- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் சாதகமாகும். பணிகளில் இருந்த போட்டிகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
ரிஷபம்
வியாபார ரீதியான சிலரின் சந்திப்புகள் மாற்றத்தை உருவாக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். உறவுகளிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உற்பத்தி துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கடகம்
மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். சொத்து பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
சிம்மம்
அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தன வரவுகள் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். செயல்பாடுகளில் இருந்து சோர்வுகள் குறையும். பேச்சுகளில் கலைநயம் வெளிப்படும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
கன்னி
மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். வெளி நபர்களிடம் கவனம் வேண்டும். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். பூர்விக சொத்துகள் மூலம் சில விரயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
விருச்சிகம்
நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொறுப்புகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். ஆராய்ச்சி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வீடு பராமரிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். தொழில் நிமித்தமான அலைச்சலால் அனுபவம் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான சூழ்நிலை ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபாரப் பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். சுபகாரிய விரயங்கள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். பழைய வாகனங்களை மாற்றி அமைப்பீர்கள். போட்டிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 11 ஆம் தேதி திங்கட்கிழமை 25.5.2026,
இன்று காலை 09.13 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று காலை 07.19 வரை பூரம். பின்னர் உத்திரம்.
இன்று காலை 07.58 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.
இன்று காலை 09.13 வரை கௌலவம். பின்னர் இரவு 09.05 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30 முதல் 07.30 மணி வரை
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
*பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும்.
*ஆங்கிலத்தில் இதை பால்ம் கேண்டி என்பர்.
*இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.
*இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்தப்படாத சர்க்கரை ஆகும்.
*கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.
*சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது.
*நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.
*இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன.
*இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது.
*சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
* 2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.
*நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.
*உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.
*உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.
*தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.
*தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.
சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.
*உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.
எக்மோரில் உள்ள மிகப்பெரிய பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருந்தார் பிரபல தொழிலதிபர் ஜே.கே.
அதிகாலைப் பனி விலகாத அந்த நேரத்தில், நீச்சல் குளத்தைச் சுற்றிலும் போலீஸ் வளையம் நின்றிருந்தது.
டி.எஸ்.பி ராஜேஷ் சம்பவ இடத்திற்குள் நுழைந்தான். அவனது கூர்மையான கண்கள் குளத்து நீரையும், சடலத்தையும் அலசின.
"அக்ஷதா, என்ன ரிப்போர்ட்?"
அக்ஷதா, குளத்தின் ஓரத்தில் மண்டியிட்டு சடலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
"ராஜேஷ், மேலோட்டமா பார்த்தா டிராவுனிங் தான். ஆனா லங்ஸ்ல தண்ணி ரொம்ப கம்மி. பிளட்ல சக்ஸினைல்கோலின் கலந்துருக்கு. இது ஒரு ஸ்ட்ராங்கான பேரலைட்டிக் ஏஜென்ட். நரம்புகளை முடக்கிடும். கை கால் விளங்காமப் போய், மூச்சு விட முடியாம தண்ணில மூழ்கியிருக்கார்."
பக்கத்திலேயே லேப்டாப்பை வைத்துக்கொண்டு ஸ்மார்ட் ஹோம் கண்ட்ரோல்களை ஆக்சஸ் செய்து கொண்டிருந்தான் வசந்த்.
"பாஸ், பூல் ஏரியா சிசிடிவி நைட் பத்தரை மணிக்கு எக்ஸாக்ட்டா பத்து நிமிஷம் லூப் ஆகியிருக்கு. வீடியோவை ஃப்ரீஸ் பண்ணி ரொம்ப ப்ரொஃபஷனலா ஹேக் பண்ணியிருக்காங்க."
வசந்த் அப்படியே தன் பார்வையை அக்ஷதா பக்கம் திருப்பினான்.
"அக்ஷதா, உன் கண்ணைப் பார்த்தாலே என் உடம்பெல்லாம் டோட்டலா பேரலைஸ் ஆகுது. எனக்கு அந்த கெமிக்கல் எதுவும் தேவையில்லை. கொஞ்சம் பக்கத்துல வாயேன், பிரீத்திங் ரொம்ப கஷ்டமா இருக்கு, மவுத் டூ மவுத் சிபிஆர் குடுப்பியா?"
அக்ஷதா அவனை நிமிர்ந்து முறைத்தாள்.
"உன் வாயில சிபிஆர் குடுக்க மாட்டேன், ஃபார்மாலின் ஆசிட் தான் ஊத்துவேன். உன்னைப் பார்த்தாலே எனக்கு இரிடேட் ஆகுது. மூடிட்டு சர்வரை ட்ரேஸ் பண்ணு."
வசந்த் சிரித்துக்கொண்டே,
"நீ ஆசிட் ஊத்துனாலும் அது எனக்கு அமிர்தம் தான் பேபி,"
என்று சொல்லிவிட்டு விரல்களை கீபோர்டில் பறக்கவிட்டான்.
ராஜேஷ் இருவரையும் பார்த்து லேசாக முறைத்தான்.
"வசந்த், கட் இட். ஃபோகஸ். ஐபி அட்ரஸ் எங்க இருந்து வருது?"
வசந்த் சீரியஸானான்.
"பாஸ், ஐபி மாஸ்க் பண்ணியிருக்காங்க. ஆனா ரவுட்டிங் ஜே.கே-வோட பிசினஸ் பார்ட்னர் தினேஷ் நெட்வொர்க்ல இருந்துதான் வருது."
ராஜேஷின் ஜீப் நேராக தினேஷின் கார்ப்பரேட் அலுவலகத்திற்குச் சென்றது. அங்கே தினேஷ் மிகவும் கூலாக மினி கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தான். ராஜேஷைப் பார்த்ததும் எந்தப் பதற்றமும் இல்லாமல் புன்னகைத்தான்.
"ஜே.கே கொலை நடந்த நேரத்துல, கேமரா ஹேக் ஆனது உங்க நெட்வொர்க்ல இருந்துதான் தினேஷ்," ராஜேஷ் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
தினேஷ் சிரித்தபடியே பந்தை தட்டிவிட்டான்.
"லுக் மிஸ்டர் ராஜேஷ், என் கம்பெனி சர்வர் பப்ளிக் டொமைன்ல இருக்கு. யாரு வேணாலும் ஸ்பூஃப் பண்ணலாம். எனக்கும் ஜே.கேவுக்கும் ஆயிரம் பிசினஸ் தகராறு இருக்கலாம், ஆனா கொலை பண்ற அளவுக்கு நான் முட்டாள் இல்லை. நான் தான் கொலை செஞ்சேன்னு ஒரு சின்ன எவிடென்ஸ் காட்டுங்க, நானே தப்ப ஒத்துக்கிட்டு உங்க ஜீப்ல ஏறுறேன்."
ராஜேஷ் அவனது கண்களை ஊடுருவிப் பார்த்தான். "அப்போ உங்களுக்கு எதுவும் தெரியாதா?"
"சார், நாவல்ல வர்ற மாதிரி தியரி எல்லாம் எங்கிட்ட பேசாதீங்க. எவிடென்ஸ் இல்லாம என்னை அரெஸ்ட் பண்ண முடியாது. கேன் ஐ லீவ் நவ்?" தினேஷ் மிகுந்த திமிருடன் சொல்லிவிட்டு நகர்ந்தான். அவனிடம் குற்ற உணர்ச்சியோ, பயமோ துளி கூட இல்லை.
ராஜேஷ் மீண்டும் நீச்சல் குளத்திற்கே வந்தான். அக்ஷதா இன்னும் சில சாம்பிள்களை எடுத்துக் கொண்டிருந்தாள்.
"அக்ஷதா, அந்த கெமிக்கல் உடம்புல எப்படி போயிருக்கும்? இன்ஜெக்ஷன் மார்க் எதுவும் இல்லையே?" ராஜேஷ் சிந்தனையுடன் கேட்டான்.
"இல்ல ராஜேஷ். இது ட்ரான்ஸ்டெர்மல். அதாவது தோலின் மூலமா உடம்புக்குள்ள போயிருக்கு. தண்ணில நனையும்போது ஆக்டிவேட் ஆகுற மாதிரி, ஏதோ ஒரு ரப்பர் பொருள்ல அதைத் தடவி இருக்கணும். அந்தப் பொருள் ஜே.கே உடம்புல உரசிருக்கணும்."
அப்போது வசந்த் லேப்டாப்புடன் ஓடி வந்தான்.
"பாஸ், ஜே.கே-வோட பர்சனல் மெயிலை ஹேக் பண்ணிட்டேன். தினேஷ் கம்பெனியில இருந்து நேத்து காலையில ஜே.கே-வுக்கு ஒரு கொரியர் வந்திருக்கு. ஒரு லிமிடெட் எடிஷன் ஸ்விம்மிங் காகிள்ஸ்."
ராஜேஷுக்குக் காணாமல் போன முடிச்சு கிடைத்தது.
"அந்த காகிள்ஸ் ரப்பர்ல தான் விஷம் தடவப்பட்டிருக்கு. அதைப் போட்டுட்டு ஸ்விம் பண்ணும்போது ஜே.கே பேரலைஸ் ஆகி மூழ்கிட்டான். அந்த பத்து நிமிஷ கேமரா ஃப்ரீஸ்ல தினேஷின் ஆட்கள் யாரோ உள்ள வந்து அந்த காகிள்ஸை மட்டும் எடுத்துட்டுப் போயிருக்காங்க. மாஸ்டர் பிளான்."
ராஜேஷ் உடனடியாக தினேஷுக்கு போன் செய்தான்.
"தினேஷ், நீங்க அனுப்புன அந்த ஸ்விம்மிங் காகிள்ஸ் தான் கொலை ஆயுதம். இப்போ தப்பிக்க முடியாது."
எதிர்முனையில் தினேஷ் சத்தமாகச் சிரித்தான்.
"பிரில்லியன்ட் தியரி ராஜேஷ் சார். ஆனா அந்த காகிள்ஸ் பூல்ல கிடைச்சுதா? லாஜிக் முக்கியம் சார். வெப்பன் இல்லாம எப்படி கோர்ட்ல ப்ரூவ் பண்ணுவீங்க? என்னை தொடக் கூட முடியாது உங்களால. வேணும்னா ட்ரை பண்ணிப் பாருங்க."
தினேஷ் போனை வைத்துவிட்டான். ராஜேஷ் கோபத்துடன் சுவரை ஓங்கி அடித்தான். தினேஷ் சொல்வது சட்டப்படி உண்மை. ஆயுதம் இல்லாமல் அவனை நெருங்க முடியாது.
அப்போது வசந்த் தன் லேப்டாப் திரையை உற்றுப் பார்த்தபடி நின்றான்.
"பாஸ்! ஜே.கே-வோட மனைவி ஷில்பா நேத்து நைட்டே கோவா போயிட்டா. தினேஷுக்கு ஆள் செட் பண்ணி குடுத்ததே அவளாத்தான் இருக்கணும். காகிள்ஸை அவதான் எடுத்துட்டுப் போயிருக்கா. இப்போ இன்ஸ்டாகிராம்ல ஒரு செல்ஃபி போஸ்ட் பண்ணிருக்கா பாருங்க."
ராஜேஷும் அக்ஷதாவும் வசந்தின் லேப்டாப் திரையை நெருங்கினார்கள்.
அக்ஷதா திரையை உற்றுப் பார்த்துவிட்டு அதிர்ச்சியுடன் கத்தினாள்,
"ராஜேஷ்...அந்த போட்டோல ஷில்பா தலையில ஸ்டைலுக்கு மாட்டியிருக்கிறது இங்க காணாமப் போன அதே ஸ்விம்மிங் காகிள்ஸ்... அதோட கோவா வெயில்ல அவ முகம் முழுக்க வியர்த்து வழியுது!"
--ராகவேந்திரன் பாலகிருஷ்ணன்
உடலின் சூட்டைத் தணிக்க இயற்கையாக உதவும் பல உணவுகள் மற்றும் பானங்கள் உள்ளன. குறிப்பாக கோடை காலங்களில் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
உடல் சூட்டை குறைக்கும் இயற்கைப் பொருட்கள்
- இளநீர் – உடலுக்கு நீர்ச்சத்து வழங்கி உடல் வெப்பத்தை குறைக்கும்.
- தர்பூசணி Watermelon – அதிக நீர்ச்சத்து கொண்டதால் உடலை குளிர்விக்கும்.
- வெள்ளரிக்காய் Cucumber – உடல் சூட்டை குறைத்து ஜீரணத்திற்கும் நல்லது.
- நுங்கு Ice Apple – கோடை வெப்பத்தால் ஏற்படும் உடல் எரிச்சலை தணிக்கும்.
- மோர் Buttermilk – ஜீரணத்தை சீராக்கி உடலை குளிர்விக்கிறது.
- எலுமிச்சை சாறு Lemon Juice – உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
- புதினா Mint – இயற்கையான குளிர்ச்சி தரும் மூலிகை.
- சப்ஜா விதை Basil Seeds – உடல் வெப்பத்தை குறைக்க சிறந்தது.
- வெந்தயம் Fenugreek – இரவு ஊறவைத்து காலை குடித்தால் உடல் சூடு குறையும்.
- தயிர் Curd – உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவும்.
தவிர்க்க வேண்டியவை
- அதிக காரம் மற்றும் எண்ணெய் உணவுகள்
- மிக அதிகமாக தேநீர், காபி
- குளிர்பானங்கள் மற்றும் ஜங்க் உணவுகள்
- போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது
கூடுதல் குறிப்புகள்
- தினமும் 3–4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
- மதிய நேர வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும்.
- பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்க்கவும்.
அமெரிக்க பள்ளி ஒன்றில் பெண்கள் பாத்ரூமில் ஒரு பெண் லிப்ஸ்டிக் போட்டுவிட்டு கண்ணாடியில் முத்தம் கொடுத்தார். உதடுகளின் தடம் கண்ணாடியில் படிந்தது.
அடுத்த நாள் ப்ரின்சிபல் "கண்ணாடிக்கு முத்தம் கொடுக்ககூடாது" என சொல்ல மாணவிகள் எல்லாரும் "அப்படித்தான் கொடுப்போம்" என சொல்லி பாத்ரூம் கண்னாடியை லிப்ஸ்டிக் தடங்களால் நிரப்பினார்கள்
பள்ளி ஜேனிட்டர் மாணவிகளை அழைத்தார். "இப்படி எல்லாம் செய்வதால் கண்ணாடியை சுத்தம் செய்ய நீண்ட நேரம் ஆகிறது"
மாணவிகளுக்கு ஒரே சிரிப்பு.
"அதனால் என்ன செய்கிறேன் என பாருங்கள்" என சொல்லிவிட்டு டாய்லட்டை நோக்கி நடந்து, பாத்ரூம் டாய்லெட் மாப்பை (Mop) நீரில் நனைத்து கண்னாடியை துடைத்தார்.
"இனிமேல் தினமும் இந்த பாத்ரூம் கண்ணாடி இந்த மாப்பால் ( Mop ) ஆல் தான் துடைக்கபடும். கண்ணாடிக்கு முத்தம் கொடுப்பவர் கொடுத்துக்கலாம்.."
அடுத்த நாள் முதல் பாத்ரூம் கண்ணாடிகள் சுத்தமாக இருந்தன.
அமெரிக்காவுக்கான தங்களது பயணங்களை கனடிய மக்கள் புறக்கணிக்கும் போக்கு இன்னும் வலுவாக நீடித்து வருவதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதத்தில் கனடா மக்கள் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளளதாககடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து 15-வது மாதமாகக் கனடா மக்களின் அமெரிக்கப் பயணங்கள் சரிவைச் சந்தித்துள்ளன.
கடந்த மார்ச் மாதத்தில் கனடா மக்கள் அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டு 2.6 மில்லியன் முறை திரும்பியுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 6.4 சதவீத வீழ்ச்சியாகும்.
விமானம் மூலம் அமெரிக்கா சென்று திரும்பியவர்களின் எண்ணிக்கை 10.8 சதவீதம் குறைந்து 9,34,100 ஆகப் பதிவாகியுள்ளது.
கார் மற்றும் இதர வாகனங்கள் மூலம் எல்லை தாண்டிச் சென்றவர்களின் எண்ணிக்கை 3.3 சதவீதம் சரிந்து 1.6 மில்லியனாக உள்ளது.
இதில் 63.7 சதவீதப் பயணங்கள் ஒரே நாளில் சென்று திரும்பியவை (Same-day travel) ஆகும். கடந்த 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தற்போதைய 2026 மார்ச் மாதப் பயணங்களின் எண்ணிக்கை 28 சதவீதம் என்ற மிக மோசமான சரிவைக் கண்டுள்ளது.
இதில் வாகனப் பயணங்கள் 33.7 சதவீதமும், விமானப் பயணங்கள் 15.3 சதவீதமும் சரிந்துள்ளன.
டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக வரிகள் (Tariffs) மற்றும் கனடாவை அமெரிக்காவின் ‘51-வது மாகாணம்’ என்பது போன்ற அரசியல் ரீதியான கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கனடா மக்கள் "பை கனடியன் என்ற இயக்கத்திற்கு ஆதரவளித்து, அமெரிக்கப் பயணங்களைப் புறக்கணித்து வருகின்றனர்.
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான கனடிய டொலரின் மதிப்பு மிகவும் குறைந்துள்ளதால், அமெரிக்கப் பயணம் அதிக செலவுமிக்கதாக மாறியுள்ளதும் மற்றொரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கனடா மக்கள் அமெரிக்கா செல்வது குறைந்தாலும், அமெரிக்கர்கள் கனடாவிற்கு வருவது அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 1.3 மில்லியன் அமெரிக்கர்கள் கனடாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தை விட 4.4 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்பருக்கு பீர்பால் மேல் மரியாதை இருந்தாலும் அவருக்கும் மனிதர்களுக்கே உரிய பொறாமை இருநதது. (அரசர் என்றாலும் மனிதர்தானே)
எப்படி அனைவரையும் விட புத்திசாலியாக இருக்கிறார். இவரை எப்படி மட்டம் தட்டுவது என்று யோசித்தார்.
நாம்தான் அரசர் ஆயிற்றே...... அந்த அதிகாரத்தில் அனைவர் முன்னிலையிலும் அடிப்போம் என்ன செய்துவிடுவார் என்று நினைக்கிறார்.
அதன்படி அரசவை கூடியதும் பீர்பாலை அழைக்கிறார். ஒன்றும் பேசாமல் அனைவர் முன்னிலுயிலும் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.
அனைவருக்கும் படு அதிர்ச்சி. பீர்பால் அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என்று.
பீர்பால் ஒரு கணம் மட்டுமே யோசித்தார் மறுவினாடி பக்கத்தில் இருந்த அமைச்சர் ஒருவரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.
அவருக்கு பொறிகலங்கியது.
பீர்பால் சொன்னார். ம் நீங்கள் உடனே மற்றவர் கன்னத்தில் அறையுங்கள் பின் அவர் மற்றவர் கன்னத்தில் அறையவேண்டும் இது அரசர் ஆரம்பித்து வைத்த விளையாட்டு .
உடனே அந்த அமைச்சர் மற்ற அமைச்சரை அறைய இப்படியே நாடு முழுவதும் ஒருவர்மாற்றி ஒருவர் அடித்துகொள்கின்றனர்.
கடைசியாக அரண்மனை அந்தப்புரத்தில் விளையாட்டு நுழைகிறது ராணியின் தோழிகள் ஒருவர் மாற்றி ஒருவர் அறைந்துகடைசியாக ராணி அடிவாங்குகிறார்.
ராணி அதிர்ச்சியடைந்து விபரம் கேட்க தோழிகள் இது அரசர் ஆரம்பித்த விளையாட்டாம் இதை நீங்கள் அவரிடமே முடித்துவிடுங்கள் என்கிறார்கள்.
இரவு மன்னர் ஆசையாய் ராணியை(!!) பார்க்க வர ராணி..... அக்பர் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.
மன்னர் பொறிகலங்கி நிற்க ராணி சொன்னாராம்.
இது பீர்பாலிடம் நீங்கள் காலையில் ஆரம்பித்த விளையாட்டம் நான் அதை உங்களிடமே முடித்துவிட்டேன். என்று.
இதுதான் சமயோசித புத்தி presence of mind.
சுவாமி சின்மயானந்தா அவர்களை அனைவருக்கும் தெரியும் ...
ஒருமுறை அவரை கம்யூனிச சித்தாந்தத்தின் பத்திரிகை செய்தியாளர் பேட்டி எடுத்தார் ...
இந்துமதத்தை சிறுமைப்படுத்தியும் கிறிஸ்தவ, முஸ்லிம் மார்க்கங்களை உயர்த்தியும் தாங்கிப்பிடிப்பதிலேயே அவரது பேட்டியின் சாரம் இருந்தது ...
இஸ்லாத்தை கண்டுபிடித்தவர் யார் சுவாமிஜி.. ?
என்றார்.
முகம்மது நபி என்றார் சுவாமிஜி.
கிறிஸ்தவ மதத்தை சுவாமி.. ?
ஏசுநாதர் என்றார் சுவாமி ...
அப்படியெனில் இந்து மதத்தை ..? என்றார் நிருபர். சுவாமியிடம் பதில் வராது என நினைத்த நிருபர் மேலும் தொடர்ந்தார் ...
இந்து மதத்தை நிறுவியவர் யாருமில்லை. அதனால் தான் இந்து மதம் ஒரு மதமே அல்ல சரிதானா சுவாமி.. ?
என்றார்.
அதற்கு பதிலளித்தார் சுவாமி ...
நீங்கள் சொல்வது சரிதான். இந்து மதம் என்று எதுவும் கிடையாது. இந்து மதம் ஒரு விஞ்ஞான கடல் ... என்றார் சுவாமி..!
நிருபருக்கு விளங்கவில்லை .. சுவாமி தொடர்ந்தார் ...
Who is the founder of Physics ? என்றார்
பெளதீகம் ( Physics ) விஞ்ஞானத்தின் ஒரு கிளை ... அதற்கு யார் உரிமை கொண்டாட முடியும்.. ?
என்றார் நிருபர்.
Who is the founder of Chemistry.. ? அடுத்த கேள்வியை எழுப்பினார் சுவாமி.
இதற்கும் அதே பதில் தான் சுவாமி என்றார் நிருபர்.
Who is the founder of Biology.. ? மூன்றாவது கேள்வியை கேட்டார் சுவாமி ...
என்ன சுவாமி ..? உங்களுக்கு தெரியாததா இதற்கு எப்படி பதிலளிக்க முடியும்.. ? என்றார் நிருபர்.
விஞ்ஞானத்திலும் அறிவியலிலும் பல்வேறு மனிதர்கள் ... பல்வேறு காலகட்டங்களில் இம்மூன்று துறைகளில் சாதனை புரிந்துள்ளார்கள் சரியா.. ? என்றார் சுவாமி.
அதேபோல Hindu Dharma என்பது ஒரு முழு முன்னேறிய விஞ்ஞானம்.
பல்வேறு நூற்றாண்டுகளில், பல்வேறு ஞானிகள் அவரவர் காலகட்டங்களில் அவரவரது பங்களிப்பை செவ்வனே செய்துள்ளார்கள் ....
ரிஷிகளும், ஞானிகளும், உயர் நெறி குருமார்களும் அவரவர் வாழ்ந்த காலத்தில் வருங்கால சந்ததிகளுக்கு பொக்கிஷமாக வழிமுறைகளை வருங்கால சந்ததிகளுக்கு கடல்போல் பல்வேறு காலங்களில் அருளிச்சென்றுள்ளனர் ...
இஸ்லாத்தை வழி நடத்த குரான் மட்டுமே இருக்கிறது ...
கிறிஸ்தவர்களை வழி நடத்த பைபிள் மட்டுமே இருக்கிறது ...
ஆனால் இந்துக்களை வழிநடத்த ஆயிரக்கணக்கான புனித நூல்கள் ஒரு லைப்ரரி மாதிரி இருக்கிறது ...
எனவே Hinduism என்பது ஒரு மாபெரும் விஞ்ஞான கடல். அதற்கு பெயர் சனாதன தர்மா ... என்றார் சுவாமி ...
இந்து மதத்திற்கு ஈடும் இல்லை .. இணையும் இல்லை ...
ஆதியும் இல்லை ... முடிவும் இல்லை ...
எவனையும் இங்கு வா என்று அழைப்பதுமில்லை ... இங்கிருந்து போ என யாரையும் சொல்வதில்லை ...
நிருபர் அசடு வழிந்தார் ...!!!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்கள் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கமிஷன் தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். பணி நிமித்தமான செயல்களில் சற்று கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களின் ரசனைகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதுமையான சிந்தனைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். நண்பர்கள் வழியில் குதூகலமான சூழல்கள் ஏற்படும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். நிலுவையில் இருந்த சரக்குகள் விற்பனையாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிதுனம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். திடீர் பயணங்களால் உற்சாகம் உண்டாகும். கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வரவுகளில் இருந்த தாமதங்கள் மறையும். விவசாயத்தில் மேன்மையான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். மனை விற்றல், வாங்கலில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். எண்ணங்களில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
கால்நடை விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் தொடர்பான வணிகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். சமூகப் பணிகளில் வித்தியாசமான வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் அனுபவம் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கன்னி
ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வித்தியாசமான சில பயணங்களால் மனதில் மாற்றம் ஏற்படும். பணிவான பேச்சுகள் தேவையற்ற பகைமையை தவிர்க்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
துலாம்
கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் எண்ணங்கள் ஈடேறும். விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள். தன வரவுகளால் சேமிப்புகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
விருச்சிகம்
உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வீடு புதுப்பிப்பது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். திடீர் வரவுகள் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். புதிய வியாபாரம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிர்காலம் தொடர்பான புரிதல் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
தனுசு
புதிய முயற்சிகளில் ஒத்துழைப்பு உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனை சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்புகள் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் ஒத்துழைப்புகள் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
பயனற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விவசாயத் துறைகளில் பொறுமை வேண்டும். வெளியூர் பயணங்களில் மாற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்களில் தவறாமல் இருப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கும்பம்
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். கணவன் மனைவி கிடையே நெருக்கம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
உத்தியோகப் பணிகளில் தெளிவுகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் வருகையால் உற்சாகம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். கால்நடைகள் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பயணங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 24.5.2026.
இன்று காலை 09.55 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று காலை 07.20 வரை மகம். பின்னர் பூரம்.
இன்று காலை 09.34 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.
இன்று காலை 09.55 வரை பவம். பின்னர் இரவு 09.34 வரை பாலவம். பிறகு கௌலவம்.
இன்று அதிகாலை 05.51 வரை அமிர்த யோகம். பின்னர் காலை 07.20 வரை மரணயோகம். பின்பு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல்: 01.30 முதல் 02.30 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை












