- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைக்கு எதிராக நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
கங்காதர் பாபு என்பவர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2024 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பர் வரை இந்த மோசடி இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையின்படி, "பாபு" என்ற பெயரில் சேவையாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர், தன்னை ஆன்மீக சக்தி கொண்டவராகவும், எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடராகவும், ஆன்மீக சிகிச்சையளிப்பவராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டவரையும் அவரது குடும்பத்தினரையும் மரணம் அல்லது கடுமையான தீங்கு சூழும் என அச்சுறுத்தி, அதிலிருந்து காப்பாற்ற விசேட ஆன்மீக சடங்குகள் நடத்த வேண்டுமெனக் கூறி தொடர்ந்து பணம் பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கங்காதர் பாபு மீது 5,000 டொலருக்கு மேற்பட்ட மோசடி, குற்றச்செயலில் கிடைத்த வருமானத்தை வைத்திருத்தல் மற்றும் நிதிச் சலவையில் ஈடுபடல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர் தற்போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என டொராண்டோ காவல்துறை நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கங்காதர் பாபு சுமார் 5 அடி 6 அங்குல உயரம், ஒல்லியான உடலமைப்பு, கருமையான சுருட்டை முடி, அடர் பழுப்பு நிறக் கண்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட தாடி மற்றும் முன்பற்களுக்கு இடையில் தெளிவான இடைவெளி கொண்டவராக விவரிக்கப்பட்டுள்ளார்.
இந்த நபரால் ஏமாற்றப்பட்டிருக்கக்கூடிய மேலும் பலர் இருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதுடன், வழக்குத் தொடர்பான தகவல்கள் இருப்பவர்கள் முன்வருமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருமணமான புதிதில் ரோஹிணி மீது கோபத்தில் கொப்பளித்த ரகுவரன்.. அத்தனைக்கும் பின்னால் இருந்த எமோஷனல் விஷயம்..
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் சிறந்த வில்லன்கள் யார் என பட்டியல் போட்டால் நிச்சயம் அதில் நடிகர் ரகுவரனுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. 49 வயதில் உடல்நிலை சரி இல்லாமல் ரகுவரன் உயிரிழந்து 16 வருடங்களுக்கு மேல் ஆனாலும் அவரது கதாபாத்திரங்கள் உருவாக்கிய தாக்கம் கொஞ்ச நஞ்சம் கிடையாது.
இன்று பல வில்லன் நடிகர்களை நம்மால் திரையில் பார்க்க முடிந்தாலும் ரகுவரன் போன்ற ஒருவரின் இடத்தை நிரப்புவதே கடினமான விஷயம் தான். பாட்ஷா, காதலன், முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தனது வில்லன் நடிப்பால் ரசிகர்களுக்கு அச்சுறுத்தலையே ஏற்படுத்தி இருந்தாலும், இன்னொரு பக்கம் அஞ்சலி, முத்து, அமர்க்களம், திருமலை என நிறைய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வேறொரு பரிமாணத்தில் பட்டையை கிளப்பி இருப்பார்.
நடிப்புக்காக அதிக அர்ப்பணிப்பை செய்திருந்த ரகுவரன், தனது குரல் மூலமும் கூட கதாபாத்திரங்களில் வித்தியாசத்தை ரசிகர்கள் மத்தியில் உணர வைத்திருந்தார். இப்படி பெரிய அளவில் மெனக்கெட்டு தன்னை நடிப்புக்காக தயார் செய்து வந்த ரகுவரன், ஒரு கட்டத்திற்கு பிறகு வில்லன் கதாபாத்திரங்கள் இல்லாமல் குணச்சித்திர கதாபத்திரங்களில் மட்டும் தான் கவனம் செலுத்தி வந்தார்.
அதிலும் அவரது கடைசி கட்ட திரைப்படங்களான சிவாஜி, யாரடி நீ மோகினி உள்ளிட்டவற்றில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்திருந்தது. மேலும், பிரபல நடிகை ரோஹிணியை ரகுவரன் திருமணம் செய்து கொண்ட சூழலில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்தும் செய்து கொண்டனர்.
இதற்கு மத்தியில், உடல்நலக் குறைவால் தவித்து வந்த ரகுவரன், 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். இன்னும் அவர் நடித்து கொடுத்த கதாபாத்திரங்களுக்கு உயிர் இருக்கும் சூழலில், அவரை பற்றி முன்னாள் மனைவியும் நடிகையுமான ரோகிணி தெரிவித்த கருத்து பலரையும் ஒரு நிமிடம் அசர வைத்துள்ளது.
“எனக்கும், ரகுவரனுக்கும் கல்யாணமான புதிதில் என்னிடம் மிக ஆக்ரோஷமாக பேசினார். ஏன் இவரு இப்படி பேசுறாரு என எனக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பின்னர் தான் அவரது அம்மா என்னிடம் கூறினார், அப்படி கோபமாக இருந்தால் அவன் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறான் என்பதை கேள் என கூறுவார். உதாரணத்திற்கு அஞ்சலி படம் நடித்த சமயத்தில் அந்த அளவுக்கு அன்பாக தான் நிஜத்திலும் அனைவரிடத்திலும் பழகுவாராம். இது தான் கேரக்டராகவே வாழ்வது” என மெய்சிலிர்த்து போய் கூறினார் ரோகிணி.
இன்று பல நடிகர், நடிகைகள் அதிக அளவு நடிப்புக்காக மெனக்கெடல் இல்லாமல் இருக்க, ரகுவரனின் அர்ப்பணிப்பு பலரையும் ஒரு நிமிடம் வியந்து பார்க்க வைத்துள்ளது.
இந்திய சினிமா வரலாற்றிலேயே இசைக்கருவிகளே இல்லாமல் பாடல் ஒன்றை உருவாக்கியது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான், அது என்ன பாடல் என்பது பற்றி பார்க்கலாம்.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இளையராஜா கோலோச்சி வந்த கோலிவுட்டில் இசைப்புயலாக வந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தான் ரகுமான். முதல் படத்திற்கே தேசிய விருதும் வென்று அசத்தினார் ரகுமான். அதிலும் இளையராஜா உடன் அவருக்கு போட்டி இருந்தது. தேவர் மகன் படமா அல்லது ரோஜா படமா என்று இருந்த நிலையில், இறுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ராஜாவை வீழ்த்தி விருதை தட்டிச் சென்றார் ரகுமான்.
ரோஜா படத்தின் தொடங்கிய இவரது வெற்றிப் பயணம் 30 ஆண்டுகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார் ரகுமான். அவர் கைவசம் டஜன் கணக்கில் படங்கள் உள்ளன. ஒவ்வொரு படத்திற்கு வித்தியாசமான பல முயற்சிகளை எடுப்பதில் ஏ.ஆர்.ரகுமான் கில்லாடியாக இருந்து வந்துள்ளார். அந்த வகையில் அவர் இசைக்கருவிகளே இல்லாமல் இசையமைத்த ஒரு பாடல் பற்றி பார்க்கலாம்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் - இயக்குனர் மணிரத்னம் காம்போ என்றாலே அது வெற்றி தான். அப்படி ரோஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படம் திருடா திருடா. இப்படத்தில் பிரசாந்த் நாயகனாக நடித்திருந்தார். மேலும் ஹீரா, எஸ்பிபி, சலீம் கோஸ், அனு அகர்வால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ஸுக்காக தேசிய விருதையும் வென்று அசத்தியது.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகின. இதில் தான் இசைக்கருவிகளே இல்லாமல் ஒரு பாடலை கம்போஸ் செய்து ஒட்டுமொத்த திரையுலகையுமே வியப்பில் ஆழ்த்தி இருந்தார் ரகுமான். திருடா திருடா படத்தில் இடம்பெறும் ராசாத்தி என் உசுரு எனதில்ல என தொடங்கும் அப்பாடலை தான் இசைக்கருவிகளே இல்லாமல் இசையமைத்து இருந்தார் ரகுமான்.
இப்பாடலை ஷாகுல் ஹமீது பாடி இருந்தார். இசைக்கருவிகளே இல்லாமல் எப்படி சாத்தியம் என்று தானே யோசிக்கிறீர்கள். அதில் தான் ரகுமான் ஜீனியஸ் என்பதை நிரூபித்து இருக்கிறார். இசைக்கருவிகள் இல்லாவிட்டாலும் அகபெல்லா எனப்படும் கோரஸ் குரலை பின்னணிக்கு பயன்படுத்தி அப்பாடலை மெருகேற்றி இருந்தார் ரகுமான். இந்தியாவிலேயே இசைக்கருவிகளே இல்லாமல் இசையமைக்கப்பட்ட முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனை மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் ஆனந்தமான துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார்.
"மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார். உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்கனி கொட்டையை ஆற்றில் விட்டு விடு. இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்.
மன்னர் சரி என்றவாறு துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைக்கத்துவங்கினார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார்.
மரம் பெரியதாகி பழம் விடும் நேரம் வந்ததும் அரண்மணைக் காவலாளிகள் வைத்து மாங்கனியை யாரும் பறிக்ககூடாது. அப்படி சாப்பிட்டால் மரண தண்டனை என அறிவித்தார். இதைக் கேள்விப்பட்ட துறவி மன்னரிடம் வந்து ''மன்னா நீங்கள் அந்த மாங்கனி கொட்டையை நான் சொன்னதை கேளாமல் மரமாக்கி விட்டீர்கள். நீங்கள் நினைப்பது போல் அந்த மரத்தில் ஓரே பழம் மட்டுமே பழுக்கும் அதையும் நீங்கள் சாப்பிடக்கூடாது. அதை தெய்வீகப் பெண்மணி ஒருவரே சாப்பிடுவார். நீங்கள் சாப்பிட நினைத்தால் இந்த தேசம் அழிவுறும். என உரைத்து கிளம்பினார் துறவி. ஆனால் மன்னன் துறவி கூறியதை அலட்சியம் செய்தான்.
தாரகன் என்பவர் வியாபார விஷயமாக தன் மகள் தாரணி உடன் ஆனைமலைக்கு வந்திருந்தார். அப்போது அவர்கள் வீட்டின் அருகில் இருந்த தோழிகளுடன் தாரணி நந்தவனத்தில் உள்ள ஆற்றில் குளிக்கச்சென்றார். தாரணி நீராடும்போது அந்த மாமரத்தில் இருந்து தன் அருகே விழுந்த மாங்கனியை எடுத்து சாப்பிட்டார். இதனை அறிந்த மற்ற பெண்கள், மன்னனின் தண்டனை விவரத்தை எடுத்து கூறினர்.
அதற்குள் விஷயம் அறிந்த மன்னன் காவலாளிகளை விட்டு தாரணியை கைது செய்து, குற்றம் சாட்டப்பட்டு, மரணதண்டனையை அறிவித்தான்.
ஒரு மாங்கனிக்காக என் உயிர் பிரிந்தாலும் என் ஆத்மா இந்த மண்ணிலிருக்கும் என்று சூளூரைத்து உயிர் பிரிந்தாள்.
நீதியின்றி கொல்லப்பட்ட அந்தப் பெண்ணின் நினைவாக, ஊர் மக்கள் அவளை மாசாணி என்ற பெயரில் வழிபடத் தொடங்கினர். பிற்காலத்தில் அவளே நீதிக்காகப் போராடும் சக்தியின் வடிவமாக, மாசாணி அம்மனாக அங்கு எழுந்தருளினாள். இங்கு அம்மன் படுத்த நிலையில் (சயன கோலம்) காட்சி தருவது மிக விசேஷமானது.
மாசாணி அம்மனாக சிறிதளவில் அவர் சமாதியில் துவங்கிய வழிபாடு அந்த ஆத்மா நம்பி வரும் பக்தர்களை காத்து அருள்பாலிக்கிறது. பல்வேறு அவதாரங்களில் ஈஸ்வரி அவதாரம் எடுத்து பல அம்மனாக அற்புதங்களை தந்திருக்கிறார் மாசாணி அம்மன். இவர் உக்கிர தெய்வம் ஆவார்.
இங்கு வரும் பக்தர்கள், மாசாணி அம்மனிடம் குறைகளை எழுதி பூசாரியிடம் பக்தர்கள் தர அதை அம்மன் நிவர்த்தி செய்கிறார். பில்லி சூனியம் போன்ற அமானூஷ்ய சக்திகளிடம் இருந்து காக்க உக்கிரதெய்வமான மாசாணி அம்மன வணங்கினால் நலம் பயக்கும் என்பது நம்பிக்கையாகும்.
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் உள்ள மிக பிரமாண்டமான ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
என்னது உன்னை கல்யாணம் பண்ணிக்க உங்க வீட்டுலே,கண்டிஷன்ஒண்ணு போட்டாங்களா…..?
ஆமாங்க….. சின்ன கண்டிஷன்தான்…. வீட்டோட மாப்பிள்ளையா…நீங்க இருக்கணும்….
அது முடியாது… …..
ஏன் முடியாது…..
நான் காலையிலேயே தண்ணி அடிப்பேன்…..
சே……ரொம்ப கெட்ட பழக்கம்….. வேற ஏதாவது.. …..?
பல நேரங்களில் சூதாடுவேன் … …….
அய்யய்யோ…. இது வேறயா…. அப்ப இன்னொன்னு, சொல்லுவாங்களே .அது…….
பொம்பளங்க விஷயமா…. ?என் கம்பெனியிலே… அது தானே எனக்கு வேலையே….
போச்சு…. போ…. நான் போறேன் வழி விடு…
கொஞ்சம் நில்லு…. உங்க வீட்டிலே இந்த கண்டிஷனை வாபஸ் வாங்கினா…..இதுக்குஅர்த்தம்சொல்றேன்..
சொல்லேன் பார்ப்போம்……
முதலில் தண்ணி பம்பில் தண்ணியை ரெண்டு பக்கெட்டில் நானே அடிச்சிகாலையில் குளிப்பேன்,. .. எக்ஸசைஸ்மாதிரியும்ஆச்சி…..
சூதாட்டம்என்னவாம்….
ஷேர் மார்க்கெட்டில் பணம் போடுவது சூதாட்டம்னு பொதுவாஎல்லோரும் தான் சொல்றாங்க….. பத்து கோடி ரூபாய் அதில் என் பணம் புரளுகிறது……இன்னைக்குஎன் கணக்கில் டிரான்ஸ்பர்பண்ணா கூட நான் கோட்டீஸ்வரன்… ……
இப்ப மாட்டுனே பாரு……. அந்த பொம்பளைங்க விஷயம்……
அதுவா ஒரு லிப்ஸ்டிக் கம்பெனியிலே நான் தான் சேல்ஸ் மானேஜர்….. அது பொம்பளைங்க சமாச்சாரம் தானே…. அதுலே எனக்கு ஒரு லட்சம் சம்பளம்….
அதென்னெமோநீ மாத்தி மாத்தி பேசறே….. உன்னை நம்ப முடியாது…. என் மாமா பையன் வீட்டோடமாப்பிளையா வர ரெடியா இருக்கிறான்….. அவனையே கட்டிக்கிறேன்…. குட் பை….
போய் தொலை……. வீட்டோட மாப்பிளையாமே…. அவனை எங்கேயாவது ரோட்டோரமாபோய் தேடு…. …….
1.தூக்கம்
ஆறு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் மிக அவசியமானது.
2.சூரிய ஒளி
காலை வெயிலில் குறைந்தது பத்து நிமிடங்கள் இருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இது மூளையின் கடிகாரத்தை சீரமைக்கிறது. இது உங்களுக்கு நல்ல தூக்கத்தையும் தரும்.
3.ஸ்குவாட்ஸ் பயிற்சி
கால்களின் வலிமையானது மூளையின் ஆரோக்கியத்தோடும் வயதோடும் தொடர்புடையது.
4.வலிமைப் பயிற்சி
வாரத்திற்கு இருமுறை எடை தூக்கும் பயிற்சி செய்வது, மூளையின் நினைவாற்றல் பகுதியை பெரிதாக்க உதவுகிறது. தசை வலிமை மனதை பாதுகாக்கிறது.
5.ஊட்டச்சத்து மாத்திரைகள் உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், ஏனெனில் எதையும் அதிகமாக எடுத்துக். கொள்வது நல்லது அல்ல.
6.சமூக உறவு
தனிமை என்பது மூளை சுருங்குவதோடு தொடர்புடையது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சமூகத்துடன் உரையாடுவது ஒரு சிறந்த மருந்தாகும்.
7.புதிய திறன்
ஒரு புதிய மொழியையோ அல்லது ஒரு வாத்தியம் வாசிப்பதையோ புதிய பொழுது போக்கையோ கற்றுக்கொள்ளுங்கள்.
8.ரசித்தல்
ஒரு நல்ல தருணத்தில் குறைந்தது இருபது வினாடிகள் நின்று அதை ரசியுங்கள்.
9.மன அழுத்தக் கட்டுப்பாடு
தொடர்ச்சியான மன அழுத்தம் சிந்திக்கும் திறனைக் குறைக்கிறது. அதை கட்டுப்படுத்த கற்று கொள்வது நல்லது.
10.அமைதி
பத்து நிமிடங்கள் அமைதியாக இருப்பது அல்லது தியானம் செய்வது மூளையின் கார்டெக்ஸ் பகுதியை தடிமனாக்குகிறது என்று ஸ்கேன் ஆய்வுகள் கூறுகின்றன. மூளையின் இந்தப் பகுதிதான் வயதாகும் போது முதலில் பலவீனமடைகிறது.
கேரளாவில் 'ஆபரேஷன் தூஃபான்' என்ற தீவிர போதைப்பொருள் ஒழிப்பு வேட்டையின் கீழ், கோழிக்கோடு மாவட்டத்தில் மூன்று பள்ளி ஆசிரியைகள் எம்.டி.எம்.ஏ.போன்ற ரசாயன போதைப்பொருட்களை விற்ற வழக்கில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் வடகரை மற்றும் பேராம்ப்ரா பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த பின்வரும் மூன்று ஆசிரியைகள் இந்த போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கில் நேரடியாக ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்:
கே.சி.கீர்த்தனா (உடற்கல்வி ஆசிரியர்)
கே. காவ்யா (ஆட்டிசம் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்)
வி.பி.நீஷ்மா(பி.ஆர்.சி பயிற்றுவிப்பாளர்)
வளைகுடா நாட்டைச் சேர்ந்த ஒரு மொபைல் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆசிரியர்களே போதைப்பொருள் கடத்தல்காரர்களாக மாறியுள்ளது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டிய ஆசிரியர்களே இப்படி இருந்தால்,மற்றவர்களை என்ன சொல்வது?
இந்த நெட்வொர்க்கில் இன்னும் பிற ஆசிரியர்கள் மற்றும் வேறு எவருக்கும் தொடர்பு உள்ளதா என தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். பணிகளில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வெளிநாட்டு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை அறிவீர்கள். வெளி வட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபார இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். ஆரோக்கிய நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற மனநிலை பிறக்கும். இணையம் மற்றும் வர்த்தக தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். சுபகாரிய தொடர்பான செயல்களில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கடகம்
விவேகமான செயல்பாடுகள் நம்பிக்கையை மேம்படுத்தும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும். அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் உண்டாகும். திடீர் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படத் தொடங்குவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடி வரும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
துலாம்
உடன் இருப்பவர்களைப் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மனதில் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
விருச்சிகம்
பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
தனுசு
நினைவில் கொள்ளக்கூடிய சில நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகப் பணிகளில் முயற்சிகள் கைகூடிவரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
நண்பர்களிடத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வரவுகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் மதிப்புகள் மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
வியாபார பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். தற்பெருமையான பேச்சுகளை தவிர்க்கவும். கால்நடை செயல்களில் சற்று கவனம் வேண்டும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். சிந்தனை போக்கில் மாற்றமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மீனம்
அவசரம் இன்றி எதிலும் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் பின்னணிப் பாடகியான கே. ஜமுனாராணி (K. Jamuna Rani) ஜூலை 30, 2026 அன்று பெங்களூருரில் காலமானார்.
மறைந்த போது அவருக்கு 88 வயது ஆகும்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று ஜூலை 31, 2026 அன்று மதியம் பெங்களூருவில் உள்ள கல்லஹள்ளியில் நடைபெறுகின்றன.
1940-கள் முதல் 1960-கள் வரை தென்னிந்தியத் திரையிசை உலகில் மிக முக்கியப் பாடகியாகத் திகழ்ந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழில் பல உன்னதமான பாடல்களைப் பாடியுள்ள இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'நாயகன்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் இடம்பெற்ற "நான் சிரித்தால் தீபாவளி" என்ற பாடலையும் பாடியுள்ளார்.
ஜமுனாராணி தனது 7 வது வயதிலேயே திரையுலகில் பாடத் தொடங்கினார்.
1946-ல் வெளியான 'தியாகையா' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலாகப் பாடினார்.
இவருடைய தாய் கே. ஜாம்பவதி ஒரு சிறந்த வீணைக் கலைஞர் மற்றும் பாடகி. அவரிடம் தான் ஜமுனாராணி தனது ஆரம்பகால இசைப் பயிற்சியைப் பெற்றார்.
இவர் பாடகியாக மட்டுமல்லாமல், 1953-ல் வெளியான 'தேவதாஸ்' திரைப்படத்தில் பார்வதியின் தோழியாக (சாந்தா என்ற கதாபாத்திரத்தில்) நடிகையாகவும் நடித்துள்ளார்.
கன்னடத் திரையுலகின் முதல் முழுநீளப் பின்னணிப் பாடலாகக் கருதப்படும் 'ஸ்ரீ சீதா ராம கல்யாணா' என்ற படத்தின் பாடலை இவர்தான் பாடினார்.
1960-களுக்குப் பிறகு ஜமுனாராணிக்குத் திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள் குறைந்தன. ஆனால், 24 ஆண்டுகள் கழித்து 1987-ல் இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணி 'நாயகன்' திரைப்படத்திற்காக இவரை மீண்டும் அழைத்தது.
நாயகன்' படத்தில் கமல் ஹாசன் - சரண்யா நடிப்பில், ஜமுனாராணி பாடிய "நான் சிரித்தால் தீபாவளி" பாடல் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் உலுக்கியது. இன்றும் பலரது ஃபேவரிட் பாடலாக இது ஒளிர்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகள் தவிர, சிங்கள மொழியிலும் பல நூறு சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி இலங்கையிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைச் சம்பாதித்தார்.
திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் மற்றும் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் நூற்றுக்கணக்கான துள்ளலான மற்றும் காதல் பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழக அரசு இவருடைய கலைச் சேவையைப் பாராட்டி உயரிய 'கலைமாமணி' விருதை வழங்கி கௌரவித்தது.
தெலுங்குத் திரையுலகில் இவருக்கு 'மறைந்த முதலமைச்சர் என்.டி.ஆர்' நினைவாக வழங்கப்படும் என்.டி.ஆர் தேசிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
ஜமுனாராணி தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது குடும்பத்தினரையும், உடன்பிறந்தவர்களையும் கவனித்துக் கொள்வதற்காகவே தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தார். இறுதிவரை தனது இசையையே துணையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்துள்ளார்.
7 வயதில் பாடத் தொடங்கிய இவர், தனது 13 வது வயதிலேயே திரையுலகில் முன்னணி கதாநாயகிகளுக்குப் பின்னணி பாடும் அளவுக்குத் திறமை பெற்றிருந்தார்.
1950-களில் சாவித்திரி, அஞ்சலிதேவி, ஜமுனா போன்ற அப்போதைய டாப் நடிகைகளின் ஆஸ்தான குரலாக மாறினார்.
தென்னிந்தியத் திரையுலகில் பி. சுசீலா, எஸ். ஜானகி போன்ற ஜாம்பவான்கள் தங்களது இசைப் பயணத்தை முழுமையாகத் தொடங்குவதற்கு முன்பே, ஜமுனாராணி முன்னணிப் பாடகியாக வலம் வந்தார்.
குறிப்பாக 1950 முதல் 1960 வரையிலான காலகட்டம் இவருடைய 'கோல்டன் பீரியட்' என்று அழைக்கப்படுகிறது.
1950-களில் இசை மேதை ஜி. ராமநாதன் மிகவும் கண்டிப்பானவராகக் கருதப்பட்டார். 'குலேபகாவலி' (1955) திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த டி.ஆர்.ராஜகுமாரிக்கு "ஆசையும் என் நேசமும்..." என்ற பாடலை ஜமுனாராணி பாட வேண்டியிருந்தது.
அந்தப் பாடலில் வரும் மேற்கத்திய மற்றும் துள்ளல் நடையை ஜி. ராமநாதன் மிகவும் நுணுக்கமாக எதிர்பார்த்தார்.
பல முன்னணிப் பாடகர்களே தயங்கிய அந்தப் பாடலை, வெறும் 13-14 வயது சிறுமியாக இருந்த ஜமுனாராணி, எவ்விதப் பதற்றமும் இன்றி மிகக் குறுகிய நேரத்தில் பாடி முடித்துக் கொடுத்தார். இதைப் பார்த்து வியந்த ஜி. ராமநாதன், இவரை கட்டிப்பிடித்துப் பாராட்டியுள்ளார்.
1980-களில் ஜமுனாராணி முற்றிலுமாகப் பாடுவதை நிறுத்திவிட்டுச் சென்னையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது 'நாயகன்' (1987) படத்திற்காக 1960-களின் மும்பை கிளப் பின்னணியில் ஒரு துள்ளலான பாடல் தேவைப்பட்டது. இளையராஜாவுக்கு உடனே நினைவுக்கு வந்த குரல் ஜமுனாராணி மட்டும்தான்.
ஸ்டுடியோவுக்குச் சென்ற ஜமுனாராணிக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவருடன் இணைந்து பாட இளையராஜா அழைத்திருந்தது, அவரது சமகாலத்துப் பழம்பெரும் பாடகியான எம். எஸ். ராஜேஸ்வரியை.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, 'ஏவிஎம்' (AVM) ஸ்டுடியோவில் இந்த இரு முதுபெரும் பாடகிகளும் மைக் முன்னால் நின்ற போது ஒட்டுமொத்த இசைக்குழுவும் எழுந்து நின்று கைதட்டியது. "நான் சிரித்தால் தீபாவளி" பாடல் உருவான பின்னணி இதுதான்.
1950-களில் துள்ளல் மற்றும் கிளப் ரகப் பாடல்களுக்குப் பாடகி ஜிக்கி (Jikki) மற்றும் ஜமுனாராணி இடையே கடுமையான போட்டி நிலவியது.
இசையமைப்பாளர்கள் கே.வி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் ஒரு டூயட் அல்லது கிளப் பாடல் என்றால் இவர்கள் இருவரில் யாரை அழைப்பது என்று குழம்புவார்களாம்.
ஆனால், நிஜ வாழ்க்கையில் இருவரும் நெருங்கிய தோழிகளாகவே இருந்தனர். பல நேரங்களில் ஜிக்கிக்கு உடல்நிலை சரியில்லாத போது, அந்தப் பாடல்களை ஜமுனாராணி எவ்வித ஈகோவும் இன்றிப் பாடிக் கொடுத்துள்ளார்.
தமிழ்ப் பாடகியான இவர் சிங்கள மொழியில் பாடிய பாடல்கள் இலங்கையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தின.
இலங்கையின் தேசியக் கீதத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஆனந்த சமரகோன் இயக்கத்தில், 'சுஜாதா' (1953) மற்றும் 'சேதா சுலங்' (1955) போன்ற சிங்களத் திரைப்படங்களுக்குப் பாட ஜமுனாராணி ஒப்பந்தமானார்.
சிங்கள மொழியின் உச்சரிப்புகள் இவருக்குத் தெரியாது என்பதால், இசையமைப்பாளர் ஆனந்த சமரகோன் பாடலின் வரிகளைத் தமிழில் எழுதித் தந்துள்ளார்.
ஏ.எம். ராஜாவுடன் இணைந்து ஜமுனாராணி பாடிய "ஜீவன மே கமன சன்சாரே" (Jeevana Mea Gamana Sansare) என்ற பாடல், ஒலிப்பதிவு செய்யப்பட்ட அன்றே அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஒரு தமிழ் மொழிப் பாடகி, சிங்கள வார்த்தைகளை இவ்வளவு துல்லியமாகப் பாடியதை இலங்கையே கொண்டாடியது
1953-ல் வெளியான 'சுஜாதா' (Sujatha) என்ற சிங்களத் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல்கள் இன்றும் இலங்கையின் ஆல்-டைம் கிளாசிக் ஹிட்களாகக் கொண்டாடப்படுகின்றன.
இதனால் பல சிங்கள ரசிகர்களுக்கு இவர் தங்களின் சொந்த நாட்டுப் பாடகி என்ற எண்ணமே இருந்தது.
சோகப் பாடல்கள் மற்றும் பக்திப் பாடல்களைத் தாண்டி, அந்த காலத்துத் திரைப்படங்களில் வரும் மேற்கத்திய பாணி துள்ளல் பாடல்கள், கிளப் டான்ஸ் பாடல்கள் மற்றும் விறுவிறுப்பான பாடல்களைப் பாடுவதில் ஜமுனாராணி தனித்துவமான முத்திரை பதித்தார்.
பழம்பெரும் பின்னணிப் பாடகி கே. ஜமுனாராணி வயது முதிர்வு மற்றும் அதற்கு முந்தைய சில நாட்களாக இருந்த உடல்நலக் குறைவு (Age-related ailments) காரணமாகவே இயற்கை மரணமடைந்தார்.
அவருக்கு 88 வயது நிறைந்திருந்த நிலையில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஜூலை 30, 2026 அன்று இரவு அவரது உயிர் பிரிந்தது.
தீவிரமான விபத்தோ அல்லது திடீர் பெருநோயோ இன்றி, முதுமையின் காரணமாகவே அவர் மறைந்துள்ளார். ஜமுனாராணி அவர்களின் மறைவையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தும் இறுதி நிகழ்வுகள் பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பைத்தியக்காரன், பெண் பித்தன் என அழைக்கப்பட்டார்; சூனியம் வைத்து விட்டதாக அம்மா சொன்னார்;மனைவி, அம்மா பிரிந்து சென்றனர்;ஊரை விட்டு துரத்தப்பட்டார்.. மனம் தளராமல் கண்டு பிடித்தார் மலிவுவிலை நாப்கின்களை!
பெண்களுக்கான குறைந்த விலை சானிடரி நாப்கின் அடிமட்ட ஏழைப் பெண்களுக்கும் போய்ச்சேரும் அற்புதத்தை நிகழ்த்தியவர் கோவை முருகானந்தம்!
டைம்ஸ் இதழில் உலகின் தலைசிறந்த 100 மனிதர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் இவர். 4 கோடி ரூபாயில் தயாரிக்கப்படும் நாப்கின் எந்திரத்தை வெறும் 45 ஆயிரம் ரூபாயில் தயாரித்து, முதல் எந்திரத்தை பீகார் மலைவாழ் மக்கள் வசிக்கும் மதுபனி கிராமத்திற்கு எடுத்துச் சென்றார்.
இரண்டாவது எந்திரத்தைத் தயாரித்து உத்தரகாண்ட் ருத்ரப்ரியா கிராமத்திற்கு
எடுத்துச் சென்றார். அம்மக்களின் பயன்பாட்டில் இது தன் வெற்றிகரமான
கண்டுபிடிப்பாக இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறார்.
அப்புறம் என்ன? ஏராளமான விருதுகள் இவரைத் தேடி வருகின்றன. நமது இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கிறது. இவர் வாழ்க்கை 'பேட்மேன்' என இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. நடிகர் அட்சயகுமார் நடிக்க, இயக்கி, வெற்றிவாகை சூடுகிறார் இயக்குனர் ஆர்.பால்கி.
2018-இல் அமெரிக்க வாழ் ஈரான் பெண் ராக்யா செப்தாக்சி எடுத்த 'பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்' என்ற இவர் பற்றிய ஆவணப்படம் ஆஸ்கார் விருதைப் பெற்றது. இவ்வளவுக்கும் காரணமான முருகானந்தம் படித்ததோ 8-ஆம் வகுப்பு; ஆனால் இவர் பற்றிய பாடத்தை 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று படித்து வருகின்றனர்!
ஆனால், அதற்கு இவர் கொடுத்த விலை.. அப்பப்பா! யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவு மிகக் கொடுமையானது. அவருடைய வார்த்தைகளிலேயே அதைக் கேட்போம்...
"என் ஊர் பாப்பநாயக்கன்புதூர். அப்பா நெசவுத் தொழிலாளி. அம்மா விவசாயக் கூலி. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துட்டார். குடும்பமே இடிஞ்சு போயிடுச்சு. வீட்டின் வறுமையைப் போக்க கிரில் பட்டறை வேலைக்குப் போனேன். அங்க புதுசு, புதுசா நிறைய முயற்சி பண்ணினேன். அம்மா வாசல்ல போடுற கோலத்தை வீட்டு ஜன்னல் ஆக்கினேன். இதனால, என் முதலாளிக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.
ஆனா, எனக்கு ஒரு தொழில்லயே ரொம்ப நாள் ஒட்டாது. நான் கிளம்புறேன்னு சொன்னப்ப முதலாளி, 'நீயே இந்த கடையை வாங்கிக்கோ’னு சொல்லி பணத்துக்கு வழிகாட்டினார். கடையை எடுத்து நல்லாவே நடத்தினேன். எனக்குக் கல்யாணமும் ஆச்சு. ஒருநாள் என் மனைவி எதையோ மறைச்சி எடுத்துட்டுப் போனாங்க. என்னனு கேட்டப்ப, 'இது பொம்பளைங்க சமாச்சாரம்’னு சொல்லிட்டு விறுவிறுனு ஓடப் பார்த்தாங்க.
நான் அவங்ககிட்ட இருந்து அதைப் பிடுங்கிப் பார்த்தா அழுக்கான துணி. 'ஏன் ஒரு நாப்கின் வாங்கக் கூடாதா?’னு மனைவியைத் திட்டினேன். அவங்களோ, 'அதுக்கு எல்லாம் செலவு பண்ணா குழந்தைக்குப் பால் வாங்க எங்க போவேன்’னு கேட்டாங்க. அதோட மட்டும் இல்லாம பெரும்பாலான கிராமப் பெண்கள் வசதி இல்லாததால இதுமாதிரி அழுக்குத் துணிகளைத்தான் பயன்படுத்துறாங்கனு அவங்க சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போயிட்டேன்.
அப்பதான் நாப்கினை நாமே தயாரிக்கலாமேனு எண்ணம் எழுந்துச்சு. கடையில ஒரு நாப்கினை வாங்கி, அதைப் பிரிச்சுப் பார்த்தேன். அதுல பஞ்சு மாதிரி ஒரு பொருள் இருந்துச்சு. உடனே பஞ்சை நல்லா அடைச்சு நாப்கின் தயாரிச்சேன்.
இதை யார்கிட்டே போய் சோதனை பண்ண முடியும். என் மனைவிகிட்ட போய் தயக்கமா நின்னேன். இப்படியே என்னோட சோதனைகள் தொடர்ந்தது. ஆனா, ஏகப்பட்ட ஏமாற்றம். ஒரு கட்டத்துல என் மனைவிக்கு என் மேல ரொம்ப கோபம்வந்து இந்த விஷயத்தை நிறுத்துங்கனு சொல்லி கண்டபடி திட்டிட்டாங்க. பிரிஞ்சும் போயிட்டாங்க.
வேற வழி இல்லாம நான் பக்கத்துல இருந்த மருத்துவக் கல்லூரி பெண்களிடம் என் ஆராய்ச்சியைச் சொல்லி உதவி கேட்டேன். பல பெண்கள் என்னைப் பைத்தியக்காரன் என்று திட்டினாங்க.வேறு சிலர் கல்லூரி வாசலில் நிற்பதை, கல்லூரி மாணவிகளைச் சுற்றி வந்ததைப் பார்த்து விட்டு பெண் பித்தன் என்றார்கள்.
கடைசியில் சிலர் ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தாங்க. சில வாரங்களில் அவங்களாலும் தொடர்ந்து ஒத்துழைக்க முடியலை. வேற வழி இல்லாம என்னையே சோதனைக்கு உள்ளாக்க முடிவு பண்ணினேன்.
என் நண்பரின் கறிக் கடையில் இருந்து ஆண்டின் சூடான ரத்தத்தை வாங்கிட்டு வந்து இடுப்பில் ஃபுட்பால் பிளாடரில் நிரப்பிக்கிட்டேன். நடுவில சின்னக் குழாய் மூலமா நாப்கினை நோக்கி இணைச்சுக்கிட்டேன். பிளாடரை அழுத்தினா ரத்தம் நாப்கினில் விழும். இந்த நாப்கினுக்காகப் பலவிதமான பஞ்சுகளை வெச்சுப் பரிசோதிச்சேன்.
இந்தச் சோதனையில் என் வேட்டி எல்லாம் ரத்தம் கொட்டியது. ஒரு மணி நேரத்தில் தாங்க முடியாத நாற்றம் வந்தது. இதைப் பார்த்து எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்குனு ஊர்ல தகவல் பரவிடுச்சு. என் மனைவி கோவிச்சுக்கிட்டு என்னைவிட்டு நிரந்தரமாப் பிரிஞ்சுப்போயிட்டாங்க!
சோதனைக்காக என் பட்டறையில் இருந்த கடைசி ஸ்கிராப் வரைக்கும் வித்துட்டேன். ஆனாலும், எனக்கு நம்பிக்கை மட்டும் போகலை. சில பெண்கள் உபயோகப்படுத்தின நாப்கின்களைச் சேகரிச்சு, அதை வீட்டுல காயவெச்சு சோதனை செஞ்சேன். என் அம்மா இதைப் பார்த்து எனக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கனு தனியா பிரிஞ்சு போயிட்டாங்க. ஊர்க்காரங்க எல்லாம் சேர்ந்து என்னை ஊரைவிட்டு விலக்கிவெச்சுட்டாங்க.
கண்ணீரோட நான் என் கிராமத்தை விட்டு கிளம்பினப்ப, என் கூடவந்த ஒரே ஜீவன் நான் வளர்த்த நாய் மட்டும்தான். அதோட கோவைக்கு கிளம்பி வந்து விட்டேன். அறை பிடிச்சுத் தங்கி வெறும் பிரெட் மட்டும் சாப்பிட்டு ஓயாம உழைச்சேன். அப்புறம்தான் வெளிநாட்டு கம்பெனிக்காரன் பயன்படுத்தறது ஃபைன் மரப் பஞ்சுனு தெரிஞ்சுது. அதைக்கொண்டு நாப்கின் தயாரிக்கிற இயந்திரம் எட்டுக் கோடி ரூபாய் ஆகும்னு சொன்னாங்க.
நான் ஃபைன் மரப் பஞ்சை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி பண்ணினேன். சுமார் ஆறு மாசம் ரெண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி, கஷ்டப்பட்டு ஒரு இயந்திரத்தைத் தயாரிச்சுட்டேன். இதுக்கு 45 ஆயிரம் செலவாச்சு. இயந்திரத்தைத் தயாரிச்சு முடிச்சப்ப என் கையில் ஒரு பைசா இல்லை.
சேமிப்பு, இருந்த சொச்ச சொத்து எல்லாத்தையும் இழந்துட்டேன். ஆனா, அதுல தயாரிச்ச ஒரு நாப்கினை ஒரு கல்லூரி பொண்ணு பயன்படுத்திட்டு, 'அண்ணா, இதை யூஸ் பண்ற மாதிரியே எனக்குத் தெரியலை. ரொம்ப வசதியா இருக்கு’னு சொன்னப்போ கதறி அழுதுட்டேன்.
அது என் பல ஆண்டுக் கனவு. அதுக்காக நான் என் வாழ்க்கையையே இழந்திருக்கேன். தகவல் பரவி நிறையப் பேர் இந்த இயந்திரத்தைத் தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க. நான் தயாரிச்ச இயந்திரம் மூலமாப் பெண்களே இப்ப சுலபமா நாப்கினைத் தயாரிக்க முடியும்.
ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய்தான்! அவமானங்களை அனுபவித்திருந்தாலும் நம்மாலும் மனித குலத்திற்கு நல்லது செய்ய முடிந்ததே என இன்று பெருமிதம் அடைகிறேன்!" என்றார் பெருமூச்சு விட்டபடியே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். வேற்றுமதத்தினரின் உதவி கிட்டும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம் திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். மேலதிகாரி ஆதரிப்பார்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீக சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாக அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த சில முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலகரீதியான பிரச்சினைகள் ஓயும்.
கடகம்: பணத்தை கவனமாக கையாளவும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பிள்ளைகளின் உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
சிம்மம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் எதிராக செயல்பட்ட பணியாட்களை மாற்றுவீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். விவாதங்களை தவிர்க்கவும்.
கன்னி: பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான மாற்று வழியை கண்டறிவீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர்.
துலாம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர். தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமையுண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
விருச்சிகம்: ஈகோ பிரச்சினை, கருத்து வேறுபாடு தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்து காட்டுவீர். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
தனுசு: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல்சோர்வு, வயிற்றுவலி சீராகும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முயற்சிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மகரம்: முன்கோபத்தை தவிர்க்கவும். மகனின் வேலை, மகளின் திருமணம் என்று அலைச்சல் வந்துபோகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை விற்பனை செய்வீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
கும்பம்: வெளிவட்டாத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஊர் விசேஷங்களுக்கு தலைமை தாங்குவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மீனம்: புது வகை எலக்ட்ரானிக்ஸ் சாதனம் வாங்குவீர். மனைவி வழியில் பண உதவி கிட்டும். வாகனப் பழுது நீங்கும். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 31.7.2026.
இன்று இரவு 10.32 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று இரவு 08.10 வரை அவிட்டம். பின்னர் சதயம்.
இன்று அதிகாலை 01.43 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.
இன்று காலை 10.16 வரை தைத்தூலம். பின்னர் இரவு 10.32 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை




