- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
கனடாவின் மொன்றியல்–பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையம் ஊடாக கொக்கெய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஏர் கனடா நிறுவனத்தின் இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, புதன்கிழமை காலை மொன்றியல் பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புகள் மற்றும் ஒரு வாகனத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், ஏர் கனடாவின் ஒத்துழைப்புடன், டொர்வால் பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊழியர்கள் பணியாற்றும் இடத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஏர் கனடாவின் விமான நிலைய தரைத்தள செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் தொடர்பான விசாரணைப் பிரிவினரின் விசாரணையில், பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ள விமான நிலையப் பகுதிகளுக்கு பயணப் பொதிகளை கொண்டு செல்வதற்கும், அங்கிருந்து அவற்றை நகர்த்துவதற்கும் குறித்த இருவரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
பொதிகளின் பயணச் சீட்டுகள் மாற்றப்பட்டு, போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகளை குறிப்பிட்ட நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு அவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தனது மகன்களில் ஒருவரைக் படுகொலை செய்ய ஈரான் அரசுத் திட்டம் தீட்டித் தாக்குதல் நடத்த முயன்றதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளமை சர்வதேச அளவில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நெதன்யாகு பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதன்போது யாராலும் நம்ப முடியாத அளவுக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஈரானிய அமைப்புகள் என் மகனை இலக்கு வைத்து அவரைக் படுகொலை செய்யத் தீவிர முயற்சி மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். 35 வயதான நெதன்யாகுவின் மூத்த மகன் யாயிர் நெதன்யாகுவே (Yair Netanyahu) இந்தச் சதியில் இலக்காக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி பகுதியில் தங்கியிருந்த யாயிர் நெதன்யாகுவை ஈரானிய உளவு அமைப்பைச் சேர்ந்த உளவாளிகள் ரகசியமாகக் கண்காணித்து வந்ததை இஸ்ரேலின் ‘ஷின் பெட்’ (Shin Bet) உளவுத்துறை கண்டறிந்து அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்களை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஆபத்தான தகவலைத் தொடர்ந்து, உயிருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் யாயிர் நெதன்யாகு தனது உடமைகளைக்கூட எடுக்காமல் உடனடியாகப் புளோரிடாவில் இருந்து இஸ்ரேலுக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுப் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார்.
இஸ்ரேலில் விரைவில் தேர்தல் வரவுள்ள சூழலில், அனைத்து முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு முழு அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் எதிரி நாடுகள் தங்களது சதித்திட்டத்தில் வெற்றி பெற்றுவிடும் என்றும் நெதன்யாகு இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம், ஈரானிய ஊடகங்கள் சமீபத்தில் அமெரிக்கத் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைக் இலக்கு வைக்கும் விடியோக்களை வெளியிட்டு அச்சுறுத்தி வருகின்றது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமரின் மகனுக்கும் இத்தகைய ஆபத்து நேர்ந்துள்ள தகவல் இரு நாடுகளுக்கும் இடையேயான உளவுத்துறைப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர். சோர்வு நீங்கி முக மலர்ச்சி யுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
ரிஷபம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.
மிதுனம்: மனதை உறுத்திய விஷயத்துக்கு முடிவு கட்டுவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக வீட்டை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கடகம்: தாய்வழி உறவினர்களால் மனக்கசப்புகள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்கவும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல் படுவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம். பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.
சிம்மம்: தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. கூட்டுத் தொழிலில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் அன்பு காட்டுவர்.
கன்னி: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி தடபுடலாக நடக்கும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரரீதியாக சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
துலாம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும். எதார்த்தமான பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர். தாயார், பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் பணியாட்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
விருச்சிகம்: புதுப்புது எண்ணங்கள் மனதில் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. தந்தையின் உடல்நலம் சீராகும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரம் சூடு பிடித்து, திருப்தி தருவதாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
தனுசு: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.
மகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். திட்டமிட்ட வேலைகளை முடிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்கள் தொந்தரவு தருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.
கும்பம்: பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள். குழப்பம் நீங்கி வீட்டில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் அனுபவமிக்க பணியாட்கள் வருவர். அலுவல கத்தில் உங்களின் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்: உங்கள் புதுமுயற்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தந்தைவழி உறவினர்களால் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் கிடைக்கும். பழைய கடன் பிரச்சினை தீரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 27.8.2026.
இன்று காலை 09.55 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.
இன்று அதிகாலை 02.20 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.
இன்று காலை 10.03 வரை சோபனம். பின்னர் அதிகண்டம்.
இன்று காலை 09.55 வரை வணிசை. பின்னர் இரவு 10.12 வரை பத்தரை. பிறகு பவம்.
இன்று அதிகாலை 02.20 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.03 வரை மரணயோகம். பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்க கனடா தீர்மானித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில், அமெரிக்கா திடீரென கனடா மீது 50 சதவீத வரியை விதித்தது.
இதனால் ஏற்கனவே பதற்றமடைந்திருந்த அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், அமெரிக்கா விதித்துள்ள வரியை தவிர்ப்பது தொடர்பிலும் வொஷிங்டனில் இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எனினும், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து, கனடா மீது 50 சதவீத சுங்கவரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அத்துடன், கனடா தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
இந்த புதிய வரி நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்காவுடன் முன்னர் காணப்பட்ட உறவு மீண்டும் அதே நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என கனடா பிரதமர் மார்க் கார்னி முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் நீண்டகாலமாக நெருக்கமான வர்த்தக உறவுகளை கொண்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக மோதல் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பூர்வீகச் சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபார பணிகளில் சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாயாரின் உடல்நலம் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணங்களில் இருந்த தடைகள் விலகும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
ரிஷபம்
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதை தவிர்க்கவும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் பிறக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வேலையாட்கள் மாற்றம் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மிதுனம்
உத்தியோக பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்குச் செயல்பாடுகளால் விரயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மாற்றத்தினை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை
சிம்மம்
எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். தாய் மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். பணி நிமித்தமான செயல்களில் புதுமையான சூழல்கள் அமையும். மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் துரிதம் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி
கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அடமான பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
துலாம்
பொது வாழ்வில் செல்வாக்கு கூடும். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். நினைத்த சில காரியங்களை முடிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாதப் போக்கை தளர்த்திக்கொள்ளவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் லாபம் மேம்படும். பணி நிமித்தமான முயற்சிகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு, சுறுசுறுப்பின்மை உண்டாகும். உறவினர்களின் வருகை ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வர்த்தக பணிகளில் லாபகரமான சூழல்கள் அமையும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். தோற்றப்பொலிவு மேம்படும். நண்பர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மகரம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஊடக துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
உயரதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு சார்ந்த அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது நல்லது. குழந்தைகள் வழியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரப் பயணங்களில் புதிய அனுபவங்கள் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியான வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 9 ஆம் தேதி புதன்கிழமை 26.8.2026.
இன்று காலை 08.50 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.
இன்று அதிகாலை 12.18 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
இன்று காலை 10.13 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்.
இன்று காலை 08.50 வரை தைத்தூலம். பின்னர் இரவு 09.22 வரை கரசை. பிறகு வணிசை. இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த சமீபத்திய புகைப்படங்களில், ரம்யா பாண்டியன் கிளாசிக் மாடர்ன் கெட்டப்பில் அட்டகாசமான போஸ்களை கொடுத்துள்ளார். ஃபேன்சி டிசைனர் பேக்ரவுண்டில், ஸ்லீவ்லெஸ் வைட் டாப்ஸ் மற்றும் கருப்பு உடையில் அவர் கொடுத்திருக்கும் கில்லர் லுக் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மொட்டை மாடி சேலை லுக்காக இருந்தாலும் சரி, இந்த மாதிரி மார்டன் லுக்காக இருந்தாலும் சரி... ரம்யா பாண்டியன் எப்போதும் கெத்துதான் என நெட்டிசன்கள் கமெண்ட் பாக்ஸில் லைக்ஸ்களையும் ஹார்ட்டின்களையும் குவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதனைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் சமுத்திரகனியுடன் ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் தனது இயல்பான மற்றும் நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இருப்பினும், அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையையும் அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது அந்த புகழ்பெற்ற மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட் தான். அதன் பிறகு டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற பல ஹிட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேலும் பிரபலமானார். சினிமா, சின்னத்திரை, போட்டோஷூட் என பல களங்களில் தொடர்ந்து கலக்கி வரும் ரம்யா பாண்டியனின் இந்த புதிய மார்டன் லுக் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது.
கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்து புகழடைந்த கனகா தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். அவரது தாய் தேவிகாவின் மரணம் அவரை நிலைகுலைய செய்ய சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கினார். பல வருடங்கள் தனிமையிலேயே இருந்துவருகிறார். இந்நிலையில் அவர் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான தேவிகாவின் மகள் கனகா. அவரை கங்கை அமரன் தனது கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்தார். ராமராஜன் ஹீரோவாக நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கனகாவின் நடிப்பு முதல் படம் போன்றே இல்லை. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதனை பயன்படுத்தி தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்துக்கொண்டார் அவர்.
குட்டி பத்மினிக்கு பிறகு பலர் கனகாவை சந்திக்க முயன்றாலும் அவர்களால் பார்க்க முடியவில்லை. மேலும் கனகாவை பேட்டி எடுப்பதாகவும்; விரைவில் அது தனது யூடியூப் சேனலில் வரும் என்றும் பத்மினி கூறியிருந்தார். ஆனால் அவரோ பேட்டி கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக நின்றுவிட்டார். இந்நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்திய பேட்டியில் கனகா குறித்து பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பாலாஜி பிரபு அளித்த அந்தப் பேட்டியில், "கனகாவை பொறுத்தவரை அவரது அம்மா அருகே இல்லையென்றால் பேசுவதற்குகூட பயப்படுவார். அவரது அம்மா இறந்த பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு ஆள் சப்போர்ட்டில் வாழ்ந்தாலே இந்தப் பிரச்னை வரத்தான் செய்யும். பலருடன் பழக வேண்டும். நிறைய நண்பர்களை அருகே வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் எல்லாம் இருந்தால் கஷ்டம் கொஞ்சம் குறையும். யாருமே அருகே இல்லாததால் இடிந்து போய்விட்டார். கனகாவின் தாயும், தந்தையும் பேசிக்கொள்வதில்லை.
இருப்பினும் சொத்தில் தனக்கு பங்கு வேண்டுமென்று கனகாவின் தந்தை வழக்கு தொடுத்திருந்தார். தேவிகா இருக்கும்வரை அந்த வழக்கை நடத்திக்கொண்டிருந்தார். பிறகு கனகா சென்றுகொண்டிருந்தார். ஒருநாள் அவர் கோர்ட்டில் அமர்ந்திருக்கும்போது அவர் அருகே ஒரு பெரியவர் அமர்ந்து எப்படி ம்மா இருக்க என்று கேட்டார். இவர் வேறு யாரோ என்று நினைத்துக்கொண்டு நன்றாக இருக்கிறேன் என சொன்னார். அந்த நபர்தான் அவரது அப்பா. அப்படித்தான் இருந்தார்கள் அவர்கள் இரண்டு பேரும்" என்றார்.
மொண்ட்ரியால்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மோதியதில், விமான நிலைய ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொண்ட்ரியால் காவல்துறை தெரிவித்துள்ளது.
மாலை 7:30 மணியளவில், விமான நிலையத் தாரைத்தளத்தில் பின்னோக்கி நகர்ந்துகொண்டிருந்த விமானம் ஒன்று மோதியதில் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
தகவல் கிடைத்ததும் அவசர உதவிக் குழுவினர் விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணை, கனடாவின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மொண்ட்ரியால் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் என்ன நிகழ்ந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய, காவல்துறையினரும் தடயவியல் நிபுணர்களும் தளத்தில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு இடையிலும் விமான நிலையத்தின் இயல்புச் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும், பயணிகள் தங்களது விமானங்களின் நிலையைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் மூலம் நேரடியாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு மொண்ட்ரியால் விமான நிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கனடாவில், ஈழத் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் மற்றும் வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன், இந்த குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை நன்கொடையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று இருந்தனர்.
இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்த இலங்கையர்கள் அந்நாட்டுக்கு பல்வேறு வகையில் சேவைகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான கனடிய தூதுவர் இஸபெல்லா மார்டின் தெரிவித்துள்ளார்.
கனடாவின் வெற்றிக்கு புலம்பெயர் இலங்கையர்களின் பங்களிப்பு மகத்துவமானது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கனடிய புலம்பெயர் தமிழர்கள் தாயகத்திற்கு கொடைகளை வழங்குவதும் தங்களது திறமைகளை வழங்குவதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கனடாவில் பெற்றுக் கொண்டவற்றை தாயக சமூகத்திற்கு வழங்குவது போற்றுதற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தருணம் பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கனடாவின் சார்பில் இந்த நன்கொடை வழங்குவதற்கு வழங்கும் நிகழ்வுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கனடிய வாழ் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஈழத்து தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக வட மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கனடாவில் கடின உழைப்பில் பெற்றுக் கொள்ள பட்ட பணம் தாயகத்தில் தேவைகள் உடையவருக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் சமூகத்திடம் தாம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் சமூகத்தினர் தாயகத்திற்கு தொழில்நுட்பத்தையும் அறிவையும் வழங்க முடியும் எனவும் மருத்துவமனைகளுக்கு உதவுமாறு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எமது மருத்துவமனைகளுக்கு காணப்படும் முக்கியமான தேவைப்பாடுகளை கண்டறிந்து பேண்தகு அடிப்படையில் அவற்றை பூர்த்தி செய்யுமாறு புலம்பெயர் சமூகத்திடம் கோருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் முதலீடு செய்வதில் எதிர்நோக்கிய நிர்வாக மற்றும் ஏனைய சிக்கல்களை களைவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
வட மாகாணத்தை முதலீடுகளுக்கு சிறந்த ஓர் மாகாணமாகவும் சமூக பொறுப்புடைய ஒரு மாகாணமாகவும் மாற்றுவதற்கு முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொடையாளர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே பெருந்தொகை பணத்தை நம்பி கொடுப்பார்கள் எனவும் தற்போதைய சமூகத்தில் ஏமாற்று பேர்வழிகள் இருக்கிறார்கள் எனவும் இந்த கொடையாளி மீது நம்பிக்கை கொண்டு பெருந்தொகை பணம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்கொடையாளர்களின் சேவை தொடர வேண்டும் எனவும் வடமகாணத்திற்கு தொடர்ந்து சேவைகள் ஆற்றப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

































