- · 1 friends
-
1 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
வங்கதேசத்தில் மாணவர் தலைவரான மொட்டலேப் ஷிக்தர் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் தலையில் சுட்டதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலக காரணமாக இருந்த மாணவர் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த ஷெரீப் உஸ்மான் ஹாடி என்ற மாணவர் தலைவர், கடந்த 12-ம் தேதி சைக்கிள் ரிக்ஷாவில் செல்லும்போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தலையில் சுட்டுவிட்டு தப்பினர். டாக்கா மருத்துவமனையிலும், பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் பெரும் கலவரம், வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இந்நிலையில், மொட்டலேப் ஷிக்தர் (32) என்ற மற்றொரு மாணவர் தலைவர் மீது இன்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தேசிய குடிமக்கள் கட்சி (NCP)-ன் தொழிலாளர் முன்னணியின் மத்திய ஒருங்கிணைப்பாளரான இவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், குல்னா நகரின் மஜித் சரணி பகுதியில் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். தலையில் பலத்த காயமடைந்த மொட்டலேப் ஷிக்தர், ஆபத்தான நிலையில் குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஷிக்தரின் தலையின் இடது பக்கத்தில் சுடப்பட்டதாகவும், இதனால் அதிக ரத்தப் போக்கு இருந்ததாகவும், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வங்கதேச செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து குற்றவாளிகளைக் கண்டறிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் படம். இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார். ‘அகிலன்’, ‘பிரதர்’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகனுடன் இந்நிறுவனம் இணைந்துள்ளது.
சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். அரசியல் கதையை கொண்ட இந்தப் படத்தில், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகிறார். கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
படம் பற்றிய பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, “அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது.
உணர்வு பூர்வமான அரசியல் த்ரில்லராக இது உருவாகி வருகிறது. தற்போது போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தார். ரவி மோகனின் 34-வது படமான இப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் டப்பிங் இப்போது தொடங்கி இருக்கிறது.
இசைத்துறையில் ஏ.ஐ டெக்னாலஜி அதிக ஆதிக்கம் செலுத்துவதாக இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் சொன்னார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: நான் இசை அமைத்துள்ள ‘ரெட்ட தல’, மோகன்லாலின் ‘விருஷபா’ ஆகிய படங்கள், டிச. 25 ம் தேதி வெளிவருகின்றன. ‘ரெட்ட தல’ படத்துக்கு கொஞ்சம் அதிகமாக உழைத்திருக்கிறோம்.
இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. இதில் அருண் விஜய் நடித்துள்ள இரண்டு கேரக்டர்களுக்கும் வித்தியாசமான முறையில் இசை அமைத்திருக்கிறேன். இதில் சித்தி இட்னானி நடித்துள்ள பெண் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. இந்தப் படம் நம் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கும். இதில் ஒரு பாடலை தனுஷ் பாடுவதற்கு முன் அவர் குரலில் ட்ராக் போல ஏ.ஐ.-யில் எடுத்தோம்.
தைக் கேட்டு தனுஷே ஆச்சரியப்பட்டார். டெக்னாலஜி எப்போதும் தவறில்லை. நாம் எப்படி பயன்படுத்து கிறோம் என்பது தான் முக்கியம். இசைத்துறையில் ஏ.ஐ.டெக்னாலஜி அதிக ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. ‘மகாவதார் நரசிம்மா’ அனிமேஷன் படத்துக்கு இசை அமைத்த பிறகு நிறைய பக்தி படங்களுக்கு இசை அமைக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பக்தி பாடல் வாய்ப்புகளும் வருகின்றன. ஐயப்பன் பாடல் ஒன்றை எழுதி இசை அமைத்துள்ளேன். அது விரைவில் வெளியாகும். ‘நாகினி’ தொலைக்காட்சித் தொடருக்கு டைட்டில் பாடல் அமைத்துள்ளேன்.
சர்தார் 2, ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், புஷ்கர் காயத்ரி இயக்கும் படம், கன்னடத்தில் ஒரு படம், மாதவன், கங்கனா நடிக்கும் பான் இந்தியா படம் என சுமார் 10 படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன். பிசியாக இருப்பதை ரசிக்கத் தொடங்கி இருக்கிறேன் என்று சாம் சி.எஸ் கூறினார்.
கடந்த நவம்பர் மாதம் முதல் கனடாவில் 20, 50 மற்றும் 100 டொலர் மதிப்புள்ள போலி கனடிய நாணயத் தாள்கள் பரவல் கணிசமாக அதிகரித்துள்ளதாக கனடிய சில்லறை விற்பனை பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஒரே ஒரு மாதத்தில் கண்டறியப்பட்ட போலி நாணயத் தாள்களின் எண்ணிக்கை, முந்தைய முழு ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போலி நோட்டுகள் தயாரிக்கும் நபர்கள் தங்களின் தொழில்நுட்பங்களை மிகவும் மேம்படுத்தியுள்ளனர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற கண்களுக்குக் கூட உண்மையான நோட்டுகளையும் போலி நோட்டுகளையும் வேறுபடுத்துவது கடினமாகி விட்டது.
ஹோலோகிராம்கள் கூட மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. இந்த போலி நாணயத் தாள் பரவல் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரித்திருப்பது சாத்தியமானதென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் கடைகள் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் பலர் வாங்குவதால், தவறுகளை கவனிப்பது கடினமாகிறது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் நகரின் வட பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில், போக்குவரத்து ஒளி சமிக்ஞைகளும் இயங்கவில்லை. இதன் காரணமாக வீதியில் சென்றுகொண்டிருந்த தானியங்கி கார்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றுவிட, அவ்வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இருள் சூழ்ந்த வேளையில் வீதி நெடுகிலும் வரிசையில் நின்ற கார்களின் சமிக்ஞை விளக்குகள் மட்டும் ஒளிர்ந்த காட்சி கழுகுப் பார்வையாய் பிடிக்கப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகர் முழுதும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அலங்கார வடிவமைப்புகள் களைகட்டி வருகிறது.
வணிக வளாகங்கள், கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சான் பிரான்சிஸ்கோவின் துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை (20) பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மின் இணைப்புச் சாதனங்கள் தீயில் எரிந்ததால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் ஆதரவான சூழல் அமையும். பயணம் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சியில் லாபம் காண்பீர்கள். மனதளவில் இருந்த வருத்தம் நீங்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இருக்கும். கவனக்குறைவால் சில விரயம் உண்டாகும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அறிந்து செயல்படவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களால் அலைச்சல் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணி நிமித்தமாக புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
சிம்மம்
தன வரவுகள் அதிகரிக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அணுகுலம் ஏற்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் தேவைகளை நிறைவேறும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
புத்திசாலிதனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். அரசு வழி செயல்களில் பொறுமை வேண்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர் ஆலோசனை நன்மை தரும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் அகலும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
துலாம்
முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். பழைய சிந்தனைகளால் மனதில் மகிழ்ச்சியற்ற சூழல் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்த இழுபறிகள் மறையும். உடனிருப்பவரை அனுசரித்து செல்லவும். உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
விருச்சிகம்
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சில ஒப்பந்தம் சாதகமாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை உருவாகும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான தேடல்கள் அதிகரிக்கும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
தனுசு
பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை.
மகரம்
பழைய சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். மற்றவர்களின் குறைகளை கனிவாக சுட்டிக்கட்டவும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லவும். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஆதரவின்மை உண்டாகும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். புதிய முயற்சிகளில் அலைச்சல் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை.
கும்பம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் தெளிவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரச்சனைகளின் காரணத்தை கண்டறிவீர். அதிகார பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அயல்நாட்டு பயண வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 22.12.2025
இன்று காலை 10.46 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று அதிகாலை 04.07 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.
இன்று மாலை 04.38 வரை துருவம். பிறகு வியாகாதம்.
இன்று காலை 10.46 வரை கௌலவம். பின்னர் இரவு 11.08 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று அதிகாலை 04.07 வரை சித்த யோகம். பின்னர் காலை 06.24 வரை அமிர்த யோகம். பிறகு மரணம் யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.46 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதா, இல்லையா என்பதை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. இதனிடையே இப்படம் ஜனவரி 23-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்படத்தின் ஓடிடி உரிமை இன்னும் கையெழுத்தாகவில்லை. இதனால் வெளியீட்டு தேதியினை முடிவு செய்ய முடியாமல் இருக்கிறது படக்குழு.
ஜனவரி 23-ம் தேதி வெளியீடு என்றால் இப்போதே விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் இப்படத்தின் வெளியீடு ஜனவரியில் இருக்காது என்பது தெளிவாகிறது. மார்ச் 19-ம் தேதி வெளியிடலாம் என்ற முடிவுக்கு படக்குழு வந்திருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து படமும் தயாராகி விடும்.
‘கருப்பு’ விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்க இருப்பதால், வெங்கி அட்லுரி படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்காமல் இருக்கிறது. ஆனால், ‘கருப்பு’ மார்ச் மாத வெளியீடு என்பதால், அதற்கு முன்னதாகவே வெங்கி அட்லுரி படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கிவிடும் என தெரிகிறது. ஏனென்றால் இப்படம் மே மாதத்தில் வெளியிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை, ஓடிடி, தொலைக்காட்சி என அனைத்து உரிமைகளும் விற்பனையாகிவிட்டது.
ஒரு வயசான ஆளு நிலத்திலே உழுது கொண்டிருந்தார்.
கிழிந்து போன ஒரு சின்ன துண்டைதான் இடுப்பில் கட்டியிருந்தார்.
தலையில் ஒரு கந்தலை சுற்றி இருந்தார்.
உடம்பு பூராவும் சேறு.
ஏர் ஓட்டிக்கிட்டு இருக்கிறவர் வேறுஎப்படி இருப்பார்?
இருந்தாலும் அந்த ஆளு ரொம்ப ஜாலியா பாட்டு பாடிக்கிட்டே உழுது கொண்டிருந்தார்.
உடம்பிலேதான் அவர் ஏழையே தவிர மனசுல அவர் ஏழையா தெரியல.
அந்த சமயத்தில் அந்த நாட்டு ராஜா அந்தப்பக்கமாக வேட்டைக்கு போயிட்டு பரிவாரங்களோடு திரும்பி குதிரைமேலே வந்து கொண்டிருந்தார்.
ராஜா இந்த வயசான விவசாயியைப் பார்த்தார்.
அந்த ஆளு ரொம்பவும் ஏழைங்கிறது அவரைப் பார்த்தாலே பளிச்சுன்னு தெரியுது.
கட்டிக்கிறதுக்கு நல்ல துணி இல்லை.
உடம்பு இளைச்சுப் போய் இருக்கு. வயிறு முதுகோடு ஒட்டி போய் இருக்கு.
கண்ணு குழி விழுந்து போய் இருக்கு.
ஆனாலும் முகத்தை பார்த்தா சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கு.
இவ்வளவு உற்சாகமாக பாடிக்கொண்டிருக்காரேனு ஆச்சரியமாக பார்த்தார் ராஜா.
கொஞ்சம் பேச்சு குடுத்து பாக்கலாம்னு முடிவு பண்ணினார்.
ஐயா பெரியவரே கொஞ்சம் இப்படி வர முடியுமான்னார்.
பொழுது போறதுக்குள்ள இந்த வயல் பூராவும் உழுதாகணும். அதனாலே பேசுவதற்கு நேரமில்லைனார் பெரியவர்.
என்ன அவ்வளவு அவசரமா?
மீதி இருந்தா நாளைக்கு உழுதுக்க கூடாதா?
அது சரி உனக்கு எத்தனை ஏக்கர் நிலம் இருக்கு?
விசாரிச்சார் ராஜா.
எனக்கு சொந்தமா உள்ளங்கை அளவு கூட நிலம் இல்லை.
இது எனது எஜமானன் நிலம்.
இதை பூராவும் உழுது முடிச்சாதான் அவர் கூலி கொடுப்பார்.
கூலிக்கு உழுகிறேன் உங்க கிட்ட பேசிகிட்டு இருந்தா அவருக்கு துரோகம் பண்ண மாதிரி ஆகும்னார்.
ராஜா குதிரையை விட்டு இறங்கி வரப்பிலே நடந்து அந்த பெரியவர் கிட்ட பேச ஆரம்பிச்சார்.
ஒரு நாள் பூரா உழுதா உனக்கு எவ்வளவு கூலி கிடைக்கும்.
எட்டணா கிடைக்கும்னார்.
இவ்வளவுதானா இதை வைத்துக்கொண்டு நீ எப்படி காலம் தள்ளுறே.
ஒன்னும் கவலை இல்லைனார்.
ராஜாவுக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு.
எட்டணா கூலி வாங்குறவர் கவலை இல்லாமல் இருக்கார்.
ஏராளமான வசதியுடைய என்னால் கவலை இல்லாமல் வாழ முடியவில்லை என்று நினைத்தார்.
அது சரி எட்டணாவில் எப்படி குடும்பம் நடத்துற? என கேட்டார்.
எனக்கு கிடைத்த எட்டணாவில் இரண்டு அணா குடும்பத்துக்கு செலவழிக்கிறேன்.
இரண்டு அணா பழைய கடனுக்கு தருகிறேன்.
இரண்டு அணா தர்மம் செய்கிறேன். இரண்டு் அணா வட்டிக்கு கொடுக்கிறேன்.
ஒரு குறையும் இல்லைனார்.
ஒன்னும் புரியல ராஜாவுக்கு .
ஐயா எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு அணா செலவாகுது.
வயதான அம்மா அப்பா சின்ன வயசிலேயே என்னை காப்பாத்தினாங்க அவங்களுக்கு இரண்டு அணா செலவாகிறது.
அது பழைய கடன்.
என் தங்கச்சி ஒருத்தி ஆதரவில்லாத நிலையில் தன் மகனுடன் வீட்டிலேயே இருக்கு.
அவளுக்கும் அவள் மகனுக்கும் இரண்டு அணா செலவு பண்றேன். அது தர்மம்.
எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்காங்க அவங்களுக்கு இரண்டு அணா.
அது வட்டிக்கு கொடுக்கிறது மாதிரி பிற்காலத்தில் அவங்க என்னைக் காப்பாத்துவாங்க.
அந்த வகையிலே நான் திருப்தியா வாழ்ந்துகிட்டு இருக்கேன்னார்.
ராஜாவுக்கு அர்த்தம் புரிய ஆரம்பித்தது அந்த நிலத்தை விலை கொடுத்து வாங்கி அந்த பெரியவருக்கு தானமாக கொடுத்துவிட்டார்.
உழுதவருக்கே நிலம் சொந்தம் ஆயிட்டது.
அரசனுக்கும் ஆறுதல் கிடைச்சதாம்.
இந்தக் கதையோட படிப்பினை என்னன்னா எட்டணா வருமானத்தை வச்சிக்கிட்டு இப்படி காலம் தள்ளுவது அப்படிங்கறது இல்லை.
நாம் எவ்வளவு தான் அதிகமாக சம்பாதித்தாலும் அந்தப் பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் திருப்தியாக கடனில்லாமல் வாழ முடியும் . அதோடு நிம்மதியும் மகிழ்ச்சியும் எம்மிடம் எப்போதும் குடியிருக்கும்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கடுமையாக குறைந்திருந்த ‘பிறப்பு சுற்றுலா’ (Birth Tourism) விகிதங்கள், தற்போது கனடாவில் மீண்டும் உயர்ந்து வருவதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, கனடிய மருத்துவமனைகளில் குடியுரிமை இல்லாதவர்களால் (non-residents) நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களும் அடங்குவர். இந்த வகை பிறப்புகள் 2024-இல், தொற்று முன் இருந்த நிலைக்கு மீண்டும் வந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
தற்காலிக குடியிருப்பாளர்கள் அல்லது சுற்றுலா விசாவில் வரும் நபர்கள் தாங்களே மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்டு பெறும் பிரசவங்களை“non-resident self-pay” என்ற சொல் குறிக்கிறது.
குடியுரிமை இல்லாத அல்லது நிரந்தர குடியிருப்பு இல்லாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள், கனடாவின் மொத்த பிறப்புகளில் மிகவும் குறைந்த பங்கையே வகிக்கின்றன.
2010 முதல் இவ்வகை பிறப்புகள் மொத்தத்தின் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
குறைந்தது ஒரு பெற்றோர் கனடிய குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியிருப்பாளராகவோ இருந்தாலே பிறப்புரிமை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் சட்டத்தை திருத்த முயற்சிக்கப்பட்டது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் குடிவரவு விமர்சகரான மிச்சல் ராம்பெல் கார்னர் இந்த முயற்சியை மேற்கொண்டார். ஆனால் அந்த திருத்தம் லிபரல் மற்றும் பிளாக் கியூபெக்குவா எம்.பி.க்களால் நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் பிறப்புரிமை குடியுரிமை தொடர்ந்து அமலில் உள்ளது.
பண்டிகை காலத்தில் கனடியர்களுக்கு மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கனடியர்கள் மோசடிகளால் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இழந்து வருகின்றனர்.
ஆனால், விடுமுறை காலங்களில் மக்கள் அவசரம், கவனச்சிதறல் மற்றும் பாதிப்பு நிலை காரணமாக இருப்பதால், இந்த குற்றங்கள் மேலும் அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கொள்வனவர்கள் கவனம் தளர்ந்த நேரத்தை மோசடியாளர்கள் குறிவைப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணரான டெரி கட்லர் தெரிவிக்கின்றார்.
மக்கள் வேகமாக வேலைகளை முடிக்க விரும்புகிறார்கள். அதனால், கிளிக் செய்யக்கூடாத இணைப்புகளை கிளிக் செய்து மோசடியில் சிக்குகிறார்கள்,” என அவர் தெரிவித்தார்.
சலுகைகளை நாடும் வாடிக்கையாளர்களை ஈர்க்க போலி இணையதளங்களை உருவாக்குவதுடன், கிப்ட் கார்டுகளையும் மோசடியாளர்கள் கையாள்வதாக கட்லர் கூறினார்.
“அசல் பார்கோடு மீது ஸ்டிக்கர் அல்லது வேறு பார்கோடை ஒட்டிவிடுவார்கள். அது மோசடியாளர்கள் முன்கூட்டியே வாங்கிய ‘மாஸ்டர்’ கிப்ட் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். நீங்கள் காசாளரிடம் 50 டொலர்கள் ஏற்றும்போது, அந்த தொகை உடனடியாக மோசடியாளர்களின் கார்டுக்கு மாற்றப்பட்டு காலியாக்கப்படும்,” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். துணைவர் வழி உறவினர்களால் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு ஏற்ற படி இருக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
ரிஷபம்
உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். மனதில் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விரயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
கணவன், மனைவிடைய ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் உதவியால் சில பிரச்சனைகள் நீங்கும். செயல்களில் ஆதாய நிலை மேம்படும். அந்நிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த செய்திகள் வரும். பணிகளில் இருந்த சோர்வுகள் விலகும். வருவாய் செயல்களில் கவனம் வேண்டும். தேவைகள் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். பொழுது போக்கு விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டுவீர்கள். பணி மாற்ற சிந்தனைகள் மேம்படும். தொழில் வளர்ச்சிக்கு உதவிகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சிம்மம்
குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். மனதளவில் இருந்த தயக்கத்தை தவிர்க்கவும். உணவு செயல்களில் கட்டுப்பாடு வேண்டும். கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகும். வணிக நடவடிக்கைகளில் லாபம் மேம்படும். யதார்த்தம் தாண்டிய கற்பனைகளை குறைத்து கொள்ளவும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கன்னி
முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
துலாம்
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு காரியங்கள் கைகூடிவரும். வாகனப் பகுதிகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான வியூகங்கள் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
குடும்ப நபர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வேலையாட்களிடம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்காலம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
முடிவுகள் எடுப்பதில் கவனம் வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். அதிகாரிகளிடத்தில் நிதானத்துடன் செயல்படவும். வியாபார நிமித்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மகரம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். சிலரின் சந்திப்புக்களால் மாற்றம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
ரசனை தன்மையில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளால் மனம் மகிழ்ச்சியடையும். புதிய தொழில் தொடங்குவது சார்ந்து எண்ணங்கள் மேம்படும். செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியம் கைக்கூடி வரும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மீனம்
எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உழைப்பிற்கான மதிப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியம் இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 21.12.2025.
இன்று காலை 09.33 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று அதிகாலை 02.16 வரை மூலம். பின்னர் பூராடம்.
இன்று மாலை 04.53 வரை விருத்தி. பிறகு துருவம்.
இன்று காலை 09.33 வரை பவம். பின்னர் இரவு 10.10 வரை பாலவம். பிறகு கௌலவம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
இப்போ கூட கவர்ச்சி நடிகைகளில் பார்த்தால் பாவம் தோணுற நடிகைன்னா அது நம்ம குயிலி தான்.
குல்நார் என்கிற இயற்பெயர் கொண்ட குயிலி ஆரம்ப காலத்தில் ஸ்டார் ஹோட்டல்களில் இசைக்கு நடனமாடித்தான் வாழ்க்கை நடத்தி இருந்தார். அதைப் படித்ததினால் எனக்கு அப்படி தோணுச்சோன்னு தெரியல. குயிலி பூவிலங்கு படத்தில் நடிச்ச சில காலங்களில் அவரோட சட்டையில்லாத முதுகுப்பக்கப் படத்தை திரைச்சித்ரா அப்படிங்கிற பத்திரிக்கை வெளியிட்டது. அதனாலயான்னும் தெரியல. அல்லது அந்த இடுங்கிய கண்களான்னு தெரியல. குயிலியுடைய முகத்துல ஒரு சோகம் இருக்கும். எதுனாலயோ அவரிடம் ஒரு பரிதாபம் தோணும்.
பாலச்சந்தர் பொய்க்கால் குதிரையில் சிறிய ரோல் கொடுத்தாலும், கல்யாண அகதிகளில்நடித்தாலும் 'பூவிலங்கு' படம் ரிலீசான போது முதல் காட்சியே பார்த்ததும் படம் பிடிச்சிடுச்சு. முரளியோட துள்ளல் நடிப்பும், செந்தாமரையோட வில்லத்தனம், கல்லூரி, அழகான பாடல்கள் இதோட குயிலியும் பிடிச்சிருந்தது. ஆனா முரளிக்கு முன்னாடி குயிலி வயதான பெண் மாதிரியான தோற்றம் தந்தது நிச்சயம் அந்தப்படத்தோட கேமராமேன் தவறுன்னு தான் சொல்லணும். ஏனோ அதுக்கப்புறம் குயிலியை நாயகியா பின்னே அதிகம் படங்களில் காணவில்லை. அந்த நேரத்தில் குயிலிக்கு டூப் மாதிரியே மோகனப்ரியான்னு ஒரு நடிகை நடிச்சிட்டிருந்தாங்க.
நாயகன் படத்தில் பல ஆச்சர்ய திருப்பங்கள் நம்மை புருவம் உயர வைக்கும். அதில் ஒண்ணு தான் குயிலியோட நிலா அது வானத்து மேலே பாட்டு. யாருமே நினைச்சுப்பார்க்காத திருப்பம். ஒரு பாலச்சந்தர் நாயகி கவர்ச்சி நடனத்துக்கு இறங்கி வருவார்னு. அதுவும் அந்தப்பாட்டு எடுத்த சூழல் புதுசா இருந்தது. ராஜாவின் குரலும் கச்சும் கச்சும் கூட புதுசா இருந்தது.
அப்பவே முடிவாயிடுச்சி. கவர்ச்சி நடனம்னா குயிலி தான்னு. கட்டுக்கடங்காத காளையான முரளியோட கையில தன் தலையில வச்சிருக்கிற பூவால விலங்கு போட்டு இனிமா யாரையும் அடிக்க கை ஓங்கக்கூடாதுன்னு சொல்லி "போட்டேனே பூவிலங்கு. அன்பாலே நீ அடங்கு"ன்னு பாடின அதே பெண் தான் "போய்யா...என்னோடு மல்லுக்கட்ட வாய்யா"ன்னு வேதாளம் வந்து நிக்குதுன்னு ஆடும் சூழல் ஏற்பட்டது தமிழ் ரசிகர்களால் தான்னு சொன்னா மிகையில்லை.
மனோவோட மெஹபூபா மெஹபூபா குரலோடு ஷைலஜாவோட அழுத்தமான குரலில் கமலோட ஏரோபிக்ஸுகளுக்கிடையே குயிலி அசராம ஆடினதுக்கு குயிலியோட டான்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் தான் காரணம். அதோடு தூங்காதே தம்பி தூங்காதேயில் வானம் கீழே வந்தாலென்ன பாடலுக்கும் கமலோடு ஆடிய அனுபவமும் அவருக்கு இருந்தது வசதியாப்போச்சு. இந்த மூணு பாட்டுக்கப்புறம் நாலாவதா கமலோடு 'அடிச்சிடு கொட்டம் விடியற மட்டும்' அவ்வளவா எடுபடலை. குயிலி மேலே இருக்கும் பரிதாப உணர்ச்சியைத்தான் அது கூட்டியது.
சின்னப்பதாஸ் படத்துல 'பாக்கு வெத்தல வச்சுக்க..வச்சுக்க' பாட்டு தனி ஃப்ளேவர். (கார்த்திக்கோட) 'ஜவ்வாது சந்தனப்பூவு' அப்படிங்கிற மழைப்பாடல் அன்றைய மிட்நைட் மசாலா..சோலைக்குயில் படத்தில் முராரியோட இசையில் 'மலைநாட்டு மச்சானே' அசல் காட்டுவாசி காதல் பாடல். அது அச்சு அசலா இளையராஜா சில்க்குக்காக போட்ட 'புழையோரத்தில் பூந்தோணி எத்தியில்லா' என்கிற மலையாளப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட பேட்டர்ன். புதியபாதை படத்தில் (பார்த்திபனோடு) 'கண்ணடிச்சா கல்லெடுப்பேன் கருப்பு மூஞ்சிக்காரி' பாட்டும் குயிலியோட ஸ்பெஷல் தான்.
இந்த டான்ஸ் கூத்துகளுக்கிடையே 'உன்னை சொல்லிக்குற்றமில்லை' படத்தில் அமீர்ஜான் தன் நாயகிக்கு கொஞ்சம் நல்ல ரோலை தந்திருந்தார்னு சொல்லலாம்.
திடீர்னு பார்த்தா ஜோதிகா அம்மாவா ஒரு படத்துல வர்றாங்க குயிலி...அட....அந்த 'பூவிலங்கு' போட்டவங்களா இவங்க. நிறைய அம்மா ரோல்கள். அதன் பின் டிவி சீரியல்களில் ஒரு கலக்கு. அது வரை தனக்கிருந்த நடிப்புப்பசியையெல்லாம் டிவி சீரியல்களில் சாப்பிட்டு போக்கிக்கிட்டாங்கன்னு சொல்லலாம்.
விதவிதமான பாத்திரங்கள். விதவிதமான நடிப்பு. சீரியல்களில் நல்ல பெயரும் கிடைத்தது அவருக்கு. ஆனாலும் பெரியத்திரை அவரை நிராகரித்தது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.
பாலிவுட்டை சேர்ந்த ஸ்டண்ட் இயக்குனரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான குயிலி சிலகாலம் நடிப்பை விட்டு ஒதுங்கி இருக்கார்









