·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 381
  • More

நல்ல திறமை

நல்ல திறமை இருக்கு, ஆனா சரியான இடம் கிடைக்கல
Comments (0)
Login or Join to comment.
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

தொழில் நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதில் புதிய தேடல்கள் பிறக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

ரிஷபம்

மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவுகளை எடுக்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் புதுவிதமான அறிமுகங்களும் அனுபவங்களும் ஏற்படும். வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களை சிந்தித்து செயல்படுதல் அவசியம் ஆகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிதுனம்

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். புதியவர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். ஓய்வு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வியாபார செயல்பாடுகளில் லாபங்கள் மேம்படும். மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த முடிவினை அளிக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

சிம்மம்

குழந்தைகளின் வருங்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அக்கம் பக்கம் வீட்டாருடன் இருந்த இன்னல்கள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். கலை சார்ந்த பணிகளில் நுட்பங்களை அறிவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

கன்னி

குடும்பத்தில் புதிய நபர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அரசு காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

துலாம்

எந்த ஒரு செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். சுபமுயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுபவம் அதிகரிக்கலாம். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

விருச்சிகம்

பயணம் மற்றும் செயல்பாடுகளில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். அமைதியான பேச்சுகள் நல்ல மதிப்பை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு

சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். சாப்பாடு விஷயத்தில் கவனமுடன் இருக்கவும். திடீர் செய்திகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். மேலதிகாரிகளுடன் இருந்து வந்த வேறுபாடுகள் தீரும். வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தேவையில்லாத அலைச்சல் மூலம் சோர்வுகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மகரம்

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். சிந்தனையில் தெளிவுகள் பிறக்கும். நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உயரதிகாரிகள் இடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆடம்பரமான செலவுகள் மூலம் விரயங்கள் உண்டாகும். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

கும்பம்

மனதில் சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். விவசாய பணிகளில் மாற்றமான சூழல் அமையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

மீனம்

சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தன வருவாயில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபங்கள் மேம்படும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். வாக்குகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். கல்வி கற்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

  • 57
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 25 ஆம் தேதி புதன்கிழமை 8.4.2026

இன்று மாலை 05.48 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று அதிகாலை 04.54 வரை கேட்டை. பின்னர் மூலம்.

இன்று மாலை 03.56 வரை வரீயான். பின்னர் பரிகம்.

இன்று அதிகாலை 04.26 வரை கரசை. பின்னர் மாலை 05.48 வரை வனிசை. பிறகு பத்திரை.

இன்று அதிகாலை 04.54 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.06 வரை அமிர்த யோகம். பின்பு மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=476&dpx=2&t=1775617190

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 57
·
Added a post

1. சீராக வளர்ந்துள்ள தர்ப்பூசணியை தேர்ந்தெடுங்கள். ஏனெனில், அந்த பழம் முழுவதும் கதிரவனின் ஒளி மற்றும் ஊட்டச்சத்து சீராக இருக்கும்.

2. கிட்டத்தட்ட ஒரே அளவுள்ள இரு பழங்களை கையில் தூக்கிப்பாருங்கள். எடை அதிகமுள்ள பழம் நீர்ச்சத்து மற்றும் சுவை மிகுந்தது (பழங்கள் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருக்க வேண்டும்).

3. பழத்தின் ஒரு பகுதியில் மஞ்சள் நிற திட்டு இருக்கிறதா என்று பாருங்கள். இந்த இடம் அந்த பழம் மண்ணில் நீண்ட நேரம் இருந்ததற்கான அடையாளம். நல்ல மஞ்சள் நிறத்தில் திட்டு இருந்தால் அது சரியான காலம் வரை செடியில் இருந்துள்ளது. கதிரவனின் ஒளியும் ஊட்டச்சத்தும் அதற்கு சுவையை அளித்திருக்கும். மாறாக, வெள்ளை நிற திட்டு இருந்தாலோ, அல்லது திட்டுகளே இல்லையென்றாலோ, அந்த பழம் தகுந்த காலத்திற்கு முன்னமேயே பறிக்கப்பட்டு விட்டது என்று பொருள். எனவே, சுவை குறைந்ததாக இருக்கும்.

4. அந்த பழத்தின் நிறம்: நன்றாக பழுத்த பழத்தில் கரும்பச்சை கோடுகள் இருக்கும். மேலும் அவற்றின் வெளித்தோல் மின்னாது.

5. தட்டிப் பார்ப்பது: இது பழக்கத்தில் தான் வரும் என்று இந்த வலைத்தளம் கூறுகிறது. எனவே, இதை அவரவர் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

நான் வாங்கும் பொழுது முதல் நான்கு விஷயங்களை நன்றாக கவனித்து வாங்குவது வழக்கம்.

  • 62

Good Morning...

  • 60
·
Added article

நடிகர் பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘ரஞ்ஜன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி உள்பட பலர் அறிமுகமாகின்றனர்.

இப்படத்தைத் தியாகராஜன் இயக்குகிறார். பிரீத்தி தியாகராஜன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படத்துக்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் பிரசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இது தெலுங்கில் வெற்றிபெற்ற ‘கோர்ட்’ படத்தின் ரீமேக். இதில் வழக்கறிஞராக பிரசாந்த் நடிக்கிறார்.

தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கதிரேசன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, பைவ்ஸ்டார் செந்தில், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், வெற்றிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இந்தப் படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கும். பிரசாந்துக்கும் எனக்கும் 35 வருட பழக்கம். 91-ம் ஆண்டு அவரை எப்படி பார்த்தேனோ, அப்படித்தான் இப்போதும் இருக்கிறார்.

பிரசாந்த் நடிப்பில் ஏற்கெனவே 3 படங்கள் இயக்கி இருக்கிறேன். அவர் நடிப்பில் மீண்டும் ஒரு படம் இயக்க நினைக்கிறேன். ஆக்ஷன் காட்சிகளில் விஜயகாந்த் சாருக்கு நிகரான திறமைகளைக் கொண்டவர் பிரசாந்த். அவர் அஸ்டாவதானி. அவருக்கு டைரக் ஷன், மியூசிக், எடிட்டிங் என அனைத்தும் தெரியும். அவர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நல்ல மனிதராக இருக்கிறார்” என்றார்.

  • 156
·
Added a post

பில் மோர்கன் (Bill Morgan) என்பவரின் கதை உலகின் மிகவும் பிரபலமான மற்றும் வியக்கத்தக்க தற்செயல் நிகழ்வுகளில் ஒன்றாகும்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்து, குறுகிய காலத்தில் இரண்டு முறை லாட்டரி வென்றவர்.

அவருக்குக் கிடைத்த அசாத்தியமான அதிர்ஷ்டங்கள் இதோ:

1. மரணத்திலிருந்து மீண்டது (1998)

ஒரு லாரி ஓட்டுநராக இருந்த பில் மோர்கன், ஒரு விபத்தில் சிக்கினார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது ஏற்பட்ட மருந்து ஒவ்வாமையால் (Allergic reaction) இதயத் துடிப்பு நின்றுவிட்டது. மருத்துவ ரீதியாக 14 நிமிடங்கள் அவர் இறந்ததாகக் கருதப்பட்டார். அதன் பிறகு கோமா நிலைக்குச் சென்ற அவரை, மருத்துவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை என்று கூறினர். ஆனால், 12 நாட்களுக்குப் பிறகு அவர் அதிசயத்தக்க வகையில் கண் விழித்தார்.

2. முதல் லாட்டரி வெற்றி

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்பிய அவர், ஒரு 'ஸ்க்ராட்ச் கார்டு' (Scratch card) லாட்டரி சீட்டை வாங்கினார். அதில் அவருக்கு சுமார் 17,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்பிலான கார் பரிசாகக் கிடைத்தது.

3. நேரலையில் அடித்த ஜாக்பாட்

அவரது இந்த 'மறுபிறவி' மற்றும் லாட்டரி வெற்றியைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிறுவனம், அதை ஒரு செய்தியாகப் பதிவு செய்ய அவரை அணுகியது. கேமராவிற்கு முன்னால் அவர் எப்படி லாட்டரி வென்றார் என்பதை மீண்டும் செய்து காட்டுவதற்காக (Re-enactment), ஒரு கடையிலிருந்து மீண்டும் ஒரு லாட்டரி சீட்டை வாங்கினார்.

அனைவரையும் திகைக்க வைக்கும் வகையில், அந்த நேரலையிலேயே அவர் சுரண்டிய அந்த இரண்டாவது சீட்டில் அவருக்கு 2,50,000 ஆஸ்திரேலிய டாலர் (சுமார் 1.4 கோடி ரூபாய் மதிப்பிற்கு மேல்) பரிசு விழுந்தது.

முக்கியமான தருணம்:

அந்த வீடியோவில் அவர் சீட்டைச் சுரண்டிவிட்டு, கேமராவைப் பார்த்து மிகவும் உணர்ச்சிகரமாக, "நான் இப்போதுதான் 2,50,000 டாலர்களை வென்றுள்ளேன், நான் விளையாடவில்லை!" என்று கூறுவது இன்றும் இணையத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு காட்சியாக உள்ளது.

ஒரே ஆண்டில் மரணத்தை வென்றது மற்றும் அடுத்தடுத்து இரண்டு முறை லாட்டரி வென்றது என பில் மோர்கன் உலகின் "மிகவும் அதிர்ஷ்டசாலி மனிதர்களில்" ஒருவராகக் கருதப்படுகிறார்.

  • 236
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். நண்பர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நிதானம் வேண்டும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையறிந்து செயல்படவும். எதிர்பாராத சில செய்திகள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

ரிஷபம்

புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமும் மகிழ்ச்சியான தருணங்களும் உருவாகும். வரவுகளில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். திறமையான பேச்சுக்கள் மூலம் காரிய சித்திகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மிதுனம்

பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். வரவுகளில் இருந்து வந்த இழுபறியான சூழல் குறையும். தனிப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். பேச்சுக்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஈர்ப்புகள் ஏற்படும். சிரமம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கடகம்

எதிர்கால சேமிப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்த குழப்பம் நீங்கும். வித்தியாசமான அனுபவங்கள் மூலம் சில புரிதல்கள் உண்டாகும். பணியில் மாற்றமான சூழல்கள் அமையும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வர்த்தக வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி

சிம்மம்

நினைத்த பணிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி

பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். எண்ணங்கள் போக்கில் மாற்றம் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். விளையாட்டு செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

துலாம்

உத்தியோக ரீதியான வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். துரிதமான செயல்பாடுகள் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சுக்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் அனுகூலம் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். சில பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

தனுசு

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். வெளியூர் பயணங்களில் இருந்த இடையூறுகள் விலகும். ஆடம்பரமான பேச்சுக்களை நம்பி புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மகரம்

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தை வழியில் இருந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். முதலாளி வகையில் ஒத்துழைப்புகள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் மதிப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்

உடன் இருப்பவர்கள் பற்றியும் உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் மேம்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். சமூக தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். பயம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மீனம்

பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். சமூக தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்க இயலும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். அலுவலகத்தில் மரியாதைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வருத்தம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

  • 283
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 7.4.2026

இன்று மாலை 03.05 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று அதிகாலை 02.21 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

இன்று மாலை 03.27 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.

இன்று அதிகாலை 02.26 வரை கௌலவம். பின்னர் மாலை 03.05 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=475&dpx=2&t=1775534653

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 283

Good Morning...

  • 277
·
Added article

சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய்குமார், கயல் ஆனந்தி நடிக்கும் படம், ‘அறிவு’. மோட்டிவ்ட்ரோன் புரொடக் ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, மூணாறு பகுதிகளில் நடைபெற்றது. அங்குள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு நடந்தபோது, அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாதது தெரியவந்தது.

தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார். அதன்படி, பள்ளி முழுவதும் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் அவர்கள் தினசரி கல்வி பெற தேவையான அடிப்படை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட்டன. இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்கிறார்.

  • 452
·
Added a post

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை. விருத்தாசலத்தில் தான் இருக்கிறது.

கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது.

தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.

இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரை பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு. திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.

கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.

நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிறந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.

தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்.

நூலகத்திற்கான தனி கட்டிடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும் கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார். இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.

பல்லடம் மாணிக்கம் அவர்கள், நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார். வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார். 24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.

தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார்.

பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்தத் தமிழ்நூல் காப்பகம் தான்.

  • 482
·
Added a post

அணையாத தீபம் - ஜுவாலாமுகி கோயில்!

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஜுவாலாமுகி அம்மன் கோயில், மற்ற கோயில்களைப் போல சில வழிபாட்டுத் தலம் அல்ல.

இங்கு சிலைகளுக்குப் பதிலாக "புனிதச் சுடர்களே" தெய்வமாக வணங்கப்படுகின்றன.

பல நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்த மர்மம் இன்றும் பக்தர்களையும் விஞ்ஞானிகளையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

எரிபொருள் இல்லாத சுடர்!

இந்தக் கோயிலின் கருவறையில் பாறைகளின் பிளவிலிருந்து ஒன்பது தீபச் சுடர்கள் (ஜுவாலாக்கள்) நீல நிறத்தில் எரிந்து கொண்டிருக்கின்றன. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தீபங்கள் எரிவதற்கு எந்தவிதமான எண்ணெய், நெய் அல்லது திரிகளோ பயன்படுத்தப்படுவதில்லை. பூமியின் ஆழத்திலிருந்து வரும் இந்தச் சுடர்கள் பல நூற்றாண்டுகளாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றன.

தோற்றுப்போன பேரரசர் அக்பர்!

இக்கோயிலின் மகிமையைக் கேள்விப்பட்ட முகலாயப் பேரரசர் அக்பர், இது வெறும் ஏமாற்று வேலை என்று கருதி அதை அணைக்க முயன்றார். கோயிலைச் சுற்றி கால்வாய் அமைத்து அதன் மேல் நீரை ஊற்றினார். ஆனால், அத்தனை நீராலும் அந்தச் சுடர்களை அணைக்க முடியவில்லை. இறுதியில், அந்த அற்புதத்தைக் கண்டு வியந்த அக்பர், அம்மனுக்குத் தங்கக் குடை ஒன்றை காணிக்கையாக வழங்கினார் என்பது வரலாறு.

எட்டாத ரகசியம் - அறிவியல் தோல்வி!

பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பல நிலத்தடி ஆய்வாளர்கள் இதற்குக் காரணம் நிலத்தடியில் இருக்கும் இயற்கை எரிவாயுவாக இருக்கலாம் என்று கூறி வந்தனர். ஆனால் பலமுறை தோண்டியும், ஆய்வு செய்தும் அத்தகைய எரிவாயு சேமிப்பு எங்குள்ளது என்பதைக் கண்டறிய முடியவில்லை.

இவ்வளவு சிறிய பிளவிலிருந்து பல நூறு ஆண்டுகள் அணையாமல் எரியும் அளவுக்கு எரிவாயு வர வாய்ப்பே இல்லை என்பதே உண்மை.

ஒன்பது சுடர்களின் தத்துவம்!

இங்கு எரியும் ஒன்பது சுடர்களும் மஹாசக்தி, மஹாவிஷ்ணு, கணபதி உள்ளிட்ட ஒன்பது தெய்வங்களின் அம்சமாக கருதப்படுகின்றன. இதில் பிரதான சுடர் 'மஹாசக்தி' என்று அழைக்கப்படுகிறது.

பூமிக்குக் கீழே இருந்து வெளிப்படும் இந்த தெய்வீக நெருப்பு, இயற்கையின் மர்மமா அல்லது இறையருளா? விடை தெரியாத இந்த அற்புதத்தை ஞானத்தால் மட்டுமே உணர முடியும்.

  • 456
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்கள் மூலம் மனதளவில் புதிய மாற்றங்கள் உருவாகும். தற்பெருமை இன்றி அனைவரையும் அனுசரித்து செல்லவும். செல்லப்பிராணிகள் வழியில் விரயங்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

ரிஷபம்

சுபகாரிய பேச்சுக்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். அதிகாரிகள் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிதுனம்

வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்விகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு மேலான பொறுப்புகள் கிடைக்கும். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்

வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வியாபாரப் பணிகளில் வெளியூர் தொடர்புகள் மூலம் நன்மைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : கருசிவப்பு

கன்னி

பேச்சு வன்மையினால் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பாகப்பிரிவினை குறித்த சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

துலாம்

விவாதங்கள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் முன்னேற்றம் காணப்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். வியாபார பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் நிலையில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளவும். தேவைக்கேற்ப வரவுகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

தனுசு

நினைத்த சில பணிகளை முடிப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். திடீர் பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். வித்தியாசமான மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். தம்பதியர்களுக்குள் நெருக்கம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமான விஷயங்களுக்கு முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தம் தோன்றி மறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். இழுபறியான சில விஷயங்கள் முடியும். ஆராய்ச்சி பிரிவில் முன்னேற்றம் ஏற்படும். ஆக்கபூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 526
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 23 ஆம் தேதி திங்கட்கிழமை 6.4.2026.

இன்று பிற்பகல் 01.48 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று முழுவதும் அனுஷம்.

இன்று பிற்பகல் 02.55 வரை வஜ்ரம். பின்னர் வியதீபாதம்.

இன்று அதிகாலை 12.50 வரை பவம். பின்னர் பிற்பகல் 01.48 வரை பாலவம். பிறகு கௌலவம். இன்று காலை 06.08 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=474&dpx=2&t=1775453495

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 525
·
Added a post

விபத்தில் அப்பா, அம்மா இருவரையும் இழந்த எனக்கு, அக்கா தாயாகவும், மாமா நிழலாகவும் மாறினார்கள் . ஆனால் நான் வளர வளர மாமாவின் நிழல் எனக்குச் சுட்டெரிக்கத் தொடங்கியது. "சும்மா ஊர் சுத்துறதுக்கு பதிலா ஏதாவது வேலைக்கு போடா, அக்கா கஷ்டப்படுறது கண்ணுக்குத் தெரியலையா?" என்று மாமா ஊர் முன்னிலையில் என்னைக் கேலி செய்வா.

ஒருநாள் சோறு தொண்டையில் இறங்காமல் அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறினேன். "நிச்சயம் ஒருநாள் பெரிய ஆளாகி, இந்த மனுஷன் முன்னாடி கார்ல வந்து நிப்பேன்" என்று சபதம் எடுத்தேன். என் உழைப்பு வீண் போகவில்லை. நான்கு ஆண்டுகளில் ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் கைநிறையச் சம்பளத்தில் வேலை கிடைத்தது .

புது கார் வாங்கினேன். கெத்தாக வீட்டு வாசலில் வந்து நின்றேன். மாமா அங்கே திண்ணையில் அமர்ந்திருந்தார். அவரைத் திரும்பி கூட பார்க்காமல் அக்காவிடம் சென்றேன். "அக்கா, இதோ என் சம்பளம். இனி நம்ம வேற வீட்டுக்கு போயிடலாம். யாரோட வசையும் இனி நமக்குத் தேவையில்லை" என்று மாமாவைப் பார்த்துக் கத்திக் கூறினேன் .

மாமா மெலிதாக புன்னகைத்துவிட்டு, ஒரு பழைய காகிதத்தை என்னிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். "இத்தனை நாள் அசிங்கப்படுத்தினது பத்தாதுன்னு இப்போ என்ன கொடுக்கிறாரு?" என்ற கோபத்துடன் அதைத் திறந்தேன் .

அது ஒரு வங்கிக் கணக்குப் புத்தகம் (Bank Passbook). அதில் கடந்த 15 ஆண்டுகளாக மாமா உழைத்த ஒவ்வொரு ரூபாயும் என் பெயரில் சேமிக்கப்பட்டிருந்தது. கடைசிப் பக்கத்தில் ஒரு கடிதம் இருந்தது: "தம்பி, நீ அப்பா இல்லாதவன் என்ற உணர்வு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே உன்னைச் செல்லமாக வளர்த்தேன். ஆனால் நீ ஊதாரித்தனமாகச் சுற்றியபோது எனக்குப் பயம் வந்தது. நான் ஒரு டிரைவர், நாளைக்கே ஏதாவது விபத்தில் நான் செத்துப்போனால் உன்னை யார் காப்பாற்றுவார்? அதனால்தான் உனக்கு வைராக்கியம் வர வேண்டும் என்று உன்னைக் காயப்படுத்தினேன். என் மேலிருந்த கோபம்தான் உன்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. நீ பெரிய ஆளாகிவிட்டாய், இனி நான் நிம்மதியாகச் சாவேன்."

படித்து முடித்ததும் என் கால்கள் நடுங்கின. ஓடிப்போய் மாமாவின் கால்களைக் கட்டிக்கொண்டு கதறினேன். "மாமா, என்னை மன்னிச்சிடுங்க மாமா. உங்களை நான் 'அந்த ஆளு'ன்னு தப்பா பேசிட்டேன்" என்று அழுதேன்.

அவர் என் தலையை வருடி, "பரவாயில்லைடா தம்பி, ஒரு அப்பாவா தோற்று, ஒரு மாமாவா ஜெயிச்சுட்டேன்" என்றார். ரத்த பந்தத்தையும் தாண்டி, ஒரு மாமாவின் கண்டிப்புக்குள் ஒளிந்திருந்த அந்தப் பேரன்பு புரிந்தபோது, அன்றுதான் நான் உண்மையான மனிதனாக மாறினேன் .

அன்பு என்பது எப்போதும் கொஞ்சுவதில் மட்டும் இல்லை, சில நேரங்களில் கண்டிப்பு எனும் போர்வையில் நம்மை செதுக்குவதிலும் இருக்கிறது என்பதை அன்று எனக்கு சொல்லிக் கொடுத்தது,

  • 528

இந்தியாவில் - ராகவ் சத்தா “ரைட் டு ரிகால்” என்ற மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன் பொருள், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ., அல்லது கவுன்சிலர்கள் தங்கள் வேலை சரியாக செய்யவில்லை என்றால், மக்களுக்கு அவர்களை பதவிக்காலம் முடிவதற்கு முன்பே நீக்கும் உரிமை கிடைக்கும்.

இந்த யோசனை, மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

  • 522

Good Morning...

  • 521

நீங்கள் செய்யும் தர்மம்

ஒரு போதும்

உங்கள்

செல்வத்தைக் குறைக்காது.

  • 522
  • 624
·
Added a post

கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த ஆசையும் கிடையாது. ஜொலிக்கும் விழிகளும் வெண்ணிறத் தாடியும் ஜடாமுடியுமாய் நாளுக்குநாள் அவரது வசீகரம் கூடியது. மந்தபாலர் தம் தவ வாழ்வில் நிறைவுகண்டு, தாமே விரும்பி சொர்க்கம் புக முடிவு செய்தார். அக்கினியை வளர்த்த மந்தபாலர், தன் இறுதி வேண்டுகோளைச் சமர்ப்பித்தார்: ‘‘ஏ அக்கினியே! எத்தனையோ முறை வேள்வித் தீ வளர்த்து, சமித்துக்களை ஆகுதியாகப் பெய்து உன்னை ஆராதித்திருக்கிறேன். இன்று நான் உன்னை வளர்ப்பது என்னையே ஆகுதியாக நீ ஏற்பதன் பொருட்டே. மனத்தாலும் முழு பிரம்மச்சாரியாக வாழ்ந்த என்னை ஏற்று என் ஆன்மாவை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!’’

இவ்விதம் முழங்கிய அவர், நெருப்பில் சடாரெனக் குதித்தார். சக முனிவர்கள் சடசடவென அவர் உடல் எரிவதைப் பார்த்துக் கைகூப்பி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அவரது ஆன்மா நட்சத்திரம் போல் ஒளி வீசியவாறு விண்ணில் பறந்தது. சொர்க்கத்திற்குச் சென்ற மந்தபாலர், சொர்க்க வாசல்முன் நின்றார். ஆனால் சொர்க்கத்தின் கதவுகள் அவருக்குத் திறக்கவில்லை. தடதடவென அதன் தங்கக் கதவுகளைத் தட்டினார். கதவைத் திறந்துகொண்டு உள்ளிருந்து வந்தான் ஒரு தேவன். ‘‘யார் நீங்கள்? என்ன வேண்டும்?’’ என்று அதட்டினான்.

‘‘நான் மகரிஷி மந்தபாலன். சொர்க்கம் புக வந்திருக்கிறேன், கதவைத் திறவுங்கள்’’ என்றார் முனிவர்.

தேவன் கடகடவென்று சிரித்தான். ‘‘மந்தபாலரே! சொர்க்கத்தின் கதவுகள் தட்டித் திறக்கப்படுவதல்ல; தானாய்த் திறந்தால்தான் உண்டு. நீங்கள் சொர்க்கம் புகத் தகுதியானவர் என்றால் இந்தக் கதவுகள் உங்களுக்காகத் திறந்து உங்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும். அப்படித் திறவாததால் உங்களுக்கு சொர்க்கம் புகத் தகுதி இல்லை என்றே பொருள்!’’

மந்தபாலர் வியப்படைந்தார். தவ சிரேஷ்டரான தனக்கு சொர்க்கம் புக அனுமதி கிடையாதா? தம் தவ வலிமையின் அர்த்தம்தான் என்ன? ‘‘தேவனே! தவத்தை அன்றி வேறெதையும் நான் செய்ததில்லை. ஏன் எனக்கு சொர்க்கம் மறுக்கப்படுகிறது?’’

தேவன் நகைத்தபடிச் சொல்லலானான்: ‘‘மந்தபாலரே! ஒவ்வோர் உயிரும் பூமிக்கு அனுப்பப்படும்போது படைப்பாற்றலுடன்தான் அனுப்பப்படுகிறது. பூமி தொடர்ந்து இயங்க வேண்டும் இல்லையா? படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வோர் உயிரின் அடிப்படைக் கடமை. இயற்கையிலேயே ஒருவருக்கு மக்கட் செல்வம் கிட்டவில்லை என்றால் அது ஒப்புக் கொள்ளக் கூடியதே. ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒருவர் பிரம்மச்சரிய விரதம் பூண்டால் அதுவும் கூட ஏற்கக் கூடியதே.

ஆனால் எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் சொர்க்கம் புகத் தவம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பிரம்மச்சரிய விரதம் பூணுபவர்களை சொர்க்கம் விரும்புவதில்லை. படைப்பாற்றல் சக்தி அளிக்கப்பட்டும் தர்மநெறிப்படி வாழ்ந்து ஆனால் ஓர் உயிரைக் கூடப் படைக்காமல் சொர்க்கம் புக எண்ணுவது சரியல்ல. உங்களுக்கு இயற்கை வழங்கிய படைப்பாற்றலுக்கு நீங்கள் நியாயம் செய்யவில்லையே! உங்கள் வாரிசு என பூமியில் யாரையாவது காட்டுங்கள். உங்களுக்காக சொர்க்கத்தின் கதவுகள் இப்போதே திறக்கும்.’’

மந்தபாலர் திகைத்தார். இப்படியொரு கோணத்தில் தாம் எண்ணிப் பார்க்கவே இல்லையே என வருந்தினார். தம் தவ ஆற்றலால் தாம் மறுபிறவி எடுத்து தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்தால் அதன் பின் சொர்க்கக் கதவுகள் தமக்குத் திறக்குமல்லவா என்று யோசித்தார். தேவன், ‘‘ஒரு பிறவியின் தவ ஆற்றல் மறுபிறவிக்கும் தொடரும், மறுபிறவியில் அவர் தவம் ஏதும் நிகழ்த்த வேண்டாம், தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்து தம் இனத்தைப் பெருக்க உதவினால் அது போதும்’’ என்று விளக்கம் தந்தான்.

மந்தபாலர் தன்னை விரைவில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு சாரங்கப் பறவையாக உருமாறும்படி மனத்தில் சங்கல்பம் செய்துகொண்டார். அப்போதுதானே சீக்கிரத்தில் சொர்க்கம் வர முடியும்?

மறுகணம் மாபெரும் காண்டவ வனத்தில் ஒரு மரக்கிளையில் அந்த அழகிய சாரங்கப் பறவை போய் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது. இயற்கையின் நியதிப்படி, அது மறுபிறவி எடுத்த கணத்திலேயே அதன் முற்பிறவி நினைவுகள் மறைந்தன. அதே மரத்தின் கிளையில் சிறகுகளைத் தன் கூரிய அலகால் கோதிக் கொண்டு ஜரிதா என்ற ஒரு சாரங்கி அமர்ந்திருந்தது. அது, தான் அமர்ந்த மரத்தின் இன்னொரு கிளையில் உட்கார்ந்த சாரங்கத்தை வியப்போடு பார்த்தது. ஜரிதாவின் எழிலும் கனிவான பார்வையும் மந்தபால சாரங்கத்தைக் கிறக்கம் கொள்ள வைத்தன. அந்தப் பெண் பறவையிடம் மந்தபால சாரங்கத்திற்குத் தீராக் காதல் தோன்றியது.

மெல்ல மெல்ல அவற்றினிடையே காதல் வளர்ந்தது. அவை இல்லற வாழ்வை மேற்கொண்டு ஒரே கூட்டில் இணைபிரியாமல் வசிக்கலாயின. ஜரிதா நான்கு முட்டைகளை இட்டது. அவற்றை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதற்குள் அந்த இனிய இல்லற வாழ்வில் ஒரு விபரீதம்! லபிதா என்ற இன்னொரு சாரங்கி மந்தபால சாரங்கனை வட்டமிட்டது. அதனுடைய ஆண்மை நிறைந்த பேரழகு லபிதாவை மயக்கிக் கொள்ளை கொண்டது. லபிதா பறந்து சென்று அதன் அருகே அமர்ந்து எதையோ தேடுவதுபோல் பாவனை செய்தது.

‘‘யார் நீ? என்ன தேடுகிறாய்?’’ விசாரித்தது மந்தபாலம்.

‘‘உங்கள் அலகின் வளைவிலும் சிறகுகளின் அடர்த்தியிலும் என்னையறியாமல் என் உள்ளத்தைத் தொலைத்துவிட்டேன். அது இங்கே எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா என்று தேடுகிறேன்!’’

லபிதாவின் மயக்கும் கவிதை மொழி மந்தபாலத்தைக் காந்தம் போல் இழுத்தது. தன்னை வட்டமிட்ட லபிதாவின் அழகில் லயித்த மந்தபாலம் தேடிவந்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை. ஏற்கெனவே மணமாகி ஒரு மனைவியும் தனக்கு உண்டு என்பதையோ மனைவி இப்போது நான்கு முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறது என்பதையோ நான்கு ஆண் குஞ்சுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்பதையோ மந்தபாலம் எண்ணிப் பார்க்கவில்லை. காமம் அதன் கண்ணை மறைத்தது.

மனைவி ஜரிதாவிடம் ஏதொன்றும் கூறாமல் ஒருநாள் லபிதாவோடு இணைந்து, விண்ணில் பறந்து, தனியே இல்வாழ்வைத் தொடங்கின.

‘‘அப்பா எங்கே?’’ என்று கேட்டன அப்போது தான் உருப்பெறத் தொடங்கியிருந்த நான்கு ஆண் குஞ்சுகள்.

‘‘உங்கள் அப்பா மனிதர்களைப் பார்த்துக் கெட்ட பழக்கத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டு விட்டார். போகட்டும், நம்மை மறந்தவர்களை நாம் நினைப்பது நம் சுயமரியாதைக்கு அழகல்ல. உங்கள் நால்வருக்கும் நானே இனித் தாயாகவும் தந்தையாகவும் இருப்பேன். வெளியே சென்று உங்களுக்குத் தேவையான உணவை நானே சம்பாதித்து வருவேன். நான் உணவு பெறுவதற்காகக் கூட்டை விட்டு வெளியே செல்லும்போது மட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!’’ என்றது, ஜரிதா.

ஆண் குஞ்சுகள் மனம் தேறி தாய்ப்பறவை சொன்னதை ஏற்றுக் கொண்டன.

ஒருநாள் திடீரெனக் காண்டவ வனத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இரண்டாம் மனைவி லபிதாவுடன் சுற்றிக் கொண்டிருந்த மந்தபாலம், நெருப்பைப் பார்த்துத் திகைத்தது. சரிவரச் சிறகு கூட முளைக்காத தன் நான்கு ஆண் குஞ்சுகளும் என்ன பாடுபடுமோ என்று அதன் தந்தை மனத்தில் கவலை எழுந்தது. ‘‘ஏ அக்கினியே! என் நான்கு மகன்களையும் நீ எரிக்காமல் காப்பாற்றுவாயாக!’’ என்று அது மனமாரப் பிரார்த்தனை செய்தது. அதன்முன் அக்கினி பகவான் தோன்றி, ‘‘மந்தபாலமே! உன் முற்பிறப்பில் உன் உடலையே எனக்கு ஆகுதியாக்கினாய். அந்த உன் தியாகத்தை மெச்சி உன் இப்பிறப்பில் உனது ஆண் குஞ்சுகளை நான் ஒன்றும் செய்யமாட்டேன்’’ என வாக்குக் கொடுத்து மறைந்தார்.

இதைக் கண்ட இரண்டாம் மனைவி லபிதா, ‘‘இன்னும் உனக்கு ஜரிதாவிடம் காதல் இருக்கிறது’’ என்று ஊடல்கொண்டு இன்னொரு மரக்கிளையில் தனியே போய் உட்கார்ந்து கொண்டது.

அக்கினியின் வாக்குறுதி பற்றி ஏதும் அறியாத தாய்ப்பறவை ஜரிதாவைக் கலக்கம் கவ்வியது. அக்கினியிடமிருந்து இறகு சரிவர முளைக்காத பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றுவது?

குஞ்சுகள் பயத்தில் நடுநடுங்கின. ‘‘அம்மா! நீங்கள் தப்பித்துப் போங்கள். எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் இருந்தால் வம்சம் விருத்தியாக வாய்ப்புண்டு. நாங்கள் நெருப்பிலேயே மடிந்தாலும் பரவாயில்லை!’’ என்றன.

தாய்ப்பறவை ஜரிதா வேறு வழி தெரியாமல் அழுதுகொண்டே விண்ணில் சுற்றிக் கொண்டிருந்தது.

மூத்த ஆண் குஞ்சான ஜரிதாரி, ‘‘வரப்போகும் கஷ்டத்தை முன்கூட்டியே உணர்ந்து கடவுளைப் பிரார்த்திப்பவனே புத்திசாலி. அவன் கடவுள் அருளால் கஷ்டத்தைக் கடந்துவிடுவான்!” என்றது. சாரி, ஸ்தம்பமித்திரன், துரோணன் ஆகிய பிற மூன்று குஞ்சுகளும் அதை ஆமோதித்தன. அண்ணனுடன் சேர்ந்து பிரார்த்திக்கத் தொடங்கின. ‘‘அக்கினி பகவானே! நீயே சூரியன். நீயே மழை தருபவன். உன்னாலேயே உயிர்கள் உண்ட உணவு ஜீரணமாகிறது. நாங்கள் இளம் குழந்தைகள். எங்களிடம் இரக்கம் காட்டு. எங்களை அழிக்காதே!’’

இளம் குழந்தைகளின் மழலைப் பிரார்த்தனை அக்கினி பகவானைக் குளிரச் செய்தது. ‘‘உங்கள் தந்தைக்கு வரம் கொடுத்திருக்கிறேன். உங்களை அழிக்கமாட்டேன். உங்களுக்கென்று என்ன வரம் வேண்டும்?’’ என்று வெகு பிரியமாகக் கேட்டார்.

‘‘எங்கள் தந்தையை எங்களிடமிருந்து பிரித்த லபிதாவை நாங்கள் வெறுக்கிறோம். எங்கள் தந்தை எங்களுக்கு வேண்டும்!’’ என்றன அவை.

அக்கினி பகவான் சிரித்துக் கொண்டே ‘‘அப்படியே நடக்கும்’’ என்று சொல்லி படபடத்துப் பாய்ந்தார். அதோடு, தனியே மரக்கிளையில் அமர்ந்திருந்த லபிதாவைப் போகிற போக்கில் அள்ளி விழுங்கிச் சென்றுவிட்டார்!

தாய்ப்பறவை ஜரிதா அக்கினி அடங்கியதும் பாய்ந்தோடி வந்தது. சேதமில்லாமல் தன் குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் அவற்றை அரவணைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் அரற்றியது.

அப்போது மந்தபாலமும் அங்கே வந்துசேர்ந்தது. மனைவி, பிள்ளைகளைக் கண்டு அழுதது. ஜரிதா கணவனை வெறுப்புடன் நோக்க, பிள்ளைகளோ பாசத்தோடு தங்கள் தந்தையிடம் சென்று அமர்ந்தன.

‘‘இந்தப் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் தான் அக்கினி பகவானிடம் வரம் கேட்டேன். அத்தோடு அந்த சாகசக்காரி லபிதாவை இப்போது முற்றிலுமாகத் தலைமுழுகி விட்டேன்! என்னை மன்னிக்கக் கூடாதா?’’ என்று உருகியது மந்தபாலம்.

சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது ஜரிதா. குழந்தைகளுக்குத் தந்தை முக்கியமல்லவா; திருந்தி மன்னிப்புக் கேட்பவரை ஏற்பதுதான் தர்மமல்லவா என்று சிந்தித்தது. மெல்லப் பறந்துபோய்த் தன் கணவன் அருகில் அது அமர்ந்தபோது குழந்தைகள் அப்போதுதான் முளைக்கத் தொடங்கிய தங்கள் சின்னஞ்சிறு சிறகுகளை அசைத்து ஆர்ப்பரித்தன. ஜரிதாவின் முகத்தில் வெட்கம் படர்ந்த அழகை ரசித்தது மந்தபாலம்.

மேலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்த அக்கினி பகவான் சிரித்துக் கொண்டார். முதல் மனைவியின் வாழ்வைக் கெடுக்கும் இரண்டாம் மனைவியை வாழ்க்கை நெருப்பு எரிக்கக் கடவது என்று அவர் விதி வகுத்தார்.

காலப்போக்கில் மந்தபாலம் மூப்படைந்து தளர்ந்து உயிர் விட்டபோது அதன் ஆன்மா சொர்க்கம் நோக்கிச் சென்றது. என்ன ஆச்சரியம்! மந்தபால ஆன்மாவை வரவேற்க சொர்க்கத்தின் கதவுகள் தயாராய்த் திறந்திருந்தன. இரு தேவிகள் அந்த ஆன்மாவை வரவேற்கப் பூரண கும்பத்தோடு காத்திருந்தார்கள். இயல்பிலேயே வழங்கப்பட்ட படைப்பாற்றலுக்கு நியாயம் செய்த மந்தபால ஆன்மா அப்படித்தான் சொர்க்கத்தைச் சென்றடைந்தது.

(கிளையில் அமர்ந்து குடும்பம் நடத்திய சாரங்கப் பறவை பற்றிய இக்கதை, மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக்கதை!)

  • 638

இது உண்மைதானேநண்பர்களே....

  • 628
  • 626
  • 628

உங்கள் காலடி படும் இடங்கள் யாவிலும் பூக்கள் பூக்க வாழ்ந்திடுங்கள்.

வேறேதும் வேண்டுதல் வேண்டாம்.

வேண்டியன வந்துசேரும்.

நல்வாழ்த்துகள்.

  • 628