- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கிய இளன், தற்போது ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கியுள்ளார்.
சான்வீ மேக்னா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ‘மேட் இன் கொரியா’வைத் தயாரித்த ‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்’ ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். இப்படம் ஆக.21-ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
“திருமணத்துக்குப் பிறகும் பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறார் நாயகி சான்வீ. அதனால், அவரது கணவரான இளன், மனைவி வீட்டுக்கே குடி பெயர்கிறார். இதன் பின்னர் தொடங்கும் குடும்ப கலாட்டா, கலாச்சார மோதல்கள், உறவு சிக்கல்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள்தான் இந்தப் படம்.
சிரிப்பும், சிந்தனையும் கலந்த பயணமாகப் படம் நகரும். இறுதியில், “சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை” என்பதைப் படம் சொல்லும்” என்றது படக்குழு.
🌹இசை மேதை வயலின் ஜாம்பவான் குன்னக்குடி வைத்தியநாதன் ஒரு நாள் சேலம் மாநகரில் தன் இசைக்குழுவினர் உடன் சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்தார்....
🌹முதல்வர் எம்ஜிஆர் இரு புறமும் கும்பிட்டு கொண்டே வர சாலை ஓரம் நின்ற அந்த பிரபலமும் கும்பிட காரை நிறுத்த சொல்லி கீழே இறங்கி...
🌹என்ன நீங்க இங்கே என்று கேட்க நாளை சேலத்தில் எங்க குழுவினர் கச்சேரி.
நல்லது அதுக்கு ஏன் இங்கே என்று கேட்க...
🌹முதல்வர் கார் வரும் நேரம் என்று எங்கள் வாகனம் வேன் அதை ஓரமாய்
நிறுத்தி கொள்ள சொல்ல...
🌹சற்றே முகம் மாறிய முதல்வர் அருகில் பின்னால் நின்ற ஆட்சியர் அழைத்து இனி நான் எங்கு போனாலும் மற்றவர்களை நிறுத்த வேண்டாம்...
🌹இங்கே மட்டும் இல்லை
இனி எங்கேயும் தமிழ்நாட்டில் இனி இது போல கூடாது என்று அங்கேயே
தமிழக உயர் காவல் அதிகாரிக்கும் சொல்ல சொல்லி...
🌹அந்த பிரபலம் மற்றும் குழுவினர் இடம் சாரி கேட்க அனைவரும் உங்களை இவ்வளவு அருகில் பார்க்கும் வாய்ப்பே மகிழ்ச்சி என்று அந்த பிரபலம்
தவிர மற்றவர்கள் சொல்ல கூடி சாலை ஓரம் நின்ற மற்றவர்கள் அந்த பிரபலம் அவருக்கு நன்றி சொல்ல
🌹மறுநாள் சேலம் கர்நாடக தன் இசை கச்சேரியில்
🌹இதுவரை என் குழுவில் நான் திரைப்பட பாடல்கள் இசைத்தது இல்லை... இப்போ முதன் முறையா
🌹உங்கள் முன்னாடி என்று நேற்று சாலை ஓர சம்பவம் சொல்லிஅவர் இசைத்த பாடல்
'நீங்க நல்லா இருக்கணும்
நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள
ஏழைகளின் வாழ்வு முன்னேற' என்ற பாடல்...
அரங்கம் ஆர்ப்பரித்தது..
🌹தலைவர் மூன்றாம் முறை எமனை வென்று நலமுடன் திரும்பி மீண்டும் நாடு ஆளும் வாய்ப்பை தமிழக மக்கள் அவருக்கு நல்கிய போது...
🌹ஒரு நாள்எம் ஜி ஆர் அந்த இசை மேதை வயலின் ஜாம்பவான் குன்னக்குடி
வைத்தியநாதன்
அவரை வீட்டுக்கு வர சொல்லி...
🌹இறுதி நாட்கள் எட்டுவதை உணர்ந்து கொண்டாரோ என்னவோ நீங்க வாசிங்க
நான் கேட்கணும் இசையை என்று அவர் வாசிக்க அதை தலைவர்
தன் மடியில் இருக்கும்
டேப் ரெகார்டர் அதில் பதிவு செய்யும் அதிகம் வராத புகைப்படம் பதிவில்...
🌹எம்ஜிஆர் ஒரு சரித்திரம்
🌹எம்ஜிஆர் ஒரு அவதாரம்
🌹எம்ஜிஆர் ஒரு விந்தையான பிறவி...
ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு. அவரு லாட்ஜுக்கு ஒருத்தர் வந்தாரு. ரூம் புக் பண்றதுக்கு முன்னாடி ரூம் எப்பிடியிருக்கு என பார்க்கணும்னு சொன்னாரு. உடனே லாட்ஜ் ஓனர் அப்பிடின்னா 500 ரூவா டெபாஸிட் குடுக்கணும்னு சொன்னாரு. உடனே அந்த ஆள் ஒரு புது 500 ரூவாவை எடுத்து டேபிள் மேல வச்சிட்டு படியேறி ரூம் பார்க்க போனாரு.*
*லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவாவை எடுத்து லாட்ஜ்ல ரூம் தொடைக்கிற அம்மாகிட்ட குடுத்து போன மாசம் சம்பளத்துல பாக்கி வச்ச 500 ரூவா இந்தான்னாரு. அந்தம்மா அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பக்கத்துல இருந்த டீக்கடையில குடுத்து போன மாச டீ பாக்கி இந்தா வச்சிக்கோன்னு குடுத்தாங்க.*
*அந்த டீக்கடைக்காரரு அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பால் பண்ணையில முதலாளிக்கிட்ட குடுத்து போன மாச பால் பாக்கி இந்தாங்கன்னு சொன்னாரு. பால் பண்ணை முதலாளி அந்தப் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய் கால்நடை மருத்துவர்கிட்ட கொடுத்து, இந்தாங்க சார், கடந்தமாதம் மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தபோது, சில்லறை இல்லைன்னு 2000 ரூவா நோட்டு வாங்கிக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல, இந்தாங்கன்னு கொடுத்தார். அந்த நோட்டை எடுத்துக்கிட்டு லாட்ஜுக்கு வந்த மருத்துவர், கடந்தமாதம் தங்கி இருந்த ரூம் வாடகை பாக்கி இந்தாங்கன்னு 500 ரூவாவை குடுத்தார்.*
*லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவா நோட்டை மறுபடி டேபிள் மேல வச்சாரு. ரூம் பார்க்க வந்தவரு, எனக்கு எந்த ரூமும் பிடிக்கலை. நான் போறேன்னு 500 ரூவாவ எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.*
*இப்ப 500 ரூவா வந்த இடத்துக்கே போயிடுச்சி. ஆனா போற வழியில சம்பள பாக்கி, டீக்கடை பாக்கி, பால் பாக்கி,பால் பண்னை பாக்கி,மருத்துவர் பாக்கி, லாட்ஜ் வாடகை பாக்கி என எல்லாத்தையும் சரி பண்ணிட்டுப் போயிடுச்சி. யாருக்கும் இழப்பில்லாம.*
🌹கண்ணதாசன் வீட்டில் அசைவம் சமைக்கப்பட்டால் காமராஜர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இரவு நேரங்களில் இருவரும் சந்தித்தால் நேரம் போவதே தெரி யாமல் பேசுவார்கள்.
🌹நாகர்கோவில் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தி வெற்றி தேடிக் கொடுத்தவர் கண்ணதாசன். கண்ணதாசன் மது அருந்துவார் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் “மது அருந்துபவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்தது. அப்போது கண்ணதாசனை அழைத்துப் பேசினார் காமராஜர்.
🌹கண்ணதாசா, இந்த சனியன் மதுவை விட்டுத் தொலை. இதனால உன்னைப் பத்தி தப்பாப் பேசுறாங்க. பார் என்று கேட்டுக் கொண்டார். உடனே, கண்ணதாசன் எல்லோரும் சொல்வதுபோல, சினிமா உலக அவசரம், சிக்கல், வீட்டுப்பிரச்னை போன்ற வற்றைச் சொல்லி, “அதுக்காத்தானே குடிக்கிறேன். அதுவும் பெர்மிட் வாங்கித் தானே குடிக்கிறேன் என்று சமாதானம் சொல்லிப் பார்த்தார்.
🌹ஆனாலும் காமராஜர் விடுவதாக இல்லை. “அட.. விட்ருப்பா என்றார். யோசித்த கண்ணதாசன், “”சரி விட்டுர்றேன்… குடிக்கிறதை இல்லை. காங் கிரஸ் கட்சியை என்றபடி கிளம்பினார். காமராஜர் பெரிதாகச் சிரித்து தலை அசைத்தார்.
🌹காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான் தலைவனாகப் பார்த்தேன் என்று மனமாரச் சொன்னவர்.
🌹கவிஞர் கண்ணதாசன் காங்கிரசிலிருந்து விலகி திரும்பவும் காங்கிரசில் சேர எண்ணியபோது தலைவர் காமரசருக்கு திரைப்பாடல் மூலம் விட்ட செய்தி
அந்த சிவகாமி மகனிடம்
சேதி சொல்லடி என்னை
சேரும் நாள் பார்க்க சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச
வார்த்தை இல்லடி
காமராசர் தாயார் பெயர் சிவகாமி
🌹நான் எம்.ஜி.ஆருடன் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும் ஒரு நடிகன் என்ற முறையில் 80-களில் அவருடன் பழகி இருக்கிறேன். புரட்சித் தலைவரின் மிகப்பெரிய ரசிகன் என்ற முறையில் எம்.ஜி.ஆர் குறித்த தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் ராஜேஷ்.
“🌹நான் சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தபோது அந்த வீட்டுக்கு புரட்சித் தலைவர் வந்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் தருவதற்காக ராமவரம் தோட்டத்துக்கு என் மனைவியுடன் சென்றிருந்தேன்.
🌹அது ஒரு சனிக்கிழமை காலை. வரவேற்பறையில் காத்திருந்தோம். யார் யாரோ வருகிறார்கள், அவர்களெல்லாம் உள்ளே அழைக்கப்படுகிறார்கள். எனக்கு மட்டும் அழைப்பு வரவே இல்லை. கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஓடிவிட்டது.
“🌹என்னங்க… இவ்வளவு நேரம் காக்க வைக்கிறாரு” என்று என் மனைவி கேட்க ஆரம்பித்துவிட்டார்.
“🌹எவ்வளவு பெரிய மனிதரை பார்க்க வந்திருக்கோம். அவருக்காக சாயந்திரம் வரை கூட காத்திருக்கலாம்… இரு” என்று சொன்னேன்.
🌹பத்தரை மணிக்கு மேல் உள்ளே அழைத்தார். அழைப்பிதழை கொடுத்ததும், கண்டிப்பா வர்றேன் என்றார்.
🌹1987 ஜனவரி 16 என் வீட்டு கிரஹப்பிரவேசம். அன்றைக்கு காலையில் இயக்குநர் கே.சுப்பிரமணியனின் மனைவி எஸ்.டி.சுப்புலட்சுமி காலமாகி விட்டார். துக்க வீட்டுக்கு சென்றுவிட்டு நல்ல காரியத்துக்கு வரக்கூடாது என்பதால் காலையில் என் வீட்டுக்கு வந்துவிட்டார். பட்டு வேட்டி, பட்டு சட்டையில் வந்தவர், என்னைப் பார்த்ததும் “என்ன… இப்ப திருப்தியா?” என்று கேட்டார்.
🌹அப்போது நான் அடைந்த சந்தோஷம் இருக்கே அதற்கு ஈடு இணையே இல்லை. மற்றவர்களை சந்தோஷப்படுத்தி அதைப் பார்த்து அவர் சந்தோஷமடைவார். அது தான் தலைவர்.
🌹எங்கள் வீட்டு கிரஹப்பிரவேசத்தை முடித்துக்கொண்டு பிறகு தி.நகர் அலுவலகத்துக்கு சென்று பட்டு வேட்டி, பட்டு சட்டையை மாற்றிக் கொண்டு டைரக்டர் கே.சுப்பிரமணியன் வீட்டுக்கு துக்கம் அனுசரிக்கச் சென்றார்.
🌹இந்தச் சம்பவம் நடந்து பல வருடங்கள் கழித்து ஒரு நாள் பிரமுகர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் சொன்னார், “உங்க வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு பத்திரிகை கொடுக்க வந்தபோது, தலைவர் உங்களை ரொம்ப நேரம் காக்க வச்சார் ஏன் தெரியுமா?”ன்னு கேட்டார்.
“🌹தெரியலியேண்ணே என்றேன்.
“🌹அப்ப நான் தலைவர்கூட அவர் அறையில் தான் இருந்தேன். நீங்கள் வந்தது சனிக்கிழமை. காலையில 8.30 மணிக்கு மேல வந்தீங்க. உங்களை உட்கார வச்சுட்டு மத்தவங்களை சந்திச்சுகிட்டு இருந்தாரு.
🌹நான் கூட “அண்ணே… நடிகர் ராஜேஷ் வந்திருக்காரு”ன்னு சொன்னேன். “தெரியும்யா வெயிட் பண்ணட்டும். அவன் சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசத்துக்கு அழைக்க வந்திருக்கான். நல்ல விஷயம். அதனால 9 – 10.30 ராகுகாலம் முடிஞ்சதும் உள்ளே கூப்பிடு” என்றார்.
🌹அப்படின்னா அந்தத் தொழில் அதிபர் கொடுத்த கிரஹப்பிரவேச பத்திரிகையை மட்டும் வாங்கினீங்களே தலைவரே என்று கேட்டேன்.
🌹அதற்கு அவர், “அவன் வாழ்ந்து முடிச்சவன்யா, ராஜேஷ் இப்ப தான் வாழ்க்கையைத் தொடங்குறான். அதனால தான் இந்த சென்டிமென்ட்” என்று தலைவர் சொன்னதை, பல வருடங்கள் கழித்து கேள்விப்பட்டபோது கண்கள் கலங்கிடுச்சு எனக்கு.
🌹தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் எப்போதும் பெரும் அக்கறை கொண்ட மாமனிதராகவே வாழ்ந்தவர் வாத்தியார்” என்று சொன்ன ராஜேஷ்.
வெனிசுலாவை உலுக்கிய பேரழிவுகரமான பூகம்பங்களுக்குப் பிறகு, பல அர்த்தங்களைக் கொண்ட ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது!* கான்கிரீட் மலைகள், புழுதி மற்றும் அமைதிக்கு மத்தியில், மீட்புக் குழுவினர் மிகவும் வலிமையானவர்களையும் நெகிழச் செய்யும் ஒரு காட்சியைக் கண்டனர்.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில், ஒரு கலப்பின நாய் இருந்தது. அது குரைக்கவில்லை. தப்பிக்க முயற்சிக்கவில்லை. அது அசைவற்று, கண்களைப் பார்த்தபடி கிடந்தது, அதன் உடல் ஒரு கேடயமாக மாறியது. அதற்குக் கீழே ஒரு குழந்தை கிடந்தது.
அவனைச் சுற்றியிருந்த அனைத்தும் இடிந்து விழுந்தபோதும், அந்தச் சிறுவன் உயிருடன் இருந்தான்; தன்னை மிகவும் நம்பியிருந்த ஒருவரைக் கைவிடுவதை விட, ஆபத்தை எதிர்கொள்ளத் துணிந்த ஒரு நண்பனால் அவன் பாதுகாக்கப்பட்டான். அந்தக் காட்சியில் தாங்கள் பேச்சற்றுப் போனதாக மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர். முதலில், அவர்கள் அந்த நாயை வெளியே இழுத்தனர்; தானும் மீட்கப்படுவோம் என்று உறுதியாகும் வரை, குழந்தையிடமிருந்து பிரிக்கப்படுவதை அது எதிர்த்தது.
சில கணங்களுக்குப் பிறகு, அந்தத் தருணத்தைக் கண்டவர்களின் கைதட்டல், கண்ணீர் மற்றும் உணர்ச்சிப் பெருக்கிற்கு மத்தியில், அந்தக் குழந்தை உயிருடன் வெளியே இழுக்கப்பட்டது.
வெனிசுலாவைச் சூழ்ந்திருக்கும் துயரத்தையும் தாண்டி, எந்த நிலநடுக்கத்தாலும் அழிக்க முடியாத ஒன்றை இந்தப் புகைப்படம் சித்தரிக்கிறது: அதுதான் நம்பிக்கை.
ஏனென்றால், இயற்கை ஒரு மக்களின் வலிமையைச் சோதிக்கும்போது, நாம் சற்றும் எதிர்பாராத இடங்களில்கூட கருணை, விசுவாசம், அன்பு போன்றவை தோன்றக்கூடும் என்பதை நமக்கு நினைவூட்டும்
கடவுள் படையலை சாப்பிடுவாரா?
சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்.
‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.
குரு எதுவும் சொல்லாமல். அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.
அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கெட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.
குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.
“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.
“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”
கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..
” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.
மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே..
எங்கே உனது புத்தகத்தை காட்டு”
பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான் “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள்.
ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”
“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.
இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?
நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”
சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.
குரு தொடர்ந்தார், ‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.
புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.
இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?
அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.
ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”
தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்.
🌹என் குடும்பம் நல்ல வாழ்ந்த குடும்பம்தான். ஆனால், அப்பாவின் தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட அதிகமான கடன் சுமைகளும் பாரங்களும் என்மேல் விழுந்தன. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே, இண்டியன் ஏர்லைன்ஸில் ஏர்ஹோஸ்டஸ் பணியில் இருந்தேன். அப்போதுதான் சினிமா வாய்ப்புகளும் தேடிவர, புகழுடன் நிறைவான பணமும் சம்பாதித்தேன். எல்லாக் கடன்களையும் அடைத்தேன்.
🌹பெரிய இடங்கள் பலவற்றிலிருந்தும் என்னைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்தார்கள். ஆனால், சொந்த உறவுகளுக்குள் இருந்த சிலரே அதையெல்லாம் தடுத்தார்கள். என் சினிமா வருமானம் மட்டுமே அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. என் பணத்தை எனக்கே தராமல், மீண்டும் கடன் சுமைகளைத்தான் கொடுத்தார்கள். என் பெற்றோர்கூட அந்தச் சூழ்ச்சிகளை உணரவில்லை. நிம்மதியில்லாமல் இருந்தேன்.
'🌹மனசுக்குள்ள இவ்வளவு வேதனைகளை வெச்சுக்கிட்டு எப்படி மகிழ்ச்சியா நடிச்சே?'ன்னு பின்னாள்களில் பல ஜாம்பவான்கள் என்னிடம் கேட்டார்கள்.
🌹நானே கஷ்டத்தைச் சொல்லி உதவி கேட்பேன் என்று எம்.ஜி.ஆர், சிவாஜி, நடிகர் சங்கத்தினர் உட்பட பலரும் எதிர்பார்த்தார்கள். அப்படிச் செய்திருந்தால் உடனே தீர்வும் கிடைத்திருக்கும். ஆனால், குடும்ப விஷயம் பொதுவெளிக்கு வருவதை நான் விரும்பவில்லை. என்மேல் அன்புகொண்ட பிரபலங்கள் பலரும், 'நல்ல பையன் யாரையாச்சும் காதலிச்சுக் கல்யாணம் செய்துகிட்டு மகிழ்ச்சியா இரு' என்று சொன்னார்கள். அதற்கு என் மனம் பக்குவப்படவில்லை. ஒருகட்டத்தில் அதுதான் சரியான தீர்வு என உணரும்போது எனக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டது.
🌹உரிய பருவத்தைத் தாண்டிக் கிடைக்கும் விஷயங்கள் பயன்தராது. குடும்பத்திலும் பிரச்னைகள் குறையவில்லை. வாழ்க்கையே வெறுத்துப்போய் வீட்டிலிருந்து வெளியேறி பெங்களூரில் தங்கை வீட்டுக்குச் சென்றேன். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகமாகி, கோயில் கோயிலாகச் சுற்றினேன். மீண்டும் சென்னை திரும்பிய நிலையில், சட்டப் போராட்டத்தில் அதிக கவனம் செலுத்தினேன். வெற்றி கிடைத்தாலும் ஓரளவுக்குத்தான் சொத்துகள் கிடைத்தன. அதில் பல கோடி ரூபாய் சொத்துகளைத் திருப்பதி கோயிலுக்கு தானம் செய்துவிட்டோம்.
🌹இப்போது என் தங்கையுடன் சென்னையில் வசிக்கிறேன். வீடும் என் அறையும்தான் எனக்கான உலகம். எனக்கு. இனி வெளியுலகத்தோடு ஒன்றி இருக்கவோ, வெளியிடங்களுக்குப் போகவோ விருப்பமில்லை.
🌹ஆங்கிலம், இந்தி, பிரெஞ்ச், ரஷ்யன் உட்பட எட்டு மொழிகள் எனக்குத் தெரியும். எனவே, பல மொழி ஆன்மிகப் புத்தகங்கள் படிப்பது, இசை கற்றுக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என்று என் அன்றாடப் பணிகளுக்கு நேரம் பற்றாக்குறையாகவே இருக்கிறது. இதனால் தனிமை வாழ்க்கை நிறைவையும் நிம்மதியையும் தருகிறது!"
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். கையிருப்பு கரையக்கூடும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்.
சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்ப உறுப்பினர்களுக்குள் இருந்த கருத்து மோதல் விலகி சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிம்மதி தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு போட்டிகளை எளிதாக சமாளிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுண்டு. மேலதிகாரி பாராட்டுவார்.
விருச்சிகம்: எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவார்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
தனுசு: சகோதர சகோதரிகளால் ஆதாயமுண்டு. பேச்சில் தெளிவு பிறக்கும். முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல் பேச்சு கேட்பர். தாயாரின் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: ஏதோ ஒரு விஷயமாக முன்கோபம், டென்ஷன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பர். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
மீனம்: சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். உங்கள் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட பணியை முடிப்பீர்கள். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 13 ஆம் தேதி புதன்கிழமை 29.7.2026
இன்று இரவு 08.58 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.
இன்று மாலை 05.08 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
இன்று அதிகாலை 01.04 வரை விஷ்கம்பம். பின்னர் பிரீதி.
இன்று காலை 08.15 வரை பத்திரை. பின்னர் இரவு 08.58 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று காலை 06.01 வரை சித்தயோகம். பின்னர் மாலை 05.08 வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
மங்காத்தா, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல நடிகை ராய் லட்சுமி, தற்போது தொழிலதிபராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், 'La Ra' என்ற புதிய டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மங்காத்தா, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல நடிகை ராய் லட்சுமி, தற்போது தொழிலதிபராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், 'La Ra' என்ற புதிய டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தற்போது சோஷியல் மீடியா மற்றும் டேட்டிங் ஆப்-களில் போலி கணக்குகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த 'La Ra' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முற்றிலும் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதன் மூலம் பயனர்கள் பயமின்றி நம்பிக்கையுடன் தங்களுக்குப் பிடித்தமானவர்களைத் தேர்வு செய்யலாம். உண்மையான அன்பு, காதல், உண்மையான நட்பு மற்றும் நீண்டகால வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களுக்கு இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆப்பை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு பேசிய நடிகை ராய்லட்சுமி, ஒருவர் ரிலேஷன்ஷிப்பில் இருக்க விரும்பினால் அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த ஆப் இருக்கும், பல விதமான டேட்டிங் ஆப்கள் இருக்கின்றன. ஆனால், அவை நம்பிக்கைக்குரியதாக இல்லை, அதுமட்டுமின்றி, வெறும் டேட்டிங் ஆப்-ஆக மட்டுமில்லாமல், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தொழில்முறை நபர்களை இணைக்கும் 'நெட்வொர்க்கிங்' தளமாகவும், நிஜ சந்திப்புகளை உருவாக்கும் தளமாகவும் இது செயல்படும். பலரும் தனிமையிலேயே இருக்கிறார்கள், பாட்னர் இருந்தாலும் அவர்கள் தனிமையில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கினைப்பது தான் இந்த 'La Ra'. இந்த ஆப்குள் இணைந்துவிட்டால் நிச்சயமாக நீங்கள் தனியாகவோ சிங்கிளாகவோ இருக்க மாட்டீங்க என நடிகை லட்சுமி ராய் அதில் பேசி உள்ளார். ஆனால், இணையவாசிகள் பலர் சிங்கிளா வாங்க சந்தோஷமா போங்க என்றும், இது தேவையில்லாத ஒன்று, இளைஞர்களை கெடுக்கும் இதுபோன்ற ஆப்களை ஊக்குவிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.
சீதாராமம் படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் மிருணாள் தாகூர். அவரது அழகும், திறமையும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதனையடுத்து பாலிவுட்டில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு பலனாக வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க அவரும், நடிகர் தனுஷும் காதலிப்பதாக ஒரு தகவல் தொடர்ந்து ஓடியது. அது வதந்தி என்று பின்னர் உறுதியானது. இந்நிலையில் அவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.
மராத்தி மற்றும் ஹிந்தி மொழிகளில் நடிகையாக பயணத்தை ஆரம்பித்த மிருணாள் தாகூருக்கு தெலுங்கில் சீதாராமம் படம் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தெலுங்கிலிருந்து மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் டப் செய்யப்பட்டது. மிருணாளின் அழகும், நடிப்பும் அனைவரையும் வசீகரித்துவிட்டது. அதன் காரணமாக அனைவருமே அவரை கொண்டாடி தீர்த்தார்கள்.அவரை க்ரஷ் லிஸ்ட்டில் சேர்த்தவர்களும் அதிகம்.
அந்தப் படத்தின் சமயத்தில் சோஷியல் மீடியா ரிலீஸ்களில் அவர்தான் இருந்தார். இதன் காரணமாக தென்னிந்திய மொழிகளில் அதீத கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கவனம் பாலிவுட்டிலேயே தொடர்ந்தது. அதன் பலனாக தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஹிட்டோ, தோல்வியோ அவரது மார்க்கெட் சீராகவே இருக்கிறது என திரைத்துறையினர் சொல்கிறார்கள். தென்னிந்திய மொழிகளை பொறுத்தவரை அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கும் ராக்கா படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
செம பிஸியாக இருக்கும் அவரை சுற்றி சமீபமாக காதல் கிசுகிசுக்கள் அதிகம் ஓடுகின்றன. முதலில் நடிகர் தனுஷுக்கும், மிருணாளுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி டேட்டிங் எல்லாம் செல்கிறார்கள் என்று பேசப்பட்டது. மேலும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடியது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் மிருணாள்.
அதுமட்டுமின்றி தனுஷின் சகோதரிகளை மிருணாள் இன்ஸ்டாவில் ஃபாலோ செய்ததன் காரணமாக அவரை வீட்டில் ஒருவராகவே ஏற்றுக்கொள்வதற்கான அறிகுறிதான் அது என்றெல்லாம் தியரி எழுதினார்கள் சிலர். ஒருகட்டத்தில் இந்த விஷயம் எல்லை மீறி போனதைத் தொடர்ந்து மௌனத்தை கலைத்தார் மிருணாள். அவர் ஒரு பேட்டியில், இந்த விஷயத்தில் தனக்கு அதீதமான விளம்பரம் கிடைத்ததாகவும்; தனுஷுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அவர் மீது காதல் எல்லாம் இல்லை என்றும் போட்டு உடைத்திருந்தார்.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்: சாப்டர் 1’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.
தனுஷின் 55-வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். ‘ஓம்: சாப்டர் 1’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ‘அலாக்கா லோவா பாடல்’ சிங்கிள் வீடியோ தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது. மின்விளக்காக சுடலைமாடன் ஜொலிக்க திருவிழா கொண்டாட்டத்துடன், துள்ளல் இசையுடன் தொடங்குகிறது.
இசையின் வேகத்துக்கு ஓடும் வார்த்தைகளை புரிந்துகொள்ள சிரமம் இருந்தாலும், உற்சாகம் உடலோடு ஒட்டிக்கொள்கிறது. அரசல் புரசலாக அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருக்கும் தனுஷ், இந்தப் பாடலிலும் அதற்கான அச்சாரத்தை வைத்துள்ளார். அதற்கு சாய் அபயங்கர் பாதை அமைத்துக் கொடுத்துள்ளார்.
இப்படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் உள்பட பலர் நடிக்கின்றனர். எழிலரசு ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷின் பிறந்தநாளில் ‘அலாக்கா லோவா சிங்கிள்’ வெளியாகி இருப்பது, அவரின் ரசிகர்களுக்கான விருந்தாக அமைந்துள்ளது.
கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.
வெள்ளிக்கிழமை காலை 7.23 மணியளவில், கனடாவின் ரொரன்றோவில், நவ்நீத் கௌர் (26) என்னும் இளம்பெண் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.
கௌரை பின் தொடர்ந்த ஒருவர், திடீரென அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்த பொலிசார், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஷரன்ஜீத் சிங் (37) என்றும் அவர் பிராம்டனைச் சேர்ந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அவர் ஏற்கனவே கௌருக்கு அறிமுகமானவரா, எதனால் கௌரை அவர் சுட்டார் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.
சிங் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
கனடாவின் விக்டோரியா பகுதியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் நட்சத்திரமான ரெபெக்கா லூனா, மருத்துவ உதவியுடன் கூடிய மரணம் மூலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
இளம் வயதிலேயே அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ரெபெக்கா லூனா, 'WhereDidBecsGo' என்ற கணக்கு மூலம் சமூக வலைத்தளங்களில் 95,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைப் பெற்றிருந்தார்.
அல்சைமர் நோயுடன் வாழும் தனது அன்றாட அனுபவங்களையும், "இறக்கும் தருவாயில் டேட்டிங் செய்வது" மற்றும் "புலப்படாத குறைபாடுகளுடன் பயணம் செய்வது" போன்ற தலைப்புகளில் வெளிப்படையாகப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
அண்மையிால் தனது உடலமைப்பில் ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாக, தனக்குக் குறிப்பிட்டிருந்த மருத்துவ உதவியுடனான உயிர் மாய்ப்பு திகதியை முன்கூட்டியே மாற்றி அமைப்பதாக தனது ஆதரவாளர்களுக்குத் தெரிவித்திருந்தார்.
என்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலும், நிபுணத்துவப் பராமரிப்பு மருத்துவரின் ஆலோசனையின் பேரிலும் இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தனது இறுதி வீடியோவில் பகிர்ந்திருந்தார்.
தனது கடினமான சூழ்நிலையிலும் மது பழக்கத்தை கைவிட்டு உறுதியாக இருந்ததை எண்ணிப் பெருமைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் 50 வயதை எட்டுவதற்குள் இறக்க விரும்பவில்லை, ஆனால் நான் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும், அனைவரும் தம்மைத் தாமே நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பூர்வீக சொத்து மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். பழைய சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கடகம்
மனதளவில் இருந்த சஞ்சலங்கள் குறையும். அரசால் அனுகூலம் ஏற்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் தீர்ப்புகள் கிடைக்கும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சொத்து விற்பனையில் இருந்து வந்த இழுபறிகள் மறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கன்னி
தாய்வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
துலாம்
ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். சிறு தூர பயணங்களால் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபார பணிகளில் சுமாரான வரவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். மனை சார்ந்த பணிகளில் உள்ள தடைகள் விலகும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். சகோதரர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
தனுசு
உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் உண்டாகும். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மை அளிக்கும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
மகரம்
மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவரிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். புலனாய்வு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். புதிய இடத்தில் தங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். புரியாத சில கேள்விகளுக்கு தெளிவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கும்பம்
உத்தியோகம் நிமித்தமான பணிகளில் பொறுப்புகள் குறையும். சொத்துக்கள் மூலம் மேன்மை ஏற்படும். உயர்கல்வியில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொது காரியங்களில் ஒத்துழைப்பு ஏற்படும். பயணம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் இருந்த இழுபறியான சூழல் குறையும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் அடைவீர்கள். உணவுத் துறைகளில் இருப்போர்க்கு ஆதாயம் மேம்படும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 28.7.2026.
இன்று இரவு 07.32 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.
இன்று மாலை 03.00 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.
இன்று அதிகாலை 01.22 வரை வைதிருதி. பின்னர் விஷ்கம்பம்.
இன்று காலை 06.39 வரை கரசை. பின்னர் இரவு 07.32 வரை வனிசை. பிறகு பத்திரை.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
ஒண்டாரியோவின் லிஸ்டோவெல் அருகே இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 55 வயதுடைய நபர் பரிதாபமாக உயிரிழந்ததாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
லிஸ்டோவெல் நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள 'பெர்த் ரோடு 158' பகுதியில், 81-வது வீதிக்கும் 84-வது வீதிக்கும் இடையே இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பெர்த் கவுண்டி OPP காவலர்களும், அவசர மருத்துவ உதவிக் குழுவினரும் விரைந்தனர்.
பாதசாரியாகச் சென்ற நியூ பிரன்சுவிக் மாநிலத்தைச் சேர்ந்த 55 வயது நபர் மீது வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பொலிஸார் அறிவித்தனர். இந்த விபத்தில் வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
விபத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த 'பெர்த் ரோடு 158' பாதை, தற்போது மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சிகளோ அல்லது அப்பகுதியில் பதிவான 'டேஷ்கேம்' வீடியோ காட்சிகளை வைத்திருப்பவர்களோ உடனடியாகப் பெர்த் கவுண்டி காவல்துறையை 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கனடாவின் ஒண்டாரியோ மாகாணம், தண்டர் பே சீர்திருத்த மையத்தில் இருந்து தப்பியோடிய 65 வயது கைதியைத் தண்டர் பே காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.
சிறையிலிருந்து தப்பிய கைதி ஆந்தனி பேட்ரிக் என அடையாளம் காணப்பட்டார்.
ஜூலை 24ம் திகதி சிறையிலிருந்து தப்பியதாகத் தகவல் வெளியான நிலையில், தகவல் வெளியான சுமார் 9½ மணி நேரத்தில் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
சிறை நிர்வாகம் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
தேடுதல் வேட்டையின் போது, நகரின் தெற்குப் பகுதி மற்றும் நெடுஞ்சாலை 61 வழித்தடத்தில் பயணிக்கும் வாகன சாரதிகள், அந்நியர்களுக்கு வாகனம் நிறுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர்.
கைதியை கண்டால் நேரடியாக அணுக வேண்டாம் எனவும், உடனடியாக 911 அவசர எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டது.
இந்த தேடுதல் வேட்டை மற்றும் விசாரணையில் ஒண்டாரியோ மாகாணக் காவல்துறையும் இணைந்து செயல்பட்டது.
எனினும், கைதி ஃபிரிஸ்செல் எங்கு வைத்து கைது செய்யப்பட்டார், அவர் சிறையிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான மேலதிக விவரங்களை காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிலும் முன்கோபம் இன்றி பொறுமையை கையாளவும். உடலில் ஒரு விதமான சோர்வுகள் மூலம் தாமதம் ஏற்படும். அரசு செயல்களில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செயல்படவும். செயல்பாடுகளில் ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
ரிஷபம்
வியாபார பணிகளில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். அரசு பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பயண செயல்களில் சில மாற்றம் ஏற்படும். மனதிலிருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் இருந்த தாழ்வு மனப்பான்மை குறையும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம்
புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்று தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சிம்மம்
சுபகாரிய முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.
திர்ஷ்டஎண் : 5
அதிர்ஷ்டநிறம் : சாம்பல்
கன்னி
உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். தாயாருடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் தவறிய பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
துலாம்
இசை சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். தொழில் சார்ந்த முயற்சிகளில் விவேகம் வேண்டும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக தடைகளை வெற்றிக்கொள்வீர்கள். எதிர்பார்த்து இருந்த வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் ஆதரவுகள் மேம்படும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
அதிகார பணிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
மறுசுழற்சி சார்ந்த பொருட்கள் மூலம் விரயம் ஏற்படும். புதிய விஷயங்களை கண்டுபிடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். மறைவான சில பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம்
உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மீனம்
அரசுத்துறை பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மகளுக்கு சுபகாரிய செய்திகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் திருப்தி கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 11 ஆம் தேதி திங்கட்கிழமை 27.7.2026.
திதி
சுக்ல பக்ஷ திரயோதசி - Jul 26 01:58 PM – Jul 27 04:15 PM
சுக்ல பக்ஷ சதுர்தசி - Jul 27 04:15 PM – Jul 28 06:19 PM
நட்சத்திரம்
மூலம் - Jul 26 07:34 AM – Jul 27 10:28 AM
பூராடம் - Jul 27 10:28 AM – Jul 28 01:11 PM
கரணம்
சைதுளை - Jul 27 03:08 AM – Jul 27 04:15 PM
கரசை - Jul 27 04:15 PM – Jul 28 05:19 AM
வனசை - Jul 28 05:19 AM – Jul 28 06:19 PM
யோகம்
வைத்ருதி - Jul 26 10:04 PM – Jul 27 10:54 PM
விஷ்கம்பம் - Jul 27 10:54 PM – Jul 28 11:33 PM
வாரம் - திங்கட்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 5:57 AM
சூரியஸ்தமம் - 6:33 PM
சந்திரௌதயம் - Jul 27 5:04 PM
சந்திராஸ்தமனம் - Jul 28 4:33 AM
இவரது இயற்பெயர் நாகூர் பாபு.
இவரது தாய்மொழி தெலுங்கு.
பிறப்பால் இஸ்லாமியர்.
இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா.
இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயவாடாவில் பிறந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பதினாறு மொழிகளில் 22000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கர்நாடக இசை பயின்றவர்.
இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய இசைக் குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 1985-ஆம் ஆண்டு கற்பூர தீபம் என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா வாய்ப்பு கொடுத்தார்.
1986-ஆம் ஆண்டு இளையராஜா, பூவிழி வாசலிலே என்றத் தமிழ்த் திரைப்படத்தில் “அண்ணே அண்ணே” என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். அன்றிலிருந்து இவரது பாடல் பயணம் ஆரம்பித்தது. வேலைக்காரன், சின்னத்தம்பி, காதலன், சொல்லத்துடிக்குது மனசு, உள்ளத்தை அள்ளித்தா, சின்னக்கண்ணம்மா, முத்து, எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, சிற்பி., எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், தேவா, சந்திரபோஸ் போன்றவர்களின் இசையமைப்பில் தொடர்ந்து பாடிவந்தார்.
இவர் பாடகராவதற்கு முதலில் நடிகராகத்தான் தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். பாடும் வாய்ப்புப் பின்னர் இவரை இருகரம் கூப்பி அழைத்துக் கொண்டது. முதலில் 1979-ஆம் ஆண்டில் ‘நீடா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். தமிழில் ‘சிங்கார வேலன்’ படத்தில் 1982-ஆம் ஆண்டில் இவரை நடிகராக அறிமுகம் செய்தது பாவலர் கிரியேஷன்ஸ் பட நிறுவனம், இப்படத்தில் இவர் கமலஹாசனின் இணை பிரியா நண்பர்கள் குழுவில் ஒருவராக கவுண்டமணி, வடிவேலு கூட்டணியுடன் மனோ என்ற தனது பெயருடன் நகைச்சுவை விருந்தளித்தார்.
இதையடுத்து எனக்கு இருபது உனக்கு பதினெட்டு உள்ளிட்ட விரல் விட்டு எண்ணும் அளவிலான படங்களில் தமிழில் நடித்தார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இவரும் நெருங்கிய நண்பர்கள்.




