தேசிய பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
கடுக்காயில் மேற்புற தோல் ஓடுகள் மட்டுமே மருத்துவ குணம் கொண்டவை. அதன் விதைகள் சிறிது நச்சு தன்மை வாய்ந்தவை எனவே அவற்றை பயன்படுத்தக்கூடாது.
தினமும் இரவு சாப்பிட்டு முடித்ததும் கடுக்காயின் ஓடுகளை பொடியாக்கி அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு, ஒரு கோப்பை நீர் அருந்தி வர உடல் வலிமை பெரும். மிகுந்த ஆற்றல் உடலில் உண்டாகும்.
தோலை சிறிதளவு எடுத்து அதனுடன் இஞ்சி,மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நெய்யில் வதக்கி சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி மேம்படும்.
வயிற்றில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி வயிறு சுத்தமாகும்.
கடுக்காய் தூளை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அதே அளவு சுக்கு, திப்பிலி தூள்களை கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும்
அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாத,பித்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.
நீரிழிவு பாதிப்பு கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அரை டீஸ்பூன் அளவு கடுகை தூளை, வாயில் போட்டு கொண்டு சிறிது நீரை அருந்தி வந்தால்
ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்து, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்.
கடுக்காய் காரத்தன்மை கொண்ட அமிலங்கள் நிறைந்த ஒரு மூலிகை ஆகும். இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எப்பேர்ப்பட்ட நச்சுகளையும் போக்கும் சக்தி அதிகம் உள்ளது.
கடுக்காய் தூள் பொடியை வாரத்திற்கு ஒரு முறை இதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர, நமது உடலில் ஓடும் ரத்தத்தில் சேர்ந்திருக்கும் நச்சுக்கள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தியாகும்.
நாம் என்ன சாப்பிடுகிறோம், எதைத் தவிர்க்கிறோம் என்பது நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. அதிலும் இயற்கையாக கிடைக்கும் காய்கனிகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், ஆரோக்கியம் மேம்படும். ஆரோக்கியம் மேம்படுவது ஒருபுறம் என்றால், நாம் உண்ணும் உணவுகளால் உடலில் உருவாகும் அமிலங்களின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நோய்கள் நம்மை பாதிக்கும்.
அதிலும் நம் உடலில் உற்பத்தியாகும் யூரிக் அமிலம், ஒரு நச்சுப் பொருள் ஆகும். நமது சிறுநீரகம் அதை உடலில் இருந்து வடிகட்டி இருந்து நீக்குகிறது. ஆனால் சில காரணங்களால் நமது சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டுவதை நிறுத்தினாலோ அல்லது, குறைத்துக் கொண்டாலோ, யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிக்கத் தொடங்குகிறது. படிக வடிவில் நமது மூட்டுகளில் குவியத் தொடங்குகும் யூரிக் ஆசிட் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
வலி, பிடிப்புகள், வீக்கம், மூட்டுகள் கன்றிப்போவது, நடப்பதில் சிரமம் என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், மோசமான வாழ்க்கை முறை, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், அதிகப்படியான மது அருந்துதல் என பல விஷயங்கள், உடலில் உருவாகும் யூரிக் ஆசிட் அதிகரிப்புக்கு காரணமாகிறது.
இரத்தத்தில் அதிகரித்துள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க, நீங்கள் பல வகையான உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம், அதில் பாகற்காய்க்கு முதலிடம் உண்டு. பாகற்காய் சாப்பிடுவதை பலர் விரும்புவதில்லை. ஆனால் உங்கள் யூரிக் அமிலம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றால், உங்கள் உணவில் பாகற்காய் சேர்க்க வேண்டும். யூரிக் அமில உற்பத்தியில் பாகற்காய் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் பாகற்காய்
பாகற்காய் உங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கும் என்று பல ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. பாகற்காயை நமது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் தீர்க்கும். சர்க்கரை நோய் பிரச்சனையையும் குறைக்கும் பாகற்காயில், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இந்த ஊட்டச்சத்துக்கள், இரத்தத்தை சுத்தப்படுத்தவும் யூரிக் அமில அளவைக் குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதில் கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. சமீபத்திய ஆராய்ச்சியில், எலிகளுக்கு பாகற்காய் சாறு கொடுக்கப்பட்டது. அது, அவற்றின் ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை குறைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தினமும் பாகற்காய் ஜூஸ் குடித்தால் என்ன ஆகும்?
இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க வேண்டுமானால், பாகற்காய் சாறு அருந்தலாம். தினமும் காலையில் 1 கப் பாகற்காய் சாறு குடிப்பதால் யூரிக் அமிலத்தை பெருமளவு குறைக்கலாம். இது தவிர, பாகற்காய் காய்கறி, பூஜியா, ஜூஸ் செய்தும் சாப்பிடலாம்.
மிகவும் ஆரோக்கியமான காய்கறிகள் பட்டியலில் பாகற்காய் உள்ளது. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.
(முக்கிய குறிப்பு. இவற்றை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். )
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமின்றி நடக்கும். எதிர்பார்ப்புகள் சில நிறைவேறும். தான தர்மங்களில் மனம் ஈடுபடும். பிரமுகர்களின் சந்திப்புகளால் ஆதாயம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். ஊக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் கைகூடும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வருமானம் தேவைக்கு இருக்கும். வாகன பராமரிப்பில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திடம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புதுமையான செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கடகம்
தாய் வழி உறவுகளிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். புதிய வேலைகள் சாதகமாக அமையும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். பயணங்களால் அனுபவம் மேம்படும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
சிம்மம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் உருவாகும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். பணிகளில் மந்தமான போக்கு காணப்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவவேறும். திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்தை தரும். தியானம் மேற்கொள்வது மன பதட்டத்தை குறைக்கும். துணையுடன் அனுசரித்து செல்லவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
துலாம்
மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். குடும்ப பொருளாதாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். நிதானமான செயல்கள் நன்மையை தரும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். வியாபாரத்தில் உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
கடன் சார்ந்த செயல்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணத்தால் உடலில் சோர்வு உண்டாகும். செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மன அமைதியை தரும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
தனுசு
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தேடி வந்தவர்களுக்கு நன்மைகளை செய்வீர்கள். பழைய பிரச்சனை முடிவுக்கு வரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உழைப்புக்கான மதிப்புகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். சிந்தனை திறனில் சில மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் சில நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கும்பம்
பண வரவு தாமதமாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். பழைய சிக்கல்கள் சில குறையும். கணவன், மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் உண்டாகும். சினம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிறு சிறு விமர்சன பேச்சுக்கள் வரக்கூடும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் பலமுறை யோசித்து ஈடுபடவும். சிந்தனைகளில் சில தடுமாற்றம் உண்டாகும். அரசு செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
ஒரு நாள் குளிர்மிகுந்த இரவில், ஒரு கோடீஸ்வரர் ஒரு வயதான ஏழையை வெளியில் சந்தித்தார். அவர் அவரிடம், "வெளியில் இவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறதே, நீங்கள் ஏன் ஒரு கோட் கூட அணியவில்லை!"
முதியவர் சொன்னார், "என்னிடம் கோட் இல்லை, ஆனால் எனக்கு அது பழக்கமாகிவிட்டது என்று. உடனே கோடீஸ்வரர் "எனக்காக காத்திருங்கள். நான் வீட்டிற்குச் சென்று உனக்கு ஒரு கோட் எடுத்து வருகிறேன் என்றார்."
ஏழை மிகவும் மகிழ்ச்சியடைந்தான், உங்களுக்காக காத்திருப்பேன் என்றான். கோடீஸ்வரர் தனது வீட்டிற்குச் சென்று வேலை மிகுதியால் அந்த ஏழையை மறந்துவிட்டார்.
மறுநாள் காலையில், அவர் ஏழை முதியவர் நினைவு வந்து, அவரைக் கண்டுபிடிக்க வெளியே சென்றார், ஆனால் அவர் குளிரால் இறந்துவிட்டார்.
அந்த ஏழை முதியவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார்,
"என்னிடம் கதகதப்பான ஆடைகள் இல்லாதபோது, குளிர்ச்சியை எதிர்த்துப் போராடும் மன வலிமை எனக்கு இருந்தது, ஆனால் நீங்கள் எனக்கு உதவுவதாக உறுதியளித்தபோது, உங்கள் வாக்குறுதியை நம்பி என் மனவலிமையை இழந்து விட்டேன்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாவிட்டால் எதையும் உறுதியளிக்காதீர்கள். இது உங்களுக்கு அவசியமில்லாமல் இருக்கலாம், ஆனால் அது வேறொருவருக்கு எல்லாமாக இருக்கலாம்.
அதே போல் அடுத்தவர் உதவுவார் என்று உன் மீது கொண்ட மன வலிமையை எப்போதும் தொலைக்காதே....
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 6 ஆம் தேதி வியாழக்கிழமை 23.10.2025.
இன்று இரவு 09.44 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று அதிகாலை 02.02 வரை சுவாதி. பின்னர் விசாகம்.
இன்று அதிகாலை 04.08 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.
இன்று காலை 08.42 வரை பாலவம். பின்னர் இரவு 09.44 வரை வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
எதிரிகளிடம் மாட்டிக் கொண்டால் உடனடியாக உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும். மற்ற உளவாளிகள் மாட்டிக் கொண்டவரைக் காப்பாற்ற முற்படாமல் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். இப்படித்தான் சரஸ்வதி ராஜாமணிக்குச் சொல்லித் தரப்பட்டது. ஆனால் தன் கூட்டாளியை விட்டுப்போக சரஸ்வதிக்கு மனமில்லை. உள்ளே சென்றால் தனது உயிருக்கும் உத்திரவாதம் இல்லை.
என்ன செய்தார் சரஸ்வதி?
சரஸ்வதிக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் ராஜாமணி. திருச்சிராப்பள்ளியைப் பூர்வீகமாகக் கொண்ட அவரது தந்தை ரங்கூனில் தங்கச் சுரங்கத்தின் அதிபதியாக இருந்தார். பர்மாவில் (மியான்மர்) பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்த அவர் இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்காக ஏராளமானப் பொருளுதவிகளைச் செய்து வந்தார்.
ராஜாமணியின் குடும்பம் மஹாத்மா காந்தியின் அகிம்சைப் போராட்டங்களை ஆதரித்தது. ஆனால் ராஜாமணி சிறுவயதிலேயே, பொம்மைத் துப்பாக்கியை வைத்து ஆங்கிலேயர்களைக் குறிபார்த்துச் சுடும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்.
பதின்ம வயதில் நேதாஜியின் ஆக்ரோஷப் பேச்சுகளால் கவரப்பட்டார். அவருடைய புகைப்படங்களையும், செய்தித்தாள்களில் அவரைக் குறித்து வந்த கட்டுரைகளையும் கத்தரித்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார்.
நேதாஜி, இந்திய தேசிய இராணுவத்துக்கு நிதி திரட்டுவதற்காக ரங்கூனுக்குச் சென்றார். அவர்கள் அமைத்திருந்த கூடாரத்துக்குச் சென்று, தன்னிடமிருந்த தங்க வைர நகைகளைத் தானமாகக் கொடுத்தார் ராஜாமணி.
ஒரு சிறுபெண் ஏராளமான நகைகளைக் கொடுத்திருக்கிறாள் என்கிற விஷயம் நேதாஜிக்குத் தெரியவந்தது. சிறுபெண் அறியாமல் கொடுத்திருக்கலாம் என எண்ணி ராஜாமணியின் வீட்டுக்குச் சென்றார். அவரது தந்தையிடம் நகைகளைத் திருப்பிக் கொடுத்தார்.
ஆனால் ராஜாமணி, ‘இவை நான் மனமுவந்து விடுதலைப் போராட்டத்துக்காகக் கொடுத்தவை, இவற்றை என்னால் திரும்பப் பெற்றுக்கொள்ளவே முடியாது’ என உறுதியாக மறுத்துவிட்டார். விடுதலைப் போராட்டத்தில் தனக்கிருக்கும் ஆர்வத்தையும், இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றும் விருப்பத்தையும் தெரிவித்தார்.
அவரது எண்ணத்தைக் கண்டு வியந்த நேதாஜி, ‘லட்சுமி போவாள் வருவாள், ஆனால் சரஸ்வதி ஒருவரிடம் வந்தால் திரும்பிச் செல்ல மாட்டாள், உன்னிடத்தில் இருக்கும் சரஸ்வதி அற உணர்வையும், துணிச்சலையும் வழங்கி இருக்கிறாள். இனிமேல் நான் உன்னை சரஸ்வதி ராஜாமணி என்றே அழைக்கப் போகிறேன்.’ என்று பாராட்டிப் பேசியிருக்கிறார். நேதாஜி வைத்த சரஸ்வதி, ராஜாமணியின் பெயரோடு நிரந்தரமாகச் சேர்ந்துகொண்டது.
சரஸ்வதி தனது பதினாறாவது வயதில், இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலகப்போரில் அடிபட்ட வீரர்களுக்கு உதவும் செவிலியர்பணிதான் முதலில் அவருக்குத் தரப்பட்டது.
தனது துடிப்பான செயல்களால் விரைவிலேயே ஜான்சி ராணி படைப்பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். கேப்டன் லக்ஷ்மி சேஹலிடம் இராணுவப் பயிற்சி பெற்றார்.
முடியைக் குட்டையாகக் கத்தரித்துக் கொண்டு, ஆண் சட்டையை அணிந்து ‘மணி’ என்னும் சிறுவனாக மாறினார். தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரிட்டன் அதிகாரிகளுடைய வீடுகளுக்குள் நுழைந்தார். வீட்டைச் சுத்தம் செய்வது துணிகளை வெளுப்பது, தோட்டத்தைக் கவனிப்பது போன்ற பணிகளைச் செய்யும் பாவனையில் இரகசியமாக அவர்கள் நடவடிக்கைகளை உளவு பார்த்துக்கொண்டும் இருந்தார். உளவுத் தகவல்கள் கூட்டாளிகளின் மூலமாக நேதாஜியைச் சென்றடைந்தன.
துரதிர்ஷ்டவசமாக சரஸ்வதியின் கூட்டாளுள் ஒருவரான துர்கா, பிரிட்டன் அதிகாரிகளிடம் அகப்பட்டுக் கொண்டாள்.
கூட்டாளிகள் மாட்டிக்கொண்டால், மற்றவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் தன் கூட்டாளியை அப்படியே விட்டுப்போக சரஸ்வதிக்கு மனமில்லை. துர்காவைக் காப்பாற்ற விரைவாகத் திட்டம் தீட்டினார்.
பர்மிய நடன மங்கையைப் போல் உடையணிந்து கொண்டு சிறைச்சாலைக்குள் சென்றார். காவலர்கள் பேசிக் கொண்டிருந்தபோது கையோடு எடுத்துச் சென்ற போதை மருந்தை அவர்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்தார். தண்ணீரைக் குடித்த காவலர்கள் மயங்கிச் சரிந்தனர். துர்காவும் சரஸ்வதியும் தப்பியோடினர்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த காவலர்கள் இரு பெண்களையும் துரத்திச் சென்றனர். காவலர் ஒருவர் சுட்ட குண்டு சரஸ்வதியின் வலதுகாலைத் துளைத்தது. அதற்குமேல் ஓடி முடியாததால் அருகிலிருந்த மரத்தின் மீது இருவரும் ஏறிக்கொண்டனர். காலில் வடிந்த குருதி, பசி, தாகம் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு இரண்டு நாள்கள் அங்கேயே கழித்தனர்.
மூன்றாவது நாள் ரங்கூனுக்குத் தப்பியோடி தங்களது இராணுவக் கூடாரத்தைச் சென்றடைந்தனர். நேதாஜி, சரஸ்வதியின் துணிச்சலை வெகுவாகப் பாராட்டினார். ஜப்பானிய அரசர், சரஸ்வதிக்குப் பதக்கமும், பணப்பரிசும் வழங்கி கௌரவித்தார்.
இவை அனைத்துமே இரகசியமான உளவுப் பணிகள் என்பதால் சரஸ்வதியின் கூற்றைத் தவிர இவற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்திய தேசிய இராணுவம் கலைக்கப்பட்டது. சரஸ்வதியின் குடும்பம் ரங்கூனை விட்டு இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தது.
சில ஆண்டுகள் திருச்சியில் வசித்த பின்னர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார் சரஸ்வதி. சுமார் இருபத்தைந்து ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகே அவருக்குத் தியாகிகள் ஓய்வூதியம் கிடைக்கப் பெற்றது.
ஒரு காலத்தில் மாடமாளிகையில் வாழ்ந்தவர், எந்த அடையாளமும் இல்லாமல் வாடகை வீட்டில் ஓய்வூதியத்தை வைத்து மட்டுமே ஜீவித்துக் கொண்டிருந்தார். 2005-ஆம் ஆண்டு தமிழக அரசு அவருக்குச் சொந்தமாக வீட்டையும், கணிசமானளவு தொகையையும் வழங்கியது.
வீடு முழுக்க நேதாஜியின் புகைப்படங்களை மாட்டி வைத்து, வலது கால் ஊனத்தைப் பெருமையாகச் சுமந்து, இராணுவத்தில் உளவாளியாக இருந்த நாள்களை மட்டுமே இறுதிவரை நினைவில் தேக்கி வைத்திருந்த சரஸ்வதி, தனது தொண்ணூறாவது வயதில் காலமானார்.
ஒரு அரசர் தன் மகனுக்கு போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார்.
ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார்.
அங்கு அவரது மகன் மிக ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் திணவெடுத்து இருக்கின்றன.
அங்கிருக்கும் தூண்கள், பலகைகள் என்று அனைத்தையும் அவன் கைகள் பதம் பார்த்திருந்தன. அவனது உடலெங்கும் தழும்புகளால் நிறைந்திருந்தன. மிகுந்த திருப்தியுற்ற அரசர் பயிற்சியாளரிடம் சென்று நன்றி கூறி தனது மகனை அழைத்து செல்லலாமா என்று கேட்டார்.
அவன் இன்னும் தயாராகவில்லை இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். அரசரும் குழப்பத்துடன் சரி என்று சொல்லி சென்றுவிட்டார்.
அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சென்றார். அப்போது அவரது மகன், மாமிச மலை போல் இருந்த, அந்த பயிற்சி பாசறையிலேயே ‘மிகச்சிறந்த’ வீரனுடன் மோதிக்கொண்டிருந்தான்.
மாமிச மலை’ தான் வெல்வான் என்றிருந்த கணத்தில், சட்டென்று அவனை புரட்டிப் போட்டு வீழ்த்தி, சீற்றத்துடன் கர்ஜனை செய்தான் மகன். முகமெல்லாம் பூரிப்புடன் பயிற்சியாளரை பார்த்து, “இப்போது அவனை அழைத்து செல்லலாமா” என்றார்.
இல்லை அவன் இன்னும் தயாராகவில்லை, இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். தயக்கத்துடன் விடைபெற்ற அரசர் குழப்பத்துடன் நாடு சேர்ந்தார்.
அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பயிற்சி பாசறைக்கு வந்தார். அப்போது அவரது மகன் சண்டை நடக்கும் இடத்தில இருந்து விலகி நண்பர்களுடன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான்.
அரசர் பயிற்சியாளரை சந்தித்த முதல் நிமிடத்திலேயே “இப்போது அவன் தயாராய் இருக்கிறான், நீங்கள் அழைத்து செல்லலாம்” என்றார்.
அவன் ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவன் தயாரில்லை என்று சொன்ன நீங்கள், அவன் அமைதியாய் அமர்ந்திருக்கும் போது மட்டும் அழைத்து செல்ல சொல்கிறீர்களே ஏன்” என்று என்றார்.
அரைகுறையின் உச்சம் தான் ஆக்ரோஷம். வீரத்தின் உச்சம் என்றும் அமைதி தான்” என்றார் பயிற்சியாளர்.
புரியவில்லை” என்றார் அரசர்.
எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ, எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான். எப்பொழுது ஒருவனுக்கு மற்றவர் மேல் அன்பு வருகிறதோ, எப்பொழுது ஒருவன் முழு திறமையையும் அடைகிறானோ அப்பொழுது அவன் அமைதியில் ஐக்கியமாவான். அது தான் ஒரு தலைவனுக்குரிய தகுதி. உங்கள் மகன் நாடாளும் தகுதி பெற்று விட்டான் அவனை அழைத்து செல்லுங்கள்” என்றார்.
சந்தைக்கடையில் இரண்டு பையன்கள் மீன் விற்றுக்கொண்டிருந்தனர். வியாபாரம் மிகவும் மந்தமாகத்தான் இருந்தது.
சற்று நேரம் கழித்து ஒரு வாடிக்கையாளர் வந்தார். முதல் பையனிடம் சென்று மீன் விலை விசாரித்தார்.
“ஒரு கிலோ 1௦௦ ருபாய் ஆகும், சார்,” என்று அவன் கூறினான்.
சற்று தூரத்தில் இரண்டாவது பையனும் அதே வகை மீனை வைத்துக்கொண்டிருந்ததால், அவனிடம் சென்று இந்த விலைக்குக் குறைவாகக் கொடுக்கச்சொல்லி, பேரம் பேசி வாங்கலாம் என்று நினைத்து அவனை அணுகினார்.
விலை என்னவென்று விசாரித்தபோது, அவனோ, “ மீன் விலை ஒரு கிலோ 5௦௦ ருபாய் ஆகும், சார்,” என்று கூறினான்.
விலையைக்கேட்டுத் திடுக்கிட்டுப்போன அவர், “ என்னப்பா இது ? அந்தப் பையனும் இதே மாதிரி மீன்தான் வைத்திருக்கிறான். அவன் விலை 1௦௦ ருபாய் என்று சொல்கிறான். நீ அதே மாதிரி மீனுக்கு விலை 5௦௦ ருபாய் என்று சொல்கிறாயே. இது நியாயமா?” என்று வினவினார்.
அந்தப் பையனோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் சொன்னான்:
“ சார், பார்க்கத்தான் இரண்டும் ஒரே மாதிரியாகத்தெரியும். ஆனால் என்னுடைய மீன் மிகவும் விசேஷமானது. அதனால்தான் கூடுதல் விலை,” என்றான்.
“அப்படி என்னப்பா விசேஷம் உன் மீனில் இருக்கிறது?” என்று கேட்டார் வாடிக்கையாளர்.
“சார், இது புத்திசாலியான மீன். இதைச் சாப்பிடுபவர்களும் நாளடைவில் புத்திசாலியாகி விடுவார்கள். அதனால்தான் இவ்வளவு விலை,” என்றான் பையன்.
“உண்மையாகவா ?” என்று வியந்தார் வாடிக்கையாளர்.
“வாங்கிப்பாருங்கள், சார், உங்களுக்கே தெரியும்,”
“சரி,சரி, ஒரு கிலோ கொடு. ‘ட்ரை’ பண்ணிப் பார்க்கிறேன்”, என்று சொல்லி, ஒரு கிலோ மீனை 5௦௦ ருபாய்க்கு வாங்கிச் சென்றார்.
அடுத்தடுத்து தொடந்து 6 நாட்களுக்கு அதே மீனை அதே பையனிடம் அதே விலைக்கு வாங்கிச் சென்று சாப்பிட்டுவந்தார்.
புத்திசாலித்தனத்தில் ஏதாவது முன்னேற்றம் ... ?
ம்ஹும். ...! எதுவும் தெரியவில்லை.
அப்போதுதான் அவருக்குப் புரிந்தது “புத்திசாலி மீன்” என்று அந்தப் பையன் சொன்னது எல்லாம் வெறும் பித்தலாட்டம் என்று.
கடுமையான கோபம் வந்துவிட்டது அவருக்கு. ‘இன்று அவனைப்போய் ‘உண்டு அல்லது இல்லை’ என்று ஆக்கிவிடவேண்டியதுதான் என்ற தீர்மானத்துடன் சந்தைக்குச் சென்றார்..
அந்தப் பையனிடம் சென்று, தன் கோபத்தை வெளிக்காட்டாமல், “என்னப்பா, அந்த புத்திசாலி மீன் இருக்கா? ”, என்று இவர் கேட்க, இவரின் கோபத்தைப் புரிந்துகொள்ளாமல் அவனும், “ ஓ, இருக்கே. உங்களுக்காகவே தனியாக எடுத்து வைத்திருகிறேனே ! ”, என்று உற்சாகமாகக் கூறினான்.
வந்ததே கோபம் அவருக்கு !
“அயோக்கியப் பயலே! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய் ? உன் பேச்சைக்கேட்டு ஒரு வாரமாக நானும் அந்த மீனை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்துவிட்டேன். அணுவளவும் முன்னேற்றம் இல்லை. புத்திசாலி மீனும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது. என்னை ஏமாற்றிவிட்டாய். உடனடியாக என் பணத்தையெல்லாம் திருப்பித் தந்துவிடு. இல்லையென்றால் உடனடியாகப் போலீசைக் கூப்பிட்டுவிடுவேன்”, என்று கத்தினார்.
பையனோ அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னான்:
“ சார், இங்கே பாருங்க. இதே மீனை புத்திசாலி மீன் என்று நான் ஒரு வாரத்திற்கு முன்னால் சொன்னபோது நீங்கள் ஆட்சேபிக்கவேயில்லை. இப்போ பாருங்க, ஒரு வாரத்திலேயே இது புத்திசாலி மீன் இல்லை என்று நீங்களே கண்டு பிடித்துவிட்டீர்கள். என்ன பிரமாதமான முன்னேற்றம்! இதைப் போய் முன்னேற்றம் இல்லை என்று சொல்கிறீர்களே, சார் ! தொடர்ந்து சாப்பிடுங்க, சார். இன்னும் பிரமாதமான முன்னேற்றம் கிடைக்கும்.”
வாடிக்கையாளர் வாயடைத்து நின்றார்.
ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அவர் மேடையில் பேசும்போது ஒரு கேள்வியை எழுப்பினாராம்.
எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? - என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். "பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும்" என்று சொன்னார்களாம்.
"அப்படி இல்லை" என்று கலைவாணர் அவர்கள் சொன்ன பதில்:
"சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள்.
ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை.
நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும்.
அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை."
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு!
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்!
திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்!
எடிசன் மின்சார பல்பை கண்டுபிடித்த பிறகு தன் நண்பர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அந்த பல்பை ஒளிர வைத்து காட்டுவதற்காக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார்.
அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
எடிசன் தனது உதவியாளரை அழைத்து மின்சார பல்பை மேல் தளத்திற்கு கொண்டு வரச் சொன்னார்.
அந்த உதவியாளர் பல்பை கொண்டு வருகையில் அது கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது.
அங்கிருந்த எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
உதவியாளரும் பதற்றமடைந்து விட்டார்.
ஆனால் எடிசன் எந்த பதற்றமும் அடையவில்லை.
ஆயிரம் தோல்விகளை சந்தித்து மின்சார பல்பை உருவாக்கிய அவருக்கு மீண்டும் ஒரு மின்சார பல்பை உருவாக்குவது மிகவும் எளிதாக இருந்தது.
சிறு முயற்சி செய்து மீண்டும் ஒரு பல்பை உருவாக்கினார்.
அதை மீண்டும் அதே உதவியாளரிடம் கொடுத்து மேலே கொண்டு வரச்செய்தார்.
பல்பை கீழே போட்டு உடைத்த அவரிடமே அதை மீண்டும் கொடுக்கிறீர்களே என்று சிலர் ஆச்சரியப்பட்டு எடிசனிடம் கேட்டார்கள்.
அந்த பல்ப் மீண்டும் உடைந்தாலும் என்னால் இன்னொரு பல்பை உருவாக்க முடியும்.
ஆனால் என்னுடைய உதவியாளரின் மனதை உடைத்து விட்டால் அதை என்னால் சரிசெய்ய முடியுமா?
முடியவே முடியாது! அதனால் தான் மீண்டும் அவரிடம் அதே பணியை கொடுத்தேன்.
அவர் அவரது பணியையும், பொறுப்பையும் என்னுடைய நம்பிக்கையும் நன்றாக உணர்ந்து மீண்டும் வேலை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்றார் எடிசன்.
அப்போதுதான் எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த அந்த பொறுமையின் முக்கியத்துவத்தை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தார்கள்.
எடிசன் ஆயிரம் முறை தோல்வி கண்டு ஒரு மின்சார பல்பை கண்டுபிடித்தார்.
அந்த பல்பை தனது உதவியாளரின் கை தவறி விழுந்து உடைந்ததற்காக எடிசன் திகைக்கவில்லை.
நொந்து போகவில்லை.
அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் கூட அமைதியாக நடந்து கொண்ட நேர்மறை சிந்தனை உள்ள ஒரு அற்புதமான மனிதர் எடிசன்.
- தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்குள் பச்சையாக சாப்பிட்டால் , அதுதான் அமிர்தம்.
- சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்.
- இரத்தத்தை சுத்தமாக்கும்.. உடலை உரமாக்கும். உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும்..
- *தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை.*
- நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்.
- இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்...
- தேங்காயை எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக மாறிவிடும். சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு
- தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்கால சிற்றுண்டி தந்து பாருங்கள்...அவ்வளவு ஆரோக்கியம்...
- பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள்,
- ஆனால் இப்போது மாட்டு பால் ஊத்துவதால் வாழ்நாள் முடிக்கப்படுகிறது
- தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்,
- காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை (அ) கருப்பட்டி (அ) தேன் சேர்த்து பாக்கட் பாலைத் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக குடியுங்கள்
- தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேறெதிலும் இல்லை...
"அட … அபச்சாரம்… அபச்சாரம்..!
என்ன இது... இப்படியெல்லாம் எழுதியிருக்கார்..!"
கோபத்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரிகள் !
கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை கேட்டதால்தான்,
அவர்களுக்கு அத்தனை ஆத்திரம்.
'பாவ மன்னிப்பு' படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. அதற்கான பாடல்களை எழுதியவர் கண்ணதாசன்.
படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து சென்சாருக்கு போனது.
படத்தில் ஆரம்பத்தில் சிவாஜி பாடுவதாக வரும்
'வந்த நாள் முதல் இந்த நாள் வரை..'
பாடல் காட்சியை பார்த்த சென்சார் அதிகாரிகள் பதறிப் போனார்கள்.
"இல்லை . இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது."
"ஏன் ?"
"அந்தப் பாடலின் இடையில் கண்ணதாசன் எழுதிய வரியில் மாபெரும் தவறு இருக்கிறது."
"தவறா ?"
"ஆமாம். அது என்ன
'எதனைக் கண்டான்
மதங்களை படைத்தான்'
என்று எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது."
படக் குழுவினர்
கண்ணதாசனிடம் போய் சொன்னார்கள்.
சென்சார் கண்டித்து அனுப்பிய தன் பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார்.
"பறவையை கண்டான்
விமானம் படைத்தான்
பாயும் மீன்களில்
படகினை கண்டான்
எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்
எதனைக் கண்டான்
மதம்தனைப் படைத்தான்."
கண்ணதாசன் புன்னகையுடன் சொன்னார்: "நான் சரியாகத்தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள்."
சொன்னார்கள்.
சென்ஸார் மறுத்தது : "இல்லை. மதங்கள் கடவுளால் படைக்கப்பட்டவை.
மனிதன் உருவாக்கியது அல்ல."
சென்சாரின் இந்த வாதத்தை கேட்ட கண்ணதாசன் சிரித்தார் :
"இது என்ன வேடிக்கை ? சிவனோ விஷ்ணுவோ வந்து இந்து மதத்தை உண்டாக்கினார்களா ? அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாமிய மதத்தை உருவாக்கினாரா ?
இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா ?
கடவுள்கள் பெயரை சொல்லி , அடுத்து வந்த மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும் ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன் ?"
கண்ணதாசனின் இந்த தெளிவான விளக்கத்தை கேட்ட சென்ஸார் திகைத்துப் போனார்கள்.
ஆனாலும் ஈகோ தடுத்தது.
"இல்லை இல்லை.
ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த வரிகளை மாற்றத்தான் வேண்டும்."
கண்ணதாசன் தலையில் அடித்துக் கொண்டு, இப்படி மாற்றி எழுதிக் கொடுத்தார்:
"எதனைக் கண்டான்
பணம்தனைப் படைத்தான்."
"இப்போ ஓகே."
ஏற்றுக் கொண்டார்கள் சென்சார் அதிகாரிகள்.
படத்தில்தான் இந்த வார்த்தைகள் இருக்கின்றன.
ஆனால் ஒரிஜினல் இசைத் தட்டில் 'மதம்தனை படைத்தான்'என்ற வார்த்தைதான் இருக்கிறது.
இத்தோடு முடியவில்லை சென்சாரின் சீற்றம்.
அதே படத்தின் இன்னொரு பாடல்...
"பாலிருக்கும் பழமிருக்கும்
பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும்
தூக்கம் வராது."
பிரச்சினை வந்தது.
சென்ஸார் அதிகாரிகள் பதட்டத்தில் படபடத்தார்கள்.
"அய்யய்யோ, அடுத்தும் ஒரு அபச்சாரம். கண்ணதாசனா எழுதினார் இப்படி?"
அப்படி என்ன எழுதி இருந்தார் கண்ணதாசன் ?
"காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே..."
இந்த கடைசி வரியை கட் செய்யச் சொன்னார்கள் சென்ஸார் அதிகாரிகள்.
இப்போது பதிலுக்கு சீறினார் கண்ணதாசன் : "என்னய்யா இது ? மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம். அதை எழுதிய விஸ்வாமித்திரரையே காதல் விடவில்லையே ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன்?
என்ன ஆனாலும் சரி .
எவர் சொன்னாலும் சரி .
இதை நான் மாற்ற மாட்டேன்."
இப்போது படக் குழுவினர் கெஞ்சினார்கள்: "நீங்கள் சொல்வது சரிதான் கவிஞரே , ஆனால் படம் வெளி வர வேண்டுமே ? தயவு செய்து..."
வேறு வழியின்றி வேத வரிகள் மாறின, படத்திற்காக மட்டும்.
"வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே."
பாவ மன்னிப்பு வந்தது.
பாடல்களும் ஹிட் ஆனது.
அதன் பின்னரும்
அவ்வப்போது அங்கங்கே ஏதாவது ஒரு சில பிரச்சினைகள்... சமரசங்கள்..!
அதனால்தானோ என்னவோ ,
ஒருமுறை இப்படி எழுதி இருந்தார் அவர் :
"நான் இறந்த பிற்பாடு
என்னையே நான் விமர்சனம் செய்துகொண்டால்
இப்படித்தான் சொல்வேன்:
முட்டாள்களிடையே
வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன்,
கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி
முட்டாளாக செத்துப் போனேன்.”
- கண்ணதாசன்!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் சாதகமாக சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் ஆதரவுடன் சில செயல்களை முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். குடும்பத்தில் ஆதரவுகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மிதுனம்
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். புதிய கனவுகள் பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கடகம்
நீண்ட தூர பயணங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கட்டுமான துறைகளில் லாபம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். உத்யோகத்தில் உயர்வுகள் உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
சிம்மம்
அரசு விவகாரத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பின்னணியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கன்னி
உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். அரசால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரை பற்றிய புரிதல் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பகள் கிடைக்கும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்கிவீர்கள். அலுவலகத்தில் சிறுசிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு காரியங்களில் விழிப்புணர்வு வேண்டும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
எடுத்த காரியத்தை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். கடன் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். இனத்தாரின் ஆதரவுகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். உறவினர்களை அனுசரித்து செல்லவும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு
குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். சுப முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். புதிய முயற்சிக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மகரம்
குடும்பம் பற்றிய சிந்தனை அதிகமாகும். பெரியோர்களின் சந்திப்பால் மனமாற்றம் ஏற்படும். கடினமான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வியாபார தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் இருந்த சஞ்சலம் குறையும். சகோதரிக்கு சுபகாரிய ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவுகள் இடத்தில் பொறுமை வேண்டும். செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எண்ணங்களில் சில மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் சிறு சிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மீனம்
அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிந்தனை போக்கில் குழப்பம் உண்டாகும். எதிலும் பதக்கம் இன்றி செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் கனிவு வேண்டும். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 5 ஆம் தேதி புதன்கிழமை 22.10.2025
இன்று இரவு 07.40 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று முழுவதும் சுவாதி .
இன்று அதிகாலை 03.42 வரை விஷ்கம்பம். பின்னர் பிரீதி .
இன்று காலை 06.44 வரை கிமிஸ்துக்கினம். பின்னர் இரவு 07.40 வரை வரை பவம். பின்பு பாலவம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. மொத்தம் 24 அடி உயரம் கொண்ட இந்த ஏரியின் நீர்மட்டம் 21 அடியை கடந்துள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று மாலை 4 மணி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வெள்ள முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வழக்கத்தை விட இந்த முறை வடகிழக்கு பருவமழை அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி அணைகள், ஏரிகளின் நீர்மட்டங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி விரைவாக நிறைந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் மழை மற்றும் கிருஷ்ண நதிநீர் வருகை உள்ளிட்டவற்றால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியாகும். இன்று நீர்மட்டம் 21 அடியை எட்டி உள்ளது. இன்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 21.20 அடியாக இருந்தது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று மாலை 4 மணிக்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரிக்கு இன்று காலையில் வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது.அதன்பிறகு பெய்த கனமழையின் காரணமாக இப்போது ஏரிக்கு வினாடிக்கு 1000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக தண்ணீரை திறந்து விட காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.
சென்னை, காஞ்சிபுரத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்தாலும் நேரம் ஆக ஆக தண்ணீர் திறப்பு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேஷம்
திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உள்ளத்தில் அமைதி ஏற்படும். சிந்தனை திறன் மேம்படும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். பொழுது போக்கு விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டுவீர்கள். பணி மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தொழில் வளர்ச்சிக்கு உதவிகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மிதுனம்
உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். நிதானமான செயல்களால் நன்மை உண்டாகும். மனதில் கற்பனைகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் மனம் திறந்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். கோப உணர்ச்சிகளை குறைத்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
சிம்மம்
இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
குடும்பத்தாரில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபார யுக்திகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் விலகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுகளுக்கு மதிப்புகள் கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
துலாம்
அலுவலகத்தில் எதிர்பாராத சில மாற்றம் ஏற்படும். தீடிர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். மற்றவர்கள் பொருட்கள் மீது ஈர்ப்புகள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
விருச்சிகம்
சிறு சிறு பணிகளிலும் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் லாபங்கள் முயற்சிக்கு ஏற்ப கிடைக்கும். அலுவலகத்தில் விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். தொல்லை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பெண்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும். எதிரிகள் விலகி செல்வார்கள். சுப காரியங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும்.வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி கைகூடும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மகரம்
பிள்ளைகளின் விருப்பத்தைப் நிறைவேற்றுவீர்கள். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். குழந்தைகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். கலை பொருட்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
கும்பம்
நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திட்டவட்டமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் நிலவும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மீனம்
பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். கல்வி பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வேலையாட்கள் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படவும். திடீர் பயணங்கள் மூலம் மனதளவில் சில மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வரவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 21.10.2025.
இன்று மாலை 05.48 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.
இன்று இரவு 11.34 வரை சித்திரை. பின்னர் சுவாதி .
இன்று அதிகாலை 03.29 வரை வைதிருதி. பின்னர் விஷ்கம்பம் .
இன்று அதிகாலை 05.01 வரை சதுஸ்பாதம். பின்னர் மாலை 05.48 வரை வரை நாகவம். பின்பு கிமிஸ்துக்கினம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 08.00 முதல் 09.00 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 3 ஆம் தேதி திங்கட்கிழமை 20.10.2025.
இன்று மாலை 04.14 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.
இன்று இரவு 09.26 வரை அஸ்தம். பின்னர் சித்திரை,
அதிகாலை 03.33 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.
இன்று அதிகாலை 03.39 வரை பத்தரை. பின்னர் மாலை 04.14 வரை வரை சகுனி. பின்பு சதுஸ்பாதம்.
இன்று மாலை 06.01 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை