- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு, தனது எதார்த்தமான பேச்சாலும் குணத்தாலும் பலருடைய மனங்களை வென்றவர் நடிகை திவ்யா கணேஷ். எப்போதும் குடும்பப் பாங்கான வேடங்களில் வலம் வந்த இவர், தற்போது முன்னணி ஓடிடி தளமான 'ஆஹா' டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ள 'Sshhh 3' என்ற அடல்ட் த்ரில்லர் வெப் தொடரில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு, தனது எதார்த்தமான பேச்சாலும் குணத்தாலும் பலருடைய மனங்களை வென்றவர் நடிகை திவ்யா கணேஷ். எப்போதும் குடும்பப் பாங்கான வேடங்களில் வலம் வந்த இவர், தற்போது முன்னணி ஓடிடி தளமான 'ஆஹா' டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ள 'Sshhh 3' என்ற அடல்ட் த்ரில்லர் வெப் தொடரில் நடித்துள்ளார்.
நெட்டிசன்கள் ஒருபக்கம் ட்ரோல் செய்தாலும், இந்தத் தொடரின் ப்ரோமோஷனுக்காக திவ்யா கணேஷ் பங்கேற்ற ''Wrong Answer Only'' என்ற விநோதமான நேர்காணல் வீடியோ தற்பொழுது பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அதில் கேட்கப்பட்ட சில விவகாரமான கேள்விகளுக்கு அவர் திவ்யா அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
கேள்வி: நீங்க சிங்கிளா?
திவ்யா பதில்: யார் சொன்னா நான் சிங்கிள்னு? எனக்குன்னு ஆள் இருக்காரு!
கேள்வி: படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
திவ்யா பதில்: அந்த மாதிரி சீன் எடுக்கும் போதே எனக்கு செம ஜாலியா இருக்கும்.. அப்படியே வைப் ஆகிடுவேன் என நச்சுனு பதில் அளித்தார். அதோடு மட்டுமில்லாமல் யாராவது உங்களிடம் கடலை போட்டால் என்ன செய்வீர்கள் என்பது போன்ற இன்னும் சில கிளுகிளுப்பான கேள்விகளுக்கும் அவர் நேர்காணலில் கலகலப்பாகப் பதிலளித்துள்ளார். பிக் பாஸ் இமேஜை உடைத்து, முற்றிலும் புதிய அவதாரத்தில் படு கவர்ச்சியாக களம் இறங்கியுள்ள திவ்யா கணேஷின் இந்த புதிய ட்ரான்ஸ்ஃபார்மேஷன் தான் இப்போது சோசியல் மீடியாவின் பேசு பொருளாகி உள்ளது.
திரைபடக் கலை, ஒளிப்படக் கலை, இசை, எழுத்து எனப் பன்முகத் திறமை வாய்ந்தவர் இயக்குநர் செழியன். தனது ‘த பிலிம் ஸ்கூல்’ மூலம் சுயாதீனத் திரைப்படங்களை எடுப்பது தொடர்பாக, திட்டவட்டமான பயிற்சியை உருவாக்கி, அதற்கான மாணவர்களைத் திரட்டி தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தார். நிறுவனங்கள் செய்யவேண்டிய பணியை தனிநபராகச் செய்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த செழியன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார்.
நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரான, ஒளிப்பதிவாளர் செழியனின் உடல் நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திரைத்துறையினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் போரூர் மின் மயானத்தில் நேற்று மாலை அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மறைந்த செழியனுக்கு பிரேமா என்ற மனைவி, அஜிதா என்ற மகள் உள்ளனர்.
கனடாவின் சாஸ்காச்சுவான் மாகாணச் சிறைச்சாலைகளில் இருந்து, நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக 5 கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்துப் பிழைகள், தகவல் தொடர்பு குறைபாடுகள், ஆவணக் கோளாறுகள் அல்லது தரவுச் செயலாக்கத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாகவே இந்தக் கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சாஸ்காச்சுவான் மாகாண அரசு தெரிவித்துள்ளது.
இப்படியாக தவறுதலாக விடுவிக்கப்பட்டவர்களில் 26 வயதான கெலீஷா ஜாக்சன் என்ற பெண்ணும் ஒருவர். தாக்குதல் மற்றும் ஒருவரை வலுக்கட்டாயமாகச் சிறைபிடித்த குற்றத்திற்காக நார்த் பேட்டில்ஃபோர்ட் சிறையில் இவர் தண்டனை அனுபவித்து வந்தார்.
கடந்த மார்ச் 19 அன்று இவர் தவறுதலாக விடுவிக்கப்பட்டார். ஆனால், இதுகுறித்த தகவல் ஜூன் 19 வரை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
இறுதியாக, தவறுதலாக விடுவிக்கப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த ஜாக்சன், இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இத்தகைய தவறுகள் மிகவும் அரிதானவை என்றும், ஒட்டுமொத்த கைதிகள் விடுதலையில் இது 0.1 சதவீதத்திற்கும் குறைவானதே என்றும் அரசுத் தரப்பு வாதிட்டுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் சாஸ்காச்சுவான் அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என எதிர்க்கட்சியான என்.டி.பி (NDP) குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று என்.டி.பி சட்டமன்ற உறுப்பினர் நிக்கோல் சராவர் வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம், கைதிகள் தங்களின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கப்படுவதால், சிறைச்சாலையில் அவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வுப் பயிற்சிகள் முழுமையடையாமல் போகும் என்றும், இது அவர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைவதைப் பாதிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தவறுதலாக நடக்கும் ஒவ்வொரு விடுதலை குறித்தும் சிறப்புக் குழு ஆய்வு செய்து வருவதாகவும், வருங்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்க உரியப் பரிந்துரைகள் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
பிரேசில் நாட்டில் மருத்துவ தம்பதியினர் ஒருவருக்கொருவர் 30 வினாடிகளில் 195 முத்தங்கள் கொடுத்து கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
பிரேசிலின் சாவோ பாலோ நகரைச் சேர்ந்த தம்பதியினர் ரெனாடோ மற்றும் நையாரா ஆகிய இருவரும் மருத்துவத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் வெறும் 30 வினாடிகளில் 195 முறை ஒருவருக்கொருவர் முத்தமிட்டு உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இவர்களில் ரெனாடோவுக்கு 'ஏடிஎச்டி' எனப்படும் கவனக்குறைவு மற்றும் மிகையான செயல்பாட்டுக் குறைபாடு பாதிப்பு உள்ளது.
இருப்பினும், முறையான பயிற்சியும் தீவிர மன உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் இருவரும் உலகின் மிகச்சிறந்த தம்பதி என்பதை உலகிற்கு காட்ட நினைத்த இவர்களின் இந்த முயற்சி, தற்போது அதிகாரப்பூர்வ கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளனர். இணையத்தில் இவர்களின் சாதனை வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
அன்று மருத்துவமனையில் இருந்து அம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தேன்.
மருத்துவர் என்னை தனியாக அழைத்து,
"சிகிச்சை தொடரும்... ஆனால் இனி இவருக்கு மருந்தை விட மனநிம்மதிதான் முக்கியம்," என்றார்.
அந்த ஒரு வாக்கியம் என்னை பயமுறுத்தவில்லை.
மாறாக, ஒரு கணக்கு போட ஆரம்பித்தேன்.
வேலை...
வீட்டுக் கடன்...
குழந்தைகளின் படிப்பு...
இதில் அம்மாவின் மருத்துவச் செலவு வேறு பயமுறுத்தியது....
எல்லாமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
வீட்டுக்கு வந்ததும் அம்மா மெதுவாகக் கேட்டார்.
"டேய்... மாலையில் ஒரு டம்ளர் தேநீர் போட்டுத் தருவியா?"
எனக்கு எரிச்சல் வந்தது.
"அம்மா... இப்போதான் வீட்டுக்கு வந்திருக்கோம். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க."
அவர் எதுவும் பேசவில்லை.
சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார்.
அடுத்த சில நாட்களும் அதே கேள்வி.
"டேய்... ஒரு டம்ளர் தேநீர்..."
ஒவ்வொரு முறையும் நான்,
"இப்போ மீட்டிங்..."
"கொஞ்சம் வேலை..."
"பிறகு பார்க்கலாம்..."
என்று தள்ளிக்கொண்டே இருந்தேன்.
ஒரு நாள் என் மகள் என்னிடம் கேட்டாள்.
"அப்பா... பாட்டி தினமும் ஏன் உன்னிடமே தேநீர் கேட்கிறாங்க? நான் போட்டுத் தரட்டுமா?"
நான் சிரித்தேன்.
"அதெல்லாம் வேண்டாம்மா."
அவள் அமைதியாகச் சொன்னாள்.
"பாட்டிக்கு தேநீர் வேணும்னு தோணலை. உன்னோட ஐந்து நிமிஷம் வேணும்னுதான் தோணுது."
அந்தச் சிறிய வார்த்தை என்னை ஏதோ செய்தது.
அன்றைய மாலை, நானே சமையலறைக்குப் போய் இரண்டு டம்ளர் தேநீர் போட்டேன்.
ஒன்றை அம்மாவிடம் கொடுத்தேன்.
அவர் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார்.
"உனக்கு வேலை இல்லையா?"
"இருக்கு... ஆனா இது அதைவிட முக்கியம்."
வாசலில் இருவரும் அமைதியாக அமர்ந்தோம்.
அவர் தேநீரை மெதுவாகக் குடித்துக்கொண்டே,
"உனக்கு ஞாபகம் இருக்கா?"
என்று கேட்டார்.
"என்னம்மா?"
"நீ பள்ளிக்குப் போகும்போது தினமும் நான் உனக்கு பால் கொடுப்பேன். நீ குடிக்க மாட்டேன்னு அடம் பிடிப்ப."
நான் சிரித்தேன்.
அவர் தொடர்ந்தார்.
"அப்போது நான் உன்னைப் பார்த்து குடித்தேன்.
இப்போ நீ என்னைப் பார்த்து தேநீர் குடிக்கிறே.
வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் திரும்பி வரும் என்று நினைக்கல."
அன்று நாங்கள் அரை மணி நேரம் பேசினோம்.
எந்தப் பெரிய விஷயமும் இல்லை.
பக்கத்து வீட்டைப் பற்றி...
பழைய நாட்களைப் பற்றி...
என் அப்பாவைப் பற்றி...
என் சிறுவயதைப் பற்றி...
அதுதான்...
மறுநாள் காலை...
அன்று இரவு அம்மா தூக்கத்திலேயே அமைதியாக இறந்துவிட்டார்.
அவரது அறையை சுத்தம் செய்தபோது, மேசையின் மேல் ஒரு சிறிய காகிதம் இருந்தது.
அதில் அவர் எழுதியிருந்தது.
"என் மகனுக்கு...
எனக்கு தேநீர் மீது ஆசை இல்லை.
என்னோட மகன் என்னுடன் உட்கார்ந்து ஐந்து நிமிஷம் பேசணும்னுதான் காத்திருந்தேன்.
அந்த ஆசை நிறைவேறிச்சு.
இப்போ எனக்கு எந்தக் குறையும் இல்லை."
அந்தக் காகிதத்தைப் படித்தபோது நான் அழவில்லை.
ஏனென்றால்...
அழுகையைவிட பெரிய ஒரு வலி என் உள்ளே இருந்தது.
நாம் பெற்றோருக்கு பணம் கொடுக்கிறோம்.
மருந்து வாங்கிக் கொடுக்கிறோம்.
நல்ல மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறோம்.
ஆனால்...
அவர்களுக்கு மிகவும் தேவைப்படுவது,
நம் நேரம்.
நம் அருகாமை.
"சாப்பிட்டீங்களாம்மா?"
என்று கேட்கும் ஒரு குரல்.
ஒரு கப் தேநீர்.
ஐந்து நிமிட உரையாடல்.
வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில்,
பெற்றோர் கேட்பது பெரிய தியாகங்களை அல்ல.
"நீ இன்னும் என் பக்கத்தில்தான் இருக்கிறாய்" என்ற ஒரு சிறிய உணர்வை மட்டும்தான்.
அந்த ஐந்து நிமிடங்களை நாம் தராமல் விட்டால்...
ஒருநாள் ஆயிரம் கண்ணீராலும் அந்த ஐந்து நிமிடங்களை வாங்க முடியாது.
"இதயம் நம் பேச்சைக் கேட்காது...
கல்லீரல் நம் கட்டளைக்குக் கட்டுப்படாது...
சிறுநீரகமும் நம் விருப்பப்படி இயங்காது...
ஆனால்...
இரைப்பை மட்டும் நம் முடிவுக்குக் கட்டுப்படும்!"
"இரைப்பைக்குள் என்ன போக வேண்டும் என்று முடிவு செய்வது நாம்தான்.
ஆகவே
நல்ல உணவையும் அனுப்பலாம்...
தீங்கு விளைவிக்கும் உணவையும் அனுப்பலாம்...
ஒவ்வொரு கவளமும் உங்கள் முடிவு.
அந்த முடிவுதான் நாளைய ஆரோக்கியத்தையும், நாளைய நோயையும் தீர்மானிக்கிறது."
"மருத்துவமனைக்குப் போகும் பல பாதைகள்... சமையலறையிலிருந்தே தொடங்குகின்றன.
"இது என் உடலுக்கு மருந்தா... இல்லை மெதுவான விஷமா?"
சிந்திப்போம்...
நாம் ஆரோக்கியமாக வாழ்வதும்...
நோய்களோடு போராடுவதும்...
நம் கையில் இருக்கும் அந்த ஒரே ஒரு கவள உணவில்தான் தொடங்குகிறது.
ஆகவே...
உணவைத் தேர்ந்தெடுக்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.
ஆரோக்கியம் உங்கள் கையில் மட்டுமல்ல... உங்கள் ஒவ்வொரு கவளத்திலும் இருக்கிறது!
உலகில் உள்ள பெரும்பாலான தேசியக் கொடிகளில் சிவப்பு, நீலம், பச்சை, வெள்ளை, மஞ்சள் போன்ற நிறங்களைப் பார்க்கலாம். ஆனால், ஊதா நிறம் மட்டும் மிகவும் அரிது.
அதற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் காரணம் இருக்கிறது.
பண்டைய காலங்களில் துணிகளுக்கு நிறம் ஏற்ற இயற்கைச் சாயங்களே பயன்படுத்தப்பட்டன. அப்போது ஆழமான, நீடித்த ஊதா நிறத்தை உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது. அதற்காக மத்திய தரைக்கடல் பகுதியில் வாழ்ந்த மியூரெக்ஸ் (Murex) என்ற கடல் நத்தையிலிருந்து பெறப்பட்ட Tyrian Purple என்ற சாயம் பயன்படுத்தப்பட்டது. அதை தயாரிக்க பல ஆயிரக்கணக்கில் நத்தைகள் தேவைப்பட்டன.
அதனால் இந்தச் சாயத்தைத் தயாரிப்பது மிகவும் உழைப்பும் செலவும் அதிகம் கொண்ட செயலாக இருந்ததால், அது அக்காலத்தில் மிக உயர்ந்த மதிப்புடைய பொருளாகக் கருதப்பட்டது.
அரசர்கள், பேரரசர்கள் மற்றும் உயர்குடியினர் மட்டுமே பெரும்பாலும் ஊதா நிற ஆடைகளை அணிந்தனர். இதுவே ஊதா நிறத்தை அதிகாரம், செல்வம் மற்றும் அரச அந்தஸ்தின் அடையாளமாக மாற்றியது.
பின்னர், 1856-ஆம் ஆண்டு, இளம் வேதியியலாளர் வில்லியம் ஹென்றி பெர்கின் செயற்கை ஊதா நிறச் சாயத்தை கண்டுபிடித்தார். அதன் பிறகுதான் ஊதா நிறம் பொதுமக்களுக்கும் எளிதாகக் கிடைக்கத் தொடங்கியது.
ஆனால், அதற்குள் பல நாடுகள் தங்களது தேசியக் கொடிகளை ஏற்கனவே வடிவமைத்து விட்டன. அதனால் இன்றும் தேசியக் கொடிகளில் ஊதா நிறம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
குறிப்பிடத்தக்க விதமாக, டொமினிகா மற்றும் நிகராகுவா ஆகிய நாடுகளின் கொடிகளில் மட்டுமே சிறிய அளவில் ஊதா நிறம் இடம்பெற்றுள்ளது.
ஒரு நிறத்திற்குப் பின்னால் இவ்வளவு சுவாரஸ்யமான வரலாறு இருப்பது ஆச்சரியம்தானே!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: குடும்பப் பிரச்சினைகள் ஓயும். பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். ஓரளவு பணவரவு உண்டு. வியாபாரத்தில் பாக்கி களை போராடி வசூலிப்பீர்கள். தவிர்க்க முடியாத பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். செலவு கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். விட்டுக் கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். வராதிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். அலுவலகத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெல்வீர்.
கன்னி: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். பணப் பற்றாக்குறை நீங்கும். மனக்குழப்பம் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவு தருவார்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
துலாம்: முன்கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளை நினைத்து வருந்த வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
தனுசு: மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். வீட்டில் நிம்மதி பிறக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதர வகையில் சுபச் செலவு உண்டு. உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
மகரம்: நெடுநாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் சுமுகமாக முடியும். கணவன் மனைவி பிரச்சினைக்குள் அடுத்தவரை அனுமதிக்க வேண்டாம். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரவு தருவார்.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முகப் பொலிவு கூடும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு வேலை கிட்டும். அலுவலகரீதியான பயணங்கள் சாதகமாகும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை 11.7.2026.
இன்று அதிகாலை 02.07 வரை ஏகாதசி. பின்னர் இரவு 11.43 வரை துவாதசி. பிறகு திரியோதசி.
இன்று காலை 08.39 வரை கிருத்திகை. பின்னர் ரோகினி.
இன்று அதிகாலை 01.44 வரை சூலம். பின்னர் இரவு 10.45வரை கண்டம். பிறகு விருத்தி.
இன்று அதிகாலை 02.07 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 12.55 வரை கௌலவம். பின்பு இரவு 11.43 வரை தைத்துூலம். பிறகு கரசை.
இன்று அதிகாலை 05.58 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
🌹‘கலங்கரை விளக்கம்’ பட ரிலீஸ்… பரபரப்பில் இருந்தபோதிலும் வேலுமணி, ஓர் அதிகாலை நேரம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டிற்குச் செல்கிறார் அப்பொழுது எம்.ஜி.ஆர். முண்டா பனியனுக்கு மேலே, மார்பு வரை கட்டிய லுங்கியுடன் தோட்டத்தைச்சுற்றி வாங்கிங் செயது கொண்டிருக்கிறார்.
🌹வேலுமணியைப் பார்த்தவுடன், “என்ன முதலாளி! இவ்வளவு சீக்கிரமா வந்திருக்கீங்க.. விஷயம் ரொம்ப அர்ஜெண்டா?” என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர்.
அதற்கு வேலுமணி, “அர்ஜெண்டைவிட, அவசியம் என்பதால்தானே உங்களைப் பார்க்க வந்தேன்….” என்கிறார்.
“சொல்லுங்க!”
🌹பையன் சரவணன் ஒரு பொண்ணைக்காதலிக்கிறான். அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறான்.”
“அப்புறம் என்ன… அவன் ஆசைப்பட்டபடி நடத்தி வச்சுட வேண்டியதுதானே?”
“இல்லே.. பொண்ணு ரொம்ப ஏழையாம்! அது மட்டும்மல்லாம: பொண்ணு, அம்மா-அப்பா இல்லாத அநாதையாம்! அதான்…நம்ம ஸ்டேட்டசுக்கு இது சரிப்பட்டு வருமான்னு யோசிச்சுக்கிண்டு இருக்கேன்..” என்று வேலுமணி தயங்கித் தயங்கிச்சொல்லி முடிக்கிறார்.
🌹எல்லாவற்றையும் பொறுமையாக்கேட்டுக் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் “என்ன முதலாளி பெரிய ஸ்டேட்டஸ்
இப்படிப்பட்ட பொண்ணை நீங்க மருமகளா ஏத்துகறதுதான் உங்களுக்கு ஸ்டேட்டஸ்! இந்த்ததிருமணம் நடக்கறதுனால, உங்க உறவுக்காரங்க மத்தியிலயும் ஊர்க்காரங்க மத்தியிலயும் உங்க ஸ்டேட்டஸ் உயருமே தவிர குறையாது. ஒண்ணும் யோசிக்காம கல்யாணத்துக்குத் தேதி குறிச்சிட்டு வாங்க! அந்தப்பொண்ணுக்கு நானே அப்பாவா இருந்து, திருமணத்தை நடத்தி வைக்கிறேன்…”
என்று கொஞ்சம் மிரட்டும் தோரணையில் சொல்லி அனுப்புகிறார்.
🌹மறுப்பேதும் பேசாமல் வேலு மணி அங்கிருந்து விரைகிறார். போன வேகத்தில், 7.3.1966ஆம் தேதியில் சென்னை ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தன்மகனுக்கு அந்த ஏழைப் பெண்ணுக்கும் திருமணம் என்றுநாள் குறித்து, முதல்பத்திரிக்கையை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கிறார்.
🌹திருமண வேலைகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்த வேளையில் மூன்றாம் தேதி அன்று கல்யாண மாப்பிள்ளை ஓட்டிச் சென்ற காரில் மோதி, ஒரு கிழவி இறந்துவிடுகிறார்.
🌹ஏழாம் தேதி திருமணம். மூன்றாம்தேதி இப்படியா?’ என்று எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து, வரப்போகிற பெண்ணின் ராசியால்தான் நடந்திருக்கிறது என்றும்; திருமணத்திற்கு முன்பே இப்படியென்றால், திருமணத்திற்குப் பிறகு இந்தப் பெண்ணின் ராசி என்ன பாடுபடுத்துமோ என்று வேலுமணி வீட்டார் அந்தத் திருமணத்தையே நிறுத்தி விடுவதென்று தீர்மானித்து விடுகிறார்கள்.
🌹தன் குடம்பத்தினர் எடுத்த இந்த் தீர்மானத்திற்கு ஒப்புதல் வாங்க தங்களின்குடும்பத்தலைவரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ராமாவரம் வீட்டில் சந்தித்து, விஷயத்தைச் சொல்கிறார் வேலுமணி.
🌹கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர். மிகுந்த கோபத்துடன், “இதே அசம்பாவிதம் திருமணத்திற்குப் பின்னாடி நடந்திருந்தா என்ன பண்ணுவீங்க? சரி;எல்லார்கிட்டயும் பேசி, நல்ல முடிவோட வாங்க…’ என்று சொல்லி அனுப்பிவிட்டு
🌹காரில் ஏறப்போன வேலுமணியை நிறுத்தி, “இதோ பாருங்க முதலாளி… ஒருவேளை நாங்க எல்லோருமா சேர்ந்து இந்தத் திருமணத்தை நிறுத்தணும்னு முடிவெடுத்திட்டீங்கன்னா, அந்த அனாதைப் பொண்ணை நாளைக்கே என் தோட்டத்துக்கு அனுப்பி வச்சுடுங்க.. நானே அவளை என் மகளா தத்து எடுத்துக்கிறேன்…” என்ற பொன்மனச்செம்மலின் வார்த்தையைக் கேட்ட வேலுமணி, அப்படியே வெலவெலத்துப்போகிறார்.
🌹அப்படியே ஓடோடிப் போய் கண்ணீர் மல்க-மக்கள் திலகத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள்.. அதே தேதியில் தான் திருமணம்.. இதில் எந்த மாற்றும் இல்லை!” என்று சொல்லிவிட்டு , அதே தேதியில் திருமணத்தையும் நடத்தி முடித்தார் வேலுமணி .
ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள்
அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமி சிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினாள். ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது. அங்கு புகை பிடித்தபடி ஒரு நபர் அமர்த்திருந்தார்.
கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து...
என்னமா ?? காசு வேணுமா?? என்று கேட்டார்.
சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள். காருக்குள் ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள்.
இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.
எனக்கு எதுவும் வேணாம் அய்யா.. உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும் கொடுக்கணும்னு ஆசைப்படுறீங்களா அய்யா ? என்று கேட்டாள்.
ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்?
உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ... ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்துறாதீங்க அய்யா.
இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரி என்று நினைத்த மாதிரி நாளைக்கு உங்க மகளை யாரும் நினைத்து விட கூடாது இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள்....
அய்யா. உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு பிச்சைக்காரியை போல்.
இந்த நிலை உங்கள் மகளுக்கும் வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறு பெண்.
சட்டென்று சிகரட்டை கிழே போட்டார்.
என்ன அய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்த சிறுமி கேட்க்க..
"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான் என்னை சுட்டு விட்டது என்றார்."
தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடு நிறுத்துங்கள்.
மேஷம்
உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். கல்வி பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வேலையாட்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்
மிதுனம்
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் இருந்தாலும் ஒத்துழைப்பும் ஏற்படும். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
கடகம்
வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். பேச்சுகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். கற்றல் திறனில் சில மாற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாக செயல்படுவீர்கள். வியாபாரப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
எதிலும் திருப்தி அற்ற மன நிலைகள் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார பணிகளில் திறமையுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
புதிய தொழில் நுட்ப பொருட்களை வாங்குவீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். உயர்கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொன் பொருட்களில் கவனம் வேண்டும். அரசியல்வாதிகள் பொறுமையுடன் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். பயனற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தனவரவுகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நுட்பமான செயல்பாடுகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
தனுசு
கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் புதுமையான அனுபவங்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். கடன் சார்ந்த முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். பொழுதுபோக்கு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கலை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமாக அமையும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
மருத்துவத் துறையில் இருப்பதற்கு மேன்மை ஏற்படும். சிற்ப பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். மனம் திறந்து பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். தாயின் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வாசனை திரவிய பொருள்களால் லாபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மீனம்
சிந்தனை போக்கில் தெளிவுகள் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல்கள் உருவாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். சிறு தூர பயணம் மூலம் மாற்றம் பிறக்கும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 10.7.2026.
இன்று அதிகாலை 04.04 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று காலை 10.07 வரை பரணி. பின்னர் கிருத்திகை.
இன்று அதிகாலை 03.15 வரை திருதி. பின்னர் சூலம்.
இன்று அதிகாலை 04.04 வரை பத்திரை. பின்னர் மாலை 03.05 வரை பவம். பிறகு பாலவம் .
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.15 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது.
1. சாப்பிடும் முன் மற்றவர்களின் பசியை உணர்ந்த தலைமுறை.
2. நெருக்கடியான வீடுகளில் மிகுந்த அன்புடன் வாழ்ந்த தலைமுறை.
3. பொறுப்புகளை அறிந்த தலைமுறை. 'நான்' என்று சொல்லாமல் 'நாம்' என்று வாழ்ந்த தலைமுறை.
4. பட்டங்கள் இல்லாவிட்டாலும், வாழ்க்கையைப் படித்த தலைமுறை.
5. கடிகாரம் இல்லாவிட்டாலும், நேரத்தை சரியாக பயன்படுத்திய தலைமுறை.
6. இன்டர்நெட் பார்க்காமல் அறிவை நிரப்பிக்கொண்ட தலைமுறை.
7. கால்குலேட்டர் இல்லாவிட்டாலும் கணக்கு செய்ய முடிந்த தலைமுறை.
8. மொபைல் போன்கள் இல்லாவிட்டாலும் நட்பு உரையாடல்களுக்கு குறைவில்லாத தலைமுறை.
9. TV இல்லாவிட்டாலும் வேடிக்கையாக நேரத்தை கழித்த தலைமுறை.
10. GPS இல்லாவிட்டாலும் இலக்கை துல்லியமாக அடைய முடிந்த தலைமுறை.
11. தொழில்நுட்பம் இல்லாவிட்டாலும் சுக சந்தோஷங்களுடன் வாழ்ந்த தலைமுறை.
12. AC, கூலர் இல்லாவிட்டாலும் திறந்தவெளியில் சுகமாக உறங்கிய தலைமுறை.
13. மினரல் வாட்டருக்கு பதில் குளம்/கிணற்று நீர் குடித்து ஆரோக்கியமாக வாழ்ந்த தலைமுறை.
14. பீட்சா, பர்கர் இல்லாமல் பஞ்சு மிட்டாய், பொரி சாப்பிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.
15. இரவுகளில் வீட்டு திண்ணையில் சுகமாக கதை பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.
16. ஆறு வயது வரை குழந்தைகளின் பால்யத்தை விளையாட்டு பாட்டுகளால் நிரப்பிய தலைமுறை.
17. அதன் பிறகு ஒரு பைசா கட்டணம் இல்லாத அரசு பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் குழந்தைகளை படிக்க வைத்து - அங்கே தமிழிலும், இங்கே ஆங்கிலத்திலும் புலவர்களாக ஆகும்படி குழந்தைகளை உருவாக்கிய தலைமுறை.
18. கிலோமீட்டர் தூரத்தையும் சுலபமாக நடக்க முடிந்த தலைமுறை.
19. ஒழுக்கம் தவறிய பிள்ளைக்கு பள்ளியில் ஆசிரியர் நாலு அடி கொடுத்தால் - அவனுக்கு வீட்டில் இன்னும் பத்து அடி கொடுத்த தலைமுறை.
20. தெருக்கூத்து, தோல் பொம்மலாட்டம், புராண கதைகளை ரசித்த தலைமுறை.
21. சென்சார் தேவையில்லாத கருத்துள்ள கருப்பு-வெள்ளை படங்கள் பார்த்த தலைமுறை.
22. வீட்டு வாசலை கோலங்களால் அலங்கரித்த தலைமுறை.
23. வேலையாட்கள், யோகா, ஜிம் இல்லாமல், மூட்டை மூட்டையாக வேலை செய்து, வியர்வை சிந்தி நூறு வயது வாழ்ந்த தலைமுறை.
24. உறவுகளுக்கு, சொந்தங்களுக்கு மதிப்பளித்த தலைமுறை.
25. சொத்துகளை விட, பாசத்திற்கும், பந்தங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்த தலைமுறை.
26. கூட்டுக் குடும்பங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.
27. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரையும் அரவணைத்து சென்ற தலைமுறை.
28. வியாபாரத்தில் கலப்படத்திற்கு இடம் கொடுக்காத தலைமுறை.
29. மற்றவர்களின் நன்மையை விரும்பிய தலைமுறை.
30. நீதி நேர்மையுடன் ஏமாற்றாமல் வாழ்ந்த தலைமுறை.
31. கல்லை சாப்பிட்டாலும் ஜீரணிக்க முடிந்த தலைமுறை.
32. கார்ப்பரேட் மருத்துவமனைகள் இல்லாமலும் ஆரோக்கியமாக வாழ்ந்த தலைமுறை.
33. ஹார்ட் அட்டாக், கேன்சர் பற்றி தெரியாத தலைமுறை.
34. BP, சுகர் வரவிடாத தலைமுறை.
35. லாந்தர் விளக்குகளால் வாழ்க்கையில் ஒளி நிரப்பிய தலைமுறை.
36. கஷ்டங்களை தைரியமாக எதிர்கொண்ட தலைமுறை.
37. எவ்வளவு இருந்தாலும் இன்னும் இன்னும் வேண்டும் என்ற பேராசை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.
38. ஆடம்பரங்களுக்கு தூரமாக இருந்த தலைமுறை. போஸ்ட் கார்டுகளில் உரையாடல் நடத்திய தலைமுறை.
39. தியாகங்களால் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்த தலைமுறை. சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு சகோதரத்துவத்துடன் வாழ்ந்த தலைமுறை.
40. காபி, டிபன் இல்லாமல் பழைய சோறு சாப்பிட்டு பள்ளிக்கு ஓடிய தலைமுறை.....
அப்படிப்பட்ட தலைமுறையில் உள்ள அரிய மனிதர்கள் இன்று ஒவ்வொருவராக நம்மை விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை இழக்கும் போது எல்லாவற்றையும் இழப்பது போல் தோன்றுகிறது.
_போய்க்கொண்டிருக்கும் அந்த தலைமுறையிடம் இருந்து இந்த தலைமுறை எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் - எதிர்காலம் இருள் மயமே!_
அந்த தலைமுறை உண்மையில் நம் கலாச்சாரம், நம் மதிப்புகளின் பிரதிபலிப்பு. அவர்களைப் போன்ற மனங்கள் மீண்டும் வராது... அவர்களை இழப்பது என்பது நம் வேர்களை இழப்பதே....
அந்த தலைமுறை காட்டிய மதிப்புகள், அன்பு, நேர்மை இந்த தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும்...
தொழில்நுட்பத்துடன் முன்னேறுகிறோம் ஆனால் மதிப்புகளில் பின்னோக்கி செல்கிறோம்… அந்த தலைமுறை நமக்கு மனிதநேயம் என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தது...
லாந்தர் ஒளியில் வெளிச்சம் நிரப்பியது அந்த தலைமுறை – கரண்ட் விளக்கு ஒளியில் இருளை வளர்த்துக்கொள்கிறது இந்த தலைமுறை.
*"அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தது இயற்கையுடன் சகவாழ்வு. நாம் கற்றுக்கொள்வது இயந்திர வாழ்க்கை."*
*சரியா? தவறா?*
ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.??
கனடாவின் கல்கரி நகரில் உள்ள பிரபல வணிக வளாகமான 'மார்க்கெட் மால்' நகைக் கடையொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் திட்டமிட்டு நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திருட்டுச் சம்பவத்தில் சிறுவர்களைப் பயன்படுத்தியமைக்காக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு எதிராகப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 17ஆம் திகதி, மார்க்கெட் மாலில் உள்ள 'ஹில்பெர்க் & பெர்க்' நகைக் கடை ஊழியர் அளித்த தகவலின் பேரில் பொலிஸார் அங்கு விரைந்தனர்.
கடையின் பாதுகாப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஒன்றாகக் கடைக்குள் நுழைந்தது தெரியவந்தது.
குடும்பத்திலிருந்த பெரியவர்கள் கடையின் ஊழியர்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பியுள்ளனர்.
அந்த நேரத்தில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், 8 வயது சிறுவனும் இணைந்து சுமார் 4,000 டாலர் மதிப்புள்ள பல நகைகளைத் திருடிக்கொண்டு கடையை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்கள் சென்ற பின்னரே நகைகள் திருடப்பட்டதை உணர்ந்த கடை ஊழியர் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து செயற்பட்ட பொலிஸார், நகைகளைத் திருடிய 16 மற்றும் 8 வயது சிறுவர்களையும், அவர்களுடன் இருந்த ஒரு பெரியவரையும் வணிக வளாகத்தின் மற்றொரு பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.
இதற்கிடையில், அந்தக் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த லொறி ஒன்றில் மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் பயன்படுத்திய அந்த லொறியும் திருடப்பட்ட ஒன்று என்பதும், அதனுள் பிற கடைகளில் இருந்து திருடப்பட்ட மேலும் பல பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் 16 வயது சிறுமி, 17 வயது சிறுவன், 25 வயது பெண் மற்றும் 34 வயது பெண் ஆகிய நால்வர் மீது பொலிஸார் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
அதேவேளை, திருட்டுச் சம்பவத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லாத சிறுவர்களின் தந்தையிடம் 8 மற்றும் 9 வயதுடைய இரு சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.













