·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 1029
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added article

‘டாக்ஸிக் படத்தின் நெருக்கமான காட்சிகளைப் பார்க்கும்போது என் மனைவி அதை முழுமையாக ஏற்றுக்கொள்வார் என்று நான் நினைக்கவில்லை’ என நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் யஷ், நடிகையுடன் தான் நெருக்கமாக நடிக்குபோது தனது மனைவி ராதிகா பண்டிட் எப்படி எடுத்துக் கொள்வார் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “கணவர் அப்படி நடிப்பதை எந்த மனைவியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எல்லா வாழ்க்கைத் துணைக்கும் அந்த எண்ணம் இருக்கும்.

ஆனால் முடிவில், இது எல்லாம் உருவாக்கப்பட்ட காட்சிகள். இது ஒரு கலை. இதன்மூலம் நாங்கள் எதை அடைய விரும்புகிறோம் என்பதுதான் முக்கியமானது.

மக்கள் சிலவற்றை தங்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், சில விஷயங்களை தங்களது அறிவின் அடிப்படையிலும் செய்கிறார்கள்.

நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது அவை எனக்கும் அசவுகரியமாகவே இருக்கும். அந்தக் காட்சிகளில் நடிப்பது எனக்கும் எளிதல்ல. கதைக்கு அந்தக் காட்சிகள் தேவையாக இருக்கும்போது அப்படி நடிக்க வேண்டியது அவசியமாகிறது.

அப்படியான காட்சிகளில் என்னைப் பார்க்கும்போது, என் மனைவிக்கு நிச்சயமாக சங்கடமகத்தான் இருக்கும். அதற்கு அர்த்தம் அவர் அதைத் தவறாக எடுத்துக்கொள்வார் என்பது இல்லை. அவர் என்னை நம்புகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவரும் ஒரு நடிகை என்பதால் , இந்த வேலைகளை அவர் புரிந்துகொள்வார். அங்கே தன் வேலையைச் செய்வது ஒரு நடிகன், அவரது கணவன் இல்லை என்பது அவருக்கு புரியும்” என்று தெரிவித்தார்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டக்ஸிக்’. இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியானதில் இருந்து யஷ் நடித்த சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்தப் படத்தில் யஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. கன்னடம் , ஆங்கில மொழிகளில் தயாராகும் இந்தப் படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

  • 186
·
Added article

80களின் காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து, தனது வசீகர புன்னகையாலும் அசாத்திய நடிப்பாலும் தனக்கெனத் தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்டவர் நடிகை நதியா. பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தபோதிலும், ஒரு படத்தில் கூடக் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்காமல் தனது கண்ணியமான ஆடை அலங்காரத்தால் புகழ்பெற்றார்.

'பூவே பூச்சூடவா' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நதியா, அறிமுகமான முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதன் பின் பூக்களைப் பறிக்காதீர்கள், மந்திரப் புன்னகை, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா என அடுத்தடுத்து பல வெற்றி படங்களைக் கொடுத்தார். இவர் சினிமா உச்சத்தில் இருந்த காலத்தில் நதியா கம்மல், நதியா மூக்குத்தி, நதியா கொண்டை, நதியா உடை என அப்போதைய பெண்களின் ஃபேஷன் டிரெண்டையே மாற்றி அமைத்தார். தமிழ், தெலுங்கு, மலையானம் என உச்சத்தில் இருக்கும்போதே தனது நீண்ட நாள் நண்பரான சிரிஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்த நதியா, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து அசத்தினார். அதன்பின் தெலுங்கில் திரிஷ்யம், திரிஷ்யம் 2 படங்களில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்துப பாராட்டுக்களைப் பெற்றார். இவர் கடைசியாக தோனியின் மனைவி சாஷி சிங் தோனி தயாரித்த 'Let's Get Married' (LGM) திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நதியா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொப்பி அணிந்து, கூல் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 1966-ஆம் ஆண்டு பிறந்த நதியாவிற்குத் தற்போது 60 வயதாகிறது. ஆனால், இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், இவருக்கு 60 வயசுனு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. இன்னமும் அப்படியே 20 வயது பெண் மாதிரியே இருக்காங்க, எவர்கிரீன் நதியா எனச் வியந்து கமெண்டுகளை பகிர்ந்து அவரிடம் அழகு குறிப்புகளை கேட்டு வருகின்றனர்.

  • 187
·
Added a news

கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாகப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கனடிய அரச காவல்துறை கைது செய்துள்ளது.

நிக்கோலஸ் கெல்லி என்ற இந்த நபரை ரிச்சிபுக்டோ பகுதியில் பொலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். அவர் கடைசியாக ஆகஸ்ட் 4 ஆம் திகதி கென்ட் கவுண்டியில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட 25 வயதான நிக்கோலஸ் கெல்லி மீது, ஆட்களைத் தாக்குதல், ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டுதல், வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர் எந்த இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்ற விவரங்களைப் பொலிஸார் வெளியிடவில்லை.

எனினும், சந்தேகநபரைப் பிடிப்பதற்குத் தேவையான தகவல்களை வழங்கி உதவிய பொதுமக்களுக்குச் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் பொலிஸார் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

  • 193
·
Added a news

கனடாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் வரிக் கொள்கை சீர்திருத்தங்களை ஒட்டாவா அரசு "படிப்படியாக" அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் சிறு வணிகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பிரதமர் மார்க் கார்னியின் வரவுசெலவுத் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேய்ன் லாங் தெரிவித்துள்ளார்.

கனடாவின் சிக்கலான வரி அமைப்பை எளிமையாக்கி, மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என பல வரி நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போதைய வரி முறையின் விதிமுறைகள் அடுக்கடுக்காக அதிகரித்து, வணிகங்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

கனடாவின் சிக்கலான வரி விதிகளால் சில முக்கிய சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குவதாகவும், இந்தத் தடைகளைக் குறைத்து முதலீடுகளை ஈர்ப்பதே அரசின் நோக்கம் என்றும் வேய்ன் லாங் குறிப்பிட்டார்.

பிரதமர் மார்க் கார்னியின் தலைமையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இரண்டாவது இலையுதிர் கால வரவுசெலவுத் திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் "இரண்டாம் கட்ட நடவடிக்கையாக" இருக்கும். கனடாவில் பெரிய அளவிலான வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

தற்போதைய அரசு சிறு மாற்றங்களை மட்டுமே செய்து வருவதாகவும், பொருளாதாரத்தை முடக்கும் பழைய வரி முறையை முழுமையாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கன்சர்வேடிவ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

சிறு வணிகர்களுக்கான வரி விதிப்பு நடைமுறைகளை எளிமையாக்கி, அறிக்கை சமர்ப்பிக்கும் சுமையைக் குறைப்பதே அரசின் முதன்மை இலக்காக உள்ளது.

அரசின் இந்த முடிவை கனடிய சுதந்திர வணிக கூட்டமைப்பு வரவேற்றுள்ள அதே வேளையில், நிஜமான மாற்றம் வரவுசெலவுத் திட்டத்தில் பிரதிபலித்தால் மட்டுமே சிறு வணிகர்கள் பலனடைவர் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

  • 191
·
Added a news

கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் மீது எவ்வித காரணமுமின்றி நடத்தப்பட்ட கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை டொராண்டோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் புளோர் மற்றும் யோங் வீதிகளுக்கு அருகே குறித்த ஊழியர் நடைபாதையில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தின் போது அந்த ஊழியர் தனது இடைவேளையில் இருந்ததாக ரீ.ரீ.சீ நிர்வாகம் தெரிவித்துள்ளது. கத்திக்குத்துத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஊழியர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டில் நலமடைந்து வருவதாக ரீ.ரீ.சீ தெரிவித்துள்ளது. சந்தேகநபர் 36 வயதான அந்தோணி கிறிஸ்டோபர் டேவிட் மெக்லாலின் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியமை மற்றும் படுகாயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் தேடப்பட்டு வருகிறார்.

5 அடி 8 அங்குலம் முதல் 5 அடி 10 அங்குலம் வரை உயரம் கொண்ட நடுத்தர உடல்வாகு உடையவர். முகம் மற்றும் கைகளில் பல பச்சைக் குத்தல்கள் மற்றும் முழுமையான தாடி வைத்துள்ளார் என குறித்த நபர் பற்றிய அடையாள விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சாம்பல் நிற டி-சர்ட், நீல நிற வெஸ்ட் ஜோக்கெட், சாம்பல் நிறப் பேன்ட், பழுப்பு நிற லெதர் காலணிகள் மற்றும் பின்புறமாகத் திருப்பி வைக்கப்பட்டக் கருப்பு நிற தொப்பி (வெள்ளை எழுத்துகளில் "We The North" என எழுதப்பட்டது).

இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் 416-808-5300 என்ற எண்ணில் பொலிஸாரையோ அல்லது 416-222-TIPS (8477) என்ற எண்ணில் குற்றத் தடுப்புப் பிரிவையோ (Crime Stoppers) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

  • 194
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தீரும். இனிமேல் சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.

ரிஷபம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் விரும்பிக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகப் பணிகளை திறம்பட முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

மிதுனம்: மனதில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

கடகம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி திரும்பும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். பெற்றோர் உடல்நலம் சீராகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.

கன்னி: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கையில் காசு, பணம் புரளும். புதிய நபர்களுடன் நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். நீண்டகால சொத்துப் பிரச்சினைகள் தீரும்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் வீண் வாக்குவாதம் வந்துபோகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. பல வகையிலும் பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு.

தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதால் மன நிம்மதி கிடைக்கும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மகான்கள், பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

மகரம்: சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். கவுரவப் பதவிகள் தேடி வரும். சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பங்குச் சந்தை, கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. எக்காரியத்திலும் நிதானம் தேவை.

கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசு பணம் புரளும். வியாபாரத்தில் போட்டி குறையும். பணியாளர்கள் பொறுப்பாக நடப்பார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

மீனம்: எக்காரியத்திலும் நிதானமாக செயல்படுவது அவசியம். குடும்பத்தில் மூத்தோர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு கூடும்.

  • 389
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 32 ஆம் தேதி திங்கட்கிழமை 17.8.2026.

இன்று இரவு 08.26 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று காலை 07.43 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.

இன்று காலை 08.26 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று காலை 08.20 வரை பவம். பின்னர் இரவு 08.26 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று காலை 06.03 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=619&dpx=2&t=1786930934

நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 06.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 390

Good Morning...

  • 386
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர். புதிய பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.

ரிஷபம்: விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவீர். தெய்வீக ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர்.

மிதுனம்: பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பேசித் தீர்ப்பீர். மூத்த சகோதரர் உதவுவார். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

கடகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

சிம்மம்: புது திட்டங்களை தீட்டுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். தாயாருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்ற முயற்சிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கன்னி: யாருக்காகவும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் தொல்லை அதிகரிக்கும். அலுவலக ரீதியாக பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

துலாம்: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை கவருவீர். முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். சகோதர வகையில் உதவி கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். தந்தைவழியில் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு முக்கிய பணிகளை முடிப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து நற்செய்திகள் வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கிகள் வந்துசேரும். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.

கும்பம்: எதிர்பார்த்தபடி சில பணிகளை முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும்.

மீனம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். வீட்டில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிலும் கவனமாக இருக்கவும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் சிக்கல்கள் வரலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

  • 631
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 16.8.2026.

இன்று இரவு 08.14 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று காலை 07.07 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

இன்று காலை 09.30 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.

இன்று காலை 08.24 வரை வனிசை. பின்னர் இரவு 08.14 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று காலை 06.03 வரை மரண யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=618&dpx=2&t=1786862864

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

பகல் : 0145 முதல் 02.45 மணி வரை

மாலை: 03.15 முதல் 04.15 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 636

Good Morning...

  • 666
·
Added a post

கையில் காசு இல்லாமல், பள்ளிப்படிப்பும் பாதியிலேயே நின்னுபோன ஒரு உடுமலை மனிதர்… பின்னாடி தமிழ்நாடு முழுக்க அவரோட பாடல்கள் ஒலிக்க காரணமா இருந்தார்னு தெரியுமா?

அந்த மனிதர் தான் உடுமலை நாராயண கவி.

உடுமலைப்பேட்டை அருகே உள்ள பூளவாடி கிராமத்தில் பிறந்தவர்.

வசதியான குடும்பப் பின்னணி இல்ல.

பள்ளிப்படிப்பும் நான்காம் வகுப்போட நின்னுபோச்சு.

ஆனா படிப்பு நின்னாலும், அவரோட கற்றல் நிக்கல.

சின்ன வயசிலேயே தமிழ், இலக்கியம், நாடகம், பாடல்கள் என கலை மீது ஆர்வம் வளர்ந்திருக்கிறது.

அந்த காலத்துல நாடகக் குழுக்களோட சேர்ந்து ஊர் ஊரா சென்று நாடகங்கள்ல நடிச்சும், பாடல்கள் பாடியும் வந்திருக்கிறார்.

சுதந்திரப் போராட்டம் தீவிரமா நடந்த காலத்துல…

அவரோட கலை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் இல்ல.

தேசபக்தி உணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும் அவருடைய பாடல்கள் இருந்திருக்கிறது.

கதர் துணிகளை விற்றுக்கிட்டே, தேசபக்திப் பாடல்களை பாடி ஊர் ஊரா சென்றதாகவும் பதிவுகள் குறிப்பிடுகின்றன.

பின்னாடி இந்த நாடக உலகத்திலிருந்து அவருடைய பயணம் தமிழ் சினிமாவை நோக்கி நகர்ந்தது.

1940களில் தொடங்கிய அவருடைய திரைப்பயணத்தில்…

சமூக சிந்தனை, சாதி எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, உழைக்கும் மக்களின் வாழ்க்கை என பல விஷயங்களை தன்னுடைய பாடல்கள் மூலமாக சொல்லியிருக்கிறார்.

அதனால அவருடைய பாடல்கள் வெறும் சினிமா பாடல்கள் மட்டும் இல்ல.

அந்த காலத்து சமூகத்தோட குரலாகவும் இருந்திருக்கிறது.

ஒரு காலத்துல நான்காம் வகுப்புக்கு மேல படிக்க முடியாத நிலை…

கையில் காசு இல்லாத வாழ்க்கை…

நாடக மேடைகள்ல ஆரம்பித்த பயணம்…

அதிலிருந்து தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக உயர்ந்தது.

இதுதான் உடுமலை நாராயண கவியோட பயணம்.

அதனாலதான்…

நம்ம ஊர்ல பிறந்த ஒரு மனிதர் எவ்வளவு பெரிய உயரத்துக்கு போனார்னு தெரிஞ்சுக்கும்போது, அது நமக்கே ஒரு பெருமையா இருக்கு.

இந்த சுதந்திர தினத்துல அவரை நினைக்குறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு.

சுதந்திரப் போராட்ட காலத்துல அவருடைய பாடல்களும், கலைப் பயணமும் மக்களிடம் தேச உணர்வை கொண்டு செல்ல ஒரு வழியாக இருந்திருக்கிறது.

  • 747
  • 735
·
Added article

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து ஸ்ரேயா சரண் சமீபத்​தில் பேட்​டி​ அளித்​துள்ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: ரஜினி சாரை நேரில் பார்த்​த​போது பிரமிப்​படைந்​தேன். அவருடன் பணி​யாற்​று​வது அதுவே முதல் முறை என்​ப​தால், பதற்​றத்​தில் உறைந்​து​விடு​வேனோ என்று பயந்​தேன்.

அதனால் ஒத்​தி​கைக்கு முன்​பாக என்னை அவருக்கு அறி​முகப்​படுத்தி வைக்க ஷங்​கர் சாரிடம் கேட்​டுக் கொண்​டேன். அதைக் கேட்டு அவர் சிரித்​தார். அந்​தப் படம் குறித்த விவரங்​கள் அனைத்​தும் ரகசி​ய​மாகவே வைக்​கப்​பட்​டிருந்​த​தால் அதில் யார் இருக்​கிறார்​கள் அல்​லது என்ன நடக்​கிறது என்​பது பற்றி முதலில் எனக்கு எது​வும் தெரி​யாது.

அப்​போது ஷங்​கர் சார், ‘ரஜினி சாரை சந்​தி​யுங்​கள்’ என்று சொன்​னதைக் கேட்​டதும் ஆச்​சரியப்​பட்டேன். அந்த நேரத்​தில் ‘வாஜி வாஜி’ பாடலுக்​கான ஒத்​தி​கை​யும் படப்​பிடிப்​பும் நடந்து கொண்​டிருந்​தன. படப்​பிடிப்​பின்​போது, ரஜினி சார் என்னை இயல்​பாக உணர வைத்​தார்.

என் நெருங்​கிய நண்​பரைப் போலவே என்​னிடம் பழகி​னார். அதில் மிக​வும் சுவாரஸ்​ய​மான மனிதர்​களு​டன் பணி​யாற்​றும் வாய்ப்பு கிடைத்​தது என் அதிர்​ஷ்டம். ரஜினி சார் மிக மிக எளிமை​யானவர். படப்​பிடிப்​புத் தளத்​துக்கு வரும்​போது, எல்​லோரை​யும் சமமாகத்​தான் நடத்​து​வார்.

அவருடன் அந்​தப் படத்​தில் பணி​யாற்​றியது எனக்கு சிறந்த அனுபவ​மாக இருந்​தது. ஆனால் அவர் ஏற்​கெனவே சூப்​பர்ஸ்டார். ‘உன் வேலையை நேசி, தொடர்ந்து கற்​றுக்​கொண்டே இரு’ என்று அவர் எப்​போதும் என்​னிடம் சொல்​வார்.

மிக​வும் சிரமப்​பட்டு திரைப்​படக் கல்​லூரி​யில் சேர்ந்​த​தாக அவர் என்​னிடம் கூறி​னார். சாதாரண நிலை​யில் இருந்து இவ்​வளவு பெரிய சூப்​பர் ஸ்டா​ராக உயர்ந்த பிறகும் எளிமை​யாக​வும் பணி​வாக​வும் இருக்​கிறார் என்​ப​தைப் பார்ப்​பது ஊக்​கமளிப்​ப​தாக இருந்​தது. அவருக்​குச் சிறந்த நகைச்​சுவை உணர்​வும் உண்​டு, படப்​பிடிப்​புத் தளத்​தில் அவ்​வப்​போது நாடகத்​தன​மான செயல்​களை​யும் செய்து கொண்​டிருப்​பார்​. இவ்​வாறு ஸ்ரே​யா கூறி​னார்​.

  • 749
  • 743
  • 742
  • 742
  • 744
·
Added article

ஒரே ஒரு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகைகள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய திரையுலகிலும் அவ்வப்போது உருவாகி வருகிறார்கள். அந்த வகையில், அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தற்போது தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மங்களூரை பூர்வீகமாகக் கொண்ட கீர்த்தி ஷெட்டி, மும்பையில் வளர்ந்தவர். பள்ளிப் பருவத்திலேயே விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'சூப்பர் 30' திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து புச்சி பாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடித்த 'உப்பெனா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வெறும் 17 வயதில் 'பேபம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி ஷெட்டி, தனது நடிப்பாலும் கியூட் லுக்காலும் ரசிகர்களை கவர்ந்தார். 'உப்பெனா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கீர்த்தி ஷெட்டிக்கு தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

உப்பெனா' வெற்றிக்குப் பிறகு 'ஷ்யாம் சிங்கா ராய்', 'பங்கார்ராஜு', 'தி வாரியர்', 'கஸ்டடி' உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், இந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், தெலுங்கில் அவரது மார்க்கெட் சற்று பின்னடைவை சந்தித்தது.

இதையடுத்து தமிழ் மற்றும் மலையாள சினிமா பக்கம் கவனம் செலுத்திய கீர்த்தி ஷெட்டி, 'ஏஆர்எம்' திரைப்படத்தின் மூலம் மலையாளத்திலும், 'வா வாத்தியார்' படத்தின் மூலம் தமிழிலும் தனது பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுடன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்திலும் நடித்தார்.

தற்போது 'ஜினி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி, தெலுங்கிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். இதன் மூலம் தனது சினிமா பயணத்தை மீண்டும் வேகப்படுத்தும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், படங்களில் பிஸியாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கருப்பு நிற உடையில் விதவிதமான போஸ்களில் கீர்த்தி ஷெட்டி கொடுத்துள்ள இந்த போட்டோஸ், இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக அவரது ஸ்டைலிஷ் லுக் மற்றும் கிளாமர் அப்பீல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சினிமாவில் மீண்டும் பிஸியாகி வரும் கீர்த்தி ஷெட்டிக்கு மத்தியில், இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

  • 752
·
Added article

தமிழ் சின்னத்திரையில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன். கும்பகோணத்தில் பிறந்த இவர், பொன்மகள் வந்தாள், வாணி ராணி, அழகி, வள்ளி, அழகு, வேலைக்காரன் உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை வென்றவர்.

சீரியல்கள் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் தடம் பதித்த இவர், விமல், மிர்ச்சி சிவா நடித்த கலகலப்பு படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து தீய வேலை செய்யணும் குமாரு, வெள்ளக்கார துரை, முத்தின கத்திரிக்காய், ஸ்கெட்ச், நாடோடிகள்'போன்ற பல ஹிட் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகை அர்ச்சனாவிற்கு நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ரீல்ஸ்கள் மற்றும் கவர்ச்சியான போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

அவர் வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படங்களில், கருப்பும் சிவப்புமான பாரம்பரியப் புடவையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். குறிப்பாக, கையில் மல்லிகைப் பூவை வைத்தபடி, கண்களை மல்லிகைப் பூவால் கட்டிக்கொண்டு நனைந்த நிலையில் அவர் கொடுத்துள்ள கிளாமர் போஸ்கள் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன. இந்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தற்போது நடிகை அர்ச்சனாவிற்கு 41 வயதாகிறது. ஆனால், இந்த வயதிலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு, இணையத்தில் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இவர் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருவதால் வரும் விமர்சனங்களை கண்டுகொள்ளாத இவர், நான் கவர்ச்சியாக போட்டோ போடுவது என்னோட விருப்பம். பிடித்திருந்தால் பாருங்கள்.. பிடிக்கவில்லை என்றால் ஸ்க்ரோல் பண்ணிட்டு போங்க, அதற்காக கமெண்ட் பாக்ஸில் வந்து தவறான கமெண்ட்ஸ் போடுவது சரியில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது அவர் மல்லிப்பூவுடன் சொட்ட சொட்ட நனைத்து இருக்கும் ரீல்ஸுக்கு மலைபோல் லைக்குகள் குவிந்து வருகின்றன.

  • 754
·
Added a news

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்களின் உரிமையாளர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ வான்கூவர் பகுதியில் உள்ள அந்த நகரத்தில், கடந்த மே 20 ஆம் திகதி பெண் ஒருவர் நாய்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அவரது காயங்களின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அவை மிகவும் "கடுமையானவை மற்றும் வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடியவை" என்று விவரிக்கப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு முன்பே, அந்த நாய்கள் மிகவும் "ஆக்ரோஷமானவை" என நகர அதிகாரிகள் ஏற்கனவே வகைப்படுத்தியிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, அந்த நாய்களுக்கு வாய்மூடி கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும், இச்சம்பவத்தின் போது நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்கப்பட்டிருக்கவில்லை என பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து, கவனக்குறைவாகச் செயல்பட்டு உடல்காயத்தை ஏற்படுத்தியதற்காக நாய் உரிமையாளர் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்ய பிரிட்டிஷ் கொலம்பியா அரசு வழக்குரைஞர் சேவை ஒப்புதல் அளித்துள்ளது.

  • 749
·
Added a news

 கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி அதிகாலை, காமிஷ்னி தனது 10 மற்றும் 17 வயதுடைய இரு மகன்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

பின்னர், 'நெயில் கன்' ஆணி அடிக்கும் கருவி மூலம் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார். கடந்த ஜூன் 24 அன்று இவர் மீதான முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அவை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கனடாவின் சட்டப்படி முதல் நிலை கொலைக் குற்றவாளிக்கு 25 ஆண்டுகளுக்குப் பிணை பெற முடியாது.

விவாகரத்து செய்த தனது மனைவியைப் பழிவாங்குவதற்காகவும், அவருக்குத் தண்டனை அளிப்பதற்காகவுமே காமிஷ்னி இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

கொலை செய்வதற்கு முன்பாக, "நான் அனைவரையும் கொன்றுவிட்டேன், பொலிஸாரையும் ஆம்புலன்ஸையும் வரச் சொல்" என்று மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி மற்றும் கடிதங்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

எனினும், நீதிமன்றத்தில் பேசிய காமிஷ்னி, "எனக்கு அன்றைய தினம் நடந்தது எதுவும் நினைவில் இல்லை, என் குழந்தைகளைக் கொல்லும் திட்டம் எனக்கு இருக்கவில்லை" என்று வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி டேரல் ஸ்டீபன்சன், "உம்மீது மேலும் வார்த்தைகளை வீணடிக்க விரும்பவில்லை. நீர் ஒரு திட்டமிட்டு அதைச் செயல்படுத்தியுள்ளீர், அதற்கான தண்டனையை அனுபவிக்கும் நேரம் இது" என்று கூறி தண்டனையை அறிவித்தார்.

  • 750
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: சவாலான காரியங்களை சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர். வியாபாரத்தில் போட்டி குறையும். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

ரிஷபம்: பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்து பேசுவார். புதிய நண்பர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

மிதுனம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். வியா பாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.

கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள்.

துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி சொந்தங்களுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் முடிவுக்கு வரும். மனைவி, தாயாரின் உடல் நிலை சீராகும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

தனுசு: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக வங்கி கடனுதவி பெற முயற்சிப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

மகரம்: முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நற்செய்தி உண்டு. அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்கவும். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்.

கும்பம்: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். தாய்வழி உறவினர்கள், பழைய நண்பர்கள் உதவுவர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

  • 807
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை 15.8.2026

இன்று இரவு 08.35 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று காலை 07.01 வரை பூரம். பின்னர் உத்திரம்.

இன்று காலை 11.00 வரை சிவம். பின்னர் சித்தம்.

இன்று காலை 08.59 வரை தைத்தூலம். பின்னர் இரவு 08.35 வரை கரசை. பிறகு வனிசை.

image_transcoder.php?o=sys_images_editor&h=617&dpx=2&t=1786775481

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 809