·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 942
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added article

🌹‘கலங்கரை விளக்கம்’ பட ரிலீஸ்… பரபரப்பில் இருந்தபோதிலும் வேலுமணி, ஓர் அதிகாலை நேரம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டிற்குச் செல்கிறார் அப்பொழுது எம்.ஜி.ஆர். முண்டா பனியனுக்கு மேலே, மார்பு வரை கட்டிய லுங்கியுடன் தோட்டத்தைச்சுற்றி வாங்கிங் செயது கொண்டிருக்கிறார்.

🌹வேலுமணியைப் பார்த்தவுடன், “என்ன முதலாளி! இவ்வளவு சீக்கிரமா வந்திருக்கீங்க.. விஷயம் ரொம்ப அர்ஜெண்டா?” என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

அதற்கு வேலுமணி, “அர்ஜெண்டைவிட, அவசியம் என்பதால்தானே உங்களைப் பார்க்க வந்தேன்….” என்கிறார்.

“சொல்லுங்க!”

🌹பையன் சரவணன் ஒரு பொண்ணைக்காதலிக்கிறான். அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறான்.”

“அப்புறம் என்ன… அவன் ஆசைப்பட்டபடி நடத்தி வச்சுட வேண்டியதுதானே?”

“இல்லே.. பொண்ணு ரொம்ப ஏழையாம்! அது மட்டும்மல்லாம: பொண்ணு, அம்மா-அப்பா இல்லாத அநாதையாம்! அதான்…நம்ம ஸ்டேட்டசுக்கு இது சரிப்பட்டு வருமான்னு யோசிச்சுக்கிண்டு இருக்கேன்..” என்று வேலுமணி தயங்கித் தயங்கிச்சொல்லி முடிக்கிறார்.

🌹எல்லாவற்றையும் பொறுமையாக்கேட்டுக் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் “என்ன முதலாளி பெரிய ஸ்டேட்டஸ்

இப்படிப்பட்ட பொண்ணை நீங்க மருமகளா ஏத்துகறதுதான் உங்களுக்கு ஸ்டேட்டஸ்! இந்த்ததிருமணம் நடக்கறதுனால, உங்க உறவுக்காரங்க மத்தியிலயும் ஊர்க்காரங்க மத்தியிலயும் உங்க ஸ்டேட்டஸ் உயருமே தவிர குறையாது. ஒண்ணும் யோசிக்காம கல்யாணத்துக்குத் தேதி குறிச்சிட்டு வாங்க! அந்தப்பொண்ணுக்கு நானே அப்பாவா இருந்து, திருமணத்தை நடத்தி வைக்கிறேன்…”

என்று கொஞ்சம் மிரட்டும் தோரணையில் சொல்லி அனுப்புகிறார்.

🌹மறுப்பேதும் பேசாமல் வேலு மணி அங்கிருந்து விரைகிறார். போன வேகத்தில், 7.3.1966ஆம் தேதியில் சென்னை ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தன்மகனுக்கு அந்த ஏழைப் பெண்ணுக்கும் திருமணம் என்றுநாள் குறித்து, முதல்பத்திரிக்கையை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கிறார்.

🌹திருமண வேலைகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்த வேளையில் மூன்றாம் தேதி அன்று கல்யாண மாப்பிள்ளை ஓட்டிச் சென்ற காரில் மோதி, ஒரு கிழவி இறந்துவிடுகிறார்.

🌹ஏழாம் தேதி திருமணம். மூன்றாம்தேதி இப்படியா?’ என்று எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து, வரப்போகிற பெண்ணின் ராசியால்தான் நடந்திருக்கிறது என்றும்; திருமணத்திற்கு முன்பே இப்படியென்றால், திருமணத்திற்குப் பிறகு இந்தப் பெண்ணின் ராசி என்ன பாடுபடுத்துமோ என்று வேலுமணி வீட்டார் அந்தத் திருமணத்தையே நிறுத்தி விடுவதென்று தீர்மானித்து விடுகிறார்கள்.

🌹தன் குடம்பத்தினர் எடுத்த இந்த் தீர்மானத்திற்கு ஒப்புதல் வாங்க தங்களின்குடும்பத்தலைவரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ராமாவரம் வீட்டில் சந்தித்து, விஷயத்தைச் சொல்கிறார் வேலுமணி.

🌹கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர். மிகுந்த கோபத்துடன், “இதே அசம்பாவிதம் திருமணத்திற்குப் பின்னாடி நடந்திருந்தா என்ன பண்ணுவீங்க? சரி;எல்லார்கிட்டயும் பேசி, நல்ல முடிவோட வாங்க…’ என்று சொல்லி அனுப்பிவிட்டு

🌹காரில் ஏறப்போன வேலுமணியை நிறுத்தி, “இதோ பாருங்க முதலாளி… ஒருவேளை நாங்க எல்லோருமா சேர்ந்து இந்தத் திருமணத்தை நிறுத்தணும்னு முடிவெடுத்திட்டீங்கன்னா, அந்த அனாதைப் பொண்ணை நாளைக்கே என் தோட்டத்துக்கு அனுப்பி வச்சுடுங்க.. நானே அவளை என் மகளா தத்து எடுத்துக்கிறேன்…” என்ற பொன்மனச்செம்மலின் வார்த்தையைக் கேட்ட வேலுமணி, அப்படியே வெலவெலத்துப்போகிறார்.

🌹அப்படியே ஓடோடிப் போய் கண்ணீர் மல்க-மக்கள் திலகத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள்.. அதே தேதியில் தான் திருமணம்.. இதில் எந்த மாற்றும் இல்லை!” என்று சொல்லிவிட்டு , அதே தேதியில் திருமணத்தையும் நடத்தி முடித்தார் வேலுமணி .

  • 98
·
Added a post

ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள்

அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமி சிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினாள். ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது. அங்கு புகை பிடித்தபடி ஒரு நபர் அமர்த்திருந்தார்.

கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து...

என்னமா ?? காசு வேணுமா?? என்று கேட்டார்.

சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள். காருக்குள் ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள்.

இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.

எனக்கு எதுவும் வேணாம் அய்யா.. உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும் கொடுக்கணும்னு ஆசைப்படுறீங்களா அய்யா ? என்று கேட்டாள்.

ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்?

உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ... ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்துறாதீங்க அய்யா.

இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரி என்று நினைத்த மாதிரி நாளைக்கு உங்க மகளை யாரும் நினைத்து விட கூடாது இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள்....

அய்யா. உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு பிச்சைக்காரியை போல்.

இந்த நிலை உங்கள் மகளுக்கும் வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறு பெண்.

சட்டென்று சிகரட்டை கிழே போட்டார்.

என்ன அய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்த சிறுமி கேட்க்க..

"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான் என்னை சுட்டு விட்டது என்றார்."

தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடு நிறுத்துங்கள்.

  • 104
·
Added a post

மேஷம்

உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

ரிஷபம்

வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். கல்வி பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வேலையாட்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்

 

மிதுனம்

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் இருந்தாலும் ஒத்துழைப்பும் ஏற்படும். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

கடகம்

வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். பேச்சுகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். கற்றல் திறனில் சில மாற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாக செயல்படுவீர்கள். வியாபாரப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

சிம்மம்

எதிலும் திருப்தி அற்ற மன நிலைகள் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார பணிகளில் திறமையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கன்னி

புதிய தொழில் நுட்ப பொருட்களை வாங்குவீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். உயர்கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

துலாம்

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொன் பொருட்களில் கவனம் வேண்டும். அரசியல்வாதிகள் பொறுமையுடன் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். பயனற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தனவரவுகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நுட்பமான செயல்பாடுகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

தனுசு

கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் புதுமையான அனுபவங்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். கடன் சார்ந்த முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மகரம்

குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். பொழுதுபோக்கு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கலை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமாக அமையும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கும்பம்

மருத்துவத் துறையில் இருப்பதற்கு மேன்மை ஏற்படும். சிற்ப பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். மனம் திறந்து பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். தாயின் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வாசனை திரவிய பொருள்களால் லாபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

மீனம்

சிந்தனை போக்கில் தெளிவுகள் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல்கள் உருவாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். சிறு தூர பயணம் மூலம் மாற்றம் பிறக்கும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

  • 110
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 10.7.2026.

இன்று அதிகாலை 04.04 வரை தசமி. பின்னர் ஏகாதசி.

இன்று காலை 10.07 வரை பரணி. பின்னர் கிருத்திகை.

இன்று அதிகாலை 03.15 வரை திருதி. பின்னர் சூலம்.

இன்று அதிகாலை 04.04 வரை பத்திரை. பின்னர் மாலை 03.05 வரை பவம். பிறகு பாலவம் .

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=579&dpx=2&t=1783653491

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.15 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 115

Good Morning....

  • 112
·
Added a post

ஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது.

1. சாப்பிடும் முன் மற்றவர்களின் பசியை உணர்ந்த தலைமுறை.

2. நெருக்கடியான வீடுகளில் மிகுந்த அன்புடன் வாழ்ந்த தலைமுறை.

3. பொறுப்புகளை அறிந்த தலைமுறை. 'நான்' என்று சொல்லாமல் 'நாம்' என்று வாழ்ந்த தலைமுறை.

4. பட்டங்கள் இல்லாவிட்டாலும், வாழ்க்கையைப் படித்த தலைமுறை.

5. கடிகாரம் இல்லாவிட்டாலும், நேரத்தை சரியாக பயன்படுத்திய தலைமுறை.

6. இன்டர்நெட் பார்க்காமல் அறிவை நிரப்பிக்கொண்ட தலைமுறை.

7. கால்குலேட்டர் இல்லாவிட்டாலும் கணக்கு செய்ய முடிந்த தலைமுறை.

8. மொபைல் போன்கள் இல்லாவிட்டாலும் நட்பு உரையாடல்களுக்கு குறைவில்லாத தலைமுறை.

9. TV இல்லாவிட்டாலும் வேடிக்கையாக நேரத்தை கழித்த தலைமுறை.

10. GPS இல்லாவிட்டாலும் இலக்கை துல்லியமாக அடைய முடிந்த தலைமுறை.

11. தொழில்நுட்பம் இல்லாவிட்டாலும் சுக சந்தோஷங்களுடன் வாழ்ந்த தலைமுறை.

12. AC, கூலர் இல்லாவிட்டாலும் திறந்தவெளியில் சுகமாக உறங்கிய தலைமுறை.

13. மினரல் வாட்டருக்கு பதில் குளம்/கிணற்று நீர் குடித்து ஆரோக்கியமாக வாழ்ந்த தலைமுறை.

14. பீட்சா, பர்கர் இல்லாமல் பஞ்சு மிட்டாய், பொரி சாப்பிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.

15. இரவுகளில் வீட்டு திண்ணையில் சுகமாக கதை பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.

16. ஆறு வயது வரை குழந்தைகளின் பால்யத்தை விளையாட்டு பாட்டுகளால் நிரப்பிய தலைமுறை.

17. அதன் பிறகு ஒரு பைசா கட்டணம் இல்லாத அரசு பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் குழந்தைகளை படிக்க வைத்து - அங்கே தமிழிலும், இங்கே ஆங்கிலத்திலும் புலவர்களாக ஆகும்படி குழந்தைகளை உருவாக்கிய தலைமுறை.

18. கிலோமீட்டர் தூரத்தையும் சுலபமாக நடக்க முடிந்த தலைமுறை.

19. ஒழுக்கம் தவறிய பிள்ளைக்கு பள்ளியில் ஆசிரியர் நாலு அடி கொடுத்தால் - அவனுக்கு வீட்டில் இன்னும் பத்து அடி கொடுத்த தலைமுறை.

20. தெருக்கூத்து, தோல் பொம்மலாட்டம், புராண கதைகளை ரசித்த தலைமுறை.

21. சென்சார் தேவையில்லாத கருத்துள்ள கருப்பு-வெள்ளை படங்கள் பார்த்த தலைமுறை.

22. வீட்டு வாசலை கோலங்களால் அலங்கரித்த தலைமுறை.

23. வேலையாட்கள், யோகா, ஜிம் இல்லாமல், மூட்டை மூட்டையாக வேலை செய்து, வியர்வை சிந்தி நூறு வயது வாழ்ந்த தலைமுறை.

24. உறவுகளுக்கு, சொந்தங்களுக்கு மதிப்பளித்த தலைமுறை.

25. சொத்துகளை விட, பாசத்திற்கும், பந்தங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்த தலைமுறை.

26. கூட்டுக் குடும்பங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.

27. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரையும் அரவணைத்து சென்ற தலைமுறை.

28. வியாபாரத்தில் கலப்படத்திற்கு இடம் கொடுக்காத தலைமுறை.

29. மற்றவர்களின் நன்மையை விரும்பிய தலைமுறை.

30. நீதி நேர்மையுடன் ஏமாற்றாமல் வாழ்ந்த தலைமுறை.

31. கல்லை சாப்பிட்டாலும் ஜீரணிக்க முடிந்த தலைமுறை.

32. கார்ப்பரேட் மருத்துவமனைகள் இல்லாமலும் ஆரோக்கியமாக வாழ்ந்த தலைமுறை.

33. ஹார்ட் அட்டாக், கேன்சர் பற்றி தெரியாத தலைமுறை.

34. BP, சுகர் வரவிடாத தலைமுறை.

35. லாந்தர் விளக்குகளால் வாழ்க்கையில் ஒளி நிரப்பிய தலைமுறை.

36. கஷ்டங்களை தைரியமாக எதிர்கொண்ட தலைமுறை.

37. எவ்வளவு இருந்தாலும் இன்னும் இன்னும் வேண்டும் என்ற பேராசை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.

38. ஆடம்பரங்களுக்கு தூரமாக இருந்த தலைமுறை. போஸ்ட் கார்டுகளில் உரையாடல் நடத்திய தலைமுறை.

39. தியாகங்களால் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்த தலைமுறை. சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு சகோதரத்துவத்துடன் வாழ்ந்த தலைமுறை.

40. காபி, டிபன் இல்லாமல் பழைய சோறு சாப்பிட்டு பள்ளிக்கு ஓடிய தலைமுறை.....

அப்படிப்பட்ட தலைமுறையில் உள்ள அரிய மனிதர்கள் இன்று ஒவ்வொருவராக நம்மை விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை இழக்கும் போது எல்லாவற்றையும் இழப்பது போல் தோன்றுகிறது.

_போய்க்கொண்டிருக்கும் அந்த தலைமுறையிடம் இருந்து இந்த தலைமுறை எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் - எதிர்காலம் இருள் மயமே!_

அந்த தலைமுறை உண்மையில் நம் கலாச்சாரம், நம் மதிப்புகளின் பிரதிபலிப்பு. அவர்களைப் போன்ற மனங்கள் மீண்டும் வராது... அவர்களை இழப்பது என்பது நம் வேர்களை இழப்பதே....

அந்த தலைமுறை காட்டிய மதிப்புகள், அன்பு, நேர்மை இந்த தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும்...

தொழில்நுட்பத்துடன் முன்னேறுகிறோம் ஆனால் மதிப்புகளில் பின்னோக்கி செல்கிறோம்… அந்த தலைமுறை நமக்கு மனிதநேயம் என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தது...

லாந்தர் ஒளியில் வெளிச்சம் நிரப்பியது அந்த தலைமுறை – கரண்ட் விளக்கு ஒளியில் இருளை வளர்த்துக்கொள்கிறது இந்த தலைமுறை.

*"அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தது இயற்கையுடன் சகவாழ்வு. நாம் கற்றுக்கொள்வது இயந்திர வாழ்க்கை."*

*சரியா? தவறா?*

ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.??

  • 168
  • 162
·
Added a news

கனடாவின் கல்கரி நகரில் உள்ள பிரபல வணிக வளாகமான 'மார்க்கெட் மால்' நகைக் கடையொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் திட்டமிட்டு நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவத்தில் சிறுவர்களைப் பயன்படுத்தியமைக்காக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு எதிராகப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 17ஆம் திகதி, மார்க்கெட் மாலில் உள்ள 'ஹில்பெர்க் & பெர்க்' நகைக் கடை ஊழியர் அளித்த தகவலின் பேரில் பொலிஸார் அங்கு விரைந்தனர்.

கடையின் பாதுகாப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஒன்றாகக் கடைக்குள் நுழைந்தது தெரியவந்தது.

குடும்பத்திலிருந்த பெரியவர்கள் கடையின் ஊழியர்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பியுள்ளனர்.

அந்த நேரத்தில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், 8 வயது சிறுவனும் இணைந்து சுமார் 4,000 டாலர் மதிப்புள்ள பல நகைகளைத் திருடிக்கொண்டு கடையை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்கள் சென்ற பின்னரே நகைகள் திருடப்பட்டதை உணர்ந்த கடை ஊழியர் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து செயற்பட்ட பொலிஸார், நகைகளைத் திருடிய 16 மற்றும் 8 வயது சிறுவர்களையும், அவர்களுடன் இருந்த ஒரு பெரியவரையும் வணிக வளாகத்தின் மற்றொரு பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

இதற்கிடையில், அந்தக் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த லொறி ஒன்றில் மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், அவர்கள் பயன்படுத்திய அந்த லொறியும் திருடப்பட்ட ஒன்று என்பதும், அதனுள் பிற கடைகளில் இருந்து திருடப்பட்ட மேலும் பல பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் 16 வயது சிறுமி, 17 வயது சிறுவன், 25 வயது பெண் மற்றும் 34 வயது பெண் ஆகிய நால்வர் மீது பொலிஸார் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

அதேவேளை, திருட்டுச் சம்பவத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லாத சிறுவர்களின் தந்தையிடம் 8 மற்றும் 9 வயதுடைய இரு சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

  • 226
  • 236
  • 236
  • 233

உண்மைதானே?

  • 242
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர். உடன் பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து நிம்மதியுண்டு. வியாபார ரீதியான வெளியூர் பயணம் திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும். குழப்பம் நீங்கி மனநிம்மதி பிறக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர். வியாபார ரீதியாக உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

சிம்மம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்த சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் வரும். வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வெளிவட்டாரத்தில் மறைமுக அவமானம் ஏற்படக் கூடும். பழைய கடன் சுமையால் நிம்மதி இழப்பீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் சிறக்கும்.

துலாம்: குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி கனிவான பேச்சுவார்த்தைகள் இருக்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

விருச்சிகம்: நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் இருந்த கசப்புகள் விலகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள்.

தனுசு: மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரரீதியாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம்.

மகரம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினருடன் இருந்த பகை நீங்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

கும்பம்: செலவைக் தவிர்த்து, சேமிக்கத் தொடங்குவீர். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரரீதியாக புதியவர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். பிள்ளை களை பொறுப்பாக வளர்ப்பீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

  • 252
  • 244
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 25 ஆம் தேதி வியாழக்கிழமை 9.7.2026.

இன்று காலை 06.13 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று காலை 11.24 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

இன்று காலை 07.16 வரை சுகர்மம். பின்னர் திருதி.

இன்று காலை 06.13 வரை கரசை. பின்னர் மாலை 05.48 வரை வனிசை. பிறகு பத்திரை .

இன்று அதிகாலை 5.57 வரை மரணயோகம். பின்னர் காலை 11.24 வரை அமிர்த யோகம். பிறகு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=578&dpx=2&t=1783567545

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 251

Good Morning...

  • 245
  • 309
  • 307
நடிகை சுகன்யாவிற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  • 307

" பறித்த மலரை

ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன?

கல்லறையில் வைத்தாலென்ன?

மலருக்கென்னவோ

பறித்ததுமே வந்துவிட்டது

மரணம் !

  • 305
  • 304
  • 304
  • 311
  • 315