- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் நல்ல வருமானம் ஈட்டி வந்த நிலையில், தனது பெயரிலேயே புதிதாக ஒரு ஆப் செயலியை அறிமுகப்படுத்தினார். அதில், வீடியோ காலில் பேச 6,000 ரூபாய், பிராண்ட் புரமோஷனுக்கு 50,000 ரூபாய், ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கு 1,000 ரூபாய் மற்றும் 3 மாதங்கள், 1 ஆண்டுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்களும் ஆஃபர்களும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தர்ஷா குப்தாவின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன், சிலர் அவர் மீது புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தர்ஷா குப்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புரிந்துகொள்ளப்படாதது வலி அல்ல; என்னை நன்கு அறிந்த மனங்கள் கூட, நான் அப்படிப்பட்ட ஒருவரல்ல என்று நம்பிவிடுவதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். உங்களுக்காக ஒரு விளக்கம் உண்டு, தயவுசெய்து என் கேப்ஷனை படிக்கவும் எனக் குறிப்பிட்டு நீண்ட விளக்கமளித்துள்ளார்.
விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியில் தயாராகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்சன் டிராமா 'ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு'. இந்த படத்தில் பவர்ஃபுல் அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியையும் முதல் முறையாக ஒன்றிணைத்துள்ள பான் இந்திய ஆக்சன் என்டர்டெய்னர் படமான 'ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு' திரைப்படம் - உண்மையான உணர்ச்சிகள் - அதிரடியான சண்டைக் காட்சிகள்- புதிரான மர்மம்- ஆகியவற்றின் கலவை என உறுதியளிக்கிறது.
கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிறகு, படக் குழுவினர் தற்போது அவரது ஆளுமை மிக்க கதாபாத்திரத்தை மேலும் விவரிக்கும் வகையில்... ஒரு ஆற்றல் பெற்ற பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர்.
நகரின் சேரி பகுதிகளை பின்னணியாகக் கொண்ட இந்த முன்னோட்டம்.. படத்தின் கடினமான உலகத்தை நிலை நிறுத்த தொடங்கி, பின்னர் தபுவை ஒரு குறிப்பிடத்தக்க விதத்தில் அறிமுகப்படுத்துகிறது. அவர் ஒரு காரில் வந்து சிகரெட்டை பற்ற வைத்து.. உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறார். ஒரு உள்ளூர் ரவுடிக்கு அவர் விடுத்த கடுமையான எச்சரிக்கையும்... அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த 'பளார்' என்ற அறையும்... கௌரி ஹெக்டே அதிகாரத்தைத் தேடுபவர் அல்ல... அதை கோருபவள் என்பதை உடனடியாக பிரதிபலிக்கிறது.
அந்த கதாபாத்திரம் - ஒரு சக்தி வாய்ந்த அதிகாரியாக மட்டுமல்லாமல் முற்றிலும் அச்சம் ஏதும் இல்லாத மற்றும் சமரசம் ஏதும் இல்லாத ஒருவராகவும் காட்சிப்படுத்தப்படுகிறார். கௌரி ஹெக்டே - தெருக்களின் நடுவில் விரோத மனப்பான்மை கொண்ட உள்ளூர் மக்களையும், ரவுடிகளையும் எதிர்கொள்கிறார். அவர்களை உடல் ரீதியாக தாக்கி சூழலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஒரு மரத்தடியை பயன்படுத்துகிறார். காவல்துறையினரும், கூட்டமும் அவரை சூழ்ந்து இருந்தாலும்... அவர் சற்றும் கலங்காமல் தனது அதிகாரத்தை எதிர்ப்பவர்களை ஆக்ரோஷமாக அடக்குகிறார்.
அந்தக் காட்சி முழுவதும் மின்னும் 'ஒரு அச்சமற்ற பெண்', 'சக்தி வாய்ந்த அதிகாரி', 'இரக்கமற்றவர் ', 'கருணையற்றவர்', 'துறையின் பிசாசு' போன்ற வார்த்தைகள் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை தெளிவாக உணர்த்துகின்றன. இறுதியில் அவர் தன்னை முழு அதிகாரத்துடன் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது தான் இதன் உச்சக்கட்டம் வெளிப்படுகிறது. 'கௌரி ஹெக்டே, துணை ஆணையர், வருமான வரித்துறை' எனும் அந்த அறிமுகம்... ஒரு மிகச்சிறந்த பூரி ஜெகன்நாத் பிரத்யேகமாக வடிவமைக்கும் கதாபாத்திரத்திற்கே உரிய வீரியத்தையும், கம்பீரத்தையும் கொண்டுள்ளது. இந்த முன்னோட்டத்தில் விஜய் சேதுபதியின் சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
தபு கம்பீரமாகவும், மிடுக்காகவும் தோன்றுகிறார். தனது திரை தோற்றத்தில் அந்த கதாபாத்திரத்தை முழுமையாக தனதாக்கிக் கொள்கிறார். அவர் கௌரி ஹெக்டே கதாபாத்திரத்திற்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தையும், அச்சுறுத்தலையும் கொண்டு வருகிறார்.
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அது தொடர்பில் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 6-ஆம் திகதி அதிகாலை 3:26 மணியளவில், ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
எட்மண்டன் நகரில் ஆகஸ்ட் 7 அன்று மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனையின் மூலம், உயிரிழந்தவர் எட்மண்டனைச் சேர்ந்த பைசல் ஹுசைன் 12 வயது சிறுவன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 'ஆர்சிஎம்பி'யின் முக்கிய குற்றப் பிரிவு விசாரணையை தன்வசப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், ஆதாபாஸ்கா பொலிஸாரை 780-675-4252 என்ற எண்ணிலோ அல்லது இரகசியம் காக்கும் 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பை 1-800-222-8477 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியைப் பாக்கரடி ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், கரடி சிறுமியின் கழுத்தைக் கவ்வ முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாகச் செயல்பட்ட தந்தை, வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி கரடியின் தலையில் எய்து அதைத் தாக்கி விரட்டினார்.
கரடி கடித்ததில் சிறுமியின் கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதியில் ஆழமான காயங்களும் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன.
உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் வான்கூவரில் உள்ள சிறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அச்சிறுமி, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குப் பொலிஸார் வந்தபோதும், அந்த இடத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிய கரடி மீண்டும் மீண்டும் அவ்வீட்டுப் பகுதிக்கு வந்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அதிகாரிகள் கரடியை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கரடி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியது. வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அதைக் கண்டுபிடித்தவுடன் அழிக்க முடிவு செய்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும், வனவிலங்குகள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பட்டீச்சரம் துர்க்கையம்மன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள். ஆனால், அங்கிருந்து சில நிமிட தூரத்தில் அமைந்துள்ள பஞ்சவன்மாதேவீச்சரம் (பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயில்) பற்றி அறிந்திருப்பவர்கள் மிகவும் குறைவு.
இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், இந்த பள்ளிப்படை கோயிலின் பின்புறம் அமைந்துள்ள சிறிய சன்னதியில், சோழர் காலக் கலைநயத்தை இன்னும் உயிரோடு சுமந்து நிற்கும் அற்புதமான சாமுண்டி சிற்பம் அமைதியாக நம்மை வரவேற்கிறது.
சப்தமாதர்களில் ஒருவரான இந்த சாமுண்டி, தனது கம்பீரமான தோற்றம், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் காலத்தை வென்ற கலைநயத்தால் மனதை கொள்ளை கொள்கிறார்.
பெரும்பாலான பயணிகள் இந்த அரிய பொக்கிஷத்தை கவனிக்காமல் திரும்பிச் செல்கிறார்கள்.
அடுத்த முறை பட்டீச்சரம் செல்லும்போது, சில நிமிடங்கள் ஒதுக்கி இந்த மறைந்திருக்கும் சோழர் கலைப்பொக்கிஷத்தையும் கண்டுகளியுங்கள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நவீன தொழில்நுட்ப கருவிகள் மீதான ஈடுபாடு மேம்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செயல்பாடுகளில் இருந்து வந்த மந்த நிலைகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். குடும்ப பெரியவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பாடங்களில் இருந்த ஆர்வமின்மை குறையும். மறதி பிரச்சனைகள் விலகும். கமிஷன் துறைகளில் ஆதாயம் பயன்படும். புதிய வாகனம் வாங்குவது சார்ந்த எண்ணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மிதுனம்
பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் நிமித்தமாக முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும். காலம் தவறி உணவு உண்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் பழைய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கடகம்
உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். கடன் நிமித்தமான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சமூகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
சிம்மம்
மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். தன வரவுகளில் இருந்த தாமதங்கள் விலகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
கன்னி
பணிகளில் துரிதம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் அமையும். பிள்ளைகளின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். அலுவலகத்தில் முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தான தர்ம காரியங்களில் சில புரிதலும் ஆர்வமும் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
உத்தியோக பணிகளில் தாமதம் ஏற்படும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். வாகன பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும். தாய்மாமன் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். வழக்கு பணிகளில் இழுபறியான சூழல்கள் காணப்படும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். கடன் தொடர்பான விஷயங்களை பொறுமையுடன் கையாளவும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
தனுசு
மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுப காரியம் பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். தாயாரிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய சில புரிதல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
மனதில் புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபாரம் நிமித்தமான பயணங்களில் புதிய அனுபவங்கள் உருவாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த தடைகள் குறையும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன வருவாயை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். வேலை சார்ந்த பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கப்பெறும். பழைய விஷயங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். கூட்டாளிகளிடமிருந்து வந்த வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 25 ஆம் தேதி திங்கட்கிழமை 10.8.2026.
திதி
கிருஷ்ண பக்ஷ துவாதசி - Aug 09 11:05 AM – Aug 10 08:01 AM
கிருஷ்ண பக்ஷ திரயோதசி - Aug 10 08:01 AM – Aug 11 04:54 AM
கிருஷ்ண பக்ஷ சதுர்தசி - Aug 11 04:54 AM – Aug 12 01:53 AM
நட்சத்திரம்
திருவாதிரை - Aug 09 02:43 PM – Aug 10 12:26 PM
புனர்பூசம் - Aug 10 12:26 PM – Aug 11 10:09 AM
கரணம்
சைதுளை - Aug 09 09:34 PM – Aug 10 08:01 AM
கரசை - Aug 10 08:01 AM – Aug 10 06:27 PM
வனசை - Aug 10 06:27 PM – Aug 11 04:54 AM
பத்திரை - Aug 11 04:54 AM – Aug 11 03:23 PM
யோகம்
வஜ்ரம் - Aug 10 02:04 AM – Aug 10 10:26 PM
ஸித்தி - Aug 10 10:26 PM – Aug 11 06:51 PM
நல்ல நேரம்:
காலை : 06.00 முதல் 07.00 மணி வரை
காலை : 11.00 முதல் 12.00 மணி வரை
மாலை: 03.00 முதல் 04.00 மணிவரை
மாலை : 06.00 முதல் 07.00 மணி வரை
தெலுங்கானாவின் பத்ராசலத்தில் உள்ள ஒரு சிறிய உடற்பயிற்சிக் கூடம் முழுவதும் இரும்புத் தகடுகளின் ஓசை எதிரொலிக்கிறது.
பாரம் ஏற்றப்பட்ட பார்பெல்லுக்குக் கீழே 73 வயதான டி.வி. சங்கர் ராவ் நிற்கிறார். அவரது முகம் அமைதியாகவும், கண்கள் ஒருமுகப்பட்டும் இருக்கின்றன. அவரைச் சுற்றி, இளம் தடகள வீரர்கள் நின்று கவனிக்கின்றனர். அவரது பயிற்சியாளர், ஜி.வி. ராமி ரெட்டி, அருகில் நின்று ஒவ்வொரு அசைவையும் கவனமாகக் கண்காணித்து வருகிறார்.
"இன்னும் ஒன்று",என்கிறார் பயிற்சியாளர்.
சங்கர் ராவ் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்துக்கொண்டு மேலே எழுகிறார்.
இது ஒரு குறிப்பிடத்தக்க காட்சி, அது கம்பியில் உள்ள எடையால் அல்ல; மாறாக, சில வருடங்களுக்கு முன்பு, சங்கர் ராவ் இதய தமனி மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார் என்பதால்தான். பலர் தங்கள் வேகத்தைக் குறைத்துக்கொள்ள நினைத்திருப்பார்கள். ஆனால், அவரோ மீண்டும் புதிதாகத் தொடங்கத் தேர்ந்தெடுத்தார்.
இன்று, அவர் ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட்லிஃப்ட் ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று, தேசிய மாஸ்டர்ஸ் கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியனாகத் திகழ்கிறார்.
ஒரு பெரிய உடல்நலப் பின் அடைவுக்குப் பிறகும் கூட, ஓய்வுக்காலம் எப்படி ஒரு எதிர்பாராத புதிய அத்தியாயத்திற்கான கதவைத் திறக்கக்கூடும் என்பதற்கு அவருடைய பயணமே உங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஆதாரம்: BETTER INDIA
வடக்கு நைஜீரியாவின் கனோ மாநில ஆளுநர் அப்பா கபீர் யூசுப் ஏற்பாடு செய்திருந்த கூட்டுத் திருமண விழாவில் சுமார் 1,500 தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர் .
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சமூக நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்த இரண்டு நாள் நிகழ்வு ஒரு வழி என பிராந்திய அரசாங்கம் விவரித்தது.
பொருளாதார ரீதியாக நிலையற்ற நிலையில் உள்ள எங்கள் குடும்பங்களுக்கும், கணவன்மார்களாகிய எங்களுக்கும் திருமணம் செய்துகொள்ள உதவுவதே இந்தத் திருமணத்தின் முழு நோக்கமாகும். அதனால்தான் அரசாங்கம் எங்களுக்குத் திருமணம் செய்து வைக்க உதவுகிறது என்று மணமகன் அபுபக்கர் அலியு மூசா அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
யூசுப் நிர்வாகம் கூட்டுத் திருமணத்தை ஏற்பாடு செய்வது இது இரண்டாவது முறையாகும். கானோவின் பிராந்திய அரசாங்கத்தின்படி, ஒவ்வொரு மணமகளுக்கும் 200,000 நைரா (147 டாலர், 127 யூரோ) வரதட்சணையாகவும், ஒரு சிறு தொழிலைத் தொடங்குவதற்கான ஆதரவும் வழங்கப்பட்டது.
தம்பதியினருக்கு படுக்கைகள், மெத்தைகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களும் வழங்கப்பட்டன. திருமணத்திற்கு முன்பு தம்பதியினர் பரிசோதனை மற்றும் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கானோவில் நம்பிக்கையை மீட்டெடுப்பதையும், கண்ணியமான குடும்ப வாழ்க்கையை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு துணிச்சலான சமூகத் தலையீடு" என இந்தத் திட்டத்தை ஆளுநர் யூசுப் விவரித்தார்.
திருமணச் செலவைச் சமாளிக்க சிரமப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக மட்டுமல்லாமல், குடும்பங்களை வலுப்படுத்தவும், மாநிலத்தில் சமூக நிலைத்தன்மையை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: புது திட்டங்களை தீட்டுவீர். உறவினர், பழைய நண்பர்கள் உங்கள் உதவி நாடி வருவர். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர். பங்குதாரரின் ஆலோசனையை ஏற்பீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
மிதுனம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்துவிரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் சிக்கல்கள் வரக் கூடும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கடகம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூர்வீகச் சொத்துப்பிரச்சினையை பேசித் தீர்ப்பீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மேலதிகாரி பாராட்டுவார்.
சிம்மம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு கூடும். வியாபார போட்டி விலகும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.
கன்னி: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை அசத்துவீர். மனைவி, பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பிரபலங்களால் ஆதாயமுண்டு. வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். தந்தைவழியில் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவு எடுப்பர்.
விருச்சிகம்: யாருக்காகவும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பூர்வீக சொத்து வழக்கில் இருந்த இழுபறி நீடிக்கும். வியாபாரத்தில் பணியாட்களால் தொல்லைகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
தனுசு: திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் இருந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்.
மகரம்: எதிர்பார்த்தபடி சில பணிகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மீனம்: சொந்த ஊரிலிருந்து நற்செய்தி வரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்பீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 9.8.2026.
இன்று காலை 09.08 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று பிற்பகல் 01.38 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.
இன்று அதிகாலை 03.03 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷனம்.
இன்று காலை 09.08 வரை பாலவம். பின்னர் இரவு 07.53 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை: 03.15 முதல் 04.15 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
குழந்தையாக அறிமுகமான குட்டி பத்மினி, விசு இயக்கிய பெண்மணி அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர்கள், சகலகலா சம்மந்தி போன்ற படங்களில் துணை நடிகையாகவும் நடித்தார். இதோடு மட்டுமில்லாமல், இவரது வைஷ்ணவி ஃபிலிம்ஸ் எண்டெர்பிரசஸ் லிமிடெட் என்ற தொலைக்காட்சி நிறுவனம் மூலம், கிருஷ்ணதாசி மற்றும் இராமானுஜர் போன்ற பிரம்மாண்ட சீரியல்களையும் தயாரித்துள்ளார். இவர் நடிகரும் தயாரிப்பாளருமான பிரபு நேபாலை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனியாக குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியுள்ளார்.
இவருக்கு கீர்த்தனா, ஃபான்னிங், ரிதினேகா என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய மகள் ரிதினேகாவிற்கு தற்போது திருமணம் நடக்கவுள்ளது. இந்த இனிப்பான 'செய்திளை குட்டி பத்மினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், என் மகளுக்கு ஒருவரை பிடித்து இருக்கிறது. அவர் பெயர் அஷ்வின். அவரின் குடும்பத்தை நான் போய் சந்தித்தேன். அவர்களும் எங்க வீட்டுக்கு வந்து அனைவரையும் சந்தித்து பேசினார்கள். ரொம்ப நல்ல குடும்பம், அனைவரையும் எனக்கு பிடித்து இருக்கிறது. எனக்கு மகன் இல்லாத குறையை என் மருமகன் அஷ்வின் நிரப்பிவிட்டார். அம்மா... அம்மா... என அவர் கூப்பிடும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
நவம்பர் மாதம் திருமணத்தை நடித்த திட்டமிட்டு இருக்கிறோம் எனது சந்தோஷத்தை குட்டி பத்மினி பகிர்ந்துள்ளார். தனி ஆளாக நின்று மகள்களை வளர்த்த குட்டி பத்மினியின் இந்த அறிவிப்பிற்கு நெட்டிசன்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை பூனம் பஜ்வா இன்ஸ்டாகிராமில் சில நிமிடங்களுக்கு முன்னதாக வெளியிட்ட ஸ்லீவ்லெஸ் உடை போட்டோக்கள் வேறலெவலில் லைக்குகளை குவித்து வருகிறது.
குமுதா போல இவரும் சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்தால் இஷ்டத்துக்கு சம்பாதிக்கலாமே ஏன் இன்னும் அந்த பக்கம் போக மறுக்கிறார் என ரசிகர்களே கேள்வி எழுப்ப கிளம்பி விட்டனர்.
பட வாய்ப்புகள் குறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், சிரித்த முகத்துடன் எப்போதுமே மினி டிரெஸ்ஸில் தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை தவறாமல் கவர்ச்சி தீனிப் போட்டு வருகிறார்
ஹரி இயக்கத்தில் ஐயா படத்தில் நயன்தாரா அறிமுகம் ஆனது போல ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் 2008ம் ஆண்டு அறிமுகமானவர் தான் பூனம் பஜ்வா. 2005ம் ஆண்டு மொடட்டி சினிமா படத்தில் நவ்தீப் ஜோடியாக நடிக்கத் தொடங்கினார். ஜீவாவுடன் இவரது ஜோடி பொருத்தம் சூப்பராகவே அமைந்தது. தெனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களுக்கு இன்னமும் ரசிகர்கள் உள்ளனர்.
கடைசியாக 2022ம் ஆண்டு குருமூர்த்தி எனும் தமிழ் படத்தில் நடித்தார். அதன் பின்னர் வேறு எந்தவொரு படத்திலும் அவருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. காதலருடன் திருமணம் செய்துக் கொள்வாரா என்று பார்த்தால் தொடர்ந்து லிவிங் டுகெதர் வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார் என்கின்றனர். முத்தின கத்தரிக்காய் பட நடிகைக்கு இப்போ 41 வயதாகிறது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஆகஸ்ட் எனர்ஜி" என்ற கேப்ஷனுடன் நண்பர்களுடன் இருப்பது, செல்ஃபி எடுப்பது என போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதோடு காருக்குள் அமர்ந்து தனது கைகளால் முகத்தை மூடியபடி கதறி அழுவது போன்ற ஒரு வீடியோவை அதில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சமந்தா ஆனந்த கண்ணீரில் அழுகிறாரா... அல்லது சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறாரா... அல்லது உண்மையிலேயே சோகத்தில் அழுகிறாரா என்று எதுவுமே புரியாமல் அவரது ரசிகர்கள் பெரும் குழம்பி போனார்கள். கர்ப்பமாக இருக்கும் இந்தச் சூழலில் சமந்தா இப்படி அழுவது போன்ற வீடியோவைப் பகிர்ந்திருப்பது சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு சமந்தா?" உங்களுக்கு என்ன பிரச்சனை?, மன அழுத்தம் கூடாது, என பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை சமந்தா, கடந்த 2025ஆம் ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமணம் கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் பைரவி தேவி சிலை முன்பு மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் தனது கணவரான ராஜ் நிடிமோரு எழுதிய கதையில், இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கிய 'மா இண்டி பங்காரம்' என்ற படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியானது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இப்படத்தில் அதிரடியாக ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா மிரட்டி இருந்தார். இப்படம் நல்ல வசூலை அள்ளியது. இந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா, தான் தாயாகப்போகும் மகிழ்ச்சியான விஷயத்தை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சோசியல் மீடியாவின் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளது. இதற்கு முன்னாடி பேஸ்புக் மட்டுமே கோலோச்சிய நிலையில், இப்போ இன்ஸ்டாகிராம், எக்ஸ் என பல சமூக வலைதளங்கள் படையெடுத்து வந்துவிட்டன. இவற்றின் மூலம் விதவிதமான ரீல்ஸ்கள், கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு சிலர் பயன் அடைந்து, ஓவர் நைட்டில் பெரிய விஐபியாகவே பிரபலமாகி வருகிறார்கள்.
அந்த வகையில், இப்போது நடிகைகளுக்கெல்லாம் மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக அமைந்திருப்பதுதான் இந்த இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரைப். இந்த சப்ஸ்கிரைப் மூலம் மாதம் ரூ. 199 முதல் ரூ. 16,000 வரை சந்தாவை செலுத்தி, தங்களுக்கு பிடித்தமான நடிகைகளின் பிரத்தியேகமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் முறை, இது இணையத்தில் ஒரு செம மாஸ் புது பிசினஸாகவே பார்க்கப்பட்டு வருகிறது,
சினிமாவில் வாய்ப்பிழந்த ஒருசில நடிகைகள், இந்த சப்ஸ்கிரைப் ஆப்ஷன் மூலமாகவே மாதா மாதம் லட்சக்கணக்கில் பணத்தைச சம்பாதித்து வருகின்றனர். அந்த வரிசையில், ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, அப்புறம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாச்சலம், இப்போ இந்த சப்ஸ்கிரைப் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருகிறார்.
கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நகர மேயர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில், கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
எட்மண்டனில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவரும் சுக்ஜீத் சிங் ரந்தாவா (48) என்பவர், புதன்கிழமை இரவு தனது விடுதியை மூடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிங் கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரை சிங் தடுக்க, அந்த நபர் சிங்கை தாக்கியுள்ளார்.
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, சிங் படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.
முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிங்கை அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், நிக்கோலஸ் (Nicholas Butler-Chowace, 22) என்னும் கனேடியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சுக்ஜீத் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள எட்மண்டன் நகர மேயரான ஆண்ட்ரூ நாக், இதுபோன்ற அர்த்தமற்ற வன்முறைச் செயல்கள் நம் சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே பாதிக்கின்றன என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு எட்மண்டன்வாசிக்கும் நம் நகரில் பாதுகாப்பாக உணர உரிமை உண்டு என்று கூறியுள்ள அவர், தன் சமூகத்துக்கு சேவை செய்யும் போதும், தம் கடமையை ஆற்றும்போதும், யாரும் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
வரும் புதன்கிழமை சுக்ஜீத் சிங்குக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
கனடாவின் வேலைவாய்ப்புச் சந்தை கடந்த ஜூலை மாதத்தில் கணிசமான மீட்சியைக் கண்டுள்ளது.
இம்மாதத்தில் புதிதாக 75,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பொருளாதாரம் முழுமையான நிலையை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் வேலையின்மை விகிதம் 6.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.
முன்னதாக ராய்ட்டர்ஸ் நடத்திய கணிப்பில் 15,000 வேலைவாய்ப்புகளே உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய வளர்ச்சி அதனை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.
ஜூலையில் உருவான வேலைவாய்ப்புகள் முழுநேர மற்றும் பகுதிநேரப் பணிகளுக்கிடையே சமமாகப் பிரிந்துள்ளன.
இதில் ஒண்டாரியோ மாகாணத்தில் மட்டும் 52,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கனடாவில் மொத்தம் 1,81,000 வேலைவாய்ப்புகளும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1,96,000 வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மொத்த மற்றும் சில்லறை வணிகத் துறையில் 21,000 வேலைகளும், நிதி, காப்பீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் 18,000 வேலைகளும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சேவைத் துறையில் 17,000 வேலைகளும் உருவாகியுள்ளன.
பொது நிர்வாகத் துறையில் 15,000 வேலைகளும், விவசாயத் துறையில் 9,600 வேலைகளும் குறைந்துள்ளன.
சராசரி மணிநேர ஊதிய வளர்ச்சி கடந்த ஜூலையில் 2.8 சதவீதமாக இருந்தது; இது ஜூன் மாதத்தில் பதிவான 3.3 சதவீத வளர்ச்சியை விட சற்றே குறைவு ஆகும். கனடா வங்கி (Bank of Canada) தனது முக்கிய வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாகத் தொடர்ந்து ஆறாவது முறையாக மாற்றமின்றி தக்கவைத்துள்ளது.
பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படி, 2027-ஆம் ஆண்டு வரை வங்கி தனது வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.
இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் பெரிய மாற்றமின்றி 12.6 சதவீதமாக உள்ளது. எனினும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.9 சதவீதம் குறைவு என்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த கோடைக்காலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற சாதகமாக அமைந்துள்ளது.
























