- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள். செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு.
எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.
செவ்வாழையில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.
நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள்.
நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் இதில் இயற்கையாக ஆன்டாசிட் (Antacid) தன்மை உள்ளது. இதனால் இப்பழத்தை தினமும் உட்கொண்டு வர நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும்
சிறுநீரகத்தில்(கிட்னியில்)கல் இருந்தால் வெடிக்காத தென்னம்பாளையின் உள்ளே உள்ள பருப்பு - அரிசி போன்று இருக்கும், ஒரு கையளவு எடுத்து சாறு பிழிந்து எடுத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து ஐந்து முதல் ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால், எத்தனை பெரிய கல் ஆயினும் முழுமையாக சிறுநீரகத்தில் இருந்து வெளி வந்து விடும், சாப்பிட்ட உடனே ஒரு சில வினாடிகளில் கடுமையான வலி முற்றிலும் குறைந்து விடும்,
இன்றைய நாள் எப்படி? 11.9.2026
மேஷம்: பொறுத்திருந்து சில காரியங்களை முடிப்பது நல்லது. செலவுகளைக் குறைத்து சேமிக்க முயற்சிப்பீர். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
ரிஷபம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.
மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர். சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிட்டும். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர். பிள்ளைகளின் விருப்பங்களைக் கேட்டறிந்து நிறைவேற்றுவீர். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் பணிச்சுமை இருக்கும்.
சிம்மம்: தம்பதிக்குள் மனஸ்தாபம் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக டென்ஷன் வந்து போகும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
கன்னி: அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். உடல் சோர்வு, சோம்பல் அதிகரிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரம் சூடு பிடிக்கும்.
துலாம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து நெருக்கம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.
விருச்சிகம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட்டு சாதிப்பீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
தனுசு: குடும்பத்தினருடன் விவாதங்கள் வந்து போகும். திடீர் பயணம், செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர். வங்கியில் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
மகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். விரயச் செலவு வரக்கூடும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவை விற்பனை யாகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.
கும்பம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு.
மீனம்: நம்பிக்கைக்கு உரியவர்கள் உதவி புரிவர். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 11.9.2026.
இன்று காலை 09.40 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.
இன்று பிற்பகல் 02.47 வரை பூரம். பின்னர் உத்திரம்.
இன்று இரவு 07.45 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று காலை 09.40 வரை நாகவம். பின்னர் இரவு 09.15 வரை கிமிஸ்துக்கினம். பின்பு பவம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் தேடி வருவர். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் உங்களின் பணி சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். அரசால் அனுகூலம் உண்டு. அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். வியாபாரம் சிறக்கும்.
மிதுனம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். அரசு தொடர்புடைய நபர்களை சந்திப்பீர். நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்கள் உதவி நாடி பழைய நண்பர்கள் வருவர். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புது சரக்குகள் வந்திறங்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
சிம்மம்: உடல்நலக் குறைவு, மனச்சோர்வு வரக் கூடும். திட்டமிட்ட பணிகளை முடிக்க முடியாமல் திணறுவீர். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கன்னி: அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த பகை விலகும். பிள்ளைகளின் பாசம் கூடும். அலுவலகத்தில் உங்களின் அருமை புரியும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்.
துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு முக்கியத் தீர்வு காண்பீர். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்.
விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். சமயோஜிதமாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். எதிர்பார்த்த உதவி கிட்டும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார்.
தனுசு: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். வீட்டை விரிவுபடுத்துவீர். பழைய நண்பர்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்றுமொழி, மதத்தவர் உதவுவர். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று லாபம் தரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். வெளிவட்டாரத்தில் விவாதங்களை தவிர்க்கவும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். பயணங்கள் அலைச்சல் தரும்.
கும்பம்: வேலை தேடி அலைந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
மீனம்: பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர் களின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தை விரிவுபடுத்த புது முயற்சிகள் எடுப்பீர். பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை 10.9.2026.
இன்று காலை 10.56 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.
இன்று மாலை 03.14 வரை மகம். பின்னர் பூரம்.
இன்று இரவு 09.11 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.
இன்று காலை 10.56 வரை சகுனி. பின்னர் இரவு 10.18 வரை சதுஸ்பாதம். பின்பு நாகவம்.
இன்று காலை 06.03 வரை சித்த யோகம். பின்னர் மாலை 03.14 வரை அமிர்த யோகம். பின்பு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
காட்டில் அலைந்து கொண்டிருந்தபோது, ஒரு மன்னரை பாம்பு கடித்தது. அரச மருத்துவர் எவ்வளவோ முயன்றும் மன்னரின் உடலில் விஷம் பரவுவதைத் தடுக்க முடியாததால், அனைவரும் கண்ணீர் விட்டனர்.
அப்போது, ஒரு துறவி போன்ற தோற்றமுடையவர் அங்கு வந்தார். விஷத்தின் வேதனையால் துடித்துக்கொண்டிருந்த மன்னரின் காலைப் பார்த்த அவர், பாம்பு கடித்த இடத்தில் எச்சிலை உமிழ்ந்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
மன்னரின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த அவரது பரிவாரங்கள், அந்தத் துறவியின் விசித்திரமான செயலுக்காக அவரைப் பிடித்துத் தண்டிக்க முயற்சிக்கவில்லை.
அரச மருத்துவர் ஒரு கைக்குட்டையை எடுத்து, விஷத்தால் நீல நிறமாக மாறியிருந்த மன்னரின் காலில் இருந்த எச்சிலைத் துடைக்கத் தொடங்கினார்; ஆனால் அவர் வியப்பில் உறைந்து நின்றார். பின்னர், அந்த எச்சிலை விரலால் கடித்த காயத்தில் நன்றாகத் தேய்த்தார்; உடனே விஷத்தின் வீரியம் மறைந்துபோனது.
மன்னர் சுயநினைவு பெற்றார். அந்தத் துறவி தன் மீது எச்சில் உமிழ்ந்த கதையை அறிந்ததும், உடனடியாக அவரைத் தேடிக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
வீரர்கள் எல்லா திசைகளிலும் தேடிச் சென்றனர்; சிறிது நேரத்திலேயே, ஒரு மரத்தடியில் இருந்த அந்த துறவியைக் கண்டுபிடித்து, அவரைப் பிடித்து மன்னரின் முன் கொண்டு வந்தனர்.
மன்னர் அந்தத் துறவியிடம் பணிவாகப் பேசினார்: "பாவிகளான எங்களால் உங்களை அடையாளம் காண முடியவில்லை; இதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் வழங்கும் இந்தச் சிறந்த ஆடையையும் அரேபியக் குதிரையையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்."
அந்தத் துறவி மன்னரைப் பார்த்துப் புன்னகைத்து, "இந்தக் குதிரையும் ஆடைகளும் மிகவும் மதிப்புமிக்கவைதான்; ஆனால், இத்தகைய ஆடைகளை அணிந்துகொண்டு இந்த குதிரைக்காக புல் அறுப்பது மிகவும் அபத்தமாகத் தோன்றும்," என்று கூறினார்.
அதற்கு மன்னர், "கவலைப்பட வேண்டாம்; குதிரையை பராமரிக்கப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்," என்று பதிலளித்தார்.
துறவி கேட்டார், "அப்படியானால், இவ்வளவு மதிப்புமிக்க ஆடைகள், சிறந்த குதிரை மற்றும் பணியாளர்களுடன் நான் எங்கே வசிப்பேன்?"
இம்முறை மன்னர் புன்னகைத்து, "உங்களுக்கென ஒரு பிரம்மாண்டமான மாளிகையும் கட்டித் தரப்படும்," என்று கூறினார்.
துறவி கேட்டார், "அவ்வளவு செல்வத்துடனும் பணியாளர்களுடனும் அந்த மாளிகையில் நான் தனியாகவா வசிக்க வேண்டும்?"
மன்னர் பதிலளித்தார், "என் மகள் இளவரசி குல்னார் உங்களுக்கு மணம் முடித்து வைக்கப்படுவாள்." அதற்குத் துறவி, "நீங்கள் எனக்குத் திருமணம் செய்து வைத்தால், எனக்கும் குழந்தைகள் பிறப்பார்களே," என்று கூறினார். அரசர் பதிலளித்தார்: "நிச்சயமாக; உங்களுக்குப் பல குழந்தைகள் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை."
அந்தத் துறவி கேட்டார்: "ஒருவேளை—கடவுள் காக்கட்டும்—அக்குழந்தைகளில் ஒருவருக்கு ஏதேனும் நேர்ந்தால், யார் கண்ணீர் சிந்த வேண்டியிருக்கும்?"
அரசர் பதிலளித்தார்: "ஐயா, அது இறைவனின் விருப்பப்படி நடந்தால், அப்போது *நீங்கள்தான்* கண்ணீர் சிந்த வேண்டியிருக்கும்."
புன்னகைத்தவாறே அந்தத் துறவி கூறினார்: "அத்தனையையும் பெற்ற பிறகு நான் கண்ணீர் சிந்த நேரிடும் என்றால், என் குதிரையையும் விலையுயர்ந்த ஆடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்; அரசே, ஒரு துறவியாக என் வாழ்க்கையிலேயே நான் மனநிறைவு கொள்கிறேன்."
உன் இதயத்தைப் படைத்த இறைவனிடமே அதை சமர்ப்பிப்பாயாக; உலகத்தின் மீது அதைச் சார்ந்திருக்கச் செய்தால், கண்ணீரைத் தவிர வேறெதையும் நீ காணமாட்டாய் என்று சொல்லி விட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார் துறவி.
- புத்தரின் வருகைக்காக காத்திருந்தனர் சீடர்கள். சிறிது நேரத்தில் புத்தர் வந்தார்.
- அவரது கையில் கைக்குட்டையை விட கொஞ்சம் பெரிய துணி இருந்தது.
- சீடர்களுக்கு எதிரே இருந்த மேடையில் அமர்ந்த புத்தர், எதுவும் பேசாமல் கையில் இருந்த துணியில் முடிச்சுகளைப் போடத் தொடங்கினார். 5 முடிச்சுகள் போட்டார்.
தன்னையே உற்று நோக்கிக்கொண்டிருந்த சீடர்களை பார்த்த புத்தர்,
"நான் ஐந்து முடிச்சுகள் போட்டேன். இதை அவிழ்க்கப் போகிறேன்",அதற்கு முன் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன், என்றார்.
- என்னுடைய முதல் கேள்வி; இப்போது முடிச்சுகள் விழுந்துள்ள இந்தத் துணி, முன்பிருந்த அதே துணிதானா? முடிச்சுகள் இல்லாததும், உள்ளதும் ஒன்றுதானா?’ என்று கேட்டார்.
புத்தரின் முக்கிய சீடர்களில் ஒருவரான அனந்தன் எழுந்து, ‘சுவாமி! ஒரு வகையில் முன்பிருந்ததும், இப்போது இருப்பதும் ஒன்றுதான். ஆனால் அதில் இருக்கும் முடிச்சுகள் மட்டுமே வேறுபாடு.
'முன்பு இருந்த துணி சுதந்திரமானது. இப்போதுள்ள துணி முடிச்சுகளால் அடிமைப்பட்டு கிடக்கிறது’ என்றார்.
உடனே புத்தர்,‘சரியாக சொன்னாய்.எவரும் இயல்பில் பிரச்சினை இல்லாதவர்கள். ஆனால் முடிச்சுப்போட்டுக்கொண்டு, சிக்கலில் சிக்கி,அதற்கு அடிமைப்பட்டு போய் விடுகிறார்கள்.
இதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்’ என்றார்.
பின்னர் சற்று நேரம் அமைதியாக இருந்த புத்தர்,
2. ‘என்னுடைய இரண்டாவது கேள்வி, இந்த முடிச்சுகளை அவிழ்க்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.
இப்போது இன்னொரு முக்கிய சீடன் சாரி புத்தன் எழுந்து நின்றான். ‘
"குருவே! அந்த முடிச்சுகளை அவிழ்க்க, நான் அருகில் வர அனுமதிக்க வேண்டும்.
முடிச்சுகள் எவ்வாறு போடப்பட்டுள்ளன என்று அறியாதவரை, அவற்றை அவிழ்க்க வழியில்லை…என்றான்
‘சரியாகச் சொன்னாய். என்றார் புத்தர்.
அதுதான் வாழ்க்கை. அது தான் வாழ்க்கையின் ரகசியம். நம்முடைய சிக்கல்களுக்கு நாமே காரணம். நம்மை அறியாமல்,நாம் போட்டுக் கொள்ளும் முடிச்சுகளில் சிக்கித் தவிக்கிறோம், என்றார் புத்தர்.
இதுதான் புத்தர் கூறும் பாடம்.
"நான் செய்ததற்கு எனக்கு பிறர் நிதி உதவி எதுவும் தேவையில்லை. நான் இதை மனிதநேயத்திற்காகவே செய்தேன்."
21 உயிர்களை பலிவாங்கிய ஃபுளோரிஷ் ஸ்டேஸ் (Flourish Stays) ஹோட்டல் தீ விபத்திற்குப் பிறகு, வீரன் என்று போற்றப்படும் டெல்லியைச் சேர்ந்த கடைக்காரர் ரியாசுதீனின் வார்த்தைகள் இவை.
கட்டிடத்தை தீப்பிழம்புகள் சூழ்ந்ததால், பீதியடைந்த விருந்தினர்கள் தப்பிக்க ஜன்னல்களிலிருந்து குதிக்கத் தொடங்கினர். அப்போது ரியாசுதீனும் அவரது மகனும் சற்றும் யோசிக்காமல் களத்தில் இறங்கினர். அவர்கள் அருகில் இருந்த தங்களது மெத்தை கடைக்கு விரைந்து சென்று, டஜன் கணக்கான மெத்தைகளை தெருவில் தூக்கி வீசினர். இதன் மூலம் வேறு வழியின்றி தவித்த மக்களுக்கு ஒரு தற்காலிகப் பாதுகாப்புப் படுக்கையை உருவாக்கினர்.
இந்த மீட்பு முயற்சியில், ரியாசுதீனுக்கு அவரது மகளின் திருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில், சுமார் ₹2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நஷ்டமடைந்தன. அவரது இந்த துணிச்சலான செயல் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டது. மேலும் பலரும் அவருக்கு நிதியுதவியும் ஆதரவும் வழங்க முன்வந்தனர்.
ஆனால், ரியாசுதீன் அந்த உதவிகளை மரியாதையுடன் மறுத்துவிட்டார்.
"நான் செய்ததற்கு எனக்கு பிறர் நிதி உதவி எதுவும் தேவையில்லை. நான் இதை மனிதநேயத்திற்காகவே செய்தேன்," என்று அவர் கூறியது, இணையத்தில் அவருக்கு இன்னும் கூடுதலான பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்த தீ விபத்து பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும், ரியாசுதீனின் இந்த சுயநலமற்ற செயல், இருண்ட தருணங்களிலும் மனிதநேயம் இன்னும் பிரகாசமாக ஒளிர்கிறது என்பதை நமக்கு வலிமையாக நினைவூட்டுகிறது.





