- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
கனடாவின் ஹமில்டன் நகரில் திருடப்பட்ட வாகனம் ஒன்றை அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் ஓட்டிய சம்பவத்தில் 12 வயது சிறுவன் உட்பட மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகரின் கிழக்குப் பகுதியில் முகமூடி அணிந்த மூவர் இருந்த சந்தேகத்திற்கிடமான வாகனம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாக ஹாமில்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், அந்த வாகனம் முன்பே திருடப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது என உறுதிப்படுத்தினர். பின்னர் அந்த வாகனம் ஆபத்தான முறையில் ஓட்டப்பட்டு வருவதை பொலிஸார் கண்காணித்தனர்.
அதிக வேகத்தில் பயணம் செய்ததுடன், பாதுகாப்பற்ற வழித்தட மாற்றங்கள், போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடத்தல், மேலும் “எதிர்-கண்காணிப்பு” (counter-surveillance) முறையில் ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குறுகிய நேரத்திலேயே பொலிஸார் வாகனத்தை பின்தொடர்வதை நிறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில், அந்த வாகனம் ஓட்டுனர் யாரும் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்கள் ஒரு கடையில் இருப்பது கண்டறியப்பட்டது. பொலிஸார் கடைக்குள் நுழைந்து எந்தவித சிக்கலும் இல்லாமல் மூவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாராக இருந்ததாகக் கருதப்படும் செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவரிடம் திருடப்பட்ட வாகனத்துக்குச் சொந்தமான கீ-ஃபாப் (key fob) கைப்பற்றப்பட்டது. மேலும், மற்றொரு இளைஞர் மீது வாகனப் பயன்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட நபர்களுடன் தொடர்பு கொள்ளுதல் தொடர்பான நீதிமன்ற விதிமுறைகள் அமலில் இருந்ததாகவும், அவருக்கு எதிராக நிலுவையில் இருந்த கைது வாரண்டுகளும் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் 15, 13 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் நகரில் இளைஞர் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை பிரதிபலிப்பதுடன், திருடப்பட்ட வாகனங்களுடன் தொடர்புடைய பொது பாதுகாப்பு ஆபத்துகளையும் வெளிப்படுத்துகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.
அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன். அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கொண்டான்.
அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.
நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.
திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம் ராஜ உடையில் விருந்து உண்பது மாதிரி எண்ணுகிற அளவுக்கு.
தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.
இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அரண்மனை வாசலை அடைந்தான்.
வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான்.
அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான்.
உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், 'என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.
ஆமாம்... நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை.
என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால் உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால் அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன் என்றான் மிகவும் பவ்வியமாக.
அதே நேரம் மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் மன்னர் அவனுக்கு ராஜ உடை ஒன்றைய வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன் கண்ணாடி முன் நின்று கவனித்தான்;
தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்.
அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய் அதைவிட, முக்கியமான ஒன்று.
இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.
உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும் துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார்
கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது.
'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து இந்த உடைகள் கிழிந்து விட்டால், அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.
வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை.
எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான்.
மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.
அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில் பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர அவனால் ருசிக்க முடியவில்லை.
அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.
அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை.
ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.
மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.
இதனால் அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.
இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார்.....
அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.
ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது..... ,
பழைய துணி மூட்டை அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது..
அந்த யாசகனிடம் மட்டுமல்ல,
நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.
அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.
நாம் அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால்..., நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமலே இருக்கிறோம்.
நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் அக் கோபம் செய்து விடுகிறது.
அரண்மனைகளில் கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர்.
அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.
மனதில் இருக்கிறது மகிழ்ச்சி...
வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.
நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை
நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன
அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை.......,
வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.
இல்லத்தை மட்டுமல்ல.....,
உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால்
அவற்றின் அழுகல் நாற்றம்
உதடுகளின் வழியே சொற்களாகவும்..,
கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்.
அது ஒருபோதும் வெளிச்சத்தை வழங்காது.
மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை...
அஜீரணத்தை போக்கும் புதினா நீர் தயாரிக்கும் வழிகள்
1. முதலில் நீங்கள் அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தண்ணீரைக் கொதித்த பிறகு புதினா இலைகளை அதில் போடவும். இப்போது 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, தண்ணீரை வடிகட்டி, எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.
2. மற்றொரு வழி, 6 முதல் 7 இலைகளைக் கொடுத்து, அவற்றைக் கழுவி நன்கு நசுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இப்போது இலைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இப்படி செய்வதன் மூலமும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
3. மூன்றாவது வழி, புதினா இலைகளை நன்கு கழுவி உலர்த்தி, அதில் பொடி செய்து கொள்ளவும். இப்போது அந்த பொடியை தொடர்ந்து பயன்படுத்துங்கள். அதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம் இவ்வாறு செய்வதன் மூலம் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம். விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்*
வயிற்றில் வலி ஏற்படுவதற்கான காரணம், வாயு, மலச்சிக்கல் தான் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அஜீரணத்தின் காரணமாகவும் வயிற்று வலி இருக்கலாம். சொல்ல போனால் ஆஜீரணம் பல வயிற்று பிரச்சனைகளையும், உடல் நல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.
அத்தகைய சூழ்நிலையில், இந்த சிக்கலை நீக்க புதினா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அஜீரண பிரச்சனையை நீக்க புதினா இலைகள் சிறந்த மருந்தாக செயல்படும். இது தவிர, புதினா இலைகள் வயிற்றில் உள்ள வலியை நீக்கவும், அஜீரண பிரச்சனையை சமாளிக்கவும் புதினா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதினாவில் உள்ள சத்துக்கள் வயிற்றை பல பிரச்சனைகளில் இருந்து காக்கும்.
அஜீரணத்தை போக்க புதினாவை எப்படி பயன்படுத்துவது என்பது தான் இப்போதைய கேள்வி. எனவே இன்று அஜீரணத்திற்கு புதினாவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இன்று இந்த கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அஜீரணத்தை போக்கும் புதினா நீர் தயாரிக்கும் வழிகள்
1. முதலில் நீங்கள் அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தண்ணீரைக் கொதித்த பிறகு புதினா இலைகளை அதில் போடவும். இப்போது 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, தண்ணீரை வடிகட்டி, எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.
2. மற்றொரு வழி, 6 முதல் 7 இலைகளைக் கொடுத்து, அவற்றைக் கழுவி நன்கு நசுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இப்போது இலைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இப்படி செய்வதன் மூலமும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
3. மூன்றாவது வழி, புதினா இலைகளை நன்கு கழுவி உலர்த்தி, அதில் பொடி செய்து கொள்ளவும். இப்போது அந்த பொடியை தொடர்ந்து பயன்படுத்துங்கள். அதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம் இவ்வாறு செய்வதன் மூலம் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
வால்மிளகின் மருத்துவ குணங்களை இன்னும் பலரும் அறியாமல் இருக்கிறோம். மிளகு, வால்மிளகு இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. மிளகை போன்றே இருக்கும். ஆனால் இந்த மிளகில் காம்புடன் இணைந்து இருக்கும். பார்பதற்கு வால் போன்று இருக்கும். அதனால் இதனை வால்மிளகு என்று அழைப்பார்கள்.
சிறிதளவு வால்மிளகுத்தூள் இதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குறையும். இலவங்கப்பட்டை, வால்மிளகு இரண்டையும் பொடியாக்கி நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
சந்தனப்பொடி, வால்மிளகு, அதிமதுரம் ஆகிய மூன்றையும் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் கல் அடைப்பு மற்றும் சிறுநீர் பிரச்சனை குணமாகும்.
பல் பிரச்சனைகள் குணமாக கறிவேப்பிலையை துளாக்கி அதில் லவங்கம், கடுக்காய், நெல்லி, சேர்த்து அனைத்தும் பொடியாக்கி பல் தேய்த்தால் பல் பிரச்சனை குணமாகும்.
வால்மிளகை பொடியாக்கி சீரகம் சேர்த்து மோருடன் குடித்து வந்தால் வாய் நாற்றம் பற்களில் ரத்தம் கசிதல் போன்றவை குணாகும்.
வால்மிளகை பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் கப நோய் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
தொண்டை பிரச்சனை, தும்மல், குரல் அடைப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அதிமதுரத்தூளுடன் வால்மிளகைச் சேர்த்தலேகியமாகக் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
உடல் சூடு, சிறுநீர் எரிச்சல் இருந்தால் பசும்பாலில் வால்மிளகை ஊற வைத்து அதில் பீர்க்காங்காய் அல்லது நீர் உள்ள காய்களை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். மேலும் வாதம், பித்தம், வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளும் குணமாகும்.
கீரைகள் சமைக்கும் போது அதில் வால்மிளகு பொடியை சேர்த்தால் உடலுக்கு அதிக சத்துகளை அதிகரிக்கும். வால் மிளகில் அதிக வேதிப்பொருட்கள் இருப்பதால், அதிக மருத்துவ குணங்களையும் கொண்டதாக இருந்து வருகிறது.
2004 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடந்த சம்பவம் இது.
ஒரு இளம்பெண் தனியாக கடற்கரையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் திடீரென கடல் அலைகள் மிகவும் வேகமாக உயரத் தொடங்கியது.
அது ஒரு சுனாமி போன்ற அபாய நிலை என்பதைக் யாரும் அப்போது சரியாக உணரவில்லை.
அந்த பெண்ணுக்கு அருகில் சுற்றுலா பயணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த
ஒரு யானை இருந்தது.
அபாயத்தை உணர்ந்த அந்த யானை,
பெண்ணை தன்னுடைய முதுகில் தூக்கி ஏற்றி,
வேகமாக உயரமான இடத்துக்கு ஓடத் தொடங்கியது.
சில நிமிடங்களுக்குள் கடல் நீர் அந்த இடத்தை முழுமையாக மூழ்கடித்தது.
ஆனால் யானை அழைத்துச் சென்ற இடம் பாதுகாப்பான உயரமான பகுதி.
யானையின் இயற்கையான ஆபத்து உணரும் திறன்
ஒரு மனித உயிரைக் காப்பாற்றிய விலங்கின் உணர்வு
இந்த சம்பவம் உலகம் முழுவதும் செய்தியாக பரவி,
“விலங்குகளுக்கும் மனிதர்களைப் போலவே உயிர் மதிப்பு உண்டு”
என்பதை மீண்டும் நினைவூட்டியது.
மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்காம்மா?!
அப்பா கேட்கும் போது இந்த மாப்பிள்ளை வேண்டாம்பா என்றேன்!..
நீ கவலைப்படாதே!
இந்த வரனை ஒப்புக்கோ! உன் வாழ்க்கை நல்லாருக்கும்னு சொல்லிட்டு எழுந்து போயிட்டார் அப்பா!..
நான் அப்பா பேச்சை என்றுமே மறுத்து பேசியதில்லை என்பதால் மனசுக்கு பிடிக்காவிட்டாலும் மௌனமாக சம்மதித்தேன்...
கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டில் நுழைந்ததுமே திகைத்துப்போய்விட்டேன்..
சக்கரை நோயால் பாதிக்கப்பட்ட மாமனார், நரம்பு தளர்ச்சியால் கை கால் பாதித்த மாமியார்,மூளை வளர்ச்சி குறைந்த 25 வயது நாத்தனார்!..
கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போலாயிற்று!.
பாழுங்கிணற்றில் வந்து விழுந்து விட்டேனே என்று மனசுக்குள் கதறினேன்!..
ஏனோதானோனு வீட்டு வேலைகள் செய்யறது, யார் எதை கேட்டாலும் எரிந்து விழறதுனு என்னை நானே ஒரு பழி வாங்குபவளாக மாற்றிக்கொண்டேன்!..
என் இவ்வளவு நடவடிக்கைகளுக்கு பிறகும் அந்த குடும்பம் என்னை தாங்கத்தான் செய்தது.
என் கணவர் என்மேல் வைத்த அன்பில் ஒரு குறையுமில்லை!..
நான் எவ்வளவுதான் எரிந்து விழுந்தாலும் என்னை அன்போடு அரவணைத்து சென்றார் மாமியார்!..
புகுந்த வீட்டில் ஆறு மாசம், பொறந்த வீட்டில் ஆறுமாசம்னு என் வாழ்க்கை போயிட்டிருந்தது!...
ஒருநாள் என் வீட்டுக்கு பெட்டி படுக்கையோடு கிளம்பும் போது
என் மாமியார் "நீ உன் அம்மா வீட்டில எவ்வளவு நாள் சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறியோ அவ்வளவு நாள் சந்தோஷமா இருந்திட்டு வா!
ஆனா! உன் வருகைக்காக இங்கே ஒரு குடும்பம் காத்திட்டிருக்கும் என்கிறதை எப்போதும் மறந்து விடாதே!"
அப்படின்னு சொன்னதுதான் தாமதம்
முன்னோக்கி நகர்ந்த என் கால்கள் சடாரென்று பின்னோக்கி நகர்ந்தது!
கைகள் பெட்டி படுக்கையை பட்டென்று கீழே உதறின!..
ஏதென்று புரியாமல் பார்த்த என் மாமியாரை ஓடிச்சென்று கட்டிப்பிடித்து கதறினேன்!..
என் தலையை வருடி முன் நெற்றியில்
ஆதரவாய் முத்தமிட்டார் என் மாமியார்!..
எப்பேர்பட்ட குடும்பத்தை என் நடவடிக்கைகளால் கொத்தி குதறிபுட்டேன்!.
இதற்கு பரிகாரமாக நான் என்ன செய்வேன்! ஆண்டவனே என்னை மன்னித்து விடு!..
இப்போது என் பார்வையில் மாமியார் அம்மாவாக தெரிந்தார்
மாமனார் அப்பாவாக தெரிந்தார்
நாத்தனார் உடன்பிறப்பாக தெரிந்தாள்..
ஒரு நிமிடம்கூட என்னிடம் கடிந்திடாத என் கணவர் தெய்வமாக தெரிந்தார்!
இப்போது என் புகுந்த வீடு ஒரு கோயிலாக தெரிந்தது!...
காட்டுவா ராபி.மு
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். பழைய நினைவுகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். நீண்ட நாட்கள் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். இழுபறியாக இருந்த பணிகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். தற்பெருமை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
ரிஷபம்
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய முயல்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். ஏற்ற இறக்கமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மிதுனம்
பயணங்களின் முக்கியத்துவத்தை அறிந்து மேற்கொள்வது நன்மையை ஏற்படுத்தும். பொறுமையுடன் செயல்பட்டு எண்ணிய காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மனதளவில் இருந்த குழப்பம் விலகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். மனதில் உத்வேகமான தன்னம்பிக்கையும் தைரியமும் உருவாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கடகம்
பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செயல்படவும். மனதில் இருக்கும் எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கவின் கலைகள் மீதான ஆர்வம் உண்டாகும். சாதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
சிம்மம்
உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப தனது கருத்துக்களை முன் வைப்பீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சமூக பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். சினம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
உடன் பிறந்தவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்புகள் கிடைக்கும். கமிஷன் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் பயணம் சாதகமாக அமையும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன் இருப்பவர்கள் ஆதரவுகள் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
தனவரவுகளில் இருந்து வந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். சமூக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தோற்ற பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதில் தெளிவும் புத்துணர்ச்சியும் உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
நண்பர்களின் ஆலோசனை புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். வியாபார தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை தவிர்க்கவும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் மேம்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
தனுசு
இனம் புரியாத சிந்தனைகள் மற்றும் செயல்களில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழல்கள் அமையும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமாக பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தடங்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான தருணம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தெளிவான சிந்தனைகள் மூலம் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கும்பம்
தொழில் மற்றும் கல்வி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கூட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். புதிய நபர்களால் மாற்றங்கள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளால் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். தந்தையின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்
மீனம்
வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வழக்கு பணிகளில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். திருப்பணி விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. இசை துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழல் அமையும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
விசுவாவசு வருடம் மாசி மாதம் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 13.2.2026.
இன்று மாலை 03.11 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று மாலை 05.00 வரை மூலம். பின்னர் பூராடம்.
இன்று அதிகாலை 04.01 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.
இன்று அதிகாலை 12.15 வரை பவம். பின்னர் மாலை 03.11 வரை பாலவம். பிறகு கௌலவம் .
இன்று காலை 06.34 வரை சித்த யோகம். பின்னர் மாலை 5.00 வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 05.00 முதல் 06.00 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலையும் மீறி, அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனேடிய வரிவிதிப்புக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.
ஜனநாயகக் கட்சியினர் முன்வைத்த, கனேடிய வரிவிதிப்புக்கு எதிரான மசோதாவுக்கு ஆதரவாக 219 பேரும், எதிராக 211 பேரும் வாக்களிக்க, மசோதா வெற்றிபெற்றுள்ளது.
அதாவது, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவை, கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதிக்கக்கூடாது என்கிறது. விடயம் என்னவென்றால், இனி இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
அங்கும் அது வெற்றி பெற்றாலும், கடைசியாக முடிவெடுக்கவேண்டியது, அதாவது, மசோதாவில் கையெழுத்திடவேண்டியது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்தான் என்பதால், நாடாளுமன்றத்தில் வெற்றிபெற்றாலும் கூட, இந்த மசோதா அமல்படுத்தப்படுமா என்பது சந்தேகமே என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கைகளும் சுத்தமாக இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே லிங்க முத்திரையாகும்.
இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.
லிங்கம், வெப்பத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. இது, வெப்பம் மற்றும் உயிர்சக்தியைத் தன்னிடத்தில் உள்ளடக்கி, நோய் க்கிருமிகள், உடலில் தேங்கி உள்ள கழிவுகளை அகற்றவல்லது. பல மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்த்தல் உள்ளிட்ட பலனை சில நிமிடங்களில் இந்த முத்திரை தந்துவிடும்.
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து சரியான அளவில் இருக்கும்.
மேலும் இந்த முத்திரை ஜலதோசத்திற்கு நிவாரணம் தரும்.
பெண்கள்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டைவிரலை உயர்த்த வேண்டும்.
ஆண்கள்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.
மனிதர்களுக்கு உண்டான இயல்புதான். அதிலும் பெண்கள் இதில் அதிக கவனம் கொண்டவர்கள். மிக விலை உயர்ந்த கிரீம்கள் (Creams), ஃபேஸ் வாஷ் (face wash) போன்றவற்றை பயன்படுத்தி அதில் தோல்வி கண்டவர்கள் அதிகம்.
பொதுவாக வெயிலில் சுற்றி திரியும் பெண்களுக்கு சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. மேலும் பிறவியிலேயே எண்ணெய் வழியும் முகமாக இருந்தால் சொல்லவே வேண்டாம்.
அந்தவகையில் முகம் பளபளன்னு ஜொலிக்க இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் அற்புத பொடி ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.
டிப்ஸ் 1
முல்தானி மெட்டி பவுடருடன் தயிர், சிறிது பன்னீர் கலந்து ஃபேஸ்பேக் மாதிரி அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால், முகம் டால் அடிப்பது உறுதி.
டிப்ஸ் 2
சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். இந்தக் கரும்புள்ளிகளை நீக்குவதில் தேன் மிகச்சிறந்த பணியாற்றுகிறது. மேலும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது. எனவே, தினமும் ஒருமுறை சுத்தமான தேனை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால், கரும்புள்ளிகள் குறையும்.
டிப்ஸ் 3
கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால், முகம் பளிச்சென்று மாறிவிடும்.
டிப்ஸ் 4
வேகவைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றின் கலவையை முகத்தில் பூசிக்கொண்டால், பளிச்சென இருக்கும். 4 பாதாம்பருப்பு அரைத்த விழுதுடன், தேன் மற்றும் பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து பூசுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். இது, முகத்துக்கு புரோட்டின் தன்மையை அளித்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
டிப்ஸ் 5
வாழைப்பழக் கூழுடன் பட்டர் ஃப்ரூட் கலந்து, சருமத்தில் பூசுங்கள். சற்று நேரம் ஊறவிட்டுக் கழுவிவிடுங்கள். சருமம் வறட்சி தன்மை நீங்கி மிருதுவாகும்.
ஒரு நாள் கழுதை விவசாயின் கிணற்றில் விழுந்தது. கிணற்றில் விழுந்த கழுதையை எவ்வாறு மீடபதென்பதறியாத அந்த விவசாயி ஒரு முடிவிற்கு வந்தார்.
அவர் தனது அண்டை வீட்டாரை உதவிக்கு அழைத்து, நடந்ததைச் சொன்னார், மேலும் பழைய கழுதையை கிணற்றை கழுதையுடன் சேர்த்து புதைத்து, தனது துயரத்திலிருந்து விடுபட வேண்டினார்.
விவசாயியும் அவரது அண்டை வீட்டாரும் தொடர்ந்து மண்ணை சரிக்க தொடங்கினர்.
மண் அவன் முதுகில் பட்டதும், ஒரு எண்ணம் அவனைத் தாக்கியது. ஒவ்வொரு முறையும் மண் அவன் முதுகில் விழும்போது திடீரென அவனுக்குத் தோன்றியது, அவன் அதை அசைத்துவிட்டு மேலே செல்ல வேண்டும்!
இதை அந்த கழுதை செய்தது, "அதை அசைத்துவிட்டு மேலே செல் ... அதை அசைத்து மேலே செல்... அதை அசைத்து மேலே செல்!" அவன் தன்னை ஊக்குவிக்க மீண்டும் மீண்டும் கூறினான்.
எவ்வளவு வேதனையான அடியாக இருந்தாலும், அல்லது நிலைமை எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், பழைய கழுதை பீதியுடன் போராடியது மற்றும் அதை அசைத்து நிறுத்தி வைத்தது!
கழுதை இறுதியாக, அடித்து சோர்ந்து, அந்த கிணற்றின் சுவரின் மீது வெற்றிகரமாக மிதித்தது! அவனை அடக்கம் செய்வது போல் தோன்றியது உண்மையில் அவனுக்கு உதவியது ... எல்லாவற்றிற்கும் காரணம் அவர் தனது துன்பத்தை கையாண்ட விதம்.
அதுதான் வாழ்க்கை! நாம் நம் பிரச்சினைகளை எதிர்கொண்டு நேர்மறையாக பதிலளித்தால், பீதி, கசப்பு அல்லது சுய பரிதாபத்திற்கு இடமளிக்க மறுத்தால் வெற்றி நிச்சயம்.






