சினிமா செய்திகள்
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
Ads
 ·   ·  1421 news
  •  ·  0 friends
  • 1 followers

பாகிஸ்தான் அணிக்கு எதிராக திரில் வெற்றிபெற்ற இந்தியா

ஐசிசி T 20 உலகக்கிண்ணத் தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது.

நியூ யோர்க்கின் நசாவ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆடுகளம் தொடர்பில் அதிகமான கவனம் செலுத்தப்பட்டதுடன், பந்துவீச்சுக்கு அதிக சாதகம் கொடுக்கும் ஆடுகளமாக இந்த ஆடுகளம் அமைந்திருந்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை பெற்றிருந்த போதும், அதன் பின்னர் தடுமாறியது. எனவே 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்திய அணிக்காக அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ஓட்டங்களையும், அக்ஷர் பட்டேல் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சில் ஹாரிஷ் ரவூப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் 10 ஓவர் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 57 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஒருகட்டத்தில் 47 பந்துகளுக்கு 47 ஓட்டங்கள் என்ற நிலை ஏற்பட்டிருந்ததுரு.

எனினும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இறுதி ஓவர்களை அற்புதமாக வீச தொடங்கினர். இதில் ஜஸ்ப்ரிட் பும்ரா அற்புதமாக பந்துவீசி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் என வீழ்த்த பாகிஸ்தான் அணி நெருக்கடிக்கு முகங்கொடுத்தது. இறுதி ஓவரில் 18 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் அணிக்காக அதிகபட்சமாக மொஹமட் ரிஸ்வான் 31 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற, ஏனைய வீரர்கள் ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட போதும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதேவேளை இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி தங்களுடைய குழுவில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

  • 528
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads