தேசிய பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
உடலிலுள்ள கழிவுகள் வெளியேற்றவும் மற்றும் Belly fat குறையவும்,ஜீரணத்திற்கும், மெட்டபாலிசம் அதிகரிக்கவும் சிறந்த
7 வகையான பழச்சாறுகள் (Natural Detox Drinks)
1.எலுமிச்சை–தேன்–சுடுநீர்:
வெந்நீரில் ½ எலுமிச்சை சாறு,
1 ஸ்பூன் தூய தேன்
காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்
பயன்:
உடல் கொழுப்பைக் கரைக்கும்
ஜீரணம் சீராகும்,
bloating குறையும்
2. வெள்ளரிக்காய் + இஞ்சி + எலுமிச்சை :
1வெள்ளரிக்காய்,சிறிது இஞ்சி,½ எலுமிச்சை சாறு
1 கப் தண்ணீர்
மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்கவும்.
பயன்:
வயிற்று கொழுப்பு குறையும்,உடலின் அழற்சி குறையும்
3. அஜ்வைன் (Omam) Water:
1 டீஸ்பூன் ஓமம்,இரவே 1 கப் தண்ணீரில் ஊறவைத்து
காலையில் வடிகட்டி வெற்றுவயிற்றில் குடிக்கவும்
பயன்:
அஜீரணம், bloating, gas குறையும்.
பெல்லி ஃபேட் குறைய உதவும்
4.அலோவேரா–லெமன் ஜூஸ்:
2 ஸ்பூன் அலோவேரா ஜெல்,1 கப் தண்ணீர்,
½ எலுமிச்சை
பயன்:
கொழுப்பை கரைக்கும்.
குடல்சூட்டைகுறைக்கும்
5. பப்பாளி + எலுமிச்சை Juice:
சில பப்பாளி துண்டுகள்,½ எலுமிச்சை
மிக்ஸியில் அரைத்து குடிக்கவும்
பயன்:
ஜீரணத்தை மிக வேகமாக சீராக்கும்
வயிறு கொழுப்பு குறைக்க உதவும்.
6. ஆப்பிள் சிடர் வினிகர் (ACV) Drink:
1 கப் வெந்நீர்,
1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் (ACV)
½ ஸ்பூன் தேன் (optional)
பயன்:
மெட்டபாலிசம் அதிகரிக்கும்
வயிற்றுப்பகுதியில் fat storage குறையும்
7. இஞ்சி–எலுமிச்சை Water:
சிறிது இஞ்சி,½ எலுமிச்சை,1 கப் வெந்நீர்
பயன்:
bloating, gas குறையும்,
பெல்லி ஃபேட் குறையும்
தினமும் ஒன்று என மாற்றி குடிக்கலாம்
அதிக சர்க்கரை சேர்க்க வேண்டாம்
காலை வெறும் வயிறு குடித்தால் சிறந்த பலன்கிடைக்கும்
இரவு நேர ஜங்க் ஃபுட், அதிக எண்ணெய் தவிர்த்தால் பெல்லி ஃபேட் வேகமாக குறையும்.
வாழைப்பூ சமையலில் சேர்க்க மிகவும் ஆரோக்கியமான காய்கறி ஆகும். இது இரத்த சோகை, நீரிழிவு மற்றும் பெண்களின் கர்ப்பப்பை சார்ந்த கோளாறுகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
முக்கியமாக, சமீபத்திய ஆய்வுகளின்படி, வாழைப்பூவின் சாறு புற்றுநோய் உயிரணுக்களின் பெருக்கத்தைத் தடுக்கும் வல்லமை கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய மகத்துவம் வாய்ந்த வாழைப்பூவை சமைப்பதற்கு முன் சுத்தம் செய்வதே பலருக்கு சவாலாக உள்ளது.
ஆனால், இந்த எளிய தந்திரத்தைப் பயன்படுத்தினால், மொத்த வாழைப்பூவையும் 2 நிமிடங்களில் கைகளில் கறை படியாமல் எளிதாக சுத்தம் செய்துவிடலாம். இதனை எப்படி செய்வது என்று ஃபதூஸ் சமையல் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி
வாழைப்பூவை சுத்தம் செய்ய பலரும் பயப்படுவது, அதன் பிசின் போன்ற பால் கைகளில் ஒட்டிக் கறையாக மாறும் என்பதால் தான். இதோ அதற்கான தீர்வு:
ட்ரிக் 1: முதலில், உங்கள் கைகளில் சிறிதளவு எண்ணெய் (அ) உப்பு எடுத்து நன்கு தடவிக் கொள்ளுங்கள். இது, வாழைப்பூவில் இருந்து வெளிவரும் பால் கைகளில் ஒட்டி கறை படியாமல் தடுக்கும்.
ட்ரிக் 2: வாழைப்பூவை எடுத்து அதன் வெளி இதழ்களை (தோகைகளை) ஒன்றன் பின் ஒன்றாகப் பிரிக்கவும். ஒவ்வொரு இதழின் உள்ளேயும் பூக்கள் இருக்கும். வெளி இதழ்கள் சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் இருக்கும்.
ட்ரிக் 3: ஒவ்வொரு பூவையும் எடுத்து, உள்ளே இருக்கும் இரண்டு கடினமான பகுதிகளை அகற்ற வேண்டும்:
ட்ரிக் 4: நடுவில் நீளமாக, மெல்லிய குச்சி போல இருக்கும் கடினமான நரம்பை நீக்கிவிடவும். இது செரிமானத்திற்குத் தொந்தரவு கொடுக்கும்.
ட்ரிக் 5: நரம்புக்கு அருகில் ஒரு மெல்லிய, ஒளி ஊடுருவக்கூடிய, ரப்பர் போன்ற இதழ் இருக்கும். அதையும் நீக்க வேண்டும்.
ட்ரிக் 6: வாழைப்பூவின் உட்பகுதியில், சிறிய வெள்ளை நிறத்தில் இருக்கும் பூக்களை சுத்தம் செய்யத் தேவையில்லை. ஏனெனில், அந்த நுனிப் பூக்களில் கடினமான நரம்புகள் பெரும்பாலும் இருக்காது.
இப்படி எளிமையான முறையில், வேகமாகவும், கைகளில் கறை படியாமலும் வாழைப்பூவை சுத்தம் செய்த பிறகு, நீங்கள் சமைக்கப் பயன்படுத்தலாம். சுத்தம் செய்து நறுக்கிய வாழைப்பூ கருக்காமல் இருக்க, அதை சிறிது மோர் (தயிரில் சிறிது நீர் கலந்தது) கலந்த தண்ணீரில் போட்டு வைத்திருப்பது நல்லது.
இதனால் வாழைப்பூவின் துவர்ப்பும் குறையும். பிறகு சமைப்பதற்கு முன் அதைத் தண்ணீரில் அலசிப் பயன்படுத்தலாம். வாழைப்பூ பொரியல், வடை, கூட்டு, ரசம் என எந்த வடிவில் எடுத்துக் கொண்டாலும், அதன் ஆரோக்கிய நன்மைகள் முழுமையாக நமக்குக் கிடைக்கும்.
பெல்ஜியத்தில், 70 ஆண்டுகளாக டிராஃபிக் ஜாமில் சிக்கி நிற்கும் கார்கள் பற்றிய மர்மம் நீடிக்கிறது. தெற்கு பெல்ஜிய பகுதியில்தான் 500 பழமையான கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த டிராஃபிக் ஜாம் மர்மம் பற்றி பல்வேறு கதைகள் றெக்கை கட்டி பறந்தாலும், உண்மையான காரணம் இதுவரை தெளிவு செய்யப்படவில்லை. அந்த டிராஃபிக் ஜாம் மர்மம் பற்றி உலவும் பொதுவான வரலாற்று தகவல்கள்:
பெல்ஜிய வனாந்திரம்
பெல்ஜியம் நாட்டின் சாட்டிலான் என்ற இடத்தில் இருக்கும் வனாந்திரத்தில்தான் இந்த கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அந்த கார்கள் மழையிலும், வெயிலிலும் சிதைந்து எலும்பு கூடு போல் காட்சியளிக்கின்றன.
ஒரு பக்கம் மலைமுகடாலும், மறுபுறம் அடர்ந்த காடுகளாலும் மறைக்கப்பட்டிருக்கும் அந்த ரகசிய இடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் கண்டிபிடிக்க இயலாத அளவுக்கு அங்கு அத்தனை கார்களை யார் நிறுத்திச் சென்றனர் என்பதே இப்போது ஆச்சரியத் தகவல்.
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த தருணத்தில், அங்கு பணியில் இருந்த அமெரிக்க போர் வீரர்கள் தாங்கள் பயன்படுத்திய கார்களை இந்த வனாந்திர சாலையில் ரகசியமாக நிறுத்திவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு பக்கம் மலைமுகடும், அடர்ந்த மரங்கள் நிறைந்த அந்த சாலையை அவர்கள் தேர்ந்தெடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
அதாவது, மீண்டும் அந்த கார்களை பெறுவதற்கான வாய்ப்பு இருந்தால், எடுத்துச் செல்லலாம் என்று எண்ணி இந்த கார்களை அமெரிக்க போர் வீரர்கள், அதிகாரிகள் அங்கு ரகசியமாக விட்டுச் சென்றனராம். மேலும், நாடு திரும்பும் மகிழ்ச்சியில் இந்த கார்களை எடுத்துச் செல்வது கடினம் என்றும் எண்ணியும் இங்கே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் இரண்டாம் உலகப் போர் நடந்த காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்றும், அதற்கு பிறகான காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், இந்த கார்களுக்கு இதுவரை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. எனவே, இது அமெரிக்க போர் வீரர்கள் விட்டுச் சென்ற கார்கள்தான் என்று ஆணித்தரமாக கூறப்படுகிறது. அதாவது, போர் முடிவுக்கு வந்த மகிழ்ச்சியில் குடும்பத்தினரை காண்பதற்காக இந்த கார்களை விட்டுவிட்டு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. 70 ஆண்டுகால டிராஃபிக் ஜாம் என்றே இந்த கார் கல்லறையை பத்திரிக்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த கார் கல்லறை தோட்டம் பற்றி 70 ஆண்டுகளுக்கு பின்னரே இப்போது வெளியில் தெரிந்துள்ளது. அந்தளவு ரகசியமான இடத்தில் அந்த கார்களை நிறுத்தி சென்றதுதான் இப்போதும் ஆச்சரியத்துக்கிடமான தகவல்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
மனதளவில் இருந்து வந்த கவலைகள் குறையும். சமூகம் பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
வேளாண்மை பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணை மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத் தொடர்பான பயணங்கள் கைகூடும். ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனைவியுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் மாற்றமான சிந்தனைகள் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வாகன பயணங்களில் ஆவணங்களில் கவனம் வேண்டும். எதிர்கால சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வர்த்தக தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
சிம்மம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பார்த்திருந்த தனவரவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் நட்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். உடன் இருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கன்னி
எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவமும் மதிப்புகளும் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்துவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். சுபகாரிய பயணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் உருவாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மூலம் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு
மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மீதான ஆர்வம் மேம்படும். பாகப்பிரிவினை செயல்பாடுகளில் சாதகமான சூழல்கள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
மகரம்
தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாக்கு சாதுர்த்தியம் மூலம் ஆதாயமடைவீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
எதிர்பாராத அதிர்ச்சிகரமான வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். கணிப்பொறி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உயர்கல்வி பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். சாஸ்திரம் தொடர்பான தெளிவுகள் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
பணிபுரியும் இடத்தில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். திடீர் பயணம் மூலம் அலைச்சல் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். கால்நடைகளிடம் சற்று அனுசரித்து செல்லவும். வங்கி பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியாக இருந்த வரவுகள் கிடைக்கும். உறுதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
விசுவாவசு வருடம் தை மாதம் 8 ஆம் தேதி வியாழக்கிழமை 22.1.2026
இன்று அதிகாலை 02.58 வரை திருதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று பிற்பகல் 02.33 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.
இன்று மாலை 05.53 வரை வரீயான். பின்னர் பரிகம்.
இன்று அதிகாலை 02.58 வரை கரசை. பின்னர் பிற்பகல் 02.33 வரை வணிசை. பிறகு பத்தரை.
இன்று காலை 06.34 வரை சித்த யோகம். பின்னர் பிற்பகல் 2.33 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
முகத்தைப் பார்த்தால் உங்களுக்கு அவரை அடையாளம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 50-வது நபருக்கும் அவர் கடன் கொடுத்திருக்கிறார்!
அவரிடம் 1.70 லட்சம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது, ஆனாலும் அவரிடம் எந்தவித ஆடம்பரமோ அல்லது அகங்காரமோ துளியும் இல்லை. அவர் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறார், முன்பு ஃபியட் கார் வைத்திருந்தவர், இப்போது மாருதி ஆல்டோ ஓட்டுகிறார்.
அவர் கைபேசிகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்; அவரிடம் ஒரு சாதாரண கீபேட் ஃபோன் உள்ளது, ஆனால் அதுவும் அவருடைய ஓட்டுநரிடம்தான் இருக்கும். அவர் அதைத் தன்னுடன் வைத்துக்கொள்வதில்லை. அந்த ஃபோனில் ஐந்து பேர் மட்டுமே அவரை அழைக்க முடியும் – அவருடைய குடும்பத்தினர் மற்றும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி – அதுவும் மிக அவசரமான சூழ்நிலையில் மட்டுமே.
அவர் தனது வருமானத்தில் 30-40 ஆயிரம் ரூபாயை மட்டுமே தனக்காக வைத்துக்கொண்டு, மீதமுள்ள அனைத்தையும் தானமாக அளித்துவிடுகிறார். அவர் செருப்பு அணிந்துகொண்டு, மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைத் தானே சென்று வாங்குகிறார். அவரிடம் 5-6 ஜோடி ஆடைகள் மட்டுமே உள்ளன, அவற்றை அவர் துவைத்து மாற்றி மாற்றி அணிகிறார்.
இந்த நபர் வேறு யாருமல்ல, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் *ஸ்ரீராம் மூர்த்தி தியாகராஜன்* தான். அவர் ஸ்ரீராமரைப் போல எளிமையான மற்றும் பணிவான வாழ்க்கையை வாழ்கிறார், மேலும்
சமீபத்தில் ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக 6866 கோடி ரூபாயை தானமாக வழங்கியுள்ளார்.
*அவருடைய எளிமையைப் பற்றி நினைத்தாலே... மயக்கமே வந்துவிடும்!
சுக்லாம்பரதரம் விஷ்ணும
சசிவர்ணம் சதுர்புஜம
ப்ரஸந்ந வதநம் த்யாயேத்
ஸர்வ .விக்நோப சாந்தய
விளக்கம்:
இதில் கணேசரை வர்ணிக்க ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1. சுக்லாம் பரதர = வெள்ளை வஸ்த்ரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
2. விஷ்ணும் = எல்லா இடத்திலேயும் பரவி இருப்பவர்.
3. சசிவர்ணம் = நிலா மாதிரி பால்போன்ற நிறமுடையவர்.
4. சதுர்புஜ = நான்கு கைகள் உள்ளவர்.
5. ப்ரஸந்ந வதநம் = நல்ல மலர்ந்த முகம் உள்ளவர
இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். வலக்கையை இடக்கையின் முன் வைத்து வலக்கையால் இடப்புறத்திலும், இடக் கையால் வலப்புறத்தி லும் மண்டையில் குட்டி கொள்வது முறை.
விநாயகா போற்றி.. விக்னேஸ்வரா போற்றி...
நடிகர் பிரபுவின் முதல் படம் சங்கிலி, இந்த படத்தின் படபிடிப்பிற்காக புறப்பட தயாரானார்கள் இவரது தந்தையான நடிகர் சிவாஜி கணேசனும், பிரபுவும், அப்பாவிடம் பிரபு "நீங்க ஸ்டுடியோவிற்கு செல்லுங்கள் சிறிதுநேரம் கழித்து நான் வருகிறேன் "என்றார் அதற்கு சிவாஜி "டேய்..நீயும் நானும் நடிக்க வேண்டிய காட்சியை இன்று படமாக்குகிறார்கள்..நீ..எப்போ வருவே " என்றார், "நீங்க போறதுக்குள்ளே வந்துடுவேன் ..போங்கப்பா.." என்று சொன்னார் பிரபு, "சரி சீக்கிரமாக வா " என்று சொல்லிவிட்டு கிளம்பினார் சிவாஜி .
சிவாஜி ஸ்டூடியோவுக்கு வந்த பின் சிறிது நேரம் கழித்து பிரபு வந்தார் , சிவாஜி கேட்டார் "எங்கடா போய்ட்டு வர. "
"அது ஒன்னும் இல்லப்பா நான் சினிமாவில் முதன்முதலாக நடிக்க போறேன் , ராமாபுரம் தோட்டத்துக்கு போய் பெரியப்பாவிடம் (எம்ஜிஆர்) ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்தேன் " என்றாராம் பிரபு.
பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் ஒரு கதை.
மதுரை நகரில் பாணபத்திரன் என்ற இசைப் புலவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அரசாங்கத்தில் உத்தியோகம். அவன் சிவபக்தன். மதுரையில் சோமசுந்தரக் கடவுள் சந்நிதானத்தில் இசை இசைத்துத் தொண்டு செய்வதிலேயே நாட்டம் உடையவனாக இருந்தான். ஒருநாள் வடநாட்டிலிருந்து ஏமநாதன் என்ற வீணை வித்துவான் ஒருவன் மதுரைக்கு வந்தான். அரசனிடம் தன் பெருமையைச் சொல்லிக் கொண்டதோடு, தன்னை யாழ் வாசிப்பதில் தோல்வியுறச் செய்பவர் யார் இந்த நாட்டில் இருக்கிறார் எனவும் செருக்கோடு கூறினான். அரசன் தன் ஆஸ்தானத்தில் உள்ள பாணபத்திரனுக்கு அவனோடு வாசிக்க வேண்டுமென்று கட்டளையிட்டான். பாணபத்திரனுக்கு இந்த இசைவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சோமசுந்தரக் கடவுளின் சந்நிதானத்துக்குச் சென்று, "இறைவனே, ஏமநாதனை நான் யாழ் வாசிப்பதில் தோல்வியுறச் செய்ய முடியுமென்று தோன்றவில்லையே! அவனை வெல்ல வேண்டுமென்ற ஆசை எனக்கு இல்லை. அவனிடம் நான் தோற்றுப்போய் விட்டேன் என்றால் அரசன் என்னை வேலையை விட்டுத் தள்ளிவிடுவானே! ஊரை விட்டுப் போக வேண்டி நேர்ந்தாலும் நேருமே! அப்புறம் உன் சந்நிதானத்திற்கு நான் எப்படி வர முடியும்? உனக்குத் திருத்தொண்டு எப்படிச்செய்ய முடியும்?" என்று கண்ணீர் விட்டுக் கதறினான்.
அன்று மாலை நல்ல மழை வந்துவிட்டது. இறைவன் ஒரு கிழ விறகுவெட்டிக் கோலத்தை எடுத்துக் கொண்டு தன் தலையில் ஒரு விறகுக் கட்டும் அதில் செருகப்பட்டிருக்கும் ஒரு பழைய யாழும் கொண்டு தெருவோடு வந்தான். மழைக்கு ஒதுங்குகிறவனைப் போல, ஏமநாதன் தங்கியிருந்த வீட்டின் வாசலுக்குச் சென்று உட்கார்ந்து கொண்டு, யாழை எடுத்து மெல்ல வாசிக்க ஆரம்பித்தான். அந்த இனிய நாதம் ஏமநாதன் செவியில் பட்டது. யார் பாடுகிறார் என்று பார்த்தான். பார்த்தால் அவனுக்கே நம்பிக்கை இல்லை. ஒரு கிழ விறகுவெட்டி; விறகுக் கட்டும் அவன் அருகில் இருக்கிறது; விறகு போலவே ஒரு யாழ். அந்த யாழிலிருந்தா அவன் இத்தகைய இனிமையான இசையை எழுப்புகிறான்! எழுந்திருந்து அவனிடம் சென்றான். "அப்பா, நீ யார்? இந்த இனிமையான சங்கீதத்தை யாரிடம் கற்றுக் கொண்டாய்?" எனக் கேட்டான்.
'அதை ஏன் கேட்கிறீர்? என் தலைவிதி இப்படி இருக்கும்படி ஆகிவிட்டது! நான் பாடுவது என்ன, அவ்வளவு உயர்ந்ததா? என் குருநாதரிடம் இருக்கிற மற்ற மாணாக்கர்கள் வாசிப்பதைக் கேட்டால் அப்புறம் நீர் என்ன சொல்வீரோ எனக்குத் தெரியாது; நானும் யாழ் கற்றுக் கொள்ள வேண்டுமென்றுதான் குருநாதரிடம் சென்றேன். அவர் எனக்கு மிகவும் சிரமப்பட்டே சொல்லிக் கொடுத்தார். கடைசியில் என் தலை நரையோடிக் கிழவன் ஆகிவிட்டேன். 'போ, இனி உனக்கு வீணை வரவே வராது' என்று சொல்லி என் ஆசிரியர் என்னைத் துரத்திவிட்டார். எனக்கு வேறு வழி இல்லாமல் விறகு வெட்டிப் பிழைக்க ஆரம்பித்தேன்' என்றான். 'வீணையே வராது எனச் சொல்லி கழித்து விடப்பட்ட இவனே இவ்வளவு நன்றாக வாசிப்பான் என்றால், இவன் குருநாதர் எப்படி வாசிப்பாரோ?' என்று வியந்த ஏமநாதன், "உன் குருநாதர் யார் அப்பா?” என்றான்.
"அவரை உமக்குத் தெரியாதா? அவர்தான் பாணபத்திரர்; பாண்டியன் அவைக்களத்துப் பாணர்" எனச் சொல்லக் கேட்டான் ஏமநாதன். அவ்வளவுதான். அன்றைக்கே இரவோடு இரவாக அந்த ஊரை விட்டே ஒடிப் போய்விட்டான். பாணபத்திரனது பெருமையை இறைவன் நேர்முகமாகச் சொல்லவில்லை. "அவனால் கழித்து விடப்பட்டவன் நான்" என்று சொன்னான். 'நானே இவ்வளவு நன்றாக வாசிக்கிறேன் என்று நீர் சொன்னீரானால், என் குருநாதர் எப்படி வாசிப்பார் என்பதை நீரே ஊகித்துக் கொள்ளலாம்' எனச் சொல்வதுபோலச் சொன்னார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பலவிதமான குழப்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். வெளியூர் வாய்ப்புகள் சாதகமாக அமையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளால் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். செயல்பாடுகளில் இருந்த தடைகள் படிப்படியாக குறையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை
ரிஷபம்
காப்பீட்டு தொடர்பான வரவுகள் கிடைக்கும். குண நலன்களில் மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். வாழ்க்கை துணைவரின் ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிதுனம்
திட்டமிட்ட காரியங்களில் சில அலைச்சல்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். காதிணி ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். சகோதரர்களிடம் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். சிந்தனை போக்கில் புதுமைகள் ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கடகம்
இனம்புரியாத சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பணிகளில் பொறுமையை கையாளவும். கடன் தொடர்பான நெருக்கடிகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். போட்டி மனப்பான்மையை குறைத்து கொள்ளவும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
சிம்மம்
நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கைகள் வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தந்தை வழியில் ஆதாயம் உருவாகும். திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவுபெறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சாமர்த்தியமான செயல்பாடுகள் மூலம் சாதகமான சூழலை உருவாக்குவீர்கள். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
விருச்சிகம்
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்வி பணிகளில் இருந்த இழுபறிகள் மறையும். வித்தைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். சொந்த ஊர் பயண சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனை கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
தனுசு
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடை மூலம் ஆதாயம் ஏற்படும். வீடு மாற்ற சிந்தனைகள் உருவாகும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மகரம்
நிதானமான செயல்பாடுகள் எதிர்பார்த்த முடிவுகளை கொடுக்கும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இறைப்பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். சமூக பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். உறுதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். மாணவர்களுக்கு மறதி பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசுவாவசு வருடம் தை மாதம் 7 ஆம் தேதி புதன்கிழமை 21.1.2026..
இன்று அதிகாலை 03.19 வரை துவிதியை. பின்னர் திருதியை.
இன்று பிற்பகல் 02.32 வரை அவிட்டம். பின்னர் சதயம்.
இன்று இரவு 07.39 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.
இன்று அதிகாலை 03.19 வரை கௌலவம். பின்னர் மாலை 03.08 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று காலை 06.34 வரை சித்த யோகம். பின்னர் பிற்பகல் 2 .32 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
1. பெர்ரி பழங்கள்:
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளன, அவை மலச்சிக்கலைப் போக்க ஒரு சிறந்த தேர்வாக அமைகின்றன.
2. வாழைப்பழங்கள்:
வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது, இது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது. அவை நார்ச்சத்தின் நல்ல மூலமாகவும் உள்ளன, இது மலச்சிக்கலைப் போக்க ஒரு சிறந்த பழமாக அமைகிறது.
3. ஆப்பிள்கள்:
ஆப்பிள்களில் நார்ச்சத்து, குறிப்பாக பெக்டின் நிறைந்துள்ளது, இது மலத்தை மென்மையாக்கவும் குடல் இயக்கங்களை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
4. ஆரஞ்சு:
ஆரஞ்சுகளில் வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இது மலச்சிக்கலைப் போக்க ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
5. மாம்பழம்:
மாம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகின்றன.
6. பப்பாளி:
பப்பாளியில் பப்பேன் என்ற நொதி உள்ளது, இது புரதங்களை உடைத்து செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலை நீக்குகிறது.
7. பேரிக்காய்:
பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து, இது மலத்தை மென்மையாக்கவும் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
மலச்சிக்கலை போக்க பழங்களை உட்கொள்வதற்கான உதவிக்குறிப்புகள்
1. பழங்களை பச்சையாக சாப்பிடுங்கள்:
சமைத்த அல்லது பதப்படுத்தப்பட்ட பழங்களை விட பச்சையான பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர் உள்ளடக்கம் அதிகம்.
2. பலவகையான உணவுகளை உட்கொள்ளுங்கள்:
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து பெற பல்வேறு பழங்களை சாப்பிடுங்கள்.
3. நிறைய தண்ணீர் குடிக்கவும்:
போதுமான நீரேற்றம் செரிமான அமைப்பு வழியாக நார்ச்சத்து செல்ல உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
4. உங்கள் உணவில் படிப்படியாக பழங்களைச் சேர்க்கவும்:
நீங்கள் நிறைய நார்ச்சத்து சாப்பிடப் பழக்கமில்லை என்றால், உங்கள் செரிமான அமைப்பு சரிசெய்ய அனுமதிக்க படிப்படியாக பழங்களை அறிமுகப்படுத்துங்கள்.
பழங்கள் மலச்சிக்கலைப் போக்க உதவும் என்றாலும், சீரான உணவைப் பராமரிப்பது, நீரேற்றமாக இருப்பது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் தொடர்ந்து அல்லது கடுமையான மலச்சிக்கலை அனுபவித்தால், சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக ஒரு சுகாதார நிபுணரை அணுகவும்.


















