- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுகுட்டு பாறை ஒரு அமைதியான மற்றும் அழகான சுற்றுலாத் தலமாகும்.
- இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அமைதியை விரும்புபவர்கள் செல்லக்கூடிய ஒரு கற்பாறை அமைப்பாகும் சிறுகுட்டு பாறை.
- இந்த இடத்தை பார்க்கச் செல்பவர்களுக்கு, இங்கு இருக்கும் இயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் குகைகள் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை தரும்.
சிறுகுட்டு பாறை சிறப்பு:
- இது ஒரு பெரிய கற்பாறை.
- இந்த பாறையில் பல சிறிய குகைகள் உள்ளன.
சுற்றுலா:
- தமிழ்நாட்டின் அதிகம் அறியப்படாத, ரசிக்கக்கூடிய ஒரு சுற்றுலாத் தலம் சிறுகுட்டு பாறை.
- இது மக்கள் நடமாட்டம் குறைந்த, இயற்கையான சூழல் கொண்ட இடம்.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் (பெரம்பலூர்):
- மதுரகாளியம்மன் திருக்கோயில் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும் காலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்
- அம்மனின் சீற்றத்தைக் கட்டுப்படுத்த காவல் தெய்வமான சோலை முத்தையா மற்றும் அகோர வீரபத்திரர் சன்னதிகள் நேர் எதிரே அமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.
- மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுவதற்கு முன்பாக பூசாரி, செல்லியம்மன் குடியிருக்கும் பெரியசாமி மலை கோவில் திசையை நோக்கி தீபாராதனையை காட்டியபிறகே, மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுவது வழக்கம்.
- மதுரகாளியம்மன் கோவிலில் எந்த திருவிழா நடந்தாலும், முதல் மரியாதை செல்லியம்மனுக்குத்தான் கொடுக்கப்படுவது வழக்கம்.
- இக்கோயிலில் மாவிளக்கு செலுத்தி அம்மனை வேண்டிக்கொள்ள தீராத நோய்கள் எல்லாம் தீரும் என பக்தர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
- திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளவர்கள் அம்மனை தரிசித்து வழிபட விரைவில் குறைகள் நீங்கப் பெறுவர்.
- இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்து வேண்டிக்கொள்ள, காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும் என்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் மாறி லாபம் ஏற்படும் என்றும் நம்புகின்றனர் பக்தர்கள்.
- இங்கு மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தங்கத் தேர் உள்ளது.
- இக்கோயிலில் அன்னதானம் திட்டம் நடைமுறையில் உள்ளது
- ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசையன்று மதுரகாளியம்மனுக்கு பூச்சொரிதல் திருவிழாவும் பின்னர் அம்மனுக்குக் காப்புக் கட்டி திருவிழாவும் தொடங்கும்.
- 8-ஆம் நாள் திருவிழாவான செவ்வாய் அன்று மாலையில், சுத்துப்பட்டு சனங்களெல்லாம் பெரிய சாமி கோயில் மலையடிவாரத்தில் கூடுவர்.
- அன்று இரவு சிறப்பு பூஜையும் மறுநாள் அதிகாலையில் கடாவெட்டு நடைபெறும். மலைக்கோயில் பூஜைகள் அதோடு நிறைவு பெறும்
- திருச்சியிலிருந்து 50 கி.மீ. தூரத்திலும், பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவனது மனதில் நீண்ட நாட்களாக மூன்று கேள்விகள் இருந்தன.
அந்த மூன்று கேள்விகளுக்கும் சரியான விடை தெரிந்துவிட்டால், தான் செய்யும் எந்தவொரு காரியத்திலும் தோல்வியே ஏற்படாது என்று அவன் நம்பினான். அந்த கேள்விகள்:
1. ஒரு செயலைத் தொடங்க மிகச் சரியான நேரம் எது?
2. மிக முக்கியமான மனிதர் யார்?
3. எல்லாவற்றிலும் மிக முக்கியமான செயல் எது?
நாட்டின் அறிஞர்கள் பலர் பலவிதமான விடைகளைக் கூறினர்.
ஒரு சாரார் கால அட்டவணை போடச் சொன்னார்கள், மற்றொரு சாரார் அமைச்சர்களின் ஆலோசனையே முக்கியம் என்றார்கள்.
ஆனால், எதிலும் திருப்தி அடையாத அரசன், காட்டில் வசிக்கும் ஒரு ஞானியைச் சந்தித்து விடை பெற முடிவு செய்தான்.
ஞானியின் சந்திப்பு
அரசன் ஞானியின் இருப்பிடத்தை அடைந்தபோது, அந்த முதிய ஞானி தன் குடிசைக்கு முன்னால் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்தார். களைப்பால் அவர் மூச்சிரைப்பதைக் கண்ட அரசன், அவரிடம் மண்வெட்டியை வாங்கித் தானே நிலத்தைத் தோண்டத் தொடங்கினான்.
நேரம் கடந்தது. அப்போது காட்டில் இருந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஒரு மனிதன் ஓடிவந்து மயங்கி விழுந்தான். அவன் வயிற்றில் பெரிய காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அரசன் உடனே அவனுக்கு முதலுதவி செய்து, தன் மேலாடையால் ரத்தத்தை நிறுத்தி, இரவு முழுவதும் அவனைக் கவனித்துக் கொண்டான்.
உண்மையும் மாற்றமும்
மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்த அந்த மனிதன், அரசனிடம் மன்னிப்புக் கேட்டான்.
அவன் உண்மையில் அரசனைக் கொல்ல வந்த எதிரி. அரசன் தனியாகக் காட்டுக்கு வருவதை அறிந்து வழியில் காத்திருந்தான்.
ஆனால், அரசனின் பாதுகாவலர்கள் அவனைக் காயப்படுத்தியதால் தப்பி ஓடி வந்தான்.
தன்னை சாகவிடாமல் காப்பாற்றிய அரசனுக்கு இனி வாழ்நாள் முழுவதும் அடிமையாக இருப்பதாக உறுதி அளித்தான்.
விடைகள்
கிளம்பும் முன் அரசன் மீண்டும் தன் கேள்விகளை ஞானியிடம் கேட்டான்.
ஞானி புன்னகைத்து, "உனக்கான விடைகள் ஏற்கெனவே கிடைத்துவிட்டன" என்றார்.
சரியான நேரம்:"இப்போது" என்பது தான் மிக முக்கியமான நேரம். ஏனென்றால், அந்த நேரத்தில் மட்டுமே நம்மால் எதையும் செய்ய முடியும்.
முக்கியமான மனிதர்: அந்தத் தருணத்தில் நீங்கள் யாருடன் இருக்கிறீர்களோ, அவரே முக்கியமான மனிதர்.
முக்கியமான செயல்: உங்களோடு இருப்பவருக்கு அந்த நேரத்தில் தேவையான நன்மையைச் செய்வதுதான் மிக முக்கியமான செயல்.
ஐயா காமராசரைப் பார்க்க.... "சோ" அவர்கள் ஒருமுறை சென்றபோது காமராசர் தயிர்சாதமும் கீரையும் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது காமராசர் சோ-வைப் பார்த்து ஏப்பா நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் நான் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறேன், ஒருநாளாவது உன்னைச் சாப்பிடு என்று சொல்லியிருக்கேனா என்று கேட்டுள்ளார்.
அதற்கு சோ பரவாயில்லைங்க......
ஐயா நீங்க சாப்பிடுங்க என்று சொல்லி உள்ளார். ஆனால் காமராசர் விடவில்லை.
இல்லை இல்லை சொல்லு.... ஒருநாளாவது சொன்னேனா சொல்லு என்று அதட்டலாகக் கேட்க,
இல்லைங்க...சொல்லலை என்று கூறியுள்ளார்.
அதற்கு காமராசர் சொன்னாராம்... ஏன் சொல்லலை தெரியுமா? நான் சாப்பிடுற இந்தச்சோறே தமிழக மக்கள் எனக்குப்போடும் பிச்சைச்சோறப்பா...
இதில் நான் என்னத்த உனக்கு கொடுக்க...என்றுதான் சொல்லாமலிருந்தேன். நீ தப்பா நினைச்சுக்காதே என்றாராம்.
இதைக்கேட்ட சோ அவர்கள் தன்னையறியாமல் அழுதுவிட்டாராம்.
எப்படிப்பட்ட தலைவர் என்று எண்ணிப்பாருங்கள். எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இப்படி ஒரு மாமனிதர் கிடைப்பாரா?
நம்ம வீட்டில் “அரேஞ்ச்ட் மேரேஜ்” என்றால் முதலில் கேட்கப்படும் கேள்வி:
“மாப்பிள்ளை என்ன பண்ணுறார்?”
அப்பாராவ் குடும்பமும் தங்கள் மகனுக்குப் பெண் பார்க்க ஒரு வீட்டுக்குப் போனார்கள்.
டீ, பிஸ்கட், வழக்கமான பேச்சுகள் எல்லாம் முடிந்ததும், பெண்ணின் அப்பா மெதுவாக முக்கிய விஷயத்துக்கு வந்தார்.
“சரி, உங்கள் மகன் இப்போது என்ன வேலை பண்ணிக்கிட்டிருக்கான்?”
அப்பாராவ் கண்ணாடியைச் சரிசெய்து, தொண்டையைச் செருமி வைத்து இப்படிச் சொல்ல ஆரம்பித்தார்:
“எங்கள் பையன் தற்போது ஒரு Agro-based Direct-to-Consumer (D2C) Startup-இன் Founder & Managing Director.
நாங்கள் முக்கியமாக Organic Health & Wellness துறையில் செயல்படுகிறோம்.”
இதை கேட்டவுடன் பெண்ணின் அப்பா பாதி கவரப்பட்டார்.
“வாவ்! அப்படின்னா உங்கள் product என்ன?” என்று கேட்டார்.
அப்பாராவ் பதிலளித்தார்:
“எங்கள் portfolio-வில் முக்கியமாக High-protein Roasted Legumes மற்றும் பாரம்பரிய Caramelized Sweets உள்ளன.
நாங்கள் raw materials-ஐ நேரடியாக wholesale supply chain-லிருந்து வாங்கி, எங்கள் சொந்த Thermal Processing Unit-ல் dry roast செய்கிறோம்.
அதிலேயே biggest highlight என்னன்னா… எங்கள் packaging 100% Eco-friendly மற்றும் Biodegradable.”
இதை கேட்ட பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.
ஏதோ பெரிய multinational company நடத்துபவர் போலவே அவர்களுக்குத் தோன்றியது!
பெண்ணின் மாமா அடக்க முடியாமல் கேட்டார்:
“உங்க company-யோட main office எங்க இருக்கு? எத்தனை employees?”
அப்பாராவ் தயக்கமே இல்லாமல் சொன்னார்:
“இப்போ modern Lean Startup காலம்.
அதனால் shop rent, current bill மாதிரி unnecessary expenses எதுவும் எங்களுக்கு இல்லை.
எங்களுக்கு ஒரு Mobile Retail Outlet இருக்கு. Traffic மற்றும் crowd-ஐப் பொறுத்து அது தினமும் இடம் மாறும்.
Operations-ஐ எல்லாம் எங்கள் பையன் ஒருத்தனே கவனிக்கிறான். He is a Solopreneur!”
பெண்ணின் அப்பாவுக்கு முழுக்க குழப்பம்.
“அய்யா, இந்த marketing language எனக்குப் புரியலை. சாதாரணமா உங்கள் பையன் என்ன பண்ணுறான் சொல்லுங்க!”
அப்போது பையனின் நெருங்கிய நண்பன் மெதுவாகச் சொன்னான்:
“அங்கிள்… அவர் சொல்றதெல்லாம் இதுதான்…”
“எங்கள் பையன் ஹைவே ஓரத்தில் ஒரு தள்ளுவண்டியில் வறுத்த நிலக்கடலை விற்கிறான்.
மணலில் வேர்க்கடலையை வறுப்பான் (Thermal Processing).
பழைய செய்தித்தாளில் சுற்றிக் கொடுப்பான் (Biodegradable Packaging).”
இதைக் கேட்ட பெண்ணின் அப்பாவின் கையில் இருந்த டீ கப் கீழே விழுந்து சிதறியது!
அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும்னு நீங்களே நினைச்சுக்கலாம்… 😄
*இதில் நான் கற்று கொண்ட நீதி:*
வாய்பேசத் தெரிந்தால் பிழைப்பு மட்டும் இல்லை; நம்மையும் காக்க முடியும்.
Marketing வார்த்தைகளின் மாயாஜாலம் அவ்வளவு சக்திவாய்ந்தது.
Presentation வலுவாக இருந்தால், ஒரு சாதாரண வேர்க்கடலை வியாபாரத்தைக் கூட Corporate Startup போல காட்ட முடியும்!
🌹புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூடதிரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. "லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.
🌹நாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் "குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.
🌹திலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.
இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-
நேசித்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று, அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தேன். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை.இருப்பினும், அவளது சித்திரத்தை அழித்துவிட்டு இன்னொரு சித்திரத்தை எழுதிப் பார்க்க என் மனம் தயாராயில்லை.
🌹அப்படி ஒரு காதல் தவத்தில் நான் ஈடுபட்டிருந்த நாளில்தான், "எங்க வீட்டுப்பிள்ளை'' படத்திற்காக பாடல் எழுத உட்கார்ந்தேன்.
🌹டைரக்டர் சாணக்யா, பாடல் காட்சியை விளக்கினார்.கதாநாயகன், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பெற்று விடவேண்டும் என்று படாதபாடு படுகிறான்'' என்று கூறி, அதற்கேற்ப பாடல் எழுதச் சொன்னார்.கதாநாயகனின் உள்ளுணர்விலேயே நானும் இருந்ததால், என் உள்ளக்கிடக்கையை அப்படியே பாடலாக்கினேன்.
🌹குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்; குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்?'' - இந்தப் பாட்டின் தாக்கத்தால், என் காதலி மனம் கசிந்தாள்; என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள். இவ்வாறு வாலி கூறியுள்ளார்.
🌹திருமணத்தை எளிய முறையில் நடத்த வாலி விருமëபினார். அதனால், உடன் பிறந்த சகோதர -சகோதரிகளிடமோ, எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற மிக மிக நெருங்கிய நண்பர்களிடமோ கூட சொல்லாமல், திருமண பத்திரிகை கூட அச்சிடாமல், கீழத்திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.
🌹திருமணத்துக்கு மண்டபம் ஏற்பாடு செய்ய, தன் நண்பர் வி.கோபாலகிருஷ்ணனுடன் காரில் புறப்பட்டார், வாலி கோபாலகிருஷ்ணன்தான் காரை ஓட்டினார்.
"🌹ஒரு குக்கிராமத்தில் கார் நுழையும்போது எதிர்பாராதவிதமாக ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓடி வந்து, கார் ஹெட்லைட்டில் லேசாக அடிபட்டு, சிறிய காயத்தோடு தப்பியது.
🌹குழந்தையின் தாய் பரபரப்போடு ஓடிவந்து, மகளை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டாள். நானும், கோபியும் வண்டியை விட்டு இறங்கி, "குழந்தை எதிர்பாராமல் குறுக்கே ஓடிவந்ததால்தான், இப்படி ஆயிப்போச்சு... இதுல எங்க தவறு எதுவுமில்லை. இருந்தாலும், பெரிய மனசு பண்ணி நீங்கஎன்று குழந்தையின் தாயிடம் சொன்னோம். அந்த அம்மையார் அதில் சமாதானமடைந்து, ஊரைக்கூட்டி விவகாரம் செய்யாமல் எங்களை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தார்.
"🌹வாலி! இப்படி ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சே! மெட்ராசுக்கே திரும்பிடலாமா...?'' என்று கோபி என்னிடம் கேட்டார்.
"ஏன்? இதனால் என்ன?'' என்றேன் நான்.
"கல்யாணத்திற்கு இடம் பார்க்கப் போகிறோம், சகுனமே சரியில்லையே'' என்றார் கோபி.
"🌹எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இந்தக் கல்யாணத்துல கடவுளுக்கு இஷ்டமில்லைன்னாதான் நடக்காது. மத்தப்படி, இது மாதிரி விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை'' என்றேன் நான்.
🌹கோபி, மவுனமாகக் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென்று வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, வாலை நிமிர்த்தி சிலிர்த்துக்கொண்டு பாதையின் குறுக்கே ஓடிவந்தது.அதன் மீது கார் மோதாமலிருக்க கோபி பிரேக்கின் பெடலை அமுக்க, எதிர்பாராமல் வண்டி நிலை குலைந்து பாதையை விட்டு வயக்காட்டில் இறங்கி ஒரு குலுக்கலோடு நின்றது. எனக்கும் கோபிக்கும் உச்சந்தலையிலும், முன் நெற்றியிலும் லேசான சிராய்ப்புகள்.
"🌹சகுனம் சரியில்லை... வாங்க, வாலி! ஒழுங்கா நாம் மெட்ராசுக்கே திரும்பிடலாம்'' என்றார், கோபி.
வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் துணையோடு, எங்கள் கார், பள்ளத்திலிருந்து பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.
"இப்போதைக்கு உங்க கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுடுங்க. ஒண்ணு ஒண்ணா தடங்கல் வந்துக்கிட்டேயிருக்கு'' என்றார் கோபி. நான் அதற்கு உடன்படவில்லை.
"🌹கோபி! எண்ணித் துணிஞ்சாச்சு... துணிஞ்சப்புறம் எண்றதே இழுக்கு... கல்யாணம் ஏப்ரல் 7-ந்தேதி, திருச்சானூர் கோவில் சத்திரத்தில் நடந்தே தீரணும்... என் முடிவை நான் மாத்திக்கறதா இல்லை... நீங்க வராட்டி, நான் நடந்தே திருப்பதி போயிடுவேன்'' என்று சொன்னதும் கோபி சிரித்து விட்டுப் பேசினார்.
🌹"ஏப்ரல் 7-ந்தேதி சத்திரம் கிடைக்கல்லேன்னா...?''
"அப்ப, இந்தக் கல்யாணத்தைத் தள்ளிப்போடக் கடவுள் விரும்புறார்னு நினைப்பேன்.''
என் உறுதியைப் பாராட்டி கோபி, திருப்பதியை நோக்கிக் காரைச் செலுத்தினார்.
🌹கோபி, சொன்னது ஒரு விஷயத்தில் உண்மைதான். கீழத்திருப்பதி, திருச்சானூர் கோவில் கல்யாண மண்டபம் அவ்வளவு சுலபமாகக் கிடைக்கக்கூடிய இடமில்லை. ஏனெனில் ஏகப்பட்ட முகூர்த்தங்களுக்கான மாதம் அது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பலர் ரிசர்வேஷன் செய்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.
🌹திருப்பதி தேவஸ்தான பேஷ்கார், கோபிக்கு மிக நெருங்கிய நண்பர். கீழத்திருப்பதியில் குடியிருந்த அவர் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்து விவரத்தைச் சொன்னோம்.
"ஏப்ரல் 7-க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது... இப்போது கேட்டால் எப்படி? கண்டிப்பாகக் கல்யாண மண்டபம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்...'' என்று சொன்னார் கோவில் பேஷ்கார்.
"டெலிபோன் செஞ்சு கேட்டுப் பாருங்களேன்'' என்று பேஷ்காரிடம் என்பொருட்டு வேண்டினார், கோபி.
திருச்சானூர் கோவில் நிர்வாக அதிகாரியோடு போனில் பேசிவிட்டு பேஷ்கார் சொன்னார்:
"எல்லா முகூர்த்த நாட்களும் இன்னும் 3 மாதத்திற்கு `புக்' ஆகிவிட்டது. ஆனால் ஏப்ரல் 7-ந்தேதி காலியாயிருக்கு...''
உடனே நான் கோபியிடம், "இதுதான் கடவுள் திருவுள்ளம் என்பது!'' என்றேன்.
1965 ஏப்ரல் 7-ந்தேதி என் திருமணம் திருச்சானூரில் நடந்தது. மா.லட்சுமணன், "புலித்தேவன்'' பட இயக்குனர் ஏ.ராஜாராம், கோபி இவர்கள் முன்னிலையில் என் மனைவி திலகத்தின் நெற்றியில் நான் திலகம் இட்டேன்.
திருமண மண்டபத்தைத் தேர்வு செய்யப்போகும் போதே இவ்வளவு தடங்கல்கள் ஏற்படின் என்னைத்தவிர வேறு எவரேனும் இதுபோல் விடாப்பிடியாக நின்று, விவாகத்தை முடித்திருப்பார்களா என்பது சுலபமாக விடையிறுக்க முடியாத வினாவாகும்.
நான் ஆண்டவனிடத்தில் நம்பிக்கையுடையவன்.
சகுனங்களிலும், ஜாதகங்களிலும் நம்பிக்கையுடையோரை நையாண்டி செய்வது நாகரிகமற்ற செய்கை என்பதில் உறுதியாக நிற்பவன். எந்த சகுனமும், எந்த ஜாதகமும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட என் குடும்ப வாழ்க்கை, எந்த சஞ்சலமும், சங்கடமுமில்லாமல் நல்லபடியாகத்தான் நாயகன் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.''
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகரில் இருந்து மேற்கு வத்திராயிருப்பு செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் பின்னர் வலதுபுற கிளைச் சாலையில் மூன்று கிலோ மீட்டர்கள் சென்றால் அமைந்திருக்கிறது இந்த நேரக் கோவில்.
மாலையில் இருந்து நள்ளிரவு வரையிலும் திறந்திருக்கும் இந்த கோவில் அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று முழுஇரவும் திறக்கப்படுகிறது.
அன்றைய தினங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மற்றபடி பகல் நேரத்தில் கோவில் திறப்பது இல்லை.
பெரிய அளவில் விசாலமான கோவில் மற்றும் கோபுரங்கள் ஒன்றும் இல்லாத நிலையில் எண் கோண வடிவில் ஒரு கருவறை.
அதன் உள்ளே சுமார் இரண்டு முதல் மூன்று அடியில் கால தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கூர்ந்து கவனித்தால் கால தேவி சிலையின் பின்புறம் 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் மற்றும் நவகிரகங்கள் உருவ வடிவில் அமைக்கப்பட்டு இருப்பது தெரியும்.
முதலில் கோவிலுக்கு வெளியில் இடமிருந்து வலமாக 11 சுற்றுகள் மற்றும் வலம் இருந்து இடமாக 11 சுற்றுகள் சுற்ற வேண்டும்.
பின்னர் உள்ளே சென்று கால தேவி சிலைக்கு எதிராக இருக்கும் ஸ்ரீ சக்கரத்தில் நின்று 11 வினாடிகள் நமக்கு வேண்டியதை நினைக்க வேண்டும்.
நாம் வேண்டியது கிடைக்கும் நினைத்தது நடக்கும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார்கள்.
சிறிய கோவில் என்றாலும் சுத்தமாக பராமரித்து கார் பார்க்கிங் உணவு மேடைகள் கழிப்பறை வசதிகள் இரவு தங்கும் வசதிக்காக அறைகள் என்று பார்த்து செய்திருக்கிறார்கள்.
கார் பைக் போன்ற தனியார் வாகனங்களில் வந்து செல்வோர் தவிர்த்து பொது வாகன வசதியை இங்கே எதிர்பார்க்க இயலாது.
அருகில் டீக்கடை உணவு விடுதிகள் போன்றவையும் இல்லை. அதனால் இங்கே சென்று தரிசனம் செய்து அருள் பெற விரும்புவோர் உணவு மற்றும் குடிநீரை கொண்டு செல்வது நல்லது.
கோவில் நன்றாக இருக்கிறது. தரிசனம் நன்றாக கிடைக்கிறது.மனமும் அமைதி அடைகிறது. ஒரு சிறு உறுத்தல் இருப்பதை தவிர்க்க இயலவில்லை.
கோவிலில் சுற்ற ஆரம்பிக்கும் சமயம் கண்டிப்பாக 50 ரூபாய் தரிசன கட்டணம் வாங்குகிறார்கள். கையில் ஒரு டேக் கட்டி விடுகிறார்கள். எட்டு பேர் மட்டுமே சுற்றி வந்தாலும் கட்டண தரிசனம் கண்டிப்பாக வசூலிப்பது உறுத்தல் எண் 1.
இந்த உலகில் வேற எந்த கடவுளும், எந்த சக்தியும், எந்த கோவிலும், எந்த சாமியும் செய்ய முடியாத ,தர முடியாத விஷயத்தை இந்த கோவிலில் இருக்கும் காலதேவி சிலை மட்டுமே செய்து தரும் என்ற அளவில் கல்வெட்டில் வடித்திருப்பது உறுத்தல் எண் இரண்டு.
மற்றபடி நிறைய மன கஷ்டம், பணக்கஷ்டம், பொருளாதாரம் திருமணம் குழந்தை பேறு ஆகியவை கேட்டு மனமுடைந்த நிலையில் இருப்பவர்கள் ஒரு முறை சென்று வந்தால் நல்ல விஷயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றுவரலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை!
இந்த கோவில் பற்றி ஏற்கனவே இன்னொரு சொந்தம் எழுதிய பதிவின் நகல் இங்கே!
*ஒருவருடைய கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் அதிசய கோவில் பற்றி தெரியுமா???
12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ள *காலதேவி அம்மன் சிலை.
இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்!
ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது.
அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா?
அதுவும் நம்மூரில்!
அதுதான் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி எனும் கிராமத்தில் உள்ள காலதேவி கோவில். கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் *”நேரமே உலகம்”
புராணங்களில்வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர்.
இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. - காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.
நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது.
இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான்.
பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது.
கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும்.
கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை.
காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,“எனக்கு எது நல்லதோ அதைக் கொடு’ என வேண்டினால் போதும்.
மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, அல்லது ஆட்டோவிலோ செல்லமுடியும்.
தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு.
ஏன் என்றால் இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது. விழாக்காலத்தில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
செயல்களில் ஒருவிதமான படபடப்பு உண்டாகும். பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். போக்குவரத்துகளில் விழிப்புணர்வு வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
பணி சார்ந்த விஷயங்களில் முயற்சிக்கு ஏற்ப புதிய சூழல் ஏற்படும். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். போட்டிப்பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கங்கள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிதுனம்
வெளி வட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் தீர்வுகள் கிடைக்கும். திடீர் தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
பொழுதுபோக்கு செயல்பாடுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கலை துறைகளில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சிம்மம்
முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் வழியில் வரன் அமையும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடியான சூழல் மறையும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கன்னி
மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். இணைய வழிகளில் வருமானம் மேம்படும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த தடை தாமதங்கள் குறையும். நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
விருச்சிகம்
பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் அமையும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வேலையாட்களிடத்தில் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு
மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் சந்திப்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். லாபம் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
மகரம்
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். தன வரவுகள் மூலம் திருப்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கும்பம்
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகைகள் ஏற்படும். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். தடைப்பட்ட சில வேலைகள் முடியும். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மீனம்
பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். தள்ளிப்போன சுப காரியம் கைகூடி வரும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சமூக நிகழ்வுகளால் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை 25.7.2026
இன்று பிற்பகல் 01.55 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று காலை 07.29 வரை அனுஷம். பின்னர் கேட்டை.
இன்று முழுவதும் பிராமியம்.
இன்று அதிகாலை 01.00 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 01.45 வரை பத்திரை. பிறகு பவம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
ஒருவரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு கோடிக்கணக்கான பணம் தேவையில்லை. ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு வேளை உணவு, சொந்த ஊருக்குச் செல்ல ஒரு விமான டிக்கெட் இருந்தாலே போதும் என்பதை நினைவூட்டும் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அங்கித் பாண்டே என்ற இளைஞர், தனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது வீட்டிற்கு அடிக்கடி உணவு கொண்டு வரும் டெலிவரி ஊழியர், அன்றும் உணவை வழங்கிவிட்டு தயக்கத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் கேட்டுள்ளார். உடனே அவரை வீட்டுக்குள் அழைத்து தண்ணீர் கொடுத்த அங்கித், பேசிக்கொண்டிருக்கும்போது அந்த இளைஞரின் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்து என்ன ஆனது என்று கேட்டுள்ளார்.
அப்போது, “எதுவும் சரியாக இல்லை” என்று கூறிய அந்த டெலிவரி ஊழியர், தனது தாய் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சொந்த ஊருக்குச் செல்ல 30 மணி நேரம் ஆகும் ரயில் பயணம் மட்டுமே இருப்பதால், தாயை சரியான நேரத்தில் பார்க்க முடியுமோ என்ற கவலையில் இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அந்த இளைஞர் அன்று முழுவதும் எதுவும் சாப்பிடவில்லை என்பதை அறிந்த அங்கித், தனக்காக வந்திருந்த உணவையே அவருக்குச் சாப்பிடக் கொடுத்தார். அதன்பிறகு, 4,000 ரூபாய் செலவில் அவருக்காக விமான டிக்கெட்டையும் முன்பதிவு செய்து கொடுத்தார்.
முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததால், விமான நிலைய நடைமுறைகள் குறித்து டெலிவரி ஊழியர் பதற்றமடைந்தார். அதற்கு, விமான நிலையத்தில் இருக்கும் தனது நண்பர் அனைத்து உதவிகளையும் செய்வார் என்று கூறி அங்கித் அவருக்கு தைரியம் அளித்தார்.
சில மணி நேரங்களிலேயே சொந்த ஊருக்குச் சென்ற அந்த டெலிவரி ஊழியர், தனது தாயை சந்தித்தார். பின்னர் அங்கித்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்ததுடன், தாயின் உடல்நிலையும் தற்போது முன்னேறி வருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
விமான டிக்கெட்டிற்காக செலவிட்ட 4,000 ரூபாயை பின்னர் டெலிவரி ஊழியர் திருப்பி அனுப்பியிருந்தாலும், அந்தப் பணத்தை தாயின் சிகிச்சைக்காகவே பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி, அங்கித் மீண்டும் அதே தொகையை அவரிடமே அனுப்பி வைத்தார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அங்கித்தின் மனிதநேய செயலை ஆயிரக்கணக்கானோர் பாராட்டி வருகின்றனர். “மனிதநேயம் இன்னும் உயிருடன் இருக்கிறது”, “கஷ்டமான நேரத்தில் செய்யப்படும் சிறிய உதவியும் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஆண்கள் சட்டையில் பட்டன் வலது பக்கமும், பெண்கள் உடையில் பட்டன் இடது பக்கமும் இருக்கும். இது வெறும் டிசைன் இல்லை... பல ஆண்டுகளாக வந்த ஒரு மரபு.
ஏன் இப்படின்னு கேட்டா, அதுக்கு ஒரே ஒரு உறுதியான பதில் இல்லை. ஆனா சில சுவாரஸ்யமான காரணங்கள் சொல்லப்படுது.
அந்தக் காலத்துல பெரும்பாலான ஆண்கள் தாங்களே உடை அணிந்ததால், வலது கைப் பழக்கத்துக்கு ஏற்ற மாதிரி பட்டன் வலது பக்கம் வைக்கப்பட்டதாம்.
வசதியான குடும்ப பெண்களுக்கு வேலைக்காரிகள் உடை அணிவித்து விடுவாங்க. எதிரே நின்னு பட்டன் போட அவர்களுக்கு எளிதாக இருக்கணும்னு பெண்கள் உடையில் பட்டன் இடது பக்கம் வைக்கப்பட்டதாம்.
இன்னொரு கருத்து...பெரும்பாலான ஆண்கள் வலது கைப் பழக்கம் உள்ளவர்கள்... வாளை இடது இடுப்பில்தான் அணிவார்கள். அப்போதுதான் வலது கையால் வாளை உருவி எடுக்க முடியும்.
அப்படிப்பட்ட சூழலில், மேலாடை இடது பக்கம் மேலாகவும், வலது பக்கம் உள்ளேயும் மூடப்பட்டிருந்தால் (அதாவது ஆண்கள் உடையில் இருக்கும் வழக்கம்), வாளை உருவும்போது ஆடையின் விளிம்பு எளிதில் திறந்து காற்றில் பறப்பது அல்லது வாளில் சிக்கிக்கொள்வது குறையும் என்பதே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
இவை எல்லாமே வரலாற்றில் சொல்லப்படும் விளக்கங்கள்தான். ஆனால் இதுதான் உண்மையான காரணம் என்று நிரூபிக்கப்பட்ட ஆதாரம் இல்லை.
இப்போ காலம் மாறிடுச்சு. யூனிசெக்ஸ் டிசைன்கள், நவீன ஃபேஷன் காரணமாக இந்த வேறுபாடு பல உடைகளில் இல்லவே இல்லை.
நான் இந்த பதிவு போடும் முன் சில ஆன்லைன் aap களில் பார்த்த போது ஆச்சரியம்... பெண்களின் ஷர்ட் களில் பட்டன் இடது புறம்தான் இருந்தது.
இனிமேல் சட்டையில பட்டன் எந்தப் பக்கத்துல இருக்குன்னு பார்த்தா, அதுக்குப் பின்னாடி இருக்கும் இந்த சுவாரஸ்யமான வரலாறும் ஞாபகம் வரும்.
டிவி என் வீட்டிற்கு வந்தபோது. ... புத்தகங்களை எப்படி படிக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.
கார் என் வீட்டிற்கு வந்தபோது.....
நான் எப்படி நடக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.
என் கையில் மொபைல் கிடைத்தவுடன்..... கடிதங்களை எப்படி எழுதுவது என்பதை மறந்துவிட்டேன்.
என் வீட்டிற்கு கணினி வந்தபோது.......
எழுதவதை மறந்துவிட்டேன்.
ஏசி வந்ததும்......
இயற்கைக் காற்றை மறந்து விட்டேன்.
நகரத்திற்கு வந்தவுடன்...
அழகு நிறைந்த கிராமத்தை மறந்துவிட்டேன்.
வங்கிகள் மற்றும் கார்டுகளை கையாளுவதால்...
பணத்தின் மதிப்பை மறந்துவிட்டேன்.
வாசனை திரவியத்தை பயன்படுத்தியதால்...
பூக்களின் மனத்தை மறந்துவிட்டேன்.
துரித உணவு வருவதால்...
பாரம்பரிய உணவு வகைகளை சமைக்க மறந்துவிட்டேன்.
சம்பாதிக்க சுற்றி, சுற்றி ஓடுவதால்.....
ஓடுவதை எப்படி நிறுத்துவது என்பதை மறந்துவிட்டேன்.
கடைசியாக வாட்ஸ்அப் கிடைத்ததும்....
எப்படி பேசுவது
என்பதையே.....
மறந்துவிட்டேன்.
எழுதியவர் பேர் தெரியல.... சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துட்டுது...
செம்ம செம்ம.... இவ்ளோ நகைச்சுவையா ஒரு விஷயத்தை விவரிக்க முடியும்னு தெரியும்போது....
எந்நேரமும் விறைப்பாவே திரியுற நமக்கு வெக்கமாத்தான் இருக்கு...
வாழ்தல் இனிது.... ரசித்து வாழ்தல் வரம்....
கொலைப் பசியோடு ஒரு திருமண வரவேற்பு பந்தியில் அமர்ந்திருந்தேன்.
முதலில் பேப்பர் ரோலை உருட்டினார்கள் .
பின்பு இலைகளை முன்னே வைத்து சென்றார்கள்.
கால் மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் மட்டும் வைத்தார்கள்.
முதல் பந்தியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் தி.நகர் போன்று கூட்டம் நெறிய ஆரம்பித்தது.
நான் ஓர வரிசையில் அமர்ந்திருந்தேன்.
காத்திருப்பவர்கள் எனக்கு பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள் .
" வெறும் எலைய எம்மா நேரம்டா உத்து பாக்கறது .. சோத்த போடுங்கடா.."
சரக்கிலிருந்த பெருசு ஒன்று ஆரம்பித்து வைத்தது .
குலாப் ஜாமூன் , வெங்காய பச்சடி , உருளை சிப்ஸ் , வைத்த அடுத்த நொடியில் கபளீகரம் செய்தேன்.
என்னுடைய வரிசையில் கடைசி ஆள் வரை வைத்துவிட்டு திரும்பிய வெங்காய பச்சடிக்காரன் என்னைப் பார்த்து " பச்சடியைக் கூடவடா ..?" என்று மனதில் நினைத்தது அவன் முகத்தில் தெரிந்தது.
அடுத்தது சென்னாவும் , தேங்காய் சட்னியும் , வைத்தார்கள் .
" எப்பதாண்டா சோறு போடுவீங்க ..? "
மறுபடி பெருசு உருமியது.
" சார் தோசையும் சப்பாத்தியும் வந்துட்டே இருக்கு ..அது வரைக்கும் அப்பளம் சாப்ட்ரீங்களா ..?"
அப்பளம் வைத்திருந்தவன் நக்கல் செய்கிறானா , இல்லை மனதில் இருந்துதான் கேட்கிறானா போன்ற ஆராய்ச்சிகளில் இறங்க என் பசி அனுமதிக்கவில்லை.
இதோ வருகிறது அதோ வருகிறது என்று அவர்கள் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த சப்பாத்தியும் தோசையும் வந்தே விட்டது .
படுபாவிகள், எதிர் வரிசையில் வைக்க ஆரம்பித்தனர்.
எனது இடத்திற்கு வரும்பொழுது தோசை தீர்ந்துவிட்டது.
ஒரே ஒரு சப்பாத்தி வைத்தான்.
" தம்பி தோசை வரல .."
" நான் சப்பாத்தி வைக்கிற ஆளு சார் .."
" தெரியுதுப்பா ..
அவர்கிட்ட சொல்ல முடியாதா ..?"
" உள்ள இருப்பான் சார் ..
போனதும் சொல்றேன் .." அவர் மீட்டிங்கில் இருக்கார் இப்போ பார்க்க முடியாது என்று என் காதில் விழுந்தது .
அதற்குள் சாப்பாடு வைக்க ஆரம்பித்தார்கள்.
" பாஸ் ஒரு கரண்டி வைங்க சாப்டுட்டு பொறவு வாங்கிக்கிறேன் " எனக்கு இலையில் டிராபிக் ஜாம் ஆனால் பிடிக்காது என்பதால் அப்படி சொன்னேன்.
" தம்பி அதெல்லாம் வேலைக்கு ஆகாது ,
இப்பவே மொத்தமா வாங்கிக்கங்க ..
அப்புறம் இவங்கள பிடிக்க முடியாது .."
பக்கத்தில் இருந்த அனுபவஸ்தர் கூறினார்.
அவர் கூறியபடியே மொத்தமாக வாங்கி , சாம்பார் , வத்தக்குழம்பு , ரசம் , மோருக்கு என நான்கு பாகங்களாக பிரித்து வைத்தேன்.
எனக்கு பின்னால் வெயிட்டிங்கில் இருந்தவர் அருகில் இருந்தவரிடம் எதோ சொல்லி சிரித்தார்.
அநேகமாக , டாப் ஆங்கிளில் எனது இலையில் நான்கு மலைச் சிகரங்கள் தெரிந்திருக்க வேண்டும் அவருக்கு.
சாம்பார் வாளிக்கு பின்னாலயே ரசம் வாளியும் வந்தது.
" இப்படி வந்தா ஒன்னு சேர வந்துட்றீங்க இல்லனா ஆளே காணாம போயிடுறீங்க ..
சாம்பார் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள எப்படிப்பா ரசம் சாப்பிடறது ..?"
" சாப்பிடலாம் .. சாப்பிடலாம் .."
எவனோ பின்னாடி இருந்து குரல் கொடுத்தான்.
திரும்பிப் பார்த்தேன், யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை.
" தம்பி, புரியாத ஆளா இருக்கீங்களே ..
ரசத்த இப்பவே வாங்கி வச்சுக்கோங்க .." அனுபவஸ்தர் வலியுறுத்தினார்.
ரசத்துக்கு என குவித்து வைத்திருந்த குன்றில் ஒரு குழி வெட்டி ரசத்தை அதில் ஊற்றச் சொன்னேன்.
" வத்தக் குழம்பு இல்லையா ..?"
" வரும் சார் .. " 'ஏன் பறக்குறீங்க' என்று கழுத்து வரை வந்து விட்ட வார்த்தையை நல்லவேளை முழுங்கிவிட்டான்.
" தம்பி உங்க ரசம் நம்ம இலைக்கு வருது பாருங்க " அருகில் இருந்தவர் சிரித்தபடி கூறினாலும் அது சிரிப்பதற்காகக் கூறியது அல்ல.
இதற்கு உடனடியாக ஆக்ஷனில் இறங்கியாக வேண்டும்.
மோர் குன்றில் இருந்து கொத்தாக சோற்றை அள்ளி, ரசம் லீக் ஆகும் இடத்தை சுற்றி ஒரு டேம் கட்டினேன் .
அவருக்கு பரம திருப்தி.
அடுத்து திடீரென்று காபி வைத்தார்கள் .
" இன்னும் ரசத்த கூட தாண்டலயேப்பா .. அதுக்குள்ள காபி வச்சா என்ன அர்த்தம் ?"
" சீக்கிரம் முடிச்சுட்டு எந்திரிக்கனும்னு அர்த்தம் .."
மீண்டும் அதே குரல் பின்னாலிருந்து.
காபியை ஆறிப் போய் குடிப்பதும் , குப்பையில் வீசுவதும் ஒன்று.
காபியை இழக்க எனக்கு மனமில்லை.
ரசம் சாப்பிட்டுகொண்டே , நடு நடுவே காபியையும்
ஒரு சிப் இழுத்துகொண்டேன்.
புது காம்பினேஷன். நீங்களும் டிரை பண்ணுங்க மக்கா.
" இவன் இப்பத்தைக்கு முடிக்க மாட்டான் மாப்ள ..
வா அந்த லைனுக்கு போவோம் .."
அந்த இரண்டு பேர் இறுதியாக என்னிடம் தோற்று வெளியேறினார்கள்.
அடுத்து மோர் வந்தது. வாங்கி பிசைய ஆரம்பித்தேன்.
என் வரிசையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக இலையை மூடி எழ ஆரம்பித்தனர்.
இறுதியாக எனக்கு மிகவும் பிடித்த வத்தக் குழம்பும் வந்தது.
இப்போது அநேகமாக அனைவரும் எழுந்து விட்டனர் , என் அருகில் அனைவரும் புது முகங்கள்.
ஆயம்மா பேப்பர் ரோலை சுருட்டிக் கொண்டே வந்தார். பாதி குன்றுதான் நான் முடித்திருந்தேன்.
என் அருகில் வந்ததும் , " பரவாயில்லை முடிங்க சார் " என்று கருணை கூர்ந்தார் .
பரீட்சை ஹாலில் கறாராக பேப்பரைப் பிடுங்கும் ஆசிரியப் பெருமக்களே , ஆயம்மாவைப் பார்த்து படியுங்கள்.
வரிசையில் அமர்ந்திருந்த புது முகங்கள் அனைவரும் என்னைக் குரூரமாக பார்க்க ஆரம்பித்தனர்.
எனக்கு வெட்கமாய்ப் போய் விட்டது .
மீதமிருக்கும் வத்தக் குழம்புக் குன்றை பிரிய மனமில்லாமல் ,வாழைப் பழத்தை மேல் ஜோப்பில் போட்டுக்கொண்டு , இலையை மூடிவிட்டு
ஒரு கையில் ஐஸ் கிரீம்
மறு கையில் ஜாங்கிரியுடன் நான் எழ முற்பட்டபோது
" சார் .. இங்க யாருக்கோ தோச வரலயாமே ..
உங்களுக்கா ? " என்ற குரல் உசுப்பேத்தியது.
திரும்பி அமர்ந்தால் அடி விழும் என்று தெரிந்ததால்,
" நான் இல்லப்பா .." என்று கூறிவிட்டு கை கழுவ சென்றேன்.
நிம்மதியா திங்கவிட மாட்றானுவ.....
உண்மையில் பெரும்பாலான கல்யாண ரிசப்சனில் இதான் நடக்கிறது.
உணவு வீணடிக்கப்படுகிறது
தனது குழந்தைப் பராமரிப்பிற்காக வழங்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான டொலர்கள் தொகையை வழங்கத் தவறிய தந்தை ஒருவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரசுரத் தடையின் கீழ் "திரு. M" (Mr. M) எனக் குறிப்பிடப்படும் அந்த நபர், நீதிமன்ற விசாரணையின் போது மொத்தமாக 37,312.54 டொலர்களை நிலுவையாக வைத்திருக்க வேண்டியிருந்தது.
குழந்தையின் தாயாரான "திருமதி. C" (Ms. C) மற்றும் பிரதிவாதியான திரு. M ஆகிய இருவரும் சட்டப்பூர்வமாக திருமண பந்தத்தில் இணையவில்லை. குழந்தை பிறந்த நாள் முதல் வளர்ப்புச் செலவுகள் முழுவதையும் தாயாரே கவனித்து வந்துள்ளார்.
ஆண்டிற்கு 297,700 டொலர்கள் வருமானம் ஈட்டும் திரு. M, குழந்தைப் பராமரிப்பிற்காக மாதம் 2,500 டொலர்களையும், நிலுவைத் தொகையாக 16,429 டொலர்களையும் வழங்குவதாகச் சட்டப்பூர்வ ஒப்பந்தம் செய்தார்.
நிலுவைத் தொகை 50,000 டொலர்களை நெருங்கியதையடுத்து, மாதம் 7,500 டொலர்கள் செலுத்த வேண்டும் எனவும், தவறினால் ஒவ்வொரு தவறும் தவறும்போதும் 3 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அவர் இருமுறை மட்டுமே பணத்தை வழங்கிவிட்டு, அதன் பின்னர் பணத்தைச் செலுத்த தவறியுள்ளார்.
இதனால் தனக்குக் கடும் கடன்பாடும், வாழ்க்கைத் தரத்தில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக தாயார் நீதிமன்றத்தில் விவரித்தார். தனக்கு போதிய வருமானம் இல்லை எனவும், நிதி நெருக்கடி நிலவுவதாகவும் தந்தை சார்பில் வாதிடப்பட்டது. மேலும், தனது நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 52,000 டொலர்களை தன்னால் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.
ஆனால், அந்த வங்கிக் கணக்கிலிருந்து 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏராளமான ஆடம்பரச் செலவுகள் செய்யப்பட்டுள்ளதை நீதிபதி மைக்கா ரான்கின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது கிரேஃப்ரையர்ஸ் பாபி (Greyfriars Bobby) என்ற ஸ்கை டெரியர் (Skye Terrier) இன நாயின் உண்மைச் சம்பவம். தனது எஜமானின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத விசுவாசத்தால், ஸ்காட்லாந்தின் மிகவும் புகழ்பெற்ற நாய்களில் ஒன்றாக பாபி இன்று வரை நினைவுகூரப்படுகிறார்.
1858-ஆம் ஆண்டு, பாபியின் எஜமானான ஜான் கிரே (John Gray) காசநோயால் உயிரிழந்தார். அவரை எடின்பரோவில் உள்ள Greyfriars Kirkyard கல்லறையில் அடக்கம் செய்தனர்.
அதன்பிறகு, அடுத்த 14 ஆண்டுகள் முழுவதும், பாபி தனது எஜமானின் கல்லறையை விட்டு நகராமல் அங்கேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விசுவாசம் அப்பகுதி மக்களை மிகவும் நெகிழச்செய்தது. அவர்கள் தினமும் பாபிக்கு உணவு வழங்கினர். கல்லறையின் பராமரிப்பாளரும் பாபி அங்கேயே தங்க அனுமதி அளித்தார். அருகிலிருந்த ஒரு காபி ஹவுஸ் உரிமையாளரும் தனது வாழ்நாள் முழுவதும் பாபியை அன்புடன் பராமரித்தார்.
1860-களின் இறுதியில், பாபி மிகவும் பிரபலமானதால், தெரு நாய்களுக்கு எதிரான புதிய உரிமச் சட்டம் அமலுக்கு வந்தபோது, எடின்பரோ நகரின் லார்ட் ப்ரோவோஸ்ட் அவருக்கான நாய் உரிமம் மற்றும் கழுத்துப்பட்டைக்கான செலவை ஏற்றுக்கொண்டார்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கழுத்துப்பட்டை இன்றும் பாதுகாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.
1872-ஆம் ஆண்டு பாபி இறந்தபோது, தனது எஜமானின் கல்லறைக்கு அருகிலேயே, Greyfriars Kirkyard நுழைவாயிலின் உள்ளே அவரும் அடக்கம் செய்யப்பட்டார்.
அடுத்த ஆண்டே, பாபியின் நினைவாக வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. இன்று அந்தச் சிலை, எடின்பரோ நகரில் அதிகம் பார்வையிடப்படும் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்தக் கதை நமக்குச் சொல்லும் பாடம்:
உண்மையான அன்பும் விசுவாசமும் வார்த்தைகளால் அல்ல, செயல்களால் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வேலை பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
ரிஷபம்
மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் மேம்படும். வெளியூர் பயணங்களால் சாதகமான சூழல் அமையும். பணி நிமித்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம்
இழுபறியாக இருந்து வந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தாய் மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அலுவல் பணிகள் சற்று குறையும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். கற்பனை சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனை வாங்குவது குறித்த வாய்ப்புகள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் அமையும். அரசு பணிகளால் ஆதாயம் உண்டாகும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கன்னி
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். காலில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனங்களால் சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அடிப்படை கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்காலத் தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். செல்வச் சேர்க்கை தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். குழந்தைகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் திருப்பங்கள் ஏற்படும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபார முதலீடுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மகரம்
சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவு கைக்கொடுக்கும். அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவுகள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். பணியாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வழக்கு தொடர்பான நுணுக்கங்களை அறிவீர்கள். வேளாண்மை தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவங்கள் உருவாகும். உறவினர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர் மட்ட அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம்
வெளிவட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் அனுபவமும் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 24.7.2026
இன்று பகல் 12.05 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று அதிகாலை 05.05 வரை விசாகம். பின்னர் அனுஷம்.
இன்று இரவு 11.35 வரை சுப்பிரம். பின்னர் பிராமியம்.
இன்று பகல் 12.05 வரை கரசை. பின்னர் வணிசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 12.15 முதல் 01.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை



