·   ·  3 videos
  •  ·  0 friends
  • 824
  • More

தேசிய பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்

 பாடசாலை குறித்து சர்வேஸ்வரன் 

Comments (0)
Login or Join to comment.
·
Added a news

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில், அண்டை வீட்டாரின் நாயை “வன்முறையுடன் கூ ட்டாக தாக்கி” களவாடிய சம்பவத்தில் ஒரு பெண் கொள்ளை குற்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை என அண்மையில் வெளியான நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷய்னி கிறிஸ்டி அன்டோனியோஸ் என்பவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜூரி விசாரணையில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். தண்டனை தொடர்பான தீர்ப்பு கடந்த வாரம் இணையத்தில் வெளியிடப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மொனிக்கா கிளைட்டன் என்ற பெண், நாயுடன் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் மூன்று பெண்கள் அணுகி, தாக்கி, தள்ளி, உதைத்து, நாயை வலுக்கட்டாயமாக கொள்ளயைிட்டுச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.

நாயை களவாடிய பெண்ணுக்கு 846 டொலர்களை செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • 48
·
Added a post

ஆறு மிளகுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு இடித்து ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் இதை சேருங்கள். பின் அடுப்பை பற்ற வைத்த சூடேற்றுங்கள். மிளகுடன் மூன்று திப்பிலிகளை இடித்து சேருங்கள். பின்னர் ஒரு வெற்றிலையை காம்பு நீக்கி துண்டுகளாக கிழித்து சேருங்கள். ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஆனது ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டியதும் அடுப்பை அணைத்து நா பொறுக்கும் சூட்டில் ஆற விட்டு விடுங்கள். இந்த கசாயத்தை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்பு குடித்து வந்தால் விரைவாகவே சுவாசக் குழாய் விரிவடைய ஆரம்பித்து விடும். இதனால் மூச்சு விடுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல சுவாசம் உண்டாகக்கூடும்.

  • 71
·
Added a post

வாயு உருவாவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து, ஸ்டார்ச் மற்றும் சர்க்கரையை உள்ளடக்கிய செரிக்கப்படாத கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். இவை மட்டுமல்ல, கந்தகம் நிறைந்த உணவுகள், சிக்கலான சர்க்கரை, ராஃபினோஸ் மற்றும் சர்க்கரை ஆல்கஹாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளும் நம் உடலில் வாயுவை ஏற்படுத்தும். எனவே, உடைக்க கடினமாக இருக்கும் அந்த உணவுகள் தான் அதிகமாக வாயுவை வெளியேற்றுவதற்கு முக்கியக் காரணம்.

என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?

வாயு வெளியேறும் அசெளகரியத்தை நீங்கள் உணர விரும்பவில்லை என்றால், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், வேர் காய்கறிகள், மாவுச்சத்து நிறைந்த உணவுகள், முழு தானியங்கள் மற்றும் ப்ரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டாம். ஒயின் மற்றும் பீர் போன்றவற்றில் கூட கந்தகச் சத்து அதிகம் உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

வாயுவைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்

இது மிகவும் எளிமையானது. ஒருவர் அதிக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் மற்றும் அடிக்கடி உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், உணவுப் பழக்கத்தைப் பற்றி பேசும்போது, ​​உணவை மெதுவாக மென்று சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். இதனால் காற்றை விழுங்குவது குறைவாக இருக்கும். அது நம் உடலில் வாயுவை உண்டாக்கும்

  • 73
·
Added article

பிரசாந்த் அஜீத், விஜய் வரிசையில் இருந்திருக்க வேண்டிய முன்னணி கதாநாயகன். காலமும் சூழலும் யாரை எங்கே தள்ளும் என்பதற்கு உதாரணமாகி எங்கே இருக்கிறார் என்றுகூடத் தெரியாத அளவுக்கு மாறினார் பிரசாந்த். திரைவாழ்வில் தோல்வி… திருமண வாழ்வில் ஏமாற்றம்… உடல் பருமன் என பிரசாந்துக்கு அடுக்கடுக்கான பிரச்னைகள். படங்களில் அல்ல, பட விழாக்களில்கூட பிரசாந்தை பார்க்க முடியாத நிலை. மகனுக்கு ரீ என்ட்ரி கொடுக்க ஒரே துணையாய் உற்ற உறவாய் நின்றவர் அவர் தந்தை தியாகராஜன் தான்.

அந்தாதூன் படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கிய தியாகராஜன் பிரசாந்தை அதில் நடிக்க வைத்தார். ஜோதிகாவை வைத்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய பெட்ரிக் தான் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், பிரசாந்துக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை. அடுத்து இன்னொரு இயக்குநர் மாறினார். அவரும் செட்டாகவில்லை. ஒருகட்டத்தில் மகனின் மனமறிந்து இயக்க தானே இயக்குநராக முடிவெடுத்தார் தியாகராஜன்.

ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அல்ல… மூன்றரை வருடங்கள் அந்தகன் படத்தை அணு அணுவாகச் செதுக்கினார்கள். “அந்தகன் ரிலீஸாக வாய்ப்பே இல்லை” என்கிற அளவுக்கு சிலர் அவதூறு பரப்பினார்கள். ஆனால், பிரசாந்தை மறுபடி மக்கள் முன்னால் நிறுத்தி தள்ளாத உடல் நிலையிலும் தியாகராஜன் ஒவ்வொரு ஊராகச் சென்றார். உற்சாகமாகப் பேசினார். “என் மகனுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. இனி அவன் ஓடிக்கொண்டே இருப்பான்…” என பேட்டி கொடுத்தார்.

்தகன் படம் இப்போது மரியாதையான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ப்ளூ சட்டை மாறனே புகழ்ந்து தள்ளுகிற அளவுக்கு பிரசாந்த் நடிப்பு பெயர் வாங்கி இருக்கிறது. அத்தனை பேர் கைவிட்ட நிலையிலும் அப்பா என்கிற உறவு பிரசாந்தை மறுபடியும் முன்னணி ஹீரோவாக்கி இருக்கிறது. மகனை மறுபடியும் ஒரு வெற்றியாளனாகப் பெற்றெடுத்து இருக்கிறார் தியாகராஜன். ‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்பது இதுதான்…

  • 79
  • 79
  • 83
  • 87
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

புதிய முயற்சிகள் இழுபறியாகி முடியும். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். சிறு வார்த்தைகள் கூட மனக்கசப்பை ஏற்படுத்தலாம். பலதரபட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். நீங்கி வேலையாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. புரிதல் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

ரிஷபம்

துணைவர் வழி உறவுகளால் ஆதரவு மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும் . குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகளால் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதமாமாகும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். எதிர்ப்பு மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மிதுனம்

சமயோசிதமாக பேசி காரியத்தை முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கடகம்

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். புதிய கனவுகள் பிறக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

சிம்மம்

உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பூர்விக சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும். நட்பு வட்டம் விரிவடையும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கன்னி

அரசு விவகாரத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பின்னணியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

 

துலாம்

கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதமாக முடியும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். அச்சம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

விருச்சிகம்

உதவி செய்வோரின் சுய ரூபங்களை அறிவீர்கள். தொழில் நிமித்தமான சிலரின் அறிமுகம் ஏற்படும். அலுவல் பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். பொன் பொருள்களை கையாள்வதில் கவனம் வேண்டும். துணைவர் பற்றிய புரிதல் மேம்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

தனுசு

எடுத்த காரியத்தை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். கடன் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். இனத்தாரின் ஆதரவுகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். உறவினர்களை அனுசரித்து செல்லவும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

சகோதரர்களால் சிறு சிறு சங்கடம் ஏற்படக்கூடும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லவும். நட்பு வட்டம் விரிவடடையும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிர்வாக துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் உயரும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

மீனம்

வாழ்க்கை துணை வழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். புதிய முயற்சிக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த சில காரியம் சாதகமாக முடியும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

  • 372
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 2 ஆம் தேதி புதன்கிழமை 17.12.2025

இன்று அதிகாலை 01.38 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று இரவு 07.00 வரை விசாகம் . பின்னர் அனுஷம்.

இன்று மாலை 03.30 வரை சுகர்மம். பிறகு திருதி.

இன்று அதிகாலை 01.38 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 02.45 வரை கரசை . பிறகு வணிசை.

இன்று காலை 06.22 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=360&dpx=2&t=1765941304

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 380

Good Morning...

  • 394
  • 531
·
Added article

ஒரு முறை நடிகவேள் M R ராதா தனது விலை உயர்ந்த காரை தனது வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார்

அந்த வழியாக ஓடிச்சென்ற தெரு நாய்

ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது.

இதைப் பார்த்த நடிக வேள் M R ராதா சிரித்தார்

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது உதவியாளர் " ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து விரட்டி விடாமல் சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் " என்று ஆச்சரியத்துடன் கேட்டார்

அதற்கு அவர் மிகவும் சாந்தமாக,

அந்த நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது. அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. அதைப் பற்றி சொன்னாலும் அதற்குப் புரியாது "

என்று சிரித்துக் கொண்டே கூறினார்

கேள்வி கேட்டவர் இப்படி

ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்ல

இது போலத் தான் உங்கள் வாழ்விலும் உங்கள் மதிப்பை அறியாதவர்கள் உங்களை அவமானப்படுத்தும் போதும், கேலி செய்யும் போதும் அவர்களைப் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்.

ஏன் என்றால் அந்த நாய்களுக்கு சொன்னாலும் புரியாது . நாம் என்ன அறிவுரை சொன்னாலும் திரும்ப திரும்ப

அது சொன்னதையே செய்யும். அதை சிரித்துக் கொண்டே கடந்து போங்கள்.

கார் அழுக்கானால் கழுவினால சுத்தம் ஆகிவிடும். ஆனால் கோபப்பட்ட நம்ம மனசு அழுக்காகும். எப்ப பார்த்தாலும் அந்த நாயை கல்லெடுத்து அடிக்கலாமே என்ற

எண்ணம் வரும்.அது நமக்கு நல்லதல்ல.

இது எல்லா விசயத்துக்கும் பொருந்தும்.

உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள் நீங்கள் செயல் வீரராக இருங்கள் அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள்.

எத்தனையோ பிரச்னைகள் நீங்கும்.

  • 573
·
Added a post

நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். பதிலில்லை.

முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார்.

ஒன்றும் நடக்கவில்லை.

காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர்.

மிக விரிவான விஞ்ஞான பூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார்.

காகிதங்களைப் புரட்டிய நேரு கையை விரித்தார் ..

" இதெல்லாம் சாத்தியமில்லை..!"

"ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர் அனுபவமுள்ள ஒரு பொறியாளர். இந்த திட்டத்தை மறுக்க இரண்டு காரணங்கள்தான் உள்ளன.

ஒன்று இந்த நாட்டில் பொறியியல் படிப்பு தரமாக இல்லை. அல்லது இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தகுதி அரசியல்வாதிகளான நமக்கு இல்லை.."

கேம்ப்ரிட்ஜில் படித்த அறிவாளி நேருவை கிழிகிழியென கிழித்துப் போட்டார் கைநாட்டு பேர்வழி காமராஜர்.

காமராஜருக்கு கை சுத்தம் ..! அதனால் பிரதமராவது, பெரிய தலைவராவது ,. ..

அடுத்தமுறை பொறியாளருடன் நேருவைச் சென்று சந்தித்தார், விளக்கினார். முதலீடு 150 கோடி என்றார் காமராசர்.

"திட்டம் ஓகே.. நிதியில்லையே.. தமிழக அரசு நடத்தலாம்..."

"அரசின் ஆண்டு வருமானம் 150 கோடி ..

எங்களால் எப்படி....?"

" நிலக்கரியை வெளியே கொண்டுவர மூன்றாண்டுகள் ஆகும் என்கிறார். ஆண்டுக்கு 50 கோடி போடுங்க..." என்கின்றார் பிரதமர்.

முடிவெடுத்தார் தமிழக முதல்வர் தமிழர் காமராசர். தமிழ்நாடுதானே காமராசருக்கு குடும்பம்.

1954 ல் 50 கோடி ஒதுக்கினார். பணிகள் தொடங்கப்பட்டன.

அடுத்த வருடம் 50 கோடி.

1956 ல் கடைசி தவணையைக் கொடுத்துவிட்டு தவிக்கத் தொடங்கினார்.

பிள்ளை பெண்டாட்டிகளுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற இன்றைய ஊழல் பெருச்சாளிகளின் கவலையல்ல.

மக்கள் வரிப்பணமாச்சே.. மத்திய அரசு கேள்வி கேட்குமே ...!

சுரங்கப் பணிகள் முடிவடைந்து, நிலக்கரியை வெட்டியெடுத்து வெளியே கொண்டு வரும் நாளில்....

முதல்வர் நெய்வேலி வந்தார். சுரங்கத்தில் நின்றார்.

அதோ..

நீரும் நிலக்கரியும் கலந்து வழியும் கனிம வளத்தை தலையில் சுமந்தபடி தொழிலாளிகள் வருகின்றனர்.

ஓடினார் முதல்வர்....

தமிழ் மண்ணின் வளம்.. தமிழர் நலம் அல்லவா தலையிலிருந்து கறுப்பு தங்கமாக வழிகிறது ?

தாவியணைத்தார் அந்த தொழிலாளியை... கரியை அள்ளி கைகளால் முகர்ந்தார். ஆனந்தக் கூத்தாடினார்.

வெள்ளை கதர் சட்டை , கறுப்பாகி மின்னியது.

இன்று ஆண்டுக்கு லாபம் 2000 கோடிகள்...!

இந்த பதிவை படித்த போது என்னையுமறியாமல் என் கண்கள் நனைந்தன.

இப்படியும் ஒரு மனிதர் இவரன்றி பிறந்ததுமில்லை ! இனி பிறக்கபோவதுமில்லை !

ஆனால் இருக்கும் வரை அவர் அருமை தெரியவில்லை.

  • 575
·
Added a post

தினசரி அதிகா​லையில் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிப்பதற்கு சவரத் ​தொழிலாளி ஒருவன் அரண்ம​ணைக்கு வருவது வழக்கம்.

தினசரி கா​லையில் முகத்​தை மழித்து முடி​யைத் திருத்துபவராதலால் அந்தத் ​தொழிலாளியிடம் ​வேடிக்​கையாக எ​தையாவது​ பேசுவது கிருஷ்ண​தேவராயரின் வழக்கம்.

அவனும் மன்னர் ​கேட்கும் ​கேள்விகளுக்கு இணக்கமாகப் பதிலு​ரைப்பான்.

ஒருநாள் அவன் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருக்கும் ​போது,”நீ நாட்டு மக்களிடம் சகஜமாகப் பழகுபவனாயிற்​றே.

நமது நாட்டு மக்களின் வாழ்க்​கைத் தரம் எந்த நி​லையில் இருக்கிறது என்று உனக்குத்​ தெரிந்திருக்கு​மே என்றார். ”​

மேன்​மை தாங்கிய மகாராஜா அவர்க​ளே! தங்களு​டைய ஆட்சியில் மக்கள் நன்கு சுபிட்சமாக இருக்கின்றனர்.

மக்களின் ஒவ்​வொருவர் இல்லத்தில் கு​றைந்தபட்சம் எலுமிச்சம்பழம் அளவிற்குத் தங்கம் இருக்கிறது. அதனால் எவரும் கவ​லையில்லாமல் இருக்கின்றனர்” என்றார் சவரத்​தொழிலாளி.

சவரத்​ தொழிலாளி ​சென்ற பின்னர் எப்​போதும் ​போன்று மன்ன​ரைக் காண அப்பாஜி வந்தார்.

அப்பாஜியிடம் சவரத் ​தொழிலாளி கூறிய​தை மன்னர் கூறினார். ”இவன் இப்படிக் கூற என்ன காரணம்? இவன் ​சொன்னது ​போன்று எப்படி ​எல்லோரிடமும் எலுமிச்சம்பழ அளவில் ​பொன் இருக்கும்? எலுமிச்சம்பழ அளவு ​பொன் என்பது சாதாரண மக்கள்​ வைத்திருக்க முடியாது! ​பெரும் பணக்காரர்களிடத்தில் அல்லவா இருக்கும்.

ஆ​கையினால் இதுபற்றித் ​தெரிந்து ​கொள்ள ​வேண்டும்!” என்று வினவினார்.

”இதற்கு வி​ரைவில் வி​டை​யைக் கூறுகி​றேன்” என்று அப்பாஜி மன்னரிடம் கூறிவிட்டுச் ​சென்றுவிட்டார்.

மறுநாள் வழக்கம்​போல் சவரத் ​தொழிலாளி அரண்ம​னைக்கு வந்து கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருந்தான்.

அச்சமயம் அப்பாஜி, காவலர்க​ளை அ​ழைத்து ”சவரத் ​தொழிலாளியின் இல்லத்​தை ​சோத​னை ​செய்துவிட்டு

வி​ரைவில் வாருங்கள்” என்று கட்ட​ளையிட்டார்.

காவலர்கள் சவரத் ​தொழிலாளியின் இல்லத்திற்குச் ​சென்று ​சோத​னை ​செய்த​போது, அடப்பப் பெட்டியில் எலுமிச்சம்பழ அளவுக்கு ​பொன் இருப்ப​தைக் கண்டு வந்து கூறினர்.

அத னை மன்னரிடம் ​கொடுத்துவிட்டு, மன்னர் ​பெருமா​னே! அடுத்த நாள் சவரத் ​தொழிலாளி வந்ததும், முதலில் ​கேட்டது ​போன்று ​கேளுங்கள். அவனிடமிருந்து ​வேறு விதமான பதில் கி​டைக்கும்” என்றார் அப்பாஜி.

வழக்கம் ​போல் கா​லை கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிக்க சவரத் ​தொழிலாளி வந்தமர்ந்தான்.

வரும்​போ​தே அவனது முகம் வாடியிருந்தது. அவன் தனது ​

வே​லை​யை ஆரம்பிக்கும் சமயம்,

”இப்​​பொழுது குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஏதாவது மாறுதல் உண்டாகியிருக்கிறதா?” என்று வினவினார் மன்னர்.

”​பெருமதிப்பிற்குரிய மகாராஜா அவர்க​ளே! அ​தை ஏன் ​கேட்கின்றீர்கள்? எல்​லோரும் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர். ​

கையில் இருக்கும் எலுமிச்சம் பழ அளவு தங்கத்​தை இழந்துவிட்டால் மக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?” என்று சவரத்​ தொழிலாளி கண்களில் நீர் மல்க ​தொண்​டை அ​டைக்கக் ​கூறினான்.

அச்சமயம் வந்த அப்பாஜி, ”மன்னர் ​பெருமா​னே! இப்​போது வி​டை ​தெரிந்து விட்டதா? உலகத்திலுள்ள ஒவ்​வொருவரும் தன்னு​டைய மன இயல்புக்கு ஏற்பதான் மற்றவர்களின் நி​லை​யை நிர்ணயிக்கின்றனர்.

தன்​னைப் ​போல்தான் பிறரும் இருப்பார்கள் என்று நி​னைக்கின்றனர்.

தான் நல்ல வருமானத்துடன் வாழ்ந்தால் மற்றவர்களும் அப்படித்தான் வாழ்வார்கள் என்றும், தான் கஷ்டநி​லையில் வாழ்ந்தால் மற்றவர்களும் கஷ்டத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று மனப்பக்குவத்தில் வாழ்கின்றனர்” என்றார் அப்பாஜி.

உட​னே காவல​னை அ​ழைத்து, ”கஜானாவில் பாதுகாப்புடன் இருக்கும் எலுமிச்சம்பழ அளவு ​பொன்​னைக் ​கொண்டு வந்து சவரத் ​தொழிலாளியிடம் ​கொடுங்கள்” என்று ஆ​ணையிட்டார் மன்னர். ​

கொண்டு ​கொடுத்த ​பொன்னுடன் சிறிது ​பொன்னும் பரிசாகச் சவரத் ​தொழிலாளிக்குக் ​கொடுத்தார். அவனும் மனம் மகிழ்ந்து பணிவுடன் வணங்கி இன்முகத்துடன் ​வாங்கிச் ​சென்றான். மனித இயல்​பை விளக்கிக் காட்டிய அப்பாஜியின் அறிவுத் திற​மை​யைப் பாராட்டினார் கிருஷ்ண​தேவராயர்.

  • 582
·
Added a post

• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

• முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.

• முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

• இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

• முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

• கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

• ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்.....

முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.

புரதம் - 6.7%

கொழுப்பு - 1.7%

தாதுக்கள் - 2.3%

கார்போஹைட்ரேட்கள் - 12.5%

  • 583
  • 853
·
Added a post
இன்று மார்கழி மாதப்பிறப்பு
  • 936
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 16.12.2025.

இன்று முழுவதும் துவாதசி.

இன்று மாலை 04.28 வரை சுவாதி . பின்னர் விசாகம்.

இன்று மாலை 03.04 வரை அதிகண்டம். பிறகு சுகர்மம்.

இன்று பிற்பகல் 12.41 வரை கௌலவம். பின்னர் தைத்தூலம்.

இன்று காலை 06.22 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 04.28 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=359&dpx=2&t=1765854375

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 945

Good Morning....

  • 952
·
Added a post

இஞ்சியில் பல்வேறு மருத்துவ நன்மைகள் இருந்தாலும், அதை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்பதைப் பற்றி காண்போம்.

* தினமும் இஞ்சியின் சாற்றை, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாவதுடன், விரைவாக உடலின் எடையைக் குறைக்கலாம்

* வாரம் இரண்டு முறை, இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் மற்றும் சோர்வு பிரச்னைகள் குணமாகும்

* வாரம் ஒரு முறை, இஞ்சியை சுட்டு சாப்பிட, பித்தம் மற்றும் கபம் நோய்கள் விரைவாக குணமாகும். அதேபோல், இஞ்சி சாற்றில் வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால், வாதக் கோளாறுகள் நீங்கி, உடலில் பலம் உண்டாகும்

* இஞ்சியை புதினா இலையோடு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவை குணமாகும்

* காலையில் இஞ்சி சாற்றில், சிறிதளவு உப்பு கலந்து, மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், மலச்சிக்கல் விரைவில் குணமாகும்

* இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என, இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மார்பு வலி குணமாகும்.

* இஞ்சி சாற்றோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்

* இஞ்சி சாற்றில், எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பசி உணர்வை ஏற்படுத்தும். அதேபோல் இஞ்சி, மிளகு ஆகிய இரண்டையும் அரைத்து சாப்பிட்டு வந்தால், அஜீரணம் ஏற்படாது

* இஞ்சியை வதக்கி, அதில் தேன் மற்றும் நீர் விட்டு, கொதிக்க வைத்து, காலை, மாலை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு விரைவில் குணமாகும். இஞ்சியை அரைத்து நீரில் கலந்து, அதனுடன் துளசி இலையின் சாறை சேர்த்து, ஒரு வாரம் சாப்பிட்டால், வாய்வு தொல்லை குணமாகும்

* இஞ்சி சாற்றில் தேன் கலந்து, தினமும் காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர, நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

  • 1041
·
Added a post

1. வாரம் ஒரு முறை வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கை, கால்களில் ஏற்படக்கூடிய எரிச்சல் நீங்கும். மேலும் அதிகாலையில், தினமும் 5 நிமிடம் கைகள் மற்றும் கால்களை மெதுவாக நீட்டி மடக்கும் பயிற்சியை செய்து வந்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

2. வாரத்தில் இரண்டு நாட்கள் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தேங்காய் பாலுடன், கருப்பட்டி சேர்த்து குடித்து வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். அல்சர் போன்ற பிரச்சனைகள் வராது.

3. செவ்வாழைப் பழத்தை தினமும் இரவு நேரங்களில் உணவிற்குப்பின் சாப்பிட்டு வந்தால், பல்லில் ஏற்படக்கூடிய இரத்தக் கசிவு நீங்கும். பல் சொத்தை போன்ற பிரச்சனைகளும் வராது.

4. கருவேப்பிலையை துவையல் செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடுகள் சீராகும். நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கவும் உதவி செய்யும்.

5. முகம் பளபளப்பாகவும், முகப்பறு மறையவும் சந்தன கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

6. மலக்குடல் பிரச்சனைகள் வராமல் தடுக்க, அகத்திகீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிடலாம். குறிப்பாக அகத்தி கீரையை நன்றாக வேகவைத்து சமைத்து சாப்பிடுங்கள்.

7. சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும், பாத எரிச்சல் சரியாகும்.

8. தேனில் ஊரவைத்த நெல்லிக்காயை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர இதயம் மற்றும் நுரையீரல் வலிமை பெறும்.

9. வேப்ப எண்ணெயை லேசாக சூடு செய்து கை மற்றும் கால்விரல் இடுக்குகலில் தடவினால் சேற்றுப் புண்கள் குணமாகும்.

10. வாரம் ஒருமுறை இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலோ (அல்லது) வாரம் ஒருமுறை திராட்சை சாறு குடித்துவந்தாலோ இரத்தம் சுத்தமாகும்.

  • 1081
·
Added a post

ஒருவன் "என்னிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. தேவை உள்ள மக்களே திரண்டு மெரினா பீச்சுக்கு வாருங்கள்" என அறிவித்தான். மக்களும் லட்சக்கணக்கில் திரண்டனர். அப்போது அங்கே வருகை தந்த அந்த கோடிஸ்வரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டான்.

"என்னிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு பணம் உள்ளது. ஆகவே யாரும் அடித்துக் கொள்ளாமல் வரிசையாக நில்லுங்கள்" என்றான். உடனே அனைவரும் வரிசையாக நின்றனர். வரிசை செங்கல்பட்டு வரை நீண்டது.

அப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டான் அந்த கோடிஸ்வரன். அதாவது "முதலில் நிற்பவருக்கு ஒரு ரூபாயும், இரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும் ஆயிரமாவதாக­ நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும், லட்சமாவதாக நிற்பவருக்கு ஒரு லட்ச ரூபாயும்" என கண்டிசன் போட்டு விட்டு ஒவ்வொருவராக வாருங்கள் என அழைத்துள்ளான்.

முதலில் நின்றவர் இங்கு என்ன நடக்கிறது என்று கேட்டு ஒதுங்கிவிட்டார். இரண்டாவதாக நின்றவர் டீ குடிக்க போறேன் என சென்று விட்டார். மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்து விட்டார். இப்படியே.. முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் நாம் பஸ் பிடித்து செங்கல்பட்டு சென்று அங்கே கடைசியாக இணைந்து கொள்வோம் என்று பேசிக் கொண்டார்கள். இப்படியே யாருமே கடைசி வரையில் பணம் பெற வரவே இல்லை...

மனித மனம் கிடைப்பதில் ஒருபோதும் திருப்திப் படுவதே இல்லை..!!

  • 1083
·
Added a post

வறுமைக்கோட்டில் குடும்பம் ஒன்று இருந்தது. வாழ்ந்து கெட்ட குடும்பம். தலைவன், தலைவி, மகன், மகள் என நான்கு பேர் இருந்தனர். சோம்பேறிகள் என எந்த வேலையும் கிடைக்கவில்லை. கால் வயிற்றைக் கூட தண்ணீரில்தான் கழுவிக் கொண்டனர். கண்ணீர் வடிக்கக் கூட தெம்பற்ற நிலை.

இவர்களின் நிலையைப் பார்த்து பரிதாப்பட்ட ஒருவர், அந்த ஊரின் மலையடிவாரத்தில் காலம் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாமியாரைப் போய் பாருங்கள். ஏதாவது அருள்வாக்கு சொல்வார் என்றார்.

சரியென்று அடுத்த நாள் அதிகாலையிலேயே கிளம்பி சாமியை பார்க்க சென்றார். ஒரு ஓலைக் குடிசையில் சாமி சப்பணமிட்டு அமர்ந்து ஏதோ தியானம் செய்து கொண்டிருந்தார். தியானத்தை முடிக்கும் வரை காத்திருந்த அவர், "சாமி நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்" என்றார்.

"சொல் மகனே என்ன பிரச்சினை உனக்கு ? "

"சாமி ... எங்க குடும்பத்துல என்னையும் சேர்த்து நாலு பேர் இருக்கோம். வசதியா வாழ்ந்து நொடிச்சுப் போனதால இந்த ஊருல எங்கள்ல யாருக்குமே வேலை கிடைக்கல. நல்லா சாப்பிட்டு பல மாசம் ஆகிப் போச்சு. உங்களை சந்திச்சா ஏதாவது நல்ல வழி சொல்வீங்கனு ஒருத்தர் சொன்னார். அதான் வந்தேன் சாமி " என்றார் பவ்யமாக.

"உனக்கு உழைத்து சாப்பிட ஆசையா, முன்பு போல் உட்கார்ந்து சாப்பிட ஆசையா? "

"உட்கார்ந்து சாப்பிட்டு கெட்டது போதும். இனி உழைத்து சாப்பிடத்தான் ஆசை சாமி "

"சரி அதோ அந்த மூலையில் ஒரு மூட்டை அரிசியும் அந்த அரிசி தீரும் வரைக்குமான மளிகைப் பொருட்களும் இருக்கின்றன. எடுத்துக் கொள் "

"சாமி நான் உட்கார்ந்து சாப்பிட விரும்பவில்லை. இது தீர்ந்த பின் மீண்டும் இதே நிலைக்குதான் வருவேன். நிரந்தர தீர்வு தாருங்கள் சாமி "

"அவசரப்படாதே மகனே. நான் சொல்வதை மட்டும் செய். ஆனால் ஒரு நிபந்தனை. இன்று கால் படி அரிசியை சமை. நாளை அதை இரட்டிப்பாக்கி அரை படி சமை. நாளை மறுநாள் அதையும் இரட்டிப்பாக்கி ஒரு படி அரிசி சமை. இப்படியே ஒவ்வொரு நாளும் முதல் நாளை விட இரட்டிப்பாக சமை. ஒரு அரிசி கூட வீணாக கூடாது. என்னைக் கேட்காமல் உன் வீட்டார் தவிர யாருக்கும் சாப்பாடு போடக் கூடாது"

"சாமி இதெப்படி நிரந்தர தீர்வாகும்? "

"நான் சொல்வதை மட்டும் செய்வதென்றால் இவற்றை எடுத்துப் போ. இல்லையென்றால் நீ இப்படியே போகலாம் "

"நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன். கோவப்படாதீங்க சாமி"

சாமி சிரித்துக் கொள்ள, அரிசியையும் மளிகைப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

அன்று கால் படி அரிசி சமைத்து கொஞ்சமாய் குழம்பு வைத்து நான்கு பேரும் சாப்பிட்டார்கள். அனைவருக்கும் அரை வயிறு நிரம்பியது. அடுத்த நாள் அரைப்படி சமைத்து குழம்பு வைத்து வயிறாற சாப்பிட்டார்கள். மூன்றாம் நாள் ஒரு படி சமைத்து சாப்பிட்டது போக பாதி சாதம் மிஞ்சியது.

வீணாக்க கூடாதே என்ன செய்வது என யோசித்தவர், அடுத்த அரை மணி நேரத்தில் சாமியிடம் ஓடினார்.

"சாமி நீங்கள் சொன்னது போல ஒவ்வொரு நாளும் இரட்டிப்பாக சமைத்தேன். ஆனால் இன்று பாதி மிஞ்சி விட்டது. என்னைக் கேட்காமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றீர்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும். எங்களுக்கு அரைப்படியே போதுமானது. அதை மட்டும் தினமும் சமைத்துக் கொள்ளவா? "

"அரிசி தீரும் வரை இரட்டிப்பாக சமைப்பதை நிறுத்தக் கூடாது என்பது நிபந்தனை. மிஞ்சியதை அக்கம் பக்கத்தினருக்கு கொடு"

"சரிங்க சாமி " கும்பிட்டு விட்டு கிளம்பினார். வீட்டிற்கு சென்றதும் மிஞ்சிய சாதத்தை அக்கம் பக்கத்தினர் நான்கு பேருக்கு கொடுத்தார். அவர்கள் சாப்பிட்டு விட்டு "ஆகா அருமையான சாப்பாடு" என புகழ்ந்தார்கள்.

மறுநாள் இரண்டு படி அரிசியைப் பொங்கி சாப்பிட்டது போக பதினைந்து பேர் அளவு சாப்பாடு மிஞ்சியது. இப்படியே போனால் அரிசி ஒருவாரத்தில் முடிந்து விடுமே என்ற கவலையில் மீண்டும் சாமியைப் பார்க்க ஓடினார்.

"சாமி இன்னைக்கு பதினைந்து ஆள் சாப்பாடு மிஞ்சி விட்டது. இப்படி சமைத்தால் ஒருவாரம் கூட அரிசி வராதே "

"நீ சுவையாக சமைக்கிறாயா? "

"ஆமாம் சாமி. நேற்று சாப்பிட்ட அனைவரும் எந்த ஓட்டல்லயும் இவ்வளவு ருசியான சாப்பாடு கிடைப்பதில்லைனு பேசிக்கிறாங்க "

"அப்படியானால் மீதமாகும் சாப்பாட்டை நீ விற்பனை செய்"

"சரிங்க சாமி " என்று சந்தோசமாய் வணங்கி வீட்டுக்கு வந்தவர் சாப்பாடு நாற்பது ரூபாயென விற்க ஆரம்பித்தார். பத்து சாப்பாடு மட்டுமே விற்றது. அஞ்சு சாப்பாடு மிஞ்சியது.

அடடா இன்னைக்கு பதினைஞ்சு சாப்பாடே விக்கல. நாளைக்கு எப்படி நாப்பது சாப்பாட்டை விக்கிறது என்ற கவலை வர அடுத்த அரைமணி நேரத்தில் சாமியின் முன் நின்றார்.

"சாமி பத்து சாப்பாடுதான் வித்துச்சு. இன்னைக்கே அஞ்சு மிஞ்சிருச்சு. நாளைக்கு நாலு படி பொங்குனா வீணாப் போகுமே சாமி "

"ஒரு சாப்பாடு எவ்வளவுனு வித்தே? "

"நாப்பது ரூபாய்க்கு வித்தேன் சாமி "

"ஒரு சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவாகும்? "

"ஒரு சாதத்துக்கு அஞ்சு ரூபா வச்சா குழம்பு மற்றும் தொட்டுக் கொள்ளும் வகையறாக்களுக்கு பத்து ரூபாயாகும். மொத்தம் ஒரு சாப்பாட்டுக்கு பதினைந்து ரூபாய் செலவாகும் சாமி "

"உன் உழைப்புக்கு அஞ்சு ரூபாய் சேர்த்து வச்சாலும் ஒரு சாப்பாடு தயாரிக்க ஆகும் செலவு இருபது ரூபாயை தாண்டாது. நீ அதையும் இரு மடங்காங்கி விற்றால் எப்படி விற்பனையாகும்? "

"அப்படி விற்றால்தானே நாளை ஏதோ ஒரு வகையில் நஷ்டம் வரும் போது சமாளிக்க முடியும் "

"இதுதான் நிறையப் பேர் செய்யும் தவறு. குறைந்த லாபம் அதிக விற்பனை என்பதே புத்திசாலிகள் கடைபிடிக்கும் அழகான வியாபார முறை. நாம் செய்யும் தொழிலில் அனைவருக்கும் பயன் இருக்க வேண்டும். நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமென நினைப்பவன் நல்ல வியாபாரி ஆக முடியாது "

"இப்போது நான் எவ்வளவு விலை வைக்க வேண்டும் சாமி "

"உன் குடிசையின் முன்னால், 'வீட்டுமுறை சாப்பாடு ரூபாய் இருபது மட்டும்' என்று ஒரு அட்டையில் எழுதி தொங்கவிடு "

"சரிங்க சாமி " என்று அரை மனதுடனே நகன்றார் அவர்.

அடுத்த நாளிலிருந்து இருபது ரூபாய்க்கு சாப்பாடு விற்பனை செய்ய சக்கை போடு போடத் தொடங்கியது வியாபாரம்.

நான்கே நாட்களில் அரிசி மூட்டை காலியாக, அதுவரை சேர்ந்த பணத்தை எடுத்துக் கொண்டு சாமியிடம் சென்றார். அவர் முகத்தில் பார்த்த சந்தோசத்தை கண்டு சாமி கேட்டார்.

"என்ன மகனே மகிழ்ச்சியாய் இருக்கிறாயா? "

"தங்கள் ஆசியாலும் ஆலோசனையாலும் மிக நலமாக இருக்கிறேன் சாமி. இந்தாங்க ... இதுவரை சாப்பாடு விற்ற பணம். இது உங்களைச் சேர வேண்டியது சாமி"

"அதை நீயே வைத்துக் கொள். அதில் மூன்று மூட்டை அரிசியும் மூன்று பை மளிகைப் பொருட்களும் வாங்கி, ஒரு மூட்டையை நீ வைத்துக் கொள் . நான் கொடுத்த மூட்டைக்கு இரட்டிப்பு கணக்கில் இரண்டு மூட்டைகளை எனக்குக் கொடுத்து விடு. இனி நீ உன் வியாபாரத்திலிருந்து எனக்கு எதுவும் தர வேண்டியதில்லை"

"உங்களுக்கு எதற்கு சாமி இரண்டு மூட்டை அரிசியும் மளிகையும் "

"உன்னைப் போல் இன்னும் பல தங்க மகன்களை உருவாக்கும் பணி இருக்கிறது மகனே "

"மகானே" என்று சாமியின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார் அவர்...

  • 1088
·
Added article

விசு படத்தில் வெயிட்டான கேரக்டர் : விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர் : இவரை யார்னு தெரியுதா?

பழம்பெரும் நடிகை ஒருவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விசு நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சரோஜினி கேரக்டரில் நடித்திருந்த நடிகை இளவரசியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குடும்பத்தின் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்திய படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் விசு. இவர் இயக்கத்தில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியாகி தேசிய விருதை வென்ற படம் தான் சம்சாரம் அது மின்சாரம். விசு, ரகுவரன், பாண்டியன், லட்சுமி, டெல்லி கணேஷ், மனோரமா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

குடும்ப உறவுகளுக்குள் நடக்கும், பிரச்சனை, மனவருத்தங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் காமெடி காட்சிகள் இல்லை என்பதால், மனோரமாவை படத்தில் இணைத்துள்ளனர். அதற்கு ஏற்றார்போல் காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பில் அசத்திய மனோரமான கண்ணம்மா என்ற கேரக்டரில் அசத்தியிருந்தார். குறிப்பாக ‘’கம்முனு கெட’’ என்று அவர் சொல்லும் வசனம் தற்போதுவரை பிரபலமாக உள்ளது.

அதேபோல் பிரிந்த கூட்டு குடும்பத்தை இணைக்க பாடுபடும் மருமகளாக லட்சுமி சிறப்பாக நடித்திருந்தார். இந்த படம் தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தில் அம்மையப்பன் முதலியார் கேரக்டரில் நடித்த விசுவின் திமிர் பிடித்த மகள் சரோஜினி கேரக்டரில் நடித்தவது நடிகை இளவரசி.

படத்தில் இவரை பார்த்தாலே பலருக்கும் கோபம் கோபமாக வரும். தமிழில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்த இவர், தமிழ் தவிர்த்து கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் 2001-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியாக சீரிவரும் காளை படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்திருந்தார்.

ஒரு வங்கி அதிகாரியை திருமணம் செய்துகொண்ட நடிகை இளவரசி, கணவர் மற்றும் குழந்தையுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • 1089