·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 1081
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added a post
  • புத்தரின் வருகைக்காக காத்திருந்தனர் சீடர்கள். சிறிது நேரத்தில் புத்தர் வந்தார்.
  • அவரது கையில் கைக்குட்டையை விட கொஞ்சம் பெரிய துணி இருந்தது.
  • சீடர்களுக்கு எதிரே இருந்த மேடையில் அமர்ந்த புத்தர், எதுவும் பேசாமல் கையில் இருந்த துணியில் முடிச்சுகளைப் போடத் தொடங்கினார். 5 முடிச்சுகள் போட்டார்.

தன்னையே உற்று நோக்கிக்கொண்டிருந்த சீடர்களை பார்த்த புத்தர்,

"நான் ஐந்து முடிச்சுகள் போட்டேன். இதை அவிழ்க்கப் போகிறேன்",அதற்கு முன் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன், என்றார்.

  1. என்னுடைய முதல் கேள்வி; இப்போது முடிச்சுகள் விழுந்துள்ள இந்தத் துணி, முன்பிருந்த அதே துணிதானா? முடிச்சுகள் இல்லாததும், உள்ளதும் ஒன்றுதானா?’ என்று கேட்டார்.

புத்தரின் முக்கிய சீடர்களில் ஒருவரான அனந்தன் எழுந்து, ‘சுவாமி! ஒரு வகையில் முன்பிருந்ததும், இப்போது இருப்பதும் ஒன்றுதான். ஆனால் அதில் இருக்கும் முடிச்சுகள் மட்டுமே வேறுபாடு.

'முன்பு இருந்த துணி சுதந்திரமானது. இப்போதுள்ள துணி முடிச்சுகளால் அடிமைப்பட்டு கிடக்கிறது’ என்றார்.
உடனே புத்தர்,‘சரியாக சொன்னாய்.எவரும் இயல்பில் பிரச்சினை இல்லாதவர்கள். 
ஆனால் முடிச்சுப்போட்டுக்கொண்டு, சிக்கலில் சிக்கி,அதற்கு அடிமைப்பட்டு போய் விடுகிறார்கள்.  

இதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்’ என்றார்.

பின்னர் சற்று நேரம் அமைதியாக இருந்த புத்தர்,

2. ‌‘என்னுடைய இரண்டாவது கேள்வி, இந்த முடிச்சுகளை அவிழ்க்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.

இப்போது இன்னொரு முக்கிய சீடன் சாரி புத்தன் எழுந்து நின்றான். ‘

"குருவே! அந்த முடிச்சுகளை அவிழ்க்க, நான் அருகில் வர அனுமதிக்க வேண்டும்.
முடிச்சுகள் எவ்வாறு போடப்பட்டுள்ளன என்று அறியாதவரை, அவற்றை அவிழ்க்க வழியில்லை…என்றான்

‘சரியாகச் சொன்னாய். என்றார் புத்தர்.

அதுதான் வாழ்க்கை. அது தான் வாழ்க்கையின் ரகசியம். நம்முடைய சிக்கல்களுக்கு நாமே காரணம். 
நம்மை அறியாமல்,நாம் போட்டுக் கொள்ளும் முடிச்சுகளில் சிக்கித் தவிக்கிறோம், என்றார் புத்தர். 

இதுதான் புத்தர் கூறும் பாடம்.

  • 4
·
Added a post

"நான் செய்ததற்கு எனக்கு பிறர் நிதி உதவி எதுவும் தேவையில்லை. நான் இதை மனிதநேயத்திற்காகவே செய்தேன்."

21 உயிர்களை பலிவாங்கிய ஃபுளோரிஷ் ஸ்டேஸ் (Flourish Stays) ஹோட்டல் தீ விபத்திற்குப் பிறகு, வீரன் என்று போற்றப்படும் டெல்லியைச் சேர்ந்த கடைக்காரர் ரியாசுதீனின் வார்த்தைகள் இவை.

கட்டிடத்தை தீப்பிழம்புகள் சூழ்ந்ததால், பீதியடைந்த விருந்தினர்கள் தப்பிக்க ஜன்னல்களிலிருந்து குதிக்கத் தொடங்கினர். அப்போது ரியாசுதீனும் அவரது மகனும் சற்றும் யோசிக்காமல் களத்தில் இறங்கினர். அவர்கள் அருகில் இருந்த தங்களது மெத்தை கடைக்கு விரைந்து சென்று, டஜன் கணக்கான மெத்தைகளை தெருவில் தூக்கி வீசினர். இதன் மூலம் வேறு வழியின்றி தவித்த மக்களுக்கு ஒரு தற்காலிகப் பாதுகாப்புப் படுக்கையை உருவாக்கினர்.

இந்த மீட்பு முயற்சியில், ரியாசுதீனுக்கு அவரது மகளின் திருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில், சுமார் ₹2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நஷ்டமடைந்தன. அவரது இந்த துணிச்சலான செயல் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டது. மேலும் பலரும் அவருக்கு நிதியுதவியும் ஆதரவும் வழங்க முன்வந்தனர்.

ஆனால், ரியாசுதீன் அந்த உதவிகளை மரியாதையுடன் மறுத்துவிட்டார்.

"நான் செய்ததற்கு எனக்கு பிறர் நிதி உதவி எதுவும் தேவையில்லை. நான் இதை மனிதநேயத்திற்காகவே செய்தேன்," என்று அவர் கூறியது, இணையத்தில் அவருக்கு இன்னும் கூடுதலான பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.

இந்த தீ விபத்து பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும், ரியாசுதீனின் இந்த சுயநலமற்ற செயல், இருண்ட தருணங்களிலும் மனிதநேயம் இன்னும் பிரகாசமாக ஒளிர்கிறது என்பதை நமக்கு வலிமையாக நினைவூட்டுகிறது.

  • 4
·
Added article

இயக்குனர் ஆர் சுந்தரராஜன் இயக்கத்தில் 'நான் பாடும் பாடல்' வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நேரம்.

🌹பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தார்கள். அவர்களிடம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக சொன்னார் ஆர் சுந்தரராஜன். "எனக்கு இப்போது சொந்த வீடு வேண்டும். அதை யார் வாங்கிக் கொடுக்கிறீர்களோ, அவர்களுக்குத்தான் அடுத்த படம் செய்வேன்."

🌹உடனடியாக ஏவிஎம் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அட்வான்ஸாக இரண்டு லட்ச ரூபாய் பணமும் வந்தது.

🌹கொஞ்சம் தயங்கினார் ஆர் சுந்தரராஜன். "அடுத்த படத்திற்கான கதையை இன்னும் தயார் செய்யவில்லையே..!"

🌹"அதைப்பற்றி பரவாயில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம். இதை வாங்கிக் கொள்ளுங்கள்." அந்த பணத்தை வாங்கி புது வீடு வாங்குவதற்காக அட்வான்ஸ் கொடுத்து விட்டார் ஆர் சுந்தரராஜன்.

🌹அடுத்த ஒரு சில நாட்களில்...

🌹கதை தயாரானது. அதுதான் 'வைதேகி காத்திருந்தாள்'. ஏ.வி.எம்.முக்கு போய் கதையை சொன்னார் சுந்தரராஜன். "நல்லா இருக்கு. ஹீரோ யார் ?"

'🌹விஜயகாந்தை போட்டால் பொருத்தமாக இருக்கும். படமும் பிரமாத வெற்றி பெறும்' என்றார் சுந்தரராஜன்.

🌹"விஜயகாந்தா ?

வேண்டாம். ஏற்கனவே வெளிவந்து வெற்றி பெற்ற 'நான் பாடும் பாடல்' படத்தில் சிவகுமார்தானே ஹீரோ ? வைதேகி காத்திருந்தாள் படத்திலும் அவரையே நடிக்க வையுங்கள்"

🌹ஆர் சுந்தரராஜன் உறுதியாகச் சொன்னார். "அந்த வெள்ளைச்சாமி கேரக்டருக்கு விஜயகாந்த்தான் பொருத்தமாக இருப்பார்."

🌹பொறுமையாக அதைக் கேட்ட ஏ.வி.எம். : "இல்லை. அதில் எங்களுக்கு சம்மதமில்லை. அப்படியானால் நாங்கள் கொடுத்த இரண்டு லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்து விடுங்கள்."

🌹ஆர் சுந்தரராஜன் திகைத்துப் போனார். ஏனெனில் ஏவிஎம் கொடுத்த அந்த பணத்தை வாங்கித்தான் புது வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் தொகையாகக் கொடுத்து விட்டிருந்தார் அவர். வேறு பணம் எதுவும் அவர் கைவசம் இல்லை.

🌹என்ன செய்வதென தெரியாமல் தடுமாறினார் ஆர் சுந்தரராஜன். ஏவிஎம் கொடுத்த இரண்டு லட்சம் ரூபாயை எப்படி அவர்களுக்கு திருப்பி கொடுப்பது ?

🌹அன்று மாலை வாடிய முகத்தோடு வழக்கமான வாக்கிங் சென்றபோது எதிரே வந்தார் தூயவன் என்ற கதாசிரியர். என்ன நடந்தது என்று உண்மையான அக்கறையோடு தூயவன் விசாரிக்க, நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் எடுத்துச் சொன்னார் ஆர் சுந்தரராஜன்.

"🌹இவ்வளவுதானே? இதற்குப் போய் ஏன் இப்படிக் கவலைப்படுகிறீர்கள்? வாருங்கள் என்னுடன்."

அடுத்த சில நிமிடங்களில் பஞ்சு அருணாச்சலத்தின் வீட்டில் அமர்ந்து இருந்தார்கள்.

'🌹வைதேகி காத்திருந்தாள்' கதையை அவர்களிடம் ஆர் சுந்தரராஜன் சொல்ல...

உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் ஆர் சுந்தரராஜன் கைகளில் கொடுக்கப்பட, அதை வாங்கி ஏவி எம்மிடம் கொடுத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஆர் சுந்தரராஜன்.

🌹தூயவன் 'வைதேகி காத்திருந்தாள்' படத்தின் தயாரிப்பாளர் ஆனார். வீடு வாங்க வேண்டும் என்றபோது அதற்கான பணத்தை உடனடியாக ஏவிஎம். மூலமாக கொடுத்தது இந்த பிரபஞ்சம்.

🌹அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தபோது கொஞ்சமும் தாமதிக்காமல் உடனடியாக வேறு ஒரு தயாரிப்பாளரை தேடிக் கொடுத்ததும் அதே பிரபஞ்சம்.

🌹நமக்கு எப்போது எது தேவையோ அதை நம்மிடம் கொண்டுவந்து கொடுக்க ஏதாவது ஒரு வழியை இந்தப் பிரபஞ்சம் எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறது. ஆனால் அதன் சூட்சுமங்கள் நமக்கு எளிதில் புரிவதில்லை.

🌹ஆர். சுந்தரராஜனுக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே உதவுவதற்கு இந்த பிரபஞ்சம் எப்போதுமே காத்திருக்கிறது. அதற்குத் தேவை அசைக்க முடியாத தன்னம்பிக்கை உள்ள மனிதர்கள் மட்டுமே !

  • 8
·
Added a post

அனந்தாழ்வான் மீது கடுங்கோபத்தில் இருந்தார் ஏழுமலையான்! இருக்காதா பின்னே?

‘அனந்தாழ்வானை உடனே வந்து என்னைப் பார்க்கச் சொல்’ என்று அர்ச்சகர் மூலம் இவர் சொல்லி அனுப்ப… அனந்தாழ்வானோ, "ஸ்வாமிக்குப் பூமாலை தொடுத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது வர முடியாது!” என்று அர்ச்சகரிடம் சொல்லி விட்டார். இதனால் ஏற்பட்ட கோபம். விழி சிவக்கக் காத்திருந்தார் பகவான்.

பூமாலை கட்டி முடித்த அனந்தாழ்வான், அதை எடுத்துக் கொண்டு சந்நிதிக்கு வருவதை அறிந்த ஏழுமலையான், தனக்கு முன்பு இருந்த திரையால், கருவறை வாயிலை மூடினார்.

சற்றும் பதறாத அனந்தாழ்வான், திரையை விலக்கி, உள்ளே நுழைய முற்பட்டார்.

"அங்கேயே நில்!" கடும் குரலில் உத்தரவிட்டார் பகவான். இதைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்தார் அனந்தாழ்வான்.

"பிரம்மனும் ருத்ரனும் கூட என் உத்தரவை மீறியதில்லை. என்ன தைரியம் உனக்கு? உன் மாலையும் வேண்டாம்; சேவையும் வேண்டாம். இப்போதே கிளம்பு… உன்னை இந்த ஏழுமலையில் இருந்து நாடு கடத்துகிறேன்!" என்றார் திருமால்.

மெள்ள புன்னகைத்த அனந்தாழ்வான், "என்னை அனுப்ப நீர் யார்?" என்றார்.

இதை, பாலாஜி சற்றும் எதிர்பார்க்கவில்லை! "என்ன சொல்கிறாய்?"- திகைப்புடன் கேட்டார்.

"ஸ்வாமி, தங்களைப் பற்றிய ஒரு பாடல் உண்டு…

மாயாவீ பரமானந்தம் த்யக்த்வா வைகுண்ட முத்தமம்!

ஸ்வாமி புஷ்கரிணிதீரே ரமயா ஸஹ போததே…

அதாவது, ‘சகல கல்யாண குணங்கள் படைத்த மகாவிஷ்ணு, ஸ்ரீவைகுண்டத்தை விட்டு அலமேலு மங்கையுடன் இந்த (திருப்பதி) புஷ்கரணி தீர்த்தத்துக்கு வந்திறங்கினார்’ என்கிறது இந்தப் பாடல். ஆக, இந்த இடம் உமக்கே சொந்தமில்லை. எனக்குச் சற்று முன் இங்கு வந்த உமக்கு, என்னை வெளியேற்ற என்ன அதிகாரம் உள்ளது? இன்னொரு விஷயம்… நீங்கள் அழைத்து நான் இங்கு வரவில்லை. என் ஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜர் கட்டளைப்படி இங்கு வந்தேன்.”

"அதனால் என்ன?” – இடைமறித்தார் பெருமாள்.

"பூக்கள், மொட்டுகளாக இருக்கும்போதே பறித்து, அவை மலர்வதற்குள் மாலை தொடுத்து, உமக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஆச்சார்யரது ஆணை. தாங்கள் அழைத்ததும் நான் வந்திருந்தால், மொட்டுகள் மலர்ந்திருக்கும். ஆச்சார்யரது ஆணையை மீறிய குற்றத்துக்கு நான் ஆளாகி இருப்பேன். எனக்கு அவரே முக்கியம். அவர் ஆணைப்படி தொடுத்த மாலை இது. அணிவதும் அணியாததும் உங்கள் இஷ்டம்” என்ற அனந்தாழ்வான் திரும்பி நடந்தார்.

அனந்தாழ்வானின் ஆச்சார்ய பக்தியில் நெகிழ்ந்த ஏழுமலையான் இரு கரம் நீட்டி அவரைத் தடுத்தார். "அனந்தா… உனது குரு பக்தியை உலகுக்கு உணர்த்தவே இந்த நாடகம். பிரம்மாவுக்கும் ருத்திரருக்கும் அளிக்காத புருஷார்த்தங்களை உனக்குத் தருகிறேன். வேறு என்ன வேண்டும்… கேள்!” என்றார்.

உடனே பகவானின் திருவடியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய அனந்தாழ்வான், "ஸ்வாமி… எனது இந்தச் சேவை ஆயுளுக்கும் தொடர அனுக்கிரகியுங்கள்” என வேண்டினார்.

அப்படியே அருள் பாலித்த ஏழுமலையான், அனந்தாழ்வாரின் சீடர்களுக்கும், அவருடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மோட்சப்பேறு கிடைக்கும் என அருள்புரிந்தார். பிறகு, அனந்தாழ்வானுக்கு சீடர்கள் பெருகினர்.

‘நம்மாழ்வாரே தன் தெய்வம்!’ என்று குரு பக்திக்கு உதாரணமாகத் திகழ்ந்த மதுரகவியாழ்வாருக்கு ஒப்பானவர் அனந்தாழ்வார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இவரின் சீடர்களுக்கு மதுரகவி தாசர்கள் என்ற பெயரும் வந்தது.

  • 8
·
Added article

எம்ஜிஆருக்கு ஒரு அறிமுக நாயகியை பிடித்து விட்டால், அந்த ஜோடி சிறப்பாக அமைந்தால் தொடர்ந்து அவர்களுடன் நடிக்க ஒப்பந்தம் செய்து விடுவார். சரோஜாதேவி, ஜெயலலிதா, லதா ஆகியோருடன் இப்படியான ஒப்பந்தம் இருந்தது. இந்த வரிசையில் மஞ்சுளாவும் இருந்தார் என்பது பலர் அறியாதது. குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த மஞ்சுளா உரிய வயதில் நாயகியாக நடிக்க தயாரானார். 'சாந்தி நிலையம்' என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் 'ஜெய் ஜவான்' என்ற படத்தில் நடித்து விருதும் பெற்றார்.

இந்த நிலையில் ஏவிஎம் ஸ்டூடியோவில் மஞ்சுளாவின் போட்டோஷூட் நடந்தது. அந்த பக்கம் தற்செயலாக சென்ற எம்ஜிஆர் இதை கவனித்து, இந்த பெண் இவ்வளவு அழகாக, துறுதுறு என்று இருக்கிறாளே என்று கருதினார். உடனடியாக மஞ்சுளாவின் பெற்றோரை அழைத்து உங்கள் மகள் என்னுடன் 5 வருடம் நடிக்க தயாரா என்றார். கரும்பு தின்ன கூலியா என்று உடனடியாக அவர்களும் சம்மதித்தார்கள்.

ரிக்ஷாக்காரன் முதல் படம். அதில் துடுக்குத்தனமான சென்னை குடிசை வாழ் பெண்ணாக நடித்து அசத்தினார். அப்போது அவருக்கு வயது 16. 'உலகம் சுற்றும் வாலியன்', 'இதய வீணை', 'நேற்று இன்று நாளை', 'நினைத்ததை முடிப்பவன்' படங்களில் நடித்தார். எம்ஜிஆருடனான ஒப்பந்தம் முடிந்ததும், சிவாஜியுடன் 'டாக்டர் சிவா', 'எங்கள் தங்க ராஜா', 'அவன் தான் மனிதன்', 'என் மகன்', 'அன்பே ஆருயிரே', 'மன்னவன் வந்தானடி', 'உத்தமன்', 'அவன் ஒரு சரித்திரம்', 'நெஞ்சங்கள்' படங்களில் நடித்தார். தெலுங்கில் டாப் ஹீரோக்களான என்.டி.ஆர்., ஷோபன் பாபு மற்றும் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தார். மஞ்சுளா ஹீரோயினாக நடிக்கும் காலம் வரை கிளாமர் ஹீரோயினாகவே இருந்தார்.

  • 9
·
Added article

ஒரு படத்தைத் திட்டமிட்டபடி எடுக்கமுடியுமா? எடுக்கின்ற படத்தை குறுகியகாலப் படைப்பாக தயாரிக்கமுடியுமா? குறிப்பிட்ட நடிகரை வைத்து தொடர்ந்து பல படங்கள் கொடுக்கமுடியுமா? நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சம்பளத்தை ஒரேதவணையில் வழங்கும் தயாரிப்பாளர் உண்டா? படத்துக்குப் பூஜை போடும்போதே, பட ரிலீஸ் தேதியை அறிவித்து, அந்தத் தேதியில் படத்தை வெளியிடுவது சாத்தியமா? அத்தனையும் நிகழ்த்திக் காட்டியவர்... சாண்டோ சின்னப்பா தேவர்.

உடல்வாகில் பயில்வான். செயல் திறனில் அசகாயசூரர். பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் என்றாலும் வளர்ந்தது கோவையில்தான். வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பத்தில் மில் வேலை உட்பட பல வேலைகளைச் செய்தார். சின்னச்சின்னதாக தொழில்கள் செய்தார். சகோதரர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சிக் கூடம் வைத்திருந்தார். அந்தக் கூடம் லேசான திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்போது கோவையில்தான் இருந்தது ஜூபிடர் ஸ்டூடியோ. இந்த நிறுவனத்தில் மாதச் சம்பளத்துக்கு நடித்தவர்களில் ஒருசிலர், இவரின் உடற்பயிற்சிக் கூடத்துக்கு வந்தார்கள். பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கட்டுமஸ்தான உடம்பு கொண்ட சின்னப்பா தேவருக்கு, ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மெல்ல மெல்ல திரைத்துறையில் ஆர்வம் வந்தது. அந்த சமயத்தில், கிடைத்த நடிகருடனான நட்பு, மரணிக்கும் வரை நீடித்தது. அதுமட்டுமல்ல... திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றிக்கும் வித்திட்டது. சின்னப்பா தேவருக்கு அப்படிக் கிடைத்த நண்பர்... எம்ஜிஆர்.

சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார் தேவர். ‘சொந்தமாக படமெடுத்தால் என்ன’ எனும் எண்ணம் தோன்றியது. நண்பர்கள் கையிலிருந்த பணத்தைக் கொடுத்து உதவினார்கள். ‘தேவர் பிலிம்ஸ்’ உருவானது. எம்ஜிஆரை ஹீரோவாக்கினார். பானுமதி, கண்ணாம்பா முதலானோர் நடித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் படத்தில் ‘மாடு’ பிரதானக் காட்சியில் இடம்பிடித்து மிரட்டியெடுத்தது. பின்னர், சிங்கம், புலி, யானை உள்ளிட்ட பல மிருகங்களை படத்தில் கொண்டுவந்தார் என்பது தனிக்கதை. ‘தேவர் பிலிம்ஸா... மிருகங்களை வைச்சு அசத்துவாங்களேப்பா’ என்று எல்லோரும் சொல்லும் அளவுக்கு தனி அடையாளத்துடன் திகழ்ந்தார். முதல் படம் எம்ஜிஆருடன். ஆனால் இருவருக்கும் முட்டிக்கொண்டது. ஒருவழியாக படத்தை எடுத்து முடித்து, ரிலீஸ் செய்து, வெற்றிப் படமாகவும் அமைந்தது. பின்னர் ஒருவழியாக எம்ஜிஆரும் சின்னப்பா தேவரும் பிணக்கில் இருந்து வெளிவந்தார்கள். பழைய நட்பு இன்னும் கெட்டிப்பட்டது. ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’ என்று தொடர்ந்து படங்கள் பண்ணினார்கள். எல்லாமே ஹிட்டடித்தன. நடுவே, ரஞ்சன், சி.எல்.ஆனந்தன், ஜெமினி கணேசன் என ஒரு ரவுண்டு போய்விட்டு வந்தார் எம்ஜிஆரிடம். சிவாஜியை வைத்து ஏ.பீம்சிங் ‘ப’ வரிசை படங்களை இயக்கினார் என்றால், சின்னப்பா தேவர் எம்ஜிஆரை வைத்து ‘த’ வரிசைப் படங்களை தயாரித்தார். தன் படங்களுக்கென கதை இலாகாவை உருவாக்கினார். டைட்டிலில் ‘தேவர் பிலிம்ஸ் கதை இலாகா’ என்றே வெளிவரும். இசைக்கு கே.வி.மகாதேவன். பாடலுக்கு கண்ணதாசன். இயக்கத்துக்கு சகோதரர் எம்.ஏ.திருமுகம். பாட்டெல்லாம் ஹிட்டாகின.

குழுவினரை அழைத்து கதை உருவாக்கச் சொல்லுவார். கதை இவருக்குப் பிடித்திருந்தால்தான் அடுத்தக்கட்டத்துக்குச் செல்வார். இல்லையெனில் மீண்டும் கதை உருவாக்கும் வேலை தொடங்கிவிடும். அந்தக் கதையில், எம்ஜிஆருக்கென சின்னச்சின்ன விஷயங்கள் சேர்க்கப்படும். எல்லோரும் பார்க்கும்படியான கதையாக அமைக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சென்டிமென்ட்டுகள் கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். அவ்வளவுதான்... கதை ரெடி. எம்ஜிஆருக்குச் சொல்லப்படும். கால்ஷீட் கொடுப்பார். பூஜை தேதி அறிவிக்கப்படும். பூஜையின் போதே, ரிலீஸ் தேதியும் தைரியமாக அறிவித்துவிட்டுதான் வேலையில் இறங்குவார். சொன்ன தேதியில் ரிலீஸ் செய்தும்விடுவார். இதைக் கண்டு வியக்காத தயாரிப்பாளர்களே இல்லை. அதேபோல், படத்தில் நடிகர், நடிகைகள் முடிவு செய்யப்படும். அவர்களிடம் பேசப்படும். சம்மதம் வாங்கப்படும். டெக்னீஷியன்களும் அப்படித்தான். எல்லாம் முடிவானதும், எல்லோருக்கும் ‘சிங்கிள் பேமெண்ட்’ வழங்கப்படும். அதாவது, ஒரு படத்துக்கான சம்பளத்தை, இரண்டு மூன்று தவணைகளாகக் கொடுப்பதெல்லாம் சின்னப்பா தேவருக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயங்கள்.

இந்தித் திரைப்படத்துக்காக, ‘ஹாத்தி மேரா சாத்தி’ படத்துக்காக ராஜேஷ்கண்ணாவிடம் கதையைச் சொல்லி, சம்மதம் வாங்கினார் தேவர். இத்தனைக்கும் தேவருக்கு இந்தியெல்லாம் தெரியாது. அதேபோல், ராஜேஷ்கண்ணா தேவரின் செயலைக் கண்டு மிரண்டுபோனாராம். படத்துக்கு சம்பளம் சொன்னதும், அந்தத் தொகை முழுவதையும் கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக்கில் இருந்து எடுத்துக் கொடுத்தாராம். காசோலை பயன்படுத்தமாட்டார் தேவர் என்றும் நீண்டகாலமாக வங்கியில் கணக்கு கூட வைத்துக் கொள்ளவில்லை என்றும் சொல்லுவார்கள்.

எம்ஜிஆரும் தேவரும் நகமும் சதையும் போல. அப்படியொரு நட்பு இருவருக்கும். ஆனாலும் உடம்பு முழுக்க சந்தனமும் நெற்றி நிறைய விபூதியும் பூசிக்கொண்டிருக்கும் தேவர், எம்ஜிஆரை, ‘ஆண்டவரே’ என்றுதான் அழைப்பார். எத்தனையோ பேருக்கு வள்ளலென வாரிவாரிக் கொடுத்த எம்ஜிஆர், சின்னப்பா தேவரை ‘முதலாளி’ என்றுதான் கூப்பிடுவார். தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடிக்கிறார் என்றாலே, விநியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் ரசிகர்களும் குஷியாகிவிடுவார்கள். அந்த அளவுக்கு இந்தக் கூட்டணி மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. இவர்களின் கூட்டணியில் படுதோல்வியைச் சந்தித்த படம்... ‘தேர்த்திருவிழா’வாகத்தான் இருக்கும். பார்ப்பதற்கு பயில்வான் போல், கொஞ்சம் முரட்டு ஆசாமியாகவும் கறார் பேர்வழியாக இருந்தாலும் சிறந்த பக்திமானாகவும் திகழ்ந்தார் சின்னப்பா தேவர். மிகச்சிறந்த முருகபக்தர். அதிலும் மருதமலை முருகன் மீது அப்படியொரு பக்தி கொண்டிருந்தவர். வார்த்தைக்கு வார்த்தை ‘முருகா முருகா’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். மருதமலை கோயிலுக்கு கணக்கிலடங்காத அளவுக்கு திருப்பணிகள் செய்திருக்கிறார். சொல்லப்போனால், மருதமலை முருகன் கோயில் இன்றைக்கு பிரசித்தமாகியிருப்பதற்கு, சின்னப்பாதேவர்தான் காரணம்.

கோவையில் மிகப்பெரிய விநியோகஸ்தர் அவர். தேவரின் படங்களை தொடர்ந்து அவர்தான் அந்தப் பகுதியில் ரிலீஸ் செய்து வந்தார். ஒருநாள் அவரை தேவர் போனில் அழைத்தார். ‘இப்போ எடுத்திட்டிருக்கிற படத்துக்கு நீங்க பணம் எதுவும் தரவேணாம். அதுக்கு பதிலா ஒண்ணு செய்யணும்’ என்றார். ‘சொல்லுங்க முதலாளி’ என்றார். ‘மருதமலைக்குப் போறதுக்கு ஒரு ரோடு போட்டுக் கொடுங்க போதும்’ என்றார் தேவர். அப்படித்தான் கோயில் பிரபலமானது. அதேபோல் தேவர் செய்த இன்னொரு விஷயம்... ஐம்பதுகளில், கோவையில் நண்பர்கள் ஆளுக்குக் கொஞ்சமாக பத்தாயிரம் ரூபாய் வரை கொடுத்ததை ஒருபோதும் மறக்கவில்லை தேவர். ஒவ்வொரு படத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு தொகையை தனக்கும் இன்னொரு தொகையை உதவிக்காகவும் குறிப்பிட்ட தொகையை முருகன் கோயில்களுக்காகவும் குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை தன் நண்பர்களுக்குமாகவும் வழங்கி வந்தாராம்.

’’உழைப்பால் உயர்ந்தவர் சின்னப்பா தேவர். தானும் உயர்ந்து, பிறரையும் உயர்த்தியவர். யாருக்கெல்லாம் முடியுமோ, யாரெல்லாம் உதவி என்று கேட்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அள்ளிக்கொடுத்தவர். எல்லோருக்கும் நம்பிக்கையுடன் நடந்துகொள்வார். மிகவும் நாணயமாக வாழ்ந்தார். இனி அவரைப் போல ஒருவரைப் பார்க்கவே முடியாது. அப்பேர்ப்பட்ட உத்தமர் அவர்’’ என்று சின்னப்பா தேவரின் மரணத்தின் போது நெகிழ்ந்து உருகிச் சொன்னார் எம்ஜிஆர்.

தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, தனக்கென, தன் படங்களுக்கென ஒரு பாணியை கட்டமைத்து, திரையுலகில் அழியாப் புகழ் பெற்றவர் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்.

  • 8
·
Added a post

கணேஷ்ஆபிசிலிருந்துசீக்கிரமே…வீட்டிற்கு வந்து விட்டான்…. வீட்டினுள்ளேஅவன் நுழைந்ததுமே,அவங்கம்மா பார்வதி அவனை நிற்க சொன்னாள்….. தன் மனைவி அனுஜாவை பற்றி ஏதாவது ரிப்போட் தானே சொல்ல போறாங்க…. கேட்டுட்டு படுக்கையில் போய் ரெஸ்ட் எடுக்கலாம்….. எப்போதும் பாடும் பாட்டு தானே….இப்போதும் அதே தான்… கால்யாணம்ஆகி இந்தரெண்டு வருஷத்தில் தன் மனைவி பற்றி குறைசொல்லாத நாளே இல்லை….வயதாக ஆக இந்த அம்மாக்கள்ஏன் தான் இப்படி இருக்கிறார்களோ…பொண்டாட்டிபேச்சு கேட்டு, தன் மகன் தன்னை விட்டு போய் விடுவானோ என்ற பயம் தான்காரணமாக இருக்கலாம்….என்று நினைத்தபடி 'என்னம்மா ''என்று கேட்டு சலித்து கொண்டேநின்றான்….பார்வதி குறை கூற ஆரம்பித்தாள்….

இப்போ மணி என்னடா…..

மத்தியானம் மூணு மணி……

உன் பொண்டாட்டி காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவ,இன்னும் சமையல் அறை பக்கமே வரலை….எல்லா வேலையும் நான் தான் செய்யறேன்….

உடம்பு சரியில்லாமே இருக்கும்மா பாவம் …..

அதானே பார்த்தேன்…. சரி உடம்பு சரியில்லை ஒத்து க்கறேன்….. ஒரு காபி சாப்பிடலே……செஞ்சி வைச்ச டிபன் சாப்பிடலே… ஒரு வேலையும் இதுவரை செய்யலே…. சோபாவிலே..உட்கார்ந்தவ உட்கார்ந்ததுதான்…அவங்கப்பாவிடமிருந்துஒரு லெட்டர் வந்தது….. அதை படிச்சி படிச்சி அழுதவஅழுதவதான்….

ஏதாவது கெட்ட செய்தியா இருக்கும்…. நான் போய் கேக்கிறேன்…..

அதெல்லாம் நீ கேக்காதே…. இப்பகூட பார்…. அந்த லெட்டரை மார்போடு அணைச்சிக்கிட்டு கண்ணீர் வடிய அரை தூக்கம் தூங்கறா…

என்னை என்னம்மாபண்ண சொல்றே…..

அந்த லெட்டரை நானும் நைசா படிச்சிட்டேண்டா கணேஷ்….

என்னம்மா லெட்டர் அது…. நீ தான் சொல்லேன்…..

அவங்கப்பா அவ கல்யாணத்துக்கு இருபது லட்ச ரூபாயை, பேங்கில்வீட்டை அடமானம் வைச்சி வாங்கினாறு….. இதுவரை வட்டி ஒருபைசா கட்டலே……வீடு ஏலத்துக்கு வந்த நோட்டிசு அது.., நாளைக்கு ஏலம்….

அதுக்கு நாம என்ன செய்யமுடியும்…..

என்ன செய்யறதா….?…போடா லூசு பயலே….. ஆயிரம் இருந்தாலும் அவர் என் சம்ந்தி……உனக்கு மாமனார்…. மரியாதையாய் நம்ம கம்பெனி செக்கை பேங்கில் கொடுத்து,அந்த வீட்டை மீட்டு பத்திரத்தைஅவர் கையில் கொடுத்து விட்டு மறு வேலை பார்….. எவ்வளவு செலவானாலும், பரவாயில் லை….. எதற்கும்அவரையும் வீட்டுக்கு போய் அழைச்சி கிட்டுபோ…..இன்னைக்கே வேலை முடியணும்…..

அம்மா இப்படி சொன்னதும்அவளை உள்ளுக்குள் பாராட்டினான் கணேஷ்…..பின்பு வெளியே கிளம்பி போனான் அம்மா சொன்னத்தை முடிக்க…,

அழாத குறையாக துக்கத்தில் இருந்த அனுஜா,இப்படி தன் மாமியார் சொன்னதை கேட்டுகலங்கியே விட்டாள்…. அத்தை என கூறிக்கொண்டே ஓடிவந்து அவள் காலில் விழுந்தாள்……அவள் தலையை கோதி விட்ட பார்வதி, என்ன இருந்தாலும் நீ எங்க வீட்டு பொண்ணுடி….. உன் குடும்பம் வேறு இல்லை…அதுவும் என் குடும்பம் தான்…. அழாதே…வேலை பார் என்று அவளை இரண்டு கைகளால் தூக்கி அணைத்து கொண்டாள் பார்வதி…..

  • 10
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: மறைமுகமாக செயல்பட்டவர்களைக் கண்டறிந்து ஒதுக்கு வீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு ஆதரவு கூடும். தந்தைவழி உறவினர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு உண்டு. வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் வீண் அலைச்சல் டென்ஷன் விலகும்.

மிதுனம்: குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். குடும்பச் சூழ்நிலையறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய மின்சாதனங்களை மாற்றி புதியது வாங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.

கடகம்: புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

சிம்மம்: மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்சினை களுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வீடு தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு சகல வசதிகளுடன் வீடு அமையும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

துலாம்: உங்களின் நிர்வாகத்திறன் பளிச்சிடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கலைப்பொருட்கள் சேரும். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் கிடைக்கும்.

விருச்சிகம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் நிலவிய பிரச்சினைகள் நீங்கும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

தனுசு: சவாலான காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த தொகை கைக்கு வரும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மகரம்: குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இழுபறிக்குப் பிறகே முடியும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

கும்பம்: உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பணவரவு திருப்தி தரும். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மீனம்: கனிவானப் பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். உறவினர் கள், நண்பர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். விருந்தினர் வருகை யால் வீடு கலகலப்பாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வியாபாரத்தில் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள்.

  • 94
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 23 ஆம் தேதி புதன்கிழமை 9.9.2026.

இன்று பிற்பகல் 12.33 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று மாலை 04.03 வரை ஆயில்யம். பின்னர் மகம்.

இன்று அதிகாலை 01.56 வரை பரிகம். பின்னர் பின்னர் இரவு 11.26 வரை சிவம். பிறகு சித்தம்.

இன்று அதிகாலை 01.30 வரை கரசை. பின்னர் பிற்பகல் 12.33 வரை வணிசை. பின்பு இரவு 11.44 வரை பத்திரை. பிறகு சகுனி .

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=644&dpx=2&t=1788921973

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 94

Good Morning....

  • 93
  • 92
·
Added a news

எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட தீவிரமாக வெப்பமடையும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு ஆகும். ஆனால், அதன் தாக்கம் உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடும்.

அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. வெறும் தகவலாக அதைக் குறித்து அறிந்துகொண்டவர்கள், அதன் தாக்கத்தை கண்ணால் பார்த்துகொண்டிருக்கிறோம்.

இந்நிலையில், இம்முறை உருவாகியுள்ள எல் நினோவை, எல் நினோக்களின் காட்ஸில்லா என அழைக்கிறார்கள்.

அதாவது, இம்முறை நிகழும் எல் நினோ பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்துமாம்.

ஏற்கனவே, எல் நினோ காரணமாக ஏற்பட்ட மழையால், சிலி நாட்டில் கடந்த வார இறுதியில் 10 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

மத்திய அமெரிக்காவில், ஹோண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் பனாமா ஆகிய பகுதிகளில் வறட்சி காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பனாமா கால்வாயில் போதுமான தண்ணீர் இல்லாததால் கப்பல் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

கனடாவைப் பொருத்தவரை, எல் நினோவின் தாக்கத்தால், குளிர்காலத்தின் அளவு குறைவாக இருக்கும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.

குறைவான பனி, மேற்கில் அதிக மழை, அதனால் வசந்த காலத்தில் ஏற்பட இருக்கும் பாதிப்புகள், சீக்கிரமாக காட்டுத்தீ உருவாகும் அபாயம் மேலும் கூடுதல் வறட்சி ஆகியவற்றை கனடா எதிர்கொள்ள நேரிடும் என்கிறார்கள் அவர்கள்.

பரந்த, வளமான புல்வெளி சமவெளிகளில் பயிர்களை வளர்த்து, கால்நடைகளை வளர்க்கும் வழக்கம் கொண்ட விவசாயிகளுக்கு இம்முறை ஏமாற்றம் ஏற்படலாம்.

ஆக மொத்தத்தில், எல் நினோவால் அதிகரித்த வெப்பம் காரணமாக 2024ஆம் ஆண்டுதான் வரலாற்றிலேயே அதிக வெப்பம் கொண்ட ஆண்டு என்றார்கள்.

ஆனால், இம்முறை உருவாகியுள்ள எல் நினோவால், 2027ஆம் ஆண்டு அந்த சாதனையை முறியடிக்கலாம் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.

  • 163
·
Added a post

ஒரு பெரிய குருவிடம் ஒரு சீடன் கல்வி கற்று வந்தான். அவனுக்குத் தன் மீது ரொம்பவும் பெருமை; தான் எல்லாப் புத்தகங்களையும் கற்றுவிட்டதாகவும், உலகில் தனக்குத் தெரியாத விஷயங்களே இல்லை என்றும் நினைத்து அகந்தையுடன் திரிந்தான்.

​ஒரு அமாவாசை இரவு. சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. குரு தன் சீடனிடம், "இந்த இருட்டில் நான் வெளியே சென்றுவிட்டு வருவதற்கு எனக்கு ஒரு விளக்கு வேண்டும். போய் ஒரு விளக்கை எடுத்து வா," என்றார்.

​சீடனும் ஓடிப்போய் ஒரு சிறிய களிமண் விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரி போட்டு, அதை எரியச் செய்து குருவிடம் கொண்டு வந்து நீட்டினான்.

​குரு அந்த விள்ககை வாங்கிக் கொண்டு சீடனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்:

"இந்த விளக்கு எரியத் தொடங்குவதற்கு முன்பு எங்கிருந்து வந்தது? இப்போது ஒளிந்திருக்கும் இந்த வெளிச்சம், விளக்கு எரிவதற்கு முன்பு எங்கே இருந்தது?"

​சீடன் திகைத்துப் போனான். சற்று யோசித்துவிட்டு, "தெரியவில்லை குருவே. விளக்கு இல்லாதபோது வெளிச்சம் எப்படி இருந்திருக்க முடியும்?" என்றான்.

​புன்னகைத்த குரு விளக்கைத் தன் கையில் ஏந்தியவாறு சொன்னார்:

"பார் மகனே! இந்த வெளிச்சம் எங்கேயோ தூரத்தில் இருந்து வரவில்லை. இந்த விளக்குக்குள் ஊற்றப்பட்ட எண்ணெய், போடப்பட்ட திரி, அதை எரியச் செய்த தீப்பொறி—இவை அனைத்துமே இந்தச் சின்ன விளக்குக்குள் ஏற்கனவே மறைந்திருந்தன. நாம் ஒரு சிறிய தீயைக் கொண்டுவந்தபோதுதான், அதற்குள் இருந்த வெளிச்சம் வெளியே வெளிப்பட்டது.

​மனிதனின் ஆன்மாவும் அப்படித்தான். ஞானம், அன்பு, அமைதி எல்லாமே மனிதனுக்குள்தான் ஏற்கனவே இருக்கின்றன. உலகப் படிப்புகளும் அனுபவங்களும் அந்தத் தீப்பொறியைப் போல, அவனுக்குள் உறங்கிக் கிடக்கும் பேராற்றலை வெளிக்கொணர்கின்றனவே தவிர, வெளியிலிருந்து எதையும் புகட்டுவதில்லை."

​வெளிச்சம் என்பது விளக்குக்கு வெளியேயிருந்து வருவதில்லை; அது விளக்குக்குள் இருக்கும் எண்ணெயும் திரியும் சேரும்போது இயல்பாக உருவாவது.

​அதுபோலவே, மகிழ்ச்சியும் அமைதியும் நமக்குள் தான் இருக்கின்றன. அதை வெளியே தேடுவதை விட, நமக்குள்ளேயே தேட வேண்டும்.

நம்மிடம் உள்ள திறமைகளும் நல்ல குணங்களும் எப்போதோ மறைந்திருக்கும் ஆற்றல்கள்தான். சரியான சூழலும் முயற்சியும் அமையும்போது, அந்த அகவிளக்கு போல பிரகாசமாக எரியத் தொடங்கும்.

  • 165
·
Added a post

முன் காலங்களில் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து, புகுந்த வீட்டுக்கு முதன் முதலாக அனுப்பும்பொழுது, நிறைய சீர் வரிசைகளோடு அனுப்புவார்கள். சிலர் சீர் வரிசைகளோடு, தங்களது பெண்ணுக்கு உதவியாக, வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஒரு வேலைக்காரப் பெண்ணையும் அனுப்புவார்கள். இப்படி வீட்டு எடுபிடி வேலைகளைச் செய்வதற்கு செல்வோர்களை, 'சீதன வெள்ளாட்டி' என்பர்.

திருவரங்கத்தில் வைணவத் தொண்டு புரிந்து வந்தவர் ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள். இவர் ஸ்ரீ ராமாநுஜரின் மானசீக குரு ஆவார். ஸ்ரீ ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர் பெரிய நம்பி ஆவார். இவரது மகள் அத்துழாய். இவள் திருமணம் முடிந்து, புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது, தன்னால் முடிந்த அளவில் சீதனப் பொருட்களோடு தனது மகள் அத்துழாயை அனுப்பி வைத்தார் நம்பி.

சீதனப் பொருட்களில் திருப்தி அடையாத மாமியார், குறையுடன் மருமகளோடு காலத்தை ஓட்டினார். தாய் பாசம் அறியாத அத்துழாய், மாமியாரை தனது தாய் போல எண்ணி குடும்பத்தில் இருந்து வந்தார். நாட்கள் சென்றன.

ஒரு நாள், காவிரி நதியில் நீராட அக்கம்பக்கத்து தோழிகள் இல்லாமையால், தனது மாமியாரை துணைக்கு அழைத்தாள் அத்துழாய். இத்தனை நாள் மனதில் பொருமிக்கொண்டிருந்த மாமியார், வார்த்தைகளால் சுட்டாள். “என்னை ஏன் அழைக்கிறாய்? உன் தந்தை அனுப்பிய சீதன வெள்ளாட்டியை கூட்டிப் போயேன்" என்றாள். மாமியாரின் மனம் அறிந்த அத்துழாய், பொறுமை காத்தாள்.

மாமியார் ஒரு வேலையாக பக்கத்து கிராமத்துக்குச் சென்ற சமயம், அவள் அனுமதியோடு தனது தந்தையைக் காணச் சென்றாள் அத்துழாய். தந்தையிடம் தனது வருத்தத்தைக் கூறினாள். பெரியநம்பி, அந்த விஷயத்தை ஸ்ரீ ராமாநுஜரிடம் உரைத்தார். ஸ்ரீ ராமாநுஜர், தனது ஆச்சாரிய குருவான பெரியநம்பிக்கு உதவ எண்ணம் கொண்டார்.

ஸ்ரீ ராமாநுஜர் தனது பிரதான சிஷ்யன் முதலியாண்டானை அழைத்து, “அத்துழாய் புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது, நீ அவளுடன் சீதன வெள்ளாட்டியாக செல்” என்று கூறினார்.

முதலியாண்டான் ஸ்வாமி, அத்துழாயுடன் அவள் புக்ககம் சென்றபோது, அங்கு அவள் மாமியார் கிராமத்திலிருந்து திரும்பவில்லை. முதலியாண்டான் சென்ற உடனேயே தனது வேலைகளை ஆரம்பித்து விட்டார். வீட்டின் ஒட்டடைகளை நீக்கி, வீட்டைக் கழுவி சுத்தம் செய்தார். வீட்டைச் சுற்றிலும் இருந்த குப்பை கூளங்களை நீக்கி தூய்மை செய்தார். துணிமணிகளைத் துவைத்து, உலர்த்தி, காய்ந்ததை மடித்து வைத்து... என்று பல வேலைகளில் அத்துழாய்க்கு உதவி புரிந்தார்.

மூன்று நாட்கள் கழித்து வந்த மாமியார், தனது வீடும், சுற்றுப்புறமும் வெகு நேர்த்தியாக பளிச்சென இருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றாள். வீட்டில் ஆராதனை செய்ததால், தெய்வீக மணத்தோடு இருந்ததைக் கண்டு மகிழ்ந்தாள். வீட்டுக்குள் நுழைந்த மாமியார், வீட்டின் பின் பகுதியில் முதலியாண்டான் பாத்திரங்களை சுத்தம் செய்வதைக் கண்டு அதிர்ந்தாள்.

முதலியாண்டான், ஸ்ரீ ராமாநுஜரின் சிஷ்யர் என்பதை அவள் அறிவாள். சீதன வெள்ளாட்டியாக அவர் வந்துள்ளதை அத்துழாய் தெரிவித்ததும், கண்ணீர் மல்க முதலியாண்டான் திருவடியில் வீழ்ந்து மன்னிக்கும்படி வேண்டினாள் மாமியார். ஸ்ரீராமாநுஜரின் உத்தரவின் பேரில் தாம் வந்துள்ளதாகத் தெரிவித்த முதலியாண்டான் ஸ்வாமி, ஆச்சாரியார் உத்தரவு கொடுத்தால்தான் தாம் செல்ல முடியும் என்று கூறிவிட்டார்.

மாமியார் திருவரங்கம் சென்று, ஸ்ரீ ராமாநுஜரின் திருவடிகளை வணங்கி, முதலியாண்டான் ஸ்வாமியை திருப்பி அழைக்கும்படி வேண்டினாள். பெரியநம்பியின் அனுமதியோடு, முதலியாண்டானை திருவரங்கம் திரும்பும்படி கூறினார் ஸ்ரீ ராமாநுஜர்.

  • 166
·
Added article

🌹எம்.ஜி.ஆரின் பல படங்களில் வில்லனாக நடித்து எம்.ஜி.ஆர் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளானவர்தான் நடிகர் நம்பியார். தொடர்ந்து வில்லனாக நடித்தாலும் நம்பியாருடனும் மிகவும் நட்பாக பழகியவர்தான் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு தளங்களில் இருவரும் அன்புடன் பழகி கொள்வார்கள். நம்பியாரிடம் மனம் திறந்து பேசும் நல்ல நண்பராகவே எம்.ஜி.ஆர் இரு்ந்தார்.

நம்பியாரும் எம்.ஜி.ஆரை போலவே நாடகங்களில் நடித்து மெல்ல மெல்ல சினிமாவில் நுழைந்து முன்னேறியவர்தான். அது என்னவோ துவக்கம் முதலே அவருக்கு நெகட்டிவான வேடங்களே கிடைத்தது. அவரும் கிடைத்த வாய்ப்புகளை விடாமல் தனது நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தி வந்தார்.

ஒருமுறை ‘எங்க வீட்டு பிள்ளை’ படம் வெளியான சில நாட்கள் கழித்து நம்பியார் காரில் வந்து கொண்டிருந்தபோது சிலர் அவரின் காரை மறித்துள்ளனர். ‘என்ன விஷயம்.. யார் நீங்க?’ என நம்பியார் கேட்க ‘ நீ எப்படியா எங்க தலைவர அடிக்கலாம்?’ என கோபமாக கேட்க நம்பியாரோ ‘யாரு உங்கள் தலைவர்?.. நான் எப்ப அடிச்சேன்?’ என கேட்க, ‘வாத்தியாரா அடிச்சியே’ என சொல்ல எம்.ஜி.ஆரைத்தான் சொல்கிறார்கள் என அவருக்கு புரிந்துவிட்டது.

‘எனக்கு காசு கொடுத்தாங்க அடிச்சேன். அவர் என்னை அடிச்சத நீ பாக்கலயா?’ என கேட்க ‘ஓ காசு கொடுத்தா எங்க வாத்தியார அடிப்பியா?’ என மேலும் பொங்க, ‘சரிப்பா!.. இனிமேல் அடிக்க மாட்டேன்’ என சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்தவர்தான் நம்பியார். இதை ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.

🌹எங்க வீட்டு பிள்ளை படம் சூப்பர் ஹிட் அடித்து வெள்ளிவிழா கொண்டாடியது. எனவே, இதற்காக விழா எடுக்கப்பட்டது. இந்த விழாவில் எம்.ஜி.ஆர், அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் அப்படத்தில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

🌹இந்த விழாவில் எம்.ஜி.ஆர் பேச துவங்கிய போது அவர் பேசுவது மக்களுக்கு தெளிவாக கேட்க வேண்டும் என்பதற்காக அவர் முன்பு இரண்டு மைக்குகள் வைக்கப்பட்டது. இதைப்பார்த்த நம்பியார் ‘நாங்களெல்லாம் பேசும் போது ஒரு மைக். எம்.ஜி.ஆர் பேசும்போது மட்டும் இரண்டு மைக்கா?.. அக்கிரமம்’ என நகைச்சுவையாக சொன்னார். இதைக்கேட்டு அங்கிருந்த கூட்டமே சிரித்தது. எம்.ஜி.ஆர் சாதாரணமானவரா!. பேச துவங்கியவர் ‘இந்த படத்தில் நான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளேன். அதனால் எனக்கு இரண்டு மைக்’ என சொல்ல கைதட்டல் விண்ணை பிளந்தது

  • 166
·
Added article

🌹பாடல் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக படப்பிடிப்புக்கு தளத்துக்கு வந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த அந்த பாடலின் ஒலிப்பேழையை ஓடவிட்டார் உதவி இயக்குநர்.

🌹காட்சிக்கான உடைகளை அணிந்தபடி சிவாஜி பாடலை கேட்கத் துவங்கினார். ஒருதடவையல்ல… இருதடவையல்ல; கிட்டதட்ட 11 முறைக்கும் மேலாக பாடலை ஓடவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தபடி பாடலை கேட்டு முடித்த சிவாஜி படத்தின் இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து “சுந்தரா கொஞ்சம் டயம் கொடு…அப்புறம் சூட் பண்ணிக்கலாம்…”

🌹எந்த பாடலையும் அதிகபட்சம் ஓரிருமுறை கேட்டுவிட்டு நடிக்கத் தயாராகும் சிவாஜியின் இந்த மாற்றத்தை கண்டு குழம்பிய சுந்தரம் “என்னண்ணே ஏதாவது பிரச்னையா…சூட்டிங்கை இன்னொரு நாள் வெச்சிடலாமா…? என்றார் பதறியபடி. “இல்லை சுந்தரா, அண்ணன் எனக்கு பெரிய சவாலை கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலை, தேர்ந்த நடிகனுக்குரிய உணர்ச்சிப் பிரவாகத்தோடு பாடியிருக்கிறார்.

🌹பல்லவியில் ஒரு விதமான பாவம், ஆக்ரோஷம்…அடுத்த சரணத்தில்.. இன்னொரு விதமான..தொனி. மற்ற சரணத்தில்…இன்னொரு பரிமாணம்…என பிச்சு உதறி யிருக்கிறார். ஒரே வரியையே இரண்டு இடங்களில் இரண்டு விதமான தொனிகளில் பாடி அற்புதம் செய்திருக்கிறார். ஒரு நடிகனின் வேலையை அவர் செய்திருக்கும்போது ஒரு நடிகனாக நான் இன்னும் அதிகம் மெனக்கெட்டால்தான் நான்

🌹அவர் சவாலை எதிர்கொள்ளமுடியும்… காட்சியும் எடுபடும். அதனால் எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடு பிறகு நடித்துக்கொடுக்கிறேன்” என ஓய்வறைக்குள் புகுந்துகொண்டார் சிவாஜி. உச்சி முதல் உள்ளங்கால்வரை நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் திலகத்துக்கு, தம் குரலிலேயே சவால் கொடுத்த அந்த பாடகர்தான் டி.எம். சௌந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.! கவுரவம் படத்தில் இடம்பெற்ற “ நீயும் நானுமா… கண்ணா நீயும் நானுமா…” என்ற அந்த பாடலை யாரால் மறக்க முடியும்.

  • 167
·
Added a post

ஆசிரியர் கரும்பலகை முன் வந்து ஒரு சவால் வைத்தார்.

“வெறும் 3 கோடுகளுடன் ஒரு சதுரம் வரையுங்கள்!”

கேள்வி எளிதாகத் தோன்றியது.

ஆனால் மாணவர்கள் யோசிக்கத் தொடங்கியபோது சிக்கல் புரிந்தது.

ஒரு சதுரத்திற்கு நான்கு பக்கங்கள் தேவை.

அப்படியிருக்க, மூன்று கோடுகளால் எப்படி சதுரம் வரைய முடியும்?

ஒவ்வொருவரும் தங்கள் வழியில் முயன்றனர்.

யாரோ மூன்று பக்கங்களை வரைந்தார்.

ஒருவர் நான்காவது பக்கத்தைப் புள்ளிக் கோடாக மாற்றினார்.

ஆனால் முழுமையான விடை கிடைக்கவில்லை.

இறுதியாக ஒரு மாணவி கரும்பலகை முன் வந்தார்.

அவர் முதலில் ஒரு முழு சதுரத்தை வரைந்தார்.

பிறகு அதன் உள்ளே 3 கோடுகளை வரைந்தார்.

அவ்வளவுதான்!

சதுரம்; 3 கோடுகளுடன் இருந்தது.

திடீரென்று எல்லோருக்கும் கேள்வியின் உண்மையான அர்த்தம் புரிந்தது.

  • 174
·
Added article

🌹மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தனது அண்ணன் சக்கரபாணி, மற்றும் சில மூத்த படத் தயாரிப்பாளர்களில் காலில் விழுந்து வணங்கி உள்ளார். ஆனால் அவரே ஒரு நடிகையின் காலில் விழுந்து வணங்க நினைத்திருக்கிறார்.

🌹அலைகள் ஓய்வதில்லை' படத்தின் 100வது நாள் விழாவில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார். படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு கேடயம் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது பாரதிராஜாவையும், படத்தையும் பாராட்டி பேசிவிட்டு, “படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்திருப்பவர் பிரமாதமாக நடித்திருந்தார்.

🌹படத்திலேயே அவருடைய நடிப்புதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் உண்மையிலேயே வயதானவராக இருப்பார், அவர் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரோ இளமையான பெண்ணாக இருக்கிறார். அதனால் அவரை இருகரம் கூப்பி வணங்குகிறேன்” என்று பேசினார். விழா முடிந்ததும் கமலா காமேஷை தனது காரில் அவரது வீடு வரை அழைத்துச் சென்று மரியாதை செய்தார்.

  • 176
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்யார் என்பதை கண்டறிவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பணவரவால் மனநிம்மதி உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

மிதுனம்: குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தராதீர். வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கடகம்: சகோதர வகையில் செலவு, அலைச்சல் வரும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் ஆகியவற்றை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்றுவீர். பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சிம்மம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வயிற்றுவலி, மூக்கடைப்பு நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

கன்னி: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும் விதமாக நடப்பீர். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். பங்குதாரரை அனுசரித்து நடக்கவும்.

துலாம்: திட்டமிட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். உங்களால் பயனடைந்த சிலர் இப்போது உங்களுக்கு உதவி செய்வர். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.

விருச்சிகம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். மனைவி, பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

தனுசு: மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், செலவு வரக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவி புரிவர். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.

மகரம்: சோர்வு நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். வீண் விவாதங்கள் விலகும். ஆடை, ஆபரணம் சேரும். மூத்த சகோதர சகோதரிகள் உங்களை புரிந்து கொண்டு செயல்படுவர். அலுவலகத்தில் மேலதிகாரி மதிப்பார். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.

கும்பம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிம்மதி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்.

மீனம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். பயணம் செல்வீர்.

  • 194
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 8.9.2026

இன்று பிற்பகல் 02.28 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று மாலை 05.11 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.

இன்று அதிகாலை 03.08 வரை வரீயான். பின்னர் பரிகம்.

இன்று அதிகாலை 03.33 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 02.28 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=643&dpx=2&t=1788863763

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 198

Good Morning...

  • 193
·
Added article

🌹 பம்பாய்க்கு நாடகம் நடத்த ஒருமுறை நான் போயிருந்தபோது தெருவில் எங்கள் குழுவினரோடு போய்க்கொண்டிருந்தேன்.

🌹அப்போது வழியில் சந்தித்த ஒரு வயதான கிழவி சொன்னார்.

தம்பி.. உன்னை எம்.சி.ஆர். நடிச்ச படங்கள்லே பாத்திருக்கேன்.. நல்லா நடிக்கிறே.. எனக்கு நீ ஒரு உதவி செய்யணுமே..

“என்னம்மா… சொல்லுங்க”.. - என்றேன்.

“🌹எம்.சி.ஆர். கிட்டே நான் விசாரிச்சேன்னு சொல்றீயா?”

அவருடைய பெயர், முகவரி எதையும் அவர் சொல்லவில்லை. அப்படியே போய்விட்டார். இந்த மாதிரியான ஈர்ப்பு சக்தி ஒரு நடிகருக்கு இருப்பதை உணர்ந்தபோது வியப்பாக இருந்தது.

அவரிடம் இயல்பாக இருந்த வள்ளல்

தன்மை அதற்கு ஒரு முக்கியமான காரணம்.

🌹 விளம்பரத்திற்காக அவர் அப்படிப் பண்ணுகிறார் என்று அவரைச் சிலர் விமர்சிப்பதைப் பார்த்திருக்கிறேன். விளம்பரத்திற்காக அவர் சில விஷயங்களைச் செய்திருக்கலாம். ஆனால் விளம்பரம் செய்துகொள்ளாமல், விளம்பர நோக்கம் இல்லாமல் அவர் பிறருக்குச் செய்த உதவிகள் ஏராளம்.

🌹யாராவது அவருக்கு முன்னாடி கஷ்டப்படுவதைப் பார்த்தால், உடனே உதவி பண்ணியிருக்கிறார். சினிமாவுலகில் அவருக்கு எதிராக இயங்கியவர்களுக்குக் கூட அவர் உதவியிருக்கிறார்.

🌹சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் என்கிற நடிகருடைய தாயார் மறைந்தபோது அவர் போய் நின்ற இடம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் வீடு. அவரை அடையாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆர். உடனே வீட்டில் இருந்தவர்களை அழைத்தார்.

“இவருக்கு ஒரு வேலைக் கொடுத்திருங்க. தேவைப்படுகிற பணத்தைக் கொடுத்திருங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

🌹அந்த முதிர்ந்த நடிகரான வெங்கட்ராமன் பிறகு சொன்னார். “வீட்டிலே அடுப்பில் உலையை வைச்சுட்டு ராமாவரம் தோட்டத்துக்குப் போனா கண்டிப்பா உலை பொங்கும்”.

🌹இதெல்லாம் நான்கு பேருக்குத் தெரியவேண்டும் என்பதற்காகச் செய்கிற காரியங்கள் இல்லை. எனக்குத் தெரிந்து அவரிடம் உதவி பெற்றவர்கள் பலர். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை.

“🌹ஒருமுறை அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக காரில் எம்.ஜி.ஆருடன் போய்க் கொண்டிருந்தோம். நல்ல வெயில் நேரம். யாரோ ஒரு அம்மாள் காலில் செருப்பில்லாமல் போவதைப் பார்த்துவிட்டு, என்ன நினைத்தாரோ, அந்தக் கால்களின் சூட்டைத் தான் உணர்ந்த மாதிரி, சட்டென்று தன்னுடைய காலில் போட்டிருந்த செருப்புகளைக் கழட்டி அந்த அம்மாவிடம் கொடுத்துவிட்டார்.

🌹எம்.ஜி.ஆர். கூட இருந்த டிரைவருக்கும், எங்களுக்கும் தான் இது தெரியும். அவரிடம் வந்து யாரும் கேட்கவில்லை. இருந்தபோதும் தானாகச் செய்தார்” என்று எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் சொல்லியிருக்கிறார்..

🌹அவரிடமிருந்த ஏதோ ஒரு குணம் அவரை அப்படிச் செயல்பட வைத்திருக்கிறது. இது மிகையில்லை. அவருடைய இயல்பு.எம்.ஜி.ஆருக்கு இருந்த இளகிய சுபாவத்துக்கு உதாரணமாக நான் பார்த்தவரையில் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம்.

🌹வெளியூர்களில் ‘ஷூட்டிங்’ நடக்கும்போது டெக்னீஷியன்கள் உட்படப் பலருக்கு போடப்படும் சாப்பாட்டை அந்த இடத்துக்குப் போய் சாப்பிட்டுப் பார்ப்பார். அவர் சம்பந்தப்பட்ட ஷூட்டிங்கில் எப்போது வேண்டுமானாலும் இப்படி அவர் சோதிப்பது நடக்கும் என்பதால் படக்குழுவினர் அனைவருக்கும் வழங்கப்படும் சாப்பாடும் தரமாகவும், சுவையாகவும் இருக்கும்.

-நடிகர் சோ

  • 330
·
Added a post

சீனாவில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. எப்போதும் வீடு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், மருமகள்கள் தங்கள் தாய்வீட்டுக்குச் சென்றால், விரைவில் திரும்பி வர மாட்டார்கள்.

அன்றும் மருமகள்கள் தாய்வீடு செல்ல அனுமதி கேட்டனர். பெரியவர், “போய் வாருங்கள். வரும்போது நீங்கள் எனக்கு இரண்டு பொருட்களைக் கொண்டுவர வேண்டும். கொண்டு வராவிட்டால், மீண்டும் உங்கள் அம்மா வீடு செல்ல அனுமதிக்க மாட்டேன்” என்றார்.*

சரிங்க மாமா. என்ன வேணும், சொல்லுங்கள்?” என்றனர் இரு மருமகள்களும்.*

ஒரு காகிதத்தில் கொஞ்சம் காற்றை அடைத்துக் கொண்டு வரவேண்டும்” என்று ஒரு மருமகளிடமும், “காகிதத்தில் கொஞ்சம் தீயை கட்டிக் கொண்டுவர வேண்டும்” என்று இன்னொரு மருமகளிடமும் சொன்னார் பெரியவர்.

இதைக் கேட்டு மருமகள்கள் இருவரும் திகைத்தனர்.

சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டனர். தாய் வீட்டில் சந்தோஷமாகச் சில நாட்கள் இருந்தார்கள். வீடு திரும்ப வேண்டிய நாள் வந்ததும்தான் மாமனார் கேட்ட விஷயம் பற்றிய பயம் வந்தது.

இருவரும் கிளம்பினார்கள். வழியெங்கும் கவலையோடு புலம்பிக்கொண்டே நடந்தனர். அப்போது எருமை மீது சவாரி செய்துகொண்டு வந்த ஓர் இளம்பெண், உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார்.

இவர்களும் தங்கள் மாமனார் கேட்டதைச் சொன்னார்கள். அந்தப் பெண், இவ்வளவுதானா, கவலைப்படாதீர்கள்” என்று சிரித்தார்.*

முதல் மருமகளைப் பார்த்து, “ஒரு காகிதத்தில் விசிறி செய்து கொடு. நீ ஒரு சிம்னி விளக்கை ஏற்றி, ஒரு காகிதத்தில் சுற்றி எடுத்துட்டுப் போ” என்றார்.

மருமகள்கள் இருவருக்கும் பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி. அந்தப் பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.*

மாமனாரிடம் அந்தப் பெண் கூறியபடியே விசிறியையும், சிம்னி விளக்கையும் தந்தார்கள். அவர் ஆச்சரியப்பட்டார். இருவரும் வழியில் சந்தித்த அந்தப் பெண் பற்றிச் சொன்னார்கள்.*

இவ்வளவு புத்திசாலியான பெண்ணை, என் கடைசி மகனுக்கு மணம் முடிக்கப் போகிறேன்” என்றார் பெரியவர்.

அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பினார். கண்டுபிடித்துச் சொன்னதும், சம்பந்தம் பேசினார். திருமணம் இனிதே நடந்து முடிந்தது. வீட்டில் அனைத்தையும் பொறுப்பாகச் செய்தார் கடைசி மருமகள்.

பெரியவருக்கு மகிழ்ச்சி. நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார். எனவே தன் வீட்டு வாசலில், ‘இது நிறைவான வீடு’ என்று ஒரு பலகையை மாட்டி வைத்தார்.*

சில காலம் கழித்து அந்த வழியே சென்ற ஒரு துறவி இந்தப் பலகையைப் படித்தார். ‘யார் இது, இவ்வளவு திமிராக எழுதி வைத்தது? இந்த வீட்டினருக்குப் பாடம் புகட்டி, திமிரை அடக்கப் போகிறேன்’ என்று முடிவு செய்தார்.*

வீட்டில் நுழைந்த அவரை, கடைசி மருமகள்தான் வரவேற்றார். துறவி, “இது நிறைவான வீடாமே… அப்படியானால் எனக்கு இந்தச் சாலையின் நீளத்துக்கு ஒரு துணியை நெய்து கொடு. இல்லாவிட்டால் சபித்து விடுவேன்” என்றார்.*

கண்டிப்பாக நெய்கிறேன். சாலையின் இரு முனைகளையும் கண்டுபிடித்து, எவ்வளவு நீளம் என்று அளந்து தாங்கள் சொன்னால், அந்த அளவுக்கு நான் துணியை நெய்து கொடுக்கிறேன்” என்றார் மூன்றாவது மருமகள்.

அவர்கள் வீடு இருந்த சாலை எங்கோ வெகு தொலைவில் இருந்த தலைநகரத்திலிருந்து நாட்டின் எல்லைவரை சென்றது. அதன் ஆரம்பமும் முடிவும் யாருக்கும் தெரியாது என்பதால் துறவிக்குப் பதில் சொல்ல முடியவில்லை.*

சரி, வேண்டாம். கிணற்று நீர் அளவு எண்ணெய் ஆட்டிக் கொண்டுவா” என்றார் துறவி.*

தாங்கள் தயவு செய்து கிணற்றில் எத்தனை ஆழாக்கு நீர் உள்ளது என்று சொன்னால், உடனே அத்தனை ஆழாக்கு எண்ணெயை ஆட்டித் தந்துவிடுகிறேன்” என்றார் மூன்றாவது மருமகள் பணிவோடு.*

துறவிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சில நொடிகள் யோசித்தார். இந்தப் புத்திசாலிப் பெண்ணை மடக்குவது எளிதல்ல என்பதை உணர்ந்தார். யோசித்தபடியே, பறந்து வந்த ஒரு புறாவைச் சட்டென்று பிடித்தார்.*

நீ மிகவும் புத்திசாலியாக இருக்கிறாய். இந்தப் புறாவை நான் பறக்க விடப் போகிறேனா, இல்லை கூண்டுக்குள் அடைக்கப் போகிறேனா என்று சொல் பார்ப்போம்” என்றார் துறவி.*

புத்திசாலி மருமகள் துறவியை வணங்கி, நீங்கள் முக்காலமும் அறிந்த ஞானி. வாசலில் நிற்கும் நான் இப்போது உள்ளே செல்லப் போகிறேனா, இல்லை தெருவில் இறங்கப் போகிறேனா என்று சொல்லுங்கள். நானும் உங்கள் கேள்விக்கு விடை தருகிறேன்” என்றார்.*

துறவி அமைதியாக இருந்தார். “துறவியான தங்களுக்கே என் கேள்விக்கு விடை தெரியாதபோது, அனைத்தும் அறிந்த ஞானியான தங்களது கேள்விக்கு எனக்கு எப்படி விடை தெரியும்?” என்று கேட்டு மீண்டும் அவரை வணங்கினார் மூன்றாவது மருமகள்.*

நீ சொல்வதும் சரிதான். இந்த வீடு நிறைவான வீடுதான்” என்று சொல்லிவிட்டு, துறவி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

  • 327
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு, இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்: புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்வீர்கள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி பழைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பீர்கள். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

கடகம்: எடுத்த காரியங்கள் தடைபட்டு முடியும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிம்மம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். வியாபார வளர்ச்சிக்காக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். காரியத்தில் நிதானம் தேவை.

கன்னி: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். பண வரவு, பொருள் வரவு உண்டு. வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

துலாம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பெரிய நிறுவனத்தில் வேலை அமையும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரம் லாபம் தரும். பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: ஒதுங்கிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வாகனத்தை மாற்றுவீர்கள். எதிலும் பொறுமை தேவை.

தனுசு: சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்கப் போராடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. ஜாமீன் கையெழுத்திடுவது, வேலைக்கு சிபாரிசு செய்வது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம்: குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பண வரவு உண்டு.

கும்பம்: அரசுக் காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளி வட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் பணிகளை முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

மீனம்: இழுபறியாக இருந்த பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

  • 403