·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 937
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
  • 32
·
Added a news

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நிகழ்ந்த ஒரு விபத்தில் இளம்பெண்ணொருவர் பலியான நிலையில், அந்த விபத்து நூற்றுக்கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Sea-to-Sky Highway என்னும் நெடுஞ்சாலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில், சிலர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்கள்.

அதைக் கண்ட பொலிசார் அவர்களை பின்தொடர, பொலிசிடமிருந்து தப்புவதற்காக வேகமாகச் சென்றுள்ளார் ஒரு இளம்பெண்.

அப்போது கேரவன் ஒன்றின் மீது அவரது மோட்டார் சைக்கிள் மோத, சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார் அவர்.

இந்த துயர விபத்து ஒரு உயிரை பலிவாங்கிவிட்டதுடன் நிற்கவில்லை. விபத்து காரணமாக Sea-to-Sky Highway நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட, மக்கள் இரவை நெடுஞ்சாலையிலேயே செலவிட நேர்ந்துள்ளது.

முதியவர்கள், குழந்தைகள், தங்கள் விமானத்தைப் பிடிப்பதற்காக புறப்பட்டவர்கள் என பலதரப்பினரும் சாலை ஓரமாக அமர்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், சிறுபிள்ளைகளுடன் வந்தவர்கள், இந்த திடீர் விபத்தால் பிள்ளைகளுக்கு உணவில்லாமல் தவிக்க, பொழுதைக் கழிப்பதற்காக கேம்பிங் சென்றவர்கள் சிலர் அவர்களுடன் தங்கள் உணவைப் பகிர்ந்துகொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

சிலர், சாலையோரமாக தங்கள் கூடாரங்களை விரித்து அமர்ந்துகொள்ள, சிலர் நடை பயில, இளம் ஜோடிகள் தங்கள் துணைகளை மடியில் கிடத்திக்கொள்ள, அதிகாலை 3.00 மணி வாக்கில் நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

  • 38
  • 44
  • 45
  • 45
·
Added a post

ஒருவர் ஒரு கடைக்குச் சென்றார்.

அங்கே எல்லாப் பொருட்களுக்கும் நடுவே வெண்கலத்தினால் ஆன ஒரு எலியின் சிலை அவர் கவனத்தை ஈர்த்தது.

அதில் ஒரு சீட்டுத் தொங்கியது.

சிலையின் விலை ரூ. 1000; சிலை பற்றிய கதையின் விலை ரூ. 3000 என்று சொன்னது சீட்டின் வாசகம்.

சிலை போதும். கதை வேண்டாம் என்று ரூ. 1000 கொடுத்து சிலையை வாங்கிக் கொண்டு போனான்

சிலையோடு வெளியேறிய சிறிது நேரத்தில் அவர் எதிர்பாராதவிதமாக, அவரைப் பின் தொடர்ந்து சில எலிகள் வரத் துவங்கின.

அவற்றின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போய் ஆயிரங்களைத் தொட்டு அவரை மிகவும் பயமுறுத்தியது.

என்ன செய்வதென்று தெரியாமல் அவர், அருகில் இருந்த கடற்கரைக்குச் சென்று அந்த வெண்கலச் சிலையைக் கடலில் வீசி விட்டார்.

பின் தொடர்ந்து வந்த எலிகளும் கடலில் குதித்து மூழ்கின.

நிம்மதி அடைந்து திரும்பியவர் யோசித்தபடியே, மறுபடியும் அந்தக் கடைக்குச் சென்றார்.

கடைக்காரர் அந்த சிலையின் கதைக்காகத்தான் வந்திருக்கிறார் என்று எண்ணி கதைப் புத்தகத்தைத் தேடி வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார்.

“ வேண்டாம்.

அந்த எலியின் சிலை போல ஒரு அரசியல்வாதியின் சிலை கிடைக்குமா?” என்று கேட்டார்.

  • 65
·
Added a post

உணவைத் தேடி காட்டில் அலைந்து திரிந்தபோது, ​​ஒரு வயதான வங்காளப் புலி, காட்டில் உள்ள ஒரு குளத்தின் கரையில் கிடந்த ஒரு தங்கக் கைக்காப்பைக் கண்டது. மிகவும் புத்திசாலியான அந்தப் புலி, ஒரு திட்டம் தீட்டி, ஏரிக்கு அருகில் கடந்து செல்லும் ஒருவரை மயக்க முடிவு செய்தது. விரைவில், ஒரு பயணி ஏரியின் மறுகரையில் சென்று கொண்டிருந்தார். புலி மிகவும் மகிழ்ச்சியடைந்து, தனக்குள் நினைத்துக்கொண்டது, “இந்த மனிதன் எவ்வளவு சுவையான உணவாக இருக்கப் போகிறான். இன்னும் மூன்று நான்கு நாட்களுக்கு நான் வேட்டையாடத் தேவையில்லை, ஏனென்றால் இவன் சில நாட்களுக்குப் போதுமானவன்.”

அந்தப் புலி, மனிதனைக் கவர்வதற்காக அந்த வளையலைத் தன் பாதங்களில் வைத்துக்கொண்டு அவனை அழைத்தது. புலி, “ஓ பயணியே, நான் காட்டில் ஒரு தங்க வளையலைக் கண்டெடுத்தேன். அது எனக்குப் பயன்படாது. நீ விரும்பினால் வந்து எடுத்துக்கொள்ளலாம்,” என்றது. பளபளக்கும் அந்தத் தங்க வளையலைக் கண்டதும், பயணிக்கு மிகுந்த பேராசை ஏற்பட்டு அதை எடுத்துக்கொள்ள விரும்பினான். ஆனால், புலி தன்னை நெருங்கினால் கொன்றுவிடும் என்பதால் அவன் மிகவும் பயந்தான். பயணி, “ஓ மிருகமே, நான் உன்னை எப்படி நம்புவது? நீ ஒரு மிருகம், நான் உன்னை நெருங்கியதும் நீ என்னைக் கொன்றுவிடுவாய் என்று எனக்குத் தெரியும்,” என்றான்.

இதைக் கேட்ட புலி, “என்னைக் கண்டு அஞ்சாதீர்கள். நான் இப்போது மிகவும் வயதாகிவிட்டேன். ஒரு இளம் புலிக்கு இருக்கும் அதே தெம்பும் சக்தியும் என்னிடம் இல்லை. என் பாதங்கள் முன்போல் கூர்மையாக இல்லை, அவை மழுங்கிவிட்டன. இப்போது நான் துறவறம் மேற்கொண்டு, எல்லாத் தீய செயல்களையும் கைவிட்டுவிட்டேன். நான் இப்போது தனியாக இருக்கிறேன், நல்ல செயல்களை மட்டுமே செய்து வருகிறேன்,” என்றது.

பேராசை அந்தப் பயணியின் மனதை ஆட்கொண்டது, அவன் புலியின் வார்த்தைகளை நம்பினான். அவன் குளத்தில் குதித்தான். அந்தக் குளத்தில் ஒரு சதுப்பு நிலப் பகுதி இருந்தது. குளத்தில் நீந்திக்கொண்டிருந்தபோது, ​​அந்தப் பயணி அந்தச் சதுப்பு நிலப் பகுதியில் சிக்கிக்கொண்டான். புலி, “ஓ என் அன்பு நண்பனே, கவலைப்படாதே. நான் வந்து அவனுக்கு உதவி செய்து, உன்னை இந்தச் சதுப்பு நிலத்திலிருந்து வெளியே கொண்டு வருகிறேன்,” என்றது. புலி அந்தப் பயணியின் அருகில் வந்து அவனைப் பிடித்தது.

தான் ஒரு பொறியில் சிக்க வைக்கப்படுவதையும், புலி தன்னிடம் பொய் சொல்வதையும் அந்தப் பயணி உடனடியாக உணர்ந்துகொண்டான். ஒரு மிருகம் எப்போதுமே மிருகம்தான் என்பதையும், தங்கத்தின் மீதான அவனது பேராசை அவனது சிந்திக்கும் திறனை மீறிவிட்டது என்பதையும் அவன் உணர்ந்தான். அந்தப் பயணி, “நான் பேராசை கொள்ளாமல் இருந்திருந்தால், இப்போது உயிரோடு இருந்திருக்கலாம். ஆனால், காலம் கடந்துவிட்டது,” என்று நினைத்தான். புலி அந்தப் பயணியைத் தாக்கிக் கொன்றது.

கதையின் நீதி: பேராசை தண்டிக்கப்படாமல் போவதில்லை.

  • 62
·
Added article

ஒரு கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வந்திருந்தார் தயாரிப்பாளர் நடிகர் ராஜ்கிரண்.

காலையில் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டது. இனி இரவு ரயிலில்தான் சென்னை திரும்ப வேண்டும்.

பகல் முழுவதும் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில், தனிமையில் இருந்து கொண்டு என்ன செய்வது ?

நேரம் போகாமல் போர் அடித்தது.mஅப்போதுதான் கல்யாணத்துக்கு அவரை மதுரைக்கு அழைத்திருந்த மாப்பிள்ளை இளங்கோ அங்கு வந்தார்.

"என்ன அண்ணே, ரொம்ப போர் அடிக்கிறதா ?

"ஆமா தம்பி."

"ராஜ்கிரண்அண்ணே...

ஒண்ணு சொல்லட்டுமா ?"

"என்ன ?"

"என் ஃபிரண்டு ஒருத்தன் இருக்கான். நல்லா சிரிக்க சிரிக்க பேசுவான்."

"அப்படியா ?"

"ஆமாண்ணே. அவனை உடனே வரச் சொல்றேன். நீங்க அவன்கிட்ட பேசிக்கிட்டு இருங்க. அவன் பேச ஆரம்பிச்சா உங்களுக்கு நேரம் போறதே தெரியாது."

ஆச்சரியத்துடன் கேட்டார்

ராஜ்கிரண். "அந்தப் பையன் பெயர் என்ன தம்பி ?"

"வடிவேலு."

அடுத்த ஒரு சில நிமிடங்களில்... "வணக்கம்ணே." வெள்ளந்தியாய் சிரித்தபடி வந்து நின்றார் வடிவேலு.

"என்னப்பா வேலை பண்றே ?"

வடிவேலு பேச ஆரம்பித்தார். ஃபோட்டோவுக்கு ஃபிரேம் போடும் ஒரு கடையில், தான் வேலை செய்வதைப் பற்றி...

தன்னுடைய நண்பர்களை பற்றி...

தெருவில் தாங்கள் செய்யும் சேட்டைகளை பற்றி...

ஊருக்குள் நடக்கும் வேடிக்கைகளை பற்றி, நிறுத்தாமல் வடிவேலு பேசிக் கொண்டே இருக்க...

ராஜ்கிரணும் நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே இருந்தார்.

பொழுது போனதே தெரியவில்லை.

ரயிலுக்கு நேரமாகவே ராஜ்கிரண் புறப்பட்டு விட்டார். வடிவேலுவும், தான் வேலை பார்க்கும் கடைக்கு கிளம்பி போய்விட்டார்.

இதை ஒரு பேட்டியில் சிரித்தபடியே சொன்னார் ராஜ்கிரண் அவர்கள்.

தொடர்ந்து அவர் சொன்னதுதான் ஆச்சரியமான விஷயம்.

"ஒரு விஷயம் சொல்லட்டுமா ?

அந்த சந்திப்பில் வடிவேலு என்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்கவே இல்லை. எனக்கும் வடிவேலுவை முதன்முதலாக பார்க்கும்போது அவரை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை."

அப்புறம் எப்படி நடந்தது அந்த மேஜிக்?

அதை சுவாரசியமாகச் சொல்கிறார் ராஜ்கிரண்.

என் ராசாவின் மனசிலே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு கேரக்டருக்கு ஆள் தேவைப்பட்டது. ரொம்ப சின்ன கேரக்டர். ரெண்டே ரெண்டு சீன் மட்டும்தான்.

யாராவது ஒரு புது ஆளை நடிக்க வைக்கலாமான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.

அப்போதான் ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னால, மதுரையில நான் சந்திச்ச அந்தப் பையன் ஞாபகம் வந்தது. உடனே அவனை ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு வரச் சொன்னேன்.

ஆரம்பத்துல இரண்டு சீன்ல மட்டும்தான் நடிக்க சொன்னேன். அதை நடிச்சு முடிச்சிட்டு நான் புறப்படறேண்ணேன்னு கிளம்பிட்டான்.

கொஞ்சம் இருன்னு சொல்லி, என் கூடவே இருக்க வச்சேன்.

ஏன்னா வடிவேலு நடித்த இரண்டு காட்சிகளிலேயும், நாங்கள் சொல்லிக் கொடுத்ததற்கு மேலாகவே சிறப்பாக நடித்திருந்தார்.

எனவே அந்தக் கேரக்டரை கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் செய்தோம்.

ஒரு பாட்டு காட்சியில் கூட அவரை நடிக்க வைத்தோம். அதுதான் போடா போடா புண்ணாக்கு..."

அதற்கு பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலு தன்னை வளர்த்துக் கொண்டது ஒரு வரலாறு.

ஆனாலும் ராஜ்கிரண் அவர்களின் பேட்டி எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

ஒரு தயாரிப்பாளரை நேரில் சந்தித்த வேளையிலும் கூட வாய்ப்பு கேட்காத வடிவேலு ஒரு ஆச்சரியம் என்றால், வாய்ப்பும் கொடுத்து, தன் கூடவே வைத்து வளர்த்து விட்டும் கூட, அதைப்பற்றி கொஞ்சம் கூட பெருமிதம் காட்டாத அண்ணன் ராஜ்கிரண், இன்னொரு அதிசயம்.

  • 64
·
Added article

பட அதிபர் சின்னப்ப தேவர் சிறு வயதிலிருந்தே தெய்வ நம்பிகை யுள்ளவர்.சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர்.மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்க்கையில் கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது.அப்போதும் அவர் நாணயத்தை நேர்மையையும் விட்டதில்லை.

குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலைபார்த்தார்.அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும்.

அடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும் மருதமலைக்குப் போய் ‘முருகா!, முருகா!’ என்று மனம் உருக வேண்டுவார் அந்தக் கோவிலோ அப்போது ஜன நடமாட்டமில்லாத காலம்

வெற்றிலை பாக்குக் கடையில் அவருக்கு ஆறு ரூபாய் வரை கடனாகிவிட்டது. கடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கினான்; அந்தக் கடையிருக்கும் பக்கமே போக முடியாதபடி அவதிப்பட்டார்.கடைக்காரன் கோபித்துக் கொண்ட அன்று இரவு. அந்த மருதமலைக் கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டு அழுதார்: “முருகா! காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார்.நள்ளிரவில், காடுகள் நிறைந்த அந்த மலையைவிட்டு இறங்கினார்.

வழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது. அதை காலால் உதைத்துக்கொண்டே நகர்ந்தார்.கொஞ்சதூரம் வந்ததும் என்ன தோன்றிற்றோ?அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார்உள்ளே இரண்டு சிகரட்டுகளும்,பத்து ரூபாய் நோட்டும் இருந்தன.

அப்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?“நல்லவனாக வாழ்ந்தோம் தெய்வத்தைநம்பினோம்; தெய்வம் கைவிடவில்லை” என்று தானே எண்ணியிருக்கும்!அந்த முருகன் அவரை வாழ வைத்தான்.ஒவ்வொருநாளும், “முருகா! முருகா! ” என்று வணங்குவார்

“தனக்கு நஷ்டம் வந்தாலும் பிறருக்கு நஷ்டம் வரக்கூடாது” என்று தொழில் புரிகிறார்.அதனால், அவர் நாளுக்குநாள் செழித்தோங்குகினார்

----கவிஞர் கண்ணதாசன்

  • 63
·
Added a post

​தாரா... தனியொரு பெண். கைநிறைய சம்பளத்தோடு, சமூகத்தில் நல்ல அந்தஸ்து தரும் ஒரு அரசு உயர் பதவியில் இருக்கிறாள்.

​அவளது பக்கத்து வீட்டுக்காரி திஷா, ஒரு இல்லத்தரசி. கல்லூரிக் காலத்திலிருந்தே காதலித்த தன் கணவன் யாஷுடன், ஒரு குட்டித் தேவதையைப் போன்ற மகளோடு அவளது உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

​தாராவுக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை? அவள் மனதாரக் காதலித்தவன் மாற்றுச் சாதிக்காரன். வழக்கம்போல, அவளது குடும்பத்தினர் இந்தத் திருமணத்தை வன்மையாக எதிர்த்தனர். "அவனா? நாங்களா?" என்ற கேள்வி எழுந்தபோது, தாரா தனக்கான சுயமரியாதையைத் தேர்ந்தெடுத்தாள். வாழ்நாளில் இனி திருமணமே செய்துகொள்வதில்லை என்றும் உறுதிகொண்டாள். ஆனால் இன்று, அவள் தினமும் திஷாவைப் பார்க்கிறாள்.

கணவனுக்காகப் பார்த்துப் பார்த்துச் சமைப்பது, குழந்தையைக் கவனிப்பது என திஷாவின் உலகம் அழகாக இருக்கிறது. தினமும் அலுவலகம் கிளம்பும்முன் யாஷ், திஷாவின் நெற்றியில் முத்தமிட்டு விடைபெறுவதை தாரா ஜன்னலோரம் நின்று பார்க்கிறாள்.

​அறியாமல், தாராவின் நெஞ்சுக்குள் ஒரு இனிமையான பொறாமை எட்டிப் பார்க்கிறது.

​ஆனால், மறுபுறத்தில் இருக்கும் திஷாவின் கதையோ வேறு. பல வருடங்கள் போராடியும் அவளுக்கு ஒரு நல்ல வேலை அமையவில்லை, அதனால் இல்லத்தரசியாக முடங்கிப் போனாள். கணவன் அவளைக் கண் கலங்காமல் ஒரு தேவதையைப் போலத் தாங்கினாலும், மகளின் மேல் அளவற்ற பாசம் இருந்தாலும், அவளது வேலைக்கனவு இன்னும் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது. தாரா தினமும் கம்பீரமாக வேலைக்குக் கிளம்புவதை திஷா ஆசையோடு பார்க்கிறாள். அவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்கும்போதெல்லாம்... அந்த அழகான நீல நிற காட்டன் புடவையில், கையில் ஒரு நேர்த்தியான ஹேண்ட்பேக்குடன், தானும் ஒரு அதிகாலையில் வேலைக்குக் கிளம்புவது போல் கற்பனை செய்து கொள்கிறாள்.

​எவ்வளவு அழகான, அதே சமயம் கலைந்துபோன ஒரு கனவு!

​இப்படி திஷாவும் தாராவும் ஒருவரையொருவர் பார்த்து, 'அவள் வாழ்க்கை எவ்வளவு நிறைவாக இருக்கிறது!' என்று ஏங்குகிறார்கள். ஆனால், நிஜத்தில் அதுதான் உண்மையா?

  • 59
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: மனக் குழப்பம் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் காண்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். மனைவியுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர்.

மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனை கள் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வியாபாரம் உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கடகம்: ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

சிம்மம்: கணவன் மனைவி பிரச்சினைக்குள் மூன்றாம் நபரை நுழைய விடாதீர். சேமிப்பு கரையலாம். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

கன்னி: தொட்டது துலங்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர்கள். பழைய கடனைப் பைசல் செய்ய புதுவழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

துலாம்: உறவினர்கள், பழைய நண்பர்கள் வீடு தேடி வந்துப் பேசுவர். பிள்ளைகள் தங்கள் பொறுப்புகளை அறிந்து கொள்வர். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபார போட்டிகள் விலகும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

விருச்சிகம்: உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். வாகனப் பழுதை சீரமைப்பீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்றிருக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

தனுசு: எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.

மகரம்: உங்களின் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி கள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். வாசனை திரவியம், கலை பொருட்கள் வாங்குவீர்கள். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் லாபம் தரும்.

கும்பம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும். மேலதிகாரி ஆதரவு தருவார்.

மீனம்: மனப் போராட்டம், ஒருவித பயம் இருக்கும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

  • 101
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 7.7.2026.

இன்று காலை 09.30 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று பிற்பகல் 01.06 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று காலை 11.51 வரை சோபனம். பின்னர் அதிகண்டம்.

இன்று காலை 09.30 வரை பவம். பின்னர் இரவு 08.48 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று அதிகாலை 5.57 வரை சித்தயோகம். பின்னர் பிற்பகல் 01.06 வரை அமிர்த யோகம். பிறகு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=576&dpx=2&t=1783399765

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 101

Good Morning...

  • 118
·
Added article

இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரும், திரைக்கதை மன்னனுமாகிய பாக்யராஜ் கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பல மொழி திரைத்துறையிலிருந்தும் வந்திருந்தார்கள். ஆனால் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஊர்வசி வரவில்லை. அது பெரிய விவாதமானது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார்.

பாக்யராஜ் இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அவரது குருநாதர் பாரதிராஜா மறைந்திருந்தார். ஒரே மாதத்தில் இரண்டு ஜாம்பவான்களை இழந்துவிட்டதால் திரைத்துறையினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் சோகத்தின் உச்சத்துக்கு சென்றார்கள். இயக்குநர் இமயத்துக்கு எப்படி சாரை சாரையாக என்று இறுதி மரியாதை செலுத்தினார்களோ; அதேபோல் திரைக்கதை மன்னனுக்கும் செய்தார்கள். ஆனால் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஊர்வசி வரவில்லை.

முந்தானை முடிச்சு திரைப்படம்தான் ஊர்வசிக்கு முதல் படம். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகுதான் அவரால் திரைத்துறையில் உச்ச நடிகையாக வளர முடிந்தது. இருப்பினும் அவர் வரவில்லையே என சிலர் வருத்தப்பட்டார்கள்; சிலர் கோபப்பட்டார்கள். இந்நிலையில் அதுகுறித்து அவரே பேசியிருக்கிறார். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்தான் அதற்கான விளக்கத்தை தெளிவாகவும், பக்குவமாகவும் கூறியிருக்கிறார்.

ஊர்வசி அந்தப் பேட்டியில் அவர், "பாக்யராஜ் மரணத்தில் என்னை தேடியவர்களுக்கு பின்னால் ஒரு கொடூரமான எண்ணம் இருந்தது. அங்கே வந்தால் அந்த ரியாக்‌ஷனை கொடுத்துவிட்டுதான் போக வேண்டும். என்ன ரியாக்‌ஷன் என்று எல்லோருக்குமே தெரியும். அதனை மற்றவர்கள் முன்னிலையில் காண்பிக்க எனக்கு விருப்பம் இல்லை. என் சாருடைய ஆத்மாவுக்கும், அவரது குடும்பத்துக்கும் தெரியும். அது மட்டும் எனக்கு போதும்.

நான் பூர்ணிமாவிடம் பேசினேன். தாங்கிக்கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. மீடியா முன்பு ஓவர் எமோஷனல் ஆக அவசியம் இல்லை. அதை எல்லாம் உண்மை என சிலர் சொல்வார்கள்; பொய் என சிலர் சொல்வார்கள். இந்த விமர்சனத்துக்கு எல்லாம் அங்கே இடம் கிடையாது. நான் எப்போதுமே சிரித்து பேச வேண்டும், கலாய்க்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புவார். அவருக்கு பிடித்த மாணவி நான். நான் அழுவது அவருக்கு பிடிக்காது. அவர் அப்படி படுத்திருப்பதை பார்ப்பதற்கான சக்தி எனக்கு கிடையாது" என்றார்.

  • 204
·
Added article

அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் நாயகியாக மிர்ணா நடித்து வருகிறார்.

முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக மிர்ணா நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இவர் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் – மிர்ணா இருவரையும் வைத்து பாடலொன்றை படமாக்கி வருகிறார் முத்தையா. இப்படம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு தயாராகி வருகிறது.

இப்படத்தினை முடித்துவிட்டு அருண் விஜய் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது முடிவாகவில்லை. ஆனால், பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

  • 205
·
Added a post

'ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன.

ஒருநாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்..

மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப் பார்த்து, “நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்கு சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டியது தான்” என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. விவசாயியும் அந்த குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர்,

குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார். அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான்,

அந்த விவசாயி.பின்பு சிறிது நேரம் கழித்து,அங்கு வந்த ஆடு, அந்த குதிரையிடம், "நண்பா, நீ எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார். அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கும் பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.

இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர் சென்றதும், குதிரையிடம் வந்து, “நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது. அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து போகும்படியாக குதிரை ஓடியது.

மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.

அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாக குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த மருந்துதான் காரணம். என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து கொண்டாடி விடுவோம்” என்றான்.

குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து நடந்தாலும் மருத்துவர் கொடுத்த மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாக விவசாயி நினைத்தான்....

இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்தது என்பதை உணராமல், பலரும் உண்மையைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • 207
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பல வகையிலும் சேமிப்புகள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் திருப்தி தரும்.

ரிஷபம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். உங்கள் உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து கூடும்.

மிதுனம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

கடகம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

சிம்மம்: சில வேலைகளை போராடி முடிக்கவேண்டி வரும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உடல் சோர்வு, வயிற்றுப் பிரச்சினைகள் வந்துபோகும். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.

கன்னி: உங்கள் பேச்சாற்றல், புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பு மலரும். வீட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, அமைதி, மகிழ்ச்சி நிலவும். பண வரவு திருப்தி தரும். ஆன்மிகத்தில் மனம் செல்லும்.

துலாம்: பழைய நண்பர்கள் தக்க சமயத்தில் ஓடிவந்து உதவுவார்கள். குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வராது என்று நினைத்த பழைய கடன் பாக்கிகள் கைக்கு வரும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

தனுசு: தடுமாற்றம் நீங்கி, தெளிவு உண்டாகும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

மகரம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். நண்பர்கள், உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண வரவு உண்டு.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். வீண், ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்தி பணத்தை சேமிப்பீர்கள்.

மீனம்: சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாகப் புரிந்துகொள்வார்கள். யாரிடமும் பழைய சம்பவங்களைப் பேச வேண்டாம். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

  • 271
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 22 ஆம் தேதி திங்கட்கிழமை 6.7.2026

இன்று காலை 10.27 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று பிற்பகல் 01.22 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.

இன்று பிற்பகல் 01.41 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்.

இன்று காலை 10.27 வரை வணிசை. பின்னர் இரவு 09.58 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று அதிகாலை 5.57 வரை சித்தயோகம். பின்னர் பிற்பகல் 01.22 வரை மரணயோகம். பிறகு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=575&dpx=2&t=1783308124

நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 07.7.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 279

Good Morning...

  • 276
·
Added article

தனது நீண்ட நாள் தோழி கவுரியை திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மும்பையில் தனது நீண்ட நாள் தோழியான கவுரியை திருமணம் செய்து கொண்டார் ஆமிர்கான். இந்த திருமணத்தில் ஆமிர்கான் – கவுரி இருவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு தனது திருமணம் ஜூலை 5-ம் தேதி நடைபெற இருப்பதை பத்திரிகையாளர்கள் முன்பு ஆமிர்கான் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆமிர்கானுக்கு வயது 60 ஆகிறது. அவர் ரீனா மற்றும் கிரண் ராவ் ஆகியோரை திருமணம் செய்து கொண்டு, விவகாரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 3-வதாக கவுரியை திருமணம் செய்து கொண்டுள்ளார். கவுரிக்கும் இது இரண்டாவது திருமணமாகும். அவருக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருப்பது நினைவுக் கூரத்தக்கது.

முதல் இரண்டு மனைவிகளை ஆமிர்கான் விவகாரத்து செய்துவிட்டாலும், அவர்களுடனும் நட்பு பாராட்டி வருகிறார். சமீபத்தில் முன்னாள் மனைவிகள் இருவர் மற்றும் கவுரியுடன் ஆமிர்கான் ஒன்றாக காரில் பயணித்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

  • 338
·
Added article

இந்தி நடிகையான இஷா கோபிகர், தமிழில் காதல் கவிதை, என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே, ஜோடி, அயலான் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அவர் திரையுலகில் நிலவும் வயது அடிப்படையிலான பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: ஆண்களுக்கு வயதானால் அதை அனுபவம் என்கிறார்கள். பெண்களுக்கு வயதானால் அதைப் பிரச்சினை என்கிறார்கள். இது விசித்திரமாக இல்லையா ? முன்னணி நடிகர்கள், தங்களை விடப் பாதி வயதுடைய இளம் பெண்களுடன் ஜோடி சேர்ந்து ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கிறார்கள். அது மிகவும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், வயதான பிறகும் ஒரு பெண் ஸ்டைலாகவோ, தன் கருத்துகளை வெளிப்படையாகப் பேசினாலோ அல்லது தனது தனித்துவத்தைக் கொண்டாடினாலோ, ‘உன் வயதுக்கு ஏற்றபடி நடந்துகொள்’ என்று அறிவுரை கூறுகிறார்கள். காலம் செல்லச் செல்ல ஒரு பெண், இன்னும் ஆழமானவளாக, வலிமையான தன்னம்பிக்கை கொண்டவளாக மாறுகிறாள் என்பதே உண்மை.

வயதான தோற்றமும் உடல் சுருக்கங்களும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அனுபவங்களையும் பிரதிபலிக்கிறது. வயதாவது இயற்கையான ஒன்று. உங்கள் தாய், மனைவி, சகோதரி, மகள், ஏன் உங்களுக்கும் கூட ஒருநாள் வயதாகும். அதனால், வயதாவதை அவமானமாகவோ, பலவீனமாகவோ பார்க்காதீர்கள்.

எல்லா வயதிலும் பெண்களை மதியுங்கள். ஒரு பெண்ணின் வயதைப் பார்க்காமல், அவளது வாழ்நாள் பயணத்தையும் மன வலிமையையும் மதியுங்கள். கண்ணியத்துக்குக் காலாவதி தேதி எதுவும் இல்லை, தன்னம்பிக்கைக்கு வயது வரம்பு கிடையாது.

அழகை வயதின் அடிப்படையில் வரையறுத்துக் கொண்டே உலகம் வெகு நாட்களைக் கழித்துவிட்டது. உண்மையான அழகு என்பது ஒருபோதும் வயதைச் சார்ந்ததாக இருந்ததில்லை. இவ்வாறு இஷா கோபிகர் கூறியுள்ளார்.

  • 339
·
Added a news

ஐந்து ஆண்டுகளுக்கு முன், கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்றுள்ளார் இந்திய இளைஞர் ஒருவர். படித்து முடித்தபின், துரதிர்ஷ்டவசமாக அவருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கவில்லை. ஏற்கனவே சொந்த நாட்டையும் குடும்பத்தையும் மிஸ் பண்ணிய அவர், இந்தியாவுக்கே திரும்பிவிடலாம் என முடிவு செய்துள்ளார். ஆனால், தான் கனடாவிலிருக்கும் வரை தான் தன் குடும்பத்தால் நடத்தப்பட்ட விதத்துக்கும், இப்போது இந்தியா வந்தபின் தான் நடத்தப்படும் விதத்துக்கும் பயங்கர வித்தியாசம் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

நான் கனடாவில் படிக்கும்போது கல்விக்கடன் வாங்கித்தான் படித்தேன். என் கடனையும் நானே அடைத்துக்கொண்டு, வீட்டுக்கும் பணம் அனுப்பினேன். இப்போதும் என் செலவுகளை நான்தான் கவனித்துக்கொள்கிறேன் என்று கூறும் அவர், ஆனால், என் தாய் என்னை நடத்தும் விதம் கூட மாறிவிட்டது என்கிறார்.

நீ போதுமான அளவில் முயற்சி செய்யவில்லை, அதனால்தான் உனக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கவில்லை, நீ கனடா சென்றதே வீண், நீ கனடாவுக்குப் போயிருக்கவே கூடாது, தண்ட செலவு என்றெல்லாம் என் தாயே திட்டுகிறார்.

கடந்த ஒரு மாதமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன், என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறி, சமூக ஊடகம் ஒன்றில் தன் அனுபவத்தைப் பகிர்ந்து ஆலோசனை கோரியுள்ளார் அந்த இளைஞர். அவரது இடுகையைப் படித்த பலரும், அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • 337
·
Added a post

தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை.

'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, 'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார் கண்டக்டர்..

ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார். தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு, தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் வந்திருந்த மற்றொரு நபர் அவரை இறுக்க பற்றிக்கொண்டிருந்தார். ஏதோவொரு துயரச் சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.

நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும். ஏன் இப்படி சோகமாக இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன். நான் இறங்கிய அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும் இறங்கினார்கள். மனம் சற்று நிம்மதி அடைந்தது. அவர்கள் பற்றி எதையேனும் தெரிந்து கொள்ளலாம் என்று மனது விரும்பியது.. அவர்களை பின்தொடர்ந்தேன்..

தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினர் இருவரும். சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள் சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்.

அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன் மகனை கீழே கிடத்தி , தலையிலையும் நெஞ்சிலையும் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.

எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன காரணம் என்று எனக்கு எதுவும் தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கை கூட திருவிழா போல் கொண்டாடும் இந்த காலத்தில், இறந்து போன தன் மகனை பாடை கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லை என்று.

உயிருக்குயிரான தன் மகனை தோளில் சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு தெரியாமல் இறந்து போன தன் மகனை மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்த அந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது.

உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில்..

  • 339
  • 342