- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டியும் கீர்த்தி சுரேஷும் தெலுங்கில் இணைந்து நடிக்கின்றனர்.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி, வெங்கடேஷ் நடித்த சங்கராந்திக்கு வஸ்துனம், சிரஞ்சீவி நடித்த மன சங்கரவர பிரசாத் காரு உள்பட சில படங்களை இயக்கியவர் அனில் ரவிபுடி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் வெங்கடேஷ், கல்யாண் ராம் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி நாயகிகளாக நடிக்கின்றனர். சீனியர் நடிகரான வெங்கடேஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். கமர்ஷியல் மசாலா படமான இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது.
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்.
குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது.
தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர்.
சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது.
“கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது.
“நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர்.
“எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்” என்றது குருவி!
"காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது”
இது ஒன்றே ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன பதில்!
குருவிக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை.
போருக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.
அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்! போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி, தனக்கு சாரதியாக மாறிய ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரிய வில்லை.
ஆனாலும் அவற்றை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டான்.
ஸ்ரீகிருஷ்ணர், ஒரு யானை மீது அம்பைத் தொடுத்து, அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார்.
யானையைக் குறி வைத்து, அதன் மீது அம்பை எய்து, அதனைக் கொல்ல முடியாமல், அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த ஸ்ரீ கிருஷ்ணரைக் கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன்.
ஸ்ரீகிருஷ்ணரை விட தான் வில் வித்தையில் சாமர்த்தியசாலி என்னும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது!
மனிதன் தானே!
“நான் வேண்டுமானால் அம்பு எய்து, யானையை வீழ்த்தட்டுமா?” எனக் கேட்டான் அர்ஜுனன்.
ஒரு புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும், அர்ஜுனனிடம் கொடுத்து, பத்திரமாகத் தேருக்குள் வைக்கச் சொல்லி விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்!
“பிறகு ஏன் யானை மீது அம்பை எய்தீர்கள்?” எனக்கேட்ட அர்ஜுனனிடம்,
“அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்துப் போட்டதற்கு யானைக்கான தண்டனை இது” என்று மட்டும் சொன்னார் பகவான்!
அர்ஜுனனுக்கு பகவான் சொன்னது எதுவும் விளங்க வில்லை!
போர் நடந்து, பாண்டவர்கள், 18-ம் நாள் யுத்தத்தில் வென்றும் விட்டனர்.
அர்ஜுனனுடன் பரமாத்மா க்ருஷ்ணன் போர்க்களத்தை சுற்றி வருகிறார்!
தான் முன்பு அறுத்து எறிந்த யானையின் மணிக்கருகில் வந்து நின்ற பகவான்.
ஹே அர்ஜுனா! "இந்த மணியைத் தூக்கி ஓரமாகப் போடுகிறாயா?” என்று கேட்கிறார்!
“எத்தனையோ முக்கியக் காரியங்கள் இருக்கும் போது, இப்போது அறுந்து போய்க் கிடக்கும் இந்த மணி தான் பகவானுக்கு முக்கியமாகப் போய் விட்டதோ?” என்று எண்ணினாலும், அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னபடி, மணியைக் கையில் எடுத்தான்.
அந்த மணிக்குள் இருந்து ஒரு தாய் சிட்டுக் குருவியும், 4 குஞ்சுகளும் சந்தோஷமாகப் பறந்து சென்றன.
தாய்க்குருவி, ஸ்ரீபகவானை வலம் வந்து, 18 நாட்களுக்கு முன் தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அபயம் வேண்டியதையும், யானையின் மணிக்குள் தன் குடும்பத்தை வைத்து பகவான் 18 நாட்கள் தங்களுக்கு அபயம் அளித்ததையும் நன்றியோடு எண்ணி சிறகைக் கூப்பியது!
“பகவானே! என்னை மன்னித்து விடு!
உன்னை மானுட உருவில் பார்த்துப் பழகியதால் , நீ உண்மையில் யார் என என் சிற்றறிவுக்குக் கொஞ்ச காலம் புலப்படாமல் போய் விட்டது! என்று கைகூப்பித் தொழுதான் அர்ஜுனன்.
அண்டசராசரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி இரட்சிக்க வேண்டும் என்பது பகவானுக்கு நன்குத் தெரியும்!
அவனிடம் சரணாகதி அடையுங்கள்! மற்றதை அவனிடம் விட்டு விடுங்கள்.
"சரணாகதி நீயே கதி"
என்று சரணடைவோம்.
நம் வாழ்வில் நடக்கின்ற கஷ்டங்களுக்கு கூட காரணம் உண்டு என்று சொல்வார்கள்.காலம் கடந்த பிறகே அந்த காரணம் தெரியும்..இறைவனின் மகத்துவம் புரியும்..!!
- தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)
- தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்.
- அமரும்போது வளையாதீர்கள்.
- ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.
- நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.
- சுருண்டு படுக்காதீர்கள்.
- கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும்.
- டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள்.
- பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பாரத்தை உங்கள் உடல் முழுதும் தாங்கட்டும்.
- காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டி மடக்குங்கள்.
இது 1987 ல் நடந்த சம்பவம்.
அதிகாலை 6 மணி.
நடிகர் இயக்குனர் பாண்டியராஜன் வீட்டு டெலிபோன் ஒலித்தது. பக்கத்திலேயே அமர்ந்திருந்த பாண்டியராஜன் ரிசீவரை கையில் எடுத்தார்.
(அது லேண்ட்லைன் ஃபோன் காலம்)
மறுமுனையில், "நான் எம் ஜி ராமச்சந்திரன் பேசுகிறேன்."
உட்கார்ந்திருந்த பாண்டியராஜன் தன்னை அறியாமல் எழுந்து நின்று விட்டார். பதட்டத்தில் வார்த்தைகள் வரவில்லை பாண்டியராஜனுக்கு.
"தலைவரே... வணக்கம்...
சொல்லுங்க தலைவரே..."
இதை நடிகர் பாண்டியராஜன் அவர்கள் சொல்ல, நான் அவருக்கு அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். "எதற்காக சார் எம்ஜிஆர் அந்த நேரத்தில் கூப்பிட்டார் ?"
"அது வந்து ஜான் சார், அப்போதான் எனக்கு முதல் பையன் பிறந்திருந்தான்."
"சரி."
"முந்தின நாள் இரவு பிரசவம்.
நான் அதிகாலையில்தான் வீட்டுக்கு வந்து, லேண்ட் லைன் ஃபோன் மூலமாக உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குழந்தை பிறந்த தகவலை சொல்ல ஆரம்பித்தேன். எனக்குப் பக்கத்தில் டைரியை வைத்துக் கொண்டு அதில் இருந்த பெயர்களையும் நம்பர்களையும் பார்த்து ஒவ்வொருவராக அழைத்து ஃபோனில் சொல்லிக் கொண்டிருந்தேன்.
ஒரு கையில் போன் ரிசீவர்.
மறு கையில் டைரி.
இப்போது மாதிரி மொபைல் போன் இல்லையே. பெயரை save செய்து வைத்துக் கொள்வதற்கு.
உற்று உற்றுப் பார்த்து, ஒரு பெயர் கூட விடாமல் ஃபோன் செய்தேன்.
ஒரு கட்டத்தில் களைப்பாக இருந்தது.
கையில் இருந்த ரிசீவரை கீழே வைத்தேன். அப்போதுதான் டெலிபோன் மணி அடித்தது.
எனக்கு திகைப்பாக இருந்தது.
நான்தானே ஒவ்வொருவராக அழைத்து அழைத்து, குழந்தை பிறந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது போன் வருகிறதே. இந்த நேரத்தில் அழைப்பது யாராக இருக்கும் ?
குழப்பத்துடனே ஃபோனை கையில் எடுத்து ஹலோ என்றேன்.
மறுமனையில் எம்ஜிஆர்.
எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. "தலைவரே தலைவரே.." என்று அடுத்த வார்த்தை வராமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
"என்ன தலைவரே இவ்வளவு அதிகாலையில் கூப்பிட்டு இருக்கீங்க?"
"உனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறதாமே ?"
"ஆமாங்க தலைவரே..."
"அம்மாவும் பிள்ளையும் நல்லா இருக்காங்களா ?"
"நல்லா இருக்காங்க,
இந்த நேரத்தில் கூப்பிட்டு விசாரித்ததற்கு ரொம்ப நன்றி தலைவரே !"
"சரி பத்திரமா பாத்துக்கோ"
"தலைவரே இந்த விஷயம் உங்களுக்கு எப்படி...?"
"தினத்தந்தி பேப்பரில் பார்த்து தெரிந்து கொண்டேன். ஏதாவது உதவி வேணும்னா எப்ப வேணும்னாலும் என்னை கூப்பிடு
இப்போ ஃபோனை வைக்கிறேன்"
எம்ஜிஆர் போனை வைத்து விட்டார்.
உடனடியாக பாண்டியராஜன்
அதிகாலையில் வெளிவந்த செய்தித்தாளை கையில் எடுத்து
ஒவ்வொரு பக்கமாகப் புரட்ட ஆரம்பித்தார்.
அதை பாண்டியராஜனே விவரித்தார்.
"ஒவ்வொரு பக்கமா புரட்டி புரட்டி பார்க்கிறேன் ஜான் சார். எந்தப் பக்கத்திலும் அந்தச் செய்தி என் கண்ணில் படவில்லை.
அப்புறமாக உற்றுப் பார்த்தால் ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு மூலையில் சின்னதாக ஒரு செய்தி
போட்டிருந்தார்கள்.
'நடிகர் பாண்டியராஜனுக்கு ஆண் குழந்தை பிறந்தது' அப்படின்னு...
பத்திரிகை அச்சுக்குப் போன கடைசி நேரத்தில் சேர்த்து இருக்க வேண்டும்.
ரொம்ப ரொம்ப சின்னதாக அந்த செய்தி வந்திருந்தது."
பாண்டியராஜன் தொடர்ந்து சொல்லச் சொல்ல நான் அசையாமல் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தேன்.
"ஒரு முதலமைச்சர் ஆக இருந்தபோதிலும், அதிகாலையில் செய்தித்தாளில் அந்த சின்னஞ்சிறிய செய்தியைப் பார்த்துவிட்டு, ஒரு சாதாரண நடிகனான என்னை அழைத்து வாழ்த்திய அந்த மனிதரின் அன்பையும் பாசத்தையும் எப்படி என்னால் மறக்க முடியும் ?"
பாண்டியராஜனுக்கு ஏற்பட்ட அதே ஆச்சரியம்தான் எனக்கும் ஏற்பட்டது.
அதோடு வெற்றிகரமான முதலமைச்சராக எம்ஜிஆர் விளங்கிய காரணமும் புரிந்தது.
எம்ஜிஆர் போல ஆட்சியைக் கொடுப்போம் என்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் எம்ஜிஆரை போல வாழ்வதும் ஆள்வதும் அத்தனை எளிதான காரியம் அல்ல.
அரசியலையும் தாண்டி அவருக்கு
அனைவர் மீதும் அக்கறை இருந்தது.
எந்த நேரத்திலும் விழிப்புணர்வு.
எல்லோரிடத்திலும் அக்கறை.
அதுதான் எம்ஜிஆர்.
அதனால்தான் பாண்டியராஜன் அவர்களின் மனதில் மட்டுமல்ல,
பல லட்சக்கணக்கான மக்களின் மனதில் இன்றும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர்.
தமிழ்நாட்டில் - கரூர் அருகே அமைந்துள்ள ரத்தினகிரீஸ்வரர் கோயில்ஒரு சிறப்புமிக்க சிவாலயமாகும்.
- குலதெய்வம் அறியாதவர்கள் இங்கு வந்து வழிபாடு நடத்தினால், தோஷங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
- கல்யாண வரம் வேண்டுவோருக்கும், தொழில் விருத்தி அடைய விரும்புவோருக்கும் இது மிகவும் உகந்த தலமாக கருதப்படுகிறது.
- 1000 படிக்கட்டுகள் கொண்ட மலையின் மீது அமைந்த, இயற்கை எழில் சூழ்ந்த தலம் இது.
- கரூர் மாவட்டத்தில், குளித்தலைக்கு அருகில் உள்ள அய்யர்மலையில் இக்கோயில் அமைந்துள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பாகபிரிவினை விஷயங்களில் நிதானம் வேண்டும். மற்றவர்கள் கூறும் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் நன்மைகள் ஏற்படும். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நிர்வாக பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். குறுகிய தூர பயணங்கள் மூலம் மாற்றம் உண்டாகும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைக்கூடும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மிதுனம்
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். செய்கின்ற செயல்களில் கவனம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கடகம்
இனம் புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். மறைமுக தடைகளை அறிவீர்கள். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். தொழில் நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும். பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சிம்மம்
உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். வியாபாரம் பணிகளில் செய்யும் சிறு மாற்றங்கள் மூலம் லாபங்கள் மேம்படும். செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத் தன்மை உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சினைகளுக்கு மாற்றமான தீர்வுகள் கிடைக்கும். உலக அனுபவங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். வெளியூர் பயணங்களில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காண முயற்சிகள் கைகூடும். இழுபறியாக இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சூழ்நிலை அறிந்து பேசுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
துலாம்
மருத்துவத் துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் மேம்படும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். உயர்கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புது விதமான கண்ணோட்டம் பிறக்கும். தன வருவாய் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
விருச்சிகம்
சமூகப் பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். தர்ம சிந்தனை தொடர்பான முயற்சிகள் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் இனிதே நிறைவு பெறும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவது மன அமைதியை கொடுக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
தனுசு
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். செய்தொழிலில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வழக்கு செயல்களில் விவேகத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மகரம்
நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தன வருவாய் மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்து கொள்ளவும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் உத்தியோக தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
மீனம்
எண்ணங்களில் புதிய தெளிவு பிறக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செலவுகளை குறைப்பதற்கான சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல்கள் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 12 ஆம் தேதி சனிக்கிழமை 25.4.2026
இன்று அதிகாலை 12.11 வரை அஷ்டமி. பின்னர் இரவு 10.39 வரை நவமி. பிறகு தசமி.
இன்று அதிகாலை 12.37 வரை பூசம். பின்னர் இரவு 11.50 வரை ஆயில்யம். பின்பு மகம்.
இன்று அதிகாலை 03.26 வரை சூலம் . பின்னர் கண்டம்.
இன்று அதிகாலை 11.11 வரை பவம். பின்னர் காலை 11.55 வரை பாலவம். பிறகு இரவு 10.39 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று இரவு 11.50 வரை மரணயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
ஒரு நாட்டின் ஜனாதிபதியின் தாய்...
அலங்கார மேடைகள் இல்லை...
வெடி வாண வேட்டுகள் இல்லை...
கேக் வெட்ட மகன் கூட பக்கத்தில் இல்லை...
சுற்றி நின்று கைதட்ட அமைச்சர்கள் கூட்டம் இல்லை...
ஊடக கேமராக்களின் பளிச் வெளிச்சம் இல்லை..
ஏனென்றால் அந்த தாய்க்கு தெரியும்...
தன் மகன் இன்று ஒரு குடும்பத்தின் மகன் இல்லை...
2 கோடியே 20 லட்சம் மக்களின் மகன்!
ஒரு தேசத்தின் பாரத்தை தோளில் சுமக்கிறார் என்று!
அன்புள்ள அம்மா,
நீங்கள் பெற்றெடுத்து, பாலூட்டி, பண்பூட்டி வளர்த்த அந்த மகனால் தான்
இன்று இலங்கை என்ற தேசம் மூச்சு விடுகிறது.
உங்கள் பிறந்தநாளுக்கு மகன் அருகில் இல்லாவிட்டாலும்...
இந்த தேசத்தின் 2 கோடியே 20 லட்சம் பிள்ளைகளும் இன்று உங்களை வாழ்த்துகிறோம்!
நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும், நிம்மதியான வாழ்வும் உங்களுக்கு கிடைக்க இறைவனை வேண்டுகிறோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாயே!
இலங்கை ஜனாதிபதி அனுர குமாரவின் தாயார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தாயார் வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில பணிகள் நிறைவு பெறும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். வீடு மாற்ற தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
செய்கின்ற முயற்சியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். இழுபறியான சில செயல்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மிதுனம்
பொன் பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதானமான செயல்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கடகம்
உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. கல்வி சார்ந்த செயல்களில் சில மாற்றம் ஏற்படும். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும். சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான பயணங்கள் கைகூடும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். வியாபாரங்களில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுபகாரிய தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். துறைகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
துலாம்
எதிர்காலம் கருதி சில பணிகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தையுடன் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். வாகன வசதிகள் மேம்படும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி ஒரு தெளிவு பிறக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
விருச்சிகம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திடீர் இடமாற்றங்கள் நேரிடும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். போட்டி செயல்களில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
நண்பர்கள் வழியில் அலைச்சலும் எதிர்பாராத விரயங்களும் உண்டாகும். பணி புரியும் இடத்தில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக முடிவு பெறும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் வெளிப்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மகரம்
வாழ்க்கை துணைவர் பற்றிய புரிதல்கள் மேம்படும். மனதில் இருந்து வந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் நிம்மதி ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மீனம்
சபை தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் லாபம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தெளிவும் புரிதலும் பிறக்கும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் பிறக்கும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் இருந்த வேறுபாடுகள் விலகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உலகில் அதிகமாக வீணாக்கப்படுவது யாராலும் புரிந்துக் கொள்ளப்படாத அன்பு.
நீங்கள் பணத்தை கையாளவில்லை என்றால், அது உங்களை கையாளும்.
'எனக்குத் தெரியாது’ என்பது உலகின் மிகச்சிறந்த தற்காப்பு கலை.
இன்னும் கண்டுப்பிடிக்கப்படாத பொய்க்கு உண்மை என்று பெயர்.
கவலையை விட, மிகவும் கொடியது ஒருவரிடம் உள்ள சந்தேகமே.
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 24.4.2026
இன்று அதிகாலை 02.01 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று அதிகாலை 01.42 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.
இன்று காலை 07.52 வரை திருதி . பின்னர் சூலம்.
இன்று அதிகாலை 02.01 வரை வனிசை. பின்னர் பிற்பகல் 01.06 வரை பத்திரை. பிறகு பவம் .
இன்று அதிகாலை 05.59 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை






















