·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 1021
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added article

🌹வெண்ணிற ஆடை’ தான் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் முதல் படம். அதுமட்டுமின்றி நடிகையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கும் முதல் படம். திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த். ‘இந்து தமிழ் திசை’ இணையதள சேனலுக்கு ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதாவை நான் அம்முன்னுதான் கூப்பிடுவேன். நல்ல நண்பர்கள் நாங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

🌹ஸ்ரீகாந்த் என்று திரையுலகிற்காக பெயர் மாற்றம் செய்திருந்தாலும் ‘வெங்கி’ என்றும் ‘வெங்கு’ என்றும் பாலசந்தர், ஸ்ரீதர், வாலி, நாகேஷ் முதலான திரைப்பிரபலங்கள் அழைப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

🌹ஸ்ரீகாந்திற்கு ஒரே மகள். மகளை பள்ளிக்கு அழைத்து வந்துவிடும் போது, ‘ஸ்ரீகாந்த் ஸ்ரீகாந்த்’ என்று பள்ளியில் இருந்து குரல் கேட்கும். மாணவிகள் கலாட்டா செய்வார்களாம். பின்னாளில், அந்த மாணவிகளில் ஒருவர், ஸ்ரீகாந்தின் நாயகியாக பல படங்களில் நடித்தார். அந்த நடிகை ஸ்ரீப்ரியா. ‘மிகச் சிறந்த நடிகர் ஸ்ரீகாந்த். மேலும் பண்பும் அன்பும் கொண்ட மனிதர்’ என நடிகை ஸ்ரீப்ரியா நெகிழ்ந்து தெரிவிக்கிறார்.

🌹ஜெயலலிதாவின் முதல் ஹீரோ என்பது போல், ஸ்ரீகாந்தின் வாழ்வில் இன்னொரு அத்தியாயமாக

🌹‘தங்கப்பதக்கம்’ திகழ்ந்தது. ஜெகன் எனும் கேரக்டரில் சிவாஜிக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருந்தார். இவரின் நடை, உடை, பாவனைகளும் வசன உச்சரிப்புகளும் எவர் சாயலுமில்லாமல் புதுமாதிரியாக இருந்தது என்பதும் இவரின் வெற்றிக்கு முக்கியக் காரணம். மகனாக இதில் மிரட்டியிருப்பார்.

🌹‘ராஜபார்ட் ரங்கதுரை’யில் சிவாஜியின் தம்பியாக அசத்தியிருப்பார்.

‘🌹ஞானஒளி’யிலும் அசத்தியிருப்பார். ஹீரோவாக நடித்த ‘ராஜநாகம்’ இவரின் நடிப்புத் திறமையை இன்னும் வெளிக்கொண்டு வந்தது. வில்லனாக, கொஞ்சம் ஆவேசக்காரனாக நடித்து மிரட்டினாலும்

🌹 ‘பாமாவிஜயம்’ படத்தில் நடிகை ராஜஸ்ரீயின் உதவியாளராக கலகலப்பாக நடித்திருப்பார். அதேபோல், கிட்டுமாமா, பட்டுமாமி எனும் கேரக்டர் பெயர்கள் இன்று வரைக்கும் வெகு பிரபலம். ‘

🌹எதிர்நீச்சல்’ படத்தில் கிட்டுமாமாவாக ஸ்ரீகாந்த், பட்டுமாமியாக செளகார் ஜானகியும் காமெடியில் கலக்கி சிரிக்கவைத்திருப்பார்கள்.

🌹செளத்ரி கேரக்டர் இன்று வரை பேசப்படுவதற்கு சிவாஜியின் நடிப்பும் ஸ்ரீகாந்த் எதிர்ப்பதும் காரணம். அதேபோல், அதுவரை வில்லத்தனம் செய்துகொண்டிருந்த ரஜினி, நாயகனாக முதன் முதலில் நடித்த படமான

🌹 ‘பைரவி’யில் வில்லனாக அசத்தியிருப்பார் ஸ்ரீகாந்த்.

  • 25
·
Added article

🌹கோவை சொந்த ஊர் அதனால் என்னவோ சொந்த ஊரை சார்ந்த சத்தியராஜ்.கவுண்டமணி.மணிவண்ணன்.ரகுவரன்.நிழல்கள் ரவி.கோவை சரளா.. உள்ளிட்ட பலரையும் நடிக்க வைத்தார்.. மிகப்பெரிய வெற்றி படங்களை தந்தவர்..*

🌹இவரைப் பற்றி தெரிஞ்ச பல இருந்தும் தெரியாது பலவும் இருக்கிறது அதில் சில

🌹பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது*.

🌹இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்.*

🌹பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்*

🌹இளையராஜாவிற்கு பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கு கதை சொல்லத் தொடங்கினார், சுந்தர்ராஜன். "கதையை சுருக்கமாக, மையக் கருத்துடன் சொல்ல வேண்டும். எவ்வளவு நேரம் ஆகும்?'' என்று இளையராஜா கேட்டார். "அரைமணி நேரம் போதும்'' என்று சொன்னார், சுந்தர்ராஜன். கதையை அவர் சொல்லச்சொல்ல, அந்த இசை மேதை கதையில் ஐக்கியமாகி, 2 மணி நேரம் கதை கேட்டார். கதையை கேட்டு முடித்ததும், "இந்தப் படத்திற்கு நான் இசை அமைக்கிறேன். நாளை காலை வி.ஜி.பி.யில் பாடல்களை கம்போஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்'' என்று இளையராஜா கூறினார். அவர் கூறியபடி, மறுநாள் இசை அமைக்க 12மணி நேரத்தில் 30 டியூன்கள் போட்டார், இளையராஜா.*

🌹இதில், காட்சி அமைப்புக்கு ஏற்றபடி, உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறினார். "நான் காட்சிகளை விளக்குகிறேன். அதற்கேற்ற டியூன்களை நீங்களே தீர்மானியுங்கள்'' என்று சுந்தர்ராஜன் சொல்ல, அப்படி தீர்மானித்ததுதான் பயணங்கள் முடிவதில்லை படப்பாடல்கள்*

🌹பயணங்கள் முடிவதில்லை'' படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் அறிமுகப்படுத்த எண்ணினோம். அந்த சமயத்தில், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் வெளிவந்திருந்தது. அதில் மோகனின் தோற்றமும், நடிப்பும் எனக்குப் பிடித்திருந்தன. அவரை கதாநாயகனாகப் போட தயாரிப்பாளரும், சுந்தர்ராஜனும் தீர்மானித்தர்கள்.*

🌹அவரை அணுகியபோது, "கதையைக் கேட்டபிறகு, என் முடிவை சொல்கிறேன்'' என்றார்.கதையைக் கேட்டதும், "கதை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கால்ஷீட் தருகிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இந்த சமயத்தில், "மஞ்சவிரிச்ச பூக்கள்'' என்ற மலையாளப்படம் சென்னையில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் நடித்த பூர்ணிமாவை (பின்னாளில் பூர்ணிமா பாக்கியராஜ்) கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்கள்.ரூ.23 லட்சம் செலவில் 4 மாதங்களில் பயன்பாடுகள் முடிவதில்லை தயாரானது 26.2.1982ல் படம் ரிலீஸ் ஆகி.எல்லா இடத்திலும் நூறு நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்டது*

🌹தமிழ் சினிமாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிது கிடையாது. கடின உழைப்பு இருந்தால் மட்டுமே மிகப்பெரிய வெற்றிகளை பெற முடியும் என்பதற்கு தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய கலைஞர்கள் மிகப்பெரிய உதாரணமாகும்*.

🌹அப்படி தமிழ் சினிமாவின் அதிக அளவிலான வெள்ளி விழா படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர்தான் ஆர்.சுந்தர்ராஜன். இப்போது இருக்கக்கூடிய நடிகர்களும் திறமைகளோடு இருக்கின்றனர் ஆனால். தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து 60, 80 களில் அனைவரும் அனைத்து விதமான கலவைகளையும் கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.*

🌹இயக்குனராக மட்டுமல்லாமல் சுந்தர்ராஜன் எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், சிறந்த நடிகர், என பன்முகத் திறமைகளை கொண்டவர். பயணங்கள் முடிவதில்லை, மெல்ல திறந்தது கதவு, வைதேகி காத்திருந்தால், அம்மன் கோயில் கிழக்காலே என பல்வேறு விதமான வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்*.

🌹தமிழ் சினிமாவில் 1980 காலகட்டங்களில் மிகவும் முன்னணி நடிகராக மோகன் இருந்து வந்தார். பாடல்களை வைத்து மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்து விட்டார் மோகன் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது இளையராஜாவின் இசை.*

🌹அப்படி உச்சத்தில் இருந்த மோகனை வைத்து சுந்தர்ராஜன் பல படங்களை இயக்கியுள்ளார். பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக தடம் பதித்தார் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்ற 175 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி விழா கொண்டாடியது இந்த திரைப்படம்*.

🌹குங்குமச்சிமிழ், நான் பாடும் பாடல், சரணாலயம், மெல்ல திறந்தது கதவு என பல வெள்ளிவிழா திரைப்படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதற்குப் பிறகு விஜயகாந்த் பக்கம் தனது திசையை திருப்பினார் சுந்தர்ராஜன்*.

🌹மோகனைப் போலவே ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு விதமான வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விஜயகாந்த் திகழ்ந்து வந்தார். வைதேகி காத்திருந்தாள் என்ற கதையை கையில் வைத்துக் கொண்டு பல்வேறு சிக்கலுக்கு பிறகு விஜயகாந்த் தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களை ஒப்புக்கொள்ள வைத்து இந்த திரைப்படத்தை எடுத்து மிகப்பெரிய வெள்ளிவிழா கொடுத்தார் சுந்தர்ராஜன்*

🌹இதுவரை பார்க்காத விஜயகாந்தை வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் மிகவும் அமைதியான கதாபாத்திரமாக மக்கள் கண்டு களித்து மிகப்பெரிய வசூல் சாதனையை கொடுத்தனர். இது ஒரு புறம் இருக்க வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் உருவானது குறித்து மிகப்பெரிய கதை இருப்பதாக கூறப்படுகிறது.*

🌹இளையராஜா தன்னிடம் ஏழு டியுன்கள் இருப்பதாகவும் அதற்காக ஒரு கதை யாராவது எழுத முடியுமா என கேட்டுள்ளார். ஏன் முடியாது மொத்த பாடல்களையும் அந்த படத்திலேயே வைத்து விடலாம் என சுந்தர்ராஜன் எழுதிய திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தாள் எனக் கூறப்படுகிறது*.

🌹அடுத்த திரைப்படம் அம்மன் கோயில் கிழக்காலே. வைதேகி காத்திருந்தாள் வெற்றிக்கு பிறகு இருவரும் கூட்டணி சேர்ந்து உருவான திரைப்படம் இது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை செய்தது. விஜயகாந்துக்கு சிறந்த நடிகர் என விருது கிடைத்தது.*

🌹இந்த அனைத்து திரைப்படத்திற்கும் இசையமைத்தது இளையராஜா தான் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. மிகப்பெரிய இயக்குனராக வெற்றி பெற்ற பிறகும் நடிப்பில் இறங்கினார் சுந்தர்ராஜன். துணை கதாபாத்திரங்களாக நடித்தாலும் தான் இருக்கும் இடத்தை சரியாக நிரப்பி விடுவார் ஏனென்றால் இயக்குனர் அல்லவா*.

🌹இயக்குனராக இருக்கும் பலர் கேமரா முன்பு நின்று நடிப்பது கிடையாது ஒரு சிலர் மட்டுமே தங்களது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில் அனைத்து விதமான கலைகளிலும் திறமை பெற்றுவராக விளங்கி வருகிறார் சுந்தர்ராஜன்*.

தற்போது சின்னத்திரையிலும் நடித்து கலையில் பயணித்துக் கொண்டே இருக்கின்றார். சுந்தர்ராஜன்

  • 26

image_transcoder.php?o=sys_images_editor&h=615&dpx=2&t=1786601407

Answer :

Letter E = WEEK & YEAR

    • 113
    ·
    Added a post

    இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

    மேஷம்: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி தடபுடலாக நடக்கும். பால்ய நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.

    ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த பணிகள் முடியும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர். நல்ல லாபம் கிட்டும்.

    மிதுனம்: நீண்ட நாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவு கிட்டும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு.

    கடகம்: திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். ஓரளவு லாபமுண்டு. உத்தியோகம் சிறக்கும்.

    சிம்மம்: பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.

    கன்னி: எதார்த்தமான பேச்சால் தடைபட்ட பணிகளை முடிப்பீர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

    துலாம்: புதுப்புது எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. மனைவி, தாயாரின் உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் திருப்தி தருவதாக அமையும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

    விருச்சிகம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக செயலபடுவர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

    தனுசு: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு உண்டு. பழைய கடன்களை பைசல் செய்வீர். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர்கள் மதிப்பர்.

    மகரம்: தாய்வழி உறவினர்களால் மனக்கசப்புகள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்கவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரப் போட்டி இருக்கும். பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

    கும்பம்: பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள். வீட்டில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க பணியாட்கள் வருவர். புதிய யுக்திகளை கையாள்வீர்.

    மீனம்: குடும்பத்தில் நல்லது நடக்கும். பணவரவு உண்டு. குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். பேச்சில் உற்சாகம் பிறக்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். இழுபறியாக இருந்த பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.

    • 127
    ·
    Added a post

    ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை 13.8.2026.

    இன்று அதிகாலை 12.16 வரை அமாவாசை. பின்னர் இரவு 10.38 வரை பிரதமை. பிறகு துவிதியை.

    இன்று காலை 08.06 வரை ஆயில்யம். பின்னர் மகம்.

    இன்று மாலை 03.00 வரை வரீயான். பின்னர் பரிகம்.

    இன்று அதிகாலை 12.16 வரை நாகவம். பின்னர் காலை 11.27 வரை கிமிஷ்துக்கினம். பின்பு இரவு 10.38 வரை பவம். பிறகு பாலவம்.

    இன்று காலை 08.06 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்

    image_transcoder.php?o=sys_images_editor&h=614&dpx=2&t=1786595468

    நல்ல நேரம்:

    காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

    பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

    மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

    • 129

    Good Morning...

    • 128
    • 205
    • 205
    • 205
    • 204
    • 203
    ·
    Added article

    ராஷ்மிகாவை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் அவருக்கு ஒரு புதிய அனுபவம்தான். சினிமாவில் பல வெற்றிகளை பார்த்துவிட்டாலும், ஒரு புதிய படத்தில் நடிக்கத் தொடங்கும்போது தனக்குள் ஒருவித பதற்றம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், படம் வெளியாகும் நேரத்திலும் அந்த படபடப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

    ஒரு திரைப்படத்தில் நடிப்பது என்பது தன்னுடைய ஒரு பகுதியை ரசிகர்களிடம் வெளிப்படுத்துவது போன்றது என்றும், அதனால்தான் ஒவ்வொரு படமும் தனக்கு ஸ்பெஷலாக இருப்பதாகவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பயத்தை தான் எதிர்மறையான விஷயமாக பார்க்கவில்லை என்றும், அந்த பதற்றமே தன்னை இன்னும் சிறப்பாக பணியாற்ற வைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

    ராஷ்மிகா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். இருப்பினும், ரசிகர்களுக்காக ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறாரோ, அதேபோல்தான் சமூக வலைதளங்களிலும் இருக்க முயற்சி செய்வதாக கூறியுள்ளார்.

    நண்பர்களுடன் இருக்கும் தருணங்கள், பயணங்கள், உடற்பயிற்சி உள்ளிட்ட தனது வாழ்க்கையின் பல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது தனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். விமர்சனங்கள் வருவது இயல்புதான் என்றும், அனைவருடைய கருத்தையும் தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ள ராஷ்மிகா, அதற்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை மட்டும் தன்னால் முடிவு செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

    • 212
    ·
    Added article

    பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தின் மாரியம்மா கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தவர் நடிகை துஷாரா விஜயன். அந்த படத்தை தொடர்ந்து, தனுஷூடன் ராயன், ரஜினிகாந்துடன் வேட்டையன், விக்ரமுடன் வீர தீர சூரன் என முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார். தற்போது துஷாரா விஜய் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது காதலன் மற்றும் தனது எதிர்காலக் கனவுகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

    அதில், நான் இரண்டு வருடமாக ஒருவரை காதலித்து வருகிறேன், அவரை முதல் முதலில் துபாயில் தான் பார்த்தேன். நாங்கள் இருவரும் இளையராஜா சாருடைய இசை மூலமாகத்தான் connect ஆனோம். ஆனால், அந்த முதல் connection-க்கு பிறகு நிறைய விஷயங்கள் தொடர்ந்து வந்தன. இன்று நான் அவரை இவ்வளவு உறுதியாக நம்புகிறேன் என்றால், அதற்குப் பின்னால் நிறைய காரணங்கள் இருக்கிறது. அவர் என்னுடைய எல்லா விஷயங்களையும் பொறுத்துக் கொள்கிறார். நானே இப்படி எல்லாத்தையும் பொறுத்துக்கொள்கிறார் என அவரை நினைத்து பாவப் பட்டதும் உண்டு, அவர் யார் என்பதை அதற்கான நேரம் வரும் போது சொல்கிறேன் என தனது காதலன் பற்றி பேசி உள்ளார்.

    தொடர்ந்து பேசிய துஷாரா, பிரியங்கா சோப்ராவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் மீது ஏன் எனக்கு இவ்வளவு பிரியம் என்று எனக்கே தெரியாது. ஆனால், ஒரு பெண்ணாக அவர் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கை என்னை ரொம்பவே ஈர்த்துள்ளது. எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து ஒரு நல்ல ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதேபோல், என்னை ஒரு நடிகையாக சர்வதேச அளவில் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் என் கனவுகளில் ஒன்று.

    7 வருடங்களுக்கு முன்பு, நான் இப்போது இருக்கும் இந்த இடத்தில் இருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஆனால், இன்னும் 7 வருடங்கள் கழித்து நான் எங்கிருப்பேன் என்பது எனக்குத் தெளிவாக தெரியும். அந்த அளவிற்கு என் கனவுகள் மற்றும் பயணிக்கும் பாதை மீது எனக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. ஆசைப்படக்கூட தெரியாத வயதில், நான் நினைத்துக் கூட பார்க்காத நல்ல விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளன. பெரிய இலக்குகளை நிர்ணயித்து, அதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, அதற்கான முயற்சிகளையும் நம்மால் தொடர்ந்து செய்ய முடியும். சரியான நேரத்தில் வாழ்க்கையும் நமக்கான வாய்ப்பைத் தரும் என நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்

    வாழ்க்கையில் இருக்கும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ரசித்து வாழவே எனக்குப் பிடிக்கும். 'Carpe Diem' என்ற வார்த்தையை நான் தீவிரமாக நம்புகிறேன். அதை டாட்டூவும் போட்டு இருக்கிறேன். அதாவது, கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் அந்த நேரத்திலேயே ரசித்து அனுபவித்து வாழ வேண்டும் என்பதுதான் என் கொள்கை. நான் எங்க போனாலும் அந்த இடத்தை அப்போதே ரசிப்பேன். அதை விட்டுவிட்டு வேறெதையோ யோசித்துக் கொண்டிருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது.

    • 208
    ·
    Added a news

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள 'கல்டஸ்' ஏரியில் துடுப்புப் படகில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கி மாயமான 13 வயது சிறுமியின் உடலை காவல்துறையினர் சடலமாக மீட்டுள்ளனர்.

    காவல்துறையின் நீருக்கடியிலான மீட்புக் குழுவினர் திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் ஏரியிலிருந்து அச்சிறுமியின் உடலை கண்டெடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

    கடந்த சனிக்கிழமை பிற்பகலில் அச்சிறுமி ஏரியில் துடுப்புப் படகில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவருக்கு எதிர்பாராதவிதமாக திடீர் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டு நீரில் தவறி விழுந்துள்ளார்.

    விசாரணையில், நீரில் மூழ்கிய போது அந்தச் சிறுமி உயிர் காக்கும் கவசச் சட்டையை அணிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    சிறுமியின் உடல் குறித்த பிரதேப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

    சிறுமி உயிரிழந்த செய்தி எங்களை மிகவும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    • 214
    ·
    Added a news

    கனடாவுக்கான அமெரிக்க தூதரை வெளியேற்றக் கோரும் புகார் மனுவில் சுமார் 30,000 கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர். தற்போது கனடாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பு வகிப்பவர், பீற் ஹோக்ஸ்ட்ரா ( Pete Hoekstra).

    இந்நிலையில், பீற் ஹோக்ஸ்ட்ராவை விரும்பத்தகாத நபராக அறிவிக்கவேண்டும் (Persona non grata declaration) என்றும், கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவியிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்றும் கோரும் புகார் மனு ஒன்று கனடாவில் முன்வைக்கப்பட்டுள்ளது. 

    அந்த புகார் மனுவில், 29,000க்கும் அதிகமான கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

    கனடா - அமெரிக்கா தூதரக உறவைச் சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிட்டதாகவும், தூதரக நெறிமுறைகளுக்கு முரணாகக் கனேடிய அரசியல் விடயங்களில் மீண்டும் மீண்டும் தலையிட்டதாகவும் ஹோக்ஸ்ட்ரா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், கனடா விவகாரங்களில் அமெரிக்காவின் தூதரகத் தலையீட்டை மறுஆய்வு செய்ய, ஒரு நாடாளுமன்றக் குழுவை அமைக்க லிபரல் அரசாங்கம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைத்துக்கொள்வது குறித்த டிரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களை ஹோக்ஸ்ட்ரா இயல்பான விடயமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அந்த மனு கூறுகிறது.

    அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ள Persona non grata declaration என்பது என்னவென்றால், 1961ஆம் ஆண்டு அறிமுகமான தூதரக உறவுகள் தொடர்பிலான வியன்னா ஒப்பந்தத்தின் பிரிவு 9இன்படி, தனது நாட்டுக்கான மற்றொரு நாட்டின் தூதரையோ அல்லது ஒரு வெளிநாட்டவரையோ, ஒரு நாடு, அவருக்கு இங்கு வரவேற்பில்லை என பிரகடனம் செய்யலாம்.

    அப்படி பிரகடனம் செய்யப்பட்டவருக்கு அதற்குப் பின் ஒரு தூதருக்கான பாதுகாப்பு வழங்கப்படாது என்பதுடன், அவரை, அந்த நபரின் சொந்த நாடு திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 214
    ·
    Added a news

    கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250-ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 10ஆம் திகதி 7.4 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

    நிலநடுக்கத்தினால் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

    சில கட்டடங்கள் முற்றாக இடிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 216
    ·
    Added a post

    இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

    மேஷம்: பிரபலங்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் பங்கு தாரரின் ஆதரவு கிடைக்கும். புது முதலீடு செய்வீர். அலுவலகத்தில் திருப்திகரமான சூழல் உருவாகும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

    ரிஷபம்: அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

    மிதுனம்: தடைபட்ட பணிகளை முடிப்பீர். பணப் புழக்கம் அதிகரிக்கும். பூர்வீக வீடு, மனை ஆகியவற்றை விற்க முயற்சிப்பீர். உடன்பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

    கடகம்: முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர் களுடன் வாக்குவாதம் வந்து போகும். அக்கம் பக்கத்தினர் தக்க சமயத்தில் உதவி புரிவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க போராடுவீர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

    சிம்மம்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பேச்சில் கவனம் தேவை. பணவரவு திருப்தி தருவதாக அமையும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாவர்.

    கன்னி: குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மற்றவர்களை நம்பி சில வேலைகளை ஒப்படைத்தும் பயனில்லாமல் போனதால் நீங்களே முடிப்பீர்கள். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

    துலாம்: பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு உண்டு. கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

    விருச்சிகம்: பணவரவு திருப்தி தரும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்த உறவினர், நண்பர்களின் மனம் மாறும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். சக ஊழியர்கள் மதிப்பர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபமுண்டு.

    தனுசு: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். மனைவி, தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சிலருக்கு புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் பணிச் சுமை இருக்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

    மகரம்: எதிர்பார்த்து காத்திருந்த பணம் வந்து சேரும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். தாய்வழி உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர். பிள்ளைகளால் நிம்மதியுண்டு.வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

    கும்பம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

    மீனம்: அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். தாயாரின் மருத்துவ செலவு குறையும். பூர்வீக வீட்டை விற்பதற்கு முயற்சிப்பீர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர். அலுவலகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

    • 249
    ·
    Added a post

    ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 27 ஆம் தேதி புதன்கிழமை 12.8.2026.

    இன்று அதிகாலை 02.10 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

     இன்று காலை 09.10 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.

    இன்று மாலை 05.27 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.

    இன்று அதிகாலை 02.10 வரை சகுனி. பின்னர் பிற்பகல் 01.13 வரை சதுஸ்பாதம். பிறகு நாகவம்.

    இன்று முழுவதும் சித்த யோகம்.

    image_transcoder.php?o=sys_images_editor&h=613&dpx=2&t=1786522381

    நல்ல நேரம்:

    காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

    காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

    மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

    மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

    • 259

    Good Morning...

    • 257
    ·
    Added a post

    மேஷம்: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்துக் காட்டுவீர். எதிர்பாராத பணம் வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும்.

    ரிஷபம்: அடிப்படை வசதி பெருகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். ஊர் விசேஷங்களில் மரியாதை கிடைக்கும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

    மிதுனம்: சவாலான விஷயங்களை சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். செல்வம், செல்வாக்கு கூடும். போட்டிகள், விவாதங்களில் வெற்றி கிட்டும். முக்கிய பிரமுகர்களால் பயனடைவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

    கடகம்: மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று தொடர்ச்சியாக அலைச்சல் இருக்கும். சகோதரர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

    சிம்மம்: விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். எதிரிகள் பணிந்து போவர். வியாபாரரீதியான பயணம் திருப்தி தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

    கன்னி: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வாகனப்பழுதை சீர் செய்வீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்ப்பீர்.

    துலாம்: பழைய நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். புதிய சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

    விருச்சிகம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை உணர்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

    தனுசு: பழைய சொத்துப் பிரச்சினைகளை இப்போது கையிலெடுக்காதீர். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிலும் கவனமாக இருப்பது நல்லது. நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள். வியாபாரம் முன்னேற்றம் காண்பீர்.

    மகரம்: நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். தாயாருடன் விவாதம் வந்துப் போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர். மனக் குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் யாருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். உத்தியோகம் சிறக்கும்.

    கும்பம்: எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிட்டும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான புது திட்டங்களை தீட்டுவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்புயரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும்.

    மீனம்: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் விலகும்.

    • 385
    ·
    Added a post

    ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 11.8.2026

    இன்று அதிகாலை 03.40 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

    இன்று காலை 10.30 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

    இன்று இரவு 08.08 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.

    இன்று அதிகாலை 03.40 வரை வனிசை. பின்னர் மாலை 03.00 வரை பத்திரை. பின்பு சகுனி.

    இன்று முழுவதும் சித்த யோகம்.

    image_transcoder.php?o=sys_images_editor&h=612&dpx=2&t=1786448038

    நல்ல நேரம்:

    காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

    காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

    மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

    இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

    • 386

    Good Morning....

    • 377
    • 377
    • 511