தேசிய பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
சமீபத்தில் நடிகை ராதிகா, 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவைச் சந்தித்து நலம் விசாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் "தாய்க்கிழவி படம் பார்த்தீர்களா?" என்று சிரித்துக்கொண்டே கேட்கிறார். ஆனால், அந்த வீடியோவில் பாரதிராஜாவை அந்த நிலையில் பார்ப்பதற்கே மிகவும் மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது.
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனை உடையில் மிகவும் தளர்ந்த நிலையில் இருக்கும் ஒருவரை, அவர் தனிப்பட்ட முறையில் ஓய்வெடுக்கும் போது இப்படி வீடியோ எடுத்து வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே தன் கட்டளைக்குக் கீழ் வைத்திருந்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவரது முதிர்ச்சியான காலத்தில் நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா?
நலம் விசாரிக்கச் செல்வது நல்ல விஷயம் தான். ஆனால், அதை ஏன் கேமரா வைத்து ரெக்கார்ட் செய்து ஊருக்கெல்லாம் காட்ட வேண்டும்?
பிரபலங்கள் தங்களின் தனிப்பட்ட பப்ளிசிட்டிக்காகவோ அல்லது சோஷியல் மீடியா லைக்குகளுக்காகவோ ஒருவரின் முதுமையையும், இயலாமையையும் இப்படிப் பொதுவெளியில் காட்சிப்படுத்துவது அப்பட்டமான உரிமை மீறல் இல்லையா? ஒரு நோயாளியின் தனிப்பட்ட சுதந்திரம் (Privacy) இங்கு எங்கே போனது?
தந்தையின் இறுதிச் சடங்கிற்கு நான் வந்தேன்.
வந்த விதமே வேறுபட்டது—
சொகுசான எஸ்யூவி கார், கருப்பு சூட், விலையுயர்ந்த கண்ணாடி…
நான் வெற்றி பெற்ற மகன்.
இந்தக் குடும்பத்தின் தூண் நான் தான் என்று நம்பியவனாக வந்தேன்.
15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தேன்.
பணம் குறையவில்லை.
மாதம் தவறாமல் 400 டாலர்கள் அனுப்பினேன்.
“தந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று நிம்மதியாக இருந்தேன்.
நான் என் கடமையைச் செய்தேன் என்று நம்பினேன்.
அடக்கம் முடிந்தது.
வீட்டுக்குள் நுழைந்தேன்.
அங்கு இருந்த அமைதி—
அது வெறும் அமைதி இல்லை…
தந்தை இல்லாத வெற்றிடம்.
ஆனால் நான் அதை உணராமல்,
என் பழக்கப்படி குறைகளைத் தேட ஆரம்பித்தேன்.
“வீடு ஏன் இப்படி சீரழிந்திருக்கிறது?”
“சுவர் ஏன் பூசவில்லை?”
“தந்தை ஏன் இவ்வளவு ஒல்லியாகிவிட்டார்?”
“நல்லா கவனிக்கலையா?”
என் தம்பி…
எதுவும் சொல்லவில்லை.
அவன் சமையலறையில் அமர்ந்திருந்தான்.
பழைய டி-ஷர்ட்…
கண்களின் கீழ் கருவளையங்கள்…
கைகளில் காயங்கள்…
அவன் சோர்வாக இல்லை—
அவன் காலியாகிவிட்டான்.
நான் “தீர்வு” சொல்ல ஆரம்பித்தேன்:
“இந்த வீட்டை விற்றுவிடலாம்.
நாம் பங்கிட்டு கொள்வோம்.
நீ இங்கே இருந்ததால், உனக்கு அதிக பங்கு.”
அவன் என்னை நன்றி சொல்லுவான் என்று நினைத்தேன்.
ஆனால்…
அவன் மெதுவாக எழுந்து,
ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தை எடுத்தான்.
என் முன்னால் வைத்தான்.
“படி…” என்றான்.
அது ஒரு நாட்குறிப்பு.
அக்டோபர் 2:
தந்தை இரவு முழுக்க தூங்கவில்லை.
மூச்சு விட கஷ்டப்பட்டார்.
நான் அவரை நிமிர்த்தி வைத்தேன்.
மூன்று முறை அவர் என்னைத் தழுவிக் கொண்டு அழுதார்.
நவம்பர் 9:
மருந்துகளுக்குப் பணம் போதவில்லை.
என் மோட்டார் சைக்கிளை விற்றேன்.
டிசம்பர் 25:
தந்தை பேசவே இல்லை.
“மூத்த மகன் எங்கே?” என்று மெதுவாக கேட்டார்.
உன் பழைய குரல் பதிவை ஒலிக்க வைத்தேன்.
அதை கேட்டு சிரிக்க முயன்றார்.
ஜனவரி 10:
அவரை தினமும் தூக்குவதால்
என் முதுகு வலிக்கிறது.
ஆனா அவரை தனியாக விட முடியவில்லை.
பிப்ரவரி 3:
இன்று அதிகாலை 3 மணி…
அவர் பயந்து எழுந்தார்.
என் கையை பிடித்து விட்டார்.
“நான் போயிட்டா நீ தனியா இருக்க முடியுமா?” என்றார்…
என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
அதற்கு மேல் நான் படிக்க முடியவில்லை.
என் கண்கள் கலங்கின.
என் குரல் உடைந்தது.
தம்பி என்னைப் பார்த்தான்.
அவன் குரல் மெதுவாக இருந்தது—ஆனா குத்தியது.
“நீ 400 டாலர்கள் அனுப்பினாய்… நன்றி.
ஆனா நீ தினமும் நிம்மதியா தூங்கினாய்.
உனக்கு வார இறுதி இருந்தது.
உனக்கு வாழ்க்கை இருந்தது.
நான் 4 வருடமா ஒரு முழு இரவும் தூங்கல.
என் வேலை போச்சு.
என் வாழ்க்கை நின்றுபோச்சு.
தந்தை தனியா இருக்கக் கூடாது…
அவருக்கு பயமா இருந்த இரவுகளில்
யாராவது கையை பிடிக்கணும்…
அதுக்காக நான் இருந்தேன்.
பணம்…
அவரை தூக்காது.
அவரை ஆறுதல் சொல்லாது.
அவரோட பயத்தை எடுத்துக்கொள்ளாது.”
⸻
அவன் சிறிது நிமிடம் அமைதியாக இருந்தான்.
பிறகு சொன்னான்:
“வீட்டை நீயே வைத்துக்கொள்.
நான் என் பங்கை ஏற்கனவே கொடுத்துட்டேன்.
என் வாழ்க்கையையே கொடுத்துட்டேன்.”
⸻
அவன் தந்தை படுத்திருந்த அறைக்குச் சென்றான்.
பல வருடங்களுக்குப் பிறகு—
அவன் முதல் முறையாக ஆழ்ந்த தூக்கத்தில் விழுந்தான்.
⸻
நான் மட்டும் நின்றேன்.
என் கைக்கடிகாரம்…
என் காலணிகள்…
என் வெற்றி…
எல்லாம் ஒன்றும் இல்லாதது போல தோன்றியது.
⸻
நான் பணம் அனுப்பினவன்.
அவன் தந்தையுடன் இருந்தவன்.
நான் மருந்துக்கு பணம் கொடுத்தேன்.
அவன் மருந்தை தந்தையின் வாயில் வைத்தான்.
நான் சவப்பெட்டிக்கு பணம் கொடுத்தேன்.
அவன் தந்தையின் கையை
இறுதி மூச்சு வரை பிடித்திருந்தான்.
⸻
அடுத்த நாள்…
வீட்டின் முழு உரிமையையும்
அவனுக்கே மாற்றி விட்டேன்.
அது நியாயம் போல தோன்றியது.
ஆனா உண்மையில்—
அவன் செய்ததை நான் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது.
⸻
உண்மை:
தொலைவில் இருக்கும் மகன் — பணம் அனுப்புகிறான்.
அருகில் இருக்கும் மகன் — வாழ்க்கையை கொடுக்கிறான்.
⸻
இறுதி வரி:
நீதி என்பது சமமாகப் பகிர்வது அல்ல…
யார் அமைதியாக சுமை தூக்கினார்கள் என்பதை உணர்வதே உண்மையான நீதி.
முன்னோர்கள் சொன்ன உணவே மருந்து :
வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்.
பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம்.
இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது. (Raw and Uncooked). தேர்த்திருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்துவருவார்கள். வேர்க்க, விறுவிறுக்க தேர் இழுத்துவரும் பக்தர்களுக்காக பானாகம் வீட்டிற்கு வீடு தயாரித்துக் கொடுப்பார்கள். தாகமும், களைப்பும் தீரும் அளவுக்கு வயிறு நிறைய வாங்கி, வாங்கி பருகுவார்கள்.
இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானாகம் உள்ளே சென்றதும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி புதுத்தெம்புடன் தேரை இழுத்து கோவிலுக்கு கொண்டு சேர்ப்பார்கள். நீங்கள் இதுவரை பானகம் குடித்திராத நபராக இருந்தால் ஒருமுறை தயாரித்து சுவைத்துப்பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துவிடும்.
இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானத்தின் சுவை உங்களை மீண்டும் மீண்டும் பருகத்தூண்டும்.
தேவையான பொருட்கள்:
புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
செய்முறை:
வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும். மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும்.
கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்..
உங்கள் வாழ்க்கைத் துணையின் மதிப்பை உணர்வதில் ஒளிந்திருக்கும் உளவியல் உண்மை.
வாழ்க்கையில் நாம் எதையெல்லாம் இழக்கிறோம், எதையெல்லாம் தக்கவைத்துக் கொள்கிறோம் என்பதைத் தீர்மானிப்பது நமது ஞாபகசக்தி அல்ல.
அந்தப் பொருளின் மீது நாம் வைத்திருக்கும் 'மதிப்பு' தான். ஒரு சிறு பொருளாக இருந்தாலும் சரி, உணர்வுப்பூர்வமான உறவாக இருந்தாலும் சரி, நாம் எதை உயர்வாகக் கருதுகிறோமோ (Importance in life) அதை ஒருபோதும் கவனக்குறைவாகக் கையாளுவதில்லை.
இதை ஒரு தொழிலதிபரின் வாழ்வியலோடு விளக்குகிறது இந்தக் கதை.
ஒரு ஊரில் மிகப் பெரிய தொழிலதிபர் இருந்தார். அவருக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது; அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்துவிடுவார். பேனா தேவைப்படும் போதெல்லாம் புது பேனா வாங்குவார்.
இந்த பழக்கத்தால், விலை மலிவான பேனாக்கள் பலவற்றை வாங்கி வைத்துக்கொண்டு, ஒன்று தொலைந்துபோகும் போதெல்லாம் இன்னொன்றை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
என்னதான் இருந்தாலும், அவருடைய இந்தப் பழக்கம் அவருக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது. ஒருநாள் தனது நெருங்கிய நண்பரிடம் இந்த விஷயத்தைச் சொல்லிப் புலம்பினார்.
உடனே அவருடைய நண்பர் அவரை ஒரு கடைக்குக் கூட்டிச்சென்று, அங்கிருந்த 22 கேரட் தங்கத்தால் ஆன விலையுயர்ந்த பேனாவை வாங்கச் சொன்னார்.
"சரி, நண்பன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்" என்று கருதி, அவரும் அந்தப் பேனாவை வாங்கிக்கொண்டார். ஆறு மாதங்கள் கழித்து அந்த நண்பரை மீண்டும் சந்தித்தபோது, நண்பர் அந்தப் பேனா மறதியைப் பற்றி விசாரித்தார்.
அப்போது தொழிலதிபர், தன் பாக்கெட்டில் பத்திரமாக இருந்த தங்கப் பேனாவை எடுத்துக் காட்டினார். இப்போதெல்லாம் பேனாவை மறந்து எங்கேயும் வைப்பதில்லை என்றும், தனக்கு இருந்தப் பிரச்னையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் கூறினார்.
இதையேதான் நம்முடைய வாழ்க்கையிலும் நாம் செய்துகொண்டிருக்கிறோம். ஒரு பொருள் நம்மிடம் தங்குவதில்லை என்றால், அதற்கான சரியான மதிப்பை நாம் அதற்கு கொடுப்பதில்லை என்றுதான் அர்த்தம்.
நாம் எதை மதிப்பாக உணர்கிறோமோ, அதை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்வோம்.
நம் உடலின் மதிப்பை உணர்ந்தால், நாம் உட்கொள்ளும் உணவை ஆரோக்கியமானதாகத் தேர்ந்தெடுப்போம்.
பணத்தின் மதிப்பை உணர்ந்தால், அவசியமான செலவுகளை மட்டுமே செய்வோம்.
உறவுகளின் மதிப்பை உணர்ந்தால், அவை முறிந்துபோகும் அளவிற்கான எந்தச் செயலையும் செய்ய மாட்டோம்.
வாழ்க்கைதுணையின் மதிப்பை உணர்ந்தால், அவர்கள் மனம் கஷ்டப்படும்படியான காரியங்களைத் தவிர்க்க முயல்வோம்.
நீங்களும் உங்களிடம் பத்திரமாக இருக்கும் பொருளையும், இழந்த பொருளையும் ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள். எதற்கு மதிப்பு கொடுத்தீர்கள், எதை உதாசீனப்படுத்தினீர்கள் என்பது உங்களுக்கே புரியும்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.
எந்த நாளும் நல்லநாள்தான்.
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள பேரியற்கை அருள் புரியட்டும்…!
“பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு குயவன் ஜென் குருவிடம் சொன்னான்.
“பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.
“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்”
இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.
குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.
துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.
“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.
“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.
“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?” என்று ஆத்திரப்பட்டான் குயவன்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன்.” என்று குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.
“நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?”
“நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்? எந்த தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?” என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.
குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.
மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். வியாபார சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர். அலுவலகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம்: இங்கிதமாகப் பேசுவது நல்லது. தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக் கூடும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கடகம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
சிம்மம்: குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பர். பிள்ளைகளால் பெருமையடைவீர். உடன்பிறந்தோரின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.
கன்னி: புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பணவரவு உண்டு. தம்பதிக்குள் நெருக்கம் கூடும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்: நீண்ட நாள் கனவுகள் நனவாகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். தந்தையின் உடல்நிலை சீராகும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
விருச்சிகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல் இருக்கும். குடும்பத்தினரின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுக்காதீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு: அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். புது பொறுப்பு, பதவி தேடி வரும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
மகரம்: குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிட்டும். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். வியாபார நுணுக்கங்களை கற்று கொள்வீர்.
கும்பம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். மாணவர்களின் கனவு நினைவாகும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த பகை நீங்கும். புதிய வாகனம் வாங்குவீர். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட பணிகள் முடியும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை ஏற்றுக் கொள்வீர்.
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 21.4.2026
இன்று காலை 08.47 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று காலை 06.15 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.
இன்று மாலை 04.43 வரை சோபனம் . பின்னர் அதிகண்டம்.
இன்று காலை 08.47 வரை பத்திரை. பின்னர் இரவு 07.35 வரை பவம். பிறகு பாலவம் .
இன்று காலை 06.15 வரை அமிர்த யோ. பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
யார் இந்த சரளாம்மா?
எந்த வி.ஐ.பி-யின் பிறந்தநாள் வந்தாலும், தொலைக்காட்சியில், ‘நூறாண்டு காலம் வாழ்க... நோய் நொடியில்லாமல் வளர்க... ஊராண்ட மன்னர் புகழ்போலே... உலகாண்ட புலவர் தமிழ்போலே...’ என்று பின்னணியில் ஒலிக்கிற மூவர் குரல்களில் ஒரு குரல் இவருடையது. ‘பேசும் தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பாடிய சரளா இப்போது எப்படியிருக்கிறார்?
‘`பக்கவாதம் வந்து ஒரு வரி பாடறதுக்கே இன்னிக்குப் படாதபாடு பட்டுக்கிட்டிருக்குற நான், 50 வருஷத்துக்கு முன்னாடி வாழ்வாங்கு வாழ்ந்தவம்மா. பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர், கண்ணதாசன், வாலின்னு என் குரலைப் பாராட்டாத வி.ஐ.பி-க்களே இல்லை. அந்த அளவுக்குக் குரலால் கொடிகட்டிப் பறந்தவ நான்’’ என்கிற சரளாம்மாவின் குரலில் இப்போதும் இருக்கிறது கம்பீரம்.
‘`மயிலாப்பூரில் பிறந்தேன். இன்னிக்கு ஊருக்கு வெளியே இந்தச் சின்ன கூண்டுக்குள்ள இருக்கேன். சின்ன வயசுல சினிமாப் பாட்டுன்னா உயிரு. அம்மா பாடகி, அப்பா பாடகர் போன்ற பின்னணியெல்லாம் எனக்குக் கிடையாது. பாட்டுச் சொல்லிக்கொடுக்கக் குருவும் கிடையாது. சினிமா பாடல்களைக் கேட்டு நானா பாடக் கத்துக்கிட்டேன். அம்மாவுக்கு நான் பாட்டுப் பாடறது ரொம்பப் பிடிக்கும். அவங்க சப்போர்ட் இருந்ததால, எம்.ஆர்.ராதா நாடகம், தங்கவேலு நாடகத்திலெல்லாம் பாட்டுப் பாட ஆரம்பிச்சேன்.
ஒரு தடவை மயிலாப்பூர் ஆர்.ஆர் சபாவில் நடந்த நாடகத்தில் ‘பஞ்சவர்ணக்கிளி’ படத்தில் வருகிற ‘சத்தியம் சிவம் சுந்தரம்' பாடலைப் பாடிக்கிட்டிருந்தேன். அப்போ என் பாட்டைக் கேட்ட இசையமைப்பாளர் ராமமூர்த்தி (விஸ்வநாதன்), ‘உச்ச ஸ்தாயியிலும் எவ்வளவு இனிமையா இருக்கு இந்தப் பொண்ணோட குரல்’னு சொல்லி ‘தேன்மழை’ படத்துல பின்னணிப் பாடகியா அறிமுகப்படுத்தினார். அதுக்கப்புறம் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் ‘வருவாயா வேல்முருகா’, சீர்காழி கோவிந்தராஜனுடன் ‘சிந்தனையில் மேடைகட்டி’, இளையராஜா வுடன் ‘உனக்கெனத்தானே இந்நேரமா’... இப்படி 20 பாடல்கள்தான் சினிமாவில் பாடியிருக்கேன். ஆனா, மேடைக் கச்சேரிகளில் நான் பாடின பாடல்களை எண்ணவே முடியாது.
85 வயசாயிடுச்சு. நான்கு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மேடைக் கச்சேரி பண்ணிக்கிட்டுதான் இருந்தேன். திடீர்னு வந்த பக்கவாதம் பாட முடியாதபடிக்கு என் குரலை எடுத்துட்டுப் போயிடுச்சு. எவ்வளவோ மேடு பள்ளங்கள் பார்த்துட்டேன். இஸ்லாமியப் பாடல்கள் பாடறதுல ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு பெயர் வாங்கினது ஒரு காலம். பாட முடியாம முடங்கிக் கிடக்குறது ஒரு காலம்’’ என்கிறவர் பழைய நினைவுகளில் சில நொடிகள் மூழ்குகிறார்.
தன்னுடைய 13-வது வயதில் பாட ஆரம்பித்தவர் தொடர்ந்து 60 வருடங்கள் பாடியிருக்கிறார்.
ரஜினிக்கு மனைவியாகவும் மன்னன் படத்தில் நடித்திருந்தார். இவர் அறிமுகம் ஆனது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் தான்.
விதி சில நேரங்களில் எவ்வளவு அழகாகத் தன் விளையாட்டைத் தொடங்குகிறது என்பதற்கு உதாரணமாக தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். எதிர்பாராமல் நடக்கும் ஒரு சிறு தற்செயல் நிகழ்வு, ஒருவரின் வாழ்க்கைப் பாதையையே எப்படி மாற்றியமைக்கிறது என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா, கார்த்திக், ராதா, ராதிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில் அவர் அறிமுகம் செய்த முன்னணி நடிகை ஒருவர் தான் விஜயசாந்தி. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், சோலோ ஹீரோயினாக பல வெற்றிப்படங்களையும் போலீஸ் கேரக்டரிலும் நடித்து அசத்தியுள்ளார்.
குறிப்பாக ரஜினிக்கு மனைவியாகவும் மன்னன் படத்தில் நடித்திருந்தார்.
இவர் அறிமுகம் ஆனது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் தான். இயக்குநர் பாரதிராஜா அவர்கள் ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் பஞ்சர் ஆனது. அதைச் சரிசெய்ய டிரைவர் குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும் எனக் கூறியுள்ளார். இதனால் "வெயிலில் நிற்பதை விட, அருகில் இருக்கும் இந்த ஸ்டூடியோவில் போய் அமருங்கள் சார்" என்று டிரைவர் சொல்ல, பாரதிராஜாவும் சம்மதித்து உள்ளே சென்றார்.
அந்த ஸ்டூடியோவில் சும்மா அமர்ந்திருக்கப் பிடிக்காமல், அங்கு இருந்த புகைப்படங்களை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே இருந்த ஒரு பெண்ணின் புகைப்படம் அவர் கண்களில் பட்டது. அந்தப் பெண் தான் பின்னாளில் புகழ்பெற்ற அந்த நடிகை. "யார் இந்தப் பெண்? இவரை உடனே பார்க்க வேண்டுமே!" என்று பாரதிராஜா ஆர்வம் காட்டினார். உடனடியாக அந்தப் பெண்ணின் தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இயக்குநர் பாரதிராஜா ஒரு புது முகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார், உங்கள் மகளின் புகைப்படம் அவருக்குப் பிடித்திருக்கிறது" என்ற செய்தி கேட்டு அந்தத் தந்தை தனது மகளை அழைத்துக் கொண்டு பாரதிராஜாவைச் சந்திக்கச் சென்றார். சந்திப்பு முடிந்த கையோடு, பாரதிராஜா அவருக்கு ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தச் சொன்னார். புகைப்படங்களில் அந்தப் பெண் மிக அழகாகவும், கேரக்டருக்கு பொருத்தமாகவும் இருந்தார். பாரதிராஜாவுக்குப் பிடித்துப் போனது. "ஓகே பண்ணிடலாம்!" என்று அவர் பச்சைக்கொடி காட்டிய அடுத்த சில நிமிடங்களிலேயே எல்லாம் மளமளவென நடந்தன.
மேக்கப், காஸ்டியூம் என அனைத்தும் மின்னல் வேகத்தில் முடிந்து, அந்தப் பெண் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். கார் பஞ்சர் ஆனது ஒரு தற்செயலான விஷயம் என்றாலும், அது ஒரு மாபெரும் கலைப்பயணத்தின் தொடக்கமாக அமைந்தது தான் விதியின் சுவாரஸ்யம். பின்னாளில் விஜயசாந்தி அரசியலிலும் அடியெடுத்து வைத்து அசத்திய நிலையில், தற்போது சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
புதுச்சேரியில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல் நிலை பள்ளி வாசலில் பெரிய கத்தரிக்கோல், தேங்காய் எண்ணெயுடன் தலைமை ஆசிரியர் நின்று கொண்டிருக்கின்றார்.
பள்ளி மாணவ-மாணவியர் மிகுந்த உற்சாகத்தோடு பள்ளிக்குள் செல்கையில், தலை கலைந்து இருக்கும் மாணவ மாணவியரை மட்டும் தனியே அழைத்து… தன்னுடைய கையில் இருக்கும் கத்திரிக்கோலால் முன்பகுதியில் வளர்ந்திருக்கும் முடிகளை கட் செய்து, தன் கையில் வைத்திருந்த தேங்காயெண்ணை பாட்டிலில் உள்ள தேங்காய் எண்ணெய் மாணவரின் கையில் ஊற்றி தலையில் தேய்க்கச்சொல்லி தன் கையாலேயே சீப்பால் தலையை வாரி விட்டு அனுப்புகின்ற இந்த நற்செயல் நமக்கும் நிச்சயம் பிரம்மிப்பூட்டும் விதத்தில் அமைகின்றது.
பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் அறிவுரை சொல்லியும், கேட்காததால் இந்த புதிய முயற்சியை கையாண்டு இருக்கும் இந்த ஆசிரியரின் முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியதே.
அன்பு* பண்பு *மாண்பு* எனும் வரம்பு மீறா பயிற்சிதனை பிள்ளைகளுக்கு நாம் அளிக்க .. சிந்தித்து செயல்பட்டு கரும்பு* இனிப்பு* பூரிப்பு* நிறைந்த வாழ்வுதனை அவர்கள் பெற்றுவிட்டால் இனிது இனிது வாழ்க்கை என்றும் இனிதன்றோ!
- 8 மணி நேரம் தூங்க வேண்டும் 10 மணி நேரம் தூங்க வேண்டும் என்று 8 மணிக்கே படுக்கைக்கு போய் விடாதீர்கள். தூக்கம் வரும் வரை ஏதேனும் வேலை செய்துகொண்டோ குறைந்த பட்சம் படித்துக்கொண்டோ இருங்கள். நோ டி.வி. நோ மொபைல்.
- கண்கள் கெஞ்சும் வரை காத்திருங்கள்.
- படுக்கைக்குப் போகும் முன் வெது வெதுப்பான நீரில் குளிக்கலாம்.
- அல்லது கால்களையாவது ஒரு 10 நிமிடம் வெது வெதுப்பான நீரில் வைத்திருங்கள்.
- அரை டம்ளர் சூடான பால் குடிக்கலாம். முடிந்தால் அதில் கொஞ்சம் தேன் சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தால் கொஞ்சம் மஞ்சள் தூளும் மிளகுத் தூளும் சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தால் கொஞ்சம் பூண்டு, பேரீச்சம் பழம் சேர்த்துக் கொள்ளலாம். சத்துக்கு சத்தும் ஆச்சு கபத்துக்கு மருந்தும் ஆச்சு.
- தலையணைக்கடியில் கொஞ்சம் மல்லிகைப் பூக்களை வைத்துக் கொள்ளலாம். மல்லிகை மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டது. மனச் சோர்வுக்கும் மருந்தாகும் ; தூக்கத்திற்கும் துணையாகும்.
- மெல்லிய (வார்தைகளற்ற) இசையை கேட்கலாம். Preferably Flute.
- இறுதியாக - முக்கியமாக - தூக்கம் வரவில்லையே என்று கவலைப் படுவதை உடனடியாக நிறுத்துங்கள். வராவிட்டால் போகட்டும். உடலுக்குத் தேவையான தூக்கத்தை அது எடுத்துக் கொள்ளும் - மூச்சு விடுவதைப் போல. என்றாவது சரியாக மூச்சு விட்டோமா என்று கவலைப்பட்டிருக்கிறீர்களா ? அது போலத்தான். நீங்கள் செய்த / செய்கிற வேலைக்கேற்பதான் தூக்கம் வரும். அது நீங்கள் சாப்பிடும் உணவைப் பொருத்தும் அமையும். So wait. வெறுமனே காத்திருங்கள்.
உலகத்திலே மிகவும் கொடுமையானது எது என்றால்..
மனவளர்ச்சி குன்றிய குழந்தையை கவனித்து கொள்ளுவது தான்..
மனவளர்ச்சி குன்றி நடக்க முடியாமல் பேச முடியாமல் குழந்தையை கவனித்து கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் கடவுளுக்கு சமம்..
ஆணாக இருந்தால் இயற்கை உபாதை கழிக்கும் போது பக்கத்தில் நின்று கழுவி விட்டு மகனை குளிப்பாட்டி துணி மாத்தி விடுவது எவ்வளவு கஷ்டம்.
அதே பெண் குழந்தையாக இருந்தால் அந்த பெண் குழந்தை வயதுக்கு வந்த பிறகு எவ்வளவு கஷ்டம் இருக்கும்.
ஒரு தாயின் அல்லது ஒரு பெண்ணின் அர்ப்பணிப்பு எந்த அளவிற்கு ஆழமானது
நிச்சயமாக, இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு சாதாரண மனிதராகத் தெரிவதில்லை
அவர்கள் பொறுமையின் சிகரமாகவும், அன்பின் ஊற்றாகவும் விளங்குகின்றனர்.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒரு குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வது என்பது மிகப்பெரிய தியாகம். அந்த குழந்தைகளின் பேசும் மொழி அந்த தாய் மட்டும் தான் தெரியும்.
நிபந்தனையற்ற அன்பு பதில் எதையும் எதிர்பார்க்காமல், தன் வாழ்நாளையே தன் பிள்ளைக்காக அர்ப்பணிக்கும் அந்த மனதிடம் போற்றுதலுக்குரியதாகும்
உடல் மற்றும் மன உளைச்சல் அன்றாட கடமைகளைச் செய்வதில் இருக்கும் சிரமம் ஒருபுறம் என்றால், அந்தப் பெண்ணின் மன பாரத்தை யாராலும் முழுமையாகப் பகிர்ந்து கொள்ள முடியாது.
முதிர்ச்சியடைந்த பிள்ளையின் பராமரிப்பு ஒரு ஆண் பிள்ளை வளர்ந்த பிறகு அவனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், ஒரு பெண் பிள்ளை பருவமடைந்த பிறகு அவளுக்கு நேரும் உடல் மாற்றங்களைக் கையாள்வதும் ஒரு தாய்க்குப் பெரும் சவாலாகும்...
தன்னையே மறந்து ராத்திரியில் தன் பிள்ளைகளை நினைத்து கண்ணீர் வடிக்கும் தாய்மார்கள் எத்தனை பேர்.
அப்படிப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் கடவுளுக்கு சமம் அல்ல…கடவுளுக்கு நிகரானவர்கள்.
மதுரை தத்தனேரியைச் சேர்ந்த 86 வயது முதியவர் திரு. ராஜேந்திரன் ஐயா.
இவர் ஒரு சாதாரண அப்பள வியாபாரி.
ஆனால், இவர் செய்துள்ள உதவிகள் பல கோடீஸ்வரர்களை வியக்க வைக்கும்...!
இவர் செய்த சேவைகளின் பட்டியல்:
மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டும் இதுவரை ரூ.1.81 கோடி செலவில் வகுப்பறைகள், உணவுக்கூடம் மற்றும் கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பின் போது நேரில் சென்று லட்சக்கணக்கில் உதவி செய்துள்ளார்.
அடுத்து மீனாட்சியம்மன் கோயில் அருங்காட்சியகத்திற்கு ரூ.2.5 கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார்.
மனம் நெகிழ வைக்கும் மனிதநேயம்:
தான் சம்பாதிப்பது தனக்கு மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தான் என்பதைச் செயலில் காட்டியுள்ளார்.
தன்னிடம் பணிபுரியும் 40 தொழிலாளர்களை விமானத்தில் ஹைதராபாத்திற்குச் சுற்றுலா அழைத்துச் சென்ற பெருந்தன்மை இவருக்கு உண்டு.
"மதுரைக்கு வரும்போது நான் எதையும் கொண்டு வரவில்லை, இங்கு வந்து சம்பாதித்ததை மதுரை மக்களுக்கே கொடுக்கிறேன்" என்று அவர் கூறுவது நம் கண்களைக் கசிய வைக்கிறது.
ஏன் இவர் உதாரணபுருஷர்.....
இன்றைய காலத்தில் அரசியலையும் அதிகாரத்தையும் எதிர்பார்க்காமல், தனது சொந்த உழைப்பில் கிடைத்த வருமானத்தை வாரி வழங்கும் ஒரு மாமனிதர் இவர். 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், மனிதாபிமானத்தில் இவர் ஒரு பல்கலைக்கழகம்....
விளம்பரமின்றிச் சேவை செய்த இவரை அடையாளம் கண்டு பாராட்டிய மாநகராட்சி ஆணையருக்கு நன்றிகள்.
ராஜேந்திரன் ஐயா போன்ற நல்ல உள்ளங்கள் நீடுழி வாழட்டும்...!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் உருவாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இணைய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
எதிலும் வேக இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். உத்தியோக முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும். பிற்கால வாழ்க்கை பற்றிய எண்ணம் மேம்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
உடலில் இருந்து வந்த சில வலிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். அனுபவம் மூலம் சில மாற்றமான முடிவுகள் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகள் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் விருத்தி உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் ஒற்றுமை ஏற்படும். சிந்தனை போக்கில் மாற்றங்கள் உருவாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். இணையம் சார்ந்த தொழில்களில் முன்னேற்றம் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். சமூக பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேளாண்மை சார்ந்த துறைகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் கிடைக்கும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
துலாம்
சமூகப் பணிகளில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் சிறு சிறு மன வருத்தங்கள் நேரிடும். மூத்த உடன்பிறப்புகளிடம் வீட்டுக்கொடுத்து செல்லவும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். பயணம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
நண்பர்கள் வட்டம் விரிவடையும். அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
தனுசு
உணவு சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் அளவில் இருந்த மந்தத்தன்மை குறையும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பிறக்கும். போட்டித் தேர்வுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். நினைவாற்றலில் இருந்த மந்தத்தன்மை குறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம்
மனதில் புதுமையான சிந்தனைகள் மேம்படும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
அரசு பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். கடன் பிரச்சனைகளில் பொறுமை வேண்டும். ஆரோக்கிய சிக்கல்கள் குறையும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நம்பிக்கை தரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மீனம்
அக்கம்பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். பயம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 20.4.2026.
இன்று காலை 11.12 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று காலை 07.52 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.
இன்று இரவு 07.38 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்.
இன்று அதிகாலை 12.22 வரை தைத்தூலம். பின்னர் காலை 11.12 வரை கரசை. பிறகு இரவு 10.59 வரை வனிசை. பின்பு பத்திரை.
இன்று காலை 06.01 வரை சித்தயோகம். பின்னர் காலை 07.52 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30 முதல் 07.30 மணி வரை
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
செரிமானம் சிறக்க... வாயுத் தொல்லை நீங்க... எளிய இயற்கை மருத்துவம்!
உடலில் ஏற்படும் **வாதக் கோளாறுகளைக் குறைத்து**, செரிமானத்தை சீராக்க நமது முன்னோர்கள் கையாண்ட மிகச்சிறந்த வழிமுறைகள் இதோ உங்களுக்காக:
### செரிமானம் மற்றும் வாயுத் தொல்லைக்கு: **சுக்கு நீர் (Dry Ginger Water)**
நமது அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சுக்கு, ஒரு அற்புதமான மருந்து.
** செய்முறை:**
* காய்ந்த இஞ்சியை (சுக்கு) லேசாகத் தட்டிக்கொள்ளுங்கள்.
* தண்ணீரில் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டுங்கள்.
* இந்தப் பருகுவதற்கு இதமான சூட்டில் அருந்தலாம்.
** பயன்கள்:**
* உடலில் தங்கியுள்ள தேவையற்ற **நச்சுகளை (Toxins)** வெளியேற்றும்.
* செரிமானத்தை விரைவுபடுத்தி **பசியைத் தூண்டும்**.
* வாயுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் குறிப்பு:** "சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை" என்பார்கள். வாரம் இருமுறை சுக்கு நீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது!
செரிமானம் சீராக, வாயுத் தொல்லை மறைய… எளிய இயற்கை வைத்தியம்!
உடலில் குடிகொண்டிருக்கும் வாத உபாதைகளைக் குறைத்து, சீரண மண்டலத்தை வலுப்படுத்த நம் முன்னோர் கையாண்ட மகத்தான வழிமுறைகள் இங்கே:
சீரண சக்திக்கும் வாயுத் தொல்லைக்கும்: சுக்கு நீர் (Dry Ginger Water)
நம் சமையலறையின் பொக்கிஷமான சுக்கு, ஓர் அபூர்வ மூலிகை.
தயாரிப்பு முறை:
• உலர்ந்த இஞ்சியை (சுக்கு) மென்மையாகத் தட்டிக்கொள்ளுங்கள்.
• தண்ணீரில் இட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து, பின் வடிகட்டவும்.
• இந்த இதமான சூட்டில் உள்ள நீரை அருந்தலாம்.
நன்மைகள்:
• உடலில் படிந்துள்ள அசுத்தமான நச்சுப் பொருட்களை (Toxins) நீக்கும்.
• செரிமானத்தைச் சுறுசுறுப்பாக்கி பசியைத் தூண்டும்.
• வாயுத் தொல்லையிலிருந்து உடனடியாக நிவாரணம் அளிக்கும்.
சிறப்பு குறிப்பு:
"சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை" என்பது ஆன்றோர் வாக்கு. வாரத்திற்கு இருமுறை சுக்கு நீர் பருகுவது உடல் நலனுக்கு மிகவும் உகந்தது!
இந்த அரிய தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!
திருநாவுக்கரசருக்கு வந்த கொடிய சூலை நோயை திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பதிகம் பாடி தீர்த்துக்கொண்டார்.
* சமணர்கள் இட்ட நீற்றறையில் ஏழு நாட்கள் இருந்து பதிகம் பாடி எவ்வித ஊறும் இன்றி சிவபெருமான் அருளால் வெளிவந்தார்.
* சமணர்கள் தந்த நஞ்சு கலந்த பால் சோறு உண்டும் பதிகம் பாடி உயிருடன் இருந்தார்.
* தன்னை கொல்லுமாறு சமணர்கள் ஏவிவிட்ட யானையை பதிகம் பாடி, தன்னை வலம் வந்து வணங்குமாறு செய்தார்.
* சமணர்கள் அவரை கல்லில் கட்டி கடலில் போட, பதிகம் பாடி அக்கல்லையே தெப்பமாக கொண்டு மிதந்து கரை சேர்ந்தார்.
* திங்களூரில் அப்பூதியடிகளின் மகனை பாம்பு தீண்டி அவன் இறக்க, பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார்.
* திருவீழிமிழலையில் அடியார்கள் பசியால் வருந்த, பதிகம் பாடி தினமும் சிவபெருமானிடம் ஒரு பொற்காசு பெற்று அடியார்கள் பசிதீர்த்து வந்தார்.
* திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் பூட்டப்பட்டு பல்லாண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த கோவில் கதவுகளை பதிகம் பாடி திறக்கச் செய்தார்.
நற்றுணையாவது அண்ணாமலையாரே
* திருப்பைஞ்ஞீலிக்கு செல்லும் வழியில் இவர் பசியால் வருந்துவதை சிவபெருமான் அறிந்து ஒரு அந்தணராக வந்து சிவபெருமான் இவருக்கு கட்டமுது தந்து பசியாற்றியும், நீர் அருந்த ஒரு குளமும், இளைப்பாற ஒரு சோலையும் தந்தருளினார்.
* இந்த பூத உடலோடு கையிலாய தரிசனம் செய்ய நடந்து நடந்து கால் தேய்ந்து தவழ்ந்து சென்று கை தேய்ந்து, உருண்டு சென்று உடலும் தேய்ந்தபோது சிவபெருமான் அந்தன உருக்கொண்டு வந்து ஒரு குளத்தை காட்டி அதில் மூழ்கச் செய்து எழும்போது திருவையாறு சமுத்திர தீர்த்தக் கரையில் வெளிப்பட்டு ஆடி அமாவாசை தினத்தன்று கையிலாய தரிசனம் காண உதவினார்.
* இவர் பாடிய பதிகங்களை கேட்டு இறைவனே இவருக்கு ‘திருநாவுக்கரசர்’ என்னும் பட்டத்தை சூட்டினார்.
நற்றுணையாவது அண்ணாமலையாரே
* அப்பர் ஸ்வாமிகள் எழுவதாவது வயதில் தல யாத்திரை துவங்கி, 81 வயது வரை 5 முறை தலப்பயனம் மேற்கொண்டு பாடியுள்ள தலங்கள் 126. பதிகங்கள் 312. மொத்த பாடல்கள் 3066 ஆகும்.
* திருப்புகலூரில் இறைவனுடைய திருவடிகளை அடைய விரும்பி
" புண்ணியா_உன்னடிக்கே போதுகின்றேன் "
என்று பாடி சித்திரை சதயத்தன்று சிவபெருமானோடு இரண்டறக் கலந்தார்.
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை







