சினிமா செய்திகள்
பிரபல சிங்கள நடிகை காலமானார்
இலங்கை திரைப்பட தாரகையான சிங்கள நடிகையான மாலினி பொன்சேகா (76 வயது) இன்று(24.5.25) அதிகாலை காலமானார். அவர் ஏழு சகாப்தமாக திரைதுறையில் மின்னியவர். மேலும
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமானது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். சமீப காலமாக லைகா ப்ரோடக்ஷன்ஸ் பல்வேறு சவால்கள
அட்லீ இயக்கும் புது படத்தில் இணைகிறார் தீபிகா படுகோனே
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்ததால்
நடிகர் ஹம்சவிர்தனுக்கு இரண்டாவது திருமணம்
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவிர்தன். இவர், 'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம் இதுதான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும்
எனக்குத் திருப்புமுனை தந்த படம் - நடிகர் சார்லி
காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
Ads
 ·   ·  3023 news
  •  ·  1 friends
  • 2 followers

நட்சத்திர வீரர்களாக வலம்வர வைப்பது விளையாட்டுத்துறையே - பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்

கல்வியில் கடைமட்டத்தில் உள்ளவர்களையும் சர்வதேச ரீதியில் நட்சத்திர வீரர்களாக வலம்வர வைப்பது விளையாட்டுத்துறையே என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

சித்திரைப் புதுவருட பெண்களுக்கான மாபெரும் கரப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வு நேற்றைய (2025.04.18) தினம் வடமராட்சி கிழக்கு செம்பியன் விளையாட்டுக் கழகத் தலைவர் கிருஸ்ணபிள்ளை புஸ்பராசா தலைமையில் இடம்பெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய காலகட்டத்தில் பல தகவல் தொழிநுட்ப இலத்திரனியல் சாதனங்களின் பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில் இளம் சமூகத்தினர் அதில் மூழ்கி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. ஆயினும் ஆர்வமுள்ளவர்கள் ஆரோக்கியமான விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவுள்ளது.

விளையாட்டின் மூலம் ஒரு வீரனது உடல், ஆற்றல், சிந்தனை உற்சாகமடைகிறது. அவனது கல்வி கடைமட்டத்தில் இருந்தாலும் கூட அவன் நட்சத்திர வீரனாக பிரகாசிக்கின்றான். எனவே வளங்கள் குறைந்த நிலையில் உள்ள எமது பகுதி விளையாட்டு கழகங்கள் விளையாட்டு ஆர்வத்தில் உள்ளமையை பார்க்கும்போது பெருமையாகவுள்ளது. அதிலும் பெண்களுக்கான கரப்பந்தாட்ட நிகழ்வை முதற்தடவையாக எமது பகுதி கழகங்கள் முன்னெடுத்துள்ளன. அது சிறந்த செயற்பாடுகள். இதனை ஊக்குவிக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சுpத்திரை புத்தாண்டு மகளிருக்கான கரப்பந்தாட்ட நிகழ்வில் மாமுனை கலைமகள் விளையாட்டுக்கழகமும் செம்பியன் விளையாட்டுக் கழகமும் இறுதி சுற்றுக்குத் தெரிவாகின. இறுதிப் போட்டியில் மாமுனை கலைமகள் விளையாடடுக்கழகம் வெற்றிக் கேடயத்தை கைப்பற்றியது.

  • 506
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads