·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 1088
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை.

"ஏண்டா பிறந்தோம்" என்று அடிக்கடி புலம்புவாள். அந்தக் காலத்தில், காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள். அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, "ஐயா.. நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?'' என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள்.

அவளுடைய அப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து விட்டனர். "என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கியே.. மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?'' என்று கோபித்துக் கொண்டனர்.

உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, "அம்மா.. மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார். அவரைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது. அவனை "கோவிந்தா" எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும்,'' என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.

இதைக் கேட்டாளோ இல்லையோ, சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள். "அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே.. அந்த பக்தர் சொன்னாரே, எனக்கும் இனி பிறவி வேண்டாமையா'' என்று மனம் உருகிச் சொன்னாள். தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள். அவள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது, ஒரு வயோதிகர் அங்கு வந்தார். "அம்மா... சுண்டல் கொடு'' என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினார்.

"ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,'' என்றாள் பாட்டி.

"அம்மா.. நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே'' என்றார் கெஞ்சலாக.

"சரி, நாளை கொண்டு வாங்க,'' என விட்டுவிட்டாள் மூதாட்டி. தன் முன்னால் வந்து நின்றது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதைப் பாமரப் பெண்ணான கங்கம்மா எப்படி அறிவாள்?

மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. "இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்" என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள். பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன். ஆனாலும், அவர் மானிடப் பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்தவர் இல்லையா.. பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே.. இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார்.

இந்தக் கதையைப் படித்தவர்களெல்லாம், தீர்க்காயுளுடன் வாழ்ந்து, பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்.

  • 48
·
Added a post

வாடி கமலா எப்படி இருக்கே….

ஏதோ இருக்கேண்டி……நீ எப்படி இருக்கே…..

அது ஏன் கேக்குறே….. என் சம்மந்தி,வீடு ஏறி வந்து கத்திட்டு போறாடி.,..

எதுக்கு….

என் பொண்ணுக்கு பத்துசவரன் போடறே ன்னுசொல்லிட்டு மூணு தானே போட்டேன்….. மீதி ஏழு சவரன் போட சொல்லி ஒரே சண்டை போட்டுட்டு போறாடி….

தங்கம் விக்கிற வெலைக்கு…நீ எப்படிடி போடுவே…..

அதுதான்டிபுரியலே….

நான் ஒண்ணு சசொல்றேன் செய்றியா……

சொல்லேண்டி…

நம்ம முருகன் கோவில் உள்ளே ஒரு சித்தர்உட்கார்ந்து இருக்கிறார்……அவர் கிட்ட போயி இதைபற்றி சொல்லி முறையீடு செய்….. அவர் சில யோசனைகளை சொல்லுவார்…. அதன் படி செய்……

உனக்கு முன்னாடி அவரிடம் போய் கேட்டாச்சி…..

என்ன சொன்னார்….

சித்தர் சாமி…..என் சம்மந்தி இது போல டார்ச்சர் செய்யரா…. ஏதாவது வழி இருந்தா சொல்ல்லுங்கன்னு வெத்தல பழம் ஒருஎலுமிச்சை கொண்டு போனேன்…..

ஏதாவது சொல்லியிருப்பாறே……

முதலில் ஹா……ஹா… ஹாஎன சிரிச்சாரு….. அப்பாலே..,.உன் ராசிக்கு ஏழரை நாட்டு சனி பிடிச்சிருக்கு….. நவ கிரகங்களை டெய்லிவந்து சுத்திட்டு ஏழு மணி சீரியலை சன் டிவி யில் போய் பாரு அதில் நான் வருவேன்….. இது போல பிரச்சனைக்குஎன்ன பரிகாரம் முன்னு…. பொண்ணு அம்மாவுக்கு நான் ஒரு பரிகாரம் சொல்வேன்…அதை கேட்டுட்டு போய் அது போல்செய்யுன்னுசொன்னாருடி…..

நீ செஞ்சி பார்த்தியா…..

செஞ்சேனே…..

அதுக்கு அப்புறம்போயி 550ரூபாய் செலவு பண்ணி நீங்க சீரியல்லே எப்படி சொன்னிங்கலோ அப்படி செஞ்சேன் சாமின்னு சொன்னேன்….

அதுக்கு அவர் என்ன சொன்னார்….

மறுபடியும்…. ஹா., ஹா…. ஹா ன்னு சிரிக்கிறாருடி….

அப்பறம் என்ன சொன்னாரு…

அதுவா….. அது செஞ்சே சரி….. இப்ப விஜய் டிவி யிலேஒருசீரியல் நாடகம் எட்டு மணிக்கு போடுவாங்க……அந்த நாடகத்தையும் போய் பாரு….. அதுலேயும் பொண்ணுக்கு அம்மா கிட்டே ஒரு பரிகாரம் சொல்லுவேன்….. அதை உஷாரா கேட்டுட்டு….அதை போலஇன்னொரு பரிகாரம் செஞ்சி…அரை கிலோ இருட்டு கடைஅல்வா வாங்கி….பழம்.. பூ….அத்தோடவைச்சி என் கிட்டே வந்து கோடு….. நான் உனக்காக அந்த மகா சக்தியைவேண்டிக்கிறேன்னுசொன்னாரு..,.நானும் அப்படியே செஞ்சேண்டி….,

அப்புறம் என்னாச்சி….

அப்பத்தான் என் சம்மந்தி வந்து இன்னும் அதிகமாசண்டை போட்டாடி….

நீ மறுபடியும்சித்தரை போய் பார்த்தியா….

அவரு அப்பவும்…. ஹா ஹா ஹா ன்னு சிரிச்சிட்டு,…எல்லா டிவி நாடகசீரியலிலும் என்னைதான் நடிக்க சொல்லி கூப்பிடுவாங்க…. நான் என்ன சொல்றேன்னோஅப்படி தான் நடந்திருக்கு….. உன் பிரச்சனை கண்டிப்பா தீரும்ன்னு சொல்லி…. கொஞ்சூண்டு மீந்த அல்வாவைஎனக்கு கொடுத்து ட்டு….. சொன்னாரு பாரு ஒண்ணு….

என்ன…என்னசொன்னாருடி….

நீங்க எந்த டிவி ப்ரோக்ராம் செய்ய வந்தீங்கண்ணு கேட்டாரு பாரு,ஒரு கேள்வி.., அப்ப கோவிலை விட்டு வெளியே ஓடி வந்தவ தான்.. இன்னும் கோவில் பக்கமே போகலை ஆயிரம் ரூபாய் வேஸ்ட்…. அவர் சித்தர் இல்லடி எல்லா நாடக சீரியலிலும்நடிக்கிற சொத்தர்…

நானும் அப்படி ஏமாந்த ஆளு தான்…ஹா..ஹா…ஹா…

அதுசரிஉன்சம்மந்தி………..உன்பையன் கல்யாணத்துலே மருமகளுக்கு போட்ட பத்து சவரன் நகையை பத்திரமா வைச்சிருக்கியாடி….

ஆ…,. ஆங்……வைச்சிருக்கேனே…..

நல்லா வைச்சிருப்பே……தங்கம் விலை ஏறினப்போஎல்லாத்தையும் தான் வித்து தின்னிட்டு ஏப்பம்விட்டியே…. சரியான நாதாரி…நீ எனக்கு அட்வைஸ் பண்ண வரியா…குண்டச்சி…பொறுக்கி…போடி உள்ளே…

  • 50
  • 46
·
Added a post
  • 139
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை 12.9.2026.

இன்று காலை 08.51 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று பிற்பகல் 02.47 வரை பூரம். பின்னர் அஸ்தம்.

இன்று மாலை 05.40 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று காலை 08.51 வரை பவம். பின்னர் இரவு 08.40 வரை பாலவம். பின்பு கௌலவம்.

இன்று காலை 06.03 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=647&dpx=2&t=1789195062

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 142
  • 138
·
Added a post

செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள். செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு.

எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.

செவ்வாழையில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.

நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள்.

நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் இதில் இயற்கையாக ஆன்டாசிட் (Antacid) தன்மை உள்ளது. இதனால் இப்பழத்தை தினமும் உட்கொண்டு வர நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும்

  • 138
·
Added a post

சிறுநீரகத்தில்(கிட்னியில்)கல் இருந்தால் வெடிக்காத தென்னம்பாளையின் உள்ளே உள்ள பருப்பு - அரிசி போன்று இருக்கும், ஒரு கையளவு எடுத்து சாறு பிழிந்து எடுத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து ஐந்து முதல் ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால், எத்தனை பெரிய கல் ஆயினும் முழுமையாக சிறுநீரகத்தில் இருந்து வெளி வந்து விடும், சாப்பிட்ட உடனே ஒரு சில வினாடிகளில் கடுமையான வலி முற்றிலும் குறைந்து விடும்,

  • 141
  • 140

Good Morning....

  • 140

பட்டிமன்றம் என்று சொன்ன உடனே, நமது நினைவில் வந்து நிற்பவர் திரு. சாலமன் பாப்பையா.

சாலமன் பாப்பையா இன்று காலமானார்.

  • 214
  • 213
·
Added a post

இன்றைய நாள் எப்படி? 11.9.2026

மேஷம்: பொறுத்திருந்து சில காரியங்களை முடிப்பது நல்லது. செலவுகளைக் குறைத்து சேமிக்க முயற்சிப்பீர். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

ரிஷபம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர். சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிட்டும். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர். பிள்ளைகளின் விருப்பங்களைக் கேட்டறிந்து நிறைவேற்றுவீர். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் பணிச்சுமை இருக்கும்.

சிம்மம்: தம்பதிக்குள் மனஸ்தாபம் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக டென்ஷன் வந்து போகும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கன்னி: அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். உடல் சோர்வு, சோம்பல் அதிகரிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

துலாம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து நெருக்கம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

விருச்சிகம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட்டு சாதிப்பீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

தனுசு: குடும்பத்தினருடன் விவாதங்கள் வந்து போகும். திடீர் பயணம், செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர். வங்கியில் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

மகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். விரயச் செலவு வரக்கூடும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவை விற்பனை யாகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

கும்பம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு.

மீனம்: நம்பிக்கைக்கு உரியவர்கள் உதவி புரிவர். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

  • 256
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 11.9.2026.

இன்று காலை 09.40 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று பிற்பகல் 02.47 வரை பூரம். பின்னர் உத்திரம்.

இன்று இரவு 07.45 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று காலை 09.40 வரை நாகவம். பின்னர் இரவு 09.15 வரை கிமிஸ்துக்கினம். பின்பு பவம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=646&dpx=2&t=1789121932

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 260

Good Morning...

  • 313
  • 408
  • 410
  • 409
  • 411
  • 407
  • 424
  • 426
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் தேடி வருவர். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் உங்களின் பணி சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். அரசால் அனுகூலம் உண்டு. அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். வியாபாரம் சிறக்கும்.

மிதுனம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். அரசு தொடர்புடைய நபர்களை சந்திப்பீர். நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்கள் உதவி நாடி பழைய நண்பர்கள் வருவர். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புது சரக்குகள் வந்திறங்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

சிம்மம்: உடல்நலக் குறைவு, மனச்சோர்வு வரக் கூடும். திட்டமிட்ட பணிகளை முடிக்க முடியாமல் திணறுவீர். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி: அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த பகை விலகும். பிள்ளைகளின் பாசம் கூடும். அலுவலகத்தில் உங்களின் அருமை புரியும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்.

துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு முக்கியத் தீர்வு காண்பீர். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். சமயோஜிதமாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். எதிர்பார்த்த உதவி கிட்டும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார்.

தனுசு: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். வீட்டை விரிவுபடுத்துவீர். பழைய நண்பர்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்றுமொழி, மதத்தவர் உதவுவர். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று லாபம் தரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். வெளிவட்டாரத்தில் விவாதங்களை தவிர்க்கவும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். பயணங்கள் அலைச்சல் தரும்.

கும்பம்: வேலை தேடி அலைந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

மீனம்: பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர் களின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தை விரிவுபடுத்த புது முயற்சிகள் எடுப்பீர். பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

  • 467
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை 10.9.2026.

இன்று காலை 10.56 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

இன்று மாலை 03.14 வரை மகம். பின்னர் பூரம்.

இன்று இரவு 09.11 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.

இன்று காலை 10.56 வரை சகுனி. பின்னர் இரவு 10.18 வரை சதுஸ்பாதம். பின்பு நாகவம்.

இன்று காலை 06.03 வரை சித்த யோகம். பின்னர் மாலை 03.14 வரை அமிர்த யோகம். பின்பு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=645&dpx=2&t=1789023585

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 469