·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 1072
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added joke

மனைவி : போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா ?

கணவன் : ஏன் ,,, அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம் ?

மனைவி : உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.

மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?

கணவன் : ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?

கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி : நான் என்ன பண்றது அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."

கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."



மனைவி : ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!

கணவன் : நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

கணவன் : ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி : ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்...

மனைவி : உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .

கணவன் : வேற என்னதான் போட்ட?

மனைவி : பேசாம பட்டினி போட்டேன்.

மனைவி : டின்னர் வேணுமா?

கணவன் : சாய்ஸ் இருக்கா?

மனைவி : ரெண்டு இருக்கு!

கணவன் : என்னன்ன?

மனைவி : வேணுமா? வேண்டாமா?

கணவன் : “உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?”

மனைவி : “உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?

  • 8
  • 8
  • 9
  • 9
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

ரிஷபம்: இங்கிதமாகப் பேசி காரியம் சாதிக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக்கூடும். பங்குதாரர் ஆலோசனை தருவார்.

மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கடகம்: ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்கள் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்.

சிம்மம்: மனதில் இருந்த பயம் விலகும். பணவரவு, திருப்தி தரும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்கி வீட்டை அலங்கரிப்பீர். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்றுவீர்.

துலாம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். மகனின் வேலை, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், டென்ஷன் வந்து போகும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

விருச்சிகம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். வியாபாரத்தில் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

தனுசு: சுறுசுறுப்புடன் செயல்களை விரைந்து முடிப்பீர். சிந்தனைத் திறன் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தாயார், மனைவியின் ஆரோக்கியம் சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும். இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.

மகரம்: நேர்மறை சிந்தனைகள் மனதில் உற்சாகத்தை தரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபார ரீதியாக நண்பர்களை சந்திப்பீர் பணியாட்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கும்பம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். மனதுக்கு பிடித்தவர்களுக்காக செலவு செய்வீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரம் சிறக்கும்.

மீனம்: தடைபட்ட சில வேலைகளை முடிப்பதால் மனநிறைவு உண்டாகும். சகோதரரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

  • 32
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 4.9.2026.

இன்று அதிகாலை 02.08 வரை சப்தமி. பின்னர் இரவு 11.46 வரை அஷ்டமி. பின்பு நவமி.

இன்று அதிகாலை 12.56 வரை கிருத்திகை. பின்னர் இரவு 11.12 வரை ரோகிணி. பின்பு மிருகசீரிஷம்.

இன்று மாலை 04.44 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.

இன்று அதிகாலை 02.08 வரை பவம். பின்னர் பிற்பகல் 12.57 வரை பாலவம். பின்பு இரவு 11.46 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று இரவு 11.22 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=638&dpx=2&t=1788491095

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 30

Good Morning....

  • 35
  • 34
  • 119
  • 119
·
Added a post

ஒரு சிறிய நகைக்கடைக் கவுண்டருக்குப் பின்னால் நின்ற அந்தச் சிறுவன்…

ஒரு சிறிய நகைக்கடையின் கவுண்டருக்குப் பின்னால் நின்ற அந்தச் சிறுவன், ஒருநாள் உலகின் பல நாடுகளிலும் தனது பெயரில் நகைக்கடைகளைத் திறப்பார் என்று அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

1956-ஆம் ஆண்டு திருச்சூரில், அவரது தந்தை வர்கீஸ் ஆலுக்காஸ் தொடங்கிய சிறிய நகைக்கடைத் தொழிலில்தான் ஜாய் ஆலுக்காஸின் கதை தொடங்கியது.

அதே ஆண்டில் பிறந்த ஜாய், பெரிய குடும்பத்தில் வளர்ந்தாலும், சிறு வயது முதலே தந்தையின் தொழிலுடன் நெருக்கமாக இருந்தார்.

வெறும் 15 வயதிலேயே குடும்ப நகைக்கடையில் விற்பனையாளராக வேலை செய்யத் தொடங்கினார். கவுண்டருக்குப் பின்னால் நின்று வாடிக்கையாளர்களைச் சந்தித்து, அவர்களின் விருப்பங்களையும் தேவைகளையும் புரிந்துகொண்ட அந்தக் காலம்தான் அவரது முதல் வணிகப் பள்ளியாக அமைந்தது.

கேரளாவில் குடும்பத் தொழில் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில், ஜாயின் கவனம் வளைகுடா நாடுகளின் சந்தை மீது திரும்பியது.

1986-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்ற அவர், அங்குள்ள சந்தையை நேரடியாகப் புரிந்துகொண்டார். அதன் பின்னர் அபுதாபியில் குடும்பத்தின் முதல் வெளிநாட்டு ஷோரூம் தொடங்கப்பட்டது.

வளைகுடா சந்தையின் வாய்ப்பை சரியாகப் புரிந்துகொண்டதால், அங்கு தொழில் மிக வேகமாக வளரத் தொடங்கியது.

குடும்பத் தொழிலில் இருந்து தனியாகப் பிரிந்த பிறகு, குடும்பத்தின் பாரம்பரியத்துடன் தனது பெயரையும் இணைத்து “Joyalukkas” என்ற சொந்த பிராண்டை உருவாக்கினார்.

வளைகுடா நாடுகளில் வலுவான இடத்தைப் பிடித்த பிறகு, இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் தனது தொழிலை விரிவுபடுத்தத் தொடங்கினார்.

2002-ஆம் ஆண்டு கேரளாவின் கோட்டயத்தில் முதல் இந்திய ஷோரூம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2004-ஆம் ஆண்டு கோயம்புத்தூரிலும் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தினார்.

தொழில் வளர்ந்து கொண்டிருந்தாலும், குடும்பமும் இந்தப் பயணத்தின் முக்கியமான ஒரு பகுதியாகவே இருந்தது.

அவரது மனைவி ஜோலி ஜாய், Joyalukkas Foundation-ன் சமூகப் பணிகளுக்கு தலைமை வகித்து வருகிறார்.

அவர்களது குழந்தைகளான ஜான் பால், மேரி, எல்சா ஆகியோரும் குடும்பத்தின் அடுத்த தலைமுறையாக உள்ளனர்.

இன்று ஜான் பால் ஆலுக்காஸ், Joyalukkas Jewellery-யின் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் செயல்பட்டு வருகிறார்.

தொழில் வளர்ச்சியுடன் சமூகத்திற்கும் திருப்பிக் கொடுப்பதில் இந்தக் குடும்பம் கவனம் செலுத்தியது.

கல்வி, சுகாதாரம், ரத்ததானம், மருத்துவ உதவி, வீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் Joyalukkas Foundation சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

2018-ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, வீடுகளை இழந்தவர்களுக்காக ₹15 கோடி செலவில் 250 வீடுகளை கட்டித் தரும் ‘Joy Homes’ திட்டம் அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் இந்தத் திட்டமும் பல்வேறு சமூகப் பணிகளும் மேலும் விரிவுபடுத்தப்பட்டன.

தங்க வியாபாரத்திற்கு அப்பாற்பட்டும் ஜாய் ஆலுக்காஸுக்கு சினிமாவுடனும் ஒரு சிறிய தொடர்பு உள்ளது.

2003-ஆம் ஆண்டு வெளியான ‘கஸ்தூரிமான்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

பின்னர் 2012-ஆம் ஆண்டு லால் ஜோஸ் இயக்கத்தில் வெளியான ‘Diamond Necklace’ திரைப்படத்திலும் தனது சொந்த பெயரிலேயே தோன்றினார்.

இன்று திருச்சூரில் தொடங்கிய அந்தச் சிறிய முயற்சி, 12 நாடுகளில் நூற்றுக்கணக்கான ஷோரூம்களைக் கொண்ட உலகளாவிய நகை வணிகமாக வளர்ந்துள்ளது.

அவரது பொருளாதார வளர்ச்சியும் வியக்கத்தக்கது.

Forbes-ன் 2026 Billionaires Profile-ன் படி, ஜாய் ஆலுக்காஸின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ₹44,000–₹45,000 கோடி அளவுக்கு வருகிறது.

இது அவரது தனிப்பட்ட Net Worth மட்டுமே. Joyalukkas Group-ன் மொத்த வணிக மதிப்பு அல்ல.

திருச்சூரில் உள்ள ஒரு சிறிய குடும்ப நகைக்கடையில் தொடங்கி, வளைகுடா நாடுகள் வழியாக உலகம் முழுவதும் விரிவடைந்த இந்தப் பயணம், இறுதியில் ஒரு மனிதரின் பெயரையே ஒரு மிகப்பெரிய பிராண்டாக மாற்றியது.

அந்தப் பெயர் — ஜாய் ஆலுக்காஸ்.

அந்த பிராண்ட் — Joyalukkas.

ஒரு சிறிய நகைக்கடைக் கவுண்டருக்குப் பின்னால் நின்ற அந்தச் சிறுவன் கண்ட பெரிய கனவு, இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்க நகை ஷோரூம்களில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

ஜாய் ஆலுக்காஸின் வெற்றிப் பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

  • 126
  • 118
·
Added a post

சில நிமிடங்களில் 20 வருட உழைப்பு கண்முன்னே காணாமல் போன கதை.

உத்தரப்பிரதேசம் பல்லியாவை சேர்ந்த அசோக் சௌராசியா என்பவர், கடந்த இருபது வருடங்களாக நேபாளத்தில் உள்ள திரிசூலி பஜாரில் துணிக்கடை நடத்தி வந்திருக்கிறார். அங்கேயே சொந்தமாக மூன்று மாடி வீடு, கடை, குடோன் என தனது வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி எழுப்பியிருக்கிறார்.

அன்று திடீரென வந்த வெள்ளம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

தண்ணீர் பயங்கர சத்தத்துடன் ஊருக்குள் நுழைவதை பார்த்து, இருந்தவர்கள் எல்லாம் உயிரை காப்பாற்ற மேடான பகுதிக்கு ஓடியிருக்கிறார்கள். அசோக் அங்கிருந்த ஒரு மடாலயத்தின் சுவரை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, நூலிழையில் உயிர் தப்பியதாக சொல்லியிருக்கிறார்.

ஆனால் உயிர் மட்டும் தான் மிஞ்சியது.

அவர் கட்டிய வீடு, கடை, சேர்த்து வைத்த பொருட்கள், தொழில் என எல்லாமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. கடைசியில் அவர் போட்டிருந்த சட்டை கூட இரவல் வாங்கியது என்று சொல்லும் போது அந்த வலியின் ஆழம் புரிகிறது.

இதைவிட பெரிய சோகம், இந்த வெள்ளத்தில் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்ததாக வந்த செய்தி தான். ஒருவரின் உடல் மட்டுமே மீட்கப்பட்டதாக தகவல்கள் சொல்கின்றன.

அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் எல்லாவற்றையும் சொல்லும் - "வெள்ளம் என்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொண்டு போய்விட்டது"

யோசித்துப் பாருங்கள், ஒரு மனிதன் 20 வருடம் உழைத்து ஒரு வாழ்க்கையை உருவாக்குகிறான். ஆனால் இயற்கையின் சீற்றம் அதை சில நிமிடங்களில் இல்லாமல் செய்துவிடுகிறது.

பணத்தை திரும்ப சம்பாதித்து விடலாம், வீட்டை திரும்ப கட்டிவிடலாம், தொழிலை திரும்ப ஆரம்பித்து விடலாம். ஆனால் இழந்த உயிர்களை திரும்ப கொண்டு வரவே முடியாது.

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசோக் போன்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீண்டு வர பிரார்த்திப்போம்

  • 130
  • 126
·
Added article

🌹''ஜென்சின்னு ஒரு பொண்ணு இருக்காங்க. அற்புதமான குரல். நீங்க ஒரு தடவை கேளுங்க. பிடிச்சுருந்தா உங்க இசையில் பயன்படுத்திக்கங்க'''' இதுதான் இளையராஜாவிடம், பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சொன்னது.

🌹திறமையற்றவர்களை யேசுதாஸ் போன்றவர்கள் பரிந்துரை செய்யமாட்டார் அப்படின்னு சொல்லுற இளையராஜா, உடனே ஜென்சியை கேரளாவில் இருந்து வரச்சொல்லி குரல் சோதனை செய்கிறார்.

🌹அப்போது ஜென்சி '''அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே''' பாடல் பாடுகிறார். குரல் சோதனைக்காக வந்த ஜென்சிக்கு உடனடியா பாடும் வாய்ப்பு கிடைக்குது. திரிபுரசுந்தரி அப்படிங்கிற படத்தில் ஜானகியோட இணைந்து ஒரு பாடல் பாடுறாங்க. இரண்டாவது 'வட்டத்துக்குள் சதுரம்'' படத்தில் ஒரு பாடல் பாடுகிறார்.

🌹அடுத்த பாடல்தான் ஜென்சியின் குரலைத் தமிழர்களின் வாழ்க்கையில் நிரந்தரமாக்கியது.

🌹மழை முடிந்த பொன்மாலை ஒன்றில், மிச்சமிருக்கும் குளிரோடு இணைந்து வரும் இளம் சூரியனைப்போன்ற ''அடி பெண்ணே'' பாடல்தான் அந்த இரண்டாவது பாடல்.

🌹அவர் அறிமுகமான அந்த 1978 -ம் வருடத்திலேயே அடுத்தடுத்து ஐந்து பெரிய படங்களில் பாடினார். அதில் ஒரு பாடல் பிரியா படத்தில் வரும் என்னுயிர் நீதானே''' பாடல்.

🌹அவரை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய யேசுதாசுடன் இணைந்து பாடிய அந்தப்பாடல்தான் ஜென்சியின் மனதுக்கு நெருக்கமான பாடல் என்று கூறுகிறார்கள்.

🌹புதிய வார்ப்புகள் , நிறம் மாறாத பூக்கள் படங்களில் அவர் பாடியிருந்த பாடல்களைக் கேட்ட பின், ஜென்சியின் தீவிர ரசிகராக இயக்குனர் பாரதிராஜா மாறினார் . இதன் காரணமாகவே அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், என்று வரிசையாக பாரதிராஜா படங்களில் தொடர்ந்து பாடினார் ஜென்சி.

🌹புதிய வார்ப்புகள் படத்தில் ஜென்சி பாடிய 'தம்தனதம்தன தாளம் வரும்' பாடல் இப்போதும் ஆச்சரியமானது என்கிறார்கள். மலையாளம் மட்டுமே தெரிந்த ஜென்சி, தமிழை அத்தனை அழகாக மூச்சு விடாமல் பாடியது முக்கியமானது என்கிறார்கள்.

🌹தமிழ்த் திரையுலகிலிருந்து ஜென்சி காணாமல் போனதற்கு அவருடைய தந்தை அந்தோணி ஒரு காரணம் என்று பத்திரிக்கைகளில் இப்போதும் குற்றம்சாட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் தங்கவிடாமல் செய்து, ஜென்சியை இசையமைப்பாளர்கள் தொடர்பு கொள்ள விடாமல் செய்துவிட்டார் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

🌹பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி ஆகியோரும் ஜென்சி தமிழ்த் திரையுலகில் இருந்து காணாமல் போனதற்குக் காரணம் என்று பூடகமாகச் சொல்லப்பட்டாலும், தான் இப்போதும் எஸ்.ஜானகியுடன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதாக ஜென்சி சமீபத்திய பேட்டி ஒன்றில், கூறி இருக்கிறார்.

  • 166
·
Added article

திருவிளையாடலில் நடந்த அனுபவம்

க்ளாசிக் சினிமாவில் காமெடியில் கலக்கிய முக்கிய நடிகர்களில் ஒருவர் நாகேஷ். மனமுள்ள மறுதாரம் என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நாகேஷ், எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். காமெடி வசனங்கள் மட்டுமல்லாமல் தனது உடல்மொழியாலும் ரசிகர்களை சிரிக்க வைத்த நாகேஷ் ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

அதேபோல் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி கணேசன் தான். அவரை போல் யாரும் நடிக்க முடியாது, அவர் ஒரு நடிப்பு பல்கலைகழகம், அவரை தான் இன்றைய நடிகர்கள் பலரும் பின்பற்றி வருகிறார்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். சிவாஜி நாகேஷ் கூட்டணியில் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் திருவிளையாடல் படத்தில் அந்த தருமி கேரக்டரில் நாகேஷ் தான் நடிக்க வேண்டும் என்று சிவாஜி விரும்பியதாகவும் தகவல்கள் உள்ளது.

இதுகுறித்து ஓர் பேட்டியில் நாகேஷ் கூறுகையில்,அதேபோல் திருவிளையாடல் படம் எனக்கு தருமி வேஷம் என்ற உடனே நான் அதில் எதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

அப்போது மைலாப்பூர் கபாலீஸ்வர் கோவிலில் ஒல்லியான ஒருவர் செய்ததை தான் நான் திருவிளையாடல் படத்தில் செய்தேன். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையில் கிடைத்த 2 மணி நேர இடைவெளியில் தான் அந்த காட்சியில் நடித்தேன். அந்த வருடத்தில் தான் நான் நடித்த 46 படங்கள் வெளியானது. அப்படி என்றால் நான் எவ்வளவு பிஸி என்று நினைத்துப்பாருங்கள்.

இந்த படத்தின் ஷூட்டிங்கில் சிவாஜிக்கு சிவன் வேஷம் போட லேட் ஆனும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் நான் என் காட்சிகளை முதலில் வசனம் பேசிவிடுகிறேன் என்று கேமராமேனிடம் சொன்னேன் அவரோ நீங்கள் வசனம் பேசும்போது சிவாஜி வந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டார். ஆனாலும் அவரை சமாதானப்படுத்தி நான் நடித்துக்கொண்டிருந்தேன்.

ஆனால் நான் நடிக்க தொடங்கிய உடனே சிவன் வேடத்தில் சிவாஜி செட்டுக்குள் வந்துவிட்டார். இதை பார்த்து கடுப்பான சிவாஜி இயக்குனரிடம் என்ன நாகேஷ் நடிச்சிட்டு இருக்கான் என்று கேட்டார். அதன்பிறகு இயக்குனர் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். நடித்து முடித்து அந்த காட்சியை பார்த்த சிவாஜி நாகேஷ் நல்ல நடிச்சிருக்கான். ஒரு சில இடங்களில் மட்டும் சரியாக வரல அந்த இடங்களில் மீண்டும் நடிக்க சொல்லுங்கள் என்று சிவாஜி சொன்னார்.

தீபம் படத்தில் ஒரு காட்சியில் ரஹீம்பாய் என்று அவர் என்னை கூப்பிட வேண்டும். அவர் கனீர் குரலில் கூப்பிட்டார் ஆனால் நான் ஒன்றுமே பேசிவில்லை. கேமரா கட் ஆனதும் சிவாஜி என்னை அழைத்து என்னாச்சி உனக்கு என்று கேட்க, ஒரு வேலைக்காரன் துரோகம் செய்துவிட்டதால் இந்த வேலைக்காரனிடம் ஆதரங்கத்தை தீர்க்க பேசுகிறீர்கள். அப்படி இருக்கும்போது உங்கள் குரலில் கம்பீரம் இருக்க கூடாது கனிவு தான் இருக்க வேண்டும் என்று சொன்னேன்.

அதன்பிறகு நான் எப்படி நடிக்க வேண்டும் நீயே நடித்து காட்டு என்று சொன்னார். நான் தயங்கினேன். ஆனால் அவர் நடிக்க சொல்லி வற்புறுத்தியதால் நான் நடித்து காட்டினேன். அதை அவருக்கே உண்டான ஸ்டைலுடன் நடித்து முடித்தார். எனக்கே அழுகை வந்துவிட்டது. நடித்து முடித்தவுடன் எப்படி டா என்று என்னை பார்த்து கேட்டார் நான் கோடு தான் போட்டேன் நீங்கள் ரோடே போட்டுவிட்டீர்கள் என்று சொன்னேன் என நாகேஷ் கூறியுள்ளார்.

  • 172
·
Added article

🌹சாரதா ஸ்டுயோவில் திருவரூட் செல்வர் படப்பிட்டிப்பில் சிவாஜிகணேசன் திருநாவுக்கரசர் என்ற அப்பர் வேடத்தில் சிவனடியாராக நடித்துக்கொண்டருந்தார்

🌹படப்பிடிப்பு முடிந்த பிறகு வேடத்தை களைக்காமல் அன்னை இல்லம் நோக்கி காரில் செல்கிறார்

🌹 கார் போக்ரோட்டில் நுழைக்கிறது சிவாஜிகணேசன் டிரைவரிடம்(சிவா)

வீடு வரை ஹாரன் அடிக்காமல் போய் உள்ளே செல்லாமல் வெளியே காரை நிறுத்து என்று சொல்கிறார் டிரைவர் அவ்வாறே செய்கிறார்

🌹எஜமானின் கார் வருவதை கண்டு அன்னை இல்ல காவலாளி கேட்டை திறக்கிறார் காரில் இருந்து சிவாஜிகணேசன் கீழே இறங்கி வாயில் விரலை வைத்து உஷ் என்று காவலாளிக்கு சைகை செய்துவிட்டு ஒரு முதியவர் போல் உள்ளே நடந்து சென்றார் வாசலை அடைந்ததும் குரலை மாற்றி

🌹அம்மா தாயே என்று குரல் கொடுக்கிறார்

🌹குரலை கேட்டு வருகிறார் ராஜாமணி அம்மையார் அம்மாவை கண்டதும் தாயே நான் ஒரு சிவபக்தன் கைலாய மலை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் ஒருவாய் சோறு கிடைக்குமா என்று கேட்டார்

🌹பக்தி பரவசத்தில் வந்திருப்பது தன் மகன் என்று அறியாமல் மரியாதையுடன் அழைத்து சென்று உணவு பரிமாறி வணங்குகிறார்

🌹சாமியார் சாப்பிடுவதை பார்த்து நம்ம கணேசன் சாப்பிடுவதை போல இருக்கிறதே என்று கூர்ந்து கவனிக்கிறார் ராஜாமணி அம்மையார்

🌹எத்தனையோ முகபாவங்களை காட்டுபவர் தன் தாய் முக மாறுதலை கண்டு சத்தம் போட்டு சிரிக்கிறார் அந்த சிரிப்பு சத்தம் கேட்டு சாப்பிடுவது தன் மகன் கணேசன் என்று உணர்ந்து பிரமிக்கிறார் ராஜாமணி அம்மையார்

🌹தன் நடிப்பு திறமையலும் பொருத்தமான வேடத்தினாலும் பெற்ற தாயின் கண்களையே ஏமாற்றிவர் சிவாஜி கணேசன்.

  • 171
·
Added a post
  • 230
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 3.9.2026

இன்று அதிகாலை 04.12 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று அதிகாலை 02.20 வரை பரணி. பின்னர் கிருத்திகை.

இன்று இரவு 07.42 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.

இன்று அதிகாலை 04.12 வரை வணிசை. பின்னர் மாலை 03.10 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று அதிகாலை 02.20 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.03 வரை அமிர்த யோகம். பின்பு மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=637&dpx=2&t=1788403438

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 229

Good Morning...

  • 226
·
Added a post

ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திருமால் கருடனை பார்த்து கேட்டார் "இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர் கருடா...?" என்று.

அதற்கு சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார் "மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகா பிரபு" என்றார்.

மகாவிஷ்ணு "என்ன மூன்று விதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான மக்கள் தானா உள்ளார்கள்" என்று கேட்டார்.

"மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்...? என்னை வைத்து என்ன நாடகமோ தெரியவில்லை...? ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்று விதமான மக்கள் தான் உள்ளனர்" என்று கூறினார் கருடன்.

"அப்படியானால் அவர்களைக் கூறு பார்க்கலாம்" என்றார் மகாவிஷ்ணு.

கருடன் சொன்னார்

"பிரபு முதல் வகையினர்: பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.

இரண்டாம் வகையினர்: பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர்.

மூன்றாம் வகையினர்: கணவனும் மனைவியும் போல் உள்ளனர் அவ்வளவு தான் மகா பிரபு" என்றான்.

மகாவிஷ்ணு சும்மா விடுவாரா !!! "சற்று விளக்கமாக புரியும்படி சொல்" என்றார்.

சொல்ல துவங்கினார் கருடன்

"முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும் எப்படியென்றால் ...

பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலையெல்லாம் படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும். அதுபோல் குஞ்சுகளுக்கும் தன் வாயில் ஊட்டப்படும் உணவு தான் தெரியும், தன் தாய் யார், தகப்பன் யார் போனது வருமா வராதா எதுவும் தெரியாது, நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும், மீந்து போன பறவை வாழும் வரை வாழும், அவ்வளவு தான்...

இந்த வகை மனிதர்கள் இது போலத்தான் ஏழ்மையுடன் போராட்டம், கூலி வேலை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையா பட்டினி கிடப்பார்கள், அவர்களுக்கு உன்னைப் பற்றியே கூட தெரியாது. வாழ்வார்கள், வாழும் வரை அவ்வளவு தான்.

இரண்டாவது பசுவும் கன்றும் எப்படியென்றால்...

பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும், அதன் கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும், கன்றுவுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று. ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது, கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும்.

அது போல ஒரு சாராருக்கு உன்னைத் தெரியும், உன் வழி தெரியும், உன்னால் தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும், ஆனாலும் உன்னிடம் வர முடியாமல் பாசம் என்ற ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கொண்டு உன்னை பார்த்து பார்த்து ஏங்கி தவிக்கும்.

மூன்றாவது கணவனும் மனைவியும் எப்படியென்றால்...

முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி போவான், ஆனால் அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்கு பிடித்த வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு சமைத்து, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு அவனைக் கவர்ந்து தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள், முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான், அவளை பிரிய மறுக்கிறான், பிரசவத்திற்கு அனுப்பி விட்டு இவனும் பின்னாலேயே செல்கிறான்.

அது போல ஒரு சாரார் உன்னை கண்டதில்லை, ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக உணர்த்தப்பட்டு உன்னை காண முற்படும் வேளையில், உனக்கு பிடித்த உடை, உணவு, அலங்காரம் என்று தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். முதலில் சோதிக்கும் நீ எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகிறாய், எங்களோடு உறவாடுகிறாய், முடிவில் உன்னோடு எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறாய் நாங்களும் ஆனந்தமாக உன்னோடு கலந்து விடுகிறோம் ஆக மூன்று விதமான மனிதர்கள் தான் உலகில் உள்ளனர் என்றார் கருடன்.

மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு கருடனை வாழ்த்தி தன்னுள் ஏற்றுக் கொண்டார்.

  • 321
·
Added article

🌹ஓவர் ஆக்டிங் என கிண்டலடித்த சோ!.. ரூமுக்கு கூட்டிச்சென்று சிவாஜி என்ன செய்தார் தெரியுமா?..

🌹சிவாஜி கணேசன் மிகையாக நடிக்கிறார் அதாவது ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது பலரும் வைப்பதுண்டு. அவருடன் நடித்த சில நடிகர்களும் அதை கூறியதுண்டு. ஆனால், சிவாஜி தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. ஒருமுறை நடிகர் சோ ராமசாமியுடன் ஒரு படத்தில் சிவாஜி நடித்துக்கொண்டிருந்தார். ஒரு காட்சியில் சிவாஜி நடிப்பை பார்த்து படப்பிடிப்பு தளத்தில் இருந்த பலரும் கைதட்டி பாராட்டியுள்ளனர்.,

🌹ஆனால், சோ மட்டும் அமைதியாக இருந்தாராம். அதை பார்த்துவிட்ட சிவாஜி சோ-வை அங்கிருந்த ஒரு அறைக்க அழைத்து சென்று பேசினாராம்.

‘🌹நான் அடித்த அந்த காட்சி உனக்கு பிடிக்க வில்லை.இல்லையா?’ என சிவாஜி கேட்க ‘ஆமாம் சார். ஓவர் ஆக்டிங் போல இருந்தது’ என்றாராம் சோ. அதற்கு சிவாஜி ‘வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் நான் பேசுவது பிடித்திருந்ததா?’ என கேட்டாராம். அதற்கும் சோ ‘பிடித்திருந்தது. ஆனால், அதிலும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருந்தது’ என சொன்னாராம்.

🌹அப்போது பேசிய சிவாஜி ‘நான் சோவுக்கு பிடிப்பது போல் நடித்தால் மக்களிடம் செல்ல முடியாது. பொதுவான ரசிகருக்கு என ஒரு அளவு இருக்கிறது. அதை கொடுத்தால்தான் நான் மக்களிடம் சென்றடைய முடியும்’ எனக்கூறிவிட்டு அந்த கட்டபொம்மன் காட்சியை நான்கு விதமாக நடித்து காட்டினாராம். ஹாலிவுட் நடிகர் போல் ஒன்றையும், சோ நடித்தால் அந்த காட்சி எப்படி இருக்கும் என்பதையும் சிவாஜி நடித்துக்காட்ட பிரமித்துப்போன சோவுக்கு கண்ணில் கண்ணீரே வந்துவிட்டதாம். அதன்பின் சிவாஜியை எங்கேயும் ஓவர் ஆக்டிங் என சோ சொல்வது இல்லையாம்.

  • 326
·
Added a post

அப்போது காமராஜர் தமிழக முதல்வர்.

மண்ணாங்கட்டிக்கு கோபம். "என்னங்கய்யா நீங்க... இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு

100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா," என்று பதிலுக்கு சத்தம் போட்டார்.மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி.அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துக் காட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். 'அரசாங்க உத்தியோகத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்," என்று முதல்வர் காமராஜர் போட்ட உத்தரவுதான்

அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். மூக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்டார் தேவர். "இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா..." என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார்.

ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று "முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்," என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசி வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்.

மண்ணாங்கட்டி புக் செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். "யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்?" என்கிறார்.அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா...", என்றபடியே அருகில் இருந்த மூக்கையா தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. "எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா" என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல், "ஐயா, எழுதப் படிக்கத் தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ, நான் பியூனா இருக்ககூடாதான்னு தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க," என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை...

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்து விட்டார்கள். "முதல்வருக்கு போன் செய்தது யார்?" என்றார்கள்.

"நான்தான் ஐயா" என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி.

"முதல்வர் உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள்," என்று சொல்லி விட்டு நின்றார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வருடன் புரிகிறது. மூக்கையா தேவருக்கும் பதட்டம்.

மண்ணாங்கட்டி, "ஐயா நீங்களும் வாங்க," என்று அழுகிறார்.

"பின்னாடியே வருகிறேன். நீ போப்பா," என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜரை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதல்வரின் அறையில் உள்ள சோபாவில், கன்னத்தில் கை வைத்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர்.

கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.

"நீங்கதான் மண்ணாங்கட்டியா...", என்கிறார்.

"ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா," என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்குப் பிடிக்காது. அதிகாரிகளைப் பார்க்க, உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள்.

அவரைப் பார்த்து, "வா...வான்னேன். வந்து பக்கதில உட்காரு," என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கித் தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்

பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்துக் கும்பிட்டு, "நான் தப்பு பண்ணிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரிய வைச்சே... ரெண்டு நாளா உங்கவீட்ல சோறு தண்ணியில்லியாமே. சமைக்கலயாமே.... உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க... எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.. எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கக் கூடாது.

இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்'னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல, மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை.

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளைப் பார்த்து 'இவரை அழைத்துக்

கொண்டு போங்க. 'வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க'ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார்.

பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி, "போகிற

போது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்," என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பி வைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, ஏழை மக்களுக்காகவே கடைசி மூச்சுவரை வாழ்ந்தார்.

இனி இப்படி ஒரு முதல்வர் கிடைப்பாரா? என்பது தமிழகத்தில் நின்று நிலைத்துவிட்ட கேள்வி

  • 331
·
Added a post

மூணு பவுன்லே ஒரு செயின் வாங்கி தாங்கன்னு போனவருஷமே கேட்டேன்…. நீங்க ஏதேதோ சொல்லி மழுப்பினீங்க……இப்ப கேட்டா இதோ.. அதோன்னு சொல்லி ஏமாத்துறீங்க……

இனிமே…..நீ எப்படி சொன்னா புரிஞ்சிப்பேன்னு பார்த்து அப்படி சொல்றேன் செல்லம்…….

இனிமே இந்த அலம்பலும் வேணாம்…. புலம்பலும் வேணாம்…..உனக்கும் எனக்கும் ஒண்ணு இருக்கு இல்லே..,

ஆமா….. சொந்தம்…பந்தமுன்னு சொல்லிக்கஒரு பிள்ளை…. அதற்கென்ன….

போய்யா வெண்ணை….. நான் ஜாயிண்ட்அக்கௌண்ட்டை….சொன்னேன்

என்னடி செஞ்சே.. பாவி….

அதிலே மூணு லட்சம் எடுத்து செயின் வாங்கிட்டேன்….

அய்யயோ……அய்யகோ…

பெரிய புலவரு இவரு…. போய்யா டுபுக்கு…..

  • 334