- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.
இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும்.
நாரத்தங்கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன், நியசின், வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல்,லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது.
நாரத்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.
கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.
உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.
பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.
டார்லிங் உனக்கு ஒரு ஹேப்பி நியூஸ் ! ஒரு சேட் நியூஸ்!
எது முதலில் சொல்ல!
என்னங்க! ஹேப்பி நியூஸ் ஃபர்ஸ்ட் சொல்லுங்க!
இன்னைக்கு ஆபீஸ்ல மேனேஜர் திட்டிட்டார் ! ஒரே டென்ஷன் வெளியே பெட்டிக் கடை போய் தம் அடிக்கலாம் என்று போனேன்!
அப்ப பார்த்து பெட்டி கடையில் ஆள் இல்லை! அப்புறம் வெயிட் பண்ணி தம் அடித்து கொண்டு இருந்தேனா! திடீர் என்று ஒரு பெரிய சத்தம் என்னோட ஆபீஸ் இடிந்து விழுந்து எல்லாரும் க்ளோஸ்!
நல்ல வேளை நான் தப்பித்து விட்டேன்!
அப்பா கடவுள் உங்களை காப்பாற்றி விட்டார்! ரொம்ப ஹேப்பியான நியூஸ் ! சரி சேட் நியூஸ்! என்ன என்று சொல்லுங்க!
ஆபீஸ்ல விபத்தில் இறந்தவர்களுக்கு head office ல இருந்து தலைக்கு ஐம்பது இலட்சம் இழப்பீட்டு தொகை தருவதாக அறிவித்து இருக்காங்க!
மனைவி - பாழாய் போன சிகிரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டு தொலைங்க என்று சொன்னால் கேட்கிறீங்க! எனக்குன்னு வந்து சேர்ந்தீங்க பாருங்க!
சேரன் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. தமது இருக்கை எண்ணைத் தேடிப் பிடித்து அமர்ந்தார் குமாரசாமி. தோள் பையை இருக்கையில் வைத்து, சின்ன மாம்பழக் கூடையை அலுங்காமல் சீட்டுக்கு அடியில் தள்ளிவிட்டு அமர்ந்தார்.
“அடடே... வாத்தியாரய்யா!’ எதிர் சீட்டில் தென்பட்ட முத்துராஜா சிநேகமாகச் சிரித்தார்.
“சௌக்கியமா அண்ணா?’ முத்துரஜாவின் மனைவி தமயந்தி வெகுவாகவே மகிழ்ந்தாள்.
“நல்ல சௌக்கியம்மா... அடேயப்பா... எவ்வளவு நாளாச்சு உஙகளைப் பார்த்து!’
“உங்க சன் வித்யாகர் எப்படியிருக்கான் ஸார்?’
“நல்லா இருக்கான். அவனைப் பார்க்கத்தான் சென்னைக்கு போயிட்டிருக்கேன்!’
“கல்யாணமாயிடுச்சா அண்ணா?’
“ஆமாம்மா! இப்பத்தான்.. ஒரு ஆறு மாசம் ஆச்சு. கல்யாணம் முடிஞ்ச கையோட அமெரிக்கா போயிட்டான். போன வாரம்தான் சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கான்.!’
“ஹூம்! அண்ணி செத்தப்போ வித்யாகருக்கு பத்து வயசிருக்கும். “அம்மா எழுநதிரும்மா! எழுந்திரும்மா’ என்று அவன் கதறுன கதறல் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு அண்ணா!’
♥“ஆமா ஸார்! எத்தனை பொண்ணு வந்துச்சு. எதையும் ஏறிட்டுப் பார்க்கலையே நீங்க! ஒத்து ஆளா நின்னு ஆளாக்கி, பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்க வெச்சு... உங்க மனஉறுதி, தைரியம் யாருக்கும் வராது!’ அதற்குள் டி.டி.ஈ. செக்கிங்குக்கு வந்திடவே, பேச்சு வேறு திசைக்கு மாறியது.
“குட்நைட் ஸார்... பிறகு பார்ப்போம்!’ என்று சொல்லிவிட்டுப் படுத்துக் கொண்டார் குமாரசாமி.
♥தமயந்தி சொல்வது சரிதான். வித்யாகருக்கு பத்தாவது பிறந்தநாள் வந்த மறுநாள், தலைவலி, ஜுரம் என்று படுத்தவள்தான் சிவகாமி, விஷக் காய்ச்சல் அவளை ஒரேடியாக வாரிக் கொண்டு போய்விடும் என்று யார்தான் நினைத்தார்கள்? ஒருவாரம் கூடி அழுத உறவுகள், ஒவ்வொன்றாக விலகிக் கொண்ட இரவு, சிவகாமியின் புடைவையை விரித்துக் கொண்டுபடுத்த பிள்ளையைப் பார்த்து மனசுக்குள் துக்கம் பொங்கியது குமாரசாமிக்கு.
♥ஒரு வாரம் ஹோட்டலில் சாப்பிட்டார்கள். வித்யாகருக்கு பேதி கண்டு கொஞ்சம் சீரியஸாகிப் போனதும், ஆனது ஆச்சு என்று கரண்டியைக் கையில் எடுத்துவிட்டார் குமாரசாமி. சமையற்கட்டுக்கே போகாதவராச்சே! பாத்திரம் பண்டங்களை இனம் காணவே ஒரு வாரம் ஆனது. வித்யாகரைச் சாப்பிட வைக்க அதைவிடச் சிரமப்பட்டார்.
“உம் தயிர்சாதம் வை! வேற என்ன வைக்கத் தெரியும் உனக்கு?’ எரிச்சலுடன் கத்துவான் வித்யாகர். “தாயில்லாப் பிள்ளைக்கு நாக்குக்கு ருசியாப் பண்ணிப் போட முடியாத பாவி ஆயிட்டேனே!’ என்று மனம் வெதும்பிப் போவார் குமாரசாமி.
♥“சமைத்துப் பார்’ புத்தகம் வாங்கி, தினுசு தினுசாக முயற்சி செய்வார். அக்கம் பக்கத்துப் பெண்கள், சக டீச்சர்களிடம் குறிப்புகள் கேட்டு வந்து பயந்து பயந்து சமைப்பார்.
பம்ப்பிங் ஸ்டவ்வின் “ப்ர்ர்’ என்ற சத்தமும் ஈர விறகின் புகையும் அவருக்கு ஒத்துக்கவே ஒத்துக்காது. தலைவலி வந்துவிடும். ஆனாலும், மகனுக்காக இரண்டு வேளையும், சுடச்சுட சமைத்துப் போடத் தவறமாட்டார். நெய் விட்டு தாளிப்பார், தேங்காய் அரைத்து விடுவார். இடிச்சுப் பொடிச்சுத் தூவுவார். ஆனாலும் ஆயிரம் நொட்டை சொல்வான் வித்யாகர்.
♥“நீ செய்யுற சப்பாத்தி வரட்டி மாதிரி இருக்கு. எனக்கு வயித்தை வலிக்குது!’ என்று முரண்டு பிடித்து மறுக்கும் அதே சப்பாத்தி - குருமாவை சக வாத்தியார்கள் “சூப்பரா இருக்கு ஸார்!’ என்று ரசித்து காலி செய்யும்போது குமாரசாமிக்கு மனசு வலிக்கும்.
ஒருமுறை அவர் ஸ்கூலுக்குக் கொடுத்து அனுப்பிய மாங்காய் சாதம் அப்படியே வைத்தது வைத்தபடி திரும்பி வரவே, கோபத்தில் இரண்டு அடி வைத்துவிட்டார் குமாரசாமி. அதற்காக அவரிடம் கோபித்துக் கொண்டு பாட்டி வீட்டுக்கு பெங்களூருக்கு ஓடி விட்டான். அவனைக் கெஞ்சி அழைத்துக் கொண்டு வந்தபோது, இனி சாப்பாட்டு விஷயமாக எதுவும் பேசக் கூடாது என்று முடிவெடுத்திருந்தார் குமாரசாமி.
♥நல்லவேளையாக, சென்னையில் காலேஜ் ஹாஸ்டல், அப்புறம் வேலை அப்புறம் வெளிநாடு என நாட்கள் போய்விட, எப்பவாவது சேலத்துக்கு வந்து அரை நாள், ஒரு நாள் எனத் தங்குவான். அவனுக்காகவே ஸ்பெஷலாக காளான் பிரியாணி, வடைக்கறி என்று எல்லாம் செய்து பிரியமாகப் பரிமாறுவார். ஏதோ பேருக்கு வேண்டாவெறுப்பாகக் கொறித்து விட்டு எழுந்து விடுவான் வித்யாகர். அந்த மகனைக் காணத்தான் ஆசையாகப் போய்க் கொண்டிருக்கிறார் குமாரசாமி.
♥வித்யாகரின் ஃப்ளாட் விசாலமாக இருந்தது.
“வாங்க மாமா!’ என்று முகம் மலர வரவேற்றாள் மருமகள் மானஸா.
“குளிச்சுட்டு வாங்கப்பா. சேர்ந்து டிபன் சாப்பிடலாம்!’ என்று அன்பொழுகு அழைத்தான் வித்யாகர்.
“பொங்கல் - சட்னி செஞ்சுருக்கேன் மாமா! பிடிக்குமில்லையா?’ என்றபடி பரிமாறினாள் மானஸா.
குழைந்து பேஸ்ட்டாகி, ஆறி அவலாகிப் போயிருந்தது வெண்பொங்கல். அதன் மீது குருகிப் போன முந்திரித் தூவல்! சட்னி திப்பித் திப்பியாக ஓடியது. “சூடா சாப்பிடுங்க மாமா!’ என்ற உபசாரம் வேறு. பக்கத்தில் உட்கார்ந்திருந்த மகனை ஓரக்கண்ணால் கவனித்தார். அவன் மௌனமாகப் பொங்கலை எடுத்து, ஸ்பூனால் ஸ்டைலாகச் சாப்பிட்டு முடித்திருந்தான்.
♥சாப்பாட்டு வேளை வந்தது. அதுவும் கத்துக் குட்டி சமையல்தான். வேகாத அரிசி, ரசமா? சாம்பாரா? என தெரியாதபடிக்கு கலங்கலாய் ஒரு சமாசாரம். எண்ணெய் வழிந்த அப்பளம்.... நல்ல வேளையாக கடையில் வாங்கப்பட்ட கப் தயிர் இருந்ததால் பிழைச்சுப் போனார் குமாரசாமி.
“கத்திரிக்காய் சாம்பாரா? கொஞ்சம் காய் போடு!’ என்று வித்யாகர் கேட்டு சாப்பிட்டதைப் பார்த்து, உள்ளுக்குள் திகைத்துப் போனார்.
♥“எம் புள்ள தானாடா நீ?’
எப்படியோ மூன்று நாட்கள் பல்லைக் கடித்துக் கொண்டு தள்ளிவிட்டு ஊர் வந்து சேர்ந்தார் குமாரசாமி. வரும் வழியெல்லாம் வித்யாகர் பற்றிய கவலையே நீடித்தது. “பாவம் எம்புள்ள! எப்படியெல்லாம் கமெண்ட் அடிப்பான்? என்ன செஞ்சாலும் குறைசொல்வான்? இப்ப, இப்படி எதுவும் சொல்லாம சாப்பிட்டு வெக்கிறானே! நாக்கு மரத்துப் போச்சுடா உனக்கு?’ மனசுக்குள் ஏதேதோ கேள்விகள் அலை மோத சங்கடமாய் உணர்ந்தார்.
♥உணர்ச்சிகளும், உறவுகளும் கூடிப் பிறந்த இரட்டையர்கள் போல! குமாரசாமி என்ன நினைப்பில் தவித்துக் கொண்டிருந்தாரோ, அதே நினைப்பு வித்யாகரையும் தகித்துக் கொண்டிருந்தது. அலுவலக விஷயமாக கோவை வந்தவன். அடுத்த பஸ் பிடித்து சேலத்துக்கு கிளம்பினான்.
“அப்பா.. கோயம்புத்தூரில் ஒரு க்ளையண்ட் மீட்டில் இதோ முடிஞ்சுடுச்சு.. உங்களைப் பார்க்க வர÷ம்பா!’ மொபைலில் சுருக்கமாகச் சொல்லி முடித்துவிட்டு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தான்.
தோளில் டவலும், கையில் கரண்டியுமாக சமையல் அறையில் அப்பா வேலை செய்யும் காட்சி மீண்டும் மீண்டும் தோன்றி மறைந்தது.
♥“பாவம் அப்பா! அம்மா செத்தப்போ, நாற்பது வயசுதான். எனக்காக இரண்டாவது கல்யாணமே பண்ணிக்காம, தன் ஆசைகளை துறந்தாரே! ரியல்லி கிரேட்! இப்ப கல்யாணமான இந்த வயசுலதான் அது எவ்ளோ பெரிய தியாகம்னே புரியுது. அது மட்டுமா? நான் திருப்தியா சாப்பிடணும்னு அவர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுச் சமைச்சார். எவ்வளவு தவிச்சுத் தவிச்சுப் பரிமாறினார்? ஆனா நான்...? எப்படியெல்லாம் அவரைக் கடுப்படிச்சுருக்கேன்?
அம்மா இல்லாத வெறுமை, ஸ்கூல்ல கணக்கு வாத்தியார் மேல இருந்த ஆத்திரம், பசங்ககிட்ட ஃபுட்பால்ல தோற்ற எரிச்சல், விஜய் படத்துக்கு டிக்கெட் கிடைக்காத வெறுப்பு, சைக்கிளைத் தொலைச்ச குற்ற உணர்வு... இது எல்லாத்தையும் சாப்பாட்டு மேல காட்டறதா நினைச்சு, உங்க மேலதானப்பா காட்டியிருக்கேன்? ஸாரிப்பா... ஸாரி! இப்பத்தான் என்னோட தப்பு புரியுது.. எவ்ளோ பெரிய முட்டாள் நான்! உங்களை எவ்ளோ நோகடிச்சுட்டேன்.
♥எனக்காக மானஸாவோட மகா மட்டமான சமையலைக் கூட பொறுத்துக்கிட்டீங்களே! யூ ஆர் ரியலி கிரேட்! என்னை மன்னிச்சுடுங்க அப்பா. நீங்க உண்மையிலேயே நல்ல குக். அன்பும் பாசமுமா சமைக்கிற உங்க கைமணம் வரவே வராதுப்பா!’ இப்படியெல்லாம் சொல்லி அவரது தோளில் சாய்ந்து அழவேண்டும். இந்தமுறை வெட்கமே படக்கூடாது என்று நினைத்த படி வீட்டுக்குள் நுழைந்தான் வித்யாகர்.
“வாப்பா... வாப்பா.... ரொம்ப சந்தோஷம்பா’ கைகள் நடுங்க அவன் கன்னத்தை வருடினார் குமாரசாமி.
“ராஜா... சாப்புட்டியாப்பா?’
“இல்லப்பா உங்க கையால சாப்பிடலாம்னு...’
“அடி சக்கை! எல்லாம் ரெடியா இருக்கு!’ பரிமாற எழுந்தவரைத் தடுத்து உட்கார வைத்தான். தட்டெடுத்துத் தானே பரிமாறி பிறகு சாப்பிட உட்கார்ந்தான்.
மல்லிகைப்பூ போல சாதம், கமகமத்த முள்ளங்கி சாம்பார், சேனைக்கிழங்கு ரோஸ்ட்.
♥தளரப் பிசைந்து உருட்டி, வாய் நிறைய அடைத்துக் கொண்ட வித்யாகர், தலையை ஆட்டிக் கொண்டே சொன்னான்.
“ழொம்ப நழ்ழா இழுக்குப்பா’
அவன் சொல்ல வந்த அத்தனை வார்த்தைகளும், நெஞ்சுருகி கேட்க நினைத்த மன்னிப்பும், அந்த ஒற்றை வாசகத்தில், அப்பட்டமாய் வெளிப்பட... நெஞ்சுருகி நின்றது கனிந்த தந்தையுள்ளம்!
முதன்முதலாக விமானம் மூலம் வானத்தில் பறந்தவர்கள் யாரென்று கேட்டால் பெரும்பாலோர் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் எனப் பதில் சொல்லுவார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல.
உலகில் முதன்முதலாக விமானம் ஒன்றைத் தயாரித்து அதன் மூலம் வானத்தில் பறந்துகாட்டியவர் ஷிவாகர் தல்பாதே என்கிற இந்தியர்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
1895-ஆம் வருடம் மும்பையைச் சேர்ந்த ஷிவாகர் தல்பாதே காற்றைவிடவும் எடைகூடியதொரு விமானத்தைத் தயாரித்து அதற்கு "மருட்சகா (Marutsakhā) என்று பெயரும் வைத்தார். பின்னர் அந்த விமானம் மும்பையின் செளபாத்தி கடற்கரையில் வெற்றிகரமாகப் பறக்கவிடப்பட்டது.
ஆனால் ஒரு சிலைவணங்கி ஹி!ந்து ஒருவன் வெற்றிகரமாக விமானம் ஒன்றினை உருவாக்கி அதனை விண்ணில் பறக்க வைத்ததனை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் விரும்பவில்லை. ஷிவாகருக்கு எல்லா விதங்களிலும் அவர்கள் தொல்லைகள் கொடுத்தார்கள். விமானம் தயாரிப்பதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதனைத் தடுக்க முனைந்தார்கள். இருந்தாலும் ஷிவாகர் தல்பதே மிகுந்த சிரமத்துடன் அந்தப் பணத்தைத் திரட்டினார்.
தடைகளையெல்லாம் வென்று அவரது விமானம் செளபாத்தி கடற்கரையில் வெற்றிகரமாகப் பறக்க வைத்தார். பழமையான "வ்யாமானிக சாஸ்த்ரா"வின் அடிப்படையில் கட்டப்பட்ட அந்த விமானத்தில் பாதரசம் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. அதனைக் காரணம் காட்டி, ஷிவாகர் தல்பதே பாதரசத்திலிருந்து வெடிகுண்டுகள் தயாரித்ததாகப் பொய்யான குற்றம் சுமத்தி அவரைச் சிறையில் அடைத்தார்கள் பிரிட்டிஷ்காரர்கள். ஷிவாகர் பல ஆண்டுகள் சிறையில் கழித்தார். அவர் சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் தனது விமானத்தைப் பறக்க வைப்பதற்கு முன்னால் ரைட் சகோதரர்கள் அவர்களின் விமானத்தை விண்ணில் பறக்கவைத்திருந்தார்கள்.
தன்னுடைய கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்காத மனவருத்தத்துடன் தல்பாதே 1916-ஆம் வருடம் மரணமடைந்தார்.
அன்றைய காலகட்டத்தில் பாதரசத்தை விமான எரிபொருளாக உபயோகிக்க முடியாது என பல விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்தது. இருப்பினும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா இன்றைக்கு அதன் விண்கலங்களைப் பறக்கவைக்க பாதரசத்தை உபயோகித்து வருகிறது என்பதனை வெளியில் எவரும் அதிகம் பேசுவதில்லை. அந்த உண்மை வெளிவந்தால் ஷிவாகர் தல்பதேக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டிய நிலை வரலாம்.
🌹திரையில் கவர்ச்சியின் பிம்பம் என்று சொல்லப்பட்டவர் புவனேஸ்வரி
🌹புவனேஸ்வரியின் மறுபக்கம்! விபச்சார கேஸை உடைத்து.. இன்று பலருக்கு வாழ்வளிக்கிறார்!
🌹சிலர் இவரை பூனைக்கண் புவனேஸ்வரி என்றுகூட சொல்வார்கள்.. சினிமா, டிவியில் மிகப்பெரிய ரவுண்டு வந்தவர்.. இவர்மீது அன்று விபச்சார வழக்கு தொடுக்கப்பட்டது.. ஆனால், நான் விபச்சாரி இல்லை, விபச்சாரத்தில் ஈடுபடவில்லை என்று தைரியமாக சொல்லி, அந்த வழக்கை எதிர்கொண்டார்.
🌹கடைசியில 3 வருடம் கழித்து, புவனேஸ்வரி நிரபராதி என்று தீர்ப்பு வந்தது. இதுக்கு முன்னாடி விபச்சாரி என்று அவமானப்படுத்தினாங்களே, அதையெல்லாம் எப்படி அழிப்பது? இதுதான் சட்டம். இறுதியில் தான் நிரபராதி என்று சட்டத்திலிருந்து வெளியேவந்தார்.
🌹புவனேஸ்வரி விபச்சாரத்தில் கைதான செய்தியைவிட, விபச்சார வழக்கிலிருந்து விடுதலையான செய்தியை, பத்திரிகைகளில் சின்னதாக போட்டாங்க.. இதுதான் பத்திரிகை தர்மம்.
🌹புவனேஸ்வரி? நெல்லை சங்கரன்கோவிலில் பிறந்தவர்.. வறுமையில் இருந்தவர்.. சாப்பாட்டுக்கே வழியில்லாமல், சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு, டிவி சீரியல்களில் நடித்தவர்.. பிறகு சினிமாவிலும் உயர்ந்து, நல்ல ரேஞ்சுக்கு வந்தவர்.
🌹இன்னைக்கு இவருக்கு 3, 4 ஷூட்டிங் பங்களாக்கள் இருக்கு.. ஆனால், முற்றும் துறந்த சாமியாரினி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இல்லற வாழ்விலிருந்து விடுபட்டு, துறவி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்..
🌹புவனேஸ்வரி, இன்று வளசரவாகக்கம் சிவன் கோயிலில் தினமும் இலவச சாப்பாடு வழங்கி வருகிறார். கோயம்பேடு குருகலாம்பஸ்வரர் கோயிலிலும் அன்னதானம் வழங்கி வருகிறார். ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும், 10 ஆயிரம் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை தருகிறார்.
🌹அன்று சங்கரன்கோவிலில் சோத்துக்கே வழியில்லாத நிலைமை ஏற்பட்டது. இப்போது எனக்கு வசதி வரும்போது, என்னுடைய வருமானத்தில் ஒருபகுதியை சாப்பாடு போட நினைத்தேன்.. என்னுடைய சம்பளத்தை எனக்கு பின்னாடி யாரும் அனுபவிக்க போவதில்லை. எனக்கு வரும் சம்பளத்தை தொடர்ந்து மக்களுக்காகவே செலவிட போகிறேன் என்று சொல்கிறார் புவனேஸ்வரி.
🌹ஒருநாள்... கவிஞர் வாலி ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பஞ்சு அவர்களைப்
பார்த்து ‘என்னய்யா பஞ்சு... நீரே படம் தயாரிச்சு, நீரே பாட்டெல்லாம் எழுதிட்டா, எங்க பொழப்பு என்னாகறது?’ என்று கிண்டலாகக் கேட்டார் வாலி. ‘சரிண்ணே... நம்ம படத்துல தொடர்ந்து நீங்க எழுதுங்கண்ணே.
🌹இப்ப எடுக்கப் போற படத்துல ரெண்டு பாட்டு எழுதுங்க. அதுக்கு அஞ்சு பாட்டுக்கு உண்டான சம்பளம் என்னவோ தந்துடுறேன்’ என்றார் பஞ்சு அருணாசலம். ‘ஏன் முழுசா தரமாட்டியா?’ என்று கேட்க, ‘சரிங்கண்ணே... நீங்களே இந்தப் படத்துல எல்லாப் பாட்டும் எழுதுங்க’ என்றார். அப்படியே கொடுத்தார். வாலியும் எழுதினார். பாடல்கள் மொத்தமும் பட்டையைக் கிளப்பின.
🌹அந்தப் படம்... பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘வைதேகி காத்திருந்தாள்’. அப்படத்தில் ஒரு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார்
🌹தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் கூட, ‘பஞ்சு அருணாசலம் எப்படி இருப்பார்’ என்பது கூட தெரியாது. அப்படியொரு மிஸ்டர் எளிமை. மிஸ்டர் அமைதி.
🌹ஒரு மனிதர், எல்லோருக்கும் பிடித்தவராக இருப்பது சாத்தியமில்லை. அதுவும் திரையுலகில் சாத்தியமே இல்லை. ஆனாலும் பஞ்சு அருணாசலம் எல்லோருக்கும் இனியர். இவர் பல திரைப்படங்களில் பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் குறிப்பாக சொல்லும் படியாக "கலங்கரை விளக்கம்" திரைப்படத்தில் "பொன்னெழில் பூத்தது புது வானில்" என்ற இவர் எழுதிய பாடல் மிகவும் பிரபலமானது.இவர் பணியாற்றிய, கதையை சீர்படுத்திய படங்களை, தயாரித்த படங்களை, வரிசையாக பார்த்தாலே போதும். அது சினிமாவுக்கான வெற்றி ஃபார்முலா என உணர்ந்துவிடலாம்.
🌹பஞ்சு அருணாசலம், சத்தமே இல்லாமல் சாதனைகள் செய்த சகலகலாவல்லவன். அவர் தொட்ட துறைகளும் எட்டிய சிகரங்களும்... இன்னொரு நூற்றாண்டு சினிமாவுக்கான பெருவிருட்சம். பஞ்சு அருணாசலம் விதை நெல்! அவர் உருவாக்கிய படங்களை சினிமா இலக்கணம் என்றும் சொல்லலாம். பஞ்சு அருணாசலம் பாணி என்றும் சொல்லலாம்.
🌹பொன்னெழில் பூத்தது புதுவானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை சென்றது எங்கே சொல்.... சொல்...
பணத்தை உனக்காக வேலை செய்ய வைக்க கற்றுக்கொள். இல்லையென்றால், நீ வாழ்நாள் முழுவதும் பணத்திற்காக ஓடிக்கொண்டே இருப்பாய்.
உன் சம்பளம் உன்னை பணக்காரனாக்காது. அது உன் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும். உன்னை உண்மையில் பணக்காரனாக்குவது உன் சேமிப்பும் முதலீடும் மட்டுமே!
ஒவ்வொரு மாதமும் செலவு செய்த பிறகு மீதமுள்ளதை சேமிக்காதே. அது ஒருபோதும் வேலை செய்யாது. முதலில் சேமி. பிறகு செலவு செய். இதுதான் வெற்றிகரமானவர்களின் ரகசியம்.
உன் எதிர்காலம் இன்று நீ எடுக்கும் நிதி முடிவுகளில் தான் இருக்கிறது. இன்று நீ எடுக்கும் ஒவ்வொரு ரூபாய் முடிவும் நாளைய உன் வாழ்க்கையை தீர்மானிக்கும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்.
ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கை யாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
மிதுனம்: குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். சோம்பல் விலகும். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் காரியங்களை விரைந்து முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கடகம்: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் செல்லும் பயணம் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் இனி ஓடி வந்து பேசுவர். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களை புரிந்து கொள்வர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். பங்குதாரர்கள் ஆதரிப்பார்கள்.
துலாம்: பிள்ளைகளின் பிடிவாதம் கூடும். வாகனம் செலவு வைக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்புடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் குறை சொல்லாதீர். வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பண வரவு உண்டு. அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
தனுசு: திட்டமிட்ட பணியை முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பால்ய நண்பர் களை சந்தித்து மகிழ்வீர். கருத்துமோதல் நீங்கி வியாபாரத்தில் புதிய பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் பணிச்சுமை இருக்கும்.
மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: காரியத் தடைகள் வரக்கூடும். மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 18.8.2026
இன்று இரவு 09.06 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று காலை 08.50 வரை சித்திரை. பின்னர் சுவாதி.
இன்று காலை 07.47 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.
இன்று காலை 08.46 வரை கௌலவம். பின்னர் இரவு 09.06 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
‘டாக்ஸிக் படத்தின் நெருக்கமான காட்சிகளைப் பார்க்கும்போது என் மனைவி அதை முழுமையாக ஏற்றுக்கொள்வார் என்று நான் நினைக்கவில்லை’ என நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் யஷ், நடிகையுடன் தான் நெருக்கமாக நடிக்குபோது தனது மனைவி ராதிகா பண்டிட் எப்படி எடுத்துக் கொள்வார் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “கணவர் அப்படி நடிப்பதை எந்த மனைவியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எல்லா வாழ்க்கைத் துணைக்கும் அந்த எண்ணம் இருக்கும்.
ஆனால் முடிவில், இது எல்லாம் உருவாக்கப்பட்ட காட்சிகள். இது ஒரு கலை. இதன்மூலம் நாங்கள் எதை அடைய விரும்புகிறோம் என்பதுதான் முக்கியமானது.
மக்கள் சிலவற்றை தங்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், சில விஷயங்களை தங்களது அறிவின் அடிப்படையிலும் செய்கிறார்கள்.
நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது அவை எனக்கும் அசவுகரியமாகவே இருக்கும். அந்தக் காட்சிகளில் நடிப்பது எனக்கும் எளிதல்ல. கதைக்கு அந்தக் காட்சிகள் தேவையாக இருக்கும்போது அப்படி நடிக்க வேண்டியது அவசியமாகிறது.
அப்படியான காட்சிகளில் என்னைப் பார்க்கும்போது, என் மனைவிக்கு நிச்சயமாக சங்கடமகத்தான் இருக்கும். அதற்கு அர்த்தம் அவர் அதைத் தவறாக எடுத்துக்கொள்வார் என்பது இல்லை. அவர் என்னை நம்புகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக அவரும் ஒரு நடிகை என்பதால் , இந்த வேலைகளை அவர் புரிந்துகொள்வார். அங்கே தன் வேலையைச் செய்வது ஒரு நடிகன், அவரது கணவன் இல்லை என்பது அவருக்கு புரியும்” என்று தெரிவித்தார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டக்ஸிக்’. இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியானதில் இருந்து யஷ் நடித்த சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்தப் படத்தில் யஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. கன்னடம் , ஆங்கில மொழிகளில் தயாராகும் இந்தப் படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.
80களின் காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து, தனது வசீகர புன்னகையாலும் அசாத்திய நடிப்பாலும் தனக்கெனத் தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்டவர் நடிகை நதியா. பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தபோதிலும், ஒரு படத்தில் கூடக் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்காமல் தனது கண்ணியமான ஆடை அலங்காரத்தால் புகழ்பெற்றார்.
'பூவே பூச்சூடவா' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நதியா, அறிமுகமான முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதன் பின் பூக்களைப் பறிக்காதீர்கள், மந்திரப் புன்னகை, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா என அடுத்தடுத்து பல வெற்றி படங்களைக் கொடுத்தார். இவர் சினிமா உச்சத்தில் இருந்த காலத்தில் நதியா கம்மல், நதியா மூக்குத்தி, நதியா கொண்டை, நதியா உடை என அப்போதைய பெண்களின் ஃபேஷன் டிரெண்டையே மாற்றி அமைத்தார். தமிழ், தெலுங்கு, மலையானம் என உச்சத்தில் இருக்கும்போதே தனது நீண்ட நாள் நண்பரான சிரிஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்த நதியா, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து அசத்தினார். அதன்பின் தெலுங்கில் திரிஷ்யம், திரிஷ்யம் 2 படங்களில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்துப பாராட்டுக்களைப் பெற்றார். இவர் கடைசியாக தோனியின் மனைவி சாஷி சிங் தோனி தயாரித்த 'Let's Get Married' (LGM) திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நதியா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொப்பி அணிந்து, கூல் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 1966-ஆம் ஆண்டு பிறந்த நதியாவிற்குத் தற்போது 60 வயதாகிறது. ஆனால், இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், இவருக்கு 60 வயசுனு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. இன்னமும் அப்படியே 20 வயது பெண் மாதிரியே இருக்காங்க, எவர்கிரீன் நதியா எனச் வியந்து கமெண்டுகளை பகிர்ந்து அவரிடம் அழகு குறிப்புகளை கேட்டு வருகின்றனர்.
கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாகப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கனடிய அரச காவல்துறை கைது செய்துள்ளது.
நிக்கோலஸ் கெல்லி என்ற இந்த நபரை ரிச்சிபுக்டோ பகுதியில் பொலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். அவர் கடைசியாக ஆகஸ்ட் 4 ஆம் திகதி கென்ட் கவுண்டியில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட 25 வயதான நிக்கோலஸ் கெல்லி மீது, ஆட்களைத் தாக்குதல், ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டுதல், வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேகநபர் எந்த இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்ற விவரங்களைப் பொலிஸார் வெளியிடவில்லை.
எனினும், சந்தேகநபரைப் பிடிப்பதற்குத் தேவையான தகவல்களை வழங்கி உதவிய பொதுமக்களுக்குச் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் பொலிஸார் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
கனடாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் வரிக் கொள்கை சீர்திருத்தங்களை ஒட்டாவா அரசு "படிப்படியாக" அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் சிறு வணிகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பிரதமர் மார்க் கார்னியின் வரவுசெலவுத் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேய்ன் லாங் தெரிவித்துள்ளார்.
கனடாவின் சிக்கலான வரி அமைப்பை எளிமையாக்கி, மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என பல வரி நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போதைய வரி முறையின் விதிமுறைகள் அடுக்கடுக்காக அதிகரித்து, வணிகங்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
கனடாவின் சிக்கலான வரி விதிகளால் சில முக்கிய சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குவதாகவும், இந்தத் தடைகளைக் குறைத்து முதலீடுகளை ஈர்ப்பதே அரசின் நோக்கம் என்றும் வேய்ன் லாங் குறிப்பிட்டார்.
பிரதமர் மார்க் கார்னியின் தலைமையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இரண்டாவது இலையுதிர் கால வரவுசெலவுத் திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் "இரண்டாம் கட்ட நடவடிக்கையாக" இருக்கும். கனடாவில் பெரிய அளவிலான வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தற்போதைய அரசு சிறு மாற்றங்களை மட்டுமே செய்து வருவதாகவும், பொருளாதாரத்தை முடக்கும் பழைய வரி முறையை முழுமையாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கன்சர்வேடிவ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சிறு வணிகர்களுக்கான வரி விதிப்பு நடைமுறைகளை எளிமையாக்கி, அறிக்கை சமர்ப்பிக்கும் சுமையைக் குறைப்பதே அரசின் முதன்மை இலக்காக உள்ளது.
அரசின் இந்த முடிவை கனடிய சுதந்திர வணிக கூட்டமைப்பு வரவேற்றுள்ள அதே வேளையில், நிஜமான மாற்றம் வரவுசெலவுத் திட்டத்தில் பிரதிபலித்தால் மட்டுமே சிறு வணிகர்கள் பலனடைவர் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் மீது எவ்வித காரணமுமின்றி நடத்தப்பட்ட கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை டொராண்டோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் புளோர் மற்றும் யோங் வீதிகளுக்கு அருகே குறித்த ஊழியர் நடைபாதையில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தின் போது அந்த ஊழியர் தனது இடைவேளையில் இருந்ததாக ரீ.ரீ.சீ நிர்வாகம் தெரிவித்துள்ளது. கத்திக்குத்துத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஊழியர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டில் நலமடைந்து வருவதாக ரீ.ரீ.சீ தெரிவித்துள்ளது. சந்தேகநபர் 36 வயதான அந்தோணி கிறிஸ்டோபர் டேவிட் மெக்லாலின் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியமை மற்றும் படுகாயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் தேடப்பட்டு வருகிறார்.
5 அடி 8 அங்குலம் முதல் 5 அடி 10 அங்குலம் வரை உயரம் கொண்ட நடுத்தர உடல்வாகு உடையவர். முகம் மற்றும் கைகளில் பல பச்சைக் குத்தல்கள் மற்றும் முழுமையான தாடி வைத்துள்ளார் என குறித்த நபர் பற்றிய அடையாள விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சாம்பல் நிற டி-சர்ட், நீல நிற வெஸ்ட் ஜோக்கெட், சாம்பல் நிறப் பேன்ட், பழுப்பு நிற லெதர் காலணிகள் மற்றும் பின்புறமாகத் திருப்பி வைக்கப்பட்டக் கருப்பு நிற தொப்பி (வெள்ளை எழுத்துகளில் "We The North" என எழுதப்பட்டது).
இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் 416-808-5300 என்ற எண்ணில் பொலிஸாரையோ அல்லது 416-222-TIPS (8477) என்ற எண்ணில் குற்றத் தடுப்புப் பிரிவையோ (Crime Stoppers) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தீரும். இனிமேல் சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.
ரிஷபம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் விரும்பிக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகப் பணிகளை திறம்பட முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
மிதுனம்: மனதில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.
கடகம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி திரும்பும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சிம்மம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். பெற்றோர் உடல்நலம் சீராகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.
கன்னி: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கையில் காசு, பணம் புரளும். புதிய நபர்களுடன் நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். நீண்டகால சொத்துப் பிரச்சினைகள் தீரும்.
துலாம்: கணவன் - மனைவிக்குள் வீண் வாக்குவாதம் வந்துபோகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. பல வகையிலும் பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு.
தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதால் மன நிம்மதி கிடைக்கும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மகான்கள், பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.
மகரம்: சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். கவுரவப் பதவிகள் தேடி வரும். சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பங்குச் சந்தை, கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. எக்காரியத்திலும் நிதானம் தேவை.
கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசு பணம் புரளும். வியாபாரத்தில் போட்டி குறையும். பணியாளர்கள் பொறுப்பாக நடப்பார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
மீனம்: எக்காரியத்திலும் நிதானமாக செயல்படுவது அவசியம். குடும்பத்தில் மூத்தோர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு கூடும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 32 ஆம் தேதி திங்கட்கிழமை 17.8.2026.
இன்று இரவு 08.26 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
இன்று காலை 07.43 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.
இன்று காலை 08.26 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று காலை 08.20 வரை பவம். பின்னர் இரவு 08.26 வரை பாலவம். பிறகு கௌலவம்.
இன்று காலை 06.03 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 06.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர். புதிய பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.
ரிஷபம்: விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவீர். தெய்வீக ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர்.
மிதுனம்: பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பேசித் தீர்ப்பீர். மூத்த சகோதரர் உதவுவார். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
கடகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
சிம்மம்: புது திட்டங்களை தீட்டுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். தாயாருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்ற முயற்சிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கன்னி: யாருக்காகவும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் தொல்லை அதிகரிக்கும். அலுவலக ரீதியாக பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
துலாம்: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை கவருவீர். முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். சகோதர வகையில் உதவி கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். தந்தைவழியில் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.
தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.
மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு முக்கிய பணிகளை முடிப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து நற்செய்திகள் வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கிகள் வந்துசேரும். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.
கும்பம்: எதிர்பார்த்தபடி சில பணிகளை முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும்.
மீனம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். வீட்டில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிலும் கவனமாக இருக்கவும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் சிக்கல்கள் வரலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 16.8.2026.
இன்று இரவு 08.14 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று காலை 07.07 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.
இன்று காலை 09.30 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.
இன்று காலை 08.24 வரை வனிசை. பின்னர் இரவு 08.14 வரை பத்திரை. பிறகு பவம்.
இன்று காலை 06.03 வரை மரண யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
பகல் : 0145 முதல் 02.45 மணி வரை
மாலை: 03.15 முதல் 04.15 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
கையில் காசு இல்லாமல், பள்ளிப்படிப்பும் பாதியிலேயே நின்னுபோன ஒரு உடுமலை மனிதர்… பின்னாடி தமிழ்நாடு முழுக்க அவரோட பாடல்கள் ஒலிக்க காரணமா இருந்தார்னு தெரியுமா?
அந்த மனிதர் தான் உடுமலை நாராயண கவி.
உடுமலைப்பேட்டை அருகே உள்ள பூளவாடி கிராமத்தில் பிறந்தவர்.
வசதியான குடும்பப் பின்னணி இல்ல.
பள்ளிப்படிப்பும் நான்காம் வகுப்போட நின்னுபோச்சு.
ஆனா படிப்பு நின்னாலும், அவரோட கற்றல் நிக்கல.
சின்ன வயசிலேயே தமிழ், இலக்கியம், நாடகம், பாடல்கள் என கலை மீது ஆர்வம் வளர்ந்திருக்கிறது.
அந்த காலத்துல நாடகக் குழுக்களோட சேர்ந்து ஊர் ஊரா சென்று நாடகங்கள்ல நடிச்சும், பாடல்கள் பாடியும் வந்திருக்கிறார்.
சுதந்திரப் போராட்டம் தீவிரமா நடந்த காலத்துல…
அவரோட கலை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் இல்ல.
தேசபக்தி உணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும் அவருடைய பாடல்கள் இருந்திருக்கிறது.
கதர் துணிகளை விற்றுக்கிட்டே, தேசபக்திப் பாடல்களை பாடி ஊர் ஊரா சென்றதாகவும் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
பின்னாடி இந்த நாடக உலகத்திலிருந்து அவருடைய பயணம் தமிழ் சினிமாவை நோக்கி நகர்ந்தது.
1940களில் தொடங்கிய அவருடைய திரைப்பயணத்தில்…
சமூக சிந்தனை, சாதி எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, உழைக்கும் மக்களின் வாழ்க்கை என பல விஷயங்களை தன்னுடைய பாடல்கள் மூலமாக சொல்லியிருக்கிறார்.
அதனால அவருடைய பாடல்கள் வெறும் சினிமா பாடல்கள் மட்டும் இல்ல.
அந்த காலத்து சமூகத்தோட குரலாகவும் இருந்திருக்கிறது.
ஒரு காலத்துல நான்காம் வகுப்புக்கு மேல படிக்க முடியாத நிலை…
கையில் காசு இல்லாத வாழ்க்கை…
நாடக மேடைகள்ல ஆரம்பித்த பயணம்…
அதிலிருந்து தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக உயர்ந்தது.
இதுதான் உடுமலை நாராயண கவியோட பயணம்.
அதனாலதான்…
நம்ம ஊர்ல பிறந்த ஒரு மனிதர் எவ்வளவு பெரிய உயரத்துக்கு போனார்னு தெரிஞ்சுக்கும்போது, அது நமக்கே ஒரு பெருமையா இருக்கு.
இந்த சுதந்திர தினத்துல அவரை நினைக்குறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு.
சுதந்திரப் போராட்ட காலத்துல அவருடைய பாடல்களும், கலைப் பயணமும் மக்களிடம் தேச உணர்வை கொண்டு செல்ல ஒரு வழியாக இருந்திருக்கிறது.
‘சிவாஜி’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ஸ்ரேயா சரண் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ரஜினி சாரை நேரில் பார்த்தபோது பிரமிப்படைந்தேன். அவருடன் பணியாற்றுவது அதுவே முதல் முறை என்பதால், பதற்றத்தில் உறைந்துவிடுவேனோ என்று பயந்தேன்.
அதனால் ஒத்திகைக்கு முன்பாக என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க ஷங்கர் சாரிடம் கேட்டுக் கொண்டேன். அதைக் கேட்டு அவர் சிரித்தார். அந்தப் படம் குறித்த விவரங்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்ததால் அதில் யார் இருக்கிறார்கள் அல்லது என்ன நடக்கிறது என்பது பற்றி முதலில் எனக்கு எதுவும் தெரியாது.
அப்போது ஷங்கர் சார், ‘ரஜினி சாரை சந்தியுங்கள்’ என்று சொன்னதைக் கேட்டதும் ஆச்சரியப்பட்டேன். அந்த நேரத்தில் ‘வாஜி வாஜி’ பாடலுக்கான ஒத்திகையும் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தன. படப்பிடிப்பின்போது, ரஜினி சார் என்னை இயல்பாக உணர வைத்தார்.
என் நெருங்கிய நண்பரைப் போலவே என்னிடம் பழகினார். அதில் மிகவும் சுவாரஸ்யமான மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். ரஜினி சார் மிக மிக எளிமையானவர். படப்பிடிப்புத் தளத்துக்கு வரும்போது, எல்லோரையும் சமமாகத்தான் நடத்துவார்.
அவருடன் அந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. ஆனால் அவர் ஏற்கெனவே சூப்பர்ஸ்டார். ‘உன் வேலையை நேசி, தொடர்ந்து கற்றுக்கொண்டே இரு’ என்று அவர் எப்போதும் என்னிடம் சொல்வார்.
மிகவும் சிரமப்பட்டு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்ததாக அவர் என்னிடம் கூறினார். சாதாரண நிலையில் இருந்து இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக உயர்ந்த பிறகும் எளிமையாகவும் பணிவாகவும் இருக்கிறார் என்பதைப் பார்ப்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. அவருக்குச் சிறந்த நகைச்சுவை உணர்வும் உண்டு, படப்பிடிப்புத் தளத்தில் அவ்வப்போது நாடகத்தனமான செயல்களையும் செய்து கொண்டிருப்பார். இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.







































