- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். கையிருப்பு கரையக்கூடும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்.
சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்ப உறுப்பினர்களுக்குள் இருந்த கருத்து மோதல் விலகி சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிம்மதி தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு போட்டிகளை எளிதாக சமாளிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுண்டு. மேலதிகாரி பாராட்டுவார்.
விருச்சிகம்: எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவார்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
தனுசு: சகோதர சகோதரிகளால் ஆதாயமுண்டு. பேச்சில் தெளிவு பிறக்கும். முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல் பேச்சு கேட்பர். தாயாரின் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: ஏதோ ஒரு விஷயமாக முன்கோபம், டென்ஷன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பர். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
மீனம்: சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். உங்கள் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட பணியை முடிப்பீர்கள். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 13 ஆம் தேதி புதன்கிழமை 29.7.2026
இன்று இரவு 08.58 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.
இன்று மாலை 05.08 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
இன்று அதிகாலை 01.04 வரை விஷ்கம்பம். பின்னர் பிரீதி.
இன்று காலை 08.15 வரை பத்திரை. பின்னர் இரவு 08.58 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று காலை 06.01 வரை சித்தயோகம். பின்னர் மாலை 05.08 வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
மங்காத்தா, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல நடிகை ராய் லட்சுமி, தற்போது தொழிலதிபராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், 'La Ra' என்ற புதிய டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மங்காத்தா, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல நடிகை ராய் லட்சுமி, தற்போது தொழிலதிபராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், 'La Ra' என்ற புதிய டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தற்போது சோஷியல் மீடியா மற்றும் டேட்டிங் ஆப்-களில் போலி கணக்குகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த 'La Ra' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முற்றிலும் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதன் மூலம் பயனர்கள் பயமின்றி நம்பிக்கையுடன் தங்களுக்குப் பிடித்தமானவர்களைத் தேர்வு செய்யலாம். உண்மையான அன்பு, காதல், உண்மையான நட்பு மற்றும் நீண்டகால வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களுக்கு இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆப்பை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு பேசிய நடிகை ராய்லட்சுமி, ஒருவர் ரிலேஷன்ஷிப்பில் இருக்க விரும்பினால் அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த ஆப் இருக்கும், பல விதமான டேட்டிங் ஆப்கள் இருக்கின்றன. ஆனால், அவை நம்பிக்கைக்குரியதாக இல்லை, அதுமட்டுமின்றி, வெறும் டேட்டிங் ஆப்-ஆக மட்டுமில்லாமல், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தொழில்முறை நபர்களை இணைக்கும் 'நெட்வொர்க்கிங்' தளமாகவும், நிஜ சந்திப்புகளை உருவாக்கும் தளமாகவும் இது செயல்படும். பலரும் தனிமையிலேயே இருக்கிறார்கள், பாட்னர் இருந்தாலும் அவர்கள் தனிமையில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கினைப்பது தான் இந்த 'La Ra'. இந்த ஆப்குள் இணைந்துவிட்டால் நிச்சயமாக நீங்கள் தனியாகவோ சிங்கிளாகவோ இருக்க மாட்டீங்க என நடிகை லட்சுமி ராய் அதில் பேசி உள்ளார். ஆனால், இணையவாசிகள் பலர் சிங்கிளா வாங்க சந்தோஷமா போங்க என்றும், இது தேவையில்லாத ஒன்று, இளைஞர்களை கெடுக்கும் இதுபோன்ற ஆப்களை ஊக்குவிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.
சீதாராமம் படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் மிருணாள் தாகூர். அவரது அழகும், திறமையும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதனையடுத்து பாலிவுட்டில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு பலனாக வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க அவரும், நடிகர் தனுஷும் காதலிப்பதாக ஒரு தகவல் தொடர்ந்து ஓடியது. அது வதந்தி என்று பின்னர் உறுதியானது. இந்நிலையில் அவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.
மராத்தி மற்றும் ஹிந்தி மொழிகளில் நடிகையாக பயணத்தை ஆரம்பித்த மிருணாள் தாகூருக்கு தெலுங்கில் சீதாராமம் படம் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தெலுங்கிலிருந்து மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் டப் செய்யப்பட்டது. மிருணாளின் அழகும், நடிப்பும் அனைவரையும் வசீகரித்துவிட்டது. அதன் காரணமாக அனைவருமே அவரை கொண்டாடி தீர்த்தார்கள்.அவரை க்ரஷ் லிஸ்ட்டில் சேர்த்தவர்களும் அதிகம்.
அந்தப் படத்தின் சமயத்தில் சோஷியல் மீடியா ரிலீஸ்களில் அவர்தான் இருந்தார். இதன் காரணமாக தென்னிந்திய மொழிகளில் அதீத கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கவனம் பாலிவுட்டிலேயே தொடர்ந்தது. அதன் பலனாக தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஹிட்டோ, தோல்வியோ அவரது மார்க்கெட் சீராகவே இருக்கிறது என திரைத்துறையினர் சொல்கிறார்கள். தென்னிந்திய மொழிகளை பொறுத்தவரை அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கும் ராக்கா படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
செம பிஸியாக இருக்கும் அவரை சுற்றி சமீபமாக காதல் கிசுகிசுக்கள் அதிகம் ஓடுகின்றன. முதலில் நடிகர் தனுஷுக்கும், மிருணாளுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி டேட்டிங் எல்லாம் செல்கிறார்கள் என்று பேசப்பட்டது. மேலும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடியது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் மிருணாள்.
அதுமட்டுமின்றி தனுஷின் சகோதரிகளை மிருணாள் இன்ஸ்டாவில் ஃபாலோ செய்ததன் காரணமாக அவரை வீட்டில் ஒருவராகவே ஏற்றுக்கொள்வதற்கான அறிகுறிதான் அது என்றெல்லாம் தியரி எழுதினார்கள் சிலர். ஒருகட்டத்தில் இந்த விஷயம் எல்லை மீறி போனதைத் தொடர்ந்து மௌனத்தை கலைத்தார் மிருணாள். அவர் ஒரு பேட்டியில், இந்த விஷயத்தில் தனக்கு அதீதமான விளம்பரம் கிடைத்ததாகவும்; தனுஷுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அவர் மீது காதல் எல்லாம் இல்லை என்றும் போட்டு உடைத்திருந்தார்.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்: சாப்டர் 1’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.
தனுஷின் 55-வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். ‘ஓம்: சாப்டர் 1’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ‘அலாக்கா லோவா பாடல்’ சிங்கிள் வீடியோ தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது. மின்விளக்காக சுடலைமாடன் ஜொலிக்க திருவிழா கொண்டாட்டத்துடன், துள்ளல் இசையுடன் தொடங்குகிறது.
இசையின் வேகத்துக்கு ஓடும் வார்த்தைகளை புரிந்துகொள்ள சிரமம் இருந்தாலும், உற்சாகம் உடலோடு ஒட்டிக்கொள்கிறது. அரசல் புரசலாக அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருக்கும் தனுஷ், இந்தப் பாடலிலும் அதற்கான அச்சாரத்தை வைத்துள்ளார். அதற்கு சாய் அபயங்கர் பாதை அமைத்துக் கொடுத்துள்ளார்.
இப்படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் உள்பட பலர் நடிக்கின்றனர். எழிலரசு ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷின் பிறந்தநாளில் ‘அலாக்கா லோவா சிங்கிள்’ வெளியாகி இருப்பது, அவரின் ரசிகர்களுக்கான விருந்தாக அமைந்துள்ளது.
கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.
வெள்ளிக்கிழமை காலை 7.23 மணியளவில், கனடாவின் ரொரன்றோவில், நவ்நீத் கௌர் (26) என்னும் இளம்பெண் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.
கௌரை பின் தொடர்ந்த ஒருவர், திடீரென அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்த பொலிசார், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஷரன்ஜீத் சிங் (37) என்றும் அவர் பிராம்டனைச் சேர்ந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அவர் ஏற்கனவே கௌருக்கு அறிமுகமானவரா, எதனால் கௌரை அவர் சுட்டார் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.
சிங் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
கனடாவின் விக்டோரியா பகுதியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் நட்சத்திரமான ரெபெக்கா லூனா, மருத்துவ உதவியுடன் கூடிய மரணம் மூலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
இளம் வயதிலேயே அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ரெபெக்கா லூனா, 'WhereDidBecsGo' என்ற கணக்கு மூலம் சமூக வலைத்தளங்களில் 95,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைப் பெற்றிருந்தார்.
அல்சைமர் நோயுடன் வாழும் தனது அன்றாட அனுபவங்களையும், "இறக்கும் தருவாயில் டேட்டிங் செய்வது" மற்றும் "புலப்படாத குறைபாடுகளுடன் பயணம் செய்வது" போன்ற தலைப்புகளில் வெளிப்படையாகப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
அண்மையிால் தனது உடலமைப்பில் ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாக, தனக்குக் குறிப்பிட்டிருந்த மருத்துவ உதவியுடனான உயிர் மாய்ப்பு திகதியை முன்கூட்டியே மாற்றி அமைப்பதாக தனது ஆதரவாளர்களுக்குத் தெரிவித்திருந்தார்.
என்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலும், நிபுணத்துவப் பராமரிப்பு மருத்துவரின் ஆலோசனையின் பேரிலும் இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தனது இறுதி வீடியோவில் பகிர்ந்திருந்தார்.
தனது கடினமான சூழ்நிலையிலும் மது பழக்கத்தை கைவிட்டு உறுதியாக இருந்ததை எண்ணிப் பெருமைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் 50 வயதை எட்டுவதற்குள் இறக்க விரும்பவில்லை, ஆனால் நான் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும், அனைவரும் தம்மைத் தாமே நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பூர்வீக சொத்து மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். பழைய சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கடகம்
மனதளவில் இருந்த சஞ்சலங்கள் குறையும். அரசால் அனுகூலம் ஏற்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் தீர்ப்புகள் கிடைக்கும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சொத்து விற்பனையில் இருந்து வந்த இழுபறிகள் மறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கன்னி
தாய்வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
துலாம்
ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். சிறு தூர பயணங்களால் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபார பணிகளில் சுமாரான வரவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். மனை சார்ந்த பணிகளில் உள்ள தடைகள் விலகும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். சகோதரர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
தனுசு
உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் உண்டாகும். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மை அளிக்கும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
மகரம்
மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவரிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். புலனாய்வு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். புதிய இடத்தில் தங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். புரியாத சில கேள்விகளுக்கு தெளிவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கும்பம்
உத்தியோகம் நிமித்தமான பணிகளில் பொறுப்புகள் குறையும். சொத்துக்கள் மூலம் மேன்மை ஏற்படும். உயர்கல்வியில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொது காரியங்களில் ஒத்துழைப்பு ஏற்படும். பயணம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் இருந்த இழுபறியான சூழல் குறையும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் அடைவீர்கள். உணவுத் துறைகளில் இருப்போர்க்கு ஆதாயம் மேம்படும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 28.7.2026.
இன்று இரவு 07.32 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.
இன்று மாலை 03.00 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.
இன்று அதிகாலை 01.22 வரை வைதிருதி. பின்னர் விஷ்கம்பம்.
இன்று காலை 06.39 வரை கரசை. பின்னர் இரவு 07.32 வரை வனிசை. பிறகு பத்திரை.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
ஒண்டாரியோவின் லிஸ்டோவெல் அருகே இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 55 வயதுடைய நபர் பரிதாபமாக உயிரிழந்ததாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
லிஸ்டோவெல் நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள 'பெர்த் ரோடு 158' பகுதியில், 81-வது வீதிக்கும் 84-வது வீதிக்கும் இடையே இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பெர்த் கவுண்டி OPP காவலர்களும், அவசர மருத்துவ உதவிக் குழுவினரும் விரைந்தனர்.
பாதசாரியாகச் சென்ற நியூ பிரன்சுவிக் மாநிலத்தைச் சேர்ந்த 55 வயது நபர் மீது வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பொலிஸார் அறிவித்தனர். இந்த விபத்தில் வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
விபத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த 'பெர்த் ரோடு 158' பாதை, தற்போது மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சிகளோ அல்லது அப்பகுதியில் பதிவான 'டேஷ்கேம்' வீடியோ காட்சிகளை வைத்திருப்பவர்களோ உடனடியாகப் பெர்த் கவுண்டி காவல்துறையை 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கனடாவின் ஒண்டாரியோ மாகாணம், தண்டர் பே சீர்திருத்த மையத்தில் இருந்து தப்பியோடிய 65 வயது கைதியைத் தண்டர் பே காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.
சிறையிலிருந்து தப்பிய கைதி ஆந்தனி பேட்ரிக் என அடையாளம் காணப்பட்டார்.
ஜூலை 24ம் திகதி சிறையிலிருந்து தப்பியதாகத் தகவல் வெளியான நிலையில், தகவல் வெளியான சுமார் 9½ மணி நேரத்தில் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
சிறை நிர்வாகம் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
தேடுதல் வேட்டையின் போது, நகரின் தெற்குப் பகுதி மற்றும் நெடுஞ்சாலை 61 வழித்தடத்தில் பயணிக்கும் வாகன சாரதிகள், அந்நியர்களுக்கு வாகனம் நிறுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர்.
கைதியை கண்டால் நேரடியாக அணுக வேண்டாம் எனவும், உடனடியாக 911 அவசர எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டது.
இந்த தேடுதல் வேட்டை மற்றும் விசாரணையில் ஒண்டாரியோ மாகாணக் காவல்துறையும் இணைந்து செயல்பட்டது.
எனினும், கைதி ஃபிரிஸ்செல் எங்கு வைத்து கைது செய்யப்பட்டார், அவர் சிறையிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான மேலதிக விவரங்களை காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிலும் முன்கோபம் இன்றி பொறுமையை கையாளவும். உடலில் ஒரு விதமான சோர்வுகள் மூலம் தாமதம் ஏற்படும். அரசு செயல்களில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செயல்படவும். செயல்பாடுகளில் ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
ரிஷபம்
வியாபார பணிகளில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். அரசு பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பயண செயல்களில் சில மாற்றம் ஏற்படும். மனதிலிருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் இருந்த தாழ்வு மனப்பான்மை குறையும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம்
புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்று தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சிம்மம்
சுபகாரிய முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.
திர்ஷ்டஎண் : 5
அதிர்ஷ்டநிறம் : சாம்பல்
கன்னி
உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். தாயாருடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் தவறிய பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
துலாம்
இசை சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். தொழில் சார்ந்த முயற்சிகளில் விவேகம் வேண்டும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக தடைகளை வெற்றிக்கொள்வீர்கள். எதிர்பார்த்து இருந்த வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் ஆதரவுகள் மேம்படும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
அதிகார பணிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
மறுசுழற்சி சார்ந்த பொருட்கள் மூலம் விரயம் ஏற்படும். புதிய விஷயங்களை கண்டுபிடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். மறைவான சில பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம்
உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மீனம்
அரசுத்துறை பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மகளுக்கு சுபகாரிய செய்திகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் திருப்தி கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 11 ஆம் தேதி திங்கட்கிழமை 27.7.2026.
திதி
சுக்ல பக்ஷ திரயோதசி - Jul 26 01:58 PM – Jul 27 04:15 PM
சுக்ல பக்ஷ சதுர்தசி - Jul 27 04:15 PM – Jul 28 06:19 PM
நட்சத்திரம்
மூலம் - Jul 26 07:34 AM – Jul 27 10:28 AM
பூராடம் - Jul 27 10:28 AM – Jul 28 01:11 PM
கரணம்
சைதுளை - Jul 27 03:08 AM – Jul 27 04:15 PM
கரசை - Jul 27 04:15 PM – Jul 28 05:19 AM
வனசை - Jul 28 05:19 AM – Jul 28 06:19 PM
யோகம்
வைத்ருதி - Jul 26 10:04 PM – Jul 27 10:54 PM
விஷ்கம்பம் - Jul 27 10:54 PM – Jul 28 11:33 PM
வாரம் - திங்கட்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 5:57 AM
சூரியஸ்தமம் - 6:33 PM
சந்திரௌதயம் - Jul 27 5:04 PM
சந்திராஸ்தமனம் - Jul 28 4:33 AM
இவரது இயற்பெயர் நாகூர் பாபு.
இவரது தாய்மொழி தெலுங்கு.
பிறப்பால் இஸ்லாமியர்.
இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா.
இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயவாடாவில் பிறந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பதினாறு மொழிகளில் 22000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கர்நாடக இசை பயின்றவர்.
இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய இசைக் குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 1985-ஆம் ஆண்டு கற்பூர தீபம் என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா வாய்ப்பு கொடுத்தார்.
1986-ஆம் ஆண்டு இளையராஜா, பூவிழி வாசலிலே என்றத் தமிழ்த் திரைப்படத்தில் “அண்ணே அண்ணே” என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். அன்றிலிருந்து இவரது பாடல் பயணம் ஆரம்பித்தது. வேலைக்காரன், சின்னத்தம்பி, காதலன், சொல்லத்துடிக்குது மனசு, உள்ளத்தை அள்ளித்தா, சின்னக்கண்ணம்மா, முத்து, எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, சிற்பி., எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், தேவா, சந்திரபோஸ் போன்றவர்களின் இசையமைப்பில் தொடர்ந்து பாடிவந்தார்.
இவர் பாடகராவதற்கு முதலில் நடிகராகத்தான் தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். பாடும் வாய்ப்புப் பின்னர் இவரை இருகரம் கூப்பி அழைத்துக் கொண்டது. முதலில் 1979-ஆம் ஆண்டில் ‘நீடா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். தமிழில் ‘சிங்கார வேலன்’ படத்தில் 1982-ஆம் ஆண்டில் இவரை நடிகராக அறிமுகம் செய்தது பாவலர் கிரியேஷன்ஸ் பட நிறுவனம், இப்படத்தில் இவர் கமலஹாசனின் இணை பிரியா நண்பர்கள் குழுவில் ஒருவராக கவுண்டமணி, வடிவேலு கூட்டணியுடன் மனோ என்ற தனது பெயருடன் நகைச்சுவை விருந்தளித்தார்.
இதையடுத்து எனக்கு இருபது உனக்கு பதினெட்டு உள்ளிட்ட விரல் விட்டு எண்ணும் அளவிலான படங்களில் தமிழில் நடித்தார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இவரும் நெருங்கிய நண்பர்கள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். கலை சார்ந்த துறைகளில் மதிப்புகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
ரிஷபம்
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மிதுனம்
மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வர்த்தக வியாபாரத்தில் பொருள் வரவுகள் மேம்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கடகம்
பொருளாதார சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மூலம் லாபம் அடைவீர்கள். பணி நிமித்தமான கருத்துக்களுக்கு ஆதரவு மேம்படும். மாறுபட்ட அணுகுமுறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
சிம்மம்
வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் நன்மைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். மனதளவில் பக்குவமும் புரிதலும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
வியாபார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
மனதிற்கு பிடித்தவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். சிறுதூரப் பயணங்கள் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் மூலமாக இன்பமான செய்திகள் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். சுய முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
நினைத்த சில பணிகளால் அலைச்சல் அதிகரிக்கும். பழைய கடன் சார்ந்த முயற்சிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வாகனங்களில் நிதானம் வேண்டும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிர்மறை சிந்தனைகளால் சோர்வுகள் உண்டாகும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அசதிகள் மூலம் சோர்வும் காலதாமதமும் ஏற்படும். செய்யும் முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். தனிமை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கும்பம்
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மனதை உறுத்திய கவலைகள் குறையும். கணினி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். தாய்வழி சொத்துக்கள் தொடர்பான செயல்களில் பொறுமை வேண்டும். பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் கனிவு வேண்டும். சிக்கலான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். உடல்நலத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். உறவுகள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். எண்ணிய சில பணிகளில் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுகுட்டு பாறை ஒரு அமைதியான மற்றும் அழகான சுற்றுலாத் தலமாகும்.
- இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அமைதியை விரும்புபவர்கள் செல்லக்கூடிய ஒரு கற்பாறை அமைப்பாகும் சிறுகுட்டு பாறை.
- இந்த இடத்தை பார்க்கச் செல்பவர்களுக்கு, இங்கு இருக்கும் இயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் குகைகள் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை தரும்.
சிறுகுட்டு பாறை சிறப்பு:
- இது ஒரு பெரிய கற்பாறை.
- இந்த பாறையில் பல சிறிய குகைகள் உள்ளன.
சுற்றுலா:
- தமிழ்நாட்டின் அதிகம் அறியப்படாத, ரசிக்கக்கூடிய ஒரு சுற்றுலாத் தலம் சிறுகுட்டு பாறை.
- இது மக்கள் நடமாட்டம் குறைந்த, இயற்கையான சூழல் கொண்ட இடம்.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் (பெரம்பலூர்):
- மதுரகாளியம்மன் திருக்கோயில் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும் காலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்
- அம்மனின் சீற்றத்தைக் கட்டுப்படுத்த காவல் தெய்வமான சோலை முத்தையா மற்றும் அகோர வீரபத்திரர் சன்னதிகள் நேர் எதிரே அமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.
- மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுவதற்கு முன்பாக பூசாரி, செல்லியம்மன் குடியிருக்கும் பெரியசாமி மலை கோவில் திசையை நோக்கி தீபாராதனையை காட்டியபிறகே, மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுவது வழக்கம்.
- மதுரகாளியம்மன் கோவிலில் எந்த திருவிழா நடந்தாலும், முதல் மரியாதை செல்லியம்மனுக்குத்தான் கொடுக்கப்படுவது வழக்கம்.
- இக்கோயிலில் மாவிளக்கு செலுத்தி அம்மனை வேண்டிக்கொள்ள தீராத நோய்கள் எல்லாம் தீரும் என பக்தர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
- திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளவர்கள் அம்மனை தரிசித்து வழிபட விரைவில் குறைகள் நீங்கப் பெறுவர்.
- இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்து வேண்டிக்கொள்ள, காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும் என்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் மாறி லாபம் ஏற்படும் என்றும் நம்புகின்றனர் பக்தர்கள்.
- இங்கு மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தங்கத் தேர் உள்ளது.
- இக்கோயிலில் அன்னதானம் திட்டம் நடைமுறையில் உள்ளது
- ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசையன்று மதுரகாளியம்மனுக்கு பூச்சொரிதல் திருவிழாவும் பின்னர் அம்மனுக்குக் காப்புக் கட்டி திருவிழாவும் தொடங்கும்.
- 8-ஆம் நாள் திருவிழாவான செவ்வாய் அன்று மாலையில், சுத்துப்பட்டு சனங்களெல்லாம் பெரிய சாமி கோயில் மலையடிவாரத்தில் கூடுவர்.
- அன்று இரவு சிறப்பு பூஜையும் மறுநாள் அதிகாலையில் கடாவெட்டு நடைபெறும். மலைக்கோயில் பூஜைகள் அதோடு நிறைவு பெறும்
- திருச்சியிலிருந்து 50 கி.மீ. தூரத்திலும், பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவனது மனதில் நீண்ட நாட்களாக மூன்று கேள்விகள் இருந்தன.
அந்த மூன்று கேள்விகளுக்கும் சரியான விடை தெரிந்துவிட்டால், தான் செய்யும் எந்தவொரு காரியத்திலும் தோல்வியே ஏற்படாது என்று அவன் நம்பினான். அந்த கேள்விகள்:
1. ஒரு செயலைத் தொடங்க மிகச் சரியான நேரம் எது?
2. மிக முக்கியமான மனிதர் யார்?
3. எல்லாவற்றிலும் மிக முக்கியமான செயல் எது?
நாட்டின் அறிஞர்கள் பலர் பலவிதமான விடைகளைக் கூறினர்.
ஒரு சாரார் கால அட்டவணை போடச் சொன்னார்கள், மற்றொரு சாரார் அமைச்சர்களின் ஆலோசனையே முக்கியம் என்றார்கள்.
ஆனால், எதிலும் திருப்தி அடையாத அரசன், காட்டில் வசிக்கும் ஒரு ஞானியைச் சந்தித்து விடை பெற முடிவு செய்தான்.
ஞானியின் சந்திப்பு
அரசன் ஞானியின் இருப்பிடத்தை அடைந்தபோது, அந்த முதிய ஞானி தன் குடிசைக்கு முன்னால் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்தார். களைப்பால் அவர் மூச்சிரைப்பதைக் கண்ட அரசன், அவரிடம் மண்வெட்டியை வாங்கித் தானே நிலத்தைத் தோண்டத் தொடங்கினான்.
நேரம் கடந்தது. அப்போது காட்டில் இருந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஒரு மனிதன் ஓடிவந்து மயங்கி விழுந்தான். அவன் வயிற்றில் பெரிய காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அரசன் உடனே அவனுக்கு முதலுதவி செய்து, தன் மேலாடையால் ரத்தத்தை நிறுத்தி, இரவு முழுவதும் அவனைக் கவனித்துக் கொண்டான்.
உண்மையும் மாற்றமும்
மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்த அந்த மனிதன், அரசனிடம் மன்னிப்புக் கேட்டான்.
அவன் உண்மையில் அரசனைக் கொல்ல வந்த எதிரி. அரசன் தனியாகக் காட்டுக்கு வருவதை அறிந்து வழியில் காத்திருந்தான்.
ஆனால், அரசனின் பாதுகாவலர்கள் அவனைக் காயப்படுத்தியதால் தப்பி ஓடி வந்தான்.
தன்னை சாகவிடாமல் காப்பாற்றிய அரசனுக்கு இனி வாழ்நாள் முழுவதும் அடிமையாக இருப்பதாக உறுதி அளித்தான்.
விடைகள்
கிளம்பும் முன் அரசன் மீண்டும் தன் கேள்விகளை ஞானியிடம் கேட்டான்.
ஞானி புன்னகைத்து, "உனக்கான விடைகள் ஏற்கெனவே கிடைத்துவிட்டன" என்றார்.
சரியான நேரம்:"இப்போது" என்பது தான் மிக முக்கியமான நேரம். ஏனென்றால், அந்த நேரத்தில் மட்டுமே நம்மால் எதையும் செய்ய முடியும்.
முக்கியமான மனிதர்: அந்தத் தருணத்தில் நீங்கள் யாருடன் இருக்கிறீர்களோ, அவரே முக்கியமான மனிதர்.
முக்கியமான செயல்: உங்களோடு இருப்பவருக்கு அந்த நேரத்தில் தேவையான நன்மையைச் செய்வதுதான் மிக முக்கியமான செயல்.





