தேசிய பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் தேதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்திருக்கிறது. நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து, இந்த வசூல் நிலையை அடைந்திருக்கிறது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
‘யூத்’ படத்தின் முதல் நாள் வசூலைவிட, 11-வது நாள் வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சுராஜ் வெஞ்சுரமுடு, தேவதர்ஷினி, அனிஷ்மா உள்ளிட்ட பலர் கென் கருணாஸுடன் நடித்திருந்தனர். முழுக்க புதுமுகங்கள் நடித்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
‘யூத்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்கள் கென் கருணாஸை நாயகனாக நடிக்கவைக்க தொடர்பு கொண்டு வருகிறார்கள். ஆனால், ‘யூத்’ படத்தினை விளம்பரப்படுத்த பல்வேறு ஊர்களுக்கு படக்குழுவினருடன் பயணப்பட்டு வந்தார் கென் கருணாஸ்.
இப்படத்தினை பார்த்துவிட்டு சூர்யா, கார்த்தி, சிம்பு உல்ளிட்ட பலர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 10-ம் தேதி ’எல்.ஐ.கே’ திரைப்படம் வெளியாகும் என்று ப்ரோமோ வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் திட்டமிட்டப்படி முடிவடையவில்லை. இதனால் பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இறுதியாக ஏப்ரல் 3-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த தேதியிலும் வெளியாகாது என தகவல்கள் பரவின. இறுதியாக விக்னேஷ் சிவன், அனிருத் மற்றும் பிரதீப் ரங்கநாதன் மூவரும் இணைந்து ப்ரோமோ வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அதில் ஏப்ரல் 10-ம் தேதி கண்டிப்பாக வெளியீடு என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் இந்த தேதியில் இப்படம் வெளியாகும் என்று விநியோகஸ்தர்களும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
சீமான், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்துள்ள படம் ‘எல்.ஐ.கே’. இதனை லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் வீட்டில் சோகம் நிகழ்ந்துள்ளது. அவரது தாயார் சுவர்ணலதா (86) காலமானார். வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திங்கள்கிழமை காலை பிரகாஷ் ராஜின் இல்லத்தில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் தாயாரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கனடாவின் மிட்லாந்து பகுதியில் சனிக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகத்திற்கிடமான ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால், அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற அச்சத்தில் போலீசார் அவசர நடவடிக்கை எடுத்தனர்.
இரவு சுமார் 11 மணியளவில் டொனால்டா வீதி – ஜான்சன் வீதி அருகே சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு இளைஞர்கள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பழைய இராணுவ ஆயுதத்தைப் போன்ற ஒரு பொருளை கண்டுபிடித்துள்ளனர். அதை அருகிலுள்ள வீட்டுக்குள் கொண்டு சென்ற பின்னரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த வீட்டிலிருந்தவர்களையும் அருகிலுள்ள குடியிருப்பாளர்களையும் பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.
மேலும், அந்த பகுதி முழுவதும் மூடப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, OPP வெடிகுண்டு அகற்றும் பிரிவும் (Explosives Disposal Unit) அழைக்கப்பட்டது.
நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகு, அந்த பொருள் உண்மையில் வெடிகுண்டு அல்ல; இராணுவ பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட சாதனம் என்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், அந்த பொருள் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, போலீஸ் காவலில் எடுக்கப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், எரிபொருள் விலை இந்த வாரம் லிட்டருக்கு 2 டொலர் வரை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் கார் பயணங்களுடன் விமான பயணங்களும் கடுமையாக பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ் பகுதியில் நடைபெறும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், உலகளவில் எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலைகள் உயர்ந்து வருகின்றன.
ட்ரூடோ விமான நிலையம் பகுதியில் பயணிகள் செலவுகளை சமாளிக்க சிரமப்படுகின்றனர்.
“விமான டிக்கெட் விலை அதிகமாக உள்ளது, ஆனால் அதை ஏற்க வேண்டியதே” என சிலர் தெரிவித்தனர்.
ஜான் கிரடெக் கூறுகையில், “கார் எரிபொருள் லிட்டருக்கு 40–50 சென்ட் வரை உயர்ந்துள்ளது; விமான எரிபொருள் விலை இரட்டிப்பாகியுள்ளது” என்றார்.
இதன் தாக்கமாக போர்டர் ஏர்லைன்ஸ் சில விமான டிக்கெட்டுகளுக்கு 40 டொலர் வரை எரிபொருள் கட்டணத்தை அறவிடத் தொடங்கியுள்ளது.
இது தற்காலிக நடவடிக்கை என நிறுவனம் தெரிவித்தாலும், இதுபோன்ற கட்டணங்கள் நிரந்தரமாகிவிடும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கனடாவில் எமிலி கோசாக் என்ற 95 வயதான மூதாட்டி, தனது அர்ப்பணிப்பு மற்றும் அயராத சேவையால் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
ஹோலி ஃபாமிலி நர்சிங் ஹோம் எனும் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் கடந்த 34 ஆண்டுகளாக தன்னார்வ தொண்டராக செயல்பட்டு வருகிறார். 1992ஆம் ஆண்டு தனது தாயார் அங்கு வசித்தபோது தொடங்கிய இந்த சேவை, இன்று வரை இடையறாது தொடர்ந்து செய்து வருகிறார்.
நோயாளிகளுக்கு உணவு வழங்குதல், பிங்கோ விளையாட்டுகளை நடத்துதல், தேவையான உதவிகளை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
95 வயதிலும் தினமும் சுமார் 3 கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டு, அனைவரின் வாழ்விலும் ஒளி சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
“ஒவ்வொரு நாளும் எனக்கு செய்ய ஏதோ ஒன்று இருக்க வேண்டும்” என்ற அவரது வாழ்க்கை நோக்கம் பலருக்கும் ஊக்கமாக உள்ளது.
முன்னதாக இடுப்பு எலும்பு முறிவு, புற்றுநோய், இதய நோய் தாக்கங்கள் போன்ற சவால்களை சந்தித்திருந்தாலும், அவை எதுவும் அவரது சேவையை தடுக்கவில்லை.
தற்போது நடை உதவிக்கருவி பயன்படுத்தினாலும், தனது தொண்டை தொடர்ந்து செய்கிறார்.
இந்த நர்சிங் ஹோமின் பராமரிப்பு இயக்குநரான ஸ்டேசி மோர்கன், “எமிலி போன்ற தன்னார்வலர்கள் எங்கள் அமைப்பின் இதயம். அவர் தினமும் வந்து நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துகிறார்” என்று பாராட்டினார்.
மேலும், 60-70 பெண்கள் கொண்ட தன்னார்வ குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் எமிலி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். “95 வயதிலும் இவ்வாறு சேவை செய்வது மிக அபூர்வம்” எனவும் அவர் குறித்து கூறப்படுகிறது. “மற்றவர்களும் அதிகமாக தன்னார்வ பணிகளில் ஈடுபட வேண்டும்” என எமிலி கோசாக் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சிறிய உதவிகள்கூட பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதையே அவரது வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சகோதரர்களிடம் ஒற்றுமை ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல்கள் உருவாகும். பூர்விக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். ஓய்வு தேவைப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
ரிஷபம்
கடன் சார்ந்த சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்கள் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவு பெறும். விருப்பமானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். தாயுடன் அனுசரித்து செல்லவும். குழந்தைகளை பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். அமைதி காக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
பணிகளில் இடமாற்றங்கள் சாதகமாக அமையும். திறமைக்கான மதிப்புகள் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். ஆரோக்கியம் பற்றிய கவலைகளைத் தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் மேம்படும். தனலாபம் பெருகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பேச்சுத் திறமையால் லாபங்கள் அதிகரிக்கும். பொன் பொருட்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். விளையாட்டுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகள் பலப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சிம்மம்
ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் ஏற்படும். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். ஆரோக்கியம் கூடும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வெளி வட்டங்களில் அலைச்சல்கள் மேம்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களால் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்புக்கு உண்டான லாபங்கள் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய முதலீடுகளில் விவேகம் வேண்டும். இன்பமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வருங்கால சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பிள்ளைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
கால்நடை துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பேச்சுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபார இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். அரசு பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சல் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நினைத்த சில பணிகள் நிறைவேறுவதில் விவேகம் வேண்டும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் உயர்கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பாசம் பொழியும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் வருத்தம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமற்ற சூழல் ஏற்படும். மனதில் தோன்றும் கருத்தை நிதானமாக சொல்வது நன்மை தரும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மீனம்
ஆரோக்கிய இன்னல்கள் குறையும். எதிர்ப்புக்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள்.மனதில் பணி மாற்ற சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத தன வரவும் அதற்கேற்ப செலவும் உண்டாகும். வெளி வட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். நிம்மதி நிலைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 16 ஆம் தேதி திங்கட்கிழமை 30.3.2026.
இன்று காலை 08.26 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.
இன்று மாலை 03.47 வரை மகம். பின்னர் பூரம்.
இன்று மாலை 05.32 வரை சூலம். பின்னர் கண்டம்.
இன்று காலை 08.26 வரை பாலவம். பின்னர் இரவு 08.06 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
இன்று மாலை 03.47 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30 முதல் 07.30 மணி வரை
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
கனடாவின் புதிய ஜனநாயகக் (NDP) கட்சியின் புதிய தலைவராக அவி லிவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கூட்டாட்சித் தரத்தில் தனது செல்வாக்கை இழந்துள்ள கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமைத் தேர்தலில் 56% ஆதரவு பெற்று, 39,734 உறுப்பினர்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற லிவிஸ், “எங்கள் கட்சி மீண்டும் எழுகிறது” என உறுதியளித்தார்.
புதிய தலைவர் தனது உரையில், அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்களையும், டிரம்ப் தலைமையிலான உலக அரசியல் சூழ்நிலையையும் கடுமையாக விமர்சித்தார்.
சாதாரண மக்களுக்கு வாழ்க்கை நடத்துவதும் கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், கனடாவின் முக்கிய அரசியல் கட்சிகள் செல்வந்தர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், பணக்காரர்களுக்காக அல்ல, பொதுமக்களுக்காக செயல்படும் அரசை உருவாக்குவோம்” என தெரிவித்துள்ளார்.
அவி லிவிஸ் ஒரு அனுபவமிக்க பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குநர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல
வீட்டு வாசலில் பெண் பிள்ளையின் கொலுசு ஒலி *ஐஸ்வர்யம்*
வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி *ஐஸ்வர்யம்*
எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு *ஐஸ்வர்யம்*
அம்மா கையால் உணவு *ஐஸ்வர்யம்*
மனைவி பார்க்கும் ஓரக் கண் பார்வை *ஐஸ்வர்யம்*
பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் *ஐஸ்வர்யம்*
இளஞ்சூடு சூரியன் *ஐஸ்வர்யம்*
பவுர்ணமி தினத்தில் நிலவு *ஐஸ்வர்யம்*
உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும் இந்த பஞ்ச பூதங்கள் *ஐஸ்வர்யம்*
பால் வடியும் குழந்தையின் சிரிப்பு *ஐஸ்வர்யம்*
இயற்கை அழகு *ஐஸ்வர்யம்*
உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு *ஐஸ்வர்யம்*
அவசரத்தில் உதவும் நண்பன் *ஐஸ்வர்யம்*
புத்தியுள்ள குழந்தைகள் *ஐஸ்வர்யம்*
குழந்தைகள் படிக்கும் படிப்பு *ஐஸ்வர்யம்*
கடவுள் கொடுத்த உடல் ஆரோக்கியம் *ஐஸ்வர்யம்*
ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு *ஐஸ்வர்யம்*
ஐஸ்வர்யம் என்றால் கையால் எண்ணும் பணக்கட்டு அல்ல
கண்ணால் பார்க்கும் உலகம் *ஐஸ்வர்யம்*
மனசு அடையும் சந்தோஷம் *ஐஸ்வர்யம்*
*நம்மை சுற்றி நல்ல உண்மையான நண்பர்கள் இருந்தால் *ஐஸ்வர்யம்...*
My list of *Aishwaryams* :-
எத்தனை வயது ஆனாலும் உரிமையுடன் போடா வாடா எனப்பேசும் பால்ய நண்பர்கள் *ஐஸ்வர்யம்*
கணவன் மனதில் ஒரு பொருளை நினைக்கும் போதே (கேட்காமல்) கொண்டு வரும் அன்பான மனைவி *ஐஸ்வர்யம்*
ஆயுள் இறுதி வரையிலும் சின்ன வயதில் உடன் பிறப்புகளுக்கு செய்த நல்லவைகளை அவர்கள் மறக்காமல் மதிப்பது *ஐஸ்வர்யம்*
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்து இருந்தாலும், வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் சொந்தமாக ஒரு பாதுகாப்பு இருப்பது *ஐஸ்வர்யம்*
பெற்ற பிள்ளைகளை பாசமுடன் வளர்ப்பதும், நல்ல கல்வி அளிப்பதும், பின் பணியில் அமர்வதும், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் *ஐஸ்வர்யம்*
பேரப்பிள்ளைகள் பெறுவதும், அவர்கள் தாத்தா-பாட்டியுடன் விளையாடி வளர்வதும் *ஐஸ்வர்யம்*
நோயற்ற வாழ்வும், இறுதிவரை யாருக்கும் சிரமம் கொடுக்காமல், வாழ்க்கைப் பயணம் முடிவதும் *ஐஸ்வர்யம்*
ஒருமுறை கிருஷ்ண தேவராயர் சபையில் ஒரு வாதம் மனிதனின் குணம் நாய் குணத்தை போன்றது ஏப்படி நாய் வாலை நிமித்த முடியாதோ அது மாதிரி என்று கூற, மன்னர் இதை ஆதாரத்தோடு நிரூபணம் செய்ய ஒரு போட்டி வைத்தார் அதாவது நான்கு நாய் குட்டிகள் நால்வர் வளர்க்க வேண்டும் நிர்ணயம் செய்யப்பட்ட காலத்தில் கொண்டு வர வேண்டும் அப்பொழுது யார் நாயின் வாலை நிமிர்த்தி காட்டுகிறார்கள் என்று பார்க்கலாம் .
முதல் நாய் குட்டி கொட்டாயா என்பவருக்கும் இரண்டாவது நாய் குட்டி ராஜாவின் புரோகிதருக்கும் மற்றும் மூன்றாவது நாய் குட்டி தெனாலி இராமனிடமும் மூன்றாவது நாய் மன்னரிடம் வளர பணிக்கப்பட்டது.
முதலில் கொட்டாய நாயை தன் வீட்டிற்க்கு எடுத்து சென்று நாயின் வாலில் ஒரு குச்சியை வைத்து வாலை நிமிர்த்தி நூல் கொண்டு கட்டி விட்டார் , ஆறு மாதம் கழித்து கட்டாயம் தனக்கு நிறய பொண்ணும் பொருள் கிடைக்கும் என்று எண்ணினர்.
அடுத்து ராஜாவின் புரோகிதர் நாயின் வாலை ஒரு பெரிய குண்டை கட்டி தொங்க விட்டார் அவருக்கும் அதே எண்ணம் .
அடுத்து மன்னர் அவரும் தான் பங்கிற்கு ஒரு பெரிய உருளைமற்றும் கம்பியை வால் உடன் இணைத்து விட்டார்.
கடைசியாக நம்ம தெனாலி ராமன் நாயை ஒரு தூணில் கட்டி வாலை அந்த தூணில் இழுத்து கட்டி விட்டார்.ஆனால் அதற்கு மிகுந்த குறைவான உணவை மட்டும் வழங்கினார்.
இப்படியே ஆறு மாதம் ஓடி விட்டது.
சபையில் சந்திக்க வேண்டிய நாள்.
முதலில் கொட்டயா தான் நாயின் வாலில் இருந்த நூலை அவிழ்த்து அந்த குச்சியை நீக்கினார் , வால் சட்டென்று சுருண்டது. தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
அடுத்து ராஜாவின் பிரோகிதர், நாயின் வாலில் இருந்த குண்டை அகற்றினார் அதுவும் சுருண்டது .
மன்னரும் அது மாதிரி தான் அந்த இரும்பு கம்பியை அகற்றினார் அதுவும் சுருண்டு கொண்டது.
தெனாலி ராமன் நாயோ உணவு சரி வர உண்ணாதலால் மிகவும் சோர்ந்து நிற்க கூட சக்தி இல்லாமல் இருந்தது தெனாலி அதன் வாலை அவிழ்க்க அது தன் வாலை சுருட்ட கூட சக்தி இல்லாமல் அப்படியே நீண்டு இருந்தது.
தெனாலி மன்னனிடம் விளக்கினான் மனிதனும் அப்படித்தான் எல்லாம் தேவைக்கு மேல் இருந்தால் அவனுக்கு ஆணவம் அதிகமாகி விடும் என்று விளக்கம் கொடுத்தான்.




