ் பல்கலைக் கழகத்திலுள்ள ரட்கர்ஸ் பிசினஸ் பள்ளியில் பட்டப்படிப்பை நவம் கவுல் முடித்துள்ளார். அதேபோல் மலாய்க்கா சித்ரே, ரட்கர்ஸ்-நியூ பிரன்ஸ்விக் கலை, அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப்படிப்பை கடந்த 2024-ல் முடித்துள்ளார். அகாடியா பார்மசூடிக்கல்ஸ் நிறுவனத்தில் சித்ரே ஆபரேஷன்ஸ் ஸ்பெஷலிஸ்டாகவும், நவம் கவுல் புளூம்பெர்க் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்டாகவும் வேலை பார்த்து வந்துள்ளனர்.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இதில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் டீஸர் வரவேற்பைப் பெற்றுவருகிறது. “சென்டிமென்ட் கலந்த ஆக் ஷன் திரைப்படம் இது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான த்ரில்லர் திரைக்கதை மற்றும் ஆக் ஷன் காட்சிகள் இணைந்த படமாக இது இருக்கும்” என படக்குழு கூறியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். சிறையில் அவர் பல்வேறு துன்பங்களை சந்தித்து வரும் நிலையில் அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ஸ்மித் தனது 52வது வயதில் பெரும் கோடீஸ்வரரை திருமணம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மாஜி பிரதமருமான இம்ரான் கான் தற்போது ஊழல் வழக்கில் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் துன்புறுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் இம்ரான் கான் இறந்துவிட்டதாக அவ்வப்போது வதந்திகள் பரப்பி வருகின்றனர்.
இதற்கிடையே தான் இம்ரான் கானின் முன்னாள் மனைவி தனது 52வது வயதில் 2வது திருமணம் செய்துள்ளார். அதாவது இம்ரான் கான் மொத்தம் 3 திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி பெயர் ஜெமிமா கோல்ட்ஸ்மித். இவர் சினிமா தயாரிப்பாளர். இவரை இம்ரான் கான் கடந்த 1995ம் ஆண்டு திருமணம் செய்தார். அதன்பிறகு கடந்த 2004ம் ஆண்டில் அவர்கள் விவாகரத்து பெற்றனர். பிறகு இம்ரான் கான் பத்திரிகையாளர் ரேஹம் கான் என்பவரை 2015ம் ஆண்டு ஜனவரி 8 ம் தேதி 2வது திருமணம் செய்தார். இந்த திருமணம் 2015அக்டோபர் 22ம் தேதியுடன் முறிந்தது. இருவரும் விவாகரத்து பெற்றனர். பிறகு 2018 ம் தேதி இம்ரான் கான் புஷ்ரா பீபி என்ற ஆன்மிக வழிகாட்டியை 3வது திருமணம் செய்தார். தற்போது ஊழல் வழக்கில் இம்ரான் கானுடன், புஷ்ரா பீபியும் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் தான் இம்ரான் கானுக்கு முதல் மனைவியாக இருந்த ஜெமிமா கோல்ட்ஸ்மித்துக்கு தற்போது 52 வயது ஆகிறது. இவர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் பிறந்தவர் என்பதால் தற்போது அங்கு வசித்து வருகிறார். இம்ரான் கான் - ஜெமிமா கோல்ட்ஸ்மித் தம்பதிக்கு மொத்தம் 2 மகன்கள் பிறந்தனர். ஒருவரின் பெயர் சுலைமான், இன்னொருவரின் பெயர் காசிம். இவர்கள் 2 பேரும் பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கொள்ளையர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றைத் தூக்கிச் சென்றுள்ளனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Ladysmith என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முகமூடியும் கையுறைகளும் அணிந்த இருவர், அந்த ஏடிஎம் இயந்திரத்தை சங்கிலி மூலம் தங்கள் ட்ரக்குடன் இணைத்து, இழுத்துப் பெயர்த்து, தங்கள் ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.
இந்தக் காட்சிகள் அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளன.
கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரக் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளையர்கள் குறித்து ஏதேனும் தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கனடாவிற்கு வெளியே மருத்துவக் கல்வியை முடித்த பட்டதாரிகள், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பின்தங்கிய அல்லது தொலைதூரப் பகுதிகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற மாகாண அரசின் நிபந்தனை சட்டவிரோதமானது என பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து மருத்துவப் பயிற்சிக்கு விண்ணப்பிப்போருக்கு இத்தகைய "சேவைத் திரும்பச் செலுத்தல்" நிபந்தனையை விதிக்க மாகாண சுகாதார அமைச்சுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என நீதிபதி மெத்யூ கெர்ச்னர் தெரிவித்துள்ளார்.
கனடிய மருத்துவக் கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளுக்கு இல்லாத இந்த நிபந்தனை, வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒருவர் எங்கு வாழ வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவருடைய அடிப்படைத் தனிப்பட்ட முடிவாகும். அரசின் தலையீடின்றி வாழும் தனிநபர் சுதந்திர உரிமையில் அரசாங்கம் தலையிட முடியாது என நீதிபதி மெத்யூ கெர்ச்னர் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தை மீறிச் செயல்படும் மருத்துவப் பட்டதாரிகளுக்கு கடுமையான நிதி அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்ததாக நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயிற்சி வாய்ப்பைப் பெறுவதற்காக வெளிநாட்டுப் பட்டதாரிகள் வேறு வழியின்றி இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தேவையான சட்ட மாற்றங்களைச் செய்யுமாறு பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அமைச்சுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், இத்தீர்ப்பு கிராமப்புறங்களில் மருத்துவர்களின் இருப்பை உடனடியாகப் பாதிக்கக்கூடும் என்பதால், அமைச்சு இப்பிரச்சினையை சீர்செய்வதற்காக இத்தீர்ப்பின் அமலாக்கத்தை 60 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: திட்டமிட்டபடி வேலை முடியவில்லையே என கோபப்படுவீர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பங்குதாரரை பகைத்துக் கொள்ளாதீர்.
ரிஷபம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
மிதுனம்: பழைய கடனை பைசல் செய்வீர். செலவைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். பிள்ளைகள் தங்கள் பொறுப்பு அறிந்து செயல்படுவர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கை யாளர்களை கவருவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
கடகம்: திட்டமிட்டபடி செயல்பட்டு சில வேலைகளை முடிப்பதால் மனநிறைவு உண்டாகும். கல்யாண முயற்சி பலிதமாகும். சகோதரரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாதம் குறையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். போட்டிகள் குறையும்.
கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசு வேலைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறாதீர்.
துலாம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர். வங்கியில் லோன் கிடைக்கும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர். சொந்த ஊர் பயணங்கள் உற்சாகம் தரும். வியாபாரரீதியாக முக்கிய பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
விருச்சிகம்: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மூத்தோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர் களை கவரும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் மதிப்புயரும்.
தனுசு: பழைய பிரச்சினைகளை சுமூகமாக பேசித் தீர்ப்பீர். மனைவி, பிள்ளைகளின் உடல் நலம் சீராகும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலத்தை விற்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க பணியாட்களை தேடுவீர். அலுவலகத்தில் உங்களின் உழைப்புக்கு மதிப்பு உண்டு.
மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர் கள். அரசால் ஆதாயம் உண்டு. வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரம் சூடு பிடிக்கும்.
கும்பம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நட்பை புதுப்பிப்பீர். இல்லத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேதிகாரிகள் பாராட்டுவர்.
மீனம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர், பழைய நண்பர் கள் தேடி வருவர். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 30 ஆம் தேதி புதன்கிழமை 16.9.2026.
இன்று காலை 10.32 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
இன்று இரவு 07.35 வரை விசாகம். பின்னர் அனுஷம்.
இன்று மாலை 03.15 வரை வைதிருதி. பின்னர் விஷ் கம்பம்.
இன்று காலை 10.32 வரை பாலவம். பின்னர் இரவு 11.19 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று காலை 06.02 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: எதிர்பார்த்த பண வரவு இல்லாவிட்டாலும், சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினையில் இருந்து விடுபட, ஓயாமல் உழைப்பீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு, கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.
ரிஷபம்: வெளியூர் பயணம் அதிகரிக்கும். வரவுக்கேற்ற செலவு இருக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
மிதுனம்: மன இறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து, செல்வாக்கு கூடும்.
கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பல வகையிலும் பண வரவு கூடும். அதில் ஒரு பகுதியை சேமிப்பீர்கள். பழுதான சாதனங்கள், வாகனங்களை மாற்றுவீர்கள். பேச்சில் பொறுமை தேவை.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர் பார்த்த விலைக்கே பழைய சொத்துகள் விற்பனையாகும். பெரிய மனிதர்கள், அரசு அதிகாரிகளின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
கன்னி: பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தினருடன் தேவையற்ற வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் டென்ஷன் வந்துபோகும். தொடங்கிய பணிகள் சற்று தாமதமாகி முடியும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
துலாம்: புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வீண், ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த தொகை தக்க சமயத்தில் கைக்கு வரும். நீண்ட காலத்துக்குப் பிறகு, குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.
தனுசு: போட்டிகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பயணத்தால் ஆதாயம் உண்டு.
மகரம்: தவிர்க்க முடியாத செலவுகள், பயணங்கள் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும்.
கும்பம்: மனப் போராட்டங்கள் ஓயும். உங்களது சமயோசிதமான பேச்சால், தடைபட்டிருந்த வேலைகளை முடிப்பீர்கள். நவீன ரக வாகனம், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பல வகையிலும் பொருட்கள் சேரும்.
மீனம்: பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாகனப் பயணத்தின்போது கவனம் தேவை. ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 15.9.2026.
இன்று காலை 08.22 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று மாலை 05.41 வரை சுவாதி. பின்னர் விசாகம்.
இன்று மாலை 03.17 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.
இன்று காலை 09.22 வரை பத்திரை. பின்னர் இரவு 09.57 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று காலை 06.02 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 05.41வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
"நாள் முழுவதும் நீ என்ன செய்கிறாய்?"
என்று கேட்ட கணவனின் தலை இரண்டாகப் பிளக்கப்பட்டது! நீதிபதியும் அதே கேள்வியைக் கேட்டவர் தான்! ![]()
![]()
நீதிபதி அந்தப் பெண்ணிடம், "ஏன் உங்கள் கணவரின் தலையை இரண்டாகப் பிளந்தீர்கள்?" என்று கேட்டார். ![]()
அதற்கு அந்தப் பெண், "கனமான நீதிபதி அவர்களே, கல்லூரியில் நான் மிகச் சிறந்த மாணவியாக இருந்தேன்; அவரோ என் ஆசிரியராக இருந்தார். ![]()
அவர் என் மீது காதல் கொண்டார்; என் கண்களில் கனவுகளை நிரப்பி, பல வாக்குறுதிகளை அளித்தார்: 'உன் ஆராய்ச்சியைத் தொடர அனுமதிப்பேன், நீ முன்னேற உதவுவேன்!' ![]()
என் மனதின் ஆழத்திலிருந்து 'உண்மையிலேயே கடவுள் மிகவும் கருணையுள்ளவர்' என்று நினைத்தேன். ![]()
ஆனால் திருமணத்திற்குப் பிறகு, என் ஆராய்ச்சியையும் கனவுகளையும் மறந்துவிட்டேன்; நாள் முழுவதும் அஹ்மத், மஹ்மூத், இப்ராஹிம், ஃபாத்திமா ஆகியோரைப் பராமரிப்பதிலேயே மும்முரமாக இருந்தேன். ![]()
![]()
இமானுக்குப் பாலூட்டினேன், மஹ்மூத்தின் டயப்பரை மாற்றினேன், அஹ்மத் வீட்டுப்பாடம் செய்ய உதவினேன், ஃபாத்திமாவுக்குக் கணக்குக் கற்பித்தேன். ![]()
குழந்தைகளுக்குச் சிப்ஸ் செய்தேன், இரவு உணவிற்குச் சாண்ட்விச் தயாரித்தேன், வீடு முழுவதையும் சுத்தம் செய்தேன், குப்பையை வெளியே கொட்டினேன். ![]()
காய்ந்த துணிகளை மடித்து வைத்தேன், அழுக்குத் துணிகளைத் துவைக்கப் போட்டேன், பிரிட்ஜைச் சுத்தம் செய்தேன், வெங்காயம் நறுக்கினேன். ![]()
இறைச்சியில் மசாலா தடவி ஊறவைத்தேன், குழந்தைகளின் பள்ளிப் பைகளைத் தயார் செய்தேன், விருந்தினர்களுக்கு இனிப்பு வகைகள் செய்தேன், குளியலறையைச் சுத்தம் செய்தேன். ![]()
திரைகளைக் கழற்றி மீண்டும் மாட்டினேன், சட்டைகளை அயர்ன் செய்தேன், சூப்பர் மார்க்கெட்டைத் தொடர்புகொண்டேன், டிரை கிளீனரை அழைத்தேன். ![]()
ஃபாத்திமா பற்றிய புகாருக்காகப் பள்ளியைத் தொடர்புகொண்டேன்; இவ்வளவு செய்த பிறகும், என் கணவர் சோபாவில் அமர்ந்து உடலைச் சொறிந்துகொண்டும், விரல் மூட்டுகளைச் சடசடவென முறித்துக்கொண்டும் கேட்பார்: 'நதியா, சொல்... நாள் முழுவதும் நீ என்னதான் செய்கிறாய்?' ![]()
வெங்காயம் நறுக்கப் பயன்படுத்திய கத்தியை எப்போது கையில் எடுத்தேன் என்றே தெரியவில்லை; அவர் மனதில் என்ன ஓடுகிறது என்று பார்க்க, அவரது மூளையைத் தோண்டி எடுக்கும் முயற்சியில் தலையில் ஓங்கி வெட்டிவிட்டேன்!" ![]()
நீதிமன்றத்தில் ஒரு திகைப்பூட்டும் அமைதி நிலவியது; நீதிபதி அமைதியாக அமர்ந்திருந்தார். ![]()
உண்மையைச் சொல்லப்போனால், இந்த வழக்கு விசாரணைக்கு முன்பாக, அவரும் தொலைபேசியில் தன் மனைவியிடம் அதே கேள்வியைக் கேட்டிருந்தார்: "அன்பே, நாள் முழுவதும் நீ என்ன செய்கிறாய்?" ![]()
இன்றுவரை, அந்த நீதிபதி தன் தாயார் வீட்டிலிருந்து திரும்பவே இல்லை!
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 14.9.2026.
இன்று காலை 08.40 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று மாலை 04.12 வரை சித்திரை. பின்னர் சுவாதி.
இன்று மாலை 03.41 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்.
இன்று காலை 08.40 வரை கரசை. பின்னர் இரவு 09.01 வரை வனிசை. பின்பு பத்திரை.
இன்று காலை 04.12 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: எதிர்பார்த்த பண வரவு இல்லாவிட்டாலும், சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினையில் இருந்து விடுபட, ஓயாமல் உழைப்பீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு, கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.
ரிஷபம்: வெளியூர் பயணம் அதிகரிக்கும். வரவுக்கேற்ற செலவு இருக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
மிதுனம்: மன இறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து, செல்வாக்கு கூடும்.
கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பல வகையிலும் பண வரவு கூடும். அதில் ஒரு பகுதியை சேமிப்பீர்கள். பழுதான சாதனங்கள், வாகனங்களை மாற்றுவீர்கள். பேச்சில் பொறுமை தேவை.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர் பார்த்த விலைக்கே பழைய சொத்துகள் விற்பனையாகும். பெரிய மனிதர்கள், அரசு அதிகாரிகளின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
கன்னி: பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தினருடன் தேவையற்ற வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் டென்ஷன் வந்துபோகும். தொடங்கிய பணிகள் சற்று தாமதமாகி முடியும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
துலாம்: புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வீண், ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த தொகை தக்க சமயத்தில் கைக்கு வரும். நீண்ட காலத்துக்குப் பிறகு, குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.
தனுசு: போட்டிகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பயணத்தால் ஆதாயம் உண்டு.
மகரம்: தவிர்க்க முடியாத செலவுகள், பயணங்கள் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும்.
கும்பம்: மனப் போராட்டங்கள் ஓயும். உங்களது சமயோசிதமான பேச்சால், தடைபட்டிருந்த வேலைகளை முடிப்பீர்கள். நவீன ரக வாகனம், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பல வகையிலும் பொருட்கள் சேரும்.
மீனம்: பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாகனப் பயணத்தின்போது கவனம் தேவை. ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் அதிகரிக்கும்.































