·   ·  10 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 689
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
  • 27
  • 26
  • 27
·
Added a post

எட்டு வயது சிறுவன் ,கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி, உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா ?என்று கேட்டான் .

சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர், சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார். சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான்.

பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன், அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று ,கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான்.

அதற்கு அந்த கடைக்காரர் மிகுந்த கோபமுற்று இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி விட்டார். அவன் வந்து கொண்டிருந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு காரின் முன்னே சென்று விழுந்தான்.

அந்த கார் நிறுத்தப்பட்டது. நல்ல வேளை அடியேதும் படவில்லை. அந்த காரில் இருந்து இறங்கிய அந்த பெரியவர் அந்த சிறுவனை பார்த்து என்ன ஆயிற்று? என்று கேட்டார்..

அந்த சிறுவன் நடந்ததை, கூறி பின்னர் அவரிடமே, தன்னுடைய ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி,, உங்களிடம் இறைவன் இருந்தால் இந்த ஒரு ரூபாயை வைத்து கொண்டு எனக்கு கொடுக்க முடியுமா? என்று கேட்டான்.

. அதற்கு அந்த பெரியவர், ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு ,அந்த இறைவனை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய் ?என்று கேட்டுள்ளார்.

அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான். சாப்பாடு ஊட்டுவது முதல் ,தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை! என் தாய் தான். தற்போது என் தாய் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார்! என்று கூறி விட்டனர். அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் !என்று கூறினான்..

அதற்கு அந்த பெரியவர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவனைத் தானே வேண்டும்,? நான் தருகிறேன்! என்று கூறி, ஒரு கடிதம் எழுதி, அதை ஒரு உறையுள் போட்டு கொடுத்து, இதனை கொண்டு போய் உன் தாய் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் குறிப்பிட்ட ஒரு மருத்துவரின் பெயரைச் சொல்லி ,அவரிடம் கொண்டு போய் கொடு! என்று கூறி அனுப்பி வைத்தார்.

சிறுவனும் அவ்வாறே நேராக மருத்துவமனைக்கு சென்று அந்த மருத்துவரை கண்டு அந்த உறையை கொடுத்தான். அந்த உறையை பிரித்து பார்த்த மருத்துவர், மருத்துவமனையின் நிறுவனர் தன் கைப்பட எழுதிய அந்த கடிதத்தை கண்டு அதிர்ந்து போய் உடனே அந்த தாய்க்கு தீவிர உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அந்த சிறுவனின் தாயை காப்பாற்றினார்.

முக்கிய மருத்துவர்கள் புடை சூழ மருத்துவமனையின் நிறுவனர் (அதாவது அந்த பெரியவர்) உயிர் பிழைத்த தாயை காண வந்தார். அவர்களை பார்த்த தாய், மருத்தவ செலவை பற்றி நினைத்து, என்ன ஆகுமோ என அச்சத்தில் உறைந்து இருந்தாள்.

அந்த பெரியவர், அந்த ஏழை தாயிடம் கவலை படாதீர்கள், உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் உங்கள் மகன் செலுத்தி விட்டான். இதை கேட்டதும் தாய், அதிர்ந்துபோய் தன் அருகே தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்தாள்.

மேலும் தொடர்ந்த பெரியவர், செலவு போக மீதித் தொகையை உங்கள் மகனை படிக்க வைப்பதின் மூலம் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றார்.

தாய் மிகவும் பயந்து போய் அந்த பெரியவரிடம் காரணத்தை கேட்டபோது, அவர் " உங்கள் மகனின் அந்த கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் கடவுளை பெற்றே தீருவேன் என்ற விடா முயற்சி ஆகியவைதான் இந்த சேவையை செய்ய காரணம் என்று கூறினார்.

மனதில் நம்பிக்கை மற்றும் விடா முயற்சி இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்...

  • 27
·
Added a post

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது.....

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு

வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்...

அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்....

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

சாப்பிடும் முறை

(1) நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

(2) எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

(3) பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டோ சாப்பிட கூடாது...

(4) சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.

போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

(5) அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...

(6) பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

(7) பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...

(8) ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

(9) இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

(10) சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

(11) சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

(12) சாப்பிட வேண்டிய நேரம்...

காலை - 7 to 9 மணிக்குள்

மதியம் - 1 to 3 மணிக்குள்

இரவு - 7 to 9 மணிக்குள்

(13) சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

(14) சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

  • 32
·
Added a post

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!!

குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும்,

விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.

கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்...

நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சமைப்பது,

அவரை ரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மலைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார்.

அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா இப்போது சொல் என்றார் கிருஷ்ணன்..

அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார்.

ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே!

சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான்.அதனால் அவன் செய்த தவறு சிறியது.

ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய்.

அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.

ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.

ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார்.

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.

  • 41
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் மத்தியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்களும் அறிமுகங்களும் உருவாகும். புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் மாற்றமான சூழல் அமையும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

ரிஷபம்

தந்தை வழி தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். கூட்டாளிகள் சேர்ப்பது தொடர்பான எண்ணம் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். துணிவு வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மிதுனம்

நண்பர்கள் மூலம் அலைச்சலும் அனுபவம் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் அனுபவமும் ஏற்படும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். ஆர்வம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தன வரவுகள் சாதகமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் நன்மைகள் ஏற்படும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். அயல்நாட்டு தொடர்பான பணிகளில் முக்கியத்துவம் உண்டாகும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். சிக்கல் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்

சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

கன்னி

ஒப்பந்தம் சார்ந்த பணிகள் மூலம் லாபங்கள் மேம்படும். மனதில் புதுமையான இலக்குகள் பிறக்கும். குழந்தைகள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சாமர்த்தியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். நிர்வாகப் பணிகளில் மேன்மை ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பொழுது போக்கு செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். குழப்பம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

விருச்சிகம்

செய்தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். சினம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

முதலீடுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பேச்சுத் திறமைகள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். பார்வை பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகளில் சிந்தித்து செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மகரம்

திடீர் பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணிகளில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களிடம் பொறுமையை கையாளவும். செலவுகளின் தன்மை அறிந்து செயல்படவும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கும்பம்

மனதளவில் சிறுசிறு குழப்பம் தோன்றி மறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். முயற்சிகளில் மாற்றமான சூழல்கள் உருவாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். உழைப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மீனம்

புதுவிதமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் மேம்படும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் அதிகரிக்கும். நுண்கலை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

  • 179
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை 19.2.2026

இன்று மாலை 05.12 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று இரவு 10.03 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.

இன்று இரவு 09.53 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.

இன்று அதிகாலை 05.39 வரை பாலவம். பின்னர் மாலை 05.12 வரை கௌலவம். பிறகு தைத்தூலம் .

இன்று காலை 06.32 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=427&dpx=2&t=1771471709

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 178

Good Morning...

இன்றைய நாள் உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றிக்கு வழி காட்டட்டும்.

  • 177
  • 251
·
Added a post

கேரளாவின் புராதான சின்னம் பற்றிய கண்ணோட்டம்

கேரளாவின்அதிகாரபூர்வமான புராதான சின்னம் திருவிதாங்கூர் அரச சின்னத்தின் அடிப்படையில் உள்ள இருபுறமும் யானைகள் காத்து நிற்கும் ஸ்ரீ பத்மநாபசுவாமியின் சங்கு ஆகும்

இந்தச் சின்னத்தின் மேல் பகுதியில் இந்தியா தேசிய சின்னமான அசோக சக்கரத்தின் சிங்கம் இடம் பெற்றுள்ளது

இது திருவிதாங்கூர் மற்றும் கொச்சி அரசுகளின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது

இந்த சின்னம் கேரளாவின் கலாச்சாரம் இயற்கை மற்றும் திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்றன

  • 279
  • 273
  • 273
  • 273
  • 273

காலை வணக்கம்

  • 335
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவார்கள். நண்பர்களின் உதவியுடன் புது வேலை கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பணவரவு உண்டு. பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். அலைச்சல் குறையும்.

மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபார விஷயமாக இருந்த டென்ஷன் விலகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கடகம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தினருடன் மனஸ்தாபம் வரக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆதரவைப் பெறுவீர்.

சிம்மம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் குழப்பங்கள் தீரும். வியாபாரத்துக்காக புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். லாபம் உண்டு.

துலாம்: எதிர்பார்த்த வகையில் பணவரவு இருக்கும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். கூடுதல் பொறுப்பு சேரும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.

விருச்சிகம்: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியம் கை கூடி வரும். வீடு, வாகனத்தை மாற்றுவீர். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். லாபம் பார்க்கலாம்.

தனுசு: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர். தோற்றப் பொலிவு கூடும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். தொழில் போட்டி குறையும். ஓரளவு லாபம் கிட்டும்.

மகரம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும்.

கும்பம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். மூத்தோரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.

மீனம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். வீடு, வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

  • 353
·
Added a post

குங்குமப்பூவை சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து, அந்த கலவையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

மஞ்சள் ஒரு சிறந்த அழகுப் பொருள். இது முகத்தை அழகாக வைக்க உதவுவதோடு, சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும். எனவே அத்தகைய மஞ்சளுடன் குங்குமப்பூவை சேர்த்து, தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்திற்கு தடவி 10 நிமிடம் ஊறவைத்து, வெதுவெதுப்பான கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலிவாகும்.

குங்குமப்பூவை உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உணவு சுவையுடன், இருப்பதோடு சருமத்திற்கு நல்ல பலனும் கிடைக்கும்.

குங்குமப்பூவில் உள்ள நன்மை கிடைக்க வேண்டுமெனில், அதற்கு ஈரப்பசையானது தேவை. எனவே தினமும் குளிக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் சிறிது குங்குமப்பூவை தூவி 20 நிமிடம் ஊறவைத்து, பின்னர் குளித்தால், முகம் மட்டுமின்றி, உடல் முழுவதுமே நல்ல நிறத்தைப் பெறலாம்.

ரோஸ் வாட்டரில் குங்குமப்பூவை ஊறவைத்து, அந்த கலவையைக் கொண்டு சருமத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊறவைத்து கழுவினாலும், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

குங்குமப்பூவானது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் முகத்தில் பருக்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இதனை குளிர்ச்சி மிகுந்த சந்தனப் பொடியுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, சருமத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாகவும், நிறம் அதிகரித்தும் காணப்படும்.

குங்குமப்பூவை, வெதுவெதுப்பான பாலில் போட்டு, 20 நிமிடம் ஊறவைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட் டால், சருமமானது வெள்ளையாகும்.

குங்குமப்பூவை எலுமிச்சை சாற்றில் கலந்து மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள அதிகப் படியான எண்ணெய் நீக்கப்பட்டு, சருமத்தின் நிறம் அதிகரித்து காணப்படும்.

  • 360
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 6 ஆம் தேதி புதன்கிழமை 18.2.2026.

இன்று மாலை 06.06 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று இரவு 10.23 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.

இன்று அதிகாலை 01.39 வரை பரிகம். பின்னர் இரவு 11.53 வரை சிவம். பிறகு சித்தம்.

இன்று காலை 06.18 வரை கிமிஸ்துக்கினம். பின்னர் மாலை 06.06 வரை பவம். பிறகு பாலவம் .

இன்று காலை 06.32 வரை மரண யோகம். பின்னர் இரவு 11.53 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=426&dpx=2&t=1771384416

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 361
·
Added a post

தெய்வத் திருவிளையாடல்கள் எல்லா காலமும் நிகழத்தான் செய்திருக்கின்றன. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் வீற்றிருக்கும் கைக்கொண்ட ஐயனார், ஆங்கிலேய ஆட்சியின்போது, அதிகாரி ஒருவருடன் உரையாற்றியுள்ளார். அத்தகைய சிறப்புபெற்ற இந்த ஐய்யனார் சாந்த ரூபத்தில் சாஸ்தாவாகவும், ஆங்கார ரூபத்தில் ஐயனராகவும் இருந்து வேண்டியவர்க்கு வேண்டும் வரமளித்து வருகிறார். கைக்கொண்ட ஐயனார் கோயிலின் இடது பக்கம் ஒரு பெரிய குளம் உள்ளது. முற்காலத்தில் அந்தக் குளத்தில் தண்ணீர் முழுவதும் நிரம்பியிருக்கும். அந்த பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களின் ஆகாரத்திற்கான பாசனத்திற்கு இந்த குளத்து நீரே ஆதாரம்.

அந்தளவுக்கு கொள்ளளவு கொண்டு, ஒரு சிறிய ஏரி போல் காட்சி தரும் அந்தக் குளத்தின் நடுவே இருந்த திரட்டு மீது அமர்ந்திருந்தார் ஐயனார். சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒருநாள் குளக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த பெரிய திருமலை வேளாளரை பார்த்து, பெயரைக் கூறி சுவாமி அழைத்தார். திரும்பிய வேளாளர், ‘‘ஐயா, என்ன காரணமாக என்னை கூப்டீக, நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?’’ “ ஒ! தெரிஞ்சுக்கலாமே, முதல்ல எனக்கு பசியா இருக்கு. சாப்பிட உன்கிட்ட என்ன இருக்கு.?” “ஐயா, இப்ப, என்கிட்ட ஒண்ணும் இல்லீங்கள’’ “தோட்டத்தில் இருந்து தானே வற” “கொஞ்சம் பொறுத்திருங்க, வாழைப்பழம் கொண்டு வாரேன்’’ ‘‘நான் குளத்துக்கு நடுவில் இருக்கும் திட்டில் அமர்ந்திருப்பேன். நீ வந்து அழைக்கும்போது நான் வருவேன்’’ என்று கூறிக்கொண்டு ஐயனார் சென்று விட்டார்.

அருகிலிருக்கும் வாழைத்தோட்டம் சென்று ஒரு வாழைப்பழத்தாருடன் குளத்தின் கரைக்கு வந்த வேளாளர். கரையிலிருந்து ஐயனாரை அழைத்தார். அவரின் குரலைக் கேட்ட பின், ஐயனார் பேசினார். ‘‘வேளாளரே, நீர் கொண்டு வந்துள்ள குல வாழையை, குளத்து தண்ணீர் மேல தலைவாழை இலை விரித்து, அதன் மேல் வைத்துவிடு, அது என்னிடம் வந்திடும். நான் எடுத்துக் கொள்கிறேன்.’’ “ஐயனே, அது எப்படி சாத்தியமாகும். பழ குலை தண்ணீரில் மூழ்கிடுமே.’’ “ம்..ம்.. நான், சொன்னதை நீர் செய்யும். அது மூழ்காது..” என்றார் சுவாமி. சுவாமி சொன்னபடி செய்தார் வேளாளர். தலைவாழை இலையில் வைக்கப்பட்ட குலை வாழைப்பழம், மறுவினாடியே மிதந்தபடி, குளத்தின் மையத்தில் உள்ள திரட்டுக்கு சென்றடைகிறது.

அதைக் கைக்கொண்டு சுவாமி பெறுகிறார். அடுத்த நொடி அதே இலை, மீதி பழங்களுடன் திரும்பி வந்தது. அதைப்பார்த்த அவர், “சுவாமி என்ன இது’’ ‘‘நான் பழம் பெற்று கொண்டதை நீ அறிய வேண்டாமா, அது தான் திரும்ப மீதியை அனுப்பினேன்’’ என்றார். “ஐயா, தினமும் நான் கொண்டு வாரேன். வந்து எப்படி அழைப்பது.’’ “ நீ எப்படி அழைத்தாலும் நான் வருவேன்” என்றார். “நான் அனுப்பியதை, நீங்கள் கைக்கொண்டு பெற்றமையால் கைக்கொண்ட ஐயன் என்றே நான் அழைக்கிறேன்’’ என்று அவர் கூறினார். “சரி” என்றார் சுவாமி, மறுநாள் வீட்டிலிருந்து அப்பளம், பாயசத்துடன் உணவு கொண்டு வந்த அவர், அதை இலையில் வைத்து அனுப்பினார். சுவாமி கேட்டார். “என்ன வேளாளரே, உணவோடு வந்திருக்கிறீரே” என்று கேட்டதும்.

“அறுவடை முடிஞ்ச, புதுநெல்ல குத்தி சோறாக்கினோம். முதல்நாள் என்பதால் பாயசம், அப்பளமாக உணவு சமைத்தோம்’’ என்றார். “இது எனக்கு வேண்டாம், பழம் மட்டுமே போதும்.” “ஏன் சுவாமி, உணவை சாப்பிடுவதில்லையா’’ “ம்ம்.. சாப்பிடுவேன் அது என் முன்னால் பொங்கலிட்டு படைத்தால் அதை நான் ஏற்பேன். எனக்கு படையல் செய்ய, நீ உன் குடும்ப சகிதமாக வரவேண்டும். எனக்கு படையல் செய்து பூஜித்த பின்னர். நீங்கள் அனைவரும் என் முன்னே அமர்ந்து சாப்பிட வேண்டும். குடும்ப அங்கத்தினர்கள் கூடி மகிழ்ந்து செய்யும் போது அந்த பூஜையை நான் விரும்பி ஏற்பேன்.’’ என்றார். “சரி. சுவாமி குளத்துல தண்ணி நிரம்பி இருக்கு, எப்படி அங்கு வந்து பொங்கலிடுவது.”

“குளத்தின் கரையில் வைத்து பொங்கலிட்டு, படையலை இலையில் வைத்து அனுப்பு, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.” “சரி, எப்ப செய்யனும்.’’ “உனக்கு என்னிக்கு முடியுதோ அன்னிக்கு செய். நான் அவதரித்த தினமான பங்குனி உத்திரத்தன்று, என்னை வழிபடும் அன்பர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். என்று எண்ணுகிறேன். முடிந்தால் அன்றைய தினம் செய்துக்கொள்.” என்றார். அதன்படி வேளாளரும் செய்து வந்தார். நாட்கள் நகர்ந்தது, முதுமை கொண்ட பெரிய திருமலை வேளாளர், ஒரு பங்குனி உத்திரத்தன்று பூஜை முடிந்த பின், சுவாமியை நோக்கி சத்தமாக குரல் கொடுத்தார். “ஐயனே, இப்படி இலையில் வைத்து அனுப்புவது என்னால் முடிந்தது. என் சந்ததியினர் இப்படி செய்ய முடியுமா? என்று தெரியவில்லை.

அதை விட, உனக்கு பூஜைகள் செய்து முழுமையான உமது தரிசனத்தை காண நாங்கள் விரும்புகிறோம். ஐயனே நீர் குளக்கரையில் வந்து அமர வேண்டும்’’ என்றார். “உன் விருப்பப்படியே நடக்கும்.” என்றார். இது நடந்த, மறு பங்குனி உத்திரத்தன்று குளக்கரையில் வந்து பூஜைசெய்ய முயன்ற பெரிய திருமலை வேளாளரிடம், அசரீரியாக ஐயன் பேசினார். “வேளாளரே குளத்தின் வட கரையில் ஆலமரத்தின் கிழக்கேயுள்ள வாகை மரத்தடியில் எனக்கு கோயில் எழுப்பி பூஜித்து வா, என்னோடு வந்தமரும், என் சக பரிவாரர்களுக்கும் நிலையம் அமைத்துக் கொடுத்து பூஜை செய். என்னை வழிபடும் அன்பர்களுக்கும், அவர்களின் பிள்ளைக்கும், பிள்ளைக்குமான தலைமுறைக்கும் நான் துணை நிற்பேன்.

என் சக பரிவாரர்களும், என் தளபதியர்களான மாடன்களும் துணை நிற்பார்கள்” என்று கூறினார். காலங்கள் உருண்டோடியது. ஆலயம் வளர்ந்தோங்கியது. மேலப்பாவூர், மேலகிராமம் சுப்ரமணிய ஐயர் ஆலயத்தை நிர்வகித்து வந்தார். திப்பணம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களுக்கு கைக்கொண்ட ஐயனார், குல தெய்வமாக திகழ்ந்தார். மாதம் தோறும் கடைசி வெள்ளியன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. பங்குனி உத்திரம் நாளில் அபிஷேகத்துடன் பூஜைகள் நடந்தது. கீழப்பாவூரிலிருந்து வேட்டைக்காரன் சுடலை, கைக்கொண்ட ஐயனார் ஸ்தலத்துக்கு வந்தமர்ந்தார்.

ஒரு வெள்ளிக்கிழமை கோயில் நிர்வாகியான ஐயரின் கனவில் வந்த ஐயனார், என் தளபதி சுடலைமாடனும், என் தாயின் அம்சமான பிரம்மராக்கு சக்தி, பேச்சியம்மன் மற்றும் என் பரிவார மூர்த்திகள் வேட்டைக்காரன், கோட்டைவாசல் கருப்பசாமி ஆகியோர் வந்திருப்பதாகவும், அவர்களுக்கு எனது சந்நதி முன்பு நிலையம் கொடுத்து பூஜித்து வாருங்கள். என்றும் கூறினார். அதன்பிறகு அவர்களுக்கு அங்கு நிலையம் அமைத்து கொடுத்து பூஜைகள் நடைபெற்று வந்தது. பூஜையின்போது சுடலைமாடன் ஒருவர் மீது வந்திறங்கி, எனக்கும், ஐயனாருக்கும் வாகனமான குதிரையை உருவம் கொடுத்து என் சந்நதி முன்னே நிறுத்த வேண்டும். பங்குனி உத்திரத்தன்று எனக்கு கொடைவிழா கொடுக்க வேண்டும்.

என்று கூறியதன் பேரில், ஐயனாருக்கு சைவ பூஜையும், சுடலைமாடன் மற்றும் பரிவார மூர்த்திக்களுக்கு அசைவ பூஜையும் நடைபெற்று வந்தது. கோயிலில் சுடலைமாடன் வடக்கு பார்த்து உள்ளார். முற்காலத்தில் அவர் முன்னே மண்ணால் குதிரை பொம்மை செய்து வைத்திருந்தனர். 1902ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருநெல்வேலி-தென்காசி இடையே ரயில் போக்குவரத்தை தொடங்க, இருப்பு பாதை அமைக்கும் பணிக்காக இடம் தேர்வு நடந்தது. அந்த இருப்பு பாதை கைக்கொண்டார் குளத்தின் கிழக்கு கரையோரமாக தற்போது கோயிலிருக்கும் பகுதி வழியாக அமைக்க முடிவு செய்து, முன்னேற்பாடான பணிகள் தொடங்கியது.

அப்போது அங்கு வந்த அதிகாரிகளிடம், கோயில் நிர்வாகியான சுப்பிரமணிய ஐயர் மற்றும் இதர நிர்வாகிகளும் சேர்ந்து இருப்பு பாதையை இந்த வழியாக அமைத்தால் கோயிலுக்கு இடையூறாக இருக்குமே என்றனர். அதற்கு அந்த அதிகாரி, இடையூறா, கோயிலையே, அதிகாரிங்க இடிக்க முடிவு பண்ணியிருக்காங்க என்றனர். அதை கேட்டதும், நிர்வாகக் குழுவினர் அதிர்ச்சிக்குள்ளா யினர். இதை உடனே தடுத்தாக வேண்டும். என்ன செய்வது என்று அவரிடமே கேட்கும்போது, அந்த அதிகாரி கூறினார். ‘‘நீங்க தென்காசியில் இருக்கும் இன்ஜினீயர் ஆபீசில போய் சொல்லுங்க’’ என்றதும். கோயில் நிர்வாகத்தினர் அங்கு சென்று கூறினர்.

அதற்கு அவர், ‘‘நாங்கள் அங்கு வந்து பார்த்த பிறகு முடிவு செய்கிறோம்’’ என்று கூறி அனுப்பி வைத்தனர். மறுநாள் வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு கோயில் இருக்கும் இடத்திற்கு, ஆங்கிலேயர்களான ரயில்வே உயர் அதிகாரியும், இன்ஜினீயரும் அவர்களோடு இரண்டு இந்தியர்களும் வந்திருந்தனர். ஆங்கியலேய அதிகாரி தனது குதிரையில் வந்து இறங்கினார். கோயில் பூசாரி முதல் அய்யர் உட்பட நிர்வாகத்தினர் மரியாதையுடன் அவர்களை வரவேற்றனர். உடன் வந்த ஒருவர் பேசத் துவங்கினார்.. ‘‘துரை உக்கார முக்காலி எடுத்து வை’’. “சீட்டெல்லாம் வேண்டாம்... ம்ம்.. இந்த டென் டூ டென் சுமால் டெம்பிள்க்காக லேக்ஸ் செலவில நடக்கிற ரெயில்வே ஒர்க்க மாத்த சொல்ற, உன் டெம்பிள்... ஓ..கோயில் கோயில்.. உங்க கோயிலையே அங்க கொண்டு வை’’ என்றபடி கையை நீட்டுகிறார். அந்த வெள்ளக்கார துரை.

கோயில் நிர்வாகி, ‘‘ஐயா சாமியே, நான் இங்குதான் இருக்கிறேன்னு சொன்னதால, அங்க கோயில் கட்டியிருக்கிறோம்’’ என்று பதிலுரைத்தார். “என்னது சாமி பேசுச்சா, ஏன் மேன் பொய் சொல்ற, அப்படின்னா, உங்க சாமிய எங்கிட்ட பேசச்சொல்லு, ரெயில் லைனையே மாத்திடுறேன்.’’ “துரை, நீங்க கைக்கொண்ட ஐயனாரேன்னு கூப்பிடுங்கோ சாமி பதில் பேசுவார்.” என்று நிர்வாகி கூறியதன் பின்னர், ஆங்கிலேய அதிகாரி சுவாமியின் பெயரைக்கூறி அழைக்கிறார். சுவாமி பதிலுக்கு பேசுகிறார். இருப்பினும் நம்பிக்கை குறைந்த அந்த அதிகாரி, “ஏ... மேன், கோயில், இன்சைடு இருந்து, யாரோ மிமிக்ரி பண்ணுது.’’ உணர்ச்சி பொங்க கூடியிருந்தவர்கள் சேர்ந்தே கூறினர் “இல்ல, துரை எங்க சாமி ஐயனார்தான் பேசினார்” என்றனர்.

இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே, சுடலைமாட சுவாமியின் சந்நதிமுன் வைக்கப்பட்டிருந்த மண்ணால் செய்யப்பட்ட குதிரை உருவத்தை பார்த்து, ஆங்கிலேய அதிகாரி... “வாட்டிஸ் திஸ்? என்ன மேன் இது... ஓ..ஹார்ஸ் டால், குதிரை பொம்மையா, வாவ்.. இந்த பொம்ம குதிரை, புல்லை திண்ணுமா, அப்படி திண்ணுட்டா, உங்கே சாமி பேசினத நான் நம்புறேன்’’ என்று கூறியபடி திரும்பிப் பார்க்க, அவருடன் வந்த ஒருவர் புல்லை எடுத்து வந்து பொம்மை குதிரை முன்னே போடுகிறார். சுடலைமாடசுவாமி முன் நின்ற அந்த பொம்மை குதிரை புல்லை தின்றது. மறு விநாடி, ஆங்கிலேய துரை வந்த அரபுக்குதிரை மாண்டது.

“ஓ...காட்,...... யுவர் காட் இஸ் கிரேட், ப்ளீஸ் காட், மை ஹார்ஸ்.... கடவுளே, என்னுடைய குதிரையை காப்பாத்து.’’ கத்தினார், கதறினார், சுவாமியின் சக்தியை உணர்ந்த ஆங்கிலேய அதிகாரி அந்த இடத்திலேயே கட்டளை இட்டார். கோயிலில் இருந்து அரை கிலோமீட்டருக்கு அப்பால் இருப்புப் பாதையை அமைக்க வேண்டுமென்று. இந்த ஆலயம் திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தாலுகாவிற்குட்பட்ட பாவூர்சத்திரம் அருகே அமைந்துள்ளது. கோயிலின் தெற்கே அரியபுரம், வடக்கே மயிலப்புரம், கிழக்கே ஆவுடையானூர், மேற்கே குற்றால திரிகூடமலை சூழ்ந்திருக்க, பொதிகை தென்றல் வீசும், கானகத்தில் வீற்றிருக்கிறார் கைக்கொண்ட ஐயனார்.

பரிவார தெய்வங்களாக பிரம்மசக்தி, பாதாள பைரவி, பேச்சியம்மன், பச்சமாடன், மேலவாசல் காக்கும் பெருமாள், சிவனினைந்த பெருமாள், அகஸ்தியர், பூதத்தார், தவசி தம்புரான், சுடலைமாடன் 3 இடங்களில் நிலையம் பெற்றுள்ளார். வேட்டைக்காரன், இருளப்பன், முப்புலி மாடன், புலமாடத்தி, புலமாடன், கருப்பசாமி, சங்கலி பூதத்தார் ஆழி ரூபமாக, பெரிய ரூபத்தில் நிற்கிறார். கோட்டை வாசல் கருப்பசாமி, திம்மக்கா, பொம்மக்காவுடன் பட்டவராயன், சுடலைபேச்சி, வனப்பேச்சி, இச்சியம்மன், காளக்கருப்பு, சின்னதம்பி ஆகிய தெய்வங்கள் உள்ளது.

சிவனும், சக்தியும் லிங்க ரூபம் இல்லாமல் இருந்த கோலத்தில் தனிச் சந்நதியில் வீற்றிருக்கின்றனர். அகத்தியர் தனி சந்நதியில் நின்ற கோலத்தில் உள்ளார். ஐயனாரும், சுடலைமாடனும் தனித்தனி குதிரையில் வேட்டைக்கு போவதுபோல் வில், அம்புடன் இருக்கும் சுதை சிற்பமும் உள்ளது. மூலவர் சந்நதிக்கு பின் விநாயகரும், நாகரும் தனிதனி சந்நதியில் அருள்பாலிக்கின்றனர்.

கோயிலுக்கு செல்ல பாவூர்சத்திரத்திலிருந்து மினி பஸ், ஆட்டோ இயங்குகிறது. ஆலயத் தொடர்புக்கு 9789383682

  • 359

Good Morning....

  • 352
·
Added a post

அரசன் ராஜராஜனால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில்,

"உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்" என்ற இறைவனின் அசரீரியாக உணர்ந்திட்ட மன்னன் மந்திரியை அழைத்து அதற்கு விளக்கம் கேட்க,

"உன் மறைவில் என்பது உங்களால் கட்டப்பட்ட கோயில்" என்பதாகும்.

இடைச்சியின் நிழல் என்பது "இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கல்" கோபுரத்தின் மேல் இருப்பதாகும்.

பொன்மணித்தட்டாரின் இதயத்தில் என்பது பொருள் விளங்கவில்லை மன்னா" என்று கூறினார்.

இந்த ஊரில் பொன்மணித் தட்டார் என்பவர் இருந்தால் அழைத்து வருமாறு அரண்மனை ஆட்களை ராசராசன் அனுப்பிவைக்க, அவர்களும் கடைவீதியில் பொன் வியாபாரியிடம் விசாரித்து பொன்மணித்தட்டாரை கண்டு வணங்கி அவரை அரசன் அழைத்துவர சொன்ன செய்தியைக் கூற அவர்,

"நானோ எளியவன். அரசரிடம் எனக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லை மேலும் அரசனுக்கு தேவையான ஆபரணங்களை செய்யும் ஆற்றலும் என்னிடம் இல்லை. என்னிடம் இருப்பதோ கோணி வஸ்திரம் மட்டுமே இதைத்தவிர வேறொன்றும் இல்லை. ஆகையால் நான் அங்கு வரவில்லை" என்று கூறிவிட்டார்.

அதைஅறிந்த அரசன் பரிவாரங்களுடன் பொன்மணித்தட்டாரைப் பார்க்க வந்தார். பொன்மணித்தட்டாரை வணங்கித் தங்களின் இதயத்தில் இறைவன் எழுத்தருளி இருப்பதாகக்கேட்ட அசரீரி விடயத்தை எடுத்துக் கூறி சந்தேகம் போக்குமாறு கேட்டார்.

அதற்கு பொன்மணித்தட்டார் அரசனை நோக்கி ஆலயத்திற்கு நேரே வடக்கு திசையில் ஒரு குளம் வெட்டி அதன் நடுவில் சிறு கோயில் ஒன்று அமைத்து அங்கிருந்து பார்த்தல் கோபுரம் தெரிய வேண்டுமாறு அமைக்கச் சொன்னார். மேலும் அதனை அமைத்து எட்டாவது நாளில் இறைக்காட்சி கிடைக்குமென்றார்.

அவர் கூறியதற்கமைய சிவகங்கை தீர்த்தம் என்னும் திருக்குளத்தை அமைத்து பொன்மணித்தட்டார் மொழிந்தவாறு கட்டி முடித்த எட்டாம் நாள் மன்னர் அவர் வீட்டுக்குச்சென்று பொன்மணித்தட்டாரை அழைத்து வந்தனர்.

திருக்குளக்கோயிலுக்குச் செல்ல அரசன் தெப்பம் உள்ளதெனக்கூற,

அவரோ தண்ணீரின் மேல் நடந்தே சென்று கோயிலினுள் அமர்ந்து

அவரின் இயத்தில் இறைகாட்சியை எல்லோருக்கும் நல்கி அக்காட்சியோடு ஒளியாக மாறி கோபுரத்தில் கலந்தார். அவரின் சமாதி சிவகங்கைக் குளக்கோயிலில் இருக்கின்றது. இதனைக்கண்ட அரசனும் மற்றவர்களும் வணங்கி இறைவனை காணும் பாக்கியத்தைப் பெற்றதை எண்ணி வியந்தனர்.

இன்றும் பொன்மணி தட்டாரின் சமாதிக்கு அபிஷேகம் செய்த பின்னரே தான் தஞ்சை பிரகதீஸ்வரர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

  • 443
·
Added a post

ஆபிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன.

தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார்.

ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது.

இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள்.” என்று கட்டளையிட்டார்.

வேலைக்காரன் கெஞ்சினான், நான் உங்களுக்கு பத்து வருடங்களாக சேவை செய்தேன்,நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா? தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் ஒன்று தாருங்கள்! ”

ராஜா ஒப்புக்கொண்டார்.

அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான்.

காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக்கொண்டார்.

அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான்.

அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்கி அன்பு காட்டினான்.

பத்து நாட்கள் முடிந்தது.

வேலைக்காரனைத் தண்டிப்பதற்காக நாய்களிடம் தூக்கி எறியும்படி அரசர் உத்தரவிட்டார்.

அவன் தூக்கி எறியப்பட்டபோது, ​​அவை ஓடிவந்து அவனின் கால்களை நக்கத் தொடங்கின.

இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்!

இதைப் பார்த்து திகைத்த அரசன்,"என் நாய்களுக்கு என்ன நேர்ந்தது?" என்றான்.

வேலைக்காரன் பதிலளித்தான், "நான் பத்து நாட்களுக்கு மட்டுமே இந்த நாய்களுக்கு சேவை செய்தேன், அவை என் சேவையை மறக்கவில்லை. நான் உங்களுக்கு பத்து வருடங்கள் சேவை செய்தும் என் முதல் தவறைக்கூட மன்னிக்காமல் நான் உங்களுக்கு செய்த அனைத்தையும் மறந்து என்னை தண்டிக்க உத்தரவிட்டீர்கள்!"

அரசர் தனது தவறை உணர்ந்து வேலைக்காரனை விடுவிக்க உத்தரவிட்டார்.

நம்மிலும் எத்தனையோபேர் இப்படி இருக்கிறோம்.

ஒருவர் செய்த ஒரு தவறுக்காக, அவர் எமக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்து அவரை வாழ்நாளெல்லாம் ஒதுக்கி வாழும் எத்தனையோபேர் எம்மிலும் இல்லாமல் இல்லை. இருக்கிறார்கள்.

தவறு செய்வது மனித சுபாவம். இதை உணர்ந்து தவறுகளை மன்னிக்கப் பழகுவதும் மனித சுபாவம்•

  • 453

ஆற்றில் சுகமாக குளிக்கும் யானை

  • 443