- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
ஒரே ஒரு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகைகள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய திரையுலகிலும் அவ்வப்போது உருவாகி வருகிறார்கள். அந்த வகையில், அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தற்போது தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மங்களூரை பூர்வீகமாகக் கொண்ட கீர்த்தி ஷெட்டி, மும்பையில் வளர்ந்தவர். பள்ளிப் பருவத்திலேயே விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'சூப்பர் 30' திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து புச்சி பாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடித்த 'உப்பெனா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வெறும் 17 வயதில் 'பேபம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி ஷெட்டி, தனது நடிப்பாலும் கியூட் லுக்காலும் ரசிகர்களை கவர்ந்தார். 'உப்பெனா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கீர்த்தி ஷெட்டிக்கு தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
உப்பெனா' வெற்றிக்குப் பிறகு 'ஷ்யாம் சிங்கா ராய்', 'பங்கார்ராஜு', 'தி வாரியர்', 'கஸ்டடி' உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், இந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், தெலுங்கில் அவரது மார்க்கெட் சற்று பின்னடைவை சந்தித்தது.
இதையடுத்து தமிழ் மற்றும் மலையாள சினிமா பக்கம் கவனம் செலுத்திய கீர்த்தி ஷெட்டி, 'ஏஆர்எம்' திரைப்படத்தின் மூலம் மலையாளத்திலும், 'வா வாத்தியார்' படத்தின் மூலம் தமிழிலும் தனது பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுடன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்திலும் நடித்தார்.
தற்போது 'ஜினி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி, தெலுங்கிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். இதன் மூலம் தனது சினிமா பயணத்தை மீண்டும் வேகப்படுத்தும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், படங்களில் பிஸியாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கருப்பு நிற உடையில் விதவிதமான போஸ்களில் கீர்த்தி ஷெட்டி கொடுத்துள்ள இந்த போட்டோஸ், இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக அவரது ஸ்டைலிஷ் லுக் மற்றும் கிளாமர் அப்பீல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சினிமாவில் மீண்டும் பிஸியாகி வரும் கீர்த்தி ஷெட்டிக்கு மத்தியில், இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன். கும்பகோணத்தில் பிறந்த இவர், பொன்மகள் வந்தாள், வாணி ராணி, அழகி, வள்ளி, அழகு, வேலைக்காரன் உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை வென்றவர்.
சீரியல்கள் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் தடம் பதித்த இவர், விமல், மிர்ச்சி சிவா நடித்த கலகலப்பு படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து தீய வேலை செய்யணும் குமாரு, வெள்ளக்கார துரை, முத்தின கத்திரிக்காய், ஸ்கெட்ச், நாடோடிகள்'போன்ற பல ஹிட் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகை அர்ச்சனாவிற்கு நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ரீல்ஸ்கள் மற்றும் கவர்ச்சியான போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
அவர் வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படங்களில், கருப்பும் சிவப்புமான பாரம்பரியப் புடவையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். குறிப்பாக, கையில் மல்லிகைப் பூவை வைத்தபடி, கண்களை மல்லிகைப் பூவால் கட்டிக்கொண்டு நனைந்த நிலையில் அவர் கொடுத்துள்ள கிளாமர் போஸ்கள் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன. இந்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தற்போது நடிகை அர்ச்சனாவிற்கு 41 வயதாகிறது. ஆனால், இந்த வயதிலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு, இணையத்தில் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இவர் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருவதால் வரும் விமர்சனங்களை கண்டுகொள்ளாத இவர், நான் கவர்ச்சியாக போட்டோ போடுவது என்னோட விருப்பம். பிடித்திருந்தால் பாருங்கள்.. பிடிக்கவில்லை என்றால் ஸ்க்ரோல் பண்ணிட்டு போங்க, அதற்காக கமெண்ட் பாக்ஸில் வந்து தவறான கமெண்ட்ஸ் போடுவது சரியில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது அவர் மல்லிப்பூவுடன் சொட்ட சொட்ட நனைத்து இருக்கும் ரீல்ஸுக்கு மலைபோல் லைக்குகள் குவிந்து வருகின்றன.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்களின் உரிமையாளர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ வான்கூவர் பகுதியில் உள்ள அந்த நகரத்தில், கடந்த மே 20 ஆம் திகதி பெண் ஒருவர் நாய்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அவரது காயங்களின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அவை மிகவும் "கடுமையானவை மற்றும் வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடியவை" என்று விவரிக்கப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு முன்பே, அந்த நாய்கள் மிகவும் "ஆக்ரோஷமானவை" என நகர அதிகாரிகள் ஏற்கனவே வகைப்படுத்தியிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, அந்த நாய்களுக்கு வாய்மூடி கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும், இச்சம்பவத்தின் போது நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்கப்பட்டிருக்கவில்லை என பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து, கவனக்குறைவாகச் செயல்பட்டு உடல்காயத்தை ஏற்படுத்தியதற்காக நாய் உரிமையாளர் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்ய பிரிட்டிஷ் கொலம்பியா அரசு வழக்குரைஞர் சேவை ஒப்புதல் அளித்துள்ளது.
கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி அதிகாலை, காமிஷ்னி தனது 10 மற்றும் 17 வயதுடைய இரு மகன்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
பின்னர், 'நெயில் கன்' ஆணி அடிக்கும் கருவி மூலம் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார். கடந்த ஜூன் 24 அன்று இவர் மீதான முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அவை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கனடாவின் சட்டப்படி முதல் நிலை கொலைக் குற்றவாளிக்கு 25 ஆண்டுகளுக்குப் பிணை பெற முடியாது.
விவாகரத்து செய்த தனது மனைவியைப் பழிவாங்குவதற்காகவும், அவருக்குத் தண்டனை அளிப்பதற்காகவுமே காமிஷ்னி இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
கொலை செய்வதற்கு முன்பாக, "நான் அனைவரையும் கொன்றுவிட்டேன், பொலிஸாரையும் ஆம்புலன்ஸையும் வரச் சொல்" என்று மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி மற்றும் கடிதங்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.
எனினும், நீதிமன்றத்தில் பேசிய காமிஷ்னி, "எனக்கு அன்றைய தினம் நடந்தது எதுவும் நினைவில் இல்லை, என் குழந்தைகளைக் கொல்லும் திட்டம் எனக்கு இருக்கவில்லை" என்று வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதி டேரல் ஸ்டீபன்சன், "உம்மீது மேலும் வார்த்தைகளை வீணடிக்க விரும்பவில்லை. நீர் ஒரு திட்டமிட்டு அதைச் செயல்படுத்தியுள்ளீர், அதற்கான தண்டனையை அனுபவிக்கும் நேரம் இது" என்று கூறி தண்டனையை அறிவித்தார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: சவாலான காரியங்களை சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர். வியாபாரத்தில் போட்டி குறையும். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
ரிஷபம்: பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்து பேசுவார். புதிய நண்பர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
மிதுனம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். வியா பாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.
கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள்.
துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி சொந்தங்களுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் முடிவுக்கு வரும். மனைவி, தாயாரின் உடல் நிலை சீராகும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.
தனுசு: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக வங்கி கடனுதவி பெற முயற்சிப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
மகரம்: முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நற்செய்தி உண்டு. அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்கவும். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்.
கும்பம்: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். தாய்வழி உறவினர்கள், பழைய நண்பர்கள் உதவுவர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை 15.8.2026
இன்று இரவு 08.35 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று காலை 07.01 வரை பூரம். பின்னர் உத்திரம்.
இன்று காலை 11.00 வரை சிவம். பின்னர் சித்தம்.
இன்று காலை 08.59 வரை தைத்தூலம். பின்னர் இரவு 08.35 வரை கரசை. பிறகு வனிசை.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
🌹சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார்.
🌹அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார்.
🌹சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.
🌹சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன்.
🌹1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.
🌹ஒரு ஆள் உயரத்துக்கு ரொம்பப் பெரிய மாலை ஒன்றைத் தூக்க முடியாமல் எடுத்துக்கொண்டு வந்து, ஸ்டேஜில் என்னை கௌரவித்துப் போட்டார். அவர் வரப்போவது எனக்குகூடத் தெரியாது. ப்ளசன்ட் சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமலே வந்தாராம்.
🌹பத்மினி இப்ப நடிக்கிறதுகூட இல்லையே என சிலர் கேட்டபோது, ‘நடிக்காவிட்டால் என்ன? பப்பி ஒரு கிரேட் ஆக்ட்ரஸ். அதுக்காகவே மரியாதை செய்யணும்’ என்று சிவாஜி சொன்னதாகக் கூறினார்கள்.
🌹ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட சிவாஜி அமெரிக்கா வந்தபோது, விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றேன். என் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹார்ட் ஆபரேஷனுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த சமயம். என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கமலா அம்மாள் என்னைப் பார்த்துக் கண் கலங்கிவிட சிவாஜி சோகமானாலும்
,🌹 ‘ஷீ ஈஸ் சச் எ பியூட்டிஃபுல் லேடி’ என என்னைத் தட்டிக் கொடுத்தார்.
🌹அழுதுவிடக்கூடாது என்று தன்னையும் கட்டுப்படுத்திக்கொண்டார்.
🌹அமெரிக்காவில் இருந்தாலும் சிவாஜியின் பிறந்த தினம், திருமண நாள் ஆகிய விசேஷத் தருணங்களில் மறக்காமல் கணேஷூக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லுவேன்.
நம்ம வீட்ல இப்ப எல்லாம் ஸ்டீல் டப்பா, பிளாஸ்டிக் டப்பால தான் தயிர் உறைய வைக்கிறோம். ஆனா நம்ம பாட்டி காலத்துல எல்லாம் மண் சட்டியில தான் தயிர் உறைய வைப்பாங்க, அதுக்கு ஒரு காரணம் இருக்கு.
மண் பானைக்கு இயற்கையாவே காரத்தன்மை இருக்குனு சொல்வாங்க. அது தயிரோட அதிக புளிப்பை சமப்படுத்த உதவுமாம். அதே மாதிரி மண் பானையில இருக்கிற கண்ணுக்கு தெரியாத சின்ன சின்ன துளைகள், தயிர்ல இருக்கிற கூடுதல் தண்ணியை உறிஞ்சிக்கும். அதனால தான் மண் சட்டி தயிர் நல்லா கெட்டியா, வழுவழுப்பா இருக்கும்.
இப்படி கெட்டியா உறையுற தயிர்ல நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும், செரிமானத்துக்கும் நல்லதுன்னு நம்ம முன்னோர்கள் சொல்லுவாங்க.
இது பாரம்பரியமா சொல்லப்படுற பொதுவான தகவ
"ஹெலிகாப்டரில் ஒரு முறை பறக்க வேண்டும்!" – மாணவர்களின் நகைச்சுவை ஆசையை நனவாக்கிய தலைமை ஆசிரியர்
ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர், தேர்வில் முதல் இடம் பெற்ற மூன்று மாணவர்களிடம்,
"உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் சிரித்தபடியே,
"ஹெலிகாப்டரில் ஒரு சுற்று பறக்க வேண்டும்!" என்று கூறினர்.
அது வெறும் நகைச்சுவையாகச் சொன்ன ஆசைதான்.
ஆனால், அந்த ஆசையை நிஜமாக்க முடிவு செய்தார் ராஜஸ்தானில் உள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திர தாகா (Rajendra Dhaka).
8-ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்காக, சுமார் ₹1 லட்சம் செலவில் அவர் சொந்தமாக ஏற்பாடு செய்து, ஜெய்ப்பூர் நகரின் மேல் சுமார் 30 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் பறக்கும் அனுபவத்தை வழங்கினார்.
கிராமப்புறத்தைச் சேர்ந்த அந்த மாணவர்களுக்கு, இது அவர்கள் கனவிலும் நினைக்காத ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
பல பள்ளிகளில், சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் அல்லது கோப்பை வழங்கப்படலாம்.
ஆனால், இந்த தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு அனுபவத்தையே பரிசாக வழங்கினார்.
சில நேரங்களில், ஒரு ஆசிரியர் வழங்கக்கூடிய மிகப் பெரிய பரிசு பொருளல்ல...
ஒரு மாணவரின் கனவை நனவாக்கும் வாய்ப்புதான்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: மனதுக்கு இதமான செய்தி வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வராது என்றிருந்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.
ரிஷபம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிப்படையான பேச்சால் தடைகள் உடைபடும். பிள்ளைகளின் போக்கில் மகிழ்ச்சியுண்டு.வியாபாரத்தில் பணியாட்களை மாற்றுவீர். அலுவலகத்தில் மேலதிகாரி உதவுவார். சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
மிதுனம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டுதன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.
கடகம்: திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. மனதில் இருந்த பயம்விலகும். பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும். ஓரளவு லாபம் பார்க்கலாம்.
சிம்மம்: முன்கோபத்தை குறைப்பீர். மகனின் வேலை, மகளின் திருமணம் என்று அலைச்சல் இருக்கும். பல வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டிவரும். வியாபாரப் போட்டியை சமாளிப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். மேலதிகாரி ஆதரிப்பார்.
கன்னி: புது எண்ணங்கள் மனதில் உதிக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சகோதர வகையில் உதவி கிட்டும். விரும்பியபொருட்கள் வாங்கி வீட்டை அலங்கரிப்பீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
துலாம்: எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சி உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
விருச்சிகம்: பழைய மகிழ்ச்சிகரமான நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர்.
தனுச: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து தீவிர யோசனையில் இருப்பீர். பிரியமானவர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
மகரம்: தம்பதிக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொள்வீர். பேச்சில் கவனம் தேவை. வாகனம் செலவு வைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது.
கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 14.8.2026.
இன்று இரவு 09.24 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று காலை 07.21 வரை மகம். பின்னர் பூரம்.
இன்று பிற்பகல் 12.50 வரை பரிகம். பின்னர் சிவம்.
இன்று காலை 10.01 வரை பாலவம். பின்னர் இரவு 09.24 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
இன்று காலை 06.03 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 06.29 வரை மரணயோகம். பின்பு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 05.00 முதல் 06.00 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
இயக்குநர் முத்தையாவுடன் அருண் விஜய் இணையும் ‘இருளன்’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
அருண் விஜய், முத்தையாவுடன் இணைந்து தான் பணியற்ற இருக்கும் தனது 38-வது படத்தின் தலைப்பு, முதல் தோற்றம் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பெரும் காட்டில் தனித்திருக்கும் கொற்றவை, காவல் தெய்வம் கருப்பசாமி என விரியும் காட்சிகளில், ஏற்றிக் கட்டிய சடைமுடி கொண்டை, கழுத்தில் புலி பல்வரிசை மாலை, மார்பில் பச்சை குத்தப்பட்டிருக்கும் பாண்டியர்களின் மீன் சின்னம், கையில் வேல் கம்பு என நிற்கும் அருண் விஜயின் தோற்றம் மிரட்டலாகவும், கவனம் ஈர்க்கும் வகையிலும் உள்ளது.
முத்தையாவின் தென்மாவட்ட கதைகள பாணியில் அருண் விஜயின் இந்தத் தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.
நேதாஜி பிலிம்ஸ் சார்பில் சண்முகவேல் பாண்டியன் தயாரிக்கும் ‘இருளன்’ படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். படத்தில் அருண் விஜயுடன், மிர்னா, சமுத்திரகனி, ஜான் கொக்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
🌹வெண்ணிற ஆடை’ தான் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் முதல் படம். அதுமட்டுமின்றி நடிகையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கும் முதல் படம். திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த். ‘இந்து தமிழ் திசை’ இணையதள சேனலுக்கு ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதாவை நான் அம்முன்னுதான் கூப்பிடுவேன். நல்ல நண்பர்கள் நாங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
🌹ஸ்ரீகாந்த் என்று திரையுலகிற்காக பெயர் மாற்றம் செய்திருந்தாலும் ‘வெங்கி’ என்றும் ‘வெங்கு’ என்றும் பாலசந்தர், ஸ்ரீதர், வாலி, நாகேஷ் முதலான திரைப்பிரபலங்கள் அழைப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
🌹ஸ்ரீகாந்திற்கு ஒரே மகள். மகளை பள்ளிக்கு அழைத்து வந்துவிடும் போது, ‘ஸ்ரீகாந்த் ஸ்ரீகாந்த்’ என்று பள்ளியில் இருந்து குரல் கேட்கும். மாணவிகள் கலாட்டா செய்வார்களாம். பின்னாளில், அந்த மாணவிகளில் ஒருவர், ஸ்ரீகாந்தின் நாயகியாக பல படங்களில் நடித்தார். அந்த நடிகை ஸ்ரீப்ரியா. ‘மிகச் சிறந்த நடிகர் ஸ்ரீகாந்த். மேலும் பண்பும் அன்பும் கொண்ட மனிதர்’ என நடிகை ஸ்ரீப்ரியா நெகிழ்ந்து தெரிவிக்கிறார்.
🌹ஜெயலலிதாவின் முதல் ஹீரோ என்பது போல், ஸ்ரீகாந்தின் வாழ்வில் இன்னொரு அத்தியாயமாக
🌹‘தங்கப்பதக்கம்’ திகழ்ந்தது. ஜெகன் எனும் கேரக்டரில் சிவாஜிக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருந்தார். இவரின் நடை, உடை, பாவனைகளும் வசன உச்சரிப்புகளும் எவர் சாயலுமில்லாமல் புதுமாதிரியாக இருந்தது என்பதும் இவரின் வெற்றிக்கு முக்கியக் காரணம். மகனாக இதில் மிரட்டியிருப்பார்.
🌹‘ராஜபார்ட் ரங்கதுரை’யில் சிவாஜியின் தம்பியாக அசத்தியிருப்பார்.
‘🌹ஞானஒளி’யிலும் அசத்தியிருப்பார். ஹீரோவாக நடித்த ‘ராஜநாகம்’ இவரின் நடிப்புத் திறமையை இன்னும் வெளிக்கொண்டு வந்தது. வில்லனாக, கொஞ்சம் ஆவேசக்காரனாக நடித்து மிரட்டினாலும்
🌹 ‘பாமாவிஜயம்’ படத்தில் நடிகை ராஜஸ்ரீயின் உதவியாளராக கலகலப்பாக நடித்திருப்பார். அதேபோல், கிட்டுமாமா, பட்டுமாமி எனும் கேரக்டர் பெயர்கள் இன்று வரைக்கும் வெகு பிரபலம். ‘
🌹எதிர்நீச்சல்’ படத்தில் கிட்டுமாமாவாக ஸ்ரீகாந்த், பட்டுமாமியாக செளகார் ஜானகியும் காமெடியில் கலக்கி சிரிக்கவைத்திருப்பார்கள்.
🌹செளத்ரி கேரக்டர் இன்று வரை பேசப்படுவதற்கு சிவாஜியின் நடிப்பும் ஸ்ரீகாந்த் எதிர்ப்பதும் காரணம். அதேபோல், அதுவரை வில்லத்தனம் செய்துகொண்டிருந்த ரஜினி, நாயகனாக முதன் முதலில் நடித்த படமான
🌹 ‘பைரவி’யில் வில்லனாக அசத்தியிருப்பார் ஸ்ரீகாந்த்.
🌹கோவை சொந்த ஊர் அதனால் என்னவோ சொந்த ஊரை சார்ந்த சத்தியராஜ்.கவுண்டமணி.மணிவண்ணன்.ரகுவரன்.நிழல்கள் ரவி.கோவை சரளா.. உள்ளிட்ட பலரையும் நடிக்க வைத்தார்.. மிகப்பெரிய வெற்றி படங்களை தந்தவர்..*
🌹இவரைப் பற்றி தெரிஞ்ச பல இருந்தும் தெரியாது பலவும் இருக்கிறது அதில் சில
🌹பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது*.
🌹இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்.*
🌹பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்*
🌹இளையராஜாவிற்கு பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கு கதை சொல்லத் தொடங்கினார், சுந்தர்ராஜன். "கதையை சுருக்கமாக, மையக் கருத்துடன் சொல்ல வேண்டும். எவ்வளவு நேரம் ஆகும்?'' என்று இளையராஜா கேட்டார். "அரைமணி நேரம் போதும்'' என்று சொன்னார், சுந்தர்ராஜன். கதையை அவர் சொல்லச்சொல்ல, அந்த இசை மேதை கதையில் ஐக்கியமாகி, 2 மணி நேரம் கதை கேட்டார். கதையை கேட்டு முடித்ததும், "இந்தப் படத்திற்கு நான் இசை அமைக்கிறேன். நாளை காலை வி.ஜி.பி.யில் பாடல்களை கம்போஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்'' என்று இளையராஜா கூறினார். அவர் கூறியபடி, மறுநாள் இசை அமைக்க 12மணி நேரத்தில் 30 டியூன்கள் போட்டார், இளையராஜா.*
🌹இதில், காட்சி அமைப்புக்கு ஏற்றபடி, உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறினார். "நான் காட்சிகளை விளக்குகிறேன். அதற்கேற்ற டியூன்களை நீங்களே தீர்மானியுங்கள்'' என்று சுந்தர்ராஜன் சொல்ல, அப்படி தீர்மானித்ததுதான் பயணங்கள் முடிவதில்லை படப்பாடல்கள்*
🌹பயணங்கள் முடிவதில்லை'' படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் அறிமுகப்படுத்த எண்ணினோம். அந்த சமயத்தில், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் வெளிவந்திருந்தது. அதில் மோகனின் தோற்றமும், நடிப்பும் எனக்குப் பிடித்திருந்தன. அவரை கதாநாயகனாகப் போட தயாரிப்பாளரும், சுந்தர்ராஜனும் தீர்மானித்தர்கள்.*
🌹அவரை அணுகியபோது, "கதையைக் கேட்டபிறகு, என் முடிவை சொல்கிறேன்'' என்றார்.கதையைக் கேட்டதும், "கதை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கால்ஷீட் தருகிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இந்த சமயத்தில், "மஞ்சவிரிச்ச பூக்கள்'' என்ற மலையாளப்படம் சென்னையில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் நடித்த பூர்ணிமாவை (பின்னாளில் பூர்ணிமா பாக்கியராஜ்) கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்கள்.ரூ.23 லட்சம் செலவில் 4 மாதங்களில் பயன்பாடுகள் முடிவதில்லை தயாரானது 26.2.1982ல் படம் ரிலீஸ் ஆகி.எல்லா இடத்திலும் நூறு நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்டது*
🌹தமிழ் சினிமாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிது கிடையாது. கடின உழைப்பு இருந்தால் மட்டுமே மிகப்பெரிய வெற்றிகளை பெற முடியும் என்பதற்கு தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய கலைஞர்கள் மிகப்பெரிய உதாரணமாகும்*.
🌹அப்படி தமிழ் சினிமாவின் அதிக அளவிலான வெள்ளி விழா படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர்தான் ஆர்.சுந்தர்ராஜன். இப்போது இருக்கக்கூடிய நடிகர்களும் திறமைகளோடு இருக்கின்றனர் ஆனால். தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து 60, 80 களில் அனைவரும் அனைத்து விதமான கலவைகளையும் கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.*
🌹இயக்குனராக மட்டுமல்லாமல் சுந்தர்ராஜன் எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், சிறந்த நடிகர், என பன்முகத் திறமைகளை கொண்டவர். பயணங்கள் முடிவதில்லை, மெல்ல திறந்தது கதவு, வைதேகி காத்திருந்தால், அம்மன் கோயில் கிழக்காலே என பல்வேறு விதமான வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்*.
🌹தமிழ் சினிமாவில் 1980 காலகட்டங்களில் மிகவும் முன்னணி நடிகராக மோகன் இருந்து வந்தார். பாடல்களை வைத்து மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்து விட்டார் மோகன் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது இளையராஜாவின் இசை.*
🌹அப்படி உச்சத்தில் இருந்த மோகனை வைத்து சுந்தர்ராஜன் பல படங்களை இயக்கியுள்ளார். பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக தடம் பதித்தார் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்ற 175 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி விழா கொண்டாடியது இந்த திரைப்படம்*.
🌹குங்குமச்சிமிழ், நான் பாடும் பாடல், சரணாலயம், மெல்ல திறந்தது கதவு என பல வெள்ளிவிழா திரைப்படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதற்குப் பிறகு விஜயகாந்த் பக்கம் தனது திசையை திருப்பினார் சுந்தர்ராஜன்*.
🌹மோகனைப் போலவே ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு விதமான வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விஜயகாந்த் திகழ்ந்து வந்தார். வைதேகி காத்திருந்தாள் என்ற கதையை கையில் வைத்துக் கொண்டு பல்வேறு சிக்கலுக்கு பிறகு விஜயகாந்த் தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களை ஒப்புக்கொள்ள வைத்து இந்த திரைப்படத்தை எடுத்து மிகப்பெரிய வெள்ளிவிழா கொடுத்தார் சுந்தர்ராஜன்*
🌹இதுவரை பார்க்காத விஜயகாந்தை வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் மிகவும் அமைதியான கதாபாத்திரமாக மக்கள் கண்டு களித்து மிகப்பெரிய வசூல் சாதனையை கொடுத்தனர். இது ஒரு புறம் இருக்க வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் உருவானது குறித்து மிகப்பெரிய கதை இருப்பதாக கூறப்படுகிறது.*
🌹இளையராஜா தன்னிடம் ஏழு டியுன்கள் இருப்பதாகவும் அதற்காக ஒரு கதை யாராவது எழுத முடியுமா என கேட்டுள்ளார். ஏன் முடியாது மொத்த பாடல்களையும் அந்த படத்திலேயே வைத்து விடலாம் என சுந்தர்ராஜன் எழுதிய திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தாள் எனக் கூறப்படுகிறது*.
🌹அடுத்த திரைப்படம் அம்மன் கோயில் கிழக்காலே. வைதேகி காத்திருந்தாள் வெற்றிக்கு பிறகு இருவரும் கூட்டணி சேர்ந்து உருவான திரைப்படம் இது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை செய்தது. விஜயகாந்துக்கு சிறந்த நடிகர் என விருது கிடைத்தது.*
🌹இந்த அனைத்து திரைப்படத்திற்கும் இசையமைத்தது இளையராஜா தான் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. மிகப்பெரிய இயக்குனராக வெற்றி பெற்ற பிறகும் நடிப்பில் இறங்கினார் சுந்தர்ராஜன். துணை கதாபாத்திரங்களாக நடித்தாலும் தான் இருக்கும் இடத்தை சரியாக நிரப்பி விடுவார் ஏனென்றால் இயக்குனர் அல்லவா*.
🌹இயக்குனராக இருக்கும் பலர் கேமரா முன்பு நின்று நடிப்பது கிடையாது ஒரு சிலர் மட்டுமே தங்களது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில் அனைத்து விதமான கலைகளிலும் திறமை பெற்றுவராக விளங்கி வருகிறார் சுந்தர்ராஜன்*.
தற்போது சின்னத்திரையிலும் நடித்து கலையில் பயணித்துக் கொண்டே இருக்கின்றார். சுந்தர்ராஜன்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி தடபுடலாக நடக்கும். பால்ய நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.
ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த பணிகள் முடியும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர். நல்ல லாபம் கிட்டும்.
மிதுனம்: நீண்ட நாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவு கிட்டும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு.
கடகம்: திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். ஓரளவு லாபமுண்டு. உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.
கன்னி: எதார்த்தமான பேச்சால் தடைபட்ட பணிகளை முடிப்பீர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
துலாம்: புதுப்புது எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. மனைவி, தாயாரின் உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் திருப்தி தருவதாக அமையும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக செயலபடுவர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு உண்டு. பழைய கடன்களை பைசல் செய்வீர். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர்கள் மதிப்பர்.
மகரம்: தாய்வழி உறவினர்களால் மனக்கசப்புகள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்கவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரப் போட்டி இருக்கும். பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
கும்பம்: பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள். வீட்டில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க பணியாட்கள் வருவர். புதிய யுக்திகளை கையாள்வீர்.
மீனம்: குடும்பத்தில் நல்லது நடக்கும். பணவரவு உண்டு. குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். பேச்சில் உற்சாகம் பிறக்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். இழுபறியாக இருந்த பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை 13.8.2026.
இன்று அதிகாலை 12.16 வரை அமாவாசை. பின்னர் இரவு 10.38 வரை பிரதமை. பிறகு துவிதியை.
இன்று காலை 08.06 வரை ஆயில்யம். பின்னர் மகம்.
இன்று மாலை 03.00 வரை வரீயான். பின்னர் பரிகம்.
இன்று அதிகாலை 12.16 வரை நாகவம். பின்னர் காலை 11.27 வரை கிமிஷ்துக்கினம். பின்பு இரவு 10.38 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று காலை 08.06 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை










