தேசிய பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலையும் மீறி, அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனேடிய வரிவிதிப்புக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.
ஜனநாயகக் கட்சியினர் முன்வைத்த, கனேடிய வரிவிதிப்புக்கு எதிரான மசோதாவுக்கு ஆதரவாக 219 பேரும், எதிராக 211 பேரும் வாக்களிக்க, மசோதா வெற்றிபெற்றுள்ளது.
அதாவது, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவை, கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதிக்கக்கூடாது என்கிறது. விடயம் என்னவென்றால், இனி இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
அங்கும் அது வெற்றி பெற்றாலும், கடைசியாக முடிவெடுக்கவேண்டியது, அதாவது, மசோதாவில் கையெழுத்திடவேண்டியது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்தான் என்பதால், நாடாளுமன்றத்தில் வெற்றிபெற்றாலும் கூட, இந்த மசோதா அமல்படுத்தப்படுமா என்பது சந்தேகமே என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கைகளும் சுத்தமாக இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே லிங்க முத்திரையாகும்.
இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.
லிங்கம், வெப்பத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. இது, வெப்பம் மற்றும் உயிர்சக்தியைத் தன்னிடத்தில் உள்ளடக்கி, நோய் க்கிருமிகள், உடலில் தேங்கி உள்ள கழிவுகளை அகற்றவல்லது. பல மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்த்தல் உள்ளிட்ட பலனை சில நிமிடங்களில் இந்த முத்திரை தந்துவிடும்.
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து சரியான அளவில் இருக்கும்.
மேலும் இந்த முத்திரை ஜலதோசத்திற்கு நிவாரணம் தரும்.
பெண்கள்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டைவிரலை உயர்த்த வேண்டும்.
ஆண்கள்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.
மனிதர்களுக்கு உண்டான இயல்புதான். அதிலும் பெண்கள் இதில் அதிக கவனம் கொண்டவர்கள். மிக விலை உயர்ந்த கிரீம்கள் (Creams), ஃபேஸ் வாஷ் (face wash) போன்றவற்றை பயன்படுத்தி அதில் தோல்வி கண்டவர்கள் அதிகம்.
பொதுவாக வெயிலில் சுற்றி திரியும் பெண்களுக்கு சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. மேலும் பிறவியிலேயே எண்ணெய் வழியும் முகமாக இருந்தால் சொல்லவே வேண்டாம்.
அந்தவகையில் முகம் பளபளன்னு ஜொலிக்க இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் அற்புத பொடி ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.
டிப்ஸ் 1
முல்தானி மெட்டி பவுடருடன் தயிர், சிறிது பன்னீர் கலந்து ஃபேஸ்பேக் மாதிரி அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால், முகம் டால் அடிப்பது உறுதி.
டிப்ஸ் 2
சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். இந்தக் கரும்புள்ளிகளை நீக்குவதில் தேன் மிகச்சிறந்த பணியாற்றுகிறது. மேலும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது. எனவே, தினமும் ஒருமுறை சுத்தமான தேனை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால், கரும்புள்ளிகள் குறையும்.
டிப்ஸ் 3
கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால், முகம் பளிச்சென்று மாறிவிடும்.
டிப்ஸ் 4
வேகவைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றின் கலவையை முகத்தில் பூசிக்கொண்டால், பளிச்சென இருக்கும். 4 பாதாம்பருப்பு அரைத்த விழுதுடன், தேன் மற்றும் பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து பூசுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். இது, முகத்துக்கு புரோட்டின் தன்மையை அளித்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
டிப்ஸ் 5
வாழைப்பழக் கூழுடன் பட்டர் ஃப்ரூட் கலந்து, சருமத்தில் பூசுங்கள். சற்று நேரம் ஊறவிட்டுக் கழுவிவிடுங்கள். சருமம் வறட்சி தன்மை நீங்கி மிருதுவாகும்.
ஒரு நாள் கழுதை விவசாயின் கிணற்றில் விழுந்தது. கிணற்றில் விழுந்த கழுதையை எவ்வாறு மீடபதென்பதறியாத அந்த விவசாயி ஒரு முடிவிற்கு வந்தார்.
அவர் தனது அண்டை வீட்டாரை உதவிக்கு அழைத்து, நடந்ததைச் சொன்னார், மேலும் பழைய கழுதையை கிணற்றை கழுதையுடன் சேர்த்து புதைத்து, தனது துயரத்திலிருந்து விடுபட வேண்டினார்.
விவசாயியும் அவரது அண்டை வீட்டாரும் தொடர்ந்து மண்ணை சரிக்க தொடங்கினர்.
மண் அவன் முதுகில் பட்டதும், ஒரு எண்ணம் அவனைத் தாக்கியது. ஒவ்வொரு முறையும் மண் அவன் முதுகில் விழும்போது திடீரென அவனுக்குத் தோன்றியது, அவன் அதை அசைத்துவிட்டு மேலே செல்ல வேண்டும்!
இதை அந்த கழுதை செய்தது, "அதை அசைத்துவிட்டு மேலே செல் ... அதை அசைத்து மேலே செல்... அதை அசைத்து மேலே செல்!" அவன் தன்னை ஊக்குவிக்க மீண்டும் மீண்டும் கூறினான்.
எவ்வளவு வேதனையான அடியாக இருந்தாலும், அல்லது நிலைமை எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், பழைய கழுதை பீதியுடன் போராடியது மற்றும் அதை அசைத்து நிறுத்தி வைத்தது!
கழுதை இறுதியாக, அடித்து சோர்ந்து, அந்த கிணற்றின் சுவரின் மீது வெற்றிகரமாக மிதித்தது! அவனை அடக்கம் செய்வது போல் தோன்றியது உண்மையில் அவனுக்கு உதவியது ... எல்லாவற்றிற்கும் காரணம் அவர் தனது துன்பத்தை கையாண்ட விதம்.
அதுதான் வாழ்க்கை! நாம் நம் பிரச்சினைகளை எதிர்கொண்டு நேர்மறையாக பதிலளித்தால், பீதி, கசப்பு அல்லது சுய பரிதாபத்திற்கு இடமளிக்க மறுத்தால் வெற்றி நிச்சயம்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அந்நிய வர்த்தகத்தில் லாபம் மேம்படும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உற்பத்தி சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். வாகன மாற்ற சிந்தனைகள் மேம்படும். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பெற்றோர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த சில ஆதரவுகள் சாதகமாக அமையும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். கலை துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த குழப்பம் விலகும். ஆக்கபூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
கடகம்
திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது வேறாவும் அமையும். கல்வி பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய தொடர்பான இன்னல்கள் குறையும். தாய் வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். இயற்கை மருத்துவம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
உடன்பிறந்தவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வாகன பயணங்களில் விதிகளுக்கு உட்பட்டு செயல்படவும். திட்டமிட்ட பணிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கன்னி
குடும்ப விவகாரங்களை பகிர்வதை குறைத்துக்கொள்ளவும். தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைப்பட்ட தனவரவுகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில சுபச்செலவுகள் உண்டாகும். கலை துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். முன்கோபத்தால் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். தாய்மாமன் வகையில் ஆதரவான சூழல் மேம்படும். ஆரோக்கியம் நிமித்தமான எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
தம்பதிகளுக்குள் ஆரோக்கியமான வாதம் தோன்றி மறையும். வழக்கு தொடர்பான அலைச்சல் மேம்படும். பழைய நினைவுகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். சஞ்சலத்தால் சில குழப்பம் ஏற்படும். பயணத்தில் பொறுமை வேண்டும். நேரத்திற்கு உணவினை சாப்பிடுவது நல்லது. எதிர்பாலின மக்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
தனுசு
செல்வ சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். சபைகளில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புலனாய்வு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் மேம்படும். போட்டிப்பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
கற்றல் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். ஆன்மீகப் பணிகளில் இருந்த குழப்பங்கள் விலகும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அதிகரிக்கும். வெளி வட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மொழி தேர்வுகளில் தனிப்பட்ட திறமைகள் வெளிப்படும். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
இணையம் சார்ந்த துறைகளில் பொறுமை வேண்டும். புதிய சிந்தனைகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் மந்தமான சூழல் அமையும். உடன் பிறந்தவர்கள் மூலம் அலைச்சல் உண்டாகும். கட்டிடம் சார்ந்த பணிகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் தை மாதம் 29 ஆம் தேதி வியாழக்கிழமை 12.2.2026
இன்று பிற்பகல் 01.20 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று பிற்பகல் 02.40 வரை கேட்டை. பின்னர் மூலம்.
இன்று அதிகாலை 03.37 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.
இன்று அதிகாலை 12.18 வரை வனிசை. பின்னர் பிற்பகல் 1.20 வரை பத்தரை. பிறகு பவம் .
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆழி’. இதில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்.
பிப்.27-ல் வெளியாகும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ரவி கொட்டாரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ. ஜெ, ஹரி உத்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் சரத்குமார் பேசும்போது, “இந்தப் படத்தின் கதை மீன்பிடி படகு ஒன்றில் நடைபெறுகிறது. பெரும்பாலும் கடல்தான் திரைக்கதையில் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் திரையில் காட்சிப்படுத்து வீர்கள் என இயக்குநரிடம் கேட்டேன்.
அது குறித்து முழுமையாக திட்டமிட்டிருக்கிறோம் என சொன்னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரிந்தது. ஒரு மீன்பிடி கப்பல் ஒன்றை அரங்கத்துக்குள் உருவாக்கி, அதனை இயக்குவதற்காக ஹைட்ராலிக் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தினார்.
இந்தப் படத்தின் கிளிம்ப்ஸை பார்க்கும் போது நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பது தெரியும். நெகட்டிவ் கேரக்டருக்கு தான் இன்று வரவேற்பு இருக்கிறது. இன்று கதாநாயகன் என்று சொன்னால் நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகன் ஆக முடியாது. இப்போதெல்லாம் தப்பு செய்பவர்தான் கதாநாய கன். புஷ்பா படத்தில் ஹீரோ செம்மரம் கடத்துகிறார். ஆனால் அவர் தானே ஹீரோ. அதனால் காலங்கள் மாறிவிட்டன. இன்றைக்கு வித்தியாசம் தேவைப்படுகிறது” என்றார்.
கனடாவில் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், தாக்குதல்தாரி ஒரு பெண் என தற்போது தகவல்கள் வெளியாகிவருகின்றன.
நேற்று மதியம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு நபர் நடத்திய தாக்குதலில், தாக்குதல்தாரி உட்பட குறைந்தது 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல்தாரியும் தன்னைத்தான் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்த நிலையில், தாக்குதல்தாரி குறித்த விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை. ஆனால், அவர் குறித்து அருகிலுள்ள வீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது, எச்சரிக்கை செய்தியில், சந்தேக நபர் பழுப்பு நிற தலைமுடி கொண்ட பெண் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதே நபர்தான் பள்ளிக்குள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்பதை பொலிசார் தற்போது உறுதி செய்துள்ளனர்.
ஸ்ரீவாரி பக்தர்கள் இனி வாட்ஸ்அப் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யலாம். திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட முக்கிய கோவில்களுக்கான தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தபடியே பெறலாம்.
திருமலை ஸ்ரீவாரி பக்தர்களுக்கு இது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி ஆகும். இனி தரிசன டிக்கெட் கிடைக்குமா என கவலைப்பட வேண்டியதில்லை. நீண்ட வரிசை, இணையதள போராட்டம், கவுண்டர் காத்திருப்பு என எதற்கும் இனி கவலைப்பட தேவையில்லை. கலியுக தெய்வமாக போற்றப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளை தரிசிக்க திருமலைக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
இதனால் தரிசன டிக்கெட்டுகளுக்கு எப்போதும் கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை ஆன்லைன், ஆஃப்லைன் முறைகளில் மட்டுமே டிக்கெட் கிடைத்த நிலையில், தற்போது எங்கிருந்தாலும் மொபைல் மூலமாகவே டிக்கெட் பெறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான சேவை மூலம், வீட்டில் இருந்தபடியே சில நிமிடங்களில் தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இந்த புதிய வசதிக்காக அரசு WhatsApp Governance முறையை பயன்படுத்தியுள்ளது. பக்தர்கள் முதலில் 95523 00009 என்ற எண்ணை தங்கள் மொபைலில் சேமித்து, "ஹாய்" என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன்பிறகு கிடைக்கும் மெனுவில் சேவைகள் பட்டியல் தோன்றும். இதில் "கோவில் முன்பதிவு சேவைகள்" என்ற விருப்பத்தை தேர்வு செய்தால், கோவில் சார்ந்த முன்பதிவு வசதிகளை எளிதாக அணுகலாம்.
இந்த சேவையில் திருமலை மட்டுமல்லாமல், ஸ்ரீசைலம், கனிபாகம், அன்னவரம், விஜயவாடா, ஸ்ரீகாளஹஸ்தி போன்ற ஆந்திராவின் முக்கிய கோவில்களும் இடம்பெற்றுள்ளன. நீங்கள் செல்ல விரும்பும் கோவிலைத் தேர்வு செய்து, தரிசனம் அல்லது சேவை வகையைத் தேர்ந்தெடுத்து, பக்தரின் முழு விவரங்களையும் பதிவு செய்தால் போதும்.
மொத்தத்தில், இந்த வாட்ஸ்அப் டிக்கெட் முறை பக்தர்களின் நேரத்தையும், சிரமத்தையும் பெரிதும் குறைக்கிறது. தொழில்நுட்பம் இப்போது பக்தியாகவும் உதவ தொடங்கியுள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் தொலைதூர பக்தர்களுக்கு இந்த வசதி ஒரு பெரிய வரமாக இருக்கும்.
















