·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 744
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added article

மிழ் சினிமா வரலாற்றில் குடும்ப உணர்வை மையமாக வைத்து உருவான படங்களில் முக்கியமான இடம் பெறுவது இயக்குனர் விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம்'. 1986-ல் வெளியான இந்தப் படம், ஆரம்பத்தில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், பின்னர் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டுக்குடும்ப வாழ்வின் இனிமையையும், இன்னல்களையும் நகைச்சுவை கலந்து படம் பிடித்த விசு, தாமே நடித்தும் உயிர் கொடுத்தார். மனோரமா ஓர் வீட்டு பணியாளராக நடித்த காட்சிகள் இன்றும் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கின்றன.

குறிப்பாக, குழந்தையை விசுவின் காலடியில் வைக்கும் உணர்ச்சிமிகு காட்சி, சொற்களுக்கு அப்பாற்பட்ட நடிப்பின் உச்சமாக திகழ்கிறது. இசையமைப்பாளர்கள் சங்கர்–கணேஷ் இணையரும், பாடலாசிரியர் வைரமுத்துவும் இணைந்து உருவாக்கிய பாடல்கள், படத்திற்கு தனி அடையாளம் சேர்த்தன. பெற்றோரின் தியாகத்தை வலியுறுத்திய வரிகள் இன்றும் தலைமுறை தாண்டி பேசப்படுகின்றன. 'சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்' பிரிவில் தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

சம்சாரம் அது மின்சாரம் படத்தின் படப்பிடிப்பிற்காக கட்டப்பட்ட வீட்டில் சூட்டிங் செய்வதை நடிகர் ரஜினிகாந்த் மிகவும் விரும்பினாராம். மனிதர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் உணர்வு ரீதியாக தூரமாகி விடும் நவீன சூழலில், இந்தப் படம் சொல்லும் செய்தி இன்றும் பொருத்தமானதாகவே உள்ளது. இதில் மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்த படத்தின் ஹைலைட்டாக இடம்பெற்ற மனோரமா கேரக்டர், முதலில் படத்திலேயே இல்லையாம். கதையில் காமெடி கதாபாத்திரம் இருந்தால் அது படத்தின் கருவை பாதிக்கும் என எண்ணி அதை தவிர்த்தாராம் விசு.

பின்னாளில் ஏவிஎம் சரவணன் வற்புறுத்தி மனோரமா கதாபாத்திரத்தை படத்தில் வைக்க சொன்னாராம். அதன்பின்னரே விசு அந்த கேரக்டரை படத்திற்குள் கொண்டு வந்தாராம். இறுதியில் மனோரமாவின் கெரியரிலேயே சிறந்த கேரக்டராக அது அமைந்தது. அந்த கதாபாத்திரத்தில் கம்முனு கெட என சொல்லிக் கொண்டே மனோரமா பேசும் நீண்ட டயலாக் இன்றளவும் பேசப்படுகிறது. இந்தப் படம் அன்றைய தேதியில் வெறும் 15 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இது தியேட்டர்களில் சக்கைப்போடு போட்டு பல மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது. முன்னதாக உறவுக்கு கை கொடுப்போம் என்கிற பெயரில் இதே கதையை படமாக்கி இருந்தனர். 1975-ல் வெளிவந்த அப்படம் தோல்வியடைந்தது. பின்னர் அதே கதையை 1986-ல் சம்சாரம் அது மின்சாரம் என்கிற பெயரில் எடுத்து விசு வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 29
·
Added article

பிரதீப் ரங்​க​நாதன் நடித்​துள்ள ‘லவ் இன்​சூரன்ஸ் கம்​பெனி’ (எல்​ஐகே) படத்தை விக்​னேஷ் சிவன் இயக்​கி​யுள்​ளார்.

இதில் கிருத்தி ஷெட்​டி, எஸ்​.ஜே.சூர்​யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷண் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்​படத்தை ரவுடி பிக்​சர்ஸ் சார்​பில் நயன்​தா​ரா, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்​பில் எஸ்​.எஸ்​.லலித்​ கு​மார் தயாரித்​துள்​ளனர்.

இப்​படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்​தது. பின்​னர் டிசம்​பர் மாதத்​துக்கு தள்ளி வைக்​கப்​பட்​டது. அடுத்து காதலர் தினத்தை முன்​னிட்டு பிப்ரவரியில் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்​பட்​டது. பின் ஏப்​.3ம் தேதி வெளி​யாக இருப்பதாக அறிவித்​தனர். ஆனால், இதுவரை படத்​துக்​கான புரமோஷன் பணிகள் எது​வும் தொடங்​கப் ​பட​வில்​லை. இதனால் இப்​படம் மீண்டும் தள்​ளிப் போகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

  • 32
·
Added a video
  • 141
·
Added a video

Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1 Test 1

  • 131
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பயணம் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். விளையாட்டு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும். பெற்றோரின் ஒத்துழைப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கல்வியில் இருந்த குழப்பம் மறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நிர்வாக துறைகளில் மதிப்புகள் மேம்படும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கனிவான செயல்பாடுகளால் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகள் கைகூடும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். பொருளாதார உயர்வை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

கடகம்

மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வாகன பயணங்களில் போது விவேகம் வேண்டும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சிம்மம்

எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். இலக்குகளில் மாற்றம் ஏற்படும். கல்வி பணிகளில் புரிதல் இன்மை ஏற்படும். விருப்பமானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

கன்னி

மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு அமையும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமை மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சமூகப் பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

வசதிகளை மேம்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதுவிதமான பொருள்களை வாங்குவதில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் மூலம் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் வெளிவட்டார தொடர்புகள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

விருச்சிகம்

ஆராய்ச்சி பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களில் தெளிவுகள் பிறக்கும். வங்கி பணிகளில் இருந்த தாமதம் மறையும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக ரீதியான சில பிரச்சனைகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

தனுசு

திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பணி நிமித்தமான கோப்புகளில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். இனணயம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

மகரம்

சிந்தனையில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். சக மாணவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழகும் விதங்களில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

கும்பம்

பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் பொறுப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

மீனம்

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கல்வியில் சில மாற்றமான சூழல் அமையும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். பிரபலமானவர்களின் தொடர்புகள் உண்டாகும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

  • 149
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 27.3.2026.

இன்று பிற்பகல் 12.52 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று மாலை 05.48 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

இன்று அதிகாலை 02.56 வரை ஷோபனம். பின்னர் அதிகண்டம்.

இன்று அதிகாலை 01.54 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 12.52 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்

இன்று காலை 06.14 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 05.48 வரை சித்தயோகம். பிறகு மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=465&dpx=2&t=1774583242

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 167

Good Morning...

  • 155
  • 237
  • 238

ATM

  • 237
  • 235
  • 237
  • 236
  • 236
·
Added a news

கனடாவின் வின்னிபெக் நகரத்தில் டிரான்ஸ்கோனா (Transcona) தொகுதி உறுப்பினர் ரஸ் வயாட் (Russ Wyatt) மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு நபரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் போதைப்பொருள் வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வயாட் கைது செய்யப்பட்டார்.

56 வயதான ரஸ் வயாட் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, பின்னர் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நபர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2025 டிசம்பர் மாதம் சமூக ஊடக தளம் வாயிலாக அறிமுகமான ஒரு நபரை, வின்னிபெக்கின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவருக்கு சட்டவிரோத போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஸ் வயாட் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் தீங்கு விளைவிக்கும் நோக்கில் போதைப்பொருள் கொடுத்தல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. 

  • 245
·
Added a news

ஏர் கனடா விமான விபத்து தொடர்பில், விமான நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்ட இரங்கல் செய்தி கனடாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மார்ச் மாதம் 22ஆம் திகதி, கனடாவின் மொன்றியலிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள LaGuardia விமான நிலையத்தில் சென்று இறங்கிய ஏர் கனடா விமானம் ஒன்று, தீயணைக்கும் ட்ரக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விமான ஓடுபாதையின் குறுக்கே வேகமாக வந்த தீயணைப்பு வாகனம் ஒன்றின் மீது மோதி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தின் விமானிகள் இருவரும் உயிரிழந்தார்கள்.

விமான விபத்தைத் தொடர்ந்து, ஏர் கனடா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேல் (Michael Rousseau) சமூக ஊடகமான எக்ஸில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஏர் கனடா விமான விபத்தில் இரண்டு உயிர்கள் பலியானதால் தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்த மைக்கேல், அந்த விபத்து, ஏர் கனடாவுக்கு ஒரு கருப்பு தினம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், மைக்கேலின் செய்தி பெரிய அளவில் கனடாவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. காரணம், தான் வெளியிட்டிருந்த வீடியோவில் மைக்கேல் ஆங்கிலத்தில் பேசியிருந்தார்.

விடயம் என்னவென்றால், கனடாவின் அலுவல் மொழிகள் ஆங்கிலம் மற்றும் ஃப்ரெஞ்சு ஆகும். அத்துடன், விமான விபத்தில் உயிரிழந்த விமானிகளில் ஒருவரான ஆண்டோயின் ஃபாரஸ்ட் ஃப்ரெஞ்சு மொழி பேசுபவர். ஆக, மைக்கேல் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அவர் ஆங்கிலம், ஃப்ரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளிலும் பேசியிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, கனடா பிரதமரான மார்க் கார்னியே, தான் மைக்கேலின் செய்தியால் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்துள்ள விடயம் பெரிதும் கவனம் ஈர்த்துவருகிறது.

ஏர் கனடா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியின் ஒற்றை மொழி இரங்கல் செய்தியில் இரக்கமில்லை என்றும், முன்பின் யோசிக்காமல் அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கார்னி விமர்சனம் முன்வைத்துள்ளார்.

நாம் இருமொழி பேசும் நாட்டில் வாழ்கிறோம் என்பதில் பெருமையுடையவர்கள், அப்படியிருக்கும்போது, எப்படிப்பட்ட சூழலானாலும், இரு அலுவலக மொழிகளிலும் தகவல் தொடர்பு மேற்கொள்வது ஏர் கனடா போன்ற நிறுவனங்களின் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமருடன், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏர் கனடா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

  • 248
  • 251
·
Added a post

இது சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டம்.

ஒரு ஆங்கில ராணுவ அதிகாரி இந்தியாவில் பணியமர்த்தப்பட்டார். அவரிடம் ஒரு விலையுயர்ந்த பானம் (Sherry) இருந்தது. சில விசேஷமான நாட்களில் அவர் அதில் சிறிது மட்டும் குடித்துவிட்டு மிச்சத்தை பிறகு குடிக்கலாம் என்று சேமித்து வைப்பார். ஒரு நாள் அவர் அந்த பாட்டிலின் பானத்தின் அளவு, தான் குடிப்பதைவிட அதிகமாக குறைவதை கவனித்தார். தன் வேலைக்காரன் தான் இதை குடித்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டார். ஒரு நாள் இதை ஏன் மற்றவர் குடிக்க விட வேண்டும்? தானே குடித்து விடலாம் என்று முடிவெடுத்தவர், அதை முழுமையாக குடித்துவிட்டு அந்த பாட்டிலில் கொஞ்சம் சிறுநீரை ஊற்றி வைத்தார். அதன் பிறகும் அந்த பாட்டிலின் அளவு குறைந்ததை எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் அந்த பாட்டிலின் சிறுநீர் அளவு முழுமையாக குறையட்டும் என்று பலநாள் காத்திருந்தார்.

பிறகு அவர் அந்த வேலைக்காரனை அழைத்து “நான் இந்த பாட்டிலை பல நாட்களாக தொடவே இல்லை. ஆனால் அதன் அளவு எப்படி குறைந்தது? நீ என்ன செய்கிறாய்?” என்று கோபத்துடன் கேட்டார்.

அதற்கு அவர் “ஐயா நான் உங்களுக்கு கொடுக்கும் சூப்பில் கொஞ்சம் Sherry ஐ தினமும் சேர்க்கிறேன்” என்றார்…..

  • 264
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். பூர்வீக வீட்டை விரிவு படுத்துவதற்கான முயற்சி மேம்படும். வெளியூர் பயணத்தால் அனுபவம் கிடைக்கும். குழந்தைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். நவீன பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் இருந்து சோர்வுகள் குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வாகன பயணங்களில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபார நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மிதுனம்

நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பிற மொழி மக்களிடம் கவனம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படுவது நல்லது. திடீர் வரவுகள் ஏற்படும். மனதை உருத்திய சில பிரசனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். வெளியூர் பயணம் வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : காவி

சிம்மம்

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழில் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆன்மீகப் பணிகளில் புரிதல் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கன்னி

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். காப்பீடு துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். உத்தியோகத்தில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

மனதளவில் தைரியம் பிறக்கும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திட்டமிடாத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரம் ரீதியான செயல்களில் அனுபவம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

விருச்சிகம்

குடும்பத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் அதிகரிக்கும். வர்த்தக வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். புதிய விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

தனுசு

விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பயணம் முலம் நட்பு வட்டம் விரிவடையும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

மகரம்

எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் வரும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். அரசு வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் சிக்கல்கள் குறையும். ஆதரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

கும்பம்

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் தூக்கமின்மை ஏற்படும். கூட்டாளிகளிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மூலம் அனுபவங்கள் உருவாகும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

மீனம்

கடன் தொடர்பான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். கல்வியில் இருந்த தடுமாற்றம் மறையும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். அரசு வழியில் சாதகமான செய்திகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 376
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை 26.3.2026

இன்று பிற்பகல் 02.56 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று இரவு 07.05 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று அதிகாலை 03.16 வரை சௌபாக்கியம். பின்னர் ஷோபனம்.

இன்று அதிகாலை 04.03 வரை பத்திரை. பின்னர் பிற்பகல் 02.56 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று காலை 06.15 வரை சித்தயோகம். பின்னர் இரவு 07.05 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=464&dpx=2&t=1774492126

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 389

Good Morning.....

Have a Nice day!

  • 375
·
Added article

ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘அயலான்’ ஆகிய படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருந்தது. இது தகவலாக இருந்தாலும், யார் தயாரிப்பாளர், எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட எதுவுமே முடிவாகாமல் இருந்தது. தற்போது சூரி – ரவிக்குமார் இணையும் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

‘டியூட்’ படத்துக்குப் பின், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் இதுவாகும். இதனை பெரும் பொருட்செலவில் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக அறிவிக்கப்பட்ட போஸ்டரின் மூலம், 2015-ம் ஆண்டு வெள்ளம் வந்த சமயத்தில் நடைபெறும் கதையாக இதனை ரவிக்குமார் வடிவமைத்திருப்பது உறுதியாகிறது.

தற்போது ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூரி. அதனை முடித்துவிட்டு ரவிக்குமார் படத்தினை தொடங்க முடிவு செய்திருக்கிறார். இதில் சூரியுடன் நடிக்க இருப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது.

  • 473
·
Added article

சமீபத்தில் இயக்குநர் பாலா, சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கும் வீடியோ பதிவொன்று இணையத்தில் வைரலானது. அதில் விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருந்தார் சமுத்திரக்கனி. அவரும் பேசியது விஜய்யை தான் என்று இணையத்தில் ரசிகர்கள் பலரும் அவரை வசைபாட தொடங்கினார்கள்.

அந்த வைரலான வீடியோ பதிவு குறித்து சமுத்திரக்கனியிடம் பேட்டியொன்றில் கேட்கப்பட்டது. அதற்கு, “நான் பேசும் போது வீடியோ எடுக்கிறார்கள் என தெரியும். ஆனால் ஆரம்பத்தில் இருந்து என்ன பேசினேன் என்பதை எடுக்கவில்லை. இறுதியாக பேசியதை மட்டுமே எடுத்தார்கள். நானும் எடுக்கட்டும் என விட்டுவிட்டேன். எனக்கு மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது. சந்தோஷமோ, வேதனையோ அதை அப்படியே பேசிவிட்டு, அடுத்த தளத்துக்கு சென்றுவிடுவேன்.

அந்த வீடியோ பதிவு வந்துவிட்டது. அதற்கு மேல் மானே, தேனே எல்லாம் சேர்த்து வேலையை பார்த்துவிட்டார்கள். அதனை நான் ஒரு குற்றமாக நினைக்கவில்லை. அதே போல் பேசிவிட்டு பின் வருந்தவும் இல்லை. என் மனதில் பட்டதை தானே பேசியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.

  • 476
·
Added a post

சீடன் ஒருவன் குருவிடம் ஆலோசனை கேட்க வந்தான்.

குருவே ! எனக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி நிம்மதியே இல்லை என்றான்.

குரு - கவலை படாதே மகனே! நீ அங்கே இருக்கும் தோட்டத்தில் இருக்கும் நிறய வண்ணத்து பூச்சியில் ஒன்றை பிடித்து வா என்றார் சீடனிடம்!

சீடன் ஓடி சென்று பட்டாம் பூச்சியை பிடிக்க அங்கு இங்கும் ஓடி கடைசியில் களைத்தே போனான்.

குரு அவனை அழைத்து அமைதியாக அமர சொன்னார், சுற்றி இருக்கும் அழகிய இயற்கையை ரசிக்க சொன்னார்.

உடல் மற்றும் மன அமைதி கொண்டவனாக அமர்ந்து இருக்க, அவனை சுற்றிலும் அவன் மேலும் வண்ணத்து பூச்சிகள் அமர ஆரம்பித்தன.

குரு அப்பொழுது சீடனிடன் சொன்னார். மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சி மாதிரி. நீ துரத்தி கொண்டு ஓடினாள் அது ஓடும், அமைதியாக இருந்து இருக்கும் அழகிய வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்து விட்டால் மகிழ்ச்சி உன்னை வந்து அடையும்.

  • 480