தேசிய பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
கடந்த 2013ம் ஆண்டு ஏ.ஆர். ரபி இயக்கத்தில் வெளியான 'அஞ்சல் துறை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் குஷி முகர்ஜி. அதன் பின்னர், இந்திக்கு சென்ற அவர், ஹார்ட் அட்டாக், முத்ரா விஸ்தார்ஜன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். எப்படியாவது பாலிவுட்டில் பிரபலமாக வேண்டும் என நினைத்த அவர், உர்ஃபி ஜாவேத் ரூட்டை கையில் எடுத்து பலரது கண்களை கூச வைத்து வருகிறார்.
சமீபத்தில், பின்னழகு மொத்தமும் தெரியும்படியான கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு அவர் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்து போஸ் கொடுத்தபோது சில புகைப்படக் கலைஞர்களே அதனை கண்டித்து அவருடன் சண்டைப் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அதை விட மோசமாக உள்ளாடை அணியாமல் முன்னழகு தெரியும் வகையில் ரொம்பவே ஃப்ரீ ஷோ காட்டி வெளியே நடனமாடிய வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கேவலமாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.
2012ஆம் ஆண்டு அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சனம் ஷெட்டி, சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறார். மிஸ் தென்னிந்தியா பட்டம், பல மொழிப் படங்களில் வேலையென பல்வேறு பரிமாணங்களில் தன்னை நிரூபித்து வந்தாலும், சமீபத்தில் வெளியாகியுள்ள பிகினி வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீச்சல் குளத்தில் முழுக்க குதூகலமாக ஆடி, ஸ்பார்க் நிறைந்த எர்னர்ஜியுடன் சனம் ஷெட்டி காமிராவை நோக்கி போஸ் கொடுக்கும் அந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற தளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்டு வருகிறது. சனத்தின் ஸ்டைல், தன்னம்பிக்கை, உடல்வாகை, அனைத்தும் ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
‘வா வாத்தியார்’ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதற்கு மன்னிப்புக் கோரியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன், “எங்களை மீறிய சில எதிர்பாராத சூழ்நிலையால் ‘வா வாத்தியார்’ திட்டமிட்ட தேதியில் வெளியாகாது. இது மிகவும் கடினமான முடிவு, குறிப்பாக அனைவரும் ஆர்வத்துடன் படத்துக்காக எவ்வளவு காத்திருந்தீர்கள் என்பதை அறிகிறோம்.
இந்த ஏமாற்றத்துக்காக ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த நிலையை விரைவில் சரி செய்ய நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். விரைவில் புதிய வெளியீட்டு தேதியை பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் அன்பு, பொறுமை மற்றும் அசைக்க முடியாத ஆதரவு எங்களுக்குத் தேவை. இந்த காத்திருப்புக்கு ‘வா வாத்தியார்’ தகுதியானதே” என்று தெரிவித்துள்ளார்கள்.
இந்திய திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த், இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி: “75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தைவிட, 2025ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, 150,220 குறைந்துள்ளது.
கடந்த செப்டம்பரில் கனடாவில் கல்வி கற்க 28,910 பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த செப்டம்பரில் 11,390 புதிய மாணவர்கள் மட்டுமே கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டைவிட 60 சதவிகிதம் குறைவாகும்.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில், கனடா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், கனடாவில் கல்வி கற்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துவரும் கனடா அரசு, அடுத்த ஆண்டிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கவிருக்கும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது.
1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.
2. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார்.
3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.
4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.
5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.
6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை, கோவை இரு நகரங்களிலும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கியது.
7. புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்யப்பட்டது.
8. பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.
9. ஏழைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.
10. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற செய்தது.
11. கலப்பு மணம் செய்துகொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது.
12. சென்னையில் உள்ள குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் கட்டித் தந்தார்.
13. 1 கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்.
14. சீரணி எனும் ஓர் அமைப்பைத் தொடங்கி மக்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் பகுதிக்குத் தேவைப்படுகிற சிறிய, சிறிய வசதிகளை தாங்களே எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்துகொள்வது என்கிற திட்டம் கொண்டுவந்ததார்.
15. 1968-ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினார்.
16. கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை நிறுவினார்.
(திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஜி.யு.போப், பாரதியார், பாரதிதாசன், ஔவையார், கண்ணகி, கால்டுவேல், உ.வே.ச.)
17. பள்ளிகளில் என்.சி.சி. அணியில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.
18. அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளார் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.
19. முதல்வரானதும், அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் விழாக்களுக்கெல்லாம் அவர்களை பின் தொடராமல் தங்கள் பணியைச் செய்யலாம் என சுற்றறிக்கை அனுப்பினார்.
20. சென்னை செகரட்டேரியட் என்பதனை தலைமைச் செயலகம் என மாற்றியமைத்தார்.
21. விதவைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினார்.
தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற தமிழகத்தின் வரபிரசாதம் அறிஞர் அண்ணா அவர்கள் .
என்னே ஒரு தொலைநோக்குப் பார்வை ..!
1. சிந்தியுங்கள்
சாதனையாளர்கள் தினமும் சிந்திப்பார்கள்.
மனித மூளை மிகவும் ஆற்றல்மிக்க ஒன்று. எனவே நோக்கத்துடன் சிந்திக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
துறை சார்ந்த சிரமமான காரியங்களில், உங்களை நீங்களே ஒரு கடினமான கேள்வி கேட்டு, அதற்கான பதிலைக் கண்டடைய வேண்டும்.
இதன் மூலம் சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதற்கான தீர்வு இருந்தே தீரும் என்கிற நம்பிக்கை பிறக்கும்.
2. மனதிற்குப் பிடித்த உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்றவுடன், சிக்ஸ் பேக், எய்ட் பேக் மற்றும் ஸீரோ சைஸுக்காக உழைப்பது மட்டுமேயல்ல.
நீச்சல், சைக்ளிங், தோட்ட வேலைகள், நாய்க்குட்டி உடன் விளையாடுவது என உடல், மனம் இரண்டுக்கும் புத்துணர்வு தரக்கூடிய ஓர் எளிய பயிற்சியைத் தேர்வு செய்து, அதை தினமும் மேற்கொள்ளுங்கள்.
3. சீக்கிரம் எழுந்தால்
அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் எழுந்திரிக்க வேண்டியதில்லை என்றாலும் சற்று முன்னர் எழுந்தால் நீங்கள் செய்யப்போகும் வேலையில் தெளிவும் படைப்பாற்றலும் சற்றே அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், விடிகாலை எழும் பழக்கமுள்ளவர்கள் ஆக்கவளம் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சீரான தூக்கப்பழக்கம் மிகவும் முக்கியமான ஒன்று.
4. ஆரோக்கிய உணவு
நம் ஆரோக்கியம், நாம் உண்ணும் உணவுகளையே பெரிதும் சார்ந்திருக்கிறது.
உங்கள் மனத் தெளிவு, உணர்ச்சிகள், சக்தி, சுறுசுறுப்பு அனைத்தையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைப்பதற்கான ஆற்றலைப் பெற, ஆரோக்கிய உணவு மிகவும் அவசியம்.
5. அத்தியாவசியங்களுடன் மட்டுமே வாழ்ந்திருங்கள்
உங்கள் அலுவல் மேசையில் தேவையில்லாமல் குவிந்துகிடக்கும் பொருட்களைக் கழித்துவிட்டால், மிச்சமிருப்பது அத்தியாவசியங்கள் மட்டுமே.
அந்த அவசியத் தேவைப் பொருட்களை தரமானவையாக வாங்குங்கள். மற்றவர்களிடம் உங்களுக்கான மரியாதையைப் பெற்றுக்கொடுப்பது, குணம் மட்டுமல்ல உடைமைகளும்தான்.
குப்பைக்கு நடுவில் அமர்ந்திருக்கும் ஊழியரைக் காணும் கண்களிடம் மதிப்பிருக்காது.
6. அவசியமற்ற கருத்துகளுக்கு காது கொடுக்காதீர்கள்
உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவுகள், எப்போதும் நீங்கள் எடுக்கும் முடிவுகளாக இருக்க வேண்டும்.
மற்றவர்களிடம் கருத்துக் கேட்டு சிக்கலாக்கிக்கொள்ளாமல் சிறந்த, தெளிவான முடிவுகளை எடுங்கள்.
வெற்றியாளர்கள் முற்போக்கான உறவுகளை எடுத்துச் செல்வதில் மிகவும் திறமையானவர்கள். ஏனெனில், அவசியம் இல்லாத கருத்துகளை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.
7. இன்று மட்டுமே நிஜம்
நேற்று என்பது இன்றில்லை. நாளை என்பதில் நிஜமில்லை. இரண்டுமே நினைவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடுதான்.
எனவே நீங்கள் வாழவேண்டியது இன்று, இந்த நொடி மட்டுமே. இன்றைய தினத்தை எவ்வாறு சிறப்பாக முடிப்பது என்ற யோசனை மட்டுமே தேவை.
அந்தச் சிந்தனை மட்டுமே செய்யும் செயல்களில் கவனத்தைக் கொண்டுவரும்.
எதிர்காலத்தைப் பற்றிய பயத்தையும் கடந்த காலத்தின் வருத்தங்களையும் கணக்கில் கொள்ளாமல் தெளிவாகச் செயல்படுபவர்களே வெற்றியாளர்களாகக் கருதப்படுகிறார்கள்.
8. பணி நேர்த்தி அவசியம்
உங்களின் வாட்ஸ்அப் இன்பாக்ஸ் முதல் மெயில் இன்பாக்ஸ் வரை அனைத்திலும், தினமும் வரும் மெஸேஜ்களை முழுவதுமாக ஓபன் செய்து, அதற்கான பதிலை அன்றே அனுப்பிவிடுதலை முடிந்தவரை கடைப்பிடியுங்கள். அன்றைய வேலையை அன்றே முடிக்கப் பழகிவிட்டாலே, பணி நேர்த்தி கைகூடிவிடும்.
9. உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்
எந்தத் துறையாக இருப்பினும், யாராக இருப்பினும் வெற்றியடைய சுயமுன்னேற்றம் மிகவும் முக்கியமான ஒன்று.
கற்கும் பாடங்களில் இருந்தும் அனுபவங்களில் இருந்தும் உங்களை நீங்களே வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டத்தை எண்ணி உட்கார்ந்திருக்காமல், ‘என் வெற்றி எனக்கானது. என் உழைப்பைச் சார்ந்தது. அதற்கு என்னை நானே முன்னேற்றிக்கொள்வது முக்கியம்’ என்று நினைக்க வேண்டும்.
இதை நடைமுறையில் கொண்டுவர, ஒரு நல்ல சுயமுன்னேற்றப் புத்தகத்தைத் தேர்வு செய்து வாசிக்க ஆரம்பிக்கலாம்.
10. அச்சம் தரும் விஷயங்களை தினமும் முயலுங்கள்
வெற்றியாளர்களுக்கும் மற்றவர்களுக்குமான ஒரே வித்தியாசம்… தங்கள் பயம், துயரம் எதையும் பொருட்படுத்தாமல் அடுத்த நிலையை நோக்கி முன்னேறிக்கொண்டே இருப்பது.
பயம், பதற்றம், சந்தேகம் இவை அனைத்தும் எல்லோருக்கும் இருப்பவையே. ஆனால் இதுபோன்ற எதிர்மறை விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் இலக்கை நோக்கி பயணம் செய்பவர்கள் மட்டுமே வெற்றியாளர்கள் ஆவார்கள்.
இந்தப் படத்தில் இருக்கும் கொஞ்சம் குழப்பமாகவும், துயரமாகவும், எதிர்பாராத தோற்றத்துடனும் இருக்கும் இந்திய இளைஞன், ஜெர்மனியில் மெட்ரோ ரயிலில் உட்கார்ந்திருக்கிறான். அவன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண்ணை அவனுக்குத் தெரியாது. ஆனால் அவள் யாரென்றால்… உலகப் பிரபலமான நடிகை!
இந்தப் படம் ஜெர்மனி முழுவதும் ஒரே நாளில் வைரலாகிறது.
பிரபல ஜெர்மன் பத்திரிகையான “டெர் ஸ்பீகல்” (Der Spiegel) அந்தப் படத்தில் இருக்கும் இந்திய இளைஞனைத் தேட ஆரம்பிக்கிறது. இறுதியில் மியூனிக்கில் அவனைக் கண்டுபிடிக்கிறார்கள். அப்போதுதான் தெரிகிறது… அவன் ஜெர்மனியில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிறான் என்பது.
நிருபர் அவனிடம் கேட்கிறார்:
“உனக்குத் தெரியுமா, உன்னருகில் உட்கார்ந்திருந்த வெள்ளைப் பெண் ‘மேசி வில்லியம்ஸ்’ — ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸின் நாயகி (Arya stark) என்பது? அவளுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்காங்க. கூட ஒரு செல்ஃபி எடுக்கக் கனவு காண்பாங்க. ஆனால் நீ எந்த ரியாக்ஷனும் காட்டல… ஏன்?”
அமைதியாக அந்த இளைஞன் பதில் சொல்கிறான்:
“எனக்கு தங்கும் அனுமதி இல்லை… பையில் ஒரு யூரோ கூட இல்லை… தினமும் ‘சட்டவிரோதமாக’ டிக்கெட் இல்லாம ட்ரெயினில் பயணம் செய்யுறேன்… அப்படி இருக்கும்போது எனக்கு பக்கத்தில் யார் உட்கார்ந்திருக்காங்கறது எனக்கு முக்கியமே இல்லை.”
அவன் நேர்மையும், நிலைமையும் பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துது. உடனே அந்தப் பத்திரிகை அவனுக்கு தபால்காரர் வேலை ஒன்றை ஏற்பாடு செய்கிறது. மாத சம்பளம் 800 யூரோ. இந்த வேலை ஒப்பந்தம் இருப்பதால், உடனடியாக அவனுக்கு சட்டப்படியான தங்கும் அனுமதி கிடைத்துவிடுகிறது. எந்தத் தடையும் இல்லாமல்.
இந்தக் கதை நமக்குச் சொல்வது… விதி எப்படி வேலை செய்கிறது என்பதை.
ஒவ்வோர் சம்பவமும் முந்தைய சம்பவத்துடன் தொடர்புடையது. இப்போதைய சம்பவம் எதிர்கால சம்பவத்துடன் இணைக்கப்பட்டிருக்கு. எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டது போல… ஒரு ஸ்கிரிப்ட் எழுதப்பட்டிருக்கு, அதன் மேல்தான் வாழ்க்கை என்ற படம் ஓடிக்கொண்டிருக்கு.
அடுத்து யாருடைய விதியில் என்ன எழுதப்பட்டிருக்குன்னு யாருக்கும் தெரியாது.
இதுதான் விதியின் விளையாட்டு. 🙏
உங்களுக்கும் விதியின் மேல் நம்பிக்கை இருந்தால் இதே மாதிரி இணையத்துல கிடைக்கற படத்தை எடுத்து இஷ்டத்துக்கு கதை எழுதுங்க. நம்பறவங்க நிறைய பேர் இருக்காங்க.
1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.
வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.
ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
11, உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 12.12.2025.
இன்று இரவு 08.00 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று காலை 09.21 வரை பூரம் . பின்னர் உத்திரம்.
இன்று மாலை 03.52 வரை பரீதி. பிறகு ஆயுஷ்மான்.
இன்று காலை 07.52 வரை பாலவம். பின்னர் இரவு 08.00 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
திட்டமிட்ட காரியம் நிறைவேறும். மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
ரிஷபம்
உயர்கல்வியில் தெளிவுகள் உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுப காரியம் கைகூடுவதற்கான சூழல்கள் தோன்றும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகும். தூரதேச பயணம் பற்றிய சிந்தனை மேம்படும். எதிலும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மிதுனம்
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
கடகம்
சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். பணிகளில் மந்தமான போக்கு காணப்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவவேறும். திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்தை தரும். தியானம் மேற்கொள்வது மன பதட்டத்தை குறைக்கும். துணையுடன் அனுசரித்து செல்லவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சிம்மம்
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். இனம் புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி
குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் நீடிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் உழைப்புகள் மேம்படும். விமர்சன பேச்சுக்களை வெளிவட்டாரத்தில் தவிர்க்கவும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பெண்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும். எதிரிகள் விலகி செல்வார்கள். சுப காரியங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும்.வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
குடும்பம் பற்றிய சிந்தனை அதிகமாகும். பெரியோர்களின் சந்திப்பால் மனமாற்றம் ஏற்படும். கடினமான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வியாபார தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். சகோதரிக்கு சுபகாரிய ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். மனதில் இருந்த சஞ்சலம் குறையும். சோர்வு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடி வரும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் வந்துசேரும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களுடன் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மகரம்
புதிய தொடர்புகளில் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருல்களில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபார வரவுகளில் தாமதம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கும்பம்
திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உள்ளத்தில் அமைதி ஏற்படும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
வெளிவட்டார பழக்கம் விரிவடையும். மனதில் உற்சாகம் பிறக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளால் திடீர் யோகம் உண்டாகும். தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்து திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
அறம் மிகுந்த வாழ்வு
ஆறுதல் தரும் சொற்கள்
இதம் நிறைந்த பார்வை
ஈகை நலமிகு கரங்கள்
உறுதி குறையாத உள்ளம்
ஊக்கம் தணியாத நம்பிக்கை
எள்ளல் கலக்காத நடத்தை
ஏற்றம் சேர்ந்த குணம்
ஐயுறவு இல்லாத நட்பு
ஒழுக்கம் குன்றாத தலைமுறை
ஓதுதல் ஓம்பும் நாட்கள்
ஔடதம் தேடாத மணித்துளிகள்
அமைந்திட நல்வாழ்த்துகள்
வேண்டும் வேண்டும் வாழ்த்துங்கள்.
கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி, இணைய வழியில் வன்முறையைத் தூண்டும் அமைப்புக்களை தீவிரவாத பட்டியலில் இணைப்பதாக அறிவித்துள்ளார்.
இணையத்தின் ஊடாக இளையோர் மத்தியில் வன்முறையைத் தூண்டும் 764 என்ற அமைப்பினை தீவிரவாத இயக்கமாக கனடா அறிவித்துள்ளது.
இந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்த உலகின் முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.
கனடிய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அமைப்புடன் மேலும் நான்கு அமைப்புகள் கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன:
764, மெனியக் மெர்டர் கல்ட், டெரோகிராம் கலக்டிவ், இஸ்லாமிய ஸ்டேட் மொசாம்பிக் ஆகிய அமைப்புக்கள் இவ்வாறு தீவிரவாத இயக்கப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
அரசின் அறிக்கையில், 764 உள்ளிட்ட தீவிரவாத பட்டியலில் இணைக்கப்பட்ட அமைப்புக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களை பயன்படுத்தி ஆட்சேர்ப்பு நடடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த அமைப்புகள் தீவிரவாத சிந்தனைகளை பரப்புதல், மற்றும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வன்முறையைத் தூண்டுவது என்பனவற்றில் ஈடுபடுகின்றன என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவில் பொலிஸார் பலமுறை பெற்றோர்களுக்கு இந்த வலைப்பின்னலின் அபாயங்களை எச்சரித்துள்ளது. 764 அமைப்பு குழப்பம் மற்றும் வன்முறையின் மூலம் நாகரிக சமுதாயத்தை அழிக்க முயல்வதாக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த அமைப்புகள் குழந்தைகளை குறிவைக்கின்றன
அவற்றைத் தடுப்பதற்கு சட்ட அமலாக்கத்துக்கு மேலும் அதிகாரங்கள் தேவை. இந்த புதிய அறிவிப்பு அதை வழங்குகிறது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தெனாலி என்ற ஊரில் ராமன் என்பவன் வசித்து வந்தான். ராமன் சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். பிறரிடம் உள்ள தவறுகளைக்கூட நைச்சியமாகச் சொல்லக்கூடியவன். அவன் கிருஷ்ணதேவராயர் சபையில் விதூஷகனாக இருந்தான்.
ஒரு நாள் சபையில் காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருந்தது. "பால் வேண்டாத பூனையும், பழம் தொடாத குரங்கும் உண்டோ? அதுபோல் பணத்தை விரும்பாத மனிதரும் கிடையாது
பணத்தைக் கொடுத்துக் காரியத்தை முடி" என்றார் ஒருவர்.
தெனாலிராமன் குறுக்கிட்டு, "உலகில் கிடையாது என்பதே கிடையாது. தேடினால் பால் குடிக்காத பூனையும், பழம் விரும்பாத குரங்கும், பணம் வேண்டாத மனிதரும் நிச்சயம் கிடைப்பர்" என்று சொன்னான்.
அரசர் எரிச்சலுடன் "ராமா! மறுத்துப்பேச வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லாதே!" என்றார்.
"இம்மூன்றையும் நான் நிரூபித்தால் எனக்கென்ன பரிசு?" என்று சவாலாகக் கேட்டான் ராமன்.
"ஆயிரம் பொன் தருகிறேன். முடியவில்லை என்றால் பதவியிலிருந்தே நீக்கப்படுவாய்" என எச்சரித்தார் ராயர்.
ராமன் ஒப்புக்கொண்டு புறப்பட்டான்.
ஒரு பூனைக்குட்டியைக் கொண்டுவந்து அதற்கு சாதம் போட்டான். பாலைக் கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சி அதன் முன்வைத்தான். ஆவலாக வாயை வைத்த பூனை வாயைச் சுட்டுக்கொண்டு ஓடியது. தினமும் இப்படியே செய்துவந்ததால் பூனை வெள்ளையாக எதைப் பார்த்தாலும் மிரண்டு ஓடியது.
அடுத்து குரங்காட்டியிடமிருந்து ஒரு குரங்குக் குட்டியை வாங்கி அது தன்னிடம் நன்கு பழகியபின் ஒரு நல்ல பெரிய வாழைப்பழத்துக்குள் ஒரு நீளமான இஞ்சியை வைத்து அதற்குக் கொடுத்தான். அதுவும் ஆசையாகச் சாப்பிட்டது. ஆனால், சற்று நேரத்துக்கெல்லாம் தொண்டை எரிய ஆரம்பிக்கவே, அது தரையில் புரண்டு அலறியது. காறி உமிழ்ந்தது. தினமும் ராமன் அதற்குப் பச்சைவாழை, செவ்வாழை, மொந்தன், ரஸ்தாளி, மலைப்பழம் என்று விதவிதமாகக் இஞ்சிச் சொருகிக் கொடுத்ததால் அது வாழைப்பழத்தைக் கண்டாலே காததூரம் ஓடியது.
அடுத்து பரம ஏழையான ஒரு மனிதனை சினேகம் பிடித்துக் கொண்டான் ராமன்.
"அவனிடம் நீ இருபத்து நான்கு மணி நேரமும் என்னுடனேயே இருக்கவேண்டும். ஒரு வேளை சோற்றைக் கண்ணால் பார்க்காமலிருந்தால் பத்து பொன். நாள் பூராவும் பட்டினி கிடந்தால் முப்பது பொன். பட்டினி கிடப்பதாய் வெளியில் சொன்னால் நான் பொன் தரமாட்டேன். அது மட்டுமல்ல நீ எனக்கு முப்பது பொன் தரவேண்டும் அல்லது அதற்கு ஈடாக உழைக்க வேண்டும்.
இப்படி உன்னால் எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் இருக்கலாம். முடியவில்லை என்றால் சொல்லிவிட்டு அதுவரை உள்ள வெகுமதியை வாங்கிக்கொண்டு செல்லலாம். திருட்டுத்தனமாக ஒரு பருக்கை சாப்பிட்டாலும் பரிசு கிடையாது. நீ உயிரோடிருக்க நான் குளிகைகள் தருவேன். உன்னால் முடியாது என்று சொன்ன பிறகு நான் உன்னை மன்னரிடம் அழைத்துச் செல்வேன்.
அரசர் பணம் தருவார். அதைப் பெற்றுக் கொண்டால் நான் தந்ததை மூன்று மடங்காகத் திருப்பித் தரவேண்டும். மறுத்தால் நீ பெற்றிருக்கும் வெகுமதியோடு நூறு பொற்காசுகள் சேர்த்துத் தருவேன்.என்ன சொல்கிறாய்?" என்று கேட்டான்.
ஏழை மனிதன் யோசித்தான்.
'வருமானமில்லாமல் தினமும் பட்டினி கிடக்கிறோம். இங்கே ஒரு நாளைக்கு முப்பது பொன். பத்து நாள் பட்டினி கிடந்தால் முந்நூறு பொன்னோடு கூடுதலாகவும் நூறு பொன் கிடைக்கும். கண்ணியமாக வியாபாரம் செய்து பிழைக்கலாம். எதற்காகவோ அரசரிடம் கூட்டிப் போகிறான். இவனில்லாமல் அரசரைப் போய் பார்த்தால் என்ன கிடைக்கும்? பத்தோ, இருபதோ, நூறோ பொன் கிடைக்கலாம்! கிடைக்காமலும் போகலாம்! அதனால் ராமன் சொன்னபடியே கேட்போம்' என முடிவெடுத்து ராமனிடம் சம்மதம் தெரிவித்தான்.
ராமன் இரவு தூங்கும்போதுகூட இருவரையும் சங்கிலியால் பிணைத்திருந்தான். பத்து நாட்கள் சென்றன. என்னதான் பசியாதிருக்கக் குளிகை சாப்பிட்டாலும் நா ருசியாகச் சாப்பிட மனம் ஆலாய் பறந்தது. அவன் தன் விரதத்தை முடித்துக் கொள்வதாகச் சொல்ல, ராமன் அவனோடு அரண்மனைக்குப் புறப்பட்டான்.
மன்னரை வணங்கி "இவரே பணம் வேண்டாத மனிதர்" என்றான் ராமன். ஒரு தட்டு நிறைய பொற் காசுகளும் ஆபரணங்களும் கொண்டு வரச்சொல்லி மன்னர் அவன் எதிரே வைத்தார்.
"தேவையானதை அள்ளிக்கொள்" என்றார். "இல்லை. இதில் ஏதோ சூதிருக்கிறது" என்று நினைத்த ஏழை, “அரசே! இதில் ஒரு பொற்காசுகூட எனக்கு வேண்டாம்" என மறுத்துவிட்டான்.
"என்னப்பா, அதிசயமாயிருக்கிறது. எல்லோரும் பணத்துக்கு ஆலாய் பறக்க, நீ ஏன் பெற்றுக்கொள்ள மறுக்கிறாய்?" என்று வியப்போடு வினவினார் வேந்தர்.
"பணத்தைத் தின்னமுடியுமா? பசி வந்தால் சோறுதான் வேண்டும். பணத்தைப் பார்த்தால் அதில் குழந்தையை, மனைவியை, அம்மா, அப்பாவைப் பார்க்க முடியுமா? என்னைச் சீக்கிரம் விடுங்கள். நான் போகவேண்டும்" என்று அவசரப்பட்டு ஓடினான்!
"தெனாலிராமா! ஏன் இவன் இப்படிப் பேசுகிறான்?'' என்று அரசர் கேட்க, "அதை அப்புறம் சொல்கிறேன். நீங்கள் பால் குடிக்காத பூனையையும் பழம் தின்னாத குரங்கையும் பார்க்கவேண்டாமா?" என்று இரண்டையும் காண்பித்தான்.
அரசரும் பார்த்தனர். அவையோரும் பிரமிப்போடு
ஒரு அகலமான பாத்திரத்தில் சுவையான பசுவின் பாலை எடுத்துவரப் பணித்தார் வேந்தர். பால் வந்தது.
தெனாலிராமனின் பூனைப் பாலைப் பார்த்தது தான் தாமதம்! நாலுகால் பாய்ச்சலில் எகிறி ஓடியது. பால் மட்டுமா? வெண்ணெய், தயிர் எதையுமே முகரவும் மறுத்தது.
குரங்கை ஒருவர் பிரியமாகத் தடவிக்கொடுத்து மலைவாழைப்பழத்தை உரித்துக் கொடுக்க, அவரை அது பிறாண்டிவிட்டு ஓடியது.
ஆயிரம் பொன்னை வாங்கிக்கொண்டு காரணத்தைச் சொன்னான் ராமன்
அரசே ! எதையும் எவருக்கும் வேண்டாததாக ஆக்கமுடியும்! காலமும் தேவையும்தான் ஆசையை உண்டாக்குகிறது. பசித்த மனிதனுக்குப் பணம் மட்டுமே முக்கியமாகாது. அம்மணமாக நிற்கும் மனிதன் ஆடையைத்தான் விரும்புவான். சும்மா பழமொழி சொன்னால் ஆயிற்றா?" என்றான்.
அரசர் அசந்து போனார்!
திரு சோ அவர்கள் ஓரெழுத்துப் பெயருடன் நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா. அப்படி ஒரேழுத்தில் பெயரைக் கொண்டு, தமிழ் உலகிலும் நாடக உலகிலும் பத்திரிகைத் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் புகுந்து புறப்பட்டு ஓராயிரம் ஆச்சரியக்குறிகளை அள்ளியள்ளித்தந்தவர்... சோ!
இவரின் பெயர் என்னவோ ராமசாமிதான். தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ருபூதம் என மிகப்பெரிய வக்கீல் குடும்பம். அதனால்தானோ என்னவோ, சென்னை பி.எஸ். பள்ளியில் படிப்பைத் தொடங்கியவர், பிறகு சென்னை சட்டக்கல்லூரிக்குச் சென்று படித்தார் ராமசாமி. உயர் நீதிமன்ற வக்கீலாகப் பணியாற்றினார். முன்னணி நிறுவனங்களுக்கெல்லாம் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்தார். இவையெல்லாம்... குடும்பப் பாரம்பரியத்தின்படி அமைந்தது. அல்லது அமைத்துக் கொண்டார்.
பால்யத்தில், டீன் பருவம் முடிந்து 20-வது வயதில், நாடகங்களை அதிகம் பார்த்தார் ராமசாமி. சென்னை சபாக்களில் நாடகம் மேடையேறினால், அங்கே ராமசாமி, நாடகத்தைப் பார்க்க முதல் ஆளாக இருப்பார்.
பிறகு, நாடகத்தில் நடிக்க ஆர்வம் பிறந்தது. அதன்படி, ‘கல்யாணி’ எனும் நாடகத்தில் நடித்தார். இவரின் ‘பாடி லாங்வேஜ்’ வித்தியாசமாக இருந்தது. கண்களை உருட்டி உருட்டிப் பேசுகிற மேனரிஸம் அனைவரையும் கவர்ந்தது. ’ராமசாமிக்கு நடிப்பும் நல்லா வருதே..’ என்று வீடு கொண்டாடியது. நட்பு வட்டமும் பாராட்டியது.
அதன் பிறகு, ‘தேன்மொழியாள்’ எனும் நாடகம். அதில் இவரின் கேரக்டர் பெயர் “சோ’. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இந்த நாடகம். எஸ்.ராமசாமி எனும் பெயர் ‘சோ’ ராமசாமி என்றானது. பிறகு, தொடர்ந்து நாடகங்களில் நடித்தார். இயக்கி நடிக்கவும் செய்தார். இப்போது ‘ராமசாமி’ போய், ‘சோ’ எனும் பெயர் நிலைக்கத் தொடங்கியது.
சோவின் நாடகத்தில் அரசியல் இருக்கும். ஆனால் சீரியஸாக அதைக் கையாளமாட்டார். காமெடியும் நையாண்டியும் என நக்கலடிப்பார். சமூகத்தில் நடக்கிற அவலங்களையும் சட்ட மீறல்களையும் சாடி, பகடிகள் செய்வார். மக்களையே குற்றம் சுமத்தி, கிண்டலடிப்பார். எல்லாவற்றையும் ரசித்து கைதட்டினார்கள் ரசிகர்கள்.
’சம்பவாமி யுகே யுகே’ எனும் நாடகம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பிரபலம். ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தை இருபது முறை முப்பது முறை பார்த்தவர்களெல்லாம் உண்டு. இந்த நாடகங்களெல்லாம் தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் என 1600-க்கும் மேல் மேடையேறிக் கலக்கின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் சோ நாடகங்களை மேடையேற்றினார். இந்தப் பெயருக்கு மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டது.
நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, திரையுலகிலும் நடிக்கத் தொடங்கினார் சோ.
சிவாஜி நடித்த ‘பார் மகளே பார்’ நடிகர் சோ வின் முதல் படம். இதையடுத்து சிவாஜியுடன் ஜெமினியுடன் எம்ஜிஆருடன் ஜெய்சங்கருடன் என முன்னணி நடிகர்கள் பலருடன் தொடர்ந்து நடித்தார். இதேசமயத்தில், பத்திரிகைகளிலும் கதைகள் எழுதினார். நாடகங்கள் எழுதினார். நாவல்கள் எழுதினார். வக்கீல் பணியையும் பார்த்தார்.
’சோ சோர்ந்து போய் யாருமே பார்த்ததில்லை. எப்போதும் கலகலவென இருப்பார். எதிரில் இருப்பவர்களையும் சந்தோஷ மனநிலைக்குக் கொண்டு வந்துவிடுவார். எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருந்தாலும், அதைச் சிரித்துக் கொண்டே ‘டீல்’ செய்வதில் சோ சார், மிகப்பெரிய ரோல்மாடல் பலருக்கும்’’
இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்க, அவரின் சகோதரர் முக்தா வி.ராமசாமி தயாரிக்க, ‘முக்தா பிலிம்ஸ்’ எனும் பெயரில் ஏராளமான படங்கள் வெளிவந்தன. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இதில் பல படங்களில் சோ நடித்திருக்கிறார். சில படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். வசனம் எழுதியிருக்கிறார். இப்படி நிறைய பங்களிப்புகளை திரையுலகில் செய்திருக்கிறார்
தனது சித்தி மீது சோவுக்கு மிகப்பெரிய அன்பும் மரியாதையும் உண்டு. நடிகை ரம்யா கிருஷ்ணனின் பாட்டிதான் சோவின் சித்தி. சித்தியின் மீது உயிரையே வைத்திருப்பார் சோ. தன் கதைகளை அவரிடம் படித்துக் காட்டி, சித்தியின் ரியாக்ஷனைக் கவனிப்பார் சோ.
நிறைகுடம்’ படம், இயக்குநர் மகேந்திரனின் கதை. சோ வசனம். முக்தா சீனிவாசன் இயக்கம். படத்தில், வாணிஸ்ரீயிடம் சிவாஜி, கவிதையாகப் பேசுகிற வசனக் காட்சி.
“இந்த சீன் முக்கியமான சீன். பிரமாதமா, கவிதை எழுதிடுறா’’ என்று சிவாஜி உட்பட எல்லோரும் சொல்ல, ‘’கவலையே படாதீங்க. கலக்கிடுறேன்’’ என்று சொன்னார் சோ. மறுநாள்... அந்தக் காட்சி எடுக்கிறார்கள். கவிதை பேப்பர், சிவாஜியிடம் வருகிறது. சோவை ஏற இறங்கப் பார்த்தார். அட்டகாசமாக நடித்துக் கொடுத்தார்.
‘’சோவை வரச்சொல்லுப்பா’’ என்றார். சோ வந்தார். முக்தா சீனிவாசனும் இருந்தார். ‘’இந்த வசனக் கவிதையை இவன் எழுதல. அநேகமா கவிஞர்கிட்ட (கண்ணதாசன்) கேட்டு வாங்கிட்டு வந்திருக்கான். என்ன சரியா?’’ என்று செல்லமான அதட்டலுடன் சிவாஜி கேட்க,
‘’ஆமாம், அதுக்கென்ன, ஜாலியா எழுதுறவன்கிட்ட கவிதையைக் கேட்டா என்ன அர்த்தம்?
அதான் நம்ம கவிஞர்கிட்ட காட்சியைச் சொல்லி அஞ்சே நிமிஷத்துல வாங்கிட்டுவந்துட்டேன்’’ என்று சோ சொல்ல, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
கர்மவீரர் காமராஜர் எளிமைக்கு உதாரணமாக விளங்கியவர். கைக்கடிகாரம்கூட கட்டமாட்டார். பாக்கெட்டில் மணிபர்சோ, பேனாவோகூட இருக்காது. ஒரு சிறு கைக்குட்டை மட்டும் வைத்திருப்பார். அதை எடுத்து முகம்கூட துடைக்கமாட்டார்.
"கடிகாரம்கூட இல்லாமல் இருக்கின்றீர்களே... நேரம் தெரியவேண்டுமானால் என்ன செய்வீர்கள்?" என்று எழுத்தாளர் சாவி அவரிடம் கேட்டார்.
அதற்கு காமராஜர் அவருக்கே உரிய பாணியில், "கடிகாரம் எதுக்குன்னேன், யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்கண்ணேன்” என்றார் காமராஜர்.
ஆடம்பரத்தையும், வீண் விளம்பரத்தையும் கட்டிக்கொண்டு பவனிவரும் இன்றைய தலைவர்கள் காமராஜர் போன்ற மாமனிதர்களையும் சற்று நினைத்துப் பார்ப்பது நல்லது!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். அலுவலகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
ரிஷபம்
அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபங்களை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகன மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறுதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கடகம்
ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கவனம் வேண்டும். நெருங்கியவர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனம் சாதகமாகும். திட்டமிட்ட பணிகளை மாற்றியமைப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். லாபம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இள நீலம்
சிம்மம்
தாய் வழியில் அனுசரித்து செல்லவும். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தொழில்நுட்ப கருவிகள் விரயங்கள் உண்டாகும். அருகில் உள்ளவர்கள் பற்றிய புதிய அனுபவம் ஏற்படும். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். சுயதொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி
முன்பின் தெரியாதவர்கள் ஒத்தழைப்பாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். பெருமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
துலாம்
உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். ண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும். சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உங்கள் மீதான வதந்திகள் மறையும். வியாபாரத்தில் புது முதலீடுகள் அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
பிள்ளைகளின் விருப்பத்தைப் நிறைவேற்றுவீர்கள். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். குழந்தைகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். கலை பொருல்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
தனுசு
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மறதி பிரச்சனை குறையும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தை விரிவு செய்யவதில் ஆலோசனை வேண்டும். பணி சார்ந்து சில பயணம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யவும். ஜாமின் செயல்களை தவிர்க்கவும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஒப்பந்த பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்புகள் உயரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இள நீலம்
மீனம்
பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் நலனில் கவனம் வேண்டும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குடும்பத்தினரின் குணமறிந்து செயல்படவும். பொது காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். பிடிவாதப் போக்கை குறைத்து கொள்ளவும். நிம்மதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 25 ஆம் தேதி வியாழக்கிழமை 11.12.2025
இன்று இரவு 07.43 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று காலை 08.44 வரை மகம். பின்னர் பூரம்.
இன்று மாலை 04.59 வரை விஷ் கம்பம். பிறகு பரீதி.
இன்று காலை 07.51 வரை பத்திரை. பின்னர் இரவு 07.43 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று காலை 6.19 வரை சித்த யோகம். பின்னர் காலை 8.44 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை


















