·   ·  3 videos
  •  ·  0 friends
  • 812
  • More

தேசிய பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்

 பாடசாலை குறித்து சர்வேஸ்வரன் 

Comments (0)
Login or Join to comment.
·
Added article

ஜீனியஸ் இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகாகி, தமிழில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்திருக்கிறார். இவர் நடிகை சோனியா அகர்வாலை கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். காதல் கொண்டேன், 7ஜி போன்ற படங்களில் பணியாற்றியபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணம் 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 2010-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

செல்வராகவன் - கீதாஞ்சலி ஜோடிக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது அவர்களைப் பற்றிய விவாகரத்து சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதற்கு காரணம் கீதாஞ்சலியின் செயல் தான். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து செல்வராகவனின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார். இதனால் தான் இவர்கள் இருவரும் பிரிய இருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. அவர் எதற்காக செல்வராகவன் போட்டோக்களை நீக்கினார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தால் மட்டுமே சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

  • 63
·
Added article

அக்னி நட்சத்திரம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நிரோஷா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர். 80 கால கட்டத்தில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

எம் ஆர் ராதாவின் மகளும், நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கையுமான நிரோஷா, கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். ராம்கியுடன் பல படத்தில் ஜோடி போட்டு நடிக்க இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் ராம்கிக்கும் நிரோஷவிற்கும் ஒத்துப்போகாதாம், இருவரும் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் எலியும் பூனையுமாக இருப்பார்களாம். ஆனால், 'செந்தூரப்பூவே' படப்பிடிப்பின் போது நடிகை நிரோஷா விபத்தில் சிக்கி இருக்கிறார். அப்போது நடிகர் ராம்கி தான் அவரை காப்பாற்றியுள்ளார். அதன்பிறகு தான் இருவரும் நண்பர்களாகி, பின் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் தலைகாட்டாமல் இருந்த நிரோஷா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இரண்டாவது பாகத்தில் 3 ஆண் பிள்ளைகளின் அம்மாவாக கோமதி என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார். திரைப்படங்களில் கூட இவருக்கு கிடைக்காத வரவேற்பும், பாராட்டுகளும் நிரோஷாவுக்கு கோமதி கதாபாத்திரத்திற்கு கிடைத்துள்ளது. இளம் நடிகைகள் போல இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிரோஷா, மெல்லிய, எளிமையான சேலையில், கையில் ஒரு வெள்ளை ரோஜாவை பிடித்தபடி நிரோஷா போஸ் கொடுத்திருக்கும் அந்த போட்டோ, பார்ப்பவர்களை மெய்மறக்கச் செய்துள்ளது. முகத்தில் மென்மையான புன்னகை, கண்களில் ஒளிந்திருக்கும் அழகு அனைத்தும் சேர்ந்து அந்த புகைப்படத்திற்கு ஒரு கிளாசிக்கல் எலிகன்ஸ் கொடுக்கிறது. அதிக அலங்காரமின்றி, இயல்பான அழகை வெளிப்படுத்தும் இந்த லுக், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளன. "எவர்கிரீன் பியூட்டி" என ரசிகர்கள் நிரோஷாவை வர்ணித்து வருகின்றனர்.

  • 65
·
Added article

அமலா பால் முதல் திருமணம் பெரிதாக ஒத்துவராத நிலையில், 2வதாக ஜகத் தேசாய் எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். அவருடன் டிசம்பர் மாத குளிரை கொண்டாட பனி பிரதேசத்துக்கு சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட வீடியோவும், அமலா பாலுக்காக ஜகத் தேசாய் செய்த சாகசங்களும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

நடிகை அமலா பால் ஜகத் தேசாயை காதலித்து திருமணம் செய்ததில் இருந்தே ஏகப்பட்ட இடங்களுக்குச் சுற்றுலா சென்று ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அழகான ஆண் குழந்தையும் பெற்றெடுத்து இலை எனப் பெயரிட்டு வளர்த்து வருகிறார்.

நடிகை அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் இருவரும் இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா (Asatana) எனும் இடத்திற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கே எடுத்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

  • 64
·
Added a news

அகதிகள் குடும்பம் ஒன்று கனடாவுக்கு வந்து ஒரு மாதமே ஆன நிலையில் தங்கள் அன்பு மகளை இழந்துள்ள விடயம், அக்குடும்பத்தை சொல்லொணா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மியான்மரில் இனப்படுகொலைக்குத் தப்பி பங்களாதேஷுக்கு ஓடிய ஆயுப் கான் குடும்பத்தை கனடாவுக்கு வர ஸ்பான்சர் செய்துள்ளார் அவரது சகோதரரான நாசிர் கான்.

நவம்பர் மாதம் 5ஆம் திகதி கனடா வந்தடைந்தது ஆயுப் கான் குடும்பம். ஆயுப் கான் தனது மகளான ஷோமிமாவை (9) பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயிலுள்ள Newton Elementary School என்னும் பள்ளியில் சேர்த்திருந்தார்.

இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 5ஆம் திகதி, பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது தன் தந்தையுடன் சாலையைக் கடந்துகொண்டிருந்த ஷோமிமா மீது வேன் ஒன்று மோதியுள்ளது. வேன் மோதியதில் ஷோமிமா உயிரிழந்துவிட்டார். வேனின் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

உயிருக்கு பயந்து சொந்த நாட்டிலிருந்து தப்பி இன்னொரு நாட்டில் அகதிகளாக வாழ்ந்து, அங்கிருந்து ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்ததால் கனடாவுக்கு வந்து ஒரு புதிய வாழ்வைத் துவங்கலாம் என்ற சந்தோஷத்தில் இருந்த கான் குடும்பம், தற்போது, மகளை இழந்து சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

  • 74
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

ரிஷபம்

ஆன்மீக பணிகளில் தெளிவுகள் ஏற்படும். கலைத்துறையில் செல்வாக்கு மேம்படும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேலோங்கும். சமூக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடன் பிறப்புகள் சாதகமாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். பொறுமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

மிதுனம்

பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். கோப உணர்ச்சிகளை குறைத்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கடகம்

எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சகோதர வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

சிம்மம்

குடும்பத்தை பற்றிய எண்ணம் மேம்படும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும். பயணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கன்னி

நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். உறவுகள் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சிறு தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். விவசாய பணிகளில் பொறுமை வேண்டும். திடிர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

துலாம்

தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் எண்ணிங்களை நிறைவேற்றுவீர்கள். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படக்கூடும். சோர்வு விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

விருச்சிகம்

குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். சுபமுயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். புதிய முயற்சிக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

தனுசு

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். சிந்தனை திறனில் சில மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் சில நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் ஏற்படும். திட்டவட்டமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் நிலவும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். சினம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

கும்பம்

வேகத்தை விட விவேகத்தை கையாளுவது நல்லது. நினைத்து ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். வரவைவிடச் செலவுகள் மேம்படும். உழைப்புக்குண்டான பலன் கால தாமதமாகும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மீனம்

குடும்பத்தில் சாதகமாக சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் ஆதரவுடன் சில செயல்களை முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். மேலதிகாரி ஆதரவாக செயல்படுவார்கள். இரக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

  • 90
·
Added a post

1. மேஷம்

சூரியன் 8ஆம் வீட்டில் இருக்கும்.

சிறிய உடல்நல சிக்கல்கள், மனஅழுத்தம் ஏற்படும் காலம்.

. . .

2. ரிஷபம்

7ஆம் வீட்டில் சூரியன்.

துணைவர், கூட்டுத் தொழில் விஷயங்களில் மாற்றங்கள்.

. . .

3. மிதுனம்

6ஆம் வீட்டில் சூரியன்.

விரோதிகளை வெல்லும் சக்தி வரும்.

. . .

4. கடகம்

5ஆம் வீட்டில் சூரியன்.

குழந்தைகளின் முன்னேற்றம், கல்வி, படிப்பு விஷயங்களில் நன்மை.

. . ‌

5. சிம்மம்

சூரியன் 4ஆம் வீட்டில் (இது சூரியனின் அசல் இடத்தில் சேர்ப்பான நல்ல பலன்).

வீட்டில் அமைதி, சொத்து சம்பந்தமான நல்ல நிகழ்வுகள்.

. . .

6. கன்னி

3ஆம் வீட்டில் சூரியன்.

தைரியமும், முயற்சியும் அதிகரிக்கும்.

. . .

7. துலாம்

2ஆம் வீட்டில் சூரியன்.

பொருளாதார வளர்ச்சி, வருமானம் அதிகரிப்பு.

. . .

8. விருச்சிகம்

சூரியன் லக்னத்தில்.

உடல்நலம், உழைப்பாற்றல் மேம்படும்.

புதிய முயற்சிகளுக்கு சிறந்த காலம்.

. . .

9. தனுசு

12ஆம் வீட்டில் சூரியன்.

செலவுகள் அதிகரிக்கும்; தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.

. . .

10. மகரம்

11ஆம் வீட்டில் சூரியன்.

விருப்பங்கள் நிறைவேறும் சிறந்த காலம்.

. . .

11. கும்பம்

10ஆம் வீட்டில் சூரியன்.

தொழில் வாழ்க்கையில் மிகப் பெரிய உயர்வு.

பதவி உயர்வு, மேலாளர்களின் பாராட்டு.

. . .

12. மீனம்

9ஆம் வீட்டில் சூரியன்.

அதிர்ஷ்டம் உயரும்; நீண்டநாள் ஆசைகள் நிறைவேற்றம்.

  • 104
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை 13.12.2025.

இன்று இரவு 08.49 வரை நவமி.

இன்று காலை 10.30 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

இன்று மாலை 03.08 வரை ஆயுஷ்மான். பிறகு சௌபாக்கியம்.

இன்று காலை 08.25 வரை தைத்தூலம். பின்னர் இரவு 08.49 வரை கரசை. பின்பு வணிசை.

இன்று காலை 06.20 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=356&dpx=2&t=1765623467

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 132

Good Morning...

  • 129
·
Added article

கடந்த 2013ம் ஆண்டு ஏ.ஆர். ரபி இயக்கத்தில் வெளியான 'அஞ்சல் துறை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் குஷி முகர்ஜி. அதன் பின்னர், இந்திக்கு சென்ற அவர், ஹார்ட் அட்டாக், முத்ரா விஸ்தார்ஜன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். எப்படியாவது பாலிவுட்டில் பிரபலமாக வேண்டும் என நினைத்த அவர், உர்ஃபி ஜாவேத் ரூட்டை கையில் எடுத்து பலரது கண்களை கூச வைத்து வருகிறார்.

சமீபத்தில், பின்னழகு மொத்தமும் தெரியும்படியான கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு அவர் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்து போஸ் கொடுத்தபோது சில புகைப்படக் கலைஞர்களே அதனை கண்டித்து அவருடன் சண்டைப் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது அதை விட மோசமாக உள்ளாடை அணியாமல் முன்னழகு தெரியும் வகையில் ரொம்பவே ஃப்ரீ ஷோ காட்டி வெளியே நடனமாடிய வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கேவலமாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.

  • 294
·
Added article

2012ஆம் ஆண்டு அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சனம் ஷெட்டி, சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறார். மிஸ் தென்னிந்தியா பட்டம், பல மொழிப் படங்களில் வேலையென பல்வேறு பரிமாணங்களில் தன்னை நிரூபித்து வந்தாலும், சமீபத்தில் வெளியாகியுள்ள பிகினி வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீச்சல் குளத்தில் முழுக்க குதூகலமாக ஆடி, ஸ்பார்க் நிறைந்த எர்னர்ஜியுடன் சனம் ஷெட்டி காமிராவை நோக்கி போஸ் கொடுக்கும் அந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற தளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்டு வருகிறது. சனத்தின் ஸ்டைல், தன்னம்பிக்கை, உடல்வாகை, அனைத்தும் ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

  • 295
·
Added article

‘வா வாத்தியார்’ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதற்கு மன்னிப்புக் கோரியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன்.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன், “எங்களை மீறிய சில எதிர்பாராத சூழ்நிலையால் ‘வா வாத்தியார்’ திட்டமிட்ட தேதியில் வெளியாகாது. இது மிகவும் கடினமான முடிவு, குறிப்பாக அனைவரும் ஆர்வத்துடன் படத்துக்காக எவ்வளவு காத்திருந்தீர்கள் என்பதை அறிகிறோம்.

இந்த ஏமாற்றத்துக்காக ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த நிலையை விரைவில் சரி செய்ய நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். விரைவில் புதிய வெளியீட்டு தேதியை பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் அன்பு, பொறுமை மற்றும் அசைக்க முடியாத ஆதரவு எங்களுக்குத் தேவை. இந்த காத்திருப்புக்கு ‘வா வாத்தியார்’ தகுதியானதே” என்று தெரிவித்துள்ளார்கள்.

  • 298
·
Added article

இந்திய திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த், இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி: “75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

  • 301
·
Added a news

கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 

2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தைவிட, 2025ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, 150,220 குறைந்துள்ளது.

கடந்த செப்டம்பரில் கனடாவில் கல்வி கற்க 28,910 பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த செப்டம்பரில் 11,390 புதிய மாணவர்கள் மட்டுமே கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டைவிட 60 சதவிகிதம் குறைவாகும்.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில், கனடா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், கனடாவில் கல்வி கற்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துவரும் கனடா அரசு, அடுத்த ஆண்டிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கவிருக்கும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது.

  • 302
·
Added a post

1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.

2. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார்.

3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.

4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.

5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.

6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை, கோவை இரு நகரங்களிலும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கியது.

7. புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்யப்பட்டது.

8. பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.

9. ஏழைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.

10. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற செய்தது.

11. கலப்பு மணம் செய்துகொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது.

12. சென்னையில் உள்ள குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் கட்டித் தந்தார்.

13. 1 கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்.

14. சீரணி எனும் ஓர் அமைப்பைத் தொடங்கி மக்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் பகுதிக்குத் தேவைப்படுகிற சிறிய, சிறிய வசதிகளை தாங்களே எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்துகொள்வது என்கிற திட்டம் கொண்டுவந்ததார்.

15. 1968-ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினார்.

16. கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை நிறுவினார்.

(திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஜி.யு.போப், பாரதியார், பாரதிதாசன், ஔவையார், கண்ணகி, கால்டுவேல், உ.வே.ச.)

17. பள்ளிகளில் என்.சி.சி. அணியில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

18. அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளார் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

19. முதல்வரானதும், அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் விழாக்களுக்கெல்லாம் அவர்களை பின் தொடராமல் தங்கள் பணியைச் செய்யலாம் என சுற்றறிக்கை அனுப்பினார்.

20. சென்னை செகரட்டேரியட் என்பதனை தலைமைச் செயலகம் என மாற்றியமைத்தார்.

21. விதவைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினார்.

தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற தமிழகத்தின் வரபிரசாதம் அறிஞர் அண்ணா அவர்கள் .

என்னே ஒரு தொலைநோக்குப் பார்வை ..!

  • 305
·
Added a post

1. சிந்தியுங்கள்

சாதனையாளர்கள் தினமும் சிந்திப்பார்கள்.

மனித மூளை மிகவும் ஆற்றல்மிக்க ஒன்று. எனவே நோக்கத்துடன் சிந்திக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

துறை சார்ந்த சிரமமான காரியங்களில், உங்களை நீங்களே ஒரு கடினமான கேள்வி கேட்டு, அதற்கான பதிலைக் கண்டடைய வேண்டும்.

இதன் மூலம் சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதற்கான தீர்வு இருந்தே தீரும் என்கிற நம்பிக்கை பிறக்கும்.

2. மனதிற்குப் பிடித்த உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்றவுடன், சிக்ஸ் பேக், எய்ட் பேக் மற்றும் ஸீரோ சைஸுக்காக உழைப்பது மட்டுமேயல்ல.

நீச்சல், சைக்ளிங், தோட்ட வேலைகள், நாய்க்குட்டி உடன் விளையாடுவது என உடல், மனம் இரண்டுக்கும் புத்துணர்வு தரக்கூடிய ஓர் எளிய பயிற்சியைத் தேர்வு செய்து, அதை தினமும் மேற்கொள்ளுங்கள்.

3. சீக்கிரம் எழுந்தால்

அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் எழுந்திரிக்க வேண்டியதில்லை என்றாலும் சற்று முன்னர் எழுந்தால் நீங்கள் செய்யப்போகும் வேலையில் தெளிவும் படைப்பாற்றலும் சற்றே அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், விடிகாலை எழும் பழக்கமுள்ளவர்கள் ஆக்கவளம் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரான தூக்கப்பழக்கம் மிகவும் முக்கியமான ஒன்று.

4. ஆரோக்கிய உணவு

நம் ஆரோக்கியம், நாம் உண்ணும் உணவுகளையே பெரிதும் சார்ந்திருக்கிறது.

உங்கள் மனத் தெளிவு, உணர்ச்சிகள், சக்தி, சுறுசுறுப்பு அனைத்தையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைப்பதற்கான ஆற்றலைப் பெற, ஆரோக்கிய உணவு மிகவும் அவசியம்.

5. அத்தியாவசியங்களுடன் மட்டுமே வாழ்ந்திருங்கள்

உங்கள் அலுவல் மேசையில் தேவையில்லாமல் குவிந்துகிடக்கும் பொருட்களைக் கழித்துவிட்டால், மிச்சமிருப்பது அத்தியாவசியங்கள் மட்டுமே.

அந்த அவசியத் தேவைப் பொருட்களை தரமானவையாக வாங்குங்கள். மற்றவர்களிடம் உங்களுக்கான மரியாதையைப் பெற்றுக்கொடுப்பது, குணம் மட்டுமல்ல உடைமைகளும்தான்.

குப்பைக்கு நடுவில் அமர்ந்திருக்கும் ஊழியரைக் காணும் கண்களிடம் மதிப்பிருக்காது.

6. அவசியமற்ற கருத்துகளுக்கு காது கொடுக்காதீர்கள்

உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவுகள், எப்போதும் நீங்கள் எடுக்கும் முடிவுகளாக இருக்க வேண்டும்.

மற்றவர்களிடம் கருத்துக் கேட்டு சிக்கலாக்கிக்கொள்ளாமல் சிறந்த, தெளிவான முடிவுகளை எடுங்கள்.

வெற்றியாளர்கள் முற்போக்கான உறவுகளை எடுத்துச் செல்வதில் மிகவும் திறமையானவர்கள். ஏனெனில், அவசியம் இல்லாத கருத்துகளை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

7. இன்று மட்டுமே நிஜம்

நேற்று என்பது இன்றில்லை. நாளை என்பதில் நிஜமில்லை. இரண்டுமே நினைவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடுதான்.

எனவே நீங்கள் வாழவேண்டியது இன்று, இந்த நொடி மட்டுமே. இன்றைய தினத்தை எவ்வாறு சிறப்பாக முடிப்பது என்ற யோசனை மட்டுமே தேவை.

அந்தச் சிந்தனை மட்டுமே செய்யும் செயல்களில் கவனத்தைக் கொண்டுவரும்.

எதிர்காலத்தைப் பற்றிய பயத்தையும் கடந்த காலத்தின் வருத்தங்களையும் கணக்கில் கொள்ளாமல் தெளிவாகச் செயல்படுபவர்களே வெற்றியாளர்களாகக் கருதப்படுகிறார்கள்.

8. பணி நேர்த்தி அவசியம்

உங்களின் வாட்ஸ்அப் இன்பாக்ஸ் முதல் மெயில் இன்பாக்ஸ் வரை அனைத்திலும், தினமும் வரும் மெஸேஜ்களை முழுவதுமாக ஓபன் செய்து, அதற்கான பதிலை அன்றே அனுப்பிவிடுதலை முடிந்தவரை கடைப்பிடியுங்கள். அன்றைய வேலையை அன்றே முடிக்கப் பழகிவிட்டாலே, பணி நேர்த்தி கைகூடிவிடும்.

9. உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்

எந்தத் துறையாக இருப்பினும், யாராக இருப்பினும் வெற்றியடைய சுயமுன்னேற்றம் மிகவும் முக்கியமான ஒன்று.

கற்கும் பாடங்களில் இருந்தும் அனுபவங்களில் இருந்தும் உங்களை நீங்களே வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டத்தை எண்ணி உட்கார்ந்திருக்காமல், ‘என் வெற்றி எனக்கானது. என் உழைப்பைச் சார்ந்தது. அதற்கு என்னை நானே முன்னேற்றிக்கொள்வது முக்கியம்’ என்று நினைக்க வேண்டும்.

இதை நடைமுறையில் கொண்டுவர, ஒரு நல்ல சுயமுன்னேற்றப் புத்தகத்தைத் தேர்வு செய்து வாசிக்க ஆரம்பிக்கலாம்.

10. அச்சம் தரும் விஷயங்களை தினமும் முயலுங்கள்

வெற்றியாளர்களுக்கும் மற்றவர்களுக்குமான ஒரே வித்தியாசம்… தங்கள் பயம், துயரம் எதையும் பொருட்படுத்தாமல் அடுத்த நிலையை நோக்கி முன்னேறிக்கொண்டே இருப்பது.

பயம், பதற்றம், சந்தேகம் இவை அனைத்தும் எல்லோருக்கும் இருப்பவையே. ஆனால் இதுபோன்ற எதிர்மறை விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் இலக்கை நோக்கி பயணம் செய்பவர்கள் மட்டுமே வெற்றியாளர்கள் ஆவார்கள்.

  • 307
·
Added a post

இந்தப் படத்தில் இருக்கும் கொஞ்சம் குழப்பமாகவும், துயரமாகவும், எதிர்பாராத தோற்றத்துடனும் இருக்கும் இந்திய இளைஞன், ஜெர்மனியில் மெட்ரோ ரயிலில் உட்கார்ந்திருக்கிறான். அவன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண்ணை அவனுக்குத் தெரியாது. ஆனால் அவள் யாரென்றால்… உலகப் பிரபலமான நடிகை!

இந்தப் படம் ஜெர்மனி முழுவதும் ஒரே நாளில் வைரலாகிறது.

பிரபல ஜெர்மன் பத்திரிகையான “டெர் ஸ்பீகல்” (Der Spiegel) அந்தப் படத்தில் இருக்கும் இந்திய இளைஞனைத் தேட ஆரம்பிக்கிறது. இறுதியில் மியூனிக்கில் அவனைக் கண்டுபிடிக்கிறார்கள். அப்போதுதான் தெரிகிறது… அவன் ஜெர்மனியில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிறான் என்பது.

நிருபர் அவனிடம் கேட்கிறார்:

“உனக்குத் தெரியுமா, உன்னருகில் உட்கார்ந்திருந்த வெள்ளைப் பெண் ‘மேசி வில்லியம்ஸ்’ — ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸின் நாயகி (Arya stark) என்பது? அவளுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்காங்க. கூட ஒரு செல்ஃபி எடுக்கக் கனவு காண்பாங்க. ஆனால் நீ எந்த ரியாக்ஷனும் காட்டல… ஏன்?”

அமைதியாக அந்த இளைஞன் பதில் சொல்கிறான்:

“எனக்கு தங்கும் அனுமதி இல்லை… பையில் ஒரு யூரோ கூட இல்லை… தினமும் ‘சட்டவிரோதமாக’ டிக்கெட் இல்லாம ட்ரெயினில் பயணம் செய்யுறேன்… அப்படி இருக்கும்போது எனக்கு பக்கத்தில் யார் உட்கார்ந்திருக்காங்கறது எனக்கு முக்கியமே இல்லை.”

அவன் நேர்மையும், நிலைமையும் பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துது. உடனே அந்தப் பத்திரிகை அவனுக்கு தபால்காரர் வேலை ஒன்றை ஏற்பாடு செய்கிறது. மாத சம்பளம் 800 யூரோ. இந்த வேலை ஒப்பந்தம் இருப்பதால், உடனடியாக அவனுக்கு சட்டப்படியான தங்கும் அனுமதி கிடைத்துவிடுகிறது. எந்தத் தடையும் இல்லாமல்.

இந்தக் கதை நமக்குச் சொல்வது… விதி எப்படி வேலை செய்கிறது என்பதை.

ஒவ்வோர் சம்பவமும் முந்தைய சம்பவத்துடன் தொடர்புடையது. இப்போதைய சம்பவம் எதிர்கால சம்பவத்துடன் இணைக்கப்பட்டிருக்கு. எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டது போல… ஒரு ஸ்கிரிப்ட் எழுதப்பட்டிருக்கு, அதன் மேல்தான் வாழ்க்கை என்ற படம் ஓடிக்கொண்டிருக்கு.

அடுத்து யாருடைய விதியில் என்ன எழுதப்பட்டிருக்குன்னு யாருக்கும் தெரியாது.

இதுதான் விதியின் விளையாட்டு. 🙏

உங்களுக்கும் விதியின் மேல் நம்பிக்கை இருந்தால் இதே மாதிரி இணையத்துல கிடைக்கற படத்தை எடுத்து இஷ்டத்துக்கு கதை எழுதுங்க. நம்பறவங்க நிறைய பேர் இருக்காங்க.

  • 306
·
Added a post

1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.

2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.

3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.

5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.

6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.

7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.

8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.

வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.

9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.

ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

11, உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

  • 306
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 12.12.2025.

இன்று இரவு 08.00 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று காலை 09.21 வரை பூரம் . பின்னர் உத்திரம்.

இன்று மாலை 03.52 வரை பரீதி. பிறகு ஆயுஷ்மான்.

இன்று காலை 07.52 வரை பாலவம். பின்னர் இரவு 08.00 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=354&dpx=2&t=1765512906

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 499
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

திட்டமிட்ட காரியம் நிறைவேறும். மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

ரிஷபம்

உயர்கல்வியில் தெளிவுகள் உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுப காரியம் கைகூடுவதற்கான சூழல்கள் தோன்றும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகும். தூரதேச பயணம் பற்றிய சிந்தனை மேம்படும். எதிலும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

மிதுனம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர்

 

கடகம்

சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். பணிகளில் மந்தமான போக்கு காணப்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவவேறும். திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்தை தரும். தியானம் மேற்கொள்வது மன பதட்டத்தை குறைக்கும். துணையுடன் அனுசரித்து செல்லவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

சிம்மம்

கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். இனம் புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கன்னி

குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் நீடிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் உழைப்புகள் மேம்படும். விமர்சன பேச்சுக்களை வெளிவட்டாரத்தில் தவிர்க்கவும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

துலாம்

சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பெண்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும். எதிரிகள் விலகி செல்வார்கள். சுப காரியங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும்.வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

விருச்சிகம்

குடும்பம் பற்றிய சிந்தனை அதிகமாகும். பெரியோர்களின் சந்திப்பால் மனமாற்றம் ஏற்படும். கடினமான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வியாபார தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். சகோதரிக்கு சுபகாரிய ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். மனதில் இருந்த சஞ்சலம் குறையும். சோர்வு மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

தனுசு

நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடி வரும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் வந்துசேரும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களுடன் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

 

மகரம்

புதிய தொடர்புகளில் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருல்களில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபார வரவுகளில் தாமதம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

கும்பம்

திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உள்ளத்தில் அமைதி ஏற்படும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

மீனம்

வெளிவட்டார பழக்கம் விரிவடையும். மனதில் உற்சாகம் பிறக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளால் திடீர் யோகம் உண்டாகும். தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்து திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

  • 501

Good Morning...

  • 451

அறம் மிகுந்த வாழ்வு

ஆறுதல் தரும் சொற்கள்

இதம் நிறைந்த பார்வை

ஈகை நலமிகு கரங்கள்

உறுதி குறையாத உள்ளம்

ஊக்கம் தணியாத நம்பிக்கை

எள்ளல் கலக்காத நடத்தை

ஏற்றம் சேர்ந்த குணம்

ஐயுறவு இல்லாத நட்பு

ஒழுக்கம் குன்றாத தலைமுறை

ஓதுதல் ஓம்பும் நாட்கள்

ஔடதம் தேடாத மணித்துளிகள்

அமைந்திட நல்வாழ்த்துகள்

வேண்டும் வேண்டும் வாழ்த்துங்கள்.

  • 451
·
Added a news

கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி, இணைய வழியில் வன்முறையைத் தூண்டும் அமைப்புக்களை தீவிரவாத பட்டியலில் இணைப்பதாக அறிவித்துள்ளார்.

இணையத்தின் ஊடாக இளையோர் மத்தியில் வன்முறையைத் தூண்டும் 764 என்ற அமைப்பினை தீவிரவாத இயக்கமாக கனடா அறிவித்துள்ளது.

இந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்த உலகின் முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.

கனடிய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அமைப்புடன் மேலும் நான்கு அமைப்புகள் கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன:

764, மெனியக் மெர்டர் கல்ட், டெரோகிராம் கலக்டிவ், இஸ்லாமிய ஸ்டேட் மொசாம்பிக் ஆகிய அமைப்புக்கள் இவ்வாறு தீவிரவாத இயக்கப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

அரசின் அறிக்கையில், 764 உள்ளிட்ட தீவிரவாத பட்டியலில் இணைக்கப்பட்ட அமைப்புக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களை பயன்படுத்தி ஆட்சேர்ப்பு நடடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த அமைப்புகள் தீவிரவாத சிந்தனைகளை பரப்புதல், மற்றும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வன்முறையைத் தூண்டுவது என்பனவற்றில் ஈடுபடுகின்றன என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவில் பொலிஸார் பலமுறை பெற்றோர்களுக்கு இந்த வலைப்பின்னலின் அபாயங்களை எச்சரித்துள்ளது. 764 அமைப்பு குழப்பம் மற்றும் வன்முறையின் மூலம் நாகரிக சமுதாயத்தை அழிக்க முயல்வதாக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த அமைப்புகள் குழந்தைகளை குறிவைக்கின்றன

அவற்றைத் தடுப்பதற்கு சட்ட அமலாக்கத்துக்கு மேலும் அதிகாரங்கள் தேவை. இந்த புதிய அறிவிப்பு அதை வழங்குகிறது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

  • 561
  • 555
  • 554