- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
ஏர் கனடா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம், அதாவது, மார்ச் மாதம் 22ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இரவு, கனடாவின் மொன்றியலிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள LaGuardia விமான நிலையத்தில் சென்று இறங்கிய ஏர் கனடா விமானம் ஒன்று, தீயணைக்கும் ட்ரக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விமானம் பத்திரமாக தரையிறங்க, இன்னும் சில நிமிடங்களில் விமானத்திலிருந்து இறங்கிவிடலாம் என்னும் எண்ணத்திலிருந்த பயணிகள், எதிர்பாராத ஒரு அதிர்ச்சியை சந்தித்தார்கள்.
அதே விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு விமானத்தில் ஏதோ துர்நாற்றம் வீசுவதாக தகவல் கிடைக்க, அந்த விமானத்தை பரிசோதிப்பதற்காக செல்வதற்காக தீயணைக்கும் வாகனம் ஒன்று விமான கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கோர, அலுவலர் ஒருவர் அதற்கு அனுமதி கொடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அந்த தீயணைப்பு வாகனம் வேகமாக புறப்பட, அப்போது ஏர் கனடா விமானம் வந்து விமான ஓடுபாதையில் தரையிறங்கியுள்ளது.
விமானம் தரையிறங்கும் நேரத்தில் தீயணைப்பு வாகனத்துக்கு அனுமதி கொடுத்தது தவறு என்பதை உணர்ந்த விமான கட்டுப்பாட்டு அலுவலர், தீயணைப்பு வாகனத்தை நிறுத்துமாறு அவசர அவசரமாக குரல் கொடுக்க, ஆனால், அதற்குள் காலம் கடந்துவிட்டது.
மணிக்கு 39 கிலோமீற்றர் வேகத்தில் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த விமானம் ட்ரக் மீது மோத, விமானத்தின் முன்பகுதி சிதைந்துபோனது.
இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில், விமானத்தை செலுத்திக்கொண்டிருந்த விமானியும் சக விமானியும் உயிரிழந்துள்ளார்கள்.
விமானத்தில் 72 பயணிகளும் நான்கு பணிப்பெண்களும் இருந்த நிலையில், அவர்களில் 41 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பலர் பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது, உயிரிழந்த விமானிகள் குறித்த சில விவரங்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தை இயக்கியவர் ஆண்டோயின் ஃபாரஸ்ட் (30). கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஃபாரஸ்ட், சிறுவயது முதலே விமானியாகும் ஆசை கொண்டிருந்தவர் என்றும், கடின உழைப்பாளி என்றும் அவரது சகாக்கள் கூறுகிறார்கள்.
ஃபாரஸ்டின் சக விமானியின் பெயர் மெக்கன்ஸி குந்தர் (Mackenzie Gunther). ஒன்ராறியோவில் விமான பயிற்சி பெற்ற குந்தரைக் குறித்து அதிக தகவல்கள் வெளியாகவில்லை.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. வரும் மே மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க நாலு பேரு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளது.
இந்நிலையில், பாடகர் அசல் கோலார் எழுதியுள்ள ‘நாங்க நாலு பேரு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் நடிகர் சிலம்பரசன், சாய் அப்யங்கர் மற்றும் அசல் கோலார் இணைந்து பாடி உள்ளனர்.
சுமார் 3.28 நிமிடம் ரன் டைம் கொண்ட பாடலின் பெரும்பாலான புரோமோ காட்சியில் ஆர்.ஜே.பாலாஜி வருகிறார். இந்தப் படத்தில் அவர் ‘பேபி கண்ணன்’ என்ற பாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்த பாடலின் புரோமோவில் கடைசியாக சில நிமிடங்கள் மட்டுமே சூர்யா வருகிறார். மற்ற நேரம் அனைத்தும் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் படக்குழுவினர் உள்ளனர்.
மும்பையின் மோசமான சாலைகளால் தனது தொழில் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக நடிகையும் நடனக் கலைஞருமான சுதா சந்திரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "படப் பிடிப்புத் தளத்துக்கு நான் ஒருபோதும் தாமதமாகச் செல்வதில்லை. ஆனால் இப்போதெல்லாம், சாலைகளின் மோசமான நிலை காரணமாக, அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்கள் தாமதமாகச் சென்று சேர்கிறேன்; இது எனது தயாரிப்பாளருக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. வேலைகளும் தாமதமாகின்றன.
கூடவே, மன அழுத்தமும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருப்பதால், ஒரே இடத்தில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை நகர முடியாமல் சிக்கிக் கொள்ளும் நிலை இருக்கிறது; அந்தச் சூழலில் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க வழி இருப்பதில்லை. ஓராண்டுக்குப் பிறகு நான் ‘மத் ஐலேண்ட்’-டுக்குச் சென்றேன். அங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதைப் புரிந்துகொண்டாலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ யாரும் இல்லை. அதுவே முக்கிய பிரச்சினைக்கு காரணம். இப்போது ஒரு கதையில் என் கதாபாத்திரத்தைக் கேட்பதை விட, படப்பிடிப்பு நடைபெறும் இடம் எது என்பதையே அதிகம் விசாரிக்கிறேன். பயணத்தில் ஏற்படும் சிரமங்கள் காரணமாக, என்னால் பல வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பலாப்பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்திற்கு உதவி புரிகிறது.
வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்கவல்லது. அதாவது வயது முதிர்வை தள்ளிப் போடுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுக்கிறது.
கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பலாப்பழம் புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுகிறது.
பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள கொட்டைகளும் பல்வேறு நன்மைகள் கொண்டது. பலாப்பழ கொட்டைகளை பாலில் சில நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு அதை நன்கு அரைத்து,முகத்தில் தோல் சுருக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கங்கள் நீங்கும். இதை தொடர்ந்து 6 வாரங்களுக்கு மேல் செய்து வந்தால் சிறப்பான பலன் உண்டு.
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன.
பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும்.
ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும் திறன் பலாப்பழத்திற்கு உண்டு. குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் பலாப்பழம் பேருதவி புரிகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்ப பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களில் அனுகூல பலன்கள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாக்குறுதி அளிப்பதை தவிர்ப்பது நல்லது. புதிய வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
ரிஷபம்
தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். இணைய வர்த்தகத்தில் கவனம் வேண்டும். சுப காரிய தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். ஆடம்பரமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கடகம்
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்து இருந்த பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் புரிதல் அதிகரிக்கும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்குகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சிம்மம்
அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சபை தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கன்னி
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். அணுகுமுறைகளில் மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வீடு வாகனங்களை சரி செய்வீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் ஆதரவுகள் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான உத்வேகம் பிறக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
துலாம்
மனதில் ஒரு விதமான கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்கள் மூலம் அலைச்சல் ஏற்படும். அரசு செயல்களில் இருந்த முரண்பாடுகள் மறையும். பணிபுரியும் இடத்தில் ஆர்வமின்மை ஏற்படும். நயமான பேச்சுக்களை நம்பி கருத்துக்களை பகிர வேண்டாம். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். திடம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விருச்சிகம்
மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். நண்பர்கள் உதவிகளால் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் உயரும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். நுட்பமான விஷயங்களை எளிதாக புரிந்து கொள்வீர்கள். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
சவாலான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். விளையாட்டு செயல்களில் ஆதாயம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் ஏற்படும். மின் சாதனப் பொருட்களில் கவனம் வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பூர்வீக வீட்டை மாற்றி அமைப்பீர்கள். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மகரம்
வியாபாரத்தில் சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கும்பம்
ஆரோக்கிய விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் பற்றிய தன்மைகளை அறிந்துகொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளும் தன வரவுகளும் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை வெற்றி கொள்வீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 24.3.2026.
இன்று இரவு 7.30 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று இரவு 10.10 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.
இன்று காலை 11.57 வரை ப்ரீதி. பின்னர் ஆயுஷ்மான்.
இன்று காலை 8.42 வரை கௌலவம். பின்னர் இரவு 07.30 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று இரவு 10.10 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா தோன்றும் ‘முதல் முதலாய்’ என்ற மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர், இயக்குநர் மற்றும் நடன இயக்குநராக வலம் வருபவர் பிரபுதேவா. அவரது மகன் ரிஷி தேவா இன்டி மியூசிக்கல் வீடியோ மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி இருக்கிறார். இந்த வீடியோ பதிவில் அசத்தலாக நடனமாடி, நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.
‘முதல் முதலாய்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படலை ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் எழுதி இசையமைத்துள்ளார். இதனை ஜி.வி.பிரகாஷ்குமார் பாடியிருக்கிறார். இதில் ரிஷி தேவா மற்றும் கைரா இருவரும் இணைந்து நடனமாடி இருக்கிறார்கள்.
இப்பாடல் காதல், அப்பாவித்தனம், மறக்க இயலாத தருணங்கள் உள்ளிட்டவற்றை பாடல் வரிகளாக எழுதியிருக்கிறார்கள்.
இப்பாடலை ட்ரஸ்டினா ஐசக் இயக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த ஆல்பம் பாடலை சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சிறுவர்கள் வீட்டில் உள்ள பொருட்களைத் தவறுதலாக உட்கொள்வதால் ஏற்படும் நச்சுப் பாதிப்புகள் (Accidental Poisoning) சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
இது குறித்து ஒண்டாரியோ நச்சுத்தன்மை கட்டுப்பாட்டு மையம் (Ontario Poison Centre) மற்றும் சுகாதார நிபுணர் டாக்டர் பால் ரூமெலியோடிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் ஒண்டாரியோ நச்சுத்தன்மை கட்டுப்பாட்டு மையம் நாளொன்றுக்கு சராசரியாக 189 நச்சுப் பாதிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 6 வயதிற்குட்பட்ட சுமார் 24,000 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் சில ஆபத்தான வீட்டு உபயோகப் பொருட்களை உணவுப் பொருட்கள் என தவறாக கருதி உட்கொள்கின்றனர்.
வண்ணமயமான ஜன்னல் மற்றும் தரை சுத்திகரிப்பான்கள் (Cleaning liquids) குளிர்பானங்கள் அல்லது பழச்சாறுகளைப் போலவே இருப்பதால் சிறுவர்கள் அவற்றைக் குடிக்க நேரிடுகிறது.
சலவை மற்றும் பாத்திரங்களைக் கழுவும் 'பாட்கள்' (Pods), இவை மிட்டாய்களைப் போல காட்சியளிப்பதால் சிறுவர்கள் அவற்றை மெல்லுகின்றனர்.
இவை வாயில் வெடிக்கும் போது கடுமையான பாதிப்புகளை உண்டாக்குகின்றன. விட்டமின் மாத்திரைகள் (Vitamins) மிட்டாய்களைப் போன்ற சுவையிலும் வடிவத்திலும் இருக்கும் வைட்டமின் மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியும்.
கஞ்சா கலந்த தின்பண்டங்கள் (Edible Cannabis): சாக்லேட் மற்றும் பிஸ்கட் வடிவில் வரும் கஞ்சா தயாரிப்புகள் சிறுவர்களை எளிதில் ஈர்க்கின்றன.
டொரண்டோ பெரும்பாக பகுதிகளில் (GTA) ஞாயிற்றுக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக அபாயகரமான சூழல் உருவாகியுள்ளதால், நீர்நிலைகளிலிருந்து விலகி இருக்குமாறும், மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்யுமாறும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டொரண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆணையம் (TRCA) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள நீர் பாதுகாப்பு குறித்த ஆலோசனையில் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் மழை, வெப்பமான காலநிலை மற்றும் உருகும் பனி ஆகியவை இணைந்து டொரண்டோ பிராந்திய ஆறுகளில் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடும்.
தற்போதைக்கு பெரும் வெள்ள அபாயம் ஏதும் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒண்டாரியோவின் தற்போதைய நிலை இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக தெற்கு மற்றும் மத்திய ஒண்டாரியோவின் பல பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அவை 'நீர் பாதுகாப்பு எச்சரிக்கையாக' (Water Safety Advisories) குறைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், ஒட்டாவா முதல் சர்னியா வரை பரவியுள்ள குறைந்தது 14 பாதுகாப்பு ஆணையங்கள் இன்னும் இந்த பாதுகாப்பு எச்சரிக்கையை நடைமுறையில் வைத்துள்ளன. இந்த வாரம் டொரண்டோவில் பெரிய அளவில் மழை இருக்காது என்று கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தன வரவுகள் அதிகரிக்கும். எதிராக இருந்தவர்கள் விலகுவார்கள். கடன் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவார்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும் முன்னேற்றம் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முகத்தில் பொழிவுகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
ரிஷபம்
உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். புதிய செயல்களில் திட்டமிட்டு செயல்படவும். வியாபார பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மிதுனம்
பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் ஏற்படும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். எதிலும் தனித்து செயல்படுவது தொடர்பான முடிவுகள் பிறக்கும். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். ஆரோக்கிய விஷயங்களில் மந்தமான சூழல் ஏற்படும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கடகம்
மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அமைதியும் நிம்மதியும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கலகலப்பான சூழ்நிலைகள் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
சிம்மம்
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல் அமையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கால்நடை விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். அரசு செயல்களில் இருந்த இழுபறிகள் மறையும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கன்னி
அலுவலகத்தில் மதிப்புகள் மேம்படும். பங்குதாரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். அரசு துறைகளில் அனுகூலம் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
உரையாடும் பொழுது வார்த்தைகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயணம் மூலம் சோர்வுகள் ஏற்படும். காப்பீடு சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். எழுத்து துறைகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
வெளிவட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களால் மாற்றமான சூழல்கள் அமையும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைபட்டு வந்த தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு பெறும். புதிய பொருள்களின் சேர்க்கை ஏற்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
வியாபார பணிகளில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பயணங்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் உருவாகும். வீட்டை விரிவுப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் மனதளவில் மாற்றம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
கல்வி சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். தொழில் நிமித்தமான போட்டிகள் விலகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 23.3.2026.
இன்று அதிகாலை 12.15 வரை சதுர்த்தி. பின்னர் இரவு 09.54 வரை பஞ்சமி. பின்பு சஷ்டி.
இன்று அதிகாலை 01.26 வரை பரணி. பின்னர் இரவு 11.49 வரை கிருத்திகை. பின்பு ரோகிணி.
இன்று மாலை 03.03 வரை விஸ்கம்பம். பின்னர் ப்ரீதி.
இன்று அதிகாலை 12.15 வரை பத்தரை. பின்னர் காலை 11.05 வரை பவம். பின்பு இரவு 9.54 வரை பாலவம். பிறகு கௌலவம்.
இன்று காலை 6.16 வரை சித்தயோகம். பின்னர் இரவு 11.49 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30 முதல் 07.30 மணி வரை
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
கும்பகோணம் அருகே அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய அற்புதமான தலம் பற்றித் தெரியுமா? இதோ அந்த ஆலயத்தின் சிறப்புகள்!
அமைவிடம்:* கீழக்கொருக்கை (பட்டீஸ்வரம் அருகில்), தஞ்சாவூர் மாவட்டம்.
ஆலயத்தின் தனிச்சிறப்புகள்:
அவிட்டம் நட்சத்திர தலம்:
பிரம்மதேவருக்கு அவிட்ட நட்சத்திரத்தன்று ஞானம் கிடைத்த தலம் இது. அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று அல்லது ஆவணி அவிட்டத்தன்று இங்கு வந்து அடிப்பிரதட்சணம் செய்து வழிபட்டால், "தலையெழுத்தே மாறும்" என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!
அபூர்வ இரட்டை நந்தி: இங்கு சிவனுக்கும் அம்மனுக்கும் எதிரே உள்ள இரண்டு நந்திகளும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது மிகவும் அபூர்வமான காட்சியாகும்.
கோரக்க சித்தர் வரலாறு: தவறுதலாக ஒரு பெண்ணின் ஆடை பட்டதற்காக தன் கைகளையே வெட்டிக்கொண்ட கோரக்க சித்தர், இத்தல இறைவனை வணங்கி மீண்டும் கைகளைப் பெற்றார். (கொக்கை - கையற்ற நிலை; இதுவே மருவி 'கொருக்கை' ஆனது).
வேண்டுதலும் நேர்த்திக்கடனும்:
கல்விச் செல்வம்: குழந்தைகளின் கல்வி அறிவு வளரவும், ஞாபக சக்தி பெருகவும், மன உளைச்சல் நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்வது சிறப்பு.
விசேஷ வழிபாடு: முந்திரிப்பருப்பு மற்றும் நிலக்கடலையை மாலையாகக் கட்டி, இங்குள்ள இரட்டை நந்திக்கு அணிவித்தால் நினைத்த காரியம் அப்படியே கைகூடும்!
திருமணத் தடை நீங்கவும், குடும்ப ஒற்றுமை பெருகவும் பக்தர்கள் திரளாக வந்து வழிபடுகின்றனர்.
கோயில் விபரங்கள்:
மூலவர்: பிரம்மஞான புரீஸ்வரர் (சுயம்பு லிங்கம்)
அம்மன்: புஷ்பவல்லி தாயார்
தீர்த்தம்: சந்திர புஷ்கரிணி
தரிசன நேரம்:
காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
மாலை 5:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
குறிப்பு: கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது.
தேவலோகத்தில் ஒருமுறை பெரும் குழப்பம் நிலவியது. முனிவர்களும் தேவர்களும் செய்த யாகங்கள் அனைத்தும் பாதியில் நின்றன. இதற்குக் காரணம் ஒரு வலிமைமிக்க அசுரன். அவன் யாகசாலைகளைச் சிதைத்து, தேவர்களைத் துன்புறுத்தி வந்தான்.
வேறு வழியின்றித்தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். "இறைவா, அந்த அசுரனை யாராலும் வெல்ல முடியவில்லை. யாகங்கள் தடைபடுவதால் உலகம் தன் சமநிலையை இழக்கிறது. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்!" என்று வேண்டினர்.
சிவபெருமான் புன்னகையோடு, "கவலை வேண்டாம், என் மகன் விநாயகன் இந்தச் சிக்கலைத் தீர்ப்பான்" என்று கூறி விநாயகரை அனுப்பினார்.
அசுரனின் விசித்திர நிபந்தனை:
விநாயகர் அசுரன் முன் நின்றார். விநாயகரின் அமைதியைக் கண்டு ஏளனமாகச் சிரித்த அசுரன், "விநாயகரே! நான் உம்மோடு போர் செய்யப் போவதில்லை. ஆனால், என் அறிவுக்குச் சவாலாக ஒரு கேள்வியைக் கேட்பேன். அதற்குச் சரியான பதில் சொன்னால், நான் இங்கிருந்து விலகிச் செல்கிறேன். இல்லையெனில், யாகங்கள் ஒருபோதும் நடக்காது!" என்றான்.
விநாயகர் நிதானமாக, "உன் கேள்வியைக் கேள்," என்றார்.
அந்த சவாலான கேள்வி
அசுரன் கேட்டான்: "இந்த உலகத்திலேயே மிக வேகமாக ஓடக்கூடியது எது?"
அருகிலிருந்த தேவர்கள் குழம்பினர். "காற்றாக இருக்குமோ? இல்லை மின்னலா? ஒருவேளை ஒளியோ?" என்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்.
விநாயகர் மெல்லிய புன்னகையுடன் அசுரனைப் பார்த்துப் பதிலளித்தார்:
"இந்த உலகிலேயே மிக வேகமாக ஓடக்கூடியது 'மனம்' தான்!"
தொடர்ந்து அவர் விளக்கினார்: "மின்னலோ அல்லது ஒளியோ ஒரு நொடியில் ஒரு குறிப்பிட்ட தூரத்தைத்தான் கடக்கும். ஆனால், மனிதனின் மனம் ஒரு நொடியில் காலத்தையும், தேசத்தையும் கடந்து எங்கு வேண்டுமானாலும் செல்லும். மின்னல் கூட ஒரு திசையில் தான் பாயும். ஆனால், மனம் ஒரே நேரத்தில் எல்லாத் திசைகளிலும், நினைத்த மாத்திரத்திலேயே பிரபஞ்சத்தின் விளிம்பு வரை சென்று வரக்கூடியது."
விநாயகரின் ஆழமான பதிலைக் கேட்ட அசுரன் வாயடைத்துப் போனான். அவரது ஞானத்திற்கு முன் தன் ஆணவம் தோற்றதை உணர்ந்து, அங்கிருந்து விலகிச் சென்றான். தடைபட்ட யாகங்கள் மீண்டும் சிறப்பாகத் தொடங்கின. தேவர்கள் அனைவரும் விநாயகரைப் போற்றித் துதித்தனர்.
எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும், பதற்றப்படாமல் அமைதியாகச் சிந்திக்கும் ஆற்றலே ஒருவனின் மிகப் பெரிய சக்தி. அறிவுப்பூர்வமான சிந்தனை, ஆயுதங்களால் முடியாத காரியத்தையும் எளிதில் முடித்துவிடும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பங்கள் ஏற்படும். காப்பீடு சார்ந்த செயல்களில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். மகிழ்ச்சியான நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிலும் கோபம் இன்றி செயல்படவும். மற்றவர்கள் குறைகளை பெரிது படுத்தாமல் இருக்கவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களால் சில வருத்தங்கள் நேரிடும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் மேம்படும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் ஏற்படும். எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறைகளால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை தேவைகளை மேம்படுத்துவீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்புகள் கிடைக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவும். நினைத்த காரியத்தில் சில மாற்றமான அனுபவம் ஏற்படும். குடும்பத்தினரும் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். நண்பர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபார எண்ணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். திருப்பணி செயல்களில் ஆர்வம் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசு காரியங்களில் எதிர்பார்ப்புகள் தாமதமாகி நிறைவேறும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
கன்னி
இனம் புரியாத சிந்தனைகளால் மன உளைச்சல்கள் அதிகமாகும். சுபகாரிய முயற்சிகளில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது உத்தமம். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நிதானமான பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மற்றும் நெருக்கடியான சூழல்கள் மறையும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
தனுசு
பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதுவிதமான இலக்குகள் உருவாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்கவும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆடம்பர செலவை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மகரம்
ஆன்மீக பெரியோர்களின் சந்திப்புகள் ஏற்படும். சமூக பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கும்பம்
சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் உருவாகும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கம் உண்டாகும். வாகன பராமரிப்பு தொடர்பாக செலவுகள் ஏற்படும். அடமான பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. படிப்பில் இருந்த மந்த நிலை சற்று மறையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
மீனம்
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொன் ஆபரண பொருட்களில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 22.3.2026.
இன்று அதிகாலை 02.27 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று அதிகாலை 02.55 வரை அஸ்வினி. பின்னர் பரணி.
இன்று மாலை 06.05 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.
இன்று காலை 02.27 வரை கரசை. பின்னர் மாலை 05.06 வரை வனிசை. பின்பு பத்திரை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
கல்லூரி விடுமுறை விட்டதோ, இல்லையோ உடனே காஞ்சிபுரத்திற்குப் பஸ் ஏறி விடுவார் அண்ணா. ஒவ்வொரு கல்லூரி விடுமுறைக்கும் அவர் வீடு சென்றபோது ஒரு மாற்றத்தைக் கூர்ந்து கவனித்து வந்தார். ஏழை, எளிய குடும்பம் ஆனதால் அண்ணாவின் கல்லூரிச் செலவை அந்தக் குடும்பம் தாங்க முடியவில்லை. ஆகவே, தொத்தா தான் அணிந்திருந்த நகைகளில் ஒவ்வொரு நகையாக அடமானம் வைத்து, அந்தப் பணத்தை அண்ணாவின் கல்லூரிச் செலவுக்குப் பயன்படுத்தி வந்தார்.
தொத்தா.. நான் கல்லூரிக்கு இனி போகப் போவதில்லை.
பதறிப் போய், ஏன்... ஏன்... துரை! இப்படிச் சொல்றே என்று தொத்தா கேட்டார்.
பின்னே என்ன?... நானும்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். உங்க நகைகளை வித்து என்னைப் படிக்க வைக்கிறீங்க. வீட்டையெல்லாம் வறுமையாக்கிவிட்டு நான் படிக்க வேண்டாம்.
அப்படிச் சொல்லாதேப்பா, நகை இருக்கும், போகும். நீ படிச்சுச் சம்பாதிக்கிறபோது தானாக வரும். எங்களுக்கு என்ன சொத்து இனி வேணும்? நீயும் உன் படிப்பும்தான் எங்க சொத்து. எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று தெரிஞ்சுக்கிட்டு நீ படிச்சா போதுமப்பா என்று தொத்தா பேசியதைக் கேட்டு அண்ணா கண் கலங்கினார். அன்றிலிருந்து படிப்பில் அதிக கவனம் செலுத்தினார்.
கல்லூரி வாலிபர்கள் பொழுதுபோக்கிலும் விளையாட்டிலும் ஈடுபடுவதைப் பார்த்துச் சபலமேற்படுகிறபோதெல்லாம் தொத்தாவின் நகைகள் அடமானத்தில் இருக்கின்றன என்பதைப் பற்றியும் வெறுங்கழுத்தோடு தொத்தா இருக்கிற காட்சியையும் நினைத்துக் கொள்வார் அண்ணா.
அருள்மிகு அமிர்தநாயகி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோயில், பாமணி 614014,
மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம்
*இது பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற சிறப்பினை உடையது.
*ஒரு காலத்தில் சுகல முனிவர் தன் தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக காசியை நோக்கி தன் சீடனுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது மாலை நேரத்தில் முனிவர் இளைப்பாறும் பொருட்டு சீடனிடம் அஸ்தி கலசத்தை கொடுத்து விட்டு சென்றார். சீடன் அதை திறந்து பார்த்தபோது அஸ்தி கலசத்தில் தங்க பூக்களாக இருந்தது. இதை அறிந்த
முனிவர் சுகலர் காசியை விட புனிதமான இடம் இந்த "பாம்பணி" என்று உணர்ந்தார். (பாம்பணி என்பதே மருவி பாமணி ஆயிற்று.)
ருத்ர தீர்த்தம் என்று அழைக்கப்பட்ட தற்போது வெட்டு குளம் என்று அழைக்கப்படுகிற குளத்தின் கரையில் காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி ஆலயம் அமைத்து அக்குளத்திலேயே தனது தாயாரின் அஸ்தியையும் கரைத்து இங்கேயே தங்கி விட்டார்.
*அப்போது அவர் தனது குடிலில் ஒரு பசுவை வளர்த்து வந்தார். ஒரு நாள் மேயச் சென்ற பசு தன்னை அறியாமலேயே புற்றின் மீது பாலை சுரந்தது. தினமும் அவ்வாறே செய்து வந்தது.
மேயச் சென்ற பசு ஏன் பாலை கொடுக்கவில்லை என்று எண்ணி ஒன்றும் புரியாமல் திகைத்த முனிவர் ஒருநாள் மேய்ச்சலுக்கு சென்ற பசுவை பின் தொடர்ந்து சென்றார். புற்றின் மீது பால் சுரப்பதை கண்ட அவர், ஒரு தடியால் பசுவை அடித்தார்.
பசு உடனே கோபமுற்று புற்றை முட்டியது. புற்று மூன்று பிளவாக பிளந்து உள்ளே இருந்த லிங்கம் வெளிப்பட்டது. பின்னர் பசு ஓடிச்சென்று தெற்கு திசையில் இருந்த குளத்தில் விழுந்து இறந்தது.
உடனே சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் கயிலாய காட்சி கொடுத்து பசுவை உயிர்த்தெழச் செய்தார்.
"உனது பால் அபிஷேகத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று பசுவிடம் கேட்டார்.
அதற்கு பசு, தன்னிடம் இருந்து கிடைக்கும் எல்லா பொருட்களும் சிவனுக்கே அர்ப்பணம் ஆக வேண்டும் என்று கேட்டது. பரமேஸ்வரனும் மிகவும் மகிழ்ந்து பசு கேட்ட வரத்
வரத்தைக் கொடுத்தார். அன்று முதல் பசுவிடம் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவை பஞ்ச கவ்யம் என்றழைக்கப்பட்டு புனிதமான பொருட்களாக,
ஈசனுக்கு இன்றும் அபிஷேகத்துக்கு உகந்ததாக ஆனது. சுகல முனிவரும் தன் தவறை உணர்ந்து ஈசனை வணங்கி பெரும்பேறு பெற்றார்.
*நாகநாதசுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதியில் பக்தர் களுக்கு தரிசனம் தருகிறார். காமதேனு முட்டியபோது சுயம்பு லிங்க மூலத்திருமேனி மூன்று பிரிவாகப் பிளந்த லிங்கம் இப்போது செப்புத் தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு விளங்குகிறது.
*புற்று மண்ணால் ஆன நாகநாத சுவாமிக்கு நேரிடையாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தினமும் இருவேளை அபிஷேகம் நடைபெற்று வருவது இத்தலத்தின் தனிப்பெரும் மகிமையாகும்.
மாம்பழச்சாறு அபிஷேகம் : திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது 4 மாங்கனிகள் தோன்றின. அதை எடுத்த பிரம்மன் ஒன்றை விநாயகருக்கும், மற்றொன்றை ஆறுமுகனுக்கும்
கொடுத்தார். மூன்றாவது கனியை காஞ்சியில் முளைக்கும்படி ஊன்றிவிட்டு, நான்காவது கனியை இத்தலத்திற்கு கொண்டு வந்து நாகநாத சுவாமிக்கு சாறு பிழிந்து அபிஷேகம் செய்தார். பிறகு அதன் விதையை பிரம்ம தீர்த்தத்தின் வட கரையில் ஊன்றினார். இதனால் மாமரம் இத்தல விருட்சமாகிறது. இன்றும் நாகநாதருக்கு மாம்பழச்சாறு அபிஷேகம் நடப்பது விசேஷம்.
*சுவாமி பாதாளத்தில் இருந்து சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால் பாதாளேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
*பச்சை திராட்சை நிவேதனம்: தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போரில் முசுகுந்த சக்கரவர்த்தி தேவர்களுக்கு ஆதரவாக சென்று அசுரர்களை போரிட்டு வென்றார்.
அதற்கு இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரியையும் (திராட்சை) அவருக்கு பரிசாக வழங்கினான். அவர் அந்த லிங்கத்துடனும், திராட்சையுடனும் திருவாரூர் தியாகேசர் சன்னிதிக்கு வந்தார். அப்போது "திருப்பாதாளேசுவரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று நிவேதனம் செய்வாயாக" என்று அசரீரி கேட்டது.
இதையடுத்து அவர் இங்கு வந்து திருப்பாதாளேஸ்வரரை பணிந்து திராட்சையை நிவேதனம் செய்தார். அதுமுதல் இங்கு கொடி முந்திரி எனப்படும் பச்சை திராட்சை சிறப்பு
நிவேதனம் செய்யப்படுகிறது.
திருமணத் தடை, புத்திர பாக்கியம், கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்த வேறுபாடுகள் நீங்கவும் இத்தல இறைவனை வழிபட்டால் பலன் கிடைக்கும்.
*இந்தக் கோவில் ராகு, கேது தோஷ பரிகார தலமாக விளங்கி வருகிறது.
கருவறை வாசலின் வலதுபுறம் சுவாமியை வணங்கிய நிலையில் மனித முகமும், சர்ப்ப உடலுமாய் தனஞ்செய முனிவராக ஆதிசேஷன் காட்சியளிக்கிறார்.
இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு - கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவர்த்தி அடைவர்.
*இங்கு பைரவரும் சனிபகவானும் சேர்ந்து அருள்பாலிப்பதால், இது சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது.
*அம்பாள் திருநாமம் அமிர்தநாயகி.
அம்பாள் சன்னிதி தனியாக பலிபீடம், கொடி மரத்தின் அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
*சோமாஸ் கந்தர் தைப்பூச தினத்தன்று பாமணி ஆற்றில் தீர்த்தம் கொடுப்பார். இவருக்கு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அபிஷேகம், பூஜைகள் செய்து வணங்கி, வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வரச் செய்து நைவேத்திய பிரசாதத்தை வினியோகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
*மன்னார்குடியில் இருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தூரத்தில் பாமணி ஆற்றின் வடபுறம் கோவில் அமைந்துள்ளது. மன்னார்குடியில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு



