·   ·  3 videos
  •  ·  0 friends
  • 726
  • More

தேசிய பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்

 பாடசாலை குறித்து சர்வேஸ்வரன் 

Comments (0)
Login or Join to comment.
  • 397
·
Added article

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்திருக்கும் திரைப்படம் தான் 'வாரணாசி'. இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கீரவாணி இசையமைத்து இருக்கும் திரைப்படம் 1200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிற்கு வழக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா ஹைதரா​பாத்​தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய மகேஷ் பாபு, இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன் என்றார். இந்த விழாவுக்கு மட்டும் ரூ.25 கோடி செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், மகேஷ் பாபு ருத்ரா எனும் கதாபாத்திரத்திலும், பிரியங்கா சோப்ரா மந்தாகினி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ராமாயணக் காலத்​தில் தொடங்கி இன்​றைய நவீன காலத்​துடன் இணைத்து வகையில் 'வாரணாசி' கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது இந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் ஆகும். த்ரிஷா, நயன்தாரா, தீபிகா போன்ற முன்னணி நடிகைகள் ரூ.5-10 கோடி சம்பளம் பெறும் நிலையில் பிரியங்கா சோப்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

  • 47
·
Added article

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நயன்தாரா நேற்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலர் நயன்தாராவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்த நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு சூப்பர் கிப்டை பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தொகுப்பாளனியாக தனது பயணத்தை தொடங்கிய நயன்தாரா, மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த பிறகு தமிழில் அய்யா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். இவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவரின் 41வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன், தனது காதல் மனைவிக்கு Black Badge spectre உயர்தர சொகுசு காரை பரிசாக அளித்து இருக்கிறார். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உயிர், நீ பிறந்தா தினம்.... வரம், உன்னை உண்மையாகவே, வெறித்தனமாக, ஆழமாக நேசிக்கிறேன். என் அழகியே உன்னை நேசிக்கிறேன். உன் உயிர், உலக், பெரிய உயிர், உன் அன்பான மக்களிடமிருந்து அதிக உள்ள அன்பு நிறைந்த வாழ்க்கையுடனும் நன்றி கூறுகிறேன். பிரபஞ்சம் மற்றும் எல்லாம் வல்ல கடவுள் எப்போதும் சிறந்த தருணங்களை நமக்கு ஆசீர்வதிக்கிறார் ஏராளமான அன்பு, அசைக்க முடியாத நேர்மறை மற்றும் தூய நல்லெண்ணத்தால் மட்டுமே நிரம்பி இருக்கிறது என பதிவிட்டுள்ளார். காதல் மனைவி நயன்தாராவிற்காக அவர் பரிசாக அளித்து இருக்கும் காரின் விலை, Rs. 9.97 கோடி ஆகும். இந்த காரின் விலையை கேள்விப்பட்டு ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.

  • 46
·
Added article

சுனிதா கோகோய் முதலில் ஜூனியர் சுபாயா நடன ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர். அதைத் தொடர்ந்து 'த்ரீ' திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் பள்ளித் தோழியாக நடித்திருந்தார். அதன் பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கினார். அதன் பின், பிக் பாஸ் தமிழ் சீசனில் பங்கேற்று இன்னும் பரவலாக பேசப்பட்டார். அவரது இயல்பான பேச்சு, உற்சாகமான நடத்தை, டான்ஸ் திறன் ஆகியவற்றின் மூலம் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி சுனிதா, வெப் சீரிஸ்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில், ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும், சுனிதா தனது ஃபிட்னஸ் ஜர்னி, நடன ரீல்ஸ், பயண புகைப்படங்கள், ஃபேஷன் ஷூட்ஸ் போன்றவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார். அவரது ஒவ்வொரு பதிவும் ஆயிரக்கணக்கான லைக்குகளையும், நூற்றுக்கணக்கான கருத்துக்களையும் பெற்று வைரலாகிறது. அந்த வகையில் தற்போது இவர், நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதுநாள் வரை இதுபோன்ற கவர்ச்சியை காட்டாத சுனிதா திடீரென கவர்ச்சியில் எல்லை மீறியுள்ளது அவரது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் சுனிதாவை திட்டி வருகின்றனர்.

  • 49
  • 46
  • 46
  • 48
  • 47
  • 49
  • 49
·
Added a post

28இல் நுழைந்தாய்..

68இல் பிரிந்தாய்.

40வருட தாம்பத்யம்..

அதிக கொஞ்சல்கள்,

கம்மி சண்டைகள்..

அணுசரித்துப் போவதில் மன்னி நீ..

என்னையும் தான் இருக்கச் சொன்னாய்..

நீ இருந்தவரையில் அப்படி நான் இல்லை..

பஞ்சாயத்து பண்ண நீ இருந்தாய்.

நீ இல்லாத இப்போது

அனுசரித்து மட்டும் தான்

போக வேண்டி இருக்கிறது.

Kitchenஇல் நடக்கும் யுத்தம்..

பாத்திரம் தேய்க்க big boss போல shift..

காபி சூடாக இல்லை என்று எத்தனை தடவை கோபப்பட்டு இருப்பேன்

இப்போது பிரச்சினைகள் எப்போதும் சூடாக இருப்பதால் காணாமல் போய் விட்டது காஃபி

நம் ரூமில் நடுஇரவில் A/c ஆஃப் ஆகிவிடுகிறது.

Hallஇல் தூங்கினால் என்ன என்று ஜாடை மாடையாக உபதேசம்.

அனாயாசமாக 25 பேருக்கு சமைப்பாயே..

அதில் சுவையாய்

மணமும் இருக்கும்

உன் மனமும் இருக்கும்

இன்று எனக்கு google சமையல் பிடிக்கவே இல்லை.

ஒரே ஒரு நாள் எனக்காக இறங்கி வருவாயா நீ

இதமாக உன் கை விரல்களை

கோர்த்து கொண்டு காதலோடு சில மணி நேரம் காலாற நடக்க ஆசை

எனக்குப் பிடித்ததில் நீ செய்யாமல் போனது ஓன்று தான்.

கண்தானம்.

என்னையும் தடுத்தாய்..

நீ சொன்ன காரணம் மண்ணுலகில் கண்தானம் செய்துவிட்டால் விண்ணுலகிற்கு நீங்கள் வரும்போது எப்படி அடையாளம் கண்டுபிடிப்பேன் என்று கூறினாயே..

உண்மைதான்.

முன்போல் இல்லை உடல்நிலை.

எனக்கொரு இடம் முன்பதிவு செய்..

சந்திப்போம் விரைவில்.....

மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்

நமக்கே நமக்கான

வாழ்க்கையை

நமக்காக நாம் வாழ.

(மனதை கலங்க வைத்த கடிதம்)

  • 52
·
Added a post

ஒருமுறை ஆசிரமத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு செய்வதறியாது, தங்கியிருந்த பக்தர்களிடம்,'இன்று இரவு உணவோடு உக்கிராணம் காலி.

நாளை காலை உணவு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்' என்று நிர்வாகத்தால் பணிவோடு வேண்டுகோள் விடப்பட்டது.

சிலர் ஊருக்கு கிளம்ப விழைந்து பகவானிடம் உத்தரவுக்கு வந்த போது பகவான் காதுக்கு விஷயம் சென்றது.

பகவான் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

"காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

இந்த மலை இருக்கு.

பேசாம எல்லாம் போய்த் தூங்குங்கோ" என்று கூறி மௌனமானார்.

வழக்கம் போல அதிகாலை பகவான் கிச்சனுக்குள் நுழைந்தார்.

"என்ன இருக்கு?"என்று கேட்டார்.

'கொஞ்சம் நொய் குருணை தான் இருக்கு'என்றனர்.

"சரி எடுத்துக்கொண்டு வா!"

என்று கூறிவிட்டு அடுப்பைப் பற்ற வைத்தார்.

காலை 5:30 மணி,கைப்பிடி குருணையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

ஒரு பாத்திரத்தில் போட்டுக் கழுவினார்.

உலை கொதித்ததும் அரிசியைப் போட்டார்.

அருகில் இருந்த அண்ணாமலை சுவாமி,'என் ஒருவனுக்கே இது பத்தாது.

எப்படி இத்தனை பேர் சாப்பிடறது இதை!' என்று வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

அரிசி பொங்கி வந்த போது ஒரு பக்தர் தரிசனத்துக்கு 2 லிட்டர் பாலுடன் வந்தார்.

பகவான் பெரிய பாத்திரத்தை வைத்து அதில் பாலையும், அரிசியையும் சேர்த்து வேகவைத்தார்.

சில நிமிடங்களில் ஒரு பக்தர் கற்கண்டு, உலர் திராட்சையுடன் தரிசிக்க வந்தார்.

பகவான் அதைச் சுத்தம் செய்து அதையும் பாத்திரத்தில் போட்டார்.

ஆறரை மணி அளவில் அது முடிவுக்கு வந்த போது கும்பகோணத்தில் இருந்து பக்தர்கள் சிலர் வந்தனர்.

அவர்கள் பெரிய பானையில் இட்லி, வடை,சட்னி,மலைவாழைப்பழம்,

தொன்னை முதலியன கொண்டு வந்திருந்தார்கள்.

வழக்கமாக காலை 7 மணிக்கு பகவான் குளித்துவிட்டு வந்து, அனைவரும் அமர்ந்து அருமையான உணவு உண்டனர்.

பகவான் தயாரித்த பாயாசம் அந்தத் தொன்னையில் எல்லோருக்கும் பரிமாறப்பட்டது.

  • 59
·
Added article

நடிகர் திலகம் தன் துணைவியாரோடு தஞ்சைக்கு வருகிறார். காரில் போய்க் கொண்டு இருக்கும் போது ஒரு தெரு முனையில் வண்டியை நிறுத்தச் சொல்லி கட்டளையிடுகிறார்.. வண்டியிலிருந்து இறங்கி தெருவில் நடந்து செல்கிறார் தன் துணைவியாருடன்.. ஒரு சாதாரண குடிசை முன் நிற்கிறார். நடிகர் திலகம் வந்ததையறிந்து தெருவில் மக்களின் ஆரவாரங்கள்...

ஏதோ சத்தம் கேட்கிறதே என எண்ணி வீட்டிற்குள் இருந்து ஒருவர் எட்டி பார்க்கிறார்.. தன் வீட்டின் வாசலில் வந்து நிற்கும் நடிகர் திலகத்தையும் அவர் மனைவியையும் பார்த்து வார்த்தைகள் வராமல் தவிக்கிறார். கண்களில் ஆனந்தக் கண்ணீர்.. "அண்ணே வாங்கண்ணே" என்கிறார்.. அதற்குள் வீட்டிற்குள் இருந்து பத்து நாட்களுக்கு முன் மணமுடித்த தம்பதியினர் வருகிறார்கள்.. அவர்கள் இருவரும் காலில் விழுந்து வணங்குகிறார்கள். தம்பதி சகிதம் ஆசி வழங்குகிறார்கள். டிரைவர் இரண்டு பைகளை கொண்டு வந்து தருகிறார். அதனை மணமக்கள் கையிலே கொடுக்கிறார் கமலாம்மாள். இரண்டொரு வார்த்தை பேசி விட்டு நகர்கிறார்கள். அப்பொழுது குடிசை வீட்டின் உரிமையாளர் நடிகர் திலகத்திடம் "அண்ணே ஏதாவது சாப்பிட்டு விட்டு போங்க" என்று சொல்கிறார். உடனே தன் மனையாளை பார்க்கிறார்.

தண்ணீர் வாங்கி கைகளை அலம்பி விட்டு குனிந்து குடிசைக்குள் நுழைந்து தரையில் அமர்கிறார்கள். வீட்டில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் சாப்பிட அழைத்து விட்டோமே என்று பதட்டத்தில் அழைத்தவர் முழிக்க பரவாயில்லை இருப்பதை சாப்பிடுகிறேன் என்று சொல்லி அவர்களால் உள்ளன்போடு பரிமாறப்பட்ட பதார்த்தங்களை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்கள்.

தன் மகனின் திருமண விழாவிற்கு தனக்கு அழைப்பிதழ் அனுப்பிய ஒரு சாதாரண ரசிகனை ஞாபகத்தில் வைத்து தஞ்சை வந்த நேரத்தில் அவர்களின் இல்லம் சென்று ஆசி வழங்கியதோடு மட்டுமில்லாமல் தரையில் அமர்ந்து சாப்பிட்டு ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய பாசமிகு நடிகர் திலகமும் கமலாம்பாளும்..

அந்த ரசிகர் ஒரு சலவை தொழிலாளி என்பது கூடுதல் தகவல்.

  • 69
·
Added a post

அமாவாசை நாளில் கடைகளில் (கடைகள், வீடுகள், தொழிற்சாலைகள், புதிய வாகனங்கள் போன்ற இடங்களில்) பூசணிக்காய் உடைக்கும் பழக்கம் மிகவும் பழமையானதும், ஆழமான ஆன்மீகப் பொருளுடையதுமாகும்.

இது வெறும் சடங்காக அல்லாமல், நம் இடத்தையும், நம் செயல்பாடுகளையும் எதிர்மறை சக்திகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு சக்திவாய்ந்த தெய்வீக வழிபாடாக கருதப்படுகிறது.

அமாவாசை என்பது சந்திரன் முழுமையாக காணாத நாள். இந்த நாள் ஆற்றல்கள் மிகவும் நுண்மையானதாகவும், ஆன்மீகத்தை எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டதாகவும் கருதப்படுகிறது.

அதே சமயம், எதிர்மறை அலைகள் அதிகமாக செயல்படுவதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால், கடை அல்லது தொழில் நடைபெறும் இடத்தை நல்ல சக்திகள் நிரம்பச் செய்வதற்கும்,

கெட்ட சக்திகளை அகற்றுவதற்கும், வியாபாரம் சிறக்க பூசணிக்காய் உடைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

பூசணிக்காய் உடைப்பதின் ஆன்மீக அர்த்தம்

‘துஷ்ட சக்தி’ நிவாரணம் :

பூசணிக்காய் உள்ளே இருக்கும் நாரும், விதைகளும் எரிச்சல், தோஷம், பட்டினி சக்தி போன்றவற்றை உறிஞ்சும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.

பூசணிக்காய் உடைப்பதன் மூலம்:

சுற்றுப்புறத்தில் இருக்கும் எதிர்மறை அதிர்வுகள் விலகும், தீய சக்திகளின் தாக்கம் முறிவடையும் என்று நம்பப்படுகிறது.

பிள்ளையார் திருஷ்டி நீக்கம் :

அதிக மக்கள் வருகிற கடைகள் அல்லது புதியதாக துவங்கும் தொழில்களுக்கு "கண்திருஷ்டி" எனப்படும் எதிர்மறை ஆற்றல் படும் என்று நம்புவர்.

  • 109
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் ஆதரவுகள் மேம்படும். எதிர்பாராத சிலரின் அறிமுகங்கள் உண்டாகும். புதிய தொழில் நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகள் கைகூடும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

ரிஷபம்

உத்தியோகத்தில் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். வியாபாரத்தில் இருந்த மந்த தன்மை விலகும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மிதுனம்

அக்கம்பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் பெருகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும். புதிய கனவுகள் பிறக்கும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கடகம்

நினைத்த காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவுகள் வழியில் அனுபவம் மேம்படும். கலைப் பொருள்களில் கவனம் வேண்டும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

குடும்பத்தில் ஆதரவுகள் மேம்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் புரிதல் அதிகரிக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

கன்னி

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தன வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய சிக்கல்கள் விலகும். வியாபார ரகசியங்களை புரிந்து கொள்வீர்கள். உணவு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அலுவலக பணிகளில் துரிதம் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

 

துலாம்

நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். திருமண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் நிலவும்.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

விருச்சிகம்

தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான சூழல் ஏற்படும். வர்த்தகத்தில் சிந்தித்து செய்லபடவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டார நட்புகளால் புதிய அனுபவம் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

தனுசு

தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். ஒப்பந்தங்களில் இருந்த தாமதங்கள் விலகும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். உத்தியோகத்தில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மகரம்

பணியிடத்தில் மதிப்புகள் மேம்படும். துணைவரிடத்தில் ஒத்துழைப்புகள் ஏற்படும். விவாசாயம் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். பழைய அனுபவங்கள் பற்றிய சிந்தனைகள் உருவாகும். விவாத போக்குகளை தவிர்த்துக் கொள்ளவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கும்பம்

உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூட்டாளிகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

மீனம்

எண்ணிய சில பணிகள் தடைப்பட்டு முடியும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். விமர்சன பேச்சுகள் தோன்றி மறையும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உதவிகள் செய்வதில் கவனம் வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். பலவினங்களை புரிந்து கொள்வீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

  • 260
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 3 ஆம் தேதி புதன்கிழமை 19.11.2025.

இன்று காலை 10.27 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

இன்று காலை 09.21 வரை சுவாதி . பின்னர் விசாகம்.

இன்று காலை 10.00 வரை சௌபாக்கியம். பின்னர் ஷோபனம்.

இன்று காலை 10.27 வரை சகுனி. பின்னர் இரவு 11.29 வரை சதுஷ் பாதம். பின்பு நாகவம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=332&dpx=2&t=1763527147

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 263

Good Morning...

  • 257
  • 421
  • 420
·
Added article

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை சனம் ஷெட்டி. இவர் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'அம்புலி' படம் மூலம் தமிழ் சினிமா அறிமுகமானார். பின் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் சனம் ஷெட்டி நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

2016ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா பட்டத்தை பெற்ற சனம் ஷெட்டி, பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக இருந்த தர்ஷனின் முன்னாள் காதலியாவார். தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். எங்கள் இருவருக்கும் நிச்சயம் நடந்துவிட்டது. ஆனால், தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சி பின் தர்ஷன் பிரபலமாகி விட்டதால், தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த தர்ஷன், நான் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது சனம் ஷெட்டி, தன் முன்னாள் காதலருடன் சேர்ந்து விடிய, விடிய பார்ட்டி நடத்தினார். அந்த விஷயம் எனக்கு தெரிந்ததால், நான் அவரைவிட்டு விரிந்து விட்டேன், ஆனால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதாக அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் அப்போது பேசுபொருளானதால், சினிமா மூலம் பிரபலமாகாத சனம் ஷெட்டி இந்த விஷயத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து, பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடிய வீட்டில் 64 நாட்கள் இருந்தார்.

தற்போது, சனம் ஷெட்டிக்கு படவாய்ப்பு எதுவும் இல்லாததால், இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பெண்களுக்கும், மக்களுக்கும் எதிராக நடக்கும் பல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி நீச்சல் குளத்தில் போட்டோஷூட் எடுத்து இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், மிகவும் கவர்ச்சியாக நடிகை சனம் ஷெட்டி போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இது தேவையில்லாத வேலை என்றும், கன்றாவி இருக்கு என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • 454
·
Added a news

வடக்கு ஒண்டாரியோ மாநிலத்தில், உயர் தூய்மையான லித்தியம் கொண்ட பாறைகள் நிறைந்த 6 புதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது, கனடாவின் மின்கல உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பு துறைகளுக்கு மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த புதிய இலக்குகள், ஏற்கனவே திறந்த குழி (open pit) முறையில் சுரங்கம் செய்யக்கூடிய வளங்களின் அருகே அமைந்துள்ளதால், எதிர்காலத்தில் பகிரப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் லொஜிஸ்டிக்ஸ் (Logistics) மூலம் சுரங்கப்பணி எளிதாகும்.

ஜார்ஜியா லேக் (Georgia Lake) பகுதியில், லித்தியம் தாதுக்கள் பொதுவாகக் காணப்படும் பெக்மடைட் (pegmatite) கற்களில் இந்த வளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

P&E Mining Consultants Inc. நிறுவனம், இந்த திட்டத்தின் மினரல் வள மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளது. தற்போதைய மதிப்பீட்டின்படி, 3.4 மில்லியன் short tons (indicated) 0.85 சதவீதம் Lithium oxide மற்றும் 5.8 மில்லியன் short tons (inferred) 0.91 சதவீதம் Lithium oxide உள்ளது. இங்கு காணப்படும் லித்தியம் தாது spodumene ஆகும்.

ஆய்வக சோதனைகள், இதனை 6 சதவீதம் Lithium oxide concentrate-ஆக மேம்படுத்த முடியும் எனவும், சுமார் 81.5 சதவீதம் மீட்பு விகிதம் (recovery rate) கிடைக்கும் எனவும் காட்டுகின்றன.அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) 2025 அறிக்கையின் படி, உலகளவில் உற்பத்தியாகும் லித்தியத்தில் 87 சதவீதம் மின்கலங்களில் (Battery) பயன்படுத்தப்படுகிறது.

  • 458
·
Added a news

கனடாவில் டென்னிஸ் வீரர் ஓருவரின் உயிரை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றிய ஐந்து பேருக்கு வீரத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் கடந்த கோடை காலத்தில் மயங்கி விழுந்த டென்னிஸ் வீரர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய குழுவொன்றுக்கு இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 5ஆம் திகதி பிரையன் சீ (Brian Seay) எனும் டென்னிஸ் வீரர் மைதானத்தில் மாரடைப்பு காரணமாக விழுந்த போது, ஐந்து பேர் உடனடியாக ஓடி வந்து உதவினர். அவர்கள் பிரையனை மயக்க நிலையில், மூச்சில்லாமல், இதயத் துடிப்பின்றி இருந்ததை கண்டனர் என்று பிரிட்டிஷ் கொலம்பிய அவசர மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் உடனடியாக 911க்கு அழைத்ததுடன், அவசர முதலுதவி செய்து, டெஃபிப்ரில்லேட்டரை (defibrillator) பயன்படுத்தினர்.

உடன் விரைந்து செயற்பட்டதனால் உயிர்காப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே பிரையனின் இதயத் துடிப்பு மீண்டும் செயற்படத் தொடங்கியது.

இந்த நற்பண்புகள் கொண்டவர்களின் உடனடி செயல் இல்லையெனில் அவர் இன்று உயிருடன் இருக்க முடியாது என பிரையனின் மனைவி ரே சீ (Rae Seay) தெரிவித்துள்ளார். உயிரை மீட்டவர்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரையன் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 461
·
Added a post

ஜோ ஒரு தச்சர். அவர் மலைப்பகுதிகளில் வீடுகளைக் கட்டினார். ஜோவின் மனைவி ஸ்டெல்லா நேர்த்தியான ஆடைகளைத் தைக்க ஊசி மற்றும் நூலைப் பயன்படுத்தினார். துணிகளைத் தைக்க அழகான துணியை மட்டுமே பயன்படுத்தினார்.

அவர்களிடம் அதிக பணம் இல்லாததால், அவர்கள் ஒரு பழைய கொட்டகையில் வசித்து வந்தனர். மழை பெய்யும்போது தண்ணீர் சொட்ட

சில நேரங்களில் மாலையில், அவர்கள் நகர மையத்தில் நடந்து செல்வார்கள். கடை ஜன்னல்களைப் பார்த்து கனவு காண்பார்கள். ஸ்டெல்லாவுக்கு தந்த கைப்பிடி கொண்ட ஒரு ஹேர் பிரஷ் வேண்டும் என்று ஆசை. அழகாக மாற்றுவதற்கு பிரஷ் இல்லாததால், அவள் தினமும் தன் தலைமுடியை மேலே இழுத்தாள். ஜோ தனது தாத்தாவின் கடிகாரத்தை சரிசெய்ய விரும்பினான்.

அவர்களின் திருமண ஆண்டு விழாவிற்கு, ஸ்டெல்லா ஜோவுக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கித் தர விரும்பினாள். ஆனால் பின்னர் அவள் கணக்குப் போட்டாள். போதுமான பணத்தை சேமிக்க குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். பின்னர் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவள் தன் முடியை எல்லாம் வெட்டி விற்றுவிட்டாள்.

இதற்கிடையில், ஜோ தனது கடிகாரத்தை ஒருபோதும் சரிசெய்ய முடியாது என்பதை அறிந்திருந்தான். அதனால் அவன் அதை பாலிஷ் செய்து விற்றான். ஹேர் பிரஷ் வாங்கும் அளவுக்கு அவன் சம்பாதித்தான்.

அவர்களின் திருமண ஆண்டு விழாவில், கதவு திடீரெனத் திறந்தது. ஸ்டெல்லாவுக்கு தனது பரிசை வழங்க ஜோ உற்சாகமாக இருந்தார். ஆனால் முதலில், ஸ்டெல்லா கடிகாரத்தை சரிசெய்ய பணத்தை அவருக்குக் கொடுத்தார். அவரது மனைவி முடி இல்லாமல் இருப்பதைக் கண்டதும், அவர் சிரித்தார். "உனக்கு ஹேர் பிரஷ் வாங்குவதற்காக நான் என் கடிகாரத்தை விற்றேன்," என்று ஜோ கூறினார். அவர் அவளுக்கு ஹேர் பிரஷ்ஷை கொடுத்தார், அவள் சிரித்தாள்.

ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியடைய மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றை விட்டுக்கொடுக்க அவர்கள் இருவரும் தயாராக இருந்தனர்.

  • 481
·
Added a post

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.

மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது.

ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.

கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார்.

மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான்.

விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை.

நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய்.

யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்.

உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.

அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!

  • 483