- · 1 friends
-
2 followers
நல்ல திறமை
நல்ல திறமை இருக்கு, ஆனா சரியான இடம் கிடைக்கல
நடிகை ராய் லட்சுமி, 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அழகும், திரை முன்னிலையில் கொண்டுவரும் நம்பிக்கையும் காரணமாக கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த 'தாம் தூம்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ராவி மோகன் நடித்த இந்த படத்தின் மூலம் ராய் லட்சுமிக்கு தமிழ் ரசிகர்களிடையே தனி அடையாளம் கிடைத்தது.
தமிழ் சினிமாவைத் தொடர்ந்து ராய் லட்சுமி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, காஞ்சனா திரைப்படத்தில் கருப்பு பேரழகா பாடல் மற்றும் கவர்ச்சியான ஆட்டத்தின் மூலம் இளம் ரசிகர்களை வளைத்தப்போட்டார். பின் ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்பு பெற்ற ராய் லட்சுமி, Julie 2 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்த நடிகைகளில் ஒருவராக ராய் லட்சுமி இருந்தார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை.
பட வாய்ப்புகள் குறைந்ததால், சமூக வலைதளங்களில் ராய் லட்சுமி தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் இவர், தனது ஃபோட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது, பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள ராய் லட்சுமி, அங்கு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் சட்டை பட்டனை கழட்டிவிட்டு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கமெண்ட்களை குவித்து வருகிறது.
1.இல்லங்களில் பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.
அதன் இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பதாகும்.
அதாவது ஐவகை பத்திரங்களை(இலைகள்) நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.
துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள்.
இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'.
இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.
இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை.
இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம்,
திருமாலுக்கு உகந்தது துளசி,
அம்மனுக்கு வேப்பிலை,
விநாயகருக்கு அருகம் புல்,
பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.
2. பூசையில் அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில்
விளக்கம்
•பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம்
பயன்பாடு
பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் இருக்கும் நீரில் ஒன்றைத்தான் நமக்குத் தருகிறார்கள்.
அதென்ன பஞ்ச பாத்திரங்கள்?
அர்க்கயம் - கைகளுக்கு, பாத்யம் - பாதங்களுக்கு, ஆசமனீயம் - இது ஆசமனம், ஸ்நானீயம் - திருமேனிக்கு, சர்வார்த்த தோயம் - மற்ற அனைத்துக்கும். இவை தான் பஞ்ச பாத்திரங்கள்!
இவை இல்லாமல் தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரம், தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்து தான் இந்த பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்!
நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம், சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து. அது தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்!
மற்ற அனைத்தின் நீரும் இந்த ஐந்தாவதில் இருந்து தான் போயும், வரவும் செய்யும்!
தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:
பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர் இவற்றுடன் சிறிது மஞ்சள்.
3.பஞ்சமுகம்...... இங்கு பஞ்சமுகம் என்பதற்கு அர்த்தமே வேறு.
வியாகரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள்.
முகம் மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்று பெயர்.
அதேபோல் பூஜைக்கு உபயோகிக்கும் பஞ்ச பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும் உடல் சிறுத்தும் இருப்பதனால் அதனை பஞ்சபாத்திரம் என்று குறிப்பிடுகிறார்.
நடிகர் மாதவன் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு குறித்து ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னணி நடிகர், நடிகைகளின் பெயரில் சமூக வலைதளங்களில் போலியான கணக்குத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. இப்போது நடிகர் மாதவன் பெயரில் மோசடி கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரோஹன்மைரா 2 (rohanmyra2)’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு தனது பெயரையும், தனது குழுவின் பெயரையும் பயன்படுத்தி பொதுமக்களிடம் பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த நபருக்கும் எனக்கும் அல்லது எனது குழுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது முற்றிலும் ஒரு மோசடி கணக்கு. எனது சார்பாகப் பேச வேறு எந்தக் கணக்குக்கும் அனுமதி இல்லை” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அந்த நபர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவின் நயாகரா பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நயாகரா காவல்துறை புதன்கிழமை அறிவித்துள்ளது.
2026 பெப்ரவரி மாதம், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் பிராந்தியம் முழுவதும் பயணித்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதை அவதானித்த நயாகரா குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.
மார்ச் 10 அன்று மதியம் 3 மணியளவில், வாகனத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரைத் அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், சுமார் $78,000 (கனடிய டாலர்) மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
160 கிராம் ஃபெண்டானில், 280 கிராம் மெத்தாம்பேட்டமைன், 137 கிராம் கொக்கைன், ஆக்ஸிகோடோன் மாத்திரைகள் மற்றும் 8,000 டொலர் ரொக்கப் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
தோரோல்டைச் சேர்ந்த பெலாலுதீன் ஷஹாபுதீன் (27), ஜனெல்லே மெக்லியோட் (27), நயாகரா ஃபால்ஸைச் சேர்ந்த கை செஷயர் (25), செயின்ட் கேத்தரின்ஸைச் சேர்ந்த ட்ரெவர் அவேரி (58) மற்றும் டெர்ரி கிரே (54) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஷஹாபுதீன் மற்றும் செஷயர் ஆகியோர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற மூவரும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு பணக்கார தந்தை தன் மகனுக்கு ஏழ்மையை விளக்க அருகில் உள்ள கிராமத்திற்கு அழைத்து சென்றார் !!
ஒரு வாரம் அங்கே தங்கி இருந்த பின் வீடு திரும்பினார்கள் !!
வீடு வந்ததும் தந்தை !! மகனை பார்த்து !!
மகனே ! அந்த கிராமத்தில் நீ !! என்ன பார்த்து தெரிந்து கொண்டாய் !! என்று கேட்க !!
அதற்க்கு அவன் !!
அப்பா !! நாம் கோட்டை போன்று வீடு கட்டி நான்கு மதில் சுவற்றுக்குள் அடை பட்டு சிறை வாழ்க்கை வாழ்கிறோம் !!
நாலுக்கு நாள் கூரை வீட்டில் வாழ்ந்தாலும் சுதந்திரமாக அவர்கள் வாழ்கிறார்கள் !
மின் விசிறி , ஏசி என்று இருந்தாலும் உஷ்ணத்தில் நாம் வாழ்கிறோம் !!
இயற்கையான காற்றில் அவர்கள் வாழுகிறார்கள் !
சூப்பர் மார்க்கெட் சென்று என்றோ பறித்த காயை விலை கொடுத்து நாம் வாங்கு கிறோம் !!
அவர்களோ அவர்களுக்கு தேவையானவற்றை ! விளைவித்து சாப்பிடுகிறார்கள் !!
மூன்று வேலை வயிறார உண்டு !! உடல் இளைக்க காலாற நடந்தும் நோயுடன் நாம் வாழ்க்கை நடத்துகிறோம் !!
கால் தேய தினம் உழைத்து அரைவயிறு கஞ்சி குடித்து ஆரோக்கியமாக அவர்கள் வாழ்கிறார்கள் !!
இதுமாதிரி அவர்கள் நிறைய விஷயங்களில் மிகவும் செல்வந்தர்களாக இருக்க்கிறார்கள் !
இப்பொழுது தான் புரிந்தது புரிந்தது நாம் ஏன் இவ்வளவு ஏழையாக இருக்கிறோம் என்று !
இதை கேட்ட அப்பா வாயடைத்து போனார் !
ஈரான் குழந்தைகளைக் கொல்லும் இந்த குற்றவாளி (நெதன்யாகு) உயிரோடு இருந்தால், எங்களது முழு பலத்தையும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்வோம் என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
மார்ச் 12ஆம் திகதி வெளியான வீடியோ ஒன்றில், நெதன்யாகுவின் ஒரு கையில் ஆறு விரல்கள் இருப்பது போலத் தெரிவதைச் சுட்டிக்காட்டியுள்ள பல இணையதளப் பயனர்கள், அது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
அந்த வீடியோவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கிய பிறகு தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார்.
அதில் ஈரானின் புதிய உயர் தலைவர் மோஜ்தாபா கொமெய்னியை கொல்லப்போவதாக மறைமுகமாக அச்சுறுத்தியதுடன், இஸ்ரேலிய இராணுவத்தின் நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தினார்.
இதனிடையே அமெரிக்க அரசியல் வர்ணனையாளர் கேண்டஸ் ஓவன்ஸ் உட்பட பலரும், ‘பிபி எங்கே?’ (நெதன்யாகுவின் செல்லப்பெயர்) எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையே, பெஞ்சமின் நெதன்யாகு இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை அவரது அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், அவர் நலமாக உள்ளார் என்றும் தெரிவித்துள்ள அதேவேளை நேதன்யாகு காப்பி அருந்தும் புகைபடமும் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்த அல்லது காயமடைந்தார் என்ற பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஈரானிய அரச ஊடகம் வெளியிட்ட நிலையில் அவர் கையில் ஒரு கோப்பை கோப்பியுடன் தனது உதவியாளர் ஒருவருடன் உரையாடும் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
மூன்றாவது வாரமாகவும் தொடரும் இஸ்ரேல் - ஈரான் போரால் உலக நாடுகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் போரில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காயமடைந்த்தாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் தனது உதவியாளரொருவருடன் உரையாடும் காணொளியை ஈரான் வெளியிட்டுள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். வர்த்தக சிந்தனைகள் புதுவிதமான உத்திகள் மூலம் லாபங்களைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். பொன் பொருள் சேர்க்கைக்கான சூழல் ஏற்படும். தானியம் மற்றும் ஆபரண தொடர்பான பணிகளில் லாபங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
சிந்தனையில் போக்கில் புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிக செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் லாபங்கள் மேம்படும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் பணிகளிலிருந்து வந்த பொறுப்புகள் குறையும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
பணிகளில் பொறுப்புகளும் அலைச்சலும் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மற்றவர்கள் பற்றி கருத்துக்களை கூறும்போது சிந்தித்து செயல்படவும். நண்பர்களிடத்தில் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். வியாபார செயல்களில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். வாகனப் பயணங்களின்போது நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
கணவன் மனைவியிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு மறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலை காணப்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துகளால் நன்மைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பாசி
சிம்மம்
மற்றவர்களிடம் எதிர்பார்த்து இருந்த உதவிகள் சாதகமாக கிடைக்கும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சாதகமாகும். பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் அமையும். நெருக்கமானவர்கள் இடத்தில் கோபம் இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கன்னி
உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். எதிலும் தனித்து செயல்படுவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
துலாம்
குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனை போக்கில் சில மாற்றங்கள் காணப்படும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு கல்வியில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விருச்சிகம்
பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கடினமான செயல்களை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
தனுசு
புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் நன்மைகள் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். குடும்ப நபர்களிடம் மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மகரம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தடைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வர்த்தக செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். கருத்துக்களை கூறும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
பிள்ளைகளால் மன வருத்தம் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். குலதெய்வ தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் புனித யாத்திரை பயணங்கள் கைகூடும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன வரவுகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மீனம்
குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். இலக்கிய துறைகளில் தனிப்பட்ட கவனம் ஏற்படும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை 16.3.2026.
இன்று காலை 08.56 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.
இன்று அதிகாலை 05.13 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.
இன்று காலை 08.53 வரை சிவம். பின்னர் சித்தம்.
இன்று காலை 08.56 வரை தைத்தூலம். பின்னர் இரவு 08.56 வரை கரசை. பின்பு வனிசை.
இன்று அதிகாலை 5.13 வரை அமிர்த யோகம். பின்னர் காலை 6.20 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30.30 முதல் 07.30 மணி வரை
பகல் : 01.30.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலமாக அறிமுகமாகி, தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் விக்ரம் பிரபு. அதன் பிறகு அவரது ஒவ்வொரு படங்களும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான சிறை என்ற படம் தனி ஒரு அடையாளத்தை கொடுத்தது. சிவாஜி கணேசனின் பேரன், பிரபுவின் மகன் என்கிற அடையாளங்கள் இருந்தாலும், திரையுலகப் போராட்டத்தில் தான் சந்தித்த தனிமை குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.
விக்ரம் பிரபு நடிப்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில்,அறிமுக நடிகர் LK அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் சிறை.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் வாரி குவித்து வருகிறது. வணிக ரீதியாக வசூலை வாரி கொடுக்கிறது.
பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற “சிறை” திரைப்பட 75வது நாள் வெற்றிவிழா நடைபெற்றது. விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் சிறந்த கதைக்காக தேடிக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த நடிகர். அனைத்து படங்களிலும் அவருக்கென ஒரு தனி சிறப்புடன் நடித்திருப்பார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் மற்றும் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. என்று இரண்டு நடிகர்களின் வாரிசு தான் விக்ரம் பிரபு. தலைமுறை தலைமுறையாக தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர்.
2012-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த 'கும்கி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவரது அழகும் உயரமும் சரியான பாடி கட்டும் இவருக்கு பல வாய்ப்புகளை தேடி கொடுத்து வருகிறது. குறிப்பாக இவர் போலிஸ் கதாபாத்திரத்திற்கு மிகவும் அச்சடித்தால் போல் இருப்பார்.இவர் பெரும்பாலும் எதார்த்தமான மற்றும் ஆக்ஷன் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, கபாலி வெள்ளை யானை மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்,இறுகப்பற்று போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார் பல படங்கள் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பல படங்கள் வெற்றி அடைந்துள்ளது.
டாணாக்காரன் படத்தில் இவரது நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். ஒரு காவலராக நினைக்க ஆசைப்பட்ட ஒரு இளைஞன்சந்திக்கும் கொடுமைகளை பற்றி பேசி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கத இயக்குனர் தமிழ் தான் இந்த டாணாகரன் திரைப்படத்தை கதை எழுதியுள்ளார். தமிழ் முதலில் ஒரு போலீஸ்காரனாகவே இருந்து அதன் பிறகு கதை எடுக்கும் இயக்குனராக மாறிவிட்டார். அப்பொழுது பட்ட கஷ்டங்களை விலகும் படமாக தான் இந்த படம் உருவானது என்றும் ஒரு பேட்டியில் அவர் சொல்லியிருந்தார். அவரின் கதைக்கேற்ப விக்ரமின் நடிப்பும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.டாணாக்காரன்‘ படத்திற்கு மாநில விருது கிடைத்துள்ளது.
இந்த வெற்றி விழாவில் படத்தின் நாயகன் விக்ரம் பிரபு கலந்துக் கொண்டு பேசினார். அவர் "ஒவ்வொரு முறையும் நான் கேமரா முன்னால் நிற்கும் போது, என் தாத்தா சிவாஜி கணேசன் மற்றும் என் அப்பா பிரபு ஆகியோர், இந்த திரையுலகில் பெற்றிருந்த நற்பெயரை நான் காப்பாற்ற வேண்டும்.என்ற பெரும் பொறுப்பும் ஒருவித பயமும் என்னை சூழ்ந்து கொள்கிறது". நடிகரின் பேரன் மற்றும் மகன் என்னும் ஒரு சூழல் என்னை தாக்குகிறது. நான் தனிமையை மிகவும் அதிகமாக உணர்ந்து இருக்கிறேன் என்றும் உருக்கமாக கூறியிருந்தார். நான் ஒரு சினிமா துறையின் வாரிசு என்பதாலும் என்ற ஒரு தனி அடையாளம் கிடைக்கவில்லை என்றும் கவலைப்பட்டார் விக்ரம் பிரபு.
வெளிநாட்டிற்கு வந்து திரும்பிய பிறகு நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன் என் ஆசைக்கு என் அப்பா நான் உனக்கு உதவ மாட்டேன் ஏன் உன் முயற்சியால் வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிவிட்டார் அதன் பிறகு 25 படம் நான் நடித்துள்ளேன் அனைத்து படங்களும் என் சொந்த உழைப்பில் முன்னேறி இருக்கிறேன் என்றும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார் விக்ரம் பிரபு.நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்துகிறேன் என்று கூறினார். சிறை எனக்கு 25ஆவது படம் என்பதால் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது என்றும் எனது மகிழ்ச்சியை தன் நண்பர்களுடன் விழாவில் பகிர்ந்துள்ளார் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது.
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர், மத்திய கிழக்கு பதற்றம், உக்ரைன் - ரஷ்யா போர் என உலகம் அசாதாரண சூழலில் இருந்து வரும் சூழலில் வட கொரியா வழக்கம்போல ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
ஆனால் இந்த முறை ஜப்பான் கடற்கரைப் பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்கொரியாவின் தகவலின்படி, வட கொரியாவின் சுனான் (Sunan) பகுதியிலிருந்து மதியம் 1:20 மணியளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. சுமார் 10 ஏவுகணைகள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டுள்ளன.
இது வடகொரியாவின் வழக்கமான சோதனைகளை விடப் பெரிய அளவிலான நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை நோக்கிச் சென்றன. அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்திற்கு வெளியே விழுந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த ஏவுகணை வீச்சு குறித்து ஆய்வு செய்யவும், ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் அவசரக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நடத்தி வரும் வருடாந்திர ராணுவப் பயிற்சிக்கு தனது எதிர்ப்பை காட்டவே வடகொரியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்தப் பயிற்சிகள் தொடர்ந்தால் பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியா ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலை வட கொரியா கடுமையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் நிலவும் அதீத பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு, அங்குள்ள அனைத்து அமெரிக்கப் பிரஜைகளும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை, பாக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட வலயத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மறைமுக திறமைகள் வெளிப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். பயணங்களில் புதிய அறிமுகங்கள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
கல்வி சம்பந்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூல பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் மாற்றமும் புத்துணர்ச்சியும் உருவாகும். நீண்ட கால கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
குழந்தைகள் இடத்தில் பொறுமை வேண்டும். சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
செய்யும் செயல்களில் இருந்து வந்த தடைகள் குறையும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவுகள் மேம்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வரவுகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் ஆதாயமடைவீர்கள். வங்கி பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். வெளியூரிலிருந்து புதிய வேலைகள் தொடர்பான செய்திகள் கிடைக்கும். வியாபார சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
கன்னி
பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறையும். மனதில் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து புதிய வழிமுறைக்கு கொண்டு வருவீர்கள். உயர் கல்வி சார்ந்த துறைகளில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
கல்வி சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். இயற்கை மருத்துவம் சார்ந்த தேடல்கள் உண்டாகும். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் உருவாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்து சில தெளிவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குறுகிய தூர பயணத்தால் மேன்மை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு
தனுசு
திடீர் பயணங்களால் மேன்மை ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். வியாபார பணிகளில் இருந்த மந்த தன்மைகள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற வாக்குறுதிகளை குறைப்பது நல்லது. சமூகப் பணிகளில் கொள்கை பிடிப்பு தன்மை மேம்படும். கணிதம் சார்ந்த துறையில் ஆர்வம் ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
எதிர்மறையான சிந்தனைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மத்தியில் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். பழுதான வாகனங்களை சீர் செய்தீர்கள். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். கடினமான செயல்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் ஈடேறும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். எதையும் பகுத்தறிந்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கால்நடை பணிகளில் பொறுமை காக்கவும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கும் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் உடல் சோர்வுகள் நேரிடலாம். உயர் அதிகாரிகள் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கைகள் மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட்டால் நன்மைகள் அதிகரிக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.3.2026
இன்று காலை 08.23 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று அதிகாலை 03.59 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்
இன்று காலை 09.36 வரை பரிகம். பின்னர் சிவம்.
இன்று காலை 08.23 வரை பாலவம். பின்னர் இரவு 08.39 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று காலை 6.21 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.00 முதல் 07.00 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
பச்சை கற்பூரம் மற்றும் லவங்க பட்டை ஒரே அறிவியல் குடும்பத்தை சார்ந்தது. இதனை ஆங்கிலத்தில் Cinnamon Camphor என்று கூறுவார்கள். நம் முன்னோர்கள் இந்த கற்பூரத்தை உணவில், ஆன்மிகத்தில், அழகு குறிப்புகளில் மற்றும் மருத்துவத்திலும் பயன்படுத்தி உள்ளனர். சரி வாங்க இந்த பச்சை கற்பூரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்….
- பச்சை கற்பூரத்தை உணவில் பயன்படுத்துவதால் சாப்பாடு சீக்கிரம் கெடுவதற்கு காரணமான Fungus ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. இப்பொழுது நாம் உணவு கெடாமல் இருப்பதற்காக Refrigerator பயன்படுத்துகிறோம். ஆனால் முன்பு இந்த கற்பூரத்தை பயன்படுத்தி உள்ளனர்.
- உணவில் இருக்கும் நோய் தொற்று ஏற்படாமலும் மற்றும் சாப்பாட்டில் சுவையை அதிகரிக்கவும், கிருமிகள் எதுவும் அண்டாமல் இருப்பதற்கும் இந்த பச்சை கற்பூரம் பயன்பட்டு வருகிறது.
பச்சை கற்பூரத்தின் மருத்துவ பயன்கள்:
- கோயில்களில் கொடுக்கும் பிரசாதம் மற்றும் தீர்த்தத்தில் பச்சை கற்பூரம் மற்றும் கிராம்பு சேர்த்து தருவார்கள். எதற்காக என்றால் மருந்தாகவும் மற்றும் சுவை அதிகரிக்கவும் மற்றும் கடவுளின் ஆசி மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த முறையாகும்.
- பச்சை கற்பூரத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் சளித்தொல்லை, சுவாச கோளாறு, சைனஸ், அலர்ஜி மற்றும் நோய் தோற்று ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது….
- இரவு ஒரு செம்பு (copper) அல்லது மண் பாத்திரத்தில் இரவு படுக்கைக்கு முன்பு தண்ணீர் ஊற்றி அதில் துளசி, கிராம்பு, பச்சை கற்பூரம் மற்றும் தேன் கலந்து மறு நாள் காலை குடித்து வந்தால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். மேலும் இந்த தண்ணீரை பேச்சு வராத குழந்தைகள் குடித்து வந்தால் பேச ஆரம்பிப்பார்கள்.
- இந்த கற்பூரத்தை Cream-ஆக பாதத்தில் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
பச்சை கற்பூரம் பயன்கள் – செல்வம் செழிக்க உதவும் பச்சை கற்பூரம்:
- பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் குணம் உள்ளது. பச்சை கற்பூரத்துடன் சோம்பு, கிராம்பு, மஞ்சள், கருமஞ்சள், சிறிய தேங்காய், புணுகு, கோரோசனை, ஜவ்வாது, குன்றின் மணி, கோமதி சக்கரம், சோலி மற்றும் சிறிய தர்பை துண்டு அனைத்தையும் ஒரு பாத்திரம் அல்லது துணியில் கட்டி பூஜை அறை மற்றும் காசோலை ஆகிய இடத்தில் வைத்து வந்தால் பண புழக்கம் அதிகரிக்கும் மற்றும் வீண் செலவு ஏற்படாது.
- இதை ஏன் செய்ய வேண்டும் என்றால் இதில் தன ஆகர்சனம் கிடைப்பதற்காகவும், மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்காகவும் மற்றும் பண வரவு அதிகரிக்கவும் வைக்க வேண்டும்.
- பச்சை கற்பூரம் இயற்கையாகவே நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் என்பதற்காக திருப்பதியில் உள்ள பெருமாள் கோவிலில் சாமியின் தாடையில் இந்த கற்பூரத்தை வைத்திருப்பார்கள்.
- வீட்டில் உள்ள கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் போன்றவை விலகுவதற்கும் இந்த பச்சை கற்பூரம் பயன்பட்டு வருகிறது. பச்சை கற்பூரம் நல்ல வாசனை உள்ளது வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடியேறுவாள். அதனால் தான் இந்த கற்பூரத்தை பயன்படுத்துவதால் செல்வம் செழிக்கும் என்று கூறப்படுகிறது.
மகா பாரத போர் நடந்து கொண்டிருந்தநேரமது….பாண்டவர்களிடம்செல்வங்கள் குறைந்து கொண்டே வந்தன.. ஒருபோர் என்றாலே பொருட் செலவுகள் அதிகம் ஆகுமே…. என்ன செய்வது என்று தர்மன்கையைபிசைந்துகொண்டிருந்த நேரம்பார்த்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அங்கு வந்தார்…
என்ன தர்மரே….என்ன ஆலோசனை…என்று சிரித்து கொண்டே கூறவே, அதற்கு தர்மரோ,…..செல்வங்கள் குறைந்து விட்டது கிருஷ்ணா…..
…. இன்னும் போர் எத்தனை நாள் நீடிக்குமோ தெரியவில்லை நீதான்ஏதாவது யோசனை கூற வேண்டும்…. என்றார்…
தர்மரே….!…கவலை பட வேண்டாம்…. குபேரனிடம்….கடன் கேட்டு இருக்கிறேன்…. பீமசேனனைஅனுப்பி வாங்கி வர சொல் என்றார்…தருமனும் பீமனை அனுப்பி வாங்கி வர சொன்னார்…பீமனும்குபேரன் மாளிகையை தேடி புறப்பட்டான்…வாயில் காப்போனிடம் குபேரனை காண வேண்டும் என கூற…அவனும் வழிவிட, வீர நடை போட்டு கொண்டு மாளிகை உள்ளே நுழைந்து போய் அம்மாளிகையை நோட்டமிட்டான்பீமன்…..
அங்கே ஒருவரையும் காணோம்…ஒரு வயதான பெரியவர்அரிசியை கீழே கொட்டி கொண்டு யாரையும் கவனிக்காமல். .அரிசியில் உள்ள குருணிகளையும் கற்களையும் தீவிரமாய் ஆய்ந்துபொறுக்கி கொண்டிருந்தார்…. பீமசேனன்,அவரிடம் சென்று தான் குபேரன்ஐயாவை பார்க்க வேண்டும் என கூற…அந்த பெரியவர்அங்கிருக்கும் ஒரு நாற்காலியில் அவனை அமர சொல்லி விட்டுஉள்ளே சென்றார்.
அமர்ந்திருந்தபீமசேனனுக்கு…குபேரனிடம் செல்வம் பெறும் நம்பிக்கை போய்விட்டது.. குபேரன் மாளிகைஎன்றால் தங்கத்தாலும்வைரங்களாலும்…..இழைத்திருக்க வேண்டும்… இங்கே என்னடா ..என்றால் அரிசியைபொறுக்கி கொண்டு இருக்கிறார்கள்…. ஒரு பணியாளும் இல்லை…ஒன்றும்இல்லை…. இங்கிருந்து செல்வங்களை வாங்கி செல்வது கடினம்தான் என நினைத்து, கொண்டு நெடுநேரம் அமர்ந்திருந்தான்…. நேரம் செல்ல செல்ல பசிவேறு வயிற்றை கிள்ளியது….
ஒருவேளையாக,.பட்டுபீத்தாம்பரம் உடுத்தி கொண்டு, ஜவ்வாது மணம் வீச…… முக வதனம் தேஜேஸ்சுடன்அரிசியை பொறுக்கி கொண்டிருந்த அதே பெரியவர்பீமன்இருக்குமிடம்…. வந்து அவனருகில்அமர்ந்தார்…. பீமன் அப்போது தான் அவரை உற்று நோக்கினான்…. அரண்டுபோனான். அவர் குபேரர் தான்…. பீமன் எழுந்து நின்று அவரை வணங்க, அவர் அவனை விருந்து ண்ணும் அறைக்கு அழைத்து சென்றார்
அந்த அறை வைரங்களாலும்.. வைடூரியங்காளாலும்………அலங்கரிக்கபட்டு பீமனின்கண்களைபறித்தது……...அவன் பசியை கண்ணுற்ற குபேரன்,பணி பெண்களை அழைத்து விருந்தை எடுத்து வரும்படி கட்டளை இட்டார்…
கிட்டத்தட்ட இருபது பணிப்பெண்கள் அணி வகுத்துதங்கதாம்பூலத்தில் வாழைஇலையால்மூடி பீமன் முன் விருந்தை வைத்தனர்…. குபேரன் பீமனிடம்முதலில் விருந்தை சாப்பிட சொன்னார் …. நல்ல பசியில் இருந்தஅவன் அவசர அவசரமாக மூடியிருந்த வாழை இலையை எடுத்து தூர போட்டு விட்டு உணவைஆசை ஆசையாக தேடி பார்க்க, அங்கு தட்டுகளில் இருந்ததோ….பவளம்…. மாணிக்கம்…. வைரம்….. வைடூரியங்கள்…ரத்தினங்கள் தங்கபாளங்கள்மட்டுமே ….. சாப்பிட ஒன்றும் இல்லை..
பீமன் தன்வயிற்றை பிசைந்து கொண்டான்…நல்ல பசி அவனுக்கு…அவன் கண்கள் உணவை தேடியதை புரிந்து கொண்ட குபேரன்…. அவனை பார்த்து…. பீமா…முதலில் நமது செல்வம் நவ தானியங்கள் தான்…. அவற்றைஏளனம் செய்யாதே…. பின்பு தான்எல்லா செல்வங்கள்… .நவரத்தினங்ளைசாப்பிட முடியுமா…. ஆயிரம் செல்வங்கள், இருந்தாலும் அவைகள் பசி தீர்க்க பயன் படாது.. புரிந்து கொள்…. என கூறிய குபேரன்….மீண்டும் பணி பெண்களை உணவு பரிமாற கூற சொன்னார்….பீமன் தான் முன்பு எண்ணிய எண்ணங்களை எண்ணி குபேரனிடம் மனம் வருந்தினான்…..
அறு சுவை உணவுஉண்ட பின் பீமசேனனுக்குஅந்த செல்வங்களை மூட்டைகட்டி தூக்க முடியாத அளவிற்குஅளவில்லாத செல்வங்களை கொடுத்து அனுப்பினார் குபேரன்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) விலை அதிகரித்து வருவதால், அதன் தாக்கம் கனடிய விவசாய துறையிலும், அதனைத் தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாக உணவுப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குயெல்ஃப் பல்கலைக்கழகத்தின் (University of Guelph) பேராசிரியர் மைக் வான் மாசோ (Mike von Massow) இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது விவசாயிகள் விதைப்புப் பணிகளில் ஈடுபடும் காலம் என்பதால், நிலங்களை உழுவதற்கும் விதைகளை இடுவதற்கும் அதிகப்படியான எரிபொருள் தேவைப்படுகிறது.
உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகளுக்கான எரிபொருள் செலவு கணிசமாக உயரும். இது அறுவடை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, உலகிலேயே மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறிப்பாக மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நைட்ரஜன் உரங்களின் விலை அதிகரித்துள்ளது. மேற்கு கனடாவை விட, இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் கிழக்கு கனடா (Eastern Canada) இந்த உர விலை உயர்வால் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.





















