·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 583
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added article

சிந்தியா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகை சிந்தியா லூர்டே தயாரித்து, ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ‘அனலி’.

அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா எழுதி இயக்கியுள்ள திரைப்படத்தில், சக்தி வாசுதேவன், குமரவேல், இனியா, கபிர் துகான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சிந்தியா லூர்டே கூறும்போது, “‘வர்ணாஸ்ரமம்’, ‘தினசரி’ படங்களுக்குப் பிறகு 'அனலி' என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. கொஞ்சம் தனித்துவமானதாக இருக்கும்.

90-களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி ஆக்‌ஷன் படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் முதன் முறையாக முழுநீள ஆக்‌ஷன் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். நாயகர்களே நடிக்கத் தயங்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறேன். ஆக்‌ஷன் காட்சிகளில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன்.

இதில் ஹீரோ என்று யாரும் கிடையாது. நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் நிறைய கற்றுக் கொள்கிறேன். இந்தப் படத்திலும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என கற்றுக்கொண்டேன்” என்றார். இந்தப் படம் ஜன.2-ம் தேதி வெளியாகிறது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

  • 72
·
Added article

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். இதனை மறைமுகமாக பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்துக் கொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் எப்போது என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் உதய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படமொன்றின் நாயகியாக ராஷ்மிகா ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பின்பும் ராஷ்மிகா தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

’கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படத்தில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதன் மூலமே இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • 78
  • 76
  • 78
  • 81
·
Added a post

பரமபத சோபனம் என்ற இவ்விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் பழமையான, தொன்மையான விளையாட்டு.

இந்த விளையாட்டை பதிமூன்றாம் நூற்றாண்டின் கவிஞரான ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கூறுகிறார்கள்.

தொன்மையான பரமபதம் [துணியில் வரையப் பட்டது]

பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது. ஆரம்பத்தில் உருவாகிய பரமபதத்தில் 12 இடம் உண்மையையும், 51 இடம் நம்பிக்கையையும், 57 இடம் பெருந்தன்மையையும், 76 இடம் ஞானத்தையும், 78 இடம் சன்யசத்தையும் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் மட்டும் தான் ஏணிகள் இருக்கும். இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.

41 கட்டத்தில் கீழ்ப்படியாமை, 44 கட்டம் அகந்தை, 49 கட்டம் ஈனம், 52 இடம் களவு, திருட்டு, 58 இடம் பொய், புரட்டு, 62 மதுபானம் அருந்துதல், 69 இடம் கடன், 73 இடம் கொலை, 84 கோபம், வெஞ்சினம், வஞ்சம், 92 கர்வம், 95 பெருமை, 99 காமம் ஆகிய இடங்களில் பாம்புகள் காணப்பட்டன. பாம்புகள் ஏழ்மை, வறுமை, தரித்திரம், செல்வம், அறிவு வற்றுதல், ஆதரவற்ற நிலை, பிச்சை போன்ற கஷ்டங்களை கொடுக்கும்.

இரண்டு முதல் நான்கு பேர் வரை விளையாடக் கூடிய இந்த விளையாட்டு, தாயக்கட்டை உருட்டி அதில் வரும் எண்ணுக்குத் தகுந்தவாறு கட்டங்களில் காயை நகர்த்திச் செல்ல வேண்டும். விளையாட்டை ஆரம்பிக்க ''தாயம்'' அதாவது ''ஒன்று'' விழ வேண்டும். முதலில் மோக்ஷம் பெற்றவர் வெற்றி பெற்றவராவார். நூறாம் கட்டம் நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்று அழைக்கப்பட்டது.

பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே....

1. முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே கொண்டு போய் விட்டு விடும்.

2. இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம்.

3. இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது அதை விடப் பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் “திரும்பத் திரும்ப வந்து… பல சுழற்சிகள் ஆகி நாம் மேலே போகின்றோம்.

4. இன்னும் இரண்டே கட்டம்…! எல்லாவற்றையும் விடப் பெரிய பாம்பு அங்கே இருக்கின்றது.

5. பயத்தால் உருட்டிய உடனே தாயம் விழுந்து விடும். மீண்டும் அந்த விஷமான நிலைகள் பட்டவுடனே “ஜர்ர்ர்...” என்று கீழே இங்கே பற்றிக்குள் கொண்டு வந்து நம்மை விட்டு விடும்.

6.ஆகவே கீழ் நிலைக்குக் கொண்டு வந்து மிக மோசமான சரீரங்களை எடுக்கும் நிலையை அது மீண்டும் உருவாக்கி விடுகின்றது.

7.வாழ்க்கையில் நடக்கும் இத்தகைய பேருண்மைகளை நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் ஏகாதசி...

பரமபதத்தை அடைய வேண்டும் என்றால் விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் பெற்று அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது. அன்றைய நாளில் சொர்க்கவாசல் என்று கோவில்களை எல்லாம் திறந்து வைப்பார்கள். நமக்கு இதைக் கதையாகச் சொல்லி ஏதோ பேருக்கு சொர்க்க வாசல் வழியாகச் சென்று ஸ்மியைக் கும்பிட்டோம்… போனோம்… வந்தோம்… ராத்திரி எலாம் விழித்திருந்தோம்… இரவு பரமபதம் விளையாடினோம் என்ற எண்ணம் தான் இருக்கும். [இன்று உள்ள சிலருக்கு இந்தப் பரமபதம் படம் என்றால் கூட என்ன…! என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை]

இந்த பரமபதத்தின் இரகசியம் தான் என்ன….

மனதின் குணங்கள் 13....

1 . ராகம்

2 . துவேஷம்

3 . காமம்

4 . குரோதம்

5 . உலோபம்

6 . மோகம்

7 . மதம்

8 . மச்ச்சரம்

9 . ஈரிஷை

10 . அசூயை

11 . டம்பம்

12 . தர்பம்

13 . அஹங்காரம்

குணங்களை மாற்ற கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள்.

1 . சகுனம்

2 . ஸ்தோத்திரம்

3 . தியானம்

4 . யாகம்

5 . மெளனம்

6 . பக்தி

7 . சித்தி

8 . சிரத்தை

9 . ஞானம்

10 . வைராக்கியம்

இந்த 10 குணங்களையும் அவற்றை செம்மை படுத்தி நாம் பரவசு தேவனின் பரம பதத்தினை அடையும் வழிகளையும் உதாரணங்களுடன் விளக்குவதே நாம் வெறும் சதுரங்க கட்டைகளை உருட்டி பாம்பு, ஏணி என விளையாடும் பரமபத சோபன படம். பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும் படம்.

நம் வாழ்க்கையில் எல்லாம் நல்லதைச் செய்வோம். அதே சமயம் நம்மை அறியாதபடி வேதனை என்ற நிலைகள் வரும் போது அந்த விஷமான நிலைகள் “கொத்தப்பட்டு…!” நம் உடலுக்குள் நோய்களாகி விடுகின்றது.

நோயாகி விட்டால் இந்த மனிதச் சரீரத்தை இழந்து மீண்டும் இழி நிலையான சரீரத்தைப் பெற்று விடுகின்றோம்.

1. அதிலிருந்து மீண்டு மீண்டும் மனிதனாக வளர்ச்சியாகி பல கோடி சரீரங்களைப் பெற்று…

2. மீண்டும் இழந்து மீண்டும் வளர்ச்சி பெற்று…

3. இப்படியே இழந்து இழந்து… இன்று நாம் இந்தச் சுற்றிலேயே தான் இருக்கின்றோமே தவிர

4. மெய் வழியின் தன்மையை அடையும் தன்மை (பரமபதத்தை) இல்லாது நாம் இருக்கின்றோம்.

5.அந்த மெய் வழி செல்வதற்கு என்ன வழி? என்ற நிலையைத்தான் அன்று மெய் ஞானிகள் பரமபதத்தின் மூலம் உணர்த்தினார்கள்.

பரமபதம் அடைவது என்றால்…

1.பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களிலிருந்து அடுக்கடுக்காகச் சென்று

2.மனித நிலைகள் பெற்று மனித நிலைகளிலிருந்து

3.உயிரை ஒளியாக மாற்றி உச்சியிலே செல்லும் போது தான்

4.அதாவது இந்த உடலை விட்டு [வெளியிலே] விண்ணிலே சென்று ஒளியாக நிற்க கூடிய நிலையைப் பரமபதமாகக் காட்டி

5.அதற்குகந்த நாளாக நாம் ஏகாதசியைக் காட்டினார்கள் ஞானிகள்.

பரமபத சோபன படம் என்பது பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும், சோபிக்கும் படம்.

  • 88
  • 87
  • 88
  • 90
  • 91

2026 / ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது.........

வாழ்க வளமுடன்

புதிய முயற்சிகள்

புதிய சிந்தனைகள்

புதிய கனவுகள்

பதிய தொடக்கங்கள்

யாவும்

உங்களுக்கும்

உங்களைச் சார்ந்தோர்க்கும்

நல்வாழ்த்துகள்.

இனியெல்லாம் இன்பமே...

  • 96
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

செயல்பாடுகளில் இருந்த தடைகளை அறிவீர்கள். நீண்ட நாள் சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

ரிஷபம்

சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இள நீலம்

 

மிதுனம்

எதிர்காலம் சார்ந்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளை அரவணைத்து செல்லவும். மருத்துவ செலவுகள் சிலருக்கு ஏற்படும். செயல்பாடுகளால் ஒரு விதமான அசதிகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சிந்தனைகளை கவனம் வேண்டும். பணி சார்ந்த அலைச்சல்கள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கடகம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நினைத்த காரியம் கைக்கூடி வரும். சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மனதிருப்தியை ஏற்படுத்தும். துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

சிம்மம்

பணியிடத்தில் மதிப்புகள் மேம்படும். துணைவரிடத்தில் ஒத்துழைப்புகள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விவசாயம் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். விவாத போக்குகளை தவிர்த்துக் கொள்ளவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கன்னி

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். விதண்டாவாத பேச்சுக்களை தவிர்க்கவும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

துலாம்

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளி உணவுகளை குறைத்து கொள்வது நல்லது. துறை சார்ந்த பணிகளில் அலைச்சல் மேம்படும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கிடைக்க வேண்டிய சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

விருச்சிகம்

புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நவீன கருவிகளை வாங்குவதற்கான சூழல் ஏற்படும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தன வரவுகள் சாதகமாக இருக்கும். சுப காரியம் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் உருவாகும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சஞ்சலங்களால் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். வருத்தம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மகரம்

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வேற்றுமை குறையும். பொன் பொருள் சேர்க்கை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். சிறு கடன்களை அடைப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கும்பம்

உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். நெருக்கடியான சில சூழ்நிலை சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி பணிகளில் இருந்த ஆர்வமின்மை குறையும். வேலை மாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். மறைமுகமான சில எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தனம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

மீனம்

எதிர்கால தொடர்பான சில பணிகளை முடிப்பீர்கள். தனவருவாயில் இருந்த நெருக்கடிகள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இடம் மாற்றம் குறித்த எண்ணங்கள் உருவாகும். குறுதொழில் சார்ந்த முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 201
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 16 ஆம் தேதி புதன்கிழமை 31.12.2025

இன்று அதிகாலை 01.34 வரை ஏகாதசி. பின்னர் இரவு 11.16 வரை துவாதசி. பிறகு திரியோதசி.

இன்று அதிகாலை 01.03 வரை பரணி. பின்னர் இரவு 11.26 வரை கிருத்திகை. பிறகு ரோகிணி.

இன்று இரவு 07.13 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று அதிகாலை 01.34 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 12 25 வரை பவம்.

பிறகு இரவு 11.16 வரை பாலவம். பின்பு கௌலவம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=375&dpx=2&t=1767169750

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 217
  • 247

வாலிப வயசல நிறைய சம்பாதிக்கிறவங்கள பார்த்து பொறாமைப்படுறதும்..

வயசான காலத்துல ஆரோக்கியமா இருக்கிறவங்களப் பார்த்து பொறாமை படுறதும்தான்... வாழ்க்கை!

  • 457
·
Added a post

கொய்யா இலைகளில் ஆல்பா-குளுக்கோசிடேஸ் அதிகம் நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் எதிரியாக செயல்படுகிறது, உடலில் குளுக்கோஸ் என்கின்ற சர்க்கரை மூல கூரை இது தடுக்கிறது.

கொய்யா இலை செரிமான மண்டலத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றும் பல்வேறு நொதிகளைத் தடுக்கிறது.

நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு உதவும் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கான உணவுகளில் ஒன்றாக கொய்யா இலைகள் செயல் படுகிறது.

சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் ஆகிய இரண்டு வகையான சர்க்கரைகளை உறிஞ்சுவதைத் தடுப்பதன் மூலம், இலையில் உள்ள சேர்மங்கள் உணவுக்குப் பிறகு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

கொய்யா இலை செரிமான மண்டலத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றும் பல்வேறு என்சைம்களைத் தடுக்கிறது, இது உங்கள் இரத்தத்தில் எடுத்துக்கொள்வதை குறைக்கும்.

கொய்யா இலைச் சாறு இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தி, நீண்டகால இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து இன்சுலின் சக்தியை அதிகரிக்கும்.

வெள்ளை, சிவப்பு, கருப்பு மற்றும் காட்டு கொய்யா என்று வகைகள் உண்டு. இதில் அனைத்து வகைகளிலும் நிறைந்த மருத்துவம் உள்ளது. முக்கியமாக சிவப்பு மற்றும் கருப்பு கொய்யக்கள் சிறப்பானது என்று கூறலாம்... மூலிகை வளர்ப்பு நிலையங்களில் சிவப்பு /கருப்பு கொய்யா செடிகளாக கிடைக்கும்.

கொய்யா இலை தரும் மருத்துவ பயன்கள்

1. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

2. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

3. மாதவிடாயின் வலி அறிகுறிகளைப் போக்க உதவலாம்.

4. உங்கள் செரிமான அமைப்புக்கு பயனளிக்கலாம்.

5. எடை இழப்புக்கு உதவலாம்.

6. புற்றுநோய்க்கு எதிராக செயல்படும்.

7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்.

8. சருமத்திற்கு நல்லது.

9. கொழுப்பைக் குறைக்கிறது.

10. சளி மற்றும் இருமலை குணப்படுத்தும்.

11. முடி உதிர்தலைத் தடுக்கிறது.

12. பல்வலிக்கு தீர்வு தரும்.

13. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

14. இரைப்பை குடல் சிக்கல்களைத் தீர்க்கிறது.

15. உங்கள் மூளைக்கு நல்லது.

  • 464
·
Added article

கே. பாலச்சந்தர் இயக்கி, மம்முட்டி நடித்த அழகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விக்ராந்த். அடுத்து ஆர் வி உதயகுமார் இயக்கிய கற்க கசடற படம் மூலம் இருபது வருடம் முன்பு ஹீரோ ஆனார்.

நல்ல நடிகர். உழைப்பாளி. அன்பானவர்.. பண்பானவர் விக்ராந்த். விஜய்யின் உறவினர் என்ற போதும் சினிமாவில் அவருக்கு உரிய உயரம் இன்னும் வரவே இல்லை.

நினைத்து நினைத்து பார்த்தேன், முதல் கனவே, எங்கள் ஆசான், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக சட்டப்படி குற்றம் உள்ளிட்ட பல படங்களில் பாண்டி நாடு, தாக்க தாக்க , கவண், சுட்டுக் பிடிக்க உத்தரவு, போன்ற படங்களில் நடித்தும் அவருக்கு இன்னும் ஒரு பிரேக் அமையவில்லை. எனினும் தொடர்ந்து போராடும் குணமும் உழைப்பும் நிறைந்தவர் .தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியதே இல்லை.

செலிபிரிட்டி கிரிக்கெட் லீகின் முக்கியமான கிரிக்கெட் வீரர் கூட. அப்புறம் அவருக்கு ‘ LBW’ கிடைத்ததில் ஆச்சரியம் என்ன? நடிகர் விக்ராந்த் நடிப்பில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள புதிய வலைதளத் தொடர் ‘LBW – அதாவது லவ் பியாண்ட் விக்கெட்’

’ஹார்ட்பீட்’, ’போலீஸ் போலீஸ்’ மற்றும் ’ஆஃபீஸ்’ போன்ற லாங்-ஃபார்மேட் வெப் சீரிஸ்களைத் தொடர்ந்து தற்போது கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய வெப்சீரிஸை ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் அறிமுகப்படுத்துகிறது. ’ஹார்ட்பீட்’ வெப்சீரிஸை தயாரித்த அட்லீ ஃபேக்டரி தயாரித்திருக்கும் இந்தத் தொடர் மூலம் நடிகர் விக்ராந்த் ஓடிடி தளத்தில் அறிமுகமாகிறார். ஜனவரி 1, 2026 முதல் LBW ப்ரீமியர் ஆகிறது.

அருணா ராக்கி திரைக்கதை எழுதியிருக்க கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்ஷதா, நவீன், நிகில் நாயர் மற்றும் விஸ்வ மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தத் தொடர் குறித்து நடிகர் விக்ராந்த் , ” எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டுடன் ஓடிடி தளத்தில் அறிமுகமாவது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. கிரிக்கெட் எப்போதும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. கிரிக்கெட்டுடன் இருக்கும் ஆழமான தொடர்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்த LBW எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்கும் இது பிடித்தமானதாக இருக்கும்” என்றார்.

  • 467
·
Added a post

சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்பியதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள். அவர் ஒரு தமிழர் ஆவார்.

விவேகானந்தர் இந்தியா முழுவதும் ஒரு துறவியாகச் சுற்றி வந்தபோது, அவர் மதுரைக்கும் இராமநாதபுரத்திற்கும் சென்றார். அப்போது விவேகானந்தரின் அறிவாற்றலையும் ஆன்மீகச் செழுமையையும் கண்ட மன்னர் பாஸ்கர சேதுபதி, அவரை அமெரிக்காவிற்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

* நிதி உதவி: சிகாகோ மாநாட்டிற்குச் செல்வதற்கான பயணச் செலவுகளை ஏற்க மன்னர் முன்வந்தார்.

* சீடர்களின் பங்கு: இவருடன் சென்னை (மெட்ராஸ்) சீடர்களும், குறிப்பாக அலாசிங்க பெருமாள் (இவரும் ஒரு தமிழர்) என்பவர் வீடு வீடாகச் சென்று நிதி திரட்டி விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைப்பதில் பெரும் பங்காற்றினார்.

* பிற மன்னர்கள்: மைசூர் மன்னர் மற்றும் கேத்ரி மன்னர் அஜீத் சிங் ஆகியோரும் விவேகானந்தருக்கு நிதியுதவி அளித்தனர்.

1893-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமய மாநாடு (Parliament of the World's Religions) நடைபெற்றது.

* நோக்கம்: பாரதத்தின் பழமையான இந்து மதத்தின் (சனாதன தர்மம்) பெருமைகளையும், வேதாந்த கருத்துக்களையும் உலகிற்கு உணர்த்த ஒரு தகுதியான நபர் தேவைப்பட்டார்.

* மன்னரின் எண்ணம்: பாஸ்கர சேதுபதி தமக்கு வந்த அழைப்பையே விவேகானந்தரிடம் கொடுத்து, "உங்களைப் போன்ற ஒருவர்தான் அங்கு உரையாற்ற தகுதியானவர்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்.

3. தமிழர் என்ற பெருமை

விவேகானந்தரை முதன்முதலில் அடையாளம் கண்டு, அவரை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய பெருமை தமிழகத்தையே சாரும்.

* பாஸ்கர சேதுபதி அவர்கள் இன்றைய தமிழ்நாட்டின் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னர்.

* விவேகானந்தர் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பியபோது, முதலில் தமிழகத்தின் பாம்பன் கடற்கரையில்தான் இறங்கினார். அப்போது மன்னர் பாஸ்கர சேதுபதி விவேகானந்தரின் பாதங்கள் தரையில் படக்கூடாது என்பதற்காக, அவரை ஒரு சாரட்டில் அமர வைத்து, குதிரைகளுக்குப் பதிலாகத் தாமே அந்தச் சாரட்டை இழுத்துச் சென்றார் என்பது வரலாறு.

"மன்னர் பாஸ்கர சேதுபதி ஒரு 'ராஜரிஷி' (மன்னர்களில் துறவி போன்றவர்)" என்று சுவாமி விவேகானந்தர் புகழ்ந்துள்ளார்.

  • 499
·
Added article

1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தை இயக்கிய கே.பாலச்சந்தர் இந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் 4 படங்களுக்கு இசையமைத்திருந்த நிலையில், ஒரு கட்டத்தில் இவர்களுக்கு இடையே ஏற்பட்டதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளே வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை?

தமிழ் சினிமாவில் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மையமாக வைத்து அதற்கு திரைக்கதை அமைத்து படங்கள் இயக்கியவர் கே.பாலச்சந்தர். இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், இவர் சினிமாவுக்கு வந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவரை அனுகவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதே சமயம் சிவாஜி நடிப்பில் ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருந்தார். எதிரொலி என்ற பெயரில் வெளியான இந்த படம் நெகடீவ் விமர்சனங்களை பெற்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர், நாகேஷ் நாயகனாக நடிக்க ஒரு சில படங்களை இயக்கியுள்ளார் அவருக்கு பிடித்த நடிகரும் நாகேஷ்தான்.

ஆரம்பத்தில் தனது படங்களுக்கு, தான் நாடகங்களில் பணியாற்றும்போது நெருங்கிய நட்புடன் இருந்த வி.குமார் என்பவரை இசையமைப்பாளராக பயன்படுத்திக்கொண்ட பாலச்சந்தர், அடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். 1970-களின் இறுதியில் இளையராஜா தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி வரவேற்பை பெற்று வந்த காலக்கட்டங்களிலும், பாலச்சந்தர் எம்.எஸ்.வியுடன் பணியாற்றி பல வெற்றிகளை குவித்து வந்தார்.

1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தை இயக்கிய கே.பாலச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக இளையராஜாவை அணுகியுள்ளார். இசை தொடர்பான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இன்றும் இந்த பாடல்கள் கேட்டு ரசிக்கும் வகையில் புதுமையாக அமைந்திருப்பதே அதன் சிறப்பு தான். சிந்து பைரவியை தொடர்ந்து, மனதில் உறுதி வேண்டும், புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா, கடைசியாக கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1989-ம் ஆண்டு வெளியான புதுப்புது அர்த்தங்கள் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படம் வெளியான 1989-ம் ஆண்டு இளையராஜா 32 படங்களுக்கு இசையமைத்துள்ளார். புதுப்புது அர்த்தங்கள் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால், படத்தில் பின்னணி இசையை முடித்து தருமாறு கே.பாலச்சந்தர் இளையராஜாவிடம் கூறியுள்ளார். இப்போது நேரம் இல்லை. அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இளையராஜா கூறியுள்ளார். ஒரு கட்டத்தில், கங்கை அமரனை வைத்து பண்ணலாமா என்று இளையராஜா கேட்டபோது கே.பாலச்சந்தர் மறுத்துள்ளார்.

இளையராஜா இந்த படத்திற்கு பின்னணி இசைய அமைக்க தாமதம் செய்வதை அறிந்த கே.பாலச்சந்தர், நீங்கள் ஏற்கனவே போட்ட பின்னணி இசை உள்ளது அதை இந்த படத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்க, இளையராஜாவும் அப்போது சரி என்று கூறியுள்ளார். அதன்பிறகு அந்த படத்திற்கு பின்னணி இசை சேர்க்கப்பட்டு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாடல்களும், பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அப்போது புதுப்புது அர்த்தங்கள் படம் வெளியாகிவிட்டது என்று இளையராஜாவிடம் தகவல் கிடைத்துள்ளது.

நான் பின்னணி இசை அமைக்காமல் எப்படி வெளியானது என்று இளையராஜா கேட்க, நடந்ததை பாலச்சந்தர் தரபு கூறியுள்ளனர். அதை ஏற்றுக்கொள்ளாத இளையராஜா, படத்தின் காட்சிகளை பார்த்து நான் அமைக்காத இசை ஏதோ ஒரு நினைவில் இசைமைத்தது என் பெயரில் படத்தில் வந்துகொண்டு இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இனி பாலச்சந்தர் படங்களுக்கும், அவர் தயாரிக்கும் படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார் என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

  • 501
·
Added a post

தாளிசாதி வடகம்

சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த சித்தா மருந்து.

ஒரு குப்பியில் 100 உருண்டைகள் இருக்கும்.

சித்தா மருந்து கடைகள் மற்றும் இணைய வழி வாங்கலாம்.

எல்லா வயதினரும் உபயோகிக்கலாம்.

ஒரு நாளில் 2 அல்லது 3 வேளை மருந்து உருண்டையை வாயில் போட்டு மென்றுவரவேண்டும்.

குறுகிய இடைக்காலத்தில் இருமலுடன் சளி வாய் வழியாக வெளியேறி நல்ல குணம் கிடைக்கும்.

  • 499
·
Added a post

மாறிவரும் மழைப்பொழிவு மற்றும் கடுமையான வானிலை மாற்றங்கள் அதனோடு நோய்களையும் கொண்டு வருகிறது. மழையால் தேங்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாவதோடு சளி இருமல், மலேரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு போன்றவை ஏற்படுகிறது. பருவமழையிலிருந்து வரும் நோய்களை தடுத்திட சில மூலிகைகள் நமக்கு உதவலாம். இது நோய் தடுப்பதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும்.

​மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அளிக்க துளசி :

மழைக்காலத்தில் துளசி சேர்ப்பது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை நிறைவாக கொடுக்கும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் வயதான எதிர்ப்பு மற்றும் அழற்சி பண்புகள் உள்ளன.துளசி செடியை வீட்டில் வைத்திருப்பது உண்டு.

சளி மற்றும் இருமல் காலங்களில் ஒரு கப் சூடான துளசி தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது தொற்றுநோயை எதிர்த்து போரடும். மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஆண்டி பாடிகளை தூண்டும் அருமருந்து இது. பல நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்க செய்கிறது.

மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அமிழ்தவல்லி :

இது ஒரு அதிசய மூலிகை. இதன் நுகர்வு எப்போதும் எந்த நேரத்திலும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். அமிழ்தவல்லி ஈரப்பதம் கொண்டது. மழைக் காலங்களில் சருமத்தில் நச்சு சேர்க்காமல் தடுக்கிறது.

இது உடல் இரத்த சர்க்கரை அளவு குறைப்பதோடு டைப்2 டயாபட்டீஸ் எதிர்த்து போராடுகிறது. இதன் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகின்றன. உடலில் நச்சுக்களை வெளியேற்றுகின்றன. பருவமழை காலத்தில் இது சிறந்த மூலிகை என்று சொல்லலாம்.

​மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மஞ்சள் :

மஞ்சள் தங்க மசாலா ஆகும். ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் இது முக்கியமானது. இது பல தோல் பராமரிப்பு பொருள்களில் முக்கியமானது. சூடான ஒரு டம்ளர் பாலில் சேர்க்கப்படும் போது அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உண்டாகும் காயங்களை ஆற்ற உதவுகிறது நாள்பட்ட உடல் வலிகளுக்கு ஓய்வு அளிக்கிறது. மழைக்காலங்களில் காயங்கள் பொறுமையாக குணமாகும். ஆனால் மஞ்சள் அதற்கு உதவுகிறது.

ஈரப்பதம் காரணமாக சருமம் வறட்சிக்குள்ளாவதை தடுக்கிறது. மழையின் போது செரிமானம் சிக்கலாகும். அதை சீர்செய்ய மஞ்சள் உதவுகிறது. மேலும் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இதனால் எடை இழப்பு சாத்தியமாகிறது.

​மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க திரிபலா :

திரிபலா சளி, இருமல், வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா, காய்ச்சல், தலைவலி, டிஸ்பெசியா மற்றும் தொண்டைப்புண் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அதிசய மருந்து ஆகும். பருவமழைக் காலங்களில் செரிமானம் குறையும் போது இவை உதவுகிறது.

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மோசமான குளிர்ச்சியை குணப்படுத்த செய்கிறது. இது மழைக்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. திரிபலா சிறந்த குடல் சீராக்கி மற்றும் இரத்த சுத்திகரிப்பு என்பதால் இது மலச்சிக்கலையும் குணப்படுத்த செய்கிறது.

​மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இஞ்சி :

இஞ்சி தொண்டைப்புண், சளி, இருமல், காய்ச்சலுக்கு சிறந்த மூலம் ஆகும். இது உடலை இயற்கையாகவே குணப்படுத்துகிறது மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இஞ்சியில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது.

தேநீரில் இஞ்சி சேர்த்து, இஞ்சியை நீரில் கொதிக்க வைத்து என்று சேர்த்து வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிமதுரம் :

அதிமதுரம் என்பது சிறந்த மூலிகை. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளால் செறிவூட்டப்பட்டுள்ளது. ஆஸ்துமா அல்லது கடுமையான இருமலுடன் கூடிய நெஞ்சு சளி போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு அதிமதுரம் பல அற்புதங்களை செய்கிறது.

பருவமழை மூச்சுத்திணறல் பிரச்சனைகளை அதிகரிக்கும் என்பதால் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு இந்த மூலிகை சிறந்ததாக இருக்கும்.

  • 507
·
Added a post

ஆசியாவை தாயகமாகக் கொண்ட கொத்தமல்லி, நம் உணவில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் தான் இது அதிகம் விளைகிறது. மற்ற நாடுகளை விட இந்திய கொத்தமல்லிக்குத் தான் மவுசு அதிகம்.

பச்சை கொத்தமல்லி, உணவில் நறுமணத்தை அதிகரிக்கிறது. அதோடு வாயுவை போக்க, பித்தத்தை தணிக்க, உடல் சூட்டை குறைக்க, நஞ்சை முறிக்க, போதையை தீர்க்க, ரத்த அழுத்தத்தை குணப்படுத்த, இதய பலத்தை பெருக்க சிறந்த மருந்தாகும்.

நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி1, சி, ஈ என, பல வைட்டமின் சத்துக்கள், இரும்புச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து என, உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களின் அஞ்சறை பெட்டியாக இருக்கிறது.

ஜீரணத்திற்கு உறுதுணையாகவும், அஜீரணம், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்னைகளை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதில், ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கலாம். அதுமட்டுமின்றி வேகமாக அதிகரிக்கும் உடல் எடையையும் இது கட்டுப்படுத்தும்.

கொத்தமல்லி இலையில், 'டோடேசெனால்' என்ற ரசாயனப் பொருள் உள்ளது. இது, உணவு, 'புட் பாய்சன்'ஆவதற்கு காரணமான கிருமியை கொன்று விடுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர், அமெரிக்க விஞ்ஞானிகள்.

நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் நரம்பியல் மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மார்பக புற்றுநோயைக் கட்டுப்படுத்த, கொத்தமல்லியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கிறது, கொத்தமல்லி. இது, உடலில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் இலை சாற்றின் உதவியுடன், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்துவது மிகவும் எளிதானது.

மூக்கடைப்பு மற்றும் மூக்கு சம்பந்தப்பட்ட பல தொல்லைகளுக்கு கொத்தமல்லி தழையை துவையலாக செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட சரியாகும்.

சிறுநீரக கற்கள் உட்பட அனைத்து சிறுநீரக பிரச்னைகளையும் சரி செய்கிறது.

உடலைக் குளிர்ச்சியாக்கும், உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும். எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சாறு கலந்து பருகி வந்தால், வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும்.

கொத்தமல்லி இலைகளை அரைத்து முகத்தில் பூசுவதால் தோல் சுருக்கம் மற்றும் தோல் கருமை மறையும். கொத்தமல்லியை அரைத்து கண்களுக்கு மேல் பற்று போடுவதால், கண் பிரச்னைகள் குறைகிறது.

மாதவிலக்கு ஒழுங்கின்மை உடைய பெண்கள், தினம் கொத்தமல்லி இலை ஜூஸ் அருந்துவது நல்லது. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் நோய்களுக்கு, கொத்தமல்லி இலை நிவர்த்தி அளிக்கவல்லது.

கொத்தமல்லியை சாப்பிடுவதால், பெண்களுக்கு கருப்பை வலுப்படும். சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தும். கொத்தமல்லித்தழையை அரைத்து, மோரில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

தினமும் நாம் உண்ணும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால், நோயற்ற, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

  • 513
·
Added article

"வசதியான குடும்பத்துல பிறந்தவ தான் நான். என்னோட சேர்த்து வீட்ல நாலு பொண் ணுங்க. எல்லாரும் நல்லா படிச்சவங்க. நான் மட்டும்தான் படிக்கல. சின்ன வயசிலேயே டிராமால நடிக்க ஆரம்பிச்சுட்டேன். திருச்சியில டிராமா போட ஆரம்பிச்சா, அப்படியே மதுரை, கோயம்புத்தூர்னு சுத்திட்டு சென்னைக்கு வந்து சேர்வோம். மூணு ஷோ நடிச்சா, பத்து ரூபா சம்பளம். அப்போ ஒரு சவரன் பவுனே 50 ரூபாதான். அதனால இந்த பத்து ரூபாய் சம்பளம் பெரிசா தெரியும். நாடகங்களில் நடிச்சுக்கிட்டிருக்கும்போது ஒரு சாக்லெட் விளம்பரத்துல நடிச்சேன். அந்த விளம்பரத்தைப் பார்த்துதான் எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது.

முதல் படத்துலயே ஜெமினி, சாவித்திரி, எம்.ஆர்.ராதா, முத்துராமன்னு பெரிய பெரிய நடிகர்களோட நடிக்கிற வாய்ப்பு. எம்.ஜி.ஆர், சிவாஜின்னு ஜாம்பவான்களோடவும் நடிச்சிட்டேன். ரசிகர்களிடமிருந்து பட்டத்தையும், பாராட்டையும் வாங்கியிருக்கேன். நினைச்சிப் பார்த்தா சந்தோஷமாதான் இருக்கு. அதே சமயம் நான் பெருசா சாதிச்சிட்டதாவும் நினைக்கல. இந்த உலகத்தில உள்ள அத்தனை பேருமே கற்றது கை மண் அளவுதான்!’’ - தத்துவமும் பழுத்த அனுபவத்தின் பக்குவமும், கே.ஆர்.விஜயாவின் பேச்சில் மணக்கிறது.

‘‘இன்னிக்கு ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆயிட்டா, அதுக்கப்புறம் அம்மா, அக்கா கேரக்டர்கள்லதான் நடிக்க முடியும்னு சொல்றாங்க! ஆனா, என்னோட முதல் படம் ‘கற்பகம்’ ரிலீஸான ரெண்டே வருஷங்கள்ல எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அதுக்கு அப்புறம் நான் ஹீரோயினா மட்டும் 300 படங்கள்ல நடிச்சேன். கதாபாத்திரம் அர்த்தமுள்ளதா இருந்தா மட்டும்தான் யாரா இருந்தாலும் நிற்க முடியும்... நீடிக்க முடியும்.

எனக்கு ‘கற்பகம்’, ‘இதயக் கமலம்’, ‘தீர்க்க சுமங்கலி’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரி சூலம்’னு நிறைய படங்கள் அப்படி அமைஞ்சுது. ‘உங்கள மாதிரி ஒரு மருமகள் வேணும்’... ‘உங்கள மாதிரி மாமியார் அமையணும்’... ‘உங்கள மாதிரி அம்மா வேணும்’னு ஒவ்வொரு காலகட்டத்துலயும் ரசிகர்கள் என்கிட்ட பேசறதைக் கேட்கிற பாக்கியம் அமைஞ்சது. இதுதாங்க ஒரு நடிகைக்கு வேணும். ரசிகர்கள் தன் வீட்டுப் பொண்ணா நம்மளைப் பார்க்கணும். அப்படிப் பார்த்துட்டா எல்லா வயசுலயும் ஹீரோயினா நடிக்கலாம்.

- கே.ஆர். விஜயா

  • 513
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

அரசு வழியில் இருந்த நெருக்கடி நீங்கும். மனதில் புதிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து செல்லும். ஆதாயகரமான முயற்சிகள் நிறைவேறும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

ரிஷபம்

எதிலும் அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களால் வருத்தங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் மறைமுக ஒத்துழைப்புகள் கிடைக்கும். நண்பர்களிடத்தில் சூழ்நிலைக்கேற்ப விட்டுக் கொடுத்து செல்லவும். சில முக்கியமான வேலைகள் முடிவு பெறும் வியாபார புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மிதுனம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கடகம்

கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். உறவினர்கள் மத்தியில் முக்கியத்துவம் ஏற்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். சில மாற்றங்கள் மூலம் மேன்மைகளை உருவாக்குவீர்கள். விலகி இருந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரம் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

சிம்மம்

செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். புதிய நபர்களிடத்தில் அமைதி வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அமையும். மறதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கன்னி

மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வாகனம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் லாபம் ஓரளவு கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாகி நிறைவு பெறும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

துலாம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். புதியவர்களின் அறிமுகங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். வேலையாட்கள் நியமன எண்ணங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். இறை வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். சலனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

தனுசு

எதிர்பாராத சில செலவுகள் நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். உயர்கல்வியில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

உறவினர்கள் மூலம் சஞ்சலங்கள் தோன்றி மறையும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். சக ஊழியர்களால் நிம்மதியான சூழல் அமையும். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வழக்கு பணிகளில் சில மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கும்பம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். நுட்பமான விஷயங்களை எளிதாக புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

மீனம்

தம்பதிகளுக்குள் நெருக்கங்கள் அதிகரிக்கும். சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தோற்ற பொலிவுகள் மேம்படும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். விருப்பமான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். அலுவலகப் பணிகளில் துரிதம் ஏற்படும். எதிர்பாராத சில சிற்பங்களால் மாற்றங்கள் உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

  • 647