·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 862
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

மங்கோலிய மாவீரர் செங்கிஸ்கான் ஒருநாள் வேட்டைக்குச் சென்றார். செங்கிஸ்கான் தனது கரத்தில் ஒரு ராஜாளியை ஏந்தி இருந்தார். அதிக தூரம் நடந்து சென்றதால் களைப்பு ஏற்பட்டது. தாகம் எடுத்தது அப்போது ஒரு பாறையிலிருந்து நூலிழை போல் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது

ஒரு குவளையை எடுத்துக் கொண்டு நீர் ஒழுகும் இடத்திற்கு சென்று நீரைப் பருகச் சென்றார். ராஜாளி வேகமாகப் பாய்ந்து சென்று குவளையைத் தட்டி விட்டது. மீண்டும் மீண்டும் வௌ்ளிக் குவளையை ராஜாளி தட்டி விட்டது.

தாகம் மற்றும் ராஜாளியின் அடாவடி இந்த இரண்டாலும் செங்கிஸ்கானுக்கு அளவற்ற ஆத்திரம் பொங்கியது. வாளால் ராஜாளியை வெட்டினார் ராஜாளி துடி துடித்துக் கொண்டிருந்தது.

மீண்டும் செங்கிஸ்கான் தண்ணீரைச் சேகரித்து அதை அருந்த முற்பட்டார் துடிதுடித்துக் கொண்டிருந்த ராஜாளி மறுபடியும் பாய்ந்து வந்து குவளையை தட்டி விட்டது. செங்கிஸ்கானுக்கு அடக்க முடியாத ஆத்திரம் பீறிட்டெழுந்தது.

ராஜாளியின் நெஞ்சை வாளால் குத்திக் கிழித்தார். இப்போது மேலிருந்து தண்ணீர் கசிவது நின்று விட்டது கீழே தண்ணீர் கசிவு வறண்டு விட்டாலும் மேலே ஒரளவு தண்ணீர் இருக்கக் கூடும் என்று செங்கிஸ்கான் அனுமானித்தார்.

குன்றின் வழியே அவர் மேலே ஏறினார். அங்கே ஒரு சிறிய தடாகம் தென்பட்டது. ஆனால்!, அந்தத் தடாகத்தின் மத்தியில் கொடிய நாகப் பாம்புகள் செத்துக் கிடந்தது. அந்தத் தண்ணீரை அருந்தியிருந்தால் தனது உயிர் பிரிந்திருக்கும் என்பதை செங்கிஸ்கான் உணர்ந்து கொண்டார்.

கீழே இறங்கி வந்த செங்கிஸ்கான், இறந்துக் கிடந்த ராஜாளியை இறுகத் தழுவிக் கொண்டார். இந்த ராஜாளிக்குத் தங்கச் சிலை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கட்டளையிட்டார்.

செங்கிஸ்கான் விருப்பதிற்கு ஏற்ப தங்க ராஜாளி சிலை வடிவமைக்கப்பட்டது. அதன் ஒரு சிறகில் ஒரு நண்பன் உனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தாலும் கூட, அவன் தொடர்ந்து உனது நண்பனாகவே இருக்கிறான் என்று பொறிக்கப்பட்டது.

மற்றொரு சிறகில், கோபம், ஆத்திரத்தோடு செய்கிற செயல் அழிவையே தரும் என்றும் பொறிக்கப்பட்டது.

நம்மில் பலருக்கு கோபம். ஆத்திரத்தில் அறிவும் வேலை செய்வதில்லை. ஆத்திரம் பெரும்பாலும் அழிவைத் தருகிறது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டம் என்று சொல்வார்கள். எதிலும் ஆத்திரமோ, அவசரமோ இல்லாமல் அறிவாக செயல்பட்டால் எதிலும் வெற்றி தான்.

அதேநேரம் அழிவிற்கு காரணம் கோபமும், ஆத்திரப்படுதலே ஆகும், கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டியவரின் சூழ்நிலையை சிந்தியுங்கள். கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்.

உடனே உங்கள் மனதை வேறு செயல்களில் திருப்புங்கள். அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள், நேரம் மேம்பாடு மற்றும் தன்னடக்கத்தை கடைப்பிடியுங்கள்.

செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள் கோபம், ஆத்திரம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்.

நீண்ட நாள் ஆனந்தமாக வாழ வேண்டுமானால் உறுதியாக நாம் கோபத்தைக் குறைத்தாக வேண்டும். ஆத்திரம் , கோபம் தவிர்த்து அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்திட வேண்டும்.

  • 57
  • 55
  • 55
  • 55
  • 55
  • 55
  • 55
  • 58
  • 58
  • 59
  • 58
·
Added a post

மகாபாரதத்தில் கிருஷ்ணர் பாண்டவர்களிடமிருந்து விடைபெற்று துவாரகைக்குத் திரும்பும் காட்சி மிகவும் உணர்வுப்பூர்வமானது.

குருக்ஷேத்திரப் போர் முடிந்து, தருமர் அஸ்தினாபுரத்தின் மன்னராகப் பொறுப்பேற்றார். பாண்டவர்களின் துயரங்கள் நீங்கி, அவர்கள் நல்வாழ்வு வாழத் தொடங்கியதை உறுதி செய்த பின்பு, கிருஷ்ணர் தனது சொந்த நாடான துவாரகைக்குத் திரும்ப முடிவு செய்தார்.

கிருஷ்ணர் தர்மராஜனிடம் சென்று, பாண்டவர்களின் கடமை இப்போது நிறைவேறிவிட்டது. அஸ்தினாபுரம் இப்போது தர்மத்தின் வழியில் பாதுகாப்பாக உள்ளது. எனவே, நான் எனது துவாரகைக்குச் செல்ல விடை தர வேண்டும் என்று வேண்டினார்.

கிருஷ்ணர் தங்களை விட்டுப் பிரிவதைக் கேட்டு பாண்டவர்களும், திரௌபதியும், குந்தியும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

தங்களுக்கு ஏற்பட்ட அனைத்து துன்பங்களிலும் நிழல் போலக் கூடவே இருந்து காத்த கிருஷ்ணரை தற்காலிகமாகப் பிரிவதைக் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தருமர், கிருஷ்ணரின் கைகளைப் பற்றிக்கொண்டு, நீங்கள் இல்லாமல் தங்களால் இந்த ராஜ்யத்தை வழிநடத்த முடியாது என்று உருகினார். இந்த விடைபெறுதலின் போதுதான் குந்தி தேவி மகாபாரதத்தின் மிக உன்னதமான ஒரு பிரார்த்தனையைச் செய்தார்.

"கிருஷ்ணா! எங்களுக்குச் செல்வம், சுகம் இருக்கும்போது நீ எங்களை விட்டுப் பிரிந்துவிடுகிறாய். ஆனால், நாங்கள் காட்டில் துன்பப்பட்டபோது நீ எப்போதும் எங்களுடனேயே இருந்தாய். எனவே, உன்னை எப்போதும் நினைவில் வைத்திருக்க எனக்கு மீண்டும் மீண்டும் துன்பங்களையே கொடு!" என்று வேண்டினார்.

கிருஷ்ணர் தன் அன்பான வார்த்தைகளால் அவர்களைத் தேற்றினார். உடலால் நான் துவாரகைக்குச் சென்றாலும், என் மனம் எப்போதும் உங்களுடனேயே இருக்கும். தர்மத்தின் வழி நடக்கும் உங்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று உறுதியளித்தார்.

பாண்டவர்கள், திரௌபதி மற்றும் அரண்மனை மக்கள் அனைவரும் கண்ணீருடன் வழியனுப்ப, கிருஷ்ணர் தனது தேரில் ஏறி துவாரகை நோக்கிப் புறப்பட்டார். அவர் செல்லும் வழியில் மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். இறுதியாக அவர் துவாரகையை அடைந்தபோது, நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் அரசனைப் பார்த்த துவாரகை மக்கள் பெரும் திருவிழாக் கோலத்துடன் கிருஷ்ணரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

இந்த விடைபெறுதல், கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு வெறும் உறவினராக மட்டுமின்றி, அவர்களின் ஆன்மாவாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார் என்பதைக் காட்டுகிறது.

  • 59
  • 58
  • 59
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் சாதகமாகும். பணிகளில் இருந்த போட்டிகள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

ரிஷபம்

வியாபார ரீதியான சிலரின் சந்திப்புகள் மாற்றத்தை உருவாக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மிதுனம்

பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். உறவுகளிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உற்பத்தி துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

கடகம்

மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். சொத்து பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

சிம்மம்

அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தன வரவுகள் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். செயல்பாடுகளில் இருந்து சோர்வுகள் குறையும். பேச்சுகளில் கலைநயம் வெளிப்படும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

கன்னி

மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். வெளி நபர்களிடம் கவனம் வேண்டும். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

துலாம்

குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். பூர்விக சொத்துகள் மூலம் சில விரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

விருச்சிகம்

நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொறுப்புகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். ஆராய்ச்சி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

தனுசு

எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வீடு பராமரிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். தொழில் நிமித்தமான அலைச்சலால் அனுபவம் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மகரம்

குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்

புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபாரப் பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மீனம்

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். சுபகாரிய விரயங்கள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். பழைய வாகனங்களை மாற்றி அமைப்பீர்கள். போட்டிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

  • 110
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 11 ஆம் தேதி திங்கட்கிழமை 25.5.2026,

இன்று காலை 09.13 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று காலை 07.19 வரை பூரம். பின்னர் உத்திரம்.

இன்று காலை 07.58 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.

இன்று காலை 09.13 வரை கௌலவம். பின்னர் இரவு 09.05 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=523&dpx=2&t=1779677547

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 115

Good Morning....

இன்றைய நாள் உங்களின் அனைத்து முயற்சிகளையும் வெற்றி பெற செய்யும் நாளாக அமையட்டும்.

  • 116
  • 269
  • 273
  • 272
·
Added a post

*பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும்.

*ஆங்கிலத்தில் இதை பால்ம் கேண்டி என்பர்.

*இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.

*இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்தப்படாத சர்க்கரை ஆகும்.

*கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.

*சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது.

*நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.

*இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன.

*இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

*சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

* 2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.

*நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.

*உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

*உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

*தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.

*தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.

*உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.

  • 281

*பிடிவாதகாரரிடம் வாதாடகூடாது!*

*முடிவெடுத்தவரிடம் விவாதிக்ககூடாது!*

*புரிந்து கொள்ளாதவரிடம் பேசவே கூடாது!*

உண்மை தானே??

  • 275
  • 277
·
Added a post

எக்மோரில் உள்ள மிகப்பெரிய பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருந்தார் பிரபல தொழிலதிபர் ஜே.கே.

அதிகாலைப் பனி விலகாத அந்த நேரத்தில், நீச்சல் குளத்தைச் சுற்றிலும் போலீஸ் வளையம் நின்றிருந்தது.

​டி.எஸ்.பி ராஜேஷ் சம்பவ இடத்திற்குள் நுழைந்தான். அவனது கூர்மையான கண்கள் குளத்து நீரையும், சடலத்தையும் அலசின.

"அக்‌ஷதா, என்ன ரிப்போர்ட்?"

​அக்‌ஷதா, குளத்தின் ஓரத்தில் மண்டியிட்டு சடலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

"ராஜேஷ், மேலோட்டமா பார்த்தா டிராவுனிங் தான். ஆனா லங்ஸ்ல தண்ணி ரொம்ப கம்மி. பிளட்ல சக்ஸினைல்கோலின் கலந்துருக்கு. இது ஒரு ஸ்ட்ராங்கான பேரலைட்டிக் ஏஜென்ட். நரம்புகளை முடக்கிடும். கை கால் விளங்காமப் போய், மூச்சு விட முடியாம தண்ணில மூழ்கியிருக்கார்."

​பக்கத்திலேயே லேப்டாப்பை வைத்துக்கொண்டு ஸ்மார்ட் ஹோம் கண்ட்ரோல்களை ஆக்சஸ் செய்து கொண்டிருந்தான் வசந்த்.

"பாஸ், பூல் ஏரியா சிசிடிவி நைட் பத்தரை மணிக்கு எக்ஸாக்ட்டா பத்து நிமிஷம் லூப் ஆகியிருக்கு. வீடியோவை ஃப்ரீஸ் பண்ணி ரொம்ப ப்ரொஃபஷனலா ஹேக் பண்ணியிருக்காங்க."

​வசந்த் அப்படியே தன் பார்வையை அக்‌ஷதா பக்கம் திருப்பினான்.

"அக்‌ஷதா, உன் கண்ணைப் பார்த்தாலே என் உடம்பெல்லாம் டோட்டலா பேரலைஸ் ஆகுது. எனக்கு அந்த கெமிக்கல் எதுவும் தேவையில்லை. கொஞ்சம் பக்கத்துல வாயேன், பிரீத்திங் ரொம்ப கஷ்டமா இருக்கு, மவுத் டூ மவுத் சிபிஆர் குடுப்பியா?"

​அக்‌ஷதா அவனை நிமிர்ந்து முறைத்தாள்.

"உன் வாயில சிபிஆர் குடுக்க மாட்டேன், ஃபார்மாலின் ஆசிட் தான் ஊத்துவேன். உன்னைப் பார்த்தாலே எனக்கு இரிடேட் ஆகுது. மூடிட்டு சர்வரை ட்ரேஸ் பண்ணு."

​வசந்த் சிரித்துக்கொண்டே,

"நீ ஆசிட் ஊத்துனாலும் அது எனக்கு அமிர்தம் தான் பேபி,"

என்று சொல்லிவிட்டு விரல்களை கீபோர்டில் பறக்கவிட்டான்.

​ராஜேஷ் இருவரையும் பார்த்து லேசாக முறைத்தான்.

"வசந்த், கட் இட். ஃபோகஸ். ஐபி அட்ரஸ் எங்க இருந்து வருது?"

​வசந்த் சீரியஸானான்.

"பாஸ், ஐபி மாஸ்க் பண்ணியிருக்காங்க. ஆனா ரவுட்டிங் ஜே.கே-வோட பிசினஸ் பார்ட்னர் தினேஷ் நெட்வொர்க்ல இருந்துதான் வருது."

​ராஜேஷின் ஜீப் நேராக தினேஷின் கார்ப்பரேட் அலுவலகத்திற்குச் சென்றது. அங்கே தினேஷ் மிகவும் கூலாக மினி கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தான். ராஜேஷைப் பார்த்ததும் எந்தப் பதற்றமும் இல்லாமல் புன்னகைத்தான்.

​"ஜே.கே கொலை நடந்த நேரத்துல, கேமரா ஹேக் ஆனது உங்க நெட்வொர்க்ல இருந்துதான் தினேஷ்," ராஜேஷ் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

​தினேஷ் சிரித்தபடியே பந்தை தட்டிவிட்டான்.

"லுக் மிஸ்டர் ராஜேஷ், என் கம்பெனி சர்வர் பப்ளிக் டொமைன்ல இருக்கு. யாரு வேணாலும் ஸ்பூஃப் பண்ணலாம். எனக்கும் ஜே.கேவுக்கும் ஆயிரம் பிசினஸ் தகராறு இருக்கலாம், ஆனா கொலை பண்ற அளவுக்கு நான் முட்டாள் இல்லை. நான் தான் கொலை செஞ்சேன்னு ஒரு சின்ன எவிடென்ஸ் காட்டுங்க, நானே தப்ப ஒத்துக்கிட்டு உங்க ஜீப்ல ஏறுறேன்."

​ராஜேஷ் அவனது கண்களை ஊடுருவிப் பார்த்தான். "அப்போ உங்களுக்கு எதுவும் தெரியாதா?"

​"சார், நாவல்ல வர்ற மாதிரி தியரி எல்லாம் எங்கிட்ட பேசாதீங்க. எவிடென்ஸ் இல்லாம என்னை அரெஸ்ட் பண்ண முடியாது. கேன் ஐ லீவ் நவ்?" தினேஷ் மிகுந்த திமிருடன் சொல்லிவிட்டு நகர்ந்தான். அவனிடம் குற்ற உணர்ச்சியோ, பயமோ துளி கூட இல்லை.

​ராஜேஷ் மீண்டும் நீச்சல் குளத்திற்கே வந்தான். அக்‌ஷதா இன்னும் சில சாம்பிள்களை எடுத்துக் கொண்டிருந்தாள்.

​"அக்‌ஷதா, அந்த கெமிக்கல் உடம்புல எப்படி போயிருக்கும்? இன்ஜெக்ஷன் மார்க் எதுவும் இல்லையே?" ராஜேஷ் சிந்தனையுடன் கேட்டான்.

​"இல்ல ராஜேஷ். இது ட்ரான்ஸ்டெர்மல். அதாவது தோலின் மூலமா உடம்புக்குள்ள போயிருக்கு. தண்ணில நனையும்போது ஆக்டிவேட் ஆகுற மாதிரி, ஏதோ ஒரு ரப்பர் பொருள்ல அதைத் தடவி இருக்கணும். அந்தப் பொருள் ஜே.கே உடம்புல உரசிருக்கணும்."

​அப்போது வசந்த் லேப்டாப்புடன் ஓடி வந்தான்.

"பாஸ், ஜே.கே-வோட பர்சனல் மெயிலை ஹேக் பண்ணிட்டேன். தினேஷ் கம்பெனியில இருந்து நேத்து காலையில ஜே.கே-வுக்கு ஒரு கொரியர் வந்திருக்கு. ஒரு லிமிடெட் எடிஷன் ஸ்விம்மிங் காகிள்ஸ்."

​ராஜேஷுக்குக் காணாமல் போன முடிச்சு கிடைத்தது.

"அந்த காகிள்ஸ் ரப்பர்ல தான் விஷம் தடவப்பட்டிருக்கு. அதைப் போட்டுட்டு ஸ்விம் பண்ணும்போது ஜே.கே பேரலைஸ் ஆகி மூழ்கிட்டான். அந்த பத்து நிமிஷ கேமரா ஃப்ரீஸ்ல தினேஷின் ஆட்கள் யாரோ உள்ள வந்து அந்த காகிள்ஸை மட்டும் எடுத்துட்டுப் போயிருக்காங்க. மாஸ்டர் பிளான்."

​ராஜேஷ் உடனடியாக தினேஷுக்கு போன் செய்தான்.

"தினேஷ், நீங்க அனுப்புன அந்த ஸ்விம்மிங் காகிள்ஸ் தான் கொலை ஆயுதம். இப்போ தப்பிக்க முடியாது."

​எதிர்முனையில் தினேஷ் சத்தமாகச் சிரித்தான்.

"பிரில்லியன்ட் தியரி ராஜேஷ் சார். ஆனா அந்த காகிள்ஸ் பூல்ல கிடைச்சுதா? லாஜிக் முக்கியம் சார். வெப்பன் இல்லாம எப்படி கோர்ட்ல ப்ரூவ் பண்ணுவீங்க? என்னை தொடக் கூட முடியாது உங்களால. வேணும்னா ட்ரை பண்ணிப் பாருங்க."

​தினேஷ் போனை வைத்துவிட்டான். ராஜேஷ் கோபத்துடன் சுவரை ஓங்கி அடித்தான். தினேஷ் சொல்வது சட்டப்படி உண்மை. ஆயுதம் இல்லாமல் அவனை நெருங்க முடியாது.

​அப்போது வசந்த் தன் லேப்டாப் திரையை உற்றுப் பார்த்தபடி நின்றான்.

"பாஸ்! ஜே.கே-வோட மனைவி ஷில்பா நேத்து நைட்டே கோவா போயிட்டா. தினேஷுக்கு ஆள் செட் பண்ணி குடுத்ததே அவளாத்தான் இருக்கணும். காகிள்ஸை அவதான் எடுத்துட்டுப் போயிருக்கா. இப்போ இன்ஸ்டாகிராம்ல ஒரு செல்ஃபி போஸ்ட் பண்ணிருக்கா பாருங்க."

​ராஜேஷும் அக்‌ஷதாவும் வசந்தின் லேப்டாப் திரையை நெருங்கினார்கள்.

​அக்‌ஷதா திரையை உற்றுப் பார்த்துவிட்டு அதிர்ச்சியுடன் கத்தினாள்,

"ராஜேஷ்...அந்த போட்டோல ஷில்பா தலையில ஸ்டைலுக்கு மாட்டியிருக்கிறது இங்க காணாமப் போன அதே ஸ்விம்மிங் காகிள்ஸ்... அதோட கோவா வெயில்ல அவ முகம் முழுக்க வியர்த்து வழியுது!"

--ராகவேந்திரன் பாலகிருஷ்ணன்

  • 281