·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 870
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.

மாறிவரும் மனிதர்கள்

  • 85
·
Added a post

சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை.

இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். கணவர் இலங்கையில் சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் .

இந்த வீட்டுவேலை செய்யும் அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாமே. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இவள் தான். தூங்கக் கூட இந்த குழந்தை பெற்றோரிடம் செல்லாது. தூங்கிய பின்பு, தூக்கிக்கொண்டு அவர்களின் ரூமுக்கு கொண்டு செல்லுவார்களாம் பெற்றோர்கள்.

குழந்தைக்கு 2 வருடம் ஆகி இருக்கும். வீட்டுவேலை செய்யும் இந்த பெண்மணி விடுமுறைக்கு ஊர் செல்ல பலமுறை அனுமதி கேட்டும், முடியாத சூழ்நிலையில் தள்ளிக்கொண்டே போனது. மிகுந்த போராட்டத்திற்குப் பின்பு 3 மாதம் விடுமுறையில் ஸ்ரீலங்கா சென்றார் அம்மணி.

தன்னை பிரிந்த அடுத்த நிமிடத்தில் அழ ஆரம்பித்து விட்டது அந்த குழந்தை. சரி, சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று இருந்து விட்டார்கள்.

இரவு உணவு உண்ணவில்லை. ஒரே அழுகை. அழுது.. அழுது.. துவண்டு தூங்கி விட்டது. அப்படியே தூங்கட்டும். காலையில் விழித்ததும் பசிக்கும், சாப்பிடும். என்று விட்டு விட்டார்கள்.

காலையில் விழித்ததும் ஈனக்குரலில் அழ ஆரம்பித்து விட்டது. சாப்பாடு ஊஹூம். அருகில் இருக்கும் சாமான்களை பலம் இல்லாத கையால் தூக்கி எறிவதும், துவண்டு விழுவதுமாக இருந்தது. சில மணித்துளியில் மயங்கி விழுந்து விட்டது.

பயந்து போன பெற்றோர்கள் மருத்துவமனையில் அட்மிட் பண்ணி விட்டார்கள். அனைவர்களுக்கும் ஒரே கவலை. மூன்று நாட்களாக ட்ரிப் மூலம் தான் அனைத்தும் நடந்து வருகிறது.

டாக்டர்களுக்கு ஒன்றும் ஓடவில்லை. எந்த மருத்துவமும் கைகொடுக்க வில்லை. மூன்று நாட்களாக கண் திறந்து பார்க்கவில்லை. மருத்துவர்கள் கையை விரித்து விட்டார்கள்.

ஒரே மருந்து..!!!! அந்த வேலைக்கார பெண் இங்கு வந்தே ஆகனும். இல்லை என்றால் இப்படியே கோமாவில் தான் குழந்தை இருக்கும். அதன் பின்பு ஒன்றும் நல்லது சொல்ல இயலாது என்று கூறி விட்டார்.

அந்த அரபி அந்த அம்மணியை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியாமல் ஒட்டு மொத்த குடும்பமும் உருக்குலைந்து இருந்தது.

பல வருடங்களுக்கு முன்பு, இந்த ஸ்ரீலங்கா பெண்மணி, வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனம் மூலம் வந்தவர். முதல் நாள் அவளை அழைத்து செல்ல வந்த சௌதி, அவள் பேசும் தமிழ் புரியாமல், வேறு தமிழர் ஒருவர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

அதை நினைவில் வைத்துக்கொண்டு, அந்த நபரை தேடி கண்டுபிடித்தார் ,அவளும் அதே ஊராக இருக்கும் என்று நினைத்து விபரங்கள் கூறி குழந்தை போல அழுதார். ஒரு மல்டி மில்லினர், பல நிறுவனங்களுக்கு அதிபதி, குறைந்தது 15 ஆயிரம் நபர்களாவது இவரிடம் பணி புரிகிறார்கள். கூடவே மன்னர் குடும்பத்தில் பெண் எடுத்தவர்..!! விபரம் சொன்னார்.

அவர் அந்த அரபியிடம், தமிழ் மொழி பல நாடுகளில் பேசுகிறார்கள். நான் இந்தியா, அவள் ஸ்ரீலங்கா. என்று விவரித்துக்கொண்டு இருக்கும் போது, அவருக்கு மூலையில் ஒரு மின்னல் வெட்டியது.

அந்த அம்மணி கூறிய அவளுடைய ஊரும், இவருக்கு பழக்கமான ஒரு ஸ்ரீலங்கா டிரைவரின் ஊரும் ஒன்று. அடுத்தடுத்த தெரு. அவரை பிடித்தார் , அவரின் மனைவிக்கு போன் போட்டு, அடுத்த தெருவில் இருந்த வேலைக்கார அம்மணியை தொடர்பு எல்லைக்குள் கொண்டு வந்து, சௌதியிடம் பேச வைத்து விட்டார் .

ஒரு 40 நிமிடத்தில் அனைத்தும் முடிந்து விட்டது. ஆனால் அந்த வேலைக்கார அம்மணியோ, நான் வந்து 4 நாட்கள் தான் ஆகிறது, கணவனுக்கு இளைப்பு நோய் வந்து மருத்துவமனையில் அட்மிட் பண்ணி இருக்கின்றோம். நான் எப்படி வர இயலும் என்று தன்னுடைய இயலாமையை கூற,

சௌதி இவரிடம் பேச சொல்ல, இவர் இந்த குழந்தையின் நிலைமையை சொல்ல, அவள் அழுக, அவளின் சூழ்நிலையை சொல்ல. அதை அனைத்தையும் சௌதியிடம் இதைப்பற்றி கூறினார் .

அவரோ தேம்பி தேம்பி அழுது கொண்டு, என் சொத்து அனைத்தும் போனாலும் பரவாயில்லை. எனக்கு என் குழந்தை வேண்டும் என்று கூறினார்.

சரி, அவளுடைய குடும்பத்திற்கு விசா ஏற்பாடு பண்ணுங்க என்று கூறி, அவளிடம் அனுமதியும் வாங்கி விட்டார் . அடுத்து கூடுதல் பிரச்சனை.அவளுடைய கணவருக்கும் குழந்தைகளுக்கும் பாஸ்போர்ட் இல்லை. சிறிலங்காவிற்குவிசா கிடைப்பது அரிது. அதுவும் பாமிலி விசா-குதிரைக்கொம்பு. அப்படி விசா கிடைத்தாலும், ஸ்டாம்பிங் அடித்து வர குறைந்தது 4 வாரங்கள் ஆகும்.

அதுவரை குழந்தை தாங்குமா என்ற பல சங்கடங்களை அவரிடம் விவரித்தார்.

அவரோ, நோ ப்ராப்ளம். என் மனைவி ஒரு அமீரா(இளவரசி) என்று கூறி, அதிசயத்திலும் அதிசயமாக 2 நாட்களில் அனைத்தும் முடிந்து, அவர்கள் அனைவர்களும் தம்மாம் ஏர்போர்ட் வந்து இறங்கி விட்டார்கள்.

குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கசக்கி போட்ட சிறு துண்டு போல கிடந்தது. ஒரு சிறு அசைவு கூட இல்லை.

நேராக அவர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள் .

மருத்துவமனையே பரபரப்பாக ஆகிவிட்டது. குடும்பத்தார்கள் கூட்டம் ஒருபக்கம். நண்பர்கள், நிறுவனத்தில் முக்கிய ஆட்கள் என்று பெரும் கூட்டம்.

குழந்தை இருந்த அந்த சூட்-க்குள் அவர்கள் நுழைந்தார்கள். குழந்தை இருந்த நிலையை பார்த்ததும் அந்த வேலைக்கார அம்மணி கதறி விட்டார். அவளை தேற்றி ஆறுதல் படுத்தி, குழந்தைக்கு அருகில் அழைத்துச் சென்றனர் .

மெதுவாக அம்மணி, ஆதில், ஆதில், ராஜா (தமிழில் தான்) என்று கூற கூற காலின் பெருவிரல் அசைய ஆரம்பித்தது. இங்கிலாந்து மருத்துவர் சைகை காட்ட காட்ட அந்த அம்மணி ஆதில் ஆதில்.. ராஜா.. ராஜா.. என் ராஜா.. என்று கூறக் கூற , ஒரே நிசப்தம்.

அனைவருக்கும் எதோ ஒரு தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு.

சிறிது சிறிதாக குழந்தையிடம் அசைவு தெரிய.. அனைவர்களின் முகத்திலும் பிரகாசம் தெரிய ஆரம்பித்தது.

ஒரு 20 நிமிடத்தில் கண்ணை திறந்தான், அருகில் இருக்கும் கத்தாமாவை பார்த்தான், எப்படிதான் அவன் உடலில் இவ்வளவு சக்தி இருந்ததோ தெரியவில்லை, சடார்….. என்று எந்திரிக்க, உடலில் இணைக்கப்பட்ட வயர்கள், டியூப்கள் எல்லாம் தெறிக்க, அவளை கட்டிப்பிடித்து, முதுகில் குத்து குத்து என்று குத்தி, கறுத்த அவளுடை முகத்திலும், கழுத்திலும், முத்தங்கள் பொழிய அனைவர்களுடைய கண்களிலும் கண்ணீர் உருண்டு ஓடியது.

எத்தனை பாசமலர் படம் பார்த்தாலும் இந்த காட்சி கிடைக்காது.

அங்கு வந்து இருந்த அனைத்து பெண்மணிகளும் அந்த வேலைக்காரியை முத்தத்தால் நனைத்தார்கள். சிறிது நேரத்தில் அந்த வளாகம் குதூகலமாகவும், சந்தோசமாகவும், ஒரு பார்ட்டி ஹால் மாதிரி உருமாறி விட்டது.

அந்த வேலைக்கார பெண்மணி சாப்பிட்டுக்கொண்டு இருந்த எச்சில் பட்ட கேக்கை, அந்த குழந்தை பிடுங்கி தின்ன, கூடி இருந்த அனைவர்களும் ரசித்து பார்க்க.. ஒரே பரவசம் தான்.

அப்புறம், அவருடைய கணவருக்கு அதே மருத்துவமனையில், அதே சூட்டில் மருத்துவம், அவர்களின் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை, குழந்தைகளுக்கு நம்ப முடியாத பள்ளியில் உயர்ந்த கல்வி.

கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால்…..வாழ்க்கை வசந்தமே.

  • 86
  • 97
·
Added a news

 குதிரை திருட்டு வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் மீது, குதிரை வளர்ப்பு மற்றும் குதிரைப் பந்தயத் துறையுடன் தொடர்புடைய மற்றொரு விசாரணையின் அடிப்படையில் புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஹால்டன் பிராந்திய காவல்துறையின் தகவலின்படி, ஒண்டாரியோ மாநிலத்தின் மில்டன் பகுதியில் ஒரு குதிரையை திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்தப் பெண் ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்திருந்தார்.

அதன் பின்னர், மே மாதத்தில் நிபந்தனை பிணையில் இருந்தபோது, அதே சந்தேக நபர் பொய்யான அடையாளத்தை பயன்படுத்தி ஒரு நபரை சந்தித்து, அவரிடமிருந்து ரகசிய தகவல்களைப் பெற முயற்சித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காவல்துறையினர் கூறுகையில், சந்தேக நபர் ஹெய்லிவுட் என்ற போலிப் பெயரை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட நபரின் தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்களைப் பெற முயன்றுள்ளார். மேலும், அந்த நபருடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களையும் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எந்த வகையான தகவல்களைப் பெற முயன்றார் என்பது குறித்து காவல்துறையினர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கவனித்த பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையினரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

ஒண்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த வாட்டர்டவுனைச் சேர்ந்த 30 வயதுடைய கார்லி ட்ரிப் மீது தற்போது, குற்றவியல் தொந்தரவு, நீதிமன்ற விடுதலை நிபந்தனைகளை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர், ஏப்ரல் மாதத்தில் அவர் மீது, 5,000 கனடிய டொலருக்கு மேற்பட்ட திருட்டு, மோசடி மூலம் கால்நடைகளை அபகரித்தல், விலங்குகளை காயப்படுத்துதல் அல்லது ஆபத்தில் ஆழ்த்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த இரண்டு விசாரணைகளும் குதிரைத் தொழில்துறையுடன் தொடர்புடையவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கனடாவின் டொரண்டோ பெரும்பாக பகுதி (GTA) முழுவதும் இதேபோன்ற பல சம்பவங்களில் இந்த பெண் தொடர்புடையவராக இருக்கக்கூடும் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

  • 102
·
Added a post

1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் .. இது சொந்த வீடா ..வாடகை வீடா … வாடகை எவ்வளவு…. என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள் . (அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.

4.வீட்டிற்கு வந்தவர்களிடம் .. காபியா டீயா என்றால் .. கொடுங்கள் என்று அன்போடு கேட்டு அருந்துங்கள். அல்லது மோரோ ,குளிர்பானமோ ..கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள். இப்பதான காபி சாப்பிட்டு வந்தேன் .. என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.

5.வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது .. அவர்களிடமே பேர் கேட்டு எழுதாதீர்கள்.

6.வீட்டிற்கு வந்தவர் வருகிறேன் என்று சொல்லி வெளியில் சென்று தெருவில் நடக்கும் வரை /வாகனம் எடுக்கும் வரை அவர்களிடம் கண்களால் உரையாடுங்கள். மாறாக உடனே கேட்டையோ ,கதவையோ சாத்தாதீர்கள்.

7.ஏன் உங்க மனைவி வேலைக்கு போறாங்க … ? அல்லது ஏன் வேலைக்கு போகல.. என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்கள்.

8.சாப்பாட்டு நேரத்துல வந்தவங்க கிட்ட “சாப்பிடுறீங்களா” என்று கேட்கும் வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்காதீர்கள்.மாறாக “சாப்பிடுங்க “என்று சொல்ற வீட்டில நிச்சயமாக சாப்பிடுங்க.

9.பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா‌.. என்று கேட்காதீர்கள்… வேண்டுமென்றால் உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கிறார்கள் /எங்கு வேலை செய்கிறார்கள் .. என்று சொல்லுங்கள்..

கேட்பவருக்கு பிடித்திருந்தால் அவர் சொல்லட்டும்..அவரை வற்புறுத்தாதீர்கள்.

10.friendly ஆ பேசறேன் ,உரிமையில பேசறன்னு …பொதுவுல …அவங்களுக்கோ அவங்க பிள்ளைகளுக்கோ advice பண்ண ஆரம்பிக்காதீர்கள்.

11.உங்களுக்கு என்ன குறைச்சல்.. இரண்டு பேரு சம்பளம் … பையன் கை நிறைய சம்பாரிக்கிறான் …இப்படி சொல்றவங்க கிட்ட../நினைக்கறவங்க கிட்ட தள்ளியே நில்லுங்க.

12.நீங்க எங்கெல்லாம் plot/flat வாங்கி வச்சிருக்கீங்களோ‌‌…. வந்த இடத்தில் பட்டியலிடாதீர்கள்.. இது அவருக்கு அவர் மனைவி முன் மிகுந்த தர்ம சங்கடத்தை உருவாக்கும்.

13.வந்த இடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாதீர்கள்.. மாறாக அன்பை காட்டுங்கள்.

14. வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் … என்று… பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள்.

15. வீட்டிற்கு வந்தவர்களிடம் கணவனை அல்லது மனைவியை விட்டு கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர்கள்.. அல்லது.. வீட்டிற்கு வந்தவர்களிடம் தனது மனைவி/கணவன் பற்றியோ விளையாட்டு க்கு சொல்கிறேன் என்று கிண்டலடிக்காதீர்கள்....

  • 117
·
Added a post

சுமையென நினைத்த தந்தை; உயிரெனக் காத்த மகள்

​"என்னைச் செலவு செய்து வீணாக்காதே... என்னை விட்டுவிடு."

சீனாவின் ஒரு மருத்துவமனை வளாகத்தில் நோயால் வாடிய அந்த முதியவர், தன் மகள் மீது பாரமாக இருக்கிறோம் என்று கருதி நெஞ்சை உருக்கும் வகையில் இந்த வார்த்தைகளைக் கூறினார்.

சிகிச்சைக்கு ஆகும் பெரும் செலவையும், மகளின் சேமிப்பு கரைந்து போவதையும் அவர் உணர்ந்திருந்தார். தன் மகளைக் கடனாளியாக்குவதை விட, தான் மறைந்து போவதே மேல் என்று கடினமான முடிவை எடுத்தார். மகளின் கையை விட்டுவிட்டு, அவளுக்குச் சுமையைக் குறைப்பதற்காக அங்கிருந்து செல்லத் துணிந்தார்.

​ஆனால், அவள் அவரைப் போகவிடவில்லை. மருத்துவமனையிலிருந்த அனைவர் முன்னிலையிலும், குளிர்ந்த தரையில் சரிந்து விழுந்த அந்த மகள், தன் தந்தையின் கால்களைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, உலகத்தின் கடைசி நம்பிக்கையைப் பிடித்துக் கொள்வது போலக் கதறி அழுதாள்:

"தயவுசெய்து போகாதீர்கள் அப்பா! நீங்கள் மட்டும்தான் எனக்கு மிச்சம்!"

main-qimg-2caad794788d1563a6b5cdb614654841

அந்த வலியில் பொதிந்த உண்மை

  • உணர்ச்சிக் கொந்தளிப்பு: அந்த வீடியோ காட்சி சிறியதுதான்; ஆனால் அதில் இருக்கும் வலியும் அர்த்தமும் சொல்லில் அடங்காதது.
  • நிதர்சனம்: நோயாளிகளைப் பராமரிப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் சோர்வைத் தரும்.
  • முடிவு: அந்த நோயாளி உங்களுக்கு உயிர் கொடுத்த தந்தையாக இருக்கும்போது, மற்ற அனைத்துக் கணக்குகளும் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன.

​அன்று, ஒரு அடிப்படையான உண்மையை அந்தத் தந்தை உணர்ந்தார். அவனது மகளுக்குத் தேவை பணம் அல்ல, அவர் தான். அவளுடன் இன்னும் ஒரு நாள், இன்னும் ஒரு மணி நேரம், அல்லது இன்னும் ஒரு நொடி கூட இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

வயது முதிர்ந்த நிலையில் பல தந்தைகள் தங்களை ஒரு சுமையாக நினைக்கிறார்கள்; ஆனால், அன்பான பிள்ளையின் இதயத்தில் தந்தை ஒருபோதும் சுமை அல்ல. தந்தை என்றும் பிள்ளைக்கு அடித்தளம்; அவரே அனைத்திற்கும் ஊற்றுக்கண்.

  • 123
·
Added article

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (89) வயது மூப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து அஜித்குமார் குடும்பத்தினர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் "எங்கள் அன்புத் தாயார் மோகினி மணி அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை தனது உறக்கத்திலேயே இயற்கை எய்தினார். அவருக்கு வயது 89.

கடந்த சில ஆண்டுகளாக அவருக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் அர்ப்பணிப்புடன் மருத்துவ சேவையையும் ஆதரவையும் வழங்கிய அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான தருணத்திலும், அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்ததையும், அன்பும் அக்கறையும் நிறைந்த உறவுகளால் சூழப்பட்டிருந்ததையும், அவரை அறிந்த அனைவரின் உண்மையான மரியாதையையும் பெற்றிருந்ததையும் நினைத்து ஆறுதல் அடைகிறோம். அவரது கனிவான இயல்பு, தன்னலமற்ற மனப்பான்மை மற்றும் அமைதியான கண்ணியம் அனைவரின் மனதிலும் அழியாத இடம்பிடித்துள்ளது.

இந்தியப் பிரிவினைக் காலத்தில், சிறுவயதிலேயே அனைத்தையும் பின்னால் விட்டுவிட்டு புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியாவிற்கு குடிபெயர்ந்த சிந்தி சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்த அவர், வாழ்க்கையை மீண்டும் புதிதாகத் தொடங்கினார். பின்னர் தனது பிள்ளைகளும் குடும்பத்தினரும் வாழ்க்கையில் முன்னேறி சாதித்ததை கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தார். உண்மையில், எங்களில் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அடைந்துள்ள வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் முக்கிய காரணமாக அவரது அன்பான அரவணைப்பு, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் அறிவார்ந்த வழிகாட்டுதலே அமைந்துள்ளது. அவையே எங்கள் இல்லத்தின் இதயமும் ஆன்மாவுமாக விளங்கின. எங்கள் மறைந்த தந்தையாருடன் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்கள் நீண்ட இனிய தம்பதிய வாழ்க்கையை அவர் அனுபவித்தார். அவர்கள் இணைந்து பகிர்ந்துகொண்ட அன்பான நினைவுகள் எங்களுக்கு என்றும் ஆறுதலையும் வலிமையையும் அளித்துக் கொண்டே இருக்கும்.

எங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் அன்பான இரங்கல் செய்திகள், ஆறுதல் வார்த்தைகள் மற்றும் நினைவஞ்சலிகளால் நாங்கள் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளோம். இந்த நேரத்தில் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவோ அல்லது செய்திகளுக்கு உடனடியாக பதிலளிக்கவோ இயலாமல் இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அவரது இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும். பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும், எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து, அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு கற்றுத்தந்த சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அஜித்தின் தாயாரது மறைவுக்கு தமிழகத்தின் முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • 129
·
Added a post

தரையில் விரித்து அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பவர், ஐவரி கோஸ்ட் (Côte d’Ivoire) நாட்டின் ஜனாதிபதி டாக்டர் ஹசன் அப்துர் ரஹ்மான் வத்தாரா அவர்கள்.

ஹஜ் கடமையை நிறைவேற்ற அவர் எந்த ஆடம்பரமும் இன்றி, தனது சொந்த செலவில் புனித பயணத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும், சவூதி அரச மன்றம் மரபுப்படி வழங்கியிருந்த அரண்மனை தங்குமிடத்தையும் பணிவுடன் மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தை பார்த்த பலரின் மனதில் எழுந்த ஒரே கேள்வி — “அவருடைய பாதுகாப்பு எங்கே?”

ஏனெனில், அவருடன் எந்த பெரிய பாதுகாப்பு படையும் இல்லையென கூறப்படுகிறது.

ஆனால் அதற்கான பதிலை இந்த ஒரு படம் தானாகவே சொல்லுகிறது…

ஒரு தலைவர் தனது மக்களிடம் நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்தால், மக்கள் அவரை அச்சமின்றி நேசிப்பார்கள். மக்கள் பாதுகாப்பாக வாழும் நாட்டின் தலைவர், தானும் அமைதியாக உறங்க முடியும்.

ஹசன் அவர்கள் ஆட்சியை ஏற்ற பின்னர், ஐவரி கோஸ்ட் நாடு அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையை அடைந்ததாக உலக ஊடகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. குறுகிய காலத்திலேயே அந்நாட்டின் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த புகைப்படம் ஒரு சாதாரண காட்சி அல்ல… அதிகாரம் என்பது ஆடம்பரத்தில் இல்லை, மக்களின் நம்பிக்கையில் இருக்கிறது என்பதற்கான நினைவுச் சின்னம்.

அல்லாஹ் அவர்களின் ஹஜ்ஜை ஏற்றுக்கொண்டு, அனைத்து நன்மைகளிலும் வெற்றியளிப்பானாக. ஆமீன் 🤲

குறிப்பு : இது 2024 ஹஜ் புகைப்படம் தற்போது வைரல்

  • 127
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடி ஏற்படும். வெளிப்படையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆவணம் இல்லாத பயணத்தை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

ரிஷபம்

சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். குடும்பத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சமூகம் பற்றிய புதிய பார்வை ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். வர்த்தக துறையில் மேன்மை ஏற்படும். மனதிற்கும் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்கள் மீதான கண்ணோட்டங்களில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவித பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். நிலுவையில் இருந்த சரக்குகள் விற்பனையாகும். வழக்குகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

கடகம்

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்விக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சிம்மம்

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்கள் விஷயங்களில் விவேகம் வேண்டும். அலுவலக பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் புதுமை பிறக்கும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கு விஷயங்களில் தீர்வுகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும். சிறு தூர பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

விருச்சிகம்

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரர்கள் வழியில் சிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்விக வீட்டினை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த சில வழக்குகளில் தெளிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மகரம்

வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். கல்வி பணிகளில் இருந்த குழப்பம் விலகும். சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். பொருளாதார சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கும்பம்

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். புதிய வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். சேவை துறைகளில் இருப்போர்க்கு மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மீனம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். தனித் திறமைகளை அறிந்து கொள்வீர்கள். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் சாதகமான முடிவுகள் உருவாகும். ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். விரும்பிய பொருட்களை வாங்குவதில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

  • 194
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை 30.5.2026.

இன்று பிற்பகல் 12.54 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று பிற்பகல் 02.18 வரை விசாகம். பின்னர் அனுஷம். நாமயோகம் : இன்று அதிகாலை 05.43 வரை பரிகம். பின்னர் சிவம்.

இன்று அதிகாலை 12.05 வரை கரசை. பின்னர் பிற்பகல் 12.54 வரை வனிசை. பிறகு பத்திரை.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=528&dpx=2&t=1780117213

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 202
  • 221
  • 221
  • 222

Good Morning...

  • 221
  • 322
  • 320
  • 319
·
Added a post

இமயமலையை விடவும் பழமையான ஒரு பாறை நம்ம தமிழ்நாட்டில் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

புவியியலாளர்களின் கணிப்பின்படி, அந்தப் பாறையின் வயது சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்கிறார்கள். பூமியில் உள்ள மிகப் பழமையான பாறை அமைப்புகளில் இதுவும் ஒன்று.

அது தான் நம் திருச்சிராப்பள்ளியின் புகழ்பெற்ற மலைக்கோட்டை!

இந்தப் பாறையின் மீது மாணிக்க விநாயகர் கோயில், தாயுமானவர் கோயில், உச்சிப் பிள்ளையார் கோயில் என முழு கோயில் வளாகத்தையும் கட்டியிருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது நம் முன்னோர்களின் கட்டிடக் கலைக்கும் பொறியியல் திறமையும் நம்மை வியக்க வைக்கிறது.

பிரசவ வேதனையில் இருந்த ஒரு பெண்ணுக்கு சிவபெருமானே தாயாக வந்து உதவியதால், அவர் இங்கு தாயுமானவராக அருள்பாலிக்கிறார். அதனால்தான் இன்றும் பல கர்ப்பிணிப் பெண்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

வரலாற்றிலும் மலைக்கோட்டைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு தெரியுமா? சோழர்கள் முதல் விஜயநகரப் பேரரசு, ஆங்கிலேயர்கள் வரை பல ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தக் கோட்டை, பல போர்களுக்கும் சாட்சியாக இருந்திருக்கிறது.

437 படிகள் ஏறி உச்சிப் பிள்ளையாரை தரிசிக்கப் போகும் போது, வழியெங்கும் காணும் சிற்பங்களும் மேலிருந்து தெரியும் திருச்சியின் அழகும் அந்தக் களைப்பே தெரியாமல் செய்துவிடும்.

அடுத்த முறை திருச்சிக்கு போனால், மலைக்கோட்டையில் இருக்கும் கோயில்களை தரிசித்த பிறகு, கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு பாறையின் மீது நின்றுகொண்டிருக்கிறோம் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்!

  • 322
  • 319
  • 319
  • 316
  • 319
  • 318
  • 318