- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கழிப்பறைகள் திறந்திருக்கும்.
இந்த கழிப்பறைகள் இருக்கும் இடத்தை கண்டறிய பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல வசதிகள் இருந்தாலும், இந்த கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஒரு முக்கியமான விதி உள்ளது. அதாவது, கழிவறைக்கு உள்ளே சென்றுவிட்டால் 10 நிமிடத்திற்குள் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும்.
கழிவறையை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து கவுண்ட் டவுன் ஓடத் தொடங்கிவிடும். 5 நிமிடங்கள் ஆனவுடன் ஒரு ஆடியோ எச்சரிக்கை வரும். தொடர்ந்து 8-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு எச்சரிக்கை வரும்.
இதைத் தொடர்ந்து 10-வது நிமிடத்தில் கடைசியாக ஒரு எச்சரிக்கை ஒலிக்கும். அதன் பிறகு சில வினாடிகளில் கழிப்பறையின் கதவு தானாக திறந்துவிடும்.
இத்தகைய நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த கழிப்பறையை நியூயார்க் நகரில் நிறுவுவது தொடர்பான அறிவிப்பை நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி வெளியிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கழிப்பறைகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம். கழிப்பறை என்பது செல்போனில் ஸ்கோரல் செய்து கொண்டிருக்கும் இடமாக இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
இந்த நவீன கழிப்பறை திட்டத்திற்காக நியூயார்க் நகர நிர்வாகம் சுமார் 4 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.38 கோடி) செலவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
இத்தகைய கழிப்பறைகளை நிறுவுவதற்கு முன்னதாக, இது குறித்து ஆய்வுகளும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது சராசரியாக ஒரு நபர் மூன்றரை நிமிடங்கள் கழிப்பறையை பயன்படுத்துகிறார் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், எனவே 10 நிமிடங்கள் என்பது பெரும்பாலான நபர்களுக்கு போதுமான நேரமாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட்-டைட் பகுதியில் நடைபெற்று வரும் இசை நிகழ்வில் சனிக்கிழமை அதிகாலை வேளையில் மக்கள் கூட்டத்திற்குள் வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிகாலை 4:30 மணியளவில் புனித ஜோசப் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த ஆறு பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 18 வயதுடைய இரண்டு பெண்களும், 17 முதல் 21 வயதுடைய நான்கு ஆண்களும் அடங்குவர். அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து வாகனத்தைச் செலுத்திய 20 வயதுடைய நபர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், சுமார் ஒரு மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு கியுபெக் நகரில் வைத்து பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், ஓட்டுநர் மது அருந்தியிருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டுள்ள விழா ஏற்பாட்டாளர்கள், திட்டமிட்டபடி திருவிழா நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு உச்சகட்ட முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு கியுபெக் மாகாண முதலமைச்சர் கிறிஸ்டின் பிரேஷெட் நேரில் வருகை தந்து நிலைமையைப் பார்வையிட்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாணப் பாதுகாப்பு அமைச்சர் இயன் லஃப்ரெனியர் உட்படப் பல அரசியல் தலைவர்களும் இச்சம்பவத்திற்கு தங்களது அனுதாபங்களைப் பதிவு செய்துள்ளதுடன், உடனடியாக செயல்பட்ட பொலிஸார் மற்றும் முதலுதவி பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம் : புது திட்டங்கள் தீட்டுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். தாயாரின் மருத்துவச் செலவு குறையும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பங்குதாரர்கள் ஆதரிப்பர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
ரிஷபம் : தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம் : தாய்வழி உறவினர்களால் மனக்கசப்பு வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்கவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம். பங்குதாரரை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
கடகம் : பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பேசி தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
சிம்மம் : வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் நீங்கும். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்.
கன்னி : சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். உறவினர்களுக்காக மற்றவர் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகள் வந்திறங்கும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டி வரும்.
துலாம் : குற்றம் குறை கூறியவர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். வீட்டில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மை தரும். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
விருச்சிகம் : மனைவிவழியில் பண உதவி கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர். வாகனப் பழுது நீங்கும். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
தனுசு : திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் இருந்த இழுபறி நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் தொந்தரவு தருவார்கள். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
மகரம் : தள்ளிப் போய் கொண்டிருந்த சில பணிகளை முடிப்பீர். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
கும்பம் : தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பிரபலங்களை சந்திப்பீர்கள்.
மீனம் : குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். தந்தை வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.
ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 20.9.2026.
இன்று மாலை 05.56 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று அதிகாலை 02.55 வரை மூலம். பின்னர் பூராடம்.
இன்று மாலை 05.05 வரை சௌபாக்கியம். பின்னர் ஷோபனம்.
இன்று அதிகாலை 05.27 வரை பாலவம். பின்னர் மாலை 05.56 வரை கௌலவம். பிறகு தைத்துூலம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.
ரிஷபம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. சொந்த ஊர் விசேஷங்களில் முதல் மரியாதை கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர் களை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் அலைச்சல் இருக்கும்.
மிதுனம்: பிரபலங்கள் சிலரை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் வர வாய்ப்பு உண்டு. யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும். வியாபாரம் சிறக்கும். வேலையாட்கள் உதவிகரமாக நடப்பார்கள்.
கடகம்: தடைபட்டுக் கொண்டிருந்த வேலைகள் இன்று முடிவுக்கு வரும். சகோதரர்களால் பயனடைவீர். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். அலுவலக ரீதியாக பயணம் செய்ய வேண்டி வரும். மேலதிகாரி ஆதரிப்பார்.
சிம்மம்: தட்டு தடுமாறிக் கொண்டிருந்த நிலை மாறி தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். தாய்வழியில் ஆதரவு உண்டு. பூர்வீக வீடு, மனை, விவசாய நிலத்தை விற்க முயற்சிப்பீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொண்டு முக்கிய அதிகாரிகளை சந்திப்பீர்கள்.
கன்னி: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர் கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
துலாம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு உண்டு.
விருச்சிகம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் வீடு தேடி வருவர். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
தனுசு: கணவன் மனைவிக்குள் விட்டுக்குக் கொடுத்து போகவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பூர்வீக வீடு விற்பனையாகும். ஊர் விசேஷங்களுக்கு தலைமை தாங்குவீர். அலுவலகத்தில் கவனம் தேவை. வியாபாரம் சூடு பிடிக்கும். போட்டிகள் அதிகரிக்கும்.
மகரம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். வியாபாரத்தில் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். மேலதிகாரி பாராட்டுவார்.
கும்பம்: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் ஏற்பாடாகும். கையில் பணம் புரளும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் போட்டிகளை தகர்ப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு.
மீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பணப்புழக்கம் கூடும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 2 ஆம் தேதி சனிக்கிழமை 19.9.2026.
இன்று மாலை 03.58 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று அதிகாலை 12.15 வரை கேட்டை. பின்னர் மூலம்.
இன்று மாலை 04.33 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.
இன்று அதிகாலை 12.56 வரை பத்திரை. பின்னர் மாலை 03.58 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று அதிகாலை 12.15 வரை மரண யோகம். பின்னர் காலை 06.02 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
என்னடி செஞ்சு வச்சி இருக்கே நைட் சாப்பிடுவதற்கு. ….
நாலு சப்பாத்தி மட்டும் இருக்கு போய் சாப்பிடுங்க …..
வேற தொ ட்டு கொள்ள என்ன செஞ்ச……
ஒன்னும்இல்ல…வெறும் சப்பாத்திதான்……
.உருளைக்கிழங்கு மசாலா…. செய்யலாமே ……
அதுவெல்லாம் இல்லே…..
பழைய குழம்பு…எதுவும் இல்லையா…..
இல்லை…இல்லை……
ஏன் கத்தரே… முந்தா நாள் வைச்சபழைய மீன் குழம்பு இருக்குதா……. பிரிட்ஜ்லே பாருடி……
அதுவும் இல்ல…பேசாமே போங்க……
வேலைக்கு போன மனுஷன் ராத்திரி வெறும் சப்பாத்தியை யா….தின்னுட்டு படுப்பான்…. என்னடி வேலை செய்ற….ரசம் இருந்தா ஊத்து….,.
ஆமா…..நீங்க கொடுக்கிற இருபதாயிரம் ரூபாய்ல எல்லாம் வந்துருமா …?வாடகை,சாப்பாடு செலவு.. ..,,காய்கறிகள்.. மளிகை சாமான்கள்… எல்லாம் வாங்கணும் இந்த காலத்தில் போதுமா….?சம்பளத்தை ஏற்றி கொடுக்கிறது…
அடிப்பாவி நான் மட்டும் சும்மாவா இருக்கறேன் பசங்க ஸ்கூல் பீஸ்…காலேஜ்பீஸ் டிரஸ்…. கேஸ்.. அது இதுன்னு….எல்லாம் செய்ய வேண்டாம்….போடிஎதுவும் வேணாம்…. சும்மாவே படுத்துக் கொள்கிறேன்……
சரி சரி… உள்ளே போங்க, கால் கிலோ மட்டன் வாங்கி குருமாசெஞ்சுவெச்சிருக்கேன்….போய் நிம்மதியா சாப்பிடுங்க ஓகேவா……
எப்படிடி மனசு வந்தது உன்ன போல பொண்டாட்டி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்டி ரொம்ப தேங்க்ஸ்……
நான்மட்டும்என்னவாம்..உங்க பிறந்தநாள் கூட உங்களுக்கு ஞாபகம் இல்லாம,வேலைக்கு போயிட்டு வர புருஷனுக்கு இது கூட செய்யலைன்னா நான் ஒரு நல்ல மனைவியே இல்லைங்க…. கை கால் கழுவிட்டு வந்து நிம்மதியா போய் சாப்பிடுங்க சார்….
ரொம்ப ராசியான கல்லு சார் ! எத்தனை பேரிடம் போனாலும் என்னிடம் சரியாக திரும்பி வந்து விடும் !
கன்னம் டொக்கு விழுந்த ராஜு சேவிங் செய்துகொள்ள பார்பர் ஷாப் போனான்.
குழி விழுந்த கன்னத்துக்குள் சரியாக சேவிங் பிளேடு போட முடியாததால் பார்பர் ஒரு கூழாங்கல்லை குடுத்து அவன் கடைவாயில் வைத்துக்கொள்ள சொன்னார். கூழாங்கல் அவன் வாயிக்குள் அடைத்து அவன் கன்னம் குழியில்லாமல் இருந்ததால் வசதியாக சேவிங் செய்து முடித்தார்.
ஷேவிங் முடிந்துவிட்டு இருந்த நிலையில் அவன் தவறுதலாக அந்த கூழாங்கல்லை விழுங்கிவிட்டான்.
பார்பர் சொன்னார் “ஒன்னும் கவலை படாதீங்க. ரெண்டு நாளுக்குல்ல வெளியே வந்துடும். எடுத்து சுத்தம் செய்து என்கிட்ட வந்து குடுத்துடலாம். இதுக்கு முன்ன இந்த கூழாங்கல்லை விலுங்குனவங்க எல்லாம் அப்படிதான் செஞ்சாங்க”
- பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் வசதிகள்: நாளைய நாளின் நிச்சயமற்ற தன்மையைப் போக்க, நம் குடும்பத்திற்குத் தேவையான வசதிகளைச் சேர்த்துவிட வேண்டும் என்ற பதற்றம் நம்மைத் தொடர்ந்து ஓடச் செய்கிறது. அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடைந்த பிறகும், 'மேலும் பல வசதிகள் வேண்டும்' என்ற ஆசைக்கும் முடிவே இருப்பதில்லை.
- சமூக அந்தஸ்து மற்றும் ஒப்புதல்: நாம் யார் என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கும் இந்தச் சமூகத்தில், நம்மை ஒரு 'வெற்றிகரமான மனிதராக' காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெரிய வீடு, கார்கள், அந்தஸ்து என நம்மைச் சுற்றியிருப்பவர்களின் பார்வையில் உயர்ந்தவர்களாகத் தெரிய வேண்டும் என்ற ஓட்டம் இது.
- காலத்தோடு போட்டி: தொழில்நுட்பமும் உலகமும் கண் சிமிட்டும் நேரத்தில் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த வேகத்திற்குள் நாமும் நம்மைப் பொருத்திக்கொள்ள வேண்டும், பின்தங்கிவிடக் கூடாது என்ற பயம் நம்மை நிம்மதியாக மூச்சுவிடக்கூட விடுவதில்லை.
இந்த ஓட்டத்தின் இறுதி இலக்கு தான் என்ன?
மேலோட்டமாகப் பார்த்தால் இது வெற்றி, செல்வம், மகிழ்ச்சி போன்ற இலக்குகள் போல் தோன்றலாம். ஆனால், ஆழமாக யோசித்தால் இந்த ஓட்டத்தின் இறுதி இலக்கு இரண்டு முரண்பாடான திசைகளில் பயணிக்கிறது:
- தற்காலிக நிம்மதி: "இதை அடைந்துவிட்டால் எனக்கு நிம்மதி கிடைத்துவிடும்" என்ற ஒரு கற்பனையான எல்லையை நோக்கித்தான் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த எல்லையைத் தொட்டவுடன் அடுத்த எல்லை தொடங்கிவிடுகிறது.
- அதிர்ச்சியூட்டும் உண்மை (தனிமை): இந்த ஓட்டத்தின் இறுதி இலக்கு பெரும்பாலும் தனிமைதான். ஒரு காலத்தில் யாருக்காக, யாருடைய எதிர்காலத்திற்காக நாம் ஓடத் தொடங்கினோமோ, பிற்காலத்தில் அவர்களுடன் பேசுவதற்கோ, நேரத்தைச் செலவிடுவதற்கோ நம்மிடம் நேரமோ அல்லது சக்தியோ இருப்பதில்லை. பல வருட உழைப்பிற்குப் பிறகு திரும்பிப் பார்த்தால், கையில் செல்வம் இருக்கலாம; ஆனால் அருகில் பகிர்ந்துகொள்ள மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.
பணமும் வசதிகளும் முக்கியம்தான்; ஆனால், அவற்றைத் தேடும் பயணத்தில் வாழ்வின் உண்மையான அழகையும், உறவுகளுடன் பகிரும் சின்னஞ்சிறு சந்தோஷங்களையும் நாம் தொலைத்துவிடுகிறோம்.
இறுதியில், நாம் சேமித்த சொத்துக்களையோ, சாதித்த சாதனைகளையோ விட, நாம் யாரிடம் பாசமாகப் பேசினோம், யாருக்கு ஆறுதலாக இருந்தோம் என்ற தருணங்கள்தான் நம்மோடு மிஞ்சும். இந்த ஓட்டத்தின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, அருகில் இருப்பவர்களுடன் அன்பைப் பகிர்ந்துகொள்ள இன்றே நேரம் ஒதுக்குவதுதான் இந்த வாழ்வின் அர்த்தமாக இருக்க முடியும்.
தாலி கட்டப் போகும் கடைசி நேரத்தில் அந்தக் கல்யாணத்தைத் தடுத்து நிறுத்தினார் அப்துல் கலாம்.
அந்தக் கல்யாணப் பெண்ணின் பெயர் சரஸ்வதி.
"எப்போது நடந்தது இது ?
எதற்காக அந்தக் கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?"
அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.
அப்போது உயர் அதிகாரியாக திருச்சியில் பணி புரிந்து வந்த கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.
"சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.
கலாம் சொன்னார்
அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.
காரணம்
அந்த பெண்ணின் வயது 16.
பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.
மாப்பிள்ளைக்கு வயது 47.
இரண்டாவது கல்யாணம்.
சொந்த மாமன்.
கலாம் தொடர்ந்தார் :
"கட்டாயக் கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம்
அந்தப் பொண்ணு மேல் படிப்பு படிக்கணும்னு ஆசைப்படுது.
அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை..."
"அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியமூர்த்தி.
"பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"
ஊர் பெயரைச் சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.
அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார். ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.
கலாம் சொன்னபடியே அந்தக் கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள். "சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார்."
"நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. அதற்கான ஏற்பாடு பண்றோம்."
சொன்னாள். கவனமாகக்
குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.
"ஓகே, நாங்க புறப்படறோம்.
ஆனா...
அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."
"என்ன சார் ?"
"உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே. அவருக்கு யாரும்மா இந்தத் தகவலைச் சொன்னது ?"
"நான்தான் சார்."
ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.
"எப்படீம்மா ?"
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை.
அந்தக் கூட்டத்திற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.
பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.
Only Four Students..."
கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.
கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்துப் பாராட்டினார் கலாம். "இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."
அந்தக் கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.
எப்படியோ அதைப் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.
இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.
அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.
அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.
காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?
இந்தச் சம்பவம் நடந்து ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்குப் போயிருந்தாராம் கலியமூர்த்தி.
அவர் மேடையில் பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மூச்சு வாங்க மேடைக்கு ஓடி வந்து மைக்கைப் பிடித்தாளாம்.
யார் இந்தப் பெண் ?
எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !
கலங்கிய கண்களோடு மேடையில் நின்ற அந்தப் பெண், குரல் தழுதழுக்கச் சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."
யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்? எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.
"கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.
மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம்.
நான் யார் என்று உங்களுக்குத் தெரிகிறதா ?"
"தெரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.
அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :
"ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள்.
படிக்க வைக்கப்பட்டவள்.
நான்தான் துறையூர் சரஸ்வதி."
இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கிப் போகிறார்.
"உங்களுக்கும் நன்றி.
உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."
சொல்ல வந்ததைச் சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கிப் போகிறாள் அந்தப் பெண்.
ஆச்சரியம்தான்.
அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானியப் பெண் ஜனாதிபதியோடு சகஜமாகப் பேச முடிந்திருக்கிறது.
தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.
ஆம்.
அது ஒரு அழகிய கலாம் காலம்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம் : சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. பேச்சில் தெளிவு பிறக்கும். முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல்பேச்சு கேட்பார்கள். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
ரிஷபம் : மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மை தரும்.
மிதுனம் : வெளிவட்டாரத் தொடர்பால் சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கடகம் : முடியாமல் போன காரியங்களை முடிப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
சிம்மம் : தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் விலகும். பயணங்கள் திருப்தி தரும். வெளிவட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
கன்னி : மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் அனுசரித்துப் போவது நல்லது. பிள்ளைகளுடன் இருந்த மனக்கசப்பு விலகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
துலாம் : பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வெளியூர் பயணங்கள் மனநிம்மதி தரும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்.
விருச்சிகம் : உறவினர்களின் அன்புத் தொல்லை உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார்.
தனுசு : மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சிப்பீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
மகரம் : பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் மருத்துவச் செலவுகள் படிப்படியாக குறையும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
கும்பம் : சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வீடு வந்து சேரும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
மீனம் : தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியம் இப்போது கூடி வரும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 18.9.2026.
இன்று பிற்பகல் 01.54 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று முழுவதும் கேட்டை. நாமயோகம் : இன்று மாலை 03.59 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.
இன்று அதிகாலை 01.01வரை கரசை. பின்னர் பிற்பகல் 01.54 வரை வனிசை. பிறகு பத்திரை.
இன்று காலை 06.02 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஒரு பணக்கார தந்தையும் அவரது மகனும் ஒரு விலையுயர்ந்த வணிக வளாகத்திற்கு ஷாப்பிங் சென்றனர். அவர்கள் காரில் திரும்பி வரும் வழியில், ஒரு ஏழைப் பையன் அவர்களை நெருங்கினான்.
"தயவுசெய்து எனக்கு உதவுங்கள் ஐயா! இன்னும் உடுத்துவதற்கு என்னிடம் சரியான ஆடை இல்லை"
பணக்கார தந்தை அந்த ஏழை பையனை ஒரு பார்வையை வீசி கிழிந்த அவன் ஆடைகளை பார்த்து அவன் மீது இரக்கம் கொண்டார்.
"தம்பி உனக்கு என்ன வயசு?" என்று அவனிடம் கேட்டான்.
"எனக்கு பத்து வயது, ஐயா" என்றான்.
அப்போது பணக்கார தந்தை கூறினார்.
"சரி, என் மகனுக்கும் வயது பத்து, அவனுடைய புது ஆடைகள் உனக்குப் பொருந்தும் என்று நினைக்கிறேன்"
தந்தை தனது ஆடம்பரமான தோற்றமுடைய மகனின் பக்கம் திரும்பினார்.
"ஜெஃப், நாம் புதிதாக வாங்கிய ஆடைகள் சிலவற்றை இந்தப் பையனுக்கு கொடுத்துவிடு நாளை ஷாப்பிங் செய்ய வரலாம்"
சிறுவன் சம்மதிக்க.....
பணக்கார தந்தை அவர்களின் ஷாப்பிங் பையைத் திறந்து சில துணிகளை எடுத்து ஏழை பையனிடம் கொடுத்தார். அவன் முகம் உற்சாகத்தில் பிரகாசித்தது.
அப்போது தந்தை விசாரித்தார்.
"நீ எங்கு வசிக்கிறாய் என்பதை நான் அறியலாமா?"
ஏழைப் பையன் பதில் சொன்னான்.
"நான் பாலத்தின் கீழ், தெருவில் வசிக்கிறேன்"
ஆடைகள் தந்தமைக்காக அவர்களுக்கு நன்றி சொல்ல தந்தையும் அவரது மகனும் விடைபெற்று சென்றனர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, பணக்கார தந்தை தெருவை ஒட்டி, பாலத்தின் கீழ் ஏழை பையனைத் தேடினார். அவனைக் கண்டதும், காருக்கு அழைத்துச் சென்று உடைகள், காலணிகள், பைகள் மற்றும் பொம்மைகள் அடங்கிய பெட்டிகளை அவனிடத்தில் தந்தார்
"அவை என் மகனின் உடைமைகள் ஆனால் அவை அனைத்தையும் இப்போது உனக்குத் தருகிறேன்"
ஏழைப் பையன் ஆச்சரியமடைந்தான், அழுகையை நிறுத்த முடியவில்லை. அவர் கூறினார்.
"ஆனால் உங்கள் மகனுக்குக இவை தேவையில்லையா?"
"இல்லை, ஏனென்றால் அவன் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறான். என் அன்பான பையன் சில வாரங்களுக்கு முன்பு புற்றுநோயால் இறந்துவிட்டான். அவன் புற்றுநோயுடன் மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான், அவன் இறக்கப் போகிறான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், எனவே அவன் வாழ்க்கையின் இறுதி நாட்களில் நுழைவதைப் பார்ப்பது உணர்ச்சி ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. மரணப் படுக்கையில், ஜெஃப் என்னிடம் 'அப்பா நான் போனதும், மாலுக்கு வெளியே நாம் சந்தித்த பையனுக்கு, என் உடைமைகள் அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
கண்களில் கண்ணீருடன் தந்தை ஒரு கணம் நிறுத்தினார், அவர் முடித்தார்.
"நீ ஏழையாக இருக்கலாம், ஆனால் பணத்தால் வாங்க முடியாத உயிரினை நீ பெற்றிருப்பது எவ்வளவு பாக்கியம் என்று உனக்குத் தெரியாது. முடிந்தால் என் மகனுக்கு நூறு உயிர்களை நான் வாங்கி இருப்பேன் , ஆனால் அவனுடைய எல்லாப் போராட்டங்கள் மற்றும் உடல் கஷ்டங்கள் பற்றி உனக்குத் தெரியாது வாழ்க்கை அப்படித்தான் என்றார்.
நாம் அடிக்கடி நம் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறோம், பிறர் போல் வாழ்க்கை நமக்கு இல்லை என்று வேதனைப்படுகின்றோம், பிறரிடம் பொறாமைப்படுவதற்குப் பதிலாக, நமக்கு அமைந்த வாழ்க்கையில் மன நிறைவு அடைய வேண்டும்.
ஒருவர் கைரேகை போல் இன்னொருவருக்கு அமைவதில்லை. தூரத்தில் பிரகாசமாக எரியும் மெழுகுவர்த்தியை அருகில் சென்று பார்த்தால் தான் அது கண்ணீர் விட்டு உருகுவது நமக்குத் தெரியும்.
சுமா வழக்கத்தை விட இரண்டு
மணி நேரம் முன்னதாக எழுந்து, வீட்டு வேலைகளை முடித்து, லட்டு மற்றும்
அவல் மிக்சர் தயாரித்தாள். ![]()
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தன் பிறந்த வீட்டிற்குச் செல்லவிருந்தாள்; மாமியார் மற்றும் கணவரின் சம்மதத்தை எப்படியோ பெற்றிருந்தாள். ![]()
தான் இல்லாத பதினைந்து நாட்களில் சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, ரசம் பொடி, சாம்பார் பொடி, ஊறுகாய் எல்லாம் தயாரித்து வைத்தாள். ![]()
கணவர் அருண் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தார்; துணிகளை அடுக்கிக்கொண்டிருந்தபோது, நாத்தனார் வாணி அங்கு வந்தாள். ![]()
வாணியைப் பார்த்ததும், சுமாவின் மனதில் பயம் அலைமோதியது; தன் பிறந்த வீட்டுப் பயணம் நின்றுவிடுமோ என்ற கவலை எழுந்தது. ![]()
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமா இந்த வீட்டிற்கு வந்தபோது, வாணி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள்; அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டிருந்தாள். ![]()
வாணி சத்தமாகப் பேசுவது, அதிகாரத் தோரணையில் நடந்துகொள்வது, அடம் பிடிப்பது – இவை சுமாவுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தின. ![]()
கணவரோ மாமியாரோ வாணியின் நடத்தையைத் திருத்த முயற்சிக்காததால், சுமா எல்லாவற்றையும் அமைதியாகப் பொறுத்துக்கொண்டாள். ![]()
வாணிக்குத் திருமணமான பிறகும், அவள் தாய் வீட்டிற்கு அடிக்கடி வந்து தங்குவதை வழக்கமாக்கிக் கொண்டாள்; சுமாவின் நிம்மதி பறிபோனது. ![]()
ஒருமுறை சுமா தன் தம்பியின் திருமணத்திற்குச் செல்ல ஆர்வமாக இருந்தபோது, வாணி தந்திரமாகத் தடுத்துவிட்டாள்; சுமா மிகுந்த மனவேதனை அடைந்தாள். ![]()
தான் கிளம்பும் நாளில் வாணி வீட்டிற்கு வந்ததும், "இந்த முறை என்ன சூழ்ச்சி செய்வாளோ?" என்ற கவலை சுமாவுக்கு எழுந்தது. ![]()
உணவுக்குப் பிறகு, மாமியார் அக்கறையுடன், "எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டாயா? அங்கே சென்றதும் தகவல் சொல்" என்று கேட்டார். ![]()
வாணி குறுக்கிட்டு, "அண்ணி, நீங்கள் ஊருக்குப் போவதை என்னிடம் சொல்லவே இல்லையே!" என்று கேட்டாள்; சுமா அமைதியாக விளக்கினாள். ![]()
"என் தம்பிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது; குழந்தையைப் பார்த்துவிட்டு, பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொண்டு திரும்புவேன்" என்று சுமா கூறினாள். ![]()
வாணி தன் தாயைப் பார்த்தாள்; அவரோ, "ஆமாம், நான்தான் அவளிடம் அப்படிச் சொன்னேன்" என்று உறுதிப்படுத்தினார். ![]()
மாமியார் அருணைப் பார்த்து, "நேரம் ஆகிவிட்டது; போய் ஒரு ரிக்ஷா பிடித்து வா" என்று கூறினார். ![]()
வாணி, "நாளைக்கு நாம் மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லலாம் என்று நினைத்துத்தானே வந்தேன்..." என்று சொல்லத் தொடங்கினாள். ![]()
ஆனால் அவள் பேச்சை இடையில் தடுத்த தாய், "உன்னை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல நான் இல்லையா? அருண் இல்லையா? உன் கணவர் இல்லையா?" என்று கேட்டார். ![]()
வாணி அதிருப்தியுடன் அமைதியாக அமர்ந்திருந்தாள்; உண்மையில், மாமியாருக்கு நெருங்கிய தோழி ரமாபாயின் வார்த்தைகள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. ![]()
"முதுமைக் காலத்தில் நமக்கு அடைக்கலம் தரும் மகனையும் மருமகளையும் ஒருபோதும் பகைத்துக்கொள்ளக் கூடாது" என்று ரமாபாய் அறிவுறுத்தியிருந்தார். ![]()
அதனால்தான், சுமாவின் தம்பிக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி வந்தபோது, மாமியார் மனதார ஒப்புக்கொண்டதுடன், பயண ஏற்பாடுகளைச் செய்யுமாறு மகனிடம் கூறினார். ![]()
ஆட்டோ வந்து நின்றதும், அருண் மனைவியின் உடைமைகளை ஏற்றினான்; சுமா மாமியாருக்கும் அருணுக்கும் மரியாதை செலுத்திவிட்டு, வாணியிடமும் சில வார்த்தைகள் பேசினாள். ![]()
வாணிக்கு உள்ளுக்குள் பொறாமை கொதித்தாலும், அதைச் செயற்கையான புன்னகையால் மறைத்து விடைபெற்றாள். ![]()
உள்ளே திரும்பியதும், "பதினைந்து நாட்களுக்கு நீ எப்படிச் சமாளிக்கப் போகிறாய்? ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ஒப்புக்கொண்டுவிட்டாய்!" என்று தாயைச் சாடினாள். ![]()
அப்போது தாய் குரலை உயர்த்தி, "இது என் வீடு; ஒரு முடிவை எடுப்பதற்கு முன் நான் யாரிடமும் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறினார். ![]()
"இதில் உனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை; எல்லாவற்றிலும் தலையிடுவதை நிறுத்து; இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்" என்று மாமியார் கண்டிப்பாகக் கூறினார். ![]()
இந்தக் கண்டிப்பான வார்த்தைகளைக் கேட்டதும் வாணியின் முகம் வாடியது; அவள் மௌனமாகி, தன் அறைக்குச் சென்றுவிட்டாள். ![]()
நீதி: மருமகளை மகளாக நடத்தும்
மாமியாரே ஒரு குடும்பத்தின் உண்மையான செல்வம்!
அப்போது குமரன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பள்ளி விடுமுறை என்பதால் தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தான். விடுமுறையைத் தாத்தாவுடன் கழிப்பது அவனுக்குப் பிடிக்கும்.
குமரனின் குடும்பம் வசதியான குடும்பம் அல்ல. அதுபோலவே அவனுடைய தாத்தாவுக்கும் பெரிய வீடோ, சொத்தோ, சேமிப்போ எதுவும் கிடையாது. தினமும் உழைத்தால்தான் அன்றைய உணவு என்ற வாழ்க்கை.
தாத்தாவின் தொழில் கமர்கட்டு மிட்டாய் செய்வது.
தினமும் வெல்லத்தை வாங்கி வந்து பாகாகக் காய்ச்சுவார். பாகு சரியான பதத்திற்கு வந்ததும், வீட்டுச் சுவரில் அடித்திருந்த ஆணியில் அதை மாட்டி, கம்பி பதம் வரும் வரை நன்றாக இழுப்பார். பின்னர் அதைச் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து, பொட்டுக்கடலை மாவுடன் சேர்த்து கமர்கட்டு மிட்டாய்களாகச் செய்வார்.
அவற்றைச் சிறிய பொட்டலங்களில் அடைத்து, ஊரில் உள்ள கடைகளுக்குக் கொண்டு சென்று விற்பார்.
ஒரு ரூபாய்க்கு இருபது பைசா லாபம்.
அந்தச் சொற்ப லாபத்தில்தான் அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் என்று வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கி, குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
ஒருநாள், தாத்தா வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருந்த ஒரு வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமண அழைப்பிதழைத் தாத்தாவிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.
திருமணத்திற்குத் தாத்தா மட்டும் செல்லத் தயாரானார்.
“தாத்தா... நாமெல்லாம் போகலாமே?” என்று குமரன் கேட்டான்.
“வேண்டாம் குமரா. நான் மட்டும் போயிட்டு வருகிறேன்.”
குமரனுக்குப் புரியவில்லை.
“ஏன் தாத்தா? நாமெல்லாம் போனால் என்ன?”
தாத்தா சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு,
“நான் மட்டும் போயிட்டு வருகிறேன். நீ வீட்டிலேயே இரு,” என்றார்.
தாத்தா திருமணத்திற்குச் சென்று மொய் செய்துவிட்டு, அங்கே உணவருந்திவிட்டு வீடு திரும்பினார்.
அன்று குமரனின் மனத்தில் ஒரே வருத்தம்.
‘நாமெல்லாம் ஏன் திருமணத்திற்குப் போகக்கூடாது?’
திருமண வீட்டில் இட்லி, வடை என்று நல்ல சாப்பாடு இருக்கும். ஆனால் தாத்தா வீட்டில் கிடைப்பதோ பெரும்பாலும் முந்தைய நாள் மிச்சமான பழைய சோறு.
அந்த வயதில் குமரனுக்கு அதுதான் பெரிய கவலையாக இருந்தது.
தாத்தா அவனருகில் வந்து அமர்ந்தார்.
“குமரா...”
“என்ன தாத்தா?”
“நாம் மிகவும் வசதி குறைந்தவர்கள். நம்ம தெருவில் திருமணம் நடக்கிறதால்தான் நம்மையும் அழைக்கிறார்கள். அதற்காக குடும்பத்தோடு எல்லாரும் போய்விடக் கூடாது.”
குமரன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“எல்லாரும் குடும்பத்தோடு போனால், ‘இவர்கள் சாப்பிடுவதற்காகத்தான் வந்திருக்கிறார்கள்’ என்று சிலர் நினைப்பார்கள். நம்முடைய ஏழ்மையைப் பார்த்து பரிகாசம் செய்வார்கள். அதனால்தான் இதுபோன்ற இடங்களுக்கு வீட்டில் இருந்து ஒருவர் மட்டும் போய் மொய் செய்துவிட்டு வர வேண்டும். அப்படிச் சென்றால் அவர்கள் பார்வையில் நமக்கான மரியாதை கொஞ்சமாவது இருக்கும்.”
குமரனுக்கு தாத்தா சொன்னது பாதி புரிந்தது. பாதி புரியவில்லை.
அந்த வயதில் பசியைப் புரிந்துகொள்ள முடிந்தது; வறுமையின் அவமானத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
சாப்பிடும் நேரங்களிலும் தாத்தா அவனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பார்.
“குமரா, சாப்பிடும்போது முதலில் எல்லோருக்கும் உணவு இருக்கிறதா என்று பார்த்துக்கொள். நமக்குப் போட்டுவிட்டார்கள் என்பதற்காக நாம் மட்டும் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டால், பின்னால் சாப்பிட வருபவர்களுக்குப் போதாமல் போய்விடலாம். நம்மைப் போலவே மற்றவர்களுக்கும் பசி இருக்கும்.”
அந்த வார்த்தைகளையும் குமரன் கேட்டுக் கொண்டான்.
விடுமுறை முடிந்தது.
பள்ளிக்குச் செல்ல வேண்டிய நாள் வந்தது.
புதிய சட்டை, கால்சட்டை, பள்ளிக்குத் தேவையான பொருட்கள் என்று தன்னால் முடிந்தவற்றையெல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு, குமரனை அவன் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றார் தாத்தா.
சில நாட்கள் கழிந்தன.
ஒருநாள் குமரனின் வீட்டிற்கும் ஒரு திருமண அழைப்பிதழ் வந்தது.
இந்த முறை குமரனும் அவனுடைய அம்மாவும் திருமணத்திற்குச் சென்றார்கள்.
திருமண வீடு களைகட்டியிருந்தது.
திருமண வீட்டில் விருந்து தொடங்கிவிட்டது.
வாசலில் நின்றபடியே பந்தியைப் பார்த்த குமரனின் கண்கள் விரிந்தன. வாழை இலைகள் வரிசையாக விரிக்கப்பட்டிருந்தன. பெரியவர்கள் ஒருவருக்கொருவர் இடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பரிமாறுபவர்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.
இட்லி... வடை... சாம்பார்... இனிப்பு...
வாசனையே குமரனுக்குப் பசியைத் தூண்டியது.
தாத்தா வீட்டில் சாப்பிட்ட பழைய சோறு அவனுக்கு நினைவுக்கு வந்தது.
‘இன்று நல்ல சாப்பாடு சாப்பிடலாம்!’
அம்மாவைத் திரும்பிப் பார்க்கக்கூட அவனுக்கு பொறுமையில்லை.
“அம்மா, நான் போய் உட்கார்றேன்,” என்று சொல்லிவிட்டு, குழந்தைத்தனமான உற்சாகத்துடன் பந்திக்குள் ஓடினான்.
ஒரு இடத்தில் வாழை இலை முன்பே போடப்பட்டிருந்தது..
அவன் உடனே சென்று அமர்ந்துவிட்டான்.
அவனுடைய முகத்தில் மகிழ்ச்சி.
அவனுக்கு முன்னால் இலை.
சுற்றிலும் பெரியவர்கள்.
அவன் மனதிற்குள் தாத்தா சொன்ன வார்த்தைகள் அப்போது இல்லை.
ஒரு பரிமாறுபவர் அவன் இலையில் தண்ணீர் தெளித்தார்.
குமரன் இன்னும் உற்சாகமானான்.
‘இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பாடு வரும்.’
அவன் கண்கள் வாசலை நோக்கின.
அப்போது—
“தம்பி!”
ஒரு குரல்.
குமரன் திரும்பிப் பார்த்தான்.
அவனருகில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
“எழுந்திரு.”
குமரன் சிரித்தபடி,
“அடுத்த பந்திக்கா?” என்று கேட்டான்.
“ஆமாம்... எழுந்திரு.”
அவன் எழுந்தான்.
ஆனால் நகரவில்லை.
“இங்கதான் உட்காரலாமே?”
அந்த மனிதர் பதில் சொல்லவில்லை.
அவனுடைய தோளில் லேசாகத் தொட்டு,
“தம்பி, எழுந்திரு. அடுத்த பந்தியில் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
இந்த முறை குரலில் வேண்டுகோள் இல்லை.
கட்டளை இருந்தது..
குமரன் மெதுவாக எழுந்தான்.
அவனுடைய கண்கள் சுற்றிலும் ஓடின..
அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்களா?
யாராவது சிரித்தார்களா?
யாராவது ஏதாவது பேசினார்களா?
எதுவும் தெரியவில்லை.
ஆனால் அவனுக்கு மட்டும் எல்லோரும் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது.
அவன் நின்றுகொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் பந்தியில் இருந்த ஒருவரிடம் பரிமாறுபவர்,
“சார், இன்னும் கொஞ்சம் வடை போடட்டுமா?”
என்று கேட்டார்.
அந்த வார்த்தை குமரனின் காதில் விழுந்தது.
வடை...
அவன் தன்னுடைய இலையைப் பார்த்தான்.
இன்னும் எதுவும் பரிமாறப்படவில்லை.
அவன் மீண்டும் உட்காரலாமா என்று ஒரு கணம் யோசித்தான்.
ஆனால் அருகில் நின்றிருந்த மனிதர் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்...
குமரன் தலையைக் குனிந்தான்.
மெதுவாகப் பந்தியிலிருந்து வெளியே வந்தான்.
வாசலருகே சென்று நின்றான்.
அவன் வயிறு பசியால் சத்தமிட்டது.
ஆனால் அந்தச் சத்தத்தைவிட அவன் மனதில் எழுந்த கேள்விதான் பெரிதாக இருந்தது.
‘என்னை மட்டும் ஏன் எழுப்பினார்கள்?’
அவன் மீண்டும் பந்தியைப் பார்த்தான்.
அவனைவிட வயதில் பெரியவர்கள் பலர் அங்கே அமர்ந்திருந்தார்கள்.
சிலர் விலை உயர்ந்த சட்டை அணிந்திருந்தார்கள்.
சிலர் தங்கச் சங்கிலி போட்டிருந்தார்கள்.
சிலர் சிரித்துப் பேசிக்கொண்டே சாப்பிடத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்..
அவர்கள் யாரையும் எழுப்பவில்லை.
தன்னை மட்டும் ஏன்?
குமரன் தனது சட்டையைப் பார்த்தான்.
கால்சட்டையைப் பார்த்தான்..
தாத்தா வாங்கிக் கொடுத்திருந்த அந்தச் சாதாரண உடைதான்.
அந்தக் கணத்தில் அவனுக்கு ஏதோ ஒன்று உள்ளுக்குள் உடைந்தது.
அவனுடைய கண்கள் மீண்டும் பந்தியைத் தேடின.
அங்கே ஒரு குழந்தை வடை எடுத்துக் கொண்டிருந்தது.
குமரன் தன்னையறியாமல் ஒரு அடி முன்னால் நகர்ந்தான்..
அதே நேரத்தில்—
“தம்பி!”
அதே குரல் மீண்டும்.
“நீ வீட்டுக்குப் போ. அம்மா வந்துடுவாங்க.”
அந்த வார்த்தைகள் அவனைத் தடுத்து நிறுத்தின.
குமரன் எதுவும் பேசவில்லை.
தலையை மட்டும் குனிந்துகொண்டான்.
அவன் திரும்பி நடந்தான்.
ஒவ்வொரு அடியும் கனமாக இருந்தது.
வாசலைத் தாண்டும்போது பந்தியில் இருந்து வரும் உணவின் வாசனை இன்னும் அவன் மூக்கைத் துளைத்தது.
அவன் திரும்பிப் பார்க்கவில்லை.
சில அடிகள் சென்றதும் தாத்தாவின் குரல் அவன் நினைவில் திடீரென ஒலித்தது:
“நாம் வசதி குறைந்தவர்கள் குமரா...”
அவன் நடையை நிறுத்தினான்.
மீண்டும் நினைவுக்கு வந்தது:
“குடும்பத்தோடு போனால், சாப்பிடுவதற்காகத்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைப்பார்கள்...”
அந்தக் கணத்தில் தாத்தா ஏன் தன்னை அன்று திருமணத்திற்கு அழைத்துச் செல்லவில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.
ஆனால் அந்தப் புரிதல் அவனுக்கு ஆறுதலைத் தரவில்லை..
அது அவன் சிறுவயது மனத்தில் ஒரு காயத்தை மட்டும் விட்டுச் சென்றது.
அன்று பந்தியில் இருந்து எழுப்பப்பட்ட குமரன்,
பசியோடு மட்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை..
தான் ஏழை என்பதன் அர்த்தத்தையும் முதன்முறையாக உணர்ந்துகொண்டு திரும்பினான்.
அது வெறும் சாப்பாட்டைப் பற்றிய விஷயம் அல்ல.
அது வறுமையின் நடுவிலும் காத்துக்கொள்ள வேண்டிய சுயமரியாதையைப் பற்றியது.
அன்று பந்தியில் இருந்து எழுப்பப்பட்ட அந்தச் சிறுவன், அந்த நாளுக்குப் பிறகு மாறிவிட்டான்.
விருந்து நடக்கும் எந்தத் திருமண வீட்டிற்குச் சென்றாலும், அழைக்காமல் பந்தியில் சென்று அமருவதில்லை.
வயது வளர்ந்தது.
வாழ்க்கை அவனுக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது..
ஆனால் அவன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பாடத்தை அவனுக்குக் கற்றுக் கொடுத்தவர் அந்தக் கமர்கட்டு மிட்டாய் செய்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்த அவனுடைய தாத்தாதான்.
அன்று தாத்தா அவனுக்குக் கற்றுக் கொடுத்தது வறுமையைப் பற்றிய பாடம் அல்ல; வறுமையிலும் மனிதன் இழக்கக் கூடாத மரியாதையைப் பற்றிய பாடம்.
பல ஆண்டுகள் கடந்த பிறகும், திருமணப் பந்தியைப் பார்க்கும்போதெல்லாம் குமரனுக்கு அந்த நாள் நினைவுக்கு வரும்.
அவனை எழுப்பிய அந்தக் குரலும்...
ஓரமாக நின்ற அந்தச் சிறுவனும்...
அவனுக்குப் புரியாமல் இருந்த தாத்தாவின் வார்த்தைகளும்...
எல்லாம் நினைவுக்கு வரும்.
அப்போது அவன் மனதிற்குள் ஒரே ஒரு வார்த்தை மட்டும் ஒலிக்கும்:
“தாத்தா... அன்று நீ சொன்னது எனக்கு அப்போது புரியவில்லை. இன்று புரிகிறது.”
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம் : பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் வரும். கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு வரக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பீர்.
ரிஷபம் : பொது காரியங்களில் ஈடுபடுவீர். சோர்வு நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் இருந்த மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். ஓரளவு லாபம் கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிக்கவும்.
மிதுனம் : இழுபறியாக இருந்த பணிகள் நிறைவு பெறும். தந்தையாருடன் இருந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
கடகம் : வெளிவட்டாத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். பங்குதாரர்களின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தாதீர்.
சிம்மம் : எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்லவரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
கன்னி : குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் பாசமழையில் நனைவீர். வியாபாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்.
துலாம் : திடீரென்று அறிமுகமாகும் சிலரால் ஆதாயம் உண்டு. உறவினர், பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
விருச்சிகம் : மகனின் வேலை, மகளின் திருமணம் என்று அலைச்சல், டென்ஷன் வரலாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அவசரப்பட்டு வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்காதீர். பயணங்கள் அலைச்சல் தரும். அலுவலகத்தில் ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
தனுசு : வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டி வரும்.
மகரம் : தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர். பணவரவு திருப்தி தரும். முன்கோபத்தை தவிர்ப்பீர். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கும்பம் : தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தம்பதிக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். பணியாட்கள் அன்பாக இருப்பர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரி ஆதரவு தருவார்.
மீனம் : விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் மறையும். பழைய ஃபேன், பிரிட்ஜை மாற்றுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 31 ஆம் தேதி வியாழக்கிழமை 17.9.2026.
இன்று பிற்பகல் 12.06 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று இரவு 09.51 வரை அனுஷம். பின்னர் கேட்டை.
இன்று மாலை 03.31 வரை விஷ்கம்பம். பின்னர் பிரீதி.
இன்று பிற்பகல் 12.06 வரை தைத்தூலம். பின்னர் கரசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

































