·   ·  9 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 47
  • More

நல்ல திறமை

நல்ல திறமை இருக்கு, ஆனா சரியான இடம் கிடைக்கல
Comments (0)
Login or Join to comment.

மரம் வளர்ப்போம்

வெட்டும்போது மரம்

மௌனமாக இருப்பதாலேயே

அதற்கு வலிக்காது என்று

பொருளல்ல.

  • 124
·
Added a news

முன்னாள் ஐபிஎல் உரிமையாளர் லலித் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில், தொழிலதிபர் விஜய் மல்லையா கலந்துகொண்டு பாட்டு பாடி டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லலித் மோடி மீது சட்டவிரோத ஏல முறைகேடுகள், பணமோசடி, மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், விஜய் மல்லையா ₹9,000 கோடிக்கும் மேல் வங்கிக் கடன் தவணையை செலுத்தாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இருவரும் 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில் லண்டனில் உள்ள தனது வீட்டில் நடந்த பிரம்மாண்டமான விருந்து குறித்த வீடியோவை லலித் மோடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த விருந்தில் இந்தியப் பாடகர் கார்ல்டன் பிரகன்சா மற்றும் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், விஜய் மல்லையா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

  • 149
·
Added a post

அறிமுகமான முதல் நாளிலேயே 10,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளுடன், டாடா ஹாரியர் EV ஒரு அற்புதமான சந்தை வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இது இரண்டாவது சிறந்த முன்பதிவு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில், ஹாரியர் EV இன் முதன்மை போட்டியாளரான மஹிந்திரா XEV 9e, அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் 16,900 யூனிட் முன்பதிவுகளைப் பெற்றிருந்தது.

ஹாரியர் EV-க்கான மாதாந்திர உற்பத்தி இலக்குகள் வெளியிடப்படவில்லை. ஆனால், அதிகரித்த தேவையை ஈடுசெய்யும் நம்பிக்கையுடன் பிராண்ட் இருப்பதாகத் தெரிகிறது. அரிய மண் உலோகங்களின் பற்றாக்குறை தொடர்ந்து நிலவினாலும், தற்போது எந்த உடனடி நெருக்கடியையும் எதிர்கொள்ளவில்லை என்று டாடா கூறியுள்ளது. ஹாரியர் EV-யின் உற்பத்தி தடையின்றி தொடரும் என்பதை இது குறிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் டெலிவரிகளை சரியான நேரத்தில் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

விநியோகச் சங்கிலிகள் முன்கூட்டியே வலுப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது மூலப்பொருட்களின் அதிக இருப்பு பராமரிக்கப்பட்டிருக்கலாம். டாடா சீனாவிலிருந்து நிறுவப்பட்ட சப்ளையர்களிடமிருந்து பேட்டரி செல்களை இறக்குமதி செய்வதாகக் கூறப்படுகிறது. இந்த செல்கள் பின்னர் டாடா ஆட்டோகாம்ப் மூலம் பேட்டரி பேக்குகளில் இணைக்கப்படுகின்றன.

வளர்ந்து வரும் மின்சார வாகனங்களின் பேட்டரி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, டாடா இந்தியாவில் ஒரு பேட்டரி ஜிகாஃபாக்டரியை உருவாக்கி வருகிறது. தொடர்புடைய நிறுவனமான அக்ராடாஸ், 2026 ஆம் ஆண்டில் லித்தியம்-அயன் பேட்டரி செல்களை உற்பத்தி செய்யத் தொடங்கும். பேட்டரி பேக்குகளின் உள்ளூர் உற்பத்தி, பிராண்ட் உற்பத்தி செலவுகளில் அதிக கட்டுப்பாட்டைப் பயன்படுத்த அனுமதிக்கும்.

ஹாரியர் EV இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களைக் கொண்டுள்ளது - 65-kWh மற்றும் 75-kWh யூனிட். சான்றளிக்கப்பட்ட வரம்பு சிறிய பேட்டரி பேக் மூலம் 538 கிமீ மற்றும் பெரிய பேட்டரி மூலம் 627 கிமீ (MIDC தரநிலைகள்) ஆகும். இருப்பினும், டாடா அதன் C75 சோதனை தரநிலைகளுடன் மிகவும் யதார்த்தமான வரம்பு மதிப்பீட்டை வழங்குகிறது. C75 எண்கள் 65-kWh பேட்டரி பேக் மூலம் 420 கிமீ முதல் 445 கிமீ வரையிலும், 75-kWh பேட்டரி மாறுபாட்டுடன் 480 கிமீ முதல் 505 கிமீ வரையிலும் உள்ளன.

ஹாரியர் EV டாப் வேரியண்ட் QWD வடிவத்தில் (இரட்டை மோட்டார்கள் கொண்ட குவாட் வீல் டிரைவ்) கிடைக்கிறது, இது பெரிய 75 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது. இது 622 கிமீ சான்றளிக்கப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளது. QWDக்கான C75 வரம்பு 460 கிமீ முதல் 490 கிமீ வரை. செயல்திறனைப் பற்றிப் பேசுகையில், RWD வகைகள் 238 PS மற்றும் 315 Nm டார்க்கை உருவாக்குகின்றன.

  • 156
·
Added article

சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர், சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. கடின உழைப்பால் சினிமாவில் அடுத்தடுத்த உயரங்களை தொட்ட விஜய் சேதுபதி, இன்று பான் இந்தியா அளவில் செம பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு சூர்யா சேதுபதி என்கிற மகன் இருக்கிறார். இவரும் விஜய் சேதுபதி உடன் நானும் ரெளடி தான், சிந்துபாத் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

பீனிக்ஸ் என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார் சூர்யா சேதுபதி. அவரது முதல் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு தான் இயக்கி உள்ளார். இப்படத்தில் தேவதர்ஷினி, வரலட்சுமி சரத்குமார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். பீனிக்ஸ் திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி இருந்தது. இப்படத்திற்காக பிரத்யேகமாக சண்டைப் பயிற்சி எடுத்து நடித்துள்ளார் சூர்யா. பீனிக்ஸ் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து உள்ளார். இப்படம் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

பீனிக்ஸ் திரைப்படத்தை தன் மகன் உடன் சேர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் புரமோட் செய்தார். இருந்தாலும் இப்படத்திற்கு பெரியளவில் ஹைப் கிடைக்கவில்லை. புரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா நடந்து கொண்ட விதம் சிலருக்கு பிடிக்காததால் அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். விஜய் சேதுபதி போல் கஷ்டப்பட்டு சினிமாவிற்குள் வராமல், தன் தந்தை தயவோடு ஈஸியாக வந்துவிட்டதாக விமர்சித்து வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் பீனிக்ஸ் படம் ரிலீஸ் ஆனதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் சூர்யா ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளதாக பாராட்டி வருகின்றனர்.

பீனிக்ஸ் படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வசூல் மட்டுமே கிடைத்துள்ளது. பீனிக்ஸ் படம் முதல் நாளில் வெறும் 10 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாம். இது மற்ற இரண்டு படங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வசூல்.

  • 169
·
Added a news

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில், வியாழக்கிழமை வரையிலான நிலவரப்படி, 1,179 பேருக்கு தட்டம்மைத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அல்பர்ட்டாவில் Calgary Stampede என்னும் விழா துவங்கியுள்ள நிலையில், தட்டம்மை பரவல் தொடர்பில் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.

விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1.3 மில்லியன் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தட்டம்மை எளிதில் பரவக்கூடிய தொற்றுநோய் என்பதால், Calgary Stampede போன்ற விழாக்களில் பங்கேற்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ளோருக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. ஆகவே, சிறுபிள்ளைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள், தடுப்பூசி பெறாதவர்கள் ஆகியோர் கூட்டமான இடங்களை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும், தடுப்பூசி பெறாதவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

  • 177
·
Added a news

 மலேசியாவில் கம்பிவண்டிப் பயணம் செய்ய விரும்பிய தம்பதி ஏமாந்துபோன சம்பவம் இணையத்தில் பேசுபொலிருளாகியுள்ளது. தம்பதி 300 கிலோமீட்டர் பயணம் செய்து கம்பி வண்டிச் சேவை எடுக்கும் தலத்தைச் சென்றடைந்தவர்களுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் ஆனால் அங்கே அப்படி ஒரு சேவையே இல்லையாம். பேராக், கெடா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையில் கம்பிவண்டிச் சேவை இருப்பதாக ஒரு காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பொய்யான காணொளி TikTok, Facebook ஆகிய சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வந்ததாக கூறப்படுகின்றது.

அதை நம்பி அந்த இடத்திற்குச் சென்ற தம்பதியிடம் அது செயற்கை நுண்ணறிவைக்கொண்டு தயாரிக்கப்பட்ட காணொளி என்று ஹோட்டலில் பணியாற்றிய பெண் ஒருவர் தெரிவித்தார். அதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இணையத்தில் காண்பதை நம்பி ஏமாற வேண்டாம் என அங்குள்ள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

  • 178
·
Added a news

“Big Beautiful Bill" என பெயரிடப்பட்டுள்ள புதிய வரி சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.

“Big Beautiful Bill" என பெயரிடப்பட்டுள்ள புதிய வரி செலவு மற்றும் வரி தொடர்பான ஒரு வரிச் சட்டமாகும். இந்த புதிய வரிச் சட்டம் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்படுவதுடன் இதற்கு எதிராக விமர்சனங்களும் எழுந்து உள்ளன.

  • 182
·
Added a news

2025 ஆண்டிற்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளதுடன், கனடா 14 ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்தாண்டு 1.449 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 1.491புள்ளிகளை பெற்று 14 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிடும். இந்தாண்டிற்கான அமைதி பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் 99.7% உள்ளடக்கிய 163 நாடுகளை ஆய்வு செய்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டும் இந்த பட்டியலில் வழக்கம் போல ஐரோப்பிய நாடுகளே முன்னிலையில் உள்ளன.

முதல் ஐந்து இடங்களை ஐஸ்லாந்து (1.095), அயர்லாந்து (1.260), நியூசிலாந்து (1.282), ஆஸ்திரியா (1.294) சுவிட்சர்லாந்து (1.294) போன்ற நாடுகள் முறையே பெற்றுக் கொண்டுள்ளன.

  • 184
  • 219
  • 😆 1
  • 219
  • 219
  • 219
  • 362
  • 361
  • 364
·
Added a post
  • 370
·
Added a post

சீனாவின் மிகப் பெரிய பணக்காரரான ஜாக் மா, சொல்வது என்னவென்றால் "வாழைப்பழத்தையும் பணத்தையும் குரங்கின் முன் வைத்தால், குரங்கு வாழைப்பழத்தைத் தேர்ந்தெடுக்கும், ஏனென்றால் பணத்தால் நிறைய வாழைப்பழங்களை வாங்க முடியும் என்று குரங்குக்குத் தெரியாது."

உண்மையில் மக்களுக்கு, நீங்கள் வேலை மற்றும் வணிகத்தை வழங்கினால், அவர்கள் வேலையைத் தேர்ந்தெடுப்பார்கள், ஏனெனில் ஒரு வணிகம் சம்பளத்தை விட அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.

ஏழைகள் ஏழைகளாக இருப்பதற்கு ஒரே காரணம், ஏழைகள் தொழில் முனைவோர் வாய்ப்பின் முக்கியத்திற்கான பயிற்சி பெறாததுதான்.

மக்கள் பள்ளியில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள், பள்ளியில் அவர்கள் தங்களுக்காக வேலை செய்வதற்கு பதிலாக சம்பளத்திற்கு வேலை செய்யத்தான் கற்று கொள்கிறார்கள் !

ஊதியத்தை விட லாபம் சிறந்தது, ஏனென்றால் ஊதியம் உங்களை வாழவைக்கும் , ஆனால் லாபம் உங்களுக்கு சிறப்பான வாழ்க்கையை உண்டாக்கும்.

  • 377
·
Added a post

ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல் லவர்.கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார்

கடனுக்கு பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர். மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார்.அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக்க மாட்டார்.

அறிமுகமே இல்லாத நபராக இருந்தால் கூட, கடையைச் சற்று நேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போய் விடுவார். ஒரு நாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், "ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்து விடுவேன்," என்று கேட்டார்.

மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன்.கடைக்காரரும் கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் வந்த சிலரிடம் காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன்.

பணப்பெட்டியும் திறந்தே இருந்தது. அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த அவனின் நண்பன் ஒருவன் அங்கே வந்தான். "அடேய்! திருடுவதற்கு இதை விட சரியான சமயம் நமக்கு கிடைக்காது. பணம், சாமான்களை கட்டிக் கொண்டு ஓடி விடலாம்," என்று யோசனை கூறினான்.

திருடனுக்கோ திருடுவதா வேண்டாமா? என்ற தயக்கம் தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் சிந்தித்தவன், ""தன்னை நம்பிய கடைக்காரருக்குத் துரோகம் செய்ய மனமில்லை." என்று சொல்லி நண்பனிடம் மறுத்து விட்டான்.

சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்து விட்டார். அவரிடம், ""எல்லாப் பொருளும் சரியாக இருக்கிறதா? என்று பார்த்துக் கொள்ளுங்கள்," என்றான். கடைக்காரரோ,"" ஏன் இப்படி கேட்கிறாய். உன் மீது கொண்ட நம்பிக்கையால்தான் கடையை ஒப்படைத்து சென்றேன். அதனால் பணத்தையோ, பொருளையோ சரி பார்க்கத் தேவை இல்லை," என்றார்.

கடைக்காரரின் நம்பிக்கை மிக்க பேச்சை கேட்டதும் திருடனின் வருத்தம் அதிகரித்தது." உங்களைப் போன்ற நல்லவர்களுடன் ஒருநாள் பழகியதற்கே மனம் இவ்வளவு தூய்மையாகி விட்டதே.. வாழ்நாளெல்லாம் உங்களை மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்களின் நட்பு கிடைத்தால் அதைவிட எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்றான். கடைக்காரர்.. “

நீ சொல்வது புரிய வில்லையே!", என்றார். "ஐயா! என்னை மன்னியுங்கள். நான் ஒரு திருடன். என் நண்பனும், நானும் கடையில் திருடி விட்டு ஓட எண்ணினோம்.. ஆனால், நல்ல வேளையாக என் இயல்பான திருட்டுக் குணம் இன்று மறைந்து விட்டது. இனி ஒருநாளும் திருட மாட்டேன்," என்று அழுதான். கடைக்காரரின் காலில் விழுந்து வணங்கினான்.

  • 384
·
Added a post

பிச்சைகாரன் :-- சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

“வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

“உன்னை என்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

“என்னது பிஸ்னஸ் பார்ட்னரா...?"

ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

“ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம் தேவையில்லை. அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்…. “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்… “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….

இது தான் நமது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறது.

இறைவன் தான் பிஸ்னஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).

இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.

ஐம்புலன்களை நமக்கு கொடுத்து அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா? ஐம்புலன்கள் போதாது என்று கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான். இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… அது முடிவே இல்லாமல் தான் போய்கொண்டிருக்கும்.

இவ்வளவு தந்த அவனுக்கு ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன். நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக. நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

இறைவனை வணங்குவதோ, வேதங்களை படிப்பதோ, ஆலயத்துக்கு செல்வதோ, தொண்டு முதலானவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது சக மனிதர்களுக்கு உதவுவதோ – இவை யாவும் செய்வது நமக்காக தான். நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான். மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.

  • 390
·
Added a post

அந்த ஹோட்டலில் நுழைந்து மேஜை முன் அமர்ந்தார் பார்வையற்ற மனிதர் ஒருவர். அருகே வந்த மேனேஜர், "சார்.. மெனு தரவா பார்த்து ஆர்டர் செய்யுங்கள்"...

"அய்யா.. நான் பார்வையற்றவன்..

உங்கள் சமையலறையிலிருந்து கரண்டிகளைக்கொண்டு வாருங்கள். அதை முகர்ந்து பார்த்தே நான் ஆர்டர் செய்கிறேன்:.

மேனேஜர் உள்ளே சென்று சில கரண்டிகளை கொண்டுவர, அவற்றை முகர்ந்து பார்த்துவிட்டு..

"சார் எனக்கு ஒரு பிளேட் சில்லி சிக்கனும் சப்பாத்தியும் கொண்டு வாங்க"..

மேனேஜருக்கு ஆச்சர்யம்.. என்ன ஒரு நுட்பமான அறிவு...

இன்னொருநாள் வந்தவர், முன்போலவே கரண்டிகளை முகர்ந்து பார்த்து முட்டை பரோட்டாவும் மட்டன் சாப்சும் ஆர்டர் செய்தார்..

இது இவ்வாறு அவ்வப்போது தொடர, ஒருநாள் மேனேஜர் அவரை சோதிக்க எண்ணம் கொண்டார்.. உள்ளே கிச்சனில் சென்று அங்கே மேற்பார்வையிட்டு கொண்டிருந்த தனது மனைவியிடம் ஒரு கரண்டியை கொடுத்து, "உமா.. இதை உனது உதடுகளில் நன்றாக தேய்த்து எடு"...

என்று சொல்லி, அந்தக் கரண்டியை கொண்டுவந்து பார்வையற்றவரிடம் கொடுத்தார்...

முகர்ந்து பார்த்த அவர்,

சார்..சார்.. எனது கிளாஸ்மேட் உமா இங்குதான் வேலை பார்க்கிறாளா...?

என்று கேட்க...மேனேஜர் மேஜைமேல் மயங்கிச் சாய்ந்தார்!

  • 391
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் இருந்த கலக்கங்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப வாய்ப்புகள் அமையும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

ரிஷபம்

உறவினர்களின் வருகைகள் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். ஒப்பந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

வரவுகள் தாராளமாக இருக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். வீடு மாற்றம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உயரதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். முயற்சிக்கு ஏற்ற வெற்றிகள் சாதகமாக அமையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

எதையும் செய்து முடிக்க முடியும் என்ற சாமர்த்தியம் மேம்படும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். பெரியவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபார நிமித்தமான ரகசியங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும். உடல் நலத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கன்னி

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். மனதளவில் சில மாற்றம் ஏற்படும். எண்ணிய காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். சமுக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

துலாம்

வியாபார பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் காணப்படும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

விருச்சிகம்

உறவினர்களிடத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் குறையும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் குறையும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புரிதல்கள் அதிகரிக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம் 

தனுசு

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். செல்வ சேர்க்கை மற்றும் வசதி வாய்ப்புகள் மேம்படும். அரசு வழியில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான சிக்கல்கள் குறையும். வர்த்தக பணிகளில் தனவரவுகள் மேம்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகரம்

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தம்பதிகளுக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வரவுகளில் இருந்த நெருக்கடிகள் ஒரளவு குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும். வியாபார பணிகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

கும்பம்

குடும்பத்தில் சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். நண்பர்கள் உடன் சிறு பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். இடுப்பு சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மீனம்

பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் இடத்தில் சாதகமின்மையான சூழல்கள் அமையும். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். எதிலும் விவேகத்தோடு செயல்படுவது நல்லது. திடீர் முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 455
·
Added a post

*ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார்.*

▪ *ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று.*

🔳 *அன்று அவர் வீட்டுக்கு வந்தார்.*

▪ *இரவு உணவு முடித்து திரும்புகையில் அவருடைய மகன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தான், கைகளைப் பின்னால் கட்டியபடி. தந்தை திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார்.*

🔘 *‘வழியில் நிற்காதே.. ஓரமாய்ப் போ..’*

🔳 *அவருடைய வார்த்தையில் அனலடித்தது.*

▪ *சிறுவன் முகம் வாடிப்போய் விலகினான். அவனுடைய கண்களில் சோகத்தின் நதி முளைத்தது. அது இமை ஓரங்களை இடித்து தரையிறங்கத் துவங்கியது.*

▪ *இரவு தூங்குகையில் அவர் மனதுக்குள் ஒரு சிந்தனை ஓடியது.*

🔳 *வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று மனதுக்குள் எண்ணினார்.*

🔳 *நேராக எழுந்து மகனின் படுக்கையறைக்குச் சென்றான்.*

*உள்ளே மகன் தூங்காமல் விசும்பிக் கொண்டிருந்தான்.*

🔳 *அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. அவனருகில் மண்டியிட்ட தந்தை ‘என்னை மன்னித்துவிடு நான் உன்னிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது..’ என்றார்.*

▪ *சிறுவன் திரும்பினான்.*

🔳 *சிறுவனின் கண்களிலிருந்த கவலை சட்டென்று மறைந்தது. எழுந்து உட்கார்ந்தான்.*

▪ *வேகமாக கட்டிலிலிருந்து கீழே குதித்து கட்டிலினடியில் வைத்திருந்த பூங்கொத்தை தந்தையின் கையில் வைத்தான்.*

🔘 *‘இதென்ன ?’ தந்தை வியந்தார்.*

🔳 *இன்றைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பூக்களைப் பார்த்தேன்.*

🔘 *பல நிறங்களில் இருந்த பூக்களைப் பொறுக்கி உங்களுக்காக ஒரு மலர்க்கொத்து செய்தேன். அதிலும் குறிப்பாக உங்களுக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதற்காக அதை நிறைய சேகரித்தேன்.*

🔳 *அதை உங்களிடம் ரகசியமாகச் சொல்வதற்காகத் தான் உங்கள் பின்னால் வந்து நின்றேன்…*

▪ *சிறுவன் சொல்ல தந்தை மனம் உடைந்தார்.*

🔘 *சிறுவனையும் மலர்களையும் ஒருசேர அணைத்த அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.*

🔘 *ஒரு மழலையின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருந்ததற்காக அவர் வருந்தினார்.*

▪ *குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்.*

▪ *அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது.*

🔘 *பணத்துக்கான ஓட்டங்களில் நாம் இழந்து கொண்டிருப்பது ஆனந்தத்தின் நிமிடங்களை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.*

🔳 *ஒரு வேளை நாம் நாளை இறந்து போக நேரிட்டால் அலுவலகம் இன்னொரு திறமை சாலியை சில நாட்களில் கண்டு பிடிக்கும். குடும்பம் அப்படியல்ல.*

▪ *ஏற்படும் இழப்பு ஆழமாய்த் தைத்த முள் போல நினைவுகளால் நிமிண்டும் போதெல்லாம் வலித்துக் கொண்டே இருக்கும்.*

🔳 *வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் அன்பினால் நிரப்பப்படாவிட்டால் அது வெறுமையாகவே இருக்கும். பணமே மகிழ்ச்சியைத் தரும் என்பது தலைமுறைக்குத் தரப்பட்டிருக்கும் தவறான பாடம். மகிழ்ச்சியை சதுர அடிகளில் வாங்க முடியாது.

*குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.* அன்பே ப்ரதானம் என்பதை மறவாதீர்கள்....

  • 482
·
Added a post

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை 5.7.2025.

இன்று இரவு 08.18 வரை தசமி. பின்னர் ஏகாதசி.

இன்று இரவு 09.38 வரை சுவாதி. பின்னர் விசாகம்.

இன்று இரவு 09.36 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.

இன்று காலை 07.20 வரை தைத்தூலம். பின்னர் இரவு 08.18 வரை கரசை. பின்பு வணிசை.

இன்று அதிகாலை 05.57 வரை சித்த யோகம். பின்னர் 09.32 வரை அமிர்த யோகம். பின்பு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=38&dpx=1&t=1751688336

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 482

Good Morning....

  • 487