- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை ‘ராமாயணா’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார். இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் ராவணனாக யாஷும் அனுமனாக சன்னி தியோலும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் 2 பாகமாக உருவாகி உள்ளது. ஹாலிவுட்டில் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் அனிமேஷன் நிறுவனத்தை நடத்தி வரும் நமித் மல்ஹோத்ரா, தனது பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்பில் இதை தயாரிக்கிறார். நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸும் இணைந்து தயாரிக்கிறது.
இதன்முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கும் 2-வது பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் ஜூலை 24-ல் வெளியாக இருக்கிறது. அதற்கு முன் இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர், முதல் முறையாக டெல்லியில் நடந்த விழாவில் பிரத்யேகமாகத் திரையிடப்பட்டது.
அப்போது தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா கூறும்போது, “எங்களது நிறுவனம் விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் 8 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் உள்ள நம்முடைய கலைஞர்கள், நம்முடைய திறமை, ஆர்வம் ஆகியவை உலகிலேயே சிறந்தவை என்பதால் தான் இது சாத்தியமானது. ஆனால் அதற்கான அங்கீகாரம் நமக்கு கிடைக்கவில்லை.
இந்தியாவும், இந்தியாவின் திரைப்படத் துறையும் ஹாலிவுட்டில் இருந்து தூரத்தில் இருக்கிறது. எனவே, நம்மிடம் இருக்கும், நமக்குச் சொந்தமான, நாம் பெருமைப்படக்கூடிய ஒரு கதையை ஏன் உலகுக்குச்சொல்லக் கூடாது என்று நினைத்தேன். அதற்கு ராமாயணத்தை தவிர வேறு எந்த கதையும் நினைவுக்கு வரவில்லை.
ராமாயணம் உலகின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. அதன் பெருமை, அது சொல்லும் வாழ்க்கை நெறிமுறைகளில் உள்ளது. ஏற்கெனவே அது உலக மக்களிடம் புகழ்பெற்ற காவியம். ராமாயணத்தின் பிரம்மாண்டமான காட்சிகளை மட்டுமல்லாமல், அதன் உணர்வுகள், மனிதாபிமானம் மற்றும் காலத்தால் அழியாத ஆன்மா ஆகியவற்றையும் இந்தத் திரைப்படம் மூலம் பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
சாய் பல்லவி கூறும்போது, “சீதையின் கதாபாத்திரத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அந்தக் கதா பாத்திரத்தில் நடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. சீதையாக நடிக்க தினமும் தியானம் செய்தேன். சில நேரங்களில், சீதையை நினைத்து, ‘நீங்கள் என்னுள் இருந்து நடியுங்கள்; இந்தப் படத்துக்குத் தேவையானது எதுவோ அது என்னுள் இருந்து வெளிப்படட்டும்’ என்று பிரார்த்தனை செய்தேன்” என்றார். நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், ஷோபனா, விவேக் ஓபராய், ரகுல் ப்ரீத் சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் மோசமான காற்றுத் தரக் குறைவிற்கும் புகை மூட்டத்திற்கும், அமெரிக்க-கனடா எல்லையின் தெற்குப் பகுதியில் (அமெரிக்காவில்) எரிந்து வரும் காட்டுத் தீயே முக்கியக் காரணம் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்னல் காரணமாக உள்ளூர் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், எல்லைப் பகுதியில் புகையின் அளவு அதிகரிக்க அமெரிக்காவில் எரியும் காட்டுத் தீயே பிரதான காரணம் என மாகாண காட்டுத் தீ சேவை மையம் சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பார்வைத் திறன் குறைவதோடு காற்றுத் தரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில், எல்லை தாண்டிப் பரவும் காட்டுத் தீ புகை மூட்டம் இரு நாடுகளுக்குமிடையே அரசியல் ரீதியான காரசார விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நகரங்களான சிகாகோ, நியூயார்க் மற்றும் டெட்ராய்ட் ஆகியவை புகையினால் சூழப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் கனடாவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாழ்க்கையில் பல சோதனைகளை அடைந்த ஒரு தொழிலதிபர் தான் மதிக்கும் ஆன்மீக குருவிடம் சென்று தன் நிலையை புலம்ப ஆரம்பித்தான்.
தொழிலதிபர்: குருவே என் வாழ்க்கையில எல்லாம் முடிஞ்சு போச்சு
எல்லாமே முடிஞ்சு போச்சு.
எதுவும் சரியில்ல
மனைவி சரியில்ல
பிள்ளைங்க சரியில்ல
தொழிலில் தோல்வி
வீதியில் நான் நடந்து போகும் போது யாரும் மரியாதை கொடுப்பதில்லை
நான் இனி வாழ்க்கையை எப்படி வாழ்வது குருவே ?
குரு: ஒன்னும் கவலைப்படாதே நான் உனக்கொரு மருந்து கொடுக்கிறேன்.
குரு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து அதில் 4 கரண்டி (ஸ்பூன்) உப்பை அள்ளி போட்டு அதை தொழிலதிபரிடம் கொடுத்து குடிக்க சொல்ல .அதை குடித்த தொழிலதிபருக்கு குமட்டல் ஏற்பட்டு அந்த தண்ணீரை கீழே துப்பினார்
தொழிலதிபர்: இவ்வளோ உப்பு போட்டு எப்படி குருவே குடிக்க முடியும். எனக்கு குமட்டுகிறது
குரு: ஓ அப்படியா என்னோடு வா
அருகில் ஒரு குளத்திற்கு கூட்டி சென்று குரு அந்த குளத்தில் 4 கரண்டி (ஸ்பூன்) உப்பை போட்டு பின் தண்ணீரை குடிக்க சொல்கிறார்.
குரு: எப்படி இருக்கு தண்ணீர்?
தொழிலதிபர்: நல்லா இருக்கு குருவே
குரு: இனிப்பா இருக்கா?
தொழிலதிபர்: ஆமா இனிப்பா இருக்கு
குரு:அதெப்படி இனிப்பா இருக்கும்?அதே 4 கரண்டி உப்பை தானே இதுலயும் போட்டேன் அப்புறம் எப்படி இனிக்கும்.
தொழிலதிபர்:என்ன குருவே விளையாட்டு?
அது சின்ன குவளை அதனால் குமட்டியது
இது பெரிய குளம் குருவே அதனால் குமட்டவில்லை.
குரு: உன் மனதை ஏன் குவளையாக வைத்திருக்கிறாய் ?
குளம் போல் வைத்துக்கொள் .
வருகின்ற கவலை என்ற உப்பு கரைந்து விட்டாலும்
இனிமை மாறாத குளமாக உன் மனமிருந்தால்
ஏன் உனக்கு குமட்டல் வரும்?
அப்படி தான் இருக்கும்.
அப்படி இருந்தால் தான் அது வாழ்க்கை
இதை தான் இன்னும் தெளிவாக கவியரசு கண்ணதாசன் தனது மந்திர வரிகளால் எடுத்துரைத்திருப்பார்.
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை"
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், இஞ்சி பச்சடி வைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு தேனில் கலந்து சாப்பிட பித்த, கபம் நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்
காதலுக்காகக் கிரீடத்தைத் துறந்த புதுக்கோட்டை ராஜா.
இது ஒரு சோக காதல் கதை
சினிமாவுல கூட பார்க்க முடியாத ஒரு மிரட்டலான காதல் கதை இது. 1915-ல ஆரம்பிச்ச இந்தக் கதை, நம்ம தமிழ்நாட்டுப் புதுக்கோட்டைக்கும், ஏழு கடல் தாண்டி இருக்கிற ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒரு உணர்ச்சிகரமான பந்தம். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மகாராஜா மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், அந்த காலத்திலேயே ரொம்ப ஸ்டைலானவர், உலக அறிவும் நவீன சிந்தனையும் கொண்டவர். அப்போதெல்லாம் ஆஸ்திரேலியாவுக்குப் போறது லேசுப்பட்ட விஷயம் இல்லை. "Whites Only" (வெள்ளையர்களுக்கு மட்டுமே) என்கிற கடுமையான இனவெறிச் சட்டம் அங்கே அமலில் இருந்தது. ஆனா, நம்ம ராஜாவோட ஆளுமைக்கும், அந்தஸ்துக்கும் முன்னாடி அந்தச் சட்டமெல்லாம் மண்டியிட்டுச்சு. அவருக்கு மட்டும் சிறப்பு அனுமதி கிடைச்சது.
சிட்னிக்கு டூர் போன ராஜா, அங்கே மோலி என்கிற அந்த ஆஸ்திரேலிய அழகியைச் சந்திக்கிறாரு. பார்த்தவுடனேயே காதல் பத்திக்கிச்சு. மோலியும் ராஜாவோட அந்த அறிவையும், மிடுக்கையும் பார்த்து மனசைப் பறி கொடுத்தாங்க. 1915-ல மெல்போர்ன்ல வச்சு இவங்க கல்யாணம் முடிஞ்சுது. ஆனா, இந்தக் கல்யாணத்தை அந்த நாட்டுப் பத்திரிகைகள் தாங்கிக்கவே முடியல. "நம்ம ஊரு வெள்ளையினத்துப் பொண்ணு எப்படி ஒரு இந்திய ராஜாவைக் கல்யாணம் பண்ணலாம்?"னு விஷத்தைக் கக்குனாங்க. "புதுக்கோட்டைங்கிறது இந்தியாவோட கால் கட்டை விரல் நகம் மாதிரி இருக்குற ஒரு சின்ன இடம், அங்கே இருக்குற ராஜாவுக்கு இவ்வளவு தைரியமா?"ன்னு ரொம்பக் கேவலமா எழுதினாங்க. ஆனா, இதையெல்லாம் விடப் பெரிய இடி லண்டன்ல இருந்து வந்துச்சு.
பிரிட்டிஷ் அரசாங்கமும், ஜார்ஜ் மன்னரும் இந்தக் கல்யாணத்தை அங்கீகரிக்கவே மாட்டோம்னு ஒத்தைக்காலுல நின்னாங்க. "மோலியை ராணின்னு சொல்லக்கூடாது, அவங்களுக்கு எந்த அரசு மரியாதையும் கிடையாது, 11 குண்டு முழக்க மரியாதையும் ரத்து"ன்னு உத்தரவு போட்டு, ராஜாவை ஒரு வழி பண்ணிட்டாங்க. ஆனா ராஜா எதற்கும் அசரல. 1915 டிசம்பர்ல மோலியைத் தன் ஊரான புதுக்கோட்டைக்கு அழைச்சுட்டு வந்தாரு. நம்ம ஊர் மக்கள் எல்லாம் அவங்களை ஒரு மகாராணி மாதிரி அன்போடு வரவேற்றாங்க. ஆனா, அந்த வெள்ளைக்கார அரசாங்கம் செஞ்ச வேலை இருக்கே, அது ரொம்பக் கொடுமை.
மோலி கர்ப்பமா இருந்தப்போ, அவங்களுக்குத் தர்ற கசாயத்துல அரளி இலையை அரைச்சு விஷம் வச்சுக் கொல்லப் பார்த்தாங்க. தன் மனைவியோட உயிருக்கே ஆபத்துன்னு தெரிஞ்சதும் ராஜா பதறிப்போயிட்டாரு. அவங்களை ஊட்டியில பாதுகாப்பா வைக்கலாம்னு ஒரு வீடு வாங்கப் பார்த்தாரு, அதுக்கும் அந்த அரசாங்கம் முட்டுக்கட்டை போட்டுச்சு. "ஒண்ணு ராஜாவா இரு, இல்ல உன் பொண்டாட்டி கூட போ"ன்னு ராஜாவுக்கு நெருக்கடி கொடுத்தாங்க. ராஜா யோசிக்கவே இல்லை. "என் பதவியும், நாடும் போனாப் போகுது, என் மனைவியும் அவங்க கௌரவமும்தான் முக்கியம்"னு சொல்லிட்டு, தன் வாரிசுக்குக் கிடைக்க வேண்டிய ராஜ பதவியையும் துறந்துட்டு, பென்ஷன் வாங்கிக்கிட்டு ஐரோப்பாவுக்கே போயிட்டாரு.
அங்கே அவங்களுக்கு 'மார்த்தாண்ட சிட்னி'ன்னு ஒரு மகன் பிறந்தான். ஆனா, அந்தப் பையனை வாரிசா ஏத்துக்க பிரிட்டிஷ் அரசு மறுத்துட்டாங்க. இதனாலேயே அந்தப் பையன் பிற்காலத்துல சில தப்பான வழிகளுக்குப் போய் ஜெயிலுக்கும் போயிருக்காரு. 1928-ல ராஜா திடீர்னு இறந்து போனப்போ, அவரோட உடலை இந்தியாவுக்குக் கொண்டு வரக் கூட மோலிக்கு அனுமதி கிடைக்கல. லண்டன்லயே அவரைத் தகனம் பண்ணிச் சாம்பலை வச்சுட்டாங்க. மோலி அதுக்கப்புறம் ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. உலகப்போர் சமயத்துல நியூயார்க்ல துணிக்கடையில வேலை பார்த்தாங்க. என்னதான் வறுமை வந்தாலும், ராஜாவுக்குத் துரோகம் செய்யாம, கடைசியில 1967-ல அவங்க இறந்தப்போ, அவங்க சாம்பலையும் லண்டன்ல ராஜா இருந்த இடத்திலேயே வச்சாங்க. சாகுற வரைக்கும் அந்த ஊர் ராணியா ஆக முடியலனாலும், காதலிச்ச கணவர் கூடவே போய்ச் சேர்ந்துட்டாங்க. ஒரு அழகான காதல், இனவெறிக்கும் அதிகாரத்துக்கும் பலியான கதை இது.
வாரியார் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம். முன் வரிசையில் இருந்த நாத்திகர் ஒருவர் எழுந்து "இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?" என்ற வினாவை எழுப்பினார். சம்பாஷணைகள் ஆரம்பமானது.
"உங்களது பிரதான உணவு என்ன? அதாவது அரிசியா, கோதுமையா?"
"அரிசி!"
"அரிசியில் என்னென்ன பதார்த்தங்கள் செய்யலாம்?"
"சாதம், பொங்கல், இட்லி, தோசை, ஆப்பம், பணியாரம், பிரியாணி, இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம். ஏன் இதை கேட்கிறீர்கள்?"
"இல்லை அரிசியை ஊறவைத்து தின்றுவிட்டு போகலாமே, அதையேன் மெனக்கெட்டு நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்து இத்தனை பதார்த்தங்கள் செய்ய வேண்டும்? அதற்காக கேட்டேன்"
"எப்படி சாமி வெறும் அரிசியை ஊறவைத்து தின்பது?. நாவிற்கென்று ருசி தேவைப்படுகிறதே"
"சாதாரண நாவிற்கே இத்தனை வகை ருசி தேவைப்படுகிறது, ஆனால் மூலப்பொருள் அரிசி ஒன்றுதான். அது போலத்தான் இறைவன் ஒருவனே இந்துக்கள் ஆன்மிக ருசிக்காக பல உருவங்களில் துதித்து வணங்கி மகிழ்கிறார்கள்."
கேள்வி கேட்ட நாத்திகர் மேடையேறி வாரியாரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது.
ஒரு பிரச்சார கூட்டத்தில் கேட்டது.
கணவன்: (திமிராக) என் போனுக்கு நான் பாஸ்வேர்ட் மாத்திட்டேன். உன்னால கண்டுபிடிக்கவே முடியாது!
மனைவி: (சிரித்துக்கொண்டே ) எனக்கு உங்க பாஸ்வேர்ட் தேவையே இல்லைங்க. நீங்க தூங்கும்போது உங்க விரலை எடுத்து 'பிங்கர் பிரிண்ட்' வச்சு லாக் ஓபன் பண்ண எனக்குத் தெரியும். பாஸ்வேர்ட் மாத்துனதை விட, உங்க விரலை எங்கயாவது மாத்தி வைக்க முடியுமான்னு பாருங்க!
கணவன்:????..??
நேர்காணலில் மேனேஜர் கேட்டார், "நாங்கள் உங்களை வேலையில் சேர்த்தால், உங்களுக்கு என்ன செய்யத் தெரியும்?"
அதற்கு அந்த இளைஞன், "வேலை செய்யத் தெரியாது சார், ஆனால் அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது என்று உங்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்!" என்றான்.
கேசவன்ஒரு பொறியியல்பட்டதாரி….. சரியான வேலை கிடைக்காமல் பெரும் இன்னலைஅனுபவித்தான்….. குடும்பத்தில் வேண்டாவெறுப்பாக தான் அவன்காலம் போய் கொண்டிருந்தது…அவனை, அவன் தாயைதவிரஎவருமே,மதிப்பதில்லை, கிட்ட தட்ட பத்துக்கும் மேற்பட்டகம்பெனிகளுக்குஇன்டெர்வியூ க்கு சென்றும் அவன் கெட்ட நேரம், அவனுக்கு வேலை கிட்டவில்லை..தன்னை ஒரு அதிர்ஷ்டம் கெட்டவன் என்று நினைத்து வெதும்பினான்.. பக்கத்து வீதியில்……எப்போதோ. எவரோ கட்டிய ஒரு சிறிய விநாயகர் கோவில் கேட்பாரற்று கிடந்தது….கேசவன்மட்டும்,போகும் போதும்வரும்போதும்விநாயகனிடம்தன் கஷ்டத்தை சொல்லி, வேண்டி புலம்பி கும்பிட்டு விட்டு.. ஒரு ரூபாய்க்கு கற்பூரம் வாங்கி கொளுத்திவிட்டு செல்வான்….
நெடுங்காலாமாக இப்படி செய்து வந்தான்…. தனக்கு விநாயகன் ஒருவழியை….கண்டிப்பாககாட்டுவான் என நம்பினான்…. ஒரு நல்ல இரத்தின கற்களை பட்டை தீட்டி. அழகு படுத்தி ஏற்றுமதி செய்யும் ஒரு பெரிய கம்பெனிக்குJ.M.D……பதவிக்குஆள் தேவை பட்டது….. விண்ணப்பம் போட்டு பார்க்கலாம் என ஒரு விண்ணப்பம் அனுப்பினான்….. இன்டெர்வியூ க்கு வருமாறு கடிதம் வந்தது…. ஏதோ போய் பார்க்கலாம் என கருதி புறப்பட்டான்…
இன்டெர்வியூ கடிதத்தை கையில் எடுத்து கொண்டு விநாயகர் கோவிலுக்கு சென்று மனமுருகி வேண்டி, கற்பூரம் ஏற்றி விட்டு இன்டெர்வியூ கடிதத்தைஅவர் முன் வைத்தான்…. விநாயகா…இன்னும் என்னை சோதிக்காதே.. ஒரு நல்ல வழியை எனக்கு காட்டு.. .. என,கண்ணை மூடிக்கொண்டு வேண்டினான்…அப்போது ஒரு சூறைகாற்று லேசாக அடிக்க. ….எங்கிருந்தோ கசங்கிய துண்டு பேப்பர் ஒன்றுபறந்து வந்துஅவன் மீதுவந்து விழுந்தது…. அதனை கீழே குனிந்து எடுத்து பிரித்து பார்த்தான்… அதில் மூன்று வரிகள் எழுத பட்டிருந்தது… ஏதோ மர்ம நாவல் தலைப்பு போல் அதில் இருந்தது.. முதல் வரி …. கும்மிருட்டு …. இரண்டாம் வரி எண்ஜான் உடம்பு.. ….. மூன்றாம் வரி ….. இடது கை மூன்றாம் விரல்கீழ் ……….குழம்பினான் கேசவன். என்ன இது… யார்இப்படிஎழுதி போட்டு இருப்பார்கள்.. ….என சுற்றும் முற்றும் பார்த்தான்….. யாருமில்லை…
ஏதும் புரியாமல் அந்த துண்டு பேப்பரை மேல் பாக்கட்டில் வைத்து கொண்டு இன்டெர்வியூ நடக்கும் இடம் நோக்கி புறப்பட்டான்…ஜூப்லிஸ்டோன்ஸ் மிக பழமையான இரத்தின கற்களைபட்டை தீட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு பெரிய கம்பெனி. . நானூறுபேருக்கு மேல் அங்கு பணி செய்கிறார்கள்…. அதன் MD. ராகவன் அதன்உரிமையாளர் சிவ பாதம்…பெயருக்கு தகுந்தாற்போல் பக்தி மான் .. அதன் முகவரியை தேடிக்கொண்டு போனவன் மிரண்டு போனான்.. இருனூறு பேருக்கு மேல் ஒரு பதவிக்கு வந்திருந்தார்கள். வேண்டாவெறுப்பாக,இன்டெர்வியூவில் கலந்து கொண்டு எழுத்து தேர்வு எழுதினான். ..
இரண்டு மணிநேரம் கழித்து முடிவு வந்தது. முதலிரண்டுஇடங்களில் மற்ற இருவரும் மூன்றாம் இடத்திற்கு கேசவனும் இடம் பெற்று, நேர்முகதேர்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது…. அவனுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.,. இந்த மூன்று பேரையும்உள்ளே வர சொல்லி ராகவன் MD . அழைத்தார்.. எல்லோரையும் சோபாவில் அமர சொன்னஅவர்… உங்களிடம் என் முதலாளி பற்றிய ஒரு கதை சொல்ல போகிறேன்…. என்றார்….
என் முதலாளி மிஸ்டர் சிவபாதம்ஒரு கோட்டீஸ்வரர் …. சிறந்த பக்திமான்… அவர் அதிர்ஷ்டத்தின் மேல் பூரண நம்பிக்கை கொண்டவர்.. . அந்தஅதிர்ஷ்டம்தான் அவர் வாழ்க்கையில் அவரை உயர வைத்தது. .. இந்த JMD.. பதவி உங்களில் ஒருவருக்கு அப்படிதான் கிடைக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்…. இந்த நேர்முக தேர்வு,எனவே உங்களிடம்அந்த அணுகுமுறை யில் தான் நடத்தப்படும்…. யாருக்கு இறைவன் அருள போகிறானோ பார்க்கலாம்…. என கூறி விட்டு மேஜையை திறந்து பழுப்பு நிற நெகிழி புட்டி ஒன்றை எடுத்து மேஜை மேல் வைத்தார்…. இதனை நீங்கள் இரண்டு நிமிடம் உற்று பாருங்கள். அந்தபுட்டிக்குள் என்ன நிற பொடி உள்ளது என நீங்கள் கூற வேண்டும்.. .. இது உங்கள் முதல் சோதனை என்றார்..
அந்த புட்டி பழுப்பு நிறத்தில் இருந்ததால் சரியாக கணிக்க முடியவில்லை…. முதல் நபர் சிவப்பு என்றார்……இரண்டாம் நபர் பச்சை …. என்றார்… . இப்போது கேசவன்யோசித்தான். …. அந்த துண்டு பேப்பரில்முதல் வரி நினைவில்வந்தது … கும்மிருட்டு .. என்ன நிறத்தில் இருக்கும். …. கருப்புநிறம் அல்லவா… கேசவன் அதை நினைவில் வைத்து கொண்டு……கருப்பு நிறம் என்றான்.. MD ஒரு பேப்பரில் அதனை மூடி திறந்து கொட்டினார்…. அதிலிருந்து கருப்பு நிற பொடி கொட்டியது….. கேசவனுக்கு முதல் வெற்றி….. ஒரு மதிப்பெண் கிடைத்தது….. கேசவன் விநாயகனை நினைத்து பக்தி பரவசத்தில் மிதந்தான்….
இரண்டாவது சோதனை…..MD மேஜையை திறந்து ஒரு நூல் கண்டை எடுத்தார்……அதன் முனையை பிடித்து கொண்டு தனது கையில் நூலை,எட்டு முறைசுற்றி அறுத்து மேஜை மேல் போட்டார்……இப்போது சொன்னார், நான் அறுத்து போட்ட நூலை மேஜை மேல் நீட்டி வைக்கிறேன்…நீங்கள்,அதனை கண்ணாலேயே அளந்துபார்த்து. எத்தனை செண்டிமீட்டர் உள்ளது என சொல்லுங்கள். சரியாக சொல்ல வேண்டும்என்று இல்லை ஓரிரு செ. மீ ம்.. கூடலாம்… குறையலாம் … என்று மூன்று பேரையும் பார்த்து சொன்னார்…. அவர்களும் கண்ணால் ஒரு மூன்று நிமிடங்கள் பார்த்தனர்…. முதல் நபர் 150செண்டிமீட்டர் என்றார். ……இரண்டாம் நபர் 160செ. மீ. என்றார்…. இப்போதுகேசவன்முறை.. கொஞ்சம் யோசித்தான்,.. துண்டு பேப்பரின் இரண்டாவது வரி ….. எண்ஜான்உடம்பு .. உச்சியிலிருந்து பாதம்வரை ஜாண்போட்டு நம் கை வைத்து அளந்தால். எட்டு ஜாண் அளவேஇருக்கும். ….. தன்னுடைய உயரம் 167செண்டிமீட்டர் தானே….. ஆண்டவன் விட்ட வழி.. ….. அதையே சொல்வோம் என,சொன்னான்.
MD ராகவன்அளந்து பார்த்து விட்டு அதிசயித்துபோனார். ……. சரியாக 167செ. மீ இருந்தது.. அவரே எழுந்து கேசவனுக்கு கை கொடுத்து குலுக்கினார். ….. கங்கிராலேஷன்ஸ் மிஸ்டர் கேசவன். நீங்கள் JMD ஆகிவிட்டீர்கள்……என்று வாழ்த்தினார்…பிறகு மற்ற இருவரையும் பார்த்து நீங்கள் அறிவு திறன் போட்டியில் நன்கு எழுதி முதலிரண்டுஇடங்களை பெற்று உள்ளதால் உங்களை இழக்க இந்த நிறுவனம்விரும்ப வில்ல.. எனவேஉங்களுக்குபோர்மேன். வேலைஇங்கே உள்ளது அது உங்களுக்கு. எனசொல்ல கட்டிடம் அதிறமூவரும்கை தட்டினார்கள். .
பின்புஅவர் சொன்னார்…சரி உங்கள் மூவருக்கும் வேலை கிடைத்து விட்டது வாழ்த்துக்கள் அப்படியே அமருங்கள்…. மூன்றாவதுஒரு சின்ன சோதனை…. அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் பார்க்கலாம்.. எட்டு டிஜிட்டல் எண்களைஇரண்டு டிஜிட்டல் எண்களால் வகுக்க வேண்டும். . டிவிடென்ட் சரியாக வேண்டும் மீதி இருக்க கூடாது உதாரணத்திற்கு 24024024÷24=இப்படி.. இந்த அட்டையில் இட பக்கம் பத்து கணக்குகள்….. வலதுபக்கம்,பத்துகணக்குகள் உள்ளது….. அதில் ஒன்று தான் டிவிடென்ட்சரியாக இருக்கும்……மற்றவைக்குமீதம் வரும்.. உங்களுக்கு ஐந்து நிமிடம்டைம் தர்றேன்…. கண்ணாலேயே பார்த்து மன கணக்கு போட்டு,எது சரியாக வகுப்படும் என கணித்து என்னிடம் கூறுங்கள்…. கால்குலேட்டரில் போட்டு பார்க்கலாம்…. என்றார்….
அந்த அட்டையில் இடக்கை பக்கம் பத்து… வலக்கை பக்கம் பத்து இருப்பதை மூவரும் பார்த்தார்கள் பெரும்பாலும் வகுபடாமலேயே இருந்தது…. முதல் நபர் வலது கை பக்கம் ஆறாம் கணக்கை தேர்ந்து எடுக்க அது வகுப்படவில்லை….. இரண்டாம் நபர் இடது ஐந்தை சொல்ல… அதுவும் தப்பாக போனது…. கேசவன் துண்டு சீட்டின் மூன்றாம்வரிக்கு விடை கண்டுபிடித்து விட்டான்… அது அந்த அட்டையில் இடது கை பக்கம் கீழே இருந்து மூன்றாவதாக இருந்தது ……. இதையும் சொன்ன கேசவனுக்கே வெற்றி கிடைத்தது. MD ராகவன்மூவருக்கும் பணி உத்தரவு வழங்கி ஆபிஸ் வேன் ஒன்றில்ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.
கேசவன்நான்கு வருடத்தில் அறுபது லட்சம்செலவு செய்து அந்த தெருவிலேயேஒரு மனை வாங்கி தெரு விநாயகரைஅங்கு வைத்து அழகான ஒரு கோவில்கட்டி ஜூப்லி. ஸ்டோன்ஸ்மூலம் கோட்டீஸ்வரன்ஆனான்
கீழ்கண்ட புள்ளிகளில் மெதுவாக 30–60 விநாடிகள் மசாஜ் செய்யுங்கள், அதே சமயம் ஆழ்ந்த சுவாசம் செய்யுங்கள். மனஅமைதி கிடைக்கும் முக்கிய புள்ளிகள்:
நெற்றி புள்ளி:
புருவங்களுக்கு நடுவில் படத்தில் காட்டிய இடத்தில் மசாஜ் செய்யுங்கள்
மனதை அமைதியாக்கி, மன அழுத்தத்தை குறைக்கும்.
கால் புள்ளி:
காலில் படத்தில் காட்டிய இடத்தில் மசாஜ் செய்யுங்கள் .அந்த புள்ளி தேங்கியுள்ள உடல் இறுக்கத்தை குறைக்க உதவும் .
காது மடல்:
காதில் படத்தில் காட்டிய இடத்தில் மசாஜ் செய்யுங்கள் புள்ளி உணர்ச்சி சமநிலையை மேம்படுத்தி, பதட்டத்தை குறைக்கும்
இதயம் :
கைமத்தியில் படத்தில் காட்டிய இடத்தில் மசாஜ் செய்யுங்கள்
மனதை சமநிலைப்படுத்தி, அமைதியை தரும்
எப்படி செய்வது?
1) வலியில்லாமல் மெதுவாக அழுத்துங்கள்
2) ஒரே மாதிரியான சீரான வேகத்தில் செய்யுங்கள்
3)ஆழ்ந்த சுவாசத்துடன் செய்தால் அதிக பயன் கிடைக்கும்.
அமைதியான இடத்தில் அல்லது இரவு படுக்கைக்கு செல்லும் 15 நிமிடத்திற்கு செய்வது சிறப்பு
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 4 ஆம் தேதி திங்கட்கிழமை 20.7.2026.
இன்று காலை 08.29 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று முழுவதும் அஸ்தம்.
இன்று அதிகாலை 12.44 வரை பரிகம். பின்னர் இரவு 11.46 வரை சிவம். பின்பு சித்தம்.
இன்று காலை 08.29 வரை தைத்துூலம். பின்னர் இரவு 08.35 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று காலை 06.00 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.7.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
தமிழ் சினிமாவில் சில நடிகைகள் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மக்கள் மனங்களில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வரிசையில் குறைந்த படங்களில் நடித்து அதிகம் கவனிக்கப்படாமல் போனவர்தான் நடிகை உமா சங்கரி. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக திகழ்ந்த சுமித்ராவின் மகளான இவர், 2000 ஆம் ஆண்டு சீமான் இயக்கிய ‘வீரநடை’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து கலகலப்பு, சொக்கத் தங்கம், விகடன், சூரியன், தென்றல், கோவை பிரதர்ஸ், அடைக்கலம், மணிகண்டா, ரசிகர் மன்றம், பாக்கியலட்சுமி போன்ற பல படங்களில் நடித்தார். இறுதியாக அவர் அஜித் நடித்த ‘வலிமை’ படத்தில் சிறு வயது சுமித்ரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் ‘சொக்கத்தங்கம்’ மற்றும் ‘கோவை பிரதர்ஸ்' படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்ததுள்ள அவர் 2006 ஆம் ஆண்டு திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தினார்.
இந்த நிலையில் அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என எதுவுமே தெரியாமல் இருந்து வந்தது. மேலும் சமூக வலைதளங்களிலும் பெரிய அளவில் அவர் ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்தார்.
தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவில் நூற்றுக்கணக்கான இடங்களில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் வடக்குப் பகுதி முழுவதும் அடர்ந்த புகைப் போர்வைக்குள் மூழ்கியுள்ள நிலையில், கனடா மீது புதிய வர்த்தக வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
"அமெரிக்கா தேவையின்றி அழுக்கான, மாசுபட்ட மற்றும் ஆரோக்கியமற்ற காற்றால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், கனடாவின் "திட்டமிட்ட அலட்சியம்" காரணமாக இந்த புதிய வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், காடுகள் மற்றும் புதர்களை முறையாகப் பராமரிக்காதது குறித்து விளக்கம் கேட்க கனடா பிரதமர் மார்க் கார்னியை தொடர்பு கொள்ளவிருப்பதாகவும் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
கனடிய காட்டுத்தீ தகவல் அமைப்பின்படி, கனடா முழுவதும் தற்போது 888 இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து வருகிறது. இதில் பெரும்பாலானவை கட்டுப்பாட்டை மீறி எரிகின்றன. ஒண்டாரியோவில் மட்டும் 190-க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.
இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 30 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் அழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறை கூறுவதை விடுத்து காட்டுத்தீயை அணைக்க ஆதரவையும் உதவிகளையும் அனுப்புங்கள்; அமெரிக்காவில் கலிபோர்னியாவில் தீ விபத்து ஏற்பட்ட போதும், வட கரோலினாவில் சூறாவளி தாக்கிய போதும் கனடா இதே போன்ற உதவிகளைச் செய்துள்ளது" என ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவின் லாரன்ஷியன்ஸ் பகுதியில் அமைந்துள்ள சாண்டே-லூசி-டெஸ்-லாரன்ஷியட்ஸ் மாகாணத்தின் லான்டியர் நகராட்சியில் வெள்ளிக்கிழமை மதியம் நிகழ்ந்த கொடூரமான நேருக்கு நேர் வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
க்ளூட்டியர் பவுலவர்டு மற்றும் செமின் டு லாக் டுஃப்ரெஸ்னே சாலைகள் சந்திக்கும் பகுதியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம், தனக்கு முன்னால் வலதுபுறமாக திரும்ப முயன்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக, இடதுபுறமாக முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக, எதிரே தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது அது நேருக்கு நேர் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில், முந்திச் செல்ல முயன்ற வாகனத்தால் மோதப்பட்ட (எதிரே வந்த) காரில் பயணம் செய்த இரு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகிய மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தவறான முறையில் முந்திச் செல்ல முயன்ற காரின் ஓட்டுநருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் அவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தை அடுத்து, செமின் டி லா மாண்டாக்னே நோயர் பகுதியில் போக்குவரத்து முழுமையாக மூடப்பட்டு, போக்குவரத்து மற்றும் நிலையான நடமாட்டத்திற்கான அமைச்சகத்தால் மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கூடும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
ரிஷபம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் மருத்துவச் செலவு குறையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்பால் சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பீர். வியாபாரம் சிறக்கும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும்.
கடகம்: முகப் பொலிவுடன் காணப்படுவீர். முடியாமல் போன காரியங்களை முடிப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் சந்தோஷம் நிலைக்கும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரம் லாபம் தரும்.
சிம்மம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வெளிவட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சிப்பீர். புது வழி கிட்டும். வியாபாரரீதியான வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
கன்னி: திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் திணருவீர்கள். உடல்நலக் குறைவு, மனச்சோர்வு வரும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர். பிள்ளைகளிடமிருந்த மனக்கசப்பு விலகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.
விருச்சிகம்: மறைமுக போட்டிகளுக்கு பதிலடி தருவீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். அலுவலகரீதியான பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
தனுசு: பிள்ளைகளின் விருப்பங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. தள்ளிப்போய் கொண்டிருந்த சுபகாரியம் கைகூடிவரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வீடு வந்து சேரும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கும்பம்: குடும்பத்தினரால் விரயச் செலவுகள் இருக்கும். நண்பர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் முக்கிய முடிவு எடுப்பதில் அவசரம் காட்டாதீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.7.2026
இன்று காலை 08.49 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
இன்று இரவு 11.25 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.
இன்று அதிகாலை 02.05 வரை வரீயான். பின்னர் பரிகம்.
இன்று காலை 08.49 வரை பாலவம். பின்னர் இரவு 08.39 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
இன்று காலை 06.00 வரை மரணயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 08.15 முதல் 09.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை: 03.15 முதல் 04.15 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
நெய்தேங்காய் என்றால் என்ன?
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், விரதம் இருந்து “இருமுடி கட்டு” எடுத்துச் செல்கிறார்கள். அந்த இருமுடியில் மிகவும் முக்கியமான பகுதி “நெய்தேங்காய்” ஆகும்.
ஒரு முழு தேங்காயின் கண் பகுதியில் சிறிய துளை செய்து அதன் உள்ளே இருக்கும் தண்ணீரை அகற்றி, அதற்குப் பதிலாக தூய பசு நெய்யை நிரப்பி, பின்னர் அந்த துளையை மூடி இருமுடியில் வைத்து எடுத்துச் செல்வார்கள். இந்த நெய்தேங்காய், ஐயப்ப சுவாமிக்கு அர்ப்பணிக்கப்படும் மிகப் புனிதமான காணிக்கையாகக் கருதப்படுகிறது.
இதன் பின்னால் உள்ள ஆன்மீக அர்த்தம்
சபரிமலை மரபில் தேங்காய் மனித உடலை குறிக்கிறது என்று நம்பப்படுகிறது.
* தேங்காயின் வெளிப்புற ஓடு – மனிதனின் உடல், அகந்தை, ஆசைகள்
* உள்ளிருக்கும் நெய் – ஆன்மா அல்லது தூய பக்தி
* தேங்காய் உடைதல் – அகந்தை உடைதல்
* நெய்யாபிஷேகம் – பக்தன் தன் உயிரையும் அன்பையும் இறைவனிடம் சமர்ப்பிப்பது
அதாவது, “என் அகந்தையை நீக்கி, என் உள்ளம் தூய்மையடைந்து, இறைவனோடு ஒன்றாக வேண்டும்” என்ற அடையாளமாகவே நெய்தேங்காய் காணிக்கை பார்க்கப்படுகிறது.
ஏன் நெய்யை தேங்காயில் நிரப்புகிறார்கள்?
இதற்கான பாரம்பரிய விளக்கம் மிகவும் ஆழமானது.
நெய் (கிருதம்) என்பது சுத்தமானது, பரிசுத்தமானது, தீயில் கரையாத தூய அம்சம் எனக் கருதப்படுகிறது. பக்தன் 41 நாள் விரதம் இருந்து மனம், உடல், உணவு, சிந்தனை ஆகியவற்றை கட்டுப்படுத்தி அந்த தூய்மையை அடைகிறார். அந்த பக்தியின் வடிவமாக நெய் கருதப்படுகிறது.
அந்த நெய், சுவாமியின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும் போது, பக்தனின் பாவங்கள் கரைகின்றன என்றும், மனம் பரிசுத்தமடைகிறது என்றும் நம்பிக்கை உள்ளது.
நெய்யாபிஷேகம் செய்வது எப்படி?
சந்நிதானம் சென்ற பக்தர்கள், 18 புனித படிகளை ஏறி தரிசனம் செய்த பின், நெய்தேங்காயை உடைத்து அதிலுள்ள நெய்யை கோவிலில் ஒப்படைப்பார்கள்.
அந்த நெய், ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் மீது நெய்யாபிஷேகமாக அர்ப்பணிக்கப்படுகிறது. அபிஷேகத்திற்கு பிறகு சிறிதளவு பிரசாத நெய் பக்தர்களுக்கும் வழங்கப்படும்.
தேங்காய் ஏன் பின்னர் உடைக்கப்படுகிறது?
நெய் எடுக்கப்பட்ட பிறகு காலியான தேங்காய் “ஆழி” அல்லது நியமிக்கப்பட்ட இடத்தில் உடைக்கப்படுகிறது.
இதன் அர்த்தம்:
“என் அகந்தை உடைந்தது; நான் இறைவனிடம் சரணடைந்தேன்.”
என்ற ஆன்மிக சமர்ப்பண உணர்வாக பார்க்கப்படுகிறது.
ஒரு பழமையான நம்பிக்கை கதை
பழைய காலங்களில் காட்டுப்பாதை வழியாக சபரிமலை சென்ற பக்தர்கள், தங்களது உணவுப் பொருட்களில் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் ஒன்றாக நெய்யை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அது ஐயப்ப வழிபாட்டில் புனித அர்ப்பணிப்பாக மாறியதாக ஒரு மரபுக் கருத்தும் உண்டு.
மற்றொரு ஆன்மிக விளக்கத்தில், பக்தன் தன் “ஜீவாத்மாவை” (நெய்) “பரமாத்மாவான ஐயப்பனுடன்” ஒன்றிணைக்கிறார் என்று கூறப்படுகிறது.
நெய்தேங்காய் காணிக்கையின் ஆன்மிகப் பாடம்
நெய்தேங்காய் காணிக்கை பக்தருக்கு சொல்லும் முக்கியமான செய்தி:
“அகந்தையை உடை; மனதை சுத்தப்படுத்து; பக்தியுடன் சரணடை”
அதனால் தான் சபரிமலைக்கு செல்லும் ஒவ்வொரு ஐயப்ப பக்தருக்கும் நெய்தேங்காய் என்பது ஒரு சாதாரண காணிக்கை அல்ல — அது வாழ்க்கை தத்துவத்தையும் சரணாகதியையும் நினைவூட்டும் ஆன்மிக அடையாளமாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரிய நரமுக விநாயகர் திருத்தலம் – செதலபதி முக்தீஸ்வரர் ஆலயத்தின் ஆச்சரியமான வரலாறு
விநாயகர் என்றாலே நம் மனதில் தோன்றுவது…
யானை முகம்…
உடைந்த தந்தம்…
பெரிய காதுகள்…
வலம்புரி தும்பிக்கை…
மோதகம்…
இவ்வாறான தெய்வீக திருக்கோலம்தான்.
ஆனால்…
மனித முகத்துடன் அருள்பாலிக்கும் விநாயகரை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
அப்படிப்பட்ட அரிய தரிசனம் கிடைக்கும் திருத்தலம் தமிழகத்திலேயே உள்ளது.
அந்தப் புனிதத் தலம் முக்தீஸ்வரர் திருக்கோயில்.
இங்கு அருள்பாலிக்கும் நரமுக விநாயகர், இந்தியாவில் மிகவும் அபூர்வமான விநாயகர் திருவுருவங்களில் ஒருவராக பக்தர்களால் போற்றப்படுகிறார்.
இந்தத் திருத்தலத்தின் வரலாறும், புராணமும், ஆன்மிகச் சிறப்புகளும் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
செதலபதி – மறைந்திருக்கும் அரிய திருத்தலம்
தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்தில், கூத்தனூர் அருகே அமைந்துள்ள சிறிய கிராமம்தான் செதலபதி.
அங்கே அமைந்துள்ள முக்தீஸ்வரர் திருக்கோயில், சைவ சமயத்தில் முக்கியமான பழமையான ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த ஆலயம் ஆரம்பகால சோழர் காலத்தைச் சேர்ந்த தொன்மையான ஆலயமாக பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சில மரபுகளில் இது 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்பட்டாலும், துல்லியமான காலம் குறித்து ஆய்வாளர்களிடையே வேறுபட்ட கருத்துகள் உள்ளன.
நரமுக விநாயகர் – ஏன் இவ்வளவு சிறப்பு?
இந்த ஆலயத்தின் மிகப்பெரிய சிறப்பு,
இங்கு விநாயகர் யானை முகத்துடன் அல்ல…
மனித முகத்துடன் அருள்பாலிக்கிறார்.
அதனால் இவரை,
நரமுக விநாயகர்
என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.
இந்த அரிய திருக்கோலம், விநாயகரின் ஆரம்பகால புராண நிலையை நினைவூட்டுவதாக உள்ளூர் மரபு கருதுகிறது.
திருவுருவத்தின் ஆன்மிக அர்த்தங்கள்
கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நரமுக விநாயகர், மிக எளிமையானதாயினும் ஆழமான ஆன்மிகச் சின்னங்களைக் கொண்டுள்ளார்.
அவரது கரங்களில் காணப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தத்துவம் உள்ளது.
🪓 கோடரி
கையில் இருக்கும் கோடரி,
வாழ்க்கையில் உள்ள தடைகள்,
அறியாமை,
அகந்தை,
தீய பழக்கங்கள்
ஆகியவற்றை வெட்டித் தள்ளும் இறையருளைக் குறிக்கிறது.
🍘 மோதகம்
மோதகம்,
ஞானத்தின் இனிமை,
வாழ்க்கையின் நிறைவு,
உள்ளார்ந்த மகிழ்ச்சி
ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
🪢 பாசக் கயிறு
கையில் காணப்படும் கயிறு (பாசம்),
இறைவன் பக்தர்களை அன்பால் இணைத்துக் கொள்வதையும்,
வழிதவறிச் செல்லும் மனதை தர்மப் பாதைக்கு இழுத்து வருவதையும் குறிக்கிறது.
விநாயகரின் மனித முகம் – புராண விளக்கம்
இந்த திருக்கோலத்துடன் தொடர்புடைய புராணக் கதை அனைவருக்கும் தெரிந்ததே.
பார்வதி தேவி தமது திருமேனியில் இருந்த மஞ்சள் (சில புராணங்களில் களிமண் அல்லது சந்தனக் கலவை என்றும் கூறப்படுகிறது) கொண்டு ஒரு சிறுவனை உருவாக்கி உயிரூட்டினார்.
அவரை வாசலில் காவலாக நிற்கச் சொல்லிவிட்டு நீராடச் சென்றார்.
அந்த நேரத்தில்,
சிவபெருமான் திரும்பி வந்தார்.
அவரை உள்ளே செல்ல அந்தச் சிறுவன் அனுமதிக்கவில்லை.
இதனால் ஏற்பட்ட மோதலில்,
சிவபெருமான் அந்தச் சிறுவனின் தலையை வெட்டினார்.
பின்னர் பார்வதி தேவியின் வேண்டுகோளுக்கிணங்க,
வடக்குத் திசையில் முதலில் கிடைத்த யானையின் தலையை கொண்டு வந்து பொருத்தி,
அவருக்கு புதிய உயிர் அளித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அதன் பின்னர்,
அனைத்து தெய்வங்களும் சேர்ந்து,
எந்த வழிபாடும் முதலில் விநாயகரை வணங்கிய பிறகே தொடங்க வேண்டும் என்ற வரத்தை வழங்கியதாக புராண மரபு கூறுகிறது.
ஆதி கணேசர் பற்றிய மரபு
சில உள்ளூர் மரபுகளிலும், வடஇந்திய தலபுராணங்களிலும்,
விநாயகரின் முதற்கால மனிதத் தலை பாதாள புவனேஸ்வர் குகை பகுதியில் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அங்குள்ள விநாயகர் ஆதி கணேசர் என்று அழைக்கப்படுகிறார்.
குறிப்பு: இது குறிப்பிட்ட தலபுராண மரபில் சொல்லப்படும் நம்பிக்கை. அனைத்து புராண நூல்களிலும் இந்த விவரம் ஒரே மாதிரியாக இடம்பெறுவதில்லை.
பித்ரு தோஷ நிவர்த்திக்குப் புகழ்பெற்ற திருத்தலம்
இந்த ஆலயம்,
திலதர்ப்பணபுரி
என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
"திலம்" என்றால் எள்.
"தர்ப்பணம்" என்றால் முன்னோர்களுக்குச் செய்யப்படும் சடங்கு.
முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்வதற்கும்,
பித்ரு தொடர்பான வழிபாடுகளுக்கும்,
இந்தத் திருத்தலம் மிகவும் சிறப்புடையதாக உள்ளூர் மரபு போற்றுகிறது.
பல பக்தர்கள்,
அமாவாசை நாட்களில்,
முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்து,
பின்னர் நரமுக விநாயகரை தரிசிக்கின்றனர்.
முக்தி க்ஷேத்திரம்
இந்தப் புனிதத் திருத்தலம்,
முக்தி க்ஷேத்திரம்
என்றும் அழைக்கப்படுகிறது.
பல பக்தர்கள்,
இந்தத் தலத்தை,
காசி விஸ்வநாதர் கோவில்,
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்
போன்ற முன்னோர் வழிபாட்டிற்கான முக்கிய தலங்களுடன் இணைத்து மதிக்கின்றனர்.
"அனைவராலும் வர முடியாத தலம்" – ஒரு உள்ளூர் நம்பிக்கை
இந்தத் திருத்தலத்தைப் பற்றி பக்தர்கள் மத்தியில் ஒரு பழமையான நம்பிக்கை உள்ளது.
அதாவது,
மிகுந்த பாவச் சுமையுடன் இருப்பவர்களுக்கு,
இந்தத் தலத்திற்கு வர நினைத்தாலும் பல தடைகள் ஏற்படும் என்பர்.
அதே நேரத்தில்,
உண்மையான மனமாற்றத்துடன் இறைவனை நாடுபவர்களுக்கு,
நிச்சயமாக தரிசன வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
குறிப்பு: இது உள்ளூர் பக்தி மரபில் நிலவும் நம்பிக்கையாகும். இதற்கு வரலாற்று அல்லது அறிவியல் ஆதாரம் இல்லை.
இந்தத் திருத்தலம் நமக்குக் கற்பிக்கும் வாழ்க்கைப் பாடம்
நரமுக விநாயகர் நமக்குச் சொல்லும் மிகப்பெரிய உண்மை…
வெளிப்புற உருவம் மாறலாம்.
ஆனால்,
இறையருள் மாறாது.
மனிதனின் தோற்றம் அல்ல…
அவனுடைய குணம்தான் அவனை உயர்வாக மாற்றுகிறது.
அதனால்தான் விநாயகர்,
ஞானத்தின் முதல் வடிவமாக என்றும் போற்றப்படுகிறார்.
தரிசனத்திற்கு செல்லும் முன் தெரிந்திருக்க வேண்டியவை
📍 மாநிலம்: தமிழ்நாடு
📍 மாவட்டம்: திருவாரூர்
📍 அருகிலுள்ள ஊர்: கூத்தனூர்
📍 திருத்தலம்: முக்தீஸ்வரர் திருக்கோயில்
📍 சிறப்பு: நரமுக விநாயகர், பித்ரு தர்ப்பண வழிபாடு, முக்தி க்ஷேத்திரம்.
முடிவாக…
மனித முகத்துடன் அருள்பாலிக்கும் நரமுக விநாயகர்…
பழமையான முக்தீஸ்வரர் ஆலயம்…
முன்னோர் வழிபாட்டிற்கான புனிதத் தலம்…
அமைதியான ஆன்மிகச் சூழல்…
இவை அனைத்தும் இணைந்து செதலபதியை தமிழகத்தின் மிகவும் அரிய விநாயகர் திருத்தலங்களில் ஒன்றாக உயர்த்துகின்றன.
ஒருமுறையாவது இந்தப் புனிதத் தலத்திற்குச் சென்று நரமுக விநாயகரை தரிசித்து, அவரின் அருளைப் பெற வேண்டும் என்று பக்தர்கள் விரும்புவது ஆச்சரியமல்ல.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
ரிஷபம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் லாபம் வரும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்கவும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர், பழைய நண்பர்கள் உதவி தேடி வருவார்கள். தாயாருக்கு இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் புது சரக்குகள் இறங்கும்.
கடகம்: தந்தைவழி உறவினருடன் இருந்த மனஸ்தாபம் விலகும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர். அலுவலகத்தில் உங்கள் அருமை புரியும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்.
சிம்மம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு வரக்கூடும். குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
கன்னி: சமயோஜிதமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். எதிர்பார்த்த கடனுதவி கிட்டும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. மனைவி, தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
விருச்சிகம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள், பழைய நண்பர்கள் உங்கள் உதவி நாடி வருவர். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர். அலுவலகத்தில் உங்களின் பணி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரர் கிடைப்பார்.
தனுசு: உங்களின் ஆளுமைத் திறன் கூடும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். தாயார், மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மகரம்: எதிர்பாராத சந்திப்பு நிகழும். பால்ய நண்பர்கள் உதவுவர். உடன்பிறந்தோர் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த புது முயற்சிகள் எடுப்பீர்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். சக ஊழியர்கள் மதிப்பர்.
கும்பம்: சகோதர வகையில் செலவு, அலைச்சல் வரும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் உங்களுக்கு பிடித்தமான துறைக்கு மாற்றப்படுவீர்கள்.
மீனம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் சுற்றியிருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் வளைந்து கொடுத்து போவார்கள்.





